19 சிவப்பழகியே...
"நீ செஞ்சதுக்கு தூக்கி வச்சி கொஞ்சுவாங்களா? என் அனுமதி இல்லாம எனக்கு எதுக்கு முத்தம் கொடுத்த" அவனுக்கு இணையான கோபத்தை காட்ட துவங்கி இருந்தாள்.
"உரிமை இருக்கு... யாரை கேட்கனும்?" திமிராக அவனும் செல்ல,
"என்னை கேட்கனும்"
"ஓ... தினமும் என்கிட்ட கேட்டுதான் கட்டிப்பிடிச்சி தூங்குனியா?" வார்த்தையால் சங்கவிக்கு லாக் போட.
"பிரண்டா நினைச்சிதான்..." சங்கவி தயங்கிக்கொண்டே சொல்ல.
"சட் அப் சங்கவி... நீ என்ன இவ்வளவு பார்வேட் ஆகிட்டியா? பையன் பிரண்டை கட்டி பிடிச்சி தூங்குற அளவுக்கு"
'ஐயோ வேந்தன் கண்டு பிடிச்சிட்டாறே... சரி சமாளிப்போம். எக்சாம் முடியும் வரை சொல்ல கூடாது'
அவளது அமைதியை கண்டு, "இன்னும் எதுக்கு நடிச்சிட்டு இருக்க, பிடிச்சிருக்குன்னு நேரா சொல்லு" வேந்தன் நேராக கேட்க.
"இல்ல எனக்கு உன்னை பிடிக்கலை" சங்கவி காலேஜ் முடிச்சி செல்லும் யோசனையில் இருக்க.
"ஓ..." வேந்தனுக்கு சங்கவி எண்ணம் புரிந்தது, இருந்தும் கோபம் பீரிட்டது, 'என்ட சொன்னா நான் என்ன தப்பாவா நினைக்க போறேன்'
"ஆமா அதுக்கு என்ன?" சங்கவி பதற்றத்தை மறைத்துக்கொண்டு தைரியமாக நிற்க.
"ரூம்விட்டு வெளியே போடி" வேந்தன் கர்ஜித்தான். 'காதலை சொல்ல எதுக்கு இவ்வளவு தயக்கம்? என்மேல இவளுக்கு நம்பிக்கை வரலை அதானே' கோபம் தலைக்கு ஏறியது அவனுக்கு.
"சரிதான் போடா... "அவளது அலட்சியம் வேந்தனுக்கு வெறுப்பாக இருந்தது. அவள் செய்த அலட்சியத்தை அவன் திரும்ப காட்டினாள் சங்கவி தாங்குவாளா?
அடுத்த நாள் கடைசி தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருக்க, வேந்தன் சாப்பிட்டு முடித்து அலுவலகம் கிளம்ப இருந்தான், சங்கவியும் தயாராகி வந்து வண்டியில் ஏறி அமர.
"சங்கவி இறங்கு"
"நம்ம பிரச்சனை அப்புறம் வச்சிக்கலாம், என்னை காலேஜில் விடு"
"முடியாது... ஆட்டோ பிடிச்சி போ" விடாபிடியாக சங்கவியை இறக்கிவிட்டுவிட்டு வேந்தன் கிளம்பி செல்ல.
அவனது இந்த கோபத்தை பெண்ணவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
"போடா போ... இனி செத்தாலும் உன்கிட்ட பேசமாட்டேன்"
"சந்தோஷம்.... நிம்மதி" வேந்தன் வண்டியை நிறுத்தி கத்தி சொல்லிவிட்டு சென்றான்.
சங்கவிக்கு வேந்தன் இப்படி நடந்துகொள்வது ஏதோ போல இருந்தது.
'கேட்காம முத்தம் கொடுத்தது அவன், தவறு நான் என்ன செஞ்சேன், அதுக்கு ரியாக்ட் செஞ்சது என் தப்பா?' தேர்வை முடித்துவிட்டு நேராக ராகவியை பார்க்க போயாச்சி, தாயும் மகளும் பல கதை பேசி சிரிக்க.
கடைசியாக சங்கவி பயந்துகொண்டே குழலி பற்றி கேட்க.
"எதுக்கு இவ்வளவு பயம்... அவ லைப் அவ பாத்துப்பா அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு" கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்தியை ராகவி சங்கவிறிடம் காட்ட, படித்து பார்த்துவிட்டு.
"நீ ரொம்ப மோசம் அக்கா பாரு கோபமா கடைசியா பேசி இருக்கா கொஞ்சமா நல்லா பேசி இருந்தா தான் என்ன உங்களுக்கு"
"அவ எல்லாம் சரி செஞ்சிட்டு வரட்டும் மொத்தமா பேசிக்கலாம்" ராகவி சங்கவியை சமாதானப் படுத்திவிட்டு, சங்கவிக்கு பிடித்த உணவு சமைத்துக்கொண்டிருக்க,
நாள் முழுவதும் வேந்தனுக்கு மனசே கேட்கலை, எப்போடா ஐந்துமணி ஆகும் என காத்திருந்தவன், முதல் ஆளாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்த வேந்தன், சங்கவியை பார்வையால் தேட, அவள் இருந்தால் தானே கண்ணுக்கு கிடைக்க, "மா சங்கவி எங்க"
"அவ அம்மா வீட்டுக்கு போறேன்னு காலையிலையே சொல்லிட்டு தான்பா போனா"
"சரி மா" கமலா மகனின் குரலில் இருந்த தவிப்பை கண்டுகொண்டவர், மகனை குளிர்விக்க...
"சரி இன்னைக்கு நீ அங்கே தங்கிக்கோ, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு"
"சரி மா" என்றவன் உற்ச்சாகமாக... சங்கவியை பார்க்க நாலு சட்டை மாற்றி எது நல்லா இருக்குன்னு கமலாவை ஒரு வழி செய்துவிட்டு கிளம்பினான்.
'வேந்தா ரொம்ப அவசர பட்டுட்டே... பாவம் ஒரு போல ஆகி இருக்குமில்ல அவளுக்கு. அதான் கோபமா பேசிட்டா அதுக்கு நீ வண்டியில் இருந்து இறக்கி விட்டு இருக்க கூடாது. எப்படி அவளை சமாளிக்க போறேனோ ஒன்னும் புரியலை" வழி முழுவதும் புலம்பிக்கொண்டு மாமியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
மருமகன் மகள் பின் நூல் பிடித்தார் போல வருவதை பார்த்தும், ராகவி வேந்தனை ஓட்டி தள்ளிட்டார்..." என்ன வேந்தன் என் பொண்ணை பிரிஞ்சி இருக்க முடியலை போல"
"ஆமா அத்த மனசு கிடந்து தவிக்குது ஆனா உங்க பொண்ணு தான் கண்டுக்குறதே இல்ல"
"ம்க்கும்..." சங்கவி வேந்தனை முறைத்துவிட்டு இரவு உணவு எடுத்துவைக்க சென்றுவிட.
ராகவியும் வேந்தனும் பேசிக்கொண்டிருக்க, அடுப்புக்கு பதிலாக சங்கவி வயிறு தான் பத்திக்கொண்டிருந்தது, காலையில் அவன் செய்த காரியம் அப்படி,
இரவு உணவு முடிந்ததும் ராகவி அறைக்குள் புகுந்துகொள்ள, பார்வையாள் சங்கவியிடம் மன்னிப்பு கேட்க, அவனது பார்வையின் அர்த்தம் புரிந்தாலும், புரியாதது போல சங்கவி மெத்தையில் ஓய்யாரமாக படுத்துக்கொள்ள, பின் வந்த வேந்தன், அவளை உரசியபடி படுக்க.
"இப்ப எதுக்கு பக்கம் வரிங்க... தள்ளி படுங்க, பக்கம் படுத்ததுக்கு தான் ஓவரா பேசுனிங்கயில்ல" சங்கவி அவனை தள்ளிவிட.
"ஏன் வரக்கூடாதா? நீ மட்டும் நேத்துவர இப்படி தானே படுத்த" அவள் அவன் மேல் கைப்போட்டு எப்படி படுப்பாளே செய்து காட்டினான்.
"ஆமா படுக்ககூடாது... அது நேத்து இது இன்னைக்கு" அவனை விலக்கிவிட படாத பாடு பட்டுவிட்டு திரும்பி படுத்துவிட்டாள்.
"என் பொண்டாட்டி என் உரிமை" பின்னிருந்து அவளது வயிற்றை இறுக்கி பிடித்தே தூங்கத் துவங்க.
வேந்தன் கையை பிடித்து இழுத்து கடித்து வைத்துவிட்டாள், வலியில் தூக்கம் எங்கோ பறந்திருந்தது அவனுக்கு, "சங்கவி ஓவரா செஞ்சிட்டு இருக்க நீ"
"யாரு நானா ? நீங்களா?"
"புரியலை" கண்கள் இறுக்கி வேந்தன் உத்து பார்க்க.
"எனக்கு உங்களை பிடிக்கலை... விடுங்க"
"உன் வாய்மொழிக்கும் செயல் மொழிக்கும் சமபந்தம் இல்லையே நேற்று வரை நல்லா தானே இருந்த"
"பிரண்டா பிடிக்கும், அதுக்கு மேல எனக்கு... எனக்கு... உங்களை பிடிக்கும் ஆனா..."
"ஆனா என்ன இழுக்காம விஷயத்தை சொல்லு"
"ஆனா புருஷனா பார்க்க முடியலை"
"அதான் ஏன்? என்மேல நம்பிக்கை இல்லையா?"
"அப்படி எல்லாம் இல்ல அத்தான்" வேந்தன் சங்கவியை குழப்பமாக பார்க்க, அவளது முகபாவனையை வைத்து யூகித்தவன், 'ப்ளீஸ் சக்கவி அது மட்டும் சொல்லிடாத... மனதால் மன்றாடினான்' சங்கவி தயங்கி தயங்கி மனதில் உருத்தும் விஷயத்தை உடைக்க தயாராகினாள்,
"அக்கா கட்டிக்க இருந்தவர்ன்னு தான் நினைப்பு வருது" வேந்தன் உடல் இறுகியது.
"சரி கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுறதை கேளு" வேந்தன் தன்னிலை விளக்கம் தர ஆரம்பிக்கும் முன், "வேணா இப்ப எது சொன்னாலும் சமாதானப் படுத்த பொய் தான் சொல்லுவீங்க. அக்கா இல்லைன்னு, நான் தான் பார்த்தேனே அவளுக்கு தேடி தேடி டிரஸ் நகை எல்லாம் வாங்கி தந்தது"
ஆம் அவன் தேடி தேடி செலக்ட் செய்தது உண்மைதான், ஆனால் சங்கவிக்கு தான் அதை செய்திருந்தது அவளது கோபத்தால் அன்று நடந்ததை சங்கவி மனம் மறந்திருந்தது.
"நான் சொல்லுறது எல்லாம் பொய்ன்னு சொல்ல வரியா சங்கவி?"
"ஆமா" என்றாள் அதன் பிறகு வேந்தனின் உடல் தளர்ந்து அப்படியே விட்டத்தை பார்த்து படுத்துவிட்டான்.
சொல்ல வருவதை கேட்காமல் மொத்தமாக பொய் தான் சொல்லபோகிறான் என சொன்னவளிடம் விளக்கம் கொடுக்க முன் வரவில்லை, வேந்தன் இரண்டு தினம் அப்படியே பட்டும் படாமல் மாமியார் வீட்டில் தங்கிவிட்டு வீட்டுக்கு வரும்போது கமலா பெரிய குண்டாக சங்கவி தலையில போட காத்திருந்தார்.
******
கொடி கோபமாக சண்டை போட தான் காத்திருந்தாள், ராஜாவை பார்த்ததும் புது ஐடியா தோன்றியது.
"ராஜா நம்ம எல்லாம் படத்துக்கு போய் ரொம்ப நாளாச்சில்ல இன்னைக்கு போலாமா? டிக்கட் போடவா"
"சரிக்கா எல்லோருக்கும் போடுங்க" ராஜா மனதில் ஒரு ஆசை எழுந்தது.
'குட்டி... இன்னைக்கு சினிமாக்கு போலாம், முதல் சினிமா' மனதில் பட்டாம் பூச்சி பறந்தது, சிறிது நேரம் ஓய்வெடுக்க படுக்க.
குழலி சந்திராவை பார்க்க போக, "சொல்லுங்க அத்த அரசிக்கு என்ன?"
"அவளுக்கு உடம்புக்கு முடியலையாம், கிளம்பி வரட்டா கேட்டேன், அதுக்கு அண்ணா நினைப்பாவே இருக்காம்... பேச வைக்க சொல்லுறா, நான் என்ன செய்யுறது ஒன்னும் புரியலை"
"அவ்வளவு தானே, உங்க போன் கொடுங்க நான் பேச வைக்கிறேன்"
"உன் போன் என்னாச்சி"
"அது கீழே போட்டேன் பாதி டிஸ்ப்ளே போயிடுச்சி" போனை வாங்கிக்கொண்டு ராஜா அருகில் போய் உட்கார்ந்து அரசிக்கு வீடியோ கால் போட்டு பேசிக்கொண்டிருக்க.
"அண்ணி அண்ணா பேசுவாரா..." தூக்கத்தில் இருந்த ராஜா அரசியின் குரல் கேட்டு வேகமாக எழுந்தவனுக்கு நெஞ்சம் முள்ளாக குத்தியது.
"அரசி..." குழலி கையில் இருந்த திரையில் எட்டிபார்க்க, அண்ணன் முகம் பார்த்ததும், அந்த சோர்விலும்... "ஐ.... அண்ணா என்ட பேசிட்டான்" குதிக்காத குறையாக கூச்சலிட்டாள்.
"என்னாச்சிடாமா.... மூஞ்சே சரி இல்லையே"
"எக்சாம்க்கு ரொம்ப படிச்சி இப்படி ஆகிடுச்சி அண்ணா"
"சரி எப்ப ஊருக்கு வர?"
"ஒரு வாரம் கழிச்சி, பிரண்ட்ஸ் கூட இருந்துட்டு வரேன். அண்ணியை பத்திரமா பாத்துக்கோங்க, உங்கள போலவே செம ஸ்வீட்..." பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
"அண்ணா..."
"சொல்லு அரசி...."
"அம்மாக்கு சளி பிடிச்சிருக்கு... உடம்பு முடியலை ஹாஸ்பிட்டல் கூட்டி போறீங்களா"
"என்... என்னாச்சி? " தன்னையும் மீறி பதறினான் ராஜா.
"பெருசா இல்லை, அண்ணா பெருசா ஆகுரத்துக்கு முன்னாடி சரி ஆனா பரவாயில்லையில்ல அதான்"
"சரி நீ ரெஸ்ட் எடு நான் அம்... சித்திய பாத்துக்கிறேன"
"தேங்ஸ் அண்ணா லவ் யூ" போன் கட் ஆனதும் குழலி கையில் போனை கொடுக்க.
"இது என் போனில்லை, அத்தையை ஹாஸ்பிட்டல் கூட்டிபோக போறீங்களா அவங்ககிட்ட கொடுத்திடுங்க" குழலி மெத்தையில் இருந்து எந்திரிக்க, தாவணி விலகி தெரிந்த அவளது இடை கருத்து போயிருந்தது.
அடுத்து அவளது முகத்தை பார்க்க அதுவும் இயல்பாக இருக்கும் கலரை விட மங்கி போயிருந்தது. எல்லாம் என்னாலதானே, உடல் இழைத்து, கருத்து எதுக்கு இந்த தேவையில்லாத காதல் என்னால உனக்கு ஒரு சுகத்தையும் கொடுக்க முடியாது, கஷ்டம் மட்டும் தான் கொடுக்கபோறேன் நான் உனக்கு வேண்டாம்" ராஜாவாக யோசிக்க.
காதல் கொண்ட விக்கியோ... 'இல்லை இவ எனக்குமட்டும்... நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் உறுதியாக இருந்தது'
"சினிமா போலாம் ரெடியாகு"
"நிஜமாவா?"
"ம்ம்ம்"
"யார் யார் போறோம்?"
"வீட்டில் எல்லோரும்..."
"ஓ... அண்ணா வராங்களா?"
"ம்ம்ம்ம்" அவளது முகத்தில் பூத்த புன்னகை அவனுக்கு இனித்தது.
இருவரும் தயாராகி கீழே வர, மலர்கொடியின் குழந்தை மாமா என அவனின் கழுத்தை கட்டிக்கொண்டது.
குழலிக்கு ராஜாவின் சிரித்த முகத்தோடு குழந்தையை கொஞ்சுவதை பார்த்து.
அவர்களது குழந்தையை தன்னவன் கொஞ்சுவது போல பிம்பம் தோன்ற, பெண்ணவள் முகம் அந்திவானமாக சிவந்தது.
குழந்தையை கீழே விட்டுவிட்டு போன் பேச சென்றிருந்த நேரம், "அத்த" என அழைத்த குழந்தையை அள்ளி கொஞ்ச ஆசை வந்தது. ஆனால் கொடியின் புத்தி தெரிந்து தூக்க அவள் என்ன முட்டாளா, தூரம் இருந்தே கொஞ்சினாள்.
"கையில் வைத்திருந்த சாக்லேட்டை குழந்தை பாசமாக நீட்ட" குழலி தயங்கிக்கொண்டே வாயில் போட, இந்த காட்சி சரியாக கொடி கண்களில் பட.
"ஏய் எதுக்கு குழந்தைகிட்ட இருந்து திருடி சாப்பிடுற"
"அவ தான் கொடுத்தா, தேவையில்லாம பேசுறீங்க நீங்க"
"ஆமா... வந்துட்டா இவகிட்ட பேசுரது தான் எனக்கு வேலை பாரு" கொடி குழந்தை தலையில் நங்கென ஒரு கொட்டு வைத்துவிட்டு தூக்கி சென்றாள், குழந்தை அழுதுகொண்டே போனது.
என்ன தான் தைரியமாக கொடியிடம் எதிர்த்து பேசியிருந்தாலும் அவள் சொன்ன சொல்லை ஜீரனிக்கவே முடியவில்லை, 'என்னை பார்த்தா திருடி போலவா இருக்கு... அதும் குழந்தைக்கிட்ட இருந்து'
முதலில் ரங்கனும் பவளமும் ஒரு வண்டியில் கிளம்ப,
"அக்கா மாமா எங்க இன்னும் காணோம்"
"மாமா வா அவர் இரண்டு நாள் கழிச்சி தான் வருவார், சரி வா டா போலாம்" குழந்தையை முன் உட்கார வைத்துவிட்டு கொடி நக்கலாக குழலியை பார்த்துக்கொண்டே பின் ஏறி அமர்ந்துகொண்டாள். ராஜாக்கு புரியாமலில்லை அக்காவின் எண்ணம்.
'இது எல்லாம் எதிர்பார்த்தது தானே குழலி விடு' வாசர் கதவில் சாய்ந்துநின்ற ராஜாவை தான் சலனமற்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவனும் சைட் மிரர் வழியாக அவளது பிம்பம் மறையும் வரை பார்த்திருந்தான்.
ஒரு பெரு மூச்சோடு சந்திரா வீட்டுக்கு போக... அவருக்கு இருமல் அதிகமாகி இருந்தது.
சுக்கு காபி வைத்துகொடுத்து அவரை படுக்க வைத்தவள், தானும் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கே டிவியில் பழைய படம் ஓடிக்கொண்டிருந்ததை பார்த்துகொண்டிருக்க.
சந்திராவுக்கு இருமல் அதிகரித்துக்கொண்டே போனது.
"இனியும் டாக்டரிடம் காட்டலைன்னா சரிவராது, அத்த எழுங்க போலாம்" வற்புறுத்தி அழைத்துக்கொண்டு அந்த ஊரில் இருக்கும் ஒரு நர்சை பார்க்க சென்று மருந்து மாத்திரையோடு வீட்டுக்கு வரும்போது சினிமாவுக்கு சென்றிருந்தவர்களும் திரும்ப வரவும் சரியாக இருந்தது.
குழவி ராஜா இருக்கும் திசையை கூட திரும்பி பார்க்கவில்லை. சந்திராவை வீட்டிற்க்கு அழைத்து சென்று சாப்பிட வைத்து மருந்து கொடுத்து படுக்கவைத்து வீட்டிற்க்கு வர, அனைவரும் ஹாலில் கூடி இருந்தார்கள்.
ரங்கனின் முகத்தில் அப்படி ஒரு கோபம் அப்பி இருந்தது.
கருத்து
"நீ செஞ்சதுக்கு தூக்கி வச்சி கொஞ்சுவாங்களா? என் அனுமதி இல்லாம எனக்கு எதுக்கு முத்தம் கொடுத்த" அவனுக்கு இணையான கோபத்தை காட்ட துவங்கி இருந்தாள்.
"உரிமை இருக்கு... யாரை கேட்கனும்?" திமிராக அவனும் செல்ல,
"என்னை கேட்கனும்"
"ஓ... தினமும் என்கிட்ட கேட்டுதான் கட்டிப்பிடிச்சி தூங்குனியா?" வார்த்தையால் சங்கவிக்கு லாக் போட.
"பிரண்டா நினைச்சிதான்..." சங்கவி தயங்கிக்கொண்டே சொல்ல.
"சட் அப் சங்கவி... நீ என்ன இவ்வளவு பார்வேட் ஆகிட்டியா? பையன் பிரண்டை கட்டி பிடிச்சி தூங்குற அளவுக்கு"
'ஐயோ வேந்தன் கண்டு பிடிச்சிட்டாறே... சரி சமாளிப்போம். எக்சாம் முடியும் வரை சொல்ல கூடாது'
அவளது அமைதியை கண்டு, "இன்னும் எதுக்கு நடிச்சிட்டு இருக்க, பிடிச்சிருக்குன்னு நேரா சொல்லு" வேந்தன் நேராக கேட்க.
"இல்ல எனக்கு உன்னை பிடிக்கலை" சங்கவி காலேஜ் முடிச்சி செல்லும் யோசனையில் இருக்க.
"ஓ..." வேந்தனுக்கு சங்கவி எண்ணம் புரிந்தது, இருந்தும் கோபம் பீரிட்டது, 'என்ட சொன்னா நான் என்ன தப்பாவா நினைக்க போறேன்'
"ஆமா அதுக்கு என்ன?" சங்கவி பதற்றத்தை மறைத்துக்கொண்டு தைரியமாக நிற்க.
"ரூம்விட்டு வெளியே போடி" வேந்தன் கர்ஜித்தான். 'காதலை சொல்ல எதுக்கு இவ்வளவு தயக்கம்? என்மேல இவளுக்கு நம்பிக்கை வரலை அதானே' கோபம் தலைக்கு ஏறியது அவனுக்கு.
"சரிதான் போடா... "அவளது அலட்சியம் வேந்தனுக்கு வெறுப்பாக இருந்தது. அவள் செய்த அலட்சியத்தை அவன் திரும்ப காட்டினாள் சங்கவி தாங்குவாளா?
அடுத்த நாள் கடைசி தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருக்க, வேந்தன் சாப்பிட்டு முடித்து அலுவலகம் கிளம்ப இருந்தான், சங்கவியும் தயாராகி வந்து வண்டியில் ஏறி அமர.
"சங்கவி இறங்கு"
"நம்ம பிரச்சனை அப்புறம் வச்சிக்கலாம், என்னை காலேஜில் விடு"
"முடியாது... ஆட்டோ பிடிச்சி போ" விடாபிடியாக சங்கவியை இறக்கிவிட்டுவிட்டு வேந்தன் கிளம்பி செல்ல.
அவனது இந்த கோபத்தை பெண்ணவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
"போடா போ... இனி செத்தாலும் உன்கிட்ட பேசமாட்டேன்"
"சந்தோஷம்.... நிம்மதி" வேந்தன் வண்டியை நிறுத்தி கத்தி சொல்லிவிட்டு சென்றான்.
சங்கவிக்கு வேந்தன் இப்படி நடந்துகொள்வது ஏதோ போல இருந்தது.
'கேட்காம முத்தம் கொடுத்தது அவன், தவறு நான் என்ன செஞ்சேன், அதுக்கு ரியாக்ட் செஞ்சது என் தப்பா?' தேர்வை முடித்துவிட்டு நேராக ராகவியை பார்க்க போயாச்சி, தாயும் மகளும் பல கதை பேசி சிரிக்க.
கடைசியாக சங்கவி பயந்துகொண்டே குழலி பற்றி கேட்க.
"எதுக்கு இவ்வளவு பயம்... அவ லைப் அவ பாத்துப்பா அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு" கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்தியை ராகவி சங்கவிறிடம் காட்ட, படித்து பார்த்துவிட்டு.
"நீ ரொம்ப மோசம் அக்கா பாரு கோபமா கடைசியா பேசி இருக்கா கொஞ்சமா நல்லா பேசி இருந்தா தான் என்ன உங்களுக்கு"
"அவ எல்லாம் சரி செஞ்சிட்டு வரட்டும் மொத்தமா பேசிக்கலாம்" ராகவி சங்கவியை சமாதானப் படுத்திவிட்டு, சங்கவிக்கு பிடித்த உணவு சமைத்துக்கொண்டிருக்க,
நாள் முழுவதும் வேந்தனுக்கு மனசே கேட்கலை, எப்போடா ஐந்துமணி ஆகும் என காத்திருந்தவன், முதல் ஆளாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்த வேந்தன், சங்கவியை பார்வையால் தேட, அவள் இருந்தால் தானே கண்ணுக்கு கிடைக்க, "மா சங்கவி எங்க"
"அவ அம்மா வீட்டுக்கு போறேன்னு காலையிலையே சொல்லிட்டு தான்பா போனா"
"சரி மா" கமலா மகனின் குரலில் இருந்த தவிப்பை கண்டுகொண்டவர், மகனை குளிர்விக்க...
"சரி இன்னைக்கு நீ அங்கே தங்கிக்கோ, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு"
"சரி மா" என்றவன் உற்ச்சாகமாக... சங்கவியை பார்க்க நாலு சட்டை மாற்றி எது நல்லா இருக்குன்னு கமலாவை ஒரு வழி செய்துவிட்டு கிளம்பினான்.
'வேந்தா ரொம்ப அவசர பட்டுட்டே... பாவம் ஒரு போல ஆகி இருக்குமில்ல அவளுக்கு. அதான் கோபமா பேசிட்டா அதுக்கு நீ வண்டியில் இருந்து இறக்கி விட்டு இருக்க கூடாது. எப்படி அவளை சமாளிக்க போறேனோ ஒன்னும் புரியலை" வழி முழுவதும் புலம்பிக்கொண்டு மாமியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
மருமகன் மகள் பின் நூல் பிடித்தார் போல வருவதை பார்த்தும், ராகவி வேந்தனை ஓட்டி தள்ளிட்டார்..." என்ன வேந்தன் என் பொண்ணை பிரிஞ்சி இருக்க முடியலை போல"
"ஆமா அத்த மனசு கிடந்து தவிக்குது ஆனா உங்க பொண்ணு தான் கண்டுக்குறதே இல்ல"
"ம்க்கும்..." சங்கவி வேந்தனை முறைத்துவிட்டு இரவு உணவு எடுத்துவைக்க சென்றுவிட.
ராகவியும் வேந்தனும் பேசிக்கொண்டிருக்க, அடுப்புக்கு பதிலாக சங்கவி வயிறு தான் பத்திக்கொண்டிருந்தது, காலையில் அவன் செய்த காரியம் அப்படி,
இரவு உணவு முடிந்ததும் ராகவி அறைக்குள் புகுந்துகொள்ள, பார்வையாள் சங்கவியிடம் மன்னிப்பு கேட்க, அவனது பார்வையின் அர்த்தம் புரிந்தாலும், புரியாதது போல சங்கவி மெத்தையில் ஓய்யாரமாக படுத்துக்கொள்ள, பின் வந்த வேந்தன், அவளை உரசியபடி படுக்க.
"இப்ப எதுக்கு பக்கம் வரிங்க... தள்ளி படுங்க, பக்கம் படுத்ததுக்கு தான் ஓவரா பேசுனிங்கயில்ல" சங்கவி அவனை தள்ளிவிட.
"ஏன் வரக்கூடாதா? நீ மட்டும் நேத்துவர இப்படி தானே படுத்த" அவள் அவன் மேல் கைப்போட்டு எப்படி படுப்பாளே செய்து காட்டினான்.
"ஆமா படுக்ககூடாது... அது நேத்து இது இன்னைக்கு" அவனை விலக்கிவிட படாத பாடு பட்டுவிட்டு திரும்பி படுத்துவிட்டாள்.
"என் பொண்டாட்டி என் உரிமை" பின்னிருந்து அவளது வயிற்றை இறுக்கி பிடித்தே தூங்கத் துவங்க.
வேந்தன் கையை பிடித்து இழுத்து கடித்து வைத்துவிட்டாள், வலியில் தூக்கம் எங்கோ பறந்திருந்தது அவனுக்கு, "சங்கவி ஓவரா செஞ்சிட்டு இருக்க நீ"
"யாரு நானா ? நீங்களா?"
"புரியலை" கண்கள் இறுக்கி வேந்தன் உத்து பார்க்க.
"எனக்கு உங்களை பிடிக்கலை... விடுங்க"
"உன் வாய்மொழிக்கும் செயல் மொழிக்கும் சமபந்தம் இல்லையே நேற்று வரை நல்லா தானே இருந்த"
"பிரண்டா பிடிக்கும், அதுக்கு மேல எனக்கு... எனக்கு... உங்களை பிடிக்கும் ஆனா..."
"ஆனா என்ன இழுக்காம விஷயத்தை சொல்லு"
"ஆனா புருஷனா பார்க்க முடியலை"
"அதான் ஏன்? என்மேல நம்பிக்கை இல்லையா?"
"அப்படி எல்லாம் இல்ல அத்தான்" வேந்தன் சங்கவியை குழப்பமாக பார்க்க, அவளது முகபாவனையை வைத்து யூகித்தவன், 'ப்ளீஸ் சக்கவி அது மட்டும் சொல்லிடாத... மனதால் மன்றாடினான்' சங்கவி தயங்கி தயங்கி மனதில் உருத்தும் விஷயத்தை உடைக்க தயாராகினாள்,
"அக்கா கட்டிக்க இருந்தவர்ன்னு தான் நினைப்பு வருது" வேந்தன் உடல் இறுகியது.
"சரி கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுறதை கேளு" வேந்தன் தன்னிலை விளக்கம் தர ஆரம்பிக்கும் முன், "வேணா இப்ப எது சொன்னாலும் சமாதானப் படுத்த பொய் தான் சொல்லுவீங்க. அக்கா இல்லைன்னு, நான் தான் பார்த்தேனே அவளுக்கு தேடி தேடி டிரஸ் நகை எல்லாம் வாங்கி தந்தது"
ஆம் அவன் தேடி தேடி செலக்ட் செய்தது உண்மைதான், ஆனால் சங்கவிக்கு தான் அதை செய்திருந்தது அவளது கோபத்தால் அன்று நடந்ததை சங்கவி மனம் மறந்திருந்தது.
"நான் சொல்லுறது எல்லாம் பொய்ன்னு சொல்ல வரியா சங்கவி?"
"ஆமா" என்றாள் அதன் பிறகு வேந்தனின் உடல் தளர்ந்து அப்படியே விட்டத்தை பார்த்து படுத்துவிட்டான்.
சொல்ல வருவதை கேட்காமல் மொத்தமாக பொய் தான் சொல்லபோகிறான் என சொன்னவளிடம் விளக்கம் கொடுக்க முன் வரவில்லை, வேந்தன் இரண்டு தினம் அப்படியே பட்டும் படாமல் மாமியார் வீட்டில் தங்கிவிட்டு வீட்டுக்கு வரும்போது கமலா பெரிய குண்டாக சங்கவி தலையில போட காத்திருந்தார்.
******
கொடி கோபமாக சண்டை போட தான் காத்திருந்தாள், ராஜாவை பார்த்ததும் புது ஐடியா தோன்றியது.
"ராஜா நம்ம எல்லாம் படத்துக்கு போய் ரொம்ப நாளாச்சில்ல இன்னைக்கு போலாமா? டிக்கட் போடவா"
"சரிக்கா எல்லோருக்கும் போடுங்க" ராஜா மனதில் ஒரு ஆசை எழுந்தது.
'குட்டி... இன்னைக்கு சினிமாக்கு போலாம், முதல் சினிமா' மனதில் பட்டாம் பூச்சி பறந்தது, சிறிது நேரம் ஓய்வெடுக்க படுக்க.
குழலி சந்திராவை பார்க்க போக, "சொல்லுங்க அத்த அரசிக்கு என்ன?"
"அவளுக்கு உடம்புக்கு முடியலையாம், கிளம்பி வரட்டா கேட்டேன், அதுக்கு அண்ணா நினைப்பாவே இருக்காம்... பேச வைக்க சொல்லுறா, நான் என்ன செய்யுறது ஒன்னும் புரியலை"
"அவ்வளவு தானே, உங்க போன் கொடுங்க நான் பேச வைக்கிறேன்"
"உன் போன் என்னாச்சி"
"அது கீழே போட்டேன் பாதி டிஸ்ப்ளே போயிடுச்சி" போனை வாங்கிக்கொண்டு ராஜா அருகில் போய் உட்கார்ந்து அரசிக்கு வீடியோ கால் போட்டு பேசிக்கொண்டிருக்க.
"அண்ணி அண்ணா பேசுவாரா..." தூக்கத்தில் இருந்த ராஜா அரசியின் குரல் கேட்டு வேகமாக எழுந்தவனுக்கு நெஞ்சம் முள்ளாக குத்தியது.
"அரசி..." குழலி கையில் இருந்த திரையில் எட்டிபார்க்க, அண்ணன் முகம் பார்த்ததும், அந்த சோர்விலும்... "ஐ.... அண்ணா என்ட பேசிட்டான்" குதிக்காத குறையாக கூச்சலிட்டாள்.
"என்னாச்சிடாமா.... மூஞ்சே சரி இல்லையே"
"எக்சாம்க்கு ரொம்ப படிச்சி இப்படி ஆகிடுச்சி அண்ணா"
"சரி எப்ப ஊருக்கு வர?"
"ஒரு வாரம் கழிச்சி, பிரண்ட்ஸ் கூட இருந்துட்டு வரேன். அண்ணியை பத்திரமா பாத்துக்கோங்க, உங்கள போலவே செம ஸ்வீட்..." பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
"அண்ணா..."
"சொல்லு அரசி...."
"அம்மாக்கு சளி பிடிச்சிருக்கு... உடம்பு முடியலை ஹாஸ்பிட்டல் கூட்டி போறீங்களா"
"என்... என்னாச்சி? " தன்னையும் மீறி பதறினான் ராஜா.
"பெருசா இல்லை, அண்ணா பெருசா ஆகுரத்துக்கு முன்னாடி சரி ஆனா பரவாயில்லையில்ல அதான்"
"சரி நீ ரெஸ்ட் எடு நான் அம்... சித்திய பாத்துக்கிறேன"
"தேங்ஸ் அண்ணா லவ் யூ" போன் கட் ஆனதும் குழலி கையில் போனை கொடுக்க.
"இது என் போனில்லை, அத்தையை ஹாஸ்பிட்டல் கூட்டிபோக போறீங்களா அவங்ககிட்ட கொடுத்திடுங்க" குழலி மெத்தையில் இருந்து எந்திரிக்க, தாவணி விலகி தெரிந்த அவளது இடை கருத்து போயிருந்தது.
அடுத்து அவளது முகத்தை பார்க்க அதுவும் இயல்பாக இருக்கும் கலரை விட மங்கி போயிருந்தது. எல்லாம் என்னாலதானே, உடல் இழைத்து, கருத்து எதுக்கு இந்த தேவையில்லாத காதல் என்னால உனக்கு ஒரு சுகத்தையும் கொடுக்க முடியாது, கஷ்டம் மட்டும் தான் கொடுக்கபோறேன் நான் உனக்கு வேண்டாம்" ராஜாவாக யோசிக்க.
காதல் கொண்ட விக்கியோ... 'இல்லை இவ எனக்குமட்டும்... நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் உறுதியாக இருந்தது'
"சினிமா போலாம் ரெடியாகு"
"நிஜமாவா?"
"ம்ம்ம்"
"யார் யார் போறோம்?"
"வீட்டில் எல்லோரும்..."
"ஓ... அண்ணா வராங்களா?"
"ம்ம்ம்ம்" அவளது முகத்தில் பூத்த புன்னகை அவனுக்கு இனித்தது.
இருவரும் தயாராகி கீழே வர, மலர்கொடியின் குழந்தை மாமா என அவனின் கழுத்தை கட்டிக்கொண்டது.
குழலிக்கு ராஜாவின் சிரித்த முகத்தோடு குழந்தையை கொஞ்சுவதை பார்த்து.
அவர்களது குழந்தையை தன்னவன் கொஞ்சுவது போல பிம்பம் தோன்ற, பெண்ணவள் முகம் அந்திவானமாக சிவந்தது.
குழந்தையை கீழே விட்டுவிட்டு போன் பேச சென்றிருந்த நேரம், "அத்த" என அழைத்த குழந்தையை அள்ளி கொஞ்ச ஆசை வந்தது. ஆனால் கொடியின் புத்தி தெரிந்து தூக்க அவள் என்ன முட்டாளா, தூரம் இருந்தே கொஞ்சினாள்.
"கையில் வைத்திருந்த சாக்லேட்டை குழந்தை பாசமாக நீட்ட" குழலி தயங்கிக்கொண்டே வாயில் போட, இந்த காட்சி சரியாக கொடி கண்களில் பட.
"ஏய் எதுக்கு குழந்தைகிட்ட இருந்து திருடி சாப்பிடுற"
"அவ தான் கொடுத்தா, தேவையில்லாம பேசுறீங்க நீங்க"
"ஆமா... வந்துட்டா இவகிட்ட பேசுரது தான் எனக்கு வேலை பாரு" கொடி குழந்தை தலையில் நங்கென ஒரு கொட்டு வைத்துவிட்டு தூக்கி சென்றாள், குழந்தை அழுதுகொண்டே போனது.
என்ன தான் தைரியமாக கொடியிடம் எதிர்த்து பேசியிருந்தாலும் அவள் சொன்ன சொல்லை ஜீரனிக்கவே முடியவில்லை, 'என்னை பார்த்தா திருடி போலவா இருக்கு... அதும் குழந்தைக்கிட்ட இருந்து'
முதலில் ரங்கனும் பவளமும் ஒரு வண்டியில் கிளம்ப,
"அக்கா மாமா எங்க இன்னும் காணோம்"
"மாமா வா அவர் இரண்டு நாள் கழிச்சி தான் வருவார், சரி வா டா போலாம்" குழந்தையை முன் உட்கார வைத்துவிட்டு கொடி நக்கலாக குழலியை பார்த்துக்கொண்டே பின் ஏறி அமர்ந்துகொண்டாள். ராஜாக்கு புரியாமலில்லை அக்காவின் எண்ணம்.
'இது எல்லாம் எதிர்பார்த்தது தானே குழலி விடு' வாசர் கதவில் சாய்ந்துநின்ற ராஜாவை தான் சலனமற்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவனும் சைட் மிரர் வழியாக அவளது பிம்பம் மறையும் வரை பார்த்திருந்தான்.
ஒரு பெரு மூச்சோடு சந்திரா வீட்டுக்கு போக... அவருக்கு இருமல் அதிகமாகி இருந்தது.
சுக்கு காபி வைத்துகொடுத்து அவரை படுக்க வைத்தவள், தானும் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கே டிவியில் பழைய படம் ஓடிக்கொண்டிருந்ததை பார்த்துகொண்டிருக்க.
சந்திராவுக்கு இருமல் அதிகரித்துக்கொண்டே போனது.
"இனியும் டாக்டரிடம் காட்டலைன்னா சரிவராது, அத்த எழுங்க போலாம்" வற்புறுத்தி அழைத்துக்கொண்டு அந்த ஊரில் இருக்கும் ஒரு நர்சை பார்க்க சென்று மருந்து மாத்திரையோடு வீட்டுக்கு வரும்போது சினிமாவுக்கு சென்றிருந்தவர்களும் திரும்ப வரவும் சரியாக இருந்தது.
குழவி ராஜா இருக்கும் திசையை கூட திரும்பி பார்க்கவில்லை. சந்திராவை வீட்டிற்க்கு அழைத்து சென்று சாப்பிட வைத்து மருந்து கொடுத்து படுக்கவைத்து வீட்டிற்க்கு வர, அனைவரும் ஹாலில் கூடி இருந்தார்கள்.
ரங்கனின் முகத்தில் அப்படி ஒரு கோபம் அப்பி இருந்தது.
கருத்து
என் வெட்க சிவப்பழகியே... கமெண்ட்
மலர் பெயர் வைச்சுட்டு மிருகம் மாதிரி இருக்கிறாள். குழலி சமாளிக்க விதம் சூப்பர். அரசி சந்திரா சூப்பர். பவளம் டூ மச். ராஜா லூசு. சங்கவி லூசு நல்ல அனுபவி. வேந்தன் கமலா சூப்பர்.
pommutamilnovels.com