அத்தியாயம் 24
“ஏய் உனக்கு நடக்கவே தெரியாதாடி! கண்ணை முன்னாடி வச்சு நடக்கணும்.. நீதான் ஆணவம் பிடிச்ச கழுதையா இருக்கியேடி” என அவளிடம் வம்பு இழுத்தான். மணி ஒன்பதாகியிருக்க ஹாஸ்பிட்டலில் அந்த இடத்தில் அதிகம் கூட்டமும் இல்லாமல் இருந்தது.
அவளுக்கோ தன்னை கழுதை என்றதும் மூக்குக்கு மேல் கோபம் வந்துவிட்டது. “யா.யாரு ஆணவம் பிடிச்ச கழுதை நானா? என்னை எப்படி கழுதைனு சொல்றீங்க!” என்று குரலை உயர்த்தினாள அவனிடம்
“இப்போ மணி என்ன ஆச்சு!” என்றான் அவளை முறைத்தபடியே.
“மணி 9.00க்கு மேல ஆச்சு அதுக்கு இப்ப என்ன”? என்றாள் முகத்தை சுளித்தபடியே.
"வீட்டுக்கு போக லேட் ஆச்சுன்னா... வீட்டுக்கு போன் பண்ணி சொல்லணும்னு உனக்கு தெரியாதா டி... யார் போன் நம்பரும் என்கிட்ட இல்லைனு பொய் மட்டும் சொல்லாதே! உங்கப்பன் உன்கிட்ட எங்க வீட்டு ஆளுங்க நம்பர் கொடுத்து வச்சிருப்பான்... நாம எதுக்கு போன் பண்ணனும் திமிரா இருந்திருப்ப.. இதுதான் உனக்கு பர்ஸ் அண்ட் லாஸ்ட்.. இனி எப்போ வீட்டுக்கு வர தாமதம் ஆனாலும் எனக்கு போன் போட்டு சொல்லணும்... நான் சொல்லமாட்டேன் என்னோட இஷ்டம் படிதான் இருப்பேன் இருந்தா... அப்படியே உன் அப்பன் வீட்டுக்கு ஓடிப்போயிடு” என்றான் சீற்றமாக சட்டையை முழங்கை வரை ஏத்திவிட்டுக் கொண்டே.
"மூணு பிரசவ கேஸ் இரண்டு நார்மல்... ஒரு காம்ப்ளிகேட் டெலிவரி... சோ எனக்கு போன் பண்ண நேரமே இல்லைங்க!" என்றாள் சிடுசிடுவென.
“அப்படியா உன் போன் கொடு நான் செக் பண்ணுறேன்” என்று போனை பிடுங்க
அவளோ “என்ன பண்ணுறீங்க இது நான் வேலை செய்யுற ஹாஸ்பிட்டல் உங்க வீடு கிடையாது அதிகாரம் பண்ண வழிய விடுங்க” என்று அவன் மார்பில் கையை வைத்தாள்.
“ஏய் யாரு மேலடி கையை வைக்குற கையை எடுடி” என்று நாக்கை கடித்துக்கொண்டு அவளை அடிக்க கையை ஓங்கி விட்டான் துரைசிங்கம்.
அங்கே வந்த வீரய்ய னோ “சிங்கம் கையை கீழே போடு பொது இடத்துல வந்து பொண்டாட்டி அடிக்க கையை ஓங்குற என்ன பழக்கம்” என்ற அவர் அதட்டலில் சிங்கம் கையை கீழே போட்டு “வீட்டுக்கு வாடி” என்று ரதியை பார்த்து தலையை அசைத்தான்.
வீரய்யனை பார்த்ததும் ரதிக்கு மூச்சே வந்தது.. ‘அப்பா பெரிசு வந்து நம்மளை காப்பாத்திடுச்சு பெரிய சண்டியர்னு நினைப்பு ஆஊனா அடிக்கறதுக்கு கையை ஓங்குறான்” என்று சிங்கத்தை பார்த்து இதழை சுளித்தாள்.
நாச்சியும், வீரய்யனும் அலர்விழியை பார்க்க ஐ.சி.யுவிற்குள் சென்றிருந்த நேரம் அலர்விழிக்கு மருந்துகள் வாங்கி வரச் மருந்துசீட்டை நர்ஸ் கொண்டு வந்து கண்ணனிடம் கொடுக்க “நான் வாங்கிட்டு வரேன் மாமா” என்று மருந்துசீட்டை வாங்கிக்கொண்டு வந்தவன் ரதிதேவியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான் துரைசிங்கம்.
நாச்சியோ “ஏத்தா அவன்தான் கோவக்காரன்னு தெரியுதுல கொஞ்சம் நீயும் பொறுத்து பேசமாட்டியா படிச்ச புள்ளதானே” என்றார் கனிவாகத்தான்.
ரதியோ “நான் என்ன உங்க பேரனுக்கு அடிமையா! அவர் என்ன பேசினாலும் வாயை மூடிக்கிட்டு போறதுக்கு... வந்துட்டாங்க அட்வைஸ் பண்ண... வயசான காலத்துல வீட்டுக்குள்ள அடங்கி கிடக்க தெரியாதா... இப்படி ஜோடி சுத்தணுமா?" என்று முகத்தில் அடித்தாற் போல பேசியவளின் கன்னம் சிவந்து விட்டது சிங்கம் அடித்த அடியில்.
வீரய்யனுக்கும் நாச்சிக்கும் ரதி பேசியதும் மனதுக்கு பெரும் வருத்தமாய் இருந்தாலும் ரதியை தன்பக்கம் இழுத்துக் கொண்டு “சிங்கம் என்ன நாலு பேர் வந்து போற இடம்னு கூட பார்க்காம அடிச்சுபுட்ட... இந்த நேரம் யாரும் இல்ல... இங்க வேலை செய்யுற ஆளுங்க இப்ப நடக்கறதை பார்த்திருந்தா பேத்தியை யாரும் மதிக்கமாட்டாங்கல்ல ராசா!” என்று சிங்கத்தை தான் கண்டித்தார் நாச்சி.
ஆனால் ரதியோ “விடுங்க என்ன சும்மா குடும்பமே பாச நாடகம் நடத்திக்கிட்டு” எனறு திமிராய் பேசி நாச்சியின் அணைப்பிலிருந்து விலகி அங்கிருந்து வேகமாய் சென்றுவிட்டாள்.
“பார்த்தீங்களா அப்பத்தா இவளுக்கு போய் என்கிட்ட பரிஞ்சு பேசுறீங்களே! இவளை இன்னும் நாலு அடி போட்டிருக்கணும். அவ அப்பனை போல கொழுப்பு உடம்பு முழுக்க இருக்கு... சீக்கிரம் கரைச்சு விடறேன்” என்று பல்லைக்கடித்தவனோ “தாத்தா அவ பேசினது தப்புதான் நீங்க ரெண்டு பேரும் மனசுல எதையும் வச்சிக்காதீங்க” என்றான் இருவரையும் அணைத்துக்கொண்டு
“நீர் அடிச்சு நீர் விலகிடாத சிங்கம்... யாரு அவ என்ற பேத்திதானே சிறுபிள்ளைத்தனமா பேசிட்டு போறா நாங்க பெரிசா எடுத்துக்கல நீ மனசு உடையாதப்பா! மருந்து வாங்கிட்டு வா கொடுத்துட்டு கிளம்பலாம்” என்ற இரு பெரியவர்களுக்கும் முகமே பொலிவு இழந்து விட்டது.
மருந்துகளை வாங்கி கொடுத்துவிட்டு “மாமா அலர்விழிக்கு ஏதும் தேவைனா போன் போடுங்க நான் அடுத்த நிமிசம் வந்துடறேன். இப்போ ஐ.சியுக்குள்ள பார்க்க விட்டாங்களா!” என்றான் அக்கறையாக.
“ம்ம் இப்போ பார்த்துட்டு வரோம்பா நல்லாயிருக்கா... நாளைக்கு ஜுஸ் கொடுக்க சொல்லியிருக்காங்க” என்றார் கண்ணன்.
“சரிங்க மாமா காலையில ஜுஸ் போட்டு எடுத்துட்டு வந்துடறேன்” என்றவனோ அன்பரசியை பார்க்க அவரோ முகத்தை திருப்பிக்கொண்டார்.
கண்ணனோ “விடுப்பா சரியாகிடுவாப்பா!” என்று சிங்கத்தின் தோளை தட்டினார்.
வீரய்யனையும், நாச்சியையும் அழைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வந்தான் அப்போதும் ஹாஸ்பிட்டல் வாசலிலேயே நின்றிருந்தாள் கையில் கோட்டுடன்.
சிங்கமோ ரதி நிற்பதை பார்த்துவிட்டு பார்க்காதது போல காரில் ஏறிவிட்டான்.
வீரய்யனோ அவள் தன்னை மதிக்காது பேசிய போதும் “கண்ணு வா நம்ம காருல போயிடலாம் இருட்டுக்குள்ள ஏன் நிற்கிற” என்று பேத்தியின் கையை பிடிக்க அவளோ “கேப் புக் பண்ணியிருக்கேன் நீங்க கிளம்புங்க” என முகத்தில் வெறுப்பை காட்டி பேசினாள் ரதி.
நாச்சிக்கும் மனது கேட்கவில்லை. “கண்ணு மணி பத்து ஆகப்போகுது அடம் பண்ணாம வாயி தாயி போகலாம்” என்றார்.
அவள் தங்களை எடுத்தெறிந்து பேசினால் என்ன? ஒரு துளி கூட கவலைப் படவில்லை நாச்சி. மகள் வயிற்று பேத்தியை தனியே விட்டு வர மனமில்லை நாச்சிக்கு. நாச்சி யாரிடமும் இவ்வளவு இறங்கிப்போய் பேசியதில்லை.
அவளே வரலைனு சொல்றா இவங்க போய் வெத்தலை பாக்கு வச்சு அழைச்சிக்கிட்டு இருக்காங்க என்று கோபப்பட்ட துரைசிங்கமோ காரை விட்டு வேகமாய் இறங்கியவன் “அப்பத்தா கார்ல வந்து ஏறுங்க... இத்தனை நாளாய் தனியா வீட்டுக்கு போனவளுக்கு இப்பவும் தனியா வரத்தெரியும்... தாத்தா வாங்க அவ கிட்ட போய் கெஞ்சிக்கிட்டு” என்று இருவரையும் கையை பிடித்து வந்து காரில் ஏறிவிட்டு ரதியின் பக்கம் சென்றவனோ “சரியான அகம்பாவம் பிடிச்ச கழுதையா இருக்க அடக்குறேன்டி” என்று மீசையை முறுக்கி காரில் ஏறியவனோ அவளை தாண்டி காரை வேகமாக ஓட்டினான் துரைசிங்கம்.
ரதியின் நேரமோ என்னவோ அவள் புக் செய்த கேப் இடையில் பழுதடைந்து விட்டது “வேற வண்டி அனுப்பறோம்” என்று டிரைவர் போன் செய்தார் ரதிக்கு.
கௌதம் சாப்பிட வந்தவன் ரதி நிற்பதை பார்த்து “ஏய் ரதி இந்த நேரம் இங்க நிற்குற பகல் டியூட்டி தானே?" என்று அவளது தோளை தொட்டான்.
“ஏய் கௌதம் நீ ட்யூட்டியில ஜாயின் பண்ணிட்டேன்னு காலையில தான் தெரிஞ்சுச்சு...எனக்கு இன்னிக்கு காம்ப்ளீகேட் டெலிவரி ஒன்னு உன்னை பார்க்க வரமுடியலைடா சாரி” என்றாள் கண்ணைச்சுருக்கி.
ரதியின் கழுத்திலிருந்த மஞ்சள் கயிறை பார்த்தவன் “என்னடி உங்க வீட்டுக்காரரு இவ்ளோ பெரிய தாலிக்கயிறு கட்டியிருக்காரு. தேர் வடக்கயிறு போல" என்று பக்கென்று சிரித்துவிட்டான்.
“டேய் நானே கடுப்புல இருக்கேன் நீ வேற என்னை கடுப்பேத்தாத! எல்லாம் அப்பா சொன்னதாலதான் எனக்கு பிடிக்காத ஒருத்தனை கல்யாணம் பண்ணியிருக்கேன்” என்றாள் முகத்தை அஷ்டகோணலாக்கி.
“நீதானே ஜுஸ்ல ட்ரக் கலந்து கொடுத்திருக்க தூரிகாவுக்கு! நீ டாக்டர் தானே டி இப்படியா பண்ணுவ” என்று அவன் நண்பியிடம் கோபப்பட்டான்.
“ஓ அண்ணா எல்லாம் சொல்லிட்டாரா! அண்ணாவோட லவ்வுக்கும், பேமிலி மறுபடியும் ஒண்ணுசேரட்டும்னு நல்லெண்ணத்துல பண்ணினேன்பா! ஆனா எனக்கு கல்யாணம் ஆகும்னு சத்தியமா நினைக்கல... பிடிக்காத வாழ்க்கையா இருந்தாலும் என் அம்மாவோட வீட்ல இருக்கறது எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா அந்த வீட்ல இருக்கவங்க ஓவர் பாசம் காட்டுறாங்க என் உடம்புக்கு ஒத்துக்காது... நான் விலகித்தான் நிற்பேன்... எங்க அப்பாவை மதிக்காத குடும்பத்துக்கு நான் மட்டும் மதிப்பு கொடுக்கணுமாடா” என்றாள் கோபப்பட்டு.
“ஏய் உன் மாமியார் வீட்டு ஆளுங்களை பார்த்தா ரொம்ப நல்லவங்களா தெரியுறாங்கப்பா... கிடைச்ச வாழ்க்கையை வீணடிக்காம வாழப்பாருடி... ஒரு பிரண்டா சொல்லுறேன்” என்றான் கௌதம் அக்கறையுடன்.
“காதுல ரத்தம் வருதுடா நீ பேசறது! எனக்கு எப்போ அந்த வீட்ல இருக்க பிடிக்கலையோ அப்ப கிளம்பி அப்பா போய்ட்டே இருப்பேன். உன் அட்வைஸ் மழையை பொழியாதேப்பா இப்போ எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். என்னை வீட்ல ட்ராப் பண்ண முடியுமா! ரொம்ப டயர்ட்டா இருக்கு” என்றாள் ரதி சோர்வான குரலில்.
“ம்ம் கொண்டு வந்து விடறேன்டி நீ என்னோட பெஸ்ட் பிரண்டாச்சே! இரு கார் எடுத்துட்டு வரேன்” என்று பார்க்கிலிருந்த காரை எடுத்து வந்ததும் அவளும் முன் கதவை திறந்து ஏறிக்கொண்டாள்
ஐய்யனாரோ பாலமுருகனுக்கு போன் செய்திருந்தார். அவரது நெருங்கிய உறவில் இறப்பு நேர்ந்திருக்க சென்னைக்குச் சென்றிருந்தனர்.
“வணக்கம்ங்க முதலில் என்னை மன்னிக்கனும்” என பஞ்சாயத்தில் நடந்தது ஒன்றுவிடாமல் கூறி மீண்டும் மன்னிப்பு கேட்டார் ஐய்யனார்.
பாலமுருகனோ ஒருநிமிசம் பேசாமல் இருந்தவர் “இதுதான் நடக்கணும்னு இருக்கு போலங்க... உங்க வீட்டு சம்மந்தம் எங்களுக்கு கிடைக்கலனு வருத்தம்தான்... நீங்க மனசு சங்கடப்படதேவையில்லை... உங்க பொண்ணுக்கு என்னோட ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்” என சிறு கோபம் கூட காட்டாமல் போனில் பேசினார்.
“ரொம்ப நன்றிங்க என் பொண்ணை நல்லாயிருக்கணும்னு ஆசிர்வாதம் செய்தீங்கல்ல... உங்க மனசு போல நீங்க நல்லாயிருக்கணும்” என்றார் ஐய்யனார் மனச்சுமையை இறங்கி வைத்த நிம்மதியுடன்.
“நன்றியெல்லாம் வேண்டாம் ஐய்யனார்... உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது போன் பேசுங்க... போனை வைக்குறேன்” என்று போனை வைத்துவிட்டார் பாலமுருகன். இவரை போல சில மனிதர்கள் இன்னும் நல்லவர்களாக உலகில் வாழ்கிறார்கள்.
கோமதியோ “என்னங்க மணி பத்தாச்சு மருமகளை இன்னும் காணலையே! ஒருவேளை கோதை வீட்டுக்கு போயிருக்குமோ!” என்றார் கவலையுடன்.
“நம்ம மருமக டாக்டர் உத்தியோகம் பார்க்கறவ அதுவும் பிரசவ டாக்டர் வேற டெலிவரிக்கு வந்திருந்தா நேரம் காலம் பார்க்க முடியாது! கோமதி! சிங்கம் வரட்டும் போய் கூட்டிட்டு வரச் சொல்லுறேன்! நம்ம வீட்டுக்குள்ள ஒரு உயிரை உலகத்துக்கு கொண்டு வர பொண்ணு மருமகளா வந்திருக்கா! ஏதோ மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு கோமு” என்றார் புன்சிரிப்புடன்.
“நானும் மருமககிட்ட போன் நம்பர் வாங்கி வைக்குறேன்ங்க. நேரம் ஆச்சுனா போன் பண்ணி கேட்டுக்கலாம்ல!” என்றார் சிறு புன்னகையுடன்.
சிங்கத்தின் கார் சத்தம் கேட்டதும் சிங்கம் மருமகளையும் ஹாஸ்பிட்டலயிருந்து கூட்டிட்டு வந்திருப்பானோ என்று கோமதி வாசலை எட்டிப்பார்த்தார்.
வீரய்யனும், நாச்சியும் காரை விட்டு இறங்க மருமகளை காணோமோ என்று புருவம் இடுக்கியவரோ நாச்சி வீட்டுக்குள் வந்ததும் கோமதி “மருமகளை அழைச்சிட்டு வரலையாங்க அத்தை” என்றதும் அவரோ பெரும்மூச்சு விட்டு பேச ஆரம்பிக்க கௌதமின் கார் வீட்டுக்குள் நுழைந்தது.
சிங்கம் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவன் திரும்பி பார்த்தான்.
காரிலிருந்து இறங்கிய ரதியோ “பைடா மார்னிங் பார்க்கலாம்” என்று கோட்டை கையில் மாட்டிய படியே துரைசிங்கத்தை ஒரு பார்வை பார்த்துச் செல்ல முற்படுகையில்
கௌதமோ இவ பண்றது சரியில்லையே என்று தலையை ஆட்டிக்கொண்டான்.
“ஏய் நில்லுடி” என்று சிங்கத்தின் அழுத்தமான குரலில் ஆடிப்போனது கௌதம் மட்டுமல்ல ரதி தேவியும்தான். தன் நண்பன் முன்னால தன்னை அதிகாரம் செய்ததை அவளால் தாங்கமுடியவில்லை.
பெரியவர்களுக்கு மறுபடியும் அடிச்சிடுவானோ என்று பக்கென்று இருந்தது.
ரதியோ “எ.என்ன” என்று பார்வை பார்த்தாள்.
“வீடு வரை வந்துருக்கறவங்களை வாசல்ல பை சொல்லிட்டு வரதுதான் அழகா” என்றான் அதிகாரம் செய்யாமல் அதட்டலோடு.
கௌதமிற்கோ ஒரே நாளில் சிங்கத்தை பிடித்துவிட்டது.
“அண்ணா! எனக்கு ஹாஸ்பிட்டல நைட் ரவுண்ட்ஸ் இருக்கு... உங்க வீட்டுப் பொண்ணு அலர்விழியும் ஹாஸ்பிட்டல இருக்காங்கல்ல எனக்கு டைம் ஆச்சு! இன்னொரு நாள் வந்து சாப்பிடுறேன்” என்று புன்னகையுடன் காரில் ஏறப்போனவனின் கையை பிடித்துக்கொண்டான் துரைசிங்கம்.
“அது எப்படி எங்க வீட்டுப் பொண்ணுக்கு வைத்தியம் பார்த்தவரை வாசலோடு அனுப்பமாட்டோம். ஒரு காபியாவது குடிச்சிட்டு போகலாம்” என்று அவனது கையை பிடித்து வீட்டுக்குள் கூட்டிவந்துவிட்டான்.
“சாரிடா அதான் வீட்டு முக்கிய புள்ளியே உன்னை வரச்சொல்லியாச்சு! நான் குளிச்சிட்டு வரேன்” என்று அவளது அறைக்குச் சென்றுவிட்டாள் ரதி.
சிங்கமோ “ம்மா இஞ்சி டீ கொண்டு வாங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கோமதி முகத்தில் மென் சிரிப்புடன் டீயை கொண்டு வந்து கொடுத்தார்.
துரைசிங்கம், ஐய்யனார், வீரய்யன், நாச்சி, கோமதி தன்னை சுற்றி பாசத்துடன் விருந்தோம்பல் செய்பவர்களை ஆச்சரியத்தோடு பார்த்தவாறே டீயை குடித்தவனோ “டீ சூப்பர் மா! இனிமே நான் எப்போ வந்தாலும் எனக்கு உங்க கையால இஞ்சி டீ வேணும்" என்றான் புன்முறுவலுடன்.
“அதுக்கென்னப்பா டீ தானே எந்த நேரம் வந்தாலும் போட்டுத்தரேன்” என்றார் சிரிப்புடன் கோமதி.
டீயை குடித்தவன் ரதியின் அறையை பார்க்க அவள் இன்னும் வெளியே வரவில்லை.
“சரிங்க அண்ணா நான் கிளம்புறேன் டைம் ஆச்சு! ரதிகிட்ட நான் கிளம்பிட்டேன்னு சொல்லிடுங்க... இன்னொரு நாள் பார்க்கலாம்” என்று சிங்கத்திற்கு கையை கொடுத்து கிளம்பினான்.
பெரியவர்கள் வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தனர் கௌதமை.
நாச்சியோ “நல்ல பையனா இருக்கான்ல சிங்கம்” என்று தங்களது மனக்கசப்புகளை மீறி புன்னகைத்தார்.
“ஆமாங்க அப்பத்தா இப்படியொரு நல்ல பையன் என் பொண்டாட்டிக்கு எப்படி நண்பனா இருக்காருனு அதிர்ச்சியா இருக்கு வாங்க போகலாம்” என்று சலித்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றனர்.
பெரியவர்கள் சாப்பிட்டு முடித்து ஹாலில் உட்கார்ந்திருந்தனர்.
துரைசிங்கம் அறைக்குள் சென்றதும் ரதியை தேடினான் அவளோ பால்கனியில் நிற்பது தெரிய குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான். குளித்து முடித்து தலையை துவட்டிக்கொண்டு பால்கனிக்குச் செல்ல ரதியும் பால்கனியிலிருந்து வெளியே வர இருவரும் மோதிக்கொண்டனர்
ரதி கால் தடுமாறி விழப்போக “ஏய் கழுதை” என்று அவளது இடுப்போடு கையை அழுத்தமாக பதித்து விழாமல் பிடித்திருந்தான்.
இருவரது விழிகளும் மோதிக்கொண்டது சிக்கி முக்கி கல்லாக.
ஒரு நிமிடம்தான் அடுத்த நொடியே அவளது இடுப்பிலிருந்து கையை எடுத்து அவளை கண்களால் அளவிட்டான்.
ரதியோ கையில்லா நைட்டியுடன் தலைமுடியை விரித்துப்போட்டிருந்தாள். அதுவும் கையில்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை. அவளது அங்க வளைவுகள் தெரியுமளவிற்கு லோ நெக் நைட்டியை போட்டிருந்தாள்.
“ஏய்! என்னடி ட்ரஸ் இது! எப்போ வாங்கின! நான் தான் நீ போடுறதுக்கு டிரஸ் வாங்கி பீரோ நிறைய அடுக்கி வைச்சு இருக்கேன்ல! அந்த டிரஸ் போடவேண்டியது தானே.. இது என்ன கரகாட்டக்காரி போடறது நீ போட்டு இருக்க " என்று பல்லைக்கடித்தான் சிங்கம்.
“நைட்டினு தெரியாதா! நீங்க எடுத்து வச்சிருக்க சேலையை என்னால தினமும் கட்டிட்டு தூங்க முடியாது... ஹாஸ்பிட்டல் போகும்போதும் சல்வார், குர்தினு போட்டுட்டு போவேன்.. என்னால வாரத்துல ஆறு நாளும் சேலை கட்ட முடியாது! அதான் அப்பா கிட்ட சொல்லி எனக்கான டிரஸ் வாங்கிட்டேன்! வழிய விடுங்க சாப்பிட போகணும் பசிக்குது” என்று கடுப்பாக பேசி அவனது முகத்தை பார்த்தாள்.
அவனோ எதுவும் பேசாமல் அவளது முகத்தை அழுத்தமாக பார்த்துக்கொண்டே அவளது முன்பக்க நைட்டியை பிடித்து கிழித்து விட்டான்..
அவளோ “அச்சோ என்ன பண்ணுறீங்க..”என்று அந்த இடத்திலேயே உட்கார்ந்து ஆடை இல்லா பாகத்தை கை வைத்து மறைத்துக்கொண்டாள். கட்டிய கணவனாக இருந்தாலும் தீடிரென தான் போட்டிருக்கும் ஆடையை கிழித்ததும் எவ்ளோ தைரியமான பெண்ணாக இருந்தாலும் பயந்துதான் போவாள் அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது.
சிங்கமோ அவளது கண்ணீருக்கெல்லாம் மசியவில்லை. “இங்க பாருடி நம்ம ரும்குள்ள என்ன வேணா போட்டுத்தொலை... நம்ம ரூமை விட்டு வெளியே போகும் போது சுடிதார் போட்டுட்டு போ வேண்டாம்னு சொல்லமாட்டேன். இது போல பாதி உடம்பு தெரிய நைட்டி போட்டுட்டு திரிஞ்சா!! நீ வாங்கி வைச்சிருக்க எல்லா நைட்டியையும் தீயை வச்சி கொளுத்திப்போடுவேன்டி.. அடுத்து உன் அப்பன் எடுத்து கொடுத்த டிரஸ் நம்ம வீட்டுல இருக்கக்கூடாது ” என்றான் கடும் கோபத்துடன் விரலை நீட்டி எச்சரித்தான் சிங்கம்.