Twist Writers போட்டி கதைகள்... "இனி என்னென்ன நேர்ந்திடுமோ
தொய்வில்லாமல் விறுவிறுப்பாக சென்றது கதை.. ??
சத்யதேவன்... கோபம் திமிர் கர்வம் நிறைந்த வக்கீல்... தன் அப்பாவின் பெயரை இவனுக்கு வைத்துவிட்டு திண்டாடுகிறார் இவனின் அப்பா ராஜன் ?? சத்தியம் என்ற பெயருக்கு நேர் எதிராக அசத்தியத்திற்கு துணை போகிறான்... தாய் தந்தை தம்பி என யார் பேச்சையும் மதிக்காமல்... யாரிடம் வீழ்கிறது இவனின் கருவம் இவனையும் மாற்ற வருகிறாள் அவனின் தியா ?
சந்தியா... பயந்த சுபாவம் கொண்ட இவர் சத்யனின் ஜூனியராக இருக்கும் இவள் அவனிடம் மாட்டிக் கொண்டு படும் பாடு பாவம்... அஸ்வின் சத்யனின் தம்பியான இவன் அடிக்கும் லூட்டிகளும் தன் காதலுக்காக இவன் படும்பாடும் தன் அம்மாவுடன் இவனின் கெமிஸ்ட்ரியும் அருமையோ அருமை ???? பானுமதி... நியாயவாதி..அருமையான அம்மா மிகச்சிறந்த மாமியார் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் ???
விஸ்வதேவன்.... கேடுகெட்ட பொறுக்கி போலீஸ் ???
சந்தியாவும் அவளின் தந்தை விஸ்வநாதனும் மனமுடைந்து அதீத துயரத்தில் இருப்பதற்கான காரணம் என்ன... அநீதி செய்த தன் உடன் பிறந்தவனை காப்பாற்ற முயன்றானா அல்லது தன்னவளின் துயர் தீர்க்க அவள் கை கோர்த்தானா சத்யன் என்பது கதையில்... சுமித்ரா... தன் கணவனின் மேல் அதிக காதல் கொண்டு அவனின் அலட்சியங்களை தாங்கும் பெண் அவளால் அவனின் துரோகத்தை தாங்க முடியவில்லை... விமல் கண்ணியமான நியாயத்திற்கு துணைபோகும் வக்கீல்.. சத்யனின் நண்பன்... சுமித்ரா விமலுடன் தன் மனம் மாறி விரைவில் இணைய வேண்டுமென நாமும் எதிர்பார்ப்போம் ?
மனதை கனக்கச் செய்த ஒரு அருமையான கதை???
நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் ????
Good luck ???