அத்தியாயம் 21
"என் மேல காதல் இல்லன்னாலும் உங்க பிள்ளைக்காக என்ன பொறுத்து போவீங்கன்னு தப்பா நினைச்சுட்டேன். அம்மா சொன்ன மாதிரி இன்னொரு வாய்ப்பு கொடுத்தா மனசு மாறுவீங்கன்னு நினைச்சு சும்மா உங்கள சீண்டி விளையாடுனது கூட உங்களால தாங்கிக்க முடியல. ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோங்க நீங்க மிரட்டினா பயப்படுற பழைய மான்சி நான் இல்ல." என்று கூறியவள், ஒரு கையால் வயிற்றை பிடித்துக் கொண்டு வேகமாக தொலைப்பேசி நோக்கி நடந்தாள்.
"ரிப்போர்ட்டர்ஸ் அண்ட் மீடியா எல்லாரையும் வீட்டுக்கு முன்னாடி வர சொல்லுங்க." என்று செக்யூரிட்டியிடம் கூறி விட்டு வைத்தாள்.
அவர்களை வர கூறிய இடத்திற்கு மான்சி சென்று நிற்க அவளுடன் அவளுக்கு துணையாக பெற்றவர்களும் வந்து நின்றுக் கொண்டனர்.
பின்னே திரும்பி விஜித்தை பார்த்து நக்கலாக சிரித்தவள் ஊடகத்தின் கேள்விக்கு பதில் சொல்ல தயாராகவே இருந்தாள்.
அவள் பார்வையே எனக்கு துணை என் பெற்றவர்கள் மட்டுமே என்று விஜித்திற்கு சொல்லியது. அதை புரிந்துக் கொண்டவன் நிலமையின் தீவிரத்தை எப்படி தடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
வந்தவர்கள் இடைவிடாது தங்கள் கேள்விகளை மான்சியிடம் கேட்க, ஆத்திரத்தில் விஜித் நரம்புகள் புடைத்துக் கொண்டு நின்றது.
நடந்தது இது தான்.
மான்சியின் மருத்துவ அறிக்கையின் நகல் அனைத்து ஊடகங்களுக்கும் இன்று காலை சென்றடைந்திருக்க, அவளின் பார்வை திறன் பற்றி கேள்வி கேட்டுக் கொண்டு நின்றனர்.
'மான்சி மேடம் உங்களுக்கு பகலிலும் வெளிச்சத்திலும் பார்வை தெரியாதுன்னு வந்த தகவல் உண்மையா..?'
'அதனால தான் நீங்க கண்ணாடி இல்லாம வெளிய வரதில்லையா..?'
'இந்த உண்மை விஜித் சாருக்கு தெரியாம மறைச்சு தான் கல்யாணம் செய்தீங்களா..?'
'உண்மை தெரிஞ்சு வந்த சண்டையால தான் நீங்க இரண்டு மாதம் அம்மா வீட்டுல இருந்தீங்களா..?' என்று கேள்வி கணை பறக்க அமைதியாக அனைத்தையும் எதிர் கொண்டாள்.
"எனக்கு டே ப்ளைன்ட்னஸ் இருந்தது உண்மை தான். பட் இப்போ எனக்கு கண் நல்லா தெரியும். இரண்டு சர்ஜெரி கண்ணுக்கு செய்திருகேன். நான் இத சொல்லாம விட்டது ஒன்னும் பெரிய கொலை குற்றம் இல்ல.
என் குறை எந்த விதத்திலையும் என் பாட்டை ரசிக்கிற ரசிகர்களை பாதிக்காது. அண்ட் என்ன பற்றி எல்லாம் தெரிஞ்சு தான் விஜித் என்ன கல்யாணம் செய்தார்." என்று மான்சி துணிவுடன் பத்திரிக்கையளர்களை எதிர் கொண்டாள்.
துணிவு கொண்டவர்களை உடைப்பது தானே கேள்வி கேட்பவர்களின் வேலை. அடுத்த சில கேள்விகள் மான்சி கண்களோடு சேர்த்து காதையும் மூடிக் கொள்ள செய்தது.
மான்சிக்கு பாடங்களில் பாட முதல் வாய்ப்பு கொடுத்த நேத்ரன் தொடங்கி அனைவரும் குறுகிய கால கட்டத்தில் எதற்காக குறையுள்ள பெண்ணான தங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று சில தகாத வார்த்தைகளையும் சேர்த்து கூற விஜித் பத்திரிக்கையாளர்கள் முன் வந்தான்.
"இனஃப் இதுக்கு மேல ஒரு கேள்வி வந்தாலும் என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியிருக்கும். உங்க எல்லாருக்கும் என்ன பிரச்சனை?
மான்சி ஏந்திழையாள் மாதிரி தன் குறையோட சொந்த வாழ்க்கையிலும் வெளி உலகத்திலும் போராடி சாதித்த சாதனையாளர்கள் இந்த உலகத்தில நிறைய பேர் இருக்காங்க. அப்படிபட்ட பெண்கள் சாதிக்க தடையா இருக்கிறதே இதோ இப்போ நீங்க கேட்டீங்களே இந்த மாதிரி கேள்வி தான். பெண்களும் சாதிக்க திறமையும் கடின உழைப்பும் மட்டும் போதும்ன்னு எப்போ உங்கள மாதிரியான ஆட்கள் உணருவீங்களோ அப்போ தான் பெண்கள் நிம்மதியா வேலை செய்ய முடியும்.
ஒரு பெண்ணு சாதிச்சா அவளோட திறமையால் அடைந்த அந்த வெற்றிய விட, அவ ஒரு பொண்ணு அது மட்டும் தான் உங்களுக்கு தெரியுது ரைட்.
என் மனைவிக்கு கிடைச்ச மாதிரி ஒரு அப்பா அம்மா எல்லா பொண்ணுங்களுக்கும் கிடைக்கணும். அப்போ யாருக்கும் நீங்க கேட்ட மாதிரி கேள்வி கேட்க தோணாது." என்று பேசிய விஜித் ரவியை பார்த்து கண் ஜாடை காட்டி விட்டு மான்சியை கையணைவில் வைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தான்.
வரும் போது ரவி கையில் திணித்த காகிதத்தை பிரித்து படித்தவன் சட்டை பையில் பத்திரப்படுத்தினான்.
வீட்டிற்குள் வந்ததும் விஜித் மூவரின் முகத்தையும் பார்க்க யாரிடமும் உயிர்ப்பில்லை.
"என்ன மன்னிச்சிடுங்க மாமா, அத்தை." என்று வெண்பா, திலகன் இருவரின் காலிலும் விஜித் விழ, இதை எதிர்பாராத மூவரும் பதறினர்.
"ப்ளீஸ் எழுந்திரிங்க..." என்று திலகன் கூறிய பிறகே எழுந்தவன் அனைவரின் முகத்தையும் ஆழ்ந்து பார்த்தான்.
"நான் மட்டும் தான் சரின்னு ஒரு ஆணவம் எனக்குள்ள எப்பவும் இருக்கும். அது இன்னைக்கு மொத்தமா இல்லாம போயிட்டு. என்னோட தவறான புரிதல், அதனால நான் உங்க கிட்ட நடந்துக்கிட்டது எல்லாம தப்பு தான். அதுக்கு மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இல்ல.
ஏந்திழையாள் அப்பா அம்மா விட அதிகம் பாசம் கொட்டுற அப்பாவா இருக்கிறது கஷ்டம் தான். ஆனா நான் அவங்க மாதிரி இருக்க முயற்சி செய்றேன். இந்த முறை நான் தப்பு பண்ணல. இதுக்கு காரணம் உங்க அக்கா பையனும், டாக்டர் வருணோட பையன் தருணும் தான்." என்று கூற, நிலையை முழுதாக புரிந்துக் கொள்ளவே மூவருக்கும் நேரம் தேவைப்பட்டது.
பெண் தராத கோபத்தில் தருண் மற்றும் அவனது பள்ளி நண்பனான திலகனின் அக்காள் மகனும் சேர்ந்தே இதை செய்திருந்தனர்.
அலுவலகத்தில் இருந்த மான்சியின் மருத்துவ அறிக்கையை அழித்து விடும் படி விஜித் கூறியிருக்க, ரவி தவறுதலாக அதை மேசையில் வைத்து விட்டு உணவருந்தச் சென்று விட்டான்.
திலகனின் மூத்த சகோதரியின் மகன் தனது கல்லூரி தோழனான ரவியை பார்க்க வந்தவன் கண்ணில் அந்த மருத்துவ அறிக்கை விழுந்தது.
அதில் தருண் மருத்துவமனை விபரத்தை பார்த்தவன் அவனிடம் தேவையான தகவலை திரட்டி அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி விட்டான்.
நடந்ததை கேள்விப்பட்டதும் திலகன் தனது சகோதரி வீட்டிற்குச் சென்று சண்டையிட்டு, சில வருடங்களுக்கு முன் கொடுத்த தனது பணம் நாளை வர வேண்டும் என்று மிரட்டி விட்டே வந்தார்.
திலகன் வீடு வரும் வரை விஜித் அங்கே தான் இருந்தான். இரவு உணவு நேரம் யாரும் அழைக்காமல் சென்று அமர வெண்பாவும் மகளை பார்த்து விட்டு பரிமாறினார். அனைத்தையும் கேட்டு வாங்கி உண்டு பாராட்டவும் செய்ய மான்சி தான் குழம்பி போனாள்.
இன்று நடந்ததற்கு கணவன் காரணம் இல்லை என்று தெரிந்தது, தாய் தந்தையிடம் அவன் மன்னிப்பு கேட்டது என இரண்டில் கணவன் மீது இருந்த கோபம் குறைந்து விட்டது. ஆனாலும் அவளுக்கு முன்பு அவன் செய்த எல்லாவற்றையும் மறக்க சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது.
இதுவரை பெற்றவர்களிடம் சாதாரணமாக பேசியிராதவனின் உரிமையான நடவடிக்கை தான் அவளை யோசிக்க வைத்தது.
"சாப்பாடு சூப்பர். மார்னிங் எனக்கு சாப்பாடு லைட்டா இருந்தா போதும். அத ஈக்குவல் பண்ண மதியம் நான்வெஜ்ல கொஞ்சம் ஹெவியா சமைச்சிடுங்க. ஃப்ரூட் சேலட் மஸ்ட். நைட் டின்னர் யோசிச்சு சொல்றேன்." என்று வெண்பாவிடம் கூறி விட்டு மான்சியை பார்க்க, அவளும் விஜித் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன?" என்று விஜித் கேட்க,
"அத நான் கேட்கணும். உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்க,
"இப்போதைக்கு மாமியார் வீட்டு விருந்து வேணும்." என்று கூறியவன் அவளை கடந்து வாசல் நோக்கிச் சென்றவனிடம் விஜித் கார் ட்ரைவர் சில பெட்டிகளை கொடுத்து விட்டுச் செல்ல, அவற்றுடன் மான்சி அறைக்குச் சென்றான்.
பெட்டியுடன் விஜித் செல்வதை பார்த்த மூவரும் அவன் இங்கு தான் இருக்க போகின்றான் என்பதில் ஒருவர் மற்றவரை பார்த்துக் கொண்டனர்.
ஹாய் டியர்ஸ்
கொஞ்சம் சொந்த வேலையில் மட்டிக்கிட்டேன். இன்னும் இரண்டு அத்தியாயம் தான் இருக்க. கருத்து சொல்லுங்க பிகிலு...
"என் மேல காதல் இல்லன்னாலும் உங்க பிள்ளைக்காக என்ன பொறுத்து போவீங்கன்னு தப்பா நினைச்சுட்டேன். அம்மா சொன்ன மாதிரி இன்னொரு வாய்ப்பு கொடுத்தா மனசு மாறுவீங்கன்னு நினைச்சு சும்மா உங்கள சீண்டி விளையாடுனது கூட உங்களால தாங்கிக்க முடியல. ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோங்க நீங்க மிரட்டினா பயப்படுற பழைய மான்சி நான் இல்ல." என்று கூறியவள், ஒரு கையால் வயிற்றை பிடித்துக் கொண்டு வேகமாக தொலைப்பேசி நோக்கி நடந்தாள்.
"ரிப்போர்ட்டர்ஸ் அண்ட் மீடியா எல்லாரையும் வீட்டுக்கு முன்னாடி வர சொல்லுங்க." என்று செக்யூரிட்டியிடம் கூறி விட்டு வைத்தாள்.
அவர்களை வர கூறிய இடத்திற்கு மான்சி சென்று நிற்க அவளுடன் அவளுக்கு துணையாக பெற்றவர்களும் வந்து நின்றுக் கொண்டனர்.
பின்னே திரும்பி விஜித்தை பார்த்து நக்கலாக சிரித்தவள் ஊடகத்தின் கேள்விக்கு பதில் சொல்ல தயாராகவே இருந்தாள்.
அவள் பார்வையே எனக்கு துணை என் பெற்றவர்கள் மட்டுமே என்று விஜித்திற்கு சொல்லியது. அதை புரிந்துக் கொண்டவன் நிலமையின் தீவிரத்தை எப்படி தடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
வந்தவர்கள் இடைவிடாது தங்கள் கேள்விகளை மான்சியிடம் கேட்க, ஆத்திரத்தில் விஜித் நரம்புகள் புடைத்துக் கொண்டு நின்றது.
நடந்தது இது தான்.
மான்சியின் மருத்துவ அறிக்கையின் நகல் அனைத்து ஊடகங்களுக்கும் இன்று காலை சென்றடைந்திருக்க, அவளின் பார்வை திறன் பற்றி கேள்வி கேட்டுக் கொண்டு நின்றனர்.
'மான்சி மேடம் உங்களுக்கு பகலிலும் வெளிச்சத்திலும் பார்வை தெரியாதுன்னு வந்த தகவல் உண்மையா..?'
'அதனால தான் நீங்க கண்ணாடி இல்லாம வெளிய வரதில்லையா..?'
'இந்த உண்மை விஜித் சாருக்கு தெரியாம மறைச்சு தான் கல்யாணம் செய்தீங்களா..?'
'உண்மை தெரிஞ்சு வந்த சண்டையால தான் நீங்க இரண்டு மாதம் அம்மா வீட்டுல இருந்தீங்களா..?' என்று கேள்வி கணை பறக்க அமைதியாக அனைத்தையும் எதிர் கொண்டாள்.
"எனக்கு டே ப்ளைன்ட்னஸ் இருந்தது உண்மை தான். பட் இப்போ எனக்கு கண் நல்லா தெரியும். இரண்டு சர்ஜெரி கண்ணுக்கு செய்திருகேன். நான் இத சொல்லாம விட்டது ஒன்னும் பெரிய கொலை குற்றம் இல்ல.
என் குறை எந்த விதத்திலையும் என் பாட்டை ரசிக்கிற ரசிகர்களை பாதிக்காது. அண்ட் என்ன பற்றி எல்லாம் தெரிஞ்சு தான் விஜித் என்ன கல்யாணம் செய்தார்." என்று மான்சி துணிவுடன் பத்திரிக்கையளர்களை எதிர் கொண்டாள்.
துணிவு கொண்டவர்களை உடைப்பது தானே கேள்வி கேட்பவர்களின் வேலை. அடுத்த சில கேள்விகள் மான்சி கண்களோடு சேர்த்து காதையும் மூடிக் கொள்ள செய்தது.
மான்சிக்கு பாடங்களில் பாட முதல் வாய்ப்பு கொடுத்த நேத்ரன் தொடங்கி அனைவரும் குறுகிய கால கட்டத்தில் எதற்காக குறையுள்ள பெண்ணான தங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று சில தகாத வார்த்தைகளையும் சேர்த்து கூற விஜித் பத்திரிக்கையாளர்கள் முன் வந்தான்.
"இனஃப் இதுக்கு மேல ஒரு கேள்வி வந்தாலும் என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியிருக்கும். உங்க எல்லாருக்கும் என்ன பிரச்சனை?
மான்சி ஏந்திழையாள் மாதிரி தன் குறையோட சொந்த வாழ்க்கையிலும் வெளி உலகத்திலும் போராடி சாதித்த சாதனையாளர்கள் இந்த உலகத்தில நிறைய பேர் இருக்காங்க. அப்படிபட்ட பெண்கள் சாதிக்க தடையா இருக்கிறதே இதோ இப்போ நீங்க கேட்டீங்களே இந்த மாதிரி கேள்வி தான். பெண்களும் சாதிக்க திறமையும் கடின உழைப்பும் மட்டும் போதும்ன்னு எப்போ உங்கள மாதிரியான ஆட்கள் உணருவீங்களோ அப்போ தான் பெண்கள் நிம்மதியா வேலை செய்ய முடியும்.
ஒரு பெண்ணு சாதிச்சா அவளோட திறமையால் அடைந்த அந்த வெற்றிய விட, அவ ஒரு பொண்ணு அது மட்டும் தான் உங்களுக்கு தெரியுது ரைட்.
என் மனைவிக்கு கிடைச்ச மாதிரி ஒரு அப்பா அம்மா எல்லா பொண்ணுங்களுக்கும் கிடைக்கணும். அப்போ யாருக்கும் நீங்க கேட்ட மாதிரி கேள்வி கேட்க தோணாது." என்று பேசிய விஜித் ரவியை பார்த்து கண் ஜாடை காட்டி விட்டு மான்சியை கையணைவில் வைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தான்.
வரும் போது ரவி கையில் திணித்த காகிதத்தை பிரித்து படித்தவன் சட்டை பையில் பத்திரப்படுத்தினான்.
வீட்டிற்குள் வந்ததும் விஜித் மூவரின் முகத்தையும் பார்க்க யாரிடமும் உயிர்ப்பில்லை.
"என்ன மன்னிச்சிடுங்க மாமா, அத்தை." என்று வெண்பா, திலகன் இருவரின் காலிலும் விஜித் விழ, இதை எதிர்பாராத மூவரும் பதறினர்.
"ப்ளீஸ் எழுந்திரிங்க..." என்று திலகன் கூறிய பிறகே எழுந்தவன் அனைவரின் முகத்தையும் ஆழ்ந்து பார்த்தான்.
"நான் மட்டும் தான் சரின்னு ஒரு ஆணவம் எனக்குள்ள எப்பவும் இருக்கும். அது இன்னைக்கு மொத்தமா இல்லாம போயிட்டு. என்னோட தவறான புரிதல், அதனால நான் உங்க கிட்ட நடந்துக்கிட்டது எல்லாம தப்பு தான். அதுக்கு மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இல்ல.
ஏந்திழையாள் அப்பா அம்மா விட அதிகம் பாசம் கொட்டுற அப்பாவா இருக்கிறது கஷ்டம் தான். ஆனா நான் அவங்க மாதிரி இருக்க முயற்சி செய்றேன். இந்த முறை நான் தப்பு பண்ணல. இதுக்கு காரணம் உங்க அக்கா பையனும், டாக்டர் வருணோட பையன் தருணும் தான்." என்று கூற, நிலையை முழுதாக புரிந்துக் கொள்ளவே மூவருக்கும் நேரம் தேவைப்பட்டது.
பெண் தராத கோபத்தில் தருண் மற்றும் அவனது பள்ளி நண்பனான திலகனின் அக்காள் மகனும் சேர்ந்தே இதை செய்திருந்தனர்.
அலுவலகத்தில் இருந்த மான்சியின் மருத்துவ அறிக்கையை அழித்து விடும் படி விஜித் கூறியிருக்க, ரவி தவறுதலாக அதை மேசையில் வைத்து விட்டு உணவருந்தச் சென்று விட்டான்.
திலகனின் மூத்த சகோதரியின் மகன் தனது கல்லூரி தோழனான ரவியை பார்க்க வந்தவன் கண்ணில் அந்த மருத்துவ அறிக்கை விழுந்தது.
அதில் தருண் மருத்துவமனை விபரத்தை பார்த்தவன் அவனிடம் தேவையான தகவலை திரட்டி அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி விட்டான்.
நடந்ததை கேள்விப்பட்டதும் திலகன் தனது சகோதரி வீட்டிற்குச் சென்று சண்டையிட்டு, சில வருடங்களுக்கு முன் கொடுத்த தனது பணம் நாளை வர வேண்டும் என்று மிரட்டி விட்டே வந்தார்.
திலகன் வீடு வரும் வரை விஜித் அங்கே தான் இருந்தான். இரவு உணவு நேரம் யாரும் அழைக்காமல் சென்று அமர வெண்பாவும் மகளை பார்த்து விட்டு பரிமாறினார். அனைத்தையும் கேட்டு வாங்கி உண்டு பாராட்டவும் செய்ய மான்சி தான் குழம்பி போனாள்.
இன்று நடந்ததற்கு கணவன் காரணம் இல்லை என்று தெரிந்தது, தாய் தந்தையிடம் அவன் மன்னிப்பு கேட்டது என இரண்டில் கணவன் மீது இருந்த கோபம் குறைந்து விட்டது. ஆனாலும் அவளுக்கு முன்பு அவன் செய்த எல்லாவற்றையும் மறக்க சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது.
இதுவரை பெற்றவர்களிடம் சாதாரணமாக பேசியிராதவனின் உரிமையான நடவடிக்கை தான் அவளை யோசிக்க வைத்தது.
"சாப்பாடு சூப்பர். மார்னிங் எனக்கு சாப்பாடு லைட்டா இருந்தா போதும். அத ஈக்குவல் பண்ண மதியம் நான்வெஜ்ல கொஞ்சம் ஹெவியா சமைச்சிடுங்க. ஃப்ரூட் சேலட் மஸ்ட். நைட் டின்னர் யோசிச்சு சொல்றேன்." என்று வெண்பாவிடம் கூறி விட்டு மான்சியை பார்க்க, அவளும் விஜித் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன?" என்று விஜித் கேட்க,
"அத நான் கேட்கணும். உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்க,
"இப்போதைக்கு மாமியார் வீட்டு விருந்து வேணும்." என்று கூறியவன் அவளை கடந்து வாசல் நோக்கிச் சென்றவனிடம் விஜித் கார் ட்ரைவர் சில பெட்டிகளை கொடுத்து விட்டுச் செல்ல, அவற்றுடன் மான்சி அறைக்குச் சென்றான்.
பெட்டியுடன் விஜித் செல்வதை பார்த்த மூவரும் அவன் இங்கு தான் இருக்க போகின்றான் என்பதில் ஒருவர் மற்றவரை பார்த்துக் கொண்டனர்.
ஹாய் டியர்ஸ்
கொஞ்சம் சொந்த வேலையில் மட்டிக்கிட்டேன். இன்னும் இரண்டு அத்தியாயம் தான் இருக்க. கருத்து சொல்லுங்க பிகிலு...