ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தேவதை வம்சம் நீயோ - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 19


ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் குடிக்க ஜூஸ், சாப்பிட ஸ்நாக்ஸ் என அனைவரின் கவனிப்பில் தன் குடும்பத்தின் நினைவு வர...அவள் சிறிதாக முகம் வாடினாலும் உடனடியாக அவளை மாற்றும் பொருட்டு குழந்தைகள் தங்கள் புறம் அவளின் கவனத்தை திருப்ப சின்ன சின்ன சேட்டைகள் செய்ய... அது சரியாக வேலை செய்த்தது. அவளும் தன் சிந்தனையிலிருந்து மீண்டு அவர்களோடு இணைந்து கொள்வாள்.

அன்றிரவு அவளை தனிமையில் விடாமல் அவளுடன் சென்று படுத்துகொண்டார் ராதிகா. "நான் தனியாவே படுத்துகிறேன்" என்றவளை கண்டு…."இன்னும் கொஞ்ச நாளைக்கு என்னோட அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா,கல்யாணத்துக்கு அப்பறம் மேல உன் புருஷன் ரூம்ல படுத்துக்கலாம்" என சிரித்துகொண்டு சொல்ல, வெட்க்கத்தில் முகம் சிவந்தவளை,படுக்க செய்து சிறுகுழந்தைப் போல தட்டிக்கொடுக்க...தன் தாயை அவர் உருவில் கண்டவள் நிம்மதியாக உறங்கிபோனாள்.

அடுத்த நாள் இவன் மட்டும் செங்கல்பட்டு நோக்கி சென்றவன். செம்பாக்கம் அருகிலுள்ள சிறிய கிராமத்தில் நுழைந்தான்.

ஒரு ஓட்டு வீட்டின் முன் தன் வண்டியை நிறுத்திவிட்டு கதவை தட்ட…. கதவை திறந்த பெண்மணி ஒருநிமிடம் இவனை யாரென்று தெரியாமல் குழம்பியவர்,பின் தெளிந்து "உள்ள வாங்க தம்பி" என அழைத்து நாற்காலியை போட்டு அமரவைத்தார்.

"எப்படி இருக்கீங்க ?...உங்க கணவருக்கு சரியாயிடுச்சா" என்க, "இப்போ பரவாயில்ல தம்பி...பெரிய அய்யா தான் எல்லா செலவையும் பார்த்துக்கிட்டார்,அவருக்கு போய் இப்படி நடந்ததைதான் என்னால ஜீரணிக்கவே முடியலை" என முந்தானையை வாயில் வைத்து அழுதார் காமாட்சி... கார்த்திகா விட்டில் பார்த்திபனும் முன் வேலை செய்தவர்.

அவரை அழுகையில் இருந்து மீட்டவன்,தான் வந்ததன் நோக்கத்தை சொன்னான்.

"நீங்கதான் சுமார் பத்து வருஷத்துக்கு மேல அங்க வேலையில் இருந்திருக்கீங்க... இந்த கொலையெல்லாம் நடக்குறதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் அந்த வீட்டுக்கு ராஜிவ் கிருஷ்ணான்னு ஒருத்தர் வந்திருக்கார், அன்னைக்கு என்ன நடந்தது...அன்னைக்கு நடந்த சம்பவம் தான் இத்தனை கொலைக்கும் காரணம்" என்றவன் பதிலுக்காக அவர் முகம் பார்க்க,

அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தவரை களைத்தவன், "சொல்லுங்க" என்க...அவரோ "அன்னைக்கு நடந்த சம்பவமாக இத்தனை கொலைக்கு காரணம்" என்றவர், அனைத்தையும் சொல்ல தொடங்கினார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு

அன்று காலை வழக்கம் போல கார்த்திகா வேலைக்கு சென்றுவிட...கார்த்திக் வெளியே சென்றுவிட்டான்.


சற்று நேரத்தில் பெரிய ஆடிக்கார் வீட்டினுள் நுழைய...அதிலிருந்து இறங்கியவர்கள் கையில் தாம்பூலத் தட்டுடன் உள்ளே நுழைந்தனர்.

யாரென்று தெரியாத போதிலும் தமிழர்களின் பண்பாட்டை பின்பற்றி வந்தவர்களை வரவேற்று அமரசெய்தவர்...தானும் அமர்ந்து, "தப்பா நினைக்காதீங்க நீங்க எல்லாம் யாரு ?..இதுக்கு முன்னாடி உங்கள நான் பார்த்ததே இல்லையே" என கேட்க,

"தமிழ்நாட்டிலேயே என்ன பார்த்து யாருன்னு கேட்ட முதல் நாள் நீங்கதான்' என சினிமா வசனம் பேசியவர், நியூஸ்பேபர் எல்லாம் படிக்கிறது இல்லையா... ஐயம் ராஜீவ் கிருஷ்ணா…. கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ், சாப்ட்வேர் சொல்யூஷன், ரியல் எஸ்டேட் இப்படி நாங்க கால் பாதிக்காத ஃபீல்டே இல்ல. தமிழ்நாடு,இந்தியா மட்டும் இல்லை, இன்டர்நேஷனல் லெவல்ல நம்பர் ஒன் பிஸ்னஸ் மேன்" என்றார்.

பெயரைக் கேட்டதுமே அவரை பற்றி தெரிந்துகொண்டவர்…இப்படிப்பட்ட கோடீஸ்வரர் தங்களது வீடு தேடி அதுவும் கையில் தாம்பூலத்தட்டுடன் வந்திருக்கிறார் என்றால் அதன் காரணம் அறியாமல் இருக்க அவர் ஒன்றும் குழந்தையில்லையே.

தங்களிடம் பெண் கேட்டு வந்திருக்கிறார் என தெரிந்த போதும் எதையும் காட்டிக்கொள்ளாமல்... "உங்கள பத்தி நிறைய கேள்விப்பட்டு இருக்கேன் என்றவர்... எங்க வீட்டுக்கு எதுக்காக வந்திருக்கீங்க?" என்க,

"எல்லாம் நல்ல விஷயம் தான். இது என் பையன் கிருஷ்ணா, அவனுக்கு உங்க பொண்ணு கார்த்திகாவை கேட்டு வந்து இருக்கோம்" என்றார்.

"நாங்களும் எத்தனையோ பொண்ணுங்க எங்க வசதிக்கு ஏத்த மாதிரி பாத்தோம்.. ஆனா அவனுக்கு யாரையுமே பிடிக்கலைன்னு சொல்லிட்டான்.

உங்க பொண்ண பார்த்தவுடனேயே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான். அதுவும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியிருந்தே லவ் பண்ணிட்டு இருக்கான்.

என்னோட மொத்த சாம்ராஜ்யத்துக்கு இவன்தான் ஒரே வாரிசு. அதனால அவனோட ஆசையை நிறைவேத்தனும்னு ஒரே காரணத்துக்காக தான்... உங்க பொண்ணை என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்" என்றார்.

"சாரி சார்...சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க...என் பொண்ணுக்கு ஆல்ரெடி வேற ஒரு பையனோடு கல்யாணம் பேசி நிச்சயம் பண்ணியாச்சு" என்றார் ஹரிஹரன்.

"உங்ககிட்ட உங்க பொண்ண கல்யாணம் பண்ணி கொடுங்கணு கேட்க வரல….கல்யாணம் பண்ணி கொடுத்து தான் ஆகணும்னு சொல்ல வந்தேன்" என்றவர்,

"என்ன பத்தி உங்களுக்கு சரியா தெரியாது…. பெர்சனல் லைஃபா இருக்கட்டும், பிஸ்னஸா இருக்கட்டும் நான் என்ன நினைக்கிறேனோ அது தான் நடக்கணும், நீங்க நினைக்கிறது எல்லாம் இங்க ஏத்துக்க முடியாது" என்றார்.

அதுவரை தங்களை விட பெரிய இடம் என அமைதியாக இருந்தவர், இவரின் திமிரான பேச்சை கேட்டு கோபமடைந்து "நீங்க எவ்ளோ பெரிய ஆளா வேணா இருக்கலாம், அதுக்காக எல்லாம் எங்களால பயந்துட்டு இருக்க முடியாது' என்றவர் எனக்கு என் பொண்ணோட வாழ்க்கை தான் முக்கியம், அவளுக்கு பிடிக்காத ஒரு வாழ்க்கையை ஒருபோதும் அமைத்து தரமாட்டேன்… என்னோட உயிர் இருக்கிற வரைக்கும் நீங்க நினைக்கிறது நடக்காது" என்றார் கோபமாக.

"நான் நினைக்கிற விஷயம் நடக்குறதுக்கு உங்க உயிர்தான் தடையா இருக்குன்னா அதை எடுக்க கூட நான் தயங்க மாட்டேன்" என்றவர்,

"என்னோட முடிவுக்கு நீங்க ஒத்துப்போனால் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கும் இல்லன்னா நீங்க யாருமே இல்லாத அனாதையா உங்க பொண்ணோட கல்யாணம் நடக்கும், எப்படி வசதி" என்றார் ராஜீவ் கிருஷ்ணா.

"என்ன உயிர் பயம் காட்டுறீங்களா ? இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்,உங்களால முடிஞ்சதை பாத்துக்கோங்க. எனக்கு என் பொண்ணோட வாழ்க்கை தான் முக்கியம்" என்றார் இவரும் விடாப்பிடியாக.

"அவசரப்படாதீங்க மிஸ்டர்... உங்களுக்கு இன்னும் பத்து நிமிஷம் டைம் தரேன், நல்லா யோசிச்சு முடிவு எடுங்க. இல்லன்னா நிறைய பின் விளைவுகளை அதாவது உயிர் பலியை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றவர்... எனக்கு கொலை பண்றது ஒன்னும் புதுசு இல்ல, பிஸ்னஸ்க்காக எவ்வளவோ கொலை பண்ணி இருக்கேன். என் பையனுக்காக இதை பண்ணமாட்டேனா" என்றார்.

தான் இவ்வளவு சொல்லியும் தங்கள் முடிவில் நிலையாக இருந்தவரை பார்த்து…. "உங்களுக்கு ரொம்ப தைரியம் தான் மிஸ்டர், உங்க தைரியத்தை பாராட்டுகிறேன் என்றவர்... ஆனா பாவம் உங்க பொண்ணு இவ்வளவு சீக்கிரம் அனாதையாக தேவையில்லை. எல்லாம் விதி" என்றவர் தங்கள் குடும்பத்தோடு வெளியே சென்றார்.

சிறிது தூரம் சென்று பின் திரும்பி பார்த்தவர் "என் குடும்பத்து முன்னாடி என்னோட வார்த்தைக்கு மதிப்பளிக்காமல் என்னை அவமானப்படுத்தியதற்கு உங்களை சும்மா விடமாட்டேன், ஏன்டா இவனை பகைச்சோம்னு ஒவ்வொரு நிமிஷமும் துடிதுடித்து சாக வைக்கிறேன்" என்றார் வன்மம்மாக.

அனைத்தையும் சொல்லிவிட்டு அழுதவரின் முன் தன்னிடம் உள்ள கிருஷ்ணா குடும்பத்தின் புகைப்படத்தை காட்ட …."இவங்க தான் சார் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு" என்றார் காமாட்சியம்மாள்.

அவரிடமிருந்து அனைத்து தகவலையும் பெற்றவன், "சாட்சி சொல்ல கோர்ட்டிற்கு வரவேண்டும்" என்பதை வழியுருத்தியவன், ரவீந்திரனை தொலைபேசியில் அழைத்து இவர்களை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு மாற்ற சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்று சென்றான்.

அனைத்து ஆதாரத்தின் படி கொலை செய்தது கிருஷ்ணா என்பதும் அதற்கு உறுதுணையாக இருந்தது அவனின் தந்தை ராஜீவ் கிருஷ்ணா என்பதும் தெள்ளத் தெளிவாக புரிய…. இருப்பினும் அவர்களை இப்போது எதுவும் செய்ய கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.

இப்போது என்ன செய்தாலும், அவர்கள் வெளியே வர அல்லது சாட்சியை கலைக்க வாய்ப்பிருப்பதால்... கோர்ட்டில் நேரடியாக அனைவர் முன்னிலையிலும் உண்மையை உரைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தப்பிக்க எந்த வழியும் இருக்காது என நம்பியவன்... அந்த நாளுக்காக காத்திருக்க தொடங்கினான்.

பின்னர் அனைத்து வேலையும் முடித்து வீட்டிற்கு செல்லவே இரவு பத்து மணியை கடந்திருக்க... உணவை முடித்தவன் கார்த்திகாவின் அறையை திறந்து பார்க்க... அவள் உறங்கிக் கொண்டிருப்பதை உறுதி செய்தவன், தன் அறைக்கு சென்றான்.

இரவு 12 மணி வரைக்கும் நிலுவையிலுல்ல வேலையை செய்து கொண்டிருந்தவன், மணி நள்ளிரவை கடந்தும் தூக்கம் வராததால் மொட்டை மாடிக்கு செல்ல….

அங்கு இருளை வெறித்துக் கொண்டு நின்றிருந்த கார்த்திகாவை பார்த்து, யோசனையோடு அருகில் சென்றவன் அவள் தோளில் கை வைக்க…. பயத்தில் அதிர்ந்து திரும்பியவளை பார்த்து "நான்தான் பயப்படாதே என்றவன்... இவ்வளவு பயம் இருக்கிறவ எதுக்கு இந்த அர்த்தராத்திரியில் மாடிக்கு வந்த" என்றவன் அப்போதுதான் அவள் முகம் பார்க்க... அதுவோ அழுது வீங்கியிருந்தது.

அவளை என்ன சொல்லித் தேற்றுவது என அறியாமல் அவளை இழுத்து அணைத்தவன் "போதும் நிலா இன்னும் எத்தனை நாள் தான் அதையே நினைத்து அழுதுட்டே இருப்ப" என்க….அவளோ அழுவதற்கு நல்ல இடம் கிடைத்தது என்பது போல் அவன் மார்பில் சாய்ந்து கதறி அழ தொடங்கினாள்.

"எனக்கு அம்மா வேணும், அப்பா வேணும்" என சிறு குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுதவளை எப்படி சமாளிப்பது என குழம்பி போனான்.

அவள் வேறு எதை கேட்டிருந்தாலும் வாங்கி கொடுத்திருப்பான் ஆனால் அவள் கேட்பது…'அம்மா அப்பாவை' பணத்தினால் குழந்தையைக் கூட வாங்கக்கூடிய நவீன உலகத்திலும் தாய்த் தந்தையையும் அவர்களின் அளவில்லா தூய்மையான அன்பை கடவுளால் கூட வாங்க முடியாதே என எண்ணியவன்….அவள் அழுவதை வேடிக்கை பார்க்கும் தன் நிலையை அறவே வெறுத்தான்.

சிறிது நேரம் அழ அனுபவித்தவன், பின்னர் அப்படியே சுவரில் சாய்ந்து கீழே அமர்ந்தவன்...அவளை தன் மடியில் தலைவைத்து படுக்க வைத்து,முதுகை வருட தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தவள், அவன் வருடலில் அப்படியே தூங்கிப் போனாள்.

அவனும் அப்படியே சாய்ந்து உறங்க….அதிகாலையில் முதலில் கண்விழித்து மணியை பார்க்க அதுவோ நான்கு முப்பது என காட்டியது.

அன்று போல் இன்றும் குழந்தையைபோல் அவளை கையில் ஏந்திக்கொண்டு படிகளில் இறங்கி அவளின் அறையில், தன் தாயின் அருகே மெதுவாக படுக்க வைத்து போர்வையை இழுத்து போர்த்திவிட்டு வெளியே வந்தான்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 20

மறுநாள் மொபைல் அலர... திரையில் உள்ள எண்னை பார்த்து கோபத்துடன் அதனை ஏற்று காதில் வைத்தான் கிருஷ்ணா.

"உங்ககிட்ட எத்தனை தடவைடா சொல்லி இருக்கேன், நீங்களா எனக்கு போன் பண்ணாதீங்க... எதுவா இருந்தாலும் நானே கூப்பிடுறேன்னு.

இன்னும் ஒரு நாள் உங்களால பொறுமையா இருக்க முடியாதா ?.... நம்ம மேல சந்தேகம் வராத வரைக்கும் தான் நாம செஃப்... சின்னதா ஒரு டவுட் வந்தாலும் நம்மளை உண்டுடில்லைனு ஆக்கிடுவாங்க புரியுதா...

சரி எதுக்கு ஃபோன் பண்ணிங்கன்னு முதல்ல சொல்லுங்க" என்க...எதிரில் இருந்தவன், "அது ஒன்னும் இல்ல சார்... "நாளைக்கு அந்த கொலை கேஸ் கோர்ட்ல வருது,அதான் நமக்கு ஏதாவது பிரச்சனை வருமானு பசங்க எல்லாம் பயப்படுறாங்க….

அதான் உங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்கலாம்னு ஃபோன் பண்ணேன். நம்ம மேல யாருக்கும் எந்த டவுட்டும் வரல இல்ல சார்" என்றவனுக்கு,

"இதுவரைக்கும் யாருக்கும் நம்ம மேல சந்தேகம் வரல. ஆனா உங்கள மாதிரி அரைவேக்காட்டை எல்லாம் கூட வைத்திருந்தால் சந்தேகப்படுவது என்ன கன்ஃபார்ம் பண்ணி தூக்கிட்டுப் போய் உள்ள வச்சிடுவான்" என கோபமாக கத்தியவன்,

"ஏன்டா கடைசி நேரத்துல இப்படி உயிரை வாங்குறீங்க. அப்படி ஏதாவது இருந்தால் நானே உங்களுக்கு போன் பண்ணி சொல்லிருக்க மாட்டேனா... நீங்க மாட்டினா உங்க கூட சேர்ந்து மாட்ட போறது நானும் தான், தேவையில்லாம இனிமே இந்த ஃபோனுக்கு கால் பண்ணாதீங்க...இன்னும் ஒருநாள் ஒரே ஒரு நாள்தான் இருக்கு, அதுக்கு அப்புறம் எல்லா பிரச்சினையும் எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும்" என்றவன், போனை அணைத்துவிட்டு தன் தந்தைக்கு அழைத்தான்.

"ஹாய் டாட்…. எப்படி இருக்கீங்க?.." என்க,
"ஐயம் ஃபைன் மை டியர் சன்...வாட் அபவுட் யூ?.." என அவர் கேட்க... ஃபைன் டாட் என்றான் கிருஷ்ணா.

"அப்பறம் அந்த கேஸ் விஷயம் எந்த நிலைமையில் இருக்கு" என அவர் கேட்க, "அதெல்லாம் நமக்கு சாதகமா தான் இருக்கு டாடி... அவனுக்கு ஒரு சாட்சி கூட கிடைக்க வாய்ப்பே இல்லை, இருந்த எல்லா ஆதாரத்தையும் அந்த மனோகரை வைத்து அப்பவே அழிச்சிட்டேன். அதுக்கப்புறம் நம்மளை பற்றி தெரிந்த அவனையும் தூக்கியாச்சு. இனிமே எனக்கு எதிராக சாட்சி சொல்ல எவனாவது பொறந்து தான் வரணும்" என்றான் சிரித்துக்கொண்டே.

"வெல்டன் மை சன்... இருந்தாலும் இன்னும் ஒரு நாள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ. அவனை பத்தி தெரியும் தானே... எப்ப என்ன பண்ணுவான்னு நமக்கே தெரியாது" என்றார் ராஜீவ் கிருஷ்ணா.

"அவன பத்தி எனக்கு தெரியாதா" என்றவன் இனி எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்... நீங்க எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க" என்றான்.

"எனக்கு ஒரு விஷயம்தான் புரியல... உனக்கு அவதான் வேணும்னா, அவங்க எல்லாரையும் கொன்னுட்டு அவளை தூக்கிட்டு வந்திருக்கலாம், இல்ல எல்லாரையும் கொல்லும் போது இவளையும் சேர்த்து கொலைப் பண்ணியிருக்கலாம்… அத விட்டுட்டு எதுக்காக எல்லா பழியையும் இவ மேல போட்டு, இவ்ளோ பெரிய ரிஸ்க்" என இத்தனை நாளாக மனதில் இருந்ததை கேட்க,


"நீங்க சொல்ற மாதிரி அன்னைக்கே அவளை கொலை பண்ணியிருந்தா நான் யாரு?... எதுக்காக நம்மள கொலை பண்ணாங்க... இது எதுவும் தெரியாம நிம்மதியா குடும்பத்தோட போய் சேர்ந்துருப்பா…. அப்படி நிம்மதியா அவளைப் போக விட்டுவிடுவேனா…

நான் யாரு, என்னோட பின்புலம் என்ன, இது எதுவுமே தெரியாம அவ என்னை காதலிக்கனும்னு நெனச்சேன். அதனாலதான் என் முகத்தை கூட அவகிட்ட நான் காட்டல, எனக்காக அவகிட்ட இருந்து ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்திருந்தா கூட அவ முன்னாடி போய் என்னை அடையாளப்படுத்தி இருப்பேன்,

ஆனா...அவ என்னை ஏத்துக்காதது கூட என்னால் தாங்கிக்க முடியும், அவ மனசுல என்ன தவிர வேற ஒருத்தன் இருந்தததான் என்னால ஏத்துக்க முடியல.

அவள இந்த கேஸில் மாட்டிவிடனும்னு ஒரு எண்ணமே எனக்கு வரல...அதுவரைக்கும் அவங்க குடும்பம் மட்டும் தான் என்னோட ஆசைக்கு தடைன்னு நினைச்சுட்டு இருந்தேன், அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அவ மனசுல வேற ஒருத்தன் இருந்தது.

அதான் அப்பவே முடிவு பண்ணிட்டேன் எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது... அதே நேரத்துல அவ உடனே சாகவும் கூடாது, அதனால்தான் அவ மேல பழியை தூக்கி போட்டேன்" என்றான் கூலாக.

"இப்ப பாருங்க.. அவ கைதி இவன் போலீஸ் கேட்கவே ரொம்ப நல்லா இருக்குல்ல. அவளை பரோலில் எடுத்திருக்கான், எடுத்தா மட்டும் என்ன ஆக போகுது திரும்பும் ஜெயிலுக்கு தான் போவா, இல்லனா ஒரேடியா மேல போய்டுவா' என்றவன்... நீங்க எதை பத்தியும் கவலைப்படாதீங்க டாடி, அந்த மூணு பேரும் ரொம்ப பாதுகாப்பா ஒரிடத்தில் இருக்காங்க, அவங்க இருக்கிற இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதனால் வெற்றி நமக்குத்தான்" என்றவன், போனை அணைத்து டேபிள் மீது வைத்தான்.

மேஜை மேல் உள்ள கத்தியை எடுத்தவன், அங்குள்ள கார்த்திகா ஹர்ஷா சேர்ந்து உள்ள போட்டோவில் கத்தியால் குத்தினான்.

"இந்த தடவை என் கிட்ட இருந்து தப்பிச்சிடிங்க... அடுத்த தடவை உங்களை எங்கிட்டயிருந்து அந்த கடவுளால் கூட காப்பாற்ற முடியாது" என வன்மமாக சிரித்தவன்…. தன் வேலையை பார்க்க தொடங்கினான்.

இங்கு ஹர்ஷாவோ... இதுவரை கிருஷ்ணா பேசிக்கொண்டிருந்த அனைத்தையும் மொபைல் ரெக்கார்டிங் மூலம் கேட்டுக்கொண்டிருந்தவன், முகத்தில் புன்னகையோடு ரவீந்திரனை நோக்கி…"இதுவரைக்கும் அந்த மூன்றுபேரை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருந்துது... ஆனா இப்போ அவங்களே வந்து நம்ம வலையில் மாட்டிக்கிட்டாங்க" என்றவன்,

"எப்படியும் அந்த அரைவேக்காடுங்க.. இந்த கிருஷ்ணா சொன்னதை நம்பி இன்னும் ரெண்டு நாளுக்கு போனை சுவிட்ச் ஆன் பண்ண மாட்டாங்க... இதுதான் நமக்கு சரியான நேரம் இப்போ அவங்களை நம்ம கஸ்டடியில் எடுத்தோம்னா யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. கிருஷ்ணாவுக்கும் தெரிய வாய்ப்பில்லை" என்றான்.

"அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்… அவனுங்க நம்ம கஸ்டடியில் இருக்கிறது யாருக்கும் தெரிய கூடாது. நாளை காலையில கோர்ட்டில் ஒப்படைக்கிற வரைக்கும் எல்லாமே ரகசியமா இருக்கணும், அப்பதான் அவனுங்க தப்பிக்க எந்த வழியும் இல்லாமல் வசமா மாட்டுவாங்க" என்றான்.

ஹர்ஷாவின் ஆணைப்படி அனைத்து வேலையும் துரிதமாக நடக்க…. அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த மூவரும் அவனின் கஸ்டடியில் இருந்தனர்.

அனைத்து வேலையும் முடித்தவன்.. தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் எடுத்துக் கொண்டு வக்கீலை காண சென்றான்.

கொலை நடந்த அன்று எடுக்கப்பட்ட வீடியோ, கார்த்திகாவின் தந்தையுடைய டைரி, செக்யூரிட்டி மற்றும் காமாட்சியம்மாளின் வாக்குமூலம், இப்போது தங்கள் வாயாலேயே ஒத்துக் கொண்ட மொபைல் ரெக்கார்ட் என தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் ஒப்படைத்தான்.

அனைத்தையும் கண்டு அதிர்ந்தவரை...பார்த்து மெலிதாக புன்னகைத்தவன் "இனி எல்லாமே உங்க கையில தான் இருக்கு" என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

அனைத்து வேலையும் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவனை வரவேற்றது, கார்த்திகாவின் குரல். குழந்தைகளுக்கு உணவை ஊட்டிக்கொண்டே ரைம்ஸ் சொல்லிக் கொண்டிருந்தவள்... தன் முன் எழுந்த நிழலில் நிமிர்ந்து பார்க்க... அங்க கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் ஹர்ஷவர்தன்.

அவனைக் கண்டவுடன் ஒருவித தயக்கம் கொண்டு கீழே குனிந்து கொண்டவளின் மனதில் நேற்றைய இரவு நினைவில் வந்தது. மாடிக்கு சென்றது, அழுதது, அவன் வந்து தன்னை சமாதானப் படுத்தியது, அவன் மடியில் படுத்தது வரை அனைத்தும் மனதில் இருக்க...காலையில் மெத்தையிலிருந்து எழும்போதுதான் அவளுக்கு அவன் தான் தன்னை ஏந்திக்கொண்டு வந்து படுக்க வைத்திருக்க வேண்டும் என்பது நினைவு வந்தது.

அது என்னவோ... எத்தனை துன்பம் வந்தபோதிலும் அவன் அருகாமையில் அனைத்தையும் மறந்து நிம்மதியாக துயில்கொள்ள முடிகிறது என்பதை நினைக்கையில் அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

தன்னவனின் அருகாமை தன் மொத்த துன்பத்தையும் போக்கிவிடும் என்றும்... தன் சந்தோஷத்தை மீட்டெடுக்க அவனால் மட்டுமே முடியும் என்றும் தெள்ளத்தெளிவாக அவளுக்கு புரிந்த நொடி நேற்றைய இரவு தான்.

அவளின் தயக்கம் இவனுள் கேள்வியாக எழ... அனைவரும் இருப்பதால் அமைதி காத்தவன், தன் அறைக்குச் சென்று குளித்துவிட்டு உணவருந்த கீழே வந்தான்.

அவளின் தயக்கத்திற்கான பதில் கிடைக்காததால்... உணவும் இறங்காமல், அவளையே பார்வையால் பருகிக் கொண்டிருந்தவன், கைகழுவிவிட்டு குழந்தைகள் அருகில் சென்று அமர்ந்தான்.

" செல்ல குட்டிஸ் என்ன படிக்கிறீங்க" என குழந்தைகளிடம் கேட்க…. "நிலா நிலா ஓடி வா பாட்டு" சித்தப்பா என்றவளை கையில் ஏந்தியவன்,

"இன்னைக்கு பௌர்ணமி, வானத்துல நிலா புதுசா, பெருசா இருக்கும், நம்ம பார்த்துக்குட்டே படிக்கலாமா" என கேட்டுக்கொண்டே தியாவை கையில் ஏந்தியபடி மாடியில் எற... "சித்தப்பா நான்" என்ற ரோஹித்தை பார்த்து... "நீ சித்தி கூடவா" என்றவன் வேகமாக படியேறினான்.

"சித்தி வாங்க போலாம்" என கைபிடித்து இழுக்கும் குழந்தையின் ஆசையை தட்ட முடியாமல், அங்குள்ள பெரியவர்களை காண தயங்கி... கீழே குனிந்து கொண்டே மேலே சென்றாள்.

"அவளை தனியா அழைச்சுட்டுப் போனா ஏதாவது சொல்லுவோம்னு, குழந்தைகளையும் சேர்த்து கூட்டிட்டு போறான்.சரியான போலீஸ் டிரஸ் போட்டு திருடனா இருப்பான் போல" என தன் மகனை பற்றி கூறியவர் ...எல்லாம் அவங்க அப்பாவோட புத்தி அப்படியே" என வாய்க்குள் முணுமுணுத்தவர்,அனைவருக்கும் உணவைப் பரிமாறினார்.

குழந்தைகளை மாடிக்கு சென்று தரையில் விட... அவர்களோ "ஐ... ஜாலி... அங்க பாரு நிறைய ஸ்டார்ஸ் இருக்கு...இல்ல இங்க பாரு பெரிய நிலா" என அவர்கள் தங்கள் உலகத்துக்குள் சென்றுவிட…. கார்த்திகாவின் கையை பிடித்தவன், "என்கிட்ட உனக்கு என்ன தயக்கம்" என்க,

அவளோ "அதெல்லாம் எதுவும் இல்லை" என்றாள்.

"இல்ல ஏதோ இருக்கு உன் கண்ணுல நான் பார்த்தேன்" என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்... "இல்ல நேத்து உங்க மடியிலயே தூங்கிட்டேன்...அப்பறம் நீங்க தானே தூக்கிட்டு போய் அதான்" என்றாள்.

"இதுல தயக்கத்துக்கு என்ன இருக்கு... இதெல்லாம் நான் செய்யாம வேற யாரு செய்வா" என்றவன் அவளை இன்னும் அருகில் இழுக்க... அவளோ அவன் கையை உதறிவிட்டு குழந்தைகளுடன் விளையாட சென்று விட்டாள்.

அவளோ குழந்தைகளுக்கு நிலாவை காட்டி பாடம் நடத்திக் கொண்டிருக்க... அவனோ தன்னுடைய நிலவை ரசித்துக்கொண்டு இருந்தான்.

மறுநாள் காலையில் விரைவாக கிளம்பியவன் கீழே வர... ஒட்டுமொத்த குடும்பமும் ரெடியாக காத்துக்கொண்டிருந்தது.

"எல்லாரும் எங்க கிளம்பிட்டீங்க?.." என தன் குடும்பத்தினரை பார்த்து கேட்டவன்... கார்த்திகாவை நோக்கி "போலாமா" என்க,

"டேய் நாங்களும் கோர்ட்டுக்கு தான் வரோம்" என்ற தாயை பார்த்து "எதுக்குமா எல்லாரும், போய்ட்டு, கண்டிப்பா உங்க மருமகளை திரும்பி கூட்டிட்டு வந்துவிடுவேன்" என்றவனை பார்த்து,

"அதெல்லாம் முடியாது...நாங்க எல்லாரும் கிளம்பிட்டோம், கண்டிப்பா வருவோம்.. அவளை அங்க தனியா விட்டுட்டு எங்களால இங்க நிம்மதியா இருக்க முடியாது என்பவர்... இங்க பாரு இந்த சின்னது கூட ஸ்கூலுக்கு கிளம்ப மாட்டேங்குது" என்றார்.

தனக்கு யாருமே இல்லை என எண்ணியவளுக்கு மொத்த குடும்பமே நானிருக்கிறேன் என சொல்ல... ஓடி சென்று ராதிகாவையும் கீர்த்தனாவையும் அணைத்துக்கொண்டாள்.

தனக்குப் போட்டியாக இந்த குடும்பத்தில் வரப்போகிறவள் என தெரிந்தும், கூட பிறந்த சகோதரியை போல தன்னை பார்த்துக்கொண்ட கீர்த்தனாவை பார்க்கையில்... இதுவரை தனக்கு அக்கா இல்லை என்ற குறை தீர்ந்தது போல் இருந்தது அவளுக்கு.

யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு குடும்பம் என்றுதான் நினைக்கத் தோன்றியது.
கடவுள் ஒரு குடும்பத்தை தன்னிடமிருந்து பிரித்துவிட்டு மற்றொரு குடும்பத்தை தனக்கு கொடுத்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டாள்.

அனைவரும் நீதிமன்றம் வந்தடைய…. கார்த்திகாவை உள்ளே அழைத்து சென்று அங்குள்ள காவலர்களிடம் ஒப்படைத்தவன், கௌஷிக்கை காண சென்றான்.

கௌஷிக்கிடம் கேஸை பற்றி பேசியவன், "உன்னதான்டா நம்பி இருக்கேன்" என்க, அவனோ "மச்சி... அதெல்லாம் பக்காவா பண்ணிடலாம்,நீ எதுக்கும் பயப்படாதே" என்றவன்...தனது ஃபைலை எடுத்துகொண்டு உள்ளே சென்றான்.

தன் எதிரில் அமர்ந்திருந்த எதிர்த்தரப்பு வக்கீல் சக்கரவர்த்தியை புன்னகையோடு பார்க்க... அவரோ ஒரு வெறுமையான பார்வையை அவனிடம் செலுத்தினார்.

'தோல்வியடைய போறாம்ன்னு முன்னாடியே தெரிஞ்சிருச்சு போல நம்ம சீனியருக்கு' என நினைத்துக் கொண்டவன் நீதிபதியின் வருகைக்காக காத்திருந்தான்.

 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 21

நீதிபதி உள்ளே நுழைய... அனைத்து சலசலப்புகளும் அடங்கி பெரும் அமைதி நிலவியது. அனைவரும் அவருக்கு மரியாதை தரும் விதமாக எழுந்துநின்று பின் அமர்ந்தனர்.

வழக்கை தொடங்குமாறு ஆணையிட... முதலில் தன் இருக்கையிலிருந்து எழுந்தார் அரசு தரப்பு வக்கீல் சக்கரவர்த்தி.

"யுவர் ஹானர்... இன்றைய வழக்கு என அதனை பற்றி கூறியவர், ஒரு விசித்திரமான வழக்கு மட்டுமல்ல... என் வாழ்க்கையிலயும் கேரியர்லயும் மறக்க முடியாத வழக்கும் கூட" என்றவரை பார்த்து, முதல்முறையா தோற்க்க போறதையும் யாராலும் மறக்க முடியாதுதான் என மனதில் நினைத்துக் கொண்டான் கௌஷிக்.

"போன ஹியரிங்கின் போதே…. குற்றம்சாட்டப்பட்ட மிஸ். கார்த்திகா தான் இந்த கொலையை செய்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்தபோதிலும்…. எதிர்த்தரப்பு வக்கீல் அவருடைய மருத்துவ ரிப்போர்ட்டின் படி, சரியா கொலை நடந்த நேரம் அவர் சுயநினைவு இல்லாமல் இருந்திருக்கிறார் என்ற வாதத்தை முன்வைக்க…. இப்போது யார் இந்த கொலையை செய்தார் என்பது மிகப்பெரிய வினாவாக உள்ளது.

அதனை விசாரிக்கவும் ஆதாரங்களைத் திரட்டவும் கால அவகாசம் கேட்ட.. எதிர்தரப்பினருக்கு அதற்கான ஆதாரங்கள் கிடைத்ததா என்பதே எனது கேள்வி" என்றார் சக்கரவர்த்தி.

அப்போது எழுந்து நின்ற கௌஷிக். "ஆதாரம் எங்கிருந்து கிடைக்கும் யுவர் ஹானர்…. இந்த கேசை முதலில் பார்த்த இன்ஸ்பெக்டர் மனோகர் எல்லா ஆதாரங்களையும் கலைத்து விட்டார் என்பதே உண்மை ஆனால் அதனை நிரூபிக்க இப்போது அவரும் உயிரோடு இல்லை" என்றவன்,

"இந்த வழக்கு மிஸ். கார்த்திகா குற்றவாளியா இல்லை குற்றமற்றவரா என்பதே... அப்படி பார்க்கையில் இந்த மெடிக்கல் ரிப்போர்ட் ஒன்றே அவரை நிரபராதி என நிரூபிக்கும்" என்றான் கௌஷிக்.

"அப்ஜக்ஷன் யுவர் ஆனர் என எழுந்து நின்ற எதிர்தரப்பு வக்கீல்…. இவர் சொல்வது போல், இந்த பெண் குற்றவாளியா இல்லையா என்பது முக்கியம் தான். ஆனால் அதனைக் காட்டிலும் யார் இந்த கொலையை செய்தார் என்பது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இந்தப் பெண்ணை விடுதலை செய்ய முடியும்" என்றவர்,

"இவர் கையில் கார்த்திகா கொலை செய்யவில்லை என நிரூபிப்பதற்கான மெடிக்கல் ரிப்போர்ட் உள்ளது... என்னிடம் இவர்தான் கொலை செய்தார் என்பதற்கான பாரன்சிக் ரிப்போர்ட் உள்ளது. இப்படி இருபுறமும் இருக்கும் பட்சத்தில் குற்றவாளி யார் என அறிந்தால் மட்டுமே இந்த பெண்ணை விடுதலை செய்ய முடியும் என்பதே நமது சட்டம்" என்றார் சக்கரவர்த்தி.

"வேறு சாட்சிகளே இல்லாத பட்சத்தில் என்னதான் செய்வது... ஒரு நிரபராதிக்கு தண்டனை கொடுக்க மட்டும் உங்கள் சட்டத்தில் இடம் இருக்கிறதா" என்ற கௌஷிக்கை பார்த்து,

"சாட்சியும் ஆதாரமும் உங்களிடம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்னிடம் இருக்கிறது
மிஸ்டர். கௌஷிக்" என்றவர்,

"யுவர் ஆனர்... நான் வந்தது முதலே சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம்…. இந்த வழக்கு ஒரு விசித்திரமானது, என் கேரியரில் மறக்க முடியாதது என்பதே…. ஏனென்றால் இதுவரை கார்த்திகா தான் குற்றவாளி என வாதாடிய நான், இப்போது இவருக்கு ஆதரவாக அதாவது இவர் குற்றவாளி அல்ல என வாதாட போகிறேன்" என்றார்.

அவர் என்ன பேசுகிறார் என புரியாமல் அங்குள்ள நீதிபதி, கௌஷிக் உட்பட அனைவரும் திகைத்து பார்க்க,

"எஸ் மை லார்ட்... எதிர்த்தரப்பு வக்கீல் சொல்வதுபோல் இந்த கொலைகள் அனைத்தையும் இந்த பெண் கார்த்திகா செய்யவில்லை என்பதே உண்மை. அதற்கான ஆதாரம் இதோ" என ஒரு பென்டிரைவை ஒப்படைக்க, அதை திரையில் ஒளிபரப்ப செய்தனர்.

அன்றிரவு மொட்டைமாடியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒளிபரப்பாக அதனை கண்டு அனைவரும் அதிர்ந்தார்கள் என்றால்.. கௌஷிக்கோ உச்சகட்ட அதிர்ச்சியடைந்தான்.

இந்த காணொளி கொலை நடந்த அன்று இரவு... இரு வீடுகள் தள்ளியுள்ள ஒரு கல்லூரி மாணவன் ரமேஷால் எடுக்கப்பட்டது. திருடர்களாக இருக்கும் என எண்ணி எடுத்தவன், மறுநாள் அனைவரும் இறந்த உண்மை தெரியவர... பயத்தில் இத்தனை நாட்களாக இதனை சொல்லாமல் இருந்திருக்கிறான்.

அவனை அழைத்து விசாரிக்க… அவனும் அன்று பார்த்த அனைத்து உண்மைகளையும் சொன்னான்.

"இந்த வீடியோவில் இருக்குறவங்க யாருன்னு விசாரிச்சீங்களா" என்ற நீதிபதியின் கேள்விக்கு,

"அவங்களைப் பற்றி பேசுவதற்கு முன்பு...இது இறந்துபோன ஹரிஹரன் அதாவது கார்த்திகாவுடைய தந்தையின் டைரியிலிருந்து எடுக்கப்பட்ட சில பக்கங்களின் நகல்" என ஒரு காகிதத்தை அந்த டைரியோடு சேர்த்து நீதிபதி முன் ஒப்படைத்தார்.

அந்த குறிப்பிட்ட நாளில்… டைரியில் குறிப்பிட்ட நபர் குடும்பத்தோடு பெண் கேட்டு வந்ததாகவும்… இவர் அதை நிராகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் பெண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் சாதாரணமான ஒன்றுதான், ஆனால் இங்கு நடந்ததே வேறு" என்றவர்,

"அன்று நடந்த நிகழ்வை, அவர் முழுமையாக டைரியில் குறிப்பிடவில்லை. ஆனால் அன்று நடந்த சம்பவத்திற்கு இருக்கும் ஒரே சாட்சி, அந்த வீட்டில் வேலை செய்த காமாட்சியம்மாள். அவரை விசாரிக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

அனுமதி வழங்கப்பட... கூண்டில் ஏறி நின்ற காமாட்சி அம்மாள்... அன்று நடந்த அனைத்தையும் கூறியவர், 'கடைசியாக அனைவரையும் துடிதுடித்துக் கொள்வேன்' என சொல்லிவிட்டு சென்றதையும் அழுதுகொண்டே சொன்னார்.

"நீங்க ஏன் அங்கிருந்து வேலையை விட்டு நின்னீங்க" என கேட்க...அவரோ "அது இந்த சம்பவம் நடந்த ரெண்டு மூணு நாள் கழிச்சு... என்னோட கணவருக்கு ஒரு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு,ஒரு மாசம் ஹாஸ்பிடல்ல தான் இருந்தாரு. அப்புறம் நடக்கவே ஒரு வருஷம் ஆகும்னு டாக்டர் சொல்லிட்டாங்க... அதான் வேலையை விட்டு நின்னுட்டு, எங்களோட சொந்த ஊருக்கே போய்டோம்" என்றார்.

"உங்களுக்கு அப்புறம் அந்த வீட்ல யாரும் வேலைக்கு வந்தாங்கன்னு தெரியுமா" எனக் கேட்க…. "அதெல்லாம் தெரியாது சார், அவர் அடிபட்டு வர முடியாதுன்னு தெரிந்ததுமே புதுசா ஒருத்தரை வேலைக்கு வச்சுட்டாங்க.

என் புருஷனோட மொத்தம் ஹாஸ்பிடல் செலவையும் அய்யா தான் ஏத்துக்கிட்டாங்க, அந்த குடும்பமே ரொம்ப நல்ல குடும்பம். எனக்கு சரியா எந்த விவரமும் தெரியலை...இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் எனக்கே தெரியும் எல்லாரும் இறந்து போனது, இல்லனா அப்பவே வந்து சொல்லி இருப்பேன்" என்றார்.

"இது மட்டுமில்லை யுவர் ஹானர் இன்னும் இருக்கு என்றவர்…. முதலில் பார்த்த காணொளியை திரும்ப ஒளிபரப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

ஓடிக்கொண்டிருந்த காணொளியின் ஓரிடத்தில் நிறுத்த சொன்ன சக்கரவர்த்தி "இந்த இடத்தை கொஞ்சம் கவனிச்சு பாருங்க சார்….நாலு பேர் சுவரெறி வந்திருக்காங்க ஒருத்தன் மட்டும் வீட்டுக்குள்ளே இருந்து வந்திருக்கான் என்றவர்... இது வேற யாரும் இல்லை இப்போது சாட்சி சொல்லி சென்ற காமாட்சியம்மாளுக்கு பதில் அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்த பார்த்திபன்.

அடுத்தது அவனும் நீதிபதி முன் நிறுத்தப்பட... அவனிடம் கேட்ட எந்த கேள்விக்கும் சரியாக பதில் சொல்லாமல் மழுப்பியவனை பார்த்து…"கோர்ட் வரைக்கும் வந்தும் உன்னோட விசுவாசத்திற்கு ஒரு அளவே இல்லாம போச்சு" என நக்கலாக சொல்லியவர்,

இந்த காணொளியில் உள்ள மற்ற மூன்று பேரையும் அழைத்து வர…. இனி மறைத்து ஒரு புண்ணியமும் இல்லை என உணர்ந்த நான்கு பேரும் "எங்க முதலாளி ராஜீவ் கிருஷ்ணா மற்றும் அவரின் மகன் கிருஷ்ணா இருவரும் சொல்லிதான் இந்த கொலையை செய்தோம்" என ஒத்துக்கொள்ள…. மொத்த நீதிமன்றமும் அதிர்ச்சியை உள்வாங்கி அமைதியாக இருந்தது.

"யுவர் ஹானர்... இந்த கிருஷ்ணா என்பவர் கார்த்திகாவை அவள் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே பின்தொடர்ந்து தன் அடையாளங்களை மறைத்து காதலை தெரிவித்துள்ளார், அவர் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவே... தன் குடும்பத்துடன் வந்து பெண் கேட்டுள்ளார்.

அதற்கு முன்பே தன் பெண்ணிற்கு வேறு மாப்பிள்ளை பார்த்த கார்த்திகாவின் குடும்பத்தினர் இவர்களுக்கு மறுப்பு தெரிவிக்க…. அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் இத்தனை கொலைகள் நடந்திருக்கிறது.

ஒரு பெண் தன்னை காதலிக்கவில்லை என்பதும், அவள் குடும்பத்தினர் கல்யாணத்திற்கு சம்மதிக்க வில்லை என்பதுமே... இந்த கொலைக்கு காரணம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

பக்காவான பிரிப்பிளாண்ட் மர்டர்... அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றவுடன்...அந்த குடும்பத்துக்குள் ஒருவரை நுழைக்க... காமாட்சியம்மாளின் கணவருக்கு ஆக்ஸிடன்ட்டை ஏற்படுத்தி, அந்த வேலையில் ஒருவனை நியமித்து, அவர்களது பிளான் படி கொலை நடந்த பின்பு... மனோகரை பணத்தால் விலைக்கு வாங்கி... அனைத்து ஆதாரங்களையும் அழித்து, பின்னர் அவரையும் ஒரு விபத்தை ஏற்படுத்தி கொலை செய்திருக்கிறார்கள்.

ஒரு கொலையை செய்யவும் அதனை மறக்கவும் எத்தனை கொலைகள், திட்டங்கள்... இத்தனையும் செய்யவும் செயல்படுத்தவும்... கிரிமினல் மூளை வேணும். அதுவும் ஒரு ஆதாரமும் கிடைக்காத மாதிரி கொலை செய்ய சட்டத்தை கரைத்து குடித்தவரால் மட்டுமே முடியும்" என்றார்.


"ஒரு பெண் தன்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்...அந்த பெண்ணின் மீது ஆசிட் அடிப்பது, அந்தப் பெண்ணை கொலை செய்வது இதுபோன்ற இழிவான கொடூரமான செயல்களை செய்து கொண்டிருந்தவர்கள், இப்போது அவர்களின் குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை.

சுதந்திரம் கிடைத்துவிட்டது, பெண்ணுக்கு சம உரிமை என்பதையெல்லாம் வெறும் ஏட்டுக்கல்வியோடு நின்றுவிட்டது. இப்பொழுதும் 90 சதவீத பெண்கள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமை கூட பெறவில்லை என்பதுதான் உண்மை யுவர் ஆனர்.

அப்படியே அந்த 10% பெண்களுக்கு அந்த உரிமை கிடைத்தாலும்... இவர்களை போன்ற சைக்கோகளினால் அவர்களின் மொத்த குடும்பமே நாசமாகிறது" என ஆதங்கமாக கத்தினார்..

"சாரி மை லாட்… கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டேன். இது ஒரு பொண்ணை பெத்த தகப்பனோட ஆதங்கம். எனக்கும் இதே வயசுல ஒரு பொண்ணு இருக்கா... நேத்து வரை நானும் இந்த பெண்தான் அனைத்து கொலைகளையும் பண்ணியதாக நம்பியிருந்தேன்... நல்லவேளை கடைசி நேரத்திலாவது உண்மை வெளியே வந்தது" என்றவர்,

"கடைசியா ஒருத்தரை பத்தி சொல்லியே ஆகணும்... நடந்த அத்தனைக்கும் காரணமான கிருஷ்ணா யாரு?… அதை நான் சொல்லப்போவது இல்லை. எதிர்த்தரப்பு வக்கீல் சொல்வார்" என கௌஷிக்கை பார்க்க,

"சொல்லுங்க மிஸ்டர் கௌஷிக் கிருஷ்ணா" என்க,

"பாவம் அவர் எப்படி சொல்லுவார், இதுவரை நடந்ததை பார்த்தே ஷாக்காகி உட்கார்ந்து இருக்காரு. அதனால நானே சொல்றேன்" என்றவர்,

"நடந்த அத்தனைக்கும் காரணமான தி கிரேட் பிஸ்னஸ் மேன் ராஜீவ் கிருஷ்ணா அவரின் ஒரே மகன் மிஸ்டர். கௌஷிக் கிருஷ்ணா" என கூற... கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

நீதிபதியோ "வாட்" என ஒரு நிமிடம் இருக்கையிலிருந்து எழுந்தே விட்டார்.

"எஸ் மை லார்ட்... தி கிரேட் அட்வகேட் கௌஷிக் கிருஷ்ணா தான் இத்தனை கொலைக்கும் காரணம்" என்றவர்,


"உலக வரலாற்றிலேயே முதல்முறையாக... தன்னால் கொலை செய்யப்பட்டு, தானே அந்த பழியை ஒருவர் மீது சுமத்தி, அவருக்கு ஆதரவாகவே வழக்கறிஞராக வாதாடும் பெருமை மொத்தமும் இவருக்கே சேரும்" என்றார்.

 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 22

அதனால தான் இதை என்னோட வாழ்க்கையில மறக்கவே முடியாது என்றேன்…. எனக்கு மட்டுமல்ல இங்கு உள்ள ஒவ்வொருவருக்கும் இது ஒரு மறக்க முடியாத சம்பவமாக இருக்கும்" என பேசிக்கொண்டே செல்ல…

அதே நேரம் தன் முன் இருந்த டேபிளை ஓங்கி அடித்து எழுந்து நின்றான் கௌஷிக் கிருஷ்ணா. "ஆமா நான் தான் எல்லா கொலையும் பண்ணேன்... உங்களால என்னை என்ன பண்ண முடியும்" என திமிராக கேட்க,

இதுக்கு மேலயும் எதுவும் பண்ணனும்னு அவசியமே இல்லை. எல்லா சாட்சியும் உனக்கு எதிராக இருக்கு, அதுமட்டுமில்லாமல் இப்போ நீயே உன் வாயாலேயே கொலை பண்ணதாக ஒப்புக் கொண்டாய்... இதுக்கு மேலயும் ஏதாவது ஆதாரம் வேண்டுமா? நீயும் வக்கீல் தானே... சட்டத்திலுள்ள எல்லாமே உனக்கு அத்துப்படியாச்சே... அப்ப நீங்களே சொல்லுங்க" என்க,

இந்த நேரத்தில் அத்தனை உண்மையையும் நேற்று எனக்கு தெரிவித்த ஹர்ஷவர்தனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் சார். அவர் மட்டும் சரியான நேரத்திற்கு அனைத்து உண்மைகளையும் சொல்லவில்லை என்றால் நீதியே அழிந்திருக்கும், அதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருப்பேன்" என்றார்.

இது அனைத்து உண்மையும் வெளிவர ஹர்ஷவர்தன் தான் காரணம் என அறிந்த நொடி கௌஷிக் அவனை கண்களில் கொலை வெறியோடு நோக்க...அவனும் சலைக்காமல் அவனுக்கு எதிர் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஹர்ஷவர்தனுக்கு அன்று கார்த்திகா தந்தையின் டைரியில் உள்ள ராஜீவ் கிருஷ்ணா என்ற பெயரை பார்த்த உடனேயே தெரிந்து விட்டது அது கௌஷிக்கின் தந்தை என்று. ஆனால் காலையில் இதுபோன்ற வீட்டை பார்த்தது இல்லை என கௌஷிக் சொன்னது நினைவு வர குழம்பியவன், அடுத்த நாள் அந்த வீட்டின் இரண்டு மாதங்களுக்கு முன்பு உள்ள சிசிடிவி ரெக்கார்டை எடுத்துப் பார்க்க... அதில் கையில் தாம்பூல தட்டுடன் கௌஷிக்கின் குடும்பமே உள்ளே செல்வது வாசலில் உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது.

அதனை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனான். எவ்வளவு பெரிய அநியாயம்... பச்சை துரோகம் இவனைப் போன்றவனை நண்பனாக பெற்றதற்கு தான் என்ன பாவம் செய்தோம் என வருந்த தொடங்கினான்.

கௌஷிக் பள்ளி படிக்கும் காலங்களில் இருந்தே...அவனுக்கு பிடித்த ஒரு பொருள் அவனிடம் இல்லாமல், வேறு ஒருவரிடம் இருந்தால் அதனை எப்படியாவது அழித்து விடுவான். தனக்குப் பிடித்த பொருளாக இருந்தாலும் அவர்கள் உபயோகித்ததை, அவர்களிடமிருந்து பறிப்பது கூட அவமானம் என எண்ணுபவன்... அந்தப் பொருளை தடம் தெரியாமல் அழித்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பான்.

அவன் நண்பர்களுக்கும் இதெல்லாம் தெரிந்தாலும் பணக்கார பையன் கொஞ்ச நாள்ல சரியாகிடுவான் என விட்டுவிட்டனர். இன்னும் அந்த வன்ம குணம் அவனிடம் இருப்பதை கண்டு திகைத்து தான் போனான்.

ஹர்ஷவர்தனை முறைத்துக் கொண்டிருந்தவன், சட்டென்று தன் பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து சக்கரவர்த்தியின் நெற்றியில் வைக்க…. மொத்த நீதிமன்றமே அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனது.

இதனை சற்றும் எதிர்பாராத ஹர்ஷவர்தன் அவனை நோக்கி செல்ல…. அவனோ "அங்கேயே நில்லு இல்லனா உன்னோட நம்பிக்கையான வக்கீல் பொட்டுனு போயிடுவாரு" என்க, அப்படியே தேங்கி நின்றான்.

"இப்போ என்னடா ?... ஒத்துக்குறேன் நான்தான் எல்லா கொலையும் பண்ணேன். எதுக்காக பண்ணேன்னா.. இவகிட்ட என்னோட காதலை சொன்னேன் ஆனா ஏத்துக்கல... இவங்க அப்பன் கிட்ட பொண்ணு கேட்டேன் அவனும் ஒத்துக்கல…

எதுக்கெடுத்தாலும் என் பொண்ணோட சந்தோஷம் தான் முக்கியம், வாழ்க்கைதான் முக்கியம்னு வசனம் பேசினான், அதான் அவங்க பொண்ணு வாழ்க்கையில இனிமே சந்தோஷமாகவே இருக்க கூடாதுன்னு மொத்த குடும்பத்தையும் அழிச்சேன்" என்றான்.

"இவ மொத்த குடும்பத்தையும் இழந்துட்டு தனிமரமாக நிப்பா... அப்போ அவளுக்கு ஒரு வாழ்க்கை பிச்சை போடலாம்னு நெனச்சேன், ஆனா அன்னைக்கு அவ ரூம்ல எப்போ உன் ஃபோட்டோவை கட்டிபிடித்து படுத்திருந்ததை பார்த்தேனோ …. அப்ப முடிவு பண்ணேன் அவ இனி உனக்கும் கிடைக்கக்கூடாது... காலம் ஃபுல்லா ஜெயிலிலிருந்து சாகணும்னு" என்றான் சிரித்துக்கொண்டே.

"அவ இந்த நிலைமையில் இருக்கறதுக்கு நான் மட்டும் காரணம் இல்ல….நீதான், உன்னை காதலிச்சது தான் என்றவன், ஸ்கூலில் இருந்து ஃபிரண்ட்ஸ் சர்க்கிள் வரை படிப்பு, லீடர் பதவி, ஸ்போர்ட்ஸ் என எல்லாத்துலயும் நீ பர்ஸ்ட் வந்து, நான் செகண்டா இருப்பேன், அந்த வலி எனக்கு எப்பவுமே இருந்துக்கிட்டே இருக்கும்.

அது எல்லாத்தையும் விட நான் காதலிச்ச பொண்ணு, உன்னை காதலிக்கிறான்னு தெரிஞ்சப்போ உன்னை கண்டதுண்டமா வெட்டி கொல்லனும்னு வெறியே வந்துச்சு. ஆனா அப்படி எல்லாம் நீ உடனேயே சாகாம... அவ கொஞ்சம் கொஞ்சமா ஜெயில்ல கஷ்டப்படுவதை பாக்கணும்னு நினைச்சேன் அதான் இப்படி.

ஆனா நானே எதிர்பார்க்காத ஒரு விஷயம்…. என்கிட்டயே இந்த கேசை எடுத்து நடத்த சொல்லி ஹெல்ப் கேட்டதை தான். மறுத்தா தேவை இல்லாத சந்தேகம் வரும் என்றுதான் இந்த கேசை நடத்த ஒத்துக்கிட்டேன். அதுவுமில்லாமல் நீ கஷ்டப்படுவதை உன்கிட்ட இருந்து பார்க்கலாம் இல்ல" என ஒரு சைக்கோவை போல் பேசிக்கொண்டிருந்தவன்,

"இப்பவும் சொல்றேன் எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது" என்ற அவனின் வார்த்தையில் நடக்கவிருக்கும் விபரீதத்தை அறிந்தவன், பாய்ந்து சென்று தன்னவளின் குறுக்கே பாயவும்... அவன் துப்பாக்கியிலிருந்து தோட்டா வெளி வரவும் சரியாக இருந்தது.

தன்னவளை முழுவதுமாக மறைத்து நின்றவனின் தோள்பட்டையில் குண்டு துளைத்து... இரத்தம் கொட்டத் தொடங்கியது.

அதனை கண்டு அதிர்ந்தவள், எங்கே தனக்கென இருக்கும் ஒருவனும் தன்னை விட்டு சென்று விடுவானோ என்ற பயத்தில், அவன் முன்னே வர முயல, ஒரு கையால் அவளை தடுத்தவன்... அந்த நிலையிலும் சிறிதும் அசையாது தன்னவளை காத்து நின்றான்.

நடந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகமே அதிர்ந்து, அனைவரும் கலைந்து செல்ல முயலும் நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய சக்கரவர்த்தி, கௌஷிக்கின் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கி தூர எறிந்தார்.

அவன் ஆயுதத்தை இழந்த, அடுத்த நொடி ...அவனை சுற்றிய காவலர்கள், துப்பாக்கி முனையில் அவனை கைது செய்தனர்.
அதேநேரம் அவன் தந்தையும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட... இருவரையும் ஒன்றாக போலீஸ் ஜீப்பில் ஏற்றியவர்கள், சிறைச்சாலையை நோக்கி வண்டியை செலுத்தினர்.

இங்கு ரத்தம் தோய்ந்த சீருடையிலிருந்த ஹர்ஷவர்தனை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனையை நோக்கி சென்றனர்.

தோள்பட்டையில் குண்டு பாய்ந்ததால், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர் கூறிய பின்னரே... அனைவருக்கும் நிம்மதி பிறந்தது.

அதுவரை ஐ.சி.யூ வையே சிலை போல் அமர்ந்து வெறித்துக்கொண்டிருந்தவள்…. கதறி அழ, அவளை ஓடிவந்து தாங்கி கொண்டார் ராதிகா.

அழுது அழுது ஓய்ந்தவள், தொடர் அதிர்ச்சியின் காரணமாக
அப்படியே மயங்கி சரிய... அவளையும் அதே மருத்துவமனையில் சேர்க்கும் நிலை வந்தது.

பின்னர் சர்ஜரி முடிந்து ஐசியூவில் அப்சர்வேஷனில் இருந்தவன்,சில மணி நேரங்களில் ரூமுக்கு மாற்றப்பட...மருத்துவர்கள் செவிலியர்கள் ஒவ்வொருவராக சென்று பார்க்க சொன்ன எதையும் காதில் வாங்காமல் மொத்த குடும்பமும் உள்ளே நுழைந்தது.

அவனும் மயக்கம் தெளிந்து அனைவரின் நலம் விசாரிப்புகளையும் ஏற்றவன், தன்னவளை கண்களால் தேட... அவன் தேடலை உணர்ந்த அவன் அன்னை நடந்ததைக் கூற, "அவளுக்கு என்ன ஆச்சு?" என பதறியவனை,

"ஒன்னும் இல்ல சின்ன மயக்கம்தான், கீர்த்தனா அவளோட தான் இருக்கா. நீ ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காத" என்றார்.

சிறிது நேரத்தில் அவளும் மயக்கத்திலிருந்து தெளிய…. கண்களை திறந்தவள் முன் அமர்ந்திருந்த கீர்த்தனாவை நோக்கி "அவங்க எங்க...இப்போ எப்படி இருக்காங்க" என கேட்டு கொண்டிருந்தவள் இறங்க முயல...ஓடிவந்த செவிலியர், "கொஞ்ச நேரம் படுங்கமா, உங்களுக்கு ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு" என்க,

அவளோ "இல்ல இப்போ நான் நல்லா தான் இருக்கேன்... பிளீஸ் நான் போகணும்" என கட்டாயப்படுத்த…. மருத்துவரிடம் தெரிவித்தவர், அவரின் ஆணைப்படி டிரிப்ஸை அகற்றி செல்ல அனுமதித்தார்.

அவன் இருக்கும் அறையில் புயல் போல் நுழைந்தவள், அங்கிருக்கும் யாரையும் கண்டுகொள்ளாமல் அவனை சென்று அணைத்துக்கொண்டாள்.

"உங்களுக்கு ஒன்னுமில்லையே' என அவனின் தோல்பட்டை, கை, முகம் என வருடியவள்... எதுக்காக என்ன காப்பாத்த முன்னாடி வந்திங்க...எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா" என சிறுபிள்ளை போல் அழுதவள்... அப்போதே அனைவரும் இருப்பதை உணர்ந்து, அவனிடம் இருந்து தள்ளி அமர்ந்தாள்.

கையில் ஜூஸுடன் வந்த அவனின் அன்னை, ஒன்றை அவனிடம் மற்றொன்றை அவளிடமும் கொடுக்க...அடிப்படாத கையில் வாங்க சென்றவனை தடுத்தவள், தன் கையில் உள்ள ஜூஸை மேஜைமேல் வைத்துவிட்டு அவனுக்கான ஜூஸை கையில் வாங்கியவள்...அவனுக்கு தன் கையாலேயே கொடுக்க..அவனோ "என்னை ஒரு கையை தான் தூக்க கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்க" என்றான்.

"அதெல்லாம் முடியாது, கை சரியாகிறவரை உங்களுக்கு எல்லாமே நான்தான் பண்ணுவேன்" என்றாள்.

தொலைந்த சந்தோஷம் மறுபடியும் மீண்டுருக்க... அவளின் செய்கையில் அனைவரும் சிரிக்கத் தொடங்கினர்.

யார் சொல்லியும் கேட்காமல்...அவன் மருத்துவமனையில் இருந்தவரை அவளே உடனிருந்து பார்த்துக் கொள்ள... அடுத்த நாள் அவனை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

மறுநாள் செய்தித்தாளின் முதல் பக்கத்தில்…கோர்ட்லிருந்து கைதுசெய்யப்பட்டு, சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜீவ் கிருஷ்ணா மற்றும் அவரின் மகன் கௌஷிக் கிருஷ்ணா சென்ற வாகனம்... கட்டுப்பாடின்றி எதிரில் வந்த லாரியில் மோதி வெடித்து சிதறியதில்... சம்பவ இடத்திலேயே இருவரும் கருகி இறந்தனர் என்ற செய்தியை கேட்டு….

தனக்குள் சிரித்துக் கொண்டவன்…"அவனுங்க பண்ணின பாவத்துக்கு கடவுளே தண்டனை கொடுத்து விட்டார்" என சொல்ல... மொத்த குடும்பமும் "இதுதான் அவர்களுக்கு சரியான தண்டனை. பணம் இருந்தா என்ன வேணா பண்ணலாம் என்ற திமிரில்... ஜெயிலுக்கு போனாலும் சொகுசா தான் வாழுவாணுங்க. அதனாலதான் கடவுளே இப்படி ஒரு தண்டனை கொடுத்து விட்டார்" என்றார்கள் ஆதங்கமாக.


அப்படியே நாட்கள் செல்ல...
ஒரு வாரம் கடந்த நிலையில், அவன் உடல்நிலை நன்றாக தேறியிருக்க...அன்று அலுவலகம் செல்ல கிளம்பியவன் முன் வந்து நின்றாள் கார்த்திகா.

"அதுக்குள்ள போகனுமா இன்னும் சரியாகவில்லையே" என அடிப்பட்ட இடத்தை வருட... அவனோ "போதும்டி ஒரு வாரமா கட்டிலைவிட்டு கூட இறங்கவிடாமல் டார்ச்சர் பண்ற" என சலித்துக்கொண்டான்.

அவளோ அவன் சட்டை பட்டனை வருடியவாறு "இன்னும் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வேலைக்கு போங்க பிளீஸ்" என கெஞ்ச,

"எனக்கு ஒன்னுமில்லை என சொல்லியவன் அவளை தன் அருகே இழுத்து…. கல்யாணம் பண்ணிக்கலாமா" என அவள் கண்களை பார்த்து கேட்க,

அவளோ வெட்கத்தோடு "அதுதான் அடுத்த மாசம் நாள் பார்த்திருக்காங்களே அதுக்குள்ள என்ன அவசரம்" என்றாள்.

"அதுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கே... அதுவரைக்கும் தாங்க முடியாதுன்னு தோணுது" என்றவன் அவளை தன்னை நோக்கி இழுத்து அணைத்தவன்.... முகம் நோக்கி குனிந்தான்.

ஒரு நீண்ட முத்த யுத்தத்தை அவள் உதட்டில் நடத்தியவன் அவளை தன் உயரத்திற்கு தூக்கிகொண்டான். வெளியே கேட்ட பேச்சு சத்தத்தில் தன்னிலை அடைந்தவள் சட்டென்று அவனிடமிருந்து விலக முற்பட...அவன் அவளை கீழே விட்டால்தானே….

"அய்யோ... என்னை கீழ இறக்கிவிடுங்க, யாராவது வரப் போறாங்க" என அலறியவளை...மெல்ல இறக்கிவிட்டவன், "நீ கத்துன கத்துக்கே எல்லாரும் மேல வந்துடுவாங்க "என்றவன் அவளுடன் இணைந்து கீழே சென்றான்.

ஜீப் சென்னையை தாண்டி வெகுதூரம் சென்று ஓர் ஆள் இல்லாத இடத்தில் நின்றது. ஜீப்பை விட்டு இறங்கிய ஹர்ஷவர்தனும் ரவீந்திரனும் அங்குள்ள கட்டிடத்திற்குள் நுழைய….இன்னும் முழுமையாக கட்டிமுடிக்கப்படாத கட்டிடம் யாருமில்லாமல் அமைதியாக இருந்தது.

அங்கு கட்டுமான பொருட்களை அடுக்கிவைக்கும் ரூமுக்குள் நுழைந்தவர்கள் பார்த்தது என்னவோ அங்கே கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் தங்கள் வாழ்நாளின் கடைசி நிமிடத்தை எண்ணிக்கொண்டிருந்த ராஜிவ் கிருஷ்ணா மற்றும் கௌஷிக் கிருஷ்ணாவை தான்.

உள்ளே ஆள் வரும் சத்தத்தில் மெல்ல விழிகளை திறந்தவனின் மங்கலான பார்வைக்கு ஹர்ஷவர்தன் தென்பட... "ஏய் உன்ன சும்மா விடமாட்டேன் டா" என்றவனை பார்த்து…"பரவாயில்லையே ஒருவாரம் சோறு தண்ணி எதுவும் இல்லாம இருந்தும்கூட உன்னால இந்த அளவுக்கு பேச முடியுதே... உன்னோட மனதைரியத்தை பாராட்டுகிறேன்" என்றவன்,

"இப்ப கூட பண்ண பாவத்தை நினைத்து வருந்தாமல் திமிரா பேசுற பாரு அது தான்டா நீ... கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் அந்த அஞ்சு பேரையும் துடிக்கத் துடிக்கக் கொலை பண்ண இல்ல.. அதான் இந்த ஒருவாரம் சோறு தண்ணி இல்லாம இடத்தைவிட்டு அசைய முடியாமல், அசிங்கத்தோட அசிங்கமா... ஒரு நாய் மாதிரி வாழ வைத்தேன்.

இதுக்கு மேலயும் பூமிக்கு பாரமா நீங்க வாழ்ந்து ஒன்னும் பண்ணப்பொறதில்லை….சோ பாய்... அடுத்த ஜென்மத்திலாவது நல்லவங்களா பிறக்கவேண்டும் என வேண்டிக்கோங்க" என்றவன் இடத்தை விட்டு அகன்றார்.


அந்த இரு மிருகங்களும் அந்த கோடவுனுடன் சேர்ந்து தீயில் எரிந்து கருகினர்.

 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 23 (எபிலாக்)

மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹெதுநா
கண்டே பத்நாமி ஸீபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்

மந்திரம் கூறி "கெட்டிமேளம் கெட்டிமேளம்" என ஐயர் சொல்ல …. சொந்த பந்தங்கள் அர்ச்சதையை தூவி ஆசீர்வதிக்க...கடவுளை வேண்டிக்கொண்டு திருமாங்கல்யத்தை எடுத்து கார்த்திகாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டவன்…. அவளைத் தன் சரிபாதியாக ஏற்றுக்கொண்டான்.

கார்த்திகாவின் மனநிலையை கருதி மிக எளிமையாக கோயிலில் திருமணம் என முடிவாகியிருக்க…மிக நெருங்கிய சொந்தங்களும், கார்த்திகாவின் தோழிகளும்,ஹர்ஷவர்தனின் நண்பர்கள் மட்டுமே இருக்க... நல்லபடியாக திருமணம் நடந்தேறியது.

திருமணம் முடிந்த கையோடு... கடவுளை சென்று வணங்கியவர்கள், காலை உணவை முடித்துவிட்டு வீடு வந்து சேரவே மதியத்தை நெருங்கியிருந்தது.

மணமக்கள் இருவரையும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்து... பூஜை அறையில் விளக்கேற்ற செய்தவர்கள்.
பின்னர் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்தனர். நண்பர்களின் கேலி கிண்டல்களை கேட்டு முகம் சிவந்தவள்...அனைவரும் செல்லும்வரை குனிந்த தலையை நிமிர்த்தவேயில்லை.

அன்றிரவு... முதலிரவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் நடந்தேற...அவனுளும் இதுவரை தோன்றாத ஏதோ ஒரு மாற்றம். முதன் முறை தோன்றும் ஒருவித உணர்வில் சற்று தடுமாறித்தான் போனான் ஹர்ஷவர்தன்.

அறையில் அவளின் வருகைக்காக காத்திருந்தவன் அவள் வரும் சத்தத்தில் திரும்பிப்பார்க்க...அவள் அழகில் அப்படியே அசந்துப்போனான். அவள் இதற்கு முன்பும் பேரழகி தான் ஆனால் இன்று ஏதோ என நினைத்தவன் கண்ணில் அவன் கட்டிய மாங்கல்யம் தென்பட...ஒரு பெண்ணிற்கு தாலி எந்த அளவுக்கு அழகு சேர்க்கிறது என்பதை உணர்ந்துகொண்டவன்....தன்னுள் எழும் புதுவித உணர்வுக்கு பெயர் தான் மஞ்சள் கயிறின் மாயம் என்றும் உணர்ந்தான்.

பதுமை போல் நடந்து வந்தவள், அவன் காலில் விழ குனிய சட்டென்று அவளைத் தாங்கிப் பிடித்தவன்... "நமக்குள்ள எதுக்கு இந்த ஃபார்மாலிட்டீஸ்" என்றவன், அவள் கையில் உள்ள பாலை வாங்கி மேஜை மீது வைத்துவிட்டு அவளின் கை பிடித்து கட்டிலில் அமர வைத்தான்.

முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு ஏதோ ஒரு சிந்தனையில் அமர்ந்திருந்தவளை களைத்தவன்... "என்னாச்சு ? அப்பா அம்மாவோட ஞாபகமா" என்க... அவளும் "ம்ம்" என தலையசைத்து,

"அவங்க மட்டும் இப்போ உயிரோட இருந்திருந்தா உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைச்சதுக்கு ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாங்க" என்க,

அதனைக் கேட்டு சத்தமாக சிரித்தவன் "ஏய் லூசு பொண்டாட்டி கோர்ட்டில் உங்க அப்பா டைரியில் ஆல்ரெடி என் பொண்ணுக்கு நிச்சயம் பண்ணிட்டேன்னு எழுதிருந்ததா சொன்னதை காதுல வாங்கலையா" என்றவனை பார்த்து….

"ஆமா அது யாரா இருக்கும் என்கிட்ட கூட சொல்லாம எப்படி பண்ணாங்க" என குழம்பியவளின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்தவன் "அது நான் தான்... உங்கவீட்ல உள்ள எல்லாருக்கும் நம்மளோட காதலை பற்றி தெரியும். உன் பர்த்டேக்கு அடுத்த நாள்….என்னோட குடும்பத்தோட வந்து உங்க வீட்ல நம்ம காதலை சொல்லி பொண்ணு கேட்டேன். உங்க அப்பாவும் உடனேயே ஒத்துக்கிட்டாங்க" என்க,

"அது எப்படி உடனேயே ஓத்துகிட்டாங்க…"
என்றவளை முறைத்தவன் "அதெல்லாம் ஆல்ரெடி உங்க வீட்ல நீ காதலிக்கிற விஷயம் தெரியும்,நீயா எப்ப சொல்லுவேன்னு எதிர்ப்பாத்துட்டு இருந்தாங்க..நான் முதல முந்திக்கிட்டேன் அவ்ளோதான்" என்றான்.

"அப்போ எங்க வீட்ல எனக்கு பார்த்த மாப்பிள்ளை நீங்கதானா" என்றவளை இழுத்து அணைத்தவன் "நானேதான்" என்றான்.

அதற்கு மேல் அவளை பேச அனுமதிக்காதவன்...அன்றைய நாளுக்கான முதல் படியை எடுத்து வைத்தான் தன் முத்தத்தால். தனது முத்தத்தை நெற்றியிலிருந்து கண்,கன்னம், மூக்கு என ஒவ்வொரு இடமாக பதித்தவன், இதழ்களை நெருங்கும் வேளையில்…"அப்புறம் எப்படி" என ஏதோ சொல்ல வந்தவளின் இதழில் கை வைத்து எதுவும் பேசாதே என சைகை செய்தவன், அவள் கண்களை பார்த்தவாறே இதழ் மீது இதழ் பதிக்க...அவளோ விழிகளை அழுத்தமாக மூடிகொண்டாள்.


முத்தங்களின் எண்ணிக்கை நீண்டுக்கொண்டே செல்ல... அவளை மஞ்சத்தில் சரித்தவன் தானும் உடன் சரிந்தான். தன்னவளை முழுதாக உணர துடித்தவன் தன் தேடலை தொடங்க...அவளும் அவனுள் கரைந்து காணாமல் போனாள்.
அவளை மீண்டும் மீண்டும் நாடியவன்.. விடியலின் போது அவளை அணைத்துக்கொண்டு உறங்க தொடங்கினான்.

காலையில் முதலில் கண்விழித்தவன்... தன் மார்பில் குழந்தைபோல் உறங்கும் மனையாளின் தலைமுடியை ஒதுக்கிவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டு, அவள் தூக்கம் களையாதவாறு அருகில் கிடத்தியவன் எழுந்து குளிக்க சென்றான்.

மெல்ல தூக்கம் கலைந்து எழுந்தவள் மணியை பார்க்க... அது காலை எட்டு முப்பதுக்கு மேல் கடந்திருக்க அவசரமாக எழுந்தவள், அப்பொழுது தான்... தான் இருக்கும் நிலை புரிய, இரவு நிகழ்ந்தது அனைத்தும் நினைவில் வந்தது. வெட்கத்தில் தன் முகத்தை மூடியவள் குளிக்க சென்றாள்.

அவசர அவசரமாக குளித்துவிட்டு கீழே வந்தவளை…"உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க" என்ற ராதிகாவின் குரலில் நடுங்கி நின்றவள்,அவர் முகத்தை பரிதாபமாக பார்க்க,

அவரோ அவளை இழுத்து சோஃபாவில் அமரவைத்து, "குளிச்சுட்டு தண்ணி சொட்ட சொட்ட டவலை கட்டிட்டு வந்திருக்க, உடம்புக்கு என்ன ஆகும்" என திட்டியவாறு, அந்த டவலை அகற்றிவிட்டு வேறு துண்டை கொண்டு உலர்த்த தொடங்கியவர்… கீர்த்தனாவிடம் சாம்பிராணி எடுத்துட்டு வருமாறு கூறியபடி, அதனை கொண்டு அவள் தலைமுடியை சுத்தமாக உலர்த்திவிட்டார்.

அவர் சத்தம் போட்டவுடன் என்னமோ ஏதோ என பயந்தவள், அவரின் செயலில் அவரை இடையோடு அணைத்துக்கொண்டாள். அவள் தலையை கோதியவாறு "என்னடா" என மென்மையாக ராதிகா கேட்க...தன் தாயை அவருள் கண்டவள், கண்கலங்க ஒன்னுமில்லை என தலையாட்டிவிட்டு விலகி அமர்ந்தாள்.

சொந்ததை இழந்து தவித்தவளுக்கு….அந்த எண்ணம் சிறிதும் தாக்காதவாறு மொத்த குடும்பமும் அவளை பார்த்துக்கொண்டது. அவனோ தன் காதலால் அவளை திக்குமுக்காட வைத்திருந்தான்.

நாட்கள் அழகாக செல்ல…மூன்று மாதங்கள் கழிந்த நிலையில்,காலை உணவை முடித்து விட்டு கைகளை கழுவ எழுந்த கார்த்திகா,அப்படியே மயங்கி சரிய...அவள் விழும் முன் தாங்கி பிடித்தவன் சோஃபாவில் படுக்கவைத்து தண்ணீர் தெள்ளிக்க...மயக்கம் தெளிந்து எழுந்தாள்.

அவளருகில் அமர்ந்த ராதிகா அவள் நெற்றியில் முத்தமிட்டு "எல்லாம் நல்ல விஷயம்" தான் என்றவர்...தன் மகனிடம் எதுக்கும் ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போய் காட்டிட்டு வந்துரு" என்க,..

அவனோ அதுவரை பதட்டத்தில் இருந்தவன்... சந்தோஷத்தில் துள்ள உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.

மருத்துவமனையில் உறுதிசெய்து...அதுவும் ட்வின்ஸ் என சொல்ல...மொத்த குடும்பமும் அவளை தாங்கியது.

மாடியிலிருந்த அறை கீழே மாற்றப்பட,ஒவ்வொன்றையும் அவளுக்காக பார்த்து பார்த்து செய்தனர் மொத்த குடும்பமும். அவனும் முடிந்தளவு அவளுடன் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்தி கொண்டான்.

அனைவரின் கவனிப்பிலும்... ஆரோக்கியம் பெற்றவள், ஒரு ஆண் ஒரு பெண் என இரு குழந்தைகளை சுகப்பிரசவத்திலேயே பெற்றெடுத்தாள்.

குழந்தைகளின் முகத்தை பார்த்தவுடன்... அவளுக்கு தோன்றியது, தன் தாய்தந்தையரே தனக்குப் பிள்ளையாக பிறந்திருக்கிறார்கள் என்றுதான். இத்தனை காலம் தன்னை நன்றாக பார்த்துக் கொண்டே பெற்றோரை இனி நான் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என உறுதிகொண்டாள்.

அவளின் ஆசைப்படி குழந்தைக்கு "ஹரிச்சரண், அதுல்யா" என பெயரிட்டனர்.

இன்று இரு குழந்தைகளின் முதல் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தன் ஒன்றரைவயது குழந்தையுடன் வைஷாலி அசோக் வந்திருக்க, சங்கீதா தன் கணவர் கிஷோரோடு வந்திருந்தாள்.

"என்ன சங்கி புருஷனோட அமெரிக்கா போய் செட்டில் ஆனதும் எங்களையெல்லாம் மறந்துட்டியே" என தன் தோழியை கலாய்த்த வைஷாலி…"எனக்கு ஒரு டவுட்டு, எப்படி உனக்கு கல்யாணம் ஆகவிட்டான் இந்த சதிஷ்" என்றவளை முறைத்த சங்கீதா "அவன் சரியான டம்மி பீஸ்டி...திரும்பவும் அவனால ஏதோ பெரிய பிரச்சனை வந்ததால அவங்க அப்பா எம்.எல்.ஏ எலக்சன்ல தோத்துட்டாரு, போட்ட பணம் எல்லாம் வேஸ்ட்டா போனதுல, சொத்தையெல்லம் வித்துட்டு சொந்த ஊருக்கே போய்ட்டாங்க" என்றாள்.

"அப்ப நம்மை பிடிச்ச எல்லாத் தொல்லையும் விட்டதுனு சொல்லு" என சொல்ல அங்கே மீண்டும் ஒரு சிரிப்பலை கிளம்பியது. இப்படி பலவாறான சந்தோஷமான பேசிக்களோடு விழா நிறைவாய் முடிந்தது.

அன்று முழுவதும் பட்டுப் புடவையில் தேவதையாக ஜொலித்தவளை சைட் அடித்துக் கொண்டிருந்த ஹர்ஷவர்தன்...இரு குழந்தைகளையும் தொட்டிலில் கிடத்திவிட்டு... அவளின் வருகைக்காக அறையில் காத்திருந்தான்.

குளித்து முடித்துவிட்டு... மெத்தைக்கு வந்தவள் குழந்தைகள் தொட்டிலில் தூங்குவதை கண்டு…"என்னங்க எப்பவும் நம்மகூட தானே குழந்தைங்க படுப்பாங்க...இன்னைக்கு ஏன் தொட்டில்" என்றவளை,

இறுக்கி அணைத்தவாறே "இப்பவும் நம்ம கூட தான்டி இருக்காங்க" என்றவன்...அவளின் கழுத்தில் முகம் புதைத்து அவளை வாசம் பிடித்தவன்,அவள் மேலிருந்துவரும் நறுமணத்தில் மயங்கி... அவளுள் மூழ்கியவனுக்கு அப்போதே உரைத்தது...எப்போதும் தன் தொடுகையில் உருகும் மனையாளிடருந்து எந்த எதிர்வினையும் இல்லாதது. நிமிர்ந்து அவள் முகம் பார்க்க….அவளோ கண்கலங்க குழந்தைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் மனதை உணர்ந்தவன், அடங்கமறுத்த உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்து...குழந்தைகளை மெத்தையில் இருவருக்கும் நடுவே கிடத்திவிட்டு அவள் முகம் பார்க்க….அவளோ இரு குழந்தைகளையும் வருடியவாறு அமர்ந்திருந்தவளை பார்த்து மெல்ல புன்னகைத்தவன்,அவளை தொல்லை செய்யாமல் உறங்க துவங்கினான்.

நல்ல உறக்கத்தில்... தன்மேல் உணர்ந்த பாரத்தில் கண்விழித்தவன்,தன் மார்பில் தலைவைத்து படுத்திருக்கும் மனையாளின் முகத்தை நிமிர்த்த….அவளோ "என் மேல் கோபமா" என கேட்டாள்.

"எதுக்கு கோபப்படனும்" என்றவனை பார்த்து …"எல்லாத்துக்குமே என்றவள்... எனக்கு புரியுது, என்னோட பயம் ஒரு முட்டாள்தனமானது என்று, ஆனா திரும்பவும் யாரையாவது இழந்து விடுவேனோனு ரொம்ப பயமாயிருக்கு. அதான் என்ன பண்றதுன்னு தெரியாம இப்படியெல்லாம் பண்றேன் " என்றாள்.

"நீ என்கிட்ட விளக்கம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை என்றவன்...உன் கண்ணுல உள்ள ஒரு தாய்க்கான தவிப்பே சொல்லுச்சு, உன்னோட பயத்தை. இதுக்காகவா தூங்காம கவலை படுற,தூங்குடா என்றவன் அவள் தலை கோத,

தான் சொல்லாமலே தன் மனதில் உள்ளதை உணரும் கணவன் கிடைப்பது வரம் அல்லவா...அவன் வார்த்தையில் நெகிழ்ந்தவள், அவனை இன்னும் இறுக்கி அணைத்துக்கொண்டாள்.

அவளின் இறுகிய அணைப்பே...அவளின் சம்மதத்தை சொல்ல ...இருப்பினும் அவள் முகம் பார்த்து கண்ணசைவிற்காக காத்திருக்க, அவள் கண்கள் சொன்ன செய்தியில் அவளுள் மொத்தமாக தொலைந்து போனான்.அவளையும் அவள் கவலைகளில் இருந்து தொலைய வைத்தான்.

மூன்று ஆண்டுகள் கழித்து….பால்கனியில் நின்று நிலவை வெறித்துக் கொண்டிருந்தவளை பின்னாலிருந்து அணைத்தவன்...ஒரு கையை அவளின் மேடிட்ட வயிற்றில் வைத்து... மற்றொரு கையை அவள் தோளில் போட்டு தன்மேல் சாய்த்துக் கொண்டான்.

"மேடம் என்ன ரொம்ப ஆழ்ந்த சிந்தனையில் இருக்கீங்க போல" என கேட்க, "இல்லங்க.. நீங்க மட்டும் என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் ...என் நிலைமை என்ன ஆயிருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்றவள், நீங்க எனக்கு என் வாழ்க்கையில் கிடைச்ச வரம், தேவதை எல்லாமே…." என சொல்ல,

"அப்படியா…. ஆனா உன்னை பார்த்ததுல இருந்து என் கண்ணுக்கு நீ மட்டும்தான் தேவதையா தெரியிற" என்றவனை பார்த்து …."தேவதை தானே வரம் தரும்" என்க ….ஆமாம் என்றான் இவனும்.

"அப்படி பார்த்தா எல்லாத்தையும் இழந்த எனக்கு ஒரு தங்கமான புருஷனையும் அழகான குடும்பத்தையும் குழந்தையும் கொடுத்தது நீங்கதானே….அப்போ எனக்கு நீங்கதானே தேவதை" என்றாள்.

அவள் வார்த்தையில் நெகிழ்ந்து...அவள் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டவன்,

"தன்னோட அம்மா, அப்பா, கூடப்பிறந்த சகோதரர்கள் என அனைத்து சொந்தங்களையும் விட்டுட்டு புகுந்த வீட்டுக்கு வரும் ஒவ்வொரு பெண்ணும் தேவதைதான்.
அதேபோல் தன்னை நம்பிவரும் பெண்ணை கடைசி வரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளும் ஒவ்வொரு ஆணும் தேவதை தான்" என்றான் ஹர்ஷவர்தன்.

"இப்போ நான் ஒரு வரம் உன்கிட்ட கேட்கவா" என்றவனை பார்த்து…."உயிரை கேட்டாலும் தருவேன்" என்றவளின் கண்களைப் பார்த்து,

"இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்கு மனைவியாக வரவேண்டும்" என்க, அவளோ அவன் மார்பில் சாய்ந்து "வரம் தந்தாச்சு எடுத்துக்கோங்க" என அணைத்துக்கொண்டாள்.


முற்றும்.




இது என்னுடைய முதல் கதை...ஏதாவது முன்னபின்ன இருந்தால் பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடுங்க செல்லம்ஸ்...மிக்க நன்றிகள் இதுவரைக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு. Rerun கதை என்றாலும் இந்தளவுக்கு நானே எதிர்ப்பார்கலை. Thank u so much all ???

 
Last edited:
Status
Not open for further replies.
Top