அத்தியாயம் : 14
உறவுகள் வலுப்பெற இரண்டு விஷயங்களை நிச்சயம் செய்ய வேண்டும். ஒன்று அன்பை வெளிப்படுத்த வேண்டும், இன்னொன்று அன்பை உணரவைக்க வேண்டும்.
ஜெய் இரண்டிற்கும் அப்பாற்பட்டவன் ஆகிற்றே. அவனுக்கு தென்னை மரம் டைரக்டாக கள்ளாக காய்ச்சினால் வேலை மிச்சம் என்று எண்ணுபவன்.
பூனை போல் தன் பொரிஉருண்டையை சுற்றியும் வந்தாச்சு, புலி போல் பாய்ந்து குதரவும் செய்தாச்சு, சுண்டெலி எதற்கும் மசிய மறுக்க, கிறுக்கு பிடித்தது கிராதகனுக்கு.
ஒருவேளை விலகி இருந்தால் நெருங்கி வருவாளா? அந்த முயற்சியில் தான் ஆள் இப்போது இறங்கி இருக்கிறான்.
வீணாக அவளிடம் வம்பு செய்வதில்லை. அவளுக்கு அவன் எப்போதும் புரியாத புதிர் தானே! எப்போது என்ன செய்வான்? என்ன செய்தால் தன் மீது இரக்கம் வந்து அனுப்பி வைப்பான் என்ற எண்ணம் தான் அவளுக்கு.
கணவன் மனைவி உறவை அவனும் புரிந்து கொள்ளவில்லை, அவளும் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏதோ ஒரு கட்டாயத்தில் அவள் இங்கிருக்க, அவனும் தேவைக்காக அவளை பிடித்து வைத்திருக்கிறான்.
இப்படி பட்டும் படாமல் எந்நேரமும் பதட்டமான சூழ்நிலையிலேயே சுடரின் நாட்கள் நகர, அவள் திருமதி. ஜெய் கிருஷ்ணாவாகி ஒரு மாதமும் கடந்திருந்தது.
அன்று சுடரின் கிராமத்து பெரிய தலைகள் சிலர் ஜெய் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.
ஊர் கோவிலில் திருவிழா… மருமகன் என்று முறையாக அவனுக்கு அழைப்பு விடுக்க, அவனும் வந்தவர்களை தேனொழுக பேசி உயர்தர உபசரிப்பு தான் வழங்கினான்.
வார்த்தைக்கு வார்த்தை என் பொண்டாட்டி என்று சுடரையும் தலைமேல் தூக்கி வைத்து தாங்க, வந்திருந்த பெரியவர்களுக்கு எல்லாம் மனம் குளிர்ந்து தான் போனது.
'அப்பன் ஆத்தா இல்லா பிள்ளையை எப்படி கரை சேர்க்க போறோம்னு நினைச்சுட்டு இருந்தோம், எங்க கவலை எல்லாம் காணா போச்சு' என்று அத்தனை பூரிப்பு அவர்களுக்கு.
"உங்க கல்யாணத்துக்கு பிறகு வர்ற முதல் திருவிழா, கண்டிப்பா குடும்பத்தோட வரணும் மாப்பிள்ளை. எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமை எங்களுக்கும் இருக்கு." என்று அவர்கள் அழைக்க,
"கண்டிப்பா மாமா… நம்ம ஊரு திருவிழா நான் வராம இருப்பேனா?" என்று சொன்னவன், "குட்டிமா… போய் பணம் எடுத்துட்டு வா" என்று மனைவியிடம் சொல்ல,
அவன் உரிமையான அழைப்பிலும், அன்பான உத்தரவிலும் தடுமாறி நின்றது என்னவோ சுடர் தான்.
என்ன பணம்? என்று அவள் புரியாமல் விழித்துக் கொண்டு நிற்க,
"நம்ம ஊர் கோவிலுக்கு நம்ம பங்குக்கு ஏதாவது செய்யணும் தானே" என்று பக்கா நல்லவன் வேசம் போட்டவனை பாவம் அந்த வெள்ளந்தி மனிதர்கள் நம்பி தான் தொலைத்தார்கள்.
"அதெல்லாம் எதுவும் வேணாம் மாப்பிள்ளை. நீங்க வந்த மட்டும் போதும்" என்று மறுத்தவர்களிடம், "நீங்க என்னை மதிச்சு கூப்பிட்ட அதே உரிமையில தான் நானும் தர்றேன். வேணாம்னு சொல்ல கூடாது" என்றவன், இன்னமும் திரு திறுவென முழித்துக் கொண்டு நின்ற மனைவியிடம், "நீ என்ன மா இன்னும் இங்க நிற்கிற டேபிள்ல சாவி இருக்கும், லாக்கர்ல இருந்து பணம் எடுத்துட்டு வா" என்று அனுப்பி வைத்தான்.
அவளும் ஊரார் முன்பு தன் நிலையை வெளிப்படுத்த எண்ணாது சரி என்று தலையை ஆட்டி விட்டே மெதுவாக மாடியேறினால்.
அறைக்கு வந்து அவன் சொன்னது போல் சாவி எடுத்து லாக்கரையும் திறந்தாள். எவ்வளவு பணம் வைத்திருக்கிறான்? அவளே ஒரு நிமிடம் கண்களை விரித்து தான் அவைகளை பார்த்தாள்.
மறுநிமிடமே 'ஊர எத்தி சேர்த்து வச்சிருக்கான்' என்று ஜெய்யை திட்டியவள், எவ்வளவு பணம் எடுத்துக் கொடுப்பது? என்று குழம்பி தான் போனாள்.
கை நிறைய அள்ளி கொடுத்தால்? எவன் அப்பன் வீட்டு பணத்தை எவனுக்கு கொடுக்கிறது? என்று திட்டுவானோ என்ற பயம்,
அத்தனை கட்டுகளில் ஒன்றை மட்டும் எடுத்தவள், அதிலிருந்து இரண்டு ஐந்நூறு நோட்டை மட்டும் உருவிக் கொண்டு வந்து ஜெய் கையில் கொடுத்தாள்.
"என்னமா நீ? சாமிக்கு செய்ற விசயத்துல கஞ்சம் பிடிக்கிற? நம்ம ஊர் கோவிலுக்கு தானே செய்றோம்" என்று எண்ணி கூட பாராது மினி சூட்கேஸ் நிறைய பணத்தை அள்ளி கொடுத்தவன் பெரிய தலைகள் மனதில் உயர்ந்து நிற்க,
அவன் பணம் என்று உரிமையில்லாது அளந்து கொடுத்தவள் ஒரே நாளில் அகல பாதாளத்தில் தான் விழுந்தாள்.
'மாப்பிள்ளைக்கு இருக்க மனசு நாம தூக்கி வளர்த்த பிள்ளைக்கு இல்லையே. அவர் கொடுக்க நினைச்சாலும், இவ கொடுக்க விட மாட்ட போல. இந்த புள்ளை இப்படி மாறி நிற்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கல" என்று ஊர் வந்து சேரும் வரை சுடர் தான் அவர்கள் வாய்க்கு எல்லுருண்டையாக அரைப்பட்டாள்.
இதற்கு நடுவில் கலாவதி வேறு மகன் கர்ணனாக வாரி வழங்குவதை பார்த்து புல்லரித்து தான் போனார்.
(இருக்கிற டிக்கெட்ல இந்த அம்மா தான் ரொம்ப பாவம். அவன் என்ன பண்ணினாலும் நம்பி தொலையுது. நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து ஏமாந்து போனால் பெரிய வலி மட்டும் தானே மிஞ்சும்.)
இப்போதெல்லாம் ஜெய்யின் நடவடிக்கைகளை சுடரும் அவதானித்து கொண்டு தான் வருகிறாள். அவள் அவனை கண்டு அஞ்சினாள் அவள் அருகிலேயே அவன் வருவது இல்லை. சேட்டைகள் வேறு குறைந்து இருந்தது.
ஆனால் இரவு கட்டி கொண்டு தூங்க மட்டும் மனைவி வேண்டும். அதற்கு மட்டும் அவனிடம் இருந்து சுதந்திரம் கிடைக்கவில்லை.
மன்மதராசாவா இருந்தவனை மங்குளிராசாவா மாத்தி விட்டுருச்சு.
இன்று காலை நடந்த சம்பவத்தை தான் மனதில் அலசியபடி துணிகளை மடித்து கொண்டிருந்தாள் சுடர்.
'திடீர்னு எதுக்கு ஊர்க்காரங்களுக்கு அவ்வளவு பணம் கொடுக்கிறார்? ஏதாவது சதி திட்டமா இருக்குமா?
என்கிட்ட கூட முன்ன போல காட்டுத்தனமாக நடந்துக்கது இல்ல. ஒருவேளை திருந்திட்டாரோ? இல்லையே அதுக்கு வாய்ப்பில்லையே' என்று அறிவு சுடராக அவள் யோசித்துக் கொண்டிருக்க,
உள்ளிருக்கும் பெண் மனமோ, 'ஏன் தப்பு பண்ற யாரும் திருந்தவே கூடாதா? ஒரு மனுசன் கெட்டது பண்ணா கேடு கெட்டவன்னு திட்ட வேண்டியது, நல்லது பண்ணா நடிக்கிறான்னு சந்தேகப்பட வேண்டியது.' என்று தன் பங்கிற்கு அவளை குழப்பி விட்டு உள்ளே சென்று ஒளிந்து கொண்டது.
அது சொன்னதையும் கேட்டு மொத்தமாக குழம்பி போன சுடர், தலையை பிடித்துக் கொண்டு லேப்டாப் டேபிள் முன் அமர்ந்திருந்த ஜெய்யையே சிறிது நேரம் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.
'என்னாச்சு? ஏதோ ஆள் டல்லா இருக்க போல இருக்கு?' என்று எண்ணிக் கொண்டே அவனை ஆராய, அவனுக்கு ஏதோ உடல் நிலை சரியில்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. அவளாக சென்று நலன் விசாரித்து நரபலியாக தயாரில்லை.
ஆனாலும் பெண் மனம் எதிரே ஒருவனின் அவஸ்தையை பார்த்துக் கொண்டு கண்டும் காணாமல் இருக்க மனமில்லாது, ஆடு தானாக தலையை கொண்டு விட்டது.
அவனை நோக்கி சென்றவள், சிறிது தள்ளியே நின்றுக் கொண்டு தலையை முன்னால் நீட்டி அவனை எட்டி பார்த்தபடி "சார்…" என்று மெதுவாக அழைக்க,
அவளை திரும்பி கூட பாராது, "ஏற்கனவே தலைவலி மண்டைய பொழக்குதுனு கடுப்புல இருக்கேன். வான்டடா வந்து வாங்கி கட்டிக்காத, ஓடிரு" என்று எச்சரிக்கை விடுத்தவனை பார்த்து, உள்ளுக்குள் அல்லு தான்.
இருந்தாலும் மனம் கேளாது, "ஸ்ட்ராங்கா காபி குடிச்சா சரியாகும். நான் போட்டு தரவா?" என்று கேட்டாள்.
திரும்பி அவளை பார்த்தவன், "சரி ரொம்ப ஆசை படுற போய் எடுத்துட்டு வா" என்று சொன்னதும், ஜெட் வேகத்தில் சுக்கு காபியோடு அவன் முன்னால் வந்து நின்றாள்.
'அந்த விஷயம் தவிர மத்த எல்லாத்துலயும் வேகம் தான்' என்று முணு முணுத்துக் கொண்டே அவள் நீட்டிய காபியை வாங்கி ஒரு மிடறு பருகியவன், "தூ…" என்று துப்பியே விட்டான்.
"என்ன எழவு டி இது?"
"சுக்கு காபி… சுக்கு மல்லி காபி குடிங்க அஞ்சே நிமிஷத்துல தலைவலி பறந்துடும்." என்று துள்ளாலாக கைகளை விரித்து சொன்னவளிடம்,
"நீயே குடி" என்று காபியை ஓரம் வைத்து விட்டு எழுந்து செல்ல இருந்தவனை, அமுக்கி பிடித்து உட்கார வைத்தவள்,
"குடிங்க" என்று அவளே அவன் வாய் அருகே கொண்டு செல்ல, அவள் நெருக்கம் கசக்குமா அவனுக்கு,
வேப்பங்காயில் கூட அமிர்தம் கடையும் வித்தகன், அவள் வாசம் நுகர்ந்தே சற்று முன் கசந்த காபியை உதட்டில் உறிஞ்சினான்.
சுடரோ கையில் எடுத்து கொடுக்க நினைத்து தான் நெருங்கியது, ஆனால் அவனோ பச்ச பிள்ளை போல பாசாங்கு காட்டி அவள் கையாலேயே குடித்தும் முடித்து விட்டான்.
"பார்த்து கப்பும் சேர்ந்து தொண்டைக்குள்ள போய்யிட போகுது" என்று தீர்ந்து போன கப்பில் அவன் காபியை உறிஞ்ச, கேலி செய்த மனைவியை முறைத்தான் ஜெய்.
"எங்க டி தலை வலி பறக்கல? என்னை ஏமாத்த பார்க்கிறியா?" என்று அவன் அடுத்த நிமிடமே நோய் குணமாகவில்லை என்று சீற,
அய்யோ! என்று ஆனது சுடருக்கு.
பேசாம தலைவலியோட சாகட்டும்னு விட்டிருக்க வேண்டியது. என்று மனதில் அவனுக்கு திட்டிக் கொண்டவள்,
"இருங்க வரேன்" என்று ஒரு கிண்ணத்தில் எண்ணையோடு வந்தாள்.
"இது என்ன?"
"எண்ணெய் ங்க… சில நேரம் உடம்பு ரொம்ப சூடா இருந்தா கூட இப்படி தலைவலியெல்லாம் வரும். கொஞ்சம் எண்ணெய் எடுத்து, தலைக்கு ஒரு குட்டி மசாஜ் பண்ணிவிட்டா எல்லாம் சரியாகிடும்" என்று ஆயுர்வேத மருத்துவம் சொன்ன மனைவியிடம்,
"ஹீட்ட தணிக்க இத விட சூப்பர் மெத்தட் ஒன்னு இருக்கு. அதுவேனா ட்ரை பண்ணலாமா?" என்று கேடி குறும்பு கண்களுடன் பிசியோதெரோபிக்கி தூண்டில் போட,
உஷாராகி கொண்டாள் அவன் ஆசை மனைவி.
ஹி… ஹி… இதையே டிரை பண்ணலாமே என்று சமாளிப்பாக சிரித்துக் கொண்டே சொன்னவள், எண்ணெய் யை கையில் எடுத்து சேரில் இருந்தவன் பின்னால் நின்று அவன் தலையில் தான் கை வைத்திருப்பாள்.
கேடி அவள் கையை பிடித்து முன்னால் தன் மடியில் அமர்த்திக் கொண்டவன், இப்போ தேச்சு விடு என்று அவள் இடையோடு கட்டிக் கொண்டு தோளில் முகம் புதைத்து தூங்கவே ஆரம்பித்து விட்டான்.
அவன் மடியில் அமர்ந்திருந்த சுடருக்கு ஊர் மேல போற பேயே என் மேல கொஞ்சம் வாயேன்! என்று அழைத்தது போல் ஆனது
அவன் பாரம் நெஞ்சை அழுத்த, அவன் உதடுகள் வேறு கழுத்தில் பட்டும் படாமலும் உரசிய படி அவளை அசௌகரியமாக்கி கொண்டிருந்தது.
விழிகளை தாழ்த்தி ஆறடி குழந்தைப் போல் தன் தோளில் தூங்கும் அரக்கனை பார்த்தாள்.
குறும்பு கண்கள் தன் குகைக்குள் ஓய்வு கொண்டிருக்க, அவளிடம் சில்மிஷம் செய்யும் சேட்டை பிடிச்ச விரல்கள் கூட பதிந்த தடம் மாறாது தான் அவள் இடையை சுற்றி இருந்தது.
பாவம்… நிஜமாவே முடியல போல இரக்கம் கொண்ட பெண் மனம், தன்னை சிறை வைத்திருக்கும் ராவணனுக்கே சேவகம் செய்தது.
மாங்கு மாங்கென ஜெய் தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்து விட்டவளுக்கும் தூக்கம் கண்ணை சொக்க, அவன் விட்டால் தானே எழுந்து செல்ல முடியும்.
சார்… என்னங்க… என்று அவனை எழுப்ப முயன்று தான் அழைத்தாள்.
அவள் உசுப்பலில் கண்களை கூட திறக்காது சட்டென்று அவளை கைகளில் தூக்கிக் கொண்டே எழுந்தவன், என்ன பண்றீங்க? இறக்கி விடுங்க என்ற அவள் பதட்டம் எதையும் காதில் கேட்காது கட்டிலில் கிடத்த,
ஆத்தே! என்று அவள் சுதாரித்து நகரும் முன் அவள் மீது படர்ந்திருந்தான்.
பாவம் பார்த்து கொஞ்சொண்டு எண்ணெய் தேச்சு விட்டது ஒரு குத்தமா? இப்படி என்னை எண்ணெயாக்குறீங்களே என்று அவன் மலைபோல் உடலுக்கு அடியே நசுங்கி கொண்டிருந்த அவன் மனைவி புலம்ப,
அதுவும் அவன் காதில் விழவில்லை.
புலம்பிக் கொண்டிருந்த இதழ்கள் இரண்டையும் தேன் மிட்டாய் போல் தன் அதரங்களுக்குள் அதக்கி சுவைக்க ஆரம்பித்து விட்டான்.
அவன் அதிரடி செயலில் அரண்டு போனவள், ஹ்ம்ம்… என்று முனங்கிக் கொண்டே, அவனிடம் இருந்து தப்பிக்க போராடிய படி, ஜெய்யின் புஜத்தில் அடித்து அவனை தள்ள முயன்றாள்.
சட்டென்று அவள் மீதிருந்து ஜெய் நிமிர, அவன் கவ்வி சுவைத்த அதரங்கள் இரண்டையும் அழுந்த துடைத்து கொண்டே, தன்னை விட்டு விட்டான் என்ற நிம்மதி பெருமூச் சில் நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் எண்ணங்கள் தவறு என்பதை அவன் செயலே தெளிவாக்கி கொண்டிருந்தது, அத்துடன் இன்று உன் கற்பிற்கு உத்திரவாதம் கிடையாது என்பதையும் நிரூபிக்கும் வகையில், ஒற்றை கையில் தலை வழியே தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டை கழட்டியவன், அவள் இமைக்கும் நொடிக்குள், அவள் உடையையும் நகட்டியிருந்தான்.
"ஆ ஆ… என்ன பண்றீங்க?" என்று அலரியவளை ஒரு பொருட்டாக கூட கருதாது, மீண்டும் அவள் மீது படர்ந்து, மங்கையில் கழுத்து வளைவில் முத்தம் பதித்து, மீண்டும் இதழ்களில் இன்ப கவி பாட ஆரம்பித்த தருணம் அது.
விட்டால் ஒரு அறை தன் பலம் மொத்தமும் திரட்டி.
பளார் என்று கன்னம் காய, அதன் பிறகே தூக்கத்தில் இருந்து விழித்தான் ஜெய்.
அவன் ஆசை மனைவி, ஆருயிர் அரக்கி அவன் அடியில் நசுங்கி கொண்டிருக்க, அவனோ மலைப்பாம்பாக அவளை சுருட்டி வைத்திருந்தான்.
அவள் ஆடை நழுவிய அங்கத்தை இவன் விழிகள் ஆராய, அவன் நெஞ்சில் கை வைத்து பலம் கொண்டு அவனை தள்ளி விட்டவள், அவசர அவசரமாக பெட் சீட்டை இழுத்து தன்னை முழுதாக மூடிக் கொண்டு நடுங்கியபடி, அவனை பார்த்து முறைத்தாள்.
அவளை புருவம் சுருக்கி பார்த்துக் கொண்டே யோசித்தவன்,
"என்னாச்சு?" என்று கேட்க,
"என்னாச்சா? கொஞ்சம் விட்டிருந்தா எல்லாம் முடிஞ்சு இருக்கு" என்று உதட்டை பிதுக்கி சொன்னவள், "நான் ஓகே சொன்ன பிறகு தான் எல்லாம் சொல்லிட்டு, இப்படி வந்து பாய்றீங்க" என்று நடுங்கிய உடலை போர்வைக்குள் புதைத்துக் கொண்டே, கண்ணீரோடு புகார் சொன்ன மனைவியை பார்த்து
அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
"ஓகே ஓகே… நான் வேணும்னு பண்ணல, ஏதோ தூக்க கலக்கத்தில நடந்துடுச்சு… தூங்கிட்டு இருக்கேனா? முழிச்சு இருக்கேனா பார்க்க மாட்டியா?" என்றவனை,
அடேய் இது அந்த கடவுளுக்கே அடுக்காது டா என்பது போல் பார்த்து வைத்தாள் சுடர்.
"தூக்கத்துல நடக்கிற வியாதி கேள்விப்பட்டு இருக்கேன். இது என்ன டா மேல பாய்ற வியாதி" என்று அழுகுரலில் கேட்ட மனைவியின், விரிந்திருந்த கருமணிகள் இரண்டும் அவனை மீண்டும் இன்பலோகம் அழைக்க,
சுயமில்லா நிலையில் கூட அவளை ஸ்பரிசத்த தேக சுகம் தன் மேனியில் உணர்ந்தவன், கள்ள சிரிப்புடன், "எனக்கு தூக்கம் வருது குட் நைட்" என்று விட்டு மெத்தையில் குப்புற விழுந்து கண்களை மூடிட,
சுடரோ, 'இவன் வேணும்னு பண்ணானா? நிஜமா தூக்கத்துல பண்ணானா?' என்ற பாரிய சந்தேகத்தில் அவனையே குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்தவன் சட்டென்று கண்களை திறந்து அவளை பார்க்க, பதறி போனவள் பட்டென்று சறுக்கி படுத்து தலைவரை பெட் சீட்டை மூடிக் கொண்டாள்.
கஞ்சமில்லா சிரிப்பு அவன் இதழ்களில், அவன் மேனி தீண்டிய அந்தரங்க பூரிப்புகள் அவள் உடலில்.
"நாளைக்கு காலை ல ஊருக்கு போகலாம். அங்க உனக்கு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு" என்று சந்தோசமாக சொன்னவன் நிம்மதியாக தூங்கினான்.
'சர்ப்ரைஸ்ஸா எனக்கு ஆப்பா தெரிலையே!' என்ற பதட்டத்துடன் வழமை போல் அவள் தூக்கம் தொலைத்தாள்.
இட மாற்றம் மன மாற்றம் கொண்டு வருமா? மரண ஓலத்திற்கு வித்திடுமா?
உறவுகள் வலுப்பெற இரண்டு விஷயங்களை நிச்சயம் செய்ய வேண்டும். ஒன்று அன்பை வெளிப்படுத்த வேண்டும், இன்னொன்று அன்பை உணரவைக்க வேண்டும்.
ஜெய் இரண்டிற்கும் அப்பாற்பட்டவன் ஆகிற்றே. அவனுக்கு தென்னை மரம் டைரக்டாக கள்ளாக காய்ச்சினால் வேலை மிச்சம் என்று எண்ணுபவன்.
பூனை போல் தன் பொரிஉருண்டையை சுற்றியும் வந்தாச்சு, புலி போல் பாய்ந்து குதரவும் செய்தாச்சு, சுண்டெலி எதற்கும் மசிய மறுக்க, கிறுக்கு பிடித்தது கிராதகனுக்கு.
ஒருவேளை விலகி இருந்தால் நெருங்கி வருவாளா? அந்த முயற்சியில் தான் ஆள் இப்போது இறங்கி இருக்கிறான்.
வீணாக அவளிடம் வம்பு செய்வதில்லை. அவளுக்கு அவன் எப்போதும் புரியாத புதிர் தானே! எப்போது என்ன செய்வான்? என்ன செய்தால் தன் மீது இரக்கம் வந்து அனுப்பி வைப்பான் என்ற எண்ணம் தான் அவளுக்கு.
கணவன் மனைவி உறவை அவனும் புரிந்து கொள்ளவில்லை, அவளும் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏதோ ஒரு கட்டாயத்தில் அவள் இங்கிருக்க, அவனும் தேவைக்காக அவளை பிடித்து வைத்திருக்கிறான்.
இப்படி பட்டும் படாமல் எந்நேரமும் பதட்டமான சூழ்நிலையிலேயே சுடரின் நாட்கள் நகர, அவள் திருமதி. ஜெய் கிருஷ்ணாவாகி ஒரு மாதமும் கடந்திருந்தது.
அன்று சுடரின் கிராமத்து பெரிய தலைகள் சிலர் ஜெய் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.
ஊர் கோவிலில் திருவிழா… மருமகன் என்று முறையாக அவனுக்கு அழைப்பு விடுக்க, அவனும் வந்தவர்களை தேனொழுக பேசி உயர்தர உபசரிப்பு தான் வழங்கினான்.
வார்த்தைக்கு வார்த்தை என் பொண்டாட்டி என்று சுடரையும் தலைமேல் தூக்கி வைத்து தாங்க, வந்திருந்த பெரியவர்களுக்கு எல்லாம் மனம் குளிர்ந்து தான் போனது.
'அப்பன் ஆத்தா இல்லா பிள்ளையை எப்படி கரை சேர்க்க போறோம்னு நினைச்சுட்டு இருந்தோம், எங்க கவலை எல்லாம் காணா போச்சு' என்று அத்தனை பூரிப்பு அவர்களுக்கு.
"உங்க கல்யாணத்துக்கு பிறகு வர்ற முதல் திருவிழா, கண்டிப்பா குடும்பத்தோட வரணும் மாப்பிள்ளை. எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமை எங்களுக்கும் இருக்கு." என்று அவர்கள் அழைக்க,
"கண்டிப்பா மாமா… நம்ம ஊரு திருவிழா நான் வராம இருப்பேனா?" என்று சொன்னவன், "குட்டிமா… போய் பணம் எடுத்துட்டு வா" என்று மனைவியிடம் சொல்ல,
அவன் உரிமையான அழைப்பிலும், அன்பான உத்தரவிலும் தடுமாறி நின்றது என்னவோ சுடர் தான்.
என்ன பணம்? என்று அவள் புரியாமல் விழித்துக் கொண்டு நிற்க,
"நம்ம ஊர் கோவிலுக்கு நம்ம பங்குக்கு ஏதாவது செய்யணும் தானே" என்று பக்கா நல்லவன் வேசம் போட்டவனை பாவம் அந்த வெள்ளந்தி மனிதர்கள் நம்பி தான் தொலைத்தார்கள்.
"அதெல்லாம் எதுவும் வேணாம் மாப்பிள்ளை. நீங்க வந்த மட்டும் போதும்" என்று மறுத்தவர்களிடம், "நீங்க என்னை மதிச்சு கூப்பிட்ட அதே உரிமையில தான் நானும் தர்றேன். வேணாம்னு சொல்ல கூடாது" என்றவன், இன்னமும் திரு திறுவென முழித்துக் கொண்டு நின்ற மனைவியிடம், "நீ என்ன மா இன்னும் இங்க நிற்கிற டேபிள்ல சாவி இருக்கும், லாக்கர்ல இருந்து பணம் எடுத்துட்டு வா" என்று அனுப்பி வைத்தான்.
அவளும் ஊரார் முன்பு தன் நிலையை வெளிப்படுத்த எண்ணாது சரி என்று தலையை ஆட்டி விட்டே மெதுவாக மாடியேறினால்.
அறைக்கு வந்து அவன் சொன்னது போல் சாவி எடுத்து லாக்கரையும் திறந்தாள். எவ்வளவு பணம் வைத்திருக்கிறான்? அவளே ஒரு நிமிடம் கண்களை விரித்து தான் அவைகளை பார்த்தாள்.
மறுநிமிடமே 'ஊர எத்தி சேர்த்து வச்சிருக்கான்' என்று ஜெய்யை திட்டியவள், எவ்வளவு பணம் எடுத்துக் கொடுப்பது? என்று குழம்பி தான் போனாள்.
கை நிறைய அள்ளி கொடுத்தால்? எவன் அப்பன் வீட்டு பணத்தை எவனுக்கு கொடுக்கிறது? என்று திட்டுவானோ என்ற பயம்,
அத்தனை கட்டுகளில் ஒன்றை மட்டும் எடுத்தவள், அதிலிருந்து இரண்டு ஐந்நூறு நோட்டை மட்டும் உருவிக் கொண்டு வந்து ஜெய் கையில் கொடுத்தாள்.
"என்னமா நீ? சாமிக்கு செய்ற விசயத்துல கஞ்சம் பிடிக்கிற? நம்ம ஊர் கோவிலுக்கு தானே செய்றோம்" என்று எண்ணி கூட பாராது மினி சூட்கேஸ் நிறைய பணத்தை அள்ளி கொடுத்தவன் பெரிய தலைகள் மனதில் உயர்ந்து நிற்க,
அவன் பணம் என்று உரிமையில்லாது அளந்து கொடுத்தவள் ஒரே நாளில் அகல பாதாளத்தில் தான் விழுந்தாள்.
'மாப்பிள்ளைக்கு இருக்க மனசு நாம தூக்கி வளர்த்த பிள்ளைக்கு இல்லையே. அவர் கொடுக்க நினைச்சாலும், இவ கொடுக்க விட மாட்ட போல. இந்த புள்ளை இப்படி மாறி நிற்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கல" என்று ஊர் வந்து சேரும் வரை சுடர் தான் அவர்கள் வாய்க்கு எல்லுருண்டையாக அரைப்பட்டாள்.
இதற்கு நடுவில் கலாவதி வேறு மகன் கர்ணனாக வாரி வழங்குவதை பார்த்து புல்லரித்து தான் போனார்.
(இருக்கிற டிக்கெட்ல இந்த அம்மா தான் ரொம்ப பாவம். அவன் என்ன பண்ணினாலும் நம்பி தொலையுது. நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து ஏமாந்து போனால் பெரிய வலி மட்டும் தானே மிஞ்சும்.)
இப்போதெல்லாம் ஜெய்யின் நடவடிக்கைகளை சுடரும் அவதானித்து கொண்டு தான் வருகிறாள். அவள் அவனை கண்டு அஞ்சினாள் அவள் அருகிலேயே அவன் வருவது இல்லை. சேட்டைகள் வேறு குறைந்து இருந்தது.
ஆனால் இரவு கட்டி கொண்டு தூங்க மட்டும் மனைவி வேண்டும். அதற்கு மட்டும் அவனிடம் இருந்து சுதந்திரம் கிடைக்கவில்லை.
மன்மதராசாவா இருந்தவனை மங்குளிராசாவா மாத்தி விட்டுருச்சு.
இன்று காலை நடந்த சம்பவத்தை தான் மனதில் அலசியபடி துணிகளை மடித்து கொண்டிருந்தாள் சுடர்.
'திடீர்னு எதுக்கு ஊர்க்காரங்களுக்கு அவ்வளவு பணம் கொடுக்கிறார்? ஏதாவது சதி திட்டமா இருக்குமா?
என்கிட்ட கூட முன்ன போல காட்டுத்தனமாக நடந்துக்கது இல்ல. ஒருவேளை திருந்திட்டாரோ? இல்லையே அதுக்கு வாய்ப்பில்லையே' என்று அறிவு சுடராக அவள் யோசித்துக் கொண்டிருக்க,
உள்ளிருக்கும் பெண் மனமோ, 'ஏன் தப்பு பண்ற யாரும் திருந்தவே கூடாதா? ஒரு மனுசன் கெட்டது பண்ணா கேடு கெட்டவன்னு திட்ட வேண்டியது, நல்லது பண்ணா நடிக்கிறான்னு சந்தேகப்பட வேண்டியது.' என்று தன் பங்கிற்கு அவளை குழப்பி விட்டு உள்ளே சென்று ஒளிந்து கொண்டது.
அது சொன்னதையும் கேட்டு மொத்தமாக குழம்பி போன சுடர், தலையை பிடித்துக் கொண்டு லேப்டாப் டேபிள் முன் அமர்ந்திருந்த ஜெய்யையே சிறிது நேரம் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.
'என்னாச்சு? ஏதோ ஆள் டல்லா இருக்க போல இருக்கு?' என்று எண்ணிக் கொண்டே அவனை ஆராய, அவனுக்கு ஏதோ உடல் நிலை சரியில்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. அவளாக சென்று நலன் விசாரித்து நரபலியாக தயாரில்லை.
ஆனாலும் பெண் மனம் எதிரே ஒருவனின் அவஸ்தையை பார்த்துக் கொண்டு கண்டும் காணாமல் இருக்க மனமில்லாது, ஆடு தானாக தலையை கொண்டு விட்டது.
அவனை நோக்கி சென்றவள், சிறிது தள்ளியே நின்றுக் கொண்டு தலையை முன்னால் நீட்டி அவனை எட்டி பார்த்தபடி "சார்…" என்று மெதுவாக அழைக்க,
அவளை திரும்பி கூட பாராது, "ஏற்கனவே தலைவலி மண்டைய பொழக்குதுனு கடுப்புல இருக்கேன். வான்டடா வந்து வாங்கி கட்டிக்காத, ஓடிரு" என்று எச்சரிக்கை விடுத்தவனை பார்த்து, உள்ளுக்குள் அல்லு தான்.
இருந்தாலும் மனம் கேளாது, "ஸ்ட்ராங்கா காபி குடிச்சா சரியாகும். நான் போட்டு தரவா?" என்று கேட்டாள்.
திரும்பி அவளை பார்த்தவன், "சரி ரொம்ப ஆசை படுற போய் எடுத்துட்டு வா" என்று சொன்னதும், ஜெட் வேகத்தில் சுக்கு காபியோடு அவன் முன்னால் வந்து நின்றாள்.
'அந்த விஷயம் தவிர மத்த எல்லாத்துலயும் வேகம் தான்' என்று முணு முணுத்துக் கொண்டே அவள் நீட்டிய காபியை வாங்கி ஒரு மிடறு பருகியவன், "தூ…" என்று துப்பியே விட்டான்.
"என்ன எழவு டி இது?"
"சுக்கு காபி… சுக்கு மல்லி காபி குடிங்க அஞ்சே நிமிஷத்துல தலைவலி பறந்துடும்." என்று துள்ளாலாக கைகளை விரித்து சொன்னவளிடம்,
"நீயே குடி" என்று காபியை ஓரம் வைத்து விட்டு எழுந்து செல்ல இருந்தவனை, அமுக்கி பிடித்து உட்கார வைத்தவள்,
"குடிங்க" என்று அவளே அவன் வாய் அருகே கொண்டு செல்ல, அவள் நெருக்கம் கசக்குமா அவனுக்கு,
வேப்பங்காயில் கூட அமிர்தம் கடையும் வித்தகன், அவள் வாசம் நுகர்ந்தே சற்று முன் கசந்த காபியை உதட்டில் உறிஞ்சினான்.
சுடரோ கையில் எடுத்து கொடுக்க நினைத்து தான் நெருங்கியது, ஆனால் அவனோ பச்ச பிள்ளை போல பாசாங்கு காட்டி அவள் கையாலேயே குடித்தும் முடித்து விட்டான்.
"பார்த்து கப்பும் சேர்ந்து தொண்டைக்குள்ள போய்யிட போகுது" என்று தீர்ந்து போன கப்பில் அவன் காபியை உறிஞ்ச, கேலி செய்த மனைவியை முறைத்தான் ஜெய்.
"எங்க டி தலை வலி பறக்கல? என்னை ஏமாத்த பார்க்கிறியா?" என்று அவன் அடுத்த நிமிடமே நோய் குணமாகவில்லை என்று சீற,
அய்யோ! என்று ஆனது சுடருக்கு.
பேசாம தலைவலியோட சாகட்டும்னு விட்டிருக்க வேண்டியது. என்று மனதில் அவனுக்கு திட்டிக் கொண்டவள்,
"இருங்க வரேன்" என்று ஒரு கிண்ணத்தில் எண்ணையோடு வந்தாள்.
"இது என்ன?"
"எண்ணெய் ங்க… சில நேரம் உடம்பு ரொம்ப சூடா இருந்தா கூட இப்படி தலைவலியெல்லாம் வரும். கொஞ்சம் எண்ணெய் எடுத்து, தலைக்கு ஒரு குட்டி மசாஜ் பண்ணிவிட்டா எல்லாம் சரியாகிடும்" என்று ஆயுர்வேத மருத்துவம் சொன்ன மனைவியிடம்,
"ஹீட்ட தணிக்க இத விட சூப்பர் மெத்தட் ஒன்னு இருக்கு. அதுவேனா ட்ரை பண்ணலாமா?" என்று கேடி குறும்பு கண்களுடன் பிசியோதெரோபிக்கி தூண்டில் போட,
உஷாராகி கொண்டாள் அவன் ஆசை மனைவி.
ஹி… ஹி… இதையே டிரை பண்ணலாமே என்று சமாளிப்பாக சிரித்துக் கொண்டே சொன்னவள், எண்ணெய் யை கையில் எடுத்து சேரில் இருந்தவன் பின்னால் நின்று அவன் தலையில் தான் கை வைத்திருப்பாள்.
கேடி அவள் கையை பிடித்து முன்னால் தன் மடியில் அமர்த்திக் கொண்டவன், இப்போ தேச்சு விடு என்று அவள் இடையோடு கட்டிக் கொண்டு தோளில் முகம் புதைத்து தூங்கவே ஆரம்பித்து விட்டான்.
அவன் மடியில் அமர்ந்திருந்த சுடருக்கு ஊர் மேல போற பேயே என் மேல கொஞ்சம் வாயேன்! என்று அழைத்தது போல் ஆனது
அவன் பாரம் நெஞ்சை அழுத்த, அவன் உதடுகள் வேறு கழுத்தில் பட்டும் படாமலும் உரசிய படி அவளை அசௌகரியமாக்கி கொண்டிருந்தது.
விழிகளை தாழ்த்தி ஆறடி குழந்தைப் போல் தன் தோளில் தூங்கும் அரக்கனை பார்த்தாள்.
குறும்பு கண்கள் தன் குகைக்குள் ஓய்வு கொண்டிருக்க, அவளிடம் சில்மிஷம் செய்யும் சேட்டை பிடிச்ச விரல்கள் கூட பதிந்த தடம் மாறாது தான் அவள் இடையை சுற்றி இருந்தது.
பாவம்… நிஜமாவே முடியல போல இரக்கம் கொண்ட பெண் மனம், தன்னை சிறை வைத்திருக்கும் ராவணனுக்கே சேவகம் செய்தது.
மாங்கு மாங்கென ஜெய் தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்து விட்டவளுக்கும் தூக்கம் கண்ணை சொக்க, அவன் விட்டால் தானே எழுந்து செல்ல முடியும்.
சார்… என்னங்க… என்று அவனை எழுப்ப முயன்று தான் அழைத்தாள்.
அவள் உசுப்பலில் கண்களை கூட திறக்காது சட்டென்று அவளை கைகளில் தூக்கிக் கொண்டே எழுந்தவன், என்ன பண்றீங்க? இறக்கி விடுங்க என்ற அவள் பதட்டம் எதையும் காதில் கேட்காது கட்டிலில் கிடத்த,
ஆத்தே! என்று அவள் சுதாரித்து நகரும் முன் அவள் மீது படர்ந்திருந்தான்.
பாவம் பார்த்து கொஞ்சொண்டு எண்ணெய் தேச்சு விட்டது ஒரு குத்தமா? இப்படி என்னை எண்ணெயாக்குறீங்களே என்று அவன் மலைபோல் உடலுக்கு அடியே நசுங்கி கொண்டிருந்த அவன் மனைவி புலம்ப,
அதுவும் அவன் காதில் விழவில்லை.
புலம்பிக் கொண்டிருந்த இதழ்கள் இரண்டையும் தேன் மிட்டாய் போல் தன் அதரங்களுக்குள் அதக்கி சுவைக்க ஆரம்பித்து விட்டான்.
அவன் அதிரடி செயலில் அரண்டு போனவள், ஹ்ம்ம்… என்று முனங்கிக் கொண்டே, அவனிடம் இருந்து தப்பிக்க போராடிய படி, ஜெய்யின் புஜத்தில் அடித்து அவனை தள்ள முயன்றாள்.
சட்டென்று அவள் மீதிருந்து ஜெய் நிமிர, அவன் கவ்வி சுவைத்த அதரங்கள் இரண்டையும் அழுந்த துடைத்து கொண்டே, தன்னை விட்டு விட்டான் என்ற நிம்மதி பெருமூச் சில் நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் எண்ணங்கள் தவறு என்பதை அவன் செயலே தெளிவாக்கி கொண்டிருந்தது, அத்துடன் இன்று உன் கற்பிற்கு உத்திரவாதம் கிடையாது என்பதையும் நிரூபிக்கும் வகையில், ஒற்றை கையில் தலை வழியே தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டை கழட்டியவன், அவள் இமைக்கும் நொடிக்குள், அவள் உடையையும் நகட்டியிருந்தான்.
"ஆ ஆ… என்ன பண்றீங்க?" என்று அலரியவளை ஒரு பொருட்டாக கூட கருதாது, மீண்டும் அவள் மீது படர்ந்து, மங்கையில் கழுத்து வளைவில் முத்தம் பதித்து, மீண்டும் இதழ்களில் இன்ப கவி பாட ஆரம்பித்த தருணம் அது.
விட்டால் ஒரு அறை தன் பலம் மொத்தமும் திரட்டி.
பளார் என்று கன்னம் காய, அதன் பிறகே தூக்கத்தில் இருந்து விழித்தான் ஜெய்.
அவன் ஆசை மனைவி, ஆருயிர் அரக்கி அவன் அடியில் நசுங்கி கொண்டிருக்க, அவனோ மலைப்பாம்பாக அவளை சுருட்டி வைத்திருந்தான்.
அவள் ஆடை நழுவிய அங்கத்தை இவன் விழிகள் ஆராய, அவன் நெஞ்சில் கை வைத்து பலம் கொண்டு அவனை தள்ளி விட்டவள், அவசர அவசரமாக பெட் சீட்டை இழுத்து தன்னை முழுதாக மூடிக் கொண்டு நடுங்கியபடி, அவனை பார்த்து முறைத்தாள்.
அவளை புருவம் சுருக்கி பார்த்துக் கொண்டே யோசித்தவன்,
"என்னாச்சு?" என்று கேட்க,
"என்னாச்சா? கொஞ்சம் விட்டிருந்தா எல்லாம் முடிஞ்சு இருக்கு" என்று உதட்டை பிதுக்கி சொன்னவள், "நான் ஓகே சொன்ன பிறகு தான் எல்லாம் சொல்லிட்டு, இப்படி வந்து பாய்றீங்க" என்று நடுங்கிய உடலை போர்வைக்குள் புதைத்துக் கொண்டே, கண்ணீரோடு புகார் சொன்ன மனைவியை பார்த்து
அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
"ஓகே ஓகே… நான் வேணும்னு பண்ணல, ஏதோ தூக்க கலக்கத்தில நடந்துடுச்சு… தூங்கிட்டு இருக்கேனா? முழிச்சு இருக்கேனா பார்க்க மாட்டியா?" என்றவனை,
அடேய் இது அந்த கடவுளுக்கே அடுக்காது டா என்பது போல் பார்த்து வைத்தாள் சுடர்.
"தூக்கத்துல நடக்கிற வியாதி கேள்விப்பட்டு இருக்கேன். இது என்ன டா மேல பாய்ற வியாதி" என்று அழுகுரலில் கேட்ட மனைவியின், விரிந்திருந்த கருமணிகள் இரண்டும் அவனை மீண்டும் இன்பலோகம் அழைக்க,
சுயமில்லா நிலையில் கூட அவளை ஸ்பரிசத்த தேக சுகம் தன் மேனியில் உணர்ந்தவன், கள்ள சிரிப்புடன், "எனக்கு தூக்கம் வருது குட் நைட்" என்று விட்டு மெத்தையில் குப்புற விழுந்து கண்களை மூடிட,
சுடரோ, 'இவன் வேணும்னு பண்ணானா? நிஜமா தூக்கத்துல பண்ணானா?' என்ற பாரிய சந்தேகத்தில் அவனையே குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்தவன் சட்டென்று கண்களை திறந்து அவளை பார்க்க, பதறி போனவள் பட்டென்று சறுக்கி படுத்து தலைவரை பெட் சீட்டை மூடிக் கொண்டாள்.
கஞ்சமில்லா சிரிப்பு அவன் இதழ்களில், அவன் மேனி தீண்டிய அந்தரங்க பூரிப்புகள் அவள் உடலில்.
"நாளைக்கு காலை ல ஊருக்கு போகலாம். அங்க உனக்கு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு" என்று சந்தோசமாக சொன்னவன் நிம்மதியாக தூங்கினான்.
'சர்ப்ரைஸ்ஸா எனக்கு ஆப்பா தெரிலையே!' என்ற பதட்டத்துடன் வழமை போல் அவள் தூக்கம் தொலைத்தாள்.
இட மாற்றம் மன மாற்றம் கொண்டு வருமா? மரண ஓலத்திற்கு வித்திடுமா?
Last edited: