அத்தியாயம் 32
கௌதம் அலர்விழி திருமணத்தை திருவிழாவாகவே கொண்டாடினார்கள். சிங்கம் முன்னே நின்று கல்யாண ஏற்பாட்டை கவனித்துக்கொண்டிருந்தான்.
இரவு சாப்பிட்டு முடித்த சிங்கத்திடம் நாச்சியோ “சிங்கம் நம்ம தூரிகாவையும் பொண்வண்ணனையும் கூப்பிடணும்ல... உனக்கு அந்த குடும்பத்தை பிடிக்காதுதான் இருந்தாலும் ஒத்தை தங்கச்சியை வச்சிருக்க அவ வந்து நின்னாத்தான் சபை நிறையும்பா!” என்றார் தயங்கியபடியே.
சிங்கத்திடமிருந்து என்ன பதில் வருமென்று குடும்பமே காத்திருந்தது. ஐய்யனார் உட்பட... கோதையை மன்னிச்சு தங்கையிடம் பேச ஆரம்பித்து விட்டார். ஆனால் ஜென்மத்துக்கும் ஆதிபெருமாளிடம் உறவு வைத்துக்கொள்ள மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார் ஐய்யனார். தங்கை ஏதோ மறைக்கிறாள் என்ற உண்மை அவருக்கு அப்போதே தெரிந்திருந்தாலும் அன்று அவளும் ஆதிபெருமாளை விரும்புகிறேன் என்று சொன்னதும் ஐய்யனாரால் எதுவும் செய்ய முடியாமல் போனது. இன்றுமே தனக்கு என்ன நடந்தது ஏன் ஆதிபெருமாளுடன் சென்றாள் என்பதை இதுவரை யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள் போட்டு பூட்டி வைத்திருக்கிறார் கோதை.
“கூப்பிடுங்க! ஆனா அந்த ஆதிபெருமாள் வரக்கூடாது!" என காட்டமாய் பேசிய சிங்கமோ காலியான குழம்பு பாத்திரத்தை கையில் வைத்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ரதியை முறைத்து பார்த்தான் சிங்கம்.
ரதியோ ‘ஆடு பகை குட்டி உறவோ இவனுக்கு! என்னை சக்கரையா சாப்பிட நான் இவனுக்கு வேணும்... என் வீட்டு ஆளுங்களை கூப்பிட மாட்டாங்களா’ என்று சிங்கத்தை மனதிற்குள் திட்டியவள் பாத்திரத்தை வேகமாக கொண்டு போய் சிங்கில் போட்டாள்.
“என்னம்மா சத்தம்?” என்று கோதை கேட்க “கை நழுவி விட்டுட்டேன் அத்தை” என்று ரதி சமாளித்தாள்.
ரதியின் பின்னால் வந்த சிங்கமோ அவளது இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை இழுத்து வாயை துடைத்து “ஏன் உங்கப்பனை கூப்பிடலைனு வருத்தமா இருக்கியாடி?” என்றான் தாடையை வருடிக்கொண்டே.
“எ.எனக்கு அப்பாவை கூப்பிடலைனு வருத்தம் இல்லை ! அவர் மேல நானே கோபமா இருக்கேன். சும்மா இருங்க. அலர்விழிக்கு நாம மூகூர்த்த புடவை எடுக்க காஞ்சிபுரம் போகலாமா?" என பேச்சை மாற்றினாள் ரதி.
'அப்படியே பேச்சை மாத்துற நீ!! என்கிட்ட உன் நடிப்பு செல்லுபடியாகாது டி பொண்டாட்டி' என்று உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து “நாம புடவை எடுக்க காஞ்சிபுரம் போக போறதில்லை.. காஞ்சிபுரத்துல இருந்து புடவை கடையே இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும் வா போகலாம்” என்று அவளது கையை பிடித்து வெளியே வந்தான்.
புடவை கடைக்காரரும் வண்டியிலிருந்து புடவை பேலை இறக்கிக்கொண்டிருந்தார். கௌதமும் நைட் ட்யூட்டி பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் முன்னேதான் வந்திருந்தான்.
நாச்சியோ “கோமதி அலர்விழியை கூட்டிட்டு வா” என்றதும்
ரதியோ “நானே அலரையும் தாரகையும் கூட்டிட்டு வரேன் அம்மாச்சி” என்று சென்றாள் அலர்விழி வீட்டுக்கு.
அலர்விழியோ “நான் வரல அக்கா! பெரியவங்க செலக்ட் பண்ணட்டும்” என்று மறுத்துவிட்டாள்.
அன்பரசியோ “ஏய் அலரு ரதி ஆசையா உன்னை கூப்பிடுறா! நீ போகாம நிற்குற...” மகளை கடிந்துக் கொண்டார்.
“இந்த காலத்து பொண்ணுங்களெல்லாம் முகூர்த்தப் புடவை எடுக்க போறதுனா... எல்லாருக்கும் முன்னால புறப்பட்டு நிற்பாங்க... நீ என்ன இப்படி தயங்கி நிற்க... நீ வந்து தான் ஆகணும்” என்று அலர்விழியின் கை பிடித்து கூட்டிக்கொண்டுச் சென்றாள் ரதி.
தாரகையோ “அக்காதான் வரலைனு சொல்றாங்கல்ல ஏன்மா இந்த ரதி அக்கா அலர் அக்காவை வலுக்கட்டாயமா கூட்டிட்டு போறாங்க” என்று ரதியின் மீது வெறுப்பு கொண்டு பேசினாள்.
“நீ சின்னப் பொண்ணு உனக்கு ஒண்ணும் தெரியாதுடி வா போகலாம்... உனக்கு புடவை எடுத்துத்தரேன்” என்று தாரகையை அழைத்துச் சென்றார் அன்பரசி.
புடவை கடைக்காரரை சுற்றி பெண்கள் அமர்ந்திருந்தனர். அலர்விழி கௌதம் இருப்பான் என்று நினைக்கவில்லை.
அவனோ “ஹாய் பிரண்ட்” என்று கண்ணைச்சிமிட்டினான். அவளோ “ஹாய்” என்று மெல்லிய சிரிப்புடன் அமர்ந்துக் கொண்டாள்.
அலர்விழியின் மேல் ஒவ்வொரு புடவையாக வைத்து காட்டி “இந்த கலர் நல்லாயிருக்கு அலர் எடுத்துக்கோ” என்று அலப்பறை செய்துக் கொண்டிருந்தாள் ரதி.
அலர்விழிக்கு எந்த கலர் புடவை எடுப்பது என்றே குழப்பமாக இருக்க கௌதமோ ரதியின் கையில் வைத்திருந்த மெருன் கலரில் புடவை முழுவதும் தங்க சரிகை பார்டரில் அன்னபட்சி இருக்கும் புடவையை கையில் எடுத்தவன் “இந்த விழிக்கு எடுப்பா இருக்கும் இதையே எடுத்துக்கோ” என்று அலர்விழியின் கையில் கொடுத்தவன் “பிடிச்சிருக்கா ப்ரண்ட்?” என்றான் அவளுக்கும் மட்டும் கேட்கும் படி.
அலர்விழிக்கோ இத்தனை பேர் முன்னால் வைத்து கௌதம் தன்னிடம் பேசுவது அவளுக்கு சங்கடமாக இருந்தது. கௌதமை காயப்படுத்த விரும்பாமல் “ம்ம்” என்று தலையை மட்டும் அசைத்தாள்.
ரதியோ ‘நான் இந்த புடவை எடுக்கலாம்னு பார்த்து வச்சிருந்தேன் அதுக்குள்ள அவளுக்கு எடுத்துக்கொடுத்துட்டானே இந்த கௌதம்’ என்று பொருமிக்கொண்டாலும் “வாவ் இந்த புடவை உனக்கு பொருத்தமா இருக்கு அலர்” என்றாள் வெளியே சிரித்து மனதிற்குள் குமறலாக.
மனைவியின் நடிப்பை இரசித்துப்பார்த்திருந்த சிங்கமோ “அலர் இன்னும் புடவை எடுத்துக்கோமா” என்றவனோ “புடவைகார அண்ணே! இன்னும் புடவை கலெக்சன் எடுத்து போடுங்க” என்றதும் புடவைக்காரரும் எடுத்து காட்டினார்.
அலர்விழியோ ரெண்டு புடவைகளை மட்டும் எடுத்து “போதும்” என்று விட்டாள்.
ரதியோ டஜன் கணக்கில் எடுத்து “இதெல்லாம் எனக்கு” என்று தனியாக எடுத்து வைத்துக்கொண்டாள்.
சிங்கமோ “ரதி நீ எடுத்து வச்சிருக்க புடவையெல்லாம் யார் யாருக்குனு சொல்லிடு” என்றான் உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து.
“ஹான் இந்த புடவையெல்லாம் எனக்கு ஒருத்திக்குதான்! அத்தை சித்திக்கு அம்மாச்சிக்கு எல்லாம் தனியா எடுத்து வச்சிருக்கேன்” என்று இன்னும் பல புடவைகளை காண்பித்தாள். புடவை எடுக்கும் பொறுப்பை ரதியிடம் கொடுத்து இருந்தனர்.
“இவ்ளோ புடவைக்கு என்னால பணம் தர முடியாது ரெண்டு புடவை எடுத்துக்கோ” என மனைவியிடம் ஒரண்டை இழுத்தான் சிங்கம்.
அவளோ கோபம் கொள்ளாதது போல “சரிங்க!” என்று ரெண்டு புடவையை மட்டும் எடுத்து வைத்துவிட்டு மீதி புடவையை எடுத்து புடவைக்காரரிடம் கொடுத்து முகத்தை அப்பாவியை போல வைத்துக்கொண்டாள்.
ஐய்யனாரோ “இந்தா ரதி கண்ணு பத்து புடவை என்ன இன்னும் பத்து கூட சேர்த்து எடுத்துக்கோ சிங்கம் கிடக்குறான் எல்லா புடவைக்கும் நான் காசு தரேன்! புடவைக்காரரே எங்க வீட்டு மருமக எடுத்த புடவையெல்லாம் கொடுத்துடுங்க” என்றார்.
ரதியோ “எப்படி” என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள்.
சிங்கமோ ரதி எடுத்த புடவைகளுக்கெல்லாம் சேர்த்தே பணத்தை கொடுத்தான்.
கௌதமோ சிங்கம் பக்கம் வந்தவன் “அண்ணே கோவிக்காதீங்க முகூர்த்த புடவைக்கு மட்டும் நான் பணம் கொடுக்கறேனே” என்று கண்ணைச்சுருக்கினான்.
சிங்கமோ கௌதமின் ஆசையை புரிந்துக் கொண்டவன் “சரிடா மத்த புடவைக்கு பணம் கொடுக்குறேன்” என்று மீதி புடவைக்கெல்லாம் பணம் கொடுத்தான்.
பத்திரிக்கை கொடுக்க கௌதமுடன் வீரய்யனும் நாச்சியும் கிளம்பியிருக்க ரதியோ “நானும் பத்திரிக்கை கொடுக்க வரட்டுமா அம்மாச்சி...? எனக்கு எங்க வீட்டுக்கு போகணும் போல இருக்கு” என நாச்சியின் தோளை சுரண்டினாள்.
“சிங்கத்து கிட்ட சொல்லிட்டு வா தங்கம்” என்றார் நாச்சி.
“ஆமா உங்க பேரன் போய்ட்டு வாடினு என்னை அனுப்பி வச்சிட்டுதான் மறுவேலை பார்ப்பாரு. உங்க பேரன் வரதுக்கு சாய்ந்தரம் ஆகிடும் நாம அதுக்குள்ள போய்ட்டு வந்துடலாம்” என்று அடம் பிடித்தவளை என்ன சொல்லி தடுப்பது என்று பெரியவர்களுக்கு தெரியவில்லை.
ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த ஐய்யனாரிடம் சென்ற ரதியோ “மாமா ப்ளீஸ் நீங்களாவது சொல்லுங்க எனக்கு எங்க வீட்டுக்கு போகணும்னு ஆசையா இருக்கு” என்று கெஞ்சலாக அவரது கையை பிடித்து கேட்ட மருமகளிடம் மறுப்பு தெரிவிக்க மனம் இல்லை அவருக்கு.
“சரி போய்ட்டு வாடா” என மருமகளின் தலையை வாஞ்சையாக தடவிவிட்டார்.
கோமதியோ “என்னங்க சிங்கத்துக்கு பதில் சொல்ல முடியாதே! அந்த வீட்டுக்கு ஏன் போனானு கோபத்துல கத்துவானுங்க!” என்று விசனப்பட்டார்.
“நான் பேசிக்குறேன் விடு கோமு ஆசையா போறேன்னு சொல்ற பொண்ணை என்னால தடுக்க முடியாது” என்று மனைவியை அடக்கிவிட்டார்.
கோமதியோ “அத்தை தூரிகாவை வரும்போது கூட்டிட்டு வந்துடுங்க அவளும் ஒரு நாலு நாள் நம்ம கூட இருந்துட்டு போகட்டும்” என்றார் மகளை தன்னுடன் வைத்து பார்க்க ஆசைப்பட்டு.
"சரி கோமதி" என்ற நாச்சிக்கோ தூரிகாவை தங்களது வீட்டுக்கு விடுவாங்களா நெஞ்சிற்குள் அச்சம் வந்தது.
குமரனிடம் ரதி பத்திரிக்கை கொடுக்க ஆதிபெருமாள் வீட்டுக்கு போறதை சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கியிருந்தார்.
கௌதமோ “சிங்கம் அண்ணாவுக்கு தெரியாம நீ வரது எனக்கு மனசுக்கு சரியாபடல ரதி” என்றான் நாசுக்காக.
“ப்ளீஸ் கௌதம் எனக்கு அம்மாவை பார்க்கணும் போல ஆசையா இருக்கு! என்னை கூட்டிட்டு போடா ப்ளீஸ்” என்று கௌதமிடமும் கெஞ்சினாள்.
வேறு வழியில்லாமல் ரதியை கூட்டிக்கொண்டுச் சென்றனர் நடக்க போகும் விபரீதம் அறியாமல்.
ஞாயிற்றுகிழமையாக இருக்க பொன்வண்ணனும் தூரிகாவும் வீட்டில்தான் இருந்தனர்.
கோதையும் தூரிகாவும் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தனர். ஆதிபெருமாளோ மாடியில் நின்று மாணிக்கத்திடம் “உன் ஆளுங்க எல்லாம் காரியத்தை கச்சிதமா முடிச்சுடுவாங்களா?” போன் பேசிக்கொண்டிருந்தார்.
பொன்வண்ணனோ புதிதாய் வாங்கி வந்த செடிகளை நிலத்தில் நட்டுக்கொண்டிருந்தான்.
கோதையோ “இந்த ரதி கண்ணுக்குள்ளயே இருக்கா... ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்னாலும் நீ வேண்டாம்னு சொல்ற வண்ணா” என்று வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருக்க...
“அம்மா” என்று பின்னால் வந்து கட்டிக்கொண்டாள் ரதி.
ரதியின் குரலை கேட்டு ஆனந்தப்பட்டு திரும்பிய கோதையோ “யாரு கூட வந்தடி! சிங்கம் வந்திருக்கானா?” என்று நப்பாசையுடன் வாசலை எட்டிப்பார்த்தார்.
கௌதம் வீரய்யன் நாச்சியுடன் வருவதை கண்டவரோ முகம் மலர்ந்தாலும் உள்ளம் வாடியது தன் சிங்கப்பயல் வரவில்லையென்று.
“அம்மா உங்க மருமகன் வருவாருனு கனவுல கூட நினைக்காதே! இந்த வானம் கீழே வந்தாலும் நம்ம வீட்டுக்கு உங்க ஆசை மருமகன் வரமாட்டாரு” என்றாள் சலிப்புடனே ரதி.
“வாயை மூடுடி காலம் இப்படியே போகாது என் மருமகன் என்னை பார்க்க வருவான் இது நடக்கும் பாரு” என்றார் உறுதியாக.
பொன்வண்ணனோ “நடக்காததை பேசி டென்சன் ஆகாதீங்கம்மா கூட பொறந்த தங்கச்சியை கூட வந்து பார்க்காம இருக்காரு” என கடுப்பாக பேசினான்.
அதற்குள் “டேய் மச்சான்” என்று பொன்வண்ணனை கட்டிக்கொண்டான் கௌதம்.
தூரிகாவோ அனைவருக்கும் காபி போட்டு எடுத்து வந்து கொடுத்தவள் “எப்படியிருக்க தாத்தா?” என்று வீரய்யனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
“நாங்க நல்லாயிருக்கோம் கண்ணு நீ எப்படியிருக்க?” என்றார் அவளின் கன்னம் தொட்டு.
“நல்லாயிருக்கேன் தாத்தா கல்யாண வீடு கலகலனு இருக்கும்ல” என்றாள் தான் இல்லை என்ற வருத்தத்தை மறைத்து புன்னகைத்தாள்.
“உன்னை கூட்டிட்டு போறதுக்கு தான் நாங்க வந்திருக்கோம் கண்ணு நீ இல்லாம நம்ம வீட்ல விஷேசம் நடக்குமா! உங்கப்பன் உன்னை கையோடு கூட்டி வரச்சொல்லிருக்கான்” என்று சந்தோசமாக சொன்னவரோ கோதையை பார்க்க அவரோ “அழைச்சிட்டு போங்கம்மா” என்றிருந்தார் புன்னகையோடு.
“ம்க்கும்” தொண்டையை செருமிய பொன்வண்ணனோ “முகூர்த்தத்துக்கு வந்துடுவோம் அம்மாச்சி அவளுக்கு எக்ஸாம் வருது... ஃபங்ஷன்ல கொட்டம் அடிச்சி படிக்காம இருந்திடுவா” என்றான் இறுக்கமான குரலில்தான்.
தூரிகாவோ “நா.நான் படிச்சிப்பேன் அப்பா வீட்டுக்கு போகணும்... எல்லாம் எனக்காக காத்திருப்பாங்க” என்றாள் அழுகை குரலில்.
“வண்ணா தூரிகா முன்ன நின்னு செய்ய வேண்டிய சடங்கு இருக்கு... அவளை அனுப்பி வை” என்றார் கோதை அதட்டலாக.
“தூரிகா நீ இப்பவே உங்க வீட்டுக்கு போனா நீ அங்கயே இருந்துக்கோ” என பட்டென்று பேசிவிட்டு “சாரிடா கௌதம்” என்று உள்ளே அறைக்குச் சென்றுவிட்டான்.
பொன்வண்ணன் தூரிகாவை தாய் வீட்டிற்கு போகவேண்டாம் என்று சொன்னதும் ரதிக்கு கொண்டாட்டம் தாங்கமுடியவில்லை. வீரய்யனும் நாச்சிக்கும் முகமே வாடிப்போனது. ரதிக்கோ இங்க நடப்பதை கண்டு இப்படி உங்க குடும்பம் அவமானப்பட்டு நிற்கறதை நான் பார்த்து இரசிக்க தானே வந்திருக்கேன் என்று மனதிற்குள் குத்தாட்டம் போட்டாள்.
ஆதிபெருமாளோ அங்கே வந்தவர் “சம்மந்தி வீட்டுக்கு அழைப்பு சொல்ல உங்க மகன் வரமாட்டாரோ... இதுதான் மாப்பிள்ளையை கல்யாணத்துக்கு அழைக்கும் முறையா?” என்று அவர்களிடம் சண்டைக்குச் செல்வது போல பேசினார்.
கோதையோ “என்னங்க சிங்கத்துக்கு பதிலா ரதி வந்திருக்கால்ல இது போதாதா..? எங்க வீட்ல எல்லாரும் வந்து பத்திரிக்கை கொடுக்கற நிலமையிலா அப்பனும் மகனும் பண்ணிவச்சிருக்கீங்க... நீங்க என்னை” என்று பேச்சை வாய்க்குள் விழுங்கிக்கொண்டவரோ “என்னை பேச வைக்காதீங்க நான் பொங்கினா நீங்க தாங்க மாட்டீங்க பார்த்துக்கோங்க” என்று காளியாய் அவதாரம் எடுத்து கத்தி விட்டார்.
கௌதமோ “ஆன்ட்டி பொறுமையா இருங்க நான் பொன்வண்ணாகிட்ட பேசுறேன்” என்று எழுந்தவனை “அண்ணாக்கு தூரிகாவை அனுப்ப விருப்பம் இல்லைனா நாம ஃபோர்ஸ் பண்ண வேணாம் கௌதம்... அவங்களுக்குள்ள வீணா சண்டை வரவைக்க நாம காரணம் ஆக வேண்டாம் பத்திரிக்கை வைக்கறது நம்ம கடமை நாம வச்சிட்டு கிளம்பிடலாம்... இங்க இருந்தா அம்மாச்சியும் தாத்தாவும் அவமானப்பட்டு நிற்கணும். என்னால பெரியவங்க கூனி குறுகி நிற்கறதை பார்க்க முடியலை” என்று நீலிக்கண்ணிர் வடித்தாள் கோதை கூட மகள் மாறிவிட்டாளே என்று நிம்மதி கொண்டார்.
தூரிகாவோ அழுதுக் கொண்டே இருந்தாள். அவளை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தனர் வீரய்யனும் நாச்சியும்.
“பொண்வண்ணா நீயும் சராசரி பெர்சனா நடந்துப்பேன்னு சத்தியமா நான் நினைக்கலைடா! பாரு தூரிகா அழறா... உண்மைய சொல்றேன் சிங்கம் அண்ணா வீடு சொர்க்கம்டா! பாசமா பேசுற ஐய்யனார் அப்பா, தாத்தா, பாட்டி, இன்னும் கொஞ்சம் சாப்பிடுப்பானு சொல்ற கோமதி அம்மா, பிரண்ட் போல மனம் விட்டு பேசுற குமரன் எல்லாரும் என்கிட்ட வேற்று ஆள் போல என்னை ஒதுக்கி வைக்காம பாசமா நடந்துக்குறாங்க.
நேத்து தாத்தா மைனர் செயின் போடுறாரு! பாட்டி எனக்கு மோதிரம் போடுறாங்க... சிங்கம் அண்ணா என் கல்யாணத்தை முன்ன நின்னு நடந்துறாரு! அந்த பாசக் கூட்டுல இருந்து நீ பிரிச்சு கூட்டிட்டு வந்தியே தூரிகாவை ஒரு நாலுநாள் அந்த பாசக்கூட்டுக்கு மீண்டும் வந்து தங்குறேன் சொல்ற பிள்ளையை ஏன் டா விடமாட்டேன்னு சொல்ற எனக்கு மனசு உறுத்துது நீ ஹார்ஷா பேசறது! நாமெல்லாம் உயிரை காப்பாத்துற டாக்டர்ஸ்டா! உயிரை காயப்படுத்தக்கூடாது" என்று பொன்வண்ணனிடம் கோபம் கொண்டு பேசினான்.
"டேய் தாத்தா அம்மாச்சியும் என்னையும் இப்பவே வானு கூப்பிடலை. அவங்க பேத்தியை மட்டும் கூப்பிட்டா போதுமா! நீ சொல்ற அந்த பாசக் கூட்டுக்குள்ள ஏன் டா என்னை சேர்க்கமாட்டேன்கிறாங்க" என்றான் ஆதங்கத்துடன்.
பொன்வண்ணன் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது.
“டேய் மச்சி என்னடா அழற... உன்னை அவங்க கூப்பிடாததுக்கு காரணம் சிங்கம் அண்ணாவுக்கும் உனக்கு ஆகாது அங்கே வந்து உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்துருச்சுனா என்ன பண்ணறதுனு கவலை பெரியவங்களுக்கு... உனக்கு இது கூட புரியாதா! கொஞ்சம் பிராக்ட்டிக்கலா திங்க் பண்ணுடா” என்றான் பொன்வண்ணனிடம்.
“சரிடா உன் தங்கச்சியை கூட்டிட்டு போ” என்று முகத்தை தூக்கி வைத்து சொல்லிய தருணம் “அண்ணா நான் எங்க அம்மாவீட்டுக்கு வரலை... தூரத்து விருந்தாளி போல முகூர்த்தம் நடக்குற நேரம் வந்துடுறேன். மூணாவது முடிச்சு போடும் உரிமையை எனக்கு கொடுங்க அதுபோதும்” என்றவளோ அழுதுக் கொண்டே பால்கனியில் போய் நின்று விட்டாள்.
“போய் சமாதானப் படுத்துடா” என்று பொன்வண்ணனின் முதுகை பிடித்துத் தள்ளினான்.
அவனோ “உன் தங்கச்சியை சாதாரணமா எடை போடாதே அவள் அமைதியான பெரிய புயல்” என்று அலட்டிக்கொண்டுச் சென்றவன் கண்ணீரை துடைத்துக்கொண்டு நின்றவளின் முதுகோடு உரசி நின்றான்.
“ம்ப்ச்” என்று சலித்துக் கொண்டு அவனை விட்டு தள்ளி நின்றாள்.
“சாரி நான் போக வேணாம்னு சொன்னதுக்கு... உங்க வீட்டுக்கு போய்ட்டு வாடி!” என்றான் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளது கையை பிடிக்க...
“தொடாதீங்க கத்தியில குத்துறது போல பேசிட்டு இப்ப மருந்துக்கு காயம் போடற வேலை வேண்டாம்... நான் போகலை” என்றாள் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு.
“நான்தான் சாரி சொல்லிட்டேனே போய்ட்டு வா துகா” என்றான் குரலை குழைத்து அவள் முன்னால் சென்று அணைத்துக்கொண்டான்.
“நான் போகலைங்க நான் போய்ட்டு வந்தாலும் என்னை மதிக்காத வீட்டுக்கு போய்ட்டு வந்திருக்கனு குத்தி காட்டி பேசுவீங்க வேணாம் சாமி ஆளைவிடுங்க! நான் உங்களோட அடிமை நீங்க சொல்றதை நான் கேட்டுத்தான் ஆகணும்” என்று அவன் அணைப்பிலிருந்து விலகிக்கொண்டாள்.
“இதுக்கு மேல உன்கிட்ட என்னால கெஞ்சமுடியாது.. போறதும் போகாததும் உன் விருப்பம்டி” என்று தோளைக்குலுக்கி வெளியே வந்தவனோ “அவ வரலைனு சொல்லிட்டா அம்மாச்சி நான் பேசினதுக்கு மன்னிச்சிடுங்க” என்றான் கையை கூப்பி.
வீரய்யனும் நாச்சியும் பொன்வண்ணனின் கையை பிடித்துக்கொண்டு “மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம் பேத்திக்கிட்ட முரடா நடந்துக்காதே. அவ கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராம வளர்த்தோம்... இப்ப அவ தேம்பி தேம்பி அழறதை எங்களால பார்க்க முடியலை... நல்ல நேரம் சிங்கமோ ஐய்யனாரோ இந்த இடத்துல இல்ல... அவங்க மனசு உடைஞ்சு போயிருக்கும்... சண்டைதான் வந்திருக்கும்... இப்படி எதுவும் நடக்க கூடாதுனுதான் ஐய்யனாரோ சிங்கமோ உங்க வீட்டுக்கு வரதில்லைப்பா” என்றார் விரக்தி பேச்சுடன்.
ரதியோ ஆதிபெருமாளை பார்த்து “எப்படிப்பா” என்று புன்னகைத்தாள். அவரோ "சந்தோசம்மா இன்னும் பண்ணனும்" என்றார் கீழ்த் தரமான எண்ணத்தில்.
அவளோ “நான் பண்ணுவேன்பா” என அவரது கையை அழுத்தம் கொடுத்துவிட்டு நாச்சியின் பக்கம் நின்றுக் கொண்டவளோ “அண்ணா அம்மாச்சி கிட்ட மன்னிப்பு கேளு” என்றாள் நல்லகுடி நாச்சிபோல நடித்தாள்.
கோதையோ ஆதிபெருமாளிடம் பேசிவிட்டு வரும் மகளை ‘நீ இன்னும் இந்த பாவி மனுசனை பத்தி தெரியாம அவன் சொல்றதை கேட்குறீயாடி’ மனக் கவலையுடன் பார்த்தார் ரதியை.
“நீங்க என்னையும் பேரனா நினைக்கலையே தாத்தா” என்று அவரை அணைத்துக்கொண்டு அழுதுவிட்டான் பொன்வண்ணன்.
கௌதம் அலர்விழி திருமணத்தை திருவிழாவாகவே கொண்டாடினார்கள். சிங்கம் முன்னே நின்று கல்யாண ஏற்பாட்டை கவனித்துக்கொண்டிருந்தான்.
இரவு சாப்பிட்டு முடித்த சிங்கத்திடம் நாச்சியோ “சிங்கம் நம்ம தூரிகாவையும் பொண்வண்ணனையும் கூப்பிடணும்ல... உனக்கு அந்த குடும்பத்தை பிடிக்காதுதான் இருந்தாலும் ஒத்தை தங்கச்சியை வச்சிருக்க அவ வந்து நின்னாத்தான் சபை நிறையும்பா!” என்றார் தயங்கியபடியே.
சிங்கத்திடமிருந்து என்ன பதில் வருமென்று குடும்பமே காத்திருந்தது. ஐய்யனார் உட்பட... கோதையை மன்னிச்சு தங்கையிடம் பேச ஆரம்பித்து விட்டார். ஆனால் ஜென்மத்துக்கும் ஆதிபெருமாளிடம் உறவு வைத்துக்கொள்ள மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார் ஐய்யனார். தங்கை ஏதோ மறைக்கிறாள் என்ற உண்மை அவருக்கு அப்போதே தெரிந்திருந்தாலும் அன்று அவளும் ஆதிபெருமாளை விரும்புகிறேன் என்று சொன்னதும் ஐய்யனாரால் எதுவும் செய்ய முடியாமல் போனது. இன்றுமே தனக்கு என்ன நடந்தது ஏன் ஆதிபெருமாளுடன் சென்றாள் என்பதை இதுவரை யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள் போட்டு பூட்டி வைத்திருக்கிறார் கோதை.
“கூப்பிடுங்க! ஆனா அந்த ஆதிபெருமாள் வரக்கூடாது!" என காட்டமாய் பேசிய சிங்கமோ காலியான குழம்பு பாத்திரத்தை கையில் வைத்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ரதியை முறைத்து பார்த்தான் சிங்கம்.
ரதியோ ‘ஆடு பகை குட்டி உறவோ இவனுக்கு! என்னை சக்கரையா சாப்பிட நான் இவனுக்கு வேணும்... என் வீட்டு ஆளுங்களை கூப்பிட மாட்டாங்களா’ என்று சிங்கத்தை மனதிற்குள் திட்டியவள் பாத்திரத்தை வேகமாக கொண்டு போய் சிங்கில் போட்டாள்.
“என்னம்மா சத்தம்?” என்று கோதை கேட்க “கை நழுவி விட்டுட்டேன் அத்தை” என்று ரதி சமாளித்தாள்.
ரதியின் பின்னால் வந்த சிங்கமோ அவளது இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை இழுத்து வாயை துடைத்து “ஏன் உங்கப்பனை கூப்பிடலைனு வருத்தமா இருக்கியாடி?” என்றான் தாடையை வருடிக்கொண்டே.
“எ.எனக்கு அப்பாவை கூப்பிடலைனு வருத்தம் இல்லை ! அவர் மேல நானே கோபமா இருக்கேன். சும்மா இருங்க. அலர்விழிக்கு நாம மூகூர்த்த புடவை எடுக்க காஞ்சிபுரம் போகலாமா?" என பேச்சை மாற்றினாள் ரதி.
'அப்படியே பேச்சை மாத்துற நீ!! என்கிட்ட உன் நடிப்பு செல்லுபடியாகாது டி பொண்டாட்டி' என்று உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து “நாம புடவை எடுக்க காஞ்சிபுரம் போக போறதில்லை.. காஞ்சிபுரத்துல இருந்து புடவை கடையே இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும் வா போகலாம்” என்று அவளது கையை பிடித்து வெளியே வந்தான்.
புடவை கடைக்காரரும் வண்டியிலிருந்து புடவை பேலை இறக்கிக்கொண்டிருந்தார். கௌதமும் நைட் ட்யூட்டி பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் முன்னேதான் வந்திருந்தான்.
நாச்சியோ “கோமதி அலர்விழியை கூட்டிட்டு வா” என்றதும்
ரதியோ “நானே அலரையும் தாரகையும் கூட்டிட்டு வரேன் அம்மாச்சி” என்று சென்றாள் அலர்விழி வீட்டுக்கு.
அலர்விழியோ “நான் வரல அக்கா! பெரியவங்க செலக்ட் பண்ணட்டும்” என்று மறுத்துவிட்டாள்.
அன்பரசியோ “ஏய் அலரு ரதி ஆசையா உன்னை கூப்பிடுறா! நீ போகாம நிற்குற...” மகளை கடிந்துக் கொண்டார்.
“இந்த காலத்து பொண்ணுங்களெல்லாம் முகூர்த்தப் புடவை எடுக்க போறதுனா... எல்லாருக்கும் முன்னால புறப்பட்டு நிற்பாங்க... நீ என்ன இப்படி தயங்கி நிற்க... நீ வந்து தான் ஆகணும்” என்று அலர்விழியின் கை பிடித்து கூட்டிக்கொண்டுச் சென்றாள் ரதி.
தாரகையோ “அக்காதான் வரலைனு சொல்றாங்கல்ல ஏன்மா இந்த ரதி அக்கா அலர் அக்காவை வலுக்கட்டாயமா கூட்டிட்டு போறாங்க” என்று ரதியின் மீது வெறுப்பு கொண்டு பேசினாள்.
“நீ சின்னப் பொண்ணு உனக்கு ஒண்ணும் தெரியாதுடி வா போகலாம்... உனக்கு புடவை எடுத்துத்தரேன்” என்று தாரகையை அழைத்துச் சென்றார் அன்பரசி.
புடவை கடைக்காரரை சுற்றி பெண்கள் அமர்ந்திருந்தனர். அலர்விழி கௌதம் இருப்பான் என்று நினைக்கவில்லை.
அவனோ “ஹாய் பிரண்ட்” என்று கண்ணைச்சிமிட்டினான். அவளோ “ஹாய்” என்று மெல்லிய சிரிப்புடன் அமர்ந்துக் கொண்டாள்.
அலர்விழியின் மேல் ஒவ்வொரு புடவையாக வைத்து காட்டி “இந்த கலர் நல்லாயிருக்கு அலர் எடுத்துக்கோ” என்று அலப்பறை செய்துக் கொண்டிருந்தாள் ரதி.
அலர்விழிக்கு எந்த கலர் புடவை எடுப்பது என்றே குழப்பமாக இருக்க கௌதமோ ரதியின் கையில் வைத்திருந்த மெருன் கலரில் புடவை முழுவதும் தங்க சரிகை பார்டரில் அன்னபட்சி இருக்கும் புடவையை கையில் எடுத்தவன் “இந்த விழிக்கு எடுப்பா இருக்கும் இதையே எடுத்துக்கோ” என்று அலர்விழியின் கையில் கொடுத்தவன் “பிடிச்சிருக்கா ப்ரண்ட்?” என்றான் அவளுக்கும் மட்டும் கேட்கும் படி.
அலர்விழிக்கோ இத்தனை பேர் முன்னால் வைத்து கௌதம் தன்னிடம் பேசுவது அவளுக்கு சங்கடமாக இருந்தது. கௌதமை காயப்படுத்த விரும்பாமல் “ம்ம்” என்று தலையை மட்டும் அசைத்தாள்.
ரதியோ ‘நான் இந்த புடவை எடுக்கலாம்னு பார்த்து வச்சிருந்தேன் அதுக்குள்ள அவளுக்கு எடுத்துக்கொடுத்துட்டானே இந்த கௌதம்’ என்று பொருமிக்கொண்டாலும் “வாவ் இந்த புடவை உனக்கு பொருத்தமா இருக்கு அலர்” என்றாள் வெளியே சிரித்து மனதிற்குள் குமறலாக.
மனைவியின் நடிப்பை இரசித்துப்பார்த்திருந்த சிங்கமோ “அலர் இன்னும் புடவை எடுத்துக்கோமா” என்றவனோ “புடவைகார அண்ணே! இன்னும் புடவை கலெக்சன் எடுத்து போடுங்க” என்றதும் புடவைக்காரரும் எடுத்து காட்டினார்.
அலர்விழியோ ரெண்டு புடவைகளை மட்டும் எடுத்து “போதும்” என்று விட்டாள்.
ரதியோ டஜன் கணக்கில் எடுத்து “இதெல்லாம் எனக்கு” என்று தனியாக எடுத்து வைத்துக்கொண்டாள்.
சிங்கமோ “ரதி நீ எடுத்து வச்சிருக்க புடவையெல்லாம் யார் யாருக்குனு சொல்லிடு” என்றான் உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து.
“ஹான் இந்த புடவையெல்லாம் எனக்கு ஒருத்திக்குதான்! அத்தை சித்திக்கு அம்மாச்சிக்கு எல்லாம் தனியா எடுத்து வச்சிருக்கேன்” என்று இன்னும் பல புடவைகளை காண்பித்தாள். புடவை எடுக்கும் பொறுப்பை ரதியிடம் கொடுத்து இருந்தனர்.
“இவ்ளோ புடவைக்கு என்னால பணம் தர முடியாது ரெண்டு புடவை எடுத்துக்கோ” என மனைவியிடம் ஒரண்டை இழுத்தான் சிங்கம்.
அவளோ கோபம் கொள்ளாதது போல “சரிங்க!” என்று ரெண்டு புடவையை மட்டும் எடுத்து வைத்துவிட்டு மீதி புடவையை எடுத்து புடவைக்காரரிடம் கொடுத்து முகத்தை அப்பாவியை போல வைத்துக்கொண்டாள்.
ஐய்யனாரோ “இந்தா ரதி கண்ணு பத்து புடவை என்ன இன்னும் பத்து கூட சேர்த்து எடுத்துக்கோ சிங்கம் கிடக்குறான் எல்லா புடவைக்கும் நான் காசு தரேன்! புடவைக்காரரே எங்க வீட்டு மருமக எடுத்த புடவையெல்லாம் கொடுத்துடுங்க” என்றார்.
ரதியோ “எப்படி” என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள்.
சிங்கமோ ரதி எடுத்த புடவைகளுக்கெல்லாம் சேர்த்தே பணத்தை கொடுத்தான்.
கௌதமோ சிங்கம் பக்கம் வந்தவன் “அண்ணே கோவிக்காதீங்க முகூர்த்த புடவைக்கு மட்டும் நான் பணம் கொடுக்கறேனே” என்று கண்ணைச்சுருக்கினான்.
சிங்கமோ கௌதமின் ஆசையை புரிந்துக் கொண்டவன் “சரிடா மத்த புடவைக்கு பணம் கொடுக்குறேன்” என்று மீதி புடவைக்கெல்லாம் பணம் கொடுத்தான்.
பத்திரிக்கை கொடுக்க கௌதமுடன் வீரய்யனும் நாச்சியும் கிளம்பியிருக்க ரதியோ “நானும் பத்திரிக்கை கொடுக்க வரட்டுமா அம்மாச்சி...? எனக்கு எங்க வீட்டுக்கு போகணும் போல இருக்கு” என நாச்சியின் தோளை சுரண்டினாள்.
“சிங்கத்து கிட்ட சொல்லிட்டு வா தங்கம்” என்றார் நாச்சி.
“ஆமா உங்க பேரன் போய்ட்டு வாடினு என்னை அனுப்பி வச்சிட்டுதான் மறுவேலை பார்ப்பாரு. உங்க பேரன் வரதுக்கு சாய்ந்தரம் ஆகிடும் நாம அதுக்குள்ள போய்ட்டு வந்துடலாம்” என்று அடம் பிடித்தவளை என்ன சொல்லி தடுப்பது என்று பெரியவர்களுக்கு தெரியவில்லை.
ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த ஐய்யனாரிடம் சென்ற ரதியோ “மாமா ப்ளீஸ் நீங்களாவது சொல்லுங்க எனக்கு எங்க வீட்டுக்கு போகணும்னு ஆசையா இருக்கு” என்று கெஞ்சலாக அவரது கையை பிடித்து கேட்ட மருமகளிடம் மறுப்பு தெரிவிக்க மனம் இல்லை அவருக்கு.
“சரி போய்ட்டு வாடா” என மருமகளின் தலையை வாஞ்சையாக தடவிவிட்டார்.
கோமதியோ “என்னங்க சிங்கத்துக்கு பதில் சொல்ல முடியாதே! அந்த வீட்டுக்கு ஏன் போனானு கோபத்துல கத்துவானுங்க!” என்று விசனப்பட்டார்.
“நான் பேசிக்குறேன் விடு கோமு ஆசையா போறேன்னு சொல்ற பொண்ணை என்னால தடுக்க முடியாது” என்று மனைவியை அடக்கிவிட்டார்.
கோமதியோ “அத்தை தூரிகாவை வரும்போது கூட்டிட்டு வந்துடுங்க அவளும் ஒரு நாலு நாள் நம்ம கூட இருந்துட்டு போகட்டும்” என்றார் மகளை தன்னுடன் வைத்து பார்க்க ஆசைப்பட்டு.
"சரி கோமதி" என்ற நாச்சிக்கோ தூரிகாவை தங்களது வீட்டுக்கு விடுவாங்களா நெஞ்சிற்குள் அச்சம் வந்தது.
குமரனிடம் ரதி பத்திரிக்கை கொடுக்க ஆதிபெருமாள் வீட்டுக்கு போறதை சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கியிருந்தார்.
கௌதமோ “சிங்கம் அண்ணாவுக்கு தெரியாம நீ வரது எனக்கு மனசுக்கு சரியாபடல ரதி” என்றான் நாசுக்காக.
“ப்ளீஸ் கௌதம் எனக்கு அம்மாவை பார்க்கணும் போல ஆசையா இருக்கு! என்னை கூட்டிட்டு போடா ப்ளீஸ்” என்று கௌதமிடமும் கெஞ்சினாள்.
வேறு வழியில்லாமல் ரதியை கூட்டிக்கொண்டுச் சென்றனர் நடக்க போகும் விபரீதம் அறியாமல்.
ஞாயிற்றுகிழமையாக இருக்க பொன்வண்ணனும் தூரிகாவும் வீட்டில்தான் இருந்தனர்.
கோதையும் தூரிகாவும் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தனர். ஆதிபெருமாளோ மாடியில் நின்று மாணிக்கத்திடம் “உன் ஆளுங்க எல்லாம் காரியத்தை கச்சிதமா முடிச்சுடுவாங்களா?” போன் பேசிக்கொண்டிருந்தார்.
பொன்வண்ணனோ புதிதாய் வாங்கி வந்த செடிகளை நிலத்தில் நட்டுக்கொண்டிருந்தான்.
கோதையோ “இந்த ரதி கண்ணுக்குள்ளயே இருக்கா... ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்னாலும் நீ வேண்டாம்னு சொல்ற வண்ணா” என்று வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருக்க...
“அம்மா” என்று பின்னால் வந்து கட்டிக்கொண்டாள் ரதி.
ரதியின் குரலை கேட்டு ஆனந்தப்பட்டு திரும்பிய கோதையோ “யாரு கூட வந்தடி! சிங்கம் வந்திருக்கானா?” என்று நப்பாசையுடன் வாசலை எட்டிப்பார்த்தார்.
கௌதம் வீரய்யன் நாச்சியுடன் வருவதை கண்டவரோ முகம் மலர்ந்தாலும் உள்ளம் வாடியது தன் சிங்கப்பயல் வரவில்லையென்று.
“அம்மா உங்க மருமகன் வருவாருனு கனவுல கூட நினைக்காதே! இந்த வானம் கீழே வந்தாலும் நம்ம வீட்டுக்கு உங்க ஆசை மருமகன் வரமாட்டாரு” என்றாள் சலிப்புடனே ரதி.
“வாயை மூடுடி காலம் இப்படியே போகாது என் மருமகன் என்னை பார்க்க வருவான் இது நடக்கும் பாரு” என்றார் உறுதியாக.
பொன்வண்ணனோ “நடக்காததை பேசி டென்சன் ஆகாதீங்கம்மா கூட பொறந்த தங்கச்சியை கூட வந்து பார்க்காம இருக்காரு” என கடுப்பாக பேசினான்.
அதற்குள் “டேய் மச்சான்” என்று பொன்வண்ணனை கட்டிக்கொண்டான் கௌதம்.
தூரிகாவோ அனைவருக்கும் காபி போட்டு எடுத்து வந்து கொடுத்தவள் “எப்படியிருக்க தாத்தா?” என்று வீரய்யனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
“நாங்க நல்லாயிருக்கோம் கண்ணு நீ எப்படியிருக்க?” என்றார் அவளின் கன்னம் தொட்டு.
“நல்லாயிருக்கேன் தாத்தா கல்யாண வீடு கலகலனு இருக்கும்ல” என்றாள் தான் இல்லை என்ற வருத்தத்தை மறைத்து புன்னகைத்தாள்.
“உன்னை கூட்டிட்டு போறதுக்கு தான் நாங்க வந்திருக்கோம் கண்ணு நீ இல்லாம நம்ம வீட்ல விஷேசம் நடக்குமா! உங்கப்பன் உன்னை கையோடு கூட்டி வரச்சொல்லிருக்கான்” என்று சந்தோசமாக சொன்னவரோ கோதையை பார்க்க அவரோ “அழைச்சிட்டு போங்கம்மா” என்றிருந்தார் புன்னகையோடு.
“ம்க்கும்” தொண்டையை செருமிய பொன்வண்ணனோ “முகூர்த்தத்துக்கு வந்துடுவோம் அம்மாச்சி அவளுக்கு எக்ஸாம் வருது... ஃபங்ஷன்ல கொட்டம் அடிச்சி படிக்காம இருந்திடுவா” என்றான் இறுக்கமான குரலில்தான்.
தூரிகாவோ “நா.நான் படிச்சிப்பேன் அப்பா வீட்டுக்கு போகணும்... எல்லாம் எனக்காக காத்திருப்பாங்க” என்றாள் அழுகை குரலில்.
“வண்ணா தூரிகா முன்ன நின்னு செய்ய வேண்டிய சடங்கு இருக்கு... அவளை அனுப்பி வை” என்றார் கோதை அதட்டலாக.
“தூரிகா நீ இப்பவே உங்க வீட்டுக்கு போனா நீ அங்கயே இருந்துக்கோ” என பட்டென்று பேசிவிட்டு “சாரிடா கௌதம்” என்று உள்ளே அறைக்குச் சென்றுவிட்டான்.
பொன்வண்ணன் தூரிகாவை தாய் வீட்டிற்கு போகவேண்டாம் என்று சொன்னதும் ரதிக்கு கொண்டாட்டம் தாங்கமுடியவில்லை. வீரய்யனும் நாச்சிக்கும் முகமே வாடிப்போனது. ரதிக்கோ இங்க நடப்பதை கண்டு இப்படி உங்க குடும்பம் அவமானப்பட்டு நிற்கறதை நான் பார்த்து இரசிக்க தானே வந்திருக்கேன் என்று மனதிற்குள் குத்தாட்டம் போட்டாள்.
ஆதிபெருமாளோ அங்கே வந்தவர் “சம்மந்தி வீட்டுக்கு அழைப்பு சொல்ல உங்க மகன் வரமாட்டாரோ... இதுதான் மாப்பிள்ளையை கல்யாணத்துக்கு அழைக்கும் முறையா?” என்று அவர்களிடம் சண்டைக்குச் செல்வது போல பேசினார்.
கோதையோ “என்னங்க சிங்கத்துக்கு பதிலா ரதி வந்திருக்கால்ல இது போதாதா..? எங்க வீட்ல எல்லாரும் வந்து பத்திரிக்கை கொடுக்கற நிலமையிலா அப்பனும் மகனும் பண்ணிவச்சிருக்கீங்க... நீங்க என்னை” என்று பேச்சை வாய்க்குள் விழுங்கிக்கொண்டவரோ “என்னை பேச வைக்காதீங்க நான் பொங்கினா நீங்க தாங்க மாட்டீங்க பார்த்துக்கோங்க” என்று காளியாய் அவதாரம் எடுத்து கத்தி விட்டார்.
கௌதமோ “ஆன்ட்டி பொறுமையா இருங்க நான் பொன்வண்ணாகிட்ட பேசுறேன்” என்று எழுந்தவனை “அண்ணாக்கு தூரிகாவை அனுப்ப விருப்பம் இல்லைனா நாம ஃபோர்ஸ் பண்ண வேணாம் கௌதம்... அவங்களுக்குள்ள வீணா சண்டை வரவைக்க நாம காரணம் ஆக வேண்டாம் பத்திரிக்கை வைக்கறது நம்ம கடமை நாம வச்சிட்டு கிளம்பிடலாம்... இங்க இருந்தா அம்மாச்சியும் தாத்தாவும் அவமானப்பட்டு நிற்கணும். என்னால பெரியவங்க கூனி குறுகி நிற்கறதை பார்க்க முடியலை” என்று நீலிக்கண்ணிர் வடித்தாள் கோதை கூட மகள் மாறிவிட்டாளே என்று நிம்மதி கொண்டார்.
தூரிகாவோ அழுதுக் கொண்டே இருந்தாள். அவளை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தனர் வீரய்யனும் நாச்சியும்.
“பொண்வண்ணா நீயும் சராசரி பெர்சனா நடந்துப்பேன்னு சத்தியமா நான் நினைக்கலைடா! பாரு தூரிகா அழறா... உண்மைய சொல்றேன் சிங்கம் அண்ணா வீடு சொர்க்கம்டா! பாசமா பேசுற ஐய்யனார் அப்பா, தாத்தா, பாட்டி, இன்னும் கொஞ்சம் சாப்பிடுப்பானு சொல்ற கோமதி அம்மா, பிரண்ட் போல மனம் விட்டு பேசுற குமரன் எல்லாரும் என்கிட்ட வேற்று ஆள் போல என்னை ஒதுக்கி வைக்காம பாசமா நடந்துக்குறாங்க.
நேத்து தாத்தா மைனர் செயின் போடுறாரு! பாட்டி எனக்கு மோதிரம் போடுறாங்க... சிங்கம் அண்ணா என் கல்யாணத்தை முன்ன நின்னு நடந்துறாரு! அந்த பாசக் கூட்டுல இருந்து நீ பிரிச்சு கூட்டிட்டு வந்தியே தூரிகாவை ஒரு நாலுநாள் அந்த பாசக்கூட்டுக்கு மீண்டும் வந்து தங்குறேன் சொல்ற பிள்ளையை ஏன் டா விடமாட்டேன்னு சொல்ற எனக்கு மனசு உறுத்துது நீ ஹார்ஷா பேசறது! நாமெல்லாம் உயிரை காப்பாத்துற டாக்டர்ஸ்டா! உயிரை காயப்படுத்தக்கூடாது" என்று பொன்வண்ணனிடம் கோபம் கொண்டு பேசினான்.
"டேய் தாத்தா அம்மாச்சியும் என்னையும் இப்பவே வானு கூப்பிடலை. அவங்க பேத்தியை மட்டும் கூப்பிட்டா போதுமா! நீ சொல்ற அந்த பாசக் கூட்டுக்குள்ள ஏன் டா என்னை சேர்க்கமாட்டேன்கிறாங்க" என்றான் ஆதங்கத்துடன்.
பொன்வண்ணன் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது.
“டேய் மச்சி என்னடா அழற... உன்னை அவங்க கூப்பிடாததுக்கு காரணம் சிங்கம் அண்ணாவுக்கும் உனக்கு ஆகாது அங்கே வந்து உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்துருச்சுனா என்ன பண்ணறதுனு கவலை பெரியவங்களுக்கு... உனக்கு இது கூட புரியாதா! கொஞ்சம் பிராக்ட்டிக்கலா திங்க் பண்ணுடா” என்றான் பொன்வண்ணனிடம்.
“சரிடா உன் தங்கச்சியை கூட்டிட்டு போ” என்று முகத்தை தூக்கி வைத்து சொல்லிய தருணம் “அண்ணா நான் எங்க அம்மாவீட்டுக்கு வரலை... தூரத்து விருந்தாளி போல முகூர்த்தம் நடக்குற நேரம் வந்துடுறேன். மூணாவது முடிச்சு போடும் உரிமையை எனக்கு கொடுங்க அதுபோதும்” என்றவளோ அழுதுக் கொண்டே பால்கனியில் போய் நின்று விட்டாள்.
“போய் சமாதானப் படுத்துடா” என்று பொன்வண்ணனின் முதுகை பிடித்துத் தள்ளினான்.
அவனோ “உன் தங்கச்சியை சாதாரணமா எடை போடாதே அவள் அமைதியான பெரிய புயல்” என்று அலட்டிக்கொண்டுச் சென்றவன் கண்ணீரை துடைத்துக்கொண்டு நின்றவளின் முதுகோடு உரசி நின்றான்.
“ம்ப்ச்” என்று சலித்துக் கொண்டு அவனை விட்டு தள்ளி நின்றாள்.
“சாரி நான் போக வேணாம்னு சொன்னதுக்கு... உங்க வீட்டுக்கு போய்ட்டு வாடி!” என்றான் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளது கையை பிடிக்க...
“தொடாதீங்க கத்தியில குத்துறது போல பேசிட்டு இப்ப மருந்துக்கு காயம் போடற வேலை வேண்டாம்... நான் போகலை” என்றாள் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு.
“நான்தான் சாரி சொல்லிட்டேனே போய்ட்டு வா துகா” என்றான் குரலை குழைத்து அவள் முன்னால் சென்று அணைத்துக்கொண்டான்.
“நான் போகலைங்க நான் போய்ட்டு வந்தாலும் என்னை மதிக்காத வீட்டுக்கு போய்ட்டு வந்திருக்கனு குத்தி காட்டி பேசுவீங்க வேணாம் சாமி ஆளைவிடுங்க! நான் உங்களோட அடிமை நீங்க சொல்றதை நான் கேட்டுத்தான் ஆகணும்” என்று அவன் அணைப்பிலிருந்து விலகிக்கொண்டாள்.
“இதுக்கு மேல உன்கிட்ட என்னால கெஞ்சமுடியாது.. போறதும் போகாததும் உன் விருப்பம்டி” என்று தோளைக்குலுக்கி வெளியே வந்தவனோ “அவ வரலைனு சொல்லிட்டா அம்மாச்சி நான் பேசினதுக்கு மன்னிச்சிடுங்க” என்றான் கையை கூப்பி.
வீரய்யனும் நாச்சியும் பொன்வண்ணனின் கையை பிடித்துக்கொண்டு “மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம் பேத்திக்கிட்ட முரடா நடந்துக்காதே. அவ கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராம வளர்த்தோம்... இப்ப அவ தேம்பி தேம்பி அழறதை எங்களால பார்க்க முடியலை... நல்ல நேரம் சிங்கமோ ஐய்யனாரோ இந்த இடத்துல இல்ல... அவங்க மனசு உடைஞ்சு போயிருக்கும்... சண்டைதான் வந்திருக்கும்... இப்படி எதுவும் நடக்க கூடாதுனுதான் ஐய்யனாரோ சிங்கமோ உங்க வீட்டுக்கு வரதில்லைப்பா” என்றார் விரக்தி பேச்சுடன்.
ரதியோ ஆதிபெருமாளை பார்த்து “எப்படிப்பா” என்று புன்னகைத்தாள். அவரோ "சந்தோசம்மா இன்னும் பண்ணனும்" என்றார் கீழ்த் தரமான எண்ணத்தில்.
அவளோ “நான் பண்ணுவேன்பா” என அவரது கையை அழுத்தம் கொடுத்துவிட்டு நாச்சியின் பக்கம் நின்றுக் கொண்டவளோ “அண்ணா அம்மாச்சி கிட்ட மன்னிப்பு கேளு” என்றாள் நல்லகுடி நாச்சிபோல நடித்தாள்.
கோதையோ ஆதிபெருமாளிடம் பேசிவிட்டு வரும் மகளை ‘நீ இன்னும் இந்த பாவி மனுசனை பத்தி தெரியாம அவன் சொல்றதை கேட்குறீயாடி’ மனக் கவலையுடன் பார்த்தார் ரதியை.
“நீங்க என்னையும் பேரனா நினைக்கலையே தாத்தா” என்று அவரை அணைத்துக்கொண்டு அழுதுவிட்டான் பொன்வண்ணன்.
Last edited: