4.கிரேக்க சிற்பம்
பணக்கார அரை கிழவனாகத் தான் இருக்க வேண்டுமா என்ன? பரம்பரை பணக்கார வாரிசாகக் கூட இருக்கலாம் இல்லையா! யோசிக்காமல் விட்டாளே.
உடல் வெப்பம் கூடியது. சகித்துக்கொண்டு நம்மால் முடிந்தது செய்யலாம் என்று சமாதானம் செய்துகொண்டு தொடர்ந்தாள் அவள் திட்டத்தை.
அன்புக்கு ஏங்கி அவள் நிற்கையில் பாசமாக இருந்தவன் அல்லவா முரளி. அவன் விடுதலை ஆகி வர அவளால் முடிந்த அளவுக்கு அவள் போராட வேண்டுமல்லவா!
உணர்வுகளை புரிந்துகொள்ளும் பாக்கியம் மனிதனுக்கு மட்டுமே உள்ளது. அதை இதோ இந்த கிரேக்க சிற்பம் எதிரில் அமர்ந்திருக்கிறதே! புரிந்து கொள்ள மாட்டானா என்ன?
செஸ் என்பது முழுக்க முழுக்க அறிவை பயன்படுத்தி விளையாட வேண்டியது. அவன் கவனம் முழுக்க அவள் முகம் மீது மட்டுமே.
அவன் கவனிக்கிறான் என்று தெரிந்தும் கொஞ்சமும் அசராமல் விளையாட்டு காய்கள் மீதே அவள் கவனம். உள்ளுக்குள் படபடப்பு தான் அவளுக்கு, காட்டிக்கொள்ளாமல் அமைதி காத்தாள்.
நடுவில் டீ சுவைத்தால் அவள் முகம் மாறும், டீ விழுங்கும் வேளை சிரமப்பட்டு விழுங்கினாள்.
“டீ கசப்பாக இருந்தால் விடு, வேற டீ போட சொல்றேன். இல்லை பால் குடிக்கிறியா”
“வேண்டாம்”
“ஏன்”
“பால் பிடிக்காது”
“இன்றைக்கு ஒரு நாள் குடி”
பிடிக்காத விஷயத்தையே தொடர்ந்து செய்வது கஷ்டமாக இருக்கிறது மனதை மறைக்காமல் பேசினாள்.
“நல்லது என்றால் செய்யலாமே” பதிலுக்கு பேசினான்.
அது அவளை சீண்டியது
“எது நல்லது…” அவள் கோபமாகச் சீர...
அவன் சாந்தமாக “பால் உடம்புக்கு நல்லது. நல்ல தூக்கம் வரும்” என்றான்.
அவன் கண்களில் அத்தனை கிண்டல் கேலி. வார்த்தைகள் அக்கறையாக இருக்கலாம் அத்தனையும் இரட்டை அர்த்தம்.
ஐயோ.. நேருக்கு நேராக சண்டை போடும் ஆட்களை கூட சமாளித்து விடலாம் ஆனால் வார்த்தைகளை மாற்றி போட்டு பேசி நடிக்கும் ஆட்களை,அவள் கோபத்தை கிளறும் ஆட்களை என்ன செய்வது ??
கோபம் தாளாமல் முறைத்து பார்த்தாள். அவனும் நேராக அவள் கண்களையே பார்க்க சிறிது நேரத்தில் அவள் மூக்கிலிருந்து சூடாக ஏதோ வழிவது போல இருக்க தொட்டுப்பார்த்தால் இரத்தம்.
சுந்தரி மூக்கிலிருந்து இரத்தம் வழிவதை பார்த்து பதறியவன் அவளை சேரில் அமர வைத்து, தலையை நிமிர்த்தி வைக்க சொல்லி துணி ஒன்றை ஈரமாக்கி கொண்டு வந்து அவள் மூக்கில் வைத்து தலையை தடவி கொடுத்து மருத்துவருக்கு அழைத்தான். நெற்றியை தொட்டு பார்த்ததுமே அவனுக்கு புரிந்துவிட்டது அவளுக்கு காய்ச்சல் இருப்பது.
வந்த மருத்துவர் சோதித்துவிட்டு காய்ச்சல் குறைய, அவள் தூங்க மருந்து கொடுத்துவிட்டு இரத்த பரிசோதனைக்கு எழுதி கொடுத்தார்.
மருத்துவர், இந்த பெண் மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்று நினைக்கிறேன். சரியாக சாப்பிட காணம் போல!! பதற்றம் நிறைய, அதனால் தான் மூக்கிலிருந்து இரத்தம் வந்திருக்கு. எதற்கும் முழு உடல் பரிசோதனை தேவை என்று தீவிரமாக பேசுவது சுந்தரி காதுகளில் விழுந்தது.
உடம்பு வலி, தலை வலி, தொண்டை வலி என்று சோர்வு கூட ஈன ஒளியில் ‘முரளி மாமாவைக் காப்பாத்துங்க ப்ளீஸ்’ என்று அவன் கைப்பிடித்து அழுதாள்.
மனம் உருகி மெழுகு பாகாய் வழிந்தது ஷியாமிற்கு. அவளுக்காக என்று அவன் செய்வதை காதல் கொண்டு காணுவாளோ!! நன்றி என்று சொல்லி பிரிந்து போவாளோ தெரியாது. இந்த நிமிடம் அவன் மனதை கவர்ந்த பெண் அவள் என்பது அவனுக்கு உறுதி. அவனை அவள் ஏமாற்றி போடா என்று போவதை கூட அவன் ஏற்றுக்கொள்ளத் தயார். அவள் உதவி கேட்டுச் செய்யாமல் இருப்பானா என்ன?
அவள் எதிர்கவே யாருக்கோ கைப்பேசியில் அழைத்து பேசினான். எதிர்புறம் பேசுவதை ஸ்பீக்கரில் போட்டான். சார், ஆள் கண்டுபிடிசிட்டோம். தவறு அவர் மேல் தான். லீகளாக வெளியே எடுப்பது கஷ்டம் என்றார்.
விசயம் கேட்டதும் அவள் உடல் இன்னமும் குலுங்க “சரி, என்ன ஆனாலும் சரி. என்ன பண்ணுவீங்க தெரியாது. ஒரு மாதம் டைம் கொடுக்கிறேன். அந்த ஆள் இந்தியா வந்திரணும்” என்று அழைப்பை துண்டித்தான்.
அவள் அழுவதை காண சகியாது உன் முரளி மாமா இந்தியா வருவார், நீ தூங்கு என்றான். சிறிது நேரம் பேசாமல் இருந்தவள், நன்றி சொல்லி கண் அயர்ந்தாள்.
யாருக்கும் காத்திராமல் விடியல் தொடங்கியது. அந்த நாள் வரை அவன் பயன்படுத்திக்கொண்டிருந்த அறை அது. இரவெல்லாம் சுந்தரியை கவனித்து கொண்டும் தூக்கம் தொலைத்தும் இருந்தவன், நர்ஸ் இனி சலைன் போதும் என்று அதை நீக்கிவிட்டு போக, அங்கே இறுக்கம் தளர்ந்து ஷ்யாம் அடுத்த வேலையை பார்க்க சென்றான்.
கண் விழித்தாள். பளிச் வெளிர் அறை. நீள வண்ணத்தில் சோபா,ஸ்கிரீன் என்று வெள்ளையும் நீளமும் கலந்து மனதில் இதம் பரப்பியது.
ஜன்னல் வழி கதிரவன் ஒளி வீச சுற்றிலும் ஆடம்பரம் நிறைந்து தெரிந்தது. எழுந்து அமர்ந்தபோது தலை பாரமாக இருந்தது.
சுற்றிப் பார்த்தவள் கண்களுக்கு சோபா முன்னே இருக்கும் மேஜை மீது மடித்து வைத்திருந்த ஜீன்ஸ் பேன்ட் கண்களுக்குப் பட்டது அதிர்ந்து அவள் உடலைக் கவனித்தாள்.
இலகுவான நைட்டி ஒன்றை அணிந்திருந்தாள். கைகளை கவனித்தாள் கைகளில் சலைன் ஏற்றிய ஊசி இருந்தது. கை வலி என்று நினைத்தாளே இதனால் தானா?
உடல் முழுக்க அசௌகரியமாக இருக்க, சட்டென்று பக்கம் இருக்கும் பிரிவு ஒன்றிலிருந்து குளித்து முடித்து ஈரம் நிறைந்த தலை முடியுடன் வந்தான் ஷ்யாம். கையில்லாத மேல் சட்டை அணிந்திருந்தான். கைகளில் பைசெப்ஸ் தெரிந்தது.
விக்கித்து போனாள். முன்தினம் கிரேக்க சிற்பம் என்று எண்ணியது நினைவுக்கு வந்தது. அவளை சுற்றி இருக்கும் ஆண்கள் எல்லாம் படிப்பாளி, உழைப்பாளி, அறிவாளி உடலை பேணும் எண்ணம் இருப்பவர்களா என்று கேட்டால் அவளுக்குத் தெரியாது. ஆனால் இவன் போல கட்டுடல் உள்ளவர்கள் இல்லை. இறுக்கமான சதைபிடிப்பு கொண்டிருந்தவனை தன்னை மறந்து அவள் கவனிப்பது அவளுக்கே ஆச்சரியம் தான்.
ஷ்யாம் பேசும் ஆங்கிலம் கலந்த தமிழும், அவன் முகமும் சில பழக்கமும் தமிழ்நாட்டுகாரன் என்றாலும் இவன் இங்கே வாழ்பவன் இல்லை என்பதை தெளிவாக சொல்கிறது.அப்படியென்றால் இவன் ஊர் எது? எண்ணம் போக்கில் இருந்தவளை அவன் பேச்சு கலைத்தது.
“குட் மார்னிங். இப்போ எப்படி இருக்க..?”
கொஞ்சலாக அவன் பேசியது பிடிக்கவில்லை அவளுக்கு.
“என் பேன்ட்டை யார் கழட்டியது” சிரமப்பட்டு கோபமாக பேசமுடியாமல் அவள் கேட்க
அவனுக்கு அது சிரிப்பாக இருந்தது. நான் தான் என்றவன் தலை துவட்டி கொண்டு கப்போர்ட் திறந்து மாற்று துணிகளை எடுத்து பக்கம் இருக்கும் உடை மாற்றும் அறைக்கு சென்றான்.
எரிச்சல் கூடியது. எப்படி இவன் என் அனுமதி இல்லாமல் என்னை தொடலாம் எண்ணி கோபத்தில் கை இறுக மூட சுருக்கென்று கை வலித்தது.
வெளியே போவதர்க்காக உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவனிடம் “எப்படி நீ என்னை தொடலாம்”
அவள் கேள்வியில் திரும்பி பார்த்தவன். சிரித்துக்கொண்டே “போய் ப்ரஷ் பண்ணு போ. கீழ வா. டிஃபன் சாப்பிடு ப்ளட் டெஸ்டுக்கு ஆள் வரும்”
“நான் ஹாஸ்டல் போகணும்”
“முடியாது”
“என் போன் வேணும்”
“ கொடுக்கமுடியாது”
“நான் பேசமாட்டேன்”
“சரி” என்றவன் விலகி நடக்க
“ஏய் நான் பாத்ரூம் போகணும்”
“வரவா... வந்து ஹெல்ப் பண்ணவா ” அறை விட்டு வெளியே நடக்க தொடங்கியவன் திரும்பி அவளை நோக்கி கைவிரித்துக்கொண்டு வர “ஐயோ வேண்டாம்” என்றவள் வேகமாக எழுந்து குளியலறை பக்கம் ஓடினாள்.
“ஹே பாத்து போ! இரு, கீழ இருக்கும் சமையல்காரம்மாவை அனுப்புறேன்” என்று வெளியே போனான்.
அவள் நெஞ்சம் படபடவென மத்தளம் போல உள்ளிருந்து அடித்தது. புது ப்ரஷ்,சோப் என்று அவளுக்கு தேவையானது எல்லாம் அங்கே இருக்க பிரஷ் செய்து முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள்.
பசிக்கிறதே என்று அவள் எண்ணவும் சூடான இட்லியை தட்டில் வைத்து எடுத்துவந்து கொடுத்தார் ஒரு பாட்டி.
இட்லியை சக்கரை தொட்டு சாப்பிட்டும் அந்த இட்லி பிடித்தது. “நல்லா சாப்பிடு” என்று இன்னமும் அவர் அவள் தட்டில் போட “இல்ல எனக்கு சக்கரை தொட்டு சாப்பிட பிடிக்கல்ல, கொஞ்சமாக சாம்பார் போடுங்க பாட்டி”
“இல்லமா, காய்ச்சல் கண்ட உடம்பு, என்ன காய்ச்சல்ன்னும் தெரியலை, காரம் வேண்டாம்”
“ஐயோ இத இப்படி சாப்பிட எனக்கு பிடிக்கல”
“அப்போ ரொட்டி சப்பிடறியா?”
“இல்ல இல்ல”
அவள் மெதுவாக இரண்டு இட்லியை சாப்பிட்டு முடித்ததும் வெந்நீர் கூட நிறைய வண்ணங்களில் மாத்திரை கொடுத்து சாப்பிட சொன்னார். அவள் முகம் சுழிக்கவும். “சாப்பிட்டுடூ கண்ணு. இல்லை, தம்பி திட்டும்” பயமுறுத்தும் விதமாக அவர் பேச சுந்தரிக்கு சிரிப்பு வந்தது.
‘நமக்கு மட்டுமில்லை சார் இந்த பாட்டிக்கும் அரக்கன் போலத்தான் தெரியுராரு’
இரத்த பரிசோதனை, அதன் பின் முழு உடல் பரிசோதனை என்று வரிசையாக வந்து அவரவர் அவள் உடலில் சாம்பிள் எடுக்க, உயிர் கொண்டு நடமாடும் சிற்பம்போல இருப்பவன் இடுப்பில் கைவைத்துக்கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்து நின்றான்.
“பணம் இருந்தா என்ன வேணுமானாலும் செய்யலாம்ல்ல”
“இல்ல” சின்னதாக அவன் பதில் பேச.அவள் நக்கலாகச் சிரித்தாள்.
மனிதனுக்கு அவன் உடல் தான் சொத்து. அதை நோயில்லாமல் பாதுகாக்க வேண்டும் என்று பிரசங்கம் தொடங்கினான்.
அவள் பதில் பேசாமல் பார்க்க அந்த நேரம் அவள் இரத்த அழுத்தம் அறிக்கை வந்தது. “பார் குறைவாக இரத்த அழுத்தம் உனக்கு” என்றான்.
உன்னால் தான் என்று பதில் சொல்ல முடியாதே..!
“உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை”
“பின்ன. என் வீட்டுக்கு வந்தில்ல உடம்பு சரியில்லாமல் போன” அவன் எரிச்சலாகப் பேச
“என்ன விடு நான் ஹாஸ்டல் போறேன்”
“ஏன் உன் மாமா இந்தியா வரதுல இஷ்டம் இல்லையா உனக்கு” மிரட்டினான்.அமைதி ஆனாள்.
இவன் என்ன லூசா..! எதற்காக இப்படி மருத்துவம் பார்க்கிறான். என்ன யோசித்தாலும் அவளை அவள் உடலை பயன்பப்படுத்த என்றால் எதற்கு இத்தனை களேபரம்.
“ஒரு ராத்திரி முடிந்தது, என்னை என் வீட்டுக்கு அனுப்பு”
“அது இன்னமும் ஆரம்பிக்கல”
அவள் ஆச்சரியமாகப் பார்க்க “வீக்கான ஆள் கிட்ட வீரம் காட்றது என் பாணி இல்ல”
“நான் வீக்கா இல்ல”
அவள் பேச்சு கேட்டு சத்தமாகச் சிரித்தான். ‘ஜஸ்ட் ஒரு பார்வை, அதற்கே மூக்கில் ரத்தம் வழிந்தது இங்கு’ என்று அவளைப் பக்கம் இழுத்து கன்னத்தில் கண்ணம் வைத்து உரசினான்.
உடல் நடுங்கிப் போனது சுந்தரிக்கு.
பணக்கார அரை கிழவனாகத் தான் இருக்க வேண்டுமா என்ன? பரம்பரை பணக்கார வாரிசாகக் கூட இருக்கலாம் இல்லையா! யோசிக்காமல் விட்டாளே.
உடல் வெப்பம் கூடியது. சகித்துக்கொண்டு நம்மால் முடிந்தது செய்யலாம் என்று சமாதானம் செய்துகொண்டு தொடர்ந்தாள் அவள் திட்டத்தை.
அன்புக்கு ஏங்கி அவள் நிற்கையில் பாசமாக இருந்தவன் அல்லவா முரளி. அவன் விடுதலை ஆகி வர அவளால் முடிந்த அளவுக்கு அவள் போராட வேண்டுமல்லவா!
உணர்வுகளை புரிந்துகொள்ளும் பாக்கியம் மனிதனுக்கு மட்டுமே உள்ளது. அதை இதோ இந்த கிரேக்க சிற்பம் எதிரில் அமர்ந்திருக்கிறதே! புரிந்து கொள்ள மாட்டானா என்ன?
செஸ் என்பது முழுக்க முழுக்க அறிவை பயன்படுத்தி விளையாட வேண்டியது. அவன் கவனம் முழுக்க அவள் முகம் மீது மட்டுமே.
அவன் கவனிக்கிறான் என்று தெரிந்தும் கொஞ்சமும் அசராமல் விளையாட்டு காய்கள் மீதே அவள் கவனம். உள்ளுக்குள் படபடப்பு தான் அவளுக்கு, காட்டிக்கொள்ளாமல் அமைதி காத்தாள்.
நடுவில் டீ சுவைத்தால் அவள் முகம் மாறும், டீ விழுங்கும் வேளை சிரமப்பட்டு விழுங்கினாள்.
“டீ கசப்பாக இருந்தால் விடு, வேற டீ போட சொல்றேன். இல்லை பால் குடிக்கிறியா”
“வேண்டாம்”
“ஏன்”
“பால் பிடிக்காது”
“இன்றைக்கு ஒரு நாள் குடி”
பிடிக்காத விஷயத்தையே தொடர்ந்து செய்வது கஷ்டமாக இருக்கிறது மனதை மறைக்காமல் பேசினாள்.
“நல்லது என்றால் செய்யலாமே” பதிலுக்கு பேசினான்.
அது அவளை சீண்டியது
“எது நல்லது…” அவள் கோபமாகச் சீர...
அவன் சாந்தமாக “பால் உடம்புக்கு நல்லது. நல்ல தூக்கம் வரும்” என்றான்.
அவன் கண்களில் அத்தனை கிண்டல் கேலி. வார்த்தைகள் அக்கறையாக இருக்கலாம் அத்தனையும் இரட்டை அர்த்தம்.
ஐயோ.. நேருக்கு நேராக சண்டை போடும் ஆட்களை கூட சமாளித்து விடலாம் ஆனால் வார்த்தைகளை மாற்றி போட்டு பேசி நடிக்கும் ஆட்களை,அவள் கோபத்தை கிளறும் ஆட்களை என்ன செய்வது ??
கோபம் தாளாமல் முறைத்து பார்த்தாள். அவனும் நேராக அவள் கண்களையே பார்க்க சிறிது நேரத்தில் அவள் மூக்கிலிருந்து சூடாக ஏதோ வழிவது போல இருக்க தொட்டுப்பார்த்தால் இரத்தம்.
சுந்தரி மூக்கிலிருந்து இரத்தம் வழிவதை பார்த்து பதறியவன் அவளை சேரில் அமர வைத்து, தலையை நிமிர்த்தி வைக்க சொல்லி துணி ஒன்றை ஈரமாக்கி கொண்டு வந்து அவள் மூக்கில் வைத்து தலையை தடவி கொடுத்து மருத்துவருக்கு அழைத்தான். நெற்றியை தொட்டு பார்த்ததுமே அவனுக்கு புரிந்துவிட்டது அவளுக்கு காய்ச்சல் இருப்பது.
வந்த மருத்துவர் சோதித்துவிட்டு காய்ச்சல் குறைய, அவள் தூங்க மருந்து கொடுத்துவிட்டு இரத்த பரிசோதனைக்கு எழுதி கொடுத்தார்.
மருத்துவர், இந்த பெண் மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்று நினைக்கிறேன். சரியாக சாப்பிட காணம் போல!! பதற்றம் நிறைய, அதனால் தான் மூக்கிலிருந்து இரத்தம் வந்திருக்கு. எதற்கும் முழு உடல் பரிசோதனை தேவை என்று தீவிரமாக பேசுவது சுந்தரி காதுகளில் விழுந்தது.
உடம்பு வலி, தலை வலி, தொண்டை வலி என்று சோர்வு கூட ஈன ஒளியில் ‘முரளி மாமாவைக் காப்பாத்துங்க ப்ளீஸ்’ என்று அவன் கைப்பிடித்து அழுதாள்.
மனம் உருகி மெழுகு பாகாய் வழிந்தது ஷியாமிற்கு. அவளுக்காக என்று அவன் செய்வதை காதல் கொண்டு காணுவாளோ!! நன்றி என்று சொல்லி பிரிந்து போவாளோ தெரியாது. இந்த நிமிடம் அவன் மனதை கவர்ந்த பெண் அவள் என்பது அவனுக்கு உறுதி. அவனை அவள் ஏமாற்றி போடா என்று போவதை கூட அவன் ஏற்றுக்கொள்ளத் தயார். அவள் உதவி கேட்டுச் செய்யாமல் இருப்பானா என்ன?
அவள் எதிர்கவே யாருக்கோ கைப்பேசியில் அழைத்து பேசினான். எதிர்புறம் பேசுவதை ஸ்பீக்கரில் போட்டான். சார், ஆள் கண்டுபிடிசிட்டோம். தவறு அவர் மேல் தான். லீகளாக வெளியே எடுப்பது கஷ்டம் என்றார்.
விசயம் கேட்டதும் அவள் உடல் இன்னமும் குலுங்க “சரி, என்ன ஆனாலும் சரி. என்ன பண்ணுவீங்க தெரியாது. ஒரு மாதம் டைம் கொடுக்கிறேன். அந்த ஆள் இந்தியா வந்திரணும்” என்று அழைப்பை துண்டித்தான்.
அவள் அழுவதை காண சகியாது உன் முரளி மாமா இந்தியா வருவார், நீ தூங்கு என்றான். சிறிது நேரம் பேசாமல் இருந்தவள், நன்றி சொல்லி கண் அயர்ந்தாள்.
யாருக்கும் காத்திராமல் விடியல் தொடங்கியது. அந்த நாள் வரை அவன் பயன்படுத்திக்கொண்டிருந்த அறை அது. இரவெல்லாம் சுந்தரியை கவனித்து கொண்டும் தூக்கம் தொலைத்தும் இருந்தவன், நர்ஸ் இனி சலைன் போதும் என்று அதை நீக்கிவிட்டு போக, அங்கே இறுக்கம் தளர்ந்து ஷ்யாம் அடுத்த வேலையை பார்க்க சென்றான்.
கண் விழித்தாள். பளிச் வெளிர் அறை. நீள வண்ணத்தில் சோபா,ஸ்கிரீன் என்று வெள்ளையும் நீளமும் கலந்து மனதில் இதம் பரப்பியது.
ஜன்னல் வழி கதிரவன் ஒளி வீச சுற்றிலும் ஆடம்பரம் நிறைந்து தெரிந்தது. எழுந்து அமர்ந்தபோது தலை பாரமாக இருந்தது.
சுற்றிப் பார்த்தவள் கண்களுக்கு சோபா முன்னே இருக்கும் மேஜை மீது மடித்து வைத்திருந்த ஜீன்ஸ் பேன்ட் கண்களுக்குப் பட்டது அதிர்ந்து அவள் உடலைக் கவனித்தாள்.
இலகுவான நைட்டி ஒன்றை அணிந்திருந்தாள். கைகளை கவனித்தாள் கைகளில் சலைன் ஏற்றிய ஊசி இருந்தது. கை வலி என்று நினைத்தாளே இதனால் தானா?
உடல் முழுக்க அசௌகரியமாக இருக்க, சட்டென்று பக்கம் இருக்கும் பிரிவு ஒன்றிலிருந்து குளித்து முடித்து ஈரம் நிறைந்த தலை முடியுடன் வந்தான் ஷ்யாம். கையில்லாத மேல் சட்டை அணிந்திருந்தான். கைகளில் பைசெப்ஸ் தெரிந்தது.
விக்கித்து போனாள். முன்தினம் கிரேக்க சிற்பம் என்று எண்ணியது நினைவுக்கு வந்தது. அவளை சுற்றி இருக்கும் ஆண்கள் எல்லாம் படிப்பாளி, உழைப்பாளி, அறிவாளி உடலை பேணும் எண்ணம் இருப்பவர்களா என்று கேட்டால் அவளுக்குத் தெரியாது. ஆனால் இவன் போல கட்டுடல் உள்ளவர்கள் இல்லை. இறுக்கமான சதைபிடிப்பு கொண்டிருந்தவனை தன்னை மறந்து அவள் கவனிப்பது அவளுக்கே ஆச்சரியம் தான்.
ஷ்யாம் பேசும் ஆங்கிலம் கலந்த தமிழும், அவன் முகமும் சில பழக்கமும் தமிழ்நாட்டுகாரன் என்றாலும் இவன் இங்கே வாழ்பவன் இல்லை என்பதை தெளிவாக சொல்கிறது.அப்படியென்றால் இவன் ஊர் எது? எண்ணம் போக்கில் இருந்தவளை அவன் பேச்சு கலைத்தது.
“குட் மார்னிங். இப்போ எப்படி இருக்க..?”
கொஞ்சலாக அவன் பேசியது பிடிக்கவில்லை அவளுக்கு.
“என் பேன்ட்டை யார் கழட்டியது” சிரமப்பட்டு கோபமாக பேசமுடியாமல் அவள் கேட்க
அவனுக்கு அது சிரிப்பாக இருந்தது. நான் தான் என்றவன் தலை துவட்டி கொண்டு கப்போர்ட் திறந்து மாற்று துணிகளை எடுத்து பக்கம் இருக்கும் உடை மாற்றும் அறைக்கு சென்றான்.
எரிச்சல் கூடியது. எப்படி இவன் என் அனுமதி இல்லாமல் என்னை தொடலாம் எண்ணி கோபத்தில் கை இறுக மூட சுருக்கென்று கை வலித்தது.
வெளியே போவதர்க்காக உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவனிடம் “எப்படி நீ என்னை தொடலாம்”
அவள் கேள்வியில் திரும்பி பார்த்தவன். சிரித்துக்கொண்டே “போய் ப்ரஷ் பண்ணு போ. கீழ வா. டிஃபன் சாப்பிடு ப்ளட் டெஸ்டுக்கு ஆள் வரும்”
“நான் ஹாஸ்டல் போகணும்”
“முடியாது”
“என் போன் வேணும்”
“ கொடுக்கமுடியாது”
“நான் பேசமாட்டேன்”
“சரி” என்றவன் விலகி நடக்க
“ஏய் நான் பாத்ரூம் போகணும்”
“வரவா... வந்து ஹெல்ப் பண்ணவா ” அறை விட்டு வெளியே நடக்க தொடங்கியவன் திரும்பி அவளை நோக்கி கைவிரித்துக்கொண்டு வர “ஐயோ வேண்டாம்” என்றவள் வேகமாக எழுந்து குளியலறை பக்கம் ஓடினாள்.
“ஹே பாத்து போ! இரு, கீழ இருக்கும் சமையல்காரம்மாவை அனுப்புறேன்” என்று வெளியே போனான்.
அவள் நெஞ்சம் படபடவென மத்தளம் போல உள்ளிருந்து அடித்தது. புது ப்ரஷ்,சோப் என்று அவளுக்கு தேவையானது எல்லாம் அங்கே இருக்க பிரஷ் செய்து முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள்.
பசிக்கிறதே என்று அவள் எண்ணவும் சூடான இட்லியை தட்டில் வைத்து எடுத்துவந்து கொடுத்தார் ஒரு பாட்டி.
இட்லியை சக்கரை தொட்டு சாப்பிட்டும் அந்த இட்லி பிடித்தது. “நல்லா சாப்பிடு” என்று இன்னமும் அவர் அவள் தட்டில் போட “இல்ல எனக்கு சக்கரை தொட்டு சாப்பிட பிடிக்கல்ல, கொஞ்சமாக சாம்பார் போடுங்க பாட்டி”
“இல்லமா, காய்ச்சல் கண்ட உடம்பு, என்ன காய்ச்சல்ன்னும் தெரியலை, காரம் வேண்டாம்”
“ஐயோ இத இப்படி சாப்பிட எனக்கு பிடிக்கல”
“அப்போ ரொட்டி சப்பிடறியா?”
“இல்ல இல்ல”
அவள் மெதுவாக இரண்டு இட்லியை சாப்பிட்டு முடித்ததும் வெந்நீர் கூட நிறைய வண்ணங்களில் மாத்திரை கொடுத்து சாப்பிட சொன்னார். அவள் முகம் சுழிக்கவும். “சாப்பிட்டுடூ கண்ணு. இல்லை, தம்பி திட்டும்” பயமுறுத்தும் விதமாக அவர் பேச சுந்தரிக்கு சிரிப்பு வந்தது.
‘நமக்கு மட்டுமில்லை சார் இந்த பாட்டிக்கும் அரக்கன் போலத்தான் தெரியுராரு’
இரத்த பரிசோதனை, அதன் பின் முழு உடல் பரிசோதனை என்று வரிசையாக வந்து அவரவர் அவள் உடலில் சாம்பிள் எடுக்க, உயிர் கொண்டு நடமாடும் சிற்பம்போல இருப்பவன் இடுப்பில் கைவைத்துக்கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்து நின்றான்.
“பணம் இருந்தா என்ன வேணுமானாலும் செய்யலாம்ல்ல”
“இல்ல” சின்னதாக அவன் பதில் பேச.அவள் நக்கலாகச் சிரித்தாள்.
மனிதனுக்கு அவன் உடல் தான் சொத்து. அதை நோயில்லாமல் பாதுகாக்க வேண்டும் என்று பிரசங்கம் தொடங்கினான்.
அவள் பதில் பேசாமல் பார்க்க அந்த நேரம் அவள் இரத்த அழுத்தம் அறிக்கை வந்தது. “பார் குறைவாக இரத்த அழுத்தம் உனக்கு” என்றான்.
உன்னால் தான் என்று பதில் சொல்ல முடியாதே..!
“உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை”
“பின்ன. என் வீட்டுக்கு வந்தில்ல உடம்பு சரியில்லாமல் போன” அவன் எரிச்சலாகப் பேச
“என்ன விடு நான் ஹாஸ்டல் போறேன்”
“ஏன் உன் மாமா இந்தியா வரதுல இஷ்டம் இல்லையா உனக்கு” மிரட்டினான்.அமைதி ஆனாள்.
இவன் என்ன லூசா..! எதற்காக இப்படி மருத்துவம் பார்க்கிறான். என்ன யோசித்தாலும் அவளை அவள் உடலை பயன்பப்படுத்த என்றால் எதற்கு இத்தனை களேபரம்.
“ஒரு ராத்திரி முடிந்தது, என்னை என் வீட்டுக்கு அனுப்பு”
“அது இன்னமும் ஆரம்பிக்கல”
அவள் ஆச்சரியமாகப் பார்க்க “வீக்கான ஆள் கிட்ட வீரம் காட்றது என் பாணி இல்ல”
“நான் வீக்கா இல்ல”
அவள் பேச்சு கேட்டு சத்தமாகச் சிரித்தான். ‘ஜஸ்ட் ஒரு பார்வை, அதற்கே மூக்கில் ரத்தம் வழிந்தது இங்கு’ என்று அவளைப் பக்கம் இழுத்து கன்னத்தில் கண்ணம் வைத்து உரசினான்.
உடல் நடுங்கிப் போனது சுந்தரிக்கு.