அத்தியாயம் - 14
அதற்குப் பின்பும் இருமுறை எதர்ச்சையாக சந்தித்தபோது வைஷாலி அவனிடம் பேச முற்பட... அவனோ ஒரு அந்நிய பார்வையோடு விலகி சென்றான்.
அவன் சாதாரணமாக பேசியிருந்தால் எப்படியோ... ஆனால் அவன் விலகி செல்ல செல்ல அவன் நினைவு இவளுக்குள் அதிகமாக நெருங்கியது.
இந்த காதலில் மட்டும் எல்லாமே தலைகீழாக தான் இருக்கும் போல….
எப்போதுமே நம்மை சுற்றிச்சுற்றி வருபவர்களை விட நம்மை விட்டு விலகி செல்பவரை தான் மனம் அதிகம் நாடுகிறது.
அவன் விலகலே அவளுள் காதலாக மாற…. பொறுமை இழந்தவள் ஒருநாள் அவனை காண போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்றுவிட்டாள்.
தன் எதிரில் அமர்ந்து தன்னையே வெறித்துக்கொண்டு இருப்பவளை பார்த்து "என்ன விஷயம்?.. ஏதாவது கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தீங்களா?.." எனக் கேட்க, அவளோ ' ஆமாம் ' என
தலையசைத்து "ஒரு பையன் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றான், அவன் மேல தான் கம்ப்ளைன்ட் கொடுக்கணும்" என்றாள்.
"அவன் யார்?... என்னன்னு... ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுங்க. நாங்க விசாரிக்கிறோம்" என்றவனை பார்த்து "கண்ணாடி முன்னாடி போய் நின்னு பாருங்க... அது யார்ன்று உங்களுக்கே தெரியும்" என்றாள்.
"எக்ஸ்க்யூஸ் மீ.. மைன்ட் யுவர் வேர்ட்ஸ். நான் உங்கள என்ன டிஸ்டர்ப் பண்ணேன், என் மேல புகார்க் கொடுக்க... எங்கிட்டயே வந்திருக்கீங்க" என்றவனை பார்த்து
"என்ன பண்ணல? என்ன பண்ணலன்னு கேட்கிறேன் என்றவள்…. எதுக்கு என்னை அவாய்டு பண்றீங்க, எனக்கு பதில் தெரிஞ்சாகணும்" என்றாள்.
"நமக்கு நடுவுல என்ன இருக்கு? உங்கள அவாய்டு பண்ண' என்றவன், நீங்க கிளம்பலாம். எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றவன் வாசலை நோக்கி கைகாட்ட…. அவன் கையை தட்டிவிட்டவள், "உங்களுக்கு ஒண்ணுமே இல்லாம இருக்கலாம்... ஆனா எனக்கு எவ்வளவோ இருக்கு "பிகாஸ் ஐ லவ் யூ" என்றாள்.
"நீங்க என்கிட்ட எப்பவும் போல பேசி இருந்தீங்கன்னா... இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை" என்றவள், பதிலுக்காக அவன் முகம் பார்க்க... "சாரி எனக்கு இந்த காதலில் இன்ட்ரஸ்ட் இல்லை என்றவன், யூ கேன் கோ" என்றான்.
"இப்படி சொல்லியே ரொம்ப நாள் தப்பிக்க முடியாது பாஸ்….பார்க்குறேன் இன்னும் எத்தனை நாள் இந்த வேஷம்னு" என்றவள் எழுந்து சென்றாள்.
அனைத்தையும் ஹர்ஷாவிடம் சொல்லியவன்... "இதுதான் சார் நடந்தது எங்களுக்குள்" என்றான்.
"கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க... உங்களுக்கு ஏன் வைஷாலியை பிடிக்கலை "என்றவனை பார்த்து,
"பிடிக்காம இல்ல சார்... பிடிக்கும் அத சொல்ல தான் தயக்கமா இருக்கு. நமக்கு இந்த காதல் எல்லாம் செட்டாகுமானன்னு ஒரு சின்ன குழப்பம் அவ்வளவுதான்" என்றான்.
அசோக் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஹர்ஷா தனது மொபைலை எடுத்து "என்னமா இப்போ எல்லாம் கிளியர் ஆயிடுச்சா.. அவனுக்கும் உன்ன பிடிச்சிருக்காம், சொல்லதான் தயக்கமாம்…. இந்தா அவங்கிட்டயே பேசிக்கோ" என்றவன் மொபைலை அசோக்கிடம் நீட்ட... "சார் என்ன சார்... இப்படி பண்ணிட்டீங்க?" என சொல்லிக்கொண்டே மொபைலை எடுத்து காதில் வைக்க,
அந்த பக்கமிருந்து... "பொறுக்கி, இடியட்... நீ ஒரு போலீஸ்ன்னு வெளிய சொல்லிடாத. ஒரு லவ்வ சொல்லக் கூட தைரியம் இல்லை' என கன்னாபின்னாவென திட்டியவள்…. இப்போ சொல்லு" என்க… அவனோ "அப்புறம் சொல்றேன்,இப்போ ஃபோனை வை" என்றான்.
"அதெல்லாம் முடியாது இப்போவே சொல்லனும்" என பிடிவாதம் பிடித்தவளை…. "சரி வை நான் வரேன்" என சொல்லிவிட்டு போனை வைத்தான்.
ஜீப்பை காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு இறங்கியவனை பார்த்த ஹர்ஷா…"நீங்க உங்க வண்டியை எடுத்துகிட்டு கிளம்புங்க அசோக்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
"இப்போ தைரியம் வந்துடுச்சா... இல்லை, இன்னும் வரலையா" என நக்கல் நக்கலடித்தவளை பார்த்து…. "உன் கிட்ட எல்லாம் இப்படி பயப்படுவேன் என்று நான் நினைச்சு கூட பாக்கல...
போலீஸ்னு கூட பயப்படாம அன்னைக்கு எதிர்த்து பேசுனியே அந்த தைரியம்தான் எனக்கு உன்கிட்ட பிடித்திருந்தது என்றவன், …. விஷ் யூ ஹாப்பி பர்த்டே அண்ட் லவ் யூ" என சொல்லியவனை சரமாரியாக அடித்தவள், "இதை முதல்லயே சொல்றதுக்கு என்ன?.." எனக் கூறிவிட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல…. டெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள், ஆயுதக் கடத்தல் மற்றும் பெரிய அரசியல் பிரமுகரின் கொலை என இந்திய தலைநகரத்தையே ஆட்டுவிக்கும் சம்பவங்கள் நடைபெற…அதனைத் தடுக்கவும் விசாரிக்கவும் ஒரு தனி குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
வெவ்வேறு மாநிலங்களில் இருந்து திறமை வாய்ந்த போலீஸ் அதிகாரிகள் கொண்ட ஸ்பெஷல் டீம் நியமிக்கப்பட்டது. அதில் ஹர்ஷவர்தன் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டான்.
தன் எதிரில் அமர்ந்து அழுது கொண்டிருந்த கார்த்திகாவை பார்த்து…"இன்னும் எவ்வளவு நேரம் இப்படி அழுதுக்கிட்டே இருப்ப? ….வந்து ஒரு மணிநேரம் ஆகுது...நான் விஷயத்தை சொன்னதிலிருந்து இதையேதான் பண்ணிட்டு இருக்க என்றவன், நான் இன்னும் இங்க இருக்கப் போறதே ரெண்டு நாள்தான்…இந்த ரெண்டு நாளையும் உன் கூட ஹாப்பியா ஸ்பெண்ட் பண்ணனும்னு நெனச்சேன்,ஆனா நீ இப்படி அழுதுக்கிட்டே இருந்தா என்ன பண்றது" என்றவனை பார்த்து,
"உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா,என்னை விட்டுட்டு போறதை நினைச்சு" என அழுது கொண்டே கேட்க...அழுது அழுது சிவந்து போன முகத்தை தன் கைகளில் தாங்கியவன் ...இரு கட்டை விரல்களை கொண்டு அவள் கண்ணீரை துடைத்தவன்…. அவளை இழுத்து இன்னும் தன் அருகில் அமர்த்தி கொண்டான்.
"எனக்கும் என் செல்லத்தை இங்கயே விட்டுட்டு போறதை நினைச்சு கஷ்டமா தான் இருக்கு, வேற வழியில்லையே ... நீயும் தினமும் நியூஸ் பாக்குற தானே, இப்படி ஒரு சிச்சுவேஷன் இருக்கும் போது நாம அமைதியா இருந்தா..
நம்ம நாட்டை நாமளே அழித்ததற்க்கு சமம்' என்றவன்…இந்த கேஸ் முடிஞ்ச உடனே திரும்பி வந்துடுவேன்" என உறுதியளித்தான்.
அவனும் டெல்லி சென்று விட.. இவள் தனது படிப்பில் முழு கவனத்தை செலுத்தினாள். தினம் இரவில் மொபைலில் ஒருமுறையாவது அவன் குரலைக் கேட்டுவிட்டே உறங்க செல்வாள். அவனும் எவ்வளவு வேலை இருந்தாலும் அவளிடம் பேசிவிட்டு தனது வேலையை செய்வான். இருவரும் இடையே அதிகதூரம் இருந்தபோதிலும் மனதளவில் மிக நெருக்கமாக உணர்ந்தனர்.
அன்று கார்த்திகாவின் பிறந்தநாள். அவன் சென்ற நான்கு மாதங்களுக்கு மேல் இருக்க .. அவனை காதலிக்க தொடங்கிய பின்வரும் முதல் பிறந்தநாள், அவன் உடன் இல்லாதது சற்று வருத்தத்தை கொடுத்தாலும்... தனது சின்ன முகமாற்றமே தன் பெற்றோர்களை கவலை கொள்ள செய்யும் என்றுணர்ந்தவள், மகிழ்ச்சியாக வளம் வந்தாள்.
அன்று விடுமுறை நாள் என்பதால் வீட்டிலேயே தன் நண்பர்கள் அனைவரையும் அழைத்து கேக் வெட்டி பர்த்டே கொண்டாடியவள் மனமோ தன்னவன் வாழ்த்திற்காக ஏங்கியது.
காலையிலிருந்து அவன் ஃபோன் காலுக்காக காத்திருந்தவள், அவனிடமிருந்து எந்த போனும் வராததால் கோபத்தின் உச்சியில் இருந்தாள்.
இரவு நல்ல உறக்கத்தில் தன் மொபைல் அலற... பெயரைக் கூட பார்க்காமல் அதனை ஏற்று காதில் வைத்தவள் "ஹலோ" என்க... எதிரில் கேட்ட குரலில் எழுந்து அமர்ந்தாள்.
"இப்போ எதுக்கு எனக்கு போன் பண்றீங்க?.." என கோபமாக கேட்க அவனோ "சாரி பேபி ஒரு முக்கியமான வேலை அதான் ஃபோன் பண்ண முடியல. ஹாப்பி பர்த்டே மை டியர்" என்க,
"பரவாயில்லையே என் பர்த்டே கூட தெரிஞ்சு வச்சிருக்கீங்க" என கோவமாக சொல்ல... அவனோ "நீ பேசறது எதுவுமே கேட்க மாட்டேங்குது.. விட்டுவிட்டு கேக்குது... சிக்னல் இல்ல நினைக்கிறேன்…. மாடிக்கு வந்து பேசு" என்றான்.
"அய்யயோ... இந்த நேரத்துலயா, எனக்கு பயமா இருக்கு…" என கூற, அவனோ திரும்பவும் ஒன்னும் கேட்கவில்லை என சொல்ல...தனது பயத்தை ஒதுக்கிவைத்தவள் மாடிக்கு சென்றாள்.
"இப்போ சரியா கேட்குதா" என மாடிக்கு சென்று கேட்க… அவனோ "கொஞ்சம் உனக்கு லெஃப்ட்ல திரும்பி பேசு சரியா கேட்கும்" என்றான்.
சட்டென்று திரும்பியவளுக்கு மிக அருகில் நின்றவனை பார்த்து அதிர்ந்தவள் பயத்தில் இரண்டடி பின்னால் செல்ல…. அவள் இடையில் கைத்தொடுத்து தன்னை நோக்கி இழுத்துக்கொண்டான்.
"என்னடி என்ன பேய் நெனச்சு பயந்துட்டியா?.." என அவள் கண்ணம் தட்ட…. "நிஜமாவே நீங்களா, என்னால நம்பவே முடியல. எப்போ அங்கிருந்து வந்தீங்க?.." என வரிசையாக கேள்வி கேட்டவளின் முகத்தை கைகளில் ஏந்தியவன் "எப்படி என் செல்லகுட்டியோட பர்த்டேவ மிஸ் பண்ணுவேன். ஒரு முக்கியமான வேலை, அதான் ஈவினிங் ப்ளைட்ல வந்தேன், இல்லனா நேத்தே வந்திருப்பேன்" என்றவன்,
அவள் கைப்பிடித்து தண்ணீர் தொட்டிக்கு செல்லும் படிகளின் மேல் ஏற…. "இப்ப எதுக்கு டேங்க் மேல" என்றவளை பார்த்து….தன் இதழ் மீது கைவைத்து 'பேசாதே' என தலையசைத்தவன் அவளை மேலே அழைத்து சென்றான்.
"ஆமா கேட்கணும்னு நினைச்சேன்... எப்படி நீங்க உள்ள வந்தீங்க" என்றவளை பார்த்து… "சுவரெறி குத்திச்சித்தான்" என்றான் அசால்டாக.
"செக்யூரிட்டி பார்த்திருந்தா என்ன ஆகுறது? அதுவுமில்லாமல் ஒரு போலீஸ் ஆபீஸர் இப்படி சுவர் ஏறி குதிக்கலாமா" என்றவளின் முகம்திருப்பி... "அங்க பாரு உங்க வாட்ச்மேன்னை, குடுத்துவச்சவரு ரேடியோவில் இளையராஜா சாங் கேட்டுட்டு நல்லா தூங்குறாரு. இப்படி தூங்கினா நான் மட்டுமில்ல, உங்க வீட்டில் திருடன் வந்து கொள்ளையடிச்சிட்டு போனா கூட தெரியாது. சரி விடு அதனால நமக்கும் கொஞ்சம் யூஸ்ஃபுல்லா தான் இருக்கு" என்றவன்.
"இப்படி உட்காரு" என தன் அருகில் உள்ள இடத்தைக் காட்டி சொல்ல, அவள் அமர்ந்தவுடன் அவளை ஒட்டி அமர்ந்தான். இத்தனை நேரம் இல்லாத தயக்கமும் பதட்டமும் இப்போது அவளுள் எழ…. அவளின் பதட்டத்தை உணர்ந்தவன், அவள் கையை பிடித்து…
"உன் பிறந்தநாள் முடிய இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு" என்றவன் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு வைர மோதிரத்தை எடுத்து அவள் விரலில் அணிவித்தான்.
"ரொம்ப அழகா இருக்கு"" என சொல்லியவளை பார்த்து "உன் பிறந்தநாளுக்கு எனக்கு ஏதும் இல்லையா" என கேட்க…"நீங்க இங்க இருப்பீங்கன்னு தெரியாது, அதனாலதான் எடுத்துட்டு வரலை'என்றவள்...நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க.. ஈவ்னிங் வெட்டின ஐஸ்க்ரீம் கேக் அண்ட் சாக்லேட் இருக்கு நா..ன் போய்க் எடுத்துட்டு வரேன் என கிளம்பியவளை கைப்பிடித்து தடுத்தவன்…"பன்னண்டு மணி ஆக இன்னும் ரெண்டு நிமிஷம்தான் இருக்கு. நீ கீழே போய்ட்டு வந்தா உன்னோட பர்த்டேவே முடிஞ்சிடும்…. அதனால எனக்கு இப்பவே வேணும்" என்றான்.
"இப்ப எங்கிட்ட என்ன இருக்கு?.." என்றவளின் முகத்தை கையில் ஏந்தியவன்... தனது பெருவிரலால் அவள் தலைவகிடில் இருந்து நேராக நெற்றி, மூக்கு என வந்தவனின் விரல் அவள் உதட்டில் தேங்கியது. தன் விரல்க்கொண்டு அவள் இதழை அழுத்தமாக வருடியவனின் செய்கையில் அவன் எண்ணம் புரிய...மெல்ல தலை கவிழ்ந்தவளின் முகத்தை நிமிர்த்தி அவள் இதழில் தன் இதழை அழுத்தமாக புதைத்துக்கொண்டான்.
முதலில் தயங்கி அவனை பிரிக்க முயன்றவள்... பின் அவன் இதழ் முத்தத்தில் மயங்கி.. அவன் தலைமுடிக்குள் விரலை விட்டு நெறித்தாள்.
கூந்தலில் நுழைந்த கைகள்
ஒரு கோலம் போடுதோ...
தன்னிலை மறந்த பெண்மை
அதைத் தாங்காதோ…
உதட்டில் துடிக்கும் வார்த்தை
அது உலர்ந்து போனதோ...
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ...
மங்கையிவள் வாய்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்...
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்...
யாரிவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்….
என்ன சத்தம் இந்த நேரம்…..!
என இளையராஜாவின் இசை காற்றில் கசிந்து அவனை அடைய….பாடல் வரிகள் அவனின் வேகத்தை இன்னும் கூட்ட மீண்டும் மீண்டும் அவள் இதழ்த்தேனை அருந்தினான்.
அதற்குப் பின்பும் இருமுறை எதர்ச்சையாக சந்தித்தபோது வைஷாலி அவனிடம் பேச முற்பட... அவனோ ஒரு அந்நிய பார்வையோடு விலகி சென்றான்.
அவன் சாதாரணமாக பேசியிருந்தால் எப்படியோ... ஆனால் அவன் விலகி செல்ல செல்ல அவன் நினைவு இவளுக்குள் அதிகமாக நெருங்கியது.
இந்த காதலில் மட்டும் எல்லாமே தலைகீழாக தான் இருக்கும் போல….
எப்போதுமே நம்மை சுற்றிச்சுற்றி வருபவர்களை விட நம்மை விட்டு விலகி செல்பவரை தான் மனம் அதிகம் நாடுகிறது.
அவன் விலகலே அவளுள் காதலாக மாற…. பொறுமை இழந்தவள் ஒருநாள் அவனை காண போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்றுவிட்டாள்.
தன் எதிரில் அமர்ந்து தன்னையே வெறித்துக்கொண்டு இருப்பவளை பார்த்து "என்ன விஷயம்?.. ஏதாவது கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தீங்களா?.." எனக் கேட்க, அவளோ ' ஆமாம் ' என
தலையசைத்து "ஒரு பையன் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றான், அவன் மேல தான் கம்ப்ளைன்ட் கொடுக்கணும்" என்றாள்.
"அவன் யார்?... என்னன்னு... ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுங்க. நாங்க விசாரிக்கிறோம்" என்றவனை பார்த்து "கண்ணாடி முன்னாடி போய் நின்னு பாருங்க... அது யார்ன்று உங்களுக்கே தெரியும்" என்றாள்.
"எக்ஸ்க்யூஸ் மீ.. மைன்ட் யுவர் வேர்ட்ஸ். நான் உங்கள என்ன டிஸ்டர்ப் பண்ணேன், என் மேல புகார்க் கொடுக்க... எங்கிட்டயே வந்திருக்கீங்க" என்றவனை பார்த்து
"என்ன பண்ணல? என்ன பண்ணலன்னு கேட்கிறேன் என்றவள்…. எதுக்கு என்னை அவாய்டு பண்றீங்க, எனக்கு பதில் தெரிஞ்சாகணும்" என்றாள்.
"நமக்கு நடுவுல என்ன இருக்கு? உங்கள அவாய்டு பண்ண' என்றவன், நீங்க கிளம்பலாம். எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றவன் வாசலை நோக்கி கைகாட்ட…. அவன் கையை தட்டிவிட்டவள், "உங்களுக்கு ஒண்ணுமே இல்லாம இருக்கலாம்... ஆனா எனக்கு எவ்வளவோ இருக்கு "பிகாஸ் ஐ லவ் யூ" என்றாள்.
"நீங்க என்கிட்ட எப்பவும் போல பேசி இருந்தீங்கன்னா... இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை" என்றவள், பதிலுக்காக அவன் முகம் பார்க்க... "சாரி எனக்கு இந்த காதலில் இன்ட்ரஸ்ட் இல்லை என்றவன், யூ கேன் கோ" என்றான்.
"இப்படி சொல்லியே ரொம்ப நாள் தப்பிக்க முடியாது பாஸ்….பார்க்குறேன் இன்னும் எத்தனை நாள் இந்த வேஷம்னு" என்றவள் எழுந்து சென்றாள்.
அனைத்தையும் ஹர்ஷாவிடம் சொல்லியவன்... "இதுதான் சார் நடந்தது எங்களுக்குள்" என்றான்.
"கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க... உங்களுக்கு ஏன் வைஷாலியை பிடிக்கலை "என்றவனை பார்த்து,
"பிடிக்காம இல்ல சார்... பிடிக்கும் அத சொல்ல தான் தயக்கமா இருக்கு. நமக்கு இந்த காதல் எல்லாம் செட்டாகுமானன்னு ஒரு சின்ன குழப்பம் அவ்வளவுதான்" என்றான்.
அசோக் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஹர்ஷா தனது மொபைலை எடுத்து "என்னமா இப்போ எல்லாம் கிளியர் ஆயிடுச்சா.. அவனுக்கும் உன்ன பிடிச்சிருக்காம், சொல்லதான் தயக்கமாம்…. இந்தா அவங்கிட்டயே பேசிக்கோ" என்றவன் மொபைலை அசோக்கிடம் நீட்ட... "சார் என்ன சார்... இப்படி பண்ணிட்டீங்க?" என சொல்லிக்கொண்டே மொபைலை எடுத்து காதில் வைக்க,
அந்த பக்கமிருந்து... "பொறுக்கி, இடியட்... நீ ஒரு போலீஸ்ன்னு வெளிய சொல்லிடாத. ஒரு லவ்வ சொல்லக் கூட தைரியம் இல்லை' என கன்னாபின்னாவென திட்டியவள்…. இப்போ சொல்லு" என்க… அவனோ "அப்புறம் சொல்றேன்,இப்போ ஃபோனை வை" என்றான்.
"அதெல்லாம் முடியாது இப்போவே சொல்லனும்" என பிடிவாதம் பிடித்தவளை…. "சரி வை நான் வரேன்" என சொல்லிவிட்டு போனை வைத்தான்.
ஜீப்பை காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு இறங்கியவனை பார்த்த ஹர்ஷா…"நீங்க உங்க வண்டியை எடுத்துகிட்டு கிளம்புங்க அசோக்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
"இப்போ தைரியம் வந்துடுச்சா... இல்லை, இன்னும் வரலையா" என நக்கல் நக்கலடித்தவளை பார்த்து…. "உன் கிட்ட எல்லாம் இப்படி பயப்படுவேன் என்று நான் நினைச்சு கூட பாக்கல...
போலீஸ்னு கூட பயப்படாம அன்னைக்கு எதிர்த்து பேசுனியே அந்த தைரியம்தான் எனக்கு உன்கிட்ட பிடித்திருந்தது என்றவன், …. விஷ் யூ ஹாப்பி பர்த்டே அண்ட் லவ் யூ" என சொல்லியவனை சரமாரியாக அடித்தவள், "இதை முதல்லயே சொல்றதுக்கு என்ன?.." எனக் கூறிவிட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல…. டெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள், ஆயுதக் கடத்தல் மற்றும் பெரிய அரசியல் பிரமுகரின் கொலை என இந்திய தலைநகரத்தையே ஆட்டுவிக்கும் சம்பவங்கள் நடைபெற…அதனைத் தடுக்கவும் விசாரிக்கவும் ஒரு தனி குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
வெவ்வேறு மாநிலங்களில் இருந்து திறமை வாய்ந்த போலீஸ் அதிகாரிகள் கொண்ட ஸ்பெஷல் டீம் நியமிக்கப்பட்டது. அதில் ஹர்ஷவர்தன் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டான்.
தன் எதிரில் அமர்ந்து அழுது கொண்டிருந்த கார்த்திகாவை பார்த்து…"இன்னும் எவ்வளவு நேரம் இப்படி அழுதுக்கிட்டே இருப்ப? ….வந்து ஒரு மணிநேரம் ஆகுது...நான் விஷயத்தை சொன்னதிலிருந்து இதையேதான் பண்ணிட்டு இருக்க என்றவன், நான் இன்னும் இங்க இருக்கப் போறதே ரெண்டு நாள்தான்…இந்த ரெண்டு நாளையும் உன் கூட ஹாப்பியா ஸ்பெண்ட் பண்ணனும்னு நெனச்சேன்,ஆனா நீ இப்படி அழுதுக்கிட்டே இருந்தா என்ன பண்றது" என்றவனை பார்த்து,
"உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா,என்னை விட்டுட்டு போறதை நினைச்சு" என அழுது கொண்டே கேட்க...அழுது அழுது சிவந்து போன முகத்தை தன் கைகளில் தாங்கியவன் ...இரு கட்டை விரல்களை கொண்டு அவள் கண்ணீரை துடைத்தவன்…. அவளை இழுத்து இன்னும் தன் அருகில் அமர்த்தி கொண்டான்.
"எனக்கும் என் செல்லத்தை இங்கயே விட்டுட்டு போறதை நினைச்சு கஷ்டமா தான் இருக்கு, வேற வழியில்லையே ... நீயும் தினமும் நியூஸ் பாக்குற தானே, இப்படி ஒரு சிச்சுவேஷன் இருக்கும் போது நாம அமைதியா இருந்தா..
நம்ம நாட்டை நாமளே அழித்ததற்க்கு சமம்' என்றவன்…இந்த கேஸ் முடிஞ்ச உடனே திரும்பி வந்துடுவேன்" என உறுதியளித்தான்.
அவனும் டெல்லி சென்று விட.. இவள் தனது படிப்பில் முழு கவனத்தை செலுத்தினாள். தினம் இரவில் மொபைலில் ஒருமுறையாவது அவன் குரலைக் கேட்டுவிட்டே உறங்க செல்வாள். அவனும் எவ்வளவு வேலை இருந்தாலும் அவளிடம் பேசிவிட்டு தனது வேலையை செய்வான். இருவரும் இடையே அதிகதூரம் இருந்தபோதிலும் மனதளவில் மிக நெருக்கமாக உணர்ந்தனர்.
அன்று கார்த்திகாவின் பிறந்தநாள். அவன் சென்ற நான்கு மாதங்களுக்கு மேல் இருக்க .. அவனை காதலிக்க தொடங்கிய பின்வரும் முதல் பிறந்தநாள், அவன் உடன் இல்லாதது சற்று வருத்தத்தை கொடுத்தாலும்... தனது சின்ன முகமாற்றமே தன் பெற்றோர்களை கவலை கொள்ள செய்யும் என்றுணர்ந்தவள், மகிழ்ச்சியாக வளம் வந்தாள்.
அன்று விடுமுறை நாள் என்பதால் வீட்டிலேயே தன் நண்பர்கள் அனைவரையும் அழைத்து கேக் வெட்டி பர்த்டே கொண்டாடியவள் மனமோ தன்னவன் வாழ்த்திற்காக ஏங்கியது.
காலையிலிருந்து அவன் ஃபோன் காலுக்காக காத்திருந்தவள், அவனிடமிருந்து எந்த போனும் வராததால் கோபத்தின் உச்சியில் இருந்தாள்.
இரவு நல்ல உறக்கத்தில் தன் மொபைல் அலற... பெயரைக் கூட பார்க்காமல் அதனை ஏற்று காதில் வைத்தவள் "ஹலோ" என்க... எதிரில் கேட்ட குரலில் எழுந்து அமர்ந்தாள்.
"இப்போ எதுக்கு எனக்கு போன் பண்றீங்க?.." என கோபமாக கேட்க அவனோ "சாரி பேபி ஒரு முக்கியமான வேலை அதான் ஃபோன் பண்ண முடியல. ஹாப்பி பர்த்டே மை டியர்" என்க,
"பரவாயில்லையே என் பர்த்டே கூட தெரிஞ்சு வச்சிருக்கீங்க" என கோவமாக சொல்ல... அவனோ "நீ பேசறது எதுவுமே கேட்க மாட்டேங்குது.. விட்டுவிட்டு கேக்குது... சிக்னல் இல்ல நினைக்கிறேன்…. மாடிக்கு வந்து பேசு" என்றான்.
"அய்யயோ... இந்த நேரத்துலயா, எனக்கு பயமா இருக்கு…" என கூற, அவனோ திரும்பவும் ஒன்னும் கேட்கவில்லை என சொல்ல...தனது பயத்தை ஒதுக்கிவைத்தவள் மாடிக்கு சென்றாள்.
"இப்போ சரியா கேட்குதா" என மாடிக்கு சென்று கேட்க… அவனோ "கொஞ்சம் உனக்கு லெஃப்ட்ல திரும்பி பேசு சரியா கேட்கும்" என்றான்.
சட்டென்று திரும்பியவளுக்கு மிக அருகில் நின்றவனை பார்த்து அதிர்ந்தவள் பயத்தில் இரண்டடி பின்னால் செல்ல…. அவள் இடையில் கைத்தொடுத்து தன்னை நோக்கி இழுத்துக்கொண்டான்.
"என்னடி என்ன பேய் நெனச்சு பயந்துட்டியா?.." என அவள் கண்ணம் தட்ட…. "நிஜமாவே நீங்களா, என்னால நம்பவே முடியல. எப்போ அங்கிருந்து வந்தீங்க?.." என வரிசையாக கேள்வி கேட்டவளின் முகத்தை கைகளில் ஏந்தியவன் "எப்படி என் செல்லகுட்டியோட பர்த்டேவ மிஸ் பண்ணுவேன். ஒரு முக்கியமான வேலை, அதான் ஈவினிங் ப்ளைட்ல வந்தேன், இல்லனா நேத்தே வந்திருப்பேன்" என்றவன்,
அவள் கைப்பிடித்து தண்ணீர் தொட்டிக்கு செல்லும் படிகளின் மேல் ஏற…. "இப்ப எதுக்கு டேங்க் மேல" என்றவளை பார்த்து….தன் இதழ் மீது கைவைத்து 'பேசாதே' என தலையசைத்தவன் அவளை மேலே அழைத்து சென்றான்.
"ஆமா கேட்கணும்னு நினைச்சேன்... எப்படி நீங்க உள்ள வந்தீங்க" என்றவளை பார்த்து… "சுவரெறி குத்திச்சித்தான்" என்றான் அசால்டாக.
"செக்யூரிட்டி பார்த்திருந்தா என்ன ஆகுறது? அதுவுமில்லாமல் ஒரு போலீஸ் ஆபீஸர் இப்படி சுவர் ஏறி குதிக்கலாமா" என்றவளின் முகம்திருப்பி... "அங்க பாரு உங்க வாட்ச்மேன்னை, குடுத்துவச்சவரு ரேடியோவில் இளையராஜா சாங் கேட்டுட்டு நல்லா தூங்குறாரு. இப்படி தூங்கினா நான் மட்டுமில்ல, உங்க வீட்டில் திருடன் வந்து கொள்ளையடிச்சிட்டு போனா கூட தெரியாது. சரி விடு அதனால நமக்கும் கொஞ்சம் யூஸ்ஃபுல்லா தான் இருக்கு" என்றவன்.
"இப்படி உட்காரு" என தன் அருகில் உள்ள இடத்தைக் காட்டி சொல்ல, அவள் அமர்ந்தவுடன் அவளை ஒட்டி அமர்ந்தான். இத்தனை நேரம் இல்லாத தயக்கமும் பதட்டமும் இப்போது அவளுள் எழ…. அவளின் பதட்டத்தை உணர்ந்தவன், அவள் கையை பிடித்து…
"உன் பிறந்தநாள் முடிய இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு" என்றவன் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு வைர மோதிரத்தை எடுத்து அவள் விரலில் அணிவித்தான்.
"ரொம்ப அழகா இருக்கு"" என சொல்லியவளை பார்த்து "உன் பிறந்தநாளுக்கு எனக்கு ஏதும் இல்லையா" என கேட்க…"நீங்க இங்க இருப்பீங்கன்னு தெரியாது, அதனாலதான் எடுத்துட்டு வரலை'என்றவள்...நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க.. ஈவ்னிங் வெட்டின ஐஸ்க்ரீம் கேக் அண்ட் சாக்லேட் இருக்கு நா..ன் போய்க் எடுத்துட்டு வரேன் என கிளம்பியவளை கைப்பிடித்து தடுத்தவன்…"பன்னண்டு மணி ஆக இன்னும் ரெண்டு நிமிஷம்தான் இருக்கு. நீ கீழே போய்ட்டு வந்தா உன்னோட பர்த்டேவே முடிஞ்சிடும்…. அதனால எனக்கு இப்பவே வேணும்" என்றான்.
"இப்ப எங்கிட்ட என்ன இருக்கு?.." என்றவளின் முகத்தை கையில் ஏந்தியவன்... தனது பெருவிரலால் அவள் தலைவகிடில் இருந்து நேராக நெற்றி, மூக்கு என வந்தவனின் விரல் அவள் உதட்டில் தேங்கியது. தன் விரல்க்கொண்டு அவள் இதழை அழுத்தமாக வருடியவனின் செய்கையில் அவன் எண்ணம் புரிய...மெல்ல தலை கவிழ்ந்தவளின் முகத்தை நிமிர்த்தி அவள் இதழில் தன் இதழை அழுத்தமாக புதைத்துக்கொண்டான்.
முதலில் தயங்கி அவனை பிரிக்க முயன்றவள்... பின் அவன் இதழ் முத்தத்தில் மயங்கி.. அவன் தலைமுடிக்குள் விரலை விட்டு நெறித்தாள்.
கூந்தலில் நுழைந்த கைகள்
ஒரு கோலம் போடுதோ...
தன்னிலை மறந்த பெண்மை
அதைத் தாங்காதோ…
உதட்டில் துடிக்கும் வார்த்தை
அது உலர்ந்து போனதோ...
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ...
மங்கையிவள் வாய்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்...
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்...
யாரிவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்….
என்ன சத்தம் இந்த நேரம்…..!
என இளையராஜாவின் இசை காற்றில் கசிந்து அவனை அடைய….பாடல் வரிகள் அவனின் வேகத்தை இன்னும் கூட்ட மீண்டும் மீண்டும் அவள் இதழ்த்தேனை அருந்தினான்.