அத்தியாயம் 14
சமையலறையில் இருந்த உணவை வைத்து ஏதோ பெயருக்கு உண்டு கொண்டிருந்தனர் சாண்டி & கோ. இதில் பரிதாபம் என்னவென்றால் உணவு பொருட்கள் இருந்ததே இரண்டு பேர் சாப்பிடும் அளவிற்குத் தான். அதையும் 'சமைக்கிறேன்' என்ற பெயரில் தீய்த்து வைத்திருந்தாள் அந்த டாடிஸ் லிட்டில் பிரின்ஸஸ் அதிதி!
"உனக்கு சமைக்கத் தெரியலனா சொல்லிருக்கலாம் இல்ல.. எல்லாம் சமைக்க தெரியுற மாதிரி பில்டப் பண்ணி இப்படி தீச்சு வச்சிருக்க " முகத்தை அஸ்ட கோணலாக வைத்து அருந்ததி கூறினாள்.
"இந்த அதிதிக்கு சுட்டுப் போட்டாலும் சமையல் பண்ண வராது! நீ நல்லா சமைப்ப தான செல்லம்" என்று வருண் அவளிடம் வழியவும், அடுத்த நொடி அவன் தட்டிலிருந்து 'காய்ந்த கருவாடு' போலிருந்த பிரட் துண்டு அதிதியால் பறிக்கப்பட்டது.
"ஏய்.. குடுடி என் பிரட்ட" என்று வருண் அவளிடம் சண்டைக்கு நிற்க, விதுரனும்,சிவாங்கியும் தலையில் அடித்துக் கொண்டனர்.
"மூடிட்டு திங்க மாட்ட, அது என்ன இந்த கிழவிக்கு மட்டும் சமைக்க தெரியும்னு சொல்லுற.. இப்போ நான் தான் சமைச்சேன் இந்த கிழவி இல்ல.. மலைக்குரங்கே" என்று அதிதி வருணிடம் சண்டை போடவும்.. அவளின் 'கிழவி' என்ற சொல்லினால் கடுப்பான அருந்ததியும் அந்த சண்டையில் கலந்து கொள்ள, நிலைமை கைமீறியிருந்தது.
"அய்யோ.. சாண்டி எங்க?" என்று அப்போது தான் சாண்டில்யன் இங்கு இல்லாததை கவனித்த சிவாங்கி உரக்க கூற, அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போயினர்.
அவனுக்காக இருந்த தட்டும் அநாதையாக இருக்க 'இவன் எங்கே சென்றான்?' என்ற கேள்வி எல்லோர் மனதையும் அதிர வைத்திருந்து.
அனைவரும் ஒன்றாக இருந்தால் எதையும் சமாளிக்கலாம் என்ற அவர்களின் கூற்று உண்மை என்றாலும் அந்த வாக்கியத்தை உதிர்க்கும் தைரியம் வந்தது என்னவோ சாண்டி உடனிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு தான்.
இப்போது அவனையே காணவில்லை எனும்போது இந்த ஐவரின் நிலை? கேள்விக்குறியாக நின்றது.
"மச்சான்.. எங்கடா போயிட்ட" என்று விதுரன் சப்தமாக அழைத்த போதும், எதிர்வினை ஆற்ற சாண்டில்யன் அங்கு இல்லாமல் போனான்.
இப்போது அதிதியின் மனதை பயம் மெல்ல கவ்வியது. 'தன்னைக் காக்க தன்னவன் வருவான்' என்று எவ்வளவு நம்பிக்கையுடன் இருந்தாலோ... அந்த நம்பிக்கை இப்போது இல்லாமல் போனது.
சாண்டில்யனுக்கு ஏதேனும் நடந்து விட்டது என்று அவளது மனம் நம்ப ஆரம்பித்தது. அந்த பயத்தின் தாக்கம் அழுகையாய் மாற, உடைந்து அழ ஆரம்பித்திருந்தாள் சாண்டியின் அதி!
**********************
அங்கு அவன் நின்றிருந்த அந்தறையை இத்தோடு ஆறுமுறைக்கு மேலாக ஆராய்ந்திருப்பான் சாண்டில்யன். அவனின் சி.பி.ஐ மூளையோ இதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக அடித்துக்கூறியது. அவனின் அந்த உள்ளூணர்வுக்கு மதிப்பளித்தே ஏழாவது முறையாக ஆராய ஆரம்பித்திருந்தான் அவன்.
அது நேத்திரனின் சகாக்கல் வந்து போகும் மூன்று அறைகளில் ஒன்றாகும்!
மேல்தளத்தில் வருண் இருந்த அறையில் ஒன்றும், சமையல் அறையை ஒட்டியவாறே சுவற்றோடு ஒட்டிய ஒரு மறைக்கப்பட்ட அறையும், பின்பக்கத்தில் இருந்த 'ஸ்டோர் ரூம்' போன்ற அமைப்பில் இருந்த அறையின் பக்கவாட்டில் இருந்தது மற்றொன்று.
இதில் தான் இப்போது சாண்டில்யனுமே இருந்தான்.
அவனின் கணிப்புச் சரியென்றால் அந்த வீட்டில் மறைத்து வைத்திருந்த முக்கால்வாசி ஹிட்டன் கேமராக்களை சந்தேகம் வராமல் அகற்றி இருந்தனர். இதில் பெரும் பங்கு சிவாங்கியையே சாரும்!
இப்போது இந்த அறையிலுமே கண்டிப்பாக ஒரு கேமரா இருக்கும் என்று தெரிந்தே தான் அவனும் தேட ஆரம்பித்திருந்தான். ஆனால் அவன் தேடிய பொருள் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் தேட, சற்றும் எதிர்பாராத உறவு இவனுக்கு அங்கு காத்திருந்தது!
சுவற்றில் தடவி, தரையில் அங்குல அங்குலமாக ஆராய்ந்து, இங்கிருந்த பொருட்களை இன்ச் இன்ச்சாக அவன் சோதித்தப் போதுதான் அங்கு ஒரு ரகசிய அலமாரி இருந்ததை அவன் கண்டான்.
இத்தனையுமே இங்க நேத்திரனின் திரையில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தாலுமே, அதை கண்காணிக்கத் தான் யாருமில்லாம் போனது சாண்டில்யனின் அதிர்ஷ்டமாகவே இருந்தது!
சிவாங்கியின் கூற்றுப்படி இது ஒரு மனித விளையாட்டு! அவளின் விளக்கமும் கார்த்திக் இங்கு தான் இருக்கிறான் என்ற நினைப்புமே அவனை இன்னுமே ஊக்கப்படுத்தியது. இந்த விளையாட்டின் கடை நிலையை அறிய அவன் முன்னோர ஒரு வழியாகவே இருந்தது என்றால் அது மிகா!
அந்த அலமாரியை அவன் கண்டுக்கொண்டுவிட்டான் என்றாலுமே அதனை திறக்கும் வழியறியாது நின்றிருந்தான்.
சட்டென்று ஏதோ ஒரு மரப்பொருள் கீழே விழும் ஓசை கேட்க, காதுகளை அதில் வைத்து கேட்டவன் அடுத்த நொடி தரையில் தான் வீழ்ந்திருந்தான்.
**************************
துளசியைப் பார்க்கவென்று அவளின் வீட்டிற்குச் சென்றிருந்தாள் அமிர்தவர்ஷினி. ஆனால் அங்கு அக்கம் பக்கத்தினர் சொன்ன விசயம் அவளை நிலைக்குழைத் தான் வைத்திருந்தது.
என்ன செய்ய? எங்கு போய் கேட்க என்ற ஒன்றும் புரியாமல் தவித்து நின்றவளுக்கு, எப்படியும் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்குத் தான் சென்றிருப்பர் என்ற நம்பிக்க எழ அங்கு விரைந்தாள்.
ஆனால் அவள் சென்று சேரும் முன்பே அந்த பச்சிளம் பிஞ்சை மருத்துவமனை நிர்வாகமே எடுத்துக்கொண்டு அதற்காக காரியத்தையுமே செய்து முடித்திருந்தனர், நேத்திரனின் சம்மதத்துடன்!
அழுது கரைந்தவளின் நிலையோ இனி எப்படி துளசியைத் தேற்ற என்ற நினைப்பிலேயே சூழல தன்னுடைய நிலையை மறந்துப் போனால் மாது.
விழுந்த அதிர்ச்சியின் பயனாலும் தீடீர் பிரசவம் ஆனதுமே துளசியின் உடல் ஏற்க மறுக்க, மிகுந்த பிரயத்தனப் பட்டுத்தான் மருத்துவர்கள் அவளின் உயிரையே காத்திருந்தனர்.
ஆனால் அவளின் உடலோ எந்த ஒரு எதிர்வினையுமே புரியாமல் ஜடம் போல் இருக்கவே, மருந்துவர்களுமே அவளை கண்ணானிப்பிலேயே தான் வைத்திருந்தனர்.
இதற்கிடையில் அவளின் கணவனே அவளைப் பாராது அவனுடைய அலுவலைப் பார்க்க சென்றுவிட்டான் என்ற செவிலியர் ஒருவர் கூற, வீறுகொண்டு இருந்தாள் அமிர்தா.
'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பது எத்துனை உண்மை என்று அப்போது அவள் நின்றிருந்த நிலையே உரக்க கூறியது.
'என்ன மனிதன் அவன்' என்ற நினைத்தவள் அடுத்து செய்தது எல்லாம் துளசியின் வீட்டினருக்கு தகவல் கொடுத்தது தான்.
ஜோன் உடனிருந்தாலுமே அமிர்தா, நிரல்யனின் மனைவி என்ற தெரிந்த பின்னர் சற்று பின்வாங்கி இருந்தான். அதற்கான காரணம், நேத்திரனின் கட்டுப்பாட்டில் தானே நிரல்யன் இருக்கிறான்.
இந்நேரம் ஒரு காவல் அதிகாரியை காணவில்லை என்ற செய்தி நிச்சயம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும். ஆதலால் எப்படியும் தங்களது இடத்தை காவல் துறையினர் கண்டிப்பாக கண்டுகொள்வார்கள், அதற்குள்ளாக நாமே ஏன் வழிய சென்று தலையை இவளிடம் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணித்தில் அனைத்தையுமே தூர நின்றே கவனித்துக்கொண்டிருந்தான் ஜோன்.
இதற்குள்ளாக துளசியின் நிலை தான் மோசமானது. அவளின் நினைவு தப்பி கோமாவிற்கே சென்று விட்டாள் அதிர்ச்சியினாலும் தலையில் அடிபட்ட காரணத்தினாலும்!
தோழியின் நிலையறிந்து உறைந்து தான் நின்றிருந்தாள் அமிர்தா. சின்னச் சின்ன குழந்தைகள் இரண்டிருக்க, இனி அவர்களின் நிலை? இதுவே இவளின் மனதை அப்போது போட்டு ஏகத்திற்கும் அழுத்த, அந்த அழுத்தம் தாங்காது அங்கிருந்த நாற்காலியில் தலையைப் பிடித்தவாறு அமர்ந்துவிட்டாள் அவள்.
அந்நேரம் ஏதோ ஒரு குறுகுறுப்புத் தோன்ற சட்டென்று நிமிர்ந்து பார்த்த அமிர்தா அதிர்ந்து தான் போனாள். காரணம், அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்திருந்தார் அவளின் தகப்பனார்.
அங்கு அவரை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை! அவர் எவ்வளவு பெரிய மருத்துவர் என்றாலுமே இதுப்போல ஒரு சாதாரண மருத்துவமனைக்கு வரவே மாட்டார் திரு. மதுசூதனன், அமிர்தா மற்றும் சாண்டியின் தகப்பனார்.
மிகச்சிறந்த இதய நிபுணரான அவருக்கு, எப்போதுமே ஒரு பகட்டும் கவுரவமும் இருந்து கொண்டே தான் இருக்கும். அது அவரின் ரத்தத்தில் கலந்த மற்றும் கலக்கப்பட்ட ஒன்று!
அதன் தொட்டே மகளது காதலாகட்டும் திருமணமாகட்டும் அவரால் ஏற்றுக்கொள்ளபடாத ஒன்று!
அவரின் இந்த பகட்டும் வரட்டு பிடிவாதமுமே தெரிந்த ஒன்றாகவே இருந்த காரணத்தினால் தான் அமிர்தவர்ஷினியும் சாண்டில்யனுமே மிகுந்த சமூகப் பொறுப்புடனும் மனித நேயத்துடனுமே வளர்க்கப்பட்டனர் திருமதி. வசந்தி மதுசூதனனால்!
என்ன இரத்தத்தில் ஊறிய ஒன்றாக இருந்தாலும் தன் இரத்தத்தால் உருவான பிள்ளையை நெடு நாட்களுக்குப் பின் கண்டால் எந்த தகப்பனால் பார்க்காமல் இருக்க முடியும்?
அதுவும் தந்தையின் வழியே தானும் ஒரு இதய நிபுணராக இருக்கும் அவளின் ஆசை செல்ல மகளை பார்த்தவுடனே அவரின் அந்த கர்வமும் சரிந்தது அங்கு.
அமிர்தாவின் ஓய்ந்த தோற்றமே அவரை உலுக்கியிருக்க, என்ன மனிதன் அவன் என்று மருமகனையும் வசைபாடாமல் இருக்கவில்லை அவரின் மனது.
"ப்பா.." என்றவளின் குரல் கலங்கி ஒலித்தாலுமே, மதுசூதனனுக்கு அந்த பத்து மாத குழந்தையாக இருந்த அமிர்தா எப்படி அழைத்தாளோ, அதே மாதிரியே தான் தோன்றியது இருபத்தி ஆறு வருடங்களுக்கு பின்புமே!
கைகளை அந்த இரும்பு நாற்காலியில் ஊன்றியவள், புடவை முந்தானையை பிடித்தவாறே தந்தையை நோக்கி ஓடியவளை ஆதுரமாய் தான் அணைத்துக்கொண்டார் அந்த தந்தையானவர்.
ஆனால் அந்த அணைப்பு நீண்டது என்னவோ சொற்ப நிமிடங்களே. பெற்ற மகளை பார்த்தவரின் மனது நிறைந்திருந்தாலுமே அதனை அவள் மதிக்கவில்லை என்ற நினைப்புடனேயே அவளை உதறியும் சென்றிருந்தார் அவர்.
ஆம், அமிர்தாவின் கதறல் இப்போது அவரை கலங்கவிடவில்லை. அதன் பொருட்டே அவளை உதறி சென்றிருந்தார் அந்த பாசக்கார தந்தையானவர்.
அத்தனையும் தாங்கிக்கொண்டு அழுதவாறு நின்றிருந்தவளின் செவிகளை தீண்டியது அந்த செய்தி!
அதாவது, நிரல்யனின் வாகனம் காட்டுப் பகுதியில் வெடித்துச் சிதறியதாகவும், அவனுடன் சேர்த்து உடன் சென்ற காவலருமே சிதைந்துவிட்டனர் என்ற செய்தி உண்மையில் அமிர்தாவைத் தான் சிதைத்திருந்தது!
*********************
சமையலறையில் இருந்த உணவை வைத்து ஏதோ பெயருக்கு உண்டு கொண்டிருந்தனர் சாண்டி & கோ. இதில் பரிதாபம் என்னவென்றால் உணவு பொருட்கள் இருந்ததே இரண்டு பேர் சாப்பிடும் அளவிற்குத் தான். அதையும் 'சமைக்கிறேன்' என்ற பெயரில் தீய்த்து வைத்திருந்தாள் அந்த டாடிஸ் லிட்டில் பிரின்ஸஸ் அதிதி!
"உனக்கு சமைக்கத் தெரியலனா சொல்லிருக்கலாம் இல்ல.. எல்லாம் சமைக்க தெரியுற மாதிரி பில்டப் பண்ணி இப்படி தீச்சு வச்சிருக்க " முகத்தை அஸ்ட கோணலாக வைத்து அருந்ததி கூறினாள்.
"இந்த அதிதிக்கு சுட்டுப் போட்டாலும் சமையல் பண்ண வராது! நீ நல்லா சமைப்ப தான செல்லம்" என்று வருண் அவளிடம் வழியவும், அடுத்த நொடி அவன் தட்டிலிருந்து 'காய்ந்த கருவாடு' போலிருந்த பிரட் துண்டு அதிதியால் பறிக்கப்பட்டது.
"ஏய்.. குடுடி என் பிரட்ட" என்று வருண் அவளிடம் சண்டைக்கு நிற்க, விதுரனும்,சிவாங்கியும் தலையில் அடித்துக் கொண்டனர்.
"மூடிட்டு திங்க மாட்ட, அது என்ன இந்த கிழவிக்கு மட்டும் சமைக்க தெரியும்னு சொல்லுற.. இப்போ நான் தான் சமைச்சேன் இந்த கிழவி இல்ல.. மலைக்குரங்கே" என்று அதிதி வருணிடம் சண்டை போடவும்.. அவளின் 'கிழவி' என்ற சொல்லினால் கடுப்பான அருந்ததியும் அந்த சண்டையில் கலந்து கொள்ள, நிலைமை கைமீறியிருந்தது.
"அய்யோ.. சாண்டி எங்க?" என்று அப்போது தான் சாண்டில்யன் இங்கு இல்லாததை கவனித்த சிவாங்கி உரக்க கூற, அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போயினர்.
அவனுக்காக இருந்த தட்டும் அநாதையாக இருக்க 'இவன் எங்கே சென்றான்?' என்ற கேள்வி எல்லோர் மனதையும் அதிர வைத்திருந்து.
அனைவரும் ஒன்றாக இருந்தால் எதையும் சமாளிக்கலாம் என்ற அவர்களின் கூற்று உண்மை என்றாலும் அந்த வாக்கியத்தை உதிர்க்கும் தைரியம் வந்தது என்னவோ சாண்டி உடனிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு தான்.
இப்போது அவனையே காணவில்லை எனும்போது இந்த ஐவரின் நிலை? கேள்விக்குறியாக நின்றது.
"மச்சான்.. எங்கடா போயிட்ட" என்று விதுரன் சப்தமாக அழைத்த போதும், எதிர்வினை ஆற்ற சாண்டில்யன் அங்கு இல்லாமல் போனான்.
இப்போது அதிதியின் மனதை பயம் மெல்ல கவ்வியது. 'தன்னைக் காக்க தன்னவன் வருவான்' என்று எவ்வளவு நம்பிக்கையுடன் இருந்தாலோ... அந்த நம்பிக்கை இப்போது இல்லாமல் போனது.
சாண்டில்யனுக்கு ஏதேனும் நடந்து விட்டது என்று அவளது மனம் நம்ப ஆரம்பித்தது. அந்த பயத்தின் தாக்கம் அழுகையாய் மாற, உடைந்து அழ ஆரம்பித்திருந்தாள் சாண்டியின் அதி!
**********************
அங்கு அவன் நின்றிருந்த அந்தறையை இத்தோடு ஆறுமுறைக்கு மேலாக ஆராய்ந்திருப்பான் சாண்டில்யன். அவனின் சி.பி.ஐ மூளையோ இதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக அடித்துக்கூறியது. அவனின் அந்த உள்ளூணர்வுக்கு மதிப்பளித்தே ஏழாவது முறையாக ஆராய ஆரம்பித்திருந்தான் அவன்.
அது நேத்திரனின் சகாக்கல் வந்து போகும் மூன்று அறைகளில் ஒன்றாகும்!
மேல்தளத்தில் வருண் இருந்த அறையில் ஒன்றும், சமையல் அறையை ஒட்டியவாறே சுவற்றோடு ஒட்டிய ஒரு மறைக்கப்பட்ட அறையும், பின்பக்கத்தில் இருந்த 'ஸ்டோர் ரூம்' போன்ற அமைப்பில் இருந்த அறையின் பக்கவாட்டில் இருந்தது மற்றொன்று.
இதில் தான் இப்போது சாண்டில்யனுமே இருந்தான்.
அவனின் கணிப்புச் சரியென்றால் அந்த வீட்டில் மறைத்து வைத்திருந்த முக்கால்வாசி ஹிட்டன் கேமராக்களை சந்தேகம் வராமல் அகற்றி இருந்தனர். இதில் பெரும் பங்கு சிவாங்கியையே சாரும்!
இப்போது இந்த அறையிலுமே கண்டிப்பாக ஒரு கேமரா இருக்கும் என்று தெரிந்தே தான் அவனும் தேட ஆரம்பித்திருந்தான். ஆனால் அவன் தேடிய பொருள் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் தேட, சற்றும் எதிர்பாராத உறவு இவனுக்கு அங்கு காத்திருந்தது!
சுவற்றில் தடவி, தரையில் அங்குல அங்குலமாக ஆராய்ந்து, இங்கிருந்த பொருட்களை இன்ச் இன்ச்சாக அவன் சோதித்தப் போதுதான் அங்கு ஒரு ரகசிய அலமாரி இருந்ததை அவன் கண்டான்.
இத்தனையுமே இங்க நேத்திரனின் திரையில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தாலுமே, அதை கண்காணிக்கத் தான் யாருமில்லாம் போனது சாண்டில்யனின் அதிர்ஷ்டமாகவே இருந்தது!
சிவாங்கியின் கூற்றுப்படி இது ஒரு மனித விளையாட்டு! அவளின் விளக்கமும் கார்த்திக் இங்கு தான் இருக்கிறான் என்ற நினைப்புமே அவனை இன்னுமே ஊக்கப்படுத்தியது. இந்த விளையாட்டின் கடை நிலையை அறிய அவன் முன்னோர ஒரு வழியாகவே இருந்தது என்றால் அது மிகா!
அந்த அலமாரியை அவன் கண்டுக்கொண்டுவிட்டான் என்றாலுமே அதனை திறக்கும் வழியறியாது நின்றிருந்தான்.
சட்டென்று ஏதோ ஒரு மரப்பொருள் கீழே விழும் ஓசை கேட்க, காதுகளை அதில் வைத்து கேட்டவன் அடுத்த நொடி தரையில் தான் வீழ்ந்திருந்தான்.
**************************
துளசியைப் பார்க்கவென்று அவளின் வீட்டிற்குச் சென்றிருந்தாள் அமிர்தவர்ஷினி. ஆனால் அங்கு அக்கம் பக்கத்தினர் சொன்ன விசயம் அவளை நிலைக்குழைத் தான் வைத்திருந்தது.
என்ன செய்ய? எங்கு போய் கேட்க என்ற ஒன்றும் புரியாமல் தவித்து நின்றவளுக்கு, எப்படியும் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்குத் தான் சென்றிருப்பர் என்ற நம்பிக்க எழ அங்கு விரைந்தாள்.
ஆனால் அவள் சென்று சேரும் முன்பே அந்த பச்சிளம் பிஞ்சை மருத்துவமனை நிர்வாகமே எடுத்துக்கொண்டு அதற்காக காரியத்தையுமே செய்து முடித்திருந்தனர், நேத்திரனின் சம்மதத்துடன்!
அழுது கரைந்தவளின் நிலையோ இனி எப்படி துளசியைத் தேற்ற என்ற நினைப்பிலேயே சூழல தன்னுடைய நிலையை மறந்துப் போனால் மாது.
விழுந்த அதிர்ச்சியின் பயனாலும் தீடீர் பிரசவம் ஆனதுமே துளசியின் உடல் ஏற்க மறுக்க, மிகுந்த பிரயத்தனப் பட்டுத்தான் மருத்துவர்கள் அவளின் உயிரையே காத்திருந்தனர்.
ஆனால் அவளின் உடலோ எந்த ஒரு எதிர்வினையுமே புரியாமல் ஜடம் போல் இருக்கவே, மருந்துவர்களுமே அவளை கண்ணானிப்பிலேயே தான் வைத்திருந்தனர்.
இதற்கிடையில் அவளின் கணவனே அவளைப் பாராது அவனுடைய அலுவலைப் பார்க்க சென்றுவிட்டான் என்ற செவிலியர் ஒருவர் கூற, வீறுகொண்டு இருந்தாள் அமிர்தா.
'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பது எத்துனை உண்மை என்று அப்போது அவள் நின்றிருந்த நிலையே உரக்க கூறியது.
'என்ன மனிதன் அவன்' என்ற நினைத்தவள் அடுத்து செய்தது எல்லாம் துளசியின் வீட்டினருக்கு தகவல் கொடுத்தது தான்.
ஜோன் உடனிருந்தாலுமே அமிர்தா, நிரல்யனின் மனைவி என்ற தெரிந்த பின்னர் சற்று பின்வாங்கி இருந்தான். அதற்கான காரணம், நேத்திரனின் கட்டுப்பாட்டில் தானே நிரல்யன் இருக்கிறான்.
இந்நேரம் ஒரு காவல் அதிகாரியை காணவில்லை என்ற செய்தி நிச்சயம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும். ஆதலால் எப்படியும் தங்களது இடத்தை காவல் துறையினர் கண்டிப்பாக கண்டுகொள்வார்கள், அதற்குள்ளாக நாமே ஏன் வழிய சென்று தலையை இவளிடம் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணித்தில் அனைத்தையுமே தூர நின்றே கவனித்துக்கொண்டிருந்தான் ஜோன்.
இதற்குள்ளாக துளசியின் நிலை தான் மோசமானது. அவளின் நினைவு தப்பி கோமாவிற்கே சென்று விட்டாள் அதிர்ச்சியினாலும் தலையில் அடிபட்ட காரணத்தினாலும்!
தோழியின் நிலையறிந்து உறைந்து தான் நின்றிருந்தாள் அமிர்தா. சின்னச் சின்ன குழந்தைகள் இரண்டிருக்க, இனி அவர்களின் நிலை? இதுவே இவளின் மனதை அப்போது போட்டு ஏகத்திற்கும் அழுத்த, அந்த அழுத்தம் தாங்காது அங்கிருந்த நாற்காலியில் தலையைப் பிடித்தவாறு அமர்ந்துவிட்டாள் அவள்.
அந்நேரம் ஏதோ ஒரு குறுகுறுப்புத் தோன்ற சட்டென்று நிமிர்ந்து பார்த்த அமிர்தா அதிர்ந்து தான் போனாள். காரணம், அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்திருந்தார் அவளின் தகப்பனார்.
அங்கு அவரை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை! அவர் எவ்வளவு பெரிய மருத்துவர் என்றாலுமே இதுப்போல ஒரு சாதாரண மருத்துவமனைக்கு வரவே மாட்டார் திரு. மதுசூதனன், அமிர்தா மற்றும் சாண்டியின் தகப்பனார்.
மிகச்சிறந்த இதய நிபுணரான அவருக்கு, எப்போதுமே ஒரு பகட்டும் கவுரவமும் இருந்து கொண்டே தான் இருக்கும். அது அவரின் ரத்தத்தில் கலந்த மற்றும் கலக்கப்பட்ட ஒன்று!
அதன் தொட்டே மகளது காதலாகட்டும் திருமணமாகட்டும் அவரால் ஏற்றுக்கொள்ளபடாத ஒன்று!
அவரின் இந்த பகட்டும் வரட்டு பிடிவாதமுமே தெரிந்த ஒன்றாகவே இருந்த காரணத்தினால் தான் அமிர்தவர்ஷினியும் சாண்டில்யனுமே மிகுந்த சமூகப் பொறுப்புடனும் மனித நேயத்துடனுமே வளர்க்கப்பட்டனர் திருமதி. வசந்தி மதுசூதனனால்!
என்ன இரத்தத்தில் ஊறிய ஒன்றாக இருந்தாலும் தன் இரத்தத்தால் உருவான பிள்ளையை நெடு நாட்களுக்குப் பின் கண்டால் எந்த தகப்பனால் பார்க்காமல் இருக்க முடியும்?
அதுவும் தந்தையின் வழியே தானும் ஒரு இதய நிபுணராக இருக்கும் அவளின் ஆசை செல்ல மகளை பார்த்தவுடனே அவரின் அந்த கர்வமும் சரிந்தது அங்கு.
அமிர்தாவின் ஓய்ந்த தோற்றமே அவரை உலுக்கியிருக்க, என்ன மனிதன் அவன் என்று மருமகனையும் வசைபாடாமல் இருக்கவில்லை அவரின் மனது.
"ப்பா.." என்றவளின் குரல் கலங்கி ஒலித்தாலுமே, மதுசூதனனுக்கு அந்த பத்து மாத குழந்தையாக இருந்த அமிர்தா எப்படி அழைத்தாளோ, அதே மாதிரியே தான் தோன்றியது இருபத்தி ஆறு வருடங்களுக்கு பின்புமே!
கைகளை அந்த இரும்பு நாற்காலியில் ஊன்றியவள், புடவை முந்தானையை பிடித்தவாறே தந்தையை நோக்கி ஓடியவளை ஆதுரமாய் தான் அணைத்துக்கொண்டார் அந்த தந்தையானவர்.
ஆனால் அந்த அணைப்பு நீண்டது என்னவோ சொற்ப நிமிடங்களே. பெற்ற மகளை பார்த்தவரின் மனது நிறைந்திருந்தாலுமே அதனை அவள் மதிக்கவில்லை என்ற நினைப்புடனேயே அவளை உதறியும் சென்றிருந்தார் அவர்.
ஆம், அமிர்தாவின் கதறல் இப்போது அவரை கலங்கவிடவில்லை. அதன் பொருட்டே அவளை உதறி சென்றிருந்தார் அந்த பாசக்கார தந்தையானவர்.
அத்தனையும் தாங்கிக்கொண்டு அழுதவாறு நின்றிருந்தவளின் செவிகளை தீண்டியது அந்த செய்தி!
அதாவது, நிரல்யனின் வாகனம் காட்டுப் பகுதியில் வெடித்துச் சிதறியதாகவும், அவனுடன் சேர்த்து உடன் சென்ற காவலருமே சிதைந்துவிட்டனர் என்ற செய்தி உண்மையில் அமிர்தாவைத் தான் சிதைத்திருந்தது!
*********************