20
அர்ஜுன் சட்டென்று இழுக்கும் வேகத்தில் அவனை மோதிவிட, அவனது முகத்தை சுருக்கி பார்த்தாள், என்ன செய்கிறாய் என்பது போல.
அவன் முகம் பார்க்க ஏதோ இனம் புரியாத உணர்வு மேலோங்கியது, முதல் முறையாக.
"இப்படியே என் வாழக்கை பயணம் உன்னோடு தொடரக்கூடாதா" என்று சாராவின் மனம் துடிக்க,
'பார்த்த சில நிமிடங்களில் இது சாத்தியமா?' என்று அவளது இன்னொரு மனம் வாதிட தொடங்கியது.
அவளுக்கோ இந்த என்னம் தவறாக பட, அவள் மனதை அடகினாள்.
அவன் இழுத்த வேகத்தில், இசைகேர்ப்ப ஆட்டிவைத்தான் அர்ஜுன்.
சிலசமயங்களில் அவளின் நெற்றி அவன் மார்பில் முட்டி விட "தலை இப்படி வலிக்குது..." "மனுசனா இவன் மெஷின்!" என்று ஆச்சரியபட்டு போனாள்.
'ஹா வலிக்குதே, கத்த கூட முடியலயே, சுத்தி ஆளுங்க வேற இருக்காங்களே'.
இங்கு என்ன நடக்குது என்று சுதாரிக்கும் முன்பே, அவனின் கைப்பாவையாக மாறினாள்.
பாடலின் வரிக்கேற்ப அவளை ஆட்டிவைத்தான், பொம்மலாட்ட பொம்மைப் போல ஆனது அவளின் தற்போதைய நிலை.
நடனத்தில் அ, ஆ- னா கூட கற்றிடாத அவளோ, நடனத்தை கரைத்து குடித்தவனிடம் இணைந்து ஆட, திணறித்தான் போனாள்.
பார்வையாளர்கள் அனைவரும் ஜோடி பொருத்தத்தை பார்த்து வியக்காதவர் எவருமில்லை. இன்னொரு பக்கம் ரித்திகா "அடடேய் நம்ம அர்ஜுனா இது" என்று பார்த்துக்கொண்டு இருந்தது மட்டும் இல்லாமல், அவள் கையிலே இருந்த போனில் பதிவு படுத்தி கொண்டு இருந்தாள்.
ஆனந்தனுக்கு இது பழகிவிட்டது, அவர்கள் ஆடுவதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தான்.
அவன் இழுக்கும் திசைகளிலும், அவன் சுழற்றும் சுழலுக்கு, அசைந்து கொடுத்தாள் அவளையும் அறியாமல்.
பாடல் முடிந்து சிறிது நேரம் அவளின் களைத்துப்போன முகத்தை ரசித்தவன். கைத்தட்டலில் நினைவு பெற்று, அவளை விட்டுசற்று விலகி நின்றான். அவளோ அவனை முறைத்தவாரு இருந்தாள்.
அவளின் கோபத்தை மீறி எக்கச்சக்க வோல்ட்டேஜ் அவள் உடம்பில் பாய்ந்தது போல விறைத்து நின்றாள், சிறிது நேரம் சுயநினைவற்று.
கொடுத்த ஷாக் பத்தாது... இன்னும் உனக்கு தரட்டா என்று அர்ஜுன் சாராவை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டி. இதழ்களை குவித்து ஒரு பறக்கும் முத்தம் கொடுக்க.
"ஐயோ...." என்று இன்னும், அவனை விட்டு இரண்டடி தள்ளி நின்றாள்.
இந்த இடத்தை விட்டு எப்போ செல்வோம் என்று காத்து இருந்தவளுக்கு, சிறிது இடைவேளை கிடைக்க சிட்டாக பறந்தவிட்டாள் .
எப்படி அந்த அலுவலகம் விட்டு வெளியே வந்தாள் என்ற நினைவு இல்லை.
ஆட்டோ ஏறும் சமயத்தில் தான் பார்த்தாள், அவளின் பதற்றத்தில் அவளது போன் பையை விட்டு வந்ததை நினைத்து, தலையை அடித்துக்கொண்டு.
சிலபல யோசனையோடு அர்ஜுன் அறையை நோக்கி சென்றாள்.
தலையை மட்டும் உள்ளே விட்டு, "அவன் இருக்கானா..." என்பதை உறுதி செய்துகொண்டு, வேக எட்டுக்கள் எடுத்து வைத்து. அவள் கைப்பையை நோக்கி வேகமாக போய், அவள் மென்மையான கரங்களை நீட்ட.
அந்த கைப்பை அவள் கைகளில் சென்று அடைவதற்கு முன்பு, அர்ஜுன் கை அதனை பறித்தது.
"என்னுது கொடுடா" என்றாள் கோபமாக.
அதுலாம் தரமுடியாது "என்ன வச்சி இருக்கன்னு பாத்துட்டு தரேன் இரு" என்று அர்ஜுன் பொறுமையா பைகயை ஓபன் செஞ்சான்.
"ஆட்டோக்கு போனும்...." அவள் சொல்வது காதில் விழுந்தும்... அதற்கு பதில் அளிக்காமல்.
"போறதுனா போ நான் தடுக்கலையே" என்றான் நக்கலாக.
அர்ஜுன் உள்ள இருக்கிறத பாத்து ஒரே ஆச்சர்யம்!
மேக் அப் ஐட்டம், ஒன்று கூட இல்லை. ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் பாதி தண்ணீர் காலியான நிலையில் இருக்க, அதை எடுத்து மீதி தண்ணியை பருகியவாரு அவளை பார்த்தான்.
'ஐயோ.... எச்ச செஞ்சி குடிச்சத குடிக்கிறானே' என்று நினைத்தவள் விழிகள் விரித்து அர்ஜுனை பார்க்க.
'என்ன தண்ணி வேணுமா?' என்று கேட்டான் சாராவிடம்.
இல்ல என்று தலை அசைத்தாள்.
"வேணா நா எதுக்கு, நீ குடிக்கும்போது பிடிங்கி குடிச்ச போல அவளோ பெருசா கண்ண காமிச்சு மெரட்டற" என்றான்.
"நா எச்ச செஞ்ச தண்ணி" என்றாள்.
"புரியல" என்றான்.
"வாய் வச்சி குடிப்பேன் தண்ணிய". என்றாள் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
அவன் ரியாக்ஷன் ஐ பார்க்கும் ஆவளோடு சாரா அர்ஜுன் முகத்தை பார்க்க. அவனோ இவளுக்கு பெருசா ஒரு ஷாக் கொடுத்துட்டான்.
"லவர்ஸ் குள்ள குடிக்கலாம் தப்பில்ல" என்றான் அர்ஜுன். சாராவிற்கு அவனது பேச்சி எரிச்சல் தான் கிளப்பியது. சிறிது நேரம் சாராவை உத்து பார்த்தவன்.
"எங்கே உதட்டு சாயம்?"
அவளோ புரியாத பார்வையோடு அவனை பார்க்க.
"லிப்ஸ்டிக் எங்க காணோம்..." என்றான் இப்போது அவளுக்கு புரியும் வகையில்.
"அது யூஸ் செய்ய பிடிக்காது..." என்றாள்.
அவன் அவளை நம்பாமல், சட்டென்று அவளை நோக்கி இரண்டு எட்டு வைத்து அவன் விரல்களால் அவளது. பிங்க் நிற ரோஜா இதழ்களை அழுத்தி இருமுறை தேய்த்தான்.
"என்ன செய்ற?" என்றாள் அவனது கைகளை வேகமாக தட்டி விட்டு.
"செக் பண்ணேன் லிப்ஸ்டிக் போட்டு இருந்தது போல இருக்கு. அது எப்படி இவளோ பிங்க் ஆ இருக்கு, அவளின் இதழை சுட்டிக்காட்டி?"
"நான் வீட்டுக்கு போகனும், என் பையை கொடு" என்றாள்.
"நான் கேட்டதுக்கு பதில் வரல.." அவனது ஒற்றை புருவத்தை தூக்கி காண்பிக்க. ஒரு வினாடி மெய் மறந்து நின்றாள்.
அவள் தலையை சிலுப்பி கொண்டு... "நா போகனும்.." என்றாள்.
"எல்.கே. ஜி பாப்பா மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல, திரும்ப திரும்ப சொல்ற'' என்றான் கேலியாக.
"மாமாகிட்ட சொன்னா கூட்டிட்டு போய் விடப்போறேன், எதுக்கு என்ட இவ்ளோ தயங்கர" என்று புருவத்தை உயர்த்தி கேட்க.
அவளோ ஒரு நிமிடம் அவனிடம் மயங்கினாள். அதை மறைத்து இரண்டு விழிகளை அம்பாக்கி, அவன் மீது கோப பார்வை செலுத்தினாள். ஆனால் அர்ஜுனுக்கோ அவள் காதல் அம்பு விட்டது போல ரசித்துக்கொண்டு இருந்தான் சாராவின் விழிகளில்.
'பார்த்து ஒரு மணிநேரம் கூட ஆகல, அதுக்குள்ள முறைவைத்து பேசறான்' அர்ஜுன் மீது கொலைவெறி வந்தது.
அவனிடம் இருந்து அவளது கைப்பையை பிடிங்கிகொண்டு ஓடினாள்.
"டார்லிங் எங்க போனாலும் மாமா வாட்சிங் யூ." என்று கத்தினான் அர்ஜுன். சொன்னது பத்தாது என்று பறக்கும் முத்தம் ஒன்று கொடுக்க,
"போடா பொறுக்கி..." என்றாள் தூரம் சென்று கத்திவிட்டு ஓடினாள்.
"பொறுக்கி..." அவள் சொன்னதை மறுமுறை முணுமுணுத்து ரசித்துக்கொண்டு.
அவள் ஓடுவதை பார்த்து ரசித்து நின்றான். தொடக்கத்தில் இவள் ஓடினாலும் வாழ்க்கை முழுவதும் ஓடுவது... அவனாக இருக்கும் என்று கூறிக்கொண்டு.....
அர்ஜுன் சட்டென்று இழுக்கும் வேகத்தில் அவனை மோதிவிட, அவனது முகத்தை சுருக்கி பார்த்தாள், என்ன செய்கிறாய் என்பது போல.
அவன் முகம் பார்க்க ஏதோ இனம் புரியாத உணர்வு மேலோங்கியது, முதல் முறையாக.
"இப்படியே என் வாழக்கை பயணம் உன்னோடு தொடரக்கூடாதா" என்று சாராவின் மனம் துடிக்க,
'பார்த்த சில நிமிடங்களில் இது சாத்தியமா?' என்று அவளது இன்னொரு மனம் வாதிட தொடங்கியது.
அவளுக்கோ இந்த என்னம் தவறாக பட, அவள் மனதை அடகினாள்.
அவன் இழுத்த வேகத்தில், இசைகேர்ப்ப ஆட்டிவைத்தான் அர்ஜுன்.
சிலசமயங்களில் அவளின் நெற்றி அவன் மார்பில் முட்டி விட "தலை இப்படி வலிக்குது..." "மனுசனா இவன் மெஷின்!" என்று ஆச்சரியபட்டு போனாள்.
'ஹா வலிக்குதே, கத்த கூட முடியலயே, சுத்தி ஆளுங்க வேற இருக்காங்களே'.
இங்கு என்ன நடக்குது என்று சுதாரிக்கும் முன்பே, அவனின் கைப்பாவையாக மாறினாள்.
பாடலின் வரிக்கேற்ப அவளை ஆட்டிவைத்தான், பொம்மலாட்ட பொம்மைப் போல ஆனது அவளின் தற்போதைய நிலை.
நடனத்தில் அ, ஆ- னா கூட கற்றிடாத அவளோ, நடனத்தை கரைத்து குடித்தவனிடம் இணைந்து ஆட, திணறித்தான் போனாள்.
பார்வையாளர்கள் அனைவரும் ஜோடி பொருத்தத்தை பார்த்து வியக்காதவர் எவருமில்லை. இன்னொரு பக்கம் ரித்திகா "அடடேய் நம்ம அர்ஜுனா இது" என்று பார்த்துக்கொண்டு இருந்தது மட்டும் இல்லாமல், அவள் கையிலே இருந்த போனில் பதிவு படுத்தி கொண்டு இருந்தாள்.
ஆனந்தனுக்கு இது பழகிவிட்டது, அவர்கள் ஆடுவதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தான்.
அவன் இழுக்கும் திசைகளிலும், அவன் சுழற்றும் சுழலுக்கு, அசைந்து கொடுத்தாள் அவளையும் அறியாமல்.
பாடல் முடிந்து சிறிது நேரம் அவளின் களைத்துப்போன முகத்தை ரசித்தவன். கைத்தட்டலில் நினைவு பெற்று, அவளை விட்டுசற்று விலகி நின்றான். அவளோ அவனை முறைத்தவாரு இருந்தாள்.
அவளின் கோபத்தை மீறி எக்கச்சக்க வோல்ட்டேஜ் அவள் உடம்பில் பாய்ந்தது போல விறைத்து நின்றாள், சிறிது நேரம் சுயநினைவற்று.
கொடுத்த ஷாக் பத்தாது... இன்னும் உனக்கு தரட்டா என்று அர்ஜுன் சாராவை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டி. இதழ்களை குவித்து ஒரு பறக்கும் முத்தம் கொடுக்க.
"ஐயோ...." என்று இன்னும், அவனை விட்டு இரண்டடி தள்ளி நின்றாள்.
இந்த இடத்தை விட்டு எப்போ செல்வோம் என்று காத்து இருந்தவளுக்கு, சிறிது இடைவேளை கிடைக்க சிட்டாக பறந்தவிட்டாள் .
எப்படி அந்த அலுவலகம் விட்டு வெளியே வந்தாள் என்ற நினைவு இல்லை.
ஆட்டோ ஏறும் சமயத்தில் தான் பார்த்தாள், அவளின் பதற்றத்தில் அவளது போன் பையை விட்டு வந்ததை நினைத்து, தலையை அடித்துக்கொண்டு.
சிலபல யோசனையோடு அர்ஜுன் அறையை நோக்கி சென்றாள்.
தலையை மட்டும் உள்ளே விட்டு, "அவன் இருக்கானா..." என்பதை உறுதி செய்துகொண்டு, வேக எட்டுக்கள் எடுத்து வைத்து. அவள் கைப்பையை நோக்கி வேகமாக போய், அவள் மென்மையான கரங்களை நீட்ட.
அந்த கைப்பை அவள் கைகளில் சென்று அடைவதற்கு முன்பு, அர்ஜுன் கை அதனை பறித்தது.
"என்னுது கொடுடா" என்றாள் கோபமாக.
அதுலாம் தரமுடியாது "என்ன வச்சி இருக்கன்னு பாத்துட்டு தரேன் இரு" என்று அர்ஜுன் பொறுமையா பைகயை ஓபன் செஞ்சான்.
"ஆட்டோக்கு போனும்...." அவள் சொல்வது காதில் விழுந்தும்... அதற்கு பதில் அளிக்காமல்.
"போறதுனா போ நான் தடுக்கலையே" என்றான் நக்கலாக.
அர்ஜுன் உள்ள இருக்கிறத பாத்து ஒரே ஆச்சர்யம்!
மேக் அப் ஐட்டம், ஒன்று கூட இல்லை. ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் பாதி தண்ணீர் காலியான நிலையில் இருக்க, அதை எடுத்து மீதி தண்ணியை பருகியவாரு அவளை பார்த்தான்.
'ஐயோ.... எச்ச செஞ்சி குடிச்சத குடிக்கிறானே' என்று நினைத்தவள் விழிகள் விரித்து அர்ஜுனை பார்க்க.
'என்ன தண்ணி வேணுமா?' என்று கேட்டான் சாராவிடம்.
இல்ல என்று தலை அசைத்தாள்.
"வேணா நா எதுக்கு, நீ குடிக்கும்போது பிடிங்கி குடிச்ச போல அவளோ பெருசா கண்ண காமிச்சு மெரட்டற" என்றான்.
"நா எச்ச செஞ்ச தண்ணி" என்றாள்.
"புரியல" என்றான்.
"வாய் வச்சி குடிப்பேன் தண்ணிய". என்றாள் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
அவன் ரியாக்ஷன் ஐ பார்க்கும் ஆவளோடு சாரா அர்ஜுன் முகத்தை பார்க்க. அவனோ இவளுக்கு பெருசா ஒரு ஷாக் கொடுத்துட்டான்.
"லவர்ஸ் குள்ள குடிக்கலாம் தப்பில்ல" என்றான் அர்ஜுன். சாராவிற்கு அவனது பேச்சி எரிச்சல் தான் கிளப்பியது. சிறிது நேரம் சாராவை உத்து பார்த்தவன்.
"எங்கே உதட்டு சாயம்?"
அவளோ புரியாத பார்வையோடு அவனை பார்க்க.
"லிப்ஸ்டிக் எங்க காணோம்..." என்றான் இப்போது அவளுக்கு புரியும் வகையில்.
"அது யூஸ் செய்ய பிடிக்காது..." என்றாள்.
அவன் அவளை நம்பாமல், சட்டென்று அவளை நோக்கி இரண்டு எட்டு வைத்து அவன் விரல்களால் அவளது. பிங்க் நிற ரோஜா இதழ்களை அழுத்தி இருமுறை தேய்த்தான்.
"என்ன செய்ற?" என்றாள் அவனது கைகளை வேகமாக தட்டி விட்டு.
"செக் பண்ணேன் லிப்ஸ்டிக் போட்டு இருந்தது போல இருக்கு. அது எப்படி இவளோ பிங்க் ஆ இருக்கு, அவளின் இதழை சுட்டிக்காட்டி?"
"நான் வீட்டுக்கு போகனும், என் பையை கொடு" என்றாள்.
"நான் கேட்டதுக்கு பதில் வரல.." அவனது ஒற்றை புருவத்தை தூக்கி காண்பிக்க. ஒரு வினாடி மெய் மறந்து நின்றாள்.
அவள் தலையை சிலுப்பி கொண்டு... "நா போகனும்.." என்றாள்.
"எல்.கே. ஜி பாப்பா மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல, திரும்ப திரும்ப சொல்ற'' என்றான் கேலியாக.
"மாமாகிட்ட சொன்னா கூட்டிட்டு போய் விடப்போறேன், எதுக்கு என்ட இவ்ளோ தயங்கர" என்று புருவத்தை உயர்த்தி கேட்க.
அவளோ ஒரு நிமிடம் அவனிடம் மயங்கினாள். அதை மறைத்து இரண்டு விழிகளை அம்பாக்கி, அவன் மீது கோப பார்வை செலுத்தினாள். ஆனால் அர்ஜுனுக்கோ அவள் காதல் அம்பு விட்டது போல ரசித்துக்கொண்டு இருந்தான் சாராவின் விழிகளில்.
'பார்த்து ஒரு மணிநேரம் கூட ஆகல, அதுக்குள்ள முறைவைத்து பேசறான்' அர்ஜுன் மீது கொலைவெறி வந்தது.
அவனிடம் இருந்து அவளது கைப்பையை பிடிங்கிகொண்டு ஓடினாள்.
"டார்லிங் எங்க போனாலும் மாமா வாட்சிங் யூ." என்று கத்தினான் அர்ஜுன். சொன்னது பத்தாது என்று பறக்கும் முத்தம் ஒன்று கொடுக்க,
"போடா பொறுக்கி..." என்றாள் தூரம் சென்று கத்திவிட்டு ஓடினாள்.
"பொறுக்கி..." அவள் சொன்னதை மறுமுறை முணுமுணுத்து ரசித்துக்கொண்டு.
அவள் ஓடுவதை பார்த்து ரசித்து நின்றான். தொடக்கத்தில் இவள் ஓடினாலும் வாழ்க்கை முழுவதும் ஓடுவது... அவனாக இருக்கும் என்று கூறிக்கொண்டு.....