ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மை டியர் சண்டக்கோழி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
5
வாணி ரெடி ஆயிட்டு, வச்சி இருந்தா விஷத்தை எடுத்துட்டு போறா குளியலறைக்கு, களவாணி படம் பார்த்துக் கேட்டுப் போய் இருக்கா...

"ஐயோ இந்த உயிர் இப்படி அல்ப் ஆயிசுல போக போதே" வாணிக்குக் குடிக்கவும் மனசு வரல,

"வாணி இன்னும் என்ன செய்ற சீக்கிரம் வா,கூப்பிட்றங்க உன்ன" னு வெளியே அரமிச்சிட்டாங்க கூப்பிட.

இத விட்ட அந்த கொரங்க கட்டிக்கணுமேனு ரொம்ப நேரம் யோசிச்சிட்டு, ஒருவழியா குடிச்சிட்டா.

ஒரேய முழுங்குல புல் பாட்டில் குடிச்சிட்டு, வெளியே மனமேடைக்கு வரா வாணி. ' இவளுங்க வேற என்ன வெக்க பட வைக்கிறேனென்று காண்ட ஏத்திட்டு வராளுங்க ' சுத்தி இருக்க பொண்ணுங்கள ஒரு முறை முறைக்கவும் எல்லோரும் அமைதியா ஆயிட்டாங்க.

அங்க வாசு, வாணிய வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கிறான். தாலிகட்ட இன்னும் அஞ்சி நிமிஷம்தான் இருக்கு.

' நம்ம வேஷம் சாப்பிட்டு இருக்கக் கூடாது இவனுக்கு வேஷம் வச்சி இருக்கனும், பொண்ணு மனசு புரியாத மிருகம் ' னு வாணி திட்டிட்டே உட்கார வாசு சிரிக்க, வாணி கடுப்பாக.

வாசு அடிக்கடி வாணிய ஒரு மார்க்கமா பாத்து சிரிச்சிட்டே இருக்கான்.

ஆகாஷ் அப்போதான் மண்டபத்துக்கு உள்ள வரான், குடும்பத்தோடுட, அன்னைக்கு எடுத்த சந்தன நிறம் சட்டை, வேட்டியில் வாணியைக் கவர்ந்து இழுக்க. அதை பாத்தா வாணி ' டேய்ய் எப்படி டா உனக்கு மனசு வருது, நம்மள பிடித்து இருக்குனு சொன்ன பொண்ணு கல்யாணத்துக்கு வரத்துக்கு ' மனசுல நல்லா திட்டிட்டு உட்கார்ந்து இருக்கா வாணி.

வாசு வாணி பக்கத்தில் குனிந்து, " கடைசியா பாத்துக்கோ உன் காதலனை, இனி உன்ன பாக்க கூட விட மாட்டேன் வாணி" னு வில்லத்தனமா சிரிக்க,

' அடச்சை இந்த வீனா போனவன் பேசறதை எல்லாம் கேக்கணும் னு எனக்கு தலை எழுத்து , இந்த மருந்து கலப்படம் போல, ச்சை இந்த விவஸ்தை கேட்ட விஷத்துக்குக் கூட நமக்குச் சாதகமா இல்லனு வாணி காண்டு ஆகிட்டா.

வாசுக்கு வயிறு கலக்குது திடீரென்று , அங்க அவன் பிரிண்ட்ட சொல்லிவிட்டு அவனோட அறைக்கு போறான்.

வாசு போய்ட்டு ரொம்ப நேரம் காணோம்னு மண்டபடத்துல ஒரே சலசலப்பு.

அய்யர் " எங்க பா பையன காணோம்" அவன தேடி போனவன் மட்டும் தனியா வர,

வாசு அப்பா, அம்மா " எங்க டா வாசு" னு பதறிட்டே கேக்க.

"அம்மா அவன காணோம் மா எல்லா இடத்துலயும் தேடிட்டேன்".

அப்புறம் எல்லோரும் மண்டபம் முழுவதும் அலசி தேடினாங்க வாசுதான் கிடைக்கல, மண்டபத்தையே ஒரு வழி பண்ணிட்டாங்க.

வாணி இங்க நடக்கிறத அமைதியா உட்காந்து வேடிக்கை பாத்துட்டு இருந்தால், ' போய் தொலைந்தான் டா சாமி, ஐயோ நம்ம வேற அவசரப் பட்டு விஷத்தை குடிச்சிட்டோமே வீட்டில் சொல்லிடலாமா யோசிச்சிட்டு இருக்கா அப்போ ஒரு லெட்டர் கிடைக்கிறது ஆகாஷ் கைக்கு.

"நான் வாணி ஓட சித்தி பொண்ணு தான் லவ் செய்தேன், வாணி தங்கச்சியைத் தான் நான் பொண்ணு பாக்க வந்தேன், திடீர் வாணி தான் பொண்ணு னு சொல்லிட்டீங்க.

நான் சொல்ல வந்த அப்போ யாரும் சொல்லக் கூட விடல, எனக்கு என்ன பண்றதுனு தெரில வனிதா டா போய் சொன்னா, அவ என்ன வேணா சொல்லிட்டா,

ஆனா எனக்குத் தெரியும் அவளும் என்ன லவ் பண்ற னு. நான் வனிதாவா கூட்டிட்டு போறேன் இல்ல கடத்திட்டு போறேன், அவ இல்லனா என் வாழ்க்கை இல்ல, அவளுக்கும் என்ன பிடித்து இருக்கு, அக்கா கூட பிக்ஸ் ஆச்சினு வேணா சொல்லிட்டா.

என்ன மன்னிச்சிடுங்க நா வனிதாவா கடத்திட்டு போறேன், அவளுக்கு பிடிக்குதோ இல்லையோ, அவ தான் என் பொண்டாட்டி, மயக்கத்துலயே தாலி கட்டி இருப்பேன், இப்போ நீங்க இந்த லெட்டர் படிக்கற நேரத்துல.

இப்படிக்கு இந்த சமயம் என்னை அனைவரும் வெறுக்கும் வாசுனு லெட்டர் முடிச்சி இருந்தான்.

இவனா இப்படி செய்தான்னு எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம், ஷாக் அடிச்ச குறைத்தான் எல்லோருக்கும். வாசு சத்தமாகூட பேசாத ஆளு எப்படினு யோசித்துக்கொண்டு இருக்காங்க. காதல் வீரனையும் கோழை ஆக்கும் கோழையையும் வீரானாக்கும் னு சும்மாவா சொன்னாங்க.

வாணிக்கு ஒரே நிம்மதி , ' அட பாவி என்ட சொல்லி இருந்தா நானே சேத்து வச்சி இருப்பானே டா, இவ்ளோ ட்ராமா செஞ்சிட்டயே '. வாணி வேஷம் குடிச்சதையே மறந்துட்டா.

இப்படி எல்லோரும் நெருங்கி சொந்தம், யார குறை சொல்றது யார்ட்ட சண்டை பிடிக்கிறது னு கூட தெரியாமல் எல்லோரும் மாத்தி மாத்தி மூஞ்ச பாத்துட்டு இருக்காங்க.

எல்லோரோட போகஸ் உம் வாணி பக்கம் வர.

' வாணி நடி டி, அப்போதான் நம்மள இனி கல்யாணம் செஞ்சிக்க சொல்லி டார்ச்சர் செய்ய மாட்டாங்க ' னு யோசிச்சிட்டு கீழ குனிஞ்சிகிட்டா.

வாணி பீல் பண்றதா பொருக்காத ஆகாஷ் ஓட அப்பா. பேச ஆரம்பிக்க, "இந்த குடும்பத்துல பெரிய மனுசனா ஒரு முடிவு எடுத்து இருக்கேன்".

எல்லோருக்கும் என்ன செய்றதுனு தெரில, மண்டைய மண்டைய ஆட்ட . "ஆகாஷ் போய் வாணி கழுத்தில் தாலி கட்டு". என்றார் உடனே கிளி பிள்ளை போல வாணி நோக்கிச் சிரித்துக்கொண்டே நடந்தான்.

பக்கத்தில் போய் ஜம்முனு உட்கார்ந்தான். அய்யர் அவசர மந்திரத்தை முதல இருந்து சொல்லத் தாலி கட்டி முடித்ததும்.

" என்ன டி நான் சொன்னது செஞ்சிட்டனா " னு வாணிக்கு மட்டும் கேக்கறது போல சொல்கிறான் ஆகாஷ்.

' அடப்பாவி, என்ட சொல்லி இருந்தா நானே வந்து இருப்பேன் டா, உன்ன கல்யாணம் செய்ய, வாணி இத சொல்லாத ஓவரா தலைமேல் ஏறி உட்காத்துப்பான் ' வாணி சோகமா மூஞ்சி வச்சிக்கறா.

மல்லி தான் கண்டாகிட்ட,' இவள போய் அண்ணினு கூப்பிடிடணுமா ' னு.

அந்த சமயம் பாத்து தாமரை " ஐய்ய் ஜாலி இனி ஒன்ன இருக்கலாம் மூணு பேரும் "னு சொன்ன உடனே. மல்லி தாமரை மண்டைல நாலு கொட்டு விடாமல் வச்சி "நானே கடுப்பா இருக்கேன், உன்னக்கென்ன டி ஜாலி".

ஐய் வலிக்குதே னு மண்டைய தேச்சிட்டு தாமரை அமைதியா இருந்தா.

கட்டி முடிச்சதும் , ஆகாஷ் அப்பா கண்ணன் "ஆகாஷ் போய் வாசுவைக் கண்டு பிடித்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா ".

"சரி பா "னு சொல்லி ஆகாஷ் அவங்க ரெண்டு பேரையும் தேட கொஞ்ச பேர் கூட்டிட்டு போய்ட்டான்.

மயிலுக்குத்தா தலை கால் புரியல, அவர் நினச்சா பொண்ணே மருமகளை வந்துட்ட னு. அம்மா மூஞ்சில எரிற பல்பு ஆ பாத்தா மல்லிக்கு ' உன்ன சும்மா விட மாட்டேன் வாணி '


6


வாசு வனிதாவா கண்டு பிடிச்சி, கூட்டிட்டு வரதுக்குள்ள நைட் ஆயிடுச்சி.

அது வரை நாலு குடும்பமும் ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் சங்கடமா பாத்துட்டு உட்காந்து இருந்தாங்க.

ஆகாஷ் கண்ணன்க்கு போன் பன்றான், வாசு கிடைச்சிட்டான்னு .

கார்ல கடத்தும் போதே அவ மயக்கத்துல இருக்கும் போது வனிதாக்கு தாலி கட்டிடன் வாசு.

ஆகாஷ் இவங்கல கூட்டிட்டு மண்டபத்துக்கு நேரா வரான், வாசு மூஞ்சி செம வீக்கம் அதை பாத்துட்டு, எல்லோரும் ஆகாஷ் தான் அடிச்சான் னு நினைச்சாங்க. ' அவன் தப்பு செஞ்சதுக்கு அடிச்சான் ' னு விட்டுட்டாங்க, ஆகாஷ் அப்பா கண்ணன் தான் ஆகாஷ் ஆ திட்டவும் வாசு ஒரு குட்டி பிளாஷ் போனான்.

மயக்கம் தேலியா சாயந்தரம் ஆயிடுச்சி எந்திரித்ததும், சூழ்நிலைய புரிஞ்சிட்டு, வனிதா அவன கழுத்துல இருக்க தாலிய பாத்துட்டு, அடி பின்னிட்டா, மூஞ்சி லாம் வெங்கிடுச்சி வாசுக்கு .

"ஆகாஷ் அண்ணா கரெக்டா வந்து தடுக்கலான, இவ என்ன கொன்னு இருப்பா" என்றான் வாசு பாவமாக.

வாணிக்கு தான் சிரிப்பு அடக்க முடியாம சிரிச்சிட்டா, எல்லோரும் வாணிய பாக்க.

"எனக்கு எந்த கஷ்டமும் இல்ல வாசு பீல் செய்யாதீங்க, என் தங்கச்சிய நல்லா பாத்துக்கோங்க. Arrange marriage இதுல நீங்க மாப்பிளயா இருந்தாலும் வேற யாராவது மாப்பிளைய இருந்தாலும் எனக்கு ப்ரோப்லேம் இல்ல " என்று சமாளித்தால் வாணி.

"எல்லோரும் வாணிக்கு எவ்ளோ தங்கமான புள்ள, அவ சேர வேண்டிய இடத்துக்கு தான் சேந்து இருக்கா" னு எல்லோரும் பேசிக்கறாங்க.

வாணி பக்கத்துல ஆகாஷ் வந்து நிக்கிறான், "எப்படி நா சொன்னதை செஞ்சிட்டானா '' னு கெத்தா வாணி தோல் மேல கை போடறான்.

வாணிக்கு ஈகோ டச் செஞ்சிட்டான், தோல் மேல போட்ட கைய யாருக்கும் தெரியாம தட்டி விடறா வாணி . " எப்படி லவ் இல்லாம பழிவாங்க இவன் இப்படி செஞ்சி இருக்கான் '' னு வாணி கரெக்ட் ஆ தப்பா புரிஞ்சிக்கிறா.

ஆகாஷ் க்கு இவ்ளோ வருஷம் இல்லாத சிண்டல்கள் எல்லாம், ஒன்ன தீத்துக்கணும் அப்புறமா வாழ்க்கையை பாத்துக்கலாம் னு நினைச்சிட்டு போறான்.

வாணி ஆகாஷ். வாசு கீர்த்தனா ஒன்ன நடந்து அவங்க அவங்க மாமியா வீட்டுக்கு போறாங்க. வாசு பேமிலி பிசினஸ் காகத்தை பக்கத்து ஊருக்கு போய் இருப்பாங்க. இப்போ அதை இந்த ஊர்லயே பண்ற பிளான்ல இங்க வந்துட்டாங்க.

வீட்ல போய் சாமி கும்பிட்டுட்டு, வாசுவும் வனிதாவும், வராங்க ஆகாஷ் வீட்டுக்கு .

தாமரை வாணிட்டா பேசிட்டே இருக்கா மல்லிக்கு தான் அது பொறுக்கல, சண்டையை ஸ்டார்ட் செய்யும் போது கண்ணன் வந்து. " மல்லி இனி சின்னப்புல மாதிரி அவ டா அடிச்சிக்காத, என்னதான் இருந்தாலும் அவ உனக்கு அண்ணி அப்படி தான் இனி கூப்பிடணும் " னு வேற அட்வைஸ் அதை கேட்டுட்டு,

' இனி அப்பா இருக்கும் போது ஒன்னும் பண்ணா முடியாது, அவர் இல்லாத அப்போ இவ வச்சி செஞ்சிக்கலாம் ' னு முடிவு செஞ்சிட்ட மல்லி.

தாமரை தான் இடை விடாம வாணிட்டா பேசிட்டு இருந்தா.

வாசு குடும்பம் வந்ததும் எல்லோரும் ஒன்ன சேந்து உட்காந்து சாப்டா ஆரம்பிக்கறாங்க. வாசுக்கு வாங்கின அடில வாய் திறக்ககூட முடில, ஜூஸ் போதும் னு ஒரு 2 டம்ளர் மெதுவா குடிச்சிட்டு, வனிதா சாப்பிடறது பாத்துட்டு இருக்கான் வாசு.

அந்த பக்கம் வாணியும், ஆகாஷ்ம் உட்காந்து சாப்டுட்டு இருக்காங்க .

திடீர் னு ஏதோ வயித்துல ஊருற மாதிரி இருக்கவும் வாணி குனிஞ்சி பாக்க, ஆகாஷ் அவனது விரல்களால், வாணியின் வெற்றிடையில் கோலம் போட்டுட்டு இருந்தான்.

வாணி ஷாக் ஆயிட்டா, வாயில போட்டு இருந்தா சாப்பாடா தூப்பவும் முடியல விழுங்கயும் முடில. அவஸ்த்தையா நெளிஞ்சிட்டு உட்காந்து இருந்தா வாணி.

வாணி நெளிவதை பார்த்த, வாணி அம்மா வந்து "என் டி நெளியற, இனி இப்படி இருக்க கூடாது அடக்க ஓடுக்காம இருக்கனும், இந்த குடும்பத்துக்கு னு ஒரு பேரு இருக்கு அட கேடுத்துடாத " என்று நல்லா டீச்சர் க்கு கிளாஸ் எடுத்துட்டு போனார் .

அத்தையின் குரலை கேட்டு கை எடுத்த ஆகாஷ் அவங்க அந்த பக்கம் போனதும், ஆகாஷை பார்த்து முறைக்க, ஆகாஷ் கண்ணாடிச்சிட்டான்.

' என்ன இவன் இப்படி பன்றான் '. அவஸ்த்தைல கண்களை அகலமாக விரிக்க.

" சீக்ரம் ரூம் க்கு வந்துடுடி, என்னால முடில இப்போவே மொத்தமா உன்ன கொள்ளை அடிக்கணும் " னு சொல்லிட்டு கை கழுவ போய்டுறான்.

"இவன் என்ன எப்படி பன்றான்", ஆகாஷ் செஞ்ச சேட்டைல, அவ விஷம் குடிச்சதையே மறந்துட்டா.

நைட் பொண்ணுங்கள இங்க வீட்ல இருக்கா சொல்லிட்டு மாப்பிளை ய ஒரு வாரத்துக்கு நைட் வெளில சொந்த காரங்க வீட்ல தங்க சொல்லிட்டாங்க. வாசு தான் அதிர்ச்சி . " என் என்னாச்சி " என்றான் பேச முடியாம.

வாசு ஓட அம்மா " இந்த மூஞ்ச வச்சிட்டு உனக்கு அது ஒன்னு தான் கொறையா, மொதல்ல இடத்த காலி பண்ணு" னு திட்டிட்டாங்க.

' ச்சை ஊரே kalaikuthu டா வாசுஉன்னை, அடக்கி வாசி ' என்று அமைதியா பக்கத்துல ஒரு சித்தப்பா வீட்ல தங்கிக்கிட்டாங்க.

ஆகாஷ் , வாசு ஒரு ரூம் ல தூங்கிட்டு இருக்கா .

மெதுவாக ஒரு ஒருவன் இருட்டில் வந்து, ஆகாஷை எழுப்ப. திடீர் னு கருப்பு உருவத்தை பார்த்த ஆகாஷ் கத்த போகும் போது, ஆகாஷ் வாயை அந்த உருவம் அடைத்தது .
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
7
அந்த உருவம் மொத்த பலத்தை கொண்டு, ஆகாஷை இழுத்து சென்றது பக்கத்து அறைக்கு, அங்கு போனதும் அந்த உருவம் போத்தி வந்த பெட் ஷீட்டை விலக்க.’ இவ தான நான் கூட யாரோ னு பயந்துட்டேன் ‘.

“வாணி இங்க என்ன பண்றா, “ என்று பார்த்துட்டு கேட்ட ஆகாஷ் . மறு நொடி “ என்ன டி இன்னைக்கே வேணுமா இந்த மாமா மொத்தமா? , ஒரு வாரம் கூட பொறுக்க முடில “ என்று ஆகாஷ் ஒரு கண்ணை அடித்து, வாணிய சீண்ட.

“ அது ஒன்னுதான் குறை, அது ஒன்னும் இல்லை, ஒரு விஷயம் சொல்லாத ஒளிஞ்சி ஒளிஞ்சி வந்தேன்”,

‘ கொலுசு நகை எல்லாத்தையும் கழட்டி வச்சிட்டு விவரமா தா வந்து இருக்க ‘ இருந்ததா பாத்தான் , கல்யாணம் அப்போ கட்டி இருந்தா புடவையை மாத்தி வேறு ரொம்ப மெல்லித ஒரு புடவை கட்டி இருந்தாள் வாணி, அதை பார்த்த ஆகாஷ் வாணியை நெருங்கி முரட்டு முத்தம் ஒன்னு கொடுக்க,

வாணிக்கு இது பிடிக்கல னு சொல்ல முடியாது, அவனிடம் இருந்து வேகமாக விலகிய வாணி, அவள் உதடை வேகமாக துடைத்துக்கொண்டு இருந்தாள்.

அவள் செய்கையை ஆகாஷ் கிண்டலாக சிரிக்க.” ஐயோ இத அப்புறம் கொடுங்க, உயிர் விஷயம் சீக்கிரமா பேசணும் “ என்றாள் வாணி பதட்டமாக. அவள் முகம் முழுதும் வேர்த்து போய் இருந்தது.

ஆகாஷ் அவள் முகத்தை ஆர்வமாக பார்த்துட்டு கொண்டே துடைத்து வீட்டிருந்தான், “ மாமா விடு, உன்ட ஒன்னு சொல்லணும் னு சொல்றேன் கேக்க கூட மாட்டேங்கிற, முன்னாடி தான் பிடிக்கல என்ன தாலி கட்டின அப்போ கூட பிடிக்கலயா என்று சொன்னவள் ஆகாஷ் நெஞ்சில் முகம் புதைத்து தெம்பி தெம்பி அழுது கொண்டு இருந்தாள்.

ஆகாஷ்க்கு என்னவோ போலானது, “ சரி வாணி நான் எதுமே பண்ணல, நீ சோல்ல வந்ததா சொல்லு “ என்றவள் வாணியை வளைத்து பிடித்து இருந்தா கைகளை விலகினான்.

வாணிக்கு அது சுத்தம் பிடிக்கல, அவன் கைகளை பிடித்து அவளை முன்பு அனைத்தது போல வைத்து கொண்டாள் ஆகாஷ் அவளின் சிறுபிள்ளை தனத்தை ரசித்தவாரு பார்க்க, “ இப்படியே இரு மாமா, அப்போதான் பயம் இல்லாம இருக்கும் “ என்றாள் அகஷின் முகத்தை பார்த்து.

‘ஆகாஷ், இப்படியே இவ ஒரசிட்டு இருந்தா ஒன் வீக் தாங்காது இப்போவே....’ என்று கற்பனைலே குதிரை ஓட்டியவனை அவளது கூர்மை நகத்தால் நான்கு கிள்ளி, நினைவுலகத்துக்கு அவனை கொண்டு வந்தாள் வாணி.

ஆகாஷ் சொல்லு என்பது போல பார்க்க.

“மாமா நான் கல்யாணம் பிடிக்காம, வேஷம் குடிச்சிட்டேன், எனக்கு பயமா இருக்கு உன்கூட இப்போ வாழ முடியாது, அதான் உன்ன பாத்துட்டே சகலாம்னு வந்தேன் “ அழுத்துக்கொண்டே திக்கி திக்கி சொல்ல, அவ சொல்லி முடிச்சதும்,

‘ பிடிக்கலல எந்த ஹேர்க்கு கல்யாணம் செஞ்சிக்க ஓகே சொன்ன ‘ என்று நினைத்து கோபமானன் ஆகாஷ்.

“விஷம் அப்போவே மத்தியாச்சு “ என்றான் ஆகாஷ் வாணியிடம் சிறிது நேரம் அழுகவிட்டுவிட்டு.

“யார் மாத்தினது ? எப்படி தெரியும் ?” வாணி கேள்விகளை அடுகிட்டே போனவளை, நிறுத்த சொன்னான் ஆகாஷ்.

"தெரியாது " என்றான் ஆகாஷ் கோவமாக ‘ வேற ஒருத்தன கல்யாணம் செஞ்சிக்க மண மேடை வரைக்கும், போவ ...எல்லாம் இவ இஷ்டத்துக்கு முடிவு எடுத்ததுதானே, என்னோட பீலிங் புரிஞ்சிக்காத இவ ட எனக்கு என்ன பேச்சி’ என்று விலகி நின்றான். அகஷின் திடீர் விலகள் வாணிக்கு ரொம்பவே வலித்தது.

“ என்னாச்சி ஆகாஷ், என்று வாணி நெருங்க.

“ அங்கவே இரு வாணி, என்னோட காதல் சொன்ன அப்பாவும் வேண்ட சொன்ன, இப்போ என்ன ஏதோ என்ன உயிருக்கு உயிர காதலிச்ச மாதிரி துடிக்கிற, இனிமே பக்கம் வந்த கழுதை நெருச்சி கொன்னுடுவேன்” என்று ஆகாஷ் ஒட்டுமொத்த கோபத்தையும் திராட்டி வாணியிடம் பேசிவிட்டான்.

வாணி “ அதுல முடியாது என் புருஷன் நான் வருவேன் “ என்று சற்று முன்பு ஆகாஷ் செய்ததை அவள் செய்ய, ஆகாஷை நெருங்க. வாணி என்ன செய்ய வர என்று பார்த்தவன் அவன் முகத்தை திருப்பி கொண்டான் ஆகாஷ்.

வாணி சும்மா விடுவாளா, அவன் முகத்தை அவள் புறம் திருப்பி மூத்தமிட நெருங்க, வாணியின் கழுத்தை நெறித்தான் ஆகாஷ். இது அவள் மூச்சி விட முடியாத வரை தொடர்ந்தது. அவள் துடிப்பதை பார்க்க முடியாதவன், வீட்டுட்டிட்டு அவனது சற்று முன்பு தூங்கிக்கொண்டு இருந்தா அறைக்கு போய்ட்டான்.

வரும் போது மறைந்து மறைந்து வந்தவள், இப்போது அந்த நினைவு கூட இல்லாமல், வேகமாக போய் ஆகாஷ் ரூம்க்கு போய்ட்டா. வாணிக்கு அவ செஞ்ச தப்பு புரியுது இருந்தாலும்,

“ இவரு என்ன லவ் செஞ்சறா, சொன்ன அப்போ நான் கண்டுக்காம யா போன்னேனா? , இது எப்போ நடந்தது ‘’ என்று எவ்வளவு யோசித்து பார்த்தும் வாணிக்கு ஞாபகம் வரல.

அப்படியே தூங்கிட்டா. நெஸ்ட் டே வாசுக்கு முகம் கொஞ்சம் வீக்கம் கொறஞ்சி இருந்தது. விருந்து கோவிலுக்குனு அது பாட்டுக்கு போய்ட்டு இருந்தது.

வாசு வினோட எவ்வளோவோ பேச முயற்சி செய்தும் அவளுக்கு கோபம் குறைய mல. வாணி சுய நினைவே இல்லாமல் அவளது நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தது . ஆகாஷ் அதான் பிறகு அவள் ஒருத்தி வீட்டில் இருப்பதை கண்டுக்க கூட இல்லை.

வாணி எப்போ பாரு மயிலு முந்தனையை பிடித்து கொண்டே சுத்திட்டே இருந்தா.

அதை பார்த்தமயிலு, “நான் பாத்துக்கிறேன் மா நீ போய் மூணு பேரும் ஏதோ பேசிட்டு இருக்காங்க, அங்க போ, நீ எதுக்கு இங்க சும்மா நின்னுட்டு இருக்க “ னு வாணி கையை பிடிச்சி இழுத்துட்டு போய் ஆகாஷ் பக்கம் உட்கார வச்சிட்டு அத்தை மயிலு வேலை பாக்க போய்ட்டாங்க.

8
மூணுப்பெரும் இவள ஒரு பொருளாக்கூட கண்டுக்கல, வாணிக்கு இந்த உதாசீனம் சின்ன வயசுல இருந்தே பிடிக்கல அதும் ஆகாஷ் பண்றது இன்னும் வலிச்சது வாணிக்கு.


' நீ செஞ்ச காரியம் அப்படி வாணி ' என்றது அவளின் ஒரு மனம்.


மறு மனமோ நீ அப்படி என்ன செஞ்ச வாணி, காதல் சொன்ன போது, ஏற்கால, வேற கல்யாணம் செஞ்சிக்க பாத்தான், இப்போ வேற ஒருத்தன் பொண்டாட்டி ஆயிட்டா அண்ணனுக்கு, தங்கச்சிக்கும் சீண்டி விளையாட ஆளு இல்லை ' என்று அவள் மனதை மாற்ற முயன்றது.


வாணி கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்தவள், மூவரும் ஒரு வார்த்தை கூட பேசாதது, மனதில் முள் தேய்க்க. ஆகாஷ் ரூம்க்கு போய்ட்டா.


கொஞ்ச மணி நேரம் கழித்து ஆகாஷ் வர, அழுது கொண்டு இருந்தவள் சட்டென்று கண்களை துடைத்து உட்கார்ந்து இருக்க.


அவளை உத்து பார்த்தவன் நெருங்கி வந்து " என்ன பேரஃஓர்மன்ஸ் செய்ய ஸ்டார்ட் செஞ்சிட்டாயா, இதல்லாம் நம்ப நான் ஒன்னும் முட்டாள் இல்லை " என்று ஆகாஷ் அவளது கண்ணீரை ரசித்துக்கொண்டு, கண்ணீரை சுண்டி விட .


ஆமா டா நடிக்கிறேன், உன்ன எப்படி மயக்கலாம் னு பிளான் செஞ்சிட்டு இருக்கேன் போதுமா " என்று கண்ணீரை துடைத்துக்கொண்டு.


"Mr.ஆகாஷ் என்னோட ஈகோவ டச் செஞ்சிட்டா, நீயா நானா பாத்துக்கலாம் டா '' என்று வீரவசனம் பேசிவிட்டு வேகமாக வெளியே போய் மயில் க்கு உதவிசேஞ்சிட்டு இருக்க, ' அப்படியே மல்லிய வம்பு இழுக்கனுமே என்ன செய்லாம் ' னு யோசிச்சிட்டு இருந்தார்.


வாணி தானா போய் "ஏன் தாமரை நீயும் நானும் ஒரே கலர் டிரஸ் போட்டு இருக்கோம் ல, வா ஒரு போட்டோ எடுத்துக்கலாம்" என்றாள்.


வாணி சரி என்று அவளது நீண்ட முடியை தூக்கி முன்னாடி போடா, தாமரை மல்லி இடம் போனை கொடுத்து, போட்டோ எடுக்க சொல்ல. மல்லிக்கு வயிறு ஏரியாத குறைத்தான். போட்டோ எடுத்து முடித்ததும் இருவரும் பார்த்துட்டு, ஒன்னு கூட சரி இல்லை னு சொல்லி திரும்ப திரும்ப மல்லியை போட்டோ எடுக்க வைத்தாள். மல்லி கடுப்பாகு" இனி எடுக்க முடியாது" சொல்லி போனை வைத்து விட்டாள்.


மல்லிக்கு கடுப்பாக ஆரம்பிட்டது வாணி தாமரை இடம் பேசுறது. அப்பா வீட்ல வெளியே தான் பேசிட்டு இருக்கார், இவ ட வம்பு வளத்தை சரி வரது னு மல்லி செலன்ட் ஆ இருக்க. சும்மா இருந்தவளா வாணி மறுபடி சிண்ட ஆரம்பித்தாள்.


" தாமரை நீயும் நானும் எல்லாம் ஒன்னுப்போல கலர், ஹெயிட் " என்றாள் வாணி. அவள் மல்லியை வெறுப்பு இதைத்தான் பேசுற என்று தெரியாத தாமரை.


" ஆமா வாணி, ஸ்கூல் ல கூட எல்லோரும் சொல்லுவாங்க" என்றாள்.


அத்தை கேட்ட மல்லிக்கு ஆத்திரம் போங்க அமைதியா இருந்தது எல்லாம் எங்கோ பறந்து சென்றது.


"ஆமா டி நான் கலர் கொஞ்சம் உங்கள விட கம்மிதான் அதுக்கு என்ன சொல்ற, வந்துட்டா மினிகிகிட்டு " என்று மல்லி போட்ட சாதத்துல எல்லோரும் வந்துட்டாங்க.


தூங்கி கொண்டு இருந்தா, ஆகாஷ் வந்து "என்ன சத்தம் இங்க, நிம்மதியா தூங்க விடறீங்களா என்ன " என்று ஆகாஷ் கோவமாக பேசிட்டு,


கண்ணன் மல்லிக்கு பொறுமையா அட்வைஸ் பண்ணாரு,மொதல்ல இருந்து,


"எந்த நேரத்துல இவ வந்தாலோ தெரில எல்லாம் போச்சி" என்று வாணிக்கு மட்டும் . வாணிக்கு கோவம் வந்தாலும் அதை எல்லாம் விட்டுட்டு.


" ஆமாடா உன் நிம்மதி இனி உண்ட இருக்க போறதில்ல " என்று ஆகாஷ் க்கு சவால் விட்டாள்.


ஆகாஷ் கோவமா போய்ட்டான், வாணிய மொறச்சிட்டு.


' மல்லி இனி ஜாக்கிறதையா இருக்கனும் இவ ட நல்ல இன்னைக்கு என்ன மாட்டி விட்டுட்டா, இனி இருக்கு டி நானும் ஏதோ போனா போது னு விட்ட ஓவர் ஆ துள்ளுறா ' இன்னும் வஞ்சத்தை வளர்த்தாள் மல்லி மனதில்.


தாமரையும், எப்போதும் சாந்தம் தேவைக்கு அதிகமா கூட பேச மாட்டான்.


அதனால அப்பா அவளுக்கு எந்த அட்வைஸ் உம் செய்லா.


வாணிக்கு மனசுல கவலை இருந்தாலும், எப்போ அட நடிப்பு னு ஆகாஷ் சொன்னானோ அப்போவே இனி அவன் முன்னாடி நிமிந்து நிக்கணும் னு முடிவு எடுத்து டா.


அப்போ இருந்து ஆகாஷ் எது பேசினாலும் எட்டிக்கு போய்டியாவே பேசிட்டு இருந்தா வாணி.


ஆகாஷ் அத்தை ரசித்தாலும், அவனுக்கு மனசுல அந்த வடு, நம்ம காதல அலட்சிய படுத்தினவள் மீது.


ஆகாஷ் குளித்து விட்டு வெளியே வர வாணி எதையோ தீவிரமா தேடிட்டு இருந்தா. ஆகாஷ் ரூம் ல "என்ன சத்தம் கேக்குது" என்று யோசித்து கொண்டே வந்தான். வாணி ஏதோ தேவிரமா தேடிக்கொண்டு இருந்தாள், தேடினது கிடைக்கல னு கொஞ்சம் சோர்வா ஆகிட்டா.


"என்னாடி தேடற என் ரூம் ல " என்று ஆகாஷ் குரல் கேக்கவும், பதறி அடித்து எழுந்தவள்.


"அது வந்து ஒன்னு இல்லை "னு வெளியே ஓட பாத்தா.


ஆகாஷ் அவள் ஓடுவதை புரிந்து கொண்டு லாவகமாக பிடித்தான். " சொல்லு டி என்ன திருடன் வந்த என் ரூம் ல "


"ஆமா மைசூர் மகாராஜா இடம் வந்து திருடிட்டு போக, என்ன இருக்கு இங்க, ஒரு ரூம் புல் ஆ வேல வெட்டி சட்டை, ஏழு ஜட்டி, அஞ்சி பனியன், இத திருடி நான் என்ன யூஸ் ஆ செய்ய முடியும் என்றாள் " நக்கலாக. அவனுக்கேய அவனோட டிரஸ் கணக்கு தெரியாது.


" அப்போ இத கணக்கு எடுக்கத்தான் மேடம் இங்க வந்திங்க " என்று முறைதான்.


வாணி பேச முடியாமல் திணற , அதை ரசித்தவன். " கணக்கு தப்பு " என்றான்.


" எப்படி, இல்லையே கரெக்ட் ஆ தான் சொன்னேன் " என்றாள் உறுதியாக .


"கிழிச்ச பாத்ரூம் ல ஒன்னு இருக்கு இப்போ ஒரு செட் டிரஸ் போட்டு இருக்கேன் இத யார் கணக்குல சேக்குவாங்க " என்றான் ஆகாஷ் வாணியை கணக்கில் வீழ்த்திவிட்டோம் என்று.


"சரி ஏதோ பெருசா தேட வந்து இருக்க, அதும் நான் இல்லாத நேரத்துல அதனால உனக்கு என்ன பனிஷ்மென்ட் குடுக்கலாம் ?.... நீயே சொல்லு வாணி ".


வாணி முழித்தாள் ' ஐயோ வசமா மாட்டிக்கிட்டோமே ' எப்படியாவது எஸ்கேப் ஆகணும் என்று யோசித்து கொண்டு இருந்தான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
9
வாணி நைசா நழுவ பாத்தா,

"வாணி இங்க கொஞ்சம் வா மா னு ," மயிலு கூப்பிட.

ஆகாஷ் அவ கைய பிடிச்சிட்டு விடல.

" அத்தை கூப்பிட்றங்க நா போறேன் " னு போக பார்த்தவளா இழுத்து பிடிச்சி.

ஆகாஷ் அம்மா டா " அம்மா அவளுக்கு இங்க நிறைய வேல இருக்கு நா கொஞ்ச நேரம் கழிச்சி அனுப்பி வைக்கிறேன் உங்க ஆசை மருமகளை" னு சொல்லவும் அவங்க,

" சரி டா நாங்க நாலு பேரும் கோவிலுக்கு போறோம் சமைச்சி சாப்டுக்கோங்க " னு சொல்லிட்டு கிளம்பிட்டங்க.

ஆகாஷ் க்கு தெரியும், ஒரு வாரம் முடிஞ்சிடுச்சி, இன்னைக்கு அவங்களுக்கு தனிமை கொடுக்க ஒரு வாரம் ட்ரிப்க்கு போய்ட்டாங்க எல்லோரும்.

ஆகாஷ் டா மட்டும் தான் சொன்னாங்க. பேமிலி யே ட்ரிப் போயிடுச்சி நாலு பேமிலி.

வாசு அவங்க கிளம்பரத பாத்துட்டு உட்காந்து இருக்கான், வனிதா போய் எல்லோரையும் வழி அனுப்பிட்டு வர,

வாசுட பேசலாமா வேணவா னு யோசிச்சிட்டே கிட்சேன்க்கு போற. அவனுக்கு காபி எடுத்து வந்து தரா.

"எனக்கு வேண்டா " னு சொல்லிட்டு அவன் சோபா ல சாஞ்சி கண்ணா மூடிக்கிறான்.

வனிதாக்கு ஒரு மாதிரி ஆயிடுது. " எங்க நா அக்காவை பாத்துட்டு வரவா " என்றாள் மெதுவாக.

வாசு ஹ்ம்ம்ம் மட்டும் சொல்லறான்.

வனிதாக்கு இவன்ட பேச கூட நார்மல் ஆ வரல. ' வாணி அக்கா பீல் பண்ணுவாங்களோ இவர பிடிச்சிதான கல்யாணத்துக்கு சரி சொன்னாங்க ' னு யோசிச்சிட்டே போறா, என்னதான் மண்டன்பதுல வாணி சொன்னது ஏதோ சமாளிக்கிறது போல தான் தெரிஞ்சது.

ரெண்டு தெரு தள்ளி ஆகாஷ் மாமா வீடு, நடந்தே போய்டுலாம் னு வாசலை தண்டவும், வாசு வண்டி எடுத்துட்டு வந்து அவ முன்னாடி நிக்கிறான்.

" இல்லங்க நானே போய்டுறேன், பக்கம் தான " வனிதா சொன்னதும் வாசு திரும்பி முறைக்கவும் வனிதா வாயை மூடிட்டு வண்டில ஏறி உட்கார எதுமே சொல்லாம.

' எதுக்கு இப்படி மொறைக்கறாங்க இவங்க ' யோசிச்சிட்டேய் வனிதா போற,

அங்க ஆகாஷ் வீட்ல " சரி என்ன திருடன் வந்தேன் னு சொல்லு விட்டுடறேன் " என்று அவள் கையை பிடித்துக்கொண்டு பிடிவாதமாக அவனை முறைத்து பார்க்க.

"நான் எதுமே திருடன் வரல சும்மா சுத்தி பாத்தேன் " என்றாள் வாணி சாவகாசமாக.

"சுத்தி பாத்தா இப்படி தான்,ரூம் கலஞ்சி இருக்குமா " னு ஆகாஷ் வாணி மூஞ்ச அப்படி இப்படி னு திருப்பி ரூம் புல் ல பாக்க வைக்கறான்.

ஆகாஷ் கொஞ்சம் அழுத்தி அவளோட மூஞ்ச பிடிக்கவும் " வலிக்குது மாமா " சிணுங்கிட்டு இருக்க .

"அப்போ நீ சொல்லமாட்டான் எதுக்கு வந்தன்னு , சரி பனிஷ்மென்ட் தான் உனக்கு கரெக்ட் ".

' ஐயோ பனிஷ்மென்ட் ஆ , எடக்கு மூடக்கா கொடுத்த என்ன செய்றது ' னு வாணி யோசிக்க. என்ன பனிஷ்மென்ட் னு மெதுவா புலி பாத்துங்க.

"ஒன்னு பெரிய தண்டனைலாம் இல்லை, பாத்ரூம் ல என் ஜட்டி தொவச்சி போடு போ " என்று ஆகாஷ் கூல் ஆ சொல்ல .

வாணி மூஞ்சில அவலோ அதிர்ச்சி "அய்ய்ய்ய் சீய்ய் நான் ல துவைக்கமாட்டேன் போடா நீயே துவைச்சுக்கோ " என்று மூஞ்ச சுழிக்க.

ஆகாஷ் அசந்த நேரம் வெளியே ஓட பாக்க, ஹால் வர தப்பிச்ச வாணி, அதுக்கு மேல ஆகாஷ் விடல அவளோட நீளமான ஜடைய பிடிச்சி இழுக்க, வலி பொறுக்கமா வாணி அங்கவே நின்னுட்டா.

ஆகாஷ் வீட்டு வாசலை நிறுத்திட்டு கிளம்ப பாக்கறேன் வாசு . " வாங்க மாமா நீங்களும்", ஒரு பெருமூச்சோட வாசு பைக் லாக் பண்ணிட்டு இறங்கி வரான்.

ரெண்டு பேரும் பாத்தா காட்சி, வாணி முடிய ஆகாஷ் பிடிச்சி இழுத்து, வாணி மண்டைல நல்லா நான்கு நான்கு னு அடிக்கிறததான்.

வனிதா அத பாத்துட்டு வாசுவை வாசலை விட்டுட்டு ஓடி வந்து,

"ஆகாஷ் மாமா நீங்க பண்றது ஒன்னுகூட சரி இல்லை, எதுக்கு என் அக்காவை கொடும படுத்திரிங்க " என்று வனிதா போங்க .

வாசு ஆகாஷ் முழிக்கிறத பாத்துட்டு சிரிச்சிட்டே உள்ள வரான் , " அண்ணா கல்யாணம் வாழ்கை ஜோரா போது போல ," என்று வாசு கேட்க.

"நீ வீரடா மூட்டை பூச்சியா கட்டி வச்சிட்டு, ஒரேய கடி என்றான் ஆகாஷ், ஒன்னும் தெரில நான்தான் எல்லாம் சொல்லி தரணும், மாமா மாமா னு நாலு பூரா ஒரேய நச்சரிப்பு , அவளுக்கு துணி கூட தொவைக்க தெரில "என்று ஆகாஷ் வாசுவிடம் குற்ற பத்திரிகை வாசிக்க.

' அத பாவி துணி ஆ தொவைக்க சொன்ன ', வாணி ஆகாஷ் ஆ மொறச்சிட்டு நின்னுட்டு இருந்தா.

ஆகாஷ் வாணிய பாத்து கண் அடிக்க கரெக்ட் ஆ வாணி பாத்தாளோ இல்லையோ வனிதா பாத்துட்டா . அப்போ எதுமே ப்ரோப்லேம் இல்லை போல னு அமைதியா ஆயிட்டா வாணி.

வாசு, ஆகாஷ் அவலோ சாதாரணமா பேசிட்டு இருந்தாங்க, இங்க என்ன நடக்குது னு வானிக்கும் வனிதாக்கும் புரியல.

வனிதா தான் ரொம்ப குழம்பி ஆகாஷ்யும் வாசுவையும் மாத்தி மாத்தி பாத்துட்டு இருந்தா.

வாணி கிட்சேன் ல காபி போடறேன் னு ஏதோ போட்டுட்டு வந்து கொடுக்க, ஒரே சக்கர .

வாசு வாணிய பாத்து, " ஜூஸ் சூப்பர் ஆ இருக்கு அண்ணி, என் ஒன்னு ஜூஸ் கொஞ்சம் சுட இருக்கு, என் னு தான் தெரில ' வாசு வாணிய கலாய்க்க.

"வாசு என் பொண்டாட்டி ரொம்ப புதுமையானவ டா, டெய்லி டிஃபரெண்ட் டிஃபரெண்ட் ஆ எதாவது செய்வ, வேணும் நா உன் பொண்டாட்டிய இவட்ட அனுப்பி வை டா "

வாசு பதறிட்டான் , "அவளுக்கு சமைக்க தெரியாதது தெரியுமே இருக்கட்டும் அண்ணா, என்னால தாங்க முடியாது எலியா மாற டெய்லி சாக " என்று வாசு வாணியை பார்த்துட்டு சிரிக்க.

வனிதா தான் கொளம்பிட்டா என்ன நடக்குது இங்க னு, வாணியும் அதே தா நினைச்சிட்டு இருந்தா, இத மொதல்ல கண்டு பிடிக்கணும்.

யோசிச்சிட்டு இருக்கும்போது ஆகாஷ் வாசுக்கு ஒன்ன போன் வந்தது, எதுக்கு போன் பண்ணாங்க னு வனிதா, வாணி கேட்க.

சொன்ன பதில் ல ஷாக் ஆயிட்டாங்க ரெண்டு பேரும்.

10

ஆகாஷ் மண்டைய மண்டைய அட்டி போன் வச்சிட்டேன் .

வேலைக்காரங்க வருவார்கலாம் ரூம் டெகரேட் செய்ய.

" ஆல்ரெடி டெகரேர் செஞ்சி தான இருக்கு".

இவங்க பேசிட்டு இருக்கும்போதே ரெண்டு வேலைக்காரங்க வந்தாங்க. ஆகாஷ் ரூம் க்கு போக அனுமதி கேட்டுட்டு ஒரு கூட புல் ஆ விதவிதமா பூவோட உள்ள போறாங்க.

' வாணி அத ச்சை இத கூட தெரியாம கேட்டுட்டோமே '.

கொஞ்ச நேரம் கழிச்சி வாசுவை தேடி ஒரு வேலைக்காரன் வரா.

"அண்ணா வீட்டு சாவி வேணும் ", வாசுவும் எதுமே சொல்லாம எடுத்து குடுக்கறான். வனிதாக்கு பதட்டம் தோத்திக்குது.

நிறைய குழப்பமா இருக்கு இதுல இது ஒன்னு தா குறை பாரு னு யோசிச்சிட்டே வாணிய தேடி போற. வாணி அவ புதுசா வச்ச செடிக்கு தண்ணி ஊத்திட்டு இருக்கா.

"வாணி கா " னு வனிதா தயங்கி நிக்க .

"வனிதா வா டி, இங்க பாரு புதுசா வச்சி இருக்கேன் னு அவ தொட்டில வச்சி இருக்க ரோஸ் செடியை காட்டா .

"அழகா இருக்கு கா பூவைக்கும் போது இன்னும் அழகா இருக்கும் ". வாணி அமானு போல தலையை ஆட்ட .

"அக்கா உண்ட ஒன்னு கேக்கணும் '',

"சொல்லு டி ".

"அக்கா வாசு மாமாவ பிடிச்சிதா கல்யாணத்துக்கு ஓகே சொன்னாயா, இல்லை வீட்ல சொன்னாங்க னு ஓகே சொன்னாயே ?" என்றாள் தயங்கி கொண்டு.

"நா மண்டபத்துல உண்மைதான் சொன்னேன் வனிதா ", என்றாள் வாணி.

"ஆகாஷ் மாமா வா லவ் பண்றயா ?"

வாணி ஹ்ம்ம்ம் சொல்ல ,

"அப்பாடா இப்போதான் கா நிம்மதியா இருக்கு, வாசு ட இன்னும் நா பேச கூட இல்லக்கா கோவத்துல ".

"மனச போட்டு குழப்பிக்காத, ரெண்டு பேரும் சேர வேண்டிய இடத்துக்கு தா சேந்து இருக்கோம் " வாணி வனிதா ட சொல்ல.

வனிதா ஹாப்பி ஆ கீழ வந்து, "வாசு மாமா நம்ம வீட்டுக்கு போலாமா " னு ஒரு துள்ளளோடு சொல்ல.

வாசுவும், வனிதாவா குழப்பமா பாத்துட்டு வண்டில ஏற. என்ன இவ திடீர் னு பேசற, அதும் மாமாவாமே'.

வீட்டுக்கு பக்கம் போனா அப்பவும் வனிதா வண்டில இருந்து இரங்கல.

"வனிதா இறங்கு வீடு வந்துடுச்சி", என்றான் வாசு.

" மாமா எங்காவது கூட்டிட்டு போறயா, நான் எங்கயும் வெளியே போனதே இல்லை" னு வருத்தமா சொல்ல. வாசுக்கு தெரியும் வனிதா வீட்ல அவ்ளோவா செழிப்பான குடும்பம் ல இல்லை. அன்னைக்கு சம்பாரிச்சி தான் சாப்பிடணும்.

முதல அவளை பாக்கும் போது இருந்தே வனிதா மேல ஒரு ஈர்ப்பு, அவளோட மேக் அப் எதுமே இல்லாத லட்சணமான அழகு, வாசுவை சுண்டி இழுத்து அவளது.

எப்படியாவது இவளத்தை கடிக்கணும் னு வீட்ல பேச போகும் போது சொல்லவும், அவலோ சந்தோசம் அப்புறம் தா தெரிஞ்சது, வாணி பேர வனிதா னு எங்க வீட்ல மாத்தி சொல்லிட்டாங்க.

நான் பேர கேட்டதும், எனக்கு நீங்க சொன்ன சரிதான் னு சொல்லிட்டு, கொஞ்சம் திண்டாட்டிட்டேன் சொல்லவும் முடியாம மேலயும் முடியாம.

டவுன் க்கு வேகமா போனா ஒரு அறை மணி நேரதுக்குள்ள போய்டுலாம்.

வாசு அவளை முதல கூட்டிட்டு ஒரு ஹோட்டல் க்கு கூட்டிட்டு போனான். சாப்பாடு ஆர்டர் செய்றன். வனிதா வாசுவை வைத்த கண் வாங்காமல் பாக்க.

"எதுக்கு இப்படி பாக்கிற " னு வாசு கேட்டே கேட்டுட்டான்.

"எனக்கு பிரியாணி பிடிக்கும் னு உங்களுக்கு எப்படி தெரியும் " என்று கேட்டாள் வனிதா ஆர்வமாக.

"தெரியும் தெரியும், வாணியும் நீயும் டிரஸ் எடுக்கும்போது எல்லோரையும் கழட்டி விட்டுட்டு கொட்டிக்க போனதா பாத்தேன்,"

" நான் வந்ததே யாருக்கு தெரியாது உங்களுக்கு எப்படி தெரியும் ,?"

"அன்னைக்கு பாத்தேன், திடீர் னு வாணி அவங்க அம்மாட்ட சொல்லிட்டு எங்கோ போனா, அப்போதான் பாத்தேன் வேகவேகமா சாப்டுட்டு ஒரு அரைமணி நேரத்துல திரும்பி வந்துட்டா, நீ பார்சல் வாங்கிட்டு வீட்ல போய் கொட்டிக்கிட்டதும் தெரியும் ."

"வாசு மாமா என்ன அவலோ பிடிக்குமா ?"

"உன்ன மட்டும் தா பிடிக்கும் " என்றான் வாசு கண்கள் மின்ன.

"அப்போ என் அக்காவை...." தயங்கி தயங்கி கேட்டுட்டா.

"நான் உன்ன லவ் பன்றான் இதுமட்டும் இப்போதைக்கு உனக்கு தெரிஞ்ச போதும் வனிதா. எதுமே கேக்காத , தெரியற அப்போ உனக்கே தெரியும் " என்றான்.

"சரி மாமா நான் இனி எதுமே கேட்கமாட்டேன், நான் நடுல வந்ததால அக்கா வாழ்க போச்சி னு கோவத்துல அன்னைக்கு அப்படி பண்ணிட்டேன்," னு வாசு கன்னத்தை பார்க்க, வீக்கம் கொறஞ்சிடுச்சி ஆனாலும் வாய்க்கு உள்ள பல்லு பட்டு கொஞ்சம் எரிச்சல தான் இருந்தது வாசுக்கு .

வாசு தயிர் சாதம் சாப்பிட வனிதா நல்லா னு வெட்டு வெட்டிட்டு இருந்தா பிரியாணிய.

சாப்பிட்டு முடிக்கும் போது ஒரு வாய் இருந்தது சாப்பாடு மிச்சம் , " மாமா ஒரு வாய் சாப்பிடறய " என்று வாசுவிடம் கேட்க .

"அது மட்டும் எனக்கு எதுக்கு நீயே சாப்பிடு, ஏதோ குருவிக்கு வைக்கிறது போல ஒரு வாய் வைக்கிறா ".

வனிதா சாப்டா அவன் வாய் அருகில் கொண்டு போக வனிதா கைகளை ஒரு உறி உறிந்தன்.

வனிதாக்கு கூச்சமா போச்சி, " என்ன மாமா இப்படி செஞ்சிட்டீங்க, வெளில " என்றாள் நெளிந்துகொண்டே.

"எப்படி செஞ்சேன் ?" வாசு வனிதாவை சீண்ட.

" போஹங்க மாமா, ஒரு மாறி குறுகுறு னு ஆயிடுச்சி ஒரு நொடில ".

" இதுக்கே இப்படி நான் நைட் நடக்கிறதுக்கு ..." வனிதா வாசு வாய் மேலயே ஒன்னு போட .

வீட்டை நோக்கி போனார்கள் . அங்கு வாணிக்கு பதட்டம், பக்கத்துவீட்டு பொண்ணுங்க வந்தாங்க மேக் அப் பன்றான் னு டார்ச்சர் செய்ய.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
11

ஒரு வழிய ரெடி ஆயிட்டா, வாணி எந்த மேக் அப் வும் இல்லாம ஆகாஷ், அன்னைக்கு அவ எடுத்து ஆசையா வச்சி இருந்தா சட்ட மாதிரியே ஆகாஷ் போட்டு இருந்தான், அதை பார்த்த வாணி ஷாக் ஆயிட்டா.

' எப்படி இந்த சட்டை ஆகாஷ் மாமா ட வந்தது ?' யோசிச்சிட்டே ஆகாஷ் பக்கம் போய் நின்னுட்டா.

அங்க வனிதா வாசு வந்ததும், வனிதாவா அவன் ரூம் க்கு கூட்டிட்டு போய் ஒரு பையை எடுத்துட்டு வந்து அவ கைல கொடுத்துட்டு அவன் ரூம் க்கு போய்டுறன். வாணிக்கு முடிச்சிட்டு பொண்ணுங்க, வனிதாக்கு ரெடி செய்ய வந்தாங்க .

வனிதாக்கு என்ன செய்றது னே தெரில.... வாசு வேற பேசின ஒழுங்கா பேசல . மூஞ்சில நல்லா அடிச்சிட்டு, அவனே வாய் வலில இருக்கான் பேசல பேசல னு இவ வேற பீல் பன்றாளே.

வாசு ரெடி ஆயிட்டு உட்காந்து இருந்தான், ' வந்து என்ன ஆட்டம் அத போற னு தெரிலயே ' வாசு யோசிச்சிட்டே உட்காந்து இருந்தான்.

வனிதா வாசுவை காகா வைக்காம கொஞ்ச நேரத்துல வந்துட்டா. வனிதா வந்ததும் வாசு எந்திரிச்சி நின்னுட்டான்.

வனிதா க்கு அவன் படறது ஒரு மாதிரி ஆயிடுச்சி . கைல இருக்க பால் குடுக்கற.

' என்ன பாலு கலர் வேற மாதிரி இருக்கு ' குடிக்கும் போதுதான் தெரியுது அது டீ ' அடி பாவி பிரஸ்ட் நைட் க்கு டீ கொண்டு வந்தவ நீயா தானடி இருப்ப ' யோசிச்சிட்டே புல் ஆ வாசு குடிச்சிடறான். குடிச்சிட்டு அவட்ட குடுக்கிறன்.

அதவாங்கி பாத்தா வனிதா, ' எனக்கு எங்க மாமா '.

" என் எச்சை, நீ குடிக்க மாட்டானு நினைச்சி நானே குடிச்சிட்டேன் " என்றான்.

வனிதா வாசுவை பாத்துட்டே அலுவரத்துக்கு ஸ்டார்ட் செய்யவும் " ஹெய் இப்போ எதுக்கு அழுக ஸ்டார்ட் பண்ற " மெதுவா வாசு சொல்ல.

"நான் அழுகும் அப்போ கூட உங்களுக்கு பாதறல, வனிதா பாய் பெட்ஷீட் போட்டு கீழ போய் படுத்துடாரா.

' இவ வேற நிலைமை புரியாம '.

வாசு வனிதா பக்கம் போய் உட்கார. " இப்போ எதுக்கு கீழ படுக்கறா",

" எனக்கு கீழ படுத்துதான் பழக்கம் " னு திரும்பமா சொல்லிட்டு பெட் சீட் முகம் வரை பொத்தி படுத்துட்டா வனிதா.

வாசுகஷ்ட பட்டு பேச முடியாம, " இனி பழக்கத்தை மாத்திக்கோங்க மேல வந்து படு ".

"தேவ இல்லை, நான் இங்கவே இருந்துக்கறேன் , " வனிதா கொஞ்சம் விசும்பிட்டே பேசுறா.

வாசுக்கு என்ன செய்றது னே தெரில. இவ என் திடீர் னு இப்படி பண்ற னு புரியல. பேசின வேலைக்கு ஆகாது, வாசு வனிதாவா தூக்கிட்டான்.

"என் செய்ற மாமா விடு, அதான் நான் அடிச்சேன் னு உனக்கு பிடிக்கல ல விடு " வனிதா திமிரா திமிரா தூக்கிட்டு போய் பெட்ல படுக்க வச்சிட்டு வாசு பக்கத்துல உட்காந்தான். வாசு மெதுவா.

" யார் உன்ன பிடிக்கல னு சொன்னது இப்போ ?"

" இப்போகூட பாருங்க வெறுப்பா பேசுறீங்க " வனிதா இன்னும் அதிகமாக அழுக.

"என்னால பேச முடில டி, அது கண்டு பிடிக்கல நீ ?"

"இல்லை நீங்க பொய் சொல்றிங்க, ஆகாஷ் நம்மட்ட நல்லா தான பேசிட்டு இருந்தாங்க" சொல்லிட்டே வனிதா இன்னும் வேகமா அழுக.

"அழுறத நிறுத்து முதல, வாசு இந்த டைம் கொஞ்சம் கத்திட்டான்.

" இப்போ மட்டும் கத்துறீங்க, அப்போ பொய் தான சொன்னிங்க ", பேசின சரி பட்டு வராது னு வாசு செய்யல இறங்கிட்டேன். முதல் முத்தம் இருவரின் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது . மூச்சிக்காக விலக.

வனிதா வாசுவை பார்த்துட்டு வெட்க பட்டவன் மறு நோடி முறைக்க ஆரம்பித்தாள்.

' என்ன டிசைன் டா இந்த பொண்ணுங்க, நிமிசத்துக்கு நிமிஷம் மரங்கள் '.

" எதுக்கு இப்போ மூஞ்சி அப்படி போது " என்றான் வாசு நெருங்கி வந்து வனிதா தோளில் கையை போட்டு கொண்டு. கையை தட்டிவிட்டவள்.

" இப்போமாட்டும் வை வலிக்கலயா ?" என்று வனிதா சிறுபிள்ளை போல வாசுவை சீண்ட.

"ஹெய் பேசாத முடில னு சொன்னேன், முத்தம் கொடுக்க முடில னு எப்போ டி சொன்னேன் " என்றான் வாசு சிரித்துக்கொண்டே.

"சரி மாமா நீ தூங்கு , நானும் தூங்கிறேன் செம டையார்ட் இன்னைக்கு, ஒரு சுத்தணுத்தால " கைகளை நீட்டி நெட்டி முறிய, வனிதாவின் கவர்ச்சியான பாகங்கள் வாசு கண்ணில் பளிச்சுனு பட, அவன் பார்வை சென்ற இடத்தை பார்த்த வனிதா . சட்டென்று திரும்பி கொண்டாள்.

வனிதா வாய் நெருங்கிவந்து பின்னிருந்து கட்டிக்கொண்டான் , வாசு.

" உண்மையா டடையார்ட் இருக்க ?"

"ஹ்ம்ம்ம் " னு வனிதா சொல்ல.

"சரி வனிதா நீ தூங்கு, டிரஸ் மாத்திக்கோ ".

வனிதா தயங்கிக்கொண்டே, அமர்ந்து இருந்தாள். இப்போ என்ன ஆச்சி இவளுக்கு.

" அம்மு, தூங்கலையா, இப்போதான் டையார்ட் ஆ இருக்கு சொன்ன".

" அது சும்மா, சொன்னேன் ".

" சும்மா சொன்னாயே, சரி தூங்கு, மொதல்ல டிரஸ் மாத்திக்கோ, வாசு அவனது ஷேல்ப் தொறந்து டிரஸ் எடுத்து தரான், வனிதா வாசுவை முறைக்கற, டிரஸ் கைல வாங்காம.

' இவ எதுக்கு மொறைக்கற தெரிலயே ?'


12

வனிதா முறைக்க, வாசு ' இவ எதுக்கு மொறைக்க',

"இப்போ என்ன தா பிரச்சனை, டிரஸ் மாத்திக்க பிடிக்கல நான் அப்படியே தூங்கு எனக்கென்ன ." வாசு காண்டு ஆகி அவ பக்கத்துலயே, படுத்துட்டான் முதுகை காமிச்சு.

வனிதாக்கு காண்டு ஆகிடுச்சு, முதுகுல ஒன்னு போட்டா, ' பக்கத்தான் இப்படி, பாத்து நாலு சாப்பிடாதவா மாதிரி இருக்க, அடிச்ச இப்படி வலிக்குதே ',

" இப்போ நான் என்ன டி செய்றது, என்ன எதுக்கு இப்போ அடிச்ச, வலிக்குது " வனிதாவா பாத்து எந்திரிச்சி உட்காரன்.

வனிதா வாசுவை மொறச்சிட்டு இருக்க, " என்னடி இப்போ உன் பிரச்சனை ?".

"வேனான உடனே போயிடுவயா , "வனிதா சொல்றது புரியாம வாசு அவளை பாக்க.

டூப் லைட் னு சொல்லிட்டு படுத்துடற. வாசுக்கு இப்போதான் புரியுது , வனிதாவா நெருங்கி கொஞ்சநேரம் அவ பக்கம் நகந்து உட்காரன்.

" அப்போ அது உனக்கு ஓகே வா இன்னைக்கு ", வாசு மெதுவா கேட்க.

" எது " னு வனிதா கண்ணா மூடிட்டே சொல்றா. ' ஐயோ இவள வச்சிட்டு, நம்ம காலத்துல இறங்கிடலாம் ', வாசு வனிதாவா நெருங்கி படுக்க, வனிதா கொஞ்சம் நகந்தது படுக்க, கட்டில் எட்ஜ் வரை இந்தாங்க நடந்தது, வனிதா " இப்போ என்ன நான் கீழ விழுந்து இடுப்பை ஒடச்சிக்கணுமா ?" கோவமா வனிதா வாசுவை பார்த்துட்டு முறைக்க.

' இவள பேச விட்ட சரி வராது ' செய்யலை ஆரம்பித்தான், ஒரே சுழட்டு சுழட்டி வனிதாவை பெட் க்கு நடுல கொண்டு வந்து, சத்தமே இல்லாமல் அவன் யுத்தம் செய்ய தொடங்க, தேக்கிவெச்ச மொத்த காதலையும் உடல் மொழில் வனிதாக்கு உணர்த்தி கொண்டு இருந்தான் வாசு. இங்கு ஒரு ஜோடி இனிமையாக ஆரம்பிக்க.

அங்கு ஒரு ஜோடி அர்த்தராத்திரில சண்டை போட்டுருக்க வீடை ஒரு வழி செஞ்சிட்டு இருந்தாங்க.

வாணி அமைதியாத்தான் வந்து பால் குடுக்க, அதை வாங்காம ஆகாஷ் அவளை வெறுப்பேற்ற. " வேணாவா போ " னு அறை லிட்டர்க்கு மேல இருந்து இருக்கும் பாலு, ஒரே கல்ப் ல அடிச்சிட்டு சொம்பை ஆகாஷ் மேல தூக்கி போடா. சொம்பு பறந்து வருவதை பார்த்த ஆகாஷ், சற்று விலக, அவன் தொல்பட்டையை நன்றாக பதம் பார்த்தது.

வாழியே தேத்துவிட்டு கொண்டு இருந்தா ஆகாஷ், நைசாக நழுவ பார்க்கும் வாணியை ஜடை பிடித்து இழுக்க, " ஆ வலிக்குது டா விடு " காத்திட்டே ஆகாஷ் ஐ எட்டி கன்னத்தில் கடித்து வைத்தாள்.

"ஆஆ .... நாயா பொறந்து இருப்ப போல போன ஜென்மத்துல ", அவ முடில நல்லா வலிக்க இன்னும் இழுத்து விட்டான், வாணி கண்கள் கலங்க, சட்டெண்டு ஏதோ நினைவு வந்தவன் கண்ணீரை உள்ளே இழுத்தவள் ஆகாசை கடிக்க துடங்கினாள் .

வாணி கோவத்தில் செய்த செயல், ஆகாஷ் க்கு இளமை விழித்துக்கொள்ள, வாணியை நோக்கி வரா, வாணி அங்கும் இங்கும் ஆகாஷ் கைகளில் சிக்காமல் ஓடி கொண்டு இருந்தாள்.

சற்று நேரம் கழித்து வாணி டையார்ட் ஆகும் திரும்பி பார்த்துட்டு ஆகாஷ் வாணியை பிடித்து இழுத்து மஞ்சத்தில் சரிய, அகஷின் இந்த நெருக்கம் வாணியை என்னவோ செய்ய . ஆகாஷை தயக்கத்தோடு நிமிர்ந்து பார்த்தாள்.

" என்ன " என்று ஆகாஷ் கேட்க.

" ஒன்னுல " சொல்லி ஆகாஷ் மேல இருந்தா வாணி எந்திரிக்க பார்க்க, ஆகாஷ் விட்ட தான.

" விடுங்க , ஒரு மாதிரி இருக்கு " என்றாள் வாணி எங்கோ பார்த்துட்டு.

வாணி முகத்தை திருப்பி ஆகாஷை பார்க்குமாறு செய்தவன், " எப்படி இருக்கு,?"

" ஒன்னுல விடுங்க " வாணி திமிரி கொண்டு இருந்தாள், ஆகாஷ் விடும் நோக்கில் இல்லை. அவளது இடையிலே ஒரு கையும் வேற்று முதுகில் ஒரு கையும் வைத்து கோலம் போடா துடங்க. வாணி கூச்சம் தாங்காமல் ஆகாஷ் மீது தாராளமாக படுத்து நெளிந்து கொண்டு இருந்தாள். வாணி உடல் மொழி ஆகாஷ்க்கு சாதகமாக இன்னும் முன்னேறி, கைகள் தாராளமாக முன்னேற. வாணி கூச்சதால் துடித்துடித்தாள்.

ஆகாஷ் அதை பார்த்துட்டு ' சும்மா தோட்டது இவ்ளோ உருகல, இப்படித்தான் வேற ஒருத்தன கல்யாணம் செய்ய போனாள் கிறுக்கி ' என்று நினைக்க, ஆகாஷ் அந்த எண்ணத்தை ஒதுக்கி வைத்து வாணி மூக்கத்தை கைகளால் ஏந்த.

"ஓகே வா நான் இப்படி இருக்கிறது " ஆகாஷ் கேட்டது, இன்னும் வெட்கமாக போக இன்னும் ஒன்றி விட்டாள் ஆகாஷிடம், அவள் செய்யலை சம்மதமாக எடுத்து கொண்ட ஆகாஷ், இருவரும் ஆடைகளை கலைய... ஒளிவு மறைவற்ற வாழ்க்கையை ஆரம்பித்தனார்.

கூடல் முடிந்து வாணி வலியால் துடிக்க, ஆகாஷ்க்கு வாணிய பாத்து கஷ்டமாக போக. மறுநாள் விடிந்தும் விடியாமல், மெடிக்கல் பொய் அவளுக்கு தேவையான வலி மாத்திரை கேட்டு வாங்கிவைத்து, சமைக்க மட்டும் ஆட்கள் வந்தார்கள், அவளை சாப்பிட வைத்துவிட்டு மாத்திரை மருந்து கொடுத்து, தூங்க வைத்தவன். அவன் தூங்கும் வரை அணைத்து படுத்து இருந்தவன். தூங்கியாச்சா பின்பு எந்திரிச்சி, மாடுகளை கவனித்துவிட்டு உள்ளேய வரும் வேலையிலே வாணி எந்திரிக்க முடியாமல் எந்திரித்தாள், ஆகாஷ் அவளை தூக்கிக்கொண்டு பாத்ரூம் ல விட வாணிக்கு இப்போ முனைக்கு பரவால்ல, குளிச்சி ரெடி ஆக வெளியே வந்தாள், உள்ளே வாணி வரா ஆகாஷ் அவளுக்கான சாப்பாடு மருந்து கொண்டு வந்து வைக்க.

இந்த கோலத்தில் ஆகாஷ் முன்பு நிற்பது சங்கடமாக இருக்க. வாணி நெளிந்து கொண்டு நிற்க.

" இப்போ எதுக்கு இத கட்டிட்டு இருக்க, ஏதாவதி நைட் டிரஸ் போடு இல்லை சுடிதார் போடு " என்று சொன்னதுமட்டும் இல்லாமல் எடுத்தும் கொடுத்தான்.

வாணிக்கு மனதில் அரித்துக்கொண்டு இருந்ததைகேட்க , அகஷியின் பதிலை கேட்டு வாணிக்கு வலித்தது.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
13
ஆகாஷ் என்மேல கோபம் போய்டுச்சா?"

"இல்லை வாணி, அதுக்காக உண்ட சண்டை போட்டுட்டு வாழ்க்கையை வாழாமல் இருக்க என்னால முடில, முன்னாடி என்ன நீ லவ் செய்லனா என்ன, மஞ்சகயிறு மேஜிக் உனக்கு நடக்கும்னு நம்பறேன். இப்போ வா சாப்பிடு" வாணி ஏதோ சொல்லவறா.

அவ பேசறத தடுத்து, "எதுமே சொல்லாத வாணி, ஐ லவ் யூ, வா சாப்பிடு" சொல்லிட்டு ஓடிவிட்டான் ஆகாஷ்.

வாணிக்கு ஏதோ போல ஆனது, அப்போது ஒரு முடிவு எடுத்தாள், 'என் காதல சொல்லியோ இல்லை செயல்லையோ புரிய வைக்கணும்,' என்று நினைத்தவன் சாப்பிட்டுட்டு, ஆகாஷ் ஏதோ கார்ட்டூன் பாத்துட்டு இருந்தான்.

நாலு நாள், ஆகாஷ் வாணி பேசி பேசி நாட்கள் கழிக்க.

அங்கு வனிதா, வாசு பேச நேரம் இல்லாமல் காதல் லீலையில் மிதந்துகொண்டு இருந்தார்கள்.

ஊருக்கு சென்றவர் திரும்பி வர. ஆகாஷ் நிலம், மில் பார்த்துட்டு ரெக்கை கட்டி பறந்து கொண்டு இருந்தான்.

வாணி முன்னாடி போல இல்லை அவ்ளோ ஹாப்பி, நமக்கு பிடிச்சவங்க நம்மள விட அதிகமா நம்மள லவ் பண்றது தெரிஞ்ச அப்புறம், அது எப்படி இருக்கும் வாணியால அத சொல்ல சொன்னா, சொல்ல கூட முடியாது எண்ணிலடங்கா ஆசைகள்.

"காதலிப்பதைவிட.... காதலிக்கப்படுவது....வரம்"

ஆகாஷ் இன்னும் லவ் செய்ய அரமிச்சிட்டா, ஆகாஷ் அவளுக்காக ஒன்னு ஒன்னா பாத்து பாத்து அந்த இரு வாரம் செஞ்சதே அவளுக்கு இந்த ஆயுசு முழுக்க போதும், ஆனா இன்னும் இன்னும் தேடுச்சி மனசு ஆகாஷை,

"மதியம் மாமாக்கு சாப்பாடு எடுத்து போறேன், போர் அடிக்குதுனு" தாமரைய கூட்டிட்டு போய்டுவா.

"இவ்ளோ வெயில்ல எதுக்கு வர, ஆகாஷ் சொல்லி பாத்தும் கேக்கல," அவளுக்கு ஆகாஷ பாத்துட்டே இருக்கனும். அவன் ரெண்டு வேலை செஞ்சா இவ அறை வேலை கூட செய்யமாட்டா, ஆனா ஆகாஷ்ட போய் "நானும் செய்றேன், இத சொல்லித்தா அத சொல்லித்தான்னு" ராவடி செய்வா.

அன்னைக்கு அப்படித்தான் காளை பயிற்சி கொடுத்து கொண்டு இருந்தான், கம்பீரமாக இருந்த கருப்பன் கூட ஆகாஷ் விளையாடிக்கொண்டு இருக்க, அதன் தோரணைக்கும் நடந்து கொள்வதுக்கும் சம்பந்தமே இல்லை, வாணி அதன் உருவத்தை பார்த்து பயந்துட்டா, ஆனா ஆகாஷ் கிட்ட விளையாடறத பாத்து, அட நம்ம நாய் மணிய வழக்குறது போல இது என்று சாதாரணமாக எடை போட்டு, ஆகாஷ் அங்கு வேலைக்கு வந்து இருக்கும் ஆட்களிடம் செய்துகொண்டு இருக்கும் வேலையை சொல்லிவிட்டு திரும்பும் சமயம், வாணி நெருங்கி இருந்தாள் காளையை, அவள் பாசமாக அதை இரண்டு ராட்சச கொம்பின் இடையில் கை வைக்க, புதிய ஆளை பார்த்து மிரண்டு கருப்பன் ஒரு குதி குதிக்க, வாணி அந்த எதிர்பாராத மிரட்டலில், பக்கம் களிமண் வயலில் விழுந்தாள், ஆகாஷ் சிரித்துக்கொண்டே வாணிக்கு கை கொடுக்க,

"மாமா உன் பெட் அனிமல் மோசம், என்ன இப்படி தள்ளி விட்டுடுச்சி".

"அது பெட் அனிமலா சரிதான், புது ஆளுங்கள பாத்தா இப்படிதான்" ஆகாஷ் சொன்ன மறு நோடி.

"என்ன புது ஆளுங்களா, என் போட்டோ காட்டி வளத்து இருக்கனும் நீ" என்று உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொண்டு சிறு பிள்ளை போல சண்டைக்கு நிற்கும் வாணியை ரசித்தான் ஆகாஷ்.

"சரி வா போட்டோ எதுக்கு, இப்போவே இன்டெர்டுஸ் பண்றேன்" வாணி வீரமாக ஆகாஷ் கூட நடந்து வந்தாலும், அதன் தோரணை பயத்தை கிளப்பியது.

"ஆகாஷ் வாணி கையை தூக்கி பிடித்து, பாடி ஸ்ட்ரோங் பேஸ்ட்மென்ட் வீக் போல" ஆகாஷ் கிண்டல் செய்ய.

ஆகாஷ் கையை உதறிட்டு இப்போ பாரு நான் தனியா போறேன் என்று வீரமாக ஒரு அடி எடுத்து வைத்தவள், கருப்பன் அந்த ராட்சச கொம்பை வைத்து தலையை ஒரு சிலுப்பு சிலுப்ப, வாணி நான்கு அடி பின்னால் வந்து ஆகாஷை கட்டிக்கொண்டாள்.

"எதுக்கு இந்த விளம்பரம்" என்று வாணியை கலாய்த்து விட்டு, கருப்பன் பக்கம் கூட்டிக்கொண்டு போக, ஆகாஷ் பக்கம் இருக்கும் போது அது நாய்க்குட்டி போல விளையாட, வாணி ஆச்சரியமாக பார்த்தாள், அதை புரிந்துகொண்ட ஆகாஷ்

"டெய்லி வந்து அதுக்கு சாப்பாடு போட்டு நாலு வார்த்தை பாசமா பேசணும், அப்போ அது உன்டயும் இது போல நடந்துக்கும்".

"அப்போ நான் தினமும் வருவேன்" என்று ஆகாஷிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றாள்.

மாலை நேரம் வீட்டுக்கு வந்த ஆகாஷ் எப்பவும் குடும்ப நபர்களிடம் பேசுவான், வாணியை பெருசா கண்டுக்கமாட்டான், அப்போ அப்போ செல்ல பார்வை, அதும் யார் கண்ணும் உறுத்தாத வகைல தான் இருக்கும், முதல் கூடளுக்கு பிறகு ஆகாஷ் வாணிய விட்டு கொஞ்சம் விலகி தான் இருந்தான். வாணியும் பெருசா அத கண்டுக்கல.

மல்லி ட்ரிப் போய்ட்டு வந்து ரெண்டு நாள் வாணிய கண்டுக்கல, செம ஆட்டம் டையர்ட் ஆயிட்டா, அடுத்த நாள்.

கண்ணன் இல்லாத அப்போ வேணும்னே வாணிய சண்டைக்கு இழுப்பா. நம்ம வாணி என்ன கேட்க, பதிலுக்கு பதில் பேசி சண்டைதான். மயிலுக்கு தா என்ன செய்றதுனே தெரியாது.

சின்ன வயசுல போட்ட சண்டையை ஒன்னு ஒன்னா டெய்லி எடுத்து வச்சி செய்ய ஆரமிச்சாங்க .

"வாணி மல்லிய கலர் சொல்லி கிண்டல் செஞ்ச அப்போவே, உன்ன அப்போவே என் அண்ணா அடிச்சி இருப்பான், சும்மா சின்ன புள்ளனு பாத்தா ரொம்பத்தான் பண்ற, இப்போ வந்து".

எப்போவோ போட்ட சண்டைக்கு, இப்போ எடுத்துவர, மல்லிய பாத்து காண்டுதா ஆச்சி, வாணிக்கு. "போடி ஆமா நான் உண்மைதானா சொன்னேன், நீ கருப்புதான்" சொல்லிட்டே இருக்கும்போது வாணிய மல்லி தொரத்த, அவட்ட சிக்காம ஓடிட்டு வெளியே ஓடி வரும்போது வாணி ஆகாஷ் மேல மோதிட்டா, ரொம்ப நேரமா அங்க நடக்கிறத பாத்துட்டு தான் இருக்கான் ஆகாஷ்.

வாணிமேல செம ஆத்திரம், ஆகாஷ், மோதி விலகி நின்னா வாணி, ஆகாஷ் வந்ததை பார்த்த வாணி மயிலுட்ட கிட்சேன்ல நின்னுட்டு இருந்தா.

"என் மா நான் மட்டும் ஏன் கலர் கம்மியா போய்ட்டேன்"

"என்னங்க இன்னைக்கு சீக்கிரமா வந்திங்க, வாங்க சாப்பிடுங்க" னு அவ கை பிடிச்சி இழுக்க. மல்லி முகம் சுருங்கிடுது. அம்மாட்ட நின்னு பேசுறது நல்லாவே கேட்டுச்சு ஆகாஷ்க்கு.

தாமரை அமைதியா இவங்க சின்ன புள்ள சண்டை போட்றத பாத்து, சிரிச்சிட்டே பூ கட்டிட்டு இருக்க.

மயிலு மல்லிய சமாதானம் படுத்தி வெளியே கூட்டிட்டு வராங்க, ஆகாஷ் வாணி கைய ஒதறிவிட்டுட்டு, ஒரே அறை. வாணி எதுமே சொல்லல அமைதியா ரூம்க்கு போய்டா.

அதை பாத்த மயிலு, "ஏன்டி மல்லி உனக்கு அறிவே இல்லையா, உன்னாலதான் பாரு ஆகாஷ் வாணிய அடிச்சிட்டான், புள்ள மூஞ்சே மாறிடுச்சு".

தாமரை ஆகாஷ்ட வந்து, "அண்ணா அவங்க விளையாடிட்டு இருக்காங்க, நீ எதுக்கு அடிச்ச, உனக்கு மல்லி பத்தி தெரியாதா, பாவம் அழுதுட்டே போறா".

மல்லி ஆகாஷ் பக்கம் வந்து, "அண்ணா என்னதான் இருந்தாலும் அவளை நீ அடிச்சி இருக்க கூடாது, எனக்கு அவட்ட சண்டை போட்டா பிடிக்கும், அதான் சண்டை பிடிக்கிறேன் உனக்கென்ன, இனி அடிக்கிற வேலைலாம் வச்சிக்காத" மல்லி ஆகாஷ்யை திட்ட.

மயிலு, "என்னடா ஆகாஷ் இதெல்லாம், உன் அப்பா என்ன எப்போவாவது அடிச்சி பாத்து இருக்கியா?".

"இனி இப்படி நடக்காதுமா" சொல்லிட்டு ஆகாஷ் வாணிய தேடி அவங்க ரூம்க்கு போறான். எவ்ளோ கதவு தட்டியும் வாணி கதாவே துறக்கல.

'ரொம்ப ஓவரா தான் போய்ட்டோமோ கண்ணு மன்னு தெரியாத தங்கச்சி மேல பாசம் என்ன செய்ய, இனி நிதானமா இருக்கனும்' னு நினைச்சிட்டு. ரூம் தட்டி தட்டி டையார்ட் ஆயிட்டான்.



.....

"வேற வழியே இல்லை ஆகாஷ்க்கு சொந்த வீட்ல யாருக்கும் தெரியாம திருடன் போல, சுவர் ஏற வேண்டியது தான்", ஜன்னல் மேல இருக்குற கம்பிய பிடிச்சி தொங்கி ஏறி, ஒருவழியா வழியா ரூம்க்கு போய்ட்டான் ஆகாஷ்.

வாணி அமைதியா ஏதையோ வெறிச்சி பாத்துட்டு இருக்க, கண்ணுல வர தண்ணீர் கூட துடைக்காம.

"வாணி..." ஆகாஷ் கூப்பிடவும் கண்ண தொடச்சிட்டு,

"சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" னு சொல்லிட்டு கிட்சன்ல சாப்பாடு போட்டுட்டு இருக்க. ஆகாஷ் பின்னாடி வரத பாத்த மயிலு, மல்லி, தாமரை அவங்க அவங்க ரூம்க்கு போய்டுறாங்க.

ஆகாஷ் பின்னாடியே வந்து கட்டிப்பிடிக்க. "விடுங்க ஆகாஷ் சாப்பாடு கொட்டிடும்".

ஆகாஷ் விட்டுட்டு பிளேட் வாங்கி டேபிள்ல வச்சிட்டான்.

"வாணி சாரி" என்றான் அவள் கண்களை பார்த்து.

"பரவால்லங்க உங்களுக்கு இல்லாத உறிமையா" னு ஒரு வேதனையான சிரிப்பு.

"நீ சாப்பிட்டயா?" என்று ஆகாஷ் கேட்க.

"சாப்பிட்டேன், நீங்க வாங்க சாப்பிடுங்க" பிளேட் எடுத்துட்டு போய் ஹால்ல வச்சிட்டு பேன் போட்டுட்டு ஆகாஷ் பக்கம் உட்கார, அவனோட தயக்கத்தை பாத்து அவனுக்கு வைக்கிறா.

சாப்பிட்டு முடிச்சிட்டு ஆகாஷ் ரூம்க்கு போறான். வாணி வருவானு பாத்துட்டு இருக்கான் ஆனா வரல, அவளை கூப்பிடவும் ஆகாஷ்க்கு கொஞ்சம் சங்கடமா இருந்தது.

மயிலு ஏதோ பலகாரம் சுடறேன்னு இப்போதான் கிட்சேன்க்கு வந்தாங்க தாமரை, மல்லி, வாணி மூணுப்பேரும் சின் சான் பாத்துட்டு உட்காந்து இருக்காங்க.

மல்லி கொஞ்ச நேரம் கழிச்சி. "தாமரை சாரி சொன்னேன்னு சொல்லிடு அவட்ட" மல்லி பேச்சை ஆரம்பிக்க.

"ஏன் அதை நேர்ல சொன்னா ஆகாதமா தாமரை அவளுக்கு" என்று வாணி அவளை சீண்ட.

"அவளுக்கு நான் இப்படி சொல்றதே பெருசுனு சொல்லு தாமரை".

தாமரை கடுப்பாக "ரெண்டு பேரும் மூடிட்டு சின் சான் பாக்க விடுங்க"னு கத்திடறா.

"என்னடி உனக்கு இவ்ளோ கோபம் வருதுனு" மல்லி வாணி ஒரு சேர சொல்ராங்க.

தாமரை உடனே "என்னை திட்டுறதுல மட்டும் ஒத்துமையா இருங்கடி ரெண்டு பேரும்" னு தாமரை ரெண்டு பேரையும் மொறச்சிட்டு இருக்க .

ஆகாஷ் பொறுத்து பொறுத்து பாத்து, "வாணி என்னோட வாட்ச் எங்கனு" ரூம் ல இருந்து சவுண்டு.

மல்லி தாமரை உடனே அண்ணா எப்போ இருந்து வாட்ச் காட்டுது, குழப்பமா ரெண்டு பேரும் பாத்துக்க.

வாணி உடனே "ஏங்க உங்களுக்கு தான் அந்த பழக்கமே இல்லையே அதை ஏன் கேக்கறீங்க" னு வாணி கேட்க, தாமரை மயிலும் நல்லா சிரிச்சிட்டாங்க.

"ஆகாஷ் அண்ணா பல்புனு" இதெல்லாம் கேட்டுட்டு இருந்தா மயிலு வந்து.

என்னாடி சிரிப்பு ரெண்டு பேருக்கும், "வாணி புருஷன் கூப்பிட்டா உடனே போக வேணாமா என்ன ஆராய்ச்சி உனக்கு போனு" மயிலு அதட்ட வாணி ரூம்க்கு போறா.

'எல்லாம் என்னயே திட்றாங்க' வாணி பொலம்பிட்டே ரூம்க்கு வரா, அவ வந்ததும் ரூம் லாக் செய்றான், பின்னாடி சத்தம் கேட்க திரும்பி பாக்கிறதுக்கு முன்னாடி வாணி பெட்ல இருந்த ஆகாஷ் அவ மேல இருந்தான்.

"என்னங்க பண்றிங்க விடுங்க" வாணி எந்திரிக்க பார்க்க.

"சாரி கேட்டேன்ல பதில் சொல்லு எந்திரிக்கிறேன்".

"ஐயோ அதுலாம் ஒன்னும் இல்லை விடுங்க வீட்ல வயசு பொண்ணுங்க இருக்கு, என்ன பழக்கம் இது பட்ட பகல்ல" வாணி எந்திரிக்க பாக்க.

"ஹெய் ஒடம்பு இப்போ உனக்கு பரவா இல்லையா?" என்று ஆகாஷ் மௌனம் கலந்த குரலில் கேட்க.

"மாமா விடு மாமா"

"சொல்லு டி, விலகி இருக்க முடில டி ரொம்ப கடுப்பா இருக்கு, புது பொண்டாட்டிய வச்சிட்டு கைய கட்டி போட்டது போல".

"அடுத்த நாள் சரியா போச்சி" என்றால் வாணியை பார்த்த ஆகாஷ் முறைக்க.

"அதை ஏண்டி என்ட சொல்லலை," என்றான் கடுப்பாக ஆகாஷ்.

"அதுலாம் சொன்னேன், உனக்குத்தான் தெரில".

"எப்போ சொன்ன" என்றான் ஆகாஷ்.

முதல் இரவுக்கு, மறுநாள் ஆகாஷ் மருந்து கொடுக்க, "வேணாக போதும்" னு வாணி சொன்னதை, இப்போ ஆகாஷிடம் சொல்ல.

"மருந்து தானடி வேணா சொன்ன, சரியா போச்சினு சொல்லவே இல்லையே".

"விடுங்க அதை ஏதோ செய்றங்க, நான் போய் ஹெல்ப் செயினும்" ஆகாஷை விலகி எழுந்தவள்.

மீண்டும் வந்து, "இனி இப்படி மொக்க வாங்காதீங்க, வயசு பொண்ணுங்க இருக்கு, இனி டே டைம்ல கூப்பிடறது இது போல வச்சிக்காதிங்க" ஆகாஷை ஒரு விரல் நீட்டி எச்சரித்தாள்.

"அது வழி பண்ணிடலாம்" என்றான் ஆகாஷ். அவள் நீட்டிய விரலில் ஆகாஷ் முத்தம் கொடுக்க "சரியான இம்சை மாமா நீ" அவன் எச்சை செய்த விரலை முத்தானைல துடைத்தாள். "அப்படி என்ன ரெடி செஞ்சீங்க".

"எங்க வீட்டு மாப்பிள ஆன் தி வே"

"சூப்பர் மாமா, மொதல்ல யாருக்கு கல்யாணம்".

"பிரஸ்ட் இவளுங்களுக்கு பிடிக்கணும் அப்புறம், தான்"


"நல்ல மாப்பிள்ளையா பாத்தா ஏன் பிடிக்காத போகுது" என்று ஆகாஷிடம் சொல்லிட்டு போகும் தனது பொறுப்பான மனைவியை ரசித்தான்.
 
Status
Not open for further replies.
Top