புது மனைவி கிறக்கத்தில் மெது மெதுவாக அவன் கால்கள் அவள் திசை நகர,
அவன் தன்னை நோக்கி தான் வருகிறான் என்பதை அவதானித்தவள், சட்டென்று திரும்பி அவன் கண்களை ஏறிட்டு பார்த்து, “குடிக்க தண்ணீ ஏதாவது வேணுமா?" இதயம் பட படக்க அவசர அவசரமாக கேட்டாள்.
அவன் ஏன் இங்கு இருக்கிறான்? என்ன வேணுமோ எடுத்துட்டு சீக்கிரம் போய் தொல என்ற தவிப்பு அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
“வேணும் தான். தண்ணீ இல்ல, வேற நிறைய வேணும்" என்றவன் மேலும் அவளை நெருங்க, ஏதோ சரியில்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.
அவனை விட்டு ஓடவும் முடியாது, அவனுக்கு ஒத்துழைக்கவும் முடியாது அவளை தவிக்க விட்டு அவள் இருபுறமும் கேட் போட்டபடி சமையலறை திண்டில் கை வைத்து, தன் கரம் நடுவே சிறை வைத்து தான் அவளுக்கு பின்னால் நின்றிருந்தான்.
தன் ஆடை கூட அவன் மேனி உரசாது சுடர் முன் பக்கமாக சரியா, அவள் முதுகோடு ஒட்டிக் கொண்டே சரிந்த ஜெய், இத்தனை நேரம் தன்னை படாய் படுத்திய அவள் முதுகில் மெல்ல மீசை முடி உரச, உதடுகளால் கோலம் போட,
அடி வயிற்றில் பிரளயமே வெடித்த உணர்வு சுடருக்கு. காதல் இல்லை, மோகம் இல்லை, துளியும் காமன் அவளை ஆட்கொள்ளவில்லை. பயம் பயம் பயம் மட்டும் தான்.
அவன் அருகே வந்தாலே பயம் மட்டும் தான் வந்து தொற்றிக் கொள்கிறது.
மேலும் முன்னால் சரிந்தவள், இடை வழியே கைவிட்டு வயிற்றை அழுத்தி தன்னோடு நெருக்கி கொண்டவன், அழுத்தமாக முத்தமிட்டான் அவன் உதடுகள் கோலமிட்ட முதுகில்.
உடல் மொத்தமும் சிலிர்ந்து அடங்கியது சுடருக்கு.
“வி… விடுங்க…” என்று சத்தமின்றி அவள் முனங்க, அது ஏதோ தாப மொழி போல அவனை தூண்டி தான் விட்டது.
அவள் சொல்லிற்கு மறுபின்றி விட்டு விட்டான். ஆனால் மறு கணமே அவள் இடையை பற்றி முன்னால் திருப்பியவன் கைகள் அவனை பார்த்ததும் அவள் மறைத்த இடை சேலையை தாராளமாக கீழிறக்கி, இடுப்பு சதையை விரல்களால் கிள்ள, கண்ணீரே பெருகி விட்டது அவன் தாரகைக்கு.
வலியிலா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்று தான் சொல்வாள். அவனை தடுக்க முடியாத தன் இயலாமையால் பெருகிய நீர் துளிகளை கண்களை விட்டு வெளி வராது தடுக்க போராடிக் கொண்டிருந்தாள்.
“என்னை பார்த்ததும் மறைக்கிற, நான் நினைச்சா இப்பவே இங்கேயே மொத்தமா உரிச்சு பார்ப்பேன். தெரியும் தானே?” என்று மிரட்டும் தொனியில் கேட்க,
இதயத்தில் பாரம் கூடி போன உணர்வு அவளுக்கு. இடை சேலையை சரி செய்வது பெண்களின் ஏதெட்சையான செயல் தானே, அதை கூட தவறு என்பது போல் சொல்கிறான்.
மற்றவனை பார்த்து சரி செய்தால் தவறு அல்ல, உற்றவன் பார்த்திட கூடாது என்று சரி செய்தது தான் பெரும் தவறாக பட்டது அவனுக்கு.
அவள் உடல் நடுங்குவது அவனுக்கும் தெரிகிறது தான். ஆனால் உள்ளே சுரக்கும் மோகத்திற்கு அவள் மட்டும் தானே தீனி.
முழுவதுமாக வயிற்று சேலையை நீக்கி விட்டவன், முழுக்கை சட்டையை முட்டி வரை மடித்து விட்டிருந்த தன் இரும்பு கைகளால் அவள் இடையை உரசி மேலும் தன்னோடு நெருக்கி கொள்ள, தன் உரமேறிய நெஞ்சில் மோதிய பஞ்சு தனங்களின் மென்மையை சுகித்த படி, தன் மீது மோதிய அவள் அங்கத்தை அளந்த படியே அவன் விழிகள் மேலெழுந்து அவள் முகத்தை பார்த்தன. ரத்தபசையின்றி வெளிறிய முகத்துடன் தான் மூச்சை உள்ளிழுத்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி.
இப்போ உன்னால என்ன பண்ண முடியும் என்ற ஆணவ பார்வை அவனிடம், என்னை விட்டுடு என்ற கெஞ்சல் பார்வை அவளிடம். இடது பக்கமாக இதழை வளைத்து சிரித்து கொண்டவன், அவள் இதழ்களை பார்த்துக் கொண்டே தன் இதழ்களை ஈரமாக்கிட, உதறல் எடுத்தது சுடருக்கு. மதியம் கொடுத்த முத்தத்திற்க்கே இப்போது வரை அடிவயிற்றில் அவன் குமட்டுகிறது. மீண்டும் மீண்டுமா என்று தான் அவளுக்கு தோன்றியது.
அவள் முகத்தை நோக்கி அவன் குனிய, அவன் முகத்தை அத்தனை அருகாமையில் காண பயந்தவள், சப்பென்று தன் இதழ்களையும், விழிகளையும் மூடிக் கொண்டாள்.
அவள் செயல்களை கண்டு, தாராளமாக விரித்த அவன் கருத்த இதழ்கள் பிறை நெற்றியில் பூத்திருந்த வியர்வை துளிகளை சுவைத்தபடி அவள் நெற்றியில் தான் அழுந்த பதிந்தது. அவன் முத்தத்தை உணர்ந்தாலும், கண் திறக்கும் மார்க்கமே இல்லை மங்கையிடம்.
அடிப்படியில் நின்றிருந்த போது கூட வியர்க்க வில்லை. அரக்கன் வந்த அரை கணத்தில் உடல் முழுவதும் வியர்வையில் குளித்தாள். உதடுக்கு கொண்டு நெற்றியில் பூத்திருந்த வியர்வை துளிகளை துடைத்தவன், தன் தாடி அடர்ந்த கன்னத்தை அவள் பட்டு கன்னத்தில் உரசி நெற்றியில் இருந்த கன்னம் வடிந்த வியர்வையை துடைத்தான். இறுதியாக அவன் விழிகள் அவள் அதரங்கள் மேல் பள்ளத்தில் பூத்திருந்த வியர்வை மீது பதிய, விழி உயர்த்தி அவள் விழிகளை பார்த்தான்.
ம்ஹிம் நீ கொன்னே போட்டாலும், கண்களை திறக்க மாட்டேன் என்பது போல் சப்பென்று மூடுக் கொண்டு நின்றிருந்தாள்.
இத்தனை நேரம் அவன் இதழ்கள் கொடுத்த முத்தத்தை அவள் இதழ்களிடம் இருந்து வாங்கிக் கொண்டான், தன் வல கை பெரு விரலுக்கு மட்டும். உதட்டு பள்ளத்தில் துளிர்த்து நின்ற வியர்வையை அவன் பெருவிரல் கொண்டு துடைத்திட, சன்மானமாக அவள் இதழ்களை தீண்டி சென்றது அந்த ஒற்றை விரல் மட்டும் தான்.
“கிச்சன்ல ஏசி வைக்கணும் போலவே” என்று மெதுவாக அவள் காதருகே சொல்லிக் கொண்டே அவன் விலகிய பிறகும், பயத்தில் கண்களை மூடிக் கொண்டு, சிற்பம் போல் தன் மேனி அழகை மறைக்க மதியின்றி நின்றிருந்தவளை இதழை சுழித்து சிரித்தப்படி பார்த்துக் கொண்டே பின்னோக்கி அடியெடுத்து வைத்தவன், சிரித்துக் கொண்டே அந்த அறையை விட்டு சென்று விட்டான்.
“அம்மாடி… நான் என்ன சொல்லிட்டு இருந்தேன்” என்று கேட்டுக் கொண்டே வந்த கலாவதி குரலில் தான் இயல்புக்கு திரும்பினாள் சுடர்.
அவசர அவரமாக அவன் விலக்கி விட்டிருந்த சேலையை சரி செய்தவள், வேகமாக துடித்துக் கொண்டிருந்த இதயத்தை அடக்கவே படாத பாடுப்பட்டு போனால்.
“அய்யய்யோ, கரிஞ்சி போச்சா…” என்று அவளுக்கு பின்னால், அடுப்பில் அவள் கவனிப்பு இன்றி தீஞ்சி போய் இருந்த சப்பாத்தியை எடுத்து குப்பையில் போட்டு விட்டு அவர் திரும்ப,
மல மலவென கண்ணீர் சுடர் கன்னத்தில் இறங்கியது.
“இதுக்கு எதுக்கு கண்ணு அழுவுற? வேற போட்டுக்கலாம்” என்றவர் மருமகள் கவன குறைவால் சப்பாத்தி கேட்டதை எண்ணி தான் அழுகிறாள் என்று அவளை சமாதான படுத்த,
அவளோ அவர் மகனின் செயலில் தேங்கிய விழிநீரை வெளியேற்ற சந்தர்ப்பம் தேடி கொட்டிவிட்டாள் என்பதை அறியாமல் தான் போனார் அந்த தாய்.
அவன் தன்னை நோக்கி தான் வருகிறான் என்பதை அவதானித்தவள், சட்டென்று திரும்பி அவன் கண்களை ஏறிட்டு பார்த்து, “குடிக்க தண்ணீ ஏதாவது வேணுமா?" இதயம் பட படக்க அவசர அவசரமாக கேட்டாள்.
அவன் ஏன் இங்கு இருக்கிறான்? என்ன வேணுமோ எடுத்துட்டு சீக்கிரம் போய் தொல என்ற தவிப்பு அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
“வேணும் தான். தண்ணீ இல்ல, வேற நிறைய வேணும்" என்றவன் மேலும் அவளை நெருங்க, ஏதோ சரியில்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.
அவனை விட்டு ஓடவும் முடியாது, அவனுக்கு ஒத்துழைக்கவும் முடியாது அவளை தவிக்க விட்டு அவள் இருபுறமும் கேட் போட்டபடி சமையலறை திண்டில் கை வைத்து, தன் கரம் நடுவே சிறை வைத்து தான் அவளுக்கு பின்னால் நின்றிருந்தான்.
தன் ஆடை கூட அவன் மேனி உரசாது சுடர் முன் பக்கமாக சரியா, அவள் முதுகோடு ஒட்டிக் கொண்டே சரிந்த ஜெய், இத்தனை நேரம் தன்னை படாய் படுத்திய அவள் முதுகில் மெல்ல மீசை முடி உரச, உதடுகளால் கோலம் போட,
அடி வயிற்றில் பிரளயமே வெடித்த உணர்வு சுடருக்கு. காதல் இல்லை, மோகம் இல்லை, துளியும் காமன் அவளை ஆட்கொள்ளவில்லை. பயம் பயம் பயம் மட்டும் தான்.
அவன் அருகே வந்தாலே பயம் மட்டும் தான் வந்து தொற்றிக் கொள்கிறது.
மேலும் முன்னால் சரிந்தவள், இடை வழியே கைவிட்டு வயிற்றை அழுத்தி தன்னோடு நெருக்கி கொண்டவன், அழுத்தமாக முத்தமிட்டான் அவன் உதடுகள் கோலமிட்ட முதுகில்.
உடல் மொத்தமும் சிலிர்ந்து அடங்கியது சுடருக்கு.
“வி… விடுங்க…” என்று சத்தமின்றி அவள் முனங்க, அது ஏதோ தாப மொழி போல அவனை தூண்டி தான் விட்டது.
அவள் சொல்லிற்கு மறுபின்றி விட்டு விட்டான். ஆனால் மறு கணமே அவள் இடையை பற்றி முன்னால் திருப்பியவன் கைகள் அவனை பார்த்ததும் அவள் மறைத்த இடை சேலையை தாராளமாக கீழிறக்கி, இடுப்பு சதையை விரல்களால் கிள்ள, கண்ணீரே பெருகி விட்டது அவன் தாரகைக்கு.
வலியிலா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்று தான் சொல்வாள். அவனை தடுக்க முடியாத தன் இயலாமையால் பெருகிய நீர் துளிகளை கண்களை விட்டு வெளி வராது தடுக்க போராடிக் கொண்டிருந்தாள்.
“என்னை பார்த்ததும் மறைக்கிற, நான் நினைச்சா இப்பவே இங்கேயே மொத்தமா உரிச்சு பார்ப்பேன். தெரியும் தானே?” என்று மிரட்டும் தொனியில் கேட்க,
இதயத்தில் பாரம் கூடி போன உணர்வு அவளுக்கு. இடை சேலையை சரி செய்வது பெண்களின் ஏதெட்சையான செயல் தானே, அதை கூட தவறு என்பது போல் சொல்கிறான்.
மற்றவனை பார்த்து சரி செய்தால் தவறு அல்ல, உற்றவன் பார்த்திட கூடாது என்று சரி செய்தது தான் பெரும் தவறாக பட்டது அவனுக்கு.
அவள் உடல் நடுங்குவது அவனுக்கும் தெரிகிறது தான். ஆனால் உள்ளே சுரக்கும் மோகத்திற்கு அவள் மட்டும் தானே தீனி.
முழுவதுமாக வயிற்று சேலையை நீக்கி விட்டவன், முழுக்கை சட்டையை முட்டி வரை மடித்து விட்டிருந்த தன் இரும்பு கைகளால் அவள் இடையை உரசி மேலும் தன்னோடு நெருக்கி கொள்ள, தன் உரமேறிய நெஞ்சில் மோதிய பஞ்சு தனங்களின் மென்மையை சுகித்த படி, தன் மீது மோதிய அவள் அங்கத்தை அளந்த படியே அவன் விழிகள் மேலெழுந்து அவள் முகத்தை பார்த்தன. ரத்தபசையின்றி வெளிறிய முகத்துடன் தான் மூச்சை உள்ளிழுத்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி.
இப்போ உன்னால என்ன பண்ண முடியும் என்ற ஆணவ பார்வை அவனிடம், என்னை விட்டுடு என்ற கெஞ்சல் பார்வை அவளிடம். இடது பக்கமாக இதழை வளைத்து சிரித்து கொண்டவன், அவள் இதழ்களை பார்த்துக் கொண்டே தன் இதழ்களை ஈரமாக்கிட, உதறல் எடுத்தது சுடருக்கு. மதியம் கொடுத்த முத்தத்திற்க்கே இப்போது வரை அடிவயிற்றில் அவன் குமட்டுகிறது. மீண்டும் மீண்டுமா என்று தான் அவளுக்கு தோன்றியது.
அவள் முகத்தை நோக்கி அவன் குனிய, அவன் முகத்தை அத்தனை அருகாமையில் காண பயந்தவள், சப்பென்று தன் இதழ்களையும், விழிகளையும் மூடிக் கொண்டாள்.
அவள் செயல்களை கண்டு, தாராளமாக விரித்த அவன் கருத்த இதழ்கள் பிறை நெற்றியில் பூத்திருந்த வியர்வை துளிகளை சுவைத்தபடி அவள் நெற்றியில் தான் அழுந்த பதிந்தது. அவன் முத்தத்தை உணர்ந்தாலும், கண் திறக்கும் மார்க்கமே இல்லை மங்கையிடம்.
அடிப்படியில் நின்றிருந்த போது கூட வியர்க்க வில்லை. அரக்கன் வந்த அரை கணத்தில் உடல் முழுவதும் வியர்வையில் குளித்தாள். உதடுக்கு கொண்டு நெற்றியில் பூத்திருந்த வியர்வை துளிகளை துடைத்தவன், தன் தாடி அடர்ந்த கன்னத்தை அவள் பட்டு கன்னத்தில் உரசி நெற்றியில் இருந்த கன்னம் வடிந்த வியர்வையை துடைத்தான். இறுதியாக அவன் விழிகள் அவள் அதரங்கள் மேல் பள்ளத்தில் பூத்திருந்த வியர்வை மீது பதிய, விழி உயர்த்தி அவள் விழிகளை பார்த்தான்.
ம்ஹிம் நீ கொன்னே போட்டாலும், கண்களை திறக்க மாட்டேன் என்பது போல் சப்பென்று மூடுக் கொண்டு நின்றிருந்தாள்.
இத்தனை நேரம் அவன் இதழ்கள் கொடுத்த முத்தத்தை அவள் இதழ்களிடம் இருந்து வாங்கிக் கொண்டான், தன் வல கை பெரு விரலுக்கு மட்டும். உதட்டு பள்ளத்தில் துளிர்த்து நின்ற வியர்வையை அவன் பெருவிரல் கொண்டு துடைத்திட, சன்மானமாக அவள் இதழ்களை தீண்டி சென்றது அந்த ஒற்றை விரல் மட்டும் தான்.
“கிச்சன்ல ஏசி வைக்கணும் போலவே” என்று மெதுவாக அவள் காதருகே சொல்லிக் கொண்டே அவன் விலகிய பிறகும், பயத்தில் கண்களை மூடிக் கொண்டு, சிற்பம் போல் தன் மேனி அழகை மறைக்க மதியின்றி நின்றிருந்தவளை இதழை சுழித்து சிரித்தப்படி பார்த்துக் கொண்டே பின்னோக்கி அடியெடுத்து வைத்தவன், சிரித்துக் கொண்டே அந்த அறையை விட்டு சென்று விட்டான்.
“அம்மாடி… நான் என்ன சொல்லிட்டு இருந்தேன்” என்று கேட்டுக் கொண்டே வந்த கலாவதி குரலில் தான் இயல்புக்கு திரும்பினாள் சுடர்.
அவசர அவரமாக அவன் விலக்கி விட்டிருந்த சேலையை சரி செய்தவள், வேகமாக துடித்துக் கொண்டிருந்த இதயத்தை அடக்கவே படாத பாடுப்பட்டு போனால்.
“அய்யய்யோ, கரிஞ்சி போச்சா…” என்று அவளுக்கு பின்னால், அடுப்பில் அவள் கவனிப்பு இன்றி தீஞ்சி போய் இருந்த சப்பாத்தியை எடுத்து குப்பையில் போட்டு விட்டு அவர் திரும்ப,
மல மலவென கண்ணீர் சுடர் கன்னத்தில் இறங்கியது.
“இதுக்கு எதுக்கு கண்ணு அழுவுற? வேற போட்டுக்கலாம்” என்றவர் மருமகள் கவன குறைவால் சப்பாத்தி கேட்டதை எண்ணி தான் அழுகிறாள் என்று அவளை சமாதான படுத்த,
அவளோ அவர் மகனின் செயலில் தேங்கிய விழிநீரை வெளியேற்ற சந்தர்ப்பம் தேடி கொட்டிவிட்டாள் என்பதை அறியாமல் தான் போனார் அந்த தாய்.