அத்தியாயம் 16
தன்னை தேடி உடனே விஜித் வர மாட்டான் என்று அறிந்து வைத்திருந்த மான்சி தந்தையை காப்பாற்ற வேறு வழி கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டு அறைக்குள்ளேயே நடந்துக் கொண்டிருந்தாள்.
தந்தையை பற்றி நினைத்ததும் அவள் நினைவில் குழந்தையும் கணவனும் கூட பின்னுக்குச் சென்று விட்டனர். தாய் தனியாக என்ன செய்கிறாரோ என்று நினைக்க நினைக்க கண்ணீர் வடிய ஆரம்பித்தது.
முந்தைய நாள் தந்தை பிரச்சனையில் சரியாக சாப்பிடாத மான்சி அடுத்த நாள் மாலை வரை மான்சியின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது.
மாலை வீடு வந்ததும் அவள் சாப்பிடாத தகவல் கிடைக்க, வேகமாக படியேறி தங்கள் அறைக்குள் வந்தான்.
உணவும் இல்லாது, தொடர்ந்து நடந்தது என அவள் மிகவும் சோர்ந்து எழுந்துக் கொள்ள முடியாது கிடந்தாள்.
வழக்கம் போல அவளை கண்டுக் கொள்ளாமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்த விஜித் அலைப்பேசியை எடுத்தான்.
"தப்பு பண்ணவங்களை அடிச்சு விசாரிக்கணும் இன்ஸ்பெக்டர்." என்று கூறி வைத்தவன் மான்சியை பார்த்தான்.
"இனி நீ சாப்பிடாம லேட் பண்ற ஒவ்வொரு நிமிசத்துக்கும் ஒரு அடி உன் அப்பா மேல விழும்." என்று வன்மத்துடன் கூற, தந்தைக்காக கண்ணீர் சிந்தினாலும் மான்சி தலை மறுப்பாக அசைந்தது.
இவன் மிரட்டலுக்கு அடிபணிந்தால் காலத்திற்கும் தந்தை சிறையில் இருக்க நேரிடுமே. அதனால் மனதை கல்லாக்கிக் கொண்டாள்.
தந்தை என்றதும் தனக்கு அடிபணிவாள் என்று விஜித் நினைத்திருக்க, அவன் நினைப்பு பொய்யாகியது.
"உன் அப்பா தப்புக்கு உன் அம்மாவும் உடந்தையா இருந்தாங்கன்னு சொல்லி அரெஸ்ட் பண்ணாலும் இதே உறுதி உன் கிட்ட இருக்குமா?" என்று கேட்க, சட்டென்று எழுந்த மான்சி பால்கனிக்கு ஓடினாள்.
"அவங்களுக்கு எதாவது ஆச்சு நான் உயிரோட இருக்க மாட்டேன்." என்று கம்பியை பிடித்துக் கொண்டு கீழே குதிக்க தயாராக இருந்தாள்.
"அப்போ குதிச்சிடு..." என்று கூறியவன் வில்லன் போல சிரித்தான்.
"என்ன தோற்க வைக்க நீ இல்ல உன் வயிற்றில இருக்கிற என் பிள்ளையால கூட முடியாது. பிள்ளை பாசத்த விட எனக்கு நான் ஜெயிக்கிறது தான் முக்கியம். உன்னால முடிஞ்சத செஞ்சிக்கோ." என்றவன் கிளம்பி விட மான்சி பால்கனி தரையிலேயே அமர்ந்து விட்டாள்.
கண்ணீரை துடைத்துக் கொண்டு மான்சி வேகமாக வெளியேற, அதிசயமாக காவலாளி யாரும் அவளை தடுக்கவில்லை.
மான்சி செல்வதை பார்த்துக் கொண்டிருந்த விஜித் தனது நெஞ்சு பகுதியை தடவிக் கொண்டான். வலிக்காதது போல காட்டிக் கொண்டாலும் அவனுக்கும் வலிக்கின்றதே.
தன்னை தோற்க வைக்க நினைப்பவளிடம் இறங்கிச் செல்ல அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை என்றாலும், தொடர்ந்து பட்டினியாக இருப்பவளை சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காகவே வெளியேற அனுமதித்தான்.
நேராக காவல் நிலையம் சென்றவள் தந்தையை காண அனுமதி கேட்டு நிற்க, அவர்களோ அவளுக்கு அனுமதி அளிக்கவில்லை.
தளர்ந்து வெளியே வந்தவள் ஓய்ந்து நடந்து வந்த தாயை பார்த்ததும் அவரை கட்டிக் கொண்டாள்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து பார்க்கும் தாயிடம் அடைக்கலம் புகுந்தவள் தனது சோகத்தை மொத்தமாக கண்ணீர் வழியாக இறக்கி வைத்தாள்.
அதே நேரம் நீண்ட நாட்கள் கழித்து மகளை பார்த்த வெண்பா அவள் தோற்றத்தில் அதிர்ந்து போனார். செல்லமாக வளர்த்த மகள் வாடி வதங்கி நிற்பதை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
"அம்மா நான் உன் கூடவே வரேன் ப்ளீஸ் என்ன அங்க போக சொல்லாத." என்று கண்ணீர் வடிக்க, வெண்பா மகளை அணைத்துக் கொண்டாள்.
தாய் மகள் இருவரும் பேசும் முன் ஊடகங்கள் அவர்களை சூழ்ந்துக் கொண்டது. முதலில் திகைத்த வெண்பா மகளை கேமரா வெளிச்சத்திலிருந்து நகர்த்தி தன் பின்னே நிற்க வைத்துக் கொண்டார்.
தந்தை இக்கட்டில் இருக்கும் நேரத்திலும் தன் மீது வெளிச்சம் படாதிருக்க நினைக்கும் தாயின் அன்பில் உருகிய மான்சி, கண்ணீரை துடைத்துக் கொண்டு முன் வந்தாள்.
ஊடகங்கள் இடை விடாது கேள்வி கேட்க, அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்ட மான்சி "என் அப்பா தப்பு செய்திருக்க மாட்டார். அவர சீக்கிரம் வெளியக் கொண்டு வந்திடுவேன்." என்று உறுதியாக கூற, புகார் கொடுத்த பெண்ணும் அவ்விடம் வந்து சேர்ந்தாள்.
"ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு இப்படி ஒரு அக்கிரமம் பண்ண உங்க அப்பாவுக்கு எப்படி சப்போர்ட் பண்ண முடியுது. உன் அப்பாவோட பாவம் என் வயத்தில வளருது. இதுக்கு நியாயம் கிடைக்காம நான் விட மாட்டேன்." என்று அப்பெண் தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கண்ணீர் வடிக்க, ஊடகங்கள் அதை அழகாக படம் பிடித்துக் கொண்டது.
"இந்த பொண்ணுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க மேடம்?" என்று ஊடகம் மான்சியை நோக்கி திரும்ப,
"நல்ல நடிப்பு... என் அப்பா தப்பு செய்யல. அதுக்கான சாட்சி என் கிட்ட இருக்கு. போலீஸ நம்பி அத கொடுக்க மாட்டேன். கோர்ட்க்கு சாட்சியோட வரேன். பாத்துக்கலாம் யாரு அக்கிரமம் பண்றவங்கன்னு." என்று இல்லாத சாட்சியை இருக்கின்றது என துணிவுடன் கூறிய மான்சி வெண்பாவை அழைத்துக் கொண்டு தந்தை வீட்டிற்கு வந்தாள்.
வீட்டிற்குள் வந்ததும் பழைய நினைவுகளில் வெண்பா கண்ணீர் வடிக்க, அவரை தேற்றுவதே பெரிய வேலையாக இருந்தது.
தண்ணீர் எடுக்க எழுந்த மான்சி தலை சுற்றி கீழே அமர வெண்பாவின் கவனம் கணவன் நினைவிலிருந்து மகளிடம் திரும்பியது.
"மான் குட்டி என்னடா?" என்று பரிவுடன் கேட்க, தாயிடம் ஒன்று விடாமல் கூறி விட்டாள்.
"தப்பு மான் குட்டி. யாரோ செய்த தப்புக்கு இந்த உலகத்தையே பார்க்காத குழந்தைக்கு தண்டனை கொடுக்க கூடாது.'' என்ற வெண்பா சமைக்க எதுவும் இல்லாததில் உணவை ஆடர் செய்தார்.
ஆடர் செய்த உணவு வந்ததும் அதை பிரித்து மகளுக்கு வெண்பா ஊட்ட, அவருக்கு மான்சி ஊட்டி விட்டாள்.
"ம்மா... எனக்கு அப்புறம் இன்னொரு குழந்தை ஏன் பெத்துக்கல?" என்று வாயில் இருந்த உணவை விழுங்கியபடி மான்சி கேட்க,
"எங்களுக்கு நீ மட்டும் போதும்ன்னு தோணுச்சி அதான் பெத்துக்கல. இப்போ நடக்கிறத நினைச்சு பார்த்தா ஒத்தையா உன்ன வளர்த்திருக்க கூடாதுன்னு தோணுது. உனக்கு உதவ கூட யாரும் இல்ல." என்று வருத்தத்துடன் கூறிக் கொண்டார்.
புகார் கொடுத்த பெண்ணின் பேச்சையும், மான்சி கூறிய சாட்சி பற்றியும் மாறி மாறி ஔி பரப்ப மக்களில் ஒரு சிலர் திலகன் நல்லவனோ என்று யோசிக்க ஆரம்பித்தனர்.
"மான்சி ஏந்திழையாள் கையில என்ன சாட்சி இருந்தாலும் அது கோர்ட்க்கு போக கூடாது. என் கைக்கு அது முன்னவே வரணும்." என்று விஜித் கட்டளையிட, அவன் ஆட்கள் என்ன சாட்சி என்று கண்டுக் கொள்ள முடியாது திணறினர்.
"சாட்சி எல்லாம் பக்காவா இருக்கு சார் மிஸ்டர் திலகன் வெளிய வர முடியாது." என்று போலீஸ் வக்கீல் என்று அனைவரும் உறுதியாக கூற, விஜித்திற்கு அந்த உறுதி போதவில்லை.
சாட்சி என்று ஒன்று இல்லாது இவ்வளவு உறுதியாக மான்சி பேச மாட்டாள் என்று நினைத்தவன் தொடர்ந்து மான்சியையும் அவள் சம்பந்தப்பட்ட அனைவரையும் கண்காணிக்க ஆரம்பித்தான்.
திலகனுக்கு ஆதரவாக யாரும் வாதாட வராத நிலையில் ஒத்துக் கொண்ட சிலரையும் விஜித் அதிகாரத்தை நினைத்து மான்சி வேண்டாம் என்றாள்.
இறுதியாக நேர்மையான வக்கீல் ஒருவரை சரவணன் பரிந்துரைக்க அவரை சந்தித்து பேசினாள். முதலில் திலகன் வழக்கை எடுக்க யோசித்தவர் மான்சி கூறிய சாட்சியின் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகே ஒப்புக் கொண்டார்.
"சார்... வக்கீல் முரளி ரொம்ப நேர்மையானவர். பணத்திற்கும் மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டார். அநாதை ஆசிரமத்தில் வளர்ந்த அவருக்கு குடும்பம் இல்ல." என்று மான்சி சந்தித்த வக்கீல் பற்றி தகவல் விஜித்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதே நேரம் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் முன் அமர்ந்திருந்த விஜித் மூன்றாம் மாத தொடக்கத்தில் இருக்கும் மான்சியின் கர்ப்ப காலத்தை பற்றி கூறி விசாரித்துக் கொண்டிருந்தான்.
"இங்க பாருங்க சார் செக்கப் பண்ணாம என்னால எதையும் உறுதியா சொல்ல முடியாது. ஆரம்ப கால கர்ப்பம் ரொம்ப சென்சிட்டிவ்வா இருக்கும். அதிகபடியான மனஉலைச்சல், தூக்கம், சாப்பாடு இல்லாம இருக்கிறது, அதிக ட்ராவல் எதுவும் நல்லது இல்ல. இதனால பேபி அபார்ட் ஆக சான்ஸ் இருக்கு. உங்க வொய்ப்க்கு உணவு ஓய்வு ரொம்ப அவசியம். டீவில நியூஸ் பார்த்தேன். பெட்டர் மான்சி அப்பா கேஸ்ல நீங்க எதாவது செய்து அவங்களுக்கு ரெஸ்ட் கொடுங்க." என்று கூற, விஜித் தழும்பல் மனதுடன் வீடு வந்தான்.
நீதிமன்ற விசாரணையில் காணொளியும், போலியாக தயாரிக்கப்பட்ட டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டும் சமர்ப்பிக்கப்பட்டது. அனைத்து ஆதாரங்களும் திலகனுக்கு எதிராகவே இருந்தது.
"உங்க சைடுல யாரையும் விசாரிக்கணுமா?" என்று நீதிபதி கேட்க, முரளி புகார் கொடுத்த பெண்ணை மட்டும் விசாரிக்க அனுமதி கேட்டார்.
"சம்பவம் நடந்த அன்று என்ன நடந்துச்சுன்னு முழுசா சொல்ல முடியுமா?" என்று முரளி கேட்க,
"நான் தான் சொல்லிட்டேனே." என்று கூறிய பெண் அழ ஆரம்பித்தாள்.
"அழுது முடிச்சிட்டு சொன்னா நான் அடுத்த கேள்வி கேட்பேன்." என்று முரளி சற்றும் இளக்கமின்றி கேட்க, கண்ணீரை துடைத்துக் கொண்டு கூற ஆரம்பித்தாள்.
"எனக்கு நைட் ஷிஃப்ட் முடிஞ்சு வரும் போது தான் ஒரு வண்டி என் மேல இடிச்சி நான் கீழ விழுந்திட்டேன். அடிப்பட்டு விழுந்து கிடந்த என் கிட்ட போதையில இருந்த இவரு..." என்று திலகனை காட்டி கதறி அழுதாள். அவளின் நடிப்பு திறனை அனைவரும் உண்மை என்று நம்பினர்.
"யுவர் ஹானர் புகார் அளித்த பெண் பொய் கூறுகின்றார் என்பதற்கு அவர் வாக்கு மூலமே போதுமானது." என்று தனது வாதத்தை முன் வைத்தார்.
அன்று விஜித் வீட்டிற்குச் சென்றது, அங்கிருந்து புறப்பட்டது, என நேரத்தோடு காணொளியை சமர்ப்பித்தார்.
"இந்த சாட்சி பொய்யா ஜோடிக்கப்பட்டது." என்று எதிர் தரப்பு வக்கீல் கூற,
"அப்போ இது பொய்யா இருக்க வாய்ப்பு இருக்கா." என்று ஒரு காகிதத்தை நீதிபதியிடம் கொடுத்தார்.
"எனது கட்சிக்காரர் மிஸ்டர். திலகன் தனக்கு ஒரு குழந்தை போதும் என்று இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேமிலி ப்ளானிங் செய்துக் கொண்டார். அதற்காக கேரள அரசு மருத்துவமணை கொடுத்த சான்றிதழ்." என்று கூற நீதிமன்றமே சலசலக்க ஆரம்பித்தது.
"பேமிலி ப்ளானிங் செய்த ஒருவர் எப்படி இருபத்தி இரண்டு வருடத்திற்கு பிறகு இன்னொரு குழந்தைக்கு தந்தையாக முடியும்?" என்று புகார் அளித்த பெண்ணிடம் கேட்க, அவளோ கையை பிசைய ஆரம்பித்தாள்.
"இது திலகன் ஆண்####ல் ஏற்பட்ட தொற்றுக்கு சிகிச்சை செய்த அறிக்கை. அதாவது சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு முன்பு." என்று கொடுக்க, நீதிபதி அப்பெண்ணை வெளிப்படையாக முறைக்க ஆரம்பித்தார்.
"என் சாட்சியில் சந்தேகம் இருந்தால் குறுக்கு விசாரணை செய்யலாம். அத்துடன் எனது கட்சிக்காரர் மருத்துவ பரிசோதனைக்கும் தயாராக இருக்கின்றார்." என்று கூறி முரளி அமர்ந்துக் கொண்டார்.
எதிர் தரப்பு வக்கீல் வாதாட எழும் நேரம் விஜித் ஆட்கள் மறுப்பாக தலையசைக்க, அவரும் வாதாடாமல் அமர்ந்துவிட்டார்.
விஜித் தனது குழந்தையின் நலனே முக்கியமாக, திலகன் விடுதலை அவனை பாதிக்கவில்லை. அவ்வழக்கில் நடித்த பெண்ணிற்கு அமெரிக்காவில் வேலை, வீடு கொடுக்கப்பட அவளும் அமைதியாகி விட்டாள்.
சாட்சியின் அடிப்படையில் திலகன் விடுதலை செய்யப்பட, புகார் அளித்த பெண் காவலில் எடுக்கப்பட்டாள்.
தளர்ந்த நடையுடன் வீடு வந்த திலகனை தேற்றுவதே பெண்கள் இருவரின் வேலையாக இருந்தது. திலகன் நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டாலும் நடந்த பிரச்சனையில் இருந்து அவரால் வெளி வர முடியவில்லை.
எல்லாவற்றிற்கும் மேல் மகளை பார்க்கும் போது அவள் வாழ்வை நினைத்து பயம் மனதை சூழ்ந்துக் கொண்டது.
மான்சி எது நடக்க கூடாது என்று விஜித்தை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டாளோ அது நடந்த விட்ட பின் அவனை முற்றிலுமாக பிரிந்து விட தீர்மானித்து பெற்றோரிடம் கூறினாள்.
"கொஞ்சம் யோசிச்சு முடிவெடுக்கலாம் மான் குட்டி." என்று வெண்பா மகள் வாழ்க்கைக்காக யோசிக்க,
"இல்ல ம்மா... அங்க இருக்கும் போது நிறைய யோசிச்சிட்டேன். அவருக்கு உங்க மேல எதனால கோபம்ன்னு தெரியாத போது மாத்த முடியும்ன்னு நினைச்சேன். என் மேல காதல் இல்லன்னாலும் கொஞ்சம் அக்கறை காட்டியிருந்தா கூட நான் அவர் கூட வாழ நினைச்சிருப்பேன். அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாத ஒருத்தர் கூட என்னால வாழ முடியாது." என்று தீர்மானமாக கூறினாள்.
"டிவோர்ஸ் பண்ணிட்டு என்ன செய்ய போற?'' என்று வெண்பா கேட்க, மான்சி கண்ணில் இரு துளி கண்ணீர் வெளிப்பட்டது.
"தெரியல ம்மா. எனக்கு அவர பிடிக்கும் ரொம்ப பிடிக்கும். யாருன்னு தெரியாமலே காதலிச்சேன். அவர் வீட்டுல என் சின்ன வயசு போட்டோ பார்த்து அவருக்கும் என்ன பிடிக்கும்ன்னு நினைச்சேன். எல்லாத்துக்கும் மேல முட்டாள் தனமா அவர திருத்த முடியும்ன்னு நினைச்சு கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். இப்பாே காதல் கல்யாணம் இரெண்டுலையும் தோற்று போய் நிக்கிறேன்." என்று தாயிடம் மனதை மறைக்காமல் கூறினாள்.
வெண்பாவும் விஜயா இருமுறை பெண் கேட்டு வந்ததை கூறி, "அவங்க கேட்டு பொண்ணு கொடுக்காத கோபம்ன்னு நினைச்சேன். ஆனால் நடக்கிறத பார்த்தா கோபத்துக்கு காரணமா வேற எதோ இருக்கும்ன்னு தோணுது." என்று வெண்பா கூறினார்.
"என்ன காரணமா இருந்தாலும் நிச்சயம் தப்பு நம்ம பக்கம் இல்ல ம்மா... அத என்னால உறுதியா சொல்ல முடியும். இனி எனக்கு அவர் வேண்டாம்." என்று உறுதியாக கூறினாள்.
இங்கு மான்சி தாயிடம் மனதை கூறி ஆறுதல் பெற, விஜித் யாரிடமும் மனதை கூறி ஆறுதல் பெற முடியாது கடல் அலையில் காலை நனைத்துக் கொண்டு வானை வெறித்த படி மணல் மீது படுத்திருந்தான்.
கையில் இருந்த மது பாட்டில் முழுவதும் காலியான பின்னும் அவனுக்கு மாதுவை மறக்க முடியவில்லை.
தன்னை விட்டுச் சென்றவளை இழுத்து வருவது அவனால் இயலாத காரியம் அல்ல. அதை செய்ய விடாமல் அவன் குழந்தை தடையாக இருந்தது.
தனது மிருகத்தனம் மான்சி வயிற்றில் வளரும் சிசுவை பாதிக்க கூடாது என்பதற்காகவே பொறுமையாக இருந்தான்.
போதை கூட நிம்மதி தராத ஆத்திரத்தில் எழுந்தவன் மது பாட்டிலை கடலை நோக்கி எறிந்து "ஏந்திழையாள்..." என்று கத்த, வானம் மழையை பொழிய ஆரம்பித்தது.
தன்னை நனைத்த மழையின் ஸ்பரிசம் தன்னவளை நினைவுப்படுத்த, திரும்பி பார்த்தவனுக்கு கடல் நீரிலும் பெண்ணவள் உருவம் தோன்றியது.
கடலை நோக்கி ஓடியவன் கையை நீட்டி அவளை தொட முயல, அலை மோதி கடல் நீரில் விழுந்தான். காற்றில் கரைந்த அவள் பிம்பத்தை அவன் கையில் பிடிக்க முடியாத கோபத்தில் மீண்டும் வானை பார்த்து கையை விரித்து "ஆஆஆ" என்று கத்த தொடங்கினான்.
உடன் இருக்கும் போது உணராத காதல் பிரிவில் புரியும் போது அவனும் என்ன செய்வான்.
ஹாய் டியர்ஸ்
சொன்ன மாதிரி அடுத்த எப்பி கொடுத்தாச்சு. இனி நாளைக்கு தான்.
தன்னை தேடி உடனே விஜித் வர மாட்டான் என்று அறிந்து வைத்திருந்த மான்சி தந்தையை காப்பாற்ற வேறு வழி கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டு அறைக்குள்ளேயே நடந்துக் கொண்டிருந்தாள்.
தந்தையை பற்றி நினைத்ததும் அவள் நினைவில் குழந்தையும் கணவனும் கூட பின்னுக்குச் சென்று விட்டனர். தாய் தனியாக என்ன செய்கிறாரோ என்று நினைக்க நினைக்க கண்ணீர் வடிய ஆரம்பித்தது.
முந்தைய நாள் தந்தை பிரச்சனையில் சரியாக சாப்பிடாத மான்சி அடுத்த நாள் மாலை வரை மான்சியின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது.
மாலை வீடு வந்ததும் அவள் சாப்பிடாத தகவல் கிடைக்க, வேகமாக படியேறி தங்கள் அறைக்குள் வந்தான்.
உணவும் இல்லாது, தொடர்ந்து நடந்தது என அவள் மிகவும் சோர்ந்து எழுந்துக் கொள்ள முடியாது கிடந்தாள்.
வழக்கம் போல அவளை கண்டுக் கொள்ளாமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்த விஜித் அலைப்பேசியை எடுத்தான்.
"தப்பு பண்ணவங்களை அடிச்சு விசாரிக்கணும் இன்ஸ்பெக்டர்." என்று கூறி வைத்தவன் மான்சியை பார்த்தான்.
"இனி நீ சாப்பிடாம லேட் பண்ற ஒவ்வொரு நிமிசத்துக்கும் ஒரு அடி உன் அப்பா மேல விழும்." என்று வன்மத்துடன் கூற, தந்தைக்காக கண்ணீர் சிந்தினாலும் மான்சி தலை மறுப்பாக அசைந்தது.
இவன் மிரட்டலுக்கு அடிபணிந்தால் காலத்திற்கும் தந்தை சிறையில் இருக்க நேரிடுமே. அதனால் மனதை கல்லாக்கிக் கொண்டாள்.
தந்தை என்றதும் தனக்கு அடிபணிவாள் என்று விஜித் நினைத்திருக்க, அவன் நினைப்பு பொய்யாகியது.
"உன் அப்பா தப்புக்கு உன் அம்மாவும் உடந்தையா இருந்தாங்கன்னு சொல்லி அரெஸ்ட் பண்ணாலும் இதே உறுதி உன் கிட்ட இருக்குமா?" என்று கேட்க, சட்டென்று எழுந்த மான்சி பால்கனிக்கு ஓடினாள்.
"அவங்களுக்கு எதாவது ஆச்சு நான் உயிரோட இருக்க மாட்டேன்." என்று கம்பியை பிடித்துக் கொண்டு கீழே குதிக்க தயாராக இருந்தாள்.
"அப்போ குதிச்சிடு..." என்று கூறியவன் வில்லன் போல சிரித்தான்.
"என்ன தோற்க வைக்க நீ இல்ல உன் வயிற்றில இருக்கிற என் பிள்ளையால கூட முடியாது. பிள்ளை பாசத்த விட எனக்கு நான் ஜெயிக்கிறது தான் முக்கியம். உன்னால முடிஞ்சத செஞ்சிக்கோ." என்றவன் கிளம்பி விட மான்சி பால்கனி தரையிலேயே அமர்ந்து விட்டாள்.
கண்ணீரை துடைத்துக் கொண்டு மான்சி வேகமாக வெளியேற, அதிசயமாக காவலாளி யாரும் அவளை தடுக்கவில்லை.
மான்சி செல்வதை பார்த்துக் கொண்டிருந்த விஜித் தனது நெஞ்சு பகுதியை தடவிக் கொண்டான். வலிக்காதது போல காட்டிக் கொண்டாலும் அவனுக்கும் வலிக்கின்றதே.
தன்னை தோற்க வைக்க நினைப்பவளிடம் இறங்கிச் செல்ல அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை என்றாலும், தொடர்ந்து பட்டினியாக இருப்பவளை சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காகவே வெளியேற அனுமதித்தான்.
நேராக காவல் நிலையம் சென்றவள் தந்தையை காண அனுமதி கேட்டு நிற்க, அவர்களோ அவளுக்கு அனுமதி அளிக்கவில்லை.
தளர்ந்து வெளியே வந்தவள் ஓய்ந்து நடந்து வந்த தாயை பார்த்ததும் அவரை கட்டிக் கொண்டாள்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து பார்க்கும் தாயிடம் அடைக்கலம் புகுந்தவள் தனது சோகத்தை மொத்தமாக கண்ணீர் வழியாக இறக்கி வைத்தாள்.
அதே நேரம் நீண்ட நாட்கள் கழித்து மகளை பார்த்த வெண்பா அவள் தோற்றத்தில் அதிர்ந்து போனார். செல்லமாக வளர்த்த மகள் வாடி வதங்கி நிற்பதை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
"அம்மா நான் உன் கூடவே வரேன் ப்ளீஸ் என்ன அங்க போக சொல்லாத." என்று கண்ணீர் வடிக்க, வெண்பா மகளை அணைத்துக் கொண்டாள்.
தாய் மகள் இருவரும் பேசும் முன் ஊடகங்கள் அவர்களை சூழ்ந்துக் கொண்டது. முதலில் திகைத்த வெண்பா மகளை கேமரா வெளிச்சத்திலிருந்து நகர்த்தி தன் பின்னே நிற்க வைத்துக் கொண்டார்.
தந்தை இக்கட்டில் இருக்கும் நேரத்திலும் தன் மீது வெளிச்சம் படாதிருக்க நினைக்கும் தாயின் அன்பில் உருகிய மான்சி, கண்ணீரை துடைத்துக் கொண்டு முன் வந்தாள்.
ஊடகங்கள் இடை விடாது கேள்வி கேட்க, அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்ட மான்சி "என் அப்பா தப்பு செய்திருக்க மாட்டார். அவர சீக்கிரம் வெளியக் கொண்டு வந்திடுவேன்." என்று உறுதியாக கூற, புகார் கொடுத்த பெண்ணும் அவ்விடம் வந்து சேர்ந்தாள்.
"ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு இப்படி ஒரு அக்கிரமம் பண்ண உங்க அப்பாவுக்கு எப்படி சப்போர்ட் பண்ண முடியுது. உன் அப்பாவோட பாவம் என் வயத்தில வளருது. இதுக்கு நியாயம் கிடைக்காம நான் விட மாட்டேன்." என்று அப்பெண் தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கண்ணீர் வடிக்க, ஊடகங்கள் அதை அழகாக படம் பிடித்துக் கொண்டது.
"இந்த பொண்ணுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க மேடம்?" என்று ஊடகம் மான்சியை நோக்கி திரும்ப,
"நல்ல நடிப்பு... என் அப்பா தப்பு செய்யல. அதுக்கான சாட்சி என் கிட்ட இருக்கு. போலீஸ நம்பி அத கொடுக்க மாட்டேன். கோர்ட்க்கு சாட்சியோட வரேன். பாத்துக்கலாம் யாரு அக்கிரமம் பண்றவங்கன்னு." என்று இல்லாத சாட்சியை இருக்கின்றது என துணிவுடன் கூறிய மான்சி வெண்பாவை அழைத்துக் கொண்டு தந்தை வீட்டிற்கு வந்தாள்.
வீட்டிற்குள் வந்ததும் பழைய நினைவுகளில் வெண்பா கண்ணீர் வடிக்க, அவரை தேற்றுவதே பெரிய வேலையாக இருந்தது.
தண்ணீர் எடுக்க எழுந்த மான்சி தலை சுற்றி கீழே அமர வெண்பாவின் கவனம் கணவன் நினைவிலிருந்து மகளிடம் திரும்பியது.
"மான் குட்டி என்னடா?" என்று பரிவுடன் கேட்க, தாயிடம் ஒன்று விடாமல் கூறி விட்டாள்.
"தப்பு மான் குட்டி. யாரோ செய்த தப்புக்கு இந்த உலகத்தையே பார்க்காத குழந்தைக்கு தண்டனை கொடுக்க கூடாது.'' என்ற வெண்பா சமைக்க எதுவும் இல்லாததில் உணவை ஆடர் செய்தார்.
ஆடர் செய்த உணவு வந்ததும் அதை பிரித்து மகளுக்கு வெண்பா ஊட்ட, அவருக்கு மான்சி ஊட்டி விட்டாள்.
"ம்மா... எனக்கு அப்புறம் இன்னொரு குழந்தை ஏன் பெத்துக்கல?" என்று வாயில் இருந்த உணவை விழுங்கியபடி மான்சி கேட்க,
"எங்களுக்கு நீ மட்டும் போதும்ன்னு தோணுச்சி அதான் பெத்துக்கல. இப்போ நடக்கிறத நினைச்சு பார்த்தா ஒத்தையா உன்ன வளர்த்திருக்க கூடாதுன்னு தோணுது. உனக்கு உதவ கூட யாரும் இல்ல." என்று வருத்தத்துடன் கூறிக் கொண்டார்.
புகார் கொடுத்த பெண்ணின் பேச்சையும், மான்சி கூறிய சாட்சி பற்றியும் மாறி மாறி ஔி பரப்ப மக்களில் ஒரு சிலர் திலகன் நல்லவனோ என்று யோசிக்க ஆரம்பித்தனர்.
"மான்சி ஏந்திழையாள் கையில என்ன சாட்சி இருந்தாலும் அது கோர்ட்க்கு போக கூடாது. என் கைக்கு அது முன்னவே வரணும்." என்று விஜித் கட்டளையிட, அவன் ஆட்கள் என்ன சாட்சி என்று கண்டுக் கொள்ள முடியாது திணறினர்.
"சாட்சி எல்லாம் பக்காவா இருக்கு சார் மிஸ்டர் திலகன் வெளிய வர முடியாது." என்று போலீஸ் வக்கீல் என்று அனைவரும் உறுதியாக கூற, விஜித்திற்கு அந்த உறுதி போதவில்லை.
சாட்சி என்று ஒன்று இல்லாது இவ்வளவு உறுதியாக மான்சி பேச மாட்டாள் என்று நினைத்தவன் தொடர்ந்து மான்சியையும் அவள் சம்பந்தப்பட்ட அனைவரையும் கண்காணிக்க ஆரம்பித்தான்.
திலகனுக்கு ஆதரவாக யாரும் வாதாட வராத நிலையில் ஒத்துக் கொண்ட சிலரையும் விஜித் அதிகாரத்தை நினைத்து மான்சி வேண்டாம் என்றாள்.
இறுதியாக நேர்மையான வக்கீல் ஒருவரை சரவணன் பரிந்துரைக்க அவரை சந்தித்து பேசினாள். முதலில் திலகன் வழக்கை எடுக்க யோசித்தவர் மான்சி கூறிய சாட்சியின் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகே ஒப்புக் கொண்டார்.
"சார்... வக்கீல் முரளி ரொம்ப நேர்மையானவர். பணத்திற்கும் மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டார். அநாதை ஆசிரமத்தில் வளர்ந்த அவருக்கு குடும்பம் இல்ல." என்று மான்சி சந்தித்த வக்கீல் பற்றி தகவல் விஜித்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதே நேரம் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் முன் அமர்ந்திருந்த விஜித் மூன்றாம் மாத தொடக்கத்தில் இருக்கும் மான்சியின் கர்ப்ப காலத்தை பற்றி கூறி விசாரித்துக் கொண்டிருந்தான்.
"இங்க பாருங்க சார் செக்கப் பண்ணாம என்னால எதையும் உறுதியா சொல்ல முடியாது. ஆரம்ப கால கர்ப்பம் ரொம்ப சென்சிட்டிவ்வா இருக்கும். அதிகபடியான மனஉலைச்சல், தூக்கம், சாப்பாடு இல்லாம இருக்கிறது, அதிக ட்ராவல் எதுவும் நல்லது இல்ல. இதனால பேபி அபார்ட் ஆக சான்ஸ் இருக்கு. உங்க வொய்ப்க்கு உணவு ஓய்வு ரொம்ப அவசியம். டீவில நியூஸ் பார்த்தேன். பெட்டர் மான்சி அப்பா கேஸ்ல நீங்க எதாவது செய்து அவங்களுக்கு ரெஸ்ட் கொடுங்க." என்று கூற, விஜித் தழும்பல் மனதுடன் வீடு வந்தான்.
நீதிமன்ற விசாரணையில் காணொளியும், போலியாக தயாரிக்கப்பட்ட டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டும் சமர்ப்பிக்கப்பட்டது. அனைத்து ஆதாரங்களும் திலகனுக்கு எதிராகவே இருந்தது.
"உங்க சைடுல யாரையும் விசாரிக்கணுமா?" என்று நீதிபதி கேட்க, முரளி புகார் கொடுத்த பெண்ணை மட்டும் விசாரிக்க அனுமதி கேட்டார்.
"சம்பவம் நடந்த அன்று என்ன நடந்துச்சுன்னு முழுசா சொல்ல முடியுமா?" என்று முரளி கேட்க,
"நான் தான் சொல்லிட்டேனே." என்று கூறிய பெண் அழ ஆரம்பித்தாள்.
"அழுது முடிச்சிட்டு சொன்னா நான் அடுத்த கேள்வி கேட்பேன்." என்று முரளி சற்றும் இளக்கமின்றி கேட்க, கண்ணீரை துடைத்துக் கொண்டு கூற ஆரம்பித்தாள்.
"எனக்கு நைட் ஷிஃப்ட் முடிஞ்சு வரும் போது தான் ஒரு வண்டி என் மேல இடிச்சி நான் கீழ விழுந்திட்டேன். அடிப்பட்டு விழுந்து கிடந்த என் கிட்ட போதையில இருந்த இவரு..." என்று திலகனை காட்டி கதறி அழுதாள். அவளின் நடிப்பு திறனை அனைவரும் உண்மை என்று நம்பினர்.
"யுவர் ஹானர் புகார் அளித்த பெண் பொய் கூறுகின்றார் என்பதற்கு அவர் வாக்கு மூலமே போதுமானது." என்று தனது வாதத்தை முன் வைத்தார்.
அன்று விஜித் வீட்டிற்குச் சென்றது, அங்கிருந்து புறப்பட்டது, என நேரத்தோடு காணொளியை சமர்ப்பித்தார்.
"இந்த சாட்சி பொய்யா ஜோடிக்கப்பட்டது." என்று எதிர் தரப்பு வக்கீல் கூற,
"அப்போ இது பொய்யா இருக்க வாய்ப்பு இருக்கா." என்று ஒரு காகிதத்தை நீதிபதியிடம் கொடுத்தார்.
"எனது கட்சிக்காரர் மிஸ்டர். திலகன் தனக்கு ஒரு குழந்தை போதும் என்று இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேமிலி ப்ளானிங் செய்துக் கொண்டார். அதற்காக கேரள அரசு மருத்துவமணை கொடுத்த சான்றிதழ்." என்று கூற நீதிமன்றமே சலசலக்க ஆரம்பித்தது.
"பேமிலி ப்ளானிங் செய்த ஒருவர் எப்படி இருபத்தி இரண்டு வருடத்திற்கு பிறகு இன்னொரு குழந்தைக்கு தந்தையாக முடியும்?" என்று புகார் அளித்த பெண்ணிடம் கேட்க, அவளோ கையை பிசைய ஆரம்பித்தாள்.
"இது திலகன் ஆண்####ல் ஏற்பட்ட தொற்றுக்கு சிகிச்சை செய்த அறிக்கை. அதாவது சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு முன்பு." என்று கொடுக்க, நீதிபதி அப்பெண்ணை வெளிப்படையாக முறைக்க ஆரம்பித்தார்.
"என் சாட்சியில் சந்தேகம் இருந்தால் குறுக்கு விசாரணை செய்யலாம். அத்துடன் எனது கட்சிக்காரர் மருத்துவ பரிசோதனைக்கும் தயாராக இருக்கின்றார்." என்று கூறி முரளி அமர்ந்துக் கொண்டார்.
எதிர் தரப்பு வக்கீல் வாதாட எழும் நேரம் விஜித் ஆட்கள் மறுப்பாக தலையசைக்க, அவரும் வாதாடாமல் அமர்ந்துவிட்டார்.
விஜித் தனது குழந்தையின் நலனே முக்கியமாக, திலகன் விடுதலை அவனை பாதிக்கவில்லை. அவ்வழக்கில் நடித்த பெண்ணிற்கு அமெரிக்காவில் வேலை, வீடு கொடுக்கப்பட அவளும் அமைதியாகி விட்டாள்.
சாட்சியின் அடிப்படையில் திலகன் விடுதலை செய்யப்பட, புகார் அளித்த பெண் காவலில் எடுக்கப்பட்டாள்.
தளர்ந்த நடையுடன் வீடு வந்த திலகனை தேற்றுவதே பெண்கள் இருவரின் வேலையாக இருந்தது. திலகன் நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டாலும் நடந்த பிரச்சனையில் இருந்து அவரால் வெளி வர முடியவில்லை.
எல்லாவற்றிற்கும் மேல் மகளை பார்க்கும் போது அவள் வாழ்வை நினைத்து பயம் மனதை சூழ்ந்துக் கொண்டது.
மான்சி எது நடக்க கூடாது என்று விஜித்தை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டாளோ அது நடந்த விட்ட பின் அவனை முற்றிலுமாக பிரிந்து விட தீர்மானித்து பெற்றோரிடம் கூறினாள்.
"கொஞ்சம் யோசிச்சு முடிவெடுக்கலாம் மான் குட்டி." என்று வெண்பா மகள் வாழ்க்கைக்காக யோசிக்க,
"இல்ல ம்மா... அங்க இருக்கும் போது நிறைய யோசிச்சிட்டேன். அவருக்கு உங்க மேல எதனால கோபம்ன்னு தெரியாத போது மாத்த முடியும்ன்னு நினைச்சேன். என் மேல காதல் இல்லன்னாலும் கொஞ்சம் அக்கறை காட்டியிருந்தா கூட நான் அவர் கூட வாழ நினைச்சிருப்பேன். அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாத ஒருத்தர் கூட என்னால வாழ முடியாது." என்று தீர்மானமாக கூறினாள்.
"டிவோர்ஸ் பண்ணிட்டு என்ன செய்ய போற?'' என்று வெண்பா கேட்க, மான்சி கண்ணில் இரு துளி கண்ணீர் வெளிப்பட்டது.
"தெரியல ம்மா. எனக்கு அவர பிடிக்கும் ரொம்ப பிடிக்கும். யாருன்னு தெரியாமலே காதலிச்சேன். அவர் வீட்டுல என் சின்ன வயசு போட்டோ பார்த்து அவருக்கும் என்ன பிடிக்கும்ன்னு நினைச்சேன். எல்லாத்துக்கும் மேல முட்டாள் தனமா அவர திருத்த முடியும்ன்னு நினைச்சு கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். இப்பாே காதல் கல்யாணம் இரெண்டுலையும் தோற்று போய் நிக்கிறேன்." என்று தாயிடம் மனதை மறைக்காமல் கூறினாள்.
வெண்பாவும் விஜயா இருமுறை பெண் கேட்டு வந்ததை கூறி, "அவங்க கேட்டு பொண்ணு கொடுக்காத கோபம்ன்னு நினைச்சேன். ஆனால் நடக்கிறத பார்த்தா கோபத்துக்கு காரணமா வேற எதோ இருக்கும்ன்னு தோணுது." என்று வெண்பா கூறினார்.
"என்ன காரணமா இருந்தாலும் நிச்சயம் தப்பு நம்ம பக்கம் இல்ல ம்மா... அத என்னால உறுதியா சொல்ல முடியும். இனி எனக்கு அவர் வேண்டாம்." என்று உறுதியாக கூறினாள்.
இங்கு மான்சி தாயிடம் மனதை கூறி ஆறுதல் பெற, விஜித் யாரிடமும் மனதை கூறி ஆறுதல் பெற முடியாது கடல் அலையில் காலை நனைத்துக் கொண்டு வானை வெறித்த படி மணல் மீது படுத்திருந்தான்.
கையில் இருந்த மது பாட்டில் முழுவதும் காலியான பின்னும் அவனுக்கு மாதுவை மறக்க முடியவில்லை.
தன்னை விட்டுச் சென்றவளை இழுத்து வருவது அவனால் இயலாத காரியம் அல்ல. அதை செய்ய விடாமல் அவன் குழந்தை தடையாக இருந்தது.
தனது மிருகத்தனம் மான்சி வயிற்றில் வளரும் சிசுவை பாதிக்க கூடாது என்பதற்காகவே பொறுமையாக இருந்தான்.
போதை கூட நிம்மதி தராத ஆத்திரத்தில் எழுந்தவன் மது பாட்டிலை கடலை நோக்கி எறிந்து "ஏந்திழையாள்..." என்று கத்த, வானம் மழையை பொழிய ஆரம்பித்தது.
தன்னை நனைத்த மழையின் ஸ்பரிசம் தன்னவளை நினைவுப்படுத்த, திரும்பி பார்த்தவனுக்கு கடல் நீரிலும் பெண்ணவள் உருவம் தோன்றியது.
கடலை நோக்கி ஓடியவன் கையை நீட்டி அவளை தொட முயல, அலை மோதி கடல் நீரில் விழுந்தான். காற்றில் கரைந்த அவள் பிம்பத்தை அவன் கையில் பிடிக்க முடியாத கோபத்தில் மீண்டும் வானை பார்த்து கையை விரித்து "ஆஆஆ" என்று கத்த தொடங்கினான்.
உடன் இருக்கும் போது உணராத காதல் பிரிவில் புரியும் போது அவனும் என்ன செய்வான்.
ஹாய் டியர்ஸ்
சொன்ன மாதிரி அடுத்த எப்பி கொடுத்தாச்சு. இனி நாளைக்கு தான்.