14. அக்கறை இக்கரை
இரண்டு நாட்களாக அவன் எத்தனை முறை அழைத்தும் அவளிடமிருந்து பதில் இல்லை. ஓய்வு எடுக்கட்டும் என்ற முடிவில் இரண்டு நாள் பொறுத்துப் பார்த்துவிட்டான் ஒரு மாற்றமும் இல்லை. வேலை முடித்ததும் அவன் பதட்டமான உள்ளம் அவன் வண்டியை அவள் வீட்டுப்பக்கம் கொண்டு வந்து நிறுத்தியது. மௌனமான இரவு இரைந்து சிதறி கிடக்க அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் அவள் வீட்டில் ஓர் அறையில் விளக்கு எறிவது அவனை உந்த, மாடியேறி வீட்டின் அழைப்புமணி அழுத்தினான்.
திறந்ததும் ஆச்சரியமாக பார்த்தாள், “இப்போது தான் உனக்கு போன் செய்ய நினைத்தேன். சில விஷயம் எனக்கு தெரியவேண்டும் வா வா ” தீவிரமாகப் பேசினாள். அந்த இரவிலும் புத்துணர்ச்சியுடன் இருந்தாள். அவன் மௌனமான பார்வையை கவனித்தவள். இரண்டு நாளா பகலில் தூங்கி இரவில் வேலை செய்கிறேன் பதிலளித்தாள்.
கோபமாக அவன் மாறுவதற்குள் “பொறு, நான் மாத்திரை எல்லாம் சரியா எடுத்துக்கறேன்.பார்” என்று காட்டினாள். கூடவே என்னவெல்லாம் சாப்பிட்டாள் என்றும் லிஸ்ட் போட்டு சொன்னாள். அவன் கோபப்படக் கூடாது என்று அவள் பரபரப்பாக சமாதானம் பேசியது அவனுக்கு பிடித்திருந்தது.
அவள் சேகரித்த தகவல்களை காட்டினாள். அவன் சந்தேகம் சரிதான் என்று சொல்வதற்கு அவளிடமும் நிறைய ஆதாரம் இருக்கிறது என்று அவள் சொல்ல ஷ்யாமிற்கு பெருமை மிகுந்தது.
அவள் ஊகத்தை வெளிப்படுத்தினாள். முக்திக்குள் கருப்பு ஆடு கூட்டமே இருக்கிறது. அந்த ஆட்டுக்கூட்ட தலைவனை கண்டுபிடித்தால் இந்த பிரச்சனை முடியும். முக்தி நிறுவனம் இரண்டாம் நிலை பங்குகள் ஓர் இடத்தில் குவிகிறது என்றால் முதல் நிலை பங்குகளும் ஓர் இடத்தில் அடைகிறது, அது எங்கே சேர்கிறது என்று பார்க்க வேண்டும்.
அவள் எண்ணத்தை பேசிக்கொண்டே இருவருக்கும் டீ தயாரித்தாள்.
அவர்கள் நிறுவனத்தின் அடுத்த மாதம் வேல்யூ குறையும் முன் முக்தி சார்பாக எதாவது சமுதாய பணிக்கு செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கச் சொன்னாள். இத்தனை நாட்கள் இல்லாமல் முக்தி வெளிச்சத்திற்கு வருவது முக்தி முன்னேற அடுத்த நிலைக்குப் போகிறது என்றே பார்க்கப்படும். அப்போதேனும் வில்லன் வெளியே அடையாளம் தெரியக்கூடும் என்றாள்.
அவள் தயாரித்த தேநீர் பருகிக்கொண்டே யோசனையில் ஆழ்ந்தான் ஷ்யாம்.
இதுவரை முக்திக்கு விளம்பரம் தேவைப்பட்டதே இல்லை.அவர்களென்ன சோப்பு,ஷாம்பூ விற்கும் நிறுவனமா என்ன? உலோகம் வியாபாரம் செய்பவர்கள்.வரிச் சலுகை கிடைக்கும் அரசு விளம்பரங்களுக்கு ஓர் மூலையில் அவர்கள் பெயரும் வருவது போல இருக்கும் விளம்பரமே தாராளம் அவர்களுக்கு. முக்தியின் வளர்ச்சி அந்த துறைக்கு மட்டுமே தெரியும், முக்தி வெகுஜன மக்களுக்கும் தெரிய ஆரம்பிக்கும் போது கவனம் ஈர்க்கும். முக்தியை கை மாற்றி விட நினைக்கும் கும்பலுக்கு இது ஒரு பதற்றத்தைக் கொடுக்க வாய்ப்பிருக்கும். சுந்தரியின் கருத்தை ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தவன் காலம் தாழ்ந்து அவள் முகம் பார்த்தான்.
தன் யோசனையை அவன் ஏற்பானோ என்கிற எதிர்பார்ப்பு நிறைந்த அவள் முகம் பார்க்க அவனுக்குள் மத்தாப்பூ. வெளிர்ந்த முகத்தில் சின்னதாகத் தெரியும் கண்களை மொத்தமாக விரித்துச் சிரித்த முகமாக, சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு கைகளை அழுத்திக்கொண்டு அவன் முகத்தை மட்டுமே பார்ப்பவள் உலகில் அத்தனை அழகையும் சுமந்திருந்தாள்.
உடைத்த கண்ணாடியை சரி செய்து வைத்திருந்தான்,அதை அவளிடம் கொடுத்தவன் “உனக்கொரு கிப்ட் இருக்கு என்னிடம்” என்றான்
“என்ன கிப்ட்? உன் வீட்டில் இருக்கும் போது விட்டு வந்தேனே அந்த நோட் புத்தகமா”
“இல்லை”
“போ..வேற எதுவும் எனக்கு வேண்டாம்”
“உன் முரளி மாமா கூடவா?”
இம்முறை ஆச்சரியமாகக் கண்களை விரித்துப் பார்த்தாள்.
ஆமாம், முரளியை பத்துநாளில் அந்தமான் அழைத்து வருகிறார்கள். நாம் அங்கேயே அவரை அழைத்துக்கொள்ளலாம் என்றவன் அவளை பார்த்தான். உற்சாகம் நிறைந்தவள் போகலாம் என்று மகிழ்ச்சியில் கூப்பாடு போட அவளை அணைத்து வாயை அடைத்தவன் அமைதி, நடுநிசி மற்ற எல்லோரும் தூக்கத்தில் இருப்பார்கள் என்றான்.
நெருக்கத்தில் வந்து நின்று அவள் வாயை பொத்தியிருக்கும் ஷ்யாம் பார்வையில் சுந்தரி உடல், ரத்தம், நகம், ஆவி மொத்தமும் செந்நிறம் கொண்டது.சட்டென்று விலகியவள் “வந்த விஷயம் முடிந்தது தானே..!” கேட்டாள்.
மாற்றம் உணர்ந்தவன் காற்று போன பலூன் போல சூம்பிப் போனாலும் குட் நைட் சொல்லிக் கிளம்பிவிட்டான்.
ஷ்யாம் போனதும் வெளியே வந்த சரயு “ஹே அது ஷ்யாம் முக்தி தானே. அவருக்கு என்னைத் தெரியாது தானே.என்னை பற்றி நீ எதுவும் சொல்லவில்லை தானே” படபடப்பாக கேட்க சுந்தரி குழம்பினாள்.
“ஐயோ ஷியாம் சார் என் அப்பாவிடம் எதுவும் சொல்லிவிட மாட்டார் தானே”
“என்ன அப்பா? என்ன சார், என்ன மோர்”
“ஓ, உனக்கு விஷயமே தெரியாது இல்லையா?”
தெரியாது என்று சுந்தரி தலையை ஆட்டவும். என் அப்பா முக்தியில் தான் வேலை பார்க்கிறார், அவருக்கு இந்த ஸ்டார்ட்-அப் ஐடியாவில் எல்லாம் இஷ்டம் இல்லை, காலை அலுவலகம் போனோமா மாலை வீடு வந்தோமா என்கிற எண்ணம். எதற்கெடுத்தாலும் முக்தியே அல்லல்படும்போது நம்மைப்போல பிஸ்னஸ் பின்னணி இல்லாதவர் எதற்கு அதைபற்றி யோசிக்க வேண்டுமென்பவர்.
ஷ்யாம் அவரிடம் உங்கள் பெண் சின்ன வீட்டிலிருந்து கொண்டு அல்லல்படுகிறாள் என்றுவிட்டால் எப்படியேனும் அவர் இவளை அழைத்துச் சென்று விடுவார். சரயு அவள் கவலையை சொன்னதும் சுந்தரிக்குள் கிலி பிடித்துக்கொண்டது இவனுக்கு இந்த எண்ணம் தோன்றக்கூடாதே...!
புலம்பிவிட்டு சரயு திரும்பவும் தூக்கத்திற்கு செல்ல , சுந்தரி அவள் வேலையை தொடர்ந்தாள்.
அதிகாலை ஐந்தரை மணி, பால்காரன் வாசலில் பால் பாட்டில் வைக்கும் சத்தம் கேட்க, அத்தனை நேரம் தொடர்ந்து வேலை செய்த களைப்பு காலை நேர தென்றல் வசந்தத்தை அனுபவிக்க தூண்டியது.
மாடியில் இருக்கும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து பக்கம் இருக்கும் வெட்ட வெளியில் கைகள் விரித்து குளிர்ந்த தென்றலின் தீண்டல் அனுபவிக்க மனம் புத்துணர்வு கொண்டது.
யாரோ மாடி ஏறி வரும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். ஷ்யாம் வந்து கொண்டிருந்தான். "ஷ்யாம்...நீ எங்க ஷ்யாம் இங்க" கண்கள் விரித்து வியப்பாக கேட்டாள்
“ஜஸ்ட் சும்மா வந்தேன். வா, டீ போடு குடிக்கலாம்” சாதாரணமாக அழைத்தான்
அவன் டீ என்றதும் அவளுக்கு சூடாக தேநீர் குடிக்க வேண்டும் போல தோன்ற, கிட்சன் சென்று அடுப்பை பற்ற வைத்து வெந்நீர் ஒருபக்கம் பால் ஒருபக்கம் அடுப்பில் ஏற்றி வைத்தாள். புது காலை உற்சாகம் அவளிடம். அதை கவனித்துக்கொண்டே அவள் பக்கம் வந்து நின்றான்.
“ஸ்மோக் பண்ணியா”
அவள் கேள்வி கேட்டதும் பதில் சொல்லாமல் தலை குனிந்து மேடை மேல் சாய்ந்து நின்றான்.
“சொல்லு ஷ்யாம்”
“எஸ், ஐ ஸ்மோக்ட்.”
“ஏன். இப்படி உடம்பை கெடுத்துக்கற” அவள் வேலையை பார்த்துக்கொண்டே அவள் அக்கறையாக கேட்க, அவன் மனதில் வசந்தம் வீசியது.
டீபொடி எடுக்க திரும்பியவள் பக்கம் நெருங்கி நின்றவன் “என்னை ஏன் அப்படி பார்த்த சுந்தரி” கேட்டான்
அவன் கேட்கும் விஷயம் புரிந்தாலும் சாதாரணமாக கேட்டாள் “என்ன பார்த்தேன்.எப்போ பார்த்தேன்”
கிண்டலாக சிரித்தவன் “அதான் அப்போ, ராத்திரி நான் கிளம்புற நேரம்”
மைக்ரோ மில்லி செகண்ட் மனதில் தோன்றிய ‘பச் கெளம்புறானே” எண்ணம் அவள் கண்களில் தெரிந்ததா? அத்தனை வெளிப்படையாக இருந்திருக்காதே…
வேறு யாரேனும் இருந்தால் கண்டுபிடிப்பார்களோ ஷ்யாம் ஆயிற்றே காணாமல் விடுவானா?
நிலமை வெம்மை கூடுவது தெரிய இயல்பாக இருப்பதாக காட்டிக்கொண்டவள் “நான் எது மாதிரியும் பார்க்கல ஷ்யாம்.வழி விடு டீ போடலாம்”
வெந்நீர் கொதிக்க அதில் சுந்தரி டீ பொடி போட்டவள் கை நடுக்கம் காட்டியது.
“தள்ளி நில்லு ஷ்யாம்”
“முடியாது”
“எனக்கு மூச்சு முட்டுது”
“எனக்கும்” என்றவன் நொடிப்பொழுதில் அவளை இழுத்து கிட்சன் மேடை பக்கம் திருப்பி அவள் எதிரில் நின்றவன் வினாடியில் அவள் கண்களில் தெரிந்த அதிர்ச்சி, பரபரப்பு இறுக்கி பிடித்து இதழ் அணைத்தான். திமிறியவள் அவன் தோளில் அடிக்க “ப்ளீஸ் சுந்தரி” என்றவன் மேலும் மேலும் அணைத்து முத்தத்தை நீடிக்க கொதித்த பால் பொங்கி மேடையிலிருந்து வழிந்து.
வழிந்த சூடான பால் கீழே விழுந்து துளிகள் வீழ்ந்து தெறிக்க அதன் தாக்கத்தில் சுயநினைவு வந்தவள், அவன் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டாள். அணிந்திருந்த முக்கால் பாண்ட் ஒரு பக்கம் முழுக்க வழிந்திருத்த பால் ஒட்டியிருக்க அதன் கசகசப்பு, நூரையீரல் வெடித்து விடும் அளவிற்கு அழுத்தமாக முத்தம் கொடுத்தவன் மீது கோபம் என அந்த காலை நேர குளிரிலும் வியர்க்க நின்றிருந்தாள்.
அடுப்பை அணைத்து கொதிக்கும் டிகாஷனில் பால் ஊற்றி அதை மூடி வைத்துவிட்டு அவளையே கொஞ்சமும் மயக்கம் தெளியாமல் பார்க்கும் ஷ்யாமை முறைத்து பார்த்துவிட்டு இடத்தை சுத்தம் செய்ய துணி எடுக்க சென்றாள்.
ஷ்யாம் அவன் நிற்கும் இடத்திலுருந்து பார்த்தாலே தெரிந்தது சரயு தூங்கிகொண்டிருப்பது. சரயு இருக்கும் நினைவில்தான் அங்கே ‘பின் ட்ராப் அமைதி’ நிலவியது.
துணி வைத்து துடைத்துவிட்டு தேநீரை வடிகட்டி இரண்டு கப்பில் ஊற்றியவள் ஒன்றை காட்டி எடுத்துக்கொள் என்றுவிட்டு திரும்பி பாத்ரூம் பக்கம் சென்றாள். அவள் பின்னாலே சென்றவன் என் கைலயும் பால் சுந்தரி என்றான் அப்பாவியாக.
அழுக்கு துணியை தண்ணீரில் போட்டுவிட்டு அவள் கைகளை கழுவிய பின்னும் அங்கேயே நின்றிருந்தவனை பார்த்து “என்ன பண்ற” கேட்டாள் அடக்குரலில்.
அவனோ பதில் சொல்லாமல் அவளை சுவரோடு அழுத்தி அவன் வன்முறையை தொடர்ந்தான். இம்முறை தெளிவாக இருந்த சுந்தரி கால் தூக்கி எங்கே இடித்தால் வலிக்குமோ அங்கே ஒரே இடி.வலியில் அவளை விட்டு தள்ளி நின்றவன் “அடிப்பாவி, ராட்சசி” கம்மிய குரலில் “என்ன ஷ்யாம் செய்ற”அவள் கேட்க வலியின் பிடியில் “நாம பேசணும் சுந்தரி. பேச தயங்குற இந்த விஷயத்தை பற்றி பேசணும்” அவன் சொல்லிக்கொண்டிருக்க வெறுமனே சாத்தியிருக்கும் பாத்ரூம் கதவை தட்டினாள் சரயு. “சுந்தரி உள்ள இருக்கியா, வெளில வந்த பின்னாடி என்ன எழுப்பு” என்றவள் திரும்ப சென்று விட்டாள்.
சரயு குரல் கேட்ட நிமிடம் சுந்தரி முகம் வெட்கத்தில் சிவந்து போனது. ஆழ்மூச்சு இழுத்துவிட்டு சமநிலை வந்து, தாமதித்து வெளியே வந்தவள் அவனையும் வெளியே இழுத்து வாந்தவள் “கிளம்பு, என் கண்ணு முன்னாடி நிற்காத” கோபத்தில் சீற அப்பாவி ஷ்யாம் “டீ குடிக்கல சுந்தரி” என்றான் .
இங்கே வெளியே நில்லு வீட்டுக்குள்ள வராத என்றவள் உள்ளே சென்று கிளாஸ் பாட்டில் ஒன்றில் டீ ஊற்றி கொண்டு வந்து கொடுத்து “போ, போய் உன் கார்லே போய் குடி” அவனை விரட்டினாள்.
ஷ்யாமிடம் சொல்ல அவளிடம் ஏகப்பட்ட விஷயம் இருக்க, மனம் முழுக்க கோபம்,ஆத்திரம், ரணம் பொங்கி வழிகிறது. எதுவும் சொல்ல தோன்றாமல் அவனை விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள்.
பாழாய்ப்போன இந்த ஈர்ப்பும் அதன் சேட்டைகளும் அவளால் தாள முடியவில்லையே…
முக்தி ஸ்டீல்சில் ஷ்யாம் அவன் எண்ணத்தை செயல்படுத்துவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. நிறுவனத்தின் வாராந்திர கூட்டத்தில் முக்தி சார்பாக அரசு செயலில் எதிலேனும் உடன்பட்டு பொதுஜனம் கண்களில் படுமளவிற்கு விளம்பரம் செய்யலாம் என்று அவன் சொல்ல, ஒவ்வொருவர் ஒவ்வொரு கேள்வியில் நிறுத்தினார்கள். இளைய சமுதாயம் படாடோபமாக இருப்பதிலேயே காலத்தைச் செலவழிகிறது என்று அவன் சித்தப்பாவும் பேச ஷ்யாமிற்கு கோபம் வந்தது.
ஷ்யாம் இது முக்தி இதற்கு விளம்பரம் தேவை இல்லை, வேண்டுமென்றால் உன் முதலீட்டு நிறுவனத்திற்கு தேடு, முக்தி நஷ்டத்தில் சென்றாலும் அதன் பணியாளர்களை கவனிக்க முடியும்,முக்தி எப்போதும் இப்படியான சூழலில்தான் இருந்திருக்கிறது, நீ அதிகம் கவலைப்படுகிறாய் என்று ஒவ்வொருவர் பேச ஷ்யாம் ஆத்திரம் உச்சம் அடைந்தது.
சிறிதும் தயக்கமின்றி ஆதிக்க குரலில் “ஆமாம் இது விளம்பர காலம் தான், முக்தி அடுத்த நிலை செல்ல வேண்டுமென்று நினைக்கிறேன், என் நிறுவனம் உலக ப்ரசித்திப்பெற வேண்டும். இன்னமும் யாரும் வந்து அசைக்கக்கூட முடியாத அளவுக்கு வளர வேண்டும்.இத்தனை நாள் வளர்ச்சியை உலகிற்கு காட்ட வேண்டுமென்று நினைக்கிறேன்.செய்யத்தான் போகிறேன். முக்தி நஷ்டத்தில் போனாலும் பரவாயில்லை என்றெல்லாம் இனி யாரும் இங்கே பேசக்கூடாது” என்றவன் விறுவிறுவென அறை விட்டும் வெளியே வந்துவிட்டான்.
யாரென்று சந்தேகப்படுவான் அங்கே இருப்பதில் பாதிபேர் அவன் ஒன்றுவிட்ட சித்தப்பாக்கள், சொந்தங்கள். அவன் அப்பா போல தலைமுறைகளாக முக்தியை வளர்ப்பவர்கள்.
ராஜப்பிரகாஷ் மகன் உணர்ச்சிவசப்பட்டு பேசி சென்றதை நினைத்து ஒரு தந்தையாக வருத்தப்பட்டாலும் என் மகன் முக்தியை காப்பற்ற நினைக்கிறான் என்று நினைத்து மகிழ்ச்சி கொண்டார்.
ராஜப்பிரகாஷ் முக்தி உணர்வு குழம்பில் தத்தளிக்க அவர் எப்போதும் போற்றி மதிக்கும் அண்ணன் சிவாஜி பிரகாஷ் தன் வீல் சேரில் அவர் பக்கம் வந்தவர் “ஷ்யாம் வளர்ந்துவிட்டான் ராஜ், அவன் பொறுப்புணர்ச்சி எனக்கு உன்னையே நினைவிற்கு கொண்டு வருகிறது” என்று சொல்ல ராஜ்பரகாஷ் கண்களில் கண்ணீர் திரையாக நின்றது.
ராஜ்பரகாஷ் முக்தி காதல் திருமணம் செய்தவர்.முக்தியில் வேலை பார்த்து கொண்டிருந்த தமிழ் பெண்ணை மணந்தார். நிறுவனத்தின் வளர்ச்சி பாதிப்பை காட்டி ஷ்யாம் தாயை விவகாரத்து செய்ய வைத்தது கூட இருந்த இந்த பங்குதாரர்கள் கூட்டம்.
சீமா என்கிற டெக்ஸ்டைல் நிறுவனத்தின் ஒரே பெண் வாரிசை திருமணம் செய்துகொண்டார் ராஜ்பரகாஷ். ஷ்யாம் அதன்பின் ராஜ்பரகாஷுடன் நெருக்கத்தை குறைத்துக்கொண்டான். சீமா நிறுவனம் அவர் பெயரில் மாற அதன் லாபம் வைத்தே பேங்க் ஒன்றை தொடங்கினார். காலப்போக்கில் வங்கி விரிய சீமா நிறுவனம் அழிந்தது. சீமா நஷ்டத்தை மீட்டெடுக்க முடியாமல் போனதே என்பதில் ராஜ்பரகாஷிற்கு வருத்தம் அதிகம்.
தன்னை சுற்றி மாயவலை ஒன்று இருப்பதை ராஜ்பரகாஷ் அறிந்திருந்தார்.ஆனாலும் அவரால் சுற்றி இருக்கும் மக்களை சந்தேகப்பட முடியவில்லை, விதி என்று அதை ஏற்றுக்கொண்டார்.
அறைக்கு வந்தவன் கூட்டத்தில் அவன் பேச பேச யார் முகம் எப்படியெல்லாம் இருந்தது என்று எண்ணி பார்க்கலானான். அவன் தந்தையும் அவனக்கு எதிராக இருப்பது போலத் தோன்றியது.
சுந்தரிக்கு அலுவலகத்தில் ராகுல் அவள் கேட்கும் விதமாக வசதி எதுவும் செய்யாமல் இருக்க, அவள் கவனம் முழுக்க ஷ்யாம் விவகாரம் மீதே இருந்தது. ஷ்யாம் விளம்பரம் செய்ய ஏதுவாக இருக்கும் சிலதை தேர்ந்தெடுத்து வைத்தாள். மேற்கொண்டு பங்குச்சந்தை நிலவரத்தைக் கவனித்தாள். உற்சாகத்தில் ஷ்யாமின் முக்தி மெயில் ஐடிக்கு அவள் கண்டுபிடிப்பை மெயில் செய்தாள். அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. எதிர்பார்த்தவள் சலித்துப்போனாள்.
வேலை முடித்து வீட்டிற்கு சோர்வாக நடந்து வந்தவள் வீட்டின் வாசலில் காத்திருந்தான் ஷ்யாம். அவனைப் பார்த்ததும் கோபம் கொந்தளித்தது.
“நான் எவ்வளவு நேரம் உனக்காக காத்திருந்தேன் தெரியுமா?” அவள் அப்படி எதிர்பார்ப்பு நிறைந்த கோபத்தில் கேள்வி கேட்கவும் அவனுக்குள் அவளிடம் சொல்ல இருந்த விஷயமெல்லாம் மறந்தது.
“சாரி ஆபிஸ் வர முடியலை”
“நான் எவ்வளவு நேரம் உன் போன் காலுக்கு காத்திருந்தேன் தெரியுமா?” சுந்தரி நியாயம் கேட்கும் தொனியில் கேட்க
நினைவடுக்குகள் முழுக்க இனிப்பான அவர்கள் முத்தம் மட்டுமே நினைவிருக்கு அவனோ ‘நானும்’ என்று முன்னேறி அவள் முன்னே குனிந்து அவள் கண்களைப் பார்த்தான். அந்த பார்வையில் இதயம் துள்ள மூச்சடைத்தவள் பல்லை கடித்துக்கொண்டு “ஷ்யாம்” என்றாள்
“ம்ம்”
“நான் அனுப்பிய மெயிலுக்கு பதில் எதிர்பார்த்து காத்திருந்தேன்” என்றாள் அவன் அலைபாயும் கண்களையே பார்த்துக்கொண்டு.
உச்சந்தலையில் ஆணி இறங்கியது போல குழப்பத்தில் “எனக்கு எதுவும் மெயில் வரலையே.!” என்றான்
அவன் ஆசை பார்வை குழப்ப பார்வையாக மாறியதில் சின்ன வலி தாக்கினாலும் கண்டுபிடிப்பை சொல்லிவிடும் வேகம் அவளிடம். "உங்க இரண்டாம் நிலை பங்குகள் விரிவாக சென்றாலும் ஒரே இடம் தான் செல்கிறது.அது ஒரு அமெரிக்க நிறுவனம். அதே போல முதல் நிலை பங்குகள் உன் அம்மாவிடம் அதிகமாக இருக்கிறது”
“என் அம்மாவா” அவன் புருவம் முடிச்சுடன் கேட்க
சுந்தரி “ஆமா, திருமதி ராஜ்பரகாஷ் முக்தியிடம்” என்றாள்
ஷ்யாம் அதிர்ந்தான். “நான் வீட்டுக்கு போகவேண்டும்.பை நாளைக்கு மீட் பண்ணலாம்”
அவன் நிலை கண்டவள் தயங்காமல் அவனை தொடர்ந்து அவன் காரில் ஏறி அமர்ந்தாள்.
“நானும் வரேன்.நான் கண்டுபிடித்ததை எல்லாம் சொல்லவேண்டாமா?, நீ தெரிந்துகொண்டே ஆகணும் ”
“ஏன் அது காத்திருக்காதா?” சலிப்பாக கேட்டான்
“இருக்காது”
“சரி, ஏறு”
இரண்டு நாட்களாக அவன் எத்தனை முறை அழைத்தும் அவளிடமிருந்து பதில் இல்லை. ஓய்வு எடுக்கட்டும் என்ற முடிவில் இரண்டு நாள் பொறுத்துப் பார்த்துவிட்டான் ஒரு மாற்றமும் இல்லை. வேலை முடித்ததும் அவன் பதட்டமான உள்ளம் அவன் வண்டியை அவள் வீட்டுப்பக்கம் கொண்டு வந்து நிறுத்தியது. மௌனமான இரவு இரைந்து சிதறி கிடக்க அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் அவள் வீட்டில் ஓர் அறையில் விளக்கு எறிவது அவனை உந்த, மாடியேறி வீட்டின் அழைப்புமணி அழுத்தினான்.
திறந்ததும் ஆச்சரியமாக பார்த்தாள், “இப்போது தான் உனக்கு போன் செய்ய நினைத்தேன். சில விஷயம் எனக்கு தெரியவேண்டும் வா வா ” தீவிரமாகப் பேசினாள். அந்த இரவிலும் புத்துணர்ச்சியுடன் இருந்தாள். அவன் மௌனமான பார்வையை கவனித்தவள். இரண்டு நாளா பகலில் தூங்கி இரவில் வேலை செய்கிறேன் பதிலளித்தாள்.
கோபமாக அவன் மாறுவதற்குள் “பொறு, நான் மாத்திரை எல்லாம் சரியா எடுத்துக்கறேன்.பார்” என்று காட்டினாள். கூடவே என்னவெல்லாம் சாப்பிட்டாள் என்றும் லிஸ்ட் போட்டு சொன்னாள். அவன் கோபப்படக் கூடாது என்று அவள் பரபரப்பாக சமாதானம் பேசியது அவனுக்கு பிடித்திருந்தது.
அவள் சேகரித்த தகவல்களை காட்டினாள். அவன் சந்தேகம் சரிதான் என்று சொல்வதற்கு அவளிடமும் நிறைய ஆதாரம் இருக்கிறது என்று அவள் சொல்ல ஷ்யாமிற்கு பெருமை மிகுந்தது.
அவள் ஊகத்தை வெளிப்படுத்தினாள். முக்திக்குள் கருப்பு ஆடு கூட்டமே இருக்கிறது. அந்த ஆட்டுக்கூட்ட தலைவனை கண்டுபிடித்தால் இந்த பிரச்சனை முடியும். முக்தி நிறுவனம் இரண்டாம் நிலை பங்குகள் ஓர் இடத்தில் குவிகிறது என்றால் முதல் நிலை பங்குகளும் ஓர் இடத்தில் அடைகிறது, அது எங்கே சேர்கிறது என்று பார்க்க வேண்டும்.
அவள் எண்ணத்தை பேசிக்கொண்டே இருவருக்கும் டீ தயாரித்தாள்.
அவர்கள் நிறுவனத்தின் அடுத்த மாதம் வேல்யூ குறையும் முன் முக்தி சார்பாக எதாவது சமுதாய பணிக்கு செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கச் சொன்னாள். இத்தனை நாட்கள் இல்லாமல் முக்தி வெளிச்சத்திற்கு வருவது முக்தி முன்னேற அடுத்த நிலைக்குப் போகிறது என்றே பார்க்கப்படும். அப்போதேனும் வில்லன் வெளியே அடையாளம் தெரியக்கூடும் என்றாள்.
அவள் தயாரித்த தேநீர் பருகிக்கொண்டே யோசனையில் ஆழ்ந்தான் ஷ்யாம்.
இதுவரை முக்திக்கு விளம்பரம் தேவைப்பட்டதே இல்லை.அவர்களென்ன சோப்பு,ஷாம்பூ விற்கும் நிறுவனமா என்ன? உலோகம் வியாபாரம் செய்பவர்கள்.வரிச் சலுகை கிடைக்கும் அரசு விளம்பரங்களுக்கு ஓர் மூலையில் அவர்கள் பெயரும் வருவது போல இருக்கும் விளம்பரமே தாராளம் அவர்களுக்கு. முக்தியின் வளர்ச்சி அந்த துறைக்கு மட்டுமே தெரியும், முக்தி வெகுஜன மக்களுக்கும் தெரிய ஆரம்பிக்கும் போது கவனம் ஈர்க்கும். முக்தியை கை மாற்றி விட நினைக்கும் கும்பலுக்கு இது ஒரு பதற்றத்தைக் கொடுக்க வாய்ப்பிருக்கும். சுந்தரியின் கருத்தை ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தவன் காலம் தாழ்ந்து அவள் முகம் பார்த்தான்.
தன் யோசனையை அவன் ஏற்பானோ என்கிற எதிர்பார்ப்பு நிறைந்த அவள் முகம் பார்க்க அவனுக்குள் மத்தாப்பூ. வெளிர்ந்த முகத்தில் சின்னதாகத் தெரியும் கண்களை மொத்தமாக விரித்துச் சிரித்த முகமாக, சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு கைகளை அழுத்திக்கொண்டு அவன் முகத்தை மட்டுமே பார்ப்பவள் உலகில் அத்தனை அழகையும் சுமந்திருந்தாள்.
உடைத்த கண்ணாடியை சரி செய்து வைத்திருந்தான்,அதை அவளிடம் கொடுத்தவன் “உனக்கொரு கிப்ட் இருக்கு என்னிடம்” என்றான்
“என்ன கிப்ட்? உன் வீட்டில் இருக்கும் போது விட்டு வந்தேனே அந்த நோட் புத்தகமா”
“இல்லை”
“போ..வேற எதுவும் எனக்கு வேண்டாம்”
“உன் முரளி மாமா கூடவா?”
இம்முறை ஆச்சரியமாகக் கண்களை விரித்துப் பார்த்தாள்.
ஆமாம், முரளியை பத்துநாளில் அந்தமான் அழைத்து வருகிறார்கள். நாம் அங்கேயே அவரை அழைத்துக்கொள்ளலாம் என்றவன் அவளை பார்த்தான். உற்சாகம் நிறைந்தவள் போகலாம் என்று மகிழ்ச்சியில் கூப்பாடு போட அவளை அணைத்து வாயை அடைத்தவன் அமைதி, நடுநிசி மற்ற எல்லோரும் தூக்கத்தில் இருப்பார்கள் என்றான்.
நெருக்கத்தில் வந்து நின்று அவள் வாயை பொத்தியிருக்கும் ஷ்யாம் பார்வையில் சுந்தரி உடல், ரத்தம், நகம், ஆவி மொத்தமும் செந்நிறம் கொண்டது.சட்டென்று விலகியவள் “வந்த விஷயம் முடிந்தது தானே..!” கேட்டாள்.
மாற்றம் உணர்ந்தவன் காற்று போன பலூன் போல சூம்பிப் போனாலும் குட் நைட் சொல்லிக் கிளம்பிவிட்டான்.
ஷ்யாம் போனதும் வெளியே வந்த சரயு “ஹே அது ஷ்யாம் முக்தி தானே. அவருக்கு என்னைத் தெரியாது தானே.என்னை பற்றி நீ எதுவும் சொல்லவில்லை தானே” படபடப்பாக கேட்க சுந்தரி குழம்பினாள்.
“ஐயோ ஷியாம் சார் என் அப்பாவிடம் எதுவும் சொல்லிவிட மாட்டார் தானே”
“என்ன அப்பா? என்ன சார், என்ன மோர்”
“ஓ, உனக்கு விஷயமே தெரியாது இல்லையா?”
தெரியாது என்று சுந்தரி தலையை ஆட்டவும். என் அப்பா முக்தியில் தான் வேலை பார்க்கிறார், அவருக்கு இந்த ஸ்டார்ட்-அப் ஐடியாவில் எல்லாம் இஷ்டம் இல்லை, காலை அலுவலகம் போனோமா மாலை வீடு வந்தோமா என்கிற எண்ணம். எதற்கெடுத்தாலும் முக்தியே அல்லல்படும்போது நம்மைப்போல பிஸ்னஸ் பின்னணி இல்லாதவர் எதற்கு அதைபற்றி யோசிக்க வேண்டுமென்பவர்.
ஷ்யாம் அவரிடம் உங்கள் பெண் சின்ன வீட்டிலிருந்து கொண்டு அல்லல்படுகிறாள் என்றுவிட்டால் எப்படியேனும் அவர் இவளை அழைத்துச் சென்று விடுவார். சரயு அவள் கவலையை சொன்னதும் சுந்தரிக்குள் கிலி பிடித்துக்கொண்டது இவனுக்கு இந்த எண்ணம் தோன்றக்கூடாதே...!
புலம்பிவிட்டு சரயு திரும்பவும் தூக்கத்திற்கு செல்ல , சுந்தரி அவள் வேலையை தொடர்ந்தாள்.
அதிகாலை ஐந்தரை மணி, பால்காரன் வாசலில் பால் பாட்டில் வைக்கும் சத்தம் கேட்க, அத்தனை நேரம் தொடர்ந்து வேலை செய்த களைப்பு காலை நேர தென்றல் வசந்தத்தை அனுபவிக்க தூண்டியது.
மாடியில் இருக்கும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து பக்கம் இருக்கும் வெட்ட வெளியில் கைகள் விரித்து குளிர்ந்த தென்றலின் தீண்டல் அனுபவிக்க மனம் புத்துணர்வு கொண்டது.
யாரோ மாடி ஏறி வரும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். ஷ்யாம் வந்து கொண்டிருந்தான். "ஷ்யாம்...நீ எங்க ஷ்யாம் இங்க" கண்கள் விரித்து வியப்பாக கேட்டாள்
“ஜஸ்ட் சும்மா வந்தேன். வா, டீ போடு குடிக்கலாம்” சாதாரணமாக அழைத்தான்
அவன் டீ என்றதும் அவளுக்கு சூடாக தேநீர் குடிக்க வேண்டும் போல தோன்ற, கிட்சன் சென்று அடுப்பை பற்ற வைத்து வெந்நீர் ஒருபக்கம் பால் ஒருபக்கம் அடுப்பில் ஏற்றி வைத்தாள். புது காலை உற்சாகம் அவளிடம். அதை கவனித்துக்கொண்டே அவள் பக்கம் வந்து நின்றான்.
“ஸ்மோக் பண்ணியா”
அவள் கேள்வி கேட்டதும் பதில் சொல்லாமல் தலை குனிந்து மேடை மேல் சாய்ந்து நின்றான்.
“சொல்லு ஷ்யாம்”
“எஸ், ஐ ஸ்மோக்ட்.”
“ஏன். இப்படி உடம்பை கெடுத்துக்கற” அவள் வேலையை பார்த்துக்கொண்டே அவள் அக்கறையாக கேட்க, அவன் மனதில் வசந்தம் வீசியது.
டீபொடி எடுக்க திரும்பியவள் பக்கம் நெருங்கி நின்றவன் “என்னை ஏன் அப்படி பார்த்த சுந்தரி” கேட்டான்
அவன் கேட்கும் விஷயம் புரிந்தாலும் சாதாரணமாக கேட்டாள் “என்ன பார்த்தேன்.எப்போ பார்த்தேன்”
கிண்டலாக சிரித்தவன் “அதான் அப்போ, ராத்திரி நான் கிளம்புற நேரம்”
மைக்ரோ மில்லி செகண்ட் மனதில் தோன்றிய ‘பச் கெளம்புறானே” எண்ணம் அவள் கண்களில் தெரிந்ததா? அத்தனை வெளிப்படையாக இருந்திருக்காதே…
வேறு யாரேனும் இருந்தால் கண்டுபிடிப்பார்களோ ஷ்யாம் ஆயிற்றே காணாமல் விடுவானா?
நிலமை வெம்மை கூடுவது தெரிய இயல்பாக இருப்பதாக காட்டிக்கொண்டவள் “நான் எது மாதிரியும் பார்க்கல ஷ்யாம்.வழி விடு டீ போடலாம்”
வெந்நீர் கொதிக்க அதில் சுந்தரி டீ பொடி போட்டவள் கை நடுக்கம் காட்டியது.
“தள்ளி நில்லு ஷ்யாம்”
“முடியாது”
“எனக்கு மூச்சு முட்டுது”
“எனக்கும்” என்றவன் நொடிப்பொழுதில் அவளை இழுத்து கிட்சன் மேடை பக்கம் திருப்பி அவள் எதிரில் நின்றவன் வினாடியில் அவள் கண்களில் தெரிந்த அதிர்ச்சி, பரபரப்பு இறுக்கி பிடித்து இதழ் அணைத்தான். திமிறியவள் அவன் தோளில் அடிக்க “ப்ளீஸ் சுந்தரி” என்றவன் மேலும் மேலும் அணைத்து முத்தத்தை நீடிக்க கொதித்த பால் பொங்கி மேடையிலிருந்து வழிந்து.
வழிந்த சூடான பால் கீழே விழுந்து துளிகள் வீழ்ந்து தெறிக்க அதன் தாக்கத்தில் சுயநினைவு வந்தவள், அவன் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டாள். அணிந்திருந்த முக்கால் பாண்ட் ஒரு பக்கம் முழுக்க வழிந்திருத்த பால் ஒட்டியிருக்க அதன் கசகசப்பு, நூரையீரல் வெடித்து விடும் அளவிற்கு அழுத்தமாக முத்தம் கொடுத்தவன் மீது கோபம் என அந்த காலை நேர குளிரிலும் வியர்க்க நின்றிருந்தாள்.
அடுப்பை அணைத்து கொதிக்கும் டிகாஷனில் பால் ஊற்றி அதை மூடி வைத்துவிட்டு அவளையே கொஞ்சமும் மயக்கம் தெளியாமல் பார்க்கும் ஷ்யாமை முறைத்து பார்த்துவிட்டு இடத்தை சுத்தம் செய்ய துணி எடுக்க சென்றாள்.
ஷ்யாம் அவன் நிற்கும் இடத்திலுருந்து பார்த்தாலே தெரிந்தது சரயு தூங்கிகொண்டிருப்பது. சரயு இருக்கும் நினைவில்தான் அங்கே ‘பின் ட்ராப் அமைதி’ நிலவியது.
துணி வைத்து துடைத்துவிட்டு தேநீரை வடிகட்டி இரண்டு கப்பில் ஊற்றியவள் ஒன்றை காட்டி எடுத்துக்கொள் என்றுவிட்டு திரும்பி பாத்ரூம் பக்கம் சென்றாள். அவள் பின்னாலே சென்றவன் என் கைலயும் பால் சுந்தரி என்றான் அப்பாவியாக.
அழுக்கு துணியை தண்ணீரில் போட்டுவிட்டு அவள் கைகளை கழுவிய பின்னும் அங்கேயே நின்றிருந்தவனை பார்த்து “என்ன பண்ற” கேட்டாள் அடக்குரலில்.
அவனோ பதில் சொல்லாமல் அவளை சுவரோடு அழுத்தி அவன் வன்முறையை தொடர்ந்தான். இம்முறை தெளிவாக இருந்த சுந்தரி கால் தூக்கி எங்கே இடித்தால் வலிக்குமோ அங்கே ஒரே இடி.வலியில் அவளை விட்டு தள்ளி நின்றவன் “அடிப்பாவி, ராட்சசி” கம்மிய குரலில் “என்ன ஷ்யாம் செய்ற”அவள் கேட்க வலியின் பிடியில் “நாம பேசணும் சுந்தரி. பேச தயங்குற இந்த விஷயத்தை பற்றி பேசணும்” அவன் சொல்லிக்கொண்டிருக்க வெறுமனே சாத்தியிருக்கும் பாத்ரூம் கதவை தட்டினாள் சரயு. “சுந்தரி உள்ள இருக்கியா, வெளில வந்த பின்னாடி என்ன எழுப்பு” என்றவள் திரும்ப சென்று விட்டாள்.
சரயு குரல் கேட்ட நிமிடம் சுந்தரி முகம் வெட்கத்தில் சிவந்து போனது. ஆழ்மூச்சு இழுத்துவிட்டு சமநிலை வந்து, தாமதித்து வெளியே வந்தவள் அவனையும் வெளியே இழுத்து வாந்தவள் “கிளம்பு, என் கண்ணு முன்னாடி நிற்காத” கோபத்தில் சீற அப்பாவி ஷ்யாம் “டீ குடிக்கல சுந்தரி” என்றான் .
இங்கே வெளியே நில்லு வீட்டுக்குள்ள வராத என்றவள் உள்ளே சென்று கிளாஸ் பாட்டில் ஒன்றில் டீ ஊற்றி கொண்டு வந்து கொடுத்து “போ, போய் உன் கார்லே போய் குடி” அவனை விரட்டினாள்.
ஷ்யாமிடம் சொல்ல அவளிடம் ஏகப்பட்ட விஷயம் இருக்க, மனம் முழுக்க கோபம்,ஆத்திரம், ரணம் பொங்கி வழிகிறது. எதுவும் சொல்ல தோன்றாமல் அவனை விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள்.
பாழாய்ப்போன இந்த ஈர்ப்பும் அதன் சேட்டைகளும் அவளால் தாள முடியவில்லையே…
முக்தி ஸ்டீல்சில் ஷ்யாம் அவன் எண்ணத்தை செயல்படுத்துவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. நிறுவனத்தின் வாராந்திர கூட்டத்தில் முக்தி சார்பாக அரசு செயலில் எதிலேனும் உடன்பட்டு பொதுஜனம் கண்களில் படுமளவிற்கு விளம்பரம் செய்யலாம் என்று அவன் சொல்ல, ஒவ்வொருவர் ஒவ்வொரு கேள்வியில் நிறுத்தினார்கள். இளைய சமுதாயம் படாடோபமாக இருப்பதிலேயே காலத்தைச் செலவழிகிறது என்று அவன் சித்தப்பாவும் பேச ஷ்யாமிற்கு கோபம் வந்தது.
ஷ்யாம் இது முக்தி இதற்கு விளம்பரம் தேவை இல்லை, வேண்டுமென்றால் உன் முதலீட்டு நிறுவனத்திற்கு தேடு, முக்தி நஷ்டத்தில் சென்றாலும் அதன் பணியாளர்களை கவனிக்க முடியும்,முக்தி எப்போதும் இப்படியான சூழலில்தான் இருந்திருக்கிறது, நீ அதிகம் கவலைப்படுகிறாய் என்று ஒவ்வொருவர் பேச ஷ்யாம் ஆத்திரம் உச்சம் அடைந்தது.
சிறிதும் தயக்கமின்றி ஆதிக்க குரலில் “ஆமாம் இது விளம்பர காலம் தான், முக்தி அடுத்த நிலை செல்ல வேண்டுமென்று நினைக்கிறேன், என் நிறுவனம் உலக ப்ரசித்திப்பெற வேண்டும். இன்னமும் யாரும் வந்து அசைக்கக்கூட முடியாத அளவுக்கு வளர வேண்டும்.இத்தனை நாள் வளர்ச்சியை உலகிற்கு காட்ட வேண்டுமென்று நினைக்கிறேன்.செய்யத்தான் போகிறேன். முக்தி நஷ்டத்தில் போனாலும் பரவாயில்லை என்றெல்லாம் இனி யாரும் இங்கே பேசக்கூடாது” என்றவன் விறுவிறுவென அறை விட்டும் வெளியே வந்துவிட்டான்.
யாரென்று சந்தேகப்படுவான் அங்கே இருப்பதில் பாதிபேர் அவன் ஒன்றுவிட்ட சித்தப்பாக்கள், சொந்தங்கள். அவன் அப்பா போல தலைமுறைகளாக முக்தியை வளர்ப்பவர்கள்.
ராஜப்பிரகாஷ் மகன் உணர்ச்சிவசப்பட்டு பேசி சென்றதை நினைத்து ஒரு தந்தையாக வருத்தப்பட்டாலும் என் மகன் முக்தியை காப்பற்ற நினைக்கிறான் என்று நினைத்து மகிழ்ச்சி கொண்டார்.
ராஜப்பிரகாஷ் முக்தி உணர்வு குழம்பில் தத்தளிக்க அவர் எப்போதும் போற்றி மதிக்கும் அண்ணன் சிவாஜி பிரகாஷ் தன் வீல் சேரில் அவர் பக்கம் வந்தவர் “ஷ்யாம் வளர்ந்துவிட்டான் ராஜ், அவன் பொறுப்புணர்ச்சி எனக்கு உன்னையே நினைவிற்கு கொண்டு வருகிறது” என்று சொல்ல ராஜ்பரகாஷ் கண்களில் கண்ணீர் திரையாக நின்றது.
ராஜ்பரகாஷ் முக்தி காதல் திருமணம் செய்தவர்.முக்தியில் வேலை பார்த்து கொண்டிருந்த தமிழ் பெண்ணை மணந்தார். நிறுவனத்தின் வளர்ச்சி பாதிப்பை காட்டி ஷ்யாம் தாயை விவகாரத்து செய்ய வைத்தது கூட இருந்த இந்த பங்குதாரர்கள் கூட்டம்.
சீமா என்கிற டெக்ஸ்டைல் நிறுவனத்தின் ஒரே பெண் வாரிசை திருமணம் செய்துகொண்டார் ராஜ்பரகாஷ். ஷ்யாம் அதன்பின் ராஜ்பரகாஷுடன் நெருக்கத்தை குறைத்துக்கொண்டான். சீமா நிறுவனம் அவர் பெயரில் மாற அதன் லாபம் வைத்தே பேங்க் ஒன்றை தொடங்கினார். காலப்போக்கில் வங்கி விரிய சீமா நிறுவனம் அழிந்தது. சீமா நஷ்டத்தை மீட்டெடுக்க முடியாமல் போனதே என்பதில் ராஜ்பரகாஷிற்கு வருத்தம் அதிகம்.
தன்னை சுற்றி மாயவலை ஒன்று இருப்பதை ராஜ்பரகாஷ் அறிந்திருந்தார்.ஆனாலும் அவரால் சுற்றி இருக்கும் மக்களை சந்தேகப்பட முடியவில்லை, விதி என்று அதை ஏற்றுக்கொண்டார்.
அறைக்கு வந்தவன் கூட்டத்தில் அவன் பேச பேச யார் முகம் எப்படியெல்லாம் இருந்தது என்று எண்ணி பார்க்கலானான். அவன் தந்தையும் அவனக்கு எதிராக இருப்பது போலத் தோன்றியது.
சுந்தரிக்கு அலுவலகத்தில் ராகுல் அவள் கேட்கும் விதமாக வசதி எதுவும் செய்யாமல் இருக்க, அவள் கவனம் முழுக்க ஷ்யாம் விவகாரம் மீதே இருந்தது. ஷ்யாம் விளம்பரம் செய்ய ஏதுவாக இருக்கும் சிலதை தேர்ந்தெடுத்து வைத்தாள். மேற்கொண்டு பங்குச்சந்தை நிலவரத்தைக் கவனித்தாள். உற்சாகத்தில் ஷ்யாமின் முக்தி மெயில் ஐடிக்கு அவள் கண்டுபிடிப்பை மெயில் செய்தாள். அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. எதிர்பார்த்தவள் சலித்துப்போனாள்.
வேலை முடித்து வீட்டிற்கு சோர்வாக நடந்து வந்தவள் வீட்டின் வாசலில் காத்திருந்தான் ஷ்யாம். அவனைப் பார்த்ததும் கோபம் கொந்தளித்தது.
“நான் எவ்வளவு நேரம் உனக்காக காத்திருந்தேன் தெரியுமா?” அவள் அப்படி எதிர்பார்ப்பு நிறைந்த கோபத்தில் கேள்வி கேட்கவும் அவனுக்குள் அவளிடம் சொல்ல இருந்த விஷயமெல்லாம் மறந்தது.
“சாரி ஆபிஸ் வர முடியலை”
“நான் எவ்வளவு நேரம் உன் போன் காலுக்கு காத்திருந்தேன் தெரியுமா?” சுந்தரி நியாயம் கேட்கும் தொனியில் கேட்க
நினைவடுக்குகள் முழுக்க இனிப்பான அவர்கள் முத்தம் மட்டுமே நினைவிருக்கு அவனோ ‘நானும்’ என்று முன்னேறி அவள் முன்னே குனிந்து அவள் கண்களைப் பார்த்தான். அந்த பார்வையில் இதயம் துள்ள மூச்சடைத்தவள் பல்லை கடித்துக்கொண்டு “ஷ்யாம்” என்றாள்
“ம்ம்”
“நான் அனுப்பிய மெயிலுக்கு பதில் எதிர்பார்த்து காத்திருந்தேன்” என்றாள் அவன் அலைபாயும் கண்களையே பார்த்துக்கொண்டு.
உச்சந்தலையில் ஆணி இறங்கியது போல குழப்பத்தில் “எனக்கு எதுவும் மெயில் வரலையே.!” என்றான்
அவன் ஆசை பார்வை குழப்ப பார்வையாக மாறியதில் சின்ன வலி தாக்கினாலும் கண்டுபிடிப்பை சொல்லிவிடும் வேகம் அவளிடம். "உங்க இரண்டாம் நிலை பங்குகள் விரிவாக சென்றாலும் ஒரே இடம் தான் செல்கிறது.அது ஒரு அமெரிக்க நிறுவனம். அதே போல முதல் நிலை பங்குகள் உன் அம்மாவிடம் அதிகமாக இருக்கிறது”
“என் அம்மாவா” அவன் புருவம் முடிச்சுடன் கேட்க
சுந்தரி “ஆமா, திருமதி ராஜ்பரகாஷ் முக்தியிடம்” என்றாள்
ஷ்யாம் அதிர்ந்தான். “நான் வீட்டுக்கு போகவேண்டும்.பை நாளைக்கு மீட் பண்ணலாம்”
அவன் நிலை கண்டவள் தயங்காமல் அவனை தொடர்ந்து அவன் காரில் ஏறி அமர்ந்தாள்.
“நானும் வரேன்.நான் கண்டுபிடித்ததை எல்லாம் சொல்லவேண்டாமா?, நீ தெரிந்துகொண்டே ஆகணும் ”
“ஏன் அது காத்திருக்காதா?” சலிப்பாக கேட்டான்
“இருக்காது”
“சரி, ஏறு”