19. துரத்தும் ஆபத்து
காலை வெயில் கண்ணாடி சுவரை தாண்டி அவள் முகத்தில் பட அசைந்து எழுந்து அமர்ந்தாள்.
அந்த வீட்டிற்கு வந்தது, ஷ்யாம் டி-ஷர்ட் நைட் -பேண்ட் அணிந்துகொண்டு ராத்திரி வாந்தி, தலை வலியில் அவஸ்தைப்பட்டது நினைவிற்கு வந்தது. அவளை போலவே அந்த ஹாலில் அவளுக்கு பக்கமே தரையில் சோபா குஷன் தலைக்கு வைத்துத் தூங்கி கொண்டிருந்தான் ஷ்யாம். தொண்டை வறண்டு, தண்ணீர் தாகம் எடுத்தது. பல் தேய்த்து கிச்சென் ஃப்ரிட்ஜில் ஜூஸ் எடுத்துக் குடித்தாள்.
முந்தைய நாள் பில் செட்டில்மென்ட் நினைவிற்கு வந்தது. குளித்து முடித்து வந்து வாய் பிளந்து தூங்கும் ஷ்யாமை எழுப்பினாள்.
“எழுந்திரு ஷ்யாம். கதவைத் திற நான் போகவேண்டும்”
“என்ன அவசரம் தூங்கு” என்றவன் திரும்பி படுத்துக்கொண்டான்.
ஷ்யாம் கைரேகை வைத்து திறந்தால் மட்டுமே திறக்கக் கூடிய கதவு, லிஃப்டும் பிரைவசி என்ற பெயரில் அதே கைரேகை சமாச்சாரம். சரயுவிடம் பேசலாம் என்றால் அவள் தொலைப்பேசியும் காணவில்லை. ஷ்யாம் ஃபோன் பாக்கெட்டில் இருக்க, அவன் பாக்கெட் தொடப்போனவள் கைகளைப் பிடித்து மேல் சாய்த்துக் கொண்டவன் “என்ன பண்ற?”
அவன் இதயத்துடிப்பு காதடைக்க “சரயுகிட்ட பேசணும், பில் செட்டில் பண்ணனும் நான் போகணும்”
“அதுலாம் எங்கும் போக வேண்டாம்.தூங்கு” என்றவன் அவளை பக்கம் தள்ளிக் கட்டிப்பிடித்துக் கொண்டான்.
“என்ன செய்யற ஷ்யாம்”
“தூங்குகிறேன்”
“ஷ்யாம் நான் போகணும்”
“பெட் கட்டி சரக்கா அடிக்கிற? தண்டனை வேண்டாமா உனக்கு”
“ஏய் அது விளையாட்டு”
“சரி வா நாமும் விளையாடலாம்”
அவன் அப்படிச் சொல்லவும் துள்ளிக் குதித்து திரும்பி அவனை அடிக்க அவள் கை ஓங்க, ஓங்கிய கையை பிடித்தவன் அவள் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு எழுந்தான்.
“பொறு. குளித்து முடித்து வரேன்”
சுந்தரிக்கு கோபம் கொஞ்சமும் குறையவில்லை.
“நீ செய்தது பிடிக்கலை”
“நீ செய்ததும் பிடிக்கவில்லை”
“எது?”
“எது?”
“சொல்லி தொலை…”
“ஷாமுக்தி மைக்ரோ தொழில் பைனான்ஸில் கடன் வாங்க சொல்லு அந்த பெண்ணை. அதில் ரெஸ்டாரன்ட் திறக்க சொல்லு”
“அதற்கான ஆவணம் எதுவுமில்லை எங்களிடம் ”
“தயார் செய்து வாங்குங்கள்”
“எதுக்கு?”
எப்போதும் எழும் கேள்வி அவனுக்குள் எழுந்தது. இந்த பெண்ணா ஜீனியஸ். “என்னால் முடிந்த உதவி இது சுந்தரி, மறுக்காமல் விஷயத்தை அவர்களிடம் சொல்லு”
சுந்தரிக்கு எத்தனை எத்தனை கடன் இவனிடம் என்றிருந்தாலும் "சரி வா. மிஸ்டர் இரண்டாம் வாரிசைப் பார்க்கப் போகலாம்”
“உனக்கு ஏன் அவரை பிடிக்கலை”
“பிடிக்கல அவ்வளவு தான்”
ஷ்யாம் காரை செலுத்துவதும் கண்ணாடியில் பார்த்து சந்து பொந்துகளில் காரை விடுவதுமாக இருக்க, சுந்தரி கவனித்து பார்த்தாள் அவர்களை இரண்டு கார்கள் தொடர்கிறது.
“ஷ்யாம் நம்மளை ஃபாலோ பண்றாங்க”
“ஆமா கவனிச்சேன், என்ன செய்யலாம்”
“வேலையை மட்டும் பார்ப்போம்” சுந்தரியின் மூளை ஷ்யாமிற்கு ஆபத்து என்றே கணித்தது.
காரை விட்டு இறங்கியவள் “ இனி ஏதுவென்றாலும் மெசேஜ் செய் அதிகம் சந்திக்கவேண்டாம்” அவள் பேசியதைக் கேட்டவன் சூழலை உணர்ந்திருந்தாலும் அவளுடன் இறங்கி வீட்டுக்குள் நுழைந்தான்.
“என்ன ஷ்யாம், நான் தான் நாம சேர்ந்திருப்பது நல்லதில்லை சொன்னேனே”
இந்த முத்தம் வாங்காமல் என்னால் போக முடியாது என்றவன் அழுத்தி முத்தம் கொடுத்து அவள் வீட்டை விட்டு வெளியே வந்தான்.
ஷியாம் உயிருக்கு ஆபத்தில்லை.ஷ்யாமை சுற்றி இருக்கும் உயிர்களுக்கு தானே ஆபத்து, அதன் படி பார்த்தால் சுந்தரிக்கு ஆபத்து அதிகம்.ஷ்யாமுடன் இருந்தால் அவள் உயிருக்கு ஆபத்தில்லை, அவன் நிறுவனத்திற்கு மட்டும் தான்.
திரும்பவும் வீட்டுக்குள் நுழைந்தவன் “நீ என்னோடு வா” என்று குரலுயர்த்தி அழைத்தான்.
“ஏன் ஷ்யாம்”
“பார்.என்னோடு இருப்பதுதான் உனக்குப் பாதுகாப்பு”
“என்னோடு நீ இருந்தால் உனக்கு ஆபத்து”
“நீ சொன்னது போல முக்தி அல்லாமல் ஷாமுக்தியை கவனித்தால் எனக்கிருக்கும் ஆபத்து குறையும். உன் நிலைமை மாறாதே”
“என்னோடு இருந்தால் நீ, நான் மட்டுமே பிரச்சனையைக் கவனிக்க முடியும் தீர்க முடியும். அதே தனியாக இருந்தாய் என்றால் நீ, இந்த ஊரில் உன் நண்பர்கள், தமிழ்நாட்டில் உன் சொந்தம் என்று எல்லா இடமும் பிரச்சினை பரவும்.
“நீ சின்ன விசயத்தை பெருசாக்குற”
“இல்ல உண்மை நிலைமையை சொல்கிறேன். இன்னொன்றும் இருக்கிறது நீ இப்போது என்னோடு வந்தால் மட்டுமே உன் முரளி மாமா கிடைப்பான். சரயுவிற்கு கடன் கிடைக்கும்”
அவன் மிரட்டல் கொஞ்சமும் அவளை அசைக்கவில்லை . ஆனாலும் அவனுடன் செல்ல சமதிதாள்.
சுந்தரி அவனுக்கு மூன்று கட்டளைகள் சொன்னாள்
அவளை முத்தமிட கூடாது, அவளை அடிமை போல நடத்தக் கூடாது.எந்நேரமும் அவளுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டே இருக்க கூடாது.
மாட்டேன் என்றவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
புத்திசாலி பெண் ஷ்யாம் பக்கம் இருப்பது அவர்களுக்கு ஆபத்து அல்லவா சிவாஜி பிரகாஷ் முக்தி மும்பை ஹைவேயில் ஷ்யாம் காரை விபத்துக்குள்ளாக்க ஏற்பாடு செய்தார் .
தப்பித்து ஷ்யாம் கெஸ்ட் அவுஸ் போய்ச் சேர்ந்தனர். ஷ்யாம் குழப்பமான முகம் பார்த்தவள் அவள் கணினி திறந்து அவர்கள் நிறுவனத்திற்காக அவள் தயாரித்த மென்பொருள் டிசைன் எடுத்துக் காட்டினாள். அதைப் பற்றி விவரித்து பேசினாள்.
“ம் நல்லாருக்கு” விநயமாக பேசியவன் அமைதியாக இருக்க,
சுந்தரி “என்ன ஷ்யாம்?”
“உனக்கு எந்த ஆபத்தும் வராது. நான் பார்த்துக்கறேன்” என்றவன் எழுந்து சமையலுக்கு ஆள் வரும். பாதுகாப்பிற்கு ஆள் வரும். முக்கியமான விஷயமாக வெளியே போகிறேன் என்று பெருமூச்சு விட்டுப் பேசியவன் கதவைத் திறக்க அவள் கைரேகையையும் பதித்துவிட்டுக் கிளம்பினான்.
சுந்தரியால் ஷ்யாம் மனப்போராட்டங்களை புரிந்துகொள்ள முடிந்தது. ஷ்யாம் தனிமையாக உணர்வதை புரிந்துகொள்ள முடிந்தது.அதற்காக அவளுக்கும் வலிக்கிறது என்பதை அவள் ஒத்துக்கொள்ள தயாரில்லை. ஷ்யாமிற்கு அவள் மீது காதல் இருப்பது போல அவளுக்கு அவன் மீது இருக்கிறதா என்கிற கேள்வியை ஆழ் மனதில் நினைக்கக் கூட தயாரில்லை.
காதல் அழகானது ஆனாலும் ஆபத்தானது. தன்னை போல உணர்வுகளை மறைக்கும் பெண் அவனுக்கு வேண்டாம், அவன் காதலை ஏற்று அவனுக்கு நிகராக அன்பை பொழியும் பெண்தான் அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்பது அவள் எண்ணம். ஷ்யாம் எப்போதோ அவளை அவனுகானவளாக எண்ண தொடங்கிவிட்டான். சுந்தரி விஷயத்தில் எதுவுமே தகர்த்து எரிவது மட்டுமே அவனுக்கு நியாயமாக தெரிகிறது. அது அவள் விலகிப்போகும் முடிவாக இருந்தாலும்...
சுந்தரியை விட்டு அவன் போனது அவன் தந்தை வீடு. எப்போதும் போல அவர் ஆபிஸ் அறையில் ஆவணத்தைப் படித்துக்கொண்டிருந்தார். அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவர் கண்களில் ஆயிரம் ஒளிக் கீற்று. அமைதியாக அவர் முன்னே சென்று அமர்ந்தவன் பேச தொடங்கினான்.
‘எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது.தமிழ் பெண், அவள் மனதில் என்ன என்பதெல்லாம் தெரியாது. எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. அவளை திருமணம் செய்துகொள்ள ஆசை”
அவர் மனதில் நிம்மதி பரவ முகத்தில் இறுக்கம் மறைந்து ரிலாக்ஸ் ஆவது தெரிந்தது. சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்தைப் பேசினான். “அவள் இனி என்னோடு தங்கப் போகிறாள். அவளுக்கு எந்த விதமான ஆபத்து நேர்ந்தாலும் நீங்களும், உங்கள் முக்தி நிறுவனத்தில் இருக்கும் கறுப்பாடு கூட்டமும் மட்டுமே காரணம்”
அவர் அதிர்ந்து பார்க்கவும் மனதில் உள்ள தைரியம் எல்லாம் கூட்டிப் பேசினான். “நான் ஷாமுக்தியை விரிவாக்கம் செய்கிறேன். உலக சந்தை வரை பிடிக்க நினைக்கிறேன். முக்தியை கவனிக்க முடியுமா தெரியவில்லை” தயங்கி அவன் சொல்லவும்
பதிலுக்கு அவர் “உன் இஷ்டம் போல செய். திருமணம் செய்யும் பொது சொல்” என்று முடித்துக்கொண்டார். மனப்புழுக்கம் தாங்காமல் எழுந்து அறை விட்டு நகர சென்றவரிடம் “அந்த பெண்ணுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது அப்பா” என்று அழுத்தமாக சொன்னான்.
அவர் “வராதுப்பா” என்று முடித்துக்கொண்டார்.
ஷெண்பாவின் பிள்ளையல்லவா அழுத்தமான எதிர்பார்ப்புகள் மட்டும் தானே இருக்கும். அவர் நன்மை கருதி நடந்துகொண்ட உயர்ந்த உள்ளம் ஆயிற்றே மனைவிக்காகவாவது மகனை காப்பாற்றியே தீருவார்.
காலை வெயில் கண்ணாடி சுவரை தாண்டி அவள் முகத்தில் பட அசைந்து எழுந்து அமர்ந்தாள்.
அந்த வீட்டிற்கு வந்தது, ஷ்யாம் டி-ஷர்ட் நைட் -பேண்ட் அணிந்துகொண்டு ராத்திரி வாந்தி, தலை வலியில் அவஸ்தைப்பட்டது நினைவிற்கு வந்தது. அவளை போலவே அந்த ஹாலில் அவளுக்கு பக்கமே தரையில் சோபா குஷன் தலைக்கு வைத்துத் தூங்கி கொண்டிருந்தான் ஷ்யாம். தொண்டை வறண்டு, தண்ணீர் தாகம் எடுத்தது. பல் தேய்த்து கிச்சென் ஃப்ரிட்ஜில் ஜூஸ் எடுத்துக் குடித்தாள்.
முந்தைய நாள் பில் செட்டில்மென்ட் நினைவிற்கு வந்தது. குளித்து முடித்து வந்து வாய் பிளந்து தூங்கும் ஷ்யாமை எழுப்பினாள்.
“எழுந்திரு ஷ்யாம். கதவைத் திற நான் போகவேண்டும்”
“என்ன அவசரம் தூங்கு” என்றவன் திரும்பி படுத்துக்கொண்டான்.
ஷ்யாம் கைரேகை வைத்து திறந்தால் மட்டுமே திறக்கக் கூடிய கதவு, லிஃப்டும் பிரைவசி என்ற பெயரில் அதே கைரேகை சமாச்சாரம். சரயுவிடம் பேசலாம் என்றால் அவள் தொலைப்பேசியும் காணவில்லை. ஷ்யாம் ஃபோன் பாக்கெட்டில் இருக்க, அவன் பாக்கெட் தொடப்போனவள் கைகளைப் பிடித்து மேல் சாய்த்துக் கொண்டவன் “என்ன பண்ற?”
அவன் இதயத்துடிப்பு காதடைக்க “சரயுகிட்ட பேசணும், பில் செட்டில் பண்ணனும் நான் போகணும்”
“அதுலாம் எங்கும் போக வேண்டாம்.தூங்கு” என்றவன் அவளை பக்கம் தள்ளிக் கட்டிப்பிடித்துக் கொண்டான்.
“என்ன செய்யற ஷ்யாம்”
“தூங்குகிறேன்”
“ஷ்யாம் நான் போகணும்”
“பெட் கட்டி சரக்கா அடிக்கிற? தண்டனை வேண்டாமா உனக்கு”
“ஏய் அது விளையாட்டு”
“சரி வா நாமும் விளையாடலாம்”
அவன் அப்படிச் சொல்லவும் துள்ளிக் குதித்து திரும்பி அவனை அடிக்க அவள் கை ஓங்க, ஓங்கிய கையை பிடித்தவன் அவள் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு எழுந்தான்.
“பொறு. குளித்து முடித்து வரேன்”
சுந்தரிக்கு கோபம் கொஞ்சமும் குறையவில்லை.
“நீ செய்தது பிடிக்கலை”
“நீ செய்ததும் பிடிக்கவில்லை”
“எது?”
“எது?”
“சொல்லி தொலை…”
“ஷாமுக்தி மைக்ரோ தொழில் பைனான்ஸில் கடன் வாங்க சொல்லு அந்த பெண்ணை. அதில் ரெஸ்டாரன்ட் திறக்க சொல்லு”
“அதற்கான ஆவணம் எதுவுமில்லை எங்களிடம் ”
“தயார் செய்து வாங்குங்கள்”
“எதுக்கு?”
எப்போதும் எழும் கேள்வி அவனுக்குள் எழுந்தது. இந்த பெண்ணா ஜீனியஸ். “என்னால் முடிந்த உதவி இது சுந்தரி, மறுக்காமல் விஷயத்தை அவர்களிடம் சொல்லு”
சுந்தரிக்கு எத்தனை எத்தனை கடன் இவனிடம் என்றிருந்தாலும் "சரி வா. மிஸ்டர் இரண்டாம் வாரிசைப் பார்க்கப் போகலாம்”
“உனக்கு ஏன் அவரை பிடிக்கலை”
“பிடிக்கல அவ்வளவு தான்”
ஷ்யாம் காரை செலுத்துவதும் கண்ணாடியில் பார்த்து சந்து பொந்துகளில் காரை விடுவதுமாக இருக்க, சுந்தரி கவனித்து பார்த்தாள் அவர்களை இரண்டு கார்கள் தொடர்கிறது.
“ஷ்யாம் நம்மளை ஃபாலோ பண்றாங்க”
“ஆமா கவனிச்சேன், என்ன செய்யலாம்”
“வேலையை மட்டும் பார்ப்போம்” சுந்தரியின் மூளை ஷ்யாமிற்கு ஆபத்து என்றே கணித்தது.
காரை விட்டு இறங்கியவள் “ இனி ஏதுவென்றாலும் மெசேஜ் செய் அதிகம் சந்திக்கவேண்டாம்” அவள் பேசியதைக் கேட்டவன் சூழலை உணர்ந்திருந்தாலும் அவளுடன் இறங்கி வீட்டுக்குள் நுழைந்தான்.
“என்ன ஷ்யாம், நான் தான் நாம சேர்ந்திருப்பது நல்லதில்லை சொன்னேனே”
இந்த முத்தம் வாங்காமல் என்னால் போக முடியாது என்றவன் அழுத்தி முத்தம் கொடுத்து அவள் வீட்டை விட்டு வெளியே வந்தான்.
ஷியாம் உயிருக்கு ஆபத்தில்லை.ஷ்யாமை சுற்றி இருக்கும் உயிர்களுக்கு தானே ஆபத்து, அதன் படி பார்த்தால் சுந்தரிக்கு ஆபத்து அதிகம்.ஷ்யாமுடன் இருந்தால் அவள் உயிருக்கு ஆபத்தில்லை, அவன் நிறுவனத்திற்கு மட்டும் தான்.
திரும்பவும் வீட்டுக்குள் நுழைந்தவன் “நீ என்னோடு வா” என்று குரலுயர்த்தி அழைத்தான்.
“ஏன் ஷ்யாம்”
“பார்.என்னோடு இருப்பதுதான் உனக்குப் பாதுகாப்பு”
“என்னோடு நீ இருந்தால் உனக்கு ஆபத்து”
“நீ சொன்னது போல முக்தி அல்லாமல் ஷாமுக்தியை கவனித்தால் எனக்கிருக்கும் ஆபத்து குறையும். உன் நிலைமை மாறாதே”
“என்னோடு இருந்தால் நீ, நான் மட்டுமே பிரச்சனையைக் கவனிக்க முடியும் தீர்க முடியும். அதே தனியாக இருந்தாய் என்றால் நீ, இந்த ஊரில் உன் நண்பர்கள், தமிழ்நாட்டில் உன் சொந்தம் என்று எல்லா இடமும் பிரச்சினை பரவும்.
“நீ சின்ன விசயத்தை பெருசாக்குற”
“இல்ல உண்மை நிலைமையை சொல்கிறேன். இன்னொன்றும் இருக்கிறது நீ இப்போது என்னோடு வந்தால் மட்டுமே உன் முரளி மாமா கிடைப்பான். சரயுவிற்கு கடன் கிடைக்கும்”
அவன் மிரட்டல் கொஞ்சமும் அவளை அசைக்கவில்லை . ஆனாலும் அவனுடன் செல்ல சமதிதாள்.
சுந்தரி அவனுக்கு மூன்று கட்டளைகள் சொன்னாள்
அவளை முத்தமிட கூடாது, அவளை அடிமை போல நடத்தக் கூடாது.எந்நேரமும் அவளுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டே இருக்க கூடாது.
மாட்டேன் என்றவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
புத்திசாலி பெண் ஷ்யாம் பக்கம் இருப்பது அவர்களுக்கு ஆபத்து அல்லவா சிவாஜி பிரகாஷ் முக்தி மும்பை ஹைவேயில் ஷ்யாம் காரை விபத்துக்குள்ளாக்க ஏற்பாடு செய்தார் .
தப்பித்து ஷ்யாம் கெஸ்ட் அவுஸ் போய்ச் சேர்ந்தனர். ஷ்யாம் குழப்பமான முகம் பார்த்தவள் அவள் கணினி திறந்து அவர்கள் நிறுவனத்திற்காக அவள் தயாரித்த மென்பொருள் டிசைன் எடுத்துக் காட்டினாள். அதைப் பற்றி விவரித்து பேசினாள்.
“ம் நல்லாருக்கு” விநயமாக பேசியவன் அமைதியாக இருக்க,
சுந்தரி “என்ன ஷ்யாம்?”
“உனக்கு எந்த ஆபத்தும் வராது. நான் பார்த்துக்கறேன்” என்றவன் எழுந்து சமையலுக்கு ஆள் வரும். பாதுகாப்பிற்கு ஆள் வரும். முக்கியமான விஷயமாக வெளியே போகிறேன் என்று பெருமூச்சு விட்டுப் பேசியவன் கதவைத் திறக்க அவள் கைரேகையையும் பதித்துவிட்டுக் கிளம்பினான்.
சுந்தரியால் ஷ்யாம் மனப்போராட்டங்களை புரிந்துகொள்ள முடிந்தது. ஷ்யாம் தனிமையாக உணர்வதை புரிந்துகொள்ள முடிந்தது.அதற்காக அவளுக்கும் வலிக்கிறது என்பதை அவள் ஒத்துக்கொள்ள தயாரில்லை. ஷ்யாமிற்கு அவள் மீது காதல் இருப்பது போல அவளுக்கு அவன் மீது இருக்கிறதா என்கிற கேள்வியை ஆழ் மனதில் நினைக்கக் கூட தயாரில்லை.
காதல் அழகானது ஆனாலும் ஆபத்தானது. தன்னை போல உணர்வுகளை மறைக்கும் பெண் அவனுக்கு வேண்டாம், அவன் காதலை ஏற்று அவனுக்கு நிகராக அன்பை பொழியும் பெண்தான் அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்பது அவள் எண்ணம். ஷ்யாம் எப்போதோ அவளை அவனுகானவளாக எண்ண தொடங்கிவிட்டான். சுந்தரி விஷயத்தில் எதுவுமே தகர்த்து எரிவது மட்டுமே அவனுக்கு நியாயமாக தெரிகிறது. அது அவள் விலகிப்போகும் முடிவாக இருந்தாலும்...
சுந்தரியை விட்டு அவன் போனது அவன் தந்தை வீடு. எப்போதும் போல அவர் ஆபிஸ் அறையில் ஆவணத்தைப் படித்துக்கொண்டிருந்தார். அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவர் கண்களில் ஆயிரம் ஒளிக் கீற்று. அமைதியாக அவர் முன்னே சென்று அமர்ந்தவன் பேச தொடங்கினான்.
‘எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது.தமிழ் பெண், அவள் மனதில் என்ன என்பதெல்லாம் தெரியாது. எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. அவளை திருமணம் செய்துகொள்ள ஆசை”
அவர் மனதில் நிம்மதி பரவ முகத்தில் இறுக்கம் மறைந்து ரிலாக்ஸ் ஆவது தெரிந்தது. சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்தைப் பேசினான். “அவள் இனி என்னோடு தங்கப் போகிறாள். அவளுக்கு எந்த விதமான ஆபத்து நேர்ந்தாலும் நீங்களும், உங்கள் முக்தி நிறுவனத்தில் இருக்கும் கறுப்பாடு கூட்டமும் மட்டுமே காரணம்”
அவர் அதிர்ந்து பார்க்கவும் மனதில் உள்ள தைரியம் எல்லாம் கூட்டிப் பேசினான். “நான் ஷாமுக்தியை விரிவாக்கம் செய்கிறேன். உலக சந்தை வரை பிடிக்க நினைக்கிறேன். முக்தியை கவனிக்க முடியுமா தெரியவில்லை” தயங்கி அவன் சொல்லவும்
பதிலுக்கு அவர் “உன் இஷ்டம் போல செய். திருமணம் செய்யும் பொது சொல்” என்று முடித்துக்கொண்டார். மனப்புழுக்கம் தாங்காமல் எழுந்து அறை விட்டு நகர சென்றவரிடம் “அந்த பெண்ணுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது அப்பா” என்று அழுத்தமாக சொன்னான்.
அவர் “வராதுப்பா” என்று முடித்துக்கொண்டார்.
ஷெண்பாவின் பிள்ளையல்லவா அழுத்தமான எதிர்பார்ப்புகள் மட்டும் தானே இருக்கும். அவர் நன்மை கருதி நடந்துகொண்ட உயர்ந்த உள்ளம் ஆயிற்றே மனைவிக்காகவாவது மகனை காப்பாற்றியே தீருவார்.