பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப்
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே.
அத்தியாயம் : 5
ஒரு மாதம் முன்பு நடந்த அந்த பைக் ஆக்சிடன்ட்டிற்கு பிறகு விஷ்ணுவின் தாய் அன்னம்மா, “இனி ரேசு, மெக்கானிக் செட் பக்கம் போன நான் எங்கயாவது கண் காணாம போயிடுவேன்” என்று மிரட்டியே, நிம்மதியாக சுத்திட்டு இருந்த பிள்ளையை இம்மா பெரிய பிக்கல்ல இழுத்து விட்டிடுச்சு.
அது எதுவும் தெரியாத பச்ச மண்ணும் புது வேலை ஜோரில்,
“ம்மோய் எனக்கு வேலை கிடைச்சிடுச்சி” என்று காலரை தூக்கி விட்டு அன்னையிடம் சொல்ல,
“ஆஹ்… நிஜமா தான் சொல்றியா?” என்று கேட்டு கொண்டே விஷ்ணு அருகே வந்தார் அன்னம்மா.
“என்ன வேலை தங்கம்? மாசம் எவ்வளவு சம்பளம்?” என்று வாயெல்லாம் புன்னகையுடன் அவர் கேட்க,
“சிங்கர் சரண் தேவ் இருக்கார்ல ம்மா” என்ற விஷ்ணுவிடம்,
“அது யாரு?” என்று தான் தாடையில் கை வைத்து யோசனையாக முகத்தை சுருக்கி பார்த்தார்.
“அம்மோ… ***** பாட்டு பாடினாரே அவர் தான் மா. நம்ம மாரி அண்ணேல்ல, மாரி அண்ணே அந்த சார்கிட்ட தான் வேலைக்கு நிற்குது. அது தான் எனக்கும் வேலை வாங்கி கொடுத்திச்சி” என்று விஷ்ணு சொல்ல,
“பாட்டு பாடுரவன்கிட்ட உனக்கு என்ன வேலை?” என்று அன்னம்மா விழியை சுருக்க,
“அவர் டிரைவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையாம்”
“அதுக்கு?” என்று அவர் முகத்தில் அனல் காற்று வீச,
அதை அறியா அப்பாவியோ,
“அவர் திரும்பி வர்ற வரை அந்த கார் ஐயா கண்ட்ரோல் தான்” என்று மடக்கி விட்டிருந்த ஷர்ட் காலரை தூக்கி விட்டு கொண்டே விஷ்ணு சொல்ல,
“எடு அந்த விளக்கமாத்த, எங்க சுத்தினாலும் பைக்கு, காருனு வந்து நிற்கிற. பொம்பளை பிள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்க சொல்லி நானும் உயிரை உட்டுட்டு இருக்கேன். எதுவும் உன் காதுல ஏற மாட்டேங்குது ல்ல. முதல்ல இந்த சட்டை பேண்டை கழட்டி போட்டுட்டு சுடிதார் போடுற” என்று அவர் திட்டிக் கொண்டு மூலையில் கிடந்த விளக்கமாற்றை எடுக்க,
“அய்யோ அம்மா… ரேஸ்க்கு போக கூடாது சொன்ன, நானும் சரி சொன்னேன். எனக்கு தெரிஞ்ச வேலைக்கு தானே போக முடியும். தெரியாத வேலைக்கு போய் எவன்கிட்டயும் என்னால திட்டு வாங்க முடியாது” என்று கத்திக் கொண்டே விஷ்ணு வெளியே ஓடி வந்தாள்.
“கார் டிரைவரா போகவா டி உன்னை காலேஜ் அனுப்பி படிக்க வைச்சேன்?” என்று கேட்டுக் கொண்டே அன்னம்மாவும் மகளை துரத்த,
வீதிக்கே ஓடி வந்து விட்டாள்.
“யக்கா கப்பாத்துக்கா? என் அம்மா என்னை அடிக்க வருது” என்று வீதியில் இருந்து துணி துவைத்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு அக்கா பின்னால் வந்து ஒளிந்து கொள்ள,
“உனக்கும் வேலை இல்ல, உங்கொம்மாவுக்கும் வேலை இல்ல” என்று சலித்து கொண்டாலும்
“அன்னம்மா அக்கா எதுக்கு வயசு பிள்ளையா அடிக்கிற?” என்று விஷ்ணுவுக்காக கேட்கவும் செய்தார்.
“இதையெல்லாம் கொல்லாம இன்னும் உயிரோட வச்சிருக்கேன் பாரு, என்னை நானே செருப்பால அடிச்சிக்கணும். இதால ஒருநாள் கூட எனக்கு நிம்மதி இல்ல. பொண்ணா வளருனு சொன்னா பொறுக்கியா வளர்ந்து வந்து நிற்குது. நீ விலகு ராணி.” என்று அவரை தள்ளி விட்டு விஷ்ணு தலைமுடியை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வர,
“அய்யோ அம்மா கொலை, கொலை… யாராவது என்னை காப்பாத்துங்க” என்று கத்தி ஆர்ப்பாட்டமே செய்து விட்டாள்.
அவள் கதறல் கேட்டு ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஏரியா மக்கள் எல்லாம் வந்து ஆஜராகி விட்டார்கள்.
“இன்னா விஷ்ணே இன்னா பிரச்சின?” என்று கேட்டுக் கொண்டே சுருள் மண்டை ஒன்று அவர்கள் அருகே வர,
“ஏதெய் விஷ்ணு வா? அவளுக்கு துர்கானு ஒரு பேரு வச்சிருக்கேன் டா. அதை சொல்லி கூப்பிட்டா என்ன கொல்லையாம்?”
“நீ தெனம் ஒரு பேரு மாத்தினு இருந்தா நாங்க என்ன பண்றது? எங்களுக்கு வர்றது சொல்லி தான் கூப்பிட முடியும். அதுவும் நீ வச்ச பேரு தானே க்கோவ்” என்று பதில் சொல்லிக் கொண்டே,
“இன்னா டா தம்பி உங்கொம்மாவுக்கு என்னாச்சி ஏன் சாமி ஆடிட்டு இருக்கிது?” என்று விஷ்ணுவிடம் கேட்டான்.
“டேய் மூஞ்சூரு உன்னை இங்க பஞ்சாயத்து தீர்க்க யாராவது கூப்டாங்களா? மூடினு போய்ரு” என்று கண் கலங்கிய அன்னம்மா கவலை எல்லாம் ஆண் பிள்ளை போல் வளர்ந்து நிற்கும் மகளை எப்படி கரை சேர்க்க போகிறோம் என்பது மட்டும் தான்.
முந்தானை சேலையில் மூக்கை உறிஞ்சி, சேலையை உதறி இடுப்பில் சொருகி கொண்டே அவர் அழ,
இங்கே நிலை கொள்ளாது அன்னையிடம் வந்தாள் விஷ்ணு துர்கா.
“அம்மோய்… எதுக்கு இப்போ கண்ண கசக்கினு இருக்குற? நீ பிடிக்கலைனு சொல்லி ரேச விட்டேன் தான. எனக்கு இப்படி துணி போட தான் பிடிக்குது, இப்படி இருக்க தான் பிடிச்சு இருக்கு. மொத்தமா ஆளையே மாத்துனு சொன்னா? எவ்வளவு நாள் பழக்கத்தை மாத்த முடியல” என்று அவளும் தன்னிலை விளக்கம் சொல்லி அன்னையை சமாதானம் செய்ய முயன்றாள்.
“அன்னம்மா அக்கா… இப்போ என்ன ஆகி போச்சினு மூக்க சிந்தினு இருக்க?” என்று ராணியும் கேட்க,
“என் கவலை உங்க யாருக்கும் புரியாது ராணி. பயமா இருக்கு டி. அப்பன் இல்லா புள்ளை எவங்கிட்டயும் ஏமாந்துட கூடாதுனு தைரியமா வளர்க்க நினைச்சேன். இது இப்படி வளர்ந்து நிற்குது. என் கவலை எல்லாம் இது எவளையும் இழுத்துட்டு வந்திட கூடாதுனு தான். கடையாண்ட வந்து நிற்கும் போது அத்தனை பொண்ணு கண்ணும் இவ மேல தான். அவளுகளை சொல்லி என்ன தப்பு, இது பார்க்க ஆம்பள போல முடியை வெட்டிட்டு ரேசு அது இதுனு சுத்தினா வயசு புள்ளைங்க பார்க்க தானே செய்யும். போதும் சாமி இவளோட என்னால மாரடிக்க முடியல, சீக்கிரமே எவனையாவது பார்த்து கல்யாணம் பண்ணி அனுப்பினா தான் எனக்கு நிம்மதி.”
“அது தான் உன் பிரச்சனையா ஊர்ல மாப்பிள்ளைக்கா பஞ்சம்? அதெல்லாம் பார்த்து எடுத்து முடிச்சு விடலாம்” என்று ராணி அவரை சமாதானம் செய்தார்.
“எந்த ஆம்பளையும் ஒரு பொண்ண தான் கல்யாணம் கட்டிக்க ஆசை படுவான். இன்னொரு ஆம்பளைய இல்ல” என்று மகளின் உருவ வெளிப்பாட்டை நொந்து கொண்டே அன்னம்மா சொல்ல,
“நான் கட்டிகிறேன் க்கா. இதுக்கு போய் எதுக்கு ஊரை கூட்டி வயசு புள்ளைய நடுவுல நிற்க விட்டு ஒப்பாரி வச்சினு இருக்க?” என்று கேட்டுக் கொண்டே அங்கே வந்து சேர்ந்தான் மாரி.
“இன்னா டா தம்பி என்னை கட்டிப்ப தானே” என்று விஷ்ணு தோளில் மாரி கை போட,
அவன் கையை தட்டி விட்ட விஷ்ணுவோ,
“உன்ன கட்டிகிறதுக்கு நான் தண்டவாளத்துல கொண்டு தலையை வைக்கலாம்.”
“என்ன டா தம்பி உனக்கு வேலையெல்லாம் வாங்கி கொடுத்து இருக்கேன். இப்டி சொல்ற?” என்று மாரி அவள் மறுத்ததால் சோக கீதம் வாசிக்க,
அன்னம்மாவோ “அந்த டிரைவர் வேலையில அவளை சேர்த்து விட்ட மகாபிரபு நீ தானோ?” என்று கேட்டுக் கொண்டே கையில் இருந்த விளக்க மாற்றை சீராக தட்டிக் கொண்டவர்,
“பொம்பளை பிள்ளைய வண்டி ஓட்ட கொண்டு போய் விட்டிருக்க” என்று அவனுக்கும் நாலு அடியை போட்டார்.
“எக்கா இப்போலாம் பொம்பளை புள்ளைங்க ஏரோ பிளேனே ஓட்டுது, நம்ம விஷ்ணு தம்மா தூண்டு கார ஓட்டாதா” என்று கேட்டுக் கொண்டே அவரிடம் இருந்து வாரியலை பிடுங்கி போட்டான்.
“அம்மா… ஒரு மாசம் தான். அப்புறம் சத்தியமா வேற வேலைக்கு போய்டுறேன். நாளையில இருந்து வர்றேனு சொல்லிட்டு வந்துட்டேன். வாக்கு கொடுத்துட்டு அதை காப்பாத்தலைனா நல்லாவா இருக்கும். பிளீஸ் மா… இந்த ஒரு மாசம் மட்டும். என் செல்ல அம்மா ல்ல” என்று கெஞ்சி கொஞ்சியே அவள் செயலுக்கு தலையாட்ட வைத்து விட்டாள்.
அவரும், “என்னவோ பண்ணு போ” என்று பிடித்தம் இல்லை என்றாலும் மகளை அடக்கும் வழியறியாது அவள் போக்கிலே விட்டது தான் அவர் இப்போது வரை செய்துக் கொண்டிருக்கும் ஒரே தவறு.
இங்கே இரவு சரண் வீட்டிற்கு வந்த நேரம், நட்சத்திரா தோட்டத்தில் நின்று ரீல்ஸ்க்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள்.
காரை விட்டு இறங்கிய சரண் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, வீட்டை நோக்கி நடந்தவன், பிறகு என்ன நினைத்தானோ அவளை நோக்கி கால்களை திருப்பினான்.
வேலைக்கார பெண்மணி ஒருவர் அவளை வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, அம்மணி நெற்றியில் பெரிய பட்டையை போட்டுக் கொண்டு,
“சக்தியை நோக்க சரவண பவன” என்ற சாமி பாட்டுக்கு முக பாவனை செய்து கொண்டிருந்தாள்.
சரண் வந்து நின்றதும், வேலைக்கார பெண்மணி “அம்மா ஐயா” என்று போனை அவளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பிட,
“மீதி வீடியோவும் எடுத்து கொடுத்துட்டு போ” என்றவள் கையில் இருந்து போனை பிடிங்கினான் சரண்.
“என்ன கோலம் இது?” என்று கேட்டுக் கொண்டே அவள் நெற்றியில் இருந்த திருநீர் பட்டையை தன் கைக்குட்டையால் துடைக்க,
“இது தான் இப்போ ட்ரெண்ட் மாமா. இப்படி வீடியோ போட்டு தான் இப்போ ஒரு பொண்ணு நிறைய விஸ் வாங்கிட்டு இருக்கு” என்ற ட்ரேண்டிங் பைத்தியத்தை வைத்து கொண்டு அவனுக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.
“லைஃப் ஆஹ் கொஞ்சமாவது சீரியஸா பாரு நட்சு. போலீஸ் ஸ்டேஷன் போனத கூட வீடியோ எடுத்து போட்டு வச்சிருக்க” என்று அவன் நொந்து கொள்ள,
“அதுக்கு எவ்வளவு லைக்ஸ் கமெண்ட்ஸ் வந்துச்சு தெரியுமா மாமா?” என்றவள் பதிலில் தலையில் அடித்து கொண்டான் சரண்.
இவளை இப்படியே விட்டால் சரி வராது. அவளோடு சேர்த்து என்னையும் பைத்தியம் ஆக்கிவிடுவாள் என்று எண்ணியவன், அவளிடம் சில விஷயங்களுக்கு தெளிவு பெற வேண்டி இருக்கிறதே.
“இங்க வந்து உட்காரு கொஞ்சம் பேசணும்” என்று அவள் கையை பிடித்து அன்று உட்கார வைத்த பெஞ்சில் உட்கார வைக்க, எப்போதும் போல் சமத்து பிள்ளையாக உட்கார்ந்து கொண்டாள்.
“வீட்ல நமக்கு கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்றாங்க” அவளுக்கு தெரியுமா தெரியாதா? என்ற குழப்பத்தில் தான் கேட்டான்.
“தெரியும் மாமா” பட்டென்று பதில் வந்தது நட்சத்திராவிடம் இருந்து.
‘தெரியுமா? இவ்வளவு கூலா பதில் சொல்றா, அந்த பையன் மேல இருந்த காதல் எல்லாம் மறந்துட்டாளா?’ சந்தேகித்தபடியே,
“அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா” என்று சரண் கேட்க,
“தெரியலயே மாமா” என்று தான் பதில் அளித்தாள்.
“இல்ல எனக்கு புரியல, பிடிச்சிருக்கு பிடிக்கலை சொல்லு. அதென்ன தெரியல” என்று குழம்பி போய் சரண் கேட்க,
“சத்தியமா எனக்கு எந்த ஐடியாவும் இல்ல மாமா” என்றவள் கழுத்தில் கத்தியைவா வைக்க முடியும்,
கேட்கும் கேள்விகளை மாற்றி கேட்க முடிவு செய்தான்.
“உனக்கு வேற யாரையாவது பிடிக்குமா?” என்று சரண் கேட்க,
“ஹ்ம்ம் பிடிக்கும் மாமா” என்று முகம் மலர சொன்னவள்,
“ஆனா அவனுக்கு என்னை பிடிக்காது. அவன் மட்டும் ஓகே சொல்லிட்டான் அப்புறம் என் ரேன்ஜே வேற” என்று அவள் யாரை சொல்கிறாள் என்று அவனாலும் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் ஏற்று கொள்ள தானே மனம் தடுமாறுகிறது.
“சரி போ” என்று அவளை அனுப்பி வைத்தவன் மனதிலோ பெரும் குழப்பம்.
தன் காதலை தக்க வைத்துக் கொள்ள முயல்வதா?
இல்லை அவள் காதலுக்கு வழி விட்டு விலகுவதா? என்று.
ஆனால் அவள் பிடித்தம் காதலுக்காகவா? இல்லை கானலாக மறைந்து போகும் ரீல்ஸ் மோகத்திற்காகவா? என்பதை அறியாமல் போனான் பாடகன்.
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே.
அத்தியாயம் : 5
ஒரு மாதம் முன்பு நடந்த அந்த பைக் ஆக்சிடன்ட்டிற்கு பிறகு விஷ்ணுவின் தாய் அன்னம்மா, “இனி ரேசு, மெக்கானிக் செட் பக்கம் போன நான் எங்கயாவது கண் காணாம போயிடுவேன்” என்று மிரட்டியே, நிம்மதியாக சுத்திட்டு இருந்த பிள்ளையை இம்மா பெரிய பிக்கல்ல இழுத்து விட்டிடுச்சு.
அது எதுவும் தெரியாத பச்ச மண்ணும் புது வேலை ஜோரில்,
“ம்மோய் எனக்கு வேலை கிடைச்சிடுச்சி” என்று காலரை தூக்கி விட்டு அன்னையிடம் சொல்ல,
“ஆஹ்… நிஜமா தான் சொல்றியா?” என்று கேட்டு கொண்டே விஷ்ணு அருகே வந்தார் அன்னம்மா.
“என்ன வேலை தங்கம்? மாசம் எவ்வளவு சம்பளம்?” என்று வாயெல்லாம் புன்னகையுடன் அவர் கேட்க,
“சிங்கர் சரண் தேவ் இருக்கார்ல ம்மா” என்ற விஷ்ணுவிடம்,
“அது யாரு?” என்று தான் தாடையில் கை வைத்து யோசனையாக முகத்தை சுருக்கி பார்த்தார்.
“அம்மோ… ***** பாட்டு பாடினாரே அவர் தான் மா. நம்ம மாரி அண்ணேல்ல, மாரி அண்ணே அந்த சார்கிட்ட தான் வேலைக்கு நிற்குது. அது தான் எனக்கும் வேலை வாங்கி கொடுத்திச்சி” என்று விஷ்ணு சொல்ல,
“பாட்டு பாடுரவன்கிட்ட உனக்கு என்ன வேலை?” என்று அன்னம்மா விழியை சுருக்க,
“அவர் டிரைவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையாம்”
“அதுக்கு?” என்று அவர் முகத்தில் அனல் காற்று வீச,
அதை அறியா அப்பாவியோ,
“அவர் திரும்பி வர்ற வரை அந்த கார் ஐயா கண்ட்ரோல் தான்” என்று மடக்கி விட்டிருந்த ஷர்ட் காலரை தூக்கி விட்டு கொண்டே விஷ்ணு சொல்ல,
“எடு அந்த விளக்கமாத்த, எங்க சுத்தினாலும் பைக்கு, காருனு வந்து நிற்கிற. பொம்பளை பிள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்க சொல்லி நானும் உயிரை உட்டுட்டு இருக்கேன். எதுவும் உன் காதுல ஏற மாட்டேங்குது ல்ல. முதல்ல இந்த சட்டை பேண்டை கழட்டி போட்டுட்டு சுடிதார் போடுற” என்று அவர் திட்டிக் கொண்டு மூலையில் கிடந்த விளக்கமாற்றை எடுக்க,
“அய்யோ அம்மா… ரேஸ்க்கு போக கூடாது சொன்ன, நானும் சரி சொன்னேன். எனக்கு தெரிஞ்ச வேலைக்கு தானே போக முடியும். தெரியாத வேலைக்கு போய் எவன்கிட்டயும் என்னால திட்டு வாங்க முடியாது” என்று கத்திக் கொண்டே விஷ்ணு வெளியே ஓடி வந்தாள்.
“கார் டிரைவரா போகவா டி உன்னை காலேஜ் அனுப்பி படிக்க வைச்சேன்?” என்று கேட்டுக் கொண்டே அன்னம்மாவும் மகளை துரத்த,
வீதிக்கே ஓடி வந்து விட்டாள்.
“யக்கா கப்பாத்துக்கா? என் அம்மா என்னை அடிக்க வருது” என்று வீதியில் இருந்து துணி துவைத்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு அக்கா பின்னால் வந்து ஒளிந்து கொள்ள,
“உனக்கும் வேலை இல்ல, உங்கொம்மாவுக்கும் வேலை இல்ல” என்று சலித்து கொண்டாலும்
“அன்னம்மா அக்கா எதுக்கு வயசு பிள்ளையா அடிக்கிற?” என்று விஷ்ணுவுக்காக கேட்கவும் செய்தார்.
“இதையெல்லாம் கொல்லாம இன்னும் உயிரோட வச்சிருக்கேன் பாரு, என்னை நானே செருப்பால அடிச்சிக்கணும். இதால ஒருநாள் கூட எனக்கு நிம்மதி இல்ல. பொண்ணா வளருனு சொன்னா பொறுக்கியா வளர்ந்து வந்து நிற்குது. நீ விலகு ராணி.” என்று அவரை தள்ளி விட்டு விஷ்ணு தலைமுடியை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வர,
“அய்யோ அம்மா கொலை, கொலை… யாராவது என்னை காப்பாத்துங்க” என்று கத்தி ஆர்ப்பாட்டமே செய்து விட்டாள்.
அவள் கதறல் கேட்டு ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஏரியா மக்கள் எல்லாம் வந்து ஆஜராகி விட்டார்கள்.
“இன்னா விஷ்ணே இன்னா பிரச்சின?” என்று கேட்டுக் கொண்டே சுருள் மண்டை ஒன்று அவர்கள் அருகே வர,
“ஏதெய் விஷ்ணு வா? அவளுக்கு துர்கானு ஒரு பேரு வச்சிருக்கேன் டா. அதை சொல்லி கூப்பிட்டா என்ன கொல்லையாம்?”
“நீ தெனம் ஒரு பேரு மாத்தினு இருந்தா நாங்க என்ன பண்றது? எங்களுக்கு வர்றது சொல்லி தான் கூப்பிட முடியும். அதுவும் நீ வச்ச பேரு தானே க்கோவ்” என்று பதில் சொல்லிக் கொண்டே,
“இன்னா டா தம்பி உங்கொம்மாவுக்கு என்னாச்சி ஏன் சாமி ஆடிட்டு இருக்கிது?” என்று விஷ்ணுவிடம் கேட்டான்.
“டேய் மூஞ்சூரு உன்னை இங்க பஞ்சாயத்து தீர்க்க யாராவது கூப்டாங்களா? மூடினு போய்ரு” என்று கண் கலங்கிய அன்னம்மா கவலை எல்லாம் ஆண் பிள்ளை போல் வளர்ந்து நிற்கும் மகளை எப்படி கரை சேர்க்க போகிறோம் என்பது மட்டும் தான்.
முந்தானை சேலையில் மூக்கை உறிஞ்சி, சேலையை உதறி இடுப்பில் சொருகி கொண்டே அவர் அழ,
இங்கே நிலை கொள்ளாது அன்னையிடம் வந்தாள் விஷ்ணு துர்கா.
“அம்மோய்… எதுக்கு இப்போ கண்ண கசக்கினு இருக்குற? நீ பிடிக்கலைனு சொல்லி ரேச விட்டேன் தான. எனக்கு இப்படி துணி போட தான் பிடிக்குது, இப்படி இருக்க தான் பிடிச்சு இருக்கு. மொத்தமா ஆளையே மாத்துனு சொன்னா? எவ்வளவு நாள் பழக்கத்தை மாத்த முடியல” என்று அவளும் தன்னிலை விளக்கம் சொல்லி அன்னையை சமாதானம் செய்ய முயன்றாள்.
“அன்னம்மா அக்கா… இப்போ என்ன ஆகி போச்சினு மூக்க சிந்தினு இருக்க?” என்று ராணியும் கேட்க,
“என் கவலை உங்க யாருக்கும் புரியாது ராணி. பயமா இருக்கு டி. அப்பன் இல்லா புள்ளை எவங்கிட்டயும் ஏமாந்துட கூடாதுனு தைரியமா வளர்க்க நினைச்சேன். இது இப்படி வளர்ந்து நிற்குது. என் கவலை எல்லாம் இது எவளையும் இழுத்துட்டு வந்திட கூடாதுனு தான். கடையாண்ட வந்து நிற்கும் போது அத்தனை பொண்ணு கண்ணும் இவ மேல தான். அவளுகளை சொல்லி என்ன தப்பு, இது பார்க்க ஆம்பள போல முடியை வெட்டிட்டு ரேசு அது இதுனு சுத்தினா வயசு புள்ளைங்க பார்க்க தானே செய்யும். போதும் சாமி இவளோட என்னால மாரடிக்க முடியல, சீக்கிரமே எவனையாவது பார்த்து கல்யாணம் பண்ணி அனுப்பினா தான் எனக்கு நிம்மதி.”
“அது தான் உன் பிரச்சனையா ஊர்ல மாப்பிள்ளைக்கா பஞ்சம்? அதெல்லாம் பார்த்து எடுத்து முடிச்சு விடலாம்” என்று ராணி அவரை சமாதானம் செய்தார்.
“எந்த ஆம்பளையும் ஒரு பொண்ண தான் கல்யாணம் கட்டிக்க ஆசை படுவான். இன்னொரு ஆம்பளைய இல்ல” என்று மகளின் உருவ வெளிப்பாட்டை நொந்து கொண்டே அன்னம்மா சொல்ல,
“நான் கட்டிகிறேன் க்கா. இதுக்கு போய் எதுக்கு ஊரை கூட்டி வயசு புள்ளைய நடுவுல நிற்க விட்டு ஒப்பாரி வச்சினு இருக்க?” என்று கேட்டுக் கொண்டே அங்கே வந்து சேர்ந்தான் மாரி.
“இன்னா டா தம்பி என்னை கட்டிப்ப தானே” என்று விஷ்ணு தோளில் மாரி கை போட,
அவன் கையை தட்டி விட்ட விஷ்ணுவோ,
“உன்ன கட்டிகிறதுக்கு நான் தண்டவாளத்துல கொண்டு தலையை வைக்கலாம்.”
“என்ன டா தம்பி உனக்கு வேலையெல்லாம் வாங்கி கொடுத்து இருக்கேன். இப்டி சொல்ற?” என்று மாரி அவள் மறுத்ததால் சோக கீதம் வாசிக்க,
அன்னம்மாவோ “அந்த டிரைவர் வேலையில அவளை சேர்த்து விட்ட மகாபிரபு நீ தானோ?” என்று கேட்டுக் கொண்டே கையில் இருந்த விளக்க மாற்றை சீராக தட்டிக் கொண்டவர்,
“பொம்பளை பிள்ளைய வண்டி ஓட்ட கொண்டு போய் விட்டிருக்க” என்று அவனுக்கும் நாலு அடியை போட்டார்.
“எக்கா இப்போலாம் பொம்பளை புள்ளைங்க ஏரோ பிளேனே ஓட்டுது, நம்ம விஷ்ணு தம்மா தூண்டு கார ஓட்டாதா” என்று கேட்டுக் கொண்டே அவரிடம் இருந்து வாரியலை பிடுங்கி போட்டான்.
“அம்மா… ஒரு மாசம் தான். அப்புறம் சத்தியமா வேற வேலைக்கு போய்டுறேன். நாளையில இருந்து வர்றேனு சொல்லிட்டு வந்துட்டேன். வாக்கு கொடுத்துட்டு அதை காப்பாத்தலைனா நல்லாவா இருக்கும். பிளீஸ் மா… இந்த ஒரு மாசம் மட்டும். என் செல்ல அம்மா ல்ல” என்று கெஞ்சி கொஞ்சியே அவள் செயலுக்கு தலையாட்ட வைத்து விட்டாள்.
அவரும், “என்னவோ பண்ணு போ” என்று பிடித்தம் இல்லை என்றாலும் மகளை அடக்கும் வழியறியாது அவள் போக்கிலே விட்டது தான் அவர் இப்போது வரை செய்துக் கொண்டிருக்கும் ஒரே தவறு.
இங்கே இரவு சரண் வீட்டிற்கு வந்த நேரம், நட்சத்திரா தோட்டத்தில் நின்று ரீல்ஸ்க்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள்.
காரை விட்டு இறங்கிய சரண் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, வீட்டை நோக்கி நடந்தவன், பிறகு என்ன நினைத்தானோ அவளை நோக்கி கால்களை திருப்பினான்.
வேலைக்கார பெண்மணி ஒருவர் அவளை வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, அம்மணி நெற்றியில் பெரிய பட்டையை போட்டுக் கொண்டு,
“சக்தியை நோக்க சரவண பவன” என்ற சாமி பாட்டுக்கு முக பாவனை செய்து கொண்டிருந்தாள்.
சரண் வந்து நின்றதும், வேலைக்கார பெண்மணி “அம்மா ஐயா” என்று போனை அவளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பிட,
“மீதி வீடியோவும் எடுத்து கொடுத்துட்டு போ” என்றவள் கையில் இருந்து போனை பிடிங்கினான் சரண்.
“என்ன கோலம் இது?” என்று கேட்டுக் கொண்டே அவள் நெற்றியில் இருந்த திருநீர் பட்டையை தன் கைக்குட்டையால் துடைக்க,
“இது தான் இப்போ ட்ரெண்ட் மாமா. இப்படி வீடியோ போட்டு தான் இப்போ ஒரு பொண்ணு நிறைய விஸ் வாங்கிட்டு இருக்கு” என்ற ட்ரேண்டிங் பைத்தியத்தை வைத்து கொண்டு அவனுக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.
“லைஃப் ஆஹ் கொஞ்சமாவது சீரியஸா பாரு நட்சு. போலீஸ் ஸ்டேஷன் போனத கூட வீடியோ எடுத்து போட்டு வச்சிருக்க” என்று அவன் நொந்து கொள்ள,
“அதுக்கு எவ்வளவு லைக்ஸ் கமெண்ட்ஸ் வந்துச்சு தெரியுமா மாமா?” என்றவள் பதிலில் தலையில் அடித்து கொண்டான் சரண்.
இவளை இப்படியே விட்டால் சரி வராது. அவளோடு சேர்த்து என்னையும் பைத்தியம் ஆக்கிவிடுவாள் என்று எண்ணியவன், அவளிடம் சில விஷயங்களுக்கு தெளிவு பெற வேண்டி இருக்கிறதே.
“இங்க வந்து உட்காரு கொஞ்சம் பேசணும்” என்று அவள் கையை பிடித்து அன்று உட்கார வைத்த பெஞ்சில் உட்கார வைக்க, எப்போதும் போல் சமத்து பிள்ளையாக உட்கார்ந்து கொண்டாள்.
“வீட்ல நமக்கு கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்றாங்க” அவளுக்கு தெரியுமா தெரியாதா? என்ற குழப்பத்தில் தான் கேட்டான்.
“தெரியும் மாமா” பட்டென்று பதில் வந்தது நட்சத்திராவிடம் இருந்து.
‘தெரியுமா? இவ்வளவு கூலா பதில் சொல்றா, அந்த பையன் மேல இருந்த காதல் எல்லாம் மறந்துட்டாளா?’ சந்தேகித்தபடியே,
“அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா” என்று சரண் கேட்க,
“தெரியலயே மாமா” என்று தான் பதில் அளித்தாள்.
“இல்ல எனக்கு புரியல, பிடிச்சிருக்கு பிடிக்கலை சொல்லு. அதென்ன தெரியல” என்று குழம்பி போய் சரண் கேட்க,
“சத்தியமா எனக்கு எந்த ஐடியாவும் இல்ல மாமா” என்றவள் கழுத்தில் கத்தியைவா வைக்க முடியும்,
கேட்கும் கேள்விகளை மாற்றி கேட்க முடிவு செய்தான்.
“உனக்கு வேற யாரையாவது பிடிக்குமா?” என்று சரண் கேட்க,
“ஹ்ம்ம் பிடிக்கும் மாமா” என்று முகம் மலர சொன்னவள்,
“ஆனா அவனுக்கு என்னை பிடிக்காது. அவன் மட்டும் ஓகே சொல்லிட்டான் அப்புறம் என் ரேன்ஜே வேற” என்று அவள் யாரை சொல்கிறாள் என்று அவனாலும் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் ஏற்று கொள்ள தானே மனம் தடுமாறுகிறது.
“சரி போ” என்று அவளை அனுப்பி வைத்தவன் மனதிலோ பெரும் குழப்பம்.
தன் காதலை தக்க வைத்துக் கொள்ள முயல்வதா?
இல்லை அவள் காதலுக்கு வழி விட்டு விலகுவதா? என்று.
ஆனால் அவள் பிடித்தம் காதலுக்காகவா? இல்லை கானலாக மறைந்து போகும் ரீல்ஸ் மோகத்திற்காகவா? என்பதை அறியாமல் போனான் பாடகன்.
Last edited: