கண்ணம்மா : 17
விஷ்ணுவின் நினைவுகளில் இருந்து ஒதுங்கி இருக்க எண்ணியே சரண்தேவ் நட்சத்திராவை நாடியது.
ஆனால் அவள் செயல்களில் கூட அவன் பார்த்தது என்னவோ அவன் கோளாறு கோட்டானை தான்.
சொன்னது போலவே அவளை ஷாப்பிங் அழைத்து வந்தவன், நாட்டமில்லா மனதை இழுத்து பிடித்து கொண்டே அவளோடு சுற்றிக் கொண்டிருந்தான்.
ஏற்கனவே ‘சிக்கிச்சி மலமாடு’ என்ற கணக்கில் தான் அவன் பர்ஸ்க்கு வேட்டு வைத்துக் கொண்டிருந்தவள், இறுதியாக,
“மாமா இந்த பிளேவர் நல்லா இருக்கா சொல்லு” என்று கேட்டுக் கொண்டே பர்ஃயும் ஒன்றை எடுத்து வந்து அவனிடம் கொடுக்க,
‘வேண்டாம் என்றால் விடவா போறாள்?’ என்று எண்ணிக் கொண்டே சட்டையின் கை பகுதியில் அதை தேய்த்து, கையை மடக்கி நுகர்ந்து பார்த்தவன், “ஹ்ம்ம் நல்லா தான் இருக்கு” என்றான்.
“ஆமா ல்லா” என்று சொல்லி கொண்டே அவளும் அவன் கையை பிடித்து நாசி அருகே வைத்து கண்களை மூடிக் கொண்டே வாசம் எடுக்க, ஒரு நொடி விஷ்ணு தான் அவன் நினைவில் வந்து போனாள்.
அவளும் அன்று அவன் சட்டையை போட்டுக் கொண்டு இப்படி தானே செய்தாள்.
எங்கு போனாலும் குட்டி சாத்தானின் நினைவுகள் துரத்த, தன் கையை பிடித்துக் கொண்டிருந்த நட்சத்திராவிடம் இருந்து வெடுக்கென்று கையை உதறி எடுத்தவன், அதே வேகத்தில் கையில் இருந்த வாசனை திரவிய பாட்டிலையும் தூக்கி ஏரிந்திருந்தான்.
நொடியில் செய்து விட்டான். அது உடைந்த சத்தத்தில் அத்தனை பேரும் திரும்பி அவனை பார்த்த பிறகே செய்த செயல் அவன் புத்தியில் உரைத்தது.
கடை ஊழிய பெண்ணும் அவ்விடம் விரைந்து வந்திருக்க,
“ஐ பெய்ட் ஃபார் திஸ்” என்று சொல்லிக் கொண்டே நட்சத்திராவை திரும்பி பார்த்தான்.
அவளோ உதட்டை பித்துக்கி கொண்டு அழ தயாராக நின்றிருந்தாள்.
“நாம வேற வாங்கிக்கலாம்” என்று சொல்லிக் கொண்டே சரண் அவளை நெருங்க,
“இட்ஸ் சோ எக்ஸ்பென்சிவ். லாஸ்ட் ஒன் பீஸ் தான் இருந்துச்சு. அதையும் வேற ஒரு பொண்ணு எடுக்க முன்னாடி தூக்கிட்டு ஓடி வந்தேன். போ மாமா” என்று அவள் சிறு பிள்ளை போல சண்டை போட்டு செல்ல,
“சாரி டா. நாம ஆர்டர் போட்டு வேற வர சொல்லலாம்” என்று அவளை சமாதானம் செய்தபடியே ஷாப்பிங் பேக்களை தூக்கிக் கொண்டு அவள் பின்னால் சென்றான்.
கடைசியில் நாற்பது ரூபாய் ஐஸ்கிரீமில் தான் ஆள் சமாதானம் ஆனாள்.
இடது கையில் ஐஸ்கிரீமை பிடித்து கொண்டு வலது கையில் சரண் போனை தான் நோண்டிக் கொண்டிருந்தாள்.
“ஏன் இன்னும் என் இன்ஸ்டா ஐடிக்கு ஃபாலோ கொடுக்கமா வச்சிருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே அவளே ஃபாலோ கொடுத்து,
அவள் போஸ்ட் எல்லாத்துக்கும் அவன் ஐடியில் இருந்து லைக் போட ஆரம்பித்து விட்டாள்.
“நான் போஸ்ட் போடும் போது மறக்காம லைக்ஸ் போட்டிருங்க” என்று சொல்லிக் கொண்டே,
போனில் கவனமாக இருந்தவள் ஐஸ்கிரீமை மறந்து போக, அதுவோ அவள் கையோடு தான் உருகி வழிந்து கொண்டிருந்தது.
“போன் அப்புறமா பாரு? முதல்ல சாப்பிடு” என்று சொல்லி கொண்டே டிஸு எடுத்து சரண் துடைத்து விட,
ஐஸ்கிரீமை அவன் கையிலேயே கொடுத்தவள் இரண்டு கைகளிலும் போனை பிடித்து கொண்டு அதில் ஐக்கியம் ஆகி விட்டாள்.
“என்ன வேணாமா? நான் ஐஸ்கிரீம் சாப்பிடுறது இல்ல. நீயே சாப்பிடு” என்று அவன் அவளிடமே திருப்பி நீட்டினான்.
“உங்களுக்கு யார் கொடுத்தது? ஆ” என்று ஊட்டி விடும்படி அவள் வாயை திறந்து காட்ட,
மென்மையாக சிரித்துக் கொண்டே அவளுக்கு ஊட்ட ஆரம்பித்திருந்தான்.
சாப்பிட்டு கொண்டே போனை பார்த்து கொண்டிருந்தவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி கொண்டே போக, இங்கே பதறி போனான் சரண்.
“நட்சு என்ன?” என்று அவன் கேட்டிட,
“எவ்வளவு கஷ்டபட்டு வீடியோ போடுறேன். நூறு லைக்ஸ் தாண்ட மாட்டேங்குது. மோசமா கமென்ட் பண்றாங்க” என்று சொல்லிக் கொண்டே அழுத பெண்ணை, ‘அதுக்கு தானா இந்த அழுகை’ என்று பெருமூச்சு ஒன்று விட்டுக் கொண்டே பார்த்தான் சரண்.
“இதுக்காகலாம் யாராவது அழுவாங்களா?” என்று மீண்டும் டிஸு எடுத்து அவள் கண்களை துடைத்து விட,
“வேற எதுக்காக அழனுமாம்?” என்று தான் கேட்டாள் நட்சத்திரா.
“இன்னும் சின்ன புள்ளையாவே இருக்க. இதெல்லாம் ஒரு விசயம்னு உட்கார்ந்து அழுதுட்டு இருக்க? முதல்ல அங்க இருக்கிறது யாரு உனக்கு? யாரோ ஏதோ சொல்லிட்டாங்கனு உட்கார்ந்து அழுதுட்டு இருக்க.
இங்க யாரும் நீ கஷ்டப்படுவ, இப்படி உட்கார்ந்து அழுவனெல்லாம் உனக்காக யோசிக்க போறது இல்ல. ஈசிலி ஹர்ட்ஸ் டூ அதர்ஸ். அவங்களை மாத்த முடியாது. யூ சூஸ் தட் ஃபீல்டு. சோ யூ பேஸ் டூ ஆல். நீ தான் உன்னை ஸ்ட்ராங்கா வச்சுக்கணும்” என்று அவன் நீளமாக வசனம் பேசிட,
“என்னவோ போ மாமா மனுசுக்கே கஷ்டமா இருக்கு” என்று சொல்லி கொண்டே போனை கீழே வைத்து விட்டு, அவன் கையில் இருந்து ஐஸ்கிரீமை வாங்கி அவளே சாப்பிட ஆரம்பித்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த சரணுக்கு அவளை நினைத்து கவலையாக தான் இருந்தது.
இருபது வயதை கடந்து விட்டாள். ஆனாலும் இன்னமும் பக்குவப்படவில்லை என்ற கவலை அவனுக்கு.
இப்படியே இருந்தால் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்வாள் என்று எண்ணிக் கொண்டே,
“நட்சு… இருபத்தி ரெண்டு வயசு ஆகுது உனக்கு. இன்னமும் சின்ன குழந்தை மாதிரி பிகேவ் பண்ற. கொஞ்சம் மேட்சுர்ட்ஆ இருக்க முயற்சி பண்ணு. இப்படியே இருந்தா லைஃப்ல கஷ்டப்படுவ” என்று அவன் அக்கறையாக சொல்ல,
“நான் ஏன் கஷ்டப்படப்போறேன்? அதான் நீங்க எல்லாம் இருக்கீங்களே” என்றால் அவள் சற்று முன் அழுத பிள்ளை அவள் தானா என்று சந்தேகிக்கும் வகையில் ஐஸ்கிரீமை ரசித்து சுவைத்து கொண்டே.
“நாங்க எல்லாரும் உன்கூட எப்போதும் இருக்க முடியாது. ஒருவேளை நீ தனியா சர்வே பண்ண வேண்டிய சூழ்நிலை வந்தா?” என்று அவன் கேட்க,
“அது அப்போ பார்த்துக்கலாம் மாமா” என்றால் வாழ்க்கை பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல்.
“கொஞ்சமாவது லைஃப்ஆ சீரியஸா பாரு நட்சு” என்ற சரணிடம்,
“சீரியஸா இருந்தா ஐ சி யு ல சேர்த்துடுவாங்க மாமா. நீங்க ஏன் எல்லா விஷயத்தையும் சீரியஸா பார்க்கிறீங்க? எப்பவும் புத்திசாலியா இருக்காதீங்க. கொஞ்சம் முட்டாளா இருங்க அப்போ தான் லைஃப் ஜாலியா இருக்கும்” என்று புதுமை தத்துவம் சொன்ன ஞானி தலை முடியை களைத்து விட்டு மென்மையாக சிரித்து கொண்டான் சரண்.
அவளோ ஐஸ்கிரீம் முடிய, கையை துடைத்து கொண்டே “போலாமா மாமா? அடுத்து எங்க போறோம்” என்று கேட்டுக் கொண்டே எழ,
அவளோடு சேர்ந்து சரணும் “போலாம்” என்று எழுந்து சென்றான்.
காரில் வரும் போதும் அவன் அருகே அமர்ந்து ரீல்ஸ் பார்த்து சிரித்து கொண்டே வந்தவளை சரண் விழிகளும் அடிக்கடி தயக்கமாக பார்த்துக் கொண்டே வந்தது.
‘அடுத்து என்ன ரீல்ஸ் போடலாம்?’ என்று ட்ரெண்டிங்காக போய் கொண்டிருக்கும் ரீல்ஸ்களை தேடிக் கொண்டிருந்தவளை,
“நட்சு” என்று அழைத்தான் சரண்.
“என்ன மாமா?” போன் திரையில் இருந்து விழியை அகற்றாது கேட்டால் அவள்.
“நிஜமாவே என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?” இன்னமும் அவனால் அவள் வார்த்தைகளை நம்பவும் முடியவில்லை. தெளிவான முடிவு எடுக்கவும் முடியவில்லை.
நிச்சயமாக இவளோடு மனமும் உடலும் இணையாது என்று புரிந்து போனது அவனுக்கு.
அவனால் அவள் வாழ்க்கை இழந்து விட கூடாது என்ற அக்கறையும் வந்தது.
“அதான் அன்னைக்கே சொன்னேனே மாமா. எனக்குன்னு எந்த பிளானும் இல்ல. சோ உங்க பிளானுக்கு ஓகே சொல்றேன்” என்றவளை நொந்து போய் பார்த்தவன், காரை ஓரமாக நிறுத்தி விட்டு,
“கல்யாணம் பண்ணா நிறைய பொறுப்புகளை ஏற்க வேண்டி வரும். எக்ஸ்பேட்டேசன் இருக்கும். லைஃப் வேற மாதிரி மாறிடும்” என்று அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.
அருகே இருப்பவனின் தவிப்பு அவளுக்கு சுத்தமாக புரியவே இல்லை. அவள் விழிகள் இன்னமும் அலைபேசி திரையில் தான் நிலைத்து இருந்தது.
“என்ன மாற போகுது. இப்போ இருக்க போல தானே இருக்க போறேன்” என்று அவள் சொல்லவும் தான் அவள் மனநிலை அவனுக்கு புரிந்தது.
அவள் வாழ்வின் விதிமுறைகளையும், திருமண பந்த பொறுப்புகளையும் எப்போதும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
அன்னை தந்தை பாதுகாப்பில், அத்தை மாமா அன்பில், பாட்டியின் அரவணைப்பில் குழந்தையாகவே இருக்க நினைக்கிறாள்.
அதற்காக தான் அவர்கள் கேட்டதும் சரி என்று சொல்லி இருக்கிறாள்.
இடையில், இத்தனை நாள் வெறும் மாமன் மகனாக இருந்தவனை கணவனாக முறை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி அவள் கொஞ்சமும் சிந்திக்கவே இல்லையே.
‘அவள் சிந்திக்காமல் இருந்தால் என்ன? நான் புரிய வைக்கிறேன். அவளே கல்யாணம் வேணாம் சொல்லி நிறுத்தினா நல்லா இருக்கும்’ என்ற திட்டத்தில் அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.
“நட்சு… கல்யாணத்துக்கு பிறகு எனக்கு தேவையானதெல்லாம் நீ தான் கவனிச்சிக்கணும் தெரியும் தானே” என்று கேட்க,
“அதான் வீட்ல அத்தனை வேலைகாரங்க இருக்காங்களே மாமா அவங்க பார்த்துப்பாங்க” என்றவளை தலையில் அடித்து கொண்டு பார்த்தவன்,
“முதல்ல அந்த போனை அங்க வச்சிட்டு என்னை பாரு” என்று அவளை பிடித்து தன்னை நோக்கி திருப்பி அமர வைத்தான்.
“கல்யாணம் முடிஞ்சி பர்ஸ்ட் நைட்டுனு ஒன்னு இருக்கு. அது பத்தி தெரியுமா உனக்கு?” என்று கேட்க,
அவளும் “ஹ்ம்ம் தெரியுமே” என்று தான் கூலாக தோளை குலுக்கினாள்.
‘தெரியுமா?’ என்று அரண்டது என்னவோ சரண் தான்.
“என்கூட உனக்கு ஓகே வா” என்று இருவரையும் கைக்காட்டி கேட்டிட,
“அதுல என்ன இருக்கு?” என்று தான் பதில் சொன்னாள் நட்சத்திரா.
‘அதுல என்ன இருக்கா? இவ தெரிஞ்சி பேசுறாளா? தெரியாம பேசுறாளா?’ என்று எண்ணி கொண்டே,
“அதுல என்னெல்லாம் பண்ணுவாங்கனு தெரியுமா?” என்று கேட்க,
இல்லை என்று அவள் இட வலமாக தலை ஆட்டிய பிறகே சரணுக்கு மூச்சே வந்தது.
‘தெரியல. அதான் பயம் இல்லை. இரு உனக்குள்ள முதல்ல அந்த பயத்தை புகுத்துறேன்’ என்று வில்லத்தனமான எண்ணிக் கொண்டே,
“நான் சொல்லித்தரேன்” என்று சொல்லி அவளை நெருங்கி அமர,
அவளோ விழி சுருக்கி அவனை தான் விசித்திரமாக பார்த்து வைத்தாள்.
அவளுடன் இதுமாதிரி பேச்சு வார்த்தைகள் அவனுக்கும் சற்று சங்கடமாக தான் இருந்தது. சங்கடத்தை பார்த்தால் கடைசியில் சங்கு தான் என்று எண்ணிக் கொண்டே,
அவள் கன்னங்களை கைகளில் ஏந்திக் கொள்ள,
அவள் உடல் சிலிர்த்ததோ என்னவோ? இவனுக்கு பயத்தில் உடல் நடுங்கியது.
காரின் முன்னிருக்கையில் தான் இருவரும் அமர்ந்து இருந்தார்கள்.
ஏதோ வெட்ட வெளியில் காட்சி பொருளாக இருப்பது போன்ற உணர்வு.
“இங்க நல்லா இல்ல, நாம பின்னாடி போலாம்” என்று சொல்ல,
“ஹ்ம்ம் ஓகே” என்று அதற்கும் சர்வ சாதாரணமாக ஒப்புக்கொண்டு, இறங்கி பின்னிருக்கைக்கு சென்றவளை அதிர்ந்து பார்த்தவன்,
‘இவ என்ன எல்லாத்துக்கும் தயாரா இருக்கா? எனக்கு தான் நெஞ்சு பட படன்னு அடிச்சுக்குது. சரண் வெட்ககேடு. உன்னால நட்சுவ கிஸ் பண்ண முடிஞ்சா அவளை கல்யாணம் பண்ணிக்க, இல்ல கஷ்டம் தான். சாமியாரா போயிடு” என்று எண்ணிக் கொண்டே தன்னை திடப்படுத்தி கொண்டு அவனும் பின்னால் வந்து அமர்ந்தான்.
அவளோ கோவிலில் புளியோதரை வாங்க தயாராக இருப்பது போல் அவனை பார்த்துக் கொண்டிருக்க,
எச்சில் கூட்டி விழுங்கி கொண்டே அவளை நெருங்கி அமர்ந்த சரண், தன் பயத்தை மறைக்க கஷ்டப்பட்டு சிரித்தும் கொண்டான்.
நட்சத்திரா முகத்தில் எந்த உணர்வுகளும் இல்லை. சரண் என்றால் எப்போதும் அவள் உணரும் பாதுகாப்பு இப்போதும் இருந்தது. அதனாலோ என்னவோ அவளும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் அவனை பார்க்கும் அதே பார்வை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வலுக்கட்டாயமாக கரத்தை உயர்த்தி அவள் கன்னங்களில் பதித்து கொண்டவன், அவள் விழிகளில் இருந்து சிரமப்பட்டே அவள் இதழ் நோக்கி தன் விழிகளை நகர்த்தி கொண்டே, அவள் இதழ் நோக்கி தன் இதழ்களையும் கொண்டு சென்று விட்டான்.
தவறு செய்யும் உணர்வில் இதய படபடவென அடித்துக் கொள்ள, நூலளவு இடைவெளியில் இதழ்கள் தீண்டாது நிறுத்தியவன், விழிகளை உயர்த்தி மூடியிருந்த அவள் விழிகளை பார்த்துக் கொண்டே,
“இஸ் தட் ஓகே டூ யு” என்று தான் கேட்டான் ஏக தடுமாற்றத்தில்.
மெதுவாக விழிகளை திறந்தவள், “ஹ்ம்ம்” என்று தலையசைக்க,
தோல்வியை ஒப்புக் கொண்டு அவளை விட்டு விலகி அமர்ந்தவன்,
“பட் ஐ அம் நாட் ஓகே” என்றான் இருக்கையில் தலையை சாய்ந்து கொண்டே.
கள்ளச்சிரிப்புடன் அவன் மார்பில் வந்து சாய்ந்து கொண்ட நட்சத்திராவோ,
“உனக்கு ரொமான்ஸ் பண்ணவே தெரியல மாமா. டைரக்ட்ஆ கிஸ் பண்ண நினைக்கிற, அதான் உன்னால முடியல. நிறைய கொரியன் ட்ராமா சைனீஸ் ட்ராமா பார்த்து ரொமான்ஸ் பண்ண கத்துக்க” என்றவளை விழிகளை தாழ்த்தி பார்த்தவன்,
“நேரம் தான் டி” என்று தான் சலிப்பாக சொன்னான்.
அவனை பார்த்து என்ன சொல்லி விட்டால் வெட்க கேடு. அதற்காக ரோசம் கொண்டு அவளை ஆளும் எண்ணமும் வரவில்லை. பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டே, அவளை தன்னில் இருந்து விலக்கி அமரவைத்தவன், இறங்கி முன்னால் வந்து அமர்ந்தான்.
நட்சத்திராவும் பின்னால் இருந்து கொண்டே முன்னால் இருந்த போனை மட்டும் எட்டி எடுத்தவள், தன் போனோடு குடும்பம் நடத்த ஆரம்பித்து விட்டாள்.
இங்கே காரை ஓட்டி கொண்டு வந்த சரண் மனமோ, ‘அந்த கோட்டானை நினைச்ச என்னென்னமோ தோணுது. இவகிட்ட எதுவும் முடிய மாட்டேங்குது. பிள்ளை பூச்சியெல்லாம் உனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆகிடிச்சி. என்ன சரண்தேவ் உன் நிலைமை இவ்வளவு மோசமா போச்சி’ என்று பயணம் முழுவதும் அரற்றி கொண்டே வந்தது.
பெரியவர்கள் எல்லாரும் கல்யாண வேளையில் பிஸியாகிவிட்டார்கள்.
“விஷ்ணு ஏன் டா இப்போலாம் வேலைக்கு வர்றது இல்ல” என்று கேட்ட ஜானகி பாட்டியிடம்,
“வேலைய விட்டு நின்னுட்டான்” என்று மட்டுமே சொன்னான்.
அவனும் அவளை திருப்பி அழைக்கும் எண்ணத்தில் இல்லை. ‘இப்போதே இந்த நிலை, கோட்டான் மட்டும் கூட இருந்துச்சி பச்சையா மாட்டிப்ப சரண். அவன் விலகி இருக்கதே நல்லது தான்’ என்று எண்ணிக் கொண்டாலும், நாளுக்கு நாள் விஷ்ணுவின் பிரிவு துயர் வாட்டியதே தவிர அவனால் அவளை கடந்து செல்லவே முடியவில்லை.
இன்றோடு விஷ்ணு வேலையை விட்டு சென்று ஒருவாரம் கடந்து விட்டது..
இந்த ஒரு வாரமும் அவனே சுயமாக காரை ஓட்டி செல்கிறான். சில நேரங்களில் ஷூட்டிங்க்காக வெளியூர் செல்ல வேண்டி வரும் என்பதால் தான் அவன் டிரைவர் போட்டுக் கொண்டது. அதுமட்டுமல்ல எப்போதும் ஏதாவது மண்டையில் ஓடிக் கொண்டே இருக்கும், சாலையில் கவனம் செலுத்த முடியாது என்பதாலும் நிரந்தரமாக ஓட்டுனரை பணியமர்த்தி கொண்டான்.
சப்ஸ்டிடுட் டிரைவராக வந்தவள், பாதியில் விட்டு சென்ற பிறகும் அவன் வேறு ஆள் போடவில்லை. போடவும் தோணவில்லை.
இந்த ஐந்து நாளில் ஆள் பல சுயபரிச்சை செய்து, விஷ்ணு நினைவுகளையும், அவளால் தூண்டப்படும் உணர்வுகளையும் அடக்கும் வழியறியாது, இறுதியில் வந்து நின்றது என்னவோ நரம்பியல் மருத்துவரிடம் தான்.