24 சிவப்பழகியே...
"ஏய் சங்குமா என்னாச்சி" மூக்கை உறிஞ்சிகொண்டே, "இன்னொரு முறை சங்கு கிங்கு சொன்னிங்க சங்கை மிதிச்சிடுவேன்... ஜாக்கரதை" கண்களை துடைத்துக்கொண்டே சங்கவி சொல்ல.
"சரி தாயே சொல்லலை விடு, எதுக்கிந்த அழுகை"
"நான் சரியான முட்டாள் உங்க காதலையும் புரிஞ்சிக்கலை அத்தையையும் புரிஞ்சிக்கலை... அதான் இப்ப புரிஞ்சிக்கிட்டையே செல்லம்"
"எங்க புரிஞ்சிக்கிட்டேன்... ரத்தக்காட்டேரி போல உங்க உயிரை தான் வார்த்தையால் உறிஞ்சி.. அக்கா கூட எல்லாம் சேர்த்து வைத்து பேசி... உங்களுக்கு வலிச்சி இருக்குமில்ல" எட்டி வேந்தனின் கன்னத்தை வருடிவிட.
"இங்க வலிக்கலை இங்க தான் வலிச்சது" சங்கவி கரங்களை பிடித்து வேந்தன் நெஞ்சோடு சேர்த்து அழுத்தி பிடிக்க.
"சாரி..." ஏங்கோ பார்த்து சங்கவி சொல்ல அவளது பார்வையை தன் புறம் திருப்ப அவளது கையை செல்லமாக கிள்ள, "இஷ்ஷ்..." அவனது ஊடுருவும் பார்வையை பார்த்து பெண்ணவளுக்கு வேர்க்கத் துவங்கியது.
"ஓய் எதுக்கு வேர்க்குது உனக்கு?"
"தெரியலையே..."
"என் ராங்கி பொண்டாட்டிக்கு என்னாச்சி, இப்படி பயந்தாங்கோலியா இருக்கா"
"நானா... நானா பயந்தாங்கோலி" அவளது கண்ணீரை துடைத்துவிட்டவன், "இனி அழுதா இப்படி கடிச்சி வச்சிடுவேன்" அவளது கன்னத்தை அழுத்தி கடித்திருந்தான் வேந்தன். "சரியான பைத்தியம் எதுக்கு கடிச்ச?" அவனது தலைமுடியை பிடித்து இழுத்து ஒரு வழி செய்திருந்தாள்.
"ஏய் சண்டையை நாளைக்கு துவங்கிக்கலாம், இப்ப வா லவ் பண்ணலாம்"
"உன் பார்வையே சரியில்லை விடு நான் போறேன்" சங்கவி ஓட பார்க்க குண்டுக்கட்டாக தூக்கி வந்தவன் மெத்தையில் தன்னோடு சரித்துக்கொண்டு, "இனி எட்டு மணிக்குமேல ஒன்லி காதல் பாடம் தான் புரியுதா?" அதன் பிறகு வேந்தன் பேசவிட்டால் தானே... இருவரும் மாறிமாறி தக்களது காதலை வெளிபடுத்தத் துவங்தி இருந்தார்கள். இங்கு ஒரு ஜோடி ஹனிமூன் கொண்டாடிக்கொண்டிருக்க,
மலர் கொடி நிலையோ பரிதாபமோ பரிதாபம், கணவன் வேலைக்கு சென்றதும் அவன் தாயை வைத்து செய்ய நினைத்தவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவனது உயர் அதிகாரியிடம் சண்டையிட்டு வொர்க் பிரம் ஹோம் வாங்கியவன் குழந்தையை மலர் கொடி கையில் கொடுக்கவே இல்லை, அனைத்து வீட்டு வேலைகளும் கொடுத்து தியாகு அவளை ஒரு வழி செய்திருந்தான்.
அவளுக்கு தியாகு விட்டால் போதும் என்றானது... ஒரு வாரத்தில் ரொம்பவே வெயிட் குறைந்திருந்தாள். மாமியாருக்கே பாவமாக இருக்க மகனிடம் சென்று, "தியாகு இதென்ன? எல்லாம் தப்பு பாவமா இருக்கு அந்த பெண்ணை பார்த்தா"
"அம்மா... அவ ஆடுன ஆட்டம் உங்களுக்கு தெரியலை இனியும் இவளை அப்படியே விட்டா என் மக வாழ்க்கையை கேள்வி குறியா ஆக்கிடுவா, நீங்க அமைதியா இருங்க" தாயை அடக்கியிருந்தான்.
தியாகு அவளை திருத்த செய்த ஒவ்வொரு காரியமும் மலர்கொடியை இன்னும் வஞ்சம் மிகுந்தவளாக மாற்றி இருந்தது. அவளது அனைத்து கோபமும் குழலி மீதுதான் சென்றது. அவளை பழிவாங்க காத்திருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். தியாகுவும் அவளை யோசிக்கவிடாமல் நாள் முழுவதும் எதாவது வேலைக்கு ஏவிக்கொண்டே இருப்பான்... செய்த வேலைக்கு ஆயிரம் குறை சொல்லுவான். அவளுக்கு பிடிக்காத உணவு வகையை தேர்ந்தெடுத்து சமைக்க சொல்வான்... அதை நிறைய சாப்பிடவும் வைப்பான். குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கும்போது மட்டுமே கொடியிடம் கொடுக்கப்பட்டது. மற்ற நேரத்தில் தியாகு அம்மா பேத்தியை நன்றாக ஊர் சுற்றி காட்டுவார் சிறுமியாக மாறி குழந்தையிடம் விளையாடுவார் மாலை நேரத்தில் தாய் மகன் பேத்தி மூவரும் வெளியே செல்வது, முற்றத்தில் அமர்ந்து சிரித்து பேசுவது... கொடிக்கு பத்திக்கொண்டு வரும்.
இப்படியே நாட்கள் நகர, தியாகு வேலை செய்ய சொல்லும்போது மட்டுமே பேசுவான், மற்ற நேரங்களில் பேசவே மாட்டான், எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்டனை கொடுத்துக்கொண்டிருந்தான்.
அவனது பாராமுகம் அவளை வதைத்தது என்று தான் சொல்லவேண்டும். இரவு குளித்துவிட்டு வந்தவன் அருகில் வந்து நின்ற கொடியை விசித்திரமாக பார்க்க, "சாரி"
"ஓ... மகாராணிக்கு சாரி எல்லாம் கேட்க தெரியுமா?"
"இனி அப்படி செய்ய மாட்டேன், உங்க அம்மாவை நல்லா பாத்துக்கிறேன்"
"ஓ... இதை நம்ப சொல்லுறியா என்ன"
"என்னை நம்பலையா நீங்க?"
"இல்ல இந்த ஜென்மத்தில் நம்ப மாட்டேன்" தியாகு இரவு உடை அணிந்துகொண்டு மகளுடன் மெத்தைக்கு நடுவில் படுக்க. கொடிக்கான இடம் அங்கில்லை நாள் முழுவதும் வேலை செய்ததில் அவளுக்கு கலைப்பு வேறு தரையில் தலைக்கு கை வைத்து படுத்துக்கொண்டாள், கண்களில் இருந்து ஆறாக ஓடியது அவளது கண்ணீர்... இந்த நிலையில் கூட குழலியை எதாவது செய்யனும் என்று மனதில் செல்லிக்கொண்டே இருப்பாள். இவள் இந்த ஜென்மத்தில் திருந்தப் போவதில்லை
***
குழலிக்காக காத்துக்கொண்டிருந்தவன் பொறுமை இழந்து சந்திரா வீட்டை நோக்கி போனான்.
"மா..."
"விக்கி வாபா" சந்தியா பாசத்தோடு அழைக்க, தாய் மகன் தங்கை பேசத் துவங்க, ஓரமாக அமர்ந்திருந்த குழலி அப்படியே படுத்து தூங்கத் துவங்கி இருந்தாள்.
"மா பெட்சீட் கொடுங்க குழலி தூங்கிட்டா போல"
"குழலி எந்திரி வீட்டுக்கு போய் தூங்கு"
"இங்கவே இருக்கட்டும் மா இதும் அவ வீடு தானே... உங்க கிட்ட ஒன்னு சொல்ல தான் வந்தேன்"
"அப்படியா அண்ணா நான் கூட அண்ணியை தேடி வந்துட்டிங்கன்னு நினைச்சேன்" அரசி அண்ணனை கலாய்க்க அவனும் சலிக்காமல் " அப்படியும் வச்சிக்கலாம்"
"சரி சரி... "
"என்ன வெளியே வண்டி சத்தம் கேட்குது...
"அது தான்மா சொல்ல வந்தேன்... வீடு கட்ட நாளைக்கு துவங்குறோம்"
சந்திரா தயக்கமாக பார்க்க, அவர் கையை அழுத்தி பிடித்த விக்கி, "இல்ல மா கவலை படாதீங்க, என்னோட சேவீங்க்ஸ் வச்சிதான் கட்டப்போறேன்" சந்திரா முகம் தெளிவில்லாமல் இருப்பதை பார்த்த விக்கி, அவரது கன்னம் கிள்ளி சமாதானம் செய்யத் தூங்கும் குழலியை பார்த்துவிட்டு சென்றிருந்தான் அடுத்த நாள் வீட்டு வேலை துவங்க ஒருவாரம் விக்கி பிசியாகவே செல்ல குழலியை பார்வையால் மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது. பேச முயற்சி செய்தாலும் முடியவில்லை. பவளமும் குழலியும் ராசியாகி போக... இடையில் ரங்கன் பவளத்தை சமாதானப் படுத்த படாத பாடுபட்டார். அவர் பொய் சொன்னது பவளத்தால் ஏற்க முடியவில்லை, கூடவே மகனுக்காகவும் அழுது தீர்த்தார். நிறைய நேரம் அழுது முடித்தவர், பவளமும் ரங்கனை புரிந்துகொண்டார், ஒரு வழியாக சமாதானம் ஆகினார்கள்.
***
விக்கி தயங்கி தயங்கி வந்தவன்,
"சாரி குழலி தெரியாம"
"அத விடுங்க அத்தை... இன்னைக்கு என்ன சமைக்க" குழலி பவளமிடம் இயல்பாக பேச இருவரும் ராசியாகி போனார்கள்.
பவளம் சந்திராவிடம் தங்கிக்கொள்ள என சொன்னதுக்கு பவளமும் சரி விக்கியும் சரி அதனை ஏற்க மறுத்திருந்தார்கள், "நாள் முழுக்க என் பையன் கூட தானே இருக்கேன். எப்பவும் போல இருக்கலாம்" இரண்டு குடும்பமும் சந்தோஷமாக வலம் வர குழலி தான் ஒட்டும் ஒட்டாமல் சுத்திக்கொண்டிருந்தாள் வழக்கம் போல காலை எழுந்து களை பறிக்க தண்ணீ பாச்ச என வேலை செய்துகொண்டிருப்பாள். விக்கி எவ்வளவோ சொல்லி பார்த்துட்டான் அவள் காது கொடுத்து கேட்காமல் வேலை செய்துகொண்டு இருப்பாள். சமைக்க மட்டும் வீட்டுக்கு வருபவள் தூங்கும் நேரம் கூட சந்திரா வீட்டில் தான் விக்கி பேச அவள் ஒரு வாய்ப்பு கூட அளிக்கவில்லை.
விக்கி தவித்தான் வருந்தினான் அடுத்து என்ன செய்ய வீட்டு வேலை ஒருபக்கம் வேகமாக நடந்துகொண்டிருந்தது இரு குடும்பமும் கோவில் புறப்படுவது பத்தி பேசிக்கொண்டிருக்க, குழலி விக்கியை வீட்டை பார்த்துக்க சொல்லி விட்டுச் சென்றார்கள்.
சொந்தக்கார பையனை வர வைத்த விக்கி, வீட்டு வேலை பார்க்க சொல்லிவிட்டு வீட்டில் சமைத்துக்கொண்டிருக்கும் குழலியை தேடி போனான்.
"ஏய் அழகி...." அவனது குரல் கேட்டதும் அடுப்பை அணைத்துவிட்டு வெளியே போக இருந்தவளை இழுத்து பிடித்து.
"ப்ளீஸ் தப்பு தான் இனி இப்படி செய்ய மாட்டேன் டா" அவளது சிவந்திருந்த முகத்தை பார்த்தவன்... என் வெட்க சிவப்பழகி" என சொல்லம் கொஞ்சினான்.
அவனது கையை தட்டிவிட்டவள் வழக்கமான வேலை பார்க்க சென்றிருந்தாள்...
அவனுக்கு இது பெரிய விஷயம் தான் ஆனால் சும்மா இருந்தவள் மனதில் காதல் ஆசையை விதைத்து அவன் சென்றது தவறு தானே? எப்படி அப்படி விட்டு செல்ல முடிந்தது இவனை நம்பி எப்படி வாழ்வது என யோசித்தாள். இவனை நம்பி வந்தாள் தான் இல்லை என மறுக்க முடியாது, ஆனால் குழலிக்கு அவனில்லாமலும் வாழ முடியாது அவனுடனும் வாழ முடியாத இரு மனநிலை குழப்பமாக நகர்ந்தது இரவு சந்திரா வீட்டில் தூங்க சென்றிருக்க.
விக்கியும் பின் தொடர்ந்து கதவை தட்ட, ரொம்ப நேரம் தட்டியும் கதவு திறந்தபாடில்லை.
"சும்மா தூங்க கூட விடாம என்னவாம் இப்ப இவருக்கு" திரும்பி படுத்துக்கொண்டாள்.
"குழலி ப்ளீஸ் மா மிஸ்சிங் யூ பேட்லி, வான்ட் டு ஹக் யூ ப்ளீஸ் குழலி சாரி எனக்கு மன்னிப்பே இல்லையா?" கதவில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, "குழலி... ஐ லவ் யூ, உன்னை ரொம்ப மிஸ் செஞ்சேன்... சரியா தூங்கி எவ்வளவு நாள் ஆச்சி தெரியுமா. நீ வந்த அப்புறம் தான் எனக்கு நிம்மதியான தூக்கமே வந்தது"
"நடிப்பு நடிப்பு, பிரண்ட் கல்யாணத்தப்போ பார்க்கனுமே மூஞ்சில எவ்வளவு சிரிப்பு கலர் கூடி ஆள் மாறி வேற லெவல்ல இருந்துட்டு தூக்கம் வரலை அது வரலைன்னு இங்க வந்து பாவலா காட்ட வேண்டியது" குழலி முணுமுணுக்க.
"குழலி அது வந்து என்னை அப்படி பார்த்தா கோபத்தில் என்னை மறந்துட்டு வேற ஒருத்தரை கல்யாணம் செஞ்சிப்பன்னு தான் சொன்னேன்" அவன் தன் விளக்கம் கொடுக்க,
"பெரிய தாராள பிரபு கல்யாணம் கட்டிக்க முடியாதவனுக்கு என்ன டேஸ்க்கு லவ் சொல்லி மனசை கெடுக்கனும்"
"புரிஞ்சிக்கோ டா டார்லிங் என் அழகி..." அவளுக்கும் புரிய தான் செய்தது ஆனால் கோபம் இருந்தது அவன் மீது.
"குழலி ப்ளீஸ் ரொம்ப குளிருது... காத்து ஹெவியா வருது... இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வேற வரப் போகுது குழலி. எனக்கு மழை சேராது உனக்கு தெரியுமில்ல, கோல்ட் வந்தா ஹாஸ்பிட்டல்ல தான் ஒரு வாரம் குடி இருக்கனும்" குழலி ஜன்னல் வழியே பார்க்க மழை தூரல் தூவத் துவங்கியது.
"இங்க எதுக்கு இருக்க உன் வீட்டுக்கு போ"
"என் வீட்டுக்கு தான் வந்து இருக்கேன்... கதவை திற குழலி" குளிரில் அவனது குரல் குழைவாக வர.
"இப்ப மட்டும் நீ வரலை நான் மழையில் நனையப் போறேன்" என ஜன்னல் நேராக வந்து நின்றவன், "என் பொண்டாட்டிக்கு என் மேல பாசமே இல்லை, திமிரெடுத்தவ.. இந்த அநியாத்தை கேட்க ஆளில்லையா" என அடிக்கும் புயல் மழையில் கத்திக்கொண்டிருக்க.
"இவனை வச்சிட்டு..." குழலி கதவை திறக்க வேகமாக ஓடிவந்து அவளை இடித்துக்கொண்டு உள்ளே சென்றிருந்தான்.
"சரியான பிராடு" குழலி மெத்தையில் படுத்துக்கொள்ள, அலமாரியில் இருந்த வேட்டியை எடுத்து கட்டிக்கொண்டவன் துண்டை எடுத்து தலையை துவட்டிக்கொண்டே மெத்தையில் உட்கார்ந்தான்.
"கீழ படுத்துக்கோ" விரைப்பாக குழலியிடமிருந்து பதில் வர.
"குழலி என்ன செஞ்சா கோபம் போகும் சொல்லு"
"என் தூக்கத்தை டிஸ்டர்ப் செய்யாதே" குழலி தூங்க துவங்கிவிட, அவளை தொந்தரவு தராமல் விக்கி ஒரு ஓரமாக படுத்துக்கொண்டான்.
காலையில் குழலி எழுந்திரிக்கும் முன் சாணி போட்டு அலங்கோலமாக கோலத்தை போட்டவன் சமையல் முடித்து கையில் பாலோடு வந்து எழுபினான்.
"அத்தை இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே"
"ஏய் இப்படி தான் என் அம்மாவை ஏமாத்திட்டு இருக்க எழுந்திடு பல் விளக்கிட்டு வா பால் குடிச்சிட்டு சாப்பிடலாம்" குழலி பிரஸ் எடுத்துக்கொண்டு வெளியே போக, அவளுக்கு மூஞ்சி கழுவ தண்ணி எடுத்து கொடுப்பது அதனை தட்டிவிட்டு வாலியில் மூஞ்சி கழுவ.
அவள் முகம் கழுவி முடித்ததும் துண்டு கொடுப்பது, "சும்மா டிஸ்டர்ப் செய்யாத போ"
"சரி சரி பால் குடி"
"ம்க்கும்..." வேண்டா வெறுப்பாக பாலை எடுத்து குடித்தவளை குடிக்க விடாமல், "பால் நல்லா டேஸ்டா இருக்கா சுக்கு பாதாம் போட்டு இருக்கேன்"
"ச்சை..." பாதி பாலை அப்படியே வைத்துவிட்டாள்.
"தேக் யூ என்மேல எவ்வளவு பாசம் எனக்காக பால் மிச்சம் வச்சி இருக்க" எடுத்து குடித்தவன் சப்புக்கொட்டி குடித்தான், "ப்பா என்னா டேஸ்ட்டு" அப்படியே சாப்பிட துவங்க அதை வச்சிக்கோ இதை வச்சிக்கோ என அவளை ஒரு வழி படுத்தி இருந்தான்.
குளிக்க அந்த வீட்டுக்கு குழலி போக நூல் பிடித்தவாறு விக்கி பின் தொடர்ந்தான்.
"குழலி இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி குளி இப்ப தானே சாப்பிட்ட"
"உன்னோட என்ன ரோதனையா போச்சி மெத்தையில் துணியை தூக்கி அடித்தவள் வெளியே கோபமாக வர,
"குழலி ப்ளீஸ் உன்னை எப்படி சமாதானப் படுத்த தெரியலை... என்ன செய்யனும் சொல்லு... செய்யுறேன்"
"என்னை தொல்லை செய்யாம செத்து போ..." குழலி கத்த வழியில் ஒரு ஆக்சிடன்ட் கோவிலுக்கு போனவர்கள் பாதியில் திரும்பி வந்துவிட்டனர் அனைவரும் குழலியை அதிர்ச்சியாக பார்க்க.
"சரி நான் செத்துப்போறேன்" விக்கி வேகமாக ஓடி அருகில் இருந்த கிணத்தில் தாவி குதித்திருந்தான்.
"விக்கி...." கிணற்றை நோக்கி வேகமாக ஓடிச் சென்று கத்தத் துவங்கி இருந்தாள்.
"எனக்கு கோபம் எல்லாம் இல்ல விக்கி வா..." என உட்கார்ந்து கிணற்றை பார்த்து கதறிக்கொண்டிருந்தாள். குழலி உயிர் பிரிந்தது போல உணர்ந்தாள்.
"ஏய் சங்குமா என்னாச்சி" மூக்கை உறிஞ்சிகொண்டே, "இன்னொரு முறை சங்கு கிங்கு சொன்னிங்க சங்கை மிதிச்சிடுவேன்... ஜாக்கரதை" கண்களை துடைத்துக்கொண்டே சங்கவி சொல்ல.
"சரி தாயே சொல்லலை விடு, எதுக்கிந்த அழுகை"
"நான் சரியான முட்டாள் உங்க காதலையும் புரிஞ்சிக்கலை அத்தையையும் புரிஞ்சிக்கலை... அதான் இப்ப புரிஞ்சிக்கிட்டையே செல்லம்"
"எங்க புரிஞ்சிக்கிட்டேன்... ரத்தக்காட்டேரி போல உங்க உயிரை தான் வார்த்தையால் உறிஞ்சி.. அக்கா கூட எல்லாம் சேர்த்து வைத்து பேசி... உங்களுக்கு வலிச்சி இருக்குமில்ல" எட்டி வேந்தனின் கன்னத்தை வருடிவிட.
"இங்க வலிக்கலை இங்க தான் வலிச்சது" சங்கவி கரங்களை பிடித்து வேந்தன் நெஞ்சோடு சேர்த்து அழுத்தி பிடிக்க.
"சாரி..." ஏங்கோ பார்த்து சங்கவி சொல்ல அவளது பார்வையை தன் புறம் திருப்ப அவளது கையை செல்லமாக கிள்ள, "இஷ்ஷ்..." அவனது ஊடுருவும் பார்வையை பார்த்து பெண்ணவளுக்கு வேர்க்கத் துவங்கியது.
"ஓய் எதுக்கு வேர்க்குது உனக்கு?"
"தெரியலையே..."
"என் ராங்கி பொண்டாட்டிக்கு என்னாச்சி, இப்படி பயந்தாங்கோலியா இருக்கா"
"நானா... நானா பயந்தாங்கோலி" அவளது கண்ணீரை துடைத்துவிட்டவன், "இனி அழுதா இப்படி கடிச்சி வச்சிடுவேன்" அவளது கன்னத்தை அழுத்தி கடித்திருந்தான் வேந்தன். "சரியான பைத்தியம் எதுக்கு கடிச்ச?" அவனது தலைமுடியை பிடித்து இழுத்து ஒரு வழி செய்திருந்தாள்.
"ஏய் சண்டையை நாளைக்கு துவங்கிக்கலாம், இப்ப வா லவ் பண்ணலாம்"
"உன் பார்வையே சரியில்லை விடு நான் போறேன்" சங்கவி ஓட பார்க்க குண்டுக்கட்டாக தூக்கி வந்தவன் மெத்தையில் தன்னோடு சரித்துக்கொண்டு, "இனி எட்டு மணிக்குமேல ஒன்லி காதல் பாடம் தான் புரியுதா?" அதன் பிறகு வேந்தன் பேசவிட்டால் தானே... இருவரும் மாறிமாறி தக்களது காதலை வெளிபடுத்தத் துவங்தி இருந்தார்கள். இங்கு ஒரு ஜோடி ஹனிமூன் கொண்டாடிக்கொண்டிருக்க,
மலர் கொடி நிலையோ பரிதாபமோ பரிதாபம், கணவன் வேலைக்கு சென்றதும் அவன் தாயை வைத்து செய்ய நினைத்தவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவனது உயர் அதிகாரியிடம் சண்டையிட்டு வொர்க் பிரம் ஹோம் வாங்கியவன் குழந்தையை மலர் கொடி கையில் கொடுக்கவே இல்லை, அனைத்து வீட்டு வேலைகளும் கொடுத்து தியாகு அவளை ஒரு வழி செய்திருந்தான்.
அவளுக்கு தியாகு விட்டால் போதும் என்றானது... ஒரு வாரத்தில் ரொம்பவே வெயிட் குறைந்திருந்தாள். மாமியாருக்கே பாவமாக இருக்க மகனிடம் சென்று, "தியாகு இதென்ன? எல்லாம் தப்பு பாவமா இருக்கு அந்த பெண்ணை பார்த்தா"
"அம்மா... அவ ஆடுன ஆட்டம் உங்களுக்கு தெரியலை இனியும் இவளை அப்படியே விட்டா என் மக வாழ்க்கையை கேள்வி குறியா ஆக்கிடுவா, நீங்க அமைதியா இருங்க" தாயை அடக்கியிருந்தான்.
தியாகு அவளை திருத்த செய்த ஒவ்வொரு காரியமும் மலர்கொடியை இன்னும் வஞ்சம் மிகுந்தவளாக மாற்றி இருந்தது. அவளது அனைத்து கோபமும் குழலி மீதுதான் சென்றது. அவளை பழிவாங்க காத்திருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். தியாகுவும் அவளை யோசிக்கவிடாமல் நாள் முழுவதும் எதாவது வேலைக்கு ஏவிக்கொண்டே இருப்பான்... செய்த வேலைக்கு ஆயிரம் குறை சொல்லுவான். அவளுக்கு பிடிக்காத உணவு வகையை தேர்ந்தெடுத்து சமைக்க சொல்வான்... அதை நிறைய சாப்பிடவும் வைப்பான். குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கும்போது மட்டுமே கொடியிடம் கொடுக்கப்பட்டது. மற்ற நேரத்தில் தியாகு அம்மா பேத்தியை நன்றாக ஊர் சுற்றி காட்டுவார் சிறுமியாக மாறி குழந்தையிடம் விளையாடுவார் மாலை நேரத்தில் தாய் மகன் பேத்தி மூவரும் வெளியே செல்வது, முற்றத்தில் அமர்ந்து சிரித்து பேசுவது... கொடிக்கு பத்திக்கொண்டு வரும்.
இப்படியே நாட்கள் நகர, தியாகு வேலை செய்ய சொல்லும்போது மட்டுமே பேசுவான், மற்ற நேரங்களில் பேசவே மாட்டான், எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்டனை கொடுத்துக்கொண்டிருந்தான்.
அவனது பாராமுகம் அவளை வதைத்தது என்று தான் சொல்லவேண்டும். இரவு குளித்துவிட்டு வந்தவன் அருகில் வந்து நின்ற கொடியை விசித்திரமாக பார்க்க, "சாரி"
"ஓ... மகாராணிக்கு சாரி எல்லாம் கேட்க தெரியுமா?"
"இனி அப்படி செய்ய மாட்டேன், உங்க அம்மாவை நல்லா பாத்துக்கிறேன்"
"ஓ... இதை நம்ப சொல்லுறியா என்ன"
"என்னை நம்பலையா நீங்க?"
"இல்ல இந்த ஜென்மத்தில் நம்ப மாட்டேன்" தியாகு இரவு உடை அணிந்துகொண்டு மகளுடன் மெத்தைக்கு நடுவில் படுக்க. கொடிக்கான இடம் அங்கில்லை நாள் முழுவதும் வேலை செய்ததில் அவளுக்கு கலைப்பு வேறு தரையில் தலைக்கு கை வைத்து படுத்துக்கொண்டாள், கண்களில் இருந்து ஆறாக ஓடியது அவளது கண்ணீர்... இந்த நிலையில் கூட குழலியை எதாவது செய்யனும் என்று மனதில் செல்லிக்கொண்டே இருப்பாள். இவள் இந்த ஜென்மத்தில் திருந்தப் போவதில்லை
***
குழலிக்காக காத்துக்கொண்டிருந்தவன் பொறுமை இழந்து சந்திரா வீட்டை நோக்கி போனான்.
"மா..."
"விக்கி வாபா" சந்தியா பாசத்தோடு அழைக்க, தாய் மகன் தங்கை பேசத் துவங்க, ஓரமாக அமர்ந்திருந்த குழலி அப்படியே படுத்து தூங்கத் துவங்கி இருந்தாள்.
"மா பெட்சீட் கொடுங்க குழலி தூங்கிட்டா போல"
"குழலி எந்திரி வீட்டுக்கு போய் தூங்கு"
"இங்கவே இருக்கட்டும் மா இதும் அவ வீடு தானே... உங்க கிட்ட ஒன்னு சொல்ல தான் வந்தேன்"
"அப்படியா அண்ணா நான் கூட அண்ணியை தேடி வந்துட்டிங்கன்னு நினைச்சேன்" அரசி அண்ணனை கலாய்க்க அவனும் சலிக்காமல் " அப்படியும் வச்சிக்கலாம்"
"சரி சரி... "
"என்ன வெளியே வண்டி சத்தம் கேட்குது...
"அது தான்மா சொல்ல வந்தேன்... வீடு கட்ட நாளைக்கு துவங்குறோம்"
சந்திரா தயக்கமாக பார்க்க, அவர் கையை அழுத்தி பிடித்த விக்கி, "இல்ல மா கவலை படாதீங்க, என்னோட சேவீங்க்ஸ் வச்சிதான் கட்டப்போறேன்" சந்திரா முகம் தெளிவில்லாமல் இருப்பதை பார்த்த விக்கி, அவரது கன்னம் கிள்ளி சமாதானம் செய்யத் தூங்கும் குழலியை பார்த்துவிட்டு சென்றிருந்தான் அடுத்த நாள் வீட்டு வேலை துவங்க ஒருவாரம் விக்கி பிசியாகவே செல்ல குழலியை பார்வையால் மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது. பேச முயற்சி செய்தாலும் முடியவில்லை. பவளமும் குழலியும் ராசியாகி போக... இடையில் ரங்கன் பவளத்தை சமாதானப் படுத்த படாத பாடுபட்டார். அவர் பொய் சொன்னது பவளத்தால் ஏற்க முடியவில்லை, கூடவே மகனுக்காகவும் அழுது தீர்த்தார். நிறைய நேரம் அழுது முடித்தவர், பவளமும் ரங்கனை புரிந்துகொண்டார், ஒரு வழியாக சமாதானம் ஆகினார்கள்.
***
விக்கி தயங்கி தயங்கி வந்தவன்,
"சாரி குழலி தெரியாம"
"அத விடுங்க அத்தை... இன்னைக்கு என்ன சமைக்க" குழலி பவளமிடம் இயல்பாக பேச இருவரும் ராசியாகி போனார்கள்.
பவளம் சந்திராவிடம் தங்கிக்கொள்ள என சொன்னதுக்கு பவளமும் சரி விக்கியும் சரி அதனை ஏற்க மறுத்திருந்தார்கள், "நாள் முழுக்க என் பையன் கூட தானே இருக்கேன். எப்பவும் போல இருக்கலாம்" இரண்டு குடும்பமும் சந்தோஷமாக வலம் வர குழலி தான் ஒட்டும் ஒட்டாமல் சுத்திக்கொண்டிருந்தாள் வழக்கம் போல காலை எழுந்து களை பறிக்க தண்ணீ பாச்ச என வேலை செய்துகொண்டிருப்பாள். விக்கி எவ்வளவோ சொல்லி பார்த்துட்டான் அவள் காது கொடுத்து கேட்காமல் வேலை செய்துகொண்டு இருப்பாள். சமைக்க மட்டும் வீட்டுக்கு வருபவள் தூங்கும் நேரம் கூட சந்திரா வீட்டில் தான் விக்கி பேச அவள் ஒரு வாய்ப்பு கூட அளிக்கவில்லை.
விக்கி தவித்தான் வருந்தினான் அடுத்து என்ன செய்ய வீட்டு வேலை ஒருபக்கம் வேகமாக நடந்துகொண்டிருந்தது இரு குடும்பமும் கோவில் புறப்படுவது பத்தி பேசிக்கொண்டிருக்க, குழலி விக்கியை வீட்டை பார்த்துக்க சொல்லி விட்டுச் சென்றார்கள்.
சொந்தக்கார பையனை வர வைத்த விக்கி, வீட்டு வேலை பார்க்க சொல்லிவிட்டு வீட்டில் சமைத்துக்கொண்டிருக்கும் குழலியை தேடி போனான்.
"ஏய் அழகி...." அவனது குரல் கேட்டதும் அடுப்பை அணைத்துவிட்டு வெளியே போக இருந்தவளை இழுத்து பிடித்து.
"ப்ளீஸ் தப்பு தான் இனி இப்படி செய்ய மாட்டேன் டா" அவளது சிவந்திருந்த முகத்தை பார்த்தவன்... என் வெட்க சிவப்பழகி" என சொல்லம் கொஞ்சினான்.
அவனது கையை தட்டிவிட்டவள் வழக்கமான வேலை பார்க்க சென்றிருந்தாள்...
அவனுக்கு இது பெரிய விஷயம் தான் ஆனால் சும்மா இருந்தவள் மனதில் காதல் ஆசையை விதைத்து அவன் சென்றது தவறு தானே? எப்படி அப்படி விட்டு செல்ல முடிந்தது இவனை நம்பி எப்படி வாழ்வது என யோசித்தாள். இவனை நம்பி வந்தாள் தான் இல்லை என மறுக்க முடியாது, ஆனால் குழலிக்கு அவனில்லாமலும் வாழ முடியாது அவனுடனும் வாழ முடியாத இரு மனநிலை குழப்பமாக நகர்ந்தது இரவு சந்திரா வீட்டில் தூங்க சென்றிருக்க.
விக்கியும் பின் தொடர்ந்து கதவை தட்ட, ரொம்ப நேரம் தட்டியும் கதவு திறந்தபாடில்லை.
"சும்மா தூங்க கூட விடாம என்னவாம் இப்ப இவருக்கு" திரும்பி படுத்துக்கொண்டாள்.
"குழலி ப்ளீஸ் மா மிஸ்சிங் யூ பேட்லி, வான்ட் டு ஹக் யூ ப்ளீஸ் குழலி சாரி எனக்கு மன்னிப்பே இல்லையா?" கதவில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, "குழலி... ஐ லவ் யூ, உன்னை ரொம்ப மிஸ் செஞ்சேன்... சரியா தூங்கி எவ்வளவு நாள் ஆச்சி தெரியுமா. நீ வந்த அப்புறம் தான் எனக்கு நிம்மதியான தூக்கமே வந்தது"
"நடிப்பு நடிப்பு, பிரண்ட் கல்யாணத்தப்போ பார்க்கனுமே மூஞ்சில எவ்வளவு சிரிப்பு கலர் கூடி ஆள் மாறி வேற லெவல்ல இருந்துட்டு தூக்கம் வரலை அது வரலைன்னு இங்க வந்து பாவலா காட்ட வேண்டியது" குழலி முணுமுணுக்க.
"குழலி அது வந்து என்னை அப்படி பார்த்தா கோபத்தில் என்னை மறந்துட்டு வேற ஒருத்தரை கல்யாணம் செஞ்சிப்பன்னு தான் சொன்னேன்" அவன் தன் விளக்கம் கொடுக்க,
"பெரிய தாராள பிரபு கல்யாணம் கட்டிக்க முடியாதவனுக்கு என்ன டேஸ்க்கு லவ் சொல்லி மனசை கெடுக்கனும்"
"புரிஞ்சிக்கோ டா டார்லிங் என் அழகி..." அவளுக்கும் புரிய தான் செய்தது ஆனால் கோபம் இருந்தது அவன் மீது.
"குழலி ப்ளீஸ் ரொம்ப குளிருது... காத்து ஹெவியா வருது... இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வேற வரப் போகுது குழலி. எனக்கு மழை சேராது உனக்கு தெரியுமில்ல, கோல்ட் வந்தா ஹாஸ்பிட்டல்ல தான் ஒரு வாரம் குடி இருக்கனும்" குழலி ஜன்னல் வழியே பார்க்க மழை தூரல் தூவத் துவங்கியது.
"இங்க எதுக்கு இருக்க உன் வீட்டுக்கு போ"
"என் வீட்டுக்கு தான் வந்து இருக்கேன்... கதவை திற குழலி" குளிரில் அவனது குரல் குழைவாக வர.
"இப்ப மட்டும் நீ வரலை நான் மழையில் நனையப் போறேன்" என ஜன்னல் நேராக வந்து நின்றவன், "என் பொண்டாட்டிக்கு என் மேல பாசமே இல்லை, திமிரெடுத்தவ.. இந்த அநியாத்தை கேட்க ஆளில்லையா" என அடிக்கும் புயல் மழையில் கத்திக்கொண்டிருக்க.
"இவனை வச்சிட்டு..." குழலி கதவை திறக்க வேகமாக ஓடிவந்து அவளை இடித்துக்கொண்டு உள்ளே சென்றிருந்தான்.
"சரியான பிராடு" குழலி மெத்தையில் படுத்துக்கொள்ள, அலமாரியில் இருந்த வேட்டியை எடுத்து கட்டிக்கொண்டவன் துண்டை எடுத்து தலையை துவட்டிக்கொண்டே மெத்தையில் உட்கார்ந்தான்.
"கீழ படுத்துக்கோ" விரைப்பாக குழலியிடமிருந்து பதில் வர.
"குழலி என்ன செஞ்சா கோபம் போகும் சொல்லு"
"என் தூக்கத்தை டிஸ்டர்ப் செய்யாதே" குழலி தூங்க துவங்கிவிட, அவளை தொந்தரவு தராமல் விக்கி ஒரு ஓரமாக படுத்துக்கொண்டான்.
காலையில் குழலி எழுந்திரிக்கும் முன் சாணி போட்டு அலங்கோலமாக கோலத்தை போட்டவன் சமையல் முடித்து கையில் பாலோடு வந்து எழுபினான்.
"அத்தை இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே"
"ஏய் இப்படி தான் என் அம்மாவை ஏமாத்திட்டு இருக்க எழுந்திடு பல் விளக்கிட்டு வா பால் குடிச்சிட்டு சாப்பிடலாம்" குழலி பிரஸ் எடுத்துக்கொண்டு வெளியே போக, அவளுக்கு மூஞ்சி கழுவ தண்ணி எடுத்து கொடுப்பது அதனை தட்டிவிட்டு வாலியில் மூஞ்சி கழுவ.
அவள் முகம் கழுவி முடித்ததும் துண்டு கொடுப்பது, "சும்மா டிஸ்டர்ப் செய்யாத போ"
"சரி சரி பால் குடி"
"ம்க்கும்..." வேண்டா வெறுப்பாக பாலை எடுத்து குடித்தவளை குடிக்க விடாமல், "பால் நல்லா டேஸ்டா இருக்கா சுக்கு பாதாம் போட்டு இருக்கேன்"
"ச்சை..." பாதி பாலை அப்படியே வைத்துவிட்டாள்.
"தேக் யூ என்மேல எவ்வளவு பாசம் எனக்காக பால் மிச்சம் வச்சி இருக்க" எடுத்து குடித்தவன் சப்புக்கொட்டி குடித்தான், "ப்பா என்னா டேஸ்ட்டு" அப்படியே சாப்பிட துவங்க அதை வச்சிக்கோ இதை வச்சிக்கோ என அவளை ஒரு வழி படுத்தி இருந்தான்.
குளிக்க அந்த வீட்டுக்கு குழலி போக நூல் பிடித்தவாறு விக்கி பின் தொடர்ந்தான்.
"குழலி இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி குளி இப்ப தானே சாப்பிட்ட"
"உன்னோட என்ன ரோதனையா போச்சி மெத்தையில் துணியை தூக்கி அடித்தவள் வெளியே கோபமாக வர,
"குழலி ப்ளீஸ் உன்னை எப்படி சமாதானப் படுத்த தெரியலை... என்ன செய்யனும் சொல்லு... செய்யுறேன்"
"என்னை தொல்லை செய்யாம செத்து போ..." குழலி கத்த வழியில் ஒரு ஆக்சிடன்ட் கோவிலுக்கு போனவர்கள் பாதியில் திரும்பி வந்துவிட்டனர் அனைவரும் குழலியை அதிர்ச்சியாக பார்க்க.
"சரி நான் செத்துப்போறேன்" விக்கி வேகமாக ஓடி அருகில் இருந்த கிணத்தில் தாவி குதித்திருந்தான்.
"விக்கி...." கிணற்றை நோக்கி வேகமாக ஓடிச் சென்று கத்தத் துவங்கி இருந்தாள்.
"எனக்கு கோபம் எல்லாம் இல்ல விக்கி வா..." என உட்கார்ந்து கிணற்றை பார்த்து கதறிக்கொண்டிருந்தாள். குழலி உயிர் பிரிந்தது போல உணர்ந்தாள்.