என் போதை தீயே!
அத்தியாயம் 19
ஜெய், பேக்டரியை மூடுவதாக சொல்லி, அந்த இடத்தையும் ஊருக்கு எழுதி வைத்திட, அத்தனை பேர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
ஓசியில் வரும் சொத்து என்றால் யார் தான் விடுவார்கள்? அதிலும் அவர்களின் பலவருட போராட்டம் முடிவுக்கு வந்ததே! அதில் ஏக சந்தோசம் மக்களுக்கு.
“அறிவு, புருஷன் எவ்வளவு நல்லவர்ல”
ஒரு மாதம் முன்பு இந்த நல்லவன் தலையில் இடி விழுந்தது சாக மாட்டானா? என்று சபித்த வாய் இன்று வாழ்த்தியது.
ஊர் தலைவருக்கும் ஏக சந்தோசம் தான். ஆனாலும் பெரிய மனிதராக,
“நீங்க பேக்டரிய மூடுறேன் சொன்னதே ரொம்ப சந்தோசம் தம்பி. அந்த இடம் உங்க பெயர்லயே இருக்கட்டும்” என்று சொல்ல,
“இது நான் என் மனைவிக்காக பண்றேன். வேணாம் சொல்லாதீங்க. ஊர் நல்லதுக்காக பயன்படுத்திக்கோங்க. ஸ்கூல், ஹாஸ்பிடல் ஏதாவது கட்டுங்க. அதுக்கு ஆகுற செலவு கூட நானே ஏத்துக்கிறேன்” என்றவனை கடவுளாக தான் அனைவரும் பார்த்து வைத்தார்கள்.
அவன் ஊருக்காக கொடுக்கும் போது தனி மனிதனாக வேதாச்சலத்தாலும் மறுக்க முடியவில்லை.
“உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்ல இருப்பீங்க தம்பி.
கடவுள் சந்நிதானத்தில வச்சி சொல்றேன். நீங்க இந்த கடவுளுக்கும் ஒருபடி மேல உயர்ந்துட்டீங்க தம்பி” என்று அவர் நெகிழ்வாக சொல்ல,
கலாவதிக்கு மகனை எண்ணி பூரிப்பு தான்.
முகம் கொள்ளா சிரிப்புடன், ஊரே கொண்டாடும் மகனை நிறைவாக பார்த்து கொண்டிருந்தார்.
அந்த மகிழ்ச்சி எதுவும் இன்றி சுடரின் பார்வை ஜெய் மீது சந்தேகமாகவே பதிந்து இருந்தது.
எதுக்கு இந்த நாடகம்? என்ற யோசனையில் சுடர் விழிகள் கணவனை விட்டு அகல மறுத்து இருக்க,
“நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனும்” என்று தலைவரை பார்த்து கேட்ட ஜெய்யை சுடரும் விழி சுருக்கி பார்த்தாள்.
“அந்த இடத்த நான் ஊருக்காக எழுதி இருக்கேன். ஆனா தலைவர் முறையில நீங்களும், சாட்சிக்கு இன்னும் சிலரும் கையெழுத்து போட்டா தான் சட்டபடி அந்த இடம் இந்த ஊர் சொத்தாகும்” என்றவன் பத்திரத்தில் கையெழுத்து போட சொல்லி கேட்க,
“அதுக்கென்ன தம்பி தாராளமா கையெழுத்து போட்டு தரோம்” என்றவர்,
கோவில் கர்ப்பகிரக நடையில் வைத்து கையெழுத்து போட தயாராக,
“ஒரு நிமிஷம் மாமா” என்று அவரை தடுத்திருந்தான் தீனா.
சுமுகமாக முடிஞ்சா அது நல்லதுக்கு இல்லையே.
இந்தா தூக்கிட்டான் கட்டைய. நாம கொஞ்சம் என்டர்டெயின்மென்ட் பண்ணலாம் என்று சுவாரசியமாக தான் ஜெய் விழிகள் தீனாவை ஏளனமாக ஒற்றை புருவம் உயர்த்தி, கோணலாக சிரித்த படி பார்த்துக் கொண்டிருந்தது.
‘இன்னும் என்ன டா உன் பிரச்சனை?’ என்பது போல் வேதாசலம் பார்வை அவன் மீது பதிய,
“படிச்சி பார்த்திட்டு கையெழுத்து போடுங்க” என்றவன் கோவில் நடையில் இருந்த பத்திரத்தை பறித்து எடுத்துக் கொண்டே,
“அறிவு இதை வாசி’' என்று ஜெய் மனைவி கையிலேயே கொடுத்தான்.
“அதெல்லாம் எதுவும் தேவையில்ல, ஊருக்கு உதவி செய்ய நினைக்கிற மனுஷனை சந்தேகபடுறது ரொம்ப தப்பு” என்று தீனா தந்தை சுடர் கையில் இருந்து பத்திரத்தை பறிக்க முயல,
கை நீட்டி அவரை தடுத்திருந்தான் ஜெய்.
“பொறுமையா இருங்க மாமா. மச்சான் சொல்றதும் சரி தானே. ஊர் காரியம். படிச்சு பார்த்துட்டே கையெழுத்து போடுங்க” என்றவன் மனைவியை பார்த்து வாசி என்பது போல் விழியசைக்க,
அவளுக்கும், கணவன் மீது நம்பிக்கை இல்லை என்பதால் அதை சத்தமாகவே வாசித்தாள்.
ஜெய் முகவரி முதல் பத்தியிலும், வெள்ளிமலை கிராமத்திற்கு பொது சொத்தாக இஷ்ட தானம் கொடுப்பதாக அடுத்த பக்கத்திலும் இருந்தது.
நிஜமாகவே எழுதி வைத்து விட்டானா? வாசித்த அவன் மனைவியால் கூட இதை நம்ப முடியவில்லை.
வெடுக்கென்று அவள் கையில் இருந்து பத்திரத்தை பிடுங்கிய தீனாவும் கண்களை நன்கு விரித்து அதை பார்த்தான்.
உண்மை தான். இடத்தை ஊருக்கு இஷ்ட தானமாக எழுதி வைத்திருந்தான்.
அதிர்ச்சி நீங்க விழிகளோடு தீனா நிமிர்ந்து ஜெய்யை பார்க்க,
அவனோ நக்கலாக சிரித்து கொண்டே தான் அவனை பார்த்துக் கொண்டிருந்தான்.
தீனா அதிர்ந்து நிற்கும் போதே, அவன் கையில் இருந்து பத்திரத்தை பறித்து வேதாசலம் கையெழுத்து போட,
“மிச்சத்தையும் படிச்சிட்டு போடுங்க” என்றான் ஜெய், உலகமகா உத்தமன் நான் தான் என்ற பாவத்தில்.
“உங்க மேல நம்பிக்கை இருக்கு தம்பி.” என்று அவர் மட்டுமல்ல இன்னும் சில ஊர் பெரிய தலைகளையும் கையெழுத்து போட வைத்தார்.
அவர்களை கண்களை சுருக்கி ஓநாய் பார்வை பார்த்த ஜெய் இதழ்கள் எல்லாரும் கையெழுத்து போட்டு முடியவே கோணலாக சிரித்து கொண்டது.
வேதாசலம் பத்திரத்தை பத்திரமாக அம்மன் பொருட்களை வைக்கும் பிரோவில் வைத்து பூட்டி வைத்தார்.
அதன் பிறகு கரகாட்டம் ஆரம்பமாக, குடு குடு பொடிசுகளும், கிடு கிடு பெருசுகளும் கடல் மணல் பரப்பிய தரையில் இடம் பிடித்து அமர்ந்து கொண்டார்கள்.
சில பக்திமார்க்க இளசுகள் உச்சி பூஜைக்கு, பூபடைப்பு, தோரணம், சாமிசிலை அலங்காரம் என்று பிசியாகி விட்டார்கள்.
அரைகுறை ஆடையுடன் மாராப்பு இன்றி முன்னழகு முட்டி கொண்டு நிற்க, இடை மொத்தமும் பளிச்சென்று கடை பரப்பியபடி, முப்பதை கடந்த இரண்டு பெண்கள் கரகத்தை ஓரமாக வைத்து விட்டு நாதனகாரர் இசைக்கு ஏற்ப ஒரு எல்லையில் இருந்து மறு எல்லை வரை மணலில் காலை உரசிய படி உடலை அசைத்திட,
திருமணமான பெண்களுக்கு அவர்களை பார்க்க பார்க்க கொஞ்சம் எரிச்சலாக தான் இருந்தது.
“எதுக்கு இவளுகளுக்கெல்லாம் ஊர் காச செலவு பண்றாங்க? அவளுக மூஞ்சும் போட்டிருக்க டிரெஸ்சும்” என்று திட்டிக் கொண்டே பூஜைக்கு வரலாம் என்று நடையை கட்டி விட்டார்கள்.
‘நிஜமா பேக்டரிய மூடிட்டாரா? ஒருவேளை திருந்திட்டாரா? ஏன்? எதுக்காக?’ ஆயிரம் ஆயிரம் சந்தேக கேள்விகள் மூளைக்குள் ஓடிட, அவள் பார்வையோ சிந்தையின்றி கரகாட்ட பெண்களை வெறித்து கொண்டு தான் இருந்தது.
மனைவியின் குழப்ப முகத்தை பார்த்த ஜெய், இதழ்கடையில் சிரித்துக் கொண்டே,
“நான் தப்பு பண்ணிட்டேன்” என்றதும் வெடுக்கென்று அவனை திரும்பி பார்த்தாள் அறிவுசுடர்.
“அன்னைக்கு போல் டான்ஸ் இல்ல உன்னை கரகாட்டம் ஆட சொல்லி இருக்கணும்” என்றவனை சுடர் புரியாமல் பார்த்து வைக்க,
“சோ செக்ஸி. இந்த காஸ்ட்யூம் எங்க கிடைக்கும் கேட்டு வை போகும் போது வாங்கிட்டு போகலாம்” என்று அந்த பெண்களின் கஞ்சமில்லா மேனி வனப்பை கண்களால் காட்டி சொல்லிட,
அவனை புருவம் சுருக்கி முறைத்த அவன் மனைவியோ, அங்கே தரையில் அமர்ந்திருந்த தன் தோழி இளமதி அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.
அவளை பார்த்து கள்ள சிரிப்பு சிரித்து கொண்டிருந்தவன் அருகே வந்த தினேஷ்,
“பாஸ் நிஜமா பேக்டரிய ஊருக்காக எழுதி வச்சிடீங்களா?” கூடவே சுத்தும் அவனுக்கே ஏக அதிர்ச்சி.
பாலகிருஷ்ணாவின் கார்மெண்ட் கம்பெனியில் தீ விபத்து என்று புரளியை கிளப்பி விட்டு, அவரது காரியதரிசி மூலம் போன் போட வைத்தது என்னவோ ஜெய் சொல்லி தினேஷ் தான்.
அது ஏதோ அவரை வெறுபேற்ற என்று எண்ணியே அவனும் தன் தலைவனின் ஆக சிறந்த தொண்டனாக வேலையை கச்சிதமாக முடித்திருக்க,
அவர் போனில் குறுக்கு விசாரணை முடித்து, அது வெறும் புரளி என்று உறுதி செய்து விட்டு திரும்பி வரும் முன்னமே மகன் தன் திருவிளையாடலை முடித்து விட்டு மனைவியிடம் கிருஷ்ண லீலையில் இறங்கி இருந்தானே.
தீ விபத்து என்று புரளியை கிளப்பி விட்டது அவனாக தான் இருக்கும் என்று சரியாக யூகித்து அதை பெரிசாக்காது ஓரம் தள்ளியவர், அவனின் மாஸ்டர் பிளானை அறியாது தான் போனார்.
கோவில் உள்ளே திரை சீலை போட்டு மூடிய சிலையை இரு கை கூப்பி வணங்கி கொண்டிருந்த மனைவி அருகே வந்தவர்,
“கலாவதி, கொஞ்சம் அவருக்கு ஓய்வு கொடுமா. எந்நேரமும் கோரிக்கை வச்சிட்டு இருந்தா பாவம் கடவுளும் என்ன தான் பண்ணுவார்” என்று மனைவியை கேலி செய்த பாலா,
“அடுத்த பூஜை ஆரம்பிக்க நேரம் ஆகும். வா கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துட்டு வரலாம்” என்று அழைக்க,
“வயசானவங்களுக்கு தான் நீங்க சொல்ற ஓய்வு வேணும். என் அம்மா ஸ்டில் யங். அவங்களுக்கு கட்டளையிட உங்களுக்கு உரிமை இல்ல” என்று குறுக்க வந்து நின்றான் பாலா, கலாவின் புத்திர பாக்கியம்.
ஊருக்காக இந்த ஒத்த புள்ளையையும் பெத்துக்காம் இருந்திருக்கலாம் என்று அவர் நொந்த நாட்களும் ஏராளம்.
“யாருக்கு டா வயசு ஆச்சு?” என்று ஆவேசமாக கேட்டவர்,
“இப்போ கூட உனக்கு ஒரு தம்பி பாப்பா ரெடி பண்ற அளவுக்கு எனக்கு திறமை இருக்கு.” என்று மகனுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவனுடன் மல்லு கட்ட,
ஹிம் என்று கோணலாக சிரித்த ஜெய். “நினைப்பு தான்.” என்று சொல்லி கொண்டே அன்னையை எழ வைத்து, அங்கே ஓரமாக போட பட்டிருந்த இருக்கைகளில் அமர வைத்தவன், அவனும் அருகே அமர்ந்து கொண்டான்.
ஐம்பது வயதுக்கு மேல் அன்னைக்கு பாடிகாட் வேலை பார்க்கும் மகனை பார்த்து பாலாவுக்கு சிரிப்பு பீறிட்டு வர, அடக்கிக் கொண்டே மனைவிக்கு மற்றைய புறம் சென்று அமர,
அன்னையை தாண்டி தந்தையை முறைத்து பார்த்தான் ஜெய்.
அவரோ அவனைப் பார்த்து சிரித்து கொண்டே, கலுமா என்று அழைக்க,
அவர் மனைவியோ அது நான் இல்லைங்கோ என்ற தொனியில் தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
தந்தை, அன்னைக்கு செல்லப்பெயர் வைத்து அழைத்ததற்கு அன்னையிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் இருக்க, பல்ப் வாங்கிய தந்தையை இதழ்களுக்கு குள் அடக்கிய ஏளன புன்னகையுடன் பார்த்து சிரித்தான் ஜெய்.
மகன் சிரிக்க அவமானமாக போனது. காலம் போன வயசுல இந்த காதல் நாடகம் தேவையா? தாயின் தலைக்கு பின்னால் எட்டி பார்த்து குசு குசுவென தந்தையை கலாய்த்தான் அவர்களின் கடமை புத்திரன்.
அவரும் அவனை போலவே பின்னால் சரிந்து,
“என் பொண்டாட்டி நான் எந்த வயசுல வேணாலும் காதலிப்பேன். எந்த கொம்பன் வந்து தடுப்பான்?” என்று மகனை குத்த,
அவரை பார்த்து உஷ்ணமாக ஜெய் முறைக்க,
ஏதாவது சொன்னியா ய்யா” என்று கலாவதி பின்னால் திரும்பி கேட்க,
கட்டாய புன்னகை ஒன்றை இதழ்களில் கொண்டு வந்தவன் இல்ல மா என்று தலையை ஆட்டிட,
பாலாவுக்கோ அவன் சிவந்த முகமும், சிடு சிடுவென வெடிக்கும் குணமும் அளவில்லா மகிழ்ச்சியை கொடுக்க, இதழ்கடையில் பதுக்கிய புன்னகையுடன் மனைவியை கையை அவர் பற்றிட,
இங்கே எள்ளும் கொள்ளும் வெடித்தது ஜெய் முகத்தில்.
கண்களை அகல விரித்து தந்தையை அவன் முறைக்க,
அதை கண்டும் காணாமல் மனைவியிடம் கதை பேச ஆரம்பித்தார் பாலா.
“கலு மா” என்று அவர் மீண்டும் கலாவதி கையை பிடித்து அழைக்க,
என்னிய யா கூப்டீக? புதிய பெயர் சுருக்களில் பதறி போனார் அந்த வயோதிக காதலி.
உன்னை தான் மா. கன்னியாகுமரி ல பகவதியம்மன் கோவிலுக்கு போய் இருக்கியா
இல்லைங்க
கோவில் திருவிழா முடிய நான் உன்னை கூட்டிட்டு போறேன். என்றவரை பார்த்து கோவில் என்றதும் அவரும் ஆர்வமாக தலையை ஆட்டி வைத்தார்.
அங்க சுத்தி பார்க்க நிறைய இருக்கு. 133 அடியில திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், இப்போ சமீபமாக பிரதமர் கூட அங்க போய் தியானம் பண்ணிட்டு, அம்மனை கும்பிட்டு வந்த பிறகு மூனாவது முறையா தேர்தல்ல ஜெயிச்சு இருக்கார். ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன் என்று அவர் பேச்சை துவங்க,
கலாவதியும், “நிஜமா வா?” என்று வாயில் கையை வைத்து ஆச்சர்ய பட்டவர் சுவாரஸ்யமாக கதை கேட்க,
அவர் மகனோ விழிகளை சுருக்கி அவரை முறைத்து வைக்க,
நீயெல்லாம் இனி எனக்கு எக்ஸ்ட்ரா பிட்டிங் தான் என்பது போல், வாய் ஓயாது மனைவியிடம் வம்பளக்க ஆரம்பித்து விட்டார் பாலா.
இங்கே ஜெய் அன்னை தந்தை காதலில் வயிரெரிந்து கொண்டிருக்க, அங்கே அவன் காதல்காரியோ அவன் திடீர் மாற்றத்தில் ஏக குழப்பத்தில் தான் இருந்தாள்.
கவனமின்றி எங்கோ வெறித்துக் கொண்டிருந்த தோழி தோளில் இடித்த இளமதி என்ன அறிவு என்ன சிந்தனையில் இருக்க என்று கேட்க,
முதலில் எதுவுமில்லை என்று தலையை ஆட்டியவள், பிறகு யாருடனவானது தன் மனதில் இருப்பதை பகிர்ந்தால் தெளிவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவளிடம் தன் சந்தேகங்களை கூறலானாள்.
இளா, இந்த மனுஷன் பண்ற எதையும் என்னால புரிஞ்சிக்க வே முடியல. அத்தன பேர் எத்தனை போராட்டம் பண்ணியிருப்போம். அப்போலாம் மனசு இறங்காத மனுஷன். இப்போ மட்டும் எதுக்கு பெக்டரிய மூடனும்?”
இதுல என்ன சந்தேகம் உனக்கு? எல்லாம் உனக்காக தான். என்றவளை சுடர் அதிர்ந்து பார்க்க,
ஆமா. அதான் அவர் தெளிவா சொன்னாரே என் பொண்டாட்டிக்காக தான் பண்றேனு. நம்ம ஊர் ஆம்பளைங்க களுக்கு மானே தேனேனு கொஞ்சி எல்லாம் பொண்டாட்டிய காதலிக்க தெரியாது. அவங்க அன்பு இது போல அக்கறையுல தான் வெளிபடும்.
இல்ல இளா எனக்கு என்னமோ சந்தேகமா தான் இருக்கு.
அடியே… எப்போத்துல இருந்து இப்படி மனசாட்சி இல்லாத மடச்சி ஆனா? கட்டுன புருஷனை நம்ப முடியல சொல்ற? என்று ஆதங்கமாக கேட்டவள்,
நீ அவர் நமக்கு செஞ்ச பழசு எல்லாம் நினைவு வச்சி குழம்பி போய் இருக்க. ஒன்னே ஒன்னு மட்டும் உனக்கு நீயே தெளிவு படுத்திக்க. உங்க கல்யாணத்துக்கு முன்னாடி உள்ள சங்கதி எல்லாம் கொஞ்சம் ஓரம் தள்ளி வச்சிட்டு, கல்யாணத்துக்கு பிறகு அவர் உன்கிட்ட எப்படி நடந்துகிட்டார் அதை மட்டும் சொல்லு என்று கேட்க,
சுடரும், அவன் செயல்களை நினைவு படுத்தினாள்.
பெரிதாக அவன் அவளை அதிர்ந்து கூட பார்த்து பேசவில்லையே..அவர்களுக்குள் சண்டை என்று இருந்தால் அது கட்டில் சண்டையாக தான் இருக்கும். அதுவும் இப்போது சமீபகாலமாக அரிது தான். அவள் பக்கம் கூட வீணாக வர மாட்டானே.
அதை அவள் நினைவு படுத்தி, மனதில் பதித்து கொண்டிருக்கும் போதே,
அறிவு… ஒரு மனுஷன் எப்பவும் கெட்டவராகவே வா இருப்பாங்க, உன் மேல அவர் வச்சிருக்க பாசம் ஒருவேளை அவரை மாத்தி இருக்கலாம் என்று இளமதி அவளுக்கு தூபம் போட,
சுடரும் இருக்குமோ என்ற எண்ணவோட்டதில் கணவனை பார்த்தவள் விழிகள் முதல் முறை அவனை கண்டு அஞ்சவில்லை, குற்றம் சுமத்தவில்லை.
இயல்பான ஒரு பார்வை, அவள் அறியாது காதலோடு அவள் அவனை பார்த்த முதல் பார்வை.
அத்தியாயம் 19
ஜெய், பேக்டரியை மூடுவதாக சொல்லி, அந்த இடத்தையும் ஊருக்கு எழுதி வைத்திட, அத்தனை பேர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
ஓசியில் வரும் சொத்து என்றால் யார் தான் விடுவார்கள்? அதிலும் அவர்களின் பலவருட போராட்டம் முடிவுக்கு வந்ததே! அதில் ஏக சந்தோசம் மக்களுக்கு.
“அறிவு, புருஷன் எவ்வளவு நல்லவர்ல”
ஒரு மாதம் முன்பு இந்த நல்லவன் தலையில் இடி விழுந்தது சாக மாட்டானா? என்று சபித்த வாய் இன்று வாழ்த்தியது.
ஊர் தலைவருக்கும் ஏக சந்தோசம் தான். ஆனாலும் பெரிய மனிதராக,
“நீங்க பேக்டரிய மூடுறேன் சொன்னதே ரொம்ப சந்தோசம் தம்பி. அந்த இடம் உங்க பெயர்லயே இருக்கட்டும்” என்று சொல்ல,
“இது நான் என் மனைவிக்காக பண்றேன். வேணாம் சொல்லாதீங்க. ஊர் நல்லதுக்காக பயன்படுத்திக்கோங்க. ஸ்கூல், ஹாஸ்பிடல் ஏதாவது கட்டுங்க. அதுக்கு ஆகுற செலவு கூட நானே ஏத்துக்கிறேன்” என்றவனை கடவுளாக தான் அனைவரும் பார்த்து வைத்தார்கள்.
அவன் ஊருக்காக கொடுக்கும் போது தனி மனிதனாக வேதாச்சலத்தாலும் மறுக்க முடியவில்லை.
“உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்ல இருப்பீங்க தம்பி.
கடவுள் சந்நிதானத்தில வச்சி சொல்றேன். நீங்க இந்த கடவுளுக்கும் ஒருபடி மேல உயர்ந்துட்டீங்க தம்பி” என்று அவர் நெகிழ்வாக சொல்ல,
கலாவதிக்கு மகனை எண்ணி பூரிப்பு தான்.
முகம் கொள்ளா சிரிப்புடன், ஊரே கொண்டாடும் மகனை நிறைவாக பார்த்து கொண்டிருந்தார்.
அந்த மகிழ்ச்சி எதுவும் இன்றி சுடரின் பார்வை ஜெய் மீது சந்தேகமாகவே பதிந்து இருந்தது.
எதுக்கு இந்த நாடகம்? என்ற யோசனையில் சுடர் விழிகள் கணவனை விட்டு அகல மறுத்து இருக்க,
“நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனும்” என்று தலைவரை பார்த்து கேட்ட ஜெய்யை சுடரும் விழி சுருக்கி பார்த்தாள்.
“அந்த இடத்த நான் ஊருக்காக எழுதி இருக்கேன். ஆனா தலைவர் முறையில நீங்களும், சாட்சிக்கு இன்னும் சிலரும் கையெழுத்து போட்டா தான் சட்டபடி அந்த இடம் இந்த ஊர் சொத்தாகும்” என்றவன் பத்திரத்தில் கையெழுத்து போட சொல்லி கேட்க,
“அதுக்கென்ன தம்பி தாராளமா கையெழுத்து போட்டு தரோம்” என்றவர்,
கோவில் கர்ப்பகிரக நடையில் வைத்து கையெழுத்து போட தயாராக,
“ஒரு நிமிஷம் மாமா” என்று அவரை தடுத்திருந்தான் தீனா.
சுமுகமாக முடிஞ்சா அது நல்லதுக்கு இல்லையே.
இந்தா தூக்கிட்டான் கட்டைய. நாம கொஞ்சம் என்டர்டெயின்மென்ட் பண்ணலாம் என்று சுவாரசியமாக தான் ஜெய் விழிகள் தீனாவை ஏளனமாக ஒற்றை புருவம் உயர்த்தி, கோணலாக சிரித்த படி பார்த்துக் கொண்டிருந்தது.
‘இன்னும் என்ன டா உன் பிரச்சனை?’ என்பது போல் வேதாசலம் பார்வை அவன் மீது பதிய,
“படிச்சி பார்த்திட்டு கையெழுத்து போடுங்க” என்றவன் கோவில் நடையில் இருந்த பத்திரத்தை பறித்து எடுத்துக் கொண்டே,
“அறிவு இதை வாசி’' என்று ஜெய் மனைவி கையிலேயே கொடுத்தான்.
“அதெல்லாம் எதுவும் தேவையில்ல, ஊருக்கு உதவி செய்ய நினைக்கிற மனுஷனை சந்தேகபடுறது ரொம்ப தப்பு” என்று தீனா தந்தை சுடர் கையில் இருந்து பத்திரத்தை பறிக்க முயல,
கை நீட்டி அவரை தடுத்திருந்தான் ஜெய்.
“பொறுமையா இருங்க மாமா. மச்சான் சொல்றதும் சரி தானே. ஊர் காரியம். படிச்சு பார்த்துட்டே கையெழுத்து போடுங்க” என்றவன் மனைவியை பார்த்து வாசி என்பது போல் விழியசைக்க,
அவளுக்கும், கணவன் மீது நம்பிக்கை இல்லை என்பதால் அதை சத்தமாகவே வாசித்தாள்.
ஜெய் முகவரி முதல் பத்தியிலும், வெள்ளிமலை கிராமத்திற்கு பொது சொத்தாக இஷ்ட தானம் கொடுப்பதாக அடுத்த பக்கத்திலும் இருந்தது.
நிஜமாகவே எழுதி வைத்து விட்டானா? வாசித்த அவன் மனைவியால் கூட இதை நம்ப முடியவில்லை.
வெடுக்கென்று அவள் கையில் இருந்து பத்திரத்தை பிடுங்கிய தீனாவும் கண்களை நன்கு விரித்து அதை பார்த்தான்.
உண்மை தான். இடத்தை ஊருக்கு இஷ்ட தானமாக எழுதி வைத்திருந்தான்.
அதிர்ச்சி நீங்க விழிகளோடு தீனா நிமிர்ந்து ஜெய்யை பார்க்க,
அவனோ நக்கலாக சிரித்து கொண்டே தான் அவனை பார்த்துக் கொண்டிருந்தான்.
தீனா அதிர்ந்து நிற்கும் போதே, அவன் கையில் இருந்து பத்திரத்தை பறித்து வேதாசலம் கையெழுத்து போட,
“மிச்சத்தையும் படிச்சிட்டு போடுங்க” என்றான் ஜெய், உலகமகா உத்தமன் நான் தான் என்ற பாவத்தில்.
“உங்க மேல நம்பிக்கை இருக்கு தம்பி.” என்று அவர் மட்டுமல்ல இன்னும் சில ஊர் பெரிய தலைகளையும் கையெழுத்து போட வைத்தார்.
அவர்களை கண்களை சுருக்கி ஓநாய் பார்வை பார்த்த ஜெய் இதழ்கள் எல்லாரும் கையெழுத்து போட்டு முடியவே கோணலாக சிரித்து கொண்டது.
வேதாசலம் பத்திரத்தை பத்திரமாக அம்மன் பொருட்களை வைக்கும் பிரோவில் வைத்து பூட்டி வைத்தார்.
அதன் பிறகு கரகாட்டம் ஆரம்பமாக, குடு குடு பொடிசுகளும், கிடு கிடு பெருசுகளும் கடல் மணல் பரப்பிய தரையில் இடம் பிடித்து அமர்ந்து கொண்டார்கள்.
சில பக்திமார்க்க இளசுகள் உச்சி பூஜைக்கு, பூபடைப்பு, தோரணம், சாமிசிலை அலங்காரம் என்று பிசியாகி விட்டார்கள்.
அரைகுறை ஆடையுடன் மாராப்பு இன்றி முன்னழகு முட்டி கொண்டு நிற்க, இடை மொத்தமும் பளிச்சென்று கடை பரப்பியபடி, முப்பதை கடந்த இரண்டு பெண்கள் கரகத்தை ஓரமாக வைத்து விட்டு நாதனகாரர் இசைக்கு ஏற்ப ஒரு எல்லையில் இருந்து மறு எல்லை வரை மணலில் காலை உரசிய படி உடலை அசைத்திட,
திருமணமான பெண்களுக்கு அவர்களை பார்க்க பார்க்க கொஞ்சம் எரிச்சலாக தான் இருந்தது.
“எதுக்கு இவளுகளுக்கெல்லாம் ஊர் காச செலவு பண்றாங்க? அவளுக மூஞ்சும் போட்டிருக்க டிரெஸ்சும்” என்று திட்டிக் கொண்டே பூஜைக்கு வரலாம் என்று நடையை கட்டி விட்டார்கள்.
‘நிஜமா பேக்டரிய மூடிட்டாரா? ஒருவேளை திருந்திட்டாரா? ஏன்? எதுக்காக?’ ஆயிரம் ஆயிரம் சந்தேக கேள்விகள் மூளைக்குள் ஓடிட, அவள் பார்வையோ சிந்தையின்றி கரகாட்ட பெண்களை வெறித்து கொண்டு தான் இருந்தது.
மனைவியின் குழப்ப முகத்தை பார்த்த ஜெய், இதழ்கடையில் சிரித்துக் கொண்டே,
“நான் தப்பு பண்ணிட்டேன்” என்றதும் வெடுக்கென்று அவனை திரும்பி பார்த்தாள் அறிவுசுடர்.
“அன்னைக்கு போல் டான்ஸ் இல்ல உன்னை கரகாட்டம் ஆட சொல்லி இருக்கணும்” என்றவனை சுடர் புரியாமல் பார்த்து வைக்க,
“சோ செக்ஸி. இந்த காஸ்ட்யூம் எங்க கிடைக்கும் கேட்டு வை போகும் போது வாங்கிட்டு போகலாம்” என்று அந்த பெண்களின் கஞ்சமில்லா மேனி வனப்பை கண்களால் காட்டி சொல்லிட,
அவனை புருவம் சுருக்கி முறைத்த அவன் மனைவியோ, அங்கே தரையில் அமர்ந்திருந்த தன் தோழி இளமதி அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.
அவளை பார்த்து கள்ள சிரிப்பு சிரித்து கொண்டிருந்தவன் அருகே வந்த தினேஷ்,
“பாஸ் நிஜமா பேக்டரிய ஊருக்காக எழுதி வச்சிடீங்களா?” கூடவே சுத்தும் அவனுக்கே ஏக அதிர்ச்சி.
பாலகிருஷ்ணாவின் கார்மெண்ட் கம்பெனியில் தீ விபத்து என்று புரளியை கிளப்பி விட்டு, அவரது காரியதரிசி மூலம் போன் போட வைத்தது என்னவோ ஜெய் சொல்லி தினேஷ் தான்.
அது ஏதோ அவரை வெறுபேற்ற என்று எண்ணியே அவனும் தன் தலைவனின் ஆக சிறந்த தொண்டனாக வேலையை கச்சிதமாக முடித்திருக்க,
அவர் போனில் குறுக்கு விசாரணை முடித்து, அது வெறும் புரளி என்று உறுதி செய்து விட்டு திரும்பி வரும் முன்னமே மகன் தன் திருவிளையாடலை முடித்து விட்டு மனைவியிடம் கிருஷ்ண லீலையில் இறங்கி இருந்தானே.
தீ விபத்து என்று புரளியை கிளப்பி விட்டது அவனாக தான் இருக்கும் என்று சரியாக யூகித்து அதை பெரிசாக்காது ஓரம் தள்ளியவர், அவனின் மாஸ்டர் பிளானை அறியாது தான் போனார்.
கோவில் உள்ளே திரை சீலை போட்டு மூடிய சிலையை இரு கை கூப்பி வணங்கி கொண்டிருந்த மனைவி அருகே வந்தவர்,
“கலாவதி, கொஞ்சம் அவருக்கு ஓய்வு கொடுமா. எந்நேரமும் கோரிக்கை வச்சிட்டு இருந்தா பாவம் கடவுளும் என்ன தான் பண்ணுவார்” என்று மனைவியை கேலி செய்த பாலா,
“அடுத்த பூஜை ஆரம்பிக்க நேரம் ஆகும். வா கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துட்டு வரலாம்” என்று அழைக்க,
“வயசானவங்களுக்கு தான் நீங்க சொல்ற ஓய்வு வேணும். என் அம்மா ஸ்டில் யங். அவங்களுக்கு கட்டளையிட உங்களுக்கு உரிமை இல்ல” என்று குறுக்க வந்து நின்றான் பாலா, கலாவின் புத்திர பாக்கியம்.
ஊருக்காக இந்த ஒத்த புள்ளையையும் பெத்துக்காம் இருந்திருக்கலாம் என்று அவர் நொந்த நாட்களும் ஏராளம்.
“யாருக்கு டா வயசு ஆச்சு?” என்று ஆவேசமாக கேட்டவர்,
“இப்போ கூட உனக்கு ஒரு தம்பி பாப்பா ரெடி பண்ற அளவுக்கு எனக்கு திறமை இருக்கு.” என்று மகனுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவனுடன் மல்லு கட்ட,
ஹிம் என்று கோணலாக சிரித்த ஜெய். “நினைப்பு தான்.” என்று சொல்லி கொண்டே அன்னையை எழ வைத்து, அங்கே ஓரமாக போட பட்டிருந்த இருக்கைகளில் அமர வைத்தவன், அவனும் அருகே அமர்ந்து கொண்டான்.
ஐம்பது வயதுக்கு மேல் அன்னைக்கு பாடிகாட் வேலை பார்க்கும் மகனை பார்த்து பாலாவுக்கு சிரிப்பு பீறிட்டு வர, அடக்கிக் கொண்டே மனைவிக்கு மற்றைய புறம் சென்று அமர,
அன்னையை தாண்டி தந்தையை முறைத்து பார்த்தான் ஜெய்.
அவரோ அவனைப் பார்த்து சிரித்து கொண்டே, கலுமா என்று அழைக்க,
அவர் மனைவியோ அது நான் இல்லைங்கோ என்ற தொனியில் தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
தந்தை, அன்னைக்கு செல்லப்பெயர் வைத்து அழைத்ததற்கு அன்னையிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் இருக்க, பல்ப் வாங்கிய தந்தையை இதழ்களுக்கு குள் அடக்கிய ஏளன புன்னகையுடன் பார்த்து சிரித்தான் ஜெய்.
மகன் சிரிக்க அவமானமாக போனது. காலம் போன வயசுல இந்த காதல் நாடகம் தேவையா? தாயின் தலைக்கு பின்னால் எட்டி பார்த்து குசு குசுவென தந்தையை கலாய்த்தான் அவர்களின் கடமை புத்திரன்.
அவரும் அவனை போலவே பின்னால் சரிந்து,
“என் பொண்டாட்டி நான் எந்த வயசுல வேணாலும் காதலிப்பேன். எந்த கொம்பன் வந்து தடுப்பான்?” என்று மகனை குத்த,
அவரை பார்த்து உஷ்ணமாக ஜெய் முறைக்க,
ஏதாவது சொன்னியா ய்யா” என்று கலாவதி பின்னால் திரும்பி கேட்க,
கட்டாய புன்னகை ஒன்றை இதழ்களில் கொண்டு வந்தவன் இல்ல மா என்று தலையை ஆட்டிட,
பாலாவுக்கோ அவன் சிவந்த முகமும், சிடு சிடுவென வெடிக்கும் குணமும் அளவில்லா மகிழ்ச்சியை கொடுக்க, இதழ்கடையில் பதுக்கிய புன்னகையுடன் மனைவியை கையை அவர் பற்றிட,
இங்கே எள்ளும் கொள்ளும் வெடித்தது ஜெய் முகத்தில்.
கண்களை அகல விரித்து தந்தையை அவன் முறைக்க,
அதை கண்டும் காணாமல் மனைவியிடம் கதை பேச ஆரம்பித்தார் பாலா.
“கலு மா” என்று அவர் மீண்டும் கலாவதி கையை பிடித்து அழைக்க,
என்னிய யா கூப்டீக? புதிய பெயர் சுருக்களில் பதறி போனார் அந்த வயோதிக காதலி.
உன்னை தான் மா. கன்னியாகுமரி ல பகவதியம்மன் கோவிலுக்கு போய் இருக்கியா
இல்லைங்க
கோவில் திருவிழா முடிய நான் உன்னை கூட்டிட்டு போறேன். என்றவரை பார்த்து கோவில் என்றதும் அவரும் ஆர்வமாக தலையை ஆட்டி வைத்தார்.
அங்க சுத்தி பார்க்க நிறைய இருக்கு. 133 அடியில திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், இப்போ சமீபமாக பிரதமர் கூட அங்க போய் தியானம் பண்ணிட்டு, அம்மனை கும்பிட்டு வந்த பிறகு மூனாவது முறையா தேர்தல்ல ஜெயிச்சு இருக்கார். ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன் என்று அவர் பேச்சை துவங்க,
கலாவதியும், “நிஜமா வா?” என்று வாயில் கையை வைத்து ஆச்சர்ய பட்டவர் சுவாரஸ்யமாக கதை கேட்க,
அவர் மகனோ விழிகளை சுருக்கி அவரை முறைத்து வைக்க,
நீயெல்லாம் இனி எனக்கு எக்ஸ்ட்ரா பிட்டிங் தான் என்பது போல், வாய் ஓயாது மனைவியிடம் வம்பளக்க ஆரம்பித்து விட்டார் பாலா.
இங்கே ஜெய் அன்னை தந்தை காதலில் வயிரெரிந்து கொண்டிருக்க, அங்கே அவன் காதல்காரியோ அவன் திடீர் மாற்றத்தில் ஏக குழப்பத்தில் தான் இருந்தாள்.
கவனமின்றி எங்கோ வெறித்துக் கொண்டிருந்த தோழி தோளில் இடித்த இளமதி என்ன அறிவு என்ன சிந்தனையில் இருக்க என்று கேட்க,
முதலில் எதுவுமில்லை என்று தலையை ஆட்டியவள், பிறகு யாருடனவானது தன் மனதில் இருப்பதை பகிர்ந்தால் தெளிவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவளிடம் தன் சந்தேகங்களை கூறலானாள்.
இளா, இந்த மனுஷன் பண்ற எதையும் என்னால புரிஞ்சிக்க வே முடியல. அத்தன பேர் எத்தனை போராட்டம் பண்ணியிருப்போம். அப்போலாம் மனசு இறங்காத மனுஷன். இப்போ மட்டும் எதுக்கு பெக்டரிய மூடனும்?”
இதுல என்ன சந்தேகம் உனக்கு? எல்லாம் உனக்காக தான். என்றவளை சுடர் அதிர்ந்து பார்க்க,
ஆமா. அதான் அவர் தெளிவா சொன்னாரே என் பொண்டாட்டிக்காக தான் பண்றேனு. நம்ம ஊர் ஆம்பளைங்க களுக்கு மானே தேனேனு கொஞ்சி எல்லாம் பொண்டாட்டிய காதலிக்க தெரியாது. அவங்க அன்பு இது போல அக்கறையுல தான் வெளிபடும்.
இல்ல இளா எனக்கு என்னமோ சந்தேகமா தான் இருக்கு.
அடியே… எப்போத்துல இருந்து இப்படி மனசாட்சி இல்லாத மடச்சி ஆனா? கட்டுன புருஷனை நம்ப முடியல சொல்ற? என்று ஆதங்கமாக கேட்டவள்,
நீ அவர் நமக்கு செஞ்ச பழசு எல்லாம் நினைவு வச்சி குழம்பி போய் இருக்க. ஒன்னே ஒன்னு மட்டும் உனக்கு நீயே தெளிவு படுத்திக்க. உங்க கல்யாணத்துக்கு முன்னாடி உள்ள சங்கதி எல்லாம் கொஞ்சம் ஓரம் தள்ளி வச்சிட்டு, கல்யாணத்துக்கு பிறகு அவர் உன்கிட்ட எப்படி நடந்துகிட்டார் அதை மட்டும் சொல்லு என்று கேட்க,
சுடரும், அவன் செயல்களை நினைவு படுத்தினாள்.
பெரிதாக அவன் அவளை அதிர்ந்து கூட பார்த்து பேசவில்லையே..அவர்களுக்குள் சண்டை என்று இருந்தால் அது கட்டில் சண்டையாக தான் இருக்கும். அதுவும் இப்போது சமீபகாலமாக அரிது தான். அவள் பக்கம் கூட வீணாக வர மாட்டானே.
அதை அவள் நினைவு படுத்தி, மனதில் பதித்து கொண்டிருக்கும் போதே,
அறிவு… ஒரு மனுஷன் எப்பவும் கெட்டவராகவே வா இருப்பாங்க, உன் மேல அவர் வச்சிருக்க பாசம் ஒருவேளை அவரை மாத்தி இருக்கலாம் என்று இளமதி அவளுக்கு தூபம் போட,
சுடரும் இருக்குமோ என்ற எண்ணவோட்டதில் கணவனை பார்த்தவள் விழிகள் முதல் முறை அவனை கண்டு அஞ்சவில்லை, குற்றம் சுமத்தவில்லை.
இயல்பான ஒரு பார்வை, அவள் அறியாது காதலோடு அவள் அவனை பார்த்த முதல் பார்வை.