அத்தியாயம் 11
துரைசிங்கம் அலர்விழி திருமணம் ஏற்பாடாகி இருக்கு என்று கேள்விப்பட்ட நாளிலிருந்து தன்னால் தன் ஆசை மருமகனின் கல்யாணத்திற்கு போக முடியாதே என்று கவலையில் மனம் வெதும்பி கிடந்தார் கோதை.
தன் தாய் வீட்டு குடும்பத்தில் நடக்கும் முதல் விஷேசம் தன்னை கூப்பிடமாட்டார்களா என்று கூட மனம் ஏங்கி தவித்தது.
அவரது மனம் ஒருநிலையில் இல்லாமல்ஆர்ப்பரிக்கும் கடல் அலை போல் ஆடிக்கொண்டே இருந்தது.
வீட்டு வேலையெல்லாம் முடித்த கோதையோ தோட்டத்தில் நடந்துக் கொண்டு இருக்கும் போது துரைசிங்கம் சிறுவயதில் தன்னுடன் பேசியது அவரது மனதில் நிழலாடியது.
“டேய் சிங்கப் பையா நீ பெரியவனான பிறகு எனக்கு பிறக்க போற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்... நீ என்னோட மருமகனா வரணும்னு கொள்ளை ஆசைடா... உனக்கு மைனர் சங்கிலி பண்ணிபோடணும். உன் கைக்கு தங்க காப்பு பண்ணிபோடணும்...” என்று அடுக்கடுக்கான ஆசைகளை துரைசிங்கத்திடம் சொல்லி மகிழ்ந்துக் கொண்டிருந்தார்.
“கண்டிப்பா அத்தை உன்னோட பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்... நீ கவலைப்படாதே..! நாச்சி அப்பத்தா கைகாட்டுற பொண்ணைக்கூட நான் கல்யாணம் கட்டிக்கிட மாட்டேன் போதுமா” என தலையை சாய்த்து கண்ணைச்சிமிட்டினான் துரைசிங்கம்.
“அச்சோ என் சிங்கக்குட்டி நீதான் டா என் மருமகன்” என்று அவனை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார் கோதை.
“சிங்கப்பையா இந்த அத்தைக்கு கொடுத்த வாக்கு காத்தோட கரைஞ்சு போச்சாடா என் தங்கமே” என்றவருக்கு கண்கள் கண்ணீர் கோடுகளாக வழிந்தது.
“கோதை..! ஏய்! கோதை..! காபி கொண்டு வா..!" என்ற கணவனின் அதட்டலில் கண்ணீரை துடைத்துக்கொண்டு சமையல்கட்டில் காபியை போட்டு ஆதிபெருமாளிடம் காபி கப்பை நீட்டினார்.
கோதையின் முகத்தை பார்த்தவாறே “என்னடி நீ பாசம் வச்சு வளர்த்தியே உன்னோட சிங்கப்பையன் அவன் கல்யாணத்துக்கு போக முடியலையேனு வருத்தப்பட்டு அழுகிற போல!" என்று நக்கல் சிரிப்புடன் காபியை வாங்கி குடித்தார் ஆதிபெருமாள்.
கோதையோ ஆதிபெருமாளை எதிர்த்து பேச முடியாமல் முறைத்து பார்த்து விட்டு அழுகையுடன் அங்கிருந்து நகர்ந்துச் சென்றவரை “ஒரு நிமிசம் நான் சொல்றதை கேட்டுட்டு போடி” என்றார் எள்ளல் சிரிப்புடன்.
“சொல்லுங்க” என்றார் வெறுப்பான குரலில் அவர் புறம் திரும்பாமலேயே வெறுப்பாகவே...
“உன் மனசுல நினைச்சி இருக்கிறது கூடிய சீக்கிரம் நடக்கப்போகுது. அது என்னனு மட்டும் சொல்லமாட்டேன். இந்தா காபி கப்பை பிடி” என்று வெடுக்கென்று அவர் கையில் திணித்து விட்டு வெளியேச் சென்றார்.
கணவன் சொல்வதில் ஏதோ உள்ளர்த்தம் புரிந்தவராக வேகமாக ஓடிவந்தவர் ஆதிபெருமாள் முன்னே நின்று நெஞ்சுக்கூடு ஏறி இறங்க “இன்னும் என் அப்பா குடும்பத்துல என்ன குழப்பம் பண்ண இருக்க... தயவு செய்து சொல்லிடு..! என் குடும்பம் பாவம்... என்னால பட்ட அவமானமே இன்னும் அவங்க மனசுல தீயாய் கொழுந்துவிட்டு எரிஞ்சிக்கிட்டு இருக்கும்... நீ ஏதாவது நடக்க இருக்க கல்யாணத்துல குதர்க்கம் பண்ணிடாத..! உன்னை கையெடுத்து கும்பிடறேன்" என்று அவரது காலில் விழாத குறையாக கெஞ்சினார் கோதை.
“ஹா... ஹா... என்னை அவமானப்படுத்திய உன் குடும்பத்தை எப்படி நிம்மதியா வாழ விடுவேன்னு நினைச்ச” என்று கோபத்தில் கோதையின் கையை பிடித்து அழுந்தப்பற்றினார்.
சரியாக பொன்வண்ணனின் கார் வீட்டுக்குள் நுழைய கையை லாவகமாக எடுத்துக்கொண்டு “உன் மகன் வரான் அவன்கிட்ட என்னை பத்தி சொல்லி வைச்ச... என்னை பத்தி தெரியும்ல” என்று கண்ணை உருட்டி மிரட்டினார் ஆதிபெருமாள்.
கோதையோ “நா.நான் வண்ணாகிட்ட உங்களை பத்தி சொல்லமாட்டேன். என் அண்ணா குடும்பத்துல குழப்பம் வர வைக்காதீங்க ப்ளீஸ்” என்று கையெடுத்து கும்பிட்டார்.
“பார்க்கலாம்... பார்க்கலாம்...” என்று நயவஞ்சக சிரிப்புடன் சென்றுவிட்டார். கோதையோ நெஞ்சை பிடித்து நின்றிருந்தார்.
பொன்வண்ணனோ கையில் கோட்டுடன் நுழைந்ததும் தன் கவலையை மகனிடம் காட்டாது “வா வண்ணா காபி போட்டு தரட்டுமா?” என்று பாசத்தோடு மகனின் தோளை தொட்டார்.
“என்னாச்சு என் கோதை அம்மாவோட முகம் சரியில்லையே! உங்க பாச மருமகனுக்கு கல்யாணம்னு சந்தோசமா இருப்பீங்கனு நினைச்சேன்” என்று கிண்டல் செய்து தாயின் தோளில் கைபோட்டபடியே வீட்டுக்குள் சென்றவன் சோபாவில் சோர்வாக அமர்ந்தான்.
மகனின் சோர்வை கண்டு “இருப்பா காபி போட்டு எடுத்துவரேன்” சமையற்கட்டிற்கு ஓடியவர் போட்டு வைத்திருந்த காபியை கப்பில் ஊற்றி வந்து மகன் கையில் கொடுத்து அவன் பக்கம் உட்கார்ந்தவர் “உன் மேல எவ்ளோ பாசம் வச்சிருக்கேனோ அதே அளவு பாசம் இம்மி அளவு குறையாம என் சிங்கம் மேலயும் வச்சிருக்கேன்டா” என்று சிறு சிரிப்புடன் மகனின் தலையை கலைத்து விட்டார்.
“ஓ பெத்த மகனை விட மருமகன் மேல பாசம் அதிகமா” என்றான் வேண்டுமென்ற பொய் கோபத்துடன்.
“டேய் படவா நீயும் சிங்கமும்... எனக்கு ரெண்டு கண்ணுபோல... ரெண்டு கண்ணுல எதை பிடிக்கும்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்..!" என்று கண்ணை சுருக்கி மகனின் கையை பிடித்துக்கொண்டார் கோதை.
“நீங்க துரைசிங்கம் மேல இன்னும் அளவு கடந்த பாசம் குறையாம இருக்கீங்கம்மா... ஆனா அந்த துரைசிங்கம் அப்படி இல்லையே. என்னை ஒரு மனுசனா கூட மதிக்காம அடிச்சு தரக்குறைவா கெட்ட வார்த்தையெல்லாம் பேசினான் தெரியுமா?” என்று சிறுபிள்ளை போல கோபப்பட்டு பேசினான்.
“ஹான் நீ பண்ணின காரியத்துக்கு பூ போட்டு கொஞ்சுவாங்களா!” என்று மகனை முறைத்தார் கோதை.
“நான் லவ் பண்ணுற பொண்ணுக்கு முத்தம் கொடுக்க எவன்கிட்டயும் பர்மிஷன் கேட்கணும்னு அவசியம் இல்லம்மா” என்றவனோ பட்டென்று எழுந்து அறைக்குள் சென்றுவிட்டான்.
“இப்ப எல்லாம் இவனுக்கு மூக்குக்கு மேல பொசுபொசுக்குனு கோபம் வருது. எங்க போய் முடியுமோ தெரியலையே... கருப்பா நீதான் என் குடும்பத்தை காப்பாத்தணும்” என்று பெரும்மூச்சு விட்டுக்கொண்டார்.
கல்யாண வேலைகள் ஜோராக நடந்துக் கொண்டிருந்தன.
நாச்சி மட்டும் பெரிய மகள் கோதை இல்லையே என்று வருத்தத்தில் இருந்தார். அன்பரசி தாயின் முகத்தில் வடியும் கவலையை கண்டு “ஏன்மா ஓடிப்போன கோதையை நினைச்சு கவலைப்படுறியா? இல்ல கோதை மக அந்த ராங்கி ரதியை துரைசிங்கத்துக்கு கல்யாணம் பண்ண முடியலையேனு வருத்தப்படுறியா?” என்று அவர் ஆதங்கத்தில் கேட்டுவிட்டார்.
“உன்னை பெத்த வயித்துலதான்டி கோதையையும் பெத்து வளர்த்தேன்... அவ தப்பு பண்ணிட்டு போனானா அவளை ஒரேடியா வெறுத்து ஒதுக்கிட முடியுமா என்ன? நம்ம வீட்டுல முதன் முதலில் விஷேசம் நடக்குது... அவ இங்க இருந்தா நல்லாயிருக்கும்னு எனக்கு தோணுச்சு அவ்ளோதான்... நான் தான் உன் பொண்ணு அலர்விழியை சிங்கத்துக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முதல் பேச்சை எடுத்ததே! சும்மா வாய் இருக்குனு என்ன வேணும்னாலும் பேசாத டி அன்பரசி" என கோபத்தில் கத்தியும் கூட விட்டார்.
“அதானே உனக்கு என்னை விட கோதை அக்கா மேலதான் பிரியமே! எதுக்கெடுத்தாலும் கோதை உன் கைதான் ராசி நல்லா இருக்கும் வந்து நாத்து நடு... உன் கையால பணம் வாங்கிட்டு போனா அந்த காரியம் ஜெயம் ஆகும்னு அவளைத்தான் தலையில வச்சு கொண்டாடினீங்க... அன்னிக்கு அவ கல்யாணத்துல பண்ணின கூத்துல எனக்கு கண்ணன் மாமாவை பிடிச்சிருக்கா இல்லையானு கூட கேட்காம பலியாடா போய் மணவறையில உட்கார வச்சீங்க... கண்ணன் மாமா நல்லவரா இருக்க போய் என் வாழ்க்கை நந்தவனமா இருக்கு... இதே ஒரு குடிகாரன் கையில நான் சிக்கியிருந்தா... என் நிலைமை அதோகதியாகி மண்ணோட மண்ணா போயிருப்பேன்” என்று இத்தனை நாளாய் மனதில் போட்டு அழுத்திக்கொண்டிருந்ததை கொட்டினார் அன்பரசி.
நாச்சியோ “ரொம்ப வாயாடாதடி... கண்ணன் மாப்பிள்ளை நல்லவர்னு தெரிஞ்சுதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கொடுத்தோம்... குடிகாரனா இருந்தா கல்யாணம் பண்ணியிருப்போமா என்ன? முழுசா கோதையை தப்பு சொல்ல முடியாது. அந்த கேடு கெட்ட நாய் ஆதிபெருமாளை நம்பி வீட்டுக்குள்ள விட்டது தான் முதல் தப்பு. என் பொண்ணு வாழ்க்கையை சீரழிச்சுட்டான் பாவி..!” என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்.
நாச்சி அழுவதை கண்ட அன்பரசியோ “அம்மா அழாத! நான் என் மனசுல உள்ள ஆதங்கத்தைதான் கொட்டினேன். உன் மனசை காயப்படுத்த எண்ணி பேசலைமா... என்னை மன்னிச்சுடு உனக்கு ஏதாவது ஆகிடபோகுது” என்று கவலைப்பட்டு தாயின் நெஞ்சை நீவிவிட்டார் அன்பரசி.
வீரய்யனோ பக்கத்து ஊரில் தெரிந்தவர்களிடம் பாலமுருகன் குடும்பத்தை விசாரித்துக்கொண்டிருந்தார். “நல்ல குடும்பம் தாராளமாக நம்ம ஊரு பொண்ணை கொடுக்கலாம்” என்று நம்பிக்கை வார்த்தை கொடுத்தனர்.
ஐய்யனாரோ சென்னையில் அவருடைய நண்பர்களிடம் ஐட்ஜ் பாலமுருகன் பத்தி கேட்டுக்கொண்டார். “பாலமுருகன் நியாயமான பேர்வழி... நீ பொண்ணை கண்ணை மூடிக்கிட்டே நம்பி கொடுக்கலாம்” என்று உறுதியாகவே கூறினார்கள்.
“சிங்கம்... மாப்பிள்ளை வீட்டை பத்தி நான் விசாரிச்ச வகையில் நல்ல பண்பான குடும்பமாக தெரியுறாங்க..! நீ யாருகிட்டயும் தகவல் கேட்டியாப்பா!" என்றார் ஐய்யனார்.
“ம்ம் நல்ல குடும்பம்னுதான் சொன்னாங்கப்பா... அவங்க போன் நம்பர் கூட வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று சொல்லிக் கொண்டிருக்க வீரய்யனும் நாச்சியும் அங்கே வந்தனர்.
“நல்ல விசயத்தை ஏன் தள்ளிப்போடணும். நாமளே போன் போடுவோமா?” என்று நாச்சி ஆவலாய் கேட்டுவிட்டார்.
ஐய்யனாரின் போன் அடிக்க புது எண்ணாக இருக்க புருவம் சுருக்கியவரோ புது நம்பராக இருக்க கட்சி விசயமா யாரும் பேசுவாங்களோ என்று யோசனையுடன் “சொல்லுங்க” என்றார்.
“வணக்கம்ங்க நான் ரிட்டையர்ட்டு ஜட்ஜ் பாலமுருகன் பேசுறேன்... தரகர் உங்க பொண்ணு ஜாதகமும் போட்டோவும் கொடுத்திருந்தாரு... உங்க வீட்டுப் பொண்ணை என் பையனுக்கு பிடிச்சிருக்கு முறைப்படி எப்போ உங்க வீட்டுக்கு நாங்க வரலாம்னு நீங்க சொன்னீங்கனா வசதியா இருக்கும் “என்றார் பாலமுருகன் புன்னகையுடனே.
ஐய்யனாரோ “என் மகனுக்கு அடுத்த வாரம் கல்யாணம் வச்சிருக்கோம்... இப்போதைக்கு ஒப்பு வார்த்தை மட்டும் பேசிக்கலாம்! மத்த நிகழ்ச்சியெல்லாமல் ஆர அமர பார்த்துக்கலாம்ங்குறது எங்க விருப்பம்” என்றார் நிறுத்தி நிதானமாக.
“என் மகனுக்கு இனி அடுத்த வருசம் தான் லீவு கிடைக்கும் அதான் இப்பவே கல்யாணத்தை முடிச்சிடலாம்னு பார்த்தோம்" என்று தயங்கிப் பேசினார்.
“எங்க வீட்டுப்பொண்ணும் படிப்பு முடிக்க ஆறுமாசம் இருக்கு... அவ படிப்பு முடிச்சவுடனே கல்யாணத்தை வச்சிக்கலாம்கிறதுல நாங்க தெளிவா இருக்கோம்ங்க” என்று தேங்காயை உடைப்பது போல உடைத்துவிட்டார் ஐய்யனார்.
துரைசிங்கமும் ஆமோதிப்பாய் தலையை ஆட்டினான். பாலமுருகனோ “அப்ப நாங்க நாளைக்கு உங்கவீட்டுக்கு ஒப்பு வார்த்தை பேச வரோம்” என்று சொன்னதும் “நல்லதுங்க” என்றிருந்தார் ஐய்யனார்.
போனை வைத்ததுமே “மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க நாளைக்கு நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டாங்க சிங்கம்... நீ அதற்கான ஏற்பாடுகளை கவனிச்சுக்கோ... பாப்பாவை லீவு போடச் சொல்லிடலாம்” என்றதும்
“அப்பா இன்டன்ஷிப்ல இருக்கும்போது லீவு கொடுக்க மாட்டாங்க... அவங்க வந்துட்டு போனதும் ஹாஸ்பிட்டல விட்டிரலாம்” என்றிருந்தான் துரைசிங்கம்.
“அதுவும் சரிதான்ப்பா" என்றவர் “அப்பா நம்ம பங்காளி வீட்ல பொண்ணு பார்க்க வரதை சொல்லிடலாம்” என்றவுடன்
வீரய்யனோ “நாம கொஞ்சம் அவசரப்படறது போல இருக்கு தம்பி... ஏற்கனவே கோதையால நாம அவமானப்பட்டு போய் நிற்கிறோம்... நம்ம தூரிகாவுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்லைனு தோணுது” என்றார் பெருமூச்சு விட்டு.
தூரிகாவுக்கு கல்யாணம் என்றதிலிருந்து அவளது முகம் சரியில்லாமல் இருப்பதை கண்டுபிடித்து கல்யாணத்திற்கு அவசரப்படவேண்டாம் என்றிருந்தார்.
சரியாக தூரிகா அங்கே வரவும் “பாப்பா இங்கே வாடா” என்று ஐய்யனார் பாசமாக அவளை அழைக்கவும் “ப்பா” என்று அவரின் தோளில் சாய்ந்து அமர்ந்தாள்.
துரைசிங்கம் அலர்விழி திருமணம் ஏற்பாடாகி இருக்கு என்று கேள்விப்பட்ட நாளிலிருந்து தன்னால் தன் ஆசை மருமகனின் கல்யாணத்திற்கு போக முடியாதே என்று கவலையில் மனம் வெதும்பி கிடந்தார் கோதை.
தன் தாய் வீட்டு குடும்பத்தில் நடக்கும் முதல் விஷேசம் தன்னை கூப்பிடமாட்டார்களா என்று கூட மனம் ஏங்கி தவித்தது.
அவரது மனம் ஒருநிலையில் இல்லாமல்ஆர்ப்பரிக்கும் கடல் அலை போல் ஆடிக்கொண்டே இருந்தது.
வீட்டு வேலையெல்லாம் முடித்த கோதையோ தோட்டத்தில் நடந்துக் கொண்டு இருக்கும் போது துரைசிங்கம் சிறுவயதில் தன்னுடன் பேசியது அவரது மனதில் நிழலாடியது.
“டேய் சிங்கப் பையா நீ பெரியவனான பிறகு எனக்கு பிறக்க போற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்... நீ என்னோட மருமகனா வரணும்னு கொள்ளை ஆசைடா... உனக்கு மைனர் சங்கிலி பண்ணிபோடணும். உன் கைக்கு தங்க காப்பு பண்ணிபோடணும்...” என்று அடுக்கடுக்கான ஆசைகளை துரைசிங்கத்திடம் சொல்லி மகிழ்ந்துக் கொண்டிருந்தார்.
“கண்டிப்பா அத்தை உன்னோட பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்... நீ கவலைப்படாதே..! நாச்சி அப்பத்தா கைகாட்டுற பொண்ணைக்கூட நான் கல்யாணம் கட்டிக்கிட மாட்டேன் போதுமா” என தலையை சாய்த்து கண்ணைச்சிமிட்டினான் துரைசிங்கம்.
“அச்சோ என் சிங்கக்குட்டி நீதான் டா என் மருமகன்” என்று அவனை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார் கோதை.
“சிங்கப்பையா இந்த அத்தைக்கு கொடுத்த வாக்கு காத்தோட கரைஞ்சு போச்சாடா என் தங்கமே” என்றவருக்கு கண்கள் கண்ணீர் கோடுகளாக வழிந்தது.
“கோதை..! ஏய்! கோதை..! காபி கொண்டு வா..!" என்ற கணவனின் அதட்டலில் கண்ணீரை துடைத்துக்கொண்டு சமையல்கட்டில் காபியை போட்டு ஆதிபெருமாளிடம் காபி கப்பை நீட்டினார்.
கோதையின் முகத்தை பார்த்தவாறே “என்னடி நீ பாசம் வச்சு வளர்த்தியே உன்னோட சிங்கப்பையன் அவன் கல்யாணத்துக்கு போக முடியலையேனு வருத்தப்பட்டு அழுகிற போல!" என்று நக்கல் சிரிப்புடன் காபியை வாங்கி குடித்தார் ஆதிபெருமாள்.
கோதையோ ஆதிபெருமாளை எதிர்த்து பேச முடியாமல் முறைத்து பார்த்து விட்டு அழுகையுடன் அங்கிருந்து நகர்ந்துச் சென்றவரை “ஒரு நிமிசம் நான் சொல்றதை கேட்டுட்டு போடி” என்றார் எள்ளல் சிரிப்புடன்.
“சொல்லுங்க” என்றார் வெறுப்பான குரலில் அவர் புறம் திரும்பாமலேயே வெறுப்பாகவே...
“உன் மனசுல நினைச்சி இருக்கிறது கூடிய சீக்கிரம் நடக்கப்போகுது. அது என்னனு மட்டும் சொல்லமாட்டேன். இந்தா காபி கப்பை பிடி” என்று வெடுக்கென்று அவர் கையில் திணித்து விட்டு வெளியேச் சென்றார்.
கணவன் சொல்வதில் ஏதோ உள்ளர்த்தம் புரிந்தவராக வேகமாக ஓடிவந்தவர் ஆதிபெருமாள் முன்னே நின்று நெஞ்சுக்கூடு ஏறி இறங்க “இன்னும் என் அப்பா குடும்பத்துல என்ன குழப்பம் பண்ண இருக்க... தயவு செய்து சொல்லிடு..! என் குடும்பம் பாவம்... என்னால பட்ட அவமானமே இன்னும் அவங்க மனசுல தீயாய் கொழுந்துவிட்டு எரிஞ்சிக்கிட்டு இருக்கும்... நீ ஏதாவது நடக்க இருக்க கல்யாணத்துல குதர்க்கம் பண்ணிடாத..! உன்னை கையெடுத்து கும்பிடறேன்" என்று அவரது காலில் விழாத குறையாக கெஞ்சினார் கோதை.
“ஹா... ஹா... என்னை அவமானப்படுத்திய உன் குடும்பத்தை எப்படி நிம்மதியா வாழ விடுவேன்னு நினைச்ச” என்று கோபத்தில் கோதையின் கையை பிடித்து அழுந்தப்பற்றினார்.
சரியாக பொன்வண்ணனின் கார் வீட்டுக்குள் நுழைய கையை லாவகமாக எடுத்துக்கொண்டு “உன் மகன் வரான் அவன்கிட்ட என்னை பத்தி சொல்லி வைச்ச... என்னை பத்தி தெரியும்ல” என்று கண்ணை உருட்டி மிரட்டினார் ஆதிபெருமாள்.
கோதையோ “நா.நான் வண்ணாகிட்ட உங்களை பத்தி சொல்லமாட்டேன். என் அண்ணா குடும்பத்துல குழப்பம் வர வைக்காதீங்க ப்ளீஸ்” என்று கையெடுத்து கும்பிட்டார்.
“பார்க்கலாம்... பார்க்கலாம்...” என்று நயவஞ்சக சிரிப்புடன் சென்றுவிட்டார். கோதையோ நெஞ்சை பிடித்து நின்றிருந்தார்.
பொன்வண்ணனோ கையில் கோட்டுடன் நுழைந்ததும் தன் கவலையை மகனிடம் காட்டாது “வா வண்ணா காபி போட்டு தரட்டுமா?” என்று பாசத்தோடு மகனின் தோளை தொட்டார்.
“என்னாச்சு என் கோதை அம்மாவோட முகம் சரியில்லையே! உங்க பாச மருமகனுக்கு கல்யாணம்னு சந்தோசமா இருப்பீங்கனு நினைச்சேன்” என்று கிண்டல் செய்து தாயின் தோளில் கைபோட்டபடியே வீட்டுக்குள் சென்றவன் சோபாவில் சோர்வாக அமர்ந்தான்.
மகனின் சோர்வை கண்டு “இருப்பா காபி போட்டு எடுத்துவரேன்” சமையற்கட்டிற்கு ஓடியவர் போட்டு வைத்திருந்த காபியை கப்பில் ஊற்றி வந்து மகன் கையில் கொடுத்து அவன் பக்கம் உட்கார்ந்தவர் “உன் மேல எவ்ளோ பாசம் வச்சிருக்கேனோ அதே அளவு பாசம் இம்மி அளவு குறையாம என் சிங்கம் மேலயும் வச்சிருக்கேன்டா” என்று சிறு சிரிப்புடன் மகனின் தலையை கலைத்து விட்டார்.
“ஓ பெத்த மகனை விட மருமகன் மேல பாசம் அதிகமா” என்றான் வேண்டுமென்ற பொய் கோபத்துடன்.
“டேய் படவா நீயும் சிங்கமும்... எனக்கு ரெண்டு கண்ணுபோல... ரெண்டு கண்ணுல எதை பிடிக்கும்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்..!" என்று கண்ணை சுருக்கி மகனின் கையை பிடித்துக்கொண்டார் கோதை.
“நீங்க துரைசிங்கம் மேல இன்னும் அளவு கடந்த பாசம் குறையாம இருக்கீங்கம்மா... ஆனா அந்த துரைசிங்கம் அப்படி இல்லையே. என்னை ஒரு மனுசனா கூட மதிக்காம அடிச்சு தரக்குறைவா கெட்ட வார்த்தையெல்லாம் பேசினான் தெரியுமா?” என்று சிறுபிள்ளை போல கோபப்பட்டு பேசினான்.
“ஹான் நீ பண்ணின காரியத்துக்கு பூ போட்டு கொஞ்சுவாங்களா!” என்று மகனை முறைத்தார் கோதை.
“நான் லவ் பண்ணுற பொண்ணுக்கு முத்தம் கொடுக்க எவன்கிட்டயும் பர்மிஷன் கேட்கணும்னு அவசியம் இல்லம்மா” என்றவனோ பட்டென்று எழுந்து அறைக்குள் சென்றுவிட்டான்.
“இப்ப எல்லாம் இவனுக்கு மூக்குக்கு மேல பொசுபொசுக்குனு கோபம் வருது. எங்க போய் முடியுமோ தெரியலையே... கருப்பா நீதான் என் குடும்பத்தை காப்பாத்தணும்” என்று பெரும்மூச்சு விட்டுக்கொண்டார்.
கல்யாண வேலைகள் ஜோராக நடந்துக் கொண்டிருந்தன.
நாச்சி மட்டும் பெரிய மகள் கோதை இல்லையே என்று வருத்தத்தில் இருந்தார். அன்பரசி தாயின் முகத்தில் வடியும் கவலையை கண்டு “ஏன்மா ஓடிப்போன கோதையை நினைச்சு கவலைப்படுறியா? இல்ல கோதை மக அந்த ராங்கி ரதியை துரைசிங்கத்துக்கு கல்யாணம் பண்ண முடியலையேனு வருத்தப்படுறியா?” என்று அவர் ஆதங்கத்தில் கேட்டுவிட்டார்.
“உன்னை பெத்த வயித்துலதான்டி கோதையையும் பெத்து வளர்த்தேன்... அவ தப்பு பண்ணிட்டு போனானா அவளை ஒரேடியா வெறுத்து ஒதுக்கிட முடியுமா என்ன? நம்ம வீட்டுல முதன் முதலில் விஷேசம் நடக்குது... அவ இங்க இருந்தா நல்லாயிருக்கும்னு எனக்கு தோணுச்சு அவ்ளோதான்... நான் தான் உன் பொண்ணு அலர்விழியை சிங்கத்துக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முதல் பேச்சை எடுத்ததே! சும்மா வாய் இருக்குனு என்ன வேணும்னாலும் பேசாத டி அன்பரசி" என கோபத்தில் கத்தியும் கூட விட்டார்.
“அதானே உனக்கு என்னை விட கோதை அக்கா மேலதான் பிரியமே! எதுக்கெடுத்தாலும் கோதை உன் கைதான் ராசி நல்லா இருக்கும் வந்து நாத்து நடு... உன் கையால பணம் வாங்கிட்டு போனா அந்த காரியம் ஜெயம் ஆகும்னு அவளைத்தான் தலையில வச்சு கொண்டாடினீங்க... அன்னிக்கு அவ கல்யாணத்துல பண்ணின கூத்துல எனக்கு கண்ணன் மாமாவை பிடிச்சிருக்கா இல்லையானு கூட கேட்காம பலியாடா போய் மணவறையில உட்கார வச்சீங்க... கண்ணன் மாமா நல்லவரா இருக்க போய் என் வாழ்க்கை நந்தவனமா இருக்கு... இதே ஒரு குடிகாரன் கையில நான் சிக்கியிருந்தா... என் நிலைமை அதோகதியாகி மண்ணோட மண்ணா போயிருப்பேன்” என்று இத்தனை நாளாய் மனதில் போட்டு அழுத்திக்கொண்டிருந்ததை கொட்டினார் அன்பரசி.
நாச்சியோ “ரொம்ப வாயாடாதடி... கண்ணன் மாப்பிள்ளை நல்லவர்னு தெரிஞ்சுதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கொடுத்தோம்... குடிகாரனா இருந்தா கல்யாணம் பண்ணியிருப்போமா என்ன? முழுசா கோதையை தப்பு சொல்ல முடியாது. அந்த கேடு கெட்ட நாய் ஆதிபெருமாளை நம்பி வீட்டுக்குள்ள விட்டது தான் முதல் தப்பு. என் பொண்ணு வாழ்க்கையை சீரழிச்சுட்டான் பாவி..!” என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்.
நாச்சி அழுவதை கண்ட அன்பரசியோ “அம்மா அழாத! நான் என் மனசுல உள்ள ஆதங்கத்தைதான் கொட்டினேன். உன் மனசை காயப்படுத்த எண்ணி பேசலைமா... என்னை மன்னிச்சுடு உனக்கு ஏதாவது ஆகிடபோகுது” என்று கவலைப்பட்டு தாயின் நெஞ்சை நீவிவிட்டார் அன்பரசி.
வீரய்யனோ பக்கத்து ஊரில் தெரிந்தவர்களிடம் பாலமுருகன் குடும்பத்தை விசாரித்துக்கொண்டிருந்தார். “நல்ல குடும்பம் தாராளமாக நம்ம ஊரு பொண்ணை கொடுக்கலாம்” என்று நம்பிக்கை வார்த்தை கொடுத்தனர்.
ஐய்யனாரோ சென்னையில் அவருடைய நண்பர்களிடம் ஐட்ஜ் பாலமுருகன் பத்தி கேட்டுக்கொண்டார். “பாலமுருகன் நியாயமான பேர்வழி... நீ பொண்ணை கண்ணை மூடிக்கிட்டே நம்பி கொடுக்கலாம்” என்று உறுதியாகவே கூறினார்கள்.
“சிங்கம்... மாப்பிள்ளை வீட்டை பத்தி நான் விசாரிச்ச வகையில் நல்ல பண்பான குடும்பமாக தெரியுறாங்க..! நீ யாருகிட்டயும் தகவல் கேட்டியாப்பா!" என்றார் ஐய்யனார்.
“ம்ம் நல்ல குடும்பம்னுதான் சொன்னாங்கப்பா... அவங்க போன் நம்பர் கூட வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று சொல்லிக் கொண்டிருக்க வீரய்யனும் நாச்சியும் அங்கே வந்தனர்.
“நல்ல விசயத்தை ஏன் தள்ளிப்போடணும். நாமளே போன் போடுவோமா?” என்று நாச்சி ஆவலாய் கேட்டுவிட்டார்.
ஐய்யனாரின் போன் அடிக்க புது எண்ணாக இருக்க புருவம் சுருக்கியவரோ புது நம்பராக இருக்க கட்சி விசயமா யாரும் பேசுவாங்களோ என்று யோசனையுடன் “சொல்லுங்க” என்றார்.
“வணக்கம்ங்க நான் ரிட்டையர்ட்டு ஜட்ஜ் பாலமுருகன் பேசுறேன்... தரகர் உங்க பொண்ணு ஜாதகமும் போட்டோவும் கொடுத்திருந்தாரு... உங்க வீட்டுப் பொண்ணை என் பையனுக்கு பிடிச்சிருக்கு முறைப்படி எப்போ உங்க வீட்டுக்கு நாங்க வரலாம்னு நீங்க சொன்னீங்கனா வசதியா இருக்கும் “என்றார் பாலமுருகன் புன்னகையுடனே.
ஐய்யனாரோ “என் மகனுக்கு அடுத்த வாரம் கல்யாணம் வச்சிருக்கோம்... இப்போதைக்கு ஒப்பு வார்த்தை மட்டும் பேசிக்கலாம்! மத்த நிகழ்ச்சியெல்லாமல் ஆர அமர பார்த்துக்கலாம்ங்குறது எங்க விருப்பம்” என்றார் நிறுத்தி நிதானமாக.
“என் மகனுக்கு இனி அடுத்த வருசம் தான் லீவு கிடைக்கும் அதான் இப்பவே கல்யாணத்தை முடிச்சிடலாம்னு பார்த்தோம்" என்று தயங்கிப் பேசினார்.
“எங்க வீட்டுப்பொண்ணும் படிப்பு முடிக்க ஆறுமாசம் இருக்கு... அவ படிப்பு முடிச்சவுடனே கல்யாணத்தை வச்சிக்கலாம்கிறதுல நாங்க தெளிவா இருக்கோம்ங்க” என்று தேங்காயை உடைப்பது போல உடைத்துவிட்டார் ஐய்யனார்.
துரைசிங்கமும் ஆமோதிப்பாய் தலையை ஆட்டினான். பாலமுருகனோ “அப்ப நாங்க நாளைக்கு உங்கவீட்டுக்கு ஒப்பு வார்த்தை பேச வரோம்” என்று சொன்னதும் “நல்லதுங்க” என்றிருந்தார் ஐய்யனார்.
போனை வைத்ததுமே “மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க நாளைக்கு நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டாங்க சிங்கம்... நீ அதற்கான ஏற்பாடுகளை கவனிச்சுக்கோ... பாப்பாவை லீவு போடச் சொல்லிடலாம்” என்றதும்
“அப்பா இன்டன்ஷிப்ல இருக்கும்போது லீவு கொடுக்க மாட்டாங்க... அவங்க வந்துட்டு போனதும் ஹாஸ்பிட்டல விட்டிரலாம்” என்றிருந்தான் துரைசிங்கம்.
“அதுவும் சரிதான்ப்பா" என்றவர் “அப்பா நம்ம பங்காளி வீட்ல பொண்ணு பார்க்க வரதை சொல்லிடலாம்” என்றவுடன்
வீரய்யனோ “நாம கொஞ்சம் அவசரப்படறது போல இருக்கு தம்பி... ஏற்கனவே கோதையால நாம அவமானப்பட்டு போய் நிற்கிறோம்... நம்ம தூரிகாவுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்லைனு தோணுது” என்றார் பெருமூச்சு விட்டு.
தூரிகாவுக்கு கல்யாணம் என்றதிலிருந்து அவளது முகம் சரியில்லாமல் இருப்பதை கண்டுபிடித்து கல்யாணத்திற்கு அவசரப்படவேண்டாம் என்றிருந்தார்.
சரியாக தூரிகா அங்கே வரவும் “பாப்பா இங்கே வாடா” என்று ஐய்யனார் பாசமாக அவளை அழைக்கவும் “ப்பா” என்று அவரின் தோளில் சாய்ந்து அமர்ந்தாள்.