அத்தியாயம் 7
"ம்மா இத நான் எப்பவும் கழட்டவே மாட்டேன்." என்று தான் தாயிடம் கூறியது மான்சி நினைவில் வந்துச் சென்றது.
அன்னை தனக்கு பரிசளித்த செயினை முதல் முறை கழட்டியதில் கவலையில் இருந்த மான்சியிடம் எதையும் கூறாமல் தனது வீட்டிற்கே அழைத்து வந்தான். கார் நின்ற பிறகே வந்திருக்கும் இடத்தை உணர்ந்தவள்
"இது யார் வீடு?" என்று கேட்க,
"இப்போதைக்கு மிஸ்டர்.ஏகலைவன் வீடு. இன்னும் கொஞ்ச நாள்ல மிஸ்டர் அண்ட் மிஸஸ்.ஏகலைவன் வீடு." என்று கூற,
"இங்க எதுக்கு?" என்று தயங்கிய மான்சிக்கு காரை விட்டு இறங்க மனதில்லை.
"ஜஸ்ட் டின்னர் முடிச்சிட்டு போகலாம். அண்ட் உன் கிட்ட ஒன்னு காட்டணும்." என்று கூறி விட்டு இறங்க, அன்னை அலைப்பேசிக்கு செய்தி அனுப்பி விட்டு இறங்கினாள்.
மான்சியின் செயலை கடை கண்ணால் பார்த்துக் கொண்டவன் இதழ்கள் இகழ்ச்சியில் வளைந்தது. மான்சியை நேராக மேல் தளத்திற்கு அழைத்து வந்தவன் ஒரு அறை கதவின் முன் நின்றான்.
"இந்த ரூம் நீ கண்டிப்பா பார்க்கணும்." என்று கூறி திறந்து விட, தயங்கிக் கொண்டே அவ்வறைக்குள் அடி எடுத்து வைத்தாள்.
சட்டென்று உயிர் பெற்ற விளக்கின் ஔியில் கண்களை மூடி திறந்தவளுக்கு இமைகளை சிமிட்ட கூட தோன்றவில்லை. தான் நினைப்பது சரியா என்று தெரிந்துக் கொள்ள விஜித்தை பார்க்க, அவனோ மார்பின் குறுக்கே கையை கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்றான்.
"இது எப்போ இருந்து இங்க இருக்கு?" என்று ஏழு வயதில் தான் முதன்முதலில் பாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து கேட்டாள்.
"நீ பாடி முடிச்ச அடுத்த வாரத்தில இருந்து இங்க தான் இருக்கு." என்று சாதாரணமாக கூறினான்.
"எப்படி இங்க?" என்று கேட்க,
"நான் தான் என் கையால மாட்டினேன். இதுக்கு மேல உன் கேள்விக்கு நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் பதில் சொல்றேன்." என்று முடித்துக் கொண்டான்.
'ஏந்திழையாளை சீக்கிரம் மிஸஸ்.ஏகலைவனா இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்.' என்று புகைப்படத்தின் அடியில் எழுதி அதில் தேதியும் இருந்தது.
மீண்டும் புகைப்படத்தில் இருந்த வாக்கியத்தை வருடி பார்த்தவள் மனது சந்தோஷத்தில் துள்ளியது.
தன்னவன் தன்னை பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருக்கின்றான் என்ற பரவச உணர்வு அவளிடம் நிறைந்திருந்தது.
"ஏகலைவனின் ஏந்திழையாள்." என்று மான்சியின் உதடுகள் முணுமுணுக்க, விஜித் தனது நடையை நிறுத்திக் கொண்டான்.
"இப்போ என்ன சொன்ன?" என்று விஜித் கேட்க, ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள்
"ஏகலைவனின் ஏந்திழையாள்." என்று அழுத்தமாக, அவன் கண்களை பார்த்துக் கொண்டே கூறினாள்.
மான்சி உச்சரித்த வார்த்தைகளை மனதில் வேறொரு குரலும் எதிரொலிக்க, தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்க தனது கண்களை மூடிக்கொண்டான். வினாடி நேரத்தில் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வதில் வெற்றியும் கண்டான்.
"குட்" என்று அவள் கன்னம் தட்டி கூறியவன் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து வர, அவ்விடம் கேண்டில் லைட் டின்னர் சாப்பிட ஏற்ற வகையில் தயாராக இருந்தது.
சாப்பிட்டு முடிக்கும் வரை இருவரும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. பேச முடியாமல் இருவரும் அவரவர் உணர்வில் சிக்கியிருந்தனர்.
மான்சியை விடுவதற்காக அவள் வீட்டு வாயில் வரை வந்தவன், காரை நிறுத்திவிட்டு அவளை நோக்கி திரும்பி அமர்ந்தான். மான்சியின் கைகள் அலைப்பேசியில் தட்டச்சு செய்ய, அதை அவள் எதிர்பாராத நேரம் அவள் கையிலிருந்து எடுத்திருந்தான்.
'வந்துட்டேன்.' என்று அதில் டைப் பண்ணி இருந்தது.
"உன் அம்மாட்ட எதையும் சொல்லாம இருக்க முடியாதா?" என்று ஒரு மாதிரியான குரலில் கேட்க, அவனிடமிருந்த தன் போனை பெற வேண்டிய கவனத்தில் அதை அவள் கவனிக்கவில்லை.
"எல்லாத்தையும் அம்மாட்ட சொல்லலன்னா எனக்கு தூக்கம் வராது." என்றாள்.
"ம்கும்... அப்போ இதையும் சொல்ல முடிஞ்சா சொல்லு." என்று அவள் எதிர்பாராத நேரம் அவள் இதழோடு தன் இதழ் பொறுத்தினான்.
விஜித்தின் ஒரு கை மான்சியின் பின் கழுத்தை பிடித்திருக்க, மற்றொரு கையோ அவள் இடையை வளைத்து பிடித்திருந்தது. பலம் பொருந்தியவனின் முன் பாவையின் சிறு முயற்சியும் பலனின்றி போனது.
ஒரு கட்டத்தில் அவள் எதிர்ப்புகள் குறைந்து இதழ் முத்தத்தில் பங்கு கொள்ள, விஜித் இதழ்கள் தன் வெற்றியின் மகிழ்வில் அரை நொடி விரிந்து பின் தனது இணையை இறுக பற்றிக் கொண்டது.
இது வரை உணர்ந்திராத புது வகை உணர்வை கையாள தெரியாதவள் அவன் அணிந்திருந்த சட்டை காலரை இறுக பற்றிக் கொண்டாள். சில நிமிடத்தில் காலரில் இருந்த கைகள் மெல்ல மேல் உயர்ந்து கழுத்தை கடந்து அவன் சிகையை பற்றிக் கொண்டது.
மான்சி உணர்ச்சி பெருக்கில் அவன் முடியை அழுத்தி பிடித்தது வலி கொடுத்த போதிலும், அவள் இதழை சுவைக்கும் பணியை அவன் விடவில்லை. திடீரென்று கேட்ட ஓசையில் விஜித் மான்சியின் இதழ்களுக்கு விடுதலை கொடுத்து விலகினான்.
அவன் விலகிய பின்னும் அவன் தந்த உணர்வில் இருந்து மீள முடியாது தவித்தவள், மீண்டும் கேட்ட தனது அலைப்பேசியின் இசையில் சுற்றும் முற்றும் பார்க்க ஆரம்பித்தாள்.
"உன் போன்..." என்று விஜித் கொடுக்க, அதை வாங்கும் போது அவள் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது.
திரையில் தெரிந்த தாயின் பெயரை பார்த்ததும் தவறு செய்த குழந்தையாக தவித்துவிட்டாள். சற்று முன் தித்தித்த முத்தம் இப்போது தீயாக மாறி அவள் மனதை பொசுக்க ஆரம்பித்தது.
"ஏந்திழையாள்..." என்று அழுத்தமாக அழைத்தவனின் குரலில் மான்சியின் உடல் பயத்தில் தூக்கி போட்டது.
"ஓ ஷிட். கெட் ஆவுட் ஆஃப் மை கார் இமீடியட்லி." என்று விஜித் கத்த, தன்னிடமா கூறினான் என்ற பாவனை பெண்ணிடம்.
"உன்ன தான். என்ன கோபப் பட வைக்காம கீழ இறங்கு." என்று குரலை உயர்த்தி கூற,
"நான் என்ன பண்ணேன்?" என்று விடையறியா குழந்தையின் பாவனையில் கேட்டாள்.
"உன் அம்மா போன் பண்ணதும் உன் முகம் ஏன் அப்படி மாறுது? கிஸ் பண்ணதுக்கு ஏதோ நான் உன்ன ரே**ப் பண்ண ஃபீல் கொடுக்கிற. வீ ஆர் எங்கேஜ்டு. டூ யூ ரியலி லவ் மீ ஆர் நாட்?" என்று அவன் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் நெருப்பு கங்குகளாக வெளி வந்தது.
"நான்... அம்மா..." என்று பதிலளிக்க முடியாமல் மான்சி திணறினாள்.
"ஷட் அப் ஏந்திழையாள். அம்மா உனக்கு முக்கியமா இருக்கலாம். பட் நான் இருக்கிற வரை நான் மட்டும் தான் உன் ப்ரையாரிட்டியா இருக்கணும் காட் இட்." என்று அவன் மனதை முதல் முறை மறைக்காமல் வெளிப்படுத்தினான்.
விஜித் ஏகலைவன் வார்த்தை அதன் உண்மை வடிவத்தில் வெளி வந்தாலும், அது தன் மீது கொண்ட காதலால் ஏற்பட்ட உரிமை உணர்வு என்று மான்சி நினைத்துக் கொண்டாள்.
"சாரி..." என்று கீழே குனிந்த படி கூற,
"இட்ஸ் ஓகே. பட் இதுவே கடைசியா இருக்கட்டும்." என்று கட்டளையாகவே கூறினான்.
"ம்ம்ம்..." என்று கூறி தலையசைத்தவள்
"நான் உங்கள உண்மையா காதலிக்கிறேன். ப்ளீஸ் திரும்பவும் காதலிக்கிறியான்னு கேட்காதீங்க." என்று கூற அவள் கண்ணிலிருந்து விழி நீர் கீழே விழ தயாராக இருந்தது.
தன் இரு கரங்களினால் அவள் முகத்தை தாங்கி பிடித்தவன் கட்டை விரல் கொண்டு கண்ணீரை துடைத்தான். அவள் விழிகளுடன் தன் விழியை கலக்க விட்டவன்
"இனி உன் ஞாபகத்தில நான் மட்டும் தான் இருக்கணும்." என்று கூறிக் கொண்டே அவள் இதழ்களை கவ்விக் கொண்டான். இம்முறை சற்று வன்மையாகவே மான்சியின் இதழை சுவைத்தவன் விரைவாக விடுதலையும் அளித்தான்.
"பாய் ஏந்திழையாள்... ஸீ யூ சூன்..." என்று கூறி விடை பெற, கையை அசைத்து விடை கொடுத்தவளுக்கு மனதில் பல கேள்விகள்.
"மான்சி உள்ள வா." என்று வெண்பா அழைத்த பின்னே உள்ளே வந்தாள்.
வழக்கம் போல தாயின் கேள்விகளுக்கு பதிலளித்தாலும், அவள் கவனம் முழுவதும் கள்வனிடம் அல்லவா இருந்தது. தனது அறைக்குச் செல்ல திரும்பிய மகளின் கழுத்தை ஒரு நிமிடம் பார்த்த வெண்பா தனது கேள்வியை நிறுத்திக் கொண்டார்.
தான் அணிவித்த செயின் பல வருடங்களாக மகளின் கழுத்தில் இருந்தது. தற்போது இல்லாமல் வேறொன்று இருப்பதன் காரணம் விஜித் என்று தெரிந்தாலும், மகள் தன்னிடம் கூறாததில் கவலை கொண்டார்.
தாய் தனது கேள்விகளை நிறுத்தியதை கூட உணராமல் தனதறைக்கு வந்தவளுக்கு மூளையே மரத்து போனது போல இருந்தது.
விஜித் முத்தமிட்டது பிடித்திருக்கின்றது ஆனாலும் தாயின் வளர்ப்பு அதை ஏற்க மறுக்கின்றது. காதலிக்கின்றாள் தான் அதற்காக தாயின் கட்டுப்பாடுகளை மீற முடியவில்லை.
இன்று முழுவதும் நடந்த அனைத்தையும் ஒரு முறை மனதிற்குள் நினைத்து பார்த்தவளுக்கு விஜித் தன்னை வெறித்தனமாக காதலிப்பதாக நினைக்க தோன்றியது. துளியும் விஜித் தன்னை காதலிக்கவில்லையோ என்ற சந்தேகம் அவளுக்கு வரவில்லை.
அதிலும் அவன் வீட்டில் பார்த்த தன் சிறு வயது புகைப்படமும் ஏந்திழையாள் என்ற அழைப்பும் அவளின் அனைத்து குழப்பங்களையும் மூடி மறைத்தது. மான்சி மனதின் கேள்விகளுக்கு அவளே ஒரு பதிலை கூறிக் கொண்டாள்.
"ஏந்திழையாள் நீ ரொம்ப பண்ற. கொஞ்சம் அவர் கூட இருக்கும் போது அவர பத்தி மட்டும் யோசி." என்று கண்ணாடியில் அவன் அணிந்த செயின் டாலரை பார்த்து கூறிக் கொண்டாள்.
"இனி உன் லைப்ல இந்த ஏகலைவன் மட்டும் தான் ஏந்திழையாள்..." என்று பற்களை கடித்தபடி கூறியவன் தன் கையில் இருந்த செயினை குப்பை தொட்டியில் தூக்கி எறிந்தான்.
ஹாய் டியர்
சிலருக்கு இது ஆண்டி ஹீரோ கதையான்னு சந்தேகம் வரலாம் நிஜமா இது ஆண்டி ஹீரோ கதை தான் நம்புங்கப்பு....
"ம்மா இத நான் எப்பவும் கழட்டவே மாட்டேன்." என்று தான் தாயிடம் கூறியது மான்சி நினைவில் வந்துச் சென்றது.
அன்னை தனக்கு பரிசளித்த செயினை முதல் முறை கழட்டியதில் கவலையில் இருந்த மான்சியிடம் எதையும் கூறாமல் தனது வீட்டிற்கே அழைத்து வந்தான். கார் நின்ற பிறகே வந்திருக்கும் இடத்தை உணர்ந்தவள்
"இது யார் வீடு?" என்று கேட்க,
"இப்போதைக்கு மிஸ்டர்.ஏகலைவன் வீடு. இன்னும் கொஞ்ச நாள்ல மிஸ்டர் அண்ட் மிஸஸ்.ஏகலைவன் வீடு." என்று கூற,
"இங்க எதுக்கு?" என்று தயங்கிய மான்சிக்கு காரை விட்டு இறங்க மனதில்லை.
"ஜஸ்ட் டின்னர் முடிச்சிட்டு போகலாம். அண்ட் உன் கிட்ட ஒன்னு காட்டணும்." என்று கூறி விட்டு இறங்க, அன்னை அலைப்பேசிக்கு செய்தி அனுப்பி விட்டு இறங்கினாள்.
மான்சியின் செயலை கடை கண்ணால் பார்த்துக் கொண்டவன் இதழ்கள் இகழ்ச்சியில் வளைந்தது. மான்சியை நேராக மேல் தளத்திற்கு அழைத்து வந்தவன் ஒரு அறை கதவின் முன் நின்றான்.
"இந்த ரூம் நீ கண்டிப்பா பார்க்கணும்." என்று கூறி திறந்து விட, தயங்கிக் கொண்டே அவ்வறைக்குள் அடி எடுத்து வைத்தாள்.
சட்டென்று உயிர் பெற்ற விளக்கின் ஔியில் கண்களை மூடி திறந்தவளுக்கு இமைகளை சிமிட்ட கூட தோன்றவில்லை. தான் நினைப்பது சரியா என்று தெரிந்துக் கொள்ள விஜித்தை பார்க்க, அவனோ மார்பின் குறுக்கே கையை கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்றான்.
"இது எப்போ இருந்து இங்க இருக்கு?" என்று ஏழு வயதில் தான் முதன்முதலில் பாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து கேட்டாள்.
"நீ பாடி முடிச்ச அடுத்த வாரத்தில இருந்து இங்க தான் இருக்கு." என்று சாதாரணமாக கூறினான்.
"எப்படி இங்க?" என்று கேட்க,
"நான் தான் என் கையால மாட்டினேன். இதுக்கு மேல உன் கேள்விக்கு நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் பதில் சொல்றேன்." என்று முடித்துக் கொண்டான்.
'ஏந்திழையாளை சீக்கிரம் மிஸஸ்.ஏகலைவனா இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்.' என்று புகைப்படத்தின் அடியில் எழுதி அதில் தேதியும் இருந்தது.
மீண்டும் புகைப்படத்தில் இருந்த வாக்கியத்தை வருடி பார்த்தவள் மனது சந்தோஷத்தில் துள்ளியது.
தன்னவன் தன்னை பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருக்கின்றான் என்ற பரவச உணர்வு அவளிடம் நிறைந்திருந்தது.
"ஏகலைவனின் ஏந்திழையாள்." என்று மான்சியின் உதடுகள் முணுமுணுக்க, விஜித் தனது நடையை நிறுத்திக் கொண்டான்.
"இப்போ என்ன சொன்ன?" என்று விஜித் கேட்க, ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள்
"ஏகலைவனின் ஏந்திழையாள்." என்று அழுத்தமாக, அவன் கண்களை பார்த்துக் கொண்டே கூறினாள்.
மான்சி உச்சரித்த வார்த்தைகளை மனதில் வேறொரு குரலும் எதிரொலிக்க, தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்க தனது கண்களை மூடிக்கொண்டான். வினாடி நேரத்தில் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வதில் வெற்றியும் கண்டான்.
"குட்" என்று அவள் கன்னம் தட்டி கூறியவன் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து வர, அவ்விடம் கேண்டில் லைட் டின்னர் சாப்பிட ஏற்ற வகையில் தயாராக இருந்தது.
சாப்பிட்டு முடிக்கும் வரை இருவரும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. பேச முடியாமல் இருவரும் அவரவர் உணர்வில் சிக்கியிருந்தனர்.
மான்சியை விடுவதற்காக அவள் வீட்டு வாயில் வரை வந்தவன், காரை நிறுத்திவிட்டு அவளை நோக்கி திரும்பி அமர்ந்தான். மான்சியின் கைகள் அலைப்பேசியில் தட்டச்சு செய்ய, அதை அவள் எதிர்பாராத நேரம் அவள் கையிலிருந்து எடுத்திருந்தான்.
'வந்துட்டேன்.' என்று அதில் டைப் பண்ணி இருந்தது.
"உன் அம்மாட்ட எதையும் சொல்லாம இருக்க முடியாதா?" என்று ஒரு மாதிரியான குரலில் கேட்க, அவனிடமிருந்த தன் போனை பெற வேண்டிய கவனத்தில் அதை அவள் கவனிக்கவில்லை.
"எல்லாத்தையும் அம்மாட்ட சொல்லலன்னா எனக்கு தூக்கம் வராது." என்றாள்.
"ம்கும்... அப்போ இதையும் சொல்ல முடிஞ்சா சொல்லு." என்று அவள் எதிர்பாராத நேரம் அவள் இதழோடு தன் இதழ் பொறுத்தினான்.
விஜித்தின் ஒரு கை மான்சியின் பின் கழுத்தை பிடித்திருக்க, மற்றொரு கையோ அவள் இடையை வளைத்து பிடித்திருந்தது. பலம் பொருந்தியவனின் முன் பாவையின் சிறு முயற்சியும் பலனின்றி போனது.
ஒரு கட்டத்தில் அவள் எதிர்ப்புகள் குறைந்து இதழ் முத்தத்தில் பங்கு கொள்ள, விஜித் இதழ்கள் தன் வெற்றியின் மகிழ்வில் அரை நொடி விரிந்து பின் தனது இணையை இறுக பற்றிக் கொண்டது.
இது வரை உணர்ந்திராத புது வகை உணர்வை கையாள தெரியாதவள் அவன் அணிந்திருந்த சட்டை காலரை இறுக பற்றிக் கொண்டாள். சில நிமிடத்தில் காலரில் இருந்த கைகள் மெல்ல மேல் உயர்ந்து கழுத்தை கடந்து அவன் சிகையை பற்றிக் கொண்டது.
மான்சி உணர்ச்சி பெருக்கில் அவன் முடியை அழுத்தி பிடித்தது வலி கொடுத்த போதிலும், அவள் இதழை சுவைக்கும் பணியை அவன் விடவில்லை. திடீரென்று கேட்ட ஓசையில் விஜித் மான்சியின் இதழ்களுக்கு விடுதலை கொடுத்து விலகினான்.
அவன் விலகிய பின்னும் அவன் தந்த உணர்வில் இருந்து மீள முடியாது தவித்தவள், மீண்டும் கேட்ட தனது அலைப்பேசியின் இசையில் சுற்றும் முற்றும் பார்க்க ஆரம்பித்தாள்.
"உன் போன்..." என்று விஜித் கொடுக்க, அதை வாங்கும் போது அவள் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது.
திரையில் தெரிந்த தாயின் பெயரை பார்த்ததும் தவறு செய்த குழந்தையாக தவித்துவிட்டாள். சற்று முன் தித்தித்த முத்தம் இப்போது தீயாக மாறி அவள் மனதை பொசுக்க ஆரம்பித்தது.
"ஏந்திழையாள்..." என்று அழுத்தமாக அழைத்தவனின் குரலில் மான்சியின் உடல் பயத்தில் தூக்கி போட்டது.
"ஓ ஷிட். கெட் ஆவுட் ஆஃப் மை கார் இமீடியட்லி." என்று விஜித் கத்த, தன்னிடமா கூறினான் என்ற பாவனை பெண்ணிடம்.
"உன்ன தான். என்ன கோபப் பட வைக்காம கீழ இறங்கு." என்று குரலை உயர்த்தி கூற,
"நான் என்ன பண்ணேன்?" என்று விடையறியா குழந்தையின் பாவனையில் கேட்டாள்.
"உன் அம்மா போன் பண்ணதும் உன் முகம் ஏன் அப்படி மாறுது? கிஸ் பண்ணதுக்கு ஏதோ நான் உன்ன ரே**ப் பண்ண ஃபீல் கொடுக்கிற. வீ ஆர் எங்கேஜ்டு. டூ யூ ரியலி லவ் மீ ஆர் நாட்?" என்று அவன் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் நெருப்பு கங்குகளாக வெளி வந்தது.
"நான்... அம்மா..." என்று பதிலளிக்க முடியாமல் மான்சி திணறினாள்.
"ஷட் அப் ஏந்திழையாள். அம்மா உனக்கு முக்கியமா இருக்கலாம். பட் நான் இருக்கிற வரை நான் மட்டும் தான் உன் ப்ரையாரிட்டியா இருக்கணும் காட் இட்." என்று அவன் மனதை முதல் முறை மறைக்காமல் வெளிப்படுத்தினான்.
விஜித் ஏகலைவன் வார்த்தை அதன் உண்மை வடிவத்தில் வெளி வந்தாலும், அது தன் மீது கொண்ட காதலால் ஏற்பட்ட உரிமை உணர்வு என்று மான்சி நினைத்துக் கொண்டாள்.
"சாரி..." என்று கீழே குனிந்த படி கூற,
"இட்ஸ் ஓகே. பட் இதுவே கடைசியா இருக்கட்டும்." என்று கட்டளையாகவே கூறினான்.
"ம்ம்ம்..." என்று கூறி தலையசைத்தவள்
"நான் உங்கள உண்மையா காதலிக்கிறேன். ப்ளீஸ் திரும்பவும் காதலிக்கிறியான்னு கேட்காதீங்க." என்று கூற அவள் கண்ணிலிருந்து விழி நீர் கீழே விழ தயாராக இருந்தது.
தன் இரு கரங்களினால் அவள் முகத்தை தாங்கி பிடித்தவன் கட்டை விரல் கொண்டு கண்ணீரை துடைத்தான். அவள் விழிகளுடன் தன் விழியை கலக்க விட்டவன்
"இனி உன் ஞாபகத்தில நான் மட்டும் தான் இருக்கணும்." என்று கூறிக் கொண்டே அவள் இதழ்களை கவ்விக் கொண்டான். இம்முறை சற்று வன்மையாகவே மான்சியின் இதழை சுவைத்தவன் விரைவாக விடுதலையும் அளித்தான்.
"பாய் ஏந்திழையாள்... ஸீ யூ சூன்..." என்று கூறி விடை பெற, கையை அசைத்து விடை கொடுத்தவளுக்கு மனதில் பல கேள்விகள்.
"மான்சி உள்ள வா." என்று வெண்பா அழைத்த பின்னே உள்ளே வந்தாள்.
வழக்கம் போல தாயின் கேள்விகளுக்கு பதிலளித்தாலும், அவள் கவனம் முழுவதும் கள்வனிடம் அல்லவா இருந்தது. தனது அறைக்குச் செல்ல திரும்பிய மகளின் கழுத்தை ஒரு நிமிடம் பார்த்த வெண்பா தனது கேள்வியை நிறுத்திக் கொண்டார்.
தான் அணிவித்த செயின் பல வருடங்களாக மகளின் கழுத்தில் இருந்தது. தற்போது இல்லாமல் வேறொன்று இருப்பதன் காரணம் விஜித் என்று தெரிந்தாலும், மகள் தன்னிடம் கூறாததில் கவலை கொண்டார்.
தாய் தனது கேள்விகளை நிறுத்தியதை கூட உணராமல் தனதறைக்கு வந்தவளுக்கு மூளையே மரத்து போனது போல இருந்தது.
விஜித் முத்தமிட்டது பிடித்திருக்கின்றது ஆனாலும் தாயின் வளர்ப்பு அதை ஏற்க மறுக்கின்றது. காதலிக்கின்றாள் தான் அதற்காக தாயின் கட்டுப்பாடுகளை மீற முடியவில்லை.
இன்று முழுவதும் நடந்த அனைத்தையும் ஒரு முறை மனதிற்குள் நினைத்து பார்த்தவளுக்கு விஜித் தன்னை வெறித்தனமாக காதலிப்பதாக நினைக்க தோன்றியது. துளியும் விஜித் தன்னை காதலிக்கவில்லையோ என்ற சந்தேகம் அவளுக்கு வரவில்லை.
அதிலும் அவன் வீட்டில் பார்த்த தன் சிறு வயது புகைப்படமும் ஏந்திழையாள் என்ற அழைப்பும் அவளின் அனைத்து குழப்பங்களையும் மூடி மறைத்தது. மான்சி மனதின் கேள்விகளுக்கு அவளே ஒரு பதிலை கூறிக் கொண்டாள்.
"ஏந்திழையாள் நீ ரொம்ப பண்ற. கொஞ்சம் அவர் கூட இருக்கும் போது அவர பத்தி மட்டும் யோசி." என்று கண்ணாடியில் அவன் அணிந்த செயின் டாலரை பார்த்து கூறிக் கொண்டாள்.
"இனி உன் லைப்ல இந்த ஏகலைவன் மட்டும் தான் ஏந்திழையாள்..." என்று பற்களை கடித்தபடி கூறியவன் தன் கையில் இருந்த செயினை குப்பை தொட்டியில் தூக்கி எறிந்தான்.
ஹாய் டியர்
சிலருக்கு இது ஆண்டி ஹீரோ கதையான்னு சந்தேகம் வரலாம் நிஜமா இது ஆண்டி ஹீரோ கதை தான் நம்புங்கப்பு....
ஏகலைவனின் ஏந்திழையாள்-கருத்து திரி
கதை தலைப்பு அருமை 👌👌👌, கதையின் தொடக்கம் விருவிருப்பு அருமை 👌👌👌🌺வாழ்த்துக்கள் 👏👏👏🌺🌺🌺 Thank you
aadvikapommunovels.com
Last edited: