ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தந்த்ரா கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer




சாண்டி, "சரி உன் குடும்பத்தை காப்பாத்த தான் அவங்க சொன்ன போல நடிச்ச அப்படி தானே!" என்று சந்தேகமாக கேட்க, அவளும் அவன் கண்களை எதிர்க்கொண்டு ஆம் என்று தலையாட்டினாள்.



"சரி. அன்னைக்கு வருணுக்கு என்ன ஆச்சு?" என்று மீண்டும் சந்தேகமாக கேட்க, 'அய்யோ! முதல்ல இருந்தா?' என்ற ரேஞ்சில் சோர்வாக அவனை பார்த்தவள் "நிஜமா எனக்கு தெரியாது. நீங்க எத்தனை முறை, எந்த ஆங்கில்ல கேட்டாலும். தெரியாதத தெரியாதுன்னு தான் சொல்ல முடியும்" என்று மெய் வருத்தத்துடன் சொல்லி, விட்டால் அழுது விடுவேன் போல் இருந்தவளை "போதும் விடு டா. இங்க இருந்து எப்படி தப்பிக்கலாம்னு முதல்ல யோசிக்கலாம். அதை விட்டுட்டு அவளையே கேள்விக் கேட்டு சாகடிக்காத, அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். நாம ஏதாவது வழி இருக்கா தேடலாம்" என்று சொல்லி நண்பனிடம் இருந்து தன் காதலியை காப்பாற்றி ஓய்வெடுக்க அனுப்பி வைத்தான் வருண்.



"ஏய்... உன்ன கடத்துனவங்க பார்க்க எப்படி இருந்தாங்க, குறிப்பா உனக்கு இன்ஸ்டிரக்சன் கொடுக்கிறவன் எப்படி இருந்தான் மட்டும் சொல்லிட்டு போ" என்று சென்றவளை நிறுத்தி கேட்க, அவளும் "முக மூடி போட்டுருந்ததால் முகத்தை பார்க்க முடியல, ஆனா எல்லாரும் நல்ல வாட்டா சாட்டமா தெலுங்கு படத்துல வர வில்லன் குரூப் போல இருந்தாங்க. எனக்கு இன்ஸ்ரக்சன் கொடுத்தவன், ஸ்பெஷல் ட்ரைனிங் எடுத்த வில்லன் போல இருந்தான். அப்படியே பெரிய பாறங் கல்லை முழுங்கினா போல இருந்தான்" என்று அவள் சொல்ல, சாண்டிக்கோ எதுவும் உருப்படியா தோன்றவில்லை.



அவளிடம் இருந்து தெரிந்துக் கொண்ட ஒரே ஒரு விசயம் இங்கே சுத்தி இருக்கும் ரகசிய கேமரா மூலம் அவன் இருபத்தி நாலு மணி நேரமும் தங்களை கண்காணித்து கொண்டு தான் இருக்கிறான் என்பது மட்டும் தெளிவானது. ஆனால் ஏன்? எதற்கு? அப்படி இங்கு என்ன இருக்கிறது? என்று தான் அவனுக்கு எதுவும் புரியவில்லை.



தலை கீழாக டிராவல் பண்ணி வந்ததில் தலை இன்னும் கேராக இருக்க, மாதங்கியைப் பிடித்துக் கொண்டு அறைக்கு சென்றுக் கொண்டிருந்த அதிதி, இடது புற சுவரில் மாட்டப் பட்டிருந்த ஆளுயர கண்ணாடியை பார்த்த படி அப்படியே நின்று விட்டாள். அவள் சட்டென்று நின்று விடவும் மாதங்கிக்கு தான் பயம் சூழ்ந்து கொண்டது. "என்னாச்சு அதிதி?" என்று பயத்தில் எழாத குரலில் கேட்க, அவளோ அந்த கண்ணாடியை பார்த்த படி அதன் அருகில் செல்ல, மற்றவர்களும் அவள் ஏதோ கண்டு பிடித்து விட்டாளோ? என்ற ஆவலில் அருகில் வந்தவனர்.



கண்ணாடியில் தன் கையை வைத்து பார்த்தவள் அதில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்தபடி "அய்யோ!" என்று அதிர்ந்து தன் முகத்தை தடவி பார்த்தாள். அவள் கத்தலில் இங்கே மாதங்கிக்கு தான் உயிர் இல்லை.



"என்னாச்சு அதிதி?" என்று மீண்டும் நடுங்கிய குரலில் அவள் அருகே சென்று கேட்க, அவளோ "சுத்தி கேமரா வச்சு ஷூட் பண்றாங்க. கொஞ்சம் கூட மேக்கப் இல்லாம என் முகம் எப்படி இருக்கு பாரு? தலை முடி வேற சரியில்ல. காட்டுவாசி போல இருக்கேன்" என்று அவள் சினுங்களாக சொல்ல, அதை கேட்ட விதுரனோ தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்து கொண்டான் என்றாள், வருணோ "அவன் அவன் இங்க என்ன பிரச்சனையில மாட்டி முழி பிதுங்கி போய் நிற்கிறான். அவளுக்கு முடி தான் பிரச்சனையா போச்சு. நைகால சொல்லி ஆர்டர் பண்ணி கொடுக்கிறேன். அந்த ஓரமா போய் வெள்ளை அடிச்சுட்டு வா" என்று நக்கலடித்த படி நகர்ந்து கொள்ள, மாதங்கியும் அருந்ததியும் கூட, தலையசைத்து சிரித்தபடி சென்று விட்டனர்.



எஞ்சி நின்றது சாண்டியும் அதிதியும் மட்டுமே. தன்னையே குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்த சாண்டியை பார்த்து அசட்டு சிரிப்பு ஒன்றை அவள் சிரித்து வைக்க, அவள் அருகே வந்தவன் குருவி கூடு போல இருந்த அவள் தலை முடியை சரி செய்த படி, "நீ எப்படி இருந்தாலும் அழகா தான் தெரிவ, கேமராவிலையும் நேர்லையும்" என்று சொல்ல, அவன் தன்மையான குரலே அவளுள் மகிழ்ச்சியை உருவாக்கியது.



"சாண்டி, நீ என்கிட்ட பேசுற, அதுவும் சாஃப்ட் ஆஹ். என்மேல இருந்த கோபம் போய்டுச்சா?" என்று பூரிப்பாக கேட்க, அவள் பிரிவே அவன் காதலின் ஆழத்தை அவனுக்கு உணத்தியதே, அதற்கு மேல் சண்டையை இழுத்து பிடிக்க மனம் வருமா என்ன?

"நீ இல்லைனா நான் என்ன ஆவேனு நேத்து ஒரே நாள்ல புரிஞ்சுக்கிட்டேன். நீ இல்லைனா நான் இல்ல. மறுபடியும் உன்ன இழக்க விரும்பல" என்று ஆத்மார்த்தமாக சொன்னபடி அவன் அவளை தன் உயிரில் வைத்து காக்கும் உணர்வில் அணைத்துக் கொள்ள, அவன் அணைப்பின் இறுக்கமே அவன் காதலை அவளுக்கு உணர்த்த, அவளும் மனம் முழுதும் காதலுடன் அவனை அணைத்துக் கொண்டாள்.




நேத்ரனோ கோபத்தின் உச்சியில் பற்களை கடித்தபடி தன் முன் இருந்த பெரிய டிவியில் அவர்களை பார்த்துக் கொண்டிருக்க, அவன் முன் கன்னத்தை பொத்திய படி நின்றிருந்த மார்க்கோ, 'அவங்க ரெண்டு பேரும் டாய்லெட் டியுப் வழியா தப்பிச்சு போவாங்கனு நான் என்ன கனவா கண்டேன். எல்லா இடமும் கேமரா வச்ச நீ அங்கேயும் வச்சு இருக்கணும்' என்று மனதில் புலம்பிய படி வாங்கிய அடியில் வாய்க்குள் ஆடிக் கொண்டிருந்த பல்லுடன் மல்லுக் காட்டிக் கொண்டிருந்தான்.



அப்போது பணியாள் ஒருவன் நேத்ரன் காதில் கிசு கிசுக்க, அவனும் அதை எதிர் பார்த்தவன் போல் சலிப்பாக தாடியை நீவிய படி தன் வேக எட்டுகளுடன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.



அங்கிருந்து வந்தவன் தன் அலுவலக அறையில் தன் இருக்கையில் அமர்ந்து எதிரில் இருந்தவனை தீர்க்கமான பார்வை பார்க்க, அவனுக்கு சற்றும் குறையாத அதே பார்வை தான் பார்த்துக் கொண்டிருந்தான் நிரல்யன்.



"ஹ்ம்ம்... சொல்லுங்க மிஸ்டர் நிரல்யன், என்ன விசயம்?" என்று நேத்ரன் சாதாரணமாக கேட்டாலும், அவன் கண்களோ திமிராக தான் அவனை பார்த்துக் கொண்டிருந்தது.



"நான் நேரடியாகவே விஷயத்துக்கு வர்றேன் மிஸ்டர் நேத்ரன். கடந்த சில மாதங்களாகவே நம்ம ஊர்ல நிறைய இளைஞர்கள் காணாமல் போய்ட்டு இருக்காங்க, அந்த கேஸ் இப்போ என் கைக்கு தான் வந்திருக்கு" என்று நிரல்யன் சொல்ல, "நானும் அந்த நியூஸ் எல்லாம் கேள்வி பட்டேன். அதை எதுக்கு இப்போ என்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கீங்க? நான் என்ன பண்ண முடியும்?" என்று கேட்டவன், "இந்த கேஸ் நடத்த ஏதாவது ஃபினான்சியல ஹெல்ப் ஏதும் கேட்டு வந்துருக்கீங்களா?" என்று ஏகத்துக்கும் நக்கலாக கேட்க,




அவன் நக்கலில் உள்ளுக்குள் கோபம் மூண்டாலும், பொறுமையை கையாண்டு மெலிதாக புன்னகைத்த நிரல்யன், "அரசாங்கம் இன்னும் அந்த நிலமைக்கு போகல, பண உதவியெல்லாம் வேணாம். காணாம போனவங்கள்ல 50% பேர் இந்த கம்பனில வேலை செய்தவங்க" என்று சொல்லி அவனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான்.
அதற்கெல்லாம் அசராத நேத்ரனோ, "இந்த விசாரணைக்கு எல்லாம் முன்னாடியே பதில் சொல்லியாச்சு. எங்க சைட்ல இருந்து கம்பிளைண்ட் லெட்டர் கூட கொடுத்து இருக்கோம். எல்லாருமே அவங்க அவங்க சொந்த வேலையா லீவ் போட்டு போன நேரத்துல தான் காணாம போய் இருக்காங்க. கம்பெனிக்கும் அவங்க காணாம போனதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, அவங்களே சைன் பண்ணி கொடுத்த லீவ் லெட்டர் பார்க்கிறீங்களா?" என்று திமிராக பார்த்து கேட்டவன் "ஜோன்" என்று தன் உத்தரவு குரலில் அழைக்க, ஜோனும் சில கோப்புகளை நிரல்யன் முன் வைத்தான்.



அதை குனிந்து கூட பார்க்காத நிரல்யன், நேத்ரனை பார்த்த படியே அந்த கோப்புகளை தன் பின்னால் நின்ற கான்ஸ்டபிளிடம் தூக்கிக் கொடுத்து விட்டு, "கூடிய சீக்கிரம் சந்திக்கலாம்" என்று அர்த்தமுள்ள புன்னகை ஒன்றை புரிந்தவன் எழுந்து செல்ல, சென்றவன் முதுகை வெறித்தவன் இதழ்களோ ஆணவமாகத் தான் புன்னகைத்துக் கொண்டது.



வெளியே ஜீப் அருகே வந்த நிரல்யனிடம் "எல்லா டீட்டைல்ஸ்ஷும் பக்காவா இருக்கு சார். நாம தேவை இல்லாம இவரை சந்தேகபட்டு டைம் வேஸ்ட் பண்றோமா?" என்று கேட்க, இல்லை என்று தலையாட்டி சிரித்துக் கொண்ட நிரல்யன், "இப்போ தான் ரொம்ப சரியான ரூட்ல போய்ட்டு இருக்கோம். ஒருத்தன் பக்காவா எல்லாம் கையில வச்சிருக்கான் என்றா ஏதோ ரொம்ப பெரிய தப்பு பண்றானு அர்த்தம்" என்று சொல்லிய படி ஜீப்பில் ஏறியவன் அடுத்து சென்றது காணாமல் போனவர்கள் பலரின் அலைபேசி அழைப்பு துண்டிக்க பட்ட, அந்த காட்டு பகுதிக்கு தான்.



இது நாள் வரை அவன் மூளையை குழப்பிக் கொண்டிருந்த வழக்கு அது. பல ஊரில் இளைஞர்கள் காணாமல் போய்க் கொண்டிருந்தனர். சாதாரண மிஸ்ஸிங் கேஸ் என்று நிரல் எண்ணி கொண்டிருக்க, அதில் பலர் ஒரே அலுவலகத்தில் பல்வேறு கிளையில் வேலை பார்ப்பவர்கள் என்ற தகவலே நேத்ரன் மீது சந்தேகத்தை வலுபடுத்தியது.



இத்தனை நாட்கள் இறந்துவிட்டாள் என்று எண்ணிய தங்கை கூட ஏன் கடத்தப் பட்டிருக்க கூடாது? என்ற சந்தேகம் வலுப்பெற்றது என்னவோ வர்ஷினி சொல்லித்தான். தங்கை தீ விபத்தில் உடல் கருகி இறந்து விட்டாள் என்று முழுவதும் பொதிந்து வைக்கப்பட்டிருந்த சடலத்தை தானே கொண்டு வந்தார்கள்.

இப்போது அவனுக்கும் கூட நம்பிக்கை வந்து விட்டது தன் தங்கை உயிருடன் தான் இருக்கிறாள் என்று.
அதிதி, அருந்ததி தப்பி வந்த விசயம் சொன்னதில் இருந்து கழிவறை கூட விட்டு வைக்காமல் சோதனை செய்ய, வெளியே செல்லும் வழி கிடைக்கவில்லை என்றாலும் பல ரகசிய கேமராக்களை கைபற்றி இருந்தனர் சாண்டி அண்ட் கோ'ஸ்.



மாதங்கி, அதிதி பார்த்த கண்ணாடியை சுற்றி சுற்றி ஆராய்ந்து அதில் தன் கையை வைக்க, அதுவோ அவளை மொத்தமாக உள்ளே இழுத்துக் கொண்டது. மற்றவர்கள் ஒவ்வொரு திசையில் தீவிரமாக தேடிக் கொண்டிருந்ததால் அவள் இழுக்கப்பட்டத்தை யாரும் கவனிக்கவில்லை.



கண்ணாடி வழியே உள்ளே இழுக்கபபட்டவள், அந்த கண்ணாடிக்கு மற்றைய புறம் இருந்த இருட்டான அறையில் தான் இப்போது நின்றுக் கொண்டிருந்தாள்.


எப்போதும் பயந்து நடுங்கும் அவள் அதரங்களோ அழுத்தமாக மூடி இருக்க, அறையை சுற்றி கண்களை சுழல விட்டவள் தன் கை சங்கிலியில் இருந்த உருண்டைகளில் ஒன்றை அழுத்த, அவள் முன் கணினி திரையில் தோன்றினான் நேத்ரன்.



அவனை பார்த்ததும், "இந்த கேம்ல அதிதி இல்லனு சொன்னீங்க. இப்போ மறுபடியும் வந்திருக்கா?" என்று கேட்க, அவனோ "ஒரு சின்ன டெக்னிக்கல் ஃபால்ட். ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு. அவளுக்கு வாழ ஆசை இல்ல போல" என்று சொல்லி கோணல் சிரிப்பு சிரிக்க, "உங்களால எப்படி சிரிக்க முடியுது? அவங்க கேமராஸ் கண்டு பிடிச்சு ரிமூவ் பண்ணிட்டு இருக்காங்க" என்று தங்கள் திட்டங்கள் சரிவு பாதையில் செல்வதை அவள் பரிதவிப்பாக சொல்ல, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவன்,



"இப்போ தான் கேம் இன்னும் இன்டர்ஸ்ட் ஆஹ் போகுது. பார்க்கலாம், எவ்வளவு தூரம் போறாங்கனு" என்று அவனுக்கே சவாலான பதில் ஒன்றை சொல்லிக் கொண்டவன், "உனக்கு எல்லாம் ஓகே தானே?" என்று கேட்க, "ஹ்ம்ம்.. யாருக்கும் என் மேல எந்த சந்தேகமும் வரல, எல்லாம் அந்த புள்ள பூச்சிய போட்டு நூடுல்ஸ் ஆக்கிட்டு இருக்காங்க. எல்லாம் ஓகே தான். அந்த விதுரன் மட்டும் தான் அப்பப்போ வந்து வழியுறான். எப்படி இருக்கா என் டுவின்?" என்று சலிப்பாக அவள் கேட்க, "ரொம்ப சேஃப் ஆஹ் இருக்கா" என்று சொல்லி, அவன் இருந்த திரையில் வீடியோ ஒன்றை ஓட விட, அதிலோ கை, கால்கள் மட்டுமின்றி வாயும் கட்டப்பட்ட நிலையில், கத்தி கத்தியே சோர்ந்து உடலில் தெம்பே இனி இல்லை என்ற நிலையில் தான் இருந்தாள் மாதங்கி. அவளை அந்த நிலையில் பார்த்த அவள் இரட்டை சகோதரியான சிவாங்கி இதழ்களோ வஞ்சகமாக புன்னகைத்துக் கொள்ள அவன் இணைப்பை துண்டித்தவள், மூளையே இந்த கூட்டத்தில் சேர்ந்ததை ஒரு முறை ஓட்டி பார்த்தது.



பள்ளி காலத்தில் குற்றவியல் வழக்கு ஒன்றில் சிறை சென்றவள், இப்போது தான் நான்கு மாதங்கள் முன் தப்பி வந்தாள். அவள் நல்ல நேரமோ? கெட்ட நேரமோ? நேத்ரனிடம் அவனின் இல்லீகல் ஆய்வு ஒன்றில் பணிக்கு சேர்ந்தாள். அவளுக்கும் உலகத்திடம் இருந்து தலை மறைவாக இருக்க வேண்டுமே!
அவன் தன் ஆராய்ச்சிக்காக ஆள் தெரிவு செய்த கொண்டிருந்த போது அவன் கண்ணில் சிக்கிய மாதங்கியை பார்த்து அதிர்ந்து தான் போனான். இருவரும் இரட்டையர்கள் என்று அறிந்துக் கொண்டவன், சிவாங்கியை வைத்து அவன் விளையாட்டை தொடங்கி மொத்த கூட்டத்தையும் உள்ளே இழுத்திருந்தான்.



மாதங்கி போல் நடித்து அனைவரையும் அவள் ஏமாற்ற உருவ ஒற்றுமை அவளுக்கு பெரும் உதவியாக இருந்தது. இந்த வீட்டிற்கு வந்த முதல் நாள் இரவு தான் மாதங்கி இடத்தில் அவள் அடையாளத்தில் வாழ ஆள் மாறாட்டம் செய்யப்பட்டாள்.



அதன் பிறகு நடக்கும் ஸ்கிரீன் பிளே அனைத்தும் முன்னமே தெரிந்தாலும் பயம், அதிர்ச்சி என்று நடித்து நடித்தே சோர்ந்து போய் விட்டாள் சிவாங்கி. உருவ ஒற்றுமை இருந்தாலும், குணாதிசயங்கள் வேறாக தான் இருந்தது. மாதங்கி இளகிய மனம் கொண்டவள் என்றாள், சிவாங்கியோ இதயம் அற்றவள் என்று தான் சொல்ல வேண்டும்.


'வருண் இறந்து விட்டான்' என்று பெண்கள் இருவரையும் பார்த்து கொள்ள சொல்லி விட்டு சாண்டியும் விதுரனும் கீழே அருந்ததியை விசாரிக்க வந்து விட, வருணிற்கு கொடுக்கப்பட்ட மருந்தின் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அவனிடத்தில் அசைவு ஏற்படுவதை பார்த்த சிவாங்கி அதிதியை அழைத்துக் கொண்டு கீழே வந்திருந்தாள். அப்போது தானே நேத்ரனால் அவர்கள் திட்ட படி வருணை அங்கிருந்து அப்புற படுத்த முடியும்.



அடுத்து சமையலறையில் தலையில் இரத்தம் சொட்ட சொட்ட வருண் நின்றான் என்று சொல்லியதெல்லம் அவள் நாடகம் தான்.



மகள் காதல் விவகாரத்தில் கோபமாக இருந்த விஸ்வநாதன், நேத்ரன் தெரிவு செய்த ஆளில் சாண்டியும் ஒருவன் என்று தெரிந்து கொண்ட பிறகு மொத்தமாக அவனுக்கு முடிவு கட்ட திட்டம் தீட்டியே, தன் மகளை மட்டும் காக்கும் பொருட்டு அவளை கடத்தியிருந்தாலும், இப்போது அவளை வெளியே விட்டால், காதல் மயக்கத்தில் அவனை காப்பாற்ற தங்களை காட்டிக் கொடுத்து விடுவாள் என்று அடைத்து வைத்திருக்க, அவள் கெட்ட காலம் மீண்டும் வந்து மாட்டிக் கொண்டாள்.



நேத்ரனின் அடுத்த திட்டப்படி அருந்ததியை கடத்த வழி செய்து கொடுக்கவே அந்த சுரங்க பகுதிக்கு சென்று எல்லாரையும் அங்கே வர வைத்து மற்றவர்களின் கவனம் சிதறிய நேரம் அருந்ததியை கடத்தி செல்ல வகை செய்து கொடுத்தாள்.



அதிதி, அருந்ததி கட்டி வைக்கப்பட்டிருந்த அறைக்கு பக்கத்தில் தான் மாதங்கி கட்டி வைக்க பட்டிருந்தாள். அவளும் அழுது அழுது ஓய்ந்தவள் இன்று தப்பிக்க முயன்ற போது, மீண்டும் அந்த அரக்கர்கள் கையில் சிக்கி கொண்டாள்.



எல்லாவற்றையும் யோசித்தவள், தன் கண்ணில் இருந்து ஐ- லென்ஸை எடுத்து கையில் வைத்து பார்த்துக் கொண்டிருக்க, இதை நேத்ரன் கொடுத்த போது "என் ஐ பவர் நல்லா தான் இருக்கு, எனக்கு எதுக்கு லென்ஸ?" என்று கேட்டவளிடம் "இது நீ பார்க்கிறதுக்கு இல்ல, நாங்க பார்க்கிறதுக்காக" என்று சொல்லி அவளிடம் அவன் அதை கொடுத்ததையும் யோசித்தவள், அதிலிருந்த கேமராவை ஆஃப் செய்து விட்டு திரும்ப, அங்கே சுவரில் சாய்ந்து பேண்ட் பாக்கெட்டில் கை விட்டப் படி அவளை தான் மெச்சுதல் பார்வை ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தான் சாண்டி.



அவள் நடிப்பை பாராட்டும் விதமாக சூப்பர் என இடது புருவத்தை உயர்த்தி, செய்கை செய்ய, அவனை வேண்டா வெறுப்பாக பார்த்தவள் அந்த அறையை விட்டு வெளியேற எத்தனிக்க, சிரித்த படி அவள் தோளில் கைப்போட்டவன் அவளுடன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 11 –

நேத்ரனிடம் பேசிவிட்டு வெளியே வந்த சிவாங்கியின் தோளில் சாண்டில்யன் கைபோட்டு பேச… அவனை சலிப்பாக பார்த்த சிவாங்கி, " என்ன ? " என்று கேட்டாள்.

" நல்ல நடிகைடி நீ " என்று அவளை கவிதையாக பாராட்டினான் சாண்டி.

" ஆனால் உங்க அளவுக்கு எல்லாம் இல்லை ? " என்று தன் நிலையை எண்ணி நொந்துக் கொண்டு அவள் பதில் கூறவும்...

"ப்ச்... சரி அதைவிடு நான் சொன்னது நியாபகம் இருக்குல்ல? நீ மாதங்கி இல்லை! சிவாங்கி... என்ன இருந்தாலும் நீ ஒரு அக்யூஸ்ட், விதுரன் ரொம்ப நல்லவன். அவன் விசயத்தில் கொஞ்சம் தள்ளியே இரு, உன்னால அவன் காயப்பட்டானா நான் சும்மா இருக்க மாட்டேன் "

" அதை அவர் கிட்ட சொல்லுங்க மிஸ்டர் சாண்டில்யன், உங்களுக்கே தெரியுமே நான் ஒன்னும் அவர் பின்னாடி சுத்தல, "

" உண்மை தான், ஆனால் அவன் ஒன்னும் இந்த சிவாங்கி பின்னாடி சுத்தலயே, அவன் உன்னை மாதங்கியா நெனச்சு பழகுறான். புரியுதா? அதை மனசுல வச்சு நடந்துக்கோ அது தான் உனக்கும் நல்லது... உன் இடத்தில் மாதங்கி இருந்தால் அவனுக்கு இந்த அளவுக்கு இடம் கொடுத்திருக்க மாட்டாள். நீ அவனுக்கு கொடுக்குற இடம், மாதங்கியை பற்றி அவன் மனசுல தவறான எண்ணத்தை விதைச்சிடக் கூடாது " என்று சாண்டி கண்டிப்புடன் கூறியதில் சிவாங்கியின் முகம் வாடி போனது என்னவோ உண்மை தான். ஏதோ இனம் புரியாத வலி, அவள் இதயத்தை நெருடிக் கொண்டிருந்தது. பார்த்து பழகியது இரண்டு நாள் என்றபோதும் மனம் முழுவதும் அவன் நிறைந்திருந்தான் அல்லவா? எப்படி அவளால் அவனுக்கும் தனக்கும் ஒன்றும் இல்லை என்று கூறி துடைத்து எறிந்து விட்டு போகமுடியும்...

********

மாதங்கி, சிவாங்கி இருவரும் ஒரே தாயின் வயிற்றில் ஜனித்த இரட்டை சகோதரிகள்... இளம் வயதிலேயே கணவனை இழந்த சத்யபாமா தன் இரு குழந்தைகளையும் கண்ணுக்கு கண்ணாக வளர்த்து வந்தார்.

சிவாங்கிக்கு ஒரு எட்டு வயது இருக்கும்... அப்போது அவளையும், மாதங்கியையும் திருச்செந்தூர் கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தார் சத்யபாமா.

கோவிலின் நுழைவாயில் வழியெங்கும் இருந்த கடைகளை நோட்டமிட்டபடி வந்துக் கொண்டிருந்தார்கள் மாதங்கியும், சிவாங்கியும்...

அப்போது அங்கிருந்த கடை ஒன்றில் உள்ள பொம்மையை பார்த்து அதனை தனக்கு வாங்கி தரும்படி அடம்பிடித்தாள் மாதங்கி... ஆனால் சத்யபாமாவோ அதனை வாங்கிக் கொடுக்காமல் அவளை திட்டி அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

அதற்காக அழுது வாடியிருந்த மாதங்கியின் முகத்தைக் கண்ட சிவாங்கிக்கு மனம் தாங்கவில்லை... இரட்டையர்கள் ஆனாலும், மாதங்கிக்கு அக்கா போல தான் சிவாங்கி...

மாதங்கி இன்னும் ஏங்கி ஏங்கி அழுதுக் கொண்டிருக்க, "அழாத மாது " என்று அவளை சமாதானப்படுத்த முயன்று தோற்றுப் போனாள் சிவாங்கி...

சத்யாபாமாவின் அருகில் அழுதபடியே கடலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் மாதங்கி.

மாதங்கியின் ஆசையை உணர்ந்து, தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை கையில் எடுத்து பார்த்தாள் சிவாங்கி. அவள் கையில் இருந்தது வெறும் பத்து ரூபாய் தான் ஆனால் மாதங்கியின் அழுகைக்காக அந்த பணத்தை கொண்டு எப்படியாவது அந்த பொம்மையை வாங்கி அவள் கையில் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணியவள், அந்த கூட்டத்தில் பின்விளைவுகளை யோசிக்காமல் சத்யபாமாவின் கரத்திலிருந்து தன் கரத்தை உருவிக் கொண்டவள், அந்த பொம்மை கடையை நோக்கி சென்றாள்.

கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்க சிறிது நேரத்தில் சத்யபாமா இங்கு சிவாங்கியை காணாமல் பதறி போய் அங்கும் இங்கும் தேடி அலைய ஆரம்பித்தார்.

அந்நேரம் பார்த்து கூட்ட நெரிசலில் மூச்சு திணறிய சிவாங்கி அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல்.. அங்கு ஒரு திண்டில் தலை சாய்த்து மயங்கி அமர்ந்தாள்.

சத்யபாமா எங்கு தேடியும் சிவாங்கி காணவில்லை என்றவுடன், நேராக கோவில் நிர்வாகத்தில் சென்று விஷயத்தை கூறினார். அவர்களும் ஒலி பெருக்கியில் சிவாங்கியின் பெயரை அழைத்தனர்... சிவாங்கி, மயக்கத்தில் இருந்ததால் அவர்களது சத்தம் அவள் செவியை சென்றடையாமல் போனது. அது தான் விதியோ..?

மயக்கம் தெளிந்து கண் விழித்த சிவாங்கி தன் தாயையும், தங்கையையும் தேடினாள்... எங்கு செல்வது யாரிடம் கேட்பது என்று தெரியாமல் கால் போன போக்கில் அழுதுக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள். எப்படியாவது வீட்டுக்கு சென்று விட வேண்டும் என்ற எண்ணமே சிவாங்கியின் மனதில் ஓடிக்கொண்டிருக்க, வழியில் நின்ற பேருந்து ஒன்றில் ஏறிக் கொண்டாள்.

பேருந்தில் ஏறியவளுக்கு சுத்தி நடக்கும் அனைத்தும் பயத்தை கொடுத்தது... எல்லாரும் தன்னையே கவனிப்பதை போன்று உணர்ந்தவளுக்கு மனம் பதைபதைக்க தொடங்கியது.

பேருந்தில் ஏறியவள் கண்டக்டரிடம் தங்கள் வீடு இருக்கும் இடத்தை தட்டு தடுமாறி கூற... அவருக்கோ அவள் கூறிய எதுவும் புரியாமல் போகவே, " இந்த பஸ் போகாது மா " என்று கூறி அவளை கீழே இறக்கி விட்டு சென்றனர்.

எல்லா இடத்திலும் தேடி ஓய்ந்த சத்யபாமா, அதன் பின்னர் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் எந்த பயனும் இல்லை இப்போது வரை தன் மகளை அவர் தேடிக் கொண்டு தான் இருக்கிறார். மாதங்கியும் இப்போது வரை இழந்த தன் உயிரான உறவை எதிர்பார்த்து காத்துக் கொண்டுதான் இருக்கிறாள்.

சிவாங்கியோ பசியில் ஒரு டீ கடையில் சென்று அவள் தன் பசியை போக்கிக்கொள்ள முற்பட... கையில் இருந்த அந்த பத்து ரூபாய் நோட்டும் அங்கும் இங்கும் கிழிந்து இருக்கவே... அவர்கள் அந்த நோட்டை வாங்கிக் கொள்ளவும் இல்லை... அவளது பசியை பொருட்படுத்தவும் இல்லை...

பசியில் வாடி சுருண்டவளுக்கு வாழ கற்று கொடுத்தது தான் அந்த திருட்டு தொழில்...

தன் பசியை போக்கிக் கொள்ள... சிறு சிறு திருட்டில் ஆரம்பித்து... நாளடைவில் கேங் சேர்த்து சிறிய சிறிய இல்லீகல் வேலையை பார்க்க தொடங்கினாள். ஊர் விட்டு ஊர் என்று சுற்றி திரிந்தவளுக்கு தன் தாய்வீடு மறந்ததுதான் துயரம்...

தன் வீட்டை எப்போதாவது எண்ணிப்பார்ப்பவளுக்கு இறுதியில் கிடைப்பது கண்ணீர் மட்டுமே என்று விதியாகி போக... அவர்களது நினைவை முடிந்தவரை புறம் தள்ளி வைத்தாள். தள்ளி வைத்தாளே தவிர அவர்களை ஒருபோதும் அவள் மறக்கவில்லை.

அப்படியான நிலையில் தான் அவள் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றாள்.

அதன்பிறகு சிறையிலிருந்து தப்பித்த சிவாங்கி ஒருவனிடம் தஞ்சம் அடைந்தாள். ஆனால் அவனோ அவளை ஒரு சதையாக எண்ணி தன் போதைக்கு அவளை பயன்படுத்திகொள்ள முனையவும்… அவனிடம் இருந்து தப்பித்து ஓடினாள். துரத்தி வந்தவன் ஒரு கட்டத்தில் அவளை பிடித்துவிட, தன் பலத்தை கொண்டு அவனை சாலையில் தள்ளி விட்டவள், அதீத ஆத்திரத்தில் அருகிலிருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து தன்னை தீண்டிய அவன் மார்பில் தூக்கி போட்டாள். அதில் அவன் வாயில் இருந்து ரத்தம் வழிய.. அந்த இடத்திலேயே மயக்கமாகி சரிந்தான். எப்படியும் அந்த கல்லை அவன் தலையில் போட்டிருந்தால் அவன் நிச்சயம் முகம் சிதைந்து இறந்து போயிருப்பான். ஆனால் அப்படி கொலை செய்ய அவள் மனம் இடமளிக்கவில்லை என்பதால், அந்த கல்லை அவன் மார்பில் தூக்கி போட்டாள்.

அவன் மயங்கியதும், பயத்தில் தப்பித்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சாலையின் பின் புறமாக பார்வையை பதித்தவாறே ஓடி வந்தவள், எதிரில் வந்த வாகனத்தை கவனிக்காமல் ஓடி வந்துக் கொண்டிருந்தாள். எதிரில் அவளை கண்டதும் திடுக்கிட்டுபோய் அந்த வாகன ஓட்டுனர் வண்டியை சட்டென நிறுத்தவும், சிவாங்கியோ அந்த வாகனத்தில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தாள்.

கீழே விழுந்த வேகத்தில் சட்டென தன்னை சுதாரித்து கொண்டு மீண்டும் எழுந்து ஓடியவளின் முகத்தை பார்த்து அதிர்ந்து போனான் அந்த வாகனத்தில் வந்த சாண்டில்யன் அவனது உதடுகள், " மாதங்கி " என்று மெலிதாக மூணு முணுத்துக் கொண்டது... அந்த நிகழ்வில் இருந்து அவன் வெளியில் வருவதற்குள் அவன் கண்ணில் இருந்து மறைந்திருந்தாள் சிவாங்கி.

ஏதோ யோசனையுடன் சாண்டில்யன் போனை எடுத்து மாதங்கிக்கு அழைத்து அவள் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்துக் கொண்டான்.

" மாதங்கி எங்க இருக்க? "

" என்ன சாண்டி இந்த நேரத்தில் கால் பண்ணியிருக்க ? வீட்டுல தான் இருக்கேன் "

" உனக்கு ஒன்னும் இல்லல ?"

" இல்லயே சாண்டி என்ன ஆச்சு? "
" ம்ம்ம்... ஒன்னும் இல்லை நான் காலையில் கால் பண்ணுறேன் " என்றவன் அழைப்பை துண்டித்தான்.

தன்னை கடந்துச் சென்றவள் மாதங்கி தான் என்று காட்டிய கண்ணை நம்புவதா? இல்லை அது மாதங்கி அல்ல என்று அவள் பாதுகாப்பை உறுதி செய்து அறிந்துக் கொண்ட மூளையை நம்புவதா? என்று குழம்பியவன் இறுதியாக அறிந்ததை நம்பி அங்கிருந்துச் சென்றான் சாண்டில்யன்.

அதன் பின்னரே சிவாங்கி நேத்ரனின் கேங்கில் இணைந்தாள். அவர்களது செயல் இவளுக்கு நெருடலாக இருந்தாலும் அவளது பாதுகாப்புக்கு இதை விட்டால் வேறு வழி இல்லை என்ற போது அவர்கள் செயலை ஏற்று தானும் அதில் செயல்பட தொடங்கினாள்.

ஆரம்பத்தில் அந்த கேங்கில் அவளை பார்த்து அங்கிருந்த ஒருவனுக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் அவள் கையில் மோதிரம் இல்லாமல் இருப்பது அவனுக்கு இதயத்தில் சுளீரென ஒரு வலியைக் கொடுத்தது. ஆனால் அதன் பின்னர் அவளுடன் பேசி உண்மை எது என்று பிரித்து அறிந்த பிறகு தான் நிம்மதி அடைந்தான் அவன்.

நேத்ரன் கேங்... தங்களது விளையாட்டுக்கு பயன்படுத்த போகும் அடுத்த செட் நபர்களை பற்றி பேசிக்கொண்டிருந்த நேரமது...

அப்போது தான் ஒவ்வொருவரின் புகைப்படமும் அந்த தொடுதிரையில் தெரிய... அதில் இருந்த மாதங்கியின் போட்டோவை கண்டு அவள் சிவாங்கியை போல இருப்பதால் அங்கிருந்த அனைவரும் ஒருசேர அதிர்ந்தனர். உண்மை அறிந்த ஒருவனை தவிர...

சிவாங்கிக்கு முதலில் அதிர்வாக இருந்தாலும், தன்னையும் அறியாமல் கண்கள் லேசாக கலங்க தொடங்கியது, மரம் பட்டு போனாலும் வேரில் உயிர் இருக்கும் அல்லவா? அந்த வேரில் இருக்கும் உயிர் கண்ணீராக அவள் கண்களை கலங்க செய்தது.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
எட்டு வயது என்பது சிறு வயது இல்லையே.. அவர்கள் இருவரும் உருவத்தில் ஒன்றுபட்டவர்கள் என்பது சிவாங்கிக்கும் நன்றாக தெரியும். விட்டு சென்ற சொந்தம் ஒன்று கிடைத்ததை எண்ணி சந்தோசப்படுவதா? இல்லை உயிருக்கு இக்கட்டான நிலையில் அந்த உறவு தன்னை தேடி வந்ததை எண்ணி வருத்தப்படுவதா? என்று யோசித்தவளுக்கு வாழ்க்கையே வெறுத்துபோனது.

நேத்ரன் அவர்களது உருவ ஒற்றுமை பற்றி சிவாங்கியிடம் கேட்க... தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு, " அவள் யாருன்னு எனக்கு தெரியாது " என்று கூறி மறுத்து விட்டாள்.

இவள் உண்மையை கூறி அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டு மாதங்கியை விட்டுவிடும் குணம் கொண்டவர்கள் இல்லையே, யார் இல்லை என்றாலும் யாருக்கு என்ன ஆனாலும் அவர்களது திட்டம் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கும். அதனை முழுவதுமாக அறிந்திருந்த சிவாங்கி பொறுமை காத்தாள். வேகத்தை விட சில இடத்தில் விவேகம் மிக முக்கியமான ஒன்றாகும்... சத்ரியனாக போரிடுவதை காட்டிலும், சாணக்கியனின் சாதூர்யம், ஒரு நாட்டிற்கு அவசியமானதாகும்...

அதன்பிறகே அவர்களது உருவ ஒற்றுமையை கொண்டு புதிதாக அந்த கேமை நகர்த்த ஆரம்பித்தான் நேத்ரன்.

மாதங்கி இடத்தில் சிவாங்கியை அனுப்பி, அவர்களுக்குள் பிரச்சனையை உருவாக்கி அதன் மூலம் தனது விளையாட்டை சுவாரஸ்யமாக்கி கொள்ள நினைத்தான் நேத்ரன். அதில் வெற்றி கண்டதாகவும் எண்ணி மார் தட்டிக் கொண்டான்.

" நான் வச்ச பொறியில் இப்படி சுலபமா மாட்டிட்டீங்களே யூஸ் லெஸ் ஃபெல்லோஸ் " என்று அவன் சத்தமிட்டு அவனது வெற்றி களிப்பில் தன்னை மறந்து உரைத்தான்.

அதனை அவனது பின்னால் நின்ற டேவிட், மார்க், ஜோன் என நால்வரும் தங்கள் வெற்றியை எண்ணி சிரிக்க.. ஒருவனது முகத்தில் மட்டும் கேலி புன்னகை இழைந்தோடியது...

' முட்டாள் நீ வச்ச பொறியில் மாட்ட அவன் ஒன்னும் எலி இல்லைடா இதுவரை உன்னோட கேம்ல பிளேயர்ஸ் தான் தோத்தாங்க... ஆனால் இந்த முறை கேமை உருவாக்கினவனே தோக்க போறான். எல்லாருக்கும் ஒரு பலவீன புள்ளி இருக்கும் உனக்கு உன் மனைவி அந்த பலவீனத்தை நாங்க பலமா எடுத்துக்கும் போது இந்த சிரிப்பு மொத்தமா உன் முகத்தில் இருந்து உதிர்ந்திருக்கும் ' என்று கூறி அவனை வஞ்சனையுடன் பார்த்தவன், நேத்ரன் தன்னை பார்ப்பதை உணர்ந்து நொடியில் சிரித்த போல முகத்தை மாற்றிக் கொண்டான் அவர்களில் இருந்த ஒருவன். உண்மை அறிந்த ஒருவன் அந்த ஐந்து பேரில் ஒருவன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு...

தன் தங்கையை காணவில்லை என்று அச்சத்திலும், கலக்கத்திலும் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தான் சாண்டில்யனின் பள்ளி கால தோழன் கார்த்திக்...

அதிதி அப்பாவின் அலுவலகத்தில் வேலை பார்த்தவள் தான் அவனது தங்கை பிரியா... முதல் முறையாக இந்த விளையாட்டில் பயன்படுத்தப்பட்டவர்களில் அவளும் ஒருவள்...

அவள் காணாமல் போனதை அவன் விசாரிக்க செல்கையில் தான், எப்போதும் போல அவர்கள் விடுப்பில் சென்றதாகவும் அப்போது அவர்கள் காணாமல் போனதற்கும் தங்களுக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை என்றும் கூறியதோடு மட்டும் அல்லாமல் அவள் அங்கு பணிபுரிந்த ஒருவனை காதலித்து அவனுடன் சென்றுவிட்டதாக கதையை மாற்றி விட்டனர்.

இதில் எது உண்மை எது பொய் யாரை நம்புவது என்று புரியாமல் இருந்தவன் தன் நண்பனிடம் இதனை பற்றி பேச முடிவு செய்தான்.

அவன் காபி ஷாப்பில் அமர்ந்திருக்க... அதிதியுடன் அங்கு வந்து சேர்ந்தான் சாண்டில்யன்.

சாண்டில்யனும் அவன் நண்பனும் பிரியா விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க... இடையில் அவன் நண்பன் கார்த்திக், "எனக்கு என்னமோ அதிதி அப்பா மேல சந்தேகமா இருக்குடா, அங்க தான் எதுவோ தப்பு நடந்து இருக்கு, அங்க ஏதோ தப்பா இருக்குடா " என்று அவன் எதார்த்தமாக தன் மனதில் உள்ளதை கூறிக் கொண்டிருக்க... இங்கு தன் தந்தையை பற்றி அவன் குறை கூறுகிறான் என்றவுடன் அதிதிக்கு கோவம் வந்து விட்டது.

" இங்க பாருங்க கார்த்திக், உங்க சிஸ்டர் எவனையோ லவ் பண்ணி அவன் பின்னாடி போயிட்டா அப்படிங்குறதை மறைக்குறத்துக்காக என் அப்பாவை தப்பு சொல்லாதீங்க " என்று கோவத்தில் அதிதி பேசவும்...

" என் தங்கச்சி அப்படி கிடையாது " என்று கார்த்திக் பதிலுக்கு கோவத்தில் பேசினான்.

" அப்போ என் அப்பா தப்பு பண்ணுறாருன்னு சொல்லுறியா? உன்னைபோல சீப்பான மெண்டாலிட்டி உள்ள ஆள் இல்லை என் அப்பா, உன் தங்கச்சியும் அவனும் சேர்ந்து வெகேஷன் பிளான் பண்ணது எங்க ஆபிஸில வேலை பார்க்குற எல்லாருக்கும் தெரியும். உன் தங்கச்சியை உத்தமியா காட்ட என் அப்பாவை குறை சொல்லுற வேலை வச்சிக்காத அப்புறம் அசிங்கமாகிடும் சொல்லிட்டேன். என்னமோ அவள் பெரிய இவள் அவளை வச்சி எங்க அப்பா ஏதோ பிளான் பண்ணுறாராமா? " என்று கூறிய அதிதியின் கழுத்தை பிடித்து நெருக்கினான் கார்த்திக். அனைத்தும் ஒரு நொடியில் நிகழ்ந்துவிட அதனை பார்த்த சாண்டி, " டேய் என்ன பண்ணுற விடு " என்று அவனை தடுக்க முயற்சித்தான்.

" இன்னொரு முறை எங்க ப்ரியாவை பத்தி தப்பா பேசின நான் மனுசனா இருக்க மாட்டேன். என் பிரண்டோட லவ்வருன்னு பார்க்குறேன் இல்லை " என்றவன் இன்னும் கோவத்தில் அவள் கழுத்தை நெறிக்க... அதிதி மூச்சுக்காக திணற தொடங்கினாள்.

அதனை கண்ட சாண்டி, என்ன செய்வது என்று புரியாமல் வேகமாக கார்த்திக்கை அவளிடம் இருந்து பிரித்து தள்ளியவன் அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்திக், சுற்றி இருந்த அனைவரும் தன்னை வேடிக்கை பார்ப்பதை எண்ணி அவமானமாக இருந்தாலும், தன் நண்பன் ஒரு பெண்ணிற்காக தன்னை கை நீட்டி அடித்து விட்டானே என்ற ரணம் அவன் மனதில் அதிகவலியை உண்டாக்கியது.

" அதிதி ஆர் யூ ஓகே " என்று கேட்ட சாண்டி அவள் பருகுவதற்கு தண்ணீரை எடுத்துக் கொடுத்தான்.

அதனை கண்டு விரக்தியாக புன்னைகைத்த கார்த்திக், "என்ன இருந்தாலும் நட்பை விட காதல் பெருசுன்னு காட்டிட்ட இல்லை. உனக்கு வேணும்னா அவள் பெருசா இருக்கலாம் ஆனால் எனக்கு உன்னை தவிர எதுவும் பெருசில்லை... அதனால் தான் என் வலியை நீ புரிஞ்சிப்பன்னு உன்கிட்ட சொல்ல வந்தேன். ஆனால் நீ அவளை பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு என்னையே அடிக்கிற அளவுக்கு போயிட்டல்ல.. என் நண்பனா நீ என்னை அடிச்சு இருந்தால் நான் சந்தோஷப்பட்டு இருப்பேன். ஆனால் இப்போ இவள் காதலனா தானே என்னை அடிச்ச " என்று கண்கள் கலங்கி கூறிய தன் நண்பனை வேதனையுடன் பார்த்த சாண்டி, " டேய் அப்படி எதுவும் இல்லைடா " என்று சமாதானம் கூற முன் வந்தான்.

" வேண்டாம் டா " என்று அவனை கை நீட்டி தடுத்த கார்த்திக், "உனக்கே நம்ம ப்ரியாவை பத்தி நல்லா தெரியும். இவங்க எல்லாம் சொல்லுற மாதிரி அவள் அப்படி பண்ணிட்டு எங்களை விட்டு போயிருப்பான்னு நீ நினைக்கிறியா? அவள் அவ்ளோ பேசுறாள் அவள் பேசுறது தான் சரிங்குற மாதிரி நீயும் கேட்டுட்டு இருக்க?" என்று வேதனையுடன் அவன் பதிலை எதிர் பார்த்தான் கார்த்திக்.

" டேய் அது "

" கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு அவள் சொல்லுறது தான் உண்மைன்னு நீயும் நெனைகிறியா? "

" டேய் காதல் தப்பு இல்லைடா, ஏதோ நம்ம ப்ரியா வயசு..." என்று சாண்டி கூற வரும் முன் அவனை தடுத்து நிறுத்திய கார்த்திக்,

" போதும் டா நீயும் அவளை தப்பா பேசாத... அவளுக்கு என்னை விட உன்னை ரொம்ப பிடிக்கும். அண்ணா அண்ணா னு என்னை விட உன்னை தான் அதிகமா கூப்பிட்டு இருப்பாள். நீ இப்படி அவளை தப்பா யோசிச்சன்னு தெரிஞ்சா கூட மனசளவில் நொறுங்கிடுவாள். ஏன்டா ஒரு பொண்ணு வீட்டுக்கு வரலன்னா... அவள் எவன் கூடவாது போயிருப்பான்னு தான் அர்த்தமா? அதை யாரு வேணாம் நம்பலாம் நீ கூட நம்பி இருக்க பாரேன். ஒஹ் சாரி.. என்ன இருந்தாலும் நீங்க உங்க காதலி சொன்னதை தானே நம்புவீங்க... எனக்கு தான் அறிவில்லை, உன் காதலியோட அப்பாவை பத்தி உன்கிட்டயே சொல்லி இருக்கேன் பாரு... வந்தவன் நீ என் நண்பனா வந்திருந்தால் நான் சொல்லுறதை புரிஞ்சிக்க முயற்சி பண்ணி இருப்ப... ஆனால் நீ இவள் காதலனா இல்லை இங்க வந்திருக்க. நான் தான் அதை யோசிக்காமல் போயிட்டேன்..." என்று தன் போக்கில் பேசிய கார்த்திக்கின் விழியோரம் ஒரு துளி கண்ணீர் வழிய... அதனை இதழ் கடித்து உள் இழுத்துக் கொண்டவன்,

" யாரும் நான் சொல்லுறதை நம்ப வேண்டாம் எனக்கு தெரியும் என் தங்கச்சியை பத்தி... அவள் தப்பு பண்ணி இருக்க மாட்டாள். ஒரு நாள் உங்களுக்கு எல்லாம் தெரியவரும்... " என்ற கார்த்திக் சாண்டியை அடிபட்ட பார்வை பார்த்தபடி அங்கிருந்து சென்றான்.

அதன் பின்னர் அதிதியின் அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் விஸ்வநாதனை நெருங்கவும் பல்வேறு வழியில் யோசித்த கார்த்திக்கிற்கு நேத்ரன் தான் அதற்கு ஒரே வழி என்று தெரியவந்தது...

நேத்ரன் சுலபமாக யாரையும் நம்ப மாட்டான் என்பதனால் அவனை நெருங்க அவனது மனைவியை பின் தொடர ஆரம்பித்தான்.

நேத்ரனின் மனைவி வெள்ளிக்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று வருவதை குறித்து வைத்துக் கொண்ட கார்த்திக், அன்று அவனே ஒரு வண்டியை ஏற்படுத்தி அவளது காரை லேசாக தட்டி விட்டு விபத்தை ஏற்படுத்த நினைத்திருந்தான்.

ஆனால் விதியின் படி இவன் எதுவும் செய்யாமலேயே அன்று உண்மையாக அவளுக்கு பெரும் விபத்து ஏற்பட்டது. அவளுக்கும் அவள் முதல் கைக்குழந்தைக்கும் விபத்தில் பெரும் காயம் உண்டாகி இருக்க... அதனை கண்டு பதறிய கார்த்திக், அவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தான்.

அந்த விபத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கார்த்திக் நேத்ரனை நெருங்கினான்.

தன் உயிரானவளையும், தன் உதிரத்தையும் காத்தவன் என்ற நன்றியில் கார்த்திக்கை தன்னுடன் வைத்துக் கொண்டான் நேத்ரன்.

நேத்ரனின் நம்பிக்கையை பெற்றவன் அதன் பின்னர் இந்த கேமிலும் ஒரு அங்கமாகி போனான்...

நேத்ரனது இடத்திற்குள் சென்றவன் வெளியே வரமுடியாத சூழ்நிலை தான்... போனால் போனது தான் என்பது போல தான் அங்கிருப்பவர்கள் நிலைமையும்... அதை அறிந்தவன் அங்கு செல்ல தயங்கியதற்கும் காரணம் உண்டு அது தான் மாதங்கி...

சாண்டில்யன் மூலமாக தான் மாதங்கிக்கும் கார்த்திக்கிற்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பில் தொடங்கிய அவர்களது நேசம் நிச்சயதார்த்தம் வரை வந்தது...

தன் தங்கைக்கு என்ன ஆனது என்பதை அவன் அறிந்து கொள்ள ஒரே வழி நேத்ரன் மட்டுமே... அதற்காக நேத்ரனுடன் இணைந்தான் கார்த்திக்... நாளை தான் அவர்களிடம் மாட்டிக் கொண்டாலும் தன்னால் தன்னை சார்ந்தவர்களுக்கு அவர்களால் எந்த வித பிரச்சனையும் வந்துவிட கூடாது என்று எண்ணிய கார்த்திக் மாதங்கியை விட்டு பிரிய நினைத்தான்.

நிச்சயத்துடன் அவனது காதல் அந்த இடத்திலேயே காணாமல் போனது...

இந்த விஷயத்தை மாதங்கியின் மூலம் கேள்விப்பட்ட சாண்டி அந்த காபி ஷாப் பிரச்சனைக்கு பிறகு ஆறு மாதம் கழித்து கார்த்திக்கை பார்க்கிறான்...

மாதங்கி தன்னை விட்டு பிரிந்து செல்ல என்ன காரணம் என்று கார்த்திக்கிடம் எவ்வளவு கேட்டும் அவன் எந்த பதிலும் கூறாமல் சிலையென இருந்தான்.

அதில் கோவம் கொண்ட சாண்டி, " என்னதான்டா நினைச்சிட்டு இருக்க நீ... நிச்சயம் முடிஞ்சிது இப்போ வந்து கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லுற, எனக்கு உன் சூழ்நிலை புரியுது உன் சிஸ்டர் பத்தி யோசிச்சிட்டு தான் நீ இதை இப்போ வேணாம்னு நினைக்கிற... ஓகே ஆனால் ஏன் அவளை காயப்படுத்துற அவள் தான் என்ன ஆனாலும் உனக்காக வெயிட் பண்ணுறேன்னு சொல்லுறாள் இல்லை அப்புறம் என்ன? "

"எனக்கு தெரியும் அவள் எனக்காக வெயிட் பண்ணுவாள்... ஆனால் அதுக்கு நான் உயிரோட இருக்கணும் இல்லையா? " என்ற கார்த்திக் அங்கு அழுதுக் கொண்டிருந்த மாதங்கியை திரும்பி ஒரு பார்வை பார்த்தபடி அங்கிருந்துச் சென்றான்…
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அத்தியாயம் 12

கார்த்திக் இத்தனை நாள் அவர்களுடன் இருந்தும் அவனால் அந்த கேமில் ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடியவில்லை... காரணம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு பிறகு நேத்ரன் மட்டுமே அந்த கேமை வழிநடத்துவான். அங்கு இருந்த ஐந்து பேருக்கோ பிற ஊழியர்களுக்கோ அனுமதி இல்லை... அவ்வளவு ஏன் அதிதியின் தந்தைக்கு கூட அதன் பிறகு என்ன நடக்கும் என்பது புரியாத புதிர்தான். அதன் பிறகு அந்த கேமில் பங்கேற்றவர்கள் என்ன ஆவார்கள் என்பதை அறிந்தவன் நேத்ரன் மட்டுமே...

இங்கு வந்த ஆறு மாதத்திலேயே தன் தங்கை ப்ரியா இவர்களது விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட ஒருவள் என்பதை கண்டறிந்து கொண்டான் கார்த்திக். அதனை அறிந்து கொண்டவனுக்கு கோவம் வந்தது தான்... சம்மந்தபட்டவர்களை எதிர்த்து அழிக்க வேண்டும் என்ற வெறி வந்தது தான்.. ஆனால் அவன் அப்படி தன் கோவத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை எதிர்த்திருந்தால் நிச்சயம் இவனையும் அந்த நொடியே அவர்கள் கொன்றிருப்பார்கள்...

அப்படி ஒன்று நடந்தால் இறுதி வரை தன் தங்கைக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே போய்விடும் என்று நினைத்த கார்த்திக் அவர்களது விளையாட்டை முழுவதுமாக அறிந்து கொள்ள நினைத்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பிறகு நேத்ரனை தவிர யாரும் அந்த கேமில் இருப்பது இல்லை...

அப்போது அந்த விளையாட்டில் பங்கேற்றவர்கள் எல்லோரும் எங்கே? அவர்களுக்கு இறுதி கட்டத்தில் என்ன தான் நடந்திருக்கும்... அவர்கள் எல்லாரும் உயிரோடு தான் இருக்கின்றனரா? என்பது புரியாத புதிராக இருந்தது.

அந்த இறுதி கட்டத்தில் என்ன நடக்கும் என்பதை அறியவேண்டும் எனில் ஒன்று அது நேத்ரனாக இருக்க வேண்டும்.. இல்லையேல் அந்த கேமில் பிளேயராக இருக்க வேண்டும் என்பதை அறிந்துக் கொண்டான் கார்த்திக்...

அப்போது தான் மாதங்கியை அடுத்து செட் பிளேயராக நேத்ரன் பேசிக்கொண்டிருக்க... இவனுக்கு உள்ளூர பயம் உருவாகியது. எப்படியாவது தன்னவளை காப்பாற்றவேண்டும் என்று அவன் எண்ணினாலும் அந்த இடத்தை விட்டு அவனால் எங்கேயும் செல்ல வழி இல்லாமல் போனது. தன் கண் முன்னே அவர்கள் அவளை பலி கொடுக்க போவதை நினைத்து அஞ்சியவனால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை... அதன் பின்னர் சாண்டியும் அவர்களுடன் வருகிறான் என்பதை அறிந்து கொண்டபின் தான் கார்த்திக்கிற்கு நிம்மதி பிறந்தது... எப்படியும் சாண்டி அனைத்தையும் கண்டறிந்து சரி செய்து விடுவான் என்று தன் நண்பனை முழுவதுமாக நம்பியிருந்தான் கார்த்திக்.. முழு பெயர் விக்னேஷ் கார்த்திக் நேத்ரனின் குழுவில் இருக்கும் அந்த ஐந்து பேரில் ஒருவன்.

இவர்களுக்கு சாண்டி தான் சரி என்று அறிந்து இந்த கேமில் அவன் விளையாடுவதை எதிர் நோக்க ஆரம்பித்தான் விக்னேஷ்...

அதன் பிறகு தான் சாண்டி, மாதங்கி விதுரன் என அனைவரும் அந்த வீட்டில் வந்து மாட்டிக் கொண்டது.. அந்த நாள் இரவே மாதங்கியை ரகசிய வழி மூலமாக தூக்கியவர்கள், அவளுக்கு பதில் அந்த இடத்தில் சிவாங்கியை நடிக்க வைத்தனர்..

அடுத்த நாள் வருண் இறந்து விட்டான் என்பது எல்லாம் நேத்ரன் உருவாக்கிய பொய்யான சூழ்நிலை தான்.
அந்த அரண்மனையில் நேத்ரனின் ஆட்கள் மூன்று பேர் எப்போதும் மறைந்து இருப்பார்கள்... அரண்மனையின் ஒவ்வொரு அறைக்குள்ளும் நுழையவும் ஒரு ரகசிய வழி இருக்கும். அந்த வழியில் தான் வருணுக்கு மயக்க மருந்து கொடுத்து அழைத்து வந்து, பின்னர் வருணை போன்று போலியாக ஒரு சடலத்தை கொண்டு வந்து முகத்தில் ரத்தம் இருக்குமாறு செய்து அவன் உண்மையில் இறந்து விட்டது போல அங்கிருந்த அனைவரையும் நம்பவைத்தனர்.. பின்னர் மீண்டும் வருணுக்கு மயக்கம் தெளியவும் அந்த போலி சடலத்தை ரகசிய வழியின் வழியே எடுத்துச் சென்று விட்டனர்.

அதன் பிறகு தான் சாண்டி, விதுரன் என எல்லாரும் வந்து பார்க்கும் போது வருண் சடலம் அங்கு இல்லாமல் இருந்தது...

அதன் பிறகு வருண் மயக்கம் தெளிந்து வரவும் அவனிடம் என்ன நடந்தது என அனைவரும் கேட்க... அவன் எதையாவது உளறி வைத்து விடுவானோ என்ற பயத்தில் மாதங்கியாக நடித்துக் கொண்டிருந்த சிவாங்கி அவன் காலில் மருந்து தடவிய ஊசியால் குத்தினாள். அந்த ஊசியில் இருந்த மருந்து அவன் உடலில் செலுத்தபடவும் அவனுக்கு தான் என்ன கூறினோம் என அனைத்தும் மறந்து போனது.

சாண்டில்யனுக்கு நடக்கும் அனைத்தும் குழப்பமாகவே இருந்தது. அங்கு அவனுடைய முதல் சந்தேகம் மாதங்கியின் மீது வந்தது.. அதற்கு முக்கிய காரணம் அவள் விதுரனிடம் காட்டும் நெருக்கம்... மாதங்கியின் வாழ்க்கையில் இருந்து கார்த்திக் விலகிய பிறகு விதுரனுக்கு அவள் மீது பரிதாபம் உருவாக ஆரம்பித்தது... அந்த பரிதாபம் நாளடைவில் அவள் மீது ஒரு மெல்லிய ஈர்ப்பை உருவாக்கியது... ஆனால் மாதங்கி அவனிடமிருந்து விலகியே தான் இருந்தாள். அது சாண்டில்யனுக்கு நன்றாக தெரியும்...

இங்கு சிவாங்கியோ விதுரனிடம் நெருங்கி பழகவும், சாண்டிக்கு மெலிதாக ஒரு நெருடல் உருவாக தொடங்கியது... மேலும் மாதங்கி தன் கையில் எப்போதும் அணிந்திருக்கும் கார்த்திக் போட்டு விட்ட நிச்சயதார்த்த மோதிரமும் இப்போது அவள் கையில் இல்லை எனும் போது சந்தேகம் அதிகமானது...

ஏற்கனவே மாதங்கியின் உருவில் இன்னொருவளை கண்டது இப்போது அவனுக்கு நியாபகம் வந்தது... அங்கு நடக்கும் குழப்பத்தையும், மாதங்கி நடவடிக்கையையும் சேர்த்து யோசித்த சாண்டி சுவரில் தன் கையை மடக்கி ஓங்கி குத்தினான். அப்போது சுவரில் இருந்த ஒரு ஓவியம் சற்று சரியவும்... அங்கு மறைவாக வைத்திருந்த கேமரா அவன் கண்களில் பட்டது. நிதானமாக அதனை பார்த்தவனுக்கு இங்கு ஏதோ தவறாக நடப்பதும், தங்களது செயலை யாரோ கவனிக்கிறார்கள் என்பதும் நன்றாக புரிந்தது.

உடனே இதை அனைவரிடமும் கூறி அவர்களையும் பயப்படுத்த விரும்பாத சாண்டி, அமைதி காத்தான்.

விரைவாக ஓடி வெற்றி பெற இது ஒன்றும் ஓட்டப்பந்தயம் இல்லை. சதுரங்க ஆட்டம்... இதில் நிதானம் மிக அவசியமானது. தன்னுடைய செயலை காட்டிலும் தன்னை எதிர்த்து நிற்பவனின் செயலை ஆராய்ந்து செயல்பட வேண்டும், அப்படி செய்தால் மட்டுமே வெற்றி பெற இயலும்...

ஏற்கனவே தங்களை சுற்றி கேமிரா இருப்பதை அறிந்துக் கொண்ட சாண்டி அடுத்ததாக சென்றது. மாதங்கி இடத்தில் இருக்கும் சிவாங்கியை தேடி தான்...

சிவாங்கியோ அப்போது தான் பாத்ரூமில் இருந்து முகம் கழுவி விட்டு வெளியே வர, அவளை பார்த்து மெல்ல சிரித்த சாண்டி, உண்மையை அறிந்துக் கொள்ள அவளிடம் கார்த்திக்கை பற்றி பேச தொடங்கினான்.

கார்த்திக்கை பற்றி ஒன்றும் அறியாத சிவாங்கி திருதிருவென முழிக்க... அந்த முழியே உண்மையை அவனுக்கு எடுத்து கூறியது...

" யார் நீ மாதங்கி எங்க? " என்று அவன் கேட்க...

" லூஸா சாண்டி நீ நான் தான் மாதங்கி " என்றாள் சிவாங்கி...

" இதை எவனாவது காதுல பூ வச்சிட்டு இருக்கவன் கிட்ட போய் சொல்லு "

"என்ன ஆச்சு சாண்டி உனக்கு " என்று கேட்டவளை பாத்ரூமிற்குள் இழுத்து வந்தான் சாண்டி.

அந்த பாத்ரூமில் கேமரா இல்லை என்பதை அவன் ஏற்கனவே கவனித்து இருந்தான்.

" எதுக்கு இப்படி நடந்துக்கிற? " என்று சிவாங்கி கேட்க... அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்த சாண்டி, அவளது கழுத்தை பிடித்து தூக்கினான்.

" என்னடி யாரு கிட்ட விளையாடுற? உண்மையை சொல்லு இங்க என்ன நடக்குது? நீ யாரு? மாதங்கி எங்க? " என்றுக் கேட்டு அவள் கழுத்தை பிடித்து நெறிக்க... மூச்சுக்கு திணறிய சிவாங்கி அவனிடம் கண்களால் கெஞ்சினாள்.

பாவம் பார்த்து அவளை கீழே விட்டவன், உண்மையை கூறும்படி கேட்டான்.

மாதங்கி இரட்டை குழந்தை என்பது விக்னேஷ்க்கு தெரியும்... அதன் படியே சிவாங்கி இந்த கேமில் ஆள்மாறாட்டம் செய்யபோகும் நிலையில அவளிடம் பேச வந்தான் விக்னேஷ்,

" எனக்கு தெரியும் நீயும் அவளும் ரெட்டை குழந்தைன்னு " என்று ஆரம்பித்த விக்னேஷ் அவளிடம் தன்னை பற்றி அனைத்தையும் கூறினான்.

" எனக்கு தெரியும் நீ ஒன்னும் தப்பானவள் இல்லை... உன்னால கண்டிப்பா மாதங்கியை கஷ்டப்படுத்த முடியாது "

"உண்மைதான் ஆனால் இங்கே நேத்ரனை எதிர்த்து நம்ம என்ன பண்ண முடியும் "

" நம்மால முடியாது ஆனால் சாண்டியால முடியும்... எப்படியும் அங்க அவன் உன்னை கண்டுபிடிச்சிடுவான் "

" எப்படி சொல்லுற? " என்று சிவாங்கி கேட்க... விக்னேஷின் கண் அவளது கரத்தில் பதிந்தது. மாதங்கி நிச்சயமாக தன்னை மறந்து தான் அவளுக்கு அணிவித்த அந்த மோதிரத்தை கழட்ட மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தது...

" அது உனக்கு தேவை இல்லை.. ஆனால் அப்படி அவன் கண்டு பிடித்து கேட்கும் போது நான் சொன்னதை அவன் கிட்ட சொல்லிடு " என்று விக்னேஷ் கூறிய அனைத்தையும் சாண்டியிடம் இப்போது கூறினாள் சிவாங்கி...

அதனை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த சாண்டி " சோ இந்த கேமை முழுமையா விளையாண்டா மட்டும் தான் இங்க இருந்து வெளியே போக முடியும் அது தானே " என்று கேட்க...

" ஆமா " என்றாள் சிவாங்கி...

" சரி அப்போ நீ மாதங்கியா இந்த கேமை கண்டினியூ பண்ணு... அவனுங்க எந்த எல்லை வரை போரானுங்கன்னு நானும் பார்க்குறேன் " என்ற சாண்டியும் அதன் பிறகு அந்த கேமில் அவர்கள் போக்கிற்கு விளையாட ஆரம்பித்தான். ஆனால் அதீத கவனத்துடன் விளையாட தொடங்கினான்...

******
இரண்டு நாளாக அறையில் அடைத்து வைக்கபட்டிருந்த மாதங்கிக்கு உணவு கொடுக்க சென்றனர் பாதுகாவலர்கள்...

உணவு உண்பதற்காக அவளது கை கட்டினை அவிழ்த்து விட்டனர் பாதுகாவலர்... அந்த நொடியை பயன்படுத்திக்கொண்டு அவர்களை தள்ளிவிட்டு வெளியே ஓடி போக போனவளின் தலை முடியை கொத்தாக பற்றி நிறுத்தினான் உயர்ந்தவன் ஒருவன், மார்க்...

" எவ்ளோ தைரியம் இருந்தால் இப்படி பண்ணுவ " என்ற மார்க் அவளது தலை முடியை பற்றி சுவரில் ஓங்கி அடிக்க போக அவளது தலை சுவரில் மோதாமல் இருக்க கை வைத்து தடுத்த ஒருவன் மார்க்கின் கரத்தை தடுத்து பிடித்திருந்தான்.

அவனது செயலை புருவம் சுருக்கி பார்த்த மார்க், " என்ன ? " என்று புருவம் உயர்த்தவும் அப்போது தான் எதிரில் இருந்தவனது முகத்தை விழி திறந்து பார்த்தாள் மாதங்கி...

எதிரில் நின்றவனை பார்த்து ஊமையாக அவள் மனம் கதற, உதடுகள் துடித்தது தன்னவனைக் கண்டு... சரியாக ஒன்றரை வருடங்களுக்கு பிறகு அவனை காண்கிறாள். அதுவும் இப்படியான ஒரு இடத்தில்... இது போன்று ஒரு சூழ்நிலையில்... அவனை கண்டது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் மனம் படபடக்க தொடங்கியது...

இதயம் நின்று துடிக்க... " கார்த்திக்... "என்று அவள் கூற வாய் எடுக்கவும் மார்க்கின் கரத்தை தடுத்து பிடித்திருந்த விக்னேஷ் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.

அதை சற்றும் எதிர்பாராத மாதங்கி அவன் அடித்த வேகத்தில் சுருண்டு கீழே விழுந்தாள். அதனை பார்த்து அங்கிருந்த மார்க் சிரித்தபடியே . விக்னேஷ் தோளில் கைபோட்டு, " "இதுக்கு தான் கையை பிடிச்சியா சொல்லி இருக்கலாமே... இன்னும் நாலு அடி சேர்த்து போடு அப்போது தான் இவள் கொழுப்பு குறையும் " என்று கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றான் மார்க்.

கீழே விழுந்து கிடந்த மாதங்கி, விக்னேஷை அதிர்ந்து பயத்துடன் பார்த்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

ஏங்கி ஏங்கி அழுதவள் " கார்த்தி.. " என்று மீண்டும் கூற வரும் முன் விரைந்து வந்து அவள் தலைமுடியை கொத்தாக பற்றி தூக்கியவன் அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான். அதில் அவள் உதடு வெடித்து உதட்டோரம் ரத்தம் வழிந்தது.

அவளது உடலில் இருந்து வெளிப்படும் உதிரம் இன்றும் அவன் இதயத்தை வலிக்க செய்தது தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்ட கார்த்திக், அவளை தர தரவென இழுத்துக்கொண்டு வந்து மீண்டும் அந்த அறையில் போட்டு பூட்டினான்.

பின்னர் பாதுகாவலர்கள் வந்து மீண்டும் அவள் கை,கால்களை கட்டி போட்டுவிட்டுச் சென்றனர்... வெகு நேரம் அழுது கதறிய மாதங்கி பின்னர் அப்படியே தூங்கி போனாள்.

சரியான நேரம் பார்த்து மீண்டும் அவளது அறைக்குள் நுழைந்த கார்த்திக் தூக்கத்தில் இருந்தவளின் கட்டுக்களை நீக்கினான்.

யாரோ தன்னை தீண்டுவதை உணர்ந்து கண்விழித்த மாதங்கி கத்த போகவும்... அவளது வாயை தன் கை கொண்டு மூடினான் கார்த்திக். அறை முழுவதும் இருள் சூழ்ந்திருந்ததால் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் தவித்தாள் பெண்ணவள்...

" ஷ் " என்ற கார்த்திக் அவளது கரத்தில் அழுத்தம் கொடுக்க... அவளுக்கு ஏதோ புரிந்தது போன்று இருந்தது..

இருளிலும் அங்கு நடக்கும் அனைத்தும் தெரியும் படியான கேமரா தான் அந்த அறையில் பொறுத்தப்பட்டிருந்தது. அங்கு யார் என்ன பேசினாலும் அது எல்லோருக்கும் கேட்கும் அதனால் விக்னேஷ் அவளிடம் எதுவும் பேசவில்லை...

சிறிது நேரம் அந்த அறையில் மட்டும் கேமராவை ஆப் செய்து வைத்துவிட்டு தான் அங்கு வந்தான் விக்னேஷ்...

வெகு நேரம் அங்கிருக்க முடியாது என்று அறிந்த விக்னேஷ், " பயப்படாத நான் இருக்கேன்... எல்லாம் சரி ஆகிடும் " எனும் விதமாக அவள் கரத்தில் அழுத்தம் கொடுத்தவன், அவள் நெற்றியில் மெல்ல இதழ் பதிக்க... அந்த நெற்றி முத்தம் அவளுக்கு கூறியது அது தன்னவன் என்று...

அதனை உணர்ந்து தன்னையும் அறியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அவளது கண்ணீர் அவனது கரத்தை நனைக்க... அவளது கன்னத்தை தாங்கிய கார்த்திக், மெல்ல அவள் காதோரம் சென்று, " என் கண்ணுல கண்ணீர் வரலங்குறதுக்காக என் காதல் பொய் இல்லடி " என்று கூறி அவள் நெற்றியில் முட்டியவன் வலியுடன் அங்கிருந்து செல்ல முற்படவும் அவன் கரத்தை பிடித்து தடுத்த மாதங்கி, " என் மேல கோவமா கார்த்.." என்றவளின் வாயை தன் கரம் கொண்டு மூடியவன், பெயர் சொல்ல வேண்டாம் என்பது போல அவள் தலையை அசைக்க.. .அவளுக்கு என்ன புரிந்ததோ மௌனமானாள்.. அதன் பிறகு அவள் அருகில் சாப்பாட்டு தட்டை வைத்தவன் வெளியே சென்ற அடுத்த நொடி அறை ஒளி பெற்றது... ஆனால் எதிரில் அவன் இல்லை...

வேதனையுடன் உணவு தட்டினை பார்த்த மாதங்கியின் இதழ் மெலிதாக விரிந்துக் கொண்டது.

*****

அதிதியின் அலுவலகத்தில் இருந்து காணாமல் போன அனைவரது தொலை பேசியின் எண்ணும் துண்டிக்கப்பட்டது ஒரே இடம் தான் என்று அறிந்துக் கொண்ட நிரல்யன், தன்னுடன் ஒரே ஒரு காவலரை மட்டும் அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தான்.

அப்போது தான் அவன் கண்ணில் அந்த அரண்மனை படவும்... சந்தேகம் கொண்ட நிரல்யன், அந்த அரண்மனையை நோக்கிச் சென்றான்.

இனி அடுத்து என்னவோ ???
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 13


முதலில் அங்கு சுற்றி நோட்டமிட்ட நிரல்யன் அரண்மனை வெளியில் கேமரா இருப்பதை கண்டு கொண்டான்.

தன் கையில் இருக்கும் கேமரா ஜாம்மர் மூலம் மறைந்திருக்கும் கேமராவை செயலிழக்க செய்தவன் உள்ளே சென்று ஜன்னலின் வழியே பார்வையை செலுத்தியவன் யாரும் இல்லாததால் கதவில் கை வைக்க தூக்கி எறியபட்டான்.

அடுத்த நிமிடம் நேத்ரனின் ஆட்கள் அவனை தூக்கி கொண்டு உள்ளே சென்று மறைந்தனர். இப்பொழுது இலவச இணைப்பாக நிரல்யனும் அவர்களின் ஆட்டத்திற்கு.

********

சுற்றிலும் கும்மிருட்டு பாதி தூரம் விளக்கு ஒளிர்ந்த இடத்தில் அழைத்து சென்றவன் திடீர் இருட்டுக்குள் அழைத்து சென்றான்.

ஒரு நொடி வெளிச்சம் மாயமானதும் உள்ளுக்குள் அதிர்ந்தவன் "நேத்ரா…" மெலிதாக அழைக்க

"ஹ்ம்ம்.. வா.." அசால்ட்டாக தன் கணீர் குரலில் கூறிவிட்டு தன் போக்கில் சென்றான்.

கார்த்திக்கும் காதை தீட்டி கொண்டு அவன் செல்லும் ஓசையயை கணித்து அதனை பின்பற்றி சென்றவன் ஓரிடத்தில் நின்றான்.

வெளிச்சம் முழுதாக பரவ ஆரம்பித்தது. இருட்டுக்கு பழகிய கண்கள் திடீர் வெளிச்சத்தில் கண்கள் கூச செய்தது. வெளிச்சத்திற்கு பழக ஆரம்பித்தவன் மெல்ல அறையை நோட்டமிட்டவன் ஜெர்காகி ஒரு அடி பின்னால் சென்றான்.

இத்தனை நாள் செய்த பாவங்களுக்கான காணொளி தற்போது கண் முன்னே ஓடி கொண்டிருந்தது.

"ஹ்ம்ம்… விக்கி கமான்.. " என அழைத்தவன் கணினியின் தொடுத்திரை உதவியின் மூலம் விக்கியின் வலது உள்ளங்கை ரேகையை பதிக்க வைத்தான்.

அதை பார்த்தவுடன் மனதில் யாரும் அறியா ஒரு நொடி கேலி சிரிப்பை சிதறவிட்டவன் அதை முகத்தில் காட்டாமல் எப்பொழுதும் இருக்கும் இரும்பை கூழாக்கி கரைத்து குடித்த பாவனையுடன் அவனுக்கு அருகில் விரைப்பாக நின்றவனின் எண்ணம் பின்னோக்கி சென்றது.

*****

இங்கிருக்கும் ஐவரையும் நேத்ரன் அடுத்த குழுவாக அவனின் ஆய்விற்கு அழைத்து செல்ல இன்னும் இருப்பத்தி நான்கு மணி நேரங்களே இருந்தன.

அதற்குள் பழைய குழுவின் ஆராய்ச்சி முடிவடையவும் இருபத்தி மூன்று மணி நேரம் ஐம்பத்தி ஒன்பது நிமிடம் ஐம்பத்தி ஒன்பதாவது வினாடியில் முடிவடைந்து விடும். அதற்கு அடுத்த வினாடி சற்றும் தாமதிக்காது இவர்கள் குழு முழுவதும் இயங்க ஆரம்பிக்க ஆவணச் செய்ய வேண்டும்.

இன்று காலையில் அனைத்தும் தன் திட்டப்படி தான் சென்று கொண்டிருக்கிறது என்று மிதப்புடன் இருந்தவன் மனைவியுடன் உணவருந்தும் வேலையில் தொலைபேசி அழைப்பு வர......

ஒரு நொடி நெற்றி சுருக்கியவன் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் உள் வாங்கிய செய்தியில் நேத்ரனின் உடலே அதிர்ந்தது.

நொடி நேர அதிர்வில் தன்னை மீட்டவன் "வரேன்.." என கோபமாக உரைத்தவன் மனைவியை நோக்கி "நீ பார்த்துக்கிறியாடா… நான் உடனே போகணும். " என பதட்டத்துடன் கேட்டடான்.

அவனின் பதட்டம் அவனின் அவசர சூழ்நிலை என்றறிந்தவள் "சரிங்க.. பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க.." என சூழ்நிலையை புரிந்து நடக்கும் மனைவியின் செயலில் என்றும் போல் இன்றும் பொங்கிய கரை காணா காதலில் அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் வைத்தான். பின் வேக வேகமாக தன் லேப்டாப் பையை தோளில் மாட்டியவன்..

தான் இருக்கும் ஆறடி உயரத்தை மறந்து சற்றே உயரம் குறைவாக இருக்கும் நிலை வாசலில் குனிய மறந்து சென்றவனை "மாமாமா…" என உரக்க கத்தி அழைத்தவள்,

அவனை வழி அனுப்ப அவளும் பாதி உணவிலேயே எழுந்து அவன் பின் சென்றவள் எங்கு அவன் தலை நிலை வாசலில் இடித்து கொள்ளுமோ என பதறி அவனை கை பிடித்து இழுத்ததன் விளைவும் கீழே சிந்தி இருக்கும் தண்ணீரின் விளைவும் சேர்த்து எட்டாம் மாத தொடக்கத்தில் இருக்கும் அவன் மனைவி தரையில் விழுந்து பின்னந்தலையில் அடிபட்டதும் இல்லாமல் இழுத்த வேகத்தில் நேத்ரனும் தன் ஜிம் பாடி உடம்பையும் அவர்கள் பிள்ளை இருக்கும் மணி வயிற்றில் இறக்கிவிட்டான்.


பின்னந்தலையில் அடிபட்டு அடுத்த நொடி அவள் மூர்ச்சையாகி விட..
"அய்யோ…" என பதறியவன் அவசரமாக அவள் மேல் இருந்து எழ முயன்று அதே தண்ணீர் உள்ளிருக்கும் அவன் மகனுக்கு எமனாகிட வழுக்கி மீண்டும் அவள் மீதே விழுந்தான்.

அதில் பிள்ளை அவள் வயிற்றில் கையையும், காலையும் புடைத்து கொண்டு நின்றது சில வினாடிகள் தான். மீண்டும் பழைய நிலைக்கு மாறியது.

மேலும் விழுந்ததில் அவன் வலது உள்ளங்கையில் மனைவியின் தங்க வளையலில் ஊன்றியதில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.

"அம்மா…." என்று அலறியவன் நிமிர்ந்து பார்த்ததும் பயத்தில் உடலில் உள்ள இரத்த ஓட்டமே உறைந்தது.

தன்நிலை பெற சில நிமிடங்கள் பிடித்தது. நிலை பெற்றவன் அடித்து பிடித்து பயத்தில் அவளிடம் சென்று "செல்லம்மா… இங்க பாருடி.. என்னடி ஆச்சு.. ஏன் டி இப்படி இருக்க.." என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் கன்னத்தில் அடித்து அழைத்தும் பயனில்லாமல் போகவே…

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அடிபட்ட உள்ளங்கை வேறு வீங்க ஆரம்பித்தது. உள்ளங்கையை தவிர்த்து கையின் உதவியுடன் இடது கையால் அவளை தூக்கி கொண்டு வெளியே வந்தவன் காரில் தட்டு தடுமாறி ஏற்றினான். அவன் அவசரத்திற்கு கார் இயங்காமல் சதி செய்ய அதை அடித்து சாத்தினான்.

அவளை பார்த்தவனுக்கு மனத்தாங்கல் அதிகமாக, "ஷீட்… பிளடி..****" என்று வாய்க்கு வந்த அனைத்து கெட்ட வார்த்தைகளை உதிர்த்து,

மீண்டும் அவளை தூக்கி கொண்டு வாகனம் எதுவும் இல்லாததால் சாலையில் கிட்டத்தட்ட தன் கைவலியையும் பொருட்படுத்தாமல் ஓடினான் என்றே சொல்ல வேண்டும்.

எதிரில் வந்த ஒரு ஆட்டோவை மடக்கி அதில் இருந்தவர்களை "**** இறங்குடா.." என்று கத்தி அவனையே பார்த்திருந்தவனை எரிச்சல் மேலோங்க, "டேமிட்.. பார்த்துட்டே இருக்க.." என கத்தினான்.

ஏறியதும் மனைவியை உள்ளே படுக்க வைத்து நிமிர்ந்தவன் கைகளில் வழிந்த பிசுபிசுப்பான நீரை அப்பொழுது தான் உணர்ந்தான். பனிக்குடம் உடைந்து நீர் ரொம்ப நேரமாக வெளியேறி இருக்க வேண்டும். ஏனெனில் அவன் உடை முழுவதும் மற்றும் அவள் இடுப்பு பகுதியில் உள்ள புடவை முழுவதும் தொப்பலாக நினைந்திருந்தது.

'அப்போ.. பிள்ளையின் நிலை..' என அவன் மூளை உரைக்க.. அதிர்ச்சியில் பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு வந்து அவளுக்கு சிகிச்சை ஆரம்பிக்கும் வரைக்கும் அதிலிருந்து வெளிவரவில்லை.

நர்ஸ் ஒருவர் வந்து அவன் கைக்கு சிகிச்சை அளிக்க அழைத்த போது தெளிந்தவன் கண்ணில் இருந்து தாரை தரையாக கண்ணீர் மழை பொழிந்தான்.

"சார் அவங்களுக்கு சரி ஆகிடும் வாங்க" என்று உண்மை நிலவரத்தின் தீவிரம் அறிந்தும் அந்த நேர ஆறுதளுக்காக கூறி அவனை அழைத்து சென்றாள்.

மருத்துவர்கள் அவனுக்கு சிகிச்சை அளித்து விரல்களும் உடைந்து இருப்பதால் இடது கையை குறைந்தது ஒரு மாதத்திற்கு அசைக்கவே கூடாது என்ற அறிவுரையுடன் அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை நடக்கும் அறைக்கு வெளியே கண்ணீரோடு நின்றவனை பார்த்து கொண்டே வந்தனர் விக்னேஷ் மற்றும் மார்க்.

இங்குள்ள நிலைமையை சொல்லாமல் இந்த மருத்துவமனைக்கு இருவரையும் வர சொன்னவனின் நிலையை பார்த்து "இந்த மாதிரி கண்ணீரை நீ எத்தனை எத்தனை பேருக்கு கொடுத்திருப்ப நேத்ரா. இப்ப அந்த கண்ணீர் உனக்கு சொந்தமா இருக்குன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு." என இன்ஸ்டன்ட் மகிழ்வு பொங்கியது.

அடுத்தவர் கஷ்டத்தில் இன்பம் காணும் இவனை போல் கார்த்திக் இல்லையென்றாலும் அந்த நொடி மகிழ்ச்சி அவன் மனதில் உதயமானதை தடுக்க முடியவில்லை கூறலாம்.

இருவரும் அவனை நெருங்கி அவன் தோளில் கை வைக்கவும் ஆபரேஷன் தியேட்டர் வெளியே மருத்துவர் வருவதற்கும் சரியாக இருந்தது.

"அம்மா குழந்தை ரெண்டு பேரும் கிரிட்டிகள் ஸ்டேஜ்ல இருக்காங்க! யாரை காப்பாற்ற முடியும்னு தெரியல. ஆபரேஷன் முடிஞ்சா தான் எங்களால் உறுதியா சொல்ல முடியும்" என்று கூறி ஆபரேஷன் செல்லும் முன் அதற்குரிய பேப்பரில் கையெழுத்து வாங்கினார்.

அவனின் சிறு உயிரனுவில் ஜனித்த குழந்தையின் வளர்ச்சி முற்று பெற கூடிய நிலையில் உயிர் இல்லாத ஜடமாக நர்ஸ் கொண்டு வந்து அவனுக்கு முன்னால் காண்பித்தனர்.

அதை பார்த்ததும் "ஒஹ்ஹஹ்…" என்ற கதறலுடன் வாரி நெஞ்சில் அணைத்துக்கொண்டு அவன் கதறியதில் அந்த மருத்துவமனையே ஓடி வந்து பார்த்தது..

"டாக்டர் ப்ளீஸ் எதையாவது செய்ய பாருங்க.. ப்ளீஸ் டாக்டர்.. உள்ள இருக்கும் போதே என்னோட குரலுக்கு அசையுறவன்.. இப்போ நானிப்படி கதறியும் அவன் அசையாம இருக்கானே.. என்னால இதை ஏத்துக்க முடியல.. புடிங்க.. புடிங்க.." என மீண்டும் மருத்துவர் கையிலேயே குழந்தையின் உடலை திணித்தான்.

"ஏதாவது பண்ணுங்க.. டாக்டர்…செலவானாலும்.. யாரையாவது கூப்பிடுங்க.. ப்ளீஸ்.." என அவரின் பாதத்தில் குழந்தையை வைத்து கெஞ்சியது அனைவர்க்கும் கண்ணீர் வந்தது..

"மிஸ்டர். நேத்ரன் எங்களால ஒன்னும் பண்ண முடியாது நீங்க குழந்தை மேலேயே ஒண்ணுக்கு இரண்டு தடவை விழுந்ததுல குழந்தை அந்த இடத்துலயே உயிரை விட்ருச்சு.. நீங்க இங்க கொண்டு வந்த நேரத்துக்கு இப்போ உங்க மனைவி உயிரோடவாவது இருக்காங்களேன்னு சந்தோஷ படுங்க.. " என்ற மருத்துவரின் குரலில் ஓர் நொடி அசையாமல் நேத்ரன் நின்றான்.

மார்க்கோ மருத்துவரின் வார்த்தை காதில் விழுந்தும்.. நேத்ரன் அவர்கள் ஐவருக்கும் ஆரம்பத்தில் "எமோஷன்ஸ்க்கும் பாசத்துக்கும் இங்கு இடமில்லை.. " என்று சொல்லி கொடுத்த தாரக மந்திரங்களில் ஒன்றானதை அச்சு பிசகாமல் கடைப்பிடித்து மரம் போல் நின்றான்.

கார்த்திக்கோ அந்த குழந்தையின் நிலையை காண முடியாமல் திரும்பி நின்றிருந்தவன் விசுக்கென திரும்பி நேத்ரனை தான் பார்த்தான்.

ஒரு நாள் கார்த்திக் ஆயிரம் கோபங்களை உள்ளடக்கி அதே மரத்த குரலில் "ஏன் இப்படி" என்று கேட்டதற்கு உரக்க சிரித்துக்கொண்டே "அட்லீஸ்ட் அவங்க உயிரோடவாவது இருக்காங்களேன்னு சந்தோஷப்படு.." என அவன் சிரிப்பின்னூடே உரைத்தது. அவன் நினைவடுக்கில் இருந்து இன்றும் அழியாமல் நியாபகத்திற்கு வந்தது.

நேத்ரன் அவர் கூறிய வார்த்தைகளில் சில நொடி முழ்கியவன் "உயிரோடவாவதுன்னா.." என்னும் வார்த்தையின் தாக்கம் உரைக்க "டாக்டர்… அப்படின்னா…."என நிறுத்த..

"ஆமா நேத்ரன் உங்க வைப் இப்போதைக்கு உயிரோட மட்டும் தான் இருக்காங்க.. அதுக்கு மட்டும் நான் கேரண்ட்டி…"என்றார்.

"இன்னும் அவங்க கண்டிஷன் என்னனு இருபத்தி நான்கு மணி நேரம் கடந்த பிறகே சொல்ல முடியும்." என அவனுக்கே கெடு வைத்து சென்றவரை இயலாமையோடு பார்த்தான்.

மெல்ல எழுந்தவன் குழந்தையை இறுதியாக அணைத்து முத்தமிட்டு அங்கிருக்கும் நர்ஸ் கையில் கொடுத்துவிட்டு "நீங்களே பார்த்து கொள்ளுங்கள்" என்னும் விதமாக தலையசைத்து விட்டு மனைவியை கண்ணாடியின் ஊடே அவனவளை பார்த்தவன்.

"நீ எனக்கு வேணும்டி. இல்லைனா…., உன்னை கொன்றுவேன்.." என மானசீகமாக மனதுக்குள்ளே உரைத்தவன் மார்க்கை இங்கிருக்கும் படி செய்து விட்டு விக்னேஷை கூட்டிக்கொண்டு சென்றான்.

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பது பழமொழியாக இருக்க, "முற்பகல் செய்யின் அப்பகலிலேயே முடிவிற்குள்ளே விளையும்." என்பது புதுமொழியாக மாறியிருந்தது.

*******

நேத்ரனை விட இன்னும் சில அதீத தொழில் நுட்ப நுணுக்கங்கள் தெரிந்த விக்னேஷை உடன் வைத்து அவன் வலது கை ரேகையை பதிவு செய்தான்.

மனது முழுவதும் வலி வலி என்று வலிகள் மட்டுமே நிறைந்திருக்க அவனின் உயிரை அவளிடம் விட்டு வெறும் கூடாக ஆய்வகத்திற்கு வந்தான். இத்தனை வருடம் கஷ்டப்பட்டு பல மனித உயிரின் மூளையை காவு வாங்கி தயாராகும் இந்த தொழில் நுட்பம் நிறைந்த விளையாட்டின் பெறுமதிப்பே ஐம்பது கோடியை தாண்டும்.

இது மட்டும் வெற்றி பெற்றால் லாபத்தின் அளவை யாராலும் அளவிட முடியாததாக இருக்கும்.
இதன் மூலம் நேத்ரன் மில்லினியர் ஆகும் வாய்ப்பு அதிகம். நேர்மையாக இல்லையென்றாலும் நல்ல முதலாளி என்று பெயர் பெற்ற விஸ்வநாதனை நேத்ரன் தான் அவன் வழியில் பேசி பேசி பேராசை காட்டி அவரை மாற்றி தன் திட்டதுக்கு ஒத்துழைக்க வைத்து சாதுர்யமாக அதற்கான ஏற்பாட்டையும் அந்த கம்பெனியிலேயே உருவாக்கியிருந்தான்.

இங்கு வந்ததும் தினசரி செய்யும் யோகா பயிற்சியின் மூலம் தன் மனதை ஒரு நிலைப்படுத்தியவன் எங்கு தவறு நடந்துள்ளது என்று கண்டறிய முற்பட்டான்.

நேரம் இன்னும் 10 மணி நேரங்களே இருக்க ஒவ்வொரு மனித மூலையின் மூலம் வரும் சக்திகளை கொண்டு இருக்கும் கருவி துல்லியமாக சேரும் இடத்தில் பிரச்சனை விரவியிருக்க கண்டுக்கொண்டான்.

ஒரு கையை மட்டும் கொண்டு இயக்கியவனால் பிரத்யேகமான சாப்ட்வேர் மூலம் ரன் ஆகும் கோடிங்கில் எரர் என்பதை சரி செய்ய முடியாமல் திணறினான்.

கார்த்திக் அங்கு நடப்பவற்றை சுற்றி ஆராய்ந்தான். ஒவ்வொரு மனிதனின் தலையிலும் பல வயர்கள் செலுத்த பட்டு அது மானிட்டருக்கு ஒவ்வொருவர் என்று தனித்தனி கம்ப்யூட்டர் மூலம் அனைத்தும் பதிவாகி மெயின் மானிட்டரிங்கில் பதிவாகி கொண்டிருந்தது.

மெயின் மானிட்டர் என்பது எல்லாருடையது போல் அல்லாமல் சினிமா தியேட்டர் ஸ்கிரீன் போல் காட்சியளிக்க அதில் தன் கை விளையாடும் லாவகத்தை காட்டி கொண்டிருந்தவன், போக போக தன் தலையை இடது கையால் தாங்கிய படி பெரிய திரையையே வெறித்து கொண்டிருந்தான்.

அவனின் தோளில் கை போட்டவன் செய்கையால் நகரு என்று சொல்ல நேத்ரன் வழி விட்டதும் கார்த்திக் அமர்ந்து அவனால் முடிந்தவற்றையும் நேத்ரனின் உதவி கொண்டும் வேலையை தொடர்ந்தான். எனினும் அதற்கான வழி புலப்படாமல் இருக்க, உண்மையிலேயே கார்த்திக் மண்டையை பிய்த்து கொண்டான்.

பின் "நான் ஒரு டீ ஆச்சும் குடிச்சுட்டு வரேன் அப்போ தான் எனக்கு மைண்ட் வேலை செய்யும்.." என எழுந்தவன் "வா நீயும் காலைல இருந்து ஒன்னும் சாப்பிடலைல.. வா போலாம்.." என அழைத்தான்.

அதில் நடந்த சம்பவம் மீண்டும் நினைவிற்கு வர "வேண்டாம்." என்ற ஒற்றை சொல்லை உதிர்த்தவன்.. ஒற்றை கையாலேயே விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தான்.

அவன் செய்கையை எண்ணி ஒரு நொடி தலையை குலுக்கியவன் டீ அருந்த எழுந்து சுற்றிலும் பார்வையை பதித்தவாறு சென்றான்.

ஒவ்வொரு பகுதிக்கும் ஆட்கள் இருந்தனர். ஒன்று போல யூனிபோர்மில் இருந்தவர்கள் அவரவர் வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.

மானிட்டரில் இருந்த ஒருவன் மட்டும் அவன் வேலையை பார்ப்பதும் பின் ஓரப் பார்வையால் நேத்ரனை எதிரில் உள்ள கண்ணாடியின் பிம்பம் வழியாக பார்ப்பதுமாக இருந்தான்.

இவனின் கண்க்கட்டு விளையாட்டை கார்த்திக்கின் லேசர் கண்கள் பதிவு செய்து கொண்டது. அனைத்தும் பார்வையிடுவது போல் சென்றவன் அவனையும் ஒரு அழுத்து அழுத்தி மறைவிடம் வருமாறு செய்கை செய்தான்.

அதில் இவனுக்கும் என்ன புரிந்ததோ.. அவன் பார்வையை உணர்ந்து அங்கு செல்ல..
"நீ தானே இப்ப நடக்குற பிரச்சனைக்கு காரணம்..?" எடுத்த எடுப்பில் கேட்டான்.

ஒரு நொடி அதிர்ந்தவன் பின் சாமர்த்தியமாக மறைத்து "ஹலோ யார் நீங்க..? என்ன கேள்வி கேக்குற அதிகாரம் உங்களுக்கு இல்லை. என் பாஸ்க்கு மட்டும் தான் உண்டு.. உங்க முட்டாள் தனமான கேள்விக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது.." என மொழிந்தவன் திரும்பி செல்ல முயல அவனால் நகர முடியவில்லை.

காரணம் அவன் கை கார்த்திக் கையில் சிறையாகி இருந்தது. "அப்பறம் ஏன் இது நடுங்குது" என அவன் நடுங்கும் கையை சுட்டி காட்டி கூற..

இடது கையால் பட்டென வலது கையை அடித்து நடுங்குவதை நிறுத்தியவன்.
"என்ன கேள்வி கேட்குற.. நீ யார் இங்க.. வந்ததுல இருந்து உன் ஆக்ட்டிவிட்டீஸை பார்த்துட்டு தான் இருக்கேன். உன் பார்வையில ஏதோ இருக்கு. நேத்ரனும் இன்னைக்கு சரி இல்ல.." என அவனின் குணத்தை நொடி பொழுதில் அறிந்து கொண்டான் அங்கு மானிட்டர் இன்சார்ஜில் இருக்கும் அகில்.

"சூப்பர்… செமயா நோட் பண்ற.."

"பின்ன… இல்லைனா இந்த போஸ்ட்ல இருக்க முடியுமா.?" என அவன் ஐடி கார்டை சுட்டி காட்ட…

"நீ சொல்றதும் சரி தான். சரி உனக்கு இதுல வேண்டியவங்க யாரு..?" என எந்த மேல் பூச்சும் இல்லாமல் பட்டென கார்த்திக் கேட்க..
மௌனமாக இருந்தவன் கண்ணில் வலியை தேக்கி "மை வைப்…" என்றான்.

"வாட்…? பட் எப்படி?.."

"என்கிட்ட இந்த கம்பெனில வேலைக்கு சேர்ந்ததே அவ சொல்லல.. தனியா கேட்டப்ப.. சர்ப்ரைசிங்கா இருக்கும்னு சொல்லலையாம்.." என கூறியவன் இங்கு வந்த அன்று அழுததை வைத்து '****** சர்ப்ரைஸ் பண்றா...' என்பதை முனுமுனுத்தவன்..

"இன்னைக்கு லாஸ்ட் டே மானிட்டரிங் முடிஞ்ச பிறகு நெக்ஸ்ட் ப்ரோஸஸ்க்கு கொண்டு போய்டுவாங்க. அங்க என்ன நடக்கும் அங்கிருக்குறவங்க என்ன ஆவாங்கன்னு தெரிஞ்சுக்கணும்னா இந்த கேம்மை கடைசி வரை விளையாடுனா தான் தெரியும்.

இங்க இருக்குற எல்லாமே ரகசியம் நிறைஞ்சதா இருக்கும்.. யாரும் யாரோடவும் பேசிக்க மாட்டோம். அவங்க அவங்க வேலையை பார்க்கலைனா கடுமையான தண்டனை கிடைக்கும்.

இப்போ விட்டா அவ்வளவு தான். அவளை எங்க கொண்டு போவாங்கன்னு எனக்கு தெரியாது. அதுக்கு பிறகு அவ எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பு இருக்கு. இப்பவே அவளை சேவ் பண்ணா தான் உண்டு.." என ஒற்றை கண்ணீர் துளியோடு கூறியவன்..

"அதான் மார்னிங்கே சில கோடிங்ஸ் மாத்திட்டேன், சிலது டெலீட் பண்ணிட்டேன்.. இப்போ கண்டு பிடிக்கணும்னா நேரம் எடுக்கும். கரெக்ட் டைம்க்கு சரி ஆகி இந்த ஹியூமன் பவர்ஸ் சக்ஸஸ்புல்லா மானிட்டர் ஆகி அடுத்த ஹியூமன்ஸ்ஸ மானிட்டர் பண்ண ஆரம்பிக்கணும் அப்படி இல்லைனா.. ரெண்டு வருஷ உழைப்பு, ஹியூமன் பிரைன் வேல்யூஸ், இதுவரைக்கும் போட்ட இன்வெஸ்ட்மென்ட் 50 கோடி எல்லாம் ஸ்வாஹா…அப்புறம் இது பெயில்ட் ப்ராஜெக்ட்.." என தம்ப்ஸ் அப் கையை கீழ் நோக்கி காண்பித்தான்..

அவன் கீழ் நோக்கி காண்பித்த குறியில் கார்த்திக், அகில் இருவரது முகமும் புன்னகை சிந்த…

"வாவ்வ்வ்வ்வ்…. சக்ஸஸ்.." என நேத்ரன் கத்தி ஆர்ப்பரித்தது கண்ணாடி கதவிற்கு வெளியே நிற்கும் இவர்களுக்கும் கேட்ட, புன்னகையில் பிரகாசமடைந்த அவர்கள் முகம் மீண்டும் இருளடைந்தது…

இவனையும் அழித்து..
விளையாட்டையும் அழித்து..
மனித உயிர்களையும் காத்து
வாழ்க்கையிலும் வெற்றி பெற
வருபவன் எவனோ!!!...
அவனே சண்டிவீரன்..!!!!
 
Status
Not open for further replies.
Top