ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கதை திரி
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 01


நிலவு தோழியுடன் நேரம் கடத்திய புடவியவள் தலைவன் கதிரவனை காண ஆர்வத்துடன் காத்திருக்க மெல்லிய ஒளிக்கரம் கொண்டு புடவியவளை ஆரத்தழுவி கொண்டான் காதல் மன்னன் கதிரவன்.....

அமைதியாய் புலர்ந்த காலை பொழுது அவ்வாறு அமைதியாகவே தொடர்ந்தும் இருப்பதில்லையே..... பல இரைச்சல்களுக்கு நடுவே தான் பயணிக்கிறது...

இங்கும் சத்தங்களின் ஆரம்பம் நிகழவே செய்தது..... அந்த பெரிய வீட்டின் ஹாலில் டிவி ஓடிகொண்டிருந்தது... ஆனால் அதை பார்க்க அமர்ந்தவருக்கு தான் கவனம் அதில் நுழையவில்லை.... மனைவியை நோட்டம் விட்டவாறே கோபத்துடன் கையில் இருந்த பேப்பரை புரட்டினார் ஐம்பது வயதான அந்த வீட்டின் தலைவர் சேதுராமன்.... இதுவே அவர் மனநிலையை அவர் மனைவி வாசுகிக்கு எடுத்துரைத்தது.....

என்னவென்றே புரியா பதற்றதுடன் சமையலறையில் அதன் நீள அகலத்தை தன் காலால் அளந்து கொண்டே அங்கிருந்து ஹாலில் அமர்ந்திருக்கும் தன் கணவனை எட்டி பார்த்தவர்.. அவர் கவனம் சமையலறை பக்கம் இல்லை என்றதும்.... தனது போனில் இருந்து தன் அருமை புத்திரனுக்கு அழைப்பு விடுத்தார்....

இரண்டு அழைப்புக்கு பின்னும் அந்தப்பக்கம் அழைப்பு ஏற்க பட்டதுக்கான அறிகுறி இல்லாமல் போனதும் மகன் மீது லேசாக கோபம் எட்டி பார்த்தது...

"என்ன இவன் எடுக்கவே மாட்டேங்குறான்.... இவரு வேற இப்படி உக்காந்து இருக்காரு.... இந்நேரத்துக்கு கொறஞ்சது பத்துதடவயாச்சும் சுகி னு கூப்பிட்டிருப்பாரே இன்னைக்கு ஒன்ன கூட காணோம்.. அதிசயமா டிவிய வேற சத்தமா போட்டு வெச்சிட்டு ஒக்காந்திருக்காரு..... இவன் வேற இந்நேரத்துக்கு போன எடுக்காம படுத்துறானே" என்று முனுமுனுத்தவாறே மீண்டும் அழைத்தார்......

அங்கே கெஸ்ட் ஹவுஸில்....

அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்

அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை

மூன்றாவது முறையாக அடித்து ஓய்ந்த தனது அலைபேசி சத்தத்தின் தொந்தரவு சிறிதுமின்றி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் நம் கதையின் நாயகன்.

இருந்தும் விடா முயற்சியின் பலனாய் நான்காவது முறை அடித்த அலைபேசி ஒலி அவனை சற்று அசைத்தது...

அலைபேசியை எடுத்து காதில் வைத்ததுதான் தாமதம் அன்னையின் குரல் கோபமாய் வரவேற்றது.

"டேய் நிலவா என்னடா நீ... எத்தனவாட்டி தான் உன்ன கூப்பிடுறது.. எடுத்து தொலைக்க மாட்டியா?"

"மா மெதுவா மெதுவா... ஏன் டென்ஷன்? தூங்கிட்டேன் அதான் எடுக்கல மா.... என்னாச்சு சொல்லுங்க ஏன் கூப்பிடீங்க?" என்றவாறு தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான்.

"டேய் நிலவா அப்பா காலைல பேப்பர் படிக்க வந்ததுல இருந்து கோபமா இருக்காரு டா... என்னையே உத்து உத்து பாக்குறாரு, வாசல வேற அடிக்கடி பாக்குறாரு.... டிவி சத்தமா போட்டிருக்காரு..... சுகி னு இன்னும் கூப்பிடவே இல்ல"

"ஹா ஹா ஹா.... மெடிக்கல் மிராக்கிள் மா..... இன்னும் சுகி னு சொல்லாத அளவுக்கா!" என்று பொய்யாய் ஆச்சர்யம் காட்டியவன்...
"என்ன இருந்தாலும் உன் புருஷனுக்கு கோபம் னு ஒன்னு வாரதே என்னால தான்னு கரெட்டா தெரிஞ்சி வெச்சிருக்க மா..." என்றான் சிரித்தவாறே....

"என்னத்த பண்ணி தொலைச்ச நீ.... உன் சிரிப்பே சரி இல்லையே... ஏடாகூடமா ஏதும் பண்ணிட்டியா? மனிசன் விட்டா வெடிச்சிடுவாரு போல டா.... இருந்தாலும் அவரு வேணும் வேணும்னு ஆசப்பட்டு உன்ன பெத்துக்கிட்டதுக்கு என் புருஷன ரொம்ப தான் படுத்துற நீ.... பாவம் எனக்குனு இருக்குறது வேற ஒரே ஒரு புருஷன்" என்றவருக்கு இறுதியில் லேசாக சிரிப்பும் எட்டி பார்த்தது....

"சைட் கேப்ல அப்பாவ கலாய்க்கிற பாத்தியா... உன்ன வந்து கவனிச்சுகிறேன் இரு... அவரு இப்போ கோபமா இருந்தாலும்... நான் எப்பவும் அப்பா செல்லமாக்கும் அத மறந்துடாத நீ...." என்றவனுக்கு மனதில் சிறு வருத்தம் எழவே செய்தது.... குரலின் வேறுபாடு தாய் அறியாததா???... அவருக்கும் அதில் வருத்தம் தானே..... சிறுது அமைதிக்கு பிறகு மீண்டும் தொடர்ந்தான்.

"என்ன இந்தவாட்டி பண்ணினது கொஞ்சம் பெரிசு தான்... சமாளிக்கலாம்... சமாளிச்சுடுவோம்..." என்று அம்மாக்கு சொல்வதுபோல் தனக்கும் சொல்லி கொண்டானோ என்னவோ?..

"நிலவா என்னடா பயம் காட்டுற.... டேய் டேய் அப்பா கூப்பிடுறாரு நான் போன வெச்சிடுறேன்... உனக்கு தான் தகவல் சொல்லுறேன் னு தெரிஞ்சிது உன் அப்பா சாமி ஆடிடுவாரு..." என்று சொன்னவருக்கு பதில் சொல்ல கூட அவகாசம் இல்லாமல் போன் இணைப்பு துண்டிக்கபட்டிருந்தது.....

தன் தந்தையின் முகம் இப்போது எப்படி இருக்கும் என கற்பனையில் எண்ணி பார்த்தவனுக்கு... அம்மாவின் அலப்பறையில் எட்டி பார்த்த புன்னகை இப்போது ஏகத்துக்கும் விரிந்தது அவன் இதழில்....

போனை கட்டிலில் போட்டவன் குளியலறையில் புகுந்துகொண்டான்..

சென்னையிலேயே காலம் காலமாக கொஞ்சம் வசதியான வாழ்க்கையை நடத்தும் குடும்பம் சேதுராமனுடையது... அவருடைய பெற்றோருக்கு அவர் ஒரே பிள்ளை.... மகனின் விருப்பப்படி அவர்களது தூர சொந்தத்து பெண் வாசுகியை அவருக்கு மனமுடித்தும் வைத்தனர்..... அவர்களது மறைவுக்கு பின் சொத்துக்கள் அனைத்தும் சேதுராமன் வசமானது....

சேதுராமன் வாசுகி மனமொத்த தம்பதியினர்... சேதுராமன் ஊரிலேயே பெரிய வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றியவர்.... வாசுகி சிறந்த குடும்ப தலைவியாக பணியாற்றுகிறார்..... இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் கார்த்திகேயன்... இருபத்தொன்பது வயது...
இழயவன் வண்ணநிலவன்.... இருபத்தெட்டு வயது.......


காலை ஒன்பது மணி.... ஜேகே ஹாஸ்பிடல் வளாகம் சற்று பரபரப்பாக காணப்பட்டது.... ஹாஸ்பிடல் என்றால் பரபரப்புக்கு பஞ்சமா என்ன?...

"அடி லலிதா என்னடி இவ இவ்வளவு உம்மன்னா மூஞ்சியா இருக்கா.... பேசுறதுக்கு காசு வேற கேப்பா போல இருக்கே..... எல்லாத்துக்கும் கண்ணாலயே பதில் சொல்லுறா.... டாக்டர் னு ரொம்ப தான் பவுசு காட்டுறா.... வந்து பத்து நாள் கூட ஆகல திமிர பாத்தியா"...... என்று நோயாளி ஒருவருக்கு போடவேண்டியது மருந்தை எடுத்து கொடுத்தவாறே தன் வயிற்றிரிச்சலை வார்த்தையாய் கொட்டிகொண்டிருந்தாள் விமலா

"நீ வேற டி... நான் முதல் அந்தம்மா ஊமைனு தான் டி நெனச்சேன்.... அப்பறம் அது வாயில இருந்து வந்த ஒத்த வார்த்தைய பாத்துதான் தெரிஞ்சிது அது பேசும்னு.... நேத்து கூட அவ்வளவு பேருக்கு முன்னுக்கு உன்ன டீன் திட்டினதுக்கும் அவ தாண்டி காரணமா இருப்பா..." என்ற லலிதாவிற்கு எதிரில் இருப்பவளை வாரி விட்டதில் மனத்துக்குள் கோடி மகிழ்ச்சி...

"பாலாப்போனவ நான் அசிங்க பட்டத சொல்லி காட்டலனா இவளுக்கு சாப்பாடு எறங்காது... எனக்கு கீழ வேல பாக்குறவ மரியாதனா என்ன விலனு கேப்பா".... என மனதிற்குள் திட்டியவள்....

"இருக்கும் டி எனக்கும் அப்படி தான் தோணுது.... இவ்வளவு நாள் இருக்க விஷ்வா சார் கூட இப்படி பிகு பண்ணதில்ல.... பாக்கலாம் எவ்வளவு நாளைக்குனு.... இப்படியே திமிரு காட்டிட்டு இருந்தா இங்க வேலபாக்க முடியாது...." என்று கோபத்துடனே சொன்னவாறே அடுத்த நோயாளிக்கு தேவையானத்தை கொடுக்க சென்றாள்

"இவள பத்தி தெரியாததாகும்.... நர்ஸ் இவளே பெரிய ஆளுக்கு தான் நடிப்பா இவ சொல்லுறா.... இவளுக்ளெல்லாம் ஜால்ரா போட வேண்டியிருக்கே...." என மனதிற்குள் நொந்தவாறே அடுத்த வேலையை பார்க்க சென்றாள் லலிதா...

இவர்களது பேச்சின் நாயகி அதிரலின் ஸ்கூட்டி அப்பொழுது தான் ஹாஸ்பிடல் வளாகத்திற்குள் நுழைந்தது.... வந்தவள் நேரே சென்றது அங்குள்ள சிறிய பிள்ளையார் சிலை அருகே தான்..... சில நிமிடம் அதன் அருகே கண் மூடி நின்றவள் மனதில் ஆயிரம் யோசனைகள்.... தீர்க்கபடாத கேள்விகள் எத்தனையோ ஏராளம்..... விடை இருந்தும் அதனை ஏற்க ஏனோ தயக்கம்..... அவளை சுற்றி பின்னப்பட்ட பூட்டுக்களின் சாவி தனக்கு எதிரில் இருப்பவரிடம் இருந்தும் தராமல் விளையாடுகிறாரோ.....

ஏதோ யோசனையில் இருந்தவள் அதனை ஒதுக்கி விட்டு முன்னிருக்கும் பிள்ளையாரை பார்த்தவள் "நீ விளையாடு பிள்ளையாரே.... ஆனா கடைசில நான் தான் ஜெயிப்பேன்..." என்று எதிரில் இருப்பவரிடம் கண்களால் பேசினாள்.... கடவுளிடம் கூட அவள் வார்த்தைகளுக்கு பஞ்சமோ என்னவோ....

ஜாதி மல்லி மலரும்.....






 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 02


எப்போதும் அமைதியாவே இருக்கும் வீடு இன்று அப்படி இல்லையோ என்ற எண்ணத்தை தான் நடைப்பயிற்சி சென்று வந்த கார்த்திகேயனுக்கு கொடுத்தது...


"குட் மார்னிங் பா..... இன்னைக்கு வாக்கிங் வரலையே ஏன் பா...." என விசாரித்தவரே ஓடிக்கொண்டிருந்த டிவியை அணைத்தான்....

அதில் சிந்தனை கலைந்தவர்... "குட் மார்னிங் கார்த்தி....." என்றதோடு நிறுத்திக்கொண்டார்.... அவர் கவனம் அவன் பேச்சில் இல்லையென்பது அவனுக்கு அப்பட்டமாக தெரிந்தது..... யோசனையாக தாயை நோக்கியவனுக்கு.... தன் உடன்பிறப்பின் வேலை என்பது உள்ளங்கை நெல்லிக்காயானது..... தந்தையின் கவனம் வாசல் நோக்கியே இருப்பதை கண்டவன் தாயை நோக்கி நகர்ந்தான்......

"என்ன சுகி டார்லிங்... உன் அன்பு கணவர் வழி மேல் விழி வைத்து யாருக்கோ காத்திருக்காரு போல..... ஒரு வேல அப்பாவோட மனம் கவர்ந்த கள்ளி யாரோவா இருக்குமோ???... பாத்துமோவ் விட்டா எனக்கு சித்திய கூட்டி வந்துடுவாரு போல.."

"என் புருஷனுக்கு தான் அந்த சாமர்த்தியம் எல்லாம் இல்லையே.. உனக்கு இந்த ஜென்மத்துல சித்தி பாக்கியம் இல்லடா மகனே.." என்றவரது பேச்சில் கணவன் மீதான நம்பிக்கையும், பெருமையும், காதலும் சேர்ந்தே ஒலித்தது.....

"அப்பறம் என்னவாம் நம்ம தொந்தி சேதுராமனுக்கு... ஒரு கிலோ டென்ஷன் ஓட உக்காந்திருக்காரு..." என்றவாறே மேசையில் இருந்த ஆப்பிளை எடுத்து கடித்தான்.....

"கார்த்தி உனக்கிட்ட எத்தன தடவ சொல்றது வெளிய போய் வந்தா முதல்ல கை கழுவிட்டு தண்ணி குடிசிட்டு தான் எதா இருந்தாலும் சாப்பிடணும்னு.. நீயும் அவன மாதிரியே சொல் பேச்சு கேக்குறதே இல்ல..." என்றவரது கரமானது அவன் கையிலிருந்த ஆப்பிளை வாங்கியப்படியே குடிப்பதற்கு நீரை அவன் கரத்தில் வைத்தது....

"அவர் டென்ஷன் எல்லாம் உங்களால தானடா.. அதுலயும் கடைசியா ஒருத்தன பெத்து வெச்சிருக்கனே.... அவன் ஒருத்தன் போதாதா..." என்றவர் கழுவி வெட்டிய ஆப்பிள் தூண்டுகளை அவன் கையில் வைத்தார்....

"அப்போ இன்னைக்கு இருக்கு ஒரு சம்பவம் இருக்கு... நமக்கு என்டர்டைன்மெண்ட் உறுதி.. ஓகே அப்போ நான் சட்டுனு குளிச்சிட்டு ரெடி ஆகி வருவனாம்... நீ எனக்கு பூரி சுட்டு வைப்பியாம்... ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டுட்டே என்ஜோய் பண்ணுவோமாம்..."

"இந்த உலகம் உன்ன நல்லவன்னு நம்புது பாரேன் டா கார்த்தி.... உன்ன கட்டிக்கிட்டு கீதா என்ன பாடு பட போறாளோ???... நீ அவனுக்கும் மேல... போய் குளி முதல்ல....."

"உனக்கு தெரிஞ்சது இந்த உலகத்துக்கு தெரியல பாரேன் மா.. யூ ஆர் ஜீனியஸ் மா.. என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்குறேன்னு உன் மருமகள் கிட்ட என்னை தூக்கி குடுத்துடு... அப்பறம் என் கீத்ஸ் டார்லிங் பாத்துக்கும்..." என்று அம்மாவை கொஞ்சிவிட்டு குளிக்க தனது அறைக்கு நுழைய முன் யூ டர்ன் அடித்து மீண்டும் தாயினருகில் வந்தவன்

"ஒரு வேள நான் வர முதல் அவன் வந்துட்டான்னா.. கொஞ்ச நேரம் அவன வெயிட் பண்ண சொல்லு.. எதையுமே மிஸ் பண்ணவே கூடாது.. அவன் பேசினா அம்புட்டும் லட்டு லட்டு பாயிண்ட்ஸா இருக்கும்.. அதுக்கு உன் புருஷன் முழிக்கிறத பாத்து என்ஜோய் பண்ணனும்.." என்று வாயடித்துவிட்டு செல்பவனை பாத்து தலையிலடித்தவாறே சமையலறைக்குள் நுழைந்தார்.. தன் மகன் கேட்ட பூரியும் சின்ன மகனுக்கு பிடித்த தோசையும் செய்வதற்காக...

தயாராகி பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் அதே அறையிலே அமர்ந்திருந்தான் வண்ணநிலவன்... இத்தனைக்கும் அவன் செல்ல வேண்டியது ஒரே கம்போவுண்ட்க்குள் அருகில் இருக்கும் தன் வீட்டுக்குத்தான்... தந்தையை எப்படி எதிர் கொள்ள போகிறோமோ என்கின்ற யோசனையே அவனை தேக்கியது.... தீர்க்கமாய் ஒரு முடிவு எடுத்துக்கொண்டவன் தன் வீட்டை நோக்கி விரைந்தான்.....

சற்று முன் இருந்த தடுமாற்றம் சிறுதும் இல்லை அவனிடத்தில்..... மனதில் தீர்மானித்து விட்டான் இனி கடவுளே வந்தாலும் பேசியே சமாளித்து விடும் திறமை அவனிடம்.....

"சுகி டார்லிங் பசிக்கிது.... டிபன் ரெடியா?..." என்று கேட்டவாறே உள் நுழைந்தவன்.... ஹாலில் அமர்ந்திருந்தவரை சிறிதும் கண்டுகொண்டதாக தெரியவில்லை....

சத்தம் கேட்டு வெளியே வந்தவர்... "வா நிலவா... எல்லாம் ரெடி தான் சாப்பிடலாம் அண்ணாவும் இப்போ வந்துடுவான்... நீ வந்து உக்காரு நான் எடுத்து வைக்கிறேன்....." என்றவர் கணவனின் பார்வை தன்னை துளைப்பதை கண்டும் காணாமல் இருந்தார்...

"ஓகே மா கார்த்தியும் வரட்டும்.... என்றவன் சென்று அமர்ந்தவன்.... உன் புருஷன் அய்யனார் லுக்ல உன்ன தான் பாக்குறாரு அவரயும் கூப்பிடுமா.." என்றான் நக்கல் சிரிப்புடன்... அவனுக்கு இரண்டு அடியோடு சேர்த்து கையில் அருந்துவதற்கு நீரை வைத்தவர்... கணவனை அழைக்க விரைந்தார்....

"என்னங்க.. "

"ம்ம்" என்ற உருமல் தான் வெளிவந்தது....

"சாப்பாடு..." என்றவருக்கு வாயில் அடுத்து வார்த்தை வாராமல் சிக்கிக்கொண்டது

"என்ன"

"சாப்பாடு எடுத்து வெச்சிட்டேன்... சாப்பிட வாங்க...." என்றவர் ஒரே ஓட்டமாய் ஓடியே விட்டார்....

"கெழவிக்கு எங்கிட்ட பயமாம்.... இத நான் நம்பனும்.... எல்லாம் நடிப்பு.... சேர்க்க சரி இல்ல இவளுக்கு... என்ன கொழுப்பு இவனுக்கு நான் இருக்கும் போதே சுகி சுகினு கொஞ்சல் வேற.." என்று முனுமுனுதவாறே சென்றவர் கண்டது மகன் இருவரும் மேசையில் அமர்ந்து இவர் வருகைக்கு காத்திருப்பதை தான்.. அந்த நொடி கோபம் மறந்து மேசையை நோக்கி தன்னைப்போல் அவசரமாய் நகர்ந்தது கால்கள்.... மகன்களின் பசி பொறுப்பாரா என்ன??..

"இட்லி வைக்கவாங்க?..."

"ம்ம்" என்றவர்.... வைத்ததும் சாப்பிட தொடங்கினார்.

சாப்பாடு முடிந்து ஹாலுக்கு வந்தவருக்கு ஆரம்பிக்க ஏதோ ஒரு தயக்கம்.... இனி பேசியும் மாற்றகூடிய விடயம் இல்லை என தெரியும் தான் இருந்தாலும் பேசாமலும் இருக்க முடியாதே.... அதிலும் கடைசி மகன்.... தன் மாமனார் ராஜசிங்கம் போல் பிடிவாதம் பிடித்தவனாயிற்றே..... அதிலும் இன்று அவர் போலவே வேலையிலும் வந்து நிக்க தாங்க முடியவில்லை அவரால்.....

"சுகி.. சுகி..."

"என்னங்க"... என்றார் பவ்யமாக

"இவ ஒருத்தி.... தெரியாதது போலவே கேப்பா.." என்று எண்ணியவர்... "அவன கூப்பிடு..." என்றார்.

அவனோ அருகில் இருந்தும் கேக்காதது போலவே அமர்ந்திருந்தான்.... அதுவே அவர் பிபியை மேலும் கூட்டியது... இது வேலைக்காகாது என நேரடியாகவே தொடர்ந்தார்...

"என்ன பண்ணி வெச்சிருக்க நிலவா..."

"என்ன பண்ணேன் பா.." என்று அப்பாவியாய் கேட்டு வைக்க கார்த்தியினால் சிரிப்பை அடக்குவது பெரும்பாடானது...

"தெரிஞ்சும் தெரியாத மாதிரி பேசாத நிலவா.. ஏன் இப்படி ஒரு விஷயத்தை செஞ்ச.. நீ படிச்ச படிப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு இந்த வேல உனக்கு.. எனக்கு பிடிக்காதுனு தெரியாதா?.."

"எனக்கு பிடிச்சிருக்கே பா...."

"ஏற்கனவே படிச்சதும் உனக்கு பிடிச்சதா தான் எனக்கு ஞாபகம் நிலவா...."

"எஸ் ஒப் கோர்ஸ்... பிடிச்சது தான் நான் இல்லனு சொல்லலையே.... பட் இப்போ இது தான் பிடிச்சிருக்கு....."

இவர்களது பேச்சின் சாராம்சம் புரியாமல் விழித்து கொண்டிருந்த தாயை பார்த்த கார்த்தி மெல்ல தாயினருக்கே குனிந்து
" மா ஏதாச்சும் புரியுதா உனக்கு?.." என்றான்

"இல்லையேடா.... ஏதோ புது படம் பாக்குற போலவே இருக்கு...... அப்படி என்ன வேலைக்கு போக போறான் உன் தம்பி....."

"உன் அருமை புதல்வன் சென்னை சிட்டிக்கே ஏ.சி.பி யா அப்போயிண்ட் ஆகி இருக்கான்.. உன் அப்பா மாதிரியே போலீஸ் வேலைக்கு போறான் மா... அப்பா சும்மாவே குதிப்பாரு இப்போ சலங்கை வேற கட்டி விட்டுட்டான் உன் பையன்.. இனி பாரு ஆட்டத்த.."

"போலீஸா டா.." என்று வினவியவாறே வாயில் கை வைத்துக்கொண்டே... "சிங்கம் படத்துல வர சூர்யா மாதிரியாடா?.. அப்போ நானும் அப்பப்போ போலீஸ் ஜீப்ல மார்க்கெட் போகலாம்ல..... கடைசியா என் அப்பா கூட போனது.." என்றார் மலரும் நினைவுகளுடன் வாயெல்லாம் பல்லாக.....

அவரை எற இறங்க பார்த்தவன் "நீ நடத்துமாவ்... அங்க கவனி இடைலபேச பாயிண்ட் கிடைக்கலனா அப்பா உன்ன தான் கூட்டு சேத்துக்குவாங்க கவனம்..."

"அப்போ இடைல ஒரு வருஷம் பாரின் போகணும்னு போனது இதுக்கு தானா?.." என்ற தன் தந்தையை ஏறிட்டவன்,"
ட்ரைனிங்னு சொன்னா போக விட்டிருப்பீங்களா?.." என்று எதிர் கேள்வி கேட்டான்...

விட்டிருக்க மாட்டோம் என்பது அவருக்கு சர்வ நிச்சயம்.. இதில் என்ன பதில் சொல்வது.. சிறு அமைதிக்கு பின் அவரே தொடர்ந்தார்....

"எனக்கு பிடிக்காதத பண்ண எப்போ இருந்து ஆரம்பிச்ச நீ...."

"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே.." என்றவன்
"போலீஸ் வேல பிடிக்காதாம்... ஆனா போலீஸ் ஆபீஸ்ர் பொண்ண கடத்தி வந்து கல்யாணம் மட்டும் பண்ணிப்பாராம்...." என்று வாய்க்குள் சொல்ல அது அங்கிருந்தவர்கள் காதில் நன்றாக விழவே செய்தது...... இதில் வாசுகி சற்று சத்தமாக சிரித்தும் விட்டார்....

அவரை முறைத்த சேதுராமன், "கிழவிக்கு இன்னும் குமரின்னு நெனப்பு..... சிரிப்ப பாரு.... அவளும் விருப்பப்பட்டு கூட வந்துட்டு ஏதோ கடத்தி வந்த ரேஞ்சுக்கு பில்டப் பண்ணி வெச்சிருக்கா.." என மனதில் மனைவியை வருத்தவாறே மகனிடம்,
"இப்போ என்ன தான் சொல்ல வர நிலவா.. இது நமக்கு வேணாமே.."

"அப்பா அப்படி என்னால விட முடியாது பா.... நான் இத தான் பண்ண போறேன்... எனக்கு எதுவும் ஆகாம நான் பாத்துப்பேன்.... நான் என்ன பண்ணினாலும் சரியாத்தான் இருக்கும்னு சொல்லுவீங்களே பா.. இப்போ என் மேல அந்த நம்பிக்கை இல்லையா?.." என்று கேட்டவன், அப்பா பார்க்காதவாறு அண்ணனையும் அம்மாவையும் பார்த்து கண் சிமிட்டினான்.....

"சுகி..."

"இந்தா கூப்பிட்டாருல.. இந்தா கூப்பிட்டாருல.." என்ற கார்த்தி தோளில் அடி ஒன்று வைத்த வாசுகி.. தனது பெர்போமன்ஸை தொடங்கினார்...

"அது எப்படி நிலவா அப்பா உன்ன நம்பாம போவாரு.... உன்ன நம்பாம யார நம்புவாரு சொல்லு.. இத ஒரு கேள்வினு கேட்டுகிட்டு.. அப்பாக்கு போலீஸ் வேலனா ரொம்ப பிடிக்கும்.... அதுக்காக தான் என்னையே கட்டிக்கிட்டாருனா பாத்துக்கோயேன்.... எப்போ வேலைல சேரனும் நிலவா.." என்றவர் கணவனது கோப பார்வையையும், முறைப்பையும் உணர்ந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை....

"வர மண்டேல இருந்து போகணும் மா..."

"இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு.. என்ன போலீஸ் ஜீப்ல கூட்டி போகணும் சொல்லிட்டேன்.." என்று பேச்சு கொடுத்தாவாறே கணவனை கடந்துசென்றார்.....

சேதுராமன் அப்படியே தான் நின்றிருந்தார்... நிலைமை கை மீறிய பின் யாரை நோக.. இதன் மூல காரணம் அவர் மாமனார் என்பது அவருக்கு சர்வ நிச்சயம்... இவ்வாறு சிந்தனையில் இருந்தவரது கவனத்தை கலைத்தது கார்த்தியின் தொடுகை...

"அப்பா... எதையும் யோசிக்காதீங்க பா... நாம எல்லாம் இருக்கோம் தான பாத்துக்கலாம்.. ஆரம்பமே நெகடிவா யோசிக்க வேணாமே.. அவன் சந்தோசம் தானப்பா நமக்கு முக்கியம்... நடந்த விஷயம் எல்லாம் அவன ரொம்ப உடச்சிருச்சு பா... இப்போ தான் கொஞ்சம் தேறி வறான்... இப்போ நம்ம சப்போர்ட் இல்லனா எப்படி பா... உங்களுக்கு நான் சொல்லணும்னு இல்ல பாத்துக்கோங்க பா..." என்றவனின் பேச்சை கேட்டவர் ஒரு பெருமூச்சுடன் உள்ளே சென்றார்.....

அப்பாவின் மனநிலையும் அவனுக்கு புரியத்தான் செய்தது... இருந்தும் என்ன செய்வது முன்பு இருந்ததற்கு இது எவ்வளவோ மேல் என்பதே கார்த்தியின் எண்ணம்...




"மிஸ் அதிரல்... ரொம்ப வேலையோ... ரெண்டு நாளா கேன்டீன் பக்கம் ஆளையே காணோம்.." என விஷ்வா கேட்ட கேள்விக்கு அதிரலிடம் இருந்து ஒரு புன்னகையே பதிலாய் வந்தது...

"இந்த ஸ்மைல மட்டும் மாத்தவே மாட்டிங்களே..."

"கொஞ்சம் பிசி விஷ்வா..."

"ஓகே சாப்பிடலாம் வாங்க.... இனி ஏதும் கேள்வி கேட்டா டிபன் பாக்ஸாலயே அடிச்சாலும் அடிப்பீங்க...." என்றவனுக்கு மீண்டும் புன்னகையே பதில் அவளிடம் இருந்து....

"ஒரு பேச்சுக்காவது அப்படி அடிக்க மாட்டேன்னு சொல்ல மாட்டீங்க.. அப்படி தான... அதுக்கும் ஸ்மைல் தானா?.. பட் ஐ லைக் யோர் ஸ்மைல்..."

"இதுக்கும் ஸ்மைல் ஆ..... இந்தா விளையாட்டுக்கு நான் வரல சாப்பிடுவோம்....."

விஷ்வாக்கு அதிரலை பார்த்ததில் இருந்து அவள் மீது ஒரு கண்..... அது அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும் வகையில் வெளிப்படையாகவும் இருந்தது.... அதனை அதிரலும் உணர்ந்தே இருந்தாள்.... சும்மாவே அவளிடம் பேசுச்சுக்கு பஞ்சம்.... இதில் இன்னும் பஞ்சமாகி போனது.....

அவள் அவுஸ்திரேலியா இருந்து இங்கு வந்து இரண்டு வாரங்கள் தான் இருக்கும்.. ஒரு அவசர காரியமாக இங்கு வந்தவளை சந்தர்ப்ப சூழ்நிழை இங்கேயே இருக்கவும் வைத்துவிட்டது.. விதி அவள் வாழ்க்கையை இங்கேயே முடிச்சி போட்டு விட்டது போலும்..

ஒரு வழியாக வேலை முடிந்து எப்போதும் போல தாமதமாக தனது ஸ்கூட்டியில் வீட்டுக்கு வந்து இறங்கியவளுக்கு முகம் இறுகி போனது..... எதுவெல்லாம் வேண்டாம் என்று விட்டு சென்றாளோ.... இன்று அந்த நரகத்திலேயே வாழ வேண்டிய சூழ்நிலை அவளுக்கு...

"வா மா அதி சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. ப்ரெஷ் ஆகிட்டு வா சாப்பிட.."

நிமிர்ந்து பார்த்தாளே தவிர எதுவும் பதில் சொல்லாமலேயே தனது அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டாள்..

"போறத பாரு.. பதில் சொன்னா முத்து கொட்டிட்டும்.. அம்புட்டும் திமிரு ஆத்தாக்காரி மாதிரி.. இது கூட எல்லாம் பாசமா பேசி தொலையணும்னு தலையெழுத்து...." என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டார் அவ்வீட்டின் தலைவி விசாலாட்சி...

கதவடைத்து கொண்டவள் நேரே சென்றது அந்த ஆள் உயர்ந்த படத்துக்கு முன் தான்... அதில் இருப்பவருக்கு மாலை போடப்பட்டிருந்தது.... அவர் தான் அவளது தாய் சீதா லட்சுமி.... அமைதியின் மறுஉருவம் அவர்.. அதிர்ந்து பேச கூட தெரியாதவர்.. எவ்வளவு பெரிய செல்வ சீமாட்டியாக இருந்தாலும் எளிமையாக பிறரை மதித்து வாழ பழகியவர்.. பழக்கப்பட்டவர்.. வெகுளியானவரும் கூட.... அதுவே அவர் வாழ்க்கையையும் உயிரையும் சேர்த்தே பறித்துக்கொண்டது.. தாயை பற்றிய யோசனையில் இருந்தவளை கலைத்தது கதவு தட்டப்படும் ஓசை... அதை கேட்டவளுக்கு ஒரு சலிப்பு தான் தோன்றியது.. அவள் அறிவாள் அது யாரெனெ அதனால் உருவான சலிப்பே அது...

கதவை திறந்தவள் எதிர் பார்த்தது போல வெளியே வீல்செயாரில் அமர்ந்திருந்தார் கலையரசன்... யார் பார்த்தாலும் பரிதாபப்பட கூடிய தோற்றத்தில் தான் இருந்தார்.. ஆனால் அவளால் பரிதாபப்பட தான் முடியவில்லை... அவர் செய்தவற்றை மன்னிக்க அவள் ஒன்றும் அவள் தாய் இல்லையே...

கலையரசன் எல்லோராலும் அதிரலின் தந்தை எனப்படுபவர்.. ஆனால் பெயரளவில் கூட அவருக்கு அந்த உரிமையை கூட அவள் கொடுக்க விரும்பவில்லை... ஆம் இன்றைளவிலும் அவள் பெயர் அதிரல் மட்டுமே தான்... கலையரசனின் பெயரை கூட அவள் பெயரின் பின்னால் சேர்த்துக்கொள்ள அவள் விருப்படவில்லை.. மனிதனாக கூட மதிக்க தோன்றாதவர் எப்படி தந்தையாக தோன்றுவார்...

"டின்னர் ரெடி ஆகிடுச்சு அதி மா... பெரியம்மா உன்ன சாப்பிட கூப்பிடலாம் நீ வரலன்னு சொன்னியாமே.... சாப்பிடலாம் வா டா...."

அவரை ஒரு வெற்று பார்வை பார்த்தவள்.... பதில் எதுவும் கூறாமல் மீண்டும் கதவை அடைக்க முயன்றவளை அவர் வார்த்தை மீண்டும் தடை செய்தது....

"அப்பா மேல உனக்கு கோபம் இருக்கும்னு அப்பாக்கு தெரியும்டா அதி மா.. அப்பா செஞ்சது தப்பு தான்டா.. ரொம்ப பெரிய தப்பு தான்.. அப்பாவ மன்னிக்க கூடாதாடா.. இனி அப்படிலாம் பண்ண மாட்டேன்டா.. உனக்கு என்ன வேணுமோ சொல்லுடா அப்பா உனக்காக எதையும் செய்வேன் அதிமா.." என்று அவர் சொல்ல,

அவள் பார்வை உள்ளே மாட்டி வைக்கப்படிருந்த அவளது தாயின் படத்தில் பட்டு மீண்டது.. அவள் பார்வையை அவரும் உணர்ந்து தான் இருந்தார். என்னதான் செய்தாலும் அவள் தாயை அவளிடம் திருப்பி தர முடியாது என்பதை பார்வையாலேயே உணர்த்தி விட்டாளே...

"மிஸ்டர் கலையரசன்.. வாக்கு கொடுக்கவும், காப்பாத்தவும் ஒரு தகுதி வேணும்.. எம் ஐ ரைட்?.." என்று வினவியவாறே கதவை அடைத்தாள்...

பேசியது இரண்டே வசனங்கள் தான்.. அவற்றிலே அவர் தனக்கு எந்த உறவும் இல்லை என்பதையும்.. உன்னை நம்ப நான் தயாரில்லை என்பதையும் சொல்லாமல் சொல்லி சென்றுவிட்டாள்..

வார்த்தைக்கு வார்த்தை அப்பா அப்பா என்று உரிமையை நிலை நாட்ட விளைந்தவருக்கு முகத்தில் அறைந்த உணர்வு.. அவளை ஒரு வகையில் கட்டாயப்படுத்தி இங்கே இருக்க வைத்தாகிவிட்டது.. ஆனால் மன்னிப்பு?? எப்போதும் கேள்வி குறி தான்... அவள் குணம் அவர் அறிந்ததே.. மன்னிப்பு யாசகம் இனி காலத்தின் கையில் தான்...



ஜாதி மல்லி மலரும்...........


 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 03


சுற்றி எங்கும் குமிருட்டு... அடர்ந்த காடு... பயமுறுத்தும் அமைதி.... அதை கலைக்க தூரத்தில் எங்கோ விலங்கு ஒன்று அலறும் சத்தம்.... கூடவே அந்த சத்தத்தையும் தாண்டி அதிரல் காற்றை கிழித்து வேகமாக ஓடிகொண்டிருந்தாள்... பின்னால் அகோர உருவம் ஒன்று விடாமல் துரத்திகொண்டே இருந்தது...

அந்த உருவத்தை திரும்பி பார்த்தவாறே ஓடினாள்.. உயிர் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை... வாழ வேண்டும் என்ற ஆர்வம் கூட பெரிதாக இல்லை... ஆனால் அந்த உருவத்தின் அருவருப்பு அவளை நிற்க விடவில்லை... ஓடுவதையும் நிறுத்த விடவில்லை... ஒருகட்டத்தில் அவளாலும் முடியாமல் போனது.... கால்களில் இருந்த பலம் வடிய... வேகம் படி படியாய் குறைந்து அந்த கோர உருவத்தின் பிடியில் சிக்க இன்னும் சில நொடிகளே....

முடிந்தது.... எல்லாம் முடிந்தது.... இனி இவ்வுலகில் அவள் இல்லை என தன் தாயை மனதில் எண்ணியபடி கண்களை மூடியவளை ஓர் வலிய கரம் பற்றி அதன் இரும்பு நெஞ்சுக்குள் அவளை புதைத்துக்கொண்டது... அந்த உருவமோ என அருவருத்தவளுக்கு... இல்லை, இது தன்னை அரன் போல் காக்கவந்தவன் என மூளை எடுத்துரைத்தது... அக்கைகளுக்குள் பாதுகாப்பாய் ஓர் உணர்வு.. அவள் காதுக்கு மிக அருகில் கேட்ட இதயத்துடிப்பு அவளுக்கே அவளுக்காய் துடிப்பது போல் ஓர் உணர்வு.. இனி தனக்கு ஆபத்து இல்லை என்பதாய் அவளிடம் ஒரு பெருமூச்சு....

தன்னை எழுப்ப முயன்ற அவன் குரலோ காதின் ஒரு மூலையில் ஒலித்தது.. கண்களை மெல்ல திறக்க முயன்றவளுக்கு அவன் மங்களான வரி வடிவமே தெரிந்தது.... நன்கு இமை தட்டி பார்க்க முயன்றவளுக்கு அவ்வளவு எளிதில் அது முடியவில்லை... இருந்தும் முயன்று விழித்தவளுக்கு சுற்றிலும் இருட்டு... மீண்டும் இமை தட்டி இருட்டை பழக்கபடுத்த சிறிது சிறிதாக அவ்விடம் பார்வைக்கு புலப்பட்டது.... அவள் காணும் இடம் அவள் அறை என்பதை உணர்த்த மூளை சில வினாடிகள் எடுத்ததுகொண்டது..... அதன் பின்னரே அவள் கண்டது கனவு என்பதும் அவளுக்கு புரிந்தது....

எழுந்து நேரத்தை பார்த்தவளுக்கு காலை நான்கு மணி என கடிகாரம் பதிலளித்தது..... "ச்சே என்ன இது இப்படி ஒரு கனவு"..... என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவாறே தலையை பிடித்துக்கொண்டாள்..... இனி தூங்கினாலும் தூக்கம் வர போவதில்லை என உணர்ந்தவள்.... அங்கு பால்கனியில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சல் போன்ற கதிரையில் அமர்ந்தவாறே அமைதியின்றி தள்ளாடும் மனதை அடக்க எப்போதும் போல் தாயின் டைரியை வெறிக்க தொடங்கினாள்...... கூடவே பழைய நினைவுகலின் பிரவாகம் அலை அலையாய் அவளுள்ளே....

சரியாக மூன்று வருடங்கள் முன்பு தாயின் நினைவு நாள் ஒன்றில் இங்கிருந்து கிளம்பியவள் தான்.... அதன் பின் அவள் வந்தது கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு தான்..

அதிரலின் தாய் சீதாலட்சுமி.., அழகும் அமைதியும் வசதியும் அளவுக்கு அதிகமாக கொடுத்த கடவுள் அதற்கு விலையாய் வாழ்க்கையையும், ஆயுள் ரேகையையும் வாங்கி கொண்டாரோ என்னவோ???....

ஊரில் பெரும் பணக்காரர் ராஜய்யாவின் ஒரே வாரிசு தான் சீதாலட்சுமி.... சிறுவயதிலேயே தாயை இழந்த தன் மகள் திருமண வயதை அடைந்ததும் அவர் தேடாத வரன் இல்லை... நீ நான் என போட்டி போட்டுகொண்டு வந்த வரன்களில் சிறு குறை இருந்தாலும் நிராகரித்தார்..... அந்தளவுக்கு சிறத்தையுடன் தேடினார் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளையை மட்டுமின்றி தன் சொத்துக்கு ஏற்ற வாரிசையும்.......

அந்த நேரம் அவர்களின் வீட்டில் கார் டிரைவர் ஆக வேலைக்கு சேர்ந்தவர் தான் கலையரசன்... நன்கு படித்தவர் தான் ஒரு அனாதை எனவும் சந்தர்ப்ப சூழ்நிலை எனவும் இந்த வேலையில் சேர்ந்தார்.... பார்க்க அமைதியான முகமும், நல்லா குணமும், வேலையில் நேர்த்தியும் அவரை ஒரு வருடத்திலேயே ராஐய்யாவின் நம்பிக்கைக்குரியவராக மாற்றியது.....

இத்தனை வருட வாழ்க்கையில் அவர் மனிதர்களை படித்து கொண்டது இந்த ஒரு வருடத்தில் தான்...... வெள்ளந்தி மனம் கொண்டவர்.... மனிதர்களில் விஷ பாம்புக்களும் உண்டு என அறியாதவர்.... மனைவி இறந்தபின் மகளுடன் வாழ்க்கையை சுருக்கி கொண்டவருக்கு கூட இருக்கும் அட்டைப்பூச்சிகளை இனம் காண தெரியவில்லை.....

மகளுக்கு வரன் பார்க்கும் இந்த ஒரு வருடத்தில் தான் உறவுகள் என கூட இருக்கும் குள்ளநரிகளின் புத்தி அவருக்கு அம்பலமானது.... ஒருவரையும் நம்ப முடியவில்லை..... உறவினர்கள் என்று வருவோர் எல்லாம் தன் மகளையும் வெறும் வருமானமாக தான் பார்த்தனர், பேசினர்..... வெளியில் வரன் பார்க்கவும் விடவில்லை... அதற்கு ஏதோ ஒரு தடை எப்போதும் இருந்துகொண்டே இருந்தது..... பணம் சுரண்ட முடியாமல் போய்விடுமோ என இல்லாத கதைகளை கட்டி ஏதேதோ பேசி எல்லாவற்றையும் கெடுத்தனர்...... ஒரு கட்டத்தில் மகள் பற்றிய கவலையே ராஜய்யாவை மிகவும் வாட்டியது..... எங்கே தனக்கு பின் மகள் தனித்து விடுவாளோ என மிகவும் பயந்து போனார்.... அதிலும் இந்த கழுகு கூட்டத்தின் மத்தியில் விட்டு செல்ல விரும்பவில்லை அவர்.......

அந்த நேரத்தில் அவருக்கு நம்பிக்கைக்குரிய ஒருவராக தெரிந்தவர் கலையரசன் தான்.... அவரிடம் பேசி எப்படியோ மகளை முடித்து கொடுத்து விட்டார்..... மருமகன் கையில் மகளையும் கொடுத்து சொத்து பொறுப்பையும் கொடுத்தார்..... அப்போது அவர் அறியவில்லை இந்த முடிவுக்காக பின்னாளில் வருந்தபோகிறோம் என.... அறிய நேரிடும் போது நிலைமை கைமீறி சென்றிருக்கும்..... அவரை சுற்றி நல்லவர்கள் இல்லாமல் போனது கூட விதியின் செயல் தானோ என்னவோ....

கலையரசணும் சீதாலட்சுமியும் நன்றாகவே வாழ்ந்து வந்தனர்.... அதற்கு சான்றாக அடுத்து வருடமே கருத்தரித்து அதிரலை பெற்றெடுத்தார் சீதா.... எல்லாம் சுமுகமாகவே சென்றது..... ஆனால் அதிரலுக்கு ஐந்து வயதாகும் போது தான் தெரிந்தது அவளால் பேச முடியாது என்பது..... சீதாலட்சுமி மிகவும் உடைந்து போனார் இருந்தும் மனதை தளர விடவில்லை.... பணம் அளவுகதிகமாகவே இருந்தது அதனால் செய்ய வேண்டிய வைத்தியம் எல்லாம் செய்து கொண்டுதான் இருந்தார்..... காது நன்றாகவே கேட்கும் என்பதால் படிப்பில் பெரிதாக பிரச்சனை இருக்கவில்லை...... இப்படியே நாட்கள் வருடங்களாக விரைந்தது.....

அதிரலுக்கு அப்போது வயது ஏழு..... சென்ற வருடம் தான் இ.என்.டி மருத்துவர் ஒருவரால் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது..... கடந்த இரண்டு மாதங்களாக ஸ்பீச் தெரபி சென்றுகொண்டிருக்கிறாள்.... இன்னும் சரிவர பேச முடியவில்லை எனினும் மகளால் பேச முடியும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் சீதா..... ஒருவார்த்தையாவது மகள் பேசி கேட்க மாட்டோமா என்பதே சீதாவின் உச்சக்கட்ட ஆசையில் ஒன்று.....

அன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்பீச் தெரபி சென்ற மகள் வரும் நேரம் என்பதால் வாசலில் காத்திருந்தார் சீதா... அப்போது வாசலில் வாட்ச்மேன் யாரிடமோ வாக்குவாதம் செய்வது கேட்டது.....

"குமார் அண்ணா... என்ன பிரச்சனை?.. யார் அவங்க?..."

"யாருன்னே தெரியலமா? இரண்டு நாளா வந்து பிரச்சனை பண்ணுறாங்கம்மா?? பெரியய்யாவோட பேசணுமாம் தூரத்து உறவாம்னு கத விட்டுட்டு இருகாங்க மா"..... என்றவர் வெளிய நின்ற பெண்மணியை வெளியேற்றுவத்திலேயே குறியாய் இருந்தார்..

"குமார் அண்ணா இது தப்பு.... இப்படி பேசாதீங்க... அவங்கள உள்ள விடுங்க... நான் பேசிக்கிறேன்....." என்றவாறு அந்த வயதானவரை உள்ளே அழைத்து சென்றார்....

"சின்னய்யா நான் குமார் பேசுறேனுங்க.... அந்த அம்மா உள்ள போயிடிச்சுங்க ஐயா.... எவ்வளவு தடுத்தும் சீதா அம்மா பாத்துட்டாங்க ஐயா..."

"சீட் இடியட் ஒரு வேல ஒழுங்கா பாக்க மாட்டியே.... அந்த பைத்தியம் யாரை கண்டாலும் உள்ள கூட்டிட்டு போய்டும்.... அந்த கெழவன் வீட்ல இருக்கானா?"

"ஆமாங்கய்யா...."

"சரி நான் இப்போவே வரேன்... காளிக்கு போன போட்டு ஆளுங்களோட நான் வர சொன்னதா சொல்லிடு...."

"சரிங்கய்யா..."

உள்ளே அழைத்து சென்ற சீதா அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தவர்.... வேலையாளிடம் தந்தையை அழைத்து வர பணித்தார்....

"அடடே பாக்கியம் நீயாம்மா.... பெரியப்பா எப்படி இருக்காங்க?.... உங்கள எல்லாம் பாத்து எவ்வளவு நாள்.... என்ன விஷயமா வந்தம்மா???....." என பேசியவாறே படியில் இறங்கி வந்தார் ராஜய்யா

"நமக்கு இவங்க உறவுகாரங்களா பா?..."

"ஆமாம்மா.... தூரத்து உறவு முறை தான்... இருந்தாலும் உன் தாத்தா காலத்துல இருந்து ரொம்ப பழக்கம்.... அப்பறம் இங்க வந்ததும் பேச்சு விட்டு போச்சு... இவ உனக்கு அத்த முறை வரும்..." என மகளுக்கு விளக்கியவர்... "என்ன சாப்பிடுற பாக்கியம்.." என்று அந்த பெண்மணியிடம் முடித்தார்...

ஐயோ அண்ணா அதெல்லாம் வேணா?... ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் அண்ணா.... நேரம் குறைவா இருக்கு வந்த விஷயத்தை சொல்லிடுறேன்ணா... என்றவர் பேசும் போது அடிக்கடி வெளியில் பார்த்துக்கொண்டவர் மேலும் தொடர்ந்தார்.....

"அண்ணா கலையரசன் என் பையன் தான் ணா...." என்று சொல்ல மற்ற இருவர் முகத்திலும் குழப்ப ரேகை.....

"அவன் ஒன்னும் நல்லவன் இல்ல.... ஏற்கனவே ஊர்ல கல்யாணம் பண்ணி ஒரு பிள்ளையும் இருக்கு... நீங்க மாசம் மாசம் அனுப்புற பணம் அவங்களுக்கு பாத்தலயாம்.... பணத்தாசை பிடிச்ச என் புருசனும் இவனும் சேர்ந்துதான் பொய் சொல்லி உங்கள ஏமாத்திட்டாங்க ணா..... இதுக்கு அவன் பொஞ்சாதி அந்த பாவியும் கூட்டு" என்று அண்ணனிடம் முடித்தவர்..... "எவ்வளவு முறை இத சொல்லணும் னு முயற்சி செஞ்சும் முடியாம போச்சு.... எவ்வளவோ சொல்லி பார்த்தேன்மா பணத்தாசை பிடிச்ச பேய்ங்க திருந்தவேயில்லை.... எங்க நான் உன்கிட்ட சொல்லிடுவேனோனு அவங்க என்ன அடைச்சு வெச்சிருந்தாங்கமா... இரண்டு நாள் முதல் தான் தப்பிச்சேன்.... என்ன மன்னிச்சுடுமா" என்று சீதைவின் காலில் விழுந்துவிட்டார்.....

சீதாவின் நெஞ்சில் யாரோ காலால் மீதிப்பதை போன்ற உணர்வு..... அப்படியே சிலையாய் நின்றவரை கலைத்தது அந்த கொடூரனின் குரல்....

"எல்லாம் தெரிஞ்சிடிச்சு போல.... அப்பாடா இனி நடிக்க தேவ இல்லை.... எத்தன நாள் தான் என் பொண்டாட்டி பிள்ளையை ரகசியமா போய் பாக்குறது.... என் புள்ளைக்கு பதிலா கண்ட சனியன எல்லாம் தூக்கணும் எனக்கென்ன தலையெழுத்தா?.... இனி இங்கயே கூடவே தங்க வெச்சிக்கலாம்.... நீயும் இருக்க என்ன செய்யலாம்??? " என்று போலியாய் யோசிப்பது போல் பாவனை செய்தவர்

"அவளும் பாவம் இத்தனை நாள் என்ன உனக்கு விட்டுகொடுத்து வாழ்ந்துட்டா சோ கிழமைல ஆறு நாள் அவளுக்கு... போனா போகுதுனு ஒரே ஒரு நாள் உனக்கு... என்ன ஓகேவா???.... உன் இஷ்டப்படி அந்த ஒரு நாள் என்ன வெச்சிக்கலாம் நீ எப்படி வசதி??..... என்று ஏதோ நகைச்சுவை செய்ததை போல் சத்தமாக சிரித்தார்.... அவருக்கு இருமாப்பு இனி இந்த கிழவானால் என்ன கிழித்திட முடியும் என்பதாய்

"அண்ணா..." பக்கத்தில் நின்ற காளி என்றவர் தலையை சொறிந்தவாறே அழைக்க..

"அட நீ இருந்தத மறந்துட்டேனே... அப்பறம் மாமனாரே இவனுக்கு ரொம்ப நாளா என் பொண்டாட்டி மேல... ச்சே ச்சே என் கள்ள பொண்டாட்டி மேல ஒரு கண்ணாம்.... இவன் வேற எனக்கு ரொம்ப உதவி செஞ்சிருக்கான்... நாலு அஞ்சு கொலை வேற பண்ணி இருக்கான் நன்றியா இருக்கணுமா? இல்லையா? என்ன பண்ணலாம்.... ஒரே ஒரு நாள் அவனுக்கு கொடுத்துடலாமா???? என்னடா ஒரு நாள் போதுமா?"

"ஐயா கிழமைல ஒரு நாள் எனக்கு போதும்..... என் தம்பி கூட ரெண்டு கொலை பண்ணி இருக்கான்" என்றான் தம்பிக்கும் தன் ஈன செயலில் நியாயம் செய்தபடி....

"ஹாஹாஹா..... அப்படி கூச்சப்படாம கேளு டா..... ஆமல அவனும் பண்ணியிருக்கான் உனக்கு தந்து அவனுக்கு தராட்டி கோச்சுப்பானே.... அவனுக்கும் ஒரு நாள் கொடுத்துட்டா போச்சு தாராள மனசுடா எனக்கு கஞ்சத்தனம் இல்லைவே இல்லை" என்று சொன்னவன் மனிதன் இல்லையோ என்ற சந்தேகம் தான் அங்கிருந்த அனைவருக்கும் தோன்றியது.....

"நீயெல்லாம் மனிசனா.... உன்ன நம்பி என் பொண்ண குடுத்தனே.... கம்பெனில இருந்து எவ்வளவோ பணம் நீ எடுத்தும் உன் மேல இருந்த நம்பிக்கைல அதெல்லாம் கண்டும் காணாம இருந்தனே.... இப்ப இப்படி என் பொண்ணுக்கே நம்பிக்கை துரோகம் பண்ணிடியே.... என் பொண்ணு வாழ்க்கைய நானே அழிச்சிட்டேனே....." என்று கேட்டவாறே கலையரசனை வெறிகொண்டு தாக்கினார்...

"என் பாஸயே அடிக்கிறியா?" என்று காளி அவரை அடிக்க அந்த கலவரத்தில் சீதா அங்கிருந்து சமையலறை நுழைந்ததை யாரும் கவனிக்கவில்லை... இவ்வளவு நேரம் நடந்தவற்றை வாயில் கதவின் அருகில் மறைந்தவாறே பார்த்துக்கொண்டிட்டிருந்த அதிரலை தவிர..... நடப்பவை புரியாவிட்டாலும் ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிந்தது குழந்தைக்கு..... பயத்தில் தாயை தேடும் குழந்தையாய் அவளும் சமையலறை பக்கம் சென்றாள்.... கதவு மூடபட்டிருந்தது.... ஜன்னல் வழியே எட்டிபார்த்தவள் கண்டது, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி நிற்கும் அன்னையை தான்.....

அதிரலை கண்டதும் சிறிது நிதானித்தவர்...

"அப்பு... அம்மா போறேன் டா.... நான் சொன்னாலும் உனக்கு புரிஞ்சிக்கிற வயசு இல்ல..... அந்த ஆள் தொட்ட இடம் எல்லாம் அம்மாக்கு எரியுதுடா.... இந்த உடம்பு அம்மாக்கு வேணாம்டா... இப்போ இன்னொருத்தனும் அம்மாவ தொட போறானாம்.... நான் சாதாரணமா செத்தாலும் செத்த உடம்பையும் விடாத நரி கூட்டம்டா இது..... அம்மா எறிஞ்ச சாம்பல் கூட கிடைக்க கூடாது இவனுங்களுக்கு..... அம்மாவால முடியலடா அப்பு மனசு ரொம்ப வலிக்கிது.... உன்ன விட்டு போக அம்மாக்கு விருப்பமில்லை ஆனா போகாம இருக்கவும் முடியல அப்பு.... மன்னிச்சுடுடா... அப்பு நீ பெரியவளான அப்பறம் புரிஞ்சிப்படா அப்ப அம்மாவ மன்னிச்சுடு அது போதும்... தாத்தாவ தவிர யாரையும் நம்பாத... அந்த கலையரசன நான் மன்னிச்சிட்டேன் என் கோபத்த காட்ட கூட அவனுக்கு தகுதி இல்லை... அவன் எனக்கு யாருமே இல்லை.... உனக்கும் அவன் இனிமேல் யாரோ தான்..... ஒருவாட்டி அம்மானு கூப்பிட மாட்டியாடா?" என்ற ஏக்கத்துடன் கேட்டவாறே தன்னை எரித்து கொண்டார்...... அதிரலில் விரிந்த கண்களுக்குள் அவள் தாய் எரிந்துகொண்டிருந்த விம்பமே முழுவதுமாய்.....

"அம்ம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆ"
என்று அலறியவாறே ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்திருந்தாள் இருபத்தைந்து வயதான அதிரல்..... கண் இரண்டிலும் கண்ணீர் கொட்ட கண்ணை மூடியப்படி தரையிலே படுத்துக்கொண்டாள்.... பதினெட்டு வருடங்கள் கடந்தும் அந்த நாள் அவள் மனதில் இன்றளவிலும் ஆழமான வடுவாய் பதிந்து போயிருந்தது....

தாயிடம் பேச முடியாமல் போன வார்த்தைகளை அவள் அறவே வெறுத்தாள்..... சாகும் போது கூட கேட்டாரே அம்மா என்று அழைக்கும் படி.... முடியாமல் போனதே.... அம்மாவுடன் பேச முடியாமல் போனவை யாரிடமும் பேச பிடிக்கவில்லை அவளுக்கு.... அதனாலேயே முடிந்தளவு வார்த்தைகளை குறைத்துக்கொண்டாள்.....

இப்போதும் அவளால் கலையரசனின் நடிப்பை நம்பமுடியவில்லை.... தான் இருப்பதால் அவருக்கு ஏதோ லாபம் இருக்கிறது என்பதை அவள் அறிவாள்... இருந்தும் அவள் இங்கிருக்க அவளுக்கான காரணங்களும் உண்டு....



சரியாக வண்ணநிலவன் வேலையில் சேர்ந்து ஆகிற்று இரண்டு வாரம்..... அவனுக்கும் மனதுக்கு ஒரு இதமாகவே இருந்தது..... படித்தது ஏதோ இப்போது செய்வது ஏதோ..... இருந்தும் பிடித்து தான் இருந்தது......

சென்னை காவல் நிலையம்..... சற்று பரபரப்பாகவே காணப்பட்டது.... அங்கே யாரோ ஒருவர் அலறும் ஓசை காதை பிளந்தது....

"ஆஆ...ஆ...ஆ வ...லி...க்..கிது சால்... விட்...டு...டு....ங்க சால்.... இனி பண்...ணமா..ட்டேன்...."

"ஓகே இனி பண்ண மாட்ட அப்படி தான..."

"ஆமா சாழ்... " என்றவனுக்கு வார்த்தை கூட குழறலாகவே ஒலித்தது... சரியாக வார்த்தை வர வாய் பிரீ ஆக இல்லையே... நிலவன் தான் வாய்க்குள்ளேயே லத்தியை சொருகி இருந்தானே...

"இனி பண்ணமாட்ட ஓகே... ஆனா ஏற்கனவே பண்ணதுக்கு பனிஷ்மென்ட் வேணும் தான... "

"......" அவனும் இதற்கு என்ன பதில் தான் சொல்வான்... செய்த பாவத்திற்கு தான் காலையிலிருந்து வாங்கிகட்டி கொண்டிருக்கிறானே...

"ஆமாவா இல்லையா..." என்றவனின் கால்களுக்குள் அடைக்கலமானது அத்திருடனின் கை அதன் பின் சொல்லவும் வேணுமா?.. கதறல் சத்தத்தின் உச்சம் தான் அங்கே நிகழ்ந்தது..

"ஆஆஆஆ அம்ம்மா... ஆமா ஆமா.. வேணும் வேணும்.."

"அச்சோ பாரு... நீயே ஆசைப்பட்டு கேட்டும் நான் தராம இருந்தா நல்லவா இருக்கும்..... நான் எல்லாம் வள்ளல் பரம்பர தெரியுமா???..."

"நான் எங்கடா கேட்டேன்..." என்பதே வலியில் துடித்துக்கொண்டிருந்த அந்த திருடனின் எண்ணமாக இருந்தது...

"சின்ன பொண்ணுனு கூட பாக்காம நகை தான் கண்ணுக்கு தெரியுதுல... எப்படி பட்ட கண்ணு அது.. அதுக்கு கொஞ்சம் என்ன நிறைவே தரலாம்... அதுக்கு நீ கொஞ்சம் வெய்ட் பண்ணனும் சரியா"

"என்ன எப்படியாச்சும் காப்பாத்திடு கடவுளே... " இன்று உயிரோடு சென்றால் போதுமென்பது போல நிலவனை பயத்துடன் வெறித்தான் அத்திருடன்...

"ராமசாமி..." என்றவனின் குரலுக்கு ராமசாமி என்பவர் அடித்து பிடித்து ஓடி வந்தார்... அவர் கையில் ஒரு பாக்ஸ் இருந்தது... அவனோடு வேலை செய்த இந்த இரண்டு வார பழக்கத்தில் அவன் கூப்பிடும் நோக்கம் அவருக்கு அத்துப்படி... இப்போது இந்த அழைப்பு இந்த பாக்ஸுக்காக தான் என்பதும் அவரறிந்ததே... அதனை பார்த்த திருடனுக்கு தான் அடுத்து என்னவோ ஏதோ என மரண பீதி கண்ணில் தெரிந்தது... ஆனால் அவனே எதிர்பாக்காத ஒன்றே அங்கே நிகழ்ந்தது... ஆம் அது ஒரு முதலுதவி பெட்டி.. அவன் உண்டாக்கிய காயத்துக்கு அவனே முதலுதவியும் அளித்தான்...
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"கொஞ்சம் ரெஸ்ட் எடு... வந்து ப்ரெஷா முதல்ல இருந்து ஆரம்பிப்போம்..." என்றவாறு அந்த செல்லை விட்டு வெளியேறினான்..

"மறுபடியும் முதல்ல இருந்தா... சோறு போட்டு அடிக்கிறவங்கள கேள்வி பட்டிருக்கேன்... இது என்னடா மருந்து போட்டு அடிக்கிறாரு..." என மனதுக்குள் எண்ணிக்கொண்டவன்... வெளியே சென்ற பிறகு எங்கேயாவது ஒரு வேலையில் சேர வேண்டும்... எங்கே செல்வது என்ற யோசனைக்கே சென்றுவிட்டான்.. இனிமேல் திருட என்ன, திருட்டை பற்றி யோசிக்கவே யோசிப்பானா என்பது கேள்விகுறி தான்..

"அந்த சின்ன பொண்ணுக்கு இப்போ காயம் எப்படி ராமசாமி.. எந்த ஹாஸ்பிடல் சேர்த்திருக்காங்க... கழுத்துல சின்ன காயம் தான் ஓகே ஆகிடும்.."

"ஜேகே ஹாஸ்பிடல் தான் ஐயா சேர்த்திருக்காங்க.. ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கலாம்.. குழந்தை இப்போ நல்லா இருக்காளாம்..." என்றவர் அவன் பார்வையில் மீண்டும் தொடர்ந்தார்... "புகழ் ஐயா அங்க தான் இருக்காங்க ஐயா.. இப்போ கொஞ்ச நேரம் முதல் உங்களுக்கு கூப்பிட்டிருந்தாங்க போல நீங்க எடுக்கலன்னதும்.. எனக்கு கூப்பிட்டு விஷயத்த உங்களுக்கு சொல்ல சொன்னாங்க ஐயா..."

"ம்ம்ம் போய் பாக்கலாம்... வண்டிய எடுங்க...."என்றவன் ஜீப் நோக்கி நடந்தான்.. ஜீப்பில் எறிவனுக்கு காலையில் நடந்த சம்பவமே மூளைக்குள் ஓடியது..

இன்று காலையில் ட்ராபிக் ஒன்றில் வாகனத்தில் அவனுக்கு கீழ் வேலை செய்யும் புகழேந்தியுடன் நின்றிருந்தான் நிலவன்.. சரியாக அந்த நேரம் நடந்த திருட்டு சம்பவம் ஒன்றில் காயப்பட்டிருந்தாள் சிறுமி ஒருவள்... இப்போது சற்று முன் நிலவன் அடித்து துவைத்த திருடனின் கைவண்ணம் தான் அது....

சிறுமி கழுத்தில் போட்டிருந்த செயினை லாவகமாக அறுத்துக்கொண்டு ஓடிய நேரம் சிறுமியின் கழுத்தில் நகையின் அழுத்ததால் காயம் ஏற்பட்டிருந்தது.... உடனடியாக விரைந்து சிறுமியை கீழே விழ விடாமல் பிடித்தவன்.... நண்பனிடம் ஹாஸ்பிடல் அழைத்து செல்ல பணித்து திருடனை பிடிக்க விரைந்தவன் தான்.. பிடித்தும் விட்டான்... துவைத்து எடுத்தும் விட்டான்.. இப்போது சிறுமியை காண சென்றுகொண்டிருக்கிறான்..




ஜாதி மல்லி மலரும்...

 
Last edited:
Status
Not open for further replies.
Top