மான்விழி - 24
பவிஷ்கா தந்தையையும் மகளையும் அழைத்துக் கொண்டு காரில் மகாபலிபுரத்திற்கு பயணமானாள். அவள் செல்லும் போதே சமையல் மற்றும் வீட்டு வேலை ஆட்களிடம் அன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ள சொல்லி அனுப்பியும் விட்டாள்.
அவர்கள் கிளம்பும் போது ரம்யா தான், “அத்தை நீங்களும் என்கூட வாங்க, நாம ஒண்ணா பீச்சுல விளையாடலாம்” என்று அடம்பிடித்தாள். நேத்ரநயனி கணவனை கெஞ்சுதலாக பார்த்து, “அபி, நாமும் போகலாமா? நானும் இதுவரைக்கும் மகாபலிபுரம் கடற்கரைக்கு போனதே இல்லை” என்றாள் கெஞ்சுதலாக.
“நயனி, உனக்கு கிளாஸ் இருக்குனு சொன்னேன் இல்ல? நாம இன்னொரு நாளைக்கு போகலாம்” என்றான் ஆழ்ந்த குரலில்.
‘டாக்டர் புருஷனை வச்சிகிட்டு, மருத்துவம் படிச்சால் இப்படி தான் போல’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டு அவர்களுக்கு கைகளை ஆட்டி வழி அனுப்பி வைத்தாள் நயனி.
அவர்கள் சென்றதும், “நான் குளிச்சுட்டு வர்றேன், நீ தயாரா இரு” என்று சொல்லி குளியலறை நோக்கி சென்றான்.
“காலையில் தானே குளிச்சீங்க? இப்போ என்ன மறுபடியும் குளிக்கறேன்னு சொல்றீங்க? நான் தயாரா தானே இருக்கேன்?” என்று கேட்டவளை அழுத்தமாக பார்த்துவிட்டு குளியலறைக்குள் சென்று விட்டான்.
அவன் சென்றதும் தன் புத்தகங்களை எல்லாம் எடுத்து அவன் கட்டிலின் மீது கடைப்பரப்பினாள். தன் சந்தேகங்களை எல்லாம் அவனிடம் கேட்க குறிப்பெடுக்க தொடங்கி விட்டாள். குளித்துவிட்டு வந்தவன், இடையில் டவலுடன் கைகளை கட்டிக் கொண்டு அவள் அமர்ந்திருந்த கோலத்தை ரசித்தபடி அப்படியே நின்றிருந்தான்.
ஏதோ நிழலாடுவதை போல தோன்றவும் நிமிர்ந்து பார்த்தவள், கணவன் நின்றிருந்த கோலத்தை பார்த்து மூச்சடைத்து போனாள். வெற்று மார்புடன் இடையில் டர்க்கி டவலுடன் நின்றிருந்தவன் அவளை விழுங்குவது போல பார்த்துக் கொண்டிருந்தான்.
“எஎன்னங்க, போய் டிரஸ் போட்டுட்டு வாங்க” என்று திணறினாள்.
“எதுக்கு இப்போ இந்த புக்ஸை எல்லாம் இங்கே வச்சிருக்க?” என்றான் ஒற்றை புருவத்தை உயர்த்தி.
“நீங்க தானே கிளாஸ் எடுக்க போறதா சொன்னீங்க?” என்றாள் கேள்வியாக அவனை பார்த்து.
“ஆனா நான் பிராக்டிகல் கிளாஸ் தானே எடுக்கிறதா சொன்னேன்?” என்றான் மர்ம புன்னகையுடன்.
அந்த புன்னகையின் அர்த்தம் புரியாமல், “இங்கே எந்த எக்யூப்மென்ட்ம் இல்லாமல் எப்படி பிராக்டிகல் கிளாஸ் எடுப்பீங்க?” என்றாள் யோசனையுடன் அவனை பார்த்து.
“அந்த கவலை உனக்கு எதுக்கு? முதல்ல இந்த புக்ஸை எல்லாம் எடுத்து வச்சிட்டு வா” என்றான்.
நயனியும் தன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு அலமாரியில் அடுக்க தொடங்கினாள். அவளறியாமல் அவள் பின்னே சென்றவன் தன்னவளின் முழங்கைகளை புறங்கையால் வருடினான். குளித்துவிட்டு வந்ததால் சில்லென்று இருந்த அவன் கை விரல்கள் அவளின் முழங்கைகளை வருடவும், மயிற்கால்கள் கூச்சறிந்தன, “எஎன்ன?” என்றாள் காற்றாகி போன குரலில்.
“நயனி, மனித உடல்ல இருக்கிறதுல மிகப்பெரிய ஆர்கன் எது தெரியுமா? இந்த ஸ்கின் தான், அதாவது மனிதனுடைய தோல். இதை நான் இப்படி வருடும் போது உனக்கேன் உடல் சிலிர்க்குது தெரியுமா?” என்றான் அவள் காதருகே குனிந்து மெல்லிய குரலில். அவளுக்கு மூச்சடைத்தது, தெரிந்தாலும் அதை சொல்லும் மனநிலையில் அவள் இல்லை என்பதால் அமைதி காத்தாள்.
சித்தார்த் மேலும் நயனியின் தோள்களை அழுத்தமாக பிடித்து, “நான் இப்படி பண்ணும் போது ஏற்படும் அழுத்தம், மின்சமிக்கைகளாக மாறி நரம்பு வழியாக உன் மூளையை போய் அடையும். இந்த தொடுகை உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா என்பதை உன் மூளை முடிவு செய்யும், அது உனக்கு பிடிச்சிருக்கும் பட்சத்தில் மூளை Oxytocin என்ற காதல் ஹார்மோனை வெளிவிடும். அந்த ஹார்மோன் தான் உன்னை இப்படி என்கிட்ட மயங்கி நிக்க வைக்குது, இதோ உன் மேனி எப்படி சிலிர்த்து இருக்குது பாரு, இதுக்கெல்லாம் காரணம் அந்த ஹார்மோன் தான்” என்றபடி அவளை தன்னை நோக்கி திருப்பினான்.
மேலும் அவளை தன்னோடு இறுக்கி அணைத்தபடி தன் கைகளால் அவள் உடலை ஆரத்தழுவினான். நமக்கிடையில் இந்த ஹார்மோன் தான் எமோஷனல் பாண்டிங்கை கொடுக்குது. இப்போ நான் எங்கே தொட்டாலும் உன்னால மறுக்க முடியாது என்று அவன் குரல் ஆழ்ந்து ஒலித்துக் கொண்டிருக்க, பேச்சற்ற நிலையில் உணர்வுகளின் பிடியில் இமை மூடி அவன் சொல்வதை உள்வாங்கிக் கொண்டிருந்தவளின் கண்ணாடியை கழற்றிவிட்டு, தன் கைவிரல்களால் அவள் நெற்றியிலிருந்து கண்கள், மூக்கு, கன்னம் என்று மென்மையாக மீட்ட தொடங்கி விட்டான். இப்போது அவன் விரல்கள் நயனியின் இதழ்களை வருடியது.
அவன் விரல் பட்ட இடமெல்லாம் நாணத்தால் சிவந்து உடல் உஷ்ணமேறிக் கொண்டிருந்தது. கணவனின் விரல் ஸ்பரிசத்தையும் அவன் குரலையும் தவிர அவளுக்கு எந்த நினைவுகளும் இல்லை. ஏகாந்த உலகில் மெளனத்துடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளின் பெண்மை விழித்துக் கொண்டது. ஆம் அவள் கணவனின் விரல்கள் இப்போது கழுத்தை நோக்கி பயணித்து மெல்ல மெல்ல கீழிறங்கி கொண்டிருந்தது.
அடுத்து அவனை கைகள் எங்கே பயணிக்கும் என்பதை நொடியில் உணர்ந்து சட்டென கண்திறந்து அவன் கைகளை பற்றிக் கொண்டாள். ரசனையோடு தன் மனைவியின் மேனியை மீட்டிக் கொண்டிருந்தவனுக்கு தடங்கல் ஏற்படவும், “என்னடி?” என்றான் பொய் கோபத்துடன்.
“பிராக்டிகல் கிளாஸ் எடுக்க போறதா சொன்னீங்க, மறந்துட்டிங்களா?” என்றாள் திக்கி திணறிய குரலில்.
“ப்ச், இது தான்டி அந்த பிராக்டிகல் கிளாஸ்” என்றவன் அவளை தன்னோடு இறுக அணைத்தான், அவன் கைகள் மேலும் அவள் மேனியில் அத்துமீறி பயணிக்கவும், ஓடிச்சென்று அங்கிருந்த சுவற்றில் தன் முகத்தை மறைத்துக் கொண்டு நின்றாள்.
விடாக்கொண்டனாக பின்னாலிருந்து அவள் மேல் மொத்தமாக சாய்ந்து நின்றான் சித்தார்த். அவள் காது மடலில் தன் முதல் முத்திரையை வைத்தான். பின்பக்கமாக நின்றபடி அவன் கைகளை அவள் மேனியெங்கும் படரவிட்டவன் தொடர் முத்தங்களை கொடுத்துக் கொண்டே இருக்கவும், இன்ப வேதனை தாங்க முடியாமல் திரும்பி அவன் வெற்று மார்பில் தஞ்சம் புகுந்தாள்.
பூப்பந்தாய் தன்மேல் மோதியவளால் சித்தார்த்தின் சித்தம் கலங்கிவிட ஆவேசமாய் அவளை மேலும் தனக்குள் இறுக்கி கொண்டு “நயனி” என்றழைத்தான். அவள் தன் முகத்தை அவன் நெஞ்சிலிருந்து எடுக்காமல் உள்ளே நுழைந்துக் கொள்பவள் போல அவனுக்குள் மேலும் புதைந்துக் கொண்டாள்.
“இங்கே பாருடி” என்று அவள் தாடையை பற்றி அவனை பார்க்க செய்தான். முகம் அவனை நோக்கி நிமிர்ந்து இருந்ததே தவிர, அவள் சிப்பி இமைகள் திறக்க வில்லை. “கண்ணை திறந்து பாரு நயனி” என்றான் கிறக்கமாக.
மாட்டேன் என்று தலையை மட்டும் அசைத்தாள்.
“ஏன்?”
“எனக்கு உங்களை பார்க்கவே வெக்கமா இருக்கு” என்று சொல்லி தன் இருகைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். தன்னவளின் வெட்கம் அந்த ஆண்மகனை மேலும் உசுப்பேற்றியது
“வெட்கப்படாத பூக்களை
வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கமும்
சாயம் போகாதடி”
வண்டுகளே வெட்கப்படும் பூக்களை நோக்கி படை எடுக்கும் போது, சித்தார்த் தன் மனைவியின் வெட்கத்தை பார்த்து சும்மா இருப்பானா என்ன? அவள் கைகளை பிரித்து, தன் இதழால் அவள் நெற்றியில் முத்தமிட்டு, வெட்கத்தால் சிவந்த அவள் முகத்தை தன் முத்தங்களால் சாயம் போக வைத்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் நயனியின் இதழ் தேனை பருகும் வண்டாக அவன் இதழ்கள் மாறிப்போனதும் நிற்க முடியாமல் நயனியின் கால்கள் தொய்ந்தது. தன்னவளை அப்படியே கைகளால் ஏந்திக் கொண்டு, கட்டிலை நோக்கிச் சென்றான். அதிர்ச்சியோடு இமை திறந்து விழி விரித்து கணவனை பார்த்தவளை மோகத்துடன் பார்த்தபடி கட்டிலில் கிடத்தினான்.
கட்டிலில் படுத்திருந்தவளை விழுங்கி விடுபவன் போல மேலிருந்து கீழாக அவன் பார்வை நிதானமாக அவள் மேனியெங்கும் உலா வந்தது.
கைகளால் தொடாமல் கண்களால் அவள் நெஞ்சை பந்தாடிக் கொண்டிருந்தான். தன் காந்த பார்வையால் ரத்தம் வராமல் அவள் மனதை துண்டாக்கி கொண்டிருந்தான். அதற்கு மேல் தன்னவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் புரண்டு படுத்து கொண்டவளின் மேல் மொத்தமாக படர்ந்து, தன் காதல் கீதத்தை அவள் மேனியில் மீட்ட தொடங்கிவிட்டான்.
கணவனின் விரல்களும் இதழ்களும், அவன் மேனியும் ஒட்டுமொத்தமாக தன்னை ஆக்ரமித்துக் கொண்டதில் திக்கு முக்காடிப் போனாள் நயனி. அவன் விரல்களும் இதழ்களும் பயணிக்கும் இடங்களை உணர்ந்து மூச்சடைத்து போனது அவளுக்கு…
பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள்
தீண்டும் மட்டும்
அவசியம் புரியாது
என்ற வைரமுத்துவின் பாடல் வரிகளை கேட்டிருக்கிறாள். இன்று தான் அவற்றின் முழு அர்த்தமும் அவளுக்கு புரிந்தது. ஒருவித அச்சம், கூச்சம், வெட்கம், மெளனம் என்று உணர்ச்சிகளின் குவியலாய் தன்னருகில் லயித்து கிடந்தவளை மொத்தமாக களவாட ஆசைக் கொண்டான் கணவன். அவள் அச்சத்தையே ஆடையாக்கி, வெட்கத்தை முந்தானையாக்கிக் கொள்ளட்டும் என்று முடிவெடுத்து அவள் ஆடைகளுக்கு விடுதலை கொடுக்க தயாராகி போனான் கணவன்.
அவள் சிணுங்கலுடன், அவன் எண்ணத்திற்கு தடைபோட நினைத்தாலும், அவனிடம் அது எடுபடவில்லை. மொத்தமாக ஆடைகளை களவாடி, அவளையும் களவாட தொடங்கிவிட்டான். நயனியின் மேனியை வீணையாக தன் இதழ்களாலும் விரல்களாலும் மீட்ட தொடங்கிவிட்டான்.
நயனியும் தன்னவனின் காதல் பாடத்தை கற்றுக் கொள்ள முதலில் முரண்டு பிடித்தாலும், மெல்ல மெல்ல கணவனின் ஆளுமைக்கு கட்டுப்பட தயாராகி போனாள். நயனி என்னும் நதியில் நீந்தி கரைசேர முடியாமல் தன் நீண்ட பயணத்தை இடைவெளி இல்லாமல் தொடர்ந்துக் கொண்டிருந்தான் சித்தார்த் அபிமன்யு.
இடைவிடாமல் அவள் மேனி முழுவதும் அவன் வாரி இறைத்த முத்தங்களின் சத்தங்களால் அவர்களின் மனதின் ஓசைகள் காதல் கீதங்களாய் மாறி அந்த அறையின் நிசப்தத்தை நிறைத்துக் கொண்டிருந்தது. உணர்ச்சிகள் ஆழிப் பேரலையாய் அவனை ஆர்ப்பரித்தாலும் பூவை விட மென்மையாக தன்னவளை கையாண்டு கொண்டிருந்தான்.
அவன் ஒவ்வொரு தொடுகைக்குமே அவள் உடல் முதலில் அதிர்ந்து, பின் சிலிர்த்து அடங்குவதை உணர்ந்தே இருந்ததால், தன் காதல் பாடத்தை மெல்ல மெல்ல மனைவிக்கு சொல்லிக் கொடுத்து தன் ஆளுமைக்குள் அவளை கொண்டுவந்திருந்தவன் மென்மையாக அவளுக்குள் மூழ்க தொடங்கிவிட்டான். வலியிலும் இன்பத்தை உணர வைத்திருந்தான் கணவன். தன் முதல் வெற்றியை முடித்து தன்னவளை தன் நெஞ்சின் மேல் படுக்கவைத்துக் கொண்டு, அவள் கூந்தலை தன் கைகளால் கலைத்து விளையாடிவன் உதடுகள் அவள் நெற்றியில் தொடர் முத்தங்களை வழங்கி கொண்டே இருந்தது.
நயனியின் இதழ்களும், சித்தார்த்தின் நெஞ்சத்தில் எச்சில் முத்தங்களை வைத்து கொண்டே இருந்தது.
“நயனி” என்றான்
“ம்”
“எப்படி இருந்தது பிராக்டிகல் கிளாஸ்” என்றான்