அத்தியாயம் – 8
திடீரென நடந்து விட்ட செயலில் நால்வரும் திகைத்து அச்சத்தில் உறைந்திருக்க, அருந்ததியின் கதறல் சத்தம் அவர்களின் செவிப்பறையை தீண்டாமலே கரைந்தது..
தன்மேல் விழுந்து கிடந்த மாதங்கியை ஒரு கையால் அணைத்து "மாது அடியேன் இருக்கும்போது எதற்கு இந்த பயம்.. நோ அச்சம்.." என்று ஆறுதலளித்த விதுரன் பெண்ணவள் சாய்வதற்கு இலகுவாக இன்னும் நன்றாக படுத்து கொண்டான்..
கீழே விழுந்ததில் சுள்ளென்ற வலி தீண்டிய பின்னந்தலையை ஒரு கையாலும், மறுகையால் காலையும் பிடித்தபடி சுருண்டிருந்த சாண்டி கடுப்பாகி விதுரனை ஓங்கி மிதிக்க, விதுரனின் காலடியில் கிடந்த வருணும் தன் பங்கிற்கு மிதிக்க, "அய்யோ பேய்.. பேய்.. பேய் என்னைய மிதிக்குது.." என்று கத்தினான் பதற்றத்துடன்..
"டேய் நாங்க உனக்கு பேயாடா..?" என்று சாண்டி மீண்டுமொரு உதை விட, "ஊஃப் நீதானா..?" என்று பெருமூச்சு விட்டு, "அடேய் சொல்லிட்டு மிதிங்கடா.. பக்குனு இருக்குல.." என்றான் பாவமாக..
"ப்ச் எந்திரிச்சு தொலைடா.. நேரங்கெட்ட நேரத்துல தான் உனக்கு ரொமான்ஸ் வரும்.." என்று வருண் சிடுசிடுக்க, சாண்டியின் நினைவலைகள் அதிதியையே சுற்றி வந்தது.. "அதிதி எங்கடி போன.? வந்துருடி.. நீ இல்லாம நானில்லனு புரிஞ்சுக்கிட்டேன்.." என்று மனதினுள் கதறினான்..
கும்மிருட்டுடன் காணப்பட்ட சுரங்கத்தை கண்டு மிரண்ட விதுரன் "ஹே இது எந்த இடம்..?" என்று குரலே எழாமல் கேட்டிட, தன்னவளுக்கு என்ன ஆனதோ என்ற பதற்றத்தில் இருந்த சாண்டி "எங்ககிட்ட கேட்டா எப்படி தெரியும்.. நாங்களும் உன்கூட தானே இருக்கோம் எருமை.." என்றான் விழிகள் சிவக்க..
"மச்சான் டேய்.. போலீஸ் மச்சான் ரொம்ப நல்ல மூடுல இருக்காரு போல.. வாயை குடுத்து வாங்கி கட்டிக்காத.." என்று மெதுவாக விதுரனின் காதை கடித்தான் வருண்..
அவ்விடத்தை மிரட்சியுடன் கண்களால் அளவெடுத்திருந்த மாதங்கி, "விது விது.." என்று விதுரன் என்று நினைத்து வருணின் கையை சுரண்ட, "ஹலோ கேர்ள் இப்ப எதுக்கு நாய் பிரண்டற மாதிரி என் கையை பிரண்டறீங்க..? என்று கேட்டான் தீவிரமான முகத்துடன்..
வருணின் கிண்டலை மூளையில் ஏற்றி கொள்ளும் நிலையில் எல்லாம் மாதங்கி இல்லை.. "நம்ம கூட வந்த அருந்ததியை காணோம் பாருங்க.." என்று கலக்கமாக கூறிட, அப்போது தான் மற்ற மூவரும் அருந்ததியை தேடினர்..
அவளை காணாமல் வெகுவாக குழம்பியவர்கள், "ஒருவேளை அது பேயோ..?" என்று யோசிக்கும் நிலைக்கு வந்திருந்த விதுரன் வாய்விட்டும் கேட்டு விட்டான்..
"என்னது பேயா..?" என்று அதிர்ந்த மாதங்கி பயத்தில் உறைய, அவனை உக்கிரமாக பார்த்த வருண் "உன் வாய்ல நல்ல வார்த்தையே வராதாடா.. அவ ஒண்ணும் பேய் இல்லை.. நீயே ஏதாவது கற்பனை பண்ணிக்காத.." என்றான் காட்டத்துடன்..
"அந்த கிழவி தான் வேணும்னே நம்மளைய இதுல சிக்க வைச்சுருக்கோனு எனக்கு சந்தேகமா இருக்கு.. நம்மளைய மாட்டி விட்டுட்டு அது மட்டும் எஸ்கேப்பாகிருச்சு பாரு.. என் கைல மட்டும் சிக்குச்சு அவ்வளவுதான்.. என் அதிதி எங்க இருக்களோ.." என்று முதலில் காய்ந்த சாண்டி பின்பு வேதனையுடன் மொழிந்தான்..
"எது நடந்தாலும் அருந்ததியையே குறை சொல்லாதீங்கடா.. அவளுக்கே எதுவும் தெரியாம இருக்கலாம்ல.. இவ அதிதியை கடத்தி என்ன பண்ண போறா..?" என்ற வருண் சாண்டியை முறைக்க, அவனும் பார்வை எறிகணையை வருண் மேல் எறிந்தான்..
லேசாக எழுந்த பயத்தில் "அது எக்கேடோ கெட்டு போகட்டும்.. முதல்ல இங்கிருந்து போற வழியை தேடுவோம்டா.. பக்கு பக்குனு இருக்கு.." என்ற விதுரன் எச்சிலை விழுங்க, சண்டை கோழிகளாக முறைத்திருந்த சாண்டிக்கும் வருணுக்கும் இதுவே சரியெனப்பட்டது..
அந்த சுரங்கத்தினுள் எந்த பக்கம் போனாலும் மறுபடியும் மறுபடியும் நின்றிருந்த இடத்திற்கே நால்வரும் வந்து சேர, குழப்பத்தில் அவ்விடத்தில் பார்வையை நிலைத்தபடி சாண்டியோ "நம்மதான் இன்னும் இங்கயே நிற்கறோமா..?" என்று கேட்டான்..
"எனக்கும் அதே சந்தேகமா தான் இருக்கு.." - வருண்
"நீங்க ரெண்டு பேரும் இங்கயே நில்லுங்க.. நானும் விதுரனும் மறுபடியும் போய் பார்க்கறோம்.." - சாண்டி
"அய்யோ.. மாட்டேன்பா.. நீங்க போனதும் அந்த அருந்ததி பேய் வந்துருச்சுனா..?" - மாதங்கி
"அவ பேய் இல்லனு எத்தனை தடவை தான் சொல்றது.." - வருண்
"டேய் நீயே யோசிச்சு பாரு.. அவ ஏதாவது வேணாம்னு சொன்னா தான் நம்ம அதைய செய்வோம்னு இங்க போக வேணாம்னு சொன்னா.. அவ சொன்னதை கேட்காம இதுக்குள்ள நம்ம விழுந்தோம்.. இப்ப அவளையே காணோம்.." - விதுரன்
"அய்யோ உங்களுக்கு எப்படி புரிய வெக்கறதுனு தெரில.. அவ பேயும் இல்ல.. பிசாசும் இல்ல.. நம்மளைய மாதிரி உயிருள்ள மனுசி தான்.. அதிதியை கடத்துன மாதிரி இவளையும் கடத்திருக்கணும்.." - வருண்
"என்னைய பேச வெக்காத வருண்.. தயவு செஞ்சு வாயை மூடிரு.. அந்த கிழவி அப்படியே தொலையட்டும்.. டேய் நீ முதல்ல வாடா.." என்று விதுரனை இழுத்து கொண்டு சென்ற திசையிலே மீண்டும் சென்றான் சாண்டி..
அவர்கள் சென்றதும் பயத்தில் விழிகளை நாலாபுறமும் உருட்டியபடி இருவரும் அமைதியின் தாக்கத்திலே நின்றிருக்க, சென்ற சாண்டியும் விதுரனும் மீண்டும் அவர்கள் நின்ற இடத்திற்கே வந்து சேர்ந்தனர்..
"நீங்க ஏன்டா போய்ட்டு திரும்பி இங்கயே வர்றீங்க.." என்று பொறுமை இழந்த மாதங்கி கத்த, இதில் அவளை விட கடுப்பான சாண்டி "அப்படியே ஒன்னு விட்டனா அவ்வளவுதான்.. எங்களுக்கு என்ன ஆசையா.. இங்கயே வரணும்னு.. எங்க போனாலும் மறுபடியும் மறுபடியும் இங்கதான் வரணும் போல.." என்றான் சீற்றலுடன்..
சாண்டியின் கோவத்தில் மாதங்கிக்கு கண்ணீர் உகுக்க, "அதிதிக்கு என்ன ஆச்சோனு பயமா இருக்கு சாண்டி.." என்று தோழியின் நினைவில் தேம்ப, இறுகி இருந்தவனின் மனதும் பாறையாக மாறி கனகனத்தது..
திடீரென்று ஏதேதோ விழும் சத்தம் கேட்டதில் அச்சத்தில் துடித்த நால்வரின் மனதும் இன்னும் இரட்டிப்பாக துடிக்க ஆரம்பிக்க, மிரட்சியுடன் சத்தம் வரும் திசையில் இவர்கள் விழிகளை பதித்ததும் அந்த சத்தமும் நின்று போனது..
"அஅங்க யா..யாரு இரு..க்கா..ங்க.." என்று கேட்ட மாதங்கிக்கு வார்த்தைகள் கோர்வையாக நில்லாமல் தடுமாற, "இரு நான் போய் கேட்டுட்டு வர்றேன்.." என்று பல்லை கடித்தான் சாண்டி..
"அவளே பயத்துல இருக்கா.. நீ ஏன்டா கத்தி இன்னும் பயப்படுத்தி விடற.." என்று விதுரன் தலையில் அடித்து கொள்ள, சாண்டி வாயை திறவும் முன்பே மீண்டும் சடசடவென ஏதோ விழும் சத்தமும் அதனுடன் சேர்ந்து விநோதமான கூச்சலும் செவியை துளைக்க.. செல்களெல்லாம் உறைந்து இதயமே வெடிப்பது போலானது நால்வருக்கும்..
இடைவிடாது வந்த சத்தத்தில் அசைவற்று நின்றிருந்த மாதங்கி ஒரு கட்டத்தில் மயங்கி விழ, "மாது மாது.." என்று அவளின் கன்னத்தில் தட்டி எழுப்ப முயன்ற விதுரனும் வருணும் கூட எந்தவித அசைவும் இல்லாமல் அப்படியே மயங்கிட, நகர கால்கள் ஒத்துழைக்காத காரணத்தினால் நின்ற இடத்திலே நின்றிருந்த சாண்டிக்கு தான் ரத்தநாளங்கள் எல்லாம் கொதிநிலையின் உச்சத்தை தொட்டிருந்தது..
*****
திரையில் அவர்களை கண்டபடி வெற்றி களிப்புடன் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த நேத்ரன், "ஹஹஹஹ என்ன ஒரு கண்கொள்ளா காட்சி இது.. மாத்தி மாத்தி அடிச்சுக்கிட்டு.. சண்டை போட்டுட்டு.. ச்சே ச்சே சான்ஸே இல்ல.. இப்பதான்டா இந்த நேத்ரனோட ஆட்டமே ஆரம்பமாகிருக்கு.. இதுக்கே பயந்தா எப்படி.. இன்னும் இன்னும் பல பல நிகழ்வுகள் இருக்கே.." என்று வெடிசிரிப்பு சிரித்தான்..
அப்போது அவனின் அலைப்பேசி கவனத்தை கலைக்க, சார் என்று வந்ததை பார்த்து "நம்ம சார் தான்டா.." என்று தன்னருகில் இருந்தவர்களிடம் மொழிந்தவன் போனை காதில் வைக்க, "என்னடா எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு.." என்று மறுமுனையில் இருந்தவர் கேட்டார்..
"சார் அதெல்லாம் சூப்பரா போய்ட்டு இருக்கு.. நீங்கதான் பார்க்க மிஸ் பண்ணிட்டீங்க.." என்ற நேத்ரன் இச் கொட்ட, "நம்ம பிளான் எதுவும் சொதப்பிடாம எந்நேரமும் அவங்களைய வாட்ச் பண்ணிட்டே இருங்க.. அப்பறம் ரொம்ப முக்கியமான விசயம் அருந்ததி பத்தி அவங்க யாருக்கும் தெரிய கூடாது.." என்று அழுத்தமாக உரைத்தார்..
சின்ன சிரிப்புடன் நேத்ரனோ "அந்த கிழவியும் இப்ப நம்மகிட்ட தான் இருக்கு சார்.. அதைய நம்ப முடியாதுனு அதையும் தூக்கிட்டோம்.." என்றிட, "குட் குட் மை டியர் பாய்.. இருந்தாலும் கேர்புல்லா இருங்க.." என்று விட்டு போனை கட் செய்தார் விஸ்வநாதர்.. அதிதியின் தந்தை..
"என்கிட்டயே உங்க வில்லத்தனத்தை காட்டறீங்களா.. பார்ப்போம்டா அங்கிருந்து நீங்க உயிரோடு வர்றீங்களானு.." என்று கர்வப் புன்னகையை இதழில் சூட்டி கொண்டார் அதிதியின் தந்தை..
******
நேத்ரன் பற்றி தான் நினைத்து வந்தது தோல்வியில் முடிந்ததை நிரல்யனால் ஏற்று கொள்ள இயலாமல் எழுந்த சினத்தில் காரை ஓங்கி குத்திட, இதில் கார்கண்ணாடி சில்லு சில்லாக நொறுங்கி அவனின் கையையும் பதம் பார்க்க, அப்போதும் ஆத்திரம் அடங்காமல் "ஷிட்.." என்று கத்தினான்..
இதை தூரத்தில் இருந்து பார்த்திருந்த விஸ்வநாதருக்கு குரூர சிரிப்பு மின்ன, "நீ என்ன பண்ணுனாலும் உன்னால ஒன்னையும் புடுங்க முடியாதுடா.. உன் தங்கச்சியே உன் முன்னாடி வந்தாலும் அவளை உன்னால கண்டுபிடிக்க முடியாது.. ச்சோ பாவம் தான் நீ.." என்று கேலிச்சிரிப்பை உதித்திருந்தவர் அறியவில்லை பெற்ற மகளே அவரை தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை..!!
ஏமாற்றம் கலந்த முகத்துடன் வீட்டிற்கு வந்த நிரல்யனுக்கு பெற்றோரை காண வேண்டும் என்ற எண்ணம் எழ, மெதுவாக அவர்கள் இருந்த அறைக்கதவை திறந்து அப்படியே நின்றான்.. இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்டு அவர்களை தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தவனின் கண்ணில் சிக்கியது புகைப்படம் ஒன்று..
கைகள் நடுங்க அதை எடுத்தவன் "அரு.." என்று முணுமுணுத்தவாறு அந்த புகைப்படத்தை வருடிய நிரல்யனுக்கு தொண்டை அடைக்க, "உண்மையாவே எங்களைய விட்டு போய்ட்டியாடா..?" என்று நினைத்தபோதே இதயத்தில் ஈட்டி ஒன்று பாய்ந்த உணர்வு..
புகைப்படத்தில் இருப்பது நிரல்யனின் உடன்பிறந்த தங்கை தான்.. அவர்கள் வீட்டின் செல்ல இளவரசி.. பெற்றவர்களுக்கு மட்டுமின்றி அண்ணனுக்கும் மகளாக இருந்தவள்.. அவள் ஒரு நாள் வீட்டில் இல்லையென்றாலும் அந்த வீடே களையிழந்து காணப்படும்..
புள்ளி மானாய் கல்லூரிக்கு கிளம்பியவள் மாலையில் சடலமாக தான் வீட்டிற்கு வந்தாள்.. மகள் இல்லை என்பதை நம்ப முடியாமல் பெற்றவர்கள் மட்டுமின்றி நிரல்யனும் மொத்தமாக உடைந்ததில் தங்கையின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய மறந்திருந்தான்..
அமிர்தவர்ஷினி காட்டிய அன்பிலும் அக்கறையிலும் தான் மெல்ல மெல்ல தேறி.. அருந்ததியின் இறப்பை ஏற்று கொண்டு வாழ பழகி இருந்தனர்.. ஆனால் அவ்வப்போது அவளின் நினைவில் கண்ணீர் வடிப்பவர்களை மருமகளாகவும், மகளாகவும் இருந்து வர்ஷினி தான் தேற்ற வேண்டியதாக இருக்கும்..
புகைப்படத்தையே உள்ளம் நொறுங்க வெறித்திருந்தவனின் தோளில் ஒரு கை பதிய.. அந்த கரத்திற்கு சொந்தக்காரி தன் காதல் மனைவி தான் என்பதை திரும்பாமலே உணர்ந்த நிரல்யன் அப்படியே நின்றிருந்தான்..
நிரல்யன் சென்ற சிறிது நேரத்திலே வர்ஷினிக்கும் முழிப்பு வந்ததில் கணவனை காணாமல் வீடு முழுவதும் தேடியவள் பின்பு சோர்ந்து போய் அறைக்குள் முடங்கியவள், சத்தம் கேட்டு தான் மீண்டும் வெளியில் வந்தாள்..
கணவனின் முகத்தை தன் கரங்கள் கொண்டு தாங்கிய வர்ஷினி "நிரல்.. அரு எங்கையும் போகலடா.. நம்ம கூட தான் எப்பவும் இருப்பாங்க.. அவளுக்கு உங்களைய விட்டுட்டு போக முடியுமா என்ன..? ம்ம்ம்ம் நீயே சொல்லு.." என்றாள் கேள்வியுடன்..
"அதான் போய்ட்டாளே பொண்ணு.. பட்டாம்பூச்சியா பறந்து திரிஞ்சவ ஒரே நாளுல சாம்பலா மாறிட்டா.. அவ இல்லங்கறதை இன்னும் என்னாலயே ஏத்துக்க முடில.." என்றபடி இறுக்கமாக துணைவியை அணைத்து கொண்டான்..
மற்ற விஷயங்களை இலகுவாக கையாள்பவன் தங்கையின் விசயத்தில் மட்டும் யோசிக்க மறந்து விடுகிறான்.. காரணம் தன்னை சேர்ந்தவருக்கு ஒன்றென்றால் மட்டும் மூளை மழுங்கி விடுகிறதோ என்னவோ..
"நிரல் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு சொல்லட்டுமா..?" என்று கணவனின் பின்கேசத்தை கோதியபடி பெண்ணவள் கேட்க, தங்கையின் நினைவில் உழன்றிருந்த நிரல்யனும் "ம்ம்ம்ம்.." என்றான்..
"எனக்கு என்னவோ அரு உயிரோடு தான் இருப்பாள்னு தோணுது.." என்று தான் நினைத்ததை கூறியும் விட்டாள்.. விலுக்கென்று அவளிடமிருந்து விலகிய நிரல், "என்ன சொல்ற..?" என்று அதிர்வலை தாங்கிய முகத்துடன் வினவினான்..
"எஸ் எனக்கு இந்த சந்தேகம் ஆரம்பத்துல இருந்தே இருக்கு நிரல்.. நீங்க ஏன் அரு எப்படி இறந்தாங்கனு யோசிக்கல.. அப்படி யோசிச்சு பார்த்திருந்தா பல கேள்விகளுக்கு பதில் கிடைச்சு.. அரு உயிரோடு இருக்காளா..? இல்லையானு தெரிஞ்சுருக்கும்.." என்று முடித்தாள்..
குழப்ப ரேகைகள் மனதை சூழ்ந்து நர்த்தனமாட, ஒரு வேளை இதுவும் உண்மையா இருக்குமோ..? என்று பலவிதமான சிந்தனைகள் எழுந்து அவனை மீட்டெடுக்க, தங்கைக்கு அண்ணனாக யோசித்தபோது தோன்றாத வினாக்கள் அதே காவல் அதிகாரியாக யோசிக்கும் சமயத்தில் நிறையவே தோன்றின..
"எப்படி பொண்ணு..?" என்று புருவங்கள் மேலேற கேட்ட கணவனுக்கு சின்ன சிரிப்பை பதிலாக குடுத்த வர்ஷினி "நான் போலீஸ்காரன் பொண்டாட்டியாக்கும்.." என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கண்சிமிட்டியவாறு மொழிந்த மனையாளை மீண்டும் தழுவி கொண்டது ஆடவனின் கரங்கள்..
கையில் இருந்த புகைப்படத்தில் மீண்டும் நிரல்யனின் விழிகள் பதிய, அதில் புன்னகையுடன் இருந்தது சாண்டி அன் கோ - விடம் கிழவியாக அறிமுகமான நிரல்யனின் செல்ல தங்கை அருந்ததியே..
புரியாத பல மர்மங்கள்
அவிழ்க்க படுமா..? இல்லை
அதனுடன் சேர்ந்து இவர்களும்
மர்மமாவார்களா?
திடீரென நடந்து விட்ட செயலில் நால்வரும் திகைத்து அச்சத்தில் உறைந்திருக்க, அருந்ததியின் கதறல் சத்தம் அவர்களின் செவிப்பறையை தீண்டாமலே கரைந்தது..
தன்மேல் விழுந்து கிடந்த மாதங்கியை ஒரு கையால் அணைத்து "மாது அடியேன் இருக்கும்போது எதற்கு இந்த பயம்.. நோ அச்சம்.." என்று ஆறுதலளித்த விதுரன் பெண்ணவள் சாய்வதற்கு இலகுவாக இன்னும் நன்றாக படுத்து கொண்டான்..
கீழே விழுந்ததில் சுள்ளென்ற வலி தீண்டிய பின்னந்தலையை ஒரு கையாலும், மறுகையால் காலையும் பிடித்தபடி சுருண்டிருந்த சாண்டி கடுப்பாகி விதுரனை ஓங்கி மிதிக்க, விதுரனின் காலடியில் கிடந்த வருணும் தன் பங்கிற்கு மிதிக்க, "அய்யோ பேய்.. பேய்.. பேய் என்னைய மிதிக்குது.." என்று கத்தினான் பதற்றத்துடன்..
"டேய் நாங்க உனக்கு பேயாடா..?" என்று சாண்டி மீண்டுமொரு உதை விட, "ஊஃப் நீதானா..?" என்று பெருமூச்சு விட்டு, "அடேய் சொல்லிட்டு மிதிங்கடா.. பக்குனு இருக்குல.." என்றான் பாவமாக..
"ப்ச் எந்திரிச்சு தொலைடா.. நேரங்கெட்ட நேரத்துல தான் உனக்கு ரொமான்ஸ் வரும்.." என்று வருண் சிடுசிடுக்க, சாண்டியின் நினைவலைகள் அதிதியையே சுற்றி வந்தது.. "அதிதி எங்கடி போன.? வந்துருடி.. நீ இல்லாம நானில்லனு புரிஞ்சுக்கிட்டேன்.." என்று மனதினுள் கதறினான்..
கும்மிருட்டுடன் காணப்பட்ட சுரங்கத்தை கண்டு மிரண்ட விதுரன் "ஹே இது எந்த இடம்..?" என்று குரலே எழாமல் கேட்டிட, தன்னவளுக்கு என்ன ஆனதோ என்ற பதற்றத்தில் இருந்த சாண்டி "எங்ககிட்ட கேட்டா எப்படி தெரியும்.. நாங்களும் உன்கூட தானே இருக்கோம் எருமை.." என்றான் விழிகள் சிவக்க..
"மச்சான் டேய்.. போலீஸ் மச்சான் ரொம்ப நல்ல மூடுல இருக்காரு போல.. வாயை குடுத்து வாங்கி கட்டிக்காத.." என்று மெதுவாக விதுரனின் காதை கடித்தான் வருண்..
அவ்விடத்தை மிரட்சியுடன் கண்களால் அளவெடுத்திருந்த மாதங்கி, "விது விது.." என்று விதுரன் என்று நினைத்து வருணின் கையை சுரண்ட, "ஹலோ கேர்ள் இப்ப எதுக்கு நாய் பிரண்டற மாதிரி என் கையை பிரண்டறீங்க..? என்று கேட்டான் தீவிரமான முகத்துடன்..
வருணின் கிண்டலை மூளையில் ஏற்றி கொள்ளும் நிலையில் எல்லாம் மாதங்கி இல்லை.. "நம்ம கூட வந்த அருந்ததியை காணோம் பாருங்க.." என்று கலக்கமாக கூறிட, அப்போது தான் மற்ற மூவரும் அருந்ததியை தேடினர்..
அவளை காணாமல் வெகுவாக குழம்பியவர்கள், "ஒருவேளை அது பேயோ..?" என்று யோசிக்கும் நிலைக்கு வந்திருந்த விதுரன் வாய்விட்டும் கேட்டு விட்டான்..
"என்னது பேயா..?" என்று அதிர்ந்த மாதங்கி பயத்தில் உறைய, அவனை உக்கிரமாக பார்த்த வருண் "உன் வாய்ல நல்ல வார்த்தையே வராதாடா.. அவ ஒண்ணும் பேய் இல்லை.. நீயே ஏதாவது கற்பனை பண்ணிக்காத.." என்றான் காட்டத்துடன்..
"அந்த கிழவி தான் வேணும்னே நம்மளைய இதுல சிக்க வைச்சுருக்கோனு எனக்கு சந்தேகமா இருக்கு.. நம்மளைய மாட்டி விட்டுட்டு அது மட்டும் எஸ்கேப்பாகிருச்சு பாரு.. என் கைல மட்டும் சிக்குச்சு அவ்வளவுதான்.. என் அதிதி எங்க இருக்களோ.." என்று முதலில் காய்ந்த சாண்டி பின்பு வேதனையுடன் மொழிந்தான்..
"எது நடந்தாலும் அருந்ததியையே குறை சொல்லாதீங்கடா.. அவளுக்கே எதுவும் தெரியாம இருக்கலாம்ல.. இவ அதிதியை கடத்தி என்ன பண்ண போறா..?" என்ற வருண் சாண்டியை முறைக்க, அவனும் பார்வை எறிகணையை வருண் மேல் எறிந்தான்..
லேசாக எழுந்த பயத்தில் "அது எக்கேடோ கெட்டு போகட்டும்.. முதல்ல இங்கிருந்து போற வழியை தேடுவோம்டா.. பக்கு பக்குனு இருக்கு.." என்ற விதுரன் எச்சிலை விழுங்க, சண்டை கோழிகளாக முறைத்திருந்த சாண்டிக்கும் வருணுக்கும் இதுவே சரியெனப்பட்டது..
அந்த சுரங்கத்தினுள் எந்த பக்கம் போனாலும் மறுபடியும் மறுபடியும் நின்றிருந்த இடத்திற்கே நால்வரும் வந்து சேர, குழப்பத்தில் அவ்விடத்தில் பார்வையை நிலைத்தபடி சாண்டியோ "நம்மதான் இன்னும் இங்கயே நிற்கறோமா..?" என்று கேட்டான்..
"எனக்கும் அதே சந்தேகமா தான் இருக்கு.." - வருண்
"நீங்க ரெண்டு பேரும் இங்கயே நில்லுங்க.. நானும் விதுரனும் மறுபடியும் போய் பார்க்கறோம்.." - சாண்டி
"அய்யோ.. மாட்டேன்பா.. நீங்க போனதும் அந்த அருந்ததி பேய் வந்துருச்சுனா..?" - மாதங்கி
"அவ பேய் இல்லனு எத்தனை தடவை தான் சொல்றது.." - வருண்
"டேய் நீயே யோசிச்சு பாரு.. அவ ஏதாவது வேணாம்னு சொன்னா தான் நம்ம அதைய செய்வோம்னு இங்க போக வேணாம்னு சொன்னா.. அவ சொன்னதை கேட்காம இதுக்குள்ள நம்ம விழுந்தோம்.. இப்ப அவளையே காணோம்.." - விதுரன்
"அய்யோ உங்களுக்கு எப்படி புரிய வெக்கறதுனு தெரில.. அவ பேயும் இல்ல.. பிசாசும் இல்ல.. நம்மளைய மாதிரி உயிருள்ள மனுசி தான்.. அதிதியை கடத்துன மாதிரி இவளையும் கடத்திருக்கணும்.." - வருண்
"என்னைய பேச வெக்காத வருண்.. தயவு செஞ்சு வாயை மூடிரு.. அந்த கிழவி அப்படியே தொலையட்டும்.. டேய் நீ முதல்ல வாடா.." என்று விதுரனை இழுத்து கொண்டு சென்ற திசையிலே மீண்டும் சென்றான் சாண்டி..
அவர்கள் சென்றதும் பயத்தில் விழிகளை நாலாபுறமும் உருட்டியபடி இருவரும் அமைதியின் தாக்கத்திலே நின்றிருக்க, சென்ற சாண்டியும் விதுரனும் மீண்டும் அவர்கள் நின்ற இடத்திற்கே வந்து சேர்ந்தனர்..
"நீங்க ஏன்டா போய்ட்டு திரும்பி இங்கயே வர்றீங்க.." என்று பொறுமை இழந்த மாதங்கி கத்த, இதில் அவளை விட கடுப்பான சாண்டி "அப்படியே ஒன்னு விட்டனா அவ்வளவுதான்.. எங்களுக்கு என்ன ஆசையா.. இங்கயே வரணும்னு.. எங்க போனாலும் மறுபடியும் மறுபடியும் இங்கதான் வரணும் போல.." என்றான் சீற்றலுடன்..
சாண்டியின் கோவத்தில் மாதங்கிக்கு கண்ணீர் உகுக்க, "அதிதிக்கு என்ன ஆச்சோனு பயமா இருக்கு சாண்டி.." என்று தோழியின் நினைவில் தேம்ப, இறுகி இருந்தவனின் மனதும் பாறையாக மாறி கனகனத்தது..
திடீரென்று ஏதேதோ விழும் சத்தம் கேட்டதில் அச்சத்தில் துடித்த நால்வரின் மனதும் இன்னும் இரட்டிப்பாக துடிக்க ஆரம்பிக்க, மிரட்சியுடன் சத்தம் வரும் திசையில் இவர்கள் விழிகளை பதித்ததும் அந்த சத்தமும் நின்று போனது..
"அஅங்க யா..யாரு இரு..க்கா..ங்க.." என்று கேட்ட மாதங்கிக்கு வார்த்தைகள் கோர்வையாக நில்லாமல் தடுமாற, "இரு நான் போய் கேட்டுட்டு வர்றேன்.." என்று பல்லை கடித்தான் சாண்டி..
"அவளே பயத்துல இருக்கா.. நீ ஏன்டா கத்தி இன்னும் பயப்படுத்தி விடற.." என்று விதுரன் தலையில் அடித்து கொள்ள, சாண்டி வாயை திறவும் முன்பே மீண்டும் சடசடவென ஏதோ விழும் சத்தமும் அதனுடன் சேர்ந்து விநோதமான கூச்சலும் செவியை துளைக்க.. செல்களெல்லாம் உறைந்து இதயமே வெடிப்பது போலானது நால்வருக்கும்..
இடைவிடாது வந்த சத்தத்தில் அசைவற்று நின்றிருந்த மாதங்கி ஒரு கட்டத்தில் மயங்கி விழ, "மாது மாது.." என்று அவளின் கன்னத்தில் தட்டி எழுப்ப முயன்ற விதுரனும் வருணும் கூட எந்தவித அசைவும் இல்லாமல் அப்படியே மயங்கிட, நகர கால்கள் ஒத்துழைக்காத காரணத்தினால் நின்ற இடத்திலே நின்றிருந்த சாண்டிக்கு தான் ரத்தநாளங்கள் எல்லாம் கொதிநிலையின் உச்சத்தை தொட்டிருந்தது..
*****
திரையில் அவர்களை கண்டபடி வெற்றி களிப்புடன் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த நேத்ரன், "ஹஹஹஹ என்ன ஒரு கண்கொள்ளா காட்சி இது.. மாத்தி மாத்தி அடிச்சுக்கிட்டு.. சண்டை போட்டுட்டு.. ச்சே ச்சே சான்ஸே இல்ல.. இப்பதான்டா இந்த நேத்ரனோட ஆட்டமே ஆரம்பமாகிருக்கு.. இதுக்கே பயந்தா எப்படி.. இன்னும் இன்னும் பல பல நிகழ்வுகள் இருக்கே.." என்று வெடிசிரிப்பு சிரித்தான்..
அப்போது அவனின் அலைப்பேசி கவனத்தை கலைக்க, சார் என்று வந்ததை பார்த்து "நம்ம சார் தான்டா.." என்று தன்னருகில் இருந்தவர்களிடம் மொழிந்தவன் போனை காதில் வைக்க, "என்னடா எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு.." என்று மறுமுனையில் இருந்தவர் கேட்டார்..
"சார் அதெல்லாம் சூப்பரா போய்ட்டு இருக்கு.. நீங்கதான் பார்க்க மிஸ் பண்ணிட்டீங்க.." என்ற நேத்ரன் இச் கொட்ட, "நம்ம பிளான் எதுவும் சொதப்பிடாம எந்நேரமும் அவங்களைய வாட்ச் பண்ணிட்டே இருங்க.. அப்பறம் ரொம்ப முக்கியமான விசயம் அருந்ததி பத்தி அவங்க யாருக்கும் தெரிய கூடாது.." என்று அழுத்தமாக உரைத்தார்..
சின்ன சிரிப்புடன் நேத்ரனோ "அந்த கிழவியும் இப்ப நம்மகிட்ட தான் இருக்கு சார்.. அதைய நம்ப முடியாதுனு அதையும் தூக்கிட்டோம்.." என்றிட, "குட் குட் மை டியர் பாய்.. இருந்தாலும் கேர்புல்லா இருங்க.." என்று விட்டு போனை கட் செய்தார் விஸ்வநாதர்.. அதிதியின் தந்தை..
"என்கிட்டயே உங்க வில்லத்தனத்தை காட்டறீங்களா.. பார்ப்போம்டா அங்கிருந்து நீங்க உயிரோடு வர்றீங்களானு.." என்று கர்வப் புன்னகையை இதழில் சூட்டி கொண்டார் அதிதியின் தந்தை..
******
நேத்ரன் பற்றி தான் நினைத்து வந்தது தோல்வியில் முடிந்ததை நிரல்யனால் ஏற்று கொள்ள இயலாமல் எழுந்த சினத்தில் காரை ஓங்கி குத்திட, இதில் கார்கண்ணாடி சில்லு சில்லாக நொறுங்கி அவனின் கையையும் பதம் பார்க்க, அப்போதும் ஆத்திரம் அடங்காமல் "ஷிட்.." என்று கத்தினான்..
இதை தூரத்தில் இருந்து பார்த்திருந்த விஸ்வநாதருக்கு குரூர சிரிப்பு மின்ன, "நீ என்ன பண்ணுனாலும் உன்னால ஒன்னையும் புடுங்க முடியாதுடா.. உன் தங்கச்சியே உன் முன்னாடி வந்தாலும் அவளை உன்னால கண்டுபிடிக்க முடியாது.. ச்சோ பாவம் தான் நீ.." என்று கேலிச்சிரிப்பை உதித்திருந்தவர் அறியவில்லை பெற்ற மகளே அவரை தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை..!!
ஏமாற்றம் கலந்த முகத்துடன் வீட்டிற்கு வந்த நிரல்யனுக்கு பெற்றோரை காண வேண்டும் என்ற எண்ணம் எழ, மெதுவாக அவர்கள் இருந்த அறைக்கதவை திறந்து அப்படியே நின்றான்.. இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்டு அவர்களை தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தவனின் கண்ணில் சிக்கியது புகைப்படம் ஒன்று..
கைகள் நடுங்க அதை எடுத்தவன் "அரு.." என்று முணுமுணுத்தவாறு அந்த புகைப்படத்தை வருடிய நிரல்யனுக்கு தொண்டை அடைக்க, "உண்மையாவே எங்களைய விட்டு போய்ட்டியாடா..?" என்று நினைத்தபோதே இதயத்தில் ஈட்டி ஒன்று பாய்ந்த உணர்வு..
புகைப்படத்தில் இருப்பது நிரல்யனின் உடன்பிறந்த தங்கை தான்.. அவர்கள் வீட்டின் செல்ல இளவரசி.. பெற்றவர்களுக்கு மட்டுமின்றி அண்ணனுக்கும் மகளாக இருந்தவள்.. அவள் ஒரு நாள் வீட்டில் இல்லையென்றாலும் அந்த வீடே களையிழந்து காணப்படும்..
புள்ளி மானாய் கல்லூரிக்கு கிளம்பியவள் மாலையில் சடலமாக தான் வீட்டிற்கு வந்தாள்.. மகள் இல்லை என்பதை நம்ப முடியாமல் பெற்றவர்கள் மட்டுமின்றி நிரல்யனும் மொத்தமாக உடைந்ததில் தங்கையின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய மறந்திருந்தான்..
அமிர்தவர்ஷினி காட்டிய அன்பிலும் அக்கறையிலும் தான் மெல்ல மெல்ல தேறி.. அருந்ததியின் இறப்பை ஏற்று கொண்டு வாழ பழகி இருந்தனர்.. ஆனால் அவ்வப்போது அவளின் நினைவில் கண்ணீர் வடிப்பவர்களை மருமகளாகவும், மகளாகவும் இருந்து வர்ஷினி தான் தேற்ற வேண்டியதாக இருக்கும்..
புகைப்படத்தையே உள்ளம் நொறுங்க வெறித்திருந்தவனின் தோளில் ஒரு கை பதிய.. அந்த கரத்திற்கு சொந்தக்காரி தன் காதல் மனைவி தான் என்பதை திரும்பாமலே உணர்ந்த நிரல்யன் அப்படியே நின்றிருந்தான்..
நிரல்யன் சென்ற சிறிது நேரத்திலே வர்ஷினிக்கும் முழிப்பு வந்ததில் கணவனை காணாமல் வீடு முழுவதும் தேடியவள் பின்பு சோர்ந்து போய் அறைக்குள் முடங்கியவள், சத்தம் கேட்டு தான் மீண்டும் வெளியில் வந்தாள்..
கணவனின் முகத்தை தன் கரங்கள் கொண்டு தாங்கிய வர்ஷினி "நிரல்.. அரு எங்கையும் போகலடா.. நம்ம கூட தான் எப்பவும் இருப்பாங்க.. அவளுக்கு உங்களைய விட்டுட்டு போக முடியுமா என்ன..? ம்ம்ம்ம் நீயே சொல்லு.." என்றாள் கேள்வியுடன்..
"அதான் போய்ட்டாளே பொண்ணு.. பட்டாம்பூச்சியா பறந்து திரிஞ்சவ ஒரே நாளுல சாம்பலா மாறிட்டா.. அவ இல்லங்கறதை இன்னும் என்னாலயே ஏத்துக்க முடில.." என்றபடி இறுக்கமாக துணைவியை அணைத்து கொண்டான்..
மற்ற விஷயங்களை இலகுவாக கையாள்பவன் தங்கையின் விசயத்தில் மட்டும் யோசிக்க மறந்து விடுகிறான்.. காரணம் தன்னை சேர்ந்தவருக்கு ஒன்றென்றால் மட்டும் மூளை மழுங்கி விடுகிறதோ என்னவோ..
"நிரல் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு சொல்லட்டுமா..?" என்று கணவனின் பின்கேசத்தை கோதியபடி பெண்ணவள் கேட்க, தங்கையின் நினைவில் உழன்றிருந்த நிரல்யனும் "ம்ம்ம்ம்.." என்றான்..
"எனக்கு என்னவோ அரு உயிரோடு தான் இருப்பாள்னு தோணுது.." என்று தான் நினைத்ததை கூறியும் விட்டாள்.. விலுக்கென்று அவளிடமிருந்து விலகிய நிரல், "என்ன சொல்ற..?" என்று அதிர்வலை தாங்கிய முகத்துடன் வினவினான்..
"எஸ் எனக்கு இந்த சந்தேகம் ஆரம்பத்துல இருந்தே இருக்கு நிரல்.. நீங்க ஏன் அரு எப்படி இறந்தாங்கனு யோசிக்கல.. அப்படி யோசிச்சு பார்த்திருந்தா பல கேள்விகளுக்கு பதில் கிடைச்சு.. அரு உயிரோடு இருக்காளா..? இல்லையானு தெரிஞ்சுருக்கும்.." என்று முடித்தாள்..
குழப்ப ரேகைகள் மனதை சூழ்ந்து நர்த்தனமாட, ஒரு வேளை இதுவும் உண்மையா இருக்குமோ..? என்று பலவிதமான சிந்தனைகள் எழுந்து அவனை மீட்டெடுக்க, தங்கைக்கு அண்ணனாக யோசித்தபோது தோன்றாத வினாக்கள் அதே காவல் அதிகாரியாக யோசிக்கும் சமயத்தில் நிறையவே தோன்றின..
"எப்படி பொண்ணு..?" என்று புருவங்கள் மேலேற கேட்ட கணவனுக்கு சின்ன சிரிப்பை பதிலாக குடுத்த வர்ஷினி "நான் போலீஸ்காரன் பொண்டாட்டியாக்கும்.." என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கண்சிமிட்டியவாறு மொழிந்த மனையாளை மீண்டும் தழுவி கொண்டது ஆடவனின் கரங்கள்..
கையில் இருந்த புகைப்படத்தில் மீண்டும் நிரல்யனின் விழிகள் பதிய, அதில் புன்னகையுடன் இருந்தது சாண்டி அன் கோ - விடம் கிழவியாக அறிமுகமான நிரல்யனின் செல்ல தங்கை அருந்ததியே..
புரியாத பல மர்மங்கள்
அவிழ்க்க படுமா..? இல்லை
அதனுடன் சேர்ந்து இவர்களும்
மர்மமாவார்களா?
Last edited: