அத்தியாயம் : 5
"ஏ ஊர்க்காரங்களை விட்டுருங்களேன்..." இதை சொல்லி சொல்லி அவளுக்கு வாய் வலித்ததோ இல்லையோ கேட்டு கேட்டே அவனுக்கு காது வலித்தது. பிரஸ் மீட் முடிந்த நேரத்தில் இருந்து பின்னாலே வந்து நச்சரித்துக் கொண்டிருக்க, "ப்ச்... ஏய் பசிக்குதுடி முதல்ல சாப்பிட விடு" என்று அவன் டைனிங் டேபிளில் சென்று அமர்ந்துக் கொண்டான். அவளும் சேவகியாக பரிமாற ஓடி வந்து நின்றாள்.
சிறை கைதிகளுக்கு நல்லொழுக்க முறையில் சீக்கிரம் விடுதலை அளிக்க படுவது போல தங்களையும் விட்டு விட மாட்டானா? என்ற ஏக்கம். நல்ல மனைவியாக அவன் அருகே நின்று சாப்பாடு பரிமாற, அவள் கரண்டியில் கை வைக்கும் போதே, அவள் கை மீது தன் கையை வைத்து தடுத்தவன், "போய் கை கழுவிட்டு வா" என்று விரட்ட, 'ரொம்ப தான் சுத்தக்காரர். கரண்டில தானே போட போறேன்... அதுக்கு எதுக்கு கையை கழுவனும்?' புலம்பிய படியே அருகே இருந்த வாஷ்பேசனில் கையை கழுவி விட்டு ஓடி வந்து நின்றாள்.
"இட்லி, பூரி, பொங்கல், தோசை... என்ன வேணும்?" ஒவ்வொன்றாக திறந்து பார்த்தவள் ஹோட்டல் சர்வர் ரேஞ்சில் ஆர்டர் கேட்க, "எல்லாம் வேணும்" என்றவன் பார்வை மொத்தமும் மனைவின் உடலை தான் மொய்த்துக் கொண்டிருந்தது.
"ஹ்ம்ம்..." என்று அவன் தேவை அறியாது மண்டையை ஆட்டிக் கொண்டவள், 'இவ்வளவு சாப்பிடுவாரா? அதான் இவ்வளவு பலமா இருக்கார் போல. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான். ச்சீ... ச்சீ... சாப்பாட்டுல கண்ணு வைக்க கூடாது. நல்லா சாப்பிடட்டும்' என்று எண்ணிக் கொண்டவள் இட்லியில் இருந்து ஆரம்பித்தாள்.
ரெண்டு இட்லி, சாம்பார், கலர் கலர் சட்னி என்று எல்லாம் எடுத்து வைத்து சாப்பிடுங்க என்று அவன் முகத்தை பார்க்க, அப்போதும் அவளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெய்.
இடை வரை நீண்டிருந்த கருங்கூந்தலை ஸ்டிரைட்டன் செய்து காதோர முடிகளை சுருட்டி கிளிப் போட்டு சிறப்பாக தான் சிகை அலங்காரம் செய்திருந்தாள் அழகு கலை பெண். என்ன முகத்தில் தான் வெள்ளை அதிகமாகி, அவன் கோபத்திற்கு ஆளாகி கண்ணீர் மல்க பெட்டி கட்டி செல்ல வேண்டியதாகி போயிற்று.
வேலை செய்ய ஏதுவாக சேலை முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகி இருக்க, அந்த சொருகளில் இடை சேலை சற்று கீழிறங்கி அவள் வனப்பு இடையை வெளிச்சமிட, வேடன் எண்ணமெல்லாம் இடையில் ஏறி உழுது நடும் காலம் எப்போது என்று தான்.
"சாப்பிடுங்க..." என்றவள் குரலில் ஏக்க பெருமூச்சு அவனிடம். தட்டையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன், "நான் கை கழுவுனத நீ பார்த்தியா?"
"அய்யோ மறந்துட்டேன். ஒரு பாத்திரத்தில் தண்ணீ எடுத்துட்டு வரவா?" இங்கேயே கை கழுவிக்க என்ற எண்ணத்தில் கேட்டாள்.
அவனோ "நான் என்ன எழுந்து நடக்க முடியாத அளவுக்கு முட்டி செத்து போய் கிடக்கேனா?"
"அப்படி சொல்லல... சரி போய் கை கழுவிட்டு வாங்க."
"என்னையே வேலை ஏவுறியா?"
'அய்யோ ராமா... கை கழுவ சொன்னதெல்லாம் ஒரு வேலையா? என்ன தான் பண்ணனும்? நீங்களே சொல்லி தொலைங்க' பாவமாக அவனை பார்த்தாள்.
"நீயே ஊட்டி விடு"
இதுக்கு தான் இவ்வளவு அலம்பா... முடியல சாமி முடியல சாமி...
நேரடியாக ஊட்டி விட சொன்னால் நிச்சயம் ஏதாவது அலும்பு பண்ணி முறைப்பாள். இப்படி அவள் மண்டையை காய விட்டு அனுபவிப்பதில் அலாதி இன்பம் அவனுக்கு.
சுடரும் அப்பாவியாக இட்லியை பியத்து சைடிஷ்களில் முக்கி விரல் நுனி கூட அவன் உதடுகளில் படாமல் உள்ளே தள்ள, ஓரல் தீண்டலுக்கு திட்டமிட்டவன் ஆசைகள் எல்லாம் நிராசையாக போய்க் கொண்டிருக்க, "பொங்கல் வை" என்று அடுத்ததை கை காட்டினான்.
"ஒன்னு கூட சாப்பிடலயே? சாப்பாட்ட வீணாக்காதீங்க."
"அதெல்லாம் வீணாகாது. நீ சாப்பிடு" என்றதும், "உங்க எச்சிலையா? ச்சீ.... ச்சீ" சட்டென்று முகத்தை சுருக்கிய மனைவியை, அரை கிலோ மீட்டருக்கு தள்ளி நின்னு வாய்க்குள்ள தள்ளின இட்லில எங்கே அவன் எச்சில் பட்டது. கண்களை இடுக்கி அவன் பார்க்க, "ஹி ஹி... நான் அப்புறம் சாப்பிடுறேன்" பல்லை காட்டி கோட்டை சாமியின் கோபத்தை தனித்து வைத்தாள்.
இட்லி தட்டு ஓரம் போக பொங்கல் வந்தது அடுத்த வாய்க்கு, இதழ் தீண்டாமல் தள்ள முடியவில்லை. ஐவிரல்களும் அவன் உதடு தீண்டி நாவில் எச்சில் சுரந்து வெளி வர, இப்போது தான் அது எச்சில் உணவு.
இவ்வளவு நேரம் பச்ச பிள்ளைக்கு உணவூட்டும் எண்ணத்தில் தள்ளிக் கொண்டிருந்தவளுக்கு அவன் எச்சில் ஏதோ செய்ய, அடுத்த வாய் பிசையும் போதே விரல்கள் நடுங்க ஆரம்பித்தது.
அது தானே அவனுக்கும் வேண்டும். அவன் அருகாமையில் அவள் தடுமாற வேண்டும். அவன் தீண்டலில் அவள் இளமை பூக்கள் பூக்க வேண்டும். காற்றாட்டு வெள்ளம் கரை புரல்வதை போல அவள் உணர்வுகளை ஆர்பரிக்க வைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை கொண்டு அவன் திட்டம் தீட்ட, அவன் ஆசை மனைவியோ தடம் மாறாதே மனமே என்று இழுத்து பிடித்து, தன் வேலையை தொடர்ந்தாள்.
அவள் எவ்வளவு தான் திடமாக இருந்தாலும் அதை முறியடிக்க வேண்டும் என்பது தானே அவன் திட்டம்.
"நிற்கிற உன்ன நிமிர்ந்து பார்த்து கழுத்து வலிக்குது. உட்கார்ந்து ஊட்டு"
'சாப்பாடு ஊட்ட வாய மட்டும் திறந்தா போதாதா... என் மூஞ்ச எதுக்கு பாக்கணும்' முனங்கி கொண்டே அருகே கிடந்த சேரில் உட்கார போக, அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தி கொண்டான் ஜெய்.
"அய்யோ! அம்மா!" என்று அலறியபடி அவன் இழு விசையில் பாந்தமாக அவன் மடியில் குடியேறியவள், "என்ன பண்றீங்க யாராவது பார்க்க போறாங்க? விடுங்க" பெண்மைக்கான கூச்சத்தில் நெளிந்து கொண்டே சுற்றும் முற்றும் பார்க்க, அவர்களன்றி யாரும் இல்லை.
அப்படி யாரும் இருந்தாலும் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவன் விழியசைவில் அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லையேல் கண் காணா தூரம் கலகம் செய்து அனுப்பி விடுவான். டைனிங் ஹாலுக்குள் அவன் மனைவியுடன் நுழைந்த அடுத்த கணமே தங்கள் எஜமானனின் விழியசைவிற்கு கட்டுப்பட்டு அனைத்து டிக்கெட்டும் அங்கிருந்து ஓடி இருந்தது.
இவள் தான் கூச்சதிலும், அவன் தீண்டலிலும் நெளிந்து கொண்டிருந்தாள். நேற்று இரவு அன்னியமாக உணர்ந்தவள் இன்று மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று எண்ணினாலே தவிர, அவன் தீண்டல்களை அருவருக்கவில்லை. மஞ்சள் கயிற்றின் மகிமையா அது. நேற்று வரை அவன் வில்லன். இன்றும் வில்லன் தான். ஆனால் கூடுதலாக கணவன் என்ற பதவியும் கிடைத்திருக்கிறது அல்லவா. அவளும் அவனை கணவனாக மனதில் பதிந்து கொண்டாள்.
தன்னை நிலைப் படுத்தி கொண்டு அவன் மடியில் இருந்தவாறே அடுத்த வாய் உணவை அவன் வாயருகே கொண்டு செல்ல, ச்சீ எச்சில் என்று முகத்தை சுழித்தவள் வாய்க்குள் தான் பாதை மாற்றி அவன் சுவைத்த விரல்களை அவள் இதழ்கள் சுவைக்க திருப்பி வைத்தான்.
"நீயும் சாப்பிடல தானே சாப்பிடு" என்று அவன் அக்கறை காட்ட, "நான் தனியா சாப்பிட்டுகிறேனே" விழிகளால் கெஞ்சியவள் கெஞ்சல்கள் அனைத்தும் வீணாக, அவள் கைகளே இன்று அவளுக்கு அன்னியமாகி போனது.
எச்சில் சுவைக்கும் அளவுக்கு இருவரும் நெருங்கவில்லையே. சாதா உணவு தான். எந்த சுவை மாற்றமும் இல்லை. ஆனால் நம் எண்ணங்கள் கூட சுவையை தீர்மானிக்கும் அல்லவா. ரசித்து ருசித்து சாப்பிட்ட பாதி உணவில் புழு தென்பட்டால், அடுத்த வாய் உள்ளே இறங்குமா? அப்படி தான் இருந்தது அவளுக்கும். அவன் நா தீண்டிய விரல்கள் என்ற எண்ணமே வயிற்றை பிரட்டியது.
வாந்தி எடுத்தால் அவனை அவமதித்ததாக ஆகி விடுமே. அவன் கோபப் பட்டால் பலியாவது ஊர் மக்கள் தான் என்று எண்ணி முகத்தை இறுக்கி பாறையை முழுங்குவது போல் கஷ்டபட்டு மென்றுக் கொண்டே தன்னை துளைத்தெடுக்கும் பார்வை உணர்ந்து அவன் புறம் திரும்ப, அவனோ ஒற்றை புருவத்தை உயர்த்தி துயிலுரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவ்வளவு தான் பயத்தில் பட்டென்று சாப்பாட்டை உள்ளே முழுங்கி விட்டு அடுத்த வாய் அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள். அவள் ஊட்டிய உணவை விட, இடை விலகிய சேலை ஊடே கை விட்டு தன்னோடு நெருக்கி, மீசை முடியால் முதுகில் குறுகுறுப்பு செய்து, அவள் விரலை தான் சப்பி சுவைத்து சாப்பிட்டான் கேடி. நடு நடுவே அவள் வயிற்றையும் நிரப்பினான்.
கணவன் மனைவியின் இந்த பாசத்தை ஊட்டும் காட்சியை அறை வாசலில் நின்று மன நிறைவாக பார்த்துக் கொண்டிருந்தார் கலாவதி. மனிஷா மீது பிடித்தம் இல்லை என்றாலும், மகன் விரும்பிய பெண் என்று அவளை ஏற்றுக் கொண்ட அந்த தாய்க்கு நேற்றையை நிகழ்வு எதுவும் நலமாக இல்லை. கலவரம் பண்ணி மகன் வாழ்வில் நுழைந்த பெண்ணால் அவன் இன்பம் கெட்டு விடுமோ என்று அவர் கவலை எல்லாம் மகன் மீது மட்டும் தான்.
ஆனால் இன்று அவளை மடியில் வைத்து இருவரும் உணவூட்டி கொண்டதை பார்த்த பிறகு இதயம் லேசானது.
இன்முகமாக உள்ளே அவர் நுழைய, அம்மா வாசம் உணர்ந்த ஜெய்யோ மடியில் இருந்தவளை சட்டென்று எழுப்பி விட்டிருந்தான். யாருக்கும் வணங்காத தலை கூட அன்னை அன்புக்கு கட்டுப்படுமே. அவளும் அவன் திடீர் விலக்களில் சற்று தடுமாறியவள், உள்ளே நுழைந்திருந்த கலாவதியை பார்த்து இதயம் பட படக்க நின்றிருந்தாள்.
"வாங்க ம்மா சாப்பிடுங்க" என்ற ஜெய் மனைவியை பார்க்க, அவன் எண்ணம் புரிந்துக் கொண்ட சுடரும் "சாப்பிடுங்க அத்தை" என்று வேகமாக அவருக்கும் சாப்பாடு எடுத்து வைக்க போக, "நான் சாப்பிட்டேன் மா" என்று தடுத்த கலாவதி அவள் மீது நேச பார்வை வீசினார்.
ஜெய் இதழ்களோ திருப்திகரமாக வளைந்து கொண்டது. அவன் மணக்க விரும்பியது இப்படி ஒரு பெண்ணை தானே. தனக்கு அடிமையாக சேவகம் செய்ய வேண்டும். தன் அன்னையை அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவருக்காக மட்டுமே மனிஷாவை மணம் முடிக்க தயாரானான். மனிஷா பார்வை கலாவதி மீது இளக்காரமாக பதிவதை அவனும் பார்த்திருக்கிறான் தான். அன்னையிடம் கேட்டால் அவனுக்காக அவர் பொறுத்து போக, உலக நடப்பு, உயர் தர மக்களின் பழக்க வழக்கம் எல்லாம் நில் என்ற நிலையில் இருக்கும் அன்னையோடு மனிஷா சிறிதும் ஒத்து போக மாட்டாள் என்பது நன்றாகவே புரிந்தது.
சுடரை பார்த்த நொடியில் அவன் மனம் ஆராய்ந்தது தனக்கு பொருத்தமான மனைவியாக அவள் இருப்பாளா என்பதை விட, தன் அன்னையுடன் ஒத்து போகும் நல்ல மருமகளாக இருப்பாள் என்பதை தான்.
அவன் முடிவு என்றும் அவனுக்கு பாதகமாக அமைவதில்லை என்பதை அவன் மனைவி நிரூபித்து கொண்டிருக்க, திருப்தி புன்னகை அவன் இதழ்களில் இழையோடியது.
உலகமே அவன் தான் என்று வாழ்ந்து வரும் கலாவதிக்கு கூட மனிஷாவை விட இந்த கிராமத்து பட்டாபூச்சியை பிடித்து போனது. கலவர கல்யாணம் என்ற அசப்பே இல்லாது அத்தனை மனநிறைவு அவருக்கும்.
ஆசை தீர தன் மருமகளை கண்களில் நிரப்பிக் கொண்டவர், ஜெய் புறம் திரும்பி "ஐயா அவங்க எல்லாம் வந்துட்டாக... நான் பேசிட்டு இருக்கேன். நீ சாப்பிட்டு வெரசா வா" என்று சுடருக்கும் சிறு தலையசைப்பை வழங்கி விட்டு சென்றார்.
அவர் சென்றதும் ஏதோ யோசனையில் ஆவென வாயை திறந்து பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியை மீண்டும் மடிக்கு இழுத்து, விட்ட லீலைகளை தொடர்ந்து வயிறு நிறைய சாப்பிட்ட பிறகே அவளோடு அங்கிருந்து வெளியேறினான்.
ஜெய் பின்னால் மன்னருக்கு குடை பிடிக்கும் பெண்போல குடை இல்லாமல் வந்துக் கொண்டிருந்தவளை "அறிவுஊஊஊஊ ..." என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள் இளமதி.
"ஏ ஊர்க்காரங்களை விட்டுருங்களேன்..." இதை சொல்லி சொல்லி அவளுக்கு வாய் வலித்ததோ இல்லையோ கேட்டு கேட்டே அவனுக்கு காது வலித்தது. பிரஸ் மீட் முடிந்த நேரத்தில் இருந்து பின்னாலே வந்து நச்சரித்துக் கொண்டிருக்க, "ப்ச்... ஏய் பசிக்குதுடி முதல்ல சாப்பிட விடு" என்று அவன் டைனிங் டேபிளில் சென்று அமர்ந்துக் கொண்டான். அவளும் சேவகியாக பரிமாற ஓடி வந்து நின்றாள்.
சிறை கைதிகளுக்கு நல்லொழுக்க முறையில் சீக்கிரம் விடுதலை அளிக்க படுவது போல தங்களையும் விட்டு விட மாட்டானா? என்ற ஏக்கம். நல்ல மனைவியாக அவன் அருகே நின்று சாப்பாடு பரிமாற, அவள் கரண்டியில் கை வைக்கும் போதே, அவள் கை மீது தன் கையை வைத்து தடுத்தவன், "போய் கை கழுவிட்டு வா" என்று விரட்ட, 'ரொம்ப தான் சுத்தக்காரர். கரண்டில தானே போட போறேன்... அதுக்கு எதுக்கு கையை கழுவனும்?' புலம்பிய படியே அருகே இருந்த வாஷ்பேசனில் கையை கழுவி விட்டு ஓடி வந்து நின்றாள்.
"இட்லி, பூரி, பொங்கல், தோசை... என்ன வேணும்?" ஒவ்வொன்றாக திறந்து பார்த்தவள் ஹோட்டல் சர்வர் ரேஞ்சில் ஆர்டர் கேட்க, "எல்லாம் வேணும்" என்றவன் பார்வை மொத்தமும் மனைவின் உடலை தான் மொய்த்துக் கொண்டிருந்தது.
"ஹ்ம்ம்..." என்று அவன் தேவை அறியாது மண்டையை ஆட்டிக் கொண்டவள், 'இவ்வளவு சாப்பிடுவாரா? அதான் இவ்வளவு பலமா இருக்கார் போல. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான். ச்சீ... ச்சீ... சாப்பாட்டுல கண்ணு வைக்க கூடாது. நல்லா சாப்பிடட்டும்' என்று எண்ணிக் கொண்டவள் இட்லியில் இருந்து ஆரம்பித்தாள்.
ரெண்டு இட்லி, சாம்பார், கலர் கலர் சட்னி என்று எல்லாம் எடுத்து வைத்து சாப்பிடுங்க என்று அவன் முகத்தை பார்க்க, அப்போதும் அவளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெய்.
இடை வரை நீண்டிருந்த கருங்கூந்தலை ஸ்டிரைட்டன் செய்து காதோர முடிகளை சுருட்டி கிளிப் போட்டு சிறப்பாக தான் சிகை அலங்காரம் செய்திருந்தாள் அழகு கலை பெண். என்ன முகத்தில் தான் வெள்ளை அதிகமாகி, அவன் கோபத்திற்கு ஆளாகி கண்ணீர் மல்க பெட்டி கட்டி செல்ல வேண்டியதாகி போயிற்று.
வேலை செய்ய ஏதுவாக சேலை முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகி இருக்க, அந்த சொருகளில் இடை சேலை சற்று கீழிறங்கி அவள் வனப்பு இடையை வெளிச்சமிட, வேடன் எண்ணமெல்லாம் இடையில் ஏறி உழுது நடும் காலம் எப்போது என்று தான்.
"சாப்பிடுங்க..." என்றவள் குரலில் ஏக்க பெருமூச்சு அவனிடம். தட்டையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன், "நான் கை கழுவுனத நீ பார்த்தியா?"
"அய்யோ மறந்துட்டேன். ஒரு பாத்திரத்தில் தண்ணீ எடுத்துட்டு வரவா?" இங்கேயே கை கழுவிக்க என்ற எண்ணத்தில் கேட்டாள்.
அவனோ "நான் என்ன எழுந்து நடக்க முடியாத அளவுக்கு முட்டி செத்து போய் கிடக்கேனா?"
"அப்படி சொல்லல... சரி போய் கை கழுவிட்டு வாங்க."
"என்னையே வேலை ஏவுறியா?"
'அய்யோ ராமா... கை கழுவ சொன்னதெல்லாம் ஒரு வேலையா? என்ன தான் பண்ணனும்? நீங்களே சொல்லி தொலைங்க' பாவமாக அவனை பார்த்தாள்.
"நீயே ஊட்டி விடு"
இதுக்கு தான் இவ்வளவு அலம்பா... முடியல சாமி முடியல சாமி...
நேரடியாக ஊட்டி விட சொன்னால் நிச்சயம் ஏதாவது அலும்பு பண்ணி முறைப்பாள். இப்படி அவள் மண்டையை காய விட்டு அனுபவிப்பதில் அலாதி இன்பம் அவனுக்கு.
சுடரும் அப்பாவியாக இட்லியை பியத்து சைடிஷ்களில் முக்கி விரல் நுனி கூட அவன் உதடுகளில் படாமல் உள்ளே தள்ள, ஓரல் தீண்டலுக்கு திட்டமிட்டவன் ஆசைகள் எல்லாம் நிராசையாக போய்க் கொண்டிருக்க, "பொங்கல் வை" என்று அடுத்ததை கை காட்டினான்.
"ஒன்னு கூட சாப்பிடலயே? சாப்பாட்ட வீணாக்காதீங்க."
"அதெல்லாம் வீணாகாது. நீ சாப்பிடு" என்றதும், "உங்க எச்சிலையா? ச்சீ.... ச்சீ" சட்டென்று முகத்தை சுருக்கிய மனைவியை, அரை கிலோ மீட்டருக்கு தள்ளி நின்னு வாய்க்குள்ள தள்ளின இட்லில எங்கே அவன் எச்சில் பட்டது. கண்களை இடுக்கி அவன் பார்க்க, "ஹி ஹி... நான் அப்புறம் சாப்பிடுறேன்" பல்லை காட்டி கோட்டை சாமியின் கோபத்தை தனித்து வைத்தாள்.
இட்லி தட்டு ஓரம் போக பொங்கல் வந்தது அடுத்த வாய்க்கு, இதழ் தீண்டாமல் தள்ள முடியவில்லை. ஐவிரல்களும் அவன் உதடு தீண்டி நாவில் எச்சில் சுரந்து வெளி வர, இப்போது தான் அது எச்சில் உணவு.
இவ்வளவு நேரம் பச்ச பிள்ளைக்கு உணவூட்டும் எண்ணத்தில் தள்ளிக் கொண்டிருந்தவளுக்கு அவன் எச்சில் ஏதோ செய்ய, அடுத்த வாய் பிசையும் போதே விரல்கள் நடுங்க ஆரம்பித்தது.
அது தானே அவனுக்கும் வேண்டும். அவன் அருகாமையில் அவள் தடுமாற வேண்டும். அவன் தீண்டலில் அவள் இளமை பூக்கள் பூக்க வேண்டும். காற்றாட்டு வெள்ளம் கரை புரல்வதை போல அவள் உணர்வுகளை ஆர்பரிக்க வைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை கொண்டு அவன் திட்டம் தீட்ட, அவன் ஆசை மனைவியோ தடம் மாறாதே மனமே என்று இழுத்து பிடித்து, தன் வேலையை தொடர்ந்தாள்.
அவள் எவ்வளவு தான் திடமாக இருந்தாலும் அதை முறியடிக்க வேண்டும் என்பது தானே அவன் திட்டம்.
"நிற்கிற உன்ன நிமிர்ந்து பார்த்து கழுத்து வலிக்குது. உட்கார்ந்து ஊட்டு"
'சாப்பாடு ஊட்ட வாய மட்டும் திறந்தா போதாதா... என் மூஞ்ச எதுக்கு பாக்கணும்' முனங்கி கொண்டே அருகே கிடந்த சேரில் உட்கார போக, அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தி கொண்டான் ஜெய்.
"அய்யோ! அம்மா!" என்று அலறியபடி அவன் இழு விசையில் பாந்தமாக அவன் மடியில் குடியேறியவள், "என்ன பண்றீங்க யாராவது பார்க்க போறாங்க? விடுங்க" பெண்மைக்கான கூச்சத்தில் நெளிந்து கொண்டே சுற்றும் முற்றும் பார்க்க, அவர்களன்றி யாரும் இல்லை.
அப்படி யாரும் இருந்தாலும் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவன் விழியசைவில் அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லையேல் கண் காணா தூரம் கலகம் செய்து அனுப்பி விடுவான். டைனிங் ஹாலுக்குள் அவன் மனைவியுடன் நுழைந்த அடுத்த கணமே தங்கள் எஜமானனின் விழியசைவிற்கு கட்டுப்பட்டு அனைத்து டிக்கெட்டும் அங்கிருந்து ஓடி இருந்தது.
இவள் தான் கூச்சதிலும், அவன் தீண்டலிலும் நெளிந்து கொண்டிருந்தாள். நேற்று இரவு அன்னியமாக உணர்ந்தவள் இன்று மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று எண்ணினாலே தவிர, அவன் தீண்டல்களை அருவருக்கவில்லை. மஞ்சள் கயிற்றின் மகிமையா அது. நேற்று வரை அவன் வில்லன். இன்றும் வில்லன் தான். ஆனால் கூடுதலாக கணவன் என்ற பதவியும் கிடைத்திருக்கிறது அல்லவா. அவளும் அவனை கணவனாக மனதில் பதிந்து கொண்டாள்.
தன்னை நிலைப் படுத்தி கொண்டு அவன் மடியில் இருந்தவாறே அடுத்த வாய் உணவை அவன் வாயருகே கொண்டு செல்ல, ச்சீ எச்சில் என்று முகத்தை சுழித்தவள் வாய்க்குள் தான் பாதை மாற்றி அவன் சுவைத்த விரல்களை அவள் இதழ்கள் சுவைக்க திருப்பி வைத்தான்.
"நீயும் சாப்பிடல தானே சாப்பிடு" என்று அவன் அக்கறை காட்ட, "நான் தனியா சாப்பிட்டுகிறேனே" விழிகளால் கெஞ்சியவள் கெஞ்சல்கள் அனைத்தும் வீணாக, அவள் கைகளே இன்று அவளுக்கு அன்னியமாகி போனது.
எச்சில் சுவைக்கும் அளவுக்கு இருவரும் நெருங்கவில்லையே. சாதா உணவு தான். எந்த சுவை மாற்றமும் இல்லை. ஆனால் நம் எண்ணங்கள் கூட சுவையை தீர்மானிக்கும் அல்லவா. ரசித்து ருசித்து சாப்பிட்ட பாதி உணவில் புழு தென்பட்டால், அடுத்த வாய் உள்ளே இறங்குமா? அப்படி தான் இருந்தது அவளுக்கும். அவன் நா தீண்டிய விரல்கள் என்ற எண்ணமே வயிற்றை பிரட்டியது.
வாந்தி எடுத்தால் அவனை அவமதித்ததாக ஆகி விடுமே. அவன் கோபப் பட்டால் பலியாவது ஊர் மக்கள் தான் என்று எண்ணி முகத்தை இறுக்கி பாறையை முழுங்குவது போல் கஷ்டபட்டு மென்றுக் கொண்டே தன்னை துளைத்தெடுக்கும் பார்வை உணர்ந்து அவன் புறம் திரும்ப, அவனோ ஒற்றை புருவத்தை உயர்த்தி துயிலுரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவ்வளவு தான் பயத்தில் பட்டென்று சாப்பாட்டை உள்ளே முழுங்கி விட்டு அடுத்த வாய் அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள். அவள் ஊட்டிய உணவை விட, இடை விலகிய சேலை ஊடே கை விட்டு தன்னோடு நெருக்கி, மீசை முடியால் முதுகில் குறுகுறுப்பு செய்து, அவள் விரலை தான் சப்பி சுவைத்து சாப்பிட்டான் கேடி. நடு நடுவே அவள் வயிற்றையும் நிரப்பினான்.
கணவன் மனைவியின் இந்த பாசத்தை ஊட்டும் காட்சியை அறை வாசலில் நின்று மன நிறைவாக பார்த்துக் கொண்டிருந்தார் கலாவதி. மனிஷா மீது பிடித்தம் இல்லை என்றாலும், மகன் விரும்பிய பெண் என்று அவளை ஏற்றுக் கொண்ட அந்த தாய்க்கு நேற்றையை நிகழ்வு எதுவும் நலமாக இல்லை. கலவரம் பண்ணி மகன் வாழ்வில் நுழைந்த பெண்ணால் அவன் இன்பம் கெட்டு விடுமோ என்று அவர் கவலை எல்லாம் மகன் மீது மட்டும் தான்.
ஆனால் இன்று அவளை மடியில் வைத்து இருவரும் உணவூட்டி கொண்டதை பார்த்த பிறகு இதயம் லேசானது.
இன்முகமாக உள்ளே அவர் நுழைய, அம்மா வாசம் உணர்ந்த ஜெய்யோ மடியில் இருந்தவளை சட்டென்று எழுப்பி விட்டிருந்தான். யாருக்கும் வணங்காத தலை கூட அன்னை அன்புக்கு கட்டுப்படுமே. அவளும் அவன் திடீர் விலக்களில் சற்று தடுமாறியவள், உள்ளே நுழைந்திருந்த கலாவதியை பார்த்து இதயம் பட படக்க நின்றிருந்தாள்.
"வாங்க ம்மா சாப்பிடுங்க" என்ற ஜெய் மனைவியை பார்க்க, அவன் எண்ணம் புரிந்துக் கொண்ட சுடரும் "சாப்பிடுங்க அத்தை" என்று வேகமாக அவருக்கும் சாப்பாடு எடுத்து வைக்க போக, "நான் சாப்பிட்டேன் மா" என்று தடுத்த கலாவதி அவள் மீது நேச பார்வை வீசினார்.
ஜெய் இதழ்களோ திருப்திகரமாக வளைந்து கொண்டது. அவன் மணக்க விரும்பியது இப்படி ஒரு பெண்ணை தானே. தனக்கு அடிமையாக சேவகம் செய்ய வேண்டும். தன் அன்னையை அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவருக்காக மட்டுமே மனிஷாவை மணம் முடிக்க தயாரானான். மனிஷா பார்வை கலாவதி மீது இளக்காரமாக பதிவதை அவனும் பார்த்திருக்கிறான் தான். அன்னையிடம் கேட்டால் அவனுக்காக அவர் பொறுத்து போக, உலக நடப்பு, உயர் தர மக்களின் பழக்க வழக்கம் எல்லாம் நில் என்ற நிலையில் இருக்கும் அன்னையோடு மனிஷா சிறிதும் ஒத்து போக மாட்டாள் என்பது நன்றாகவே புரிந்தது.
சுடரை பார்த்த நொடியில் அவன் மனம் ஆராய்ந்தது தனக்கு பொருத்தமான மனைவியாக அவள் இருப்பாளா என்பதை விட, தன் அன்னையுடன் ஒத்து போகும் நல்ல மருமகளாக இருப்பாள் என்பதை தான்.
அவன் முடிவு என்றும் அவனுக்கு பாதகமாக அமைவதில்லை என்பதை அவன் மனைவி நிரூபித்து கொண்டிருக்க, திருப்தி புன்னகை அவன் இதழ்களில் இழையோடியது.
உலகமே அவன் தான் என்று வாழ்ந்து வரும் கலாவதிக்கு கூட மனிஷாவை விட இந்த கிராமத்து பட்டாபூச்சியை பிடித்து போனது. கலவர கல்யாணம் என்ற அசப்பே இல்லாது அத்தனை மனநிறைவு அவருக்கும்.
ஆசை தீர தன் மருமகளை கண்களில் நிரப்பிக் கொண்டவர், ஜெய் புறம் திரும்பி "ஐயா அவங்க எல்லாம் வந்துட்டாக... நான் பேசிட்டு இருக்கேன். நீ சாப்பிட்டு வெரசா வா" என்று சுடருக்கும் சிறு தலையசைப்பை வழங்கி விட்டு சென்றார்.
அவர் சென்றதும் ஏதோ யோசனையில் ஆவென வாயை திறந்து பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியை மீண்டும் மடிக்கு இழுத்து, விட்ட லீலைகளை தொடர்ந்து வயிறு நிறைய சாப்பிட்ட பிறகே அவளோடு அங்கிருந்து வெளியேறினான்.
ஜெய் பின்னால் மன்னருக்கு குடை பிடிக்கும் பெண்போல குடை இல்லாமல் வந்துக் கொண்டிருந்தவளை "அறிவுஊஊஊஊ ..." என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள் இளமதி.