அத்தியாயம் 32
உட்கொண்ட போதை மருந்தும் மதுபாணமும் உடலுக்குள் ஒன்று சேர்ந்து ஏதேதோ விபரீத மாற்றங்களை உண்டு செய்துகொண்டிருக்க தருணின் கம்பீர நடை சற்றே தளர்ந்திருந்தது. கண்கள் சொருக தொடங்க அவனின் சிந்தனைகளும் பூத உடலின் உணர்வுகளும் வேறொரு ராஜ போதையை நாடின. இரத்தம் சூடேற கடந்து சென்ற பெண்களின் மீது அவன் விரும்பாமலே அவனது விழிகள் அத்து மீற தொடங்கியிருந்தன.
கண்கள் காணும் பெண்களை எல்லாம் புசிக்க சொல்லி மூளைக்குள் சாத்தான் ஒன்று அமர்ந்து ஓதி கொண்டே இருந்தது. தலையை உலுக்கி, உலுக்கி தன்னை சமன் செய்ய முயன்றவாரே தனது அறையை நோக்கி நடந்தான். தளர்ந்திருந்த நடையில் வேகம் அதிகரித்திருந்தது. தன்னை சுற்றி பின்ன பட்டிருந்த வலையில் விழாமல் தப்பித்துவிடும் வேகம் அது.
தன்னால் யாருக்கும், எந்த பெண்ணுக்கும் அசம்பாவிதம் எதுவும் நடந்து விட கூடாதே என்கின்ற கவனமும் உடன் சேர நடையின் வேகமும் கூடிப்போயிற்று. தெளிவாக சிந்திக்க விடாமல் உள்ளிருந்த போதை வஸ்து சதி செய்தாலும் அவனது மனோதிடம் இன்னமும் அவனை காத்துக்கொண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
தருண் மிகவும் மென்மையானவன். இலகுவாக பழக கூடிய இனிமையானவன். ஆனால், மனதில் ஒன்றை நினைத்துவிட்டால் அதில் நின்று சாதிக்கும் பிடிவாதக்காரன் அவன். அந்த மனவலிமை தான் இப்போது வரை அவனுக்கு கவசமாக உதவி கொண்டிருந்தது.
ஒருவழியாக மின்தூக்கியில் ஏறி அவன் செல்ல வேண்டிய தளத்தின் எண்ணை அழுத்தியிருந்தான். அவனின் நல்ல நேரத்திற்கு மின்தூக்கியில் வேறு யாரும் இருக்கவில்லை. அதுவே அவனுக்கு கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியை கொடுக்க ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு மின்தூக்கி சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டான்.
இதே சமயம் இங்கே ஆகாஷின் பின்னோடு வந்திருந்தாள் மதுஷிகா.
காலம் தாமதிக்காமல் அவனை துரத்திக்கொண்டு வந்ததில் அவன் அறைக்குள் நுழைவதற்குள் அறை வாசலிலேயே அவனை பிடித்து நிறுத்தியிருந்தாள் பெண்ணவள்.
அறை கதவை திறக்க சென்ற நேரம் "ஆகாஷ்" என்று ஆக்ரோஷமாக கேட்ட மதுஷிகாவின் குரலில் அதிர்ந்து நின்றவனின் முன்னே வந்து நின்றிருந்தாள்.
அவன் முன்னே அழக்கூடாது என்று முடிவு செய்தவளின் கண்களில் நீர் கொஞ்சமும் இல்லை. அனல் கக்கும் ரௌத்திரம் மட்டுமே நிறைந்திருந்தது. அவனை அடித்து நொறுக்கி விடும் ஆத்திரமும் உள்ளே கொதித்துக்கொண்டிருந்தது.
ஒரு நொடி அவளை அதிர்ந்து பார்த்தவனின் சட்டையை கொத்தாக பற்றியவள் அவன் கன்னம் பழுக்கும் அளவிற்கு ஓங்கி அறைந்திருந்தாள்.
அவள் அறைந்ததில் அவன் முகம் வலது புறமாக திரும்பியிருக்க சட்டென மீண்டும் அவளை நோக்கி திரும்பியவன் "ஹேய்" என்றபடி அவளை அடிப்பதற்காக கையை ஓங்கியிருக்க ஓங்கிய அவன் கரத்தை அந்தரத்திலேயே பிடித்து நிறுத்தியிருந்தாள் மதுஷிகா.
"என் மேல கையை வச்ச, வச்ச கையை உடைச்சிடுவேன்" என்றபடி அவன் கையை உதறிவிட்டாள்.
"இப்ப உனக்கு என்னடி வேணும்?" என்று அவன் அவளை முறைத்து பார்த்த நேரம் அவன் அருகே இருந்த நேஹாவும் "யாரு டி நீ..." என்று ஆரம்பிக்க அவளை மதுஷிகா பார்த்த பார்வையில் "நீ...நீங்க" என்று மரியாதையற்ற ஒருமை விழிப்பு மரியாதையுடன் நிறைவு பெற்றிருந்தது.
இதழ்களில் ஒற்றை விரலை வைத்து "ஷ்ஷ்ஷ்... நான் பேசி முடியுற வரை சத்தம் வரக் கூடாது" என்று சொல்ல அந்த பெண்ணும் 'ம்ம்ம்' என்று அமைதியாக நின்றுகொண்டாள். மதுஷிகாவின் விழிகளில் கனன்ற கனலே அவளை அடக்கி வைக்க போதுமானதாக இருந்திருக்க வேண்டும்.
மீண்டும் ஆகாஷை பார்த்தவள் "எதுக்கு இப்படி பண்ணு?" என்று கேட்டாள்.
"உன்னை காதலிச்ச எவனா இருந்தாலும் இப்படி தான் பண்ணியிருப்பான்" என்று துரோகம் செய்துவிட்ட குற்ற உணர்வே இன்றி திமிராக வந்து விழுந்தது அவனது வார்த்தைகள்.
"நான் வீர் மாமா கூட ஷாப்பிங் போனதுக்காக இப்படி பண்ணிட்டேன்னு தயவு செஞ்சு சொல்லிடாத...உன்னோட இந்த கேவலமான வேலை அதுக்கு முன்ன இருந்து நடந்துட்டிருக்குன்னு தெரிஞ்சு தான் வந்திருக்கேன்" என்று அவள் சொல்ல,
"ஓ...தெரிஞ்சிருச்சா... ரொம்ப சந்தோஷம். நீ எவன் கூட வேணும்னாலும் சுத்தி தொலை எனக்கு அதெல்லாம் தேவையே இல்லாத ஆணி. ஆனால், எனக்கு கொடுக்க வேண்டியதை ஒழுங்கா கொடுத்திருந்தா நானும் ஒழுங்கா இருந்திருப்பேன்ல.
“இல்ல எனக்கு புரியல…” என்று அவனைக் கேள்வியாக பார்த்தாள் மதுஷிகா.
“உனக்கு மட்டும் புரிஞ்சிருந்தா இந்நேரம் இவளுக்கு பதிலா நீ இங்க இருந்திருப்ப” என்று நேஹாவை கண்களால் காட்டி நக்கலாக சிரித்தான் ஆகாஷ்.
“என்ன பேசுற ஆகாஷ்?” மதுஷிகாவின் வார்த்தைகள் அதட்டலாக வந்து விழுந்தன.
“ஏய், அவனவன் இன்னிக்கு லவ் சொல்லிட்டு நாளைக்கு ரூம் போட்டுட்டு போறான். ஆனால், நான் மட்டும் வருஷ கணக்கா லவ் பண்ணிட்டு ஒரு கிஸ்ஸுக்கு கூட நாய் மாதிரி கெஞ்ச வேண்டியதா இருக்கு. இதுல மேடம் என் கூட தனியா வெளிய வரத்துக்கு நூறு முறை யோசிப்பீங்க. ஆனால், அந்த வீர் கூட மணி கணக்கா ஊர் சுத்திட்டு வருவீங்க. நான் மட்டும் இத எல்லாத்தையும் பாத்துட்டு உன் மேல எனக்கு தெய்வீக காதல்னு சொல்லிட்டு தேவுடு காக்கணுமா?” என்று கொச்சையாக பேசினான்.
“ஆகாஷ் எல்லா கண்டிஷன்ஸும் சொல்லிட்டு தானே உன்ன லவ் பண்ணேன். நீயும் எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்ட தானே” அவள் குரலில் ஆதங்கம் தொனித்தலும் நலிந்தே ஒலித்தது.
மாத்திரை போட்டுக்கொண்டதில் குறைந்திருந்த காய்ச்சல் மெல்ல அதிகரிப்பது போல் உணர்ந்தாள் அவள். கூடவே தலைவலியும் பிடித்துக்கொள்ள ஒற்றை கரத்தால் நெற்றியை அவ்வப்போது நீவிக்கொண்டுதான் அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“ஆமா ஒத்துக்கிட்டேன் தான். நீயும் ஒரு பொண்ணாச்சே, காதலிச்ச பிறகு போக போக எல்லாம் மாறிடும்னு நினைச்சேன். அதனால ஒத்துக்கிட்டேன். ஆனால், நீ இப்படி ஒரு மரக்கட்டையா இருப்பேன்னு எனக்கென்ன தெரியும். அதெப்படி டி காதலிக்குறவன் பக்கத்துல வரும்போது கூட உனக்கெல்லாம் மூடே வர மாட்டேங்குது” என்று அவன் பேச்சின் தரம் குறைந்து கொண்டே போனது.
தலையை உலுக்கி உடலில் மிச்சமிருந்த சக்தி எல்லாம் திரட்டி “நீ பண்ண தப்பை மறைக்கிறதுக்கு பழியை தூக்கி என் மேல போட பார்க்காத ஆகாஷ். நீ என்னை காதலிச்சது எல்லாமே பொய். இந்த காதல் கத்தரிக்காயின்னு சொல்லி என் பின்னாடி சுத்தினது எல்லாம் என்னோட உடம்புக்காக மட்டும் தான் அப்படித்தானே?” என்று ஆக்ரோஷமாக கத்தினாள்.
வேறு தருணமாக இருந்திருந்தால் அவன் கன்னம் பழுக்கும் வண்ணம் அவனுக்கு அறைந்ததே போதுமென்று அங்கிருந்து அகன்றிருப்பாள். அந்த அருவருப்பு மிக்க ஜந்துவின் முன்னே நின்றிருக்க கூட யோசித்திருக்க மாட்டாள்.
ஆனால், உடல் கொதிக்கும் காய்ச்சலுடன் அவள் அருந்திய வோட்கவுமாக சேர்ந்து அவளின் நிதானத்தை இழக்க செய்திருந்தன. அதிலும் குடித்து பழக்கமில்லாமல் எடுத்த எடுப்பிலேயே மடக் மடக்கென்று மதுவை உள்ளே இறக்கியதன் விளைவாக உண்டான போதை அவளின் புத்தியை மெல்ல மெல்ல தன் வசப்படுத்திக் கொண்டிருந்தது.
“அதுல என்ன சந்தேகம் உனக்கு. நீ ஒரு மொக்க பீசா இருந்திருந்தா நீ போட்ட கண்டிஷனுக்கும் பண்ணின பில்டப்புக்கும் சரிதான் போடின்னு எப்போவோ கழட்டி விட்டிருப்பேன். நீ வேற செம பீசா இருக்கியா கொஞ்சம் லேட்டானாலும் பரவால்ல, மொத்தமா அனுபவிக்க நினைச்சு தான் காத்திருந்தேன்.ஆனால், இப்போ நீ பொண்ணுதானானே எனக்கு சந்தேகமா இருக்கு” என்றான்.
அவன் அப்படி சொல்லியதும் அருகே இருந்த நேஹாவும் கூட அவளை பார்த்து கேவலமாக சிரித்து வைக்க அது மதுஷிகாவின் ஆத்திரத்தை இன்னமும் கிளறியிருந்தது. அவமானமாக உணர்ந்தாள்.
தன்னவன், தன் சுக துக்கம், மான அவமானங்களில் உடனிருந்து பங்குக்கொள்ள போகிறவன் என்றெல்லாம் அவனை நினைத்திருந்தாளே அது எல்லாம் இந்த நொடி பொய்த்து போயிருந்தது. அவன் அல்லவா அவளை அவமானப்படுத்தி கொண்டு நிற்கின்றான். ஏற்கனவே எரிந்துக்கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல் நேஹாவும் சிரித்து வைக்க அவளுக்கு இன்னமும் ஆத்திரம் பீறிட்டு கிளம்பியது.
அதே சமயம் தருணை சுமந்து வந்த மின்தூக்கியும் அவர்கள் இருந்த தளத்தை அடைந்திருக்க மெல்ல வெளியேறிக்கொண்டான். அவனது அறையை நோக்கி நடந்தவனின் விழிகள் அவர்கள் மூவரின் மீது ஒரு நொடி படிந்து மீண்டன. நொடிக்கு அதிகமாக அவனது பார்வை அங்கே நிலைக்கவில்லை. அவனது அறைக்குள் சென்று அடைந்துகொள்வதையே குறிக்கோளாக கொண்டவன் அவர்களை சட்டை செய்யாமல் நடந்தான்.
ஆகாஷின் அறைக்கு அடுத்த அறை தான் அவனுடையது. இதுவரை வரும் வழிகளில் இருந்த கண்டங்களை எல்லாம் வெற்றிகரமாக கடந்து வந்தவன் அறைக்குள் நுழைந்துவிட்டான் என்றால் தப்பிவிடுவான். மற்றவைகளை விடிந்து பார்த்துக்கொள்ளலாம் என்று தான் அவனுடைய தற்போதைய மனநிலை இருக்க அவனது நடையில் வேகம் அதிகரித்திருந்தது.
இங்கே ஆகாஷுடைய அநாகரிகமான பேச்சில் கடுப்பான மதுஷிகாவும் அவனது ஷர்ட்டை எட்டிப் பிடித்தவள் “இப்படி பேச உனக்கே கேவலமா இல்ல?”
என்று சீறினாள்.
"உடம்புல எந்த உணர்ச்சியும் இல்லாமல் காதலிக்குறேன்னு என்னை ஏமாத்திட்டு திரிஞ்ச உனக்கே வெட்கமில்லாதப்போ எனக்கு எதுக்குடி இருக்கணும். என் ஆசையை தீர்த்து வைக்க கூட துப்பில்லாத பொண்ணு நீ, உனக்கெல்லாம் லவ் ஒன்னு தான் கேடு. முதல்ல நீ பொண்ணுதானேன்னு டாக்டர் கிட்ட போயி கன்ஃபர்ம் பண்ணிக்கோ. டாக்டர் கிட்ட போக கூச்சமா இருந்தா இதோ இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல ரூமுக்குள்ள வா நானே வேணும்னாலும் கன்ஃபர்ம் பண்ணிடுறேன்" என்று அசிங்கமாக பேசினான்.
சரியாக தருணும் அதே நேரம் அவர்களை கடந்து சென்று அவனின் அறையை திறப்பு அட்டையை வைத்து திறந்துகொண்டிருந்தான்.
"ச்சீ" என்றபடி ஆகாஷின் சட்டையை விட்டவளுக்கு யாரோ ஒருவன் அவர்களை சில நொடிகளுக்கு முன் கடந்து சென்றது நினைவுக்கு வர சட்டென்று நேஹாவின் கையில் வைத்திருந்த மது பாட்டிலை பறித்தெடுத்தவள் அதில் கொஞ்சத்தை வாய்க்குள் சரித்துவிட்டு மீதியை பாட்டிலோடு கீழே போட்டிருந்தாள்.
ஆகாஷ் அவளை புருவம் இடுங்க கேள்வியாக பார்க்க அவனை எரித்துவிடுவது போல பார்த்துக்கொண்டே பின்னால் திரும்பி அடுத்த அறைக்குள் நுழைய சென்ற தருணை இரண்டே எட்டுக்களில் அடைந்தவள் அவன் ஷர்ட்டை பற்றி இழுத்து அவன் இதழ்களில் இதழ் பதித்திருந்தாள். ஆழ்ந்த முத்தமெல்லாம் இல்லை. அழுத்தமாக அவன் இதழ் தீண்டி விலகியிருந்தாள் அவ்வளவு தான்.
"பொண்ணு தான், போதுமா" என்று ஆகாஷை அவள் முறைத்து பார்க்க இன்றாவது அவளை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற வெறியில் கடைசி ஆயுதமாக வேண்டுமென்றே அவளது சினத்தை தூண்டி விட்டு அவளை தன் வசமாக்கிக்கொள்ள நினைத்து பேசிக்கொண்டிருந்த ஆகாஷிற்கு அவனது திட்டம் படு தோல்வி கண்டத்தில் சப்பென்றாகிவிட்டது.
முகம் கன்ற "ச்சே பி****" என்று அவளை ஆங்கில கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டே "வா போகலாம்" என்று நேஹாவின் கரத்தை பற்றி தர தரவென்று அழைத்துக்கொண்டு வெளியில் சென்றான்.
"பேபி...ரூம் அங்கிருக்கு" என்று நேஹா ஆரம்பிக்க "ரொம்ப முக்கியம். என் மூடையே கெடுத்துட்டா...பேசாம வா" என்று நேஹாவிடம் கத்திகொண்டே அவன் சென்றது மதுஷிகாவின் செவிகளிலும் விழுந்தது. ஆகாஷ் அங்கிருந்து செல்லும் வரை பார்த்திருந்தவள் கண்களை அழுந்த மூடி திறந்த படி அங்கிருந்து நகர முயல அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.
அவள் இடையை சுற்றி பிடித்திருந்தன அவளின் முன்னால் நின்றிருந்த ஆடவனின் கரங்கள். ஆம்,அவள் இழுத்த இழுப்பில் தடுமாறிய தருணின் கரங்கள் அவளது இடையை அழுந்த பற்றிக்கொண்டன. அவள் முத்தமிட்டு விலகிவிட்ட பிறகும் அவன் விலகாமல் நின்றிருந்தான்.
போதை அவன் சித்தத்தை கலங்கடித்திருக்க உடலில் அதிகப்படி உணர்ச்சிமிக்க பாகங்களில் ஒன்றான உதடுகளில் அவள் முத்தமிட்டிருந்தது டோபமைன், செரோடோனின்,ஆக்ஸிடோசின், என்டோர்பின்ஸ் என்று 'ஃபீல்-குட் ஹார்மோன்ஸ்' என்று அழைக்கப்படும் ஹார்மோன்களின் தொகுப்பை அவன் இரத்தத்தில் இன்னமும் அதிகப்படியாக சுரக்க செய்து அவன் உணர்வுகளை தூண்டி விட்டிருந்தன.
அதிலும் அவள் மேனியில் பரவிக்கிடந்த வாசனை அவனுக்கு வைஷாலியை நினைவுபடுத்தியது. அக்காவும் தங்கையும் ஒரே வகையான வாசனை திரவியத்தை பயன்படுத்த கூடிய பழக்கமுள்ளவர்கள் என்று அவன் எங்கனம் அறிவான். அதோடு வைஷாலியை போன்றே அமைந்திருக்க கூடிய அவள் தோற்றமும் அவனது மனவுறுதியை மொத்தமாக உடைத்திருந்தது.
அவன் கரங்களை விலக்க முயன்றபடி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் பெண்ணவள். உயிர்போகும் தலைவலியும் தலைக்கேறும் போதையுமாக அவனை பார்த்தாள். கண்களை சுருக்கி அவன் முகத்தை உற்று பார்த்தவளின் இதழ்கள் தாமாக "டாம்" என்று முணுமுணுத்துக்கொண்டன.
அவன் யாரென்றும் தெரியாமல் அவன் முகத்தை கூட பாராமல் தான் அவனுக்கு முத்தமிட்டிருந்தாள். ஆகாஷின் மீதிருந்த கோபத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் அந்த விபரீதத்தை செய்திருந்தாள் பெண்ணவள்.
இப்போது நிமிர்ந்து பார்த்ததும் தான் அவன் அடையாளத்தையே கண்டுகொண்டாள் அவள்.
அவன் கண்களை அழுந்த மூடி திறந்து தன்னை நிதான படுத்த முயன்று கொண்டே அவளை ஆழ்ந்து பார்த்தான். ஆனால், அவனின் பிடி தளரவே இல்லை.
இன்னும் இறுகியது. அவளை தன்னுடன் சேர்த்து நெருக்கி கொண்டான்.
விலக சொல்லி மனம் சொல்கின்றது. ஆனால், மூளைக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் ரசாய னமாற்றங்கள் மனதை வென்றுகொண்டிருக்க "சாரி, தெரியாம..." என்று ஏதோ சொல்வதற்காக விரிந்த அவள் செவ்விதழ்களை பார்த்துக்கொண்டே ஒற்றை கரத்தால் அவள் பின்னங்கழுத்தை பற்றியவன் தன்னை நோக்கி இழுத்து அவள் அதரங்களை ஆக்ரோஷமாக சிறை செய்திருந்தான்.