இவர்களது கார் ஏன் நிற்க வேண்டும்? ஏன் இவர்கள் இந்த வீட்டிற்கு வர வேண்டும்? ஏன் இவர்களது உயிர் நண்பன் இறந்துக்கிடக்க வேண்டும்? என்று கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக சாண்டியின் மனதில் தோன்ற, கோபத்தில் எழுந்தவன், அருந்ததியின் மகன் என்று கூறப்பட்டவரை அடிக்கச் சென்றான்.
"யார்டா நீங்க எல்லாம்? உண்மையை சொல்லு? இங்க என்ன நடக்குது? அப்படி சாகுறாங்கனா? நீங்க இரண்டு பேரு மட்டும் எப்படி உயிரோட இருக்கீங்க? சொல்லு? என்றவன் அவரை அடிப்பதற்காக கைகளை ஓங்க, அவனைத் தடுத்து நிறுத்தியிருந்தான் விதுரன்.
கீழே நடக்கின்ற சப்தம் கேட்டு, அதிதியும், மாதாங்கியும் விரைந்து கீழே இறங்கியிருக்க, சாண்டில்யனின் ஆத்திரம் மட்டும் குறைந்தபாடில்லை.
"என்ன விடுடா விது. இவங்களை சும்மா விடக்கூடாது. இதோ இந்த கிழவி அருந்ததி, நம்மளை வேணும்னே சிக்க வெச்சுருக்கு." என்றான் கத்தியபடி.
"நான் தான் உங்க கையை பிடிச்சு கூப்பிட்டு வந்த மாதிரி பேசுற? நீங்க தான் இந்த வீட்டை தேடி வந்தீங்க. எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை." என்று அருந்ததி முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு கூற,
"பார்த்தியாடா இந்த கிழவி பேசுறது பார்த்தியா? இவளை..." என்றவன் அருந்ததியின் கழுத்தை நெறிப்பதற்காக போக, அவனது கோபத்தைக் கண்டு அச்சமுற்ற அருந்ததியோ, திடுக்கிட்டு இரண்டு அடி பின்னோக்கி நகர, இருவருக்கும் நடுவே வந்து நின்றுக் கொண்டாள் அதிதி.
"சாண்டி... அமைதியா இருக்கியா? இனி என்ன பண்ணலாம்னு யோசிடா. இங்க இருந்து நம்ம உயிரோட வெளியே போகணும். அப்புறம் தான் மத்தது எல்லாம் யோசிக்கணும்." என்றவள் கூறும்போதே அவளது கண்களில் அச்சம் அப்பட்டமாக தெரிந்தது. மேலும் அழுது சிவந்திருந்த அவளது கண்களைக் காணும் போதே இவனுக்கும் வலித்தது.
அவளது கண்ணீரில் நிதானித்தவன் தன் நண்பர்கள் மூவரையும் பார்த்தான். பேயரைந்தார் போல மிரட்சியுடன் நிற்பவர்களை காணும் போதே அவனுக்கு பாவமாக இருந்தது. முதலில் இவர்களை இங்கிருந்து வெளியே பத்திரமாக அனுப்ப வேண்டும் என்று நினைத்தவன் அமைதியானான்.
"ஓகே நான் கோபப்படலை. ஆனால் இதுங்க இரண்டும் முழிக்கும் முழியே சரியில்லை." என்றவன் அருந்ததியையும், அவனது மகனையும் முறைக்க, அருந்ததியோ, திருதிருவென முழித்தாள்.
"ஓகே சாண்டி அடுத்து நம்ம என்ன பண்ண போறோம்? நம்ம வருணுக்கு தான் இப்படி நடந்திடுச்சு. இங்க நடக்குற மர்மத்தை பார்க்கும் போது, நாம எல்லாருமே இரத்தம் கக்கி தான் சாவோமா?" மிரட்சி கலந்த குரலில் விதுரன் கேட்ட நொடி,
"அய்யய்யோ பெருமாளே. அவ்ளோதானா? நாங்க எல்லாருமே சாகப் போறாமா?" என்று பதட்டத்துடன் மாதங்கி கூற, அவளை சலிப்பாக பார்த்தான் சாண்டில்யன்.
"கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? உங்க எல்லாரையும் பத்திரமா கொண்டு போறது என்னோட கடமை." என்றவன் நெற்றியை நீவியபடி கூற, சட்டென்று வருணின் நினைவு தோன்ற,
"ஒரு நிமிசம், நீங்க இரண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க? அப்போ அங்க வருண் தனியா இருக்கானா?" என்றவன் பதட்டம் குறையாது கேட்க, பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி விழித்தனர்.
"சத்தம் கேட்டு தான் பயத்துல வந்து பார்த்தோம். அவன் என்ன ஓடியா போகப் போறான். அவன் தான் நம்மளை விட்டு போயிட்டானே?" என்று விரக்தியில் அதிதி கூற, அவளை முறைத்த சாண்டில்யனோ,
"விதுரா இதுகளை பார்த்துக்கோ." என்று அருந்ததியையும், அவனது மகனையும் கண் காட்டி விட்டு விரைந்து மாடியில் ஏறினான். அவன் பின்னே அதிதி மற்றும் மாதங்கியும் விரைந்து செல்ல, கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்ற சாண்டில்யனோ, அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அடுத்தடுத்து வந்த அதிதி மற்றும் மாதங்கியும் வாயடைத்துப் போயினர்.
" அய்யய்யோ,இவன் எங்க போனான் சாண்டி?" என்று மாதங்கி பதட்டம் சற்றும் விலகாமல் கேட்க, அதிதியோ வாயைப் பொத்திக் கொண்டு பயத்தில் மௌனமாக நிற்க, சாண்டில்யனோ மொத்த குழப்பத்தையும் குத்தகைக்கு எடுத்திருப்பதை போல் அதிர்ச்சியில் செய்வதறியாது சிலையென நின்றான்.
ஒரு மனிதன் எத்தனை அதிர்ச்சிகளைத் தான் தாங்க இயலும்? பிணமாக கிடந்தவன் எழுந்தா சென்றிருக்க முடியும்? மர்ம வீட்டினுள் நடக்கும் தொடர் மர்மத்தில் உறைந்து போய் நின்றவனது முகம் முழுவதும் குப்பென்று வியர்த்திருந்தது.
"யார்டா நீங்க எல்லாம்? உண்மையை சொல்லு? இங்க என்ன நடக்குது? அப்படி சாகுறாங்கனா? நீங்க இரண்டு பேரு மட்டும் எப்படி உயிரோட இருக்கீங்க? சொல்லு? என்றவன் அவரை அடிப்பதற்காக கைகளை ஓங்க, அவனைத் தடுத்து நிறுத்தியிருந்தான் விதுரன்.
கீழே நடக்கின்ற சப்தம் கேட்டு, அதிதியும், மாதாங்கியும் விரைந்து கீழே இறங்கியிருக்க, சாண்டில்யனின் ஆத்திரம் மட்டும் குறைந்தபாடில்லை.
"என்ன விடுடா விது. இவங்களை சும்மா விடக்கூடாது. இதோ இந்த கிழவி அருந்ததி, நம்மளை வேணும்னே சிக்க வெச்சுருக்கு." என்றான் கத்தியபடி.
"நான் தான் உங்க கையை பிடிச்சு கூப்பிட்டு வந்த மாதிரி பேசுற? நீங்க தான் இந்த வீட்டை தேடி வந்தீங்க. எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை." என்று அருந்ததி முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு கூற,
"பார்த்தியாடா இந்த கிழவி பேசுறது பார்த்தியா? இவளை..." என்றவன் அருந்ததியின் கழுத்தை நெறிப்பதற்காக போக, அவனது கோபத்தைக் கண்டு அச்சமுற்ற அருந்ததியோ, திடுக்கிட்டு இரண்டு அடி பின்னோக்கி நகர, இருவருக்கும் நடுவே வந்து நின்றுக் கொண்டாள் அதிதி.
"சாண்டி... அமைதியா இருக்கியா? இனி என்ன பண்ணலாம்னு யோசிடா. இங்க இருந்து நம்ம உயிரோட வெளியே போகணும். அப்புறம் தான் மத்தது எல்லாம் யோசிக்கணும்." என்றவள் கூறும்போதே அவளது கண்களில் அச்சம் அப்பட்டமாக தெரிந்தது. மேலும் அழுது சிவந்திருந்த அவளது கண்களைக் காணும் போதே இவனுக்கும் வலித்தது.
அவளது கண்ணீரில் நிதானித்தவன் தன் நண்பர்கள் மூவரையும் பார்த்தான். பேயரைந்தார் போல மிரட்சியுடன் நிற்பவர்களை காணும் போதே அவனுக்கு பாவமாக இருந்தது. முதலில் இவர்களை இங்கிருந்து வெளியே பத்திரமாக அனுப்ப வேண்டும் என்று நினைத்தவன் அமைதியானான்.
"ஓகே நான் கோபப்படலை. ஆனால் இதுங்க இரண்டும் முழிக்கும் முழியே சரியில்லை." என்றவன் அருந்ததியையும், அவனது மகனையும் முறைக்க, அருந்ததியோ, திருதிருவென முழித்தாள்.
"ஓகே சாண்டி அடுத்து நம்ம என்ன பண்ண போறோம்? நம்ம வருணுக்கு தான் இப்படி நடந்திடுச்சு. இங்க நடக்குற மர்மத்தை பார்க்கும் போது, நாம எல்லாருமே இரத்தம் கக்கி தான் சாவோமா?" மிரட்சி கலந்த குரலில் விதுரன் கேட்ட நொடி,
"அய்யய்யோ பெருமாளே. அவ்ளோதானா? நாங்க எல்லாருமே சாகப் போறாமா?" என்று பதட்டத்துடன் மாதங்கி கூற, அவளை சலிப்பாக பார்த்தான் சாண்டில்யன்.
"கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? உங்க எல்லாரையும் பத்திரமா கொண்டு போறது என்னோட கடமை." என்றவன் நெற்றியை நீவியபடி கூற, சட்டென்று வருணின் நினைவு தோன்ற,
"ஒரு நிமிசம், நீங்க இரண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க? அப்போ அங்க வருண் தனியா இருக்கானா?" என்றவன் பதட்டம் குறையாது கேட்க, பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி விழித்தனர்.
"சத்தம் கேட்டு தான் பயத்துல வந்து பார்த்தோம். அவன் என்ன ஓடியா போகப் போறான். அவன் தான் நம்மளை விட்டு போயிட்டானே?" என்று விரக்தியில் அதிதி கூற, அவளை முறைத்த சாண்டில்யனோ,
"விதுரா இதுகளை பார்த்துக்கோ." என்று அருந்ததியையும், அவனது மகனையும் கண் காட்டி விட்டு விரைந்து மாடியில் ஏறினான். அவன் பின்னே அதிதி மற்றும் மாதங்கியும் விரைந்து செல்ல, கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்ற சாண்டில்யனோ, அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அடுத்தடுத்து வந்த அதிதி மற்றும் மாதங்கியும் வாயடைத்துப் போயினர்.
" அய்யய்யோ,இவன் எங்க போனான் சாண்டி?" என்று மாதங்கி பதட்டம் சற்றும் விலகாமல் கேட்க, அதிதியோ வாயைப் பொத்திக் கொண்டு பயத்தில் மௌனமாக நிற்க, சாண்டில்யனோ மொத்த குழப்பத்தையும் குத்தகைக்கு எடுத்திருப்பதை போல் அதிர்ச்சியில் செய்வதறியாது சிலையென நின்றான்.
ஒரு மனிதன் எத்தனை அதிர்ச்சிகளைத் தான் தாங்க இயலும்? பிணமாக கிடந்தவன் எழுந்தா சென்றிருக்க முடியும்? மர்ம வீட்டினுள் நடக்கும் தொடர் மர்மத்தில் உறைந்து போய் நின்றவனது முகம் முழுவதும் குப்பென்று வியர்த்திருந்தது.