9.ராட்சதன் வந்தான்
அவனைக் கண்டு விட்டதாலோ என்னவோ பார்க்கும் முகத்தில் எல்லாம் அவன் முகம் தேடினாள். அவன் ஜாடையில் முகம் தெரிந்தால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அவனிருக்கும் ஊரிலிருப்பதே இத்தனை இம்சையாக இருக்கிறதே..!
அடுத்த நாள் சரயுவிற்கு அறிவுரை கூறினாள் “பார், குடி யார் உடம்பிற்கும் கேடுதான், பெண்களுக்கு அதிக பாதிப்பு கொடுக்கும். இப்படி நிறைய குடிக்காதே”
நான் ஜஸ்ட் வைன் தான் குடித்தேன் என்று சரயு வியாக்யானம் பேச, ‘அப்படி தெரியலையே’ சுந்தரி சந்தேகமாக பேசினாள்.
சரயு “சாரி சுந்தரி, குடிச்சிருக்ககூடாது. சமீப காலமாக அப்பா அம்மாவை மிஸ் பண்ணறேன். அதான் குடிச்சிட்டேன்”
“குடிச்சா எல்லாம் சரியாகிடுமா? குடிச்சு உன் உடம்ப கெடுத்துக்கிட்டு , என்ன பண்ண போற?”
சுந்தரிக்கு எப்போதுமே இந்த சந்தேகம் உண்டு.அது எப்படி ஒரு இலக்கை நோக்கி நகரும் போதும் கடந்ததை எண்ணி சோகத்தில் எதிர்காலத்தையும் வீண் செய்கின்றனர். கடந்ததை எண்ணி சோகத்தில் மூழ்குவதில் பயன் என்ன?
சரயுவிற்கு சட்டென்று மனம் லேசானது. “இனி அப்படி பார்ட்டிக்கு போகமாட்டேன். போனாலும் குடிக்கமாட்டேன் . எனக்காக அக்கறைப்பட ஒரு ஆள் இருக்கே இங்கே” சுந்தரியின் கண்ணங்களை பிடித்து இந்தப்புறம் அந்தப்புறம் ஆட்டி கொஞ்சலாக பேசி சிரித்தாள்.
சுந்தரிக்கு அவன் நினைவு வந்தது. அவன் கொடுத்த முத்தம் நினைவுக்கு வந்தது. ‘குடிக்காத...அதன் பாதிப்பு அதிகம்’ என்றாள் அவன் நினைவில்.
இவள் குடிக்காமலிருந்திருந்தால்? நடுநிசியில் அவள் போகாமலிருந்திருந்தால்? அவனை பார்க்காமலிருந்திருந்தால்?அவன் ஆழ்குரல் கேட்காமலிருந்திருந்தால்? இந்த இதயம் எந்த கற்பனைக்கும்,ஆசைக்கும் போகாமல் இருக்குமே.
அவனை திரும்ப பார்த்த நொடியிலிருந்து இன்னொரு முறை பார்க்க, பேச ஏன்டா என்ன நம்ப வச்சு கழுத்தறுத்த என்று கேட்க தோன்றுகிறதே!!
அவளை காக்க வைக்காமல் அந்த வாரமே அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் இன்வெஸ்டர் மீட்டிங் வந்தான்.
நீள்வட்ட மேஜை அது. அவளை போல பிராஜெக்ட் தலைமைப்படுத்தும் நான்கு பிராஜெக்ட் ஹெட் வரிசையாக அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிரில் முதலீடு செய்ய அழைத்திருக்கும் பெரும் பணம் படைத்த முதலாளிகள், அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் அமர்ந்திருந்தனர். அந்த நீள்வட்ட மேஜையின் கூர் முனை இருக்கை மட்டுமே காலியாக இருக்க, சந்திப்பு தொடங்கும் நேரம் உயிர்கொண்ட செதுக்கிய சிற்பம்போல நடந்து வந்தமர்ந்தான். அவன் அமர்ந்த இடம் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ இருக்கை.
அமைதியான அறையில் அவள் இதயம் துடிக்கும் சத்தம் அவள் காதுகளில் சத்தமாக கேட்டது. சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல தான் உன் நிலை என்று அன்றொரு நாள் சொன்னானே.
அந்த ஆச்சர்ய விழி அவனை கண்டதும் ஒரு கண நிமிடம் உறைந்து நின்று சட்டென்று சிவப்பதை கவனிக்க தவறவில்லை அவன்.
ஏ.சி ஓடும் அறையில் வியர்த்தது அவளுக்கு.
கூட்டத்தில் எப்போதும் தலை குனிந்து அடுத்தவர் பேச்சை உற்றுக் கவனிப்பவள் இம்முறை அவளையும் மீறி நிமிர்ந்து அவன் பக்கம் ஓர கண்ணால் பார்த்தாள். கண்டுகொண்டவன் ‘கண்டுகொண்டேன் பெண்ணே’ என்று கண்ணால் பேசினான். இலகுவான அவன் கொஞ்சல் பாவனை நிறைந்த முகம் பார்க்க மனம் படபடத்தது.
அந்த முக்கியமான இடத்திலும் முக்கியமான மனிதர்கள் அமர்ந்திருக்கும் தருணத்திலும் அவன் தீவிரமாக கவனிக்கும் முகத்தில் அவன் குறும்புத்தனம் அவளுக்கு மட்டுமே தெரிகிறதே..!
பஜார் தெருவில் நடக்கையில் பொம்மை கடை பொம்மைகள் அழகாக பார்த்துக்கொண்டு என்னை வாங்கேன் என்று அதன் அழகில் அழைப்பது போலவே அவன் முகமும் அவளை அழைப்பது போல இருந்தது.
“இவனை பார்க்கவே கூடாது..!” எண்ணிக்கொண்டாள்.
வரிசையாக மூன்று பேர் அவர்கள் பிராஜெக்ட் பற்றிப் பேசியாகி விட்டது. அவள் முறை அது. எழுந்து சென்று திரை பக்கம் நின்றாள். அவன் நேர் பார்வையை சந்தித்தாள்.
“தொடங்கலாம். ஆல் தி பெஸ்ட்” என்றவன் அவளை கவனிக்க தொடங்கினான். திக்கித் திணறித் தொடங்கியவள் அவன் முகம் பார்த்துப் பேசும் போது அவனின் அந்த ஆதரவான பார்வையில் மேலும் மேலும் நம்பிக்கையுடன் பேசி முடிக்க முதலீடு செய்ய வந்தவர்கள் முகத்தில் பிரகாசம்.
“ஹேக் செய்ய முடியுமா என்கிற கேள்வி இருக்கிறதே என்ன பதில் சொல்லப்போறீங்க ”
“முடியாது என்று சொல்லமாட்டேன். ஆனால் கஷ்டம்”
“நிறைய செக்யூரிட்டி சாப்ட்வேர் மார்க்கெட்டில் இருக்கு, இதன் லாபவிகிதம் என்னவாக இருக்கும் ”
‘பத்து வர்ஷன் வரை அப்டேட் செய்யும் அளவுக்கு டிசைன் செய்திருக்கு. தொடர்ந்து மார்கெட்டில் பத்து ஆண்டுகள் நிற்கும். ஹை-ரிஸ்க் டேட்டா பாதுகாப்பதற்கு செய்திருக்கும் சாப்ட்வேர், மெதுவாக தொடங்கினாலும் சீரான லாபம் கொடுக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கு’ அவள் நினைத்தததை ஷார்ப்பாக சொல்லி முடித்தாள்.
‘இது தோல்வியில் முடிந்தால் சீர்படுத்த வேற ஐடியா இருக்கிறதா?’
அவள் சட்டென்று “இல்லை” என்று பதில் சொன்னாள். அந்த மாதிரியான கேள்விகள் வேற்று நிறுவனத்தார் கேட்கிறார் என்றால் பதில் சொல்லாமல் விடுவதில் தப்பில்லை.
ஷ்யாமிற்கு எரிச்சல் ஆனது. கேள்வி கேட்பவர் இந்தப் பெண்ணை நமது கம்பனிக்கு இழுத்து போகலாம் என்பது போல கேட்கிறார் என்று அவன் காதில் ராகுலும் கிசுகிசுக்க, படார் என்று எழுந்தவன் "எல்லோருக்கும் நன்றி. பிரேக் எடுத்துக்கலாம். முதலீடு செய்ய மேற்கொண்டு பேசலாம். பிராஜெக்ட் ஹெட் கிளம்பலாம்." சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே போனான்.
மற்றவர்கள் எல்லோரும் தேநீர் இடைவெளிக்கு சென்றனர். சுந்தரி அவள் இடத்திற்கு செல்ல, ஷ்யாம் உதவியாளர் வந்து அவளை சார் அழைக்கிறார் என்று சொல்லவும் திரும்பவும் இதயம் ஓட்டமெடுத்தது.
இவனை நினைத்தாலோ பார்த்தாலோ ஏன் இப்படியொரு அசௌகரியம்..! ஆண்டவா காப்பற்று..!
மெதுமெதுவாக நடந்தாலும் சி.இ.ஓ அறை சீக்கிரமே வந்தது. கதவை தட்டி உள்ளே சென்றாள். அவன் சிரித்த முகம் ஈர்த்தது.
அவன் எதிர்புறம் இருக்கும் இருக்கையில் அமர்ந்தவளிடம் மரியாதையுடன் அந்நியமாக “உட்காருங்க மிஸ் சுந்தரி”என்று சொல்ல சுந்தரி “நான் சுந்தரி ஷியாம். கண்ணு தெரியாம போய்டுச்சா, இல்லை நெட்டு போல்ட் ஏதாச்சும் லூஸ் ஆகிடுச்சா”
அவள் பேசி முடித்ததும் பின்னால் சிரிப்பு சத்தம் கேட்க திரும்பி பார்த்தவளுக்கு எங்கேனும் போய் முகத்தை மறைத்து கொள்ளலாமா என்பது போல வெட்கம் பிடுங்கி தின்றது. நின்றிருந்தது ராகுல். அவனக்கு பின்னால் கொஞ்ச தூரத்தில் சோபாவில் முதலீட்டாளர் ஒருவர் அமர்ந்துகொண்டு காபி குடித்துக்கொண்டிருந்தார். தர்மசங்கடமான நிலையில் பல்லை கடித்துக்கொண்டு கைகளால் முகம் பொத்தி “சாரி சாரி” என்று அவள் சொல்ல அவன் இதயத்தில் அந்த நொடி கவிதை ஆனது.
ராகுல் “பய்யா நான் அப்பறம் வரவா?”
சுந்தரி “இல்ல இல்ல... நீங்க இருங்க சார். நான் போறேன்”
சிலைபோல அமர்ந்திருந்தவன் அவர்களை பார்த்து “ரண்டு பேரும் இருங்க. மீட்டிங் ஆரம்பிக்கலாம்”
அவன் சொல்லியதும் தொடங்கியது கலந்துரையாடல். பக்கம் வைத்திருந்த தேநீர், ஸ்னேக்ஸை அவள் பக்கம் தள்ளி “சாப்பிடுங்க. வயித்துக்கு கொஞ்சம் போட்டா தான் மூளை சுறுசுறுப்பா வேலை பார்க்கும்” என்றான். அந்தக் குரலை நிராகரிக்க முடியவில்லை. அதட்டும் முதலாளி குரல் அது, சொல்வதை செய்ய வைக்கும் தொனி. கூடவே அந்த வாக்கியங்களுக்கு அவள் பழக்கப்பட்டவள் அல்லவா..!
அதிகம் பேசியது அவளும் ராகுலும் தான். கேட்டுக்கொண்டேயிருந்தவன் நடுநடுவே சில குறிப்புகளை பக்கம் இருக்கும் நோட்டில் பென்சிலில் குறித்துக்கொள்வான். அவன் சிரிப்பைவிட இந்த தீர்க்கமாக பார்த்து கவனமாக கேட்டு குறிப்பெடுக்கும் இந்த முகம் வசிகரித்தது.
மீட்டிங் முடிந்ததும் வந்த முதலீட்டாளர் “சரி ஷ்யாம். வாழ்த்துக்கள், வேலையே தொடங்கலாம்” கைகுலுக்கி ராகுல் தோளில் தட்டிவிட்டு கிளம்பினார்.
அவர் திரும்பியதும் கணநிமிடத்ததில் அவனை கட்டிப்பிடித்து “தேங்க்ஸ் பய்யா” என்றவன் அவள் புறம் திரும்பி அவரை அனுப்பிவிட்டு வரேன் என்றவன் குதூகலமாக ஓடினான்.
யாருமில்லாத அறையில் மௌனம் இறைக்க திரும்பவும் அவள் இதயத்தின் ஓசை அவள் காதுகளில்.
சிரித்தபடி மேஜையை சுற்றி அவள் முன்னே வந்து நின்றவன் அவளை பார்க்க அவள் தலை குனிந்தாள். உற்சாகமாக பேசிய சுந்தரி எங்கே என்று நினைத்தவன் “அது ஏன் சுந்தரி என் கிட்ட மட்டும் பாரபட்சம்?.. ம்”
“அப்படியெல்லாம் இல்லை”
“இதோ... பேசும்போது என்னையே பார்த்துட்டு இருந்தே..! இப்போ பார்க்க கூட மாட்டேங்கிற”அவன் வெளிப்படையான கேள்வியில் திணறியவள் “நீ என்னை மறந்துட்டன்னு நெனச்சேன்”
சட்டென்று சிரித்தவன் “நான் தூங்கி நாள் ஆச்சு சுந்தரி” என்று இன்னும் ஒரு அடி எடுத்து வைத்து அவள் முன்னே வர அவளுக்கு அந்த இரவு நினைவுக்கு வந்தது.
சட்டென்று அவனை தள்ளிவிட்டவள் “சே ஷியாம் உனக்கு மட்டும் ஆண்டவன் மூளையை இடுப்பு கீழ வைச்சிட்டான்” அவள் பொருட்களை சேகரித்து அறைவிட்டு ஓடினாள்.
அவள் சென்றபின்பு தான் அவள் பேசிய வாக்கியத்தின் அர்த்தம் புரிந்தது அவனுக்கு. அடப்பாவி..! என்று அவனுக்குள் சிரித்துக்கொள்ள
மேஜை மீது சாய்ந்திருந்த சிரித்த முகமான ஷ்யாமை பார்த்த ராகுல் “எங்க சுந்தரி ?”
“போயாச்சு”
“ ஸ்மார்ட் இல்ல, சேர்ந்து லன்ச் சாப்பிடலாம் நெனெச்சேனே ”
“ப்ச் இன்னொரு நாள் பெரிய விருந்தே சாப்பிடலாம்”
‘அந்த சென்னை பெண் இவள் தானே’ கேட்டான் ராகுல். ராகுலுக்கு சந்தேகம் இருந்தது. காயாவிலிருந்து யார் வந்திருக்கிறார் என்று அவன் விசாரித்து தெரிந்துகொண்ட நாளிலிருந்து சீக்கிரமாக அவன் வெளிநாடு பயணமெல்லாம் முடித்துக்கொண்டு அவர்கள் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறான்.
ராகுலுக்கு யூகம் இருந்தாலும் அதை அவன் நண்பன் ஒப்புக்கொண்டால் மட்டுமே நிம்மதி. ஷ்யாம் தலை மட்டும் அசைத்தான்.
ராகுலுக்கு மகிழ்ச்சியானது. “பலே பய்யா அப்போ சுந்தரி தான் எனக்கு அண்ணி”அவன் சிரிக்க,ஷியாம் முகத்திலும் சின்ன முறுவல் பூத்தது.
முரளி தப்பி ஐம்பது நாட்கள் ஆகிவிட்டது, அவன் இன்னமும் இந்தியா வந்து சேரவில்லை. வினிதாவிற்கு எரிச்சல் மண்டியது . அத்தை சுந்தரி வேறு ஊருக்கு சென்றுவிட்டாள் என்பதில் நிம்மதியாக இருக்கிறாள், அவளுக்கு தான் கோபமாக இருக்கிறது.
முரளி இந்தியா வரும் வரையாவது இந்த பெண் தமிழ்நாட்டிலிருந்திருக்க கூடாதா “பார் உன் முறைப்பெண் கொஞ்சம் கூட உன்னை பற்றி கவலைப்படாமல் எவனோடவோ காதல் செய்கிறாள்” என்று காட்டியிருப்பாள். இவள் தப்பி வேறு ஊருக்கு போய் விட்டாளே. ஆனாலும் வினிதாவிடம் போட்டோக்கள் இருக்கிறது அதை காட்டி பேசத்தான் போகிறாள்.
வினிதாவிற்கு எப்போது இந்த பைத்தியம் பிடித்தது என்பது தெரியாது. அவள் அன்பை, பண்பை அழகை சுந்தரியோடு போட்டி போட்டு பார்ப்பதிலும் அதில் வெற்றியடைய நினைப்பதிலுமே காலம் கழித்தாள். வேடிக்கை என்னவென்றால் சுந்தரிக்கு இப்படியொரு போட்டி இருப்பதே தெரியாது. இந்த பித்து பிடிக்க முதல் காரணம் முரளி. அதனாலேயே முரளியை தண்டிப்பதற்கும் சுந்தரியை கஷ்டப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டாள் வினிதா.
ஆசையும் கோபமும் எங்கே நியாயம் தர்மம் பார்த்தது ?
அவனைக் கண்டு விட்டதாலோ என்னவோ பார்க்கும் முகத்தில் எல்லாம் அவன் முகம் தேடினாள். அவன் ஜாடையில் முகம் தெரிந்தால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அவனிருக்கும் ஊரிலிருப்பதே இத்தனை இம்சையாக இருக்கிறதே..!
அடுத்த நாள் சரயுவிற்கு அறிவுரை கூறினாள் “பார், குடி யார் உடம்பிற்கும் கேடுதான், பெண்களுக்கு அதிக பாதிப்பு கொடுக்கும். இப்படி நிறைய குடிக்காதே”
நான் ஜஸ்ட் வைன் தான் குடித்தேன் என்று சரயு வியாக்யானம் பேச, ‘அப்படி தெரியலையே’ சுந்தரி சந்தேகமாக பேசினாள்.
சரயு “சாரி சுந்தரி, குடிச்சிருக்ககூடாது. சமீப காலமாக அப்பா அம்மாவை மிஸ் பண்ணறேன். அதான் குடிச்சிட்டேன்”
“குடிச்சா எல்லாம் சரியாகிடுமா? குடிச்சு உன் உடம்ப கெடுத்துக்கிட்டு , என்ன பண்ண போற?”
சுந்தரிக்கு எப்போதுமே இந்த சந்தேகம் உண்டு.அது எப்படி ஒரு இலக்கை நோக்கி நகரும் போதும் கடந்ததை எண்ணி சோகத்தில் எதிர்காலத்தையும் வீண் செய்கின்றனர். கடந்ததை எண்ணி சோகத்தில் மூழ்குவதில் பயன் என்ன?
சரயுவிற்கு சட்டென்று மனம் லேசானது. “இனி அப்படி பார்ட்டிக்கு போகமாட்டேன். போனாலும் குடிக்கமாட்டேன் . எனக்காக அக்கறைப்பட ஒரு ஆள் இருக்கே இங்கே” சுந்தரியின் கண்ணங்களை பிடித்து இந்தப்புறம் அந்தப்புறம் ஆட்டி கொஞ்சலாக பேசி சிரித்தாள்.
சுந்தரிக்கு அவன் நினைவு வந்தது. அவன் கொடுத்த முத்தம் நினைவுக்கு வந்தது. ‘குடிக்காத...அதன் பாதிப்பு அதிகம்’ என்றாள் அவன் நினைவில்.
இவள் குடிக்காமலிருந்திருந்தால்? நடுநிசியில் அவள் போகாமலிருந்திருந்தால்? அவனை பார்க்காமலிருந்திருந்தால்?அவன் ஆழ்குரல் கேட்காமலிருந்திருந்தால்? இந்த இதயம் எந்த கற்பனைக்கும்,ஆசைக்கும் போகாமல் இருக்குமே.
அவனை திரும்ப பார்த்த நொடியிலிருந்து இன்னொரு முறை பார்க்க, பேச ஏன்டா என்ன நம்ப வச்சு கழுத்தறுத்த என்று கேட்க தோன்றுகிறதே!!
அவளை காக்க வைக்காமல் அந்த வாரமே அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் இன்வெஸ்டர் மீட்டிங் வந்தான்.
நீள்வட்ட மேஜை அது. அவளை போல பிராஜெக்ட் தலைமைப்படுத்தும் நான்கு பிராஜெக்ட் ஹெட் வரிசையாக அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிரில் முதலீடு செய்ய அழைத்திருக்கும் பெரும் பணம் படைத்த முதலாளிகள், அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் அமர்ந்திருந்தனர். அந்த நீள்வட்ட மேஜையின் கூர் முனை இருக்கை மட்டுமே காலியாக இருக்க, சந்திப்பு தொடங்கும் நேரம் உயிர்கொண்ட செதுக்கிய சிற்பம்போல நடந்து வந்தமர்ந்தான். அவன் அமர்ந்த இடம் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ இருக்கை.
அமைதியான அறையில் அவள் இதயம் துடிக்கும் சத்தம் அவள் காதுகளில் சத்தமாக கேட்டது. சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல தான் உன் நிலை என்று அன்றொரு நாள் சொன்னானே.
அந்த ஆச்சர்ய விழி அவனை கண்டதும் ஒரு கண நிமிடம் உறைந்து நின்று சட்டென்று சிவப்பதை கவனிக்க தவறவில்லை அவன்.
ஏ.சி ஓடும் அறையில் வியர்த்தது அவளுக்கு.
கூட்டத்தில் எப்போதும் தலை குனிந்து அடுத்தவர் பேச்சை உற்றுக் கவனிப்பவள் இம்முறை அவளையும் மீறி நிமிர்ந்து அவன் பக்கம் ஓர கண்ணால் பார்த்தாள். கண்டுகொண்டவன் ‘கண்டுகொண்டேன் பெண்ணே’ என்று கண்ணால் பேசினான். இலகுவான அவன் கொஞ்சல் பாவனை நிறைந்த முகம் பார்க்க மனம் படபடத்தது.
அந்த முக்கியமான இடத்திலும் முக்கியமான மனிதர்கள் அமர்ந்திருக்கும் தருணத்திலும் அவன் தீவிரமாக கவனிக்கும் முகத்தில் அவன் குறும்புத்தனம் அவளுக்கு மட்டுமே தெரிகிறதே..!
பஜார் தெருவில் நடக்கையில் பொம்மை கடை பொம்மைகள் அழகாக பார்த்துக்கொண்டு என்னை வாங்கேன் என்று அதன் அழகில் அழைப்பது போலவே அவன் முகமும் அவளை அழைப்பது போல இருந்தது.
“இவனை பார்க்கவே கூடாது..!” எண்ணிக்கொண்டாள்.
வரிசையாக மூன்று பேர் அவர்கள் பிராஜெக்ட் பற்றிப் பேசியாகி விட்டது. அவள் முறை அது. எழுந்து சென்று திரை பக்கம் நின்றாள். அவன் நேர் பார்வையை சந்தித்தாள்.
“தொடங்கலாம். ஆல் தி பெஸ்ட்” என்றவன் அவளை கவனிக்க தொடங்கினான். திக்கித் திணறித் தொடங்கியவள் அவன் முகம் பார்த்துப் பேசும் போது அவனின் அந்த ஆதரவான பார்வையில் மேலும் மேலும் நம்பிக்கையுடன் பேசி முடிக்க முதலீடு செய்ய வந்தவர்கள் முகத்தில் பிரகாசம்.
“ஹேக் செய்ய முடியுமா என்கிற கேள்வி இருக்கிறதே என்ன பதில் சொல்லப்போறீங்க ”
“முடியாது என்று சொல்லமாட்டேன். ஆனால் கஷ்டம்”
“நிறைய செக்யூரிட்டி சாப்ட்வேர் மார்க்கெட்டில் இருக்கு, இதன் லாபவிகிதம் என்னவாக இருக்கும் ”
‘பத்து வர்ஷன் வரை அப்டேட் செய்யும் அளவுக்கு டிசைன் செய்திருக்கு. தொடர்ந்து மார்கெட்டில் பத்து ஆண்டுகள் நிற்கும். ஹை-ரிஸ்க் டேட்டா பாதுகாப்பதற்கு செய்திருக்கும் சாப்ட்வேர், மெதுவாக தொடங்கினாலும் சீரான லாபம் கொடுக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கு’ அவள் நினைத்தததை ஷார்ப்பாக சொல்லி முடித்தாள்.
‘இது தோல்வியில் முடிந்தால் சீர்படுத்த வேற ஐடியா இருக்கிறதா?’
அவள் சட்டென்று “இல்லை” என்று பதில் சொன்னாள். அந்த மாதிரியான கேள்விகள் வேற்று நிறுவனத்தார் கேட்கிறார் என்றால் பதில் சொல்லாமல் விடுவதில் தப்பில்லை.
ஷ்யாமிற்கு எரிச்சல் ஆனது. கேள்வி கேட்பவர் இந்தப் பெண்ணை நமது கம்பனிக்கு இழுத்து போகலாம் என்பது போல கேட்கிறார் என்று அவன் காதில் ராகுலும் கிசுகிசுக்க, படார் என்று எழுந்தவன் "எல்லோருக்கும் நன்றி. பிரேக் எடுத்துக்கலாம். முதலீடு செய்ய மேற்கொண்டு பேசலாம். பிராஜெக்ட் ஹெட் கிளம்பலாம்." சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே போனான்.
மற்றவர்கள் எல்லோரும் தேநீர் இடைவெளிக்கு சென்றனர். சுந்தரி அவள் இடத்திற்கு செல்ல, ஷ்யாம் உதவியாளர் வந்து அவளை சார் அழைக்கிறார் என்று சொல்லவும் திரும்பவும் இதயம் ஓட்டமெடுத்தது.
இவனை நினைத்தாலோ பார்த்தாலோ ஏன் இப்படியொரு அசௌகரியம்..! ஆண்டவா காப்பற்று..!
மெதுமெதுவாக நடந்தாலும் சி.இ.ஓ அறை சீக்கிரமே வந்தது. கதவை தட்டி உள்ளே சென்றாள். அவன் சிரித்த முகம் ஈர்த்தது.
அவன் எதிர்புறம் இருக்கும் இருக்கையில் அமர்ந்தவளிடம் மரியாதையுடன் அந்நியமாக “உட்காருங்க மிஸ் சுந்தரி”என்று சொல்ல சுந்தரி “நான் சுந்தரி ஷியாம். கண்ணு தெரியாம போய்டுச்சா, இல்லை நெட்டு போல்ட் ஏதாச்சும் லூஸ் ஆகிடுச்சா”
அவள் பேசி முடித்ததும் பின்னால் சிரிப்பு சத்தம் கேட்க திரும்பி பார்த்தவளுக்கு எங்கேனும் போய் முகத்தை மறைத்து கொள்ளலாமா என்பது போல வெட்கம் பிடுங்கி தின்றது. நின்றிருந்தது ராகுல். அவனக்கு பின்னால் கொஞ்ச தூரத்தில் சோபாவில் முதலீட்டாளர் ஒருவர் அமர்ந்துகொண்டு காபி குடித்துக்கொண்டிருந்தார். தர்மசங்கடமான நிலையில் பல்லை கடித்துக்கொண்டு கைகளால் முகம் பொத்தி “சாரி சாரி” என்று அவள் சொல்ல அவன் இதயத்தில் அந்த நொடி கவிதை ஆனது.
ராகுல் “பய்யா நான் அப்பறம் வரவா?”
சுந்தரி “இல்ல இல்ல... நீங்க இருங்க சார். நான் போறேன்”
சிலைபோல அமர்ந்திருந்தவன் அவர்களை பார்த்து “ரண்டு பேரும் இருங்க. மீட்டிங் ஆரம்பிக்கலாம்”
அவன் சொல்லியதும் தொடங்கியது கலந்துரையாடல். பக்கம் வைத்திருந்த தேநீர், ஸ்னேக்ஸை அவள் பக்கம் தள்ளி “சாப்பிடுங்க. வயித்துக்கு கொஞ்சம் போட்டா தான் மூளை சுறுசுறுப்பா வேலை பார்க்கும்” என்றான். அந்தக் குரலை நிராகரிக்க முடியவில்லை. அதட்டும் முதலாளி குரல் அது, சொல்வதை செய்ய வைக்கும் தொனி. கூடவே அந்த வாக்கியங்களுக்கு அவள் பழக்கப்பட்டவள் அல்லவா..!
அதிகம் பேசியது அவளும் ராகுலும் தான். கேட்டுக்கொண்டேயிருந்தவன் நடுநடுவே சில குறிப்புகளை பக்கம் இருக்கும் நோட்டில் பென்சிலில் குறித்துக்கொள்வான். அவன் சிரிப்பைவிட இந்த தீர்க்கமாக பார்த்து கவனமாக கேட்டு குறிப்பெடுக்கும் இந்த முகம் வசிகரித்தது.
மீட்டிங் முடிந்ததும் வந்த முதலீட்டாளர் “சரி ஷ்யாம். வாழ்த்துக்கள், வேலையே தொடங்கலாம்” கைகுலுக்கி ராகுல் தோளில் தட்டிவிட்டு கிளம்பினார்.
அவர் திரும்பியதும் கணநிமிடத்ததில் அவனை கட்டிப்பிடித்து “தேங்க்ஸ் பய்யா” என்றவன் அவள் புறம் திரும்பி அவரை அனுப்பிவிட்டு வரேன் என்றவன் குதூகலமாக ஓடினான்.
யாருமில்லாத அறையில் மௌனம் இறைக்க திரும்பவும் அவள் இதயத்தின் ஓசை அவள் காதுகளில்.
சிரித்தபடி மேஜையை சுற்றி அவள் முன்னே வந்து நின்றவன் அவளை பார்க்க அவள் தலை குனிந்தாள். உற்சாகமாக பேசிய சுந்தரி எங்கே என்று நினைத்தவன் “அது ஏன் சுந்தரி என் கிட்ட மட்டும் பாரபட்சம்?.. ம்”
“அப்படியெல்லாம் இல்லை”
“இதோ... பேசும்போது என்னையே பார்த்துட்டு இருந்தே..! இப்போ பார்க்க கூட மாட்டேங்கிற”அவன் வெளிப்படையான கேள்வியில் திணறியவள் “நீ என்னை மறந்துட்டன்னு நெனச்சேன்”
சட்டென்று சிரித்தவன் “நான் தூங்கி நாள் ஆச்சு சுந்தரி” என்று இன்னும் ஒரு அடி எடுத்து வைத்து அவள் முன்னே வர அவளுக்கு அந்த இரவு நினைவுக்கு வந்தது.
சட்டென்று அவனை தள்ளிவிட்டவள் “சே ஷியாம் உனக்கு மட்டும் ஆண்டவன் மூளையை இடுப்பு கீழ வைச்சிட்டான்” அவள் பொருட்களை சேகரித்து அறைவிட்டு ஓடினாள்.
அவள் சென்றபின்பு தான் அவள் பேசிய வாக்கியத்தின் அர்த்தம் புரிந்தது அவனுக்கு. அடப்பாவி..! என்று அவனுக்குள் சிரித்துக்கொள்ள
மேஜை மீது சாய்ந்திருந்த சிரித்த முகமான ஷ்யாமை பார்த்த ராகுல் “எங்க சுந்தரி ?”
“போயாச்சு”
“ ஸ்மார்ட் இல்ல, சேர்ந்து லன்ச் சாப்பிடலாம் நெனெச்சேனே ”
“ப்ச் இன்னொரு நாள் பெரிய விருந்தே சாப்பிடலாம்”
‘அந்த சென்னை பெண் இவள் தானே’ கேட்டான் ராகுல். ராகுலுக்கு சந்தேகம் இருந்தது. காயாவிலிருந்து யார் வந்திருக்கிறார் என்று அவன் விசாரித்து தெரிந்துகொண்ட நாளிலிருந்து சீக்கிரமாக அவன் வெளிநாடு பயணமெல்லாம் முடித்துக்கொண்டு அவர்கள் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறான்.
ராகுலுக்கு யூகம் இருந்தாலும் அதை அவன் நண்பன் ஒப்புக்கொண்டால் மட்டுமே நிம்மதி. ஷ்யாம் தலை மட்டும் அசைத்தான்.
ராகுலுக்கு மகிழ்ச்சியானது. “பலே பய்யா அப்போ சுந்தரி தான் எனக்கு அண்ணி”அவன் சிரிக்க,ஷியாம் முகத்திலும் சின்ன முறுவல் பூத்தது.
முரளி தப்பி ஐம்பது நாட்கள் ஆகிவிட்டது, அவன் இன்னமும் இந்தியா வந்து சேரவில்லை. வினிதாவிற்கு எரிச்சல் மண்டியது . அத்தை சுந்தரி வேறு ஊருக்கு சென்றுவிட்டாள் என்பதில் நிம்மதியாக இருக்கிறாள், அவளுக்கு தான் கோபமாக இருக்கிறது.
முரளி இந்தியா வரும் வரையாவது இந்த பெண் தமிழ்நாட்டிலிருந்திருக்க கூடாதா “பார் உன் முறைப்பெண் கொஞ்சம் கூட உன்னை பற்றி கவலைப்படாமல் எவனோடவோ காதல் செய்கிறாள்” என்று காட்டியிருப்பாள். இவள் தப்பி வேறு ஊருக்கு போய் விட்டாளே. ஆனாலும் வினிதாவிடம் போட்டோக்கள் இருக்கிறது அதை காட்டி பேசத்தான் போகிறாள்.
வினிதாவிற்கு எப்போது இந்த பைத்தியம் பிடித்தது என்பது தெரியாது. அவள் அன்பை, பண்பை அழகை சுந்தரியோடு போட்டி போட்டு பார்ப்பதிலும் அதில் வெற்றியடைய நினைப்பதிலுமே காலம் கழித்தாள். வேடிக்கை என்னவென்றால் சுந்தரிக்கு இப்படியொரு போட்டி இருப்பதே தெரியாது. இந்த பித்து பிடிக்க முதல் காரணம் முரளி. அதனாலேயே முரளியை தண்டிப்பதற்கும் சுந்தரியை கஷ்டப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டாள் வினிதா.
ஆசையும் கோபமும் எங்கே நியாயம் தர்மம் பார்த்தது ?