அத்தியாயம் : 10
காலையில் விஷ்ணு வந்ததும் முதலில் பார்த்தது ஜானகி பாட்டியை தான்.
சோர்ந்த முகத்துடன் தோட்டத்தில் கிடந்த கல் பெஞ்சில் அமர்ந்து இருந்தார்.
“ஹாய் டார்லிங்… வாக்கிங் போகல?” என்று கேட்டுக் கொண்டே விஷ்ணுவும் அவர் அருகே அமர,
“மனசே சரி இல்லை பையா” என்றார் அவர் சோர்ந்த குரலில்.
“என்னாச்சி டார்லி… என்னான்ட சொல்லுங்க, எதுவா இருந்தாலும் தட்டி தூக்கிடலாம்” என்றவளை சலிப்பாக பார்த்தவர்,
“நீ என்ன பண்ணுவ?” என்று விரக்தியாக கேட்டார்.
“இன்னா வோனா பண்ணுவேன். உங்களுக்கு என்ன பண்ணனும் சொல்லுங்க அத சொல்லுங்க மொதல்ல” என்று அவருக்கு நம்பிக்கை கொடுக்க,
“உன்னால முடியுமா?” என்று தான் சந்தேகமாக பார்த்தார் அவர்.
“மேட்டர சொல்லாம முடியுமா? முடியாதானு கேட்டா எப்படி? மொதல்ல மேட்டர் இன்னான்னு சொல்லுங்க” என்று அவள் ஊக்கப்படுத்த, அவரும் சொன்னார்.
இரவு ஒரு முடிவோடு தான் தூங்கினான் போல சரண். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அனைவரையும் அழைத்து,
“எனக்கு இந்த கல்யாணம் வேணாம். நிறுத்திடுங்க” என்று பெரிய குண்டை தூக்கி போட்டவனை மொத்த குடும்பமும் அதிர்ந்து தான் பார்த்தது.
“ஏன் வேணாம்?” என்று அவன் தந்தை கேட்க,
“வேணாம்னா விடுங்களேன். ஏன் சும்மா கேள்வி கேட்கிறீங்க?” என்று எரிந்து விழுந்தவனை மொத்த குடும்பமும் சற்று விசித்திரமாக தான் பார்த்து வைத்தது.
அவர்கள் சொல்லி இதுவரை சரண் எந்த விஷயத்தையும் மறுத்தது கிடையாது. முதல்முறை மறுக்கிறான். காரணம் கேட்டால் கூட சொல்லாது மழுப்ப, பரிதவித்து தான் போனார்கள்.
“மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு. கல்யாண பத்திரிக்கை எல்லாம் பிரிண்ட் பண்ணி வந்தாச்சி இப்போ வந்து இப்படி சொல்ற?” என்று கலங்கிய அன்னையிடம்,
“எவ்வளவு செலவாச்சினு சொல்லுங்க நான் கொடுத்துடுறேன்” என்றதும்
“என்னங்க பேசுறான் இவன்?” என்று மனசுடைந்து போனவர் கணவர் உதவியை நாடினார்.
அவருக்கும் இன்று மகன் பேச்சி பிடிக்கவில்லை தான்.
ஆனாலும் அவன் மீது அதீத நம்பிக்கை கொண்டவராச்சே, காரணம் இல்லாமல் மறுக்க மாட்டான் என்று எண்ணியவர் அவனை ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவன் அருகே வந்த நட்சத்திரா அன்னை மேகலாவோ,
“ஏன் சரண்? எதுக்கு கல்யாணம் வேணாம் சொல்ற? நட்சத்திரா ஏதாவது தப்பு பண்ணிட்டாலா?” என்று கவலை தோய்ந்த குரலில் கேட்டார்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்ல அத்தை. நான் தான் அவளுக்கு தகுதி ஆனவன் இல்லைனு தோணுது” என்று மட்டும் சொன்னவன், அதற்குப் பிறகு அந்த இடத்தில் நிற்காது விறு விறுவென தன் அறைக்கு சென்றிருந்தான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஜானகி பாட்டியோ, அப்போதிருந்தே ‘என்னாச்சி இந்த பையனுக்கு?’ என்று அவனை பற்றிய சிந்தனையில் தான் உழன்று கொண்டிருக்கிறார்.
“இன்னும் ஒரு மாசத்துல இந்த வீட்ல கல்யாணம் நடக்க போகுதுனு நேத்து தானே உன்கிட்ட சொன்னேன். எந்த சண்டாளபாவி கண்ணு பட்டுச்சோ, சரண் கல்யாணம் வேணாம் நிறுத்துங்க சொல்லிட்டான்” என்று அவர் சோகமாக சொல்ல,
“அய்யயோ! என்னவாம் அவருக்கு?” என்று பதறியவள் கவலை எல்லாம், ஒரு மாதத்தில் இந்த நட்டு தொல்லை தீர்ந்து விடும் என்று நிம்மதி கொண்டாளே, கல்யாணம் நின்றால், அந்த நட்டு அவளை அல்லவா மரகழற செய்வாள் என்பது மட்டும் தான்.
“பாரு நேத்து வந்த உனக்கு கூட இந்த விஷயம் எவ்வளவு ஷாக்கிங்கா இருக்கு” என்று பாட்டி சொல்ல,
“ஆமா ஷாக் நியூஸ் தான். எதுக்கு அவருக்கு கல்யாணம் வோணாமாம்? நட்ட அவருக்கு பிடிக்கலையா?” என்று கேட்க,
“அதெல்லாம் அவ மேல கொள்ளை பாசம் வச்சி இருக்கான். ஆனா எதையோ மனசுல வச்சிட்டு வேணாம் சொல்றான். இப்போ சொல்லு உன்னால எனக்கு உதவி பண்ண முடியுமா? குறிச்ச நேரத்தில என் பேரன் சரணுக்கு கல்யாணம் நடக்கணும். உன்னால நடத்தி காட்ட முடியுமா?” என்று அவர் சவாலாக கேட்க,
“கொஞ்சம் கஷ்டமான வேலை தான்” என்று பின் வாங்கினாள் விஷ்ணு.
“உன்னாலலாம் முடியாது. அதுக்கெல்லாம் நிறைய ஹர்ட்ஸ் வேணும். என்ன இருந்தாலும் நீ ஒரு பொண்ணு தானே” என்று அவர் இளக்காரமாக சொல்ல,
தன்மான சிங்கமோ, “என்ன பொண்ணுன்னு எளக்காரமாக சொல்றீங்க? பொண்ணு, ஆணுன்னு என்ன இருக்கு. ஒரு ஆம்பளையால பண்ண முடியுற எல்லாம் என்னாலையும் பண்ண முடியும்” என்று சீறிக் கொண்டிருந்தவளை,
மேலும் உசுப்பி விட்டார் ஜானகி பாட்டி.
“நீ சும்மா இந்த வாய் சவிடாலுக்கு தான் ஆகும். வேலைக்கு ஆகமாட்ட” என்று மட்டம் தட்ட,
“என்னை ரொம்ப தான் இன்சல்ட் பண்ற டார்லி. உங்களுக்கு என்ன உங்க பேரன் கல்யாணம் நடக்கணும் அவ்வளவு தானே?” என்று வீராப்பாக கேட்டவள்,
எழுந்து நின்று,
“ஏய் ஜானகி… இந்த நாள், இந்த நேரம் உன் டையிரில குறிச்சி வச்சிக்க, இன்னும் ஒரு மாசத்துல, நீ குறிச்ச அதே நாள், அதே முகூர்த்தத்தில, உன் பேரன் கல்யாணத்தை நடத்தி காட்டுறேன். இது என்பது வயசுலயும், ஆடாம இருக்க உன் கொண்டை மேல சத்தியம்” என்று அவர் தலையில் கை வைக்க,
“அடிங்க… யார டி ஜானகினு பேர சொல்லி கூப்பிடுற?” என்று கேட்டுக் கொண்டே அவள் காதை பிடித்து திருக போக,
“கூப்பிட தானே டார்லி பேரு வச்சிருக்கு”
என்று சொல்லிக் கொண்டு அவர் கையில் சிக்காமல் ஓடிய விஷ்ணுவோ,
இரும்பு பாறை மேனியான் மீது தான் மோதி நின்றாள். வேறு யார் அவள் சரணாகதியாகும் சரண் தேவ் தான் எதிரில் நின்றிருந்தான்.
“வேலைக்கு வந்தா நேரா என்னை வந்து பார்க்காம, இங்க என்ன ஓடி பிடிச்சி விளையாடிட்டு இருக்க?” என்று சிடு சிடுத்த படி சரண் காரை நோக்கி போக,
“பாட்டி காலையில வாக்கிங் போகலனு சொல்லுச்சு, அதான் கொஞ்சம் எக்ஸ்சர்ஸைஸ்” என்றவளை தாண்டி அவன் பார்வை போக,
பின்னால் ஓட முடியாமல் ஓடி வந்தார் ஜானகி பாட்டி.
“பாட்டி மெதுவா வாங்க. ஏதாவது ஆகிட போகுது” என்று சரண் பதற,
“அந்த பொடி பயல பிடிச்சி வை டா” என்று கத்திக் கொண்டே மூச்சிரைக்க அவர்கள் அருகே வந்து சேர்ந்தார் ஜானகி பாட்டி.
“வயசான காலத்துல எதுக்கு இப்படி ஓடுறீங்க? பாருங்க மூச்சு வாங்குது?” என்று சரண் அவரை கடிந்து கொள்ள,
“எனக்கு ஒன்னும் அவ்வளவு வயசு ஆகல” என்ற ஜானகி பாட்டி பதிலில் விஷ்ணு வாயை மூடி சிரிக்க,
ஓர கண்ணால் அவளை முறைத்தவர், “எல்லாம் உன்னால தான். நீ கூப்பிடவா பேரு வச்சிருக்கு?” என்று கேட்டுக் கொண்டே எட்டி விஷ்ணு காதை பிடிக்க போக,
“பாஸ் என்னை காப்பாத்துங்க” என்று சரண் பின்னால் ஒளிந்து கொண்டவளை, பாட்டி கைகளை நீட்டி எட்டி பிடிக்க முயல, அவளோ அவர் கைகளுக்கு சிக்காது சரண் எனும் தூணுக்கு பின்னால் அங்கிட்டு இங்கிட்டு ஆட்டம் காட்ட,
இடையில் நின்றிருந்த சரண் இதழ்கள் கூட இவர்கள் செல்ல சண்டையில் புன்னகைத்து கொண்டது.
ஆனால் அந்த புன்னகை கூட மறைந்து போனது நட்சத்திரா வரவால்.
“ஐ! என்ன விளையாடுறீங்க? நானும் வரேன்” என்று உற்சாகமாக கேட்டுக் கொண்டே நட்சத்திரா ஓடி வர,
அவள் வந்ததும், சரண் அமைதியாக விலகி சென்றான்.
விஷ்ணுவோ, “நட்டே…” என்று அவள் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
“நான் இருக்கும் போது, என் விஷு மேல யார் கையும் பட விட மாட்டேன்” என்று பாட்டியின் போலி அடிகளில் இருந்து அவளை காக்கிறேன் என்று அணைத்து கொண்டு நிற்க,
விலகி நின்று அதை பார்த்த சரண் இதயம் தான் கனத்து போனது.
அவள் வேண்டாம் என்று விலக தெரிந்த இதயத்துக்கு, ஏனோ விஷ்ணுவும், அவளும் ஒன்றாக கட்டி கொண்டு நிற்பதை காண முடியவில்லை.
யாராவது ஒருவருக்காக இந்த இதயம் துடித்தே ஆக வேண்டுமே.
இதயத்தை மாற்ற நினைத்தவனுக்கு, மாற்று ஆள் உள்ளே நுழையாது, யாரையும் விட்டு முழுதாக விலக முடியாது என்ற சங்கதி தெரியாமல் தான் போனதுவே.
விஷ்ணுவை பின் பக்கமாக கட்டி கொண்டிருந்த நட்சத்திரா கரங்கள் விஷ்ணு வயிற்றில் பதிந்து இருக்க,
சரண் விழிகள் இரண்டும் அந்த கரங்களை தான் உறுத்து விழித்தது.
“ஏய்… விளையாடியது போதும். டைம் ஆகுது வா” என்று கோபமாக விஷ்ணுவை அழைக்க,
அவளும் நட்சத்திரா கையை விலக்கி விட்டு கொண்டே காரை நோக்கி வந்தாள்.
“இப்போ தப்பிச்சிட்ட ராத்திரி மாட்டுவ. எவ்வளவு நேரம் ஆனாலும் உன் காதை திருகாம விட மாட்டேன்” என்று ஜானகி பாட்டி சவால் விட,
“பகல்லயே பசு மாடு தெரியலையாம். ராத்திரி எருமை மாடா தெரிய போகுது?” என்ற விஷ்ணுவின் நக்கல் பதிலில் நட்சத்திராவும், சரணும் பக்கென்று சிரித்து விட்டார்கள்.
“விஷு நானும் உனக்காக நைட் வெயிட் பண்ணுவேன்” என்று நட்சத்திராவும் குரல் கொடுக்க,
ஹாங் ஹாங் என்று தலையாட்டிய விஷ்ணுவை கொஞ்சம் பொறாமையாக தான் பார்த்துக் கொண்டிருந்தான் சரண்.
இங்கே பாட்டியோ, “அந்த பொடி பயலோட சேர்ந்து என்னையே கிண்டல் பண்றியா?” என்று கேட்டுக் கொண்டே நட்சத்திரா காதை பிடித்து திருக,
“ஐயோ பாட்டி வலிக்குது விடுங்க” என்று கதறிய நட்சத்திராவை, சைட் மிரர் வழியே அவர்களை பார்த்த விஷ்ணு இதழ்களிலும் புன்னகைக்கு பஞ்சமில்லை.
காரும் வீட்டிலிருந்து வெளியே செல்ல, அப்போதும் சரண் விழிகள் அவள் மீது தான் நிலைத்து இருந்தது.
முன் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து விஷ்ணு, கைகளால் தலையை கோதிக் கொள்ள,
அவள் மண்டையை பிடித்து ஆட்டி தலை முடியை கலைத்து விட்டிருந்தான் சரண்.
“அய்யோ! ஏன் பாஸ்” என்று சலித்து கொண்டே விஷ்ணு மீண்டும் தலை முடியை கைகளால் கோதி சரி செய்து கொண்டாள்.
மெல்லிய புன்னகையுடன் அவளை பார்த்தவன்,
“உன்கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு. எல்லாரையும் மயக்கிடுற” என்றான் உள்ளார்ந்த உணர்வு தழும்பல் குரலில்.
“அப்போ நீங்களும் மயங்கிட்டீங்களா பாஸ்?” என்று அவள் பட்டென்று கேட்டுவிட,
“லூசு…” என்று திட்டியவன் இதழ்களிலும் மெல்லிய புன்னகை தழும்பியது.
“மூஞ்சிக்கு நேர புகழாதீங்க பாஸ். ஒரே வெக்க வெக்கமா வருது” என்று நெழிந்தவளை பார்த்து தலையை ஆட்டி சிரித்து கொண்டான் சரண்.
“ஏசி ஆன் பண்ணிக்கவா?” நேற்றைய நிகழ்வுகளை நினைவில் வைத்து இன்று அனுமதி கேட்டாள்.
“எல்லாம் என்கிட்ட கேட்டுட்டு தான் செய்ற பாரு? உன் இஷ்டம் போல தானே எல்லாம் நடக்குது” என்றவன் இரட்டை அர்த்த பேச்சு அவளுக்கு புரியவில்லை என்றாலும் அவன் கோபப்படாது அவளோடு இயல்பாக பேசுவதே மட்டற்ற மகிழ்ச்சி.
“பாட்டு?” என்று மீண்டும் அவனிடம் அனுமதி கேட்க,
உன் இஷ்டம் என்பது போல் கையை அசைத்தவன் சாலையில் விழியை பதித்தான்.
பிளேயரில் பாடல் ஒன்றை ஓட விட்டவள்,
“டோஓஓங் டோடோ டோங்
டோ டோ டோங் டோடோ டோங்”
என்று அதனுடன் சேர்ந்து கணீர் குரலில் பாட துவங்கி விட்டாள்.
சாலையை வெறித்துக் கொண்டிருந்தவன் அவள் குரல் கேட்டு பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கி கொண்டே திரும்பி விஷ்ணுவை பார்க்க,
ஆள் சித்ரா தேவி பிரியா ரேஞ்சில் தன் குரல் வளமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.
“நா ரெடி தா வரவா
அண்ணன் நா இறங்கி வரவா”
மென்மை தொலைத்த வன்மை குரலின் கத்தலில், “போதும் நிறுத்து” என்று பொறுக்க முடியாது அவளை தடுத்தான் சரண்.
“ஏன் பாஸ் உங்களுக்கு போட்டியா வந்துடுவேன்னு பயமா?” என்று கேட்டவளை,
“இது வேறயா?” என்று ஒரு லுக் விட்டவன்,
“ஆமா கொஞ்சம் பயமா தான் இருக்கு” என்றான் நக்கல் தொனியில்.
“பயம் வர தானே செய்யும். நான்லாம் ஒன்னாவது படிக்கும் போதே பாட்டு போட்டியிலே பார்ஸ்ட் பிரைஸ் வாங்கின ஆளாக்கும்” என்று தற்பெருமை பேசும் சில்வண்டை வைத்து கொஞ்ச நேரம் நேரம் போக்கலாம் என்று எண்ணியவனோ,
“ஆஹான்” என்று சொல்ல,
“என்னை யாருனு நினைச்சீங்க?” என்று விஷ்ணு கேட்க,
“நான் எதுவும் நினைக்கல, நீயே சொல்லு” என்றான் இதழ்களுக்குள் அடக்கிய புன்னகையுடன்.
“கைட் பண்ண சரியான ஆள் இல்ல”
“இருந்திருந்தா அடுத்த ஏ.ஆர்.ரகுமான் ஆகியிருப்ப அப்படி தானே” என்று அவன் கலாய்க்க,
“யா… அப்கொர்ஸ்” என்று வாய் கூசாமல் அடித்து விடும் அவளை பார்த்து,
“சரி தான்” என்று மண்டையை ஆட்டிக் கொண்டான் சரண்.
“அப்படி என்ன பாட்டு படினீங்க?” என்று சரண் அவளை சீண்ட,
“உங்களுக்காக பாடியே காமிச்சிடுறேன்” என்றதும்,
“அப்போ நான் கொஞ்சம் ரெடி ஆகிக்கிறேன்” என்றவன் வலது கையால் இடது நெஞ்சை நீவி கொண்டான்.
அவன் செயல்கள் எதையும் கருத்தில் கொள்ளாதவளோ, குரலை செருமிக் கொண்டு,
“ரோசா பூ சின்ன ரோசா பூ…
உன் பேர சொல்லும் ரோசா பூ…” என்று பாட,
வாய் விட்டே சிரித்தான் சரண் தேவ்.
“நீங்க எதுக்கு சிரிக்கிறீங்கனு தெரியுது. ஏதோ உங்க குரல் என் குரலை விட கொஞ்சம் நல்லா இருக்குனு திமிர்” என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டே சொன்னவள்,
அவனின் சிரித்த முகத்தை பார்த்துக் கொண்டே,
“பாஸ் உங்ககிட்ட ஒன்னு சொல்லவா” என்று கேட்க,
என்ன? என்று அவள் மீது விழி பதித்தான் சரண்.
“உங்களுக்கு செம வாய்ஸ். மெக்கானிக் செட்ல வேலை பார்க்கும் போது அலுப்பு தெரியாம இருக்க பாட்டு போட்டு விட்டுட்டே வேலை செய்வோம். அந்த பிளே லிஸ்ட்ல உங்க பாட்டு தான் பாதிக்கு பாதி இருக்கும்” என்று அவனை புகழ,
அவள் தன் பாட்டு பிடிக்கும் என்றதே அவன் இதயத்தில் இதமான உணர்வை துளிர செய்தது.
இதுவரை எத்தனையோ பேர் அவன் குரலை மெச்சி அவனை புகழ்ந்து இருக்கிறார்கள். அதையெல்லாம் விட இன்று இந்த நொடி இந்த பாராட்டு அவனை குளிர செய்தது.
“உனக்கு பாட்டுனா பிடிக்குமா?” என்று அவன் கேட்க,
“யாருக்கு தான் பாட்டு பிடிக்காது?” என்று எதிர் கேள்வி கேட்டாள் விஷ்ணு.
“நட்சுவுக்கு பிடிக்காது” என்ற சரண் குரல் குறைந்து ஒலிக்க,
“அவளுக்கு விசித்திரமா இருந்தா தான் பிடிக்கும். எங்கயோ ஏலியன் குட்டியா பொறக்க வேண்டியவ இங்க பூமியில வந்து பொறந்துட்டா” என்று தன் வீட்டு பெண்ணை கேலி செய்யும் விஷ்ணுவை முறைத்தான்.
அவன் அனல் பார்வையை புரிந்துக் கொண்டவளும்,
“ஹி… ஹி… சாரி பாஸ். உங்க வருங்கால மனைவில” என்று சமாளிப்பு புன்னகை புரிய,
வருங்கால மனைவி என்ற அடிக்கோட்டில் அடிப்பட்ட பார்வை அவளை பார்த்த சரணோ
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல” என்றான் இதம் தொலைந்த முகபாவனையில்.
“நட்டு நல்ல பொண்ணு பாஸ். என்ன கொஞ்சம் மரகழண்ட போல நடந்துக்குவா, மத்தபடி பொக்கிஷம் பாஸ் அவ. மிஸ் பண்ணிடாதீங்க” என்றவளை வலி நிறைந்த விழிகளுடன் பார்த்தவன்,
“அதான் நீயே சொல்லிட்டியே ஏலியன் குட்டினு, உன்னை போல ஒரு ஏலியன் குட்டியவே கட்டிக்கட்டும்” என்று சொல்லிவிட்டு திரும்பி கொண்டான்.
“யார பார்த்து ஏலியன் குட்டி சொல்றீங்க?” என்று விஷ்ணு அவனோடு சண்டைக்கு தயாராக,
“அப்புறம் நீ என்ன மனுஷ பிறவியா?” என்று தான் அவளை கலாய்த்து விட்டிருந்தான்.
விஷ்ணுவை கிண்டல் செய்து கொண்டே ஸ்டுடியோவும் வந்து சேர்ந்தான்.
காலையில் விஷ்ணு வந்ததும் முதலில் பார்த்தது ஜானகி பாட்டியை தான்.
சோர்ந்த முகத்துடன் தோட்டத்தில் கிடந்த கல் பெஞ்சில் அமர்ந்து இருந்தார்.
“ஹாய் டார்லிங்… வாக்கிங் போகல?” என்று கேட்டுக் கொண்டே விஷ்ணுவும் அவர் அருகே அமர,
“மனசே சரி இல்லை பையா” என்றார் அவர் சோர்ந்த குரலில்.
“என்னாச்சி டார்லி… என்னான்ட சொல்லுங்க, எதுவா இருந்தாலும் தட்டி தூக்கிடலாம்” என்றவளை சலிப்பாக பார்த்தவர்,
“நீ என்ன பண்ணுவ?” என்று விரக்தியாக கேட்டார்.
“இன்னா வோனா பண்ணுவேன். உங்களுக்கு என்ன பண்ணனும் சொல்லுங்க அத சொல்லுங்க மொதல்ல” என்று அவருக்கு நம்பிக்கை கொடுக்க,
“உன்னால முடியுமா?” என்று தான் சந்தேகமாக பார்த்தார் அவர்.
“மேட்டர சொல்லாம முடியுமா? முடியாதானு கேட்டா எப்படி? மொதல்ல மேட்டர் இன்னான்னு சொல்லுங்க” என்று அவள் ஊக்கப்படுத்த, அவரும் சொன்னார்.
இரவு ஒரு முடிவோடு தான் தூங்கினான் போல சரண். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அனைவரையும் அழைத்து,
“எனக்கு இந்த கல்யாணம் வேணாம். நிறுத்திடுங்க” என்று பெரிய குண்டை தூக்கி போட்டவனை மொத்த குடும்பமும் அதிர்ந்து தான் பார்த்தது.
“ஏன் வேணாம்?” என்று அவன் தந்தை கேட்க,
“வேணாம்னா விடுங்களேன். ஏன் சும்மா கேள்வி கேட்கிறீங்க?” என்று எரிந்து விழுந்தவனை மொத்த குடும்பமும் சற்று விசித்திரமாக தான் பார்த்து வைத்தது.
அவர்கள் சொல்லி இதுவரை சரண் எந்த விஷயத்தையும் மறுத்தது கிடையாது. முதல்முறை மறுக்கிறான். காரணம் கேட்டால் கூட சொல்லாது மழுப்ப, பரிதவித்து தான் போனார்கள்.
“மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு. கல்யாண பத்திரிக்கை எல்லாம் பிரிண்ட் பண்ணி வந்தாச்சி இப்போ வந்து இப்படி சொல்ற?” என்று கலங்கிய அன்னையிடம்,
“எவ்வளவு செலவாச்சினு சொல்லுங்க நான் கொடுத்துடுறேன்” என்றதும்
“என்னங்க பேசுறான் இவன்?” என்று மனசுடைந்து போனவர் கணவர் உதவியை நாடினார்.
அவருக்கும் இன்று மகன் பேச்சி பிடிக்கவில்லை தான்.
ஆனாலும் அவன் மீது அதீத நம்பிக்கை கொண்டவராச்சே, காரணம் இல்லாமல் மறுக்க மாட்டான் என்று எண்ணியவர் அவனை ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவன் அருகே வந்த நட்சத்திரா அன்னை மேகலாவோ,
“ஏன் சரண்? எதுக்கு கல்யாணம் வேணாம் சொல்ற? நட்சத்திரா ஏதாவது தப்பு பண்ணிட்டாலா?” என்று கவலை தோய்ந்த குரலில் கேட்டார்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்ல அத்தை. நான் தான் அவளுக்கு தகுதி ஆனவன் இல்லைனு தோணுது” என்று மட்டும் சொன்னவன், அதற்குப் பிறகு அந்த இடத்தில் நிற்காது விறு விறுவென தன் அறைக்கு சென்றிருந்தான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஜானகி பாட்டியோ, அப்போதிருந்தே ‘என்னாச்சி இந்த பையனுக்கு?’ என்று அவனை பற்றிய சிந்தனையில் தான் உழன்று கொண்டிருக்கிறார்.
“இன்னும் ஒரு மாசத்துல இந்த வீட்ல கல்யாணம் நடக்க போகுதுனு நேத்து தானே உன்கிட்ட சொன்னேன். எந்த சண்டாளபாவி கண்ணு பட்டுச்சோ, சரண் கல்யாணம் வேணாம் நிறுத்துங்க சொல்லிட்டான்” என்று அவர் சோகமாக சொல்ல,
“அய்யயோ! என்னவாம் அவருக்கு?” என்று பதறியவள் கவலை எல்லாம், ஒரு மாதத்தில் இந்த நட்டு தொல்லை தீர்ந்து விடும் என்று நிம்மதி கொண்டாளே, கல்யாணம் நின்றால், அந்த நட்டு அவளை அல்லவா மரகழற செய்வாள் என்பது மட்டும் தான்.
“பாரு நேத்து வந்த உனக்கு கூட இந்த விஷயம் எவ்வளவு ஷாக்கிங்கா இருக்கு” என்று பாட்டி சொல்ல,
“ஆமா ஷாக் நியூஸ் தான். எதுக்கு அவருக்கு கல்யாணம் வோணாமாம்? நட்ட அவருக்கு பிடிக்கலையா?” என்று கேட்க,
“அதெல்லாம் அவ மேல கொள்ளை பாசம் வச்சி இருக்கான். ஆனா எதையோ மனசுல வச்சிட்டு வேணாம் சொல்றான். இப்போ சொல்லு உன்னால எனக்கு உதவி பண்ண முடியுமா? குறிச்ச நேரத்தில என் பேரன் சரணுக்கு கல்யாணம் நடக்கணும். உன்னால நடத்தி காட்ட முடியுமா?” என்று அவர் சவாலாக கேட்க,
“கொஞ்சம் கஷ்டமான வேலை தான்” என்று பின் வாங்கினாள் விஷ்ணு.
“உன்னாலலாம் முடியாது. அதுக்கெல்லாம் நிறைய ஹர்ட்ஸ் வேணும். என்ன இருந்தாலும் நீ ஒரு பொண்ணு தானே” என்று அவர் இளக்காரமாக சொல்ல,
தன்மான சிங்கமோ, “என்ன பொண்ணுன்னு எளக்காரமாக சொல்றீங்க? பொண்ணு, ஆணுன்னு என்ன இருக்கு. ஒரு ஆம்பளையால பண்ண முடியுற எல்லாம் என்னாலையும் பண்ண முடியும்” என்று சீறிக் கொண்டிருந்தவளை,
மேலும் உசுப்பி விட்டார் ஜானகி பாட்டி.
“நீ சும்மா இந்த வாய் சவிடாலுக்கு தான் ஆகும். வேலைக்கு ஆகமாட்ட” என்று மட்டம் தட்ட,
“என்னை ரொம்ப தான் இன்சல்ட் பண்ற டார்லி. உங்களுக்கு என்ன உங்க பேரன் கல்யாணம் நடக்கணும் அவ்வளவு தானே?” என்று வீராப்பாக கேட்டவள்,
எழுந்து நின்று,
“ஏய் ஜானகி… இந்த நாள், இந்த நேரம் உன் டையிரில குறிச்சி வச்சிக்க, இன்னும் ஒரு மாசத்துல, நீ குறிச்ச அதே நாள், அதே முகூர்த்தத்தில, உன் பேரன் கல்யாணத்தை நடத்தி காட்டுறேன். இது என்பது வயசுலயும், ஆடாம இருக்க உன் கொண்டை மேல சத்தியம்” என்று அவர் தலையில் கை வைக்க,
“அடிங்க… யார டி ஜானகினு பேர சொல்லி கூப்பிடுற?” என்று கேட்டுக் கொண்டே அவள் காதை பிடித்து திருக போக,
“கூப்பிட தானே டார்லி பேரு வச்சிருக்கு”
என்று சொல்லிக் கொண்டு அவர் கையில் சிக்காமல் ஓடிய விஷ்ணுவோ,
இரும்பு பாறை மேனியான் மீது தான் மோதி நின்றாள். வேறு யார் அவள் சரணாகதியாகும் சரண் தேவ் தான் எதிரில் நின்றிருந்தான்.
“வேலைக்கு வந்தா நேரா என்னை வந்து பார்க்காம, இங்க என்ன ஓடி பிடிச்சி விளையாடிட்டு இருக்க?” என்று சிடு சிடுத்த படி சரண் காரை நோக்கி போக,
“பாட்டி காலையில வாக்கிங் போகலனு சொல்லுச்சு, அதான் கொஞ்சம் எக்ஸ்சர்ஸைஸ்” என்றவளை தாண்டி அவன் பார்வை போக,
பின்னால் ஓட முடியாமல் ஓடி வந்தார் ஜானகி பாட்டி.
“பாட்டி மெதுவா வாங்க. ஏதாவது ஆகிட போகுது” என்று சரண் பதற,
“அந்த பொடி பயல பிடிச்சி வை டா” என்று கத்திக் கொண்டே மூச்சிரைக்க அவர்கள் அருகே வந்து சேர்ந்தார் ஜானகி பாட்டி.
“வயசான காலத்துல எதுக்கு இப்படி ஓடுறீங்க? பாருங்க மூச்சு வாங்குது?” என்று சரண் அவரை கடிந்து கொள்ள,
“எனக்கு ஒன்னும் அவ்வளவு வயசு ஆகல” என்ற ஜானகி பாட்டி பதிலில் விஷ்ணு வாயை மூடி சிரிக்க,
ஓர கண்ணால் அவளை முறைத்தவர், “எல்லாம் உன்னால தான். நீ கூப்பிடவா பேரு வச்சிருக்கு?” என்று கேட்டுக் கொண்டே எட்டி விஷ்ணு காதை பிடிக்க போக,
“பாஸ் என்னை காப்பாத்துங்க” என்று சரண் பின்னால் ஒளிந்து கொண்டவளை, பாட்டி கைகளை நீட்டி எட்டி பிடிக்க முயல, அவளோ அவர் கைகளுக்கு சிக்காது சரண் எனும் தூணுக்கு பின்னால் அங்கிட்டு இங்கிட்டு ஆட்டம் காட்ட,
இடையில் நின்றிருந்த சரண் இதழ்கள் கூட இவர்கள் செல்ல சண்டையில் புன்னகைத்து கொண்டது.
ஆனால் அந்த புன்னகை கூட மறைந்து போனது நட்சத்திரா வரவால்.
“ஐ! என்ன விளையாடுறீங்க? நானும் வரேன்” என்று உற்சாகமாக கேட்டுக் கொண்டே நட்சத்திரா ஓடி வர,
அவள் வந்ததும், சரண் அமைதியாக விலகி சென்றான்.
விஷ்ணுவோ, “நட்டே…” என்று அவள் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
“நான் இருக்கும் போது, என் விஷு மேல யார் கையும் பட விட மாட்டேன்” என்று பாட்டியின் போலி அடிகளில் இருந்து அவளை காக்கிறேன் என்று அணைத்து கொண்டு நிற்க,
விலகி நின்று அதை பார்த்த சரண் இதயம் தான் கனத்து போனது.
அவள் வேண்டாம் என்று விலக தெரிந்த இதயத்துக்கு, ஏனோ விஷ்ணுவும், அவளும் ஒன்றாக கட்டி கொண்டு நிற்பதை காண முடியவில்லை.
யாராவது ஒருவருக்காக இந்த இதயம் துடித்தே ஆக வேண்டுமே.
இதயத்தை மாற்ற நினைத்தவனுக்கு, மாற்று ஆள் உள்ளே நுழையாது, யாரையும் விட்டு முழுதாக விலக முடியாது என்ற சங்கதி தெரியாமல் தான் போனதுவே.
விஷ்ணுவை பின் பக்கமாக கட்டி கொண்டிருந்த நட்சத்திரா கரங்கள் விஷ்ணு வயிற்றில் பதிந்து இருக்க,
சரண் விழிகள் இரண்டும் அந்த கரங்களை தான் உறுத்து விழித்தது.
“ஏய்… விளையாடியது போதும். டைம் ஆகுது வா” என்று கோபமாக விஷ்ணுவை அழைக்க,
அவளும் நட்சத்திரா கையை விலக்கி விட்டு கொண்டே காரை நோக்கி வந்தாள்.
“இப்போ தப்பிச்சிட்ட ராத்திரி மாட்டுவ. எவ்வளவு நேரம் ஆனாலும் உன் காதை திருகாம விட மாட்டேன்” என்று ஜானகி பாட்டி சவால் விட,
“பகல்லயே பசு மாடு தெரியலையாம். ராத்திரி எருமை மாடா தெரிய போகுது?” என்ற விஷ்ணுவின் நக்கல் பதிலில் நட்சத்திராவும், சரணும் பக்கென்று சிரித்து விட்டார்கள்.
“விஷு நானும் உனக்காக நைட் வெயிட் பண்ணுவேன்” என்று நட்சத்திராவும் குரல் கொடுக்க,
ஹாங் ஹாங் என்று தலையாட்டிய விஷ்ணுவை கொஞ்சம் பொறாமையாக தான் பார்த்துக் கொண்டிருந்தான் சரண்.
இங்கே பாட்டியோ, “அந்த பொடி பயலோட சேர்ந்து என்னையே கிண்டல் பண்றியா?” என்று கேட்டுக் கொண்டே நட்சத்திரா காதை பிடித்து திருக,
“ஐயோ பாட்டி வலிக்குது விடுங்க” என்று கதறிய நட்சத்திராவை, சைட் மிரர் வழியே அவர்களை பார்த்த விஷ்ணு இதழ்களிலும் புன்னகைக்கு பஞ்சமில்லை.
காரும் வீட்டிலிருந்து வெளியே செல்ல, அப்போதும் சரண் விழிகள் அவள் மீது தான் நிலைத்து இருந்தது.
முன் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து விஷ்ணு, கைகளால் தலையை கோதிக் கொள்ள,
அவள் மண்டையை பிடித்து ஆட்டி தலை முடியை கலைத்து விட்டிருந்தான் சரண்.
“அய்யோ! ஏன் பாஸ்” என்று சலித்து கொண்டே விஷ்ணு மீண்டும் தலை முடியை கைகளால் கோதி சரி செய்து கொண்டாள்.
மெல்லிய புன்னகையுடன் அவளை பார்த்தவன்,
“உன்கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு. எல்லாரையும் மயக்கிடுற” என்றான் உள்ளார்ந்த உணர்வு தழும்பல் குரலில்.
“அப்போ நீங்களும் மயங்கிட்டீங்களா பாஸ்?” என்று அவள் பட்டென்று கேட்டுவிட,
“லூசு…” என்று திட்டியவன் இதழ்களிலும் மெல்லிய புன்னகை தழும்பியது.
“மூஞ்சிக்கு நேர புகழாதீங்க பாஸ். ஒரே வெக்க வெக்கமா வருது” என்று நெழிந்தவளை பார்த்து தலையை ஆட்டி சிரித்து கொண்டான் சரண்.
“ஏசி ஆன் பண்ணிக்கவா?” நேற்றைய நிகழ்வுகளை நினைவில் வைத்து இன்று அனுமதி கேட்டாள்.
“எல்லாம் என்கிட்ட கேட்டுட்டு தான் செய்ற பாரு? உன் இஷ்டம் போல தானே எல்லாம் நடக்குது” என்றவன் இரட்டை அர்த்த பேச்சு அவளுக்கு புரியவில்லை என்றாலும் அவன் கோபப்படாது அவளோடு இயல்பாக பேசுவதே மட்டற்ற மகிழ்ச்சி.
“பாட்டு?” என்று மீண்டும் அவனிடம் அனுமதி கேட்க,
உன் இஷ்டம் என்பது போல் கையை அசைத்தவன் சாலையில் விழியை பதித்தான்.
பிளேயரில் பாடல் ஒன்றை ஓட விட்டவள்,
“டோஓஓங் டோடோ டோங்
டோ டோ டோங் டோடோ டோங்”
என்று அதனுடன் சேர்ந்து கணீர் குரலில் பாட துவங்கி விட்டாள்.
சாலையை வெறித்துக் கொண்டிருந்தவன் அவள் குரல் கேட்டு பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கி கொண்டே திரும்பி விஷ்ணுவை பார்க்க,
ஆள் சித்ரா தேவி பிரியா ரேஞ்சில் தன் குரல் வளமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.
“நா ரெடி தா வரவா
அண்ணன் நா இறங்கி வரவா”
மென்மை தொலைத்த வன்மை குரலின் கத்தலில், “போதும் நிறுத்து” என்று பொறுக்க முடியாது அவளை தடுத்தான் சரண்.
“ஏன் பாஸ் உங்களுக்கு போட்டியா வந்துடுவேன்னு பயமா?” என்று கேட்டவளை,
“இது வேறயா?” என்று ஒரு லுக் விட்டவன்,
“ஆமா கொஞ்சம் பயமா தான் இருக்கு” என்றான் நக்கல் தொனியில்.
“பயம் வர தானே செய்யும். நான்லாம் ஒன்னாவது படிக்கும் போதே பாட்டு போட்டியிலே பார்ஸ்ட் பிரைஸ் வாங்கின ஆளாக்கும்” என்று தற்பெருமை பேசும் சில்வண்டை வைத்து கொஞ்ச நேரம் நேரம் போக்கலாம் என்று எண்ணியவனோ,
“ஆஹான்” என்று சொல்ல,
“என்னை யாருனு நினைச்சீங்க?” என்று விஷ்ணு கேட்க,
“நான் எதுவும் நினைக்கல, நீயே சொல்லு” என்றான் இதழ்களுக்குள் அடக்கிய புன்னகையுடன்.
“கைட் பண்ண சரியான ஆள் இல்ல”
“இருந்திருந்தா அடுத்த ஏ.ஆர்.ரகுமான் ஆகியிருப்ப அப்படி தானே” என்று அவன் கலாய்க்க,
“யா… அப்கொர்ஸ்” என்று வாய் கூசாமல் அடித்து விடும் அவளை பார்த்து,
“சரி தான்” என்று மண்டையை ஆட்டிக் கொண்டான் சரண்.
“அப்படி என்ன பாட்டு படினீங்க?” என்று சரண் அவளை சீண்ட,
“உங்களுக்காக பாடியே காமிச்சிடுறேன்” என்றதும்,
“அப்போ நான் கொஞ்சம் ரெடி ஆகிக்கிறேன்” என்றவன் வலது கையால் இடது நெஞ்சை நீவி கொண்டான்.
அவன் செயல்கள் எதையும் கருத்தில் கொள்ளாதவளோ, குரலை செருமிக் கொண்டு,
“ரோசா பூ சின்ன ரோசா பூ…
உன் பேர சொல்லும் ரோசா பூ…” என்று பாட,
வாய் விட்டே சிரித்தான் சரண் தேவ்.
“நீங்க எதுக்கு சிரிக்கிறீங்கனு தெரியுது. ஏதோ உங்க குரல் என் குரலை விட கொஞ்சம் நல்லா இருக்குனு திமிர்” என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டே சொன்னவள்,
அவனின் சிரித்த முகத்தை பார்த்துக் கொண்டே,
“பாஸ் உங்ககிட்ட ஒன்னு சொல்லவா” என்று கேட்க,
என்ன? என்று அவள் மீது விழி பதித்தான் சரண்.
“உங்களுக்கு செம வாய்ஸ். மெக்கானிக் செட்ல வேலை பார்க்கும் போது அலுப்பு தெரியாம இருக்க பாட்டு போட்டு விட்டுட்டே வேலை செய்வோம். அந்த பிளே லிஸ்ட்ல உங்க பாட்டு தான் பாதிக்கு பாதி இருக்கும்” என்று அவனை புகழ,
அவள் தன் பாட்டு பிடிக்கும் என்றதே அவன் இதயத்தில் இதமான உணர்வை துளிர செய்தது.
இதுவரை எத்தனையோ பேர் அவன் குரலை மெச்சி அவனை புகழ்ந்து இருக்கிறார்கள். அதையெல்லாம் விட இன்று இந்த நொடி இந்த பாராட்டு அவனை குளிர செய்தது.
“உனக்கு பாட்டுனா பிடிக்குமா?” என்று அவன் கேட்க,
“யாருக்கு தான் பாட்டு பிடிக்காது?” என்று எதிர் கேள்வி கேட்டாள் விஷ்ணு.
“நட்சுவுக்கு பிடிக்காது” என்ற சரண் குரல் குறைந்து ஒலிக்க,
“அவளுக்கு விசித்திரமா இருந்தா தான் பிடிக்கும். எங்கயோ ஏலியன் குட்டியா பொறக்க வேண்டியவ இங்க பூமியில வந்து பொறந்துட்டா” என்று தன் வீட்டு பெண்ணை கேலி செய்யும் விஷ்ணுவை முறைத்தான்.
அவன் அனல் பார்வையை புரிந்துக் கொண்டவளும்,
“ஹி… ஹி… சாரி பாஸ். உங்க வருங்கால மனைவில” என்று சமாளிப்பு புன்னகை புரிய,
வருங்கால மனைவி என்ற அடிக்கோட்டில் அடிப்பட்ட பார்வை அவளை பார்த்த சரணோ
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல” என்றான் இதம் தொலைந்த முகபாவனையில்.
“நட்டு நல்ல பொண்ணு பாஸ். என்ன கொஞ்சம் மரகழண்ட போல நடந்துக்குவா, மத்தபடி பொக்கிஷம் பாஸ் அவ. மிஸ் பண்ணிடாதீங்க” என்றவளை வலி நிறைந்த விழிகளுடன் பார்த்தவன்,
“அதான் நீயே சொல்லிட்டியே ஏலியன் குட்டினு, உன்னை போல ஒரு ஏலியன் குட்டியவே கட்டிக்கட்டும்” என்று சொல்லிவிட்டு திரும்பி கொண்டான்.
“யார பார்த்து ஏலியன் குட்டி சொல்றீங்க?” என்று விஷ்ணு அவனோடு சண்டைக்கு தயாராக,
“அப்புறம் நீ என்ன மனுஷ பிறவியா?” என்று தான் அவளை கலாய்த்து விட்டிருந்தான்.
விஷ்ணுவை கிண்டல் செய்து கொண்டே ஸ்டுடியோவும் வந்து சேர்ந்தான்.