14 சிவப்பழகியே...
"என்ன வீடே மனக்குது... பிரியாணி வாசம் வருது" சங்கவி தலையை திருப்பி முகர்ந்து பார்க்க... சங்கவி மெய்மறந்து தன்னையும் மீறி கண்களை மூடி மோப்பம் பிடித்துக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்திருந்தாள்... கண்கள் மூடி அழகாய் வந்தவளை பார்த்த வேந்தன் சங்கவியின் சிறுப்பிள்ளை தனத்தை ரசித்தான் என்றும் போல் இன்றும் சொக்கித்தான் போனான் தன்னவளின் முகத்தை பார்த்து.
டிசைனர் புடவையில் பெரியவளாக தெரிந்தாள், 'இனி புடவை கட்டவேண்டாம்' ன்னு சொல்லனும் தாறுமாறா பார்வை போகுது அவகிட்ட' தன் மனம் போகும் திசையை அடக்கினான் இந்த நல்லவன்.
கண்களை திறந்து, "பரவாயில்லையே செமையா வாசத்தோட சமையல் செஞ்சிட்டிங்க போல"
"சமையல் சூப்பரா செய்வேன் தெரியுமா?"
"பாருடா பரவால்ல... நீ எனக்கு இதுக்காச்சி யூஸ் ஆவ"
"என்ன சவுண்ட் ஜாஸ்தியா இருக்கு? அம்மா இல்லாததாலா"
"ஆமா அதுக்கென்ன, ரொம்ப செய்யுற இனி உன்ட பேசலை போ" கோபித்து போக இருந்தவளை கையை பிடித்து நிறுத்தி இருந்தான்.
"கொஞ்சம் போசலாமா?"
"எனக்கு உன்ட பேச பிடிக்கலை விடு" கையை பிரித்தெடுக்க போராடினாள்.
"பேசி தான் ஆகனும்... அம்மாக்கு போன் போடவா?" அவளது வீக் பாயின்டில் கைவக்க,
"ஐயோ... வேண்டா ப்ளீஸ்" கமலா பெயரை கேட்டாலே மனதில் பதற்றம் தொற்றிக்கொள்கிறது சங்கவிக்கு.
"சரிவா சாப்பிடடலாம்"
"இல்ல எனக்கு ஒன்னும் வேண்டாம்" சங்கவி முகத்தை திருப்பி வேந்தன் அவள் முகத்தில் ஏற்படும் சிறுசிறு அசைவுகளை கூட கூர்ந்து பார்த்தான்.
'சாரி மா உன்னை இவகிட்ட வில்லி மாறி காமிச்சிட்டு இருக்கேன். என் காதலை அவ புரிஞ்சிக்கிட்ட அப்புறம் முதல் வேலையா இந்த நாடகத்தை தான் சொல்லி இரண்டு பேரையும் சேர்த்து வைக்கனும்' யோசித்துக்கொண்டே சமையலை முடித்து திரும்பும் போது சங்கவியின் வாயெல்லாம் பல்லாக கையில் தட்டோடு நின்றிருந்தாள்.
"யாரோ நான் சமைச்சதை எல்லாம் சாப்பிட மாட்டேன்னு சொன்னாங்க.. நீ பாத்தியா சங்கவி அவங்களை"
"ஹா... ஹா அப்படி யாருமில்லை இங்க இல்லை பா" வேந்தன் முன் தட்டை நீட்ட.
"என் செல்ல அழிகி" கன்னம் கொஞ்சினான்.
"ஏய் கன்னம் கிள்ளாதே வலிக்கும்" வேந்தன் கையை தட்டிவிட.
"அழகிமா"
"பேசிட்டே இருக்காத சாப்பாடு போடு... ரொம்ப பசி"
"சரிடா... தங்கம் இன்னொரு ப்ளேட் எடு"
"எதுக்கு" சாப்பாடு போட்டுக்கொண்டவனது கை தானாக நின்றது, திரும்பி பார்க்க.
"அடிப்பாவி! எனக்கு சாப்பாடு வேண்டாமா?"
"ரொம்ப நடிக்காத ஒன்னா தானே சாப்பிடனும் அத்த சொல்லி இருக்காங்க"
"ஆமால்ல மறந்துட்டேன்" சங்கவி முன் தட்டோடு நடந்து போக,
வேந்தன் தன்னவளை ரசித்துக்கொண்டே தண்ணீரை எடுத்துகொண்டு பின் நடந்துவர.
"ஹாலில் மியூசிக் சேனலை பேட்டுவிட்டு தட்டின் கால்வாசி பகுதியில் ஒரு கோடு போட்டுக்கொண்டு இருந்தாள்.
"அழகிமா... என்ன செஞ்சிட்டு இருக்க?"
"இந்த கோட்டை தான் டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்"
"இதென்ன போங்கா இருக்கு எனக்கு மட்டும் கொஞ்சமா இருக்கு"
"உனக்கென்ன நீ மலைமாடு போல வளர்ந்து இருக்க. நான் தான் பாவம் கோழி குட்டி போல இருக்கேன்"
"மா ரொம்ப குட்டியா இருக்க நீ பெருசா எப்போ ஆவ என் சிரிப்பழகியே" கன்னத்தில் விழும் குழியை பார்த்துக்கொண்டே சாப்பிட துவங்கி இருந்தான், "என்ன அழகிமா வா? சங்கு பெயர்க்கு இது பரவாயில்லை" முத்துப்பல் தெரிய சிரித்தாள்.
"நீ இப்படி சிரிச்சிட்டே இரு தங்கம்... அழகா இருக்க" வேந்தன் சொல்லி முடிக்கும் முன் அவளது முகம் இறுகியது.
"சங்கவி என்னாச்சி? எதாவது ஹர்ட் செஞ்சிட்டேனா" சங்கவி அவனிடம் பேசாமல் சாப்பிட்டு முடித்தவள் அமைதியாக தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்த ரோஜா செடியை வெறித்து பார்த்துக்கொண்டிருக்க.
"சங்கவி என்னாச்சி டா"
"எனக்கு உன்னை பிடிக்கலை, உங்க அம்மாவை சுத்தமா பிடிக்கலை... இந்த தாலி பாரமா இருக்கு" கழுத்தில் இருந்த தாலியை உயர்த்தி பிடித்து காட்டினாள்.
வேந்தன் முற்றிலும் உடைந்துபோனான் அவளது வார்த்தைகளின் தாக்கத்தால்.
"நான் கட்டின தாலி உனக்கு பாரமா இருக்கா அழகிமா" குரலில் அத்துணை வலி தெரிந்தது,
"ப்ளீஸ் இந்த செல்ல பெயர் எல்லாம் சொல்லிக் கூப்பிடாதிங்க... எனக்கு அறுவெறுப்பா இருக்கு"
'அறுவெறுப்பாவா!' வேந்தன் கண்களை மூடி தன்னை சமன் செய்துகொண்டு.
"சரி கூப்பிடலை போதுமா... நீயா வந்து பேசும் வரை... இனி நான் பேசமாட்டேன். இப்படி பேசியதுக்கு நீ கதறி அழும் நாள் ரொம்ப தூரமில்லை மிஸ்சஸ் வேத்தன்"
"செத்தாலும் கவலைபடமாட்டேன் உனக்காக ஒரு சொட்டு கண்ணீரும் வராது, என் கண்ணிலிருந்து"
"அதையும் பார்க்கலாம்... இன்னொன்னு நீ வேற ரூம் போயிடு"
"எனக்கு மட்டுமென்ன உன் கூட இருக்க ஆசையா? உங்க அம்மாகிட்ட அதை சொல்லு"
"சொல்லுறேன்" போன் போட்டு உடனே கமலாவை வரவைத்திருந்தான்.
வேந்தன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க, சங்கவிக்கு வேந்தன் இப்படி அமர்ந்திருப்பது ஒரு சிறு வலியை ஏற்படுத்தி இருந்தாலும், அவனை சமாதானப் படுத்த வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு கல்போல ஒருபக்கம் அமர்ந்திருந்தாள் சங்கவி.
கமலா அவதிஅவதியாக வீட்டிற்க்குள் நுழைந்தார்.
"இங்கே என்ன நடந்துட்டு இருக்கு" கமலா குரல் கேட்டதும் வேந்தன் தலையை நிமிர்ந்து பார்க்க.
"ஏன்டா உடனே வரசொன்ன உடம்பு சரியில்லையா, மகனின் தலையிலும் கழுத்திலும் தொட்டு பார்த்து காய்ச்சல் இல்லை என தெரிந்ததும் தான் உயிரே வந்தது.
"அவ எதாவது சொன்னாலா, எதுக்கு சங்கவி இப்படி செஞ்சிட்டு இருக்க? என் பையன் நிம்மதியா இருக்க கூடாதுன்னு நினைக்கிறியா?" கமலா கோபமாக சங்கவி அருகில் நெருங்கி போக வேந்தன் கமலா கையை பிடித்து தடுத்திருந்தான்.
"என்னடா இது..." வேந்தன் பதில் பேசாது, இல்லை என்பது போல வேந்தன் தலை அசைத்தான்.
****
என்ன இந்த துணியை காணோம்...
"அத்த..." கூவிக்கொண்டே குழலி வெளியே இருந்து கூப்பிட. உள்ளிருந்து ஓரு இளம்பெண் எட்டி பார்த்தாள்.
"யாரு நீங்க" அவளது பதுங்கிய குரலை கேட்டதும் குழலிக்கு சங்கவி நியாபகம் வந்தது.
"யார் கா நீங்க?"
"அக்கா இல்ல அண்ணி"
"அண்ணியா... ஓஓஓ நீங்க தான் ராஜா அண்ணா வைப்பா? அழகா இருக்கீங்க கா"
"அட இப்ப தானே சொன்னேன்.. அக்கா இல்ல அண்ணி..." குழலி சிரித்த முகத்தோடு அழுத்தி சொல்ல.
"சரி அண்ணி... உங்களுத்கு எப்படி தெரியும்?"
"அத்த சொன்னாங்க... உன் போட்டோ பார்த்து கேட்கும் போது"
" நீங்களாவது ஒழுங்கா பேசுறீங்களே சந்தோஷம்... அண்ணா உங்கிட்ட பேசுவாங்களா?" அவளது குரலில் அப்படி ஒரு ஏக்கம் வெளிபட்டது.
"முன்ன எல்லாம் சூப்பரா பேசுவாங்க, இப்ப எல்லா பார்த்தா கூட பார்க்காதது போல போயிடுறாங்க"
"ஓ... எப்ப இருந்து இப்படி இருக்காங்க உங்கண்ணன்?"
"ஒன்றறை வருஷம் இருக்கும்"
'கணக்கு சரியா இருக்கே, அப்ப அந்த பிரேக் அப் நாடகத்துக்கும் இதுக்கும் கண்டிப்பா ஏதோ சம்மந்தம் இருக்கு. முதல்ல என் டார்கெட் இந்த தியாகு அண்ணா, அடுத்து ஒரு ஒருத்தரையா பார்த்துக்கலாம்' மனதில் திட்டம் போட துவங்கி இருந்தாள் குழலி.
"அண்ணி... என்ன யோசனை அண்ணாவை நினைத்தா" குறும்பாக சிறியவள் கேட்டு சிரிக்க...
"ஆமா அப்படியே நினைச்சிட்டாலும் கடைக்கு போகனும் அதான் அத்தையை கூட்டிப்போக வந்தேன். என் டிரஸ் நேத்து துவைக்க ஊரவச்சி மறந்து போயிட்டேன்"
"தெரியலையே நான் இன்னைக்கு காலையில தான் வந்தேன்..."
"அம்மா எங்கே போய் இருக்காங்க"
"அம்மா வேலைக்கு போய் இருக்காங்க அண்ணி... கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க"
"என்ன வேலை?"
"அம்மா சின்ன சின்ன விஷேசத்துக்கு சமைக்க போவாங்க, சூப்பரா சமைப்பாங்க தெரியுமா"
"தெரியும்... அன்னைக்கு தக்காளி சாதம் அவ்வளவு டேஸ்டா இருந்தது. உன் அண்ணன் தான் முழுசா சாப்பிடவிடலை, வாயில இருந்ததை எல்லாம் துப்ப வச்சிட்டான்"
"அண்ணா வா இப்படி எல்லாமா செய்தாரா!"
"ஆமா, சரி வா இப்படி உட்காரு பேசலாம்"
"உன் பேர் என்ன?"
"அரசி"
"பொருத்தமா பேர் வச்சி இருக்காங்க உனக்கு"
"போங்க நீங்களும் அண்ணி கிண்டல் செஞ்சிட்டு, ஏன்டா இந்த பேர் வச்சாங்கனானு வருத்தமா இருக்கு தெரியுமா"
"ஏன் இந்த பேருக்கு என்ன நல்லா தான இருக்கு"
"எல்லாம் அரிசி மூட்டன்னு கிண்டல் செய்யுறாங்க தனது பருத்த உடலை சுட்டிக்காட்டி அரசி சொல்ல.
"பிசிக்கல் அப்பியரன்ஸ்க்கு இம்பார்டன் கொடுக்காத, அதே சமையம் ஹெல்த்துக்கு இம்பார்டன்ட் கொடுக்கனும் சரியா... கொஞ்சம் குறைச்சா போதும் சூப்பரா ஆகிடுவ"
"சரி அண்ணி... ஆனா எனக்கு சாப்பிடுறதுன்னா அவ்வளவு இஷ்டம்"
"வேற என்னென்ன பிடிக்கும் உனக்கு"
"எனக்கு முதல் அம்மா பிடிக்கும் அப்புறம் அண்ணா பிடிக்குமா"
"அப்பா..."
"நான் தான் பார்த்ததே இல்லையே ஆனா..." வேலை முடித்துக்கொண்டு சந்திரா அப்போது தான் வந்தார்.
"அடடே மருமகளே வந்துட்டியா"
"அத்த வந்துட்டிங்களா, ரெம்ப டயார்டா இருக்கிங்க இருங்க காபி போட்டு கொண்டு வரேன்"
"எனக்கு காபி பிடிக்காது வுவேக்... டீ தான் இஷ்டம்"
"இதோ இரண்டு நிமிஷம் அத்த..." வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டே சமையல் கட்டில் நுழைந்துகொண்டு, அரசியை அழைத்தாள் சர்க்கரை எங்கே என கேட்க.
சமையல் கட்டை எட்டி பார்த்த சந்திரா கையில் இருந்த பையில் எதையோ மறைத்து உள்ளே எடுத்து சென்றார்.
"என்ன வீடே மனக்குது... பிரியாணி வாசம் வருது" சங்கவி தலையை திருப்பி முகர்ந்து பார்க்க... சங்கவி மெய்மறந்து தன்னையும் மீறி கண்களை மூடி மோப்பம் பிடித்துக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்திருந்தாள்... கண்கள் மூடி அழகாய் வந்தவளை பார்த்த வேந்தன் சங்கவியின் சிறுப்பிள்ளை தனத்தை ரசித்தான் என்றும் போல் இன்றும் சொக்கித்தான் போனான் தன்னவளின் முகத்தை பார்த்து.
டிசைனர் புடவையில் பெரியவளாக தெரிந்தாள், 'இனி புடவை கட்டவேண்டாம்' ன்னு சொல்லனும் தாறுமாறா பார்வை போகுது அவகிட்ட' தன் மனம் போகும் திசையை அடக்கினான் இந்த நல்லவன்.
கண்களை திறந்து, "பரவாயில்லையே செமையா வாசத்தோட சமையல் செஞ்சிட்டிங்க போல"
"சமையல் சூப்பரா செய்வேன் தெரியுமா?"
"பாருடா பரவால்ல... நீ எனக்கு இதுக்காச்சி யூஸ் ஆவ"
"என்ன சவுண்ட் ஜாஸ்தியா இருக்கு? அம்மா இல்லாததாலா"
"ஆமா அதுக்கென்ன, ரொம்ப செய்யுற இனி உன்ட பேசலை போ" கோபித்து போக இருந்தவளை கையை பிடித்து நிறுத்தி இருந்தான்.
"கொஞ்சம் போசலாமா?"
"எனக்கு உன்ட பேச பிடிக்கலை விடு" கையை பிரித்தெடுக்க போராடினாள்.
"பேசி தான் ஆகனும்... அம்மாக்கு போன் போடவா?" அவளது வீக் பாயின்டில் கைவக்க,
"ஐயோ... வேண்டா ப்ளீஸ்" கமலா பெயரை கேட்டாலே மனதில் பதற்றம் தொற்றிக்கொள்கிறது சங்கவிக்கு.
"சரிவா சாப்பிடடலாம்"
"இல்ல எனக்கு ஒன்னும் வேண்டாம்" சங்கவி முகத்தை திருப்பி வேந்தன் அவள் முகத்தில் ஏற்படும் சிறுசிறு அசைவுகளை கூட கூர்ந்து பார்த்தான்.
'சாரி மா உன்னை இவகிட்ட வில்லி மாறி காமிச்சிட்டு இருக்கேன். என் காதலை அவ புரிஞ்சிக்கிட்ட அப்புறம் முதல் வேலையா இந்த நாடகத்தை தான் சொல்லி இரண்டு பேரையும் சேர்த்து வைக்கனும்' யோசித்துக்கொண்டே சமையலை முடித்து திரும்பும் போது சங்கவியின் வாயெல்லாம் பல்லாக கையில் தட்டோடு நின்றிருந்தாள்.
"யாரோ நான் சமைச்சதை எல்லாம் சாப்பிட மாட்டேன்னு சொன்னாங்க.. நீ பாத்தியா சங்கவி அவங்களை"
"ஹா... ஹா அப்படி யாருமில்லை இங்க இல்லை பா" வேந்தன் முன் தட்டை நீட்ட.
"என் செல்ல அழிகி" கன்னம் கொஞ்சினான்.
"ஏய் கன்னம் கிள்ளாதே வலிக்கும்" வேந்தன் கையை தட்டிவிட.
"அழகிமா"
"பேசிட்டே இருக்காத சாப்பாடு போடு... ரொம்ப பசி"
"சரிடா... தங்கம் இன்னொரு ப்ளேட் எடு"
"எதுக்கு" சாப்பாடு போட்டுக்கொண்டவனது கை தானாக நின்றது, திரும்பி பார்க்க.
"அடிப்பாவி! எனக்கு சாப்பாடு வேண்டாமா?"
"ரொம்ப நடிக்காத ஒன்னா தானே சாப்பிடனும் அத்த சொல்லி இருக்காங்க"
"ஆமால்ல மறந்துட்டேன்" சங்கவி முன் தட்டோடு நடந்து போக,
வேந்தன் தன்னவளை ரசித்துக்கொண்டே தண்ணீரை எடுத்துகொண்டு பின் நடந்துவர.
"ஹாலில் மியூசிக் சேனலை பேட்டுவிட்டு தட்டின் கால்வாசி பகுதியில் ஒரு கோடு போட்டுக்கொண்டு இருந்தாள்.
"அழகிமா... என்ன செஞ்சிட்டு இருக்க?"
"இந்த கோட்டை தான் டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்"
"இதென்ன போங்கா இருக்கு எனக்கு மட்டும் கொஞ்சமா இருக்கு"
"உனக்கென்ன நீ மலைமாடு போல வளர்ந்து இருக்க. நான் தான் பாவம் கோழி குட்டி போல இருக்கேன்"
"மா ரொம்ப குட்டியா இருக்க நீ பெருசா எப்போ ஆவ என் சிரிப்பழகியே" கன்னத்தில் விழும் குழியை பார்த்துக்கொண்டே சாப்பிட துவங்கி இருந்தான், "என்ன அழகிமா வா? சங்கு பெயர்க்கு இது பரவாயில்லை" முத்துப்பல் தெரிய சிரித்தாள்.
"நீ இப்படி சிரிச்சிட்டே இரு தங்கம்... அழகா இருக்க" வேந்தன் சொல்லி முடிக்கும் முன் அவளது முகம் இறுகியது.
"சங்கவி என்னாச்சி? எதாவது ஹர்ட் செஞ்சிட்டேனா" சங்கவி அவனிடம் பேசாமல் சாப்பிட்டு முடித்தவள் அமைதியாக தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்த ரோஜா செடியை வெறித்து பார்த்துக்கொண்டிருக்க.
"சங்கவி என்னாச்சி டா"
"எனக்கு உன்னை பிடிக்கலை, உங்க அம்மாவை சுத்தமா பிடிக்கலை... இந்த தாலி பாரமா இருக்கு" கழுத்தில் இருந்த தாலியை உயர்த்தி பிடித்து காட்டினாள்.
வேந்தன் முற்றிலும் உடைந்துபோனான் அவளது வார்த்தைகளின் தாக்கத்தால்.
"நான் கட்டின தாலி உனக்கு பாரமா இருக்கா அழகிமா" குரலில் அத்துணை வலி தெரிந்தது,
"ப்ளீஸ் இந்த செல்ல பெயர் எல்லாம் சொல்லிக் கூப்பிடாதிங்க... எனக்கு அறுவெறுப்பா இருக்கு"
'அறுவெறுப்பாவா!' வேந்தன் கண்களை மூடி தன்னை சமன் செய்துகொண்டு.
"சரி கூப்பிடலை போதுமா... நீயா வந்து பேசும் வரை... இனி நான் பேசமாட்டேன். இப்படி பேசியதுக்கு நீ கதறி அழும் நாள் ரொம்ப தூரமில்லை மிஸ்சஸ் வேத்தன்"
"செத்தாலும் கவலைபடமாட்டேன் உனக்காக ஒரு சொட்டு கண்ணீரும் வராது, என் கண்ணிலிருந்து"
"அதையும் பார்க்கலாம்... இன்னொன்னு நீ வேற ரூம் போயிடு"
"எனக்கு மட்டுமென்ன உன் கூட இருக்க ஆசையா? உங்க அம்மாகிட்ட அதை சொல்லு"
"சொல்லுறேன்" போன் போட்டு உடனே கமலாவை வரவைத்திருந்தான்.
வேந்தன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க, சங்கவிக்கு வேந்தன் இப்படி அமர்ந்திருப்பது ஒரு சிறு வலியை ஏற்படுத்தி இருந்தாலும், அவனை சமாதானப் படுத்த வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு கல்போல ஒருபக்கம் அமர்ந்திருந்தாள் சங்கவி.
கமலா அவதிஅவதியாக வீட்டிற்க்குள் நுழைந்தார்.
"இங்கே என்ன நடந்துட்டு இருக்கு" கமலா குரல் கேட்டதும் வேந்தன் தலையை நிமிர்ந்து பார்க்க.
"ஏன்டா உடனே வரசொன்ன உடம்பு சரியில்லையா, மகனின் தலையிலும் கழுத்திலும் தொட்டு பார்த்து காய்ச்சல் இல்லை என தெரிந்ததும் தான் உயிரே வந்தது.
"அவ எதாவது சொன்னாலா, எதுக்கு சங்கவி இப்படி செஞ்சிட்டு இருக்க? என் பையன் நிம்மதியா இருக்க கூடாதுன்னு நினைக்கிறியா?" கமலா கோபமாக சங்கவி அருகில் நெருங்கி போக வேந்தன் கமலா கையை பிடித்து தடுத்திருந்தான்.
"என்னடா இது..." வேந்தன் பதில் பேசாது, இல்லை என்பது போல வேந்தன் தலை அசைத்தான்.
****
என்ன இந்த துணியை காணோம்...
"அத்த..." கூவிக்கொண்டே குழலி வெளியே இருந்து கூப்பிட. உள்ளிருந்து ஓரு இளம்பெண் எட்டி பார்த்தாள்.
"யாரு நீங்க" அவளது பதுங்கிய குரலை கேட்டதும் குழலிக்கு சங்கவி நியாபகம் வந்தது.
"யார் கா நீங்க?"
"அக்கா இல்ல அண்ணி"
"அண்ணியா... ஓஓஓ நீங்க தான் ராஜா அண்ணா வைப்பா? அழகா இருக்கீங்க கா"
"அட இப்ப தானே சொன்னேன்.. அக்கா இல்ல அண்ணி..." குழலி சிரித்த முகத்தோடு அழுத்தி சொல்ல.
"சரி அண்ணி... உங்களுத்கு எப்படி தெரியும்?"
"அத்த சொன்னாங்க... உன் போட்டோ பார்த்து கேட்கும் போது"
" நீங்களாவது ஒழுங்கா பேசுறீங்களே சந்தோஷம்... அண்ணா உங்கிட்ட பேசுவாங்களா?" அவளது குரலில் அப்படி ஒரு ஏக்கம் வெளிபட்டது.
"முன்ன எல்லாம் சூப்பரா பேசுவாங்க, இப்ப எல்லா பார்த்தா கூட பார்க்காதது போல போயிடுறாங்க"
"ஓ... எப்ப இருந்து இப்படி இருக்காங்க உங்கண்ணன்?"
"ஒன்றறை வருஷம் இருக்கும்"
'கணக்கு சரியா இருக்கே, அப்ப அந்த பிரேக் அப் நாடகத்துக்கும் இதுக்கும் கண்டிப்பா ஏதோ சம்மந்தம் இருக்கு. முதல்ல என் டார்கெட் இந்த தியாகு அண்ணா, அடுத்து ஒரு ஒருத்தரையா பார்த்துக்கலாம்' மனதில் திட்டம் போட துவங்கி இருந்தாள் குழலி.
"அண்ணி... என்ன யோசனை அண்ணாவை நினைத்தா" குறும்பாக சிறியவள் கேட்டு சிரிக்க...
"ஆமா அப்படியே நினைச்சிட்டாலும் கடைக்கு போகனும் அதான் அத்தையை கூட்டிப்போக வந்தேன். என் டிரஸ் நேத்து துவைக்க ஊரவச்சி மறந்து போயிட்டேன்"
"தெரியலையே நான் இன்னைக்கு காலையில தான் வந்தேன்..."
"அம்மா எங்கே போய் இருக்காங்க"
"அம்மா வேலைக்கு போய் இருக்காங்க அண்ணி... கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க"
"என்ன வேலை?"
"அம்மா சின்ன சின்ன விஷேசத்துக்கு சமைக்க போவாங்க, சூப்பரா சமைப்பாங்க தெரியுமா"
"தெரியும்... அன்னைக்கு தக்காளி சாதம் அவ்வளவு டேஸ்டா இருந்தது. உன் அண்ணன் தான் முழுசா சாப்பிடவிடலை, வாயில இருந்ததை எல்லாம் துப்ப வச்சிட்டான்"
"அண்ணா வா இப்படி எல்லாமா செய்தாரா!"
"ஆமா, சரி வா இப்படி உட்காரு பேசலாம்"
"உன் பேர் என்ன?"
"அரசி"
"பொருத்தமா பேர் வச்சி இருக்காங்க உனக்கு"
"போங்க நீங்களும் அண்ணி கிண்டல் செஞ்சிட்டு, ஏன்டா இந்த பேர் வச்சாங்கனானு வருத்தமா இருக்கு தெரியுமா"
"ஏன் இந்த பேருக்கு என்ன நல்லா தான இருக்கு"
"எல்லாம் அரிசி மூட்டன்னு கிண்டல் செய்யுறாங்க தனது பருத்த உடலை சுட்டிக்காட்டி அரசி சொல்ல.
"பிசிக்கல் அப்பியரன்ஸ்க்கு இம்பார்டன் கொடுக்காத, அதே சமையம் ஹெல்த்துக்கு இம்பார்டன்ட் கொடுக்கனும் சரியா... கொஞ்சம் குறைச்சா போதும் சூப்பரா ஆகிடுவ"
"சரி அண்ணி... ஆனா எனக்கு சாப்பிடுறதுன்னா அவ்வளவு இஷ்டம்"
"வேற என்னென்ன பிடிக்கும் உனக்கு"
"எனக்கு முதல் அம்மா பிடிக்கும் அப்புறம் அண்ணா பிடிக்குமா"
"அப்பா..."
"நான் தான் பார்த்ததே இல்லையே ஆனா..." வேலை முடித்துக்கொண்டு சந்திரா அப்போது தான் வந்தார்.
"அடடே மருமகளே வந்துட்டியா"
"அத்த வந்துட்டிங்களா, ரெம்ப டயார்டா இருக்கிங்க இருங்க காபி போட்டு கொண்டு வரேன்"
"எனக்கு காபி பிடிக்காது வுவேக்... டீ தான் இஷ்டம்"
"இதோ இரண்டு நிமிஷம் அத்த..." வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டே சமையல் கட்டில் நுழைந்துகொண்டு, அரசியை அழைத்தாள் சர்க்கரை எங்கே என கேட்க.
சமையல் கட்டை எட்டி பார்த்த சந்திரா கையில் இருந்த பையில் எதையோ மறைத்து உள்ளே எடுத்து சென்றார்.