அத்தியாயம் : 4
பெண்ணுக்கு உயிரை விட கற்பு தான் பெரிது என்று எண்ணும் பெண் தான் அவள். ஆனால் இன்று அந்த கற்ப்பை கூட, அத்தனை உயிர்களுக்காக அரக்கன் காலடியில் போட தயாராகி விட்டாலும், தன் நிலை எண்ணி நிற்காமல் கண்ணீர் வடிந்துக் கொண்டிருக்க, அவனோ ஊடலுக்கு தடையாக இருக்கிறது என்று அவள் கழுத்தில் இருந்த நகைகளை எல்லாம் கழட்டிக் கொண்டிருந்தான்.
மெல்லிய விசும்பலில் தன் கைகளை நனைக்கும் கண்ணீர் எரிச்சலை தர, "ஸ்டாப் இட்" என்றான் மெதுவான அதட்டல் தொனியில். அவளோ நிறுத்தாது டாமை திறந்து விட, "நிறுத்து" அடுத்து ஒரு டெசிபெல் அளவு குரல் உயர்ந்தது.
அப்போதும் அழுகை நின்ற பாடில்லை. "ப்ச்" என்று சலித்த படி நிமிர, "கண்ட்ரோல் இல்லாம அதுவா வருது. நான் என்ன பண்ணட்டும். நீங்க உங்க வேலையை பாருங்க" அவன் கோபம் அறிந்து அவளாகவே பதில் அளித்தாள்.
"முதல்லயே சொல்லிட்டேன். இஷ்டம் இல்லாம எதுவும் வேணாம்" என்று அவன் முறுக்கி கொள்ள, "நான் மறுத்தா, என் ஊர்காரங்களை கொள்ளுவீங்க. கண்ணீர் தானே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க" சொல்லிக் கொண்டே தூக்கு தண்டனை கைதி போல் முகத்தை ஏழு மைல்லுக்கு தூக்கி வைத்துக் கொண்டு அவன் இதழ்களை நெருங்க, ஒற்றை விரலால் அவள் இதழ்களுக்கு தடையிட்டு பின்னால் தள்ளியவன்,
"இந்த மாதிரி அழுது வடிஞ்சு எதுவும் வேணாம். நீயா ஆசை பட்டு வரணும்." (அவளா ஆசை பட்டா?.... நிச்சயம் கிழவன் ஆகிடுவான்.) என்று அழுது அழுது வீங்கி இருந்த அவள் விழிகளை பார்த்துக் கொண்டே சொன்னவன், "அப்போ என் ஊர்க்காரங்க?" என்றவள் தவிப்பை உணர்ந்து, "அவங்களுக்கு கொஞ்சம் நல்ல நேரம் இருக்கு" உயிருக்கு உத்திரவாதம் கொடுத்தான்.
"அவங்கள எதுவும் செய்ய மாட்டிங்க தானே?" தெளிவு படுத்தி கொள்ள கேட்டவளிடம், "அது நீ நடந்துகிறத பொறுத்து" என்றவன் அவள் மடியில் தலை வைத்து சொகுசாக படுத்துக் கொண்டான்.
அப்பாடா என்று ஒரு நொடி திருப்தி பட்டு கொள்ளும் முன்பு, மடியில் தலை சாய்த்து கொண்டவனை அசௌரியமாக உணர்ந்து தள்ளவும் முடியாமல், உரிமை கொடுக்கவும் முடியாமல் நெளிந்து கொண்டிருந்தாள் அறிவு.
முரண்டு பிடித்தால் எடு போனை என்று மிரட்டுவான். அடங்கி குகைக்குள் போன சிங்கத்தை கொக்கரித்து எதற்கு சீண்டி விட வேண்டும்? படுத்துட்டு போ என்று அவள் ஒரு நிலைக்கு வரும் முன், அவனோ "சும்மா தானே இருக்க?" என்று கேட்டுக் கொண்டே, அவள் கையை பிடித்து தலையை கோத பயிற்சி கொடுக்க, 'இல்ல உங்களை சுமந்துட்டு இருக்கேன்' என்று கவுண்டர் கொடுக்க வந்த வார்த்தைகளை தொண்டைக்குள்ளே முழுங்கி விட்டு அவன் கற்று கொடுத்ததை தாய்மை உணர்வுடன் அவள் கைகள் தானாக செய்ய ஆரம்பித்தது.
நம்ம கூட்டத்தை பார்க்கிற வரை வாயை மூடிட்டு அமைதியா இருக்கிறது எல்லாருக்கும் நல்லது என்று எண்ணி அமைதியை கடைப்பிடிக்க நினைக்க, அவனோ நம்ம கடை பீடியை நானே கொழுத்தி விடுறேன் என்று ஆரம்பித்தான்.
"நீ என்னை எப்படி கூப்பிடுவ?"
"நான் உங்கள கூப்பிட்டதே இல்லையே?" என்ன கேட்கிறான்? எதற்கு கேட்கிறான்? என்றே தெரியாமல் பதில் அளிக்க கஷ்டமாக இருந்தது.
அவள் பதிலில் ஒரு பார்வை அவளை பார்த்தவன் "எடு அந்த போனை" என்று சொல்ல, "ஹி... ஹி... அது எதுக்கு? நா... நான்... ம்...மா மாமா" என்று வலுக்கட்டாயமாக பல்லை இழிக்க,
அவனோ "இப்படி கூப்பிடாதனு எத்தனை முறை சொல்லி இருக்கேன். பட்டிக்காட்டான் ஃபீல் வருது" என்று செல்ல கோபம் கொள்ள, தலை சுற்றியது அறிவு சுடருக்கு.
தன்னிடம் என்ன எதிர்பார்த்து கேள்வி கேட்கிறான்? நான் என்ன பதில் சொன்னா சமாதானம் ஆவான்? அவன் திட்டம் தான் என்ன? எதுவும் புரிந்துக் கொள்ள முடியாமல் திணறி கொண்டிருந்தாள்.
தன்னையே மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்து கொடுப்புக்குள் சிரித்தவன், "ஆனா நீ கூப்பிடும் போது ஒரு மாதிரி போதையா நல்லா தான் இருக்கு" என்று சொல்லிக் கொண்டே அவள் பின் தலையை அழுத்தி தன்னை நோக்கி குனிய வைத்து, அவள் நெற்றியில் இதழ் பதிக்க, எச்சில் விழுங்கியவளை தாபமாக பார்த்துக் கொண்டான் ஜெய்.
அவன் ஆசை பட்டு, கையில் இருந்தும் அனுபவிக்க முடியாத முதல் பெண் அவள். இப்படி ஒரு மனைவியோடு முதலிரவில் ஈ ஓட்டுவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டான். கர்ம பலன் போல, ஓராயிரம் இரவு கழித்தவன், உரிமை கொண்டவளிடம் உரிமையை நிலைநாட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.
'அப்படிங்கிறார்... இப்படிங்கிறார்... என்ன தான் எதிர் பார்க்கிறார். நான் லூசா? அவர் லூசா தெரிலையே' மனதில் மட்டும் தான் புலம்ப முடிந்தது அறிவால்.
ஜெய், "நாளைக்கு பிரஸ் மீட் அரேஞ் பண்ண போறேன்" என்றதும். "அய்யா சாமி முதல்ல அத பண்ணுங்க. எல்லாருக்கும் உண்மையை சொல்லிட்டு... எல்லாரையும் கூட்டிட்டு ஊர பாக்க போறேன்" என்றாள் உடனடியாக.
அவளை கண்களை இடுக்கி சிங்க பார்வை பார்த்தவன், "ஜெய் காதல் கதையை கேட்க ஊரே ஆவலா இருக்கு" இருவரையும் ஒற்றை விரலால் சுட்டிக்காட்டி, "ஏமாத்தாம எல்லாம் சொல்லணும்" என்றதும், அவளோ புரியாது கண்களை சுருக்கி சந்தேகமாக பார்த்து வைக்க, எப்படியும் கோக்கு மாக்காக தான் அடுத்த கேள்வி கேட்பாள் என்று புரிந்துக் கொண்டவனும், "நேத்துவரை நீ யாரா? எப்படி வேணா இருந்திருக்கலாம். இப்போ நீ ஜெய் வெய்ப். நீ ஒரு பொய் சொன்னா. நான் அதை உண்மையாக்குவேன். இந்த மொத்த உலகத்தையும் நம்ப வைப்பேன்." அவளுக்கான அங்கீகாரம் அவன் கொடுக்க, அறிவோ "இது ஏதோ தனுஷ்பட டயலாக் உல்டா பண்ண மாதிரி இருக்கு" மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக சொல்லிவிட்டாள்.
'ஹாங்... இதுல மட்டும் தெளிவா இரு டி. காரியத்துல ஒன்னத்தையும் காணோம்.' ஒரு நாள் இரவில் அவனையே புலம்ப வைத்து விட்டாள். அவன் முறைப்பதை பார்த்து, "ஹி... ஹி... சாரி" என்று அவள் இதழை இழுத்து சிரிக்க, அவள் செயல்கள் அனைத்தும் கோபத்தை தூண்டும் அளவுக்கு தாபத்தையும் தூண்டி ரசிக்கவும் வைக்கிறது.
மடியில் கிடந்தவன், அவள் வயிற்று சூட்டில் முகம் புதைக்க, ஹக்... தூக்கிவாரி போட்டது. 'எதுவும் பண்ண மாட்டேன் சொன்னாரே?' அவள் விழிகள் அடுத்த அருவி பாய்ச்சலுக்கு தயாராக, "டைம் தரேன் சொன்னீங்க?" மெல்லிய குரலில் அவனுக்கு நினைவு படுத்த, "அது மெயின் பிட்சருக்கு... ட்ரைலர் என் விருப்பம்" என்று சொல்ல, மீண்டும் நெளிந்துக் கொண்டிருந்தவள் ஒத்துழைப்பு இதற்கு தேவை இல்லை என்று எண்ணி விட்டான் போல. பட்டு சேலை மறைத்த வெண்ணிற வயிற்றில் சேலை விலக்கி சேவகனாக மென் வயிற்றில் முத்தமிட, சட்டென்று ஹார்ட் அட்டாக் வந்த உணர்வில் வற்றி போன நெஞ்சு குழிக்கு எச்சில் விழுங்கி நீர் சேர்த்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்கோ அவள் உணர்வுகளை தூண்டி, பள்ளியறை பாடம் கற்க பேரவா. அவ்ளோ விட்டா பொடி நடையா கூட ஊர் போய் சேருவேன் என்ற ரேஞ்சில் ஆண் தீண்டலில் உருகாதே மனமே! இவன் அரக்கன் என்று பெரிய பூட்டு போட்டு உணர்வை அடக்கி வைத்திருந்தாள்.
அன்று இரவு அவளுக்கு சிவராத்திரியாக மாற, அவனோ அவள் இடையை கட்டிக் கொண்டு வயிற்றில் முகம் புதைத்து நல்ல தூக்கம்.
அடுத்த நாள் காலை பொழுதும் இதமாக புலர, இரவு முழுவதும் அவனுக்கு வாட்ச்மேன் வேலை பார்த்தவள், எப்போது என்று அறியாமல் காலை தான் தூக்கத்தை தழுவி இருந்தாள்.
அவள் மடியில் கண் விழித்தவனுக்கு புது மனைவி வாசம் ஜிவ்வென்று உற்சாகத்தை கொடுக்க, துள்ளலுடன் எழுந்தான். கட்டில் நிலையில் தலை சாய்த்து தூங்கிக் கொண்டிருந்த மனைவியை பார்த்து இதழ் பிரித்து அழகாக சிரித்தபடி அவளை சரியாக படுக்க வைத்து, அவள் நெற்றியில் மென் முத்தம் ஒன்றை வைக்க,
மீசை முடி குறுகுறுப்பில் மெதுவாக கண் விழித்தாள். "குட் மார்னிங் மிஸஸ் ஜெய் கிருஷ்ணா" என்றவனின் காலை வணக்கத்தில் அடித்து பிடித்து எழுந்தவள் காலை கட்டிக் கொண்டு அவனை விட்டு தள்ளியே அமர்ந்து கொண்டாள்.
அதையும் ரசித்துக் கொண்டவன் இதழ்கள் இடது ஓரத்தில் மட்டும் வளைய, அவளை பார்த்த படியே குளியலறை புகுந்து கொண்டான். அவன் சென்ற பிறகே சிறிது ஆசுவாசமாக மூச்சு விட்டு கொண்டாள் அறிவு சுடர்.
அவன் குளித்து தயாராகி வெளியே வரும் வரை அதே பொசிசனில் காலை கட்டிக் கொண்டு தான் அமர்ந்திருந்தாள். ஒரு கண் அவளை அளந்த படி ஜெய் தன் வேலைகளை செய்ய, அவள் இன்னமும் கட்டிலை விட்டு எழாமல் இருக்க, "இப்படியே இருக்க எண்ணமா? பிரஸ் மீட் இருக்கு. ரெடியாகி வா" என்று கண்ணாடி முன் நின்று தலை வாரியவன் விழிகள் மொத்தமும் கண்ணாடியில் தெரிந்த மனைவி பிம்பத்தில் தான் இருந்தது.
"மாத்து உடுப்பு எதுவும் இல்ல" என்று அவள் சொல்ல, "ஊர்ல போய் உன்னோட பழைய தாவணி எல்லாம் அள்ளி போட்டு எடுத்துட்டு வருவோமா" என்று நக்கலாக கேட்டவன், "போடி அனுப்பி விடுறேன்" என்று வெளியேற போக,
"அதுவரை நான் பாத்ரூம்லயா இருக்கது" என்று கேட்டவளை பார்த்து தலையில் அடித்து கொண்டான் ஜெய்.
"பதினஞ்சு பவுன்ல தாலி போட்டவன், ஒரு சேலை வாங்கி கொடுக்க மாட்டேனா? இன்னும் அந்த பீத்தல் தாவணில இருக்கிறதா நினைப்பு" என்று திட்டிக் கொண்டே வெளியேறி விட, அவன் சென்ற பத்தாவது நிமிடம் அழகு கலைஞர்களும், ஆடை வடிவமைப்பாளர்களும் உள்ளே நுழைத்திருந்தனர்.
பார்த்து பார்த்து முன்னூறு நானூறு ரூபாய் தாண்டி உடை எடுக்காதவளுக்கு, அவர்கள் லட்சத்தில் புடவைகளை வகை காட்டா, கருவிழி பிதுங்கி வெளியே விழுந்து விடும் அளவுக்கு பார்த்து வைத்தாள்.
ஆட்டை குளிப்பாட்டி, சீவி சிங்காரித்து வெட்ட கூட்டி போவது போல் இருந்தது. போல் என்ன அவனும் அதை தானே பண்ண போகிறான். அறியா ஆடு கூட்டத்தை பார்த்து மிரள்வதை போல் அவளும் மிரண்ட படி தான் பட்டு சேலை சர சரக்க, அவள் வேண்டா வேண்டா என்று சொல்லியும், "இதெல்லாம் போட்டா தான் கேமரா முன்னாடி அழகா தெரிவிங்க. கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணுங்க. இல்ல சார் கோபப்படுவார்" என்று சொல்லி அரை கிலோ பவுடரை முகத்தில் அப்பி அவளை வெள்ளையாக காட்டுவதாக எண்ணி பேயாக மாற்றி வைத்திருந்தனர்.
அழகு கலை பெண் வழிகாட்டுதலில் சிவப்பு நிற பட்டு சேலையில் மாடியில் இருந்து இறங்கி வந்தவளை தான் கீழே தினேஷுடன் அன்றைய நாளுக்கான திட்டமிடல் பற்றி அளவளாவிக் கொண்டிருந்த ஜெய் பார்த்தான். அவள் எப்படி இருந்தாலும் அவன் கண்கள் ரசிக்கிறது.
ஆனால் தினேஷோ "யார் பாஸ் இந்த பொண்ணு? பேய் மாதிரி மேக்கப் போட்டுருக்கு. அண்ணிய கூட்டி வர சொன்னா, வேற ஏதோ பொண்ண கூட்டிட்டு வர்றாங்க" என்று அவள் ஒப்பணைகளை கலாய்த்து சிரிக்க, ஒரே ஒரு முறை, வாயை அடக்கி கொண்டு "சாரி பாஸ்" என்ற படி பத்திரிக்கையாளர்களை பார்க்க ஓடி விட்டான்.
மனைவி அருகே வரும் வரை அந்த கோபம் அவன் கண்ணில் தெரிந்தது, அவளருகே வந்த அழகு கலை பெண்ணை பார்த்து முறைத்தவன், பேண்ட் பாக்கெட்டில் இருந்து கர்சீப் எடுத்து அப்பாவியாக வந்து நின்ற மனைவி முகத்தை துடித்த படி,
"என் பொண்டாட்டி கருப்பா இருக்கா, வெள்ளையா மாத்தி கொடுனு உன்கிட்ட கேட்டேனா? இப்படி வெள்ளையடிச்சு விளையாடி இருக்க. லுக்... மேக்கப்ங்கிறது இருக்க அழக மெருகேற்றுறதுக்கு தான். வெள்ளை தான் அழகு, கருப்பு அசிங்கம்னு அர்த்தம் கிடையாது. அழகுங்கிறது ஸ்கின் கலர்ல இல்ல அதை முதல்ல புரிஞ்சிக்க. வந்துட்டா பையை தூக்கிட்டு மூஞ்சில வெள்ளையடிக்க" அவளை திட்டிய படியே மனைவி முகத்தில் அதிகமாக இருந்த வெள்ளை மாவுகளை துடைத்து எடுத்தவன், "தினேஷ்" என்று குரல் கொடுக்க, ஓடி வந்து நின்றான் அவன் சேவகன்.
"இந்த பொண்ணு இனி என் கண்ணு முன்னாடி நிற்க கூடாது" கட்டளையிட, "சார்... பிளீஸ்... சார்.... இந்த ஒருமுறை மன்னிச்சு விடுங்க. இனி இப்படி நடக்காது" என்று கெஞ்சி கொண்டிருந்த அழகு கலை பெண்ணை முறைத்து விட்டு, தன்னையே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம் மெல்லிய புன்னகையோடு திரும்பியவன், ஸ்மைல்... என்று தன் இதழ் அருகே இரண்டு விரல்கள் வைத்து சமிக்ஞை செய்ய, அவள் இதழ்களும் மகுடிக்கு ஆடும் பாம்பாக வலுகட்டாயமாக வளைந்து கொள்ள, திருப்திகரமாக சிரித்து கொண்டவன் அவள் கை பிடித்து அழைத்து சென்றான்.
அழகை ஆராதிப்பவன், நிறம் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு அழகு. அந்த அழகை தேடி அனுபவிப்பதில் அலாதி சுகம்.
'இவன் நல்லவனா? கெட்டவனா?' புரியாது முழு பிதுங்கிய படி பழியாடு போல் அவன் இழுப்புக்கு சென்றாள் அறிவு சுடர்.
ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு வந்தவன் மேஜை மேல் பொருத்தி இருந்த பல மைக்குகளுக்கு பின்னால் இருந்த இருக்கையில் மனைவியுடன் அமர்ந்தான்.
நேற்று அத்தனை கூட்டத்தில் எழுந்து பொய் சொல்ல அவள் பட்டப்பாடு அவளுக்கு தான் தெரியும். இப்போதும் உடல் நடுங்க ஆரம்பிக்க, அருகே இருந்தவன் உணர்ந்தானோ என்னவோ? அவள் கைகளை அழுந்த பற்றி "உன் ஊர்காரங்க வேணுமா? வேணாமா?" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சிரித்த படி மிரட்ட, அவளும் அதே பழியாடு புன்னகையோடு மண்டையை ஆட்டினாள்.
ஆரம்பிக்கலாமா என்று கேட்டபடி பத்திரிக்கையாளர்கள் தங்களின் கேள்விகளை துவங்கினர்.
முதல் கேள்வி "உங்க பேர் என்ன மேடம்" என்பது தான்?
"அறிவு சுடர்" என்று அவள் நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்த பய பந்தை மறைத்தபடி சொல்ல, ஜெய்யும் அவள் பெயரை இப்போது தான் மனதில் பதித்துக் கொண்டான்.
ஒரு நாள் இரவு முழுக்க சரசம் ஆட பின்னால் சுற்றியவனுக்கு பெயர் கூட கேட்க தோன்றவில்லை. இப்போது தான் கேட்டு தெரிந்துக் கொண்டான். அத போட்டு எதுக்கு கேட்டுக்கிட்டு என்று விட்டு விட்டானோ என்னவோ.
சுடரோ 'நேத்து நான் சொன்னது எல்லாம் பொய்னு சொல்லி இங்க வந்த காரணம் சொல்லிடலாம். அரக்கன் பிடியில இருக்கும் தன் கிராம மக்கள் பத்தியும் சொல்லி உதவி கேட்கலாம்' என்றெல்லாம் மூளை திட்டமிட்டுக் கொண்டிருக்க, அவள் திருட்டு முழியை பார்த்தே அவள் மனதை படித்துக் கொண்டான்.
வாராத போனை காதில் வைத்து, "எத்தனை போச்சு... தேறுமா? தேறாதா?" என்று கேட்க, பதறி விட்டாள் சுடர்.
"என்... யாருக்கு என்னாச்சு?" அவள் பயம் தானே இவன் ஆயுதம். "ஒன்னுமில்ல அங்க வயசான கிழம் ரெண்டு மயங்கி விழுந்துடுச்சாம்" என்றவன் "உனக்கும் ஒரு பாட்டி இருக்குல?" என்று கேட்க,
"ஹ்ம்ம்... எனக்குனு என் பாட்டி மட்டும் தான் இருக்கு" ராட்சசன் என்ன செய்தானோ கலங்கியது பெண் உள்ளம். மெதுவாக பேச்சு வார்த்தை நடந்தது இருவருக்கும்.
"அப்போ..." என்று பத்திரிக்கையாளர்களை கண் காட்ட, கைகளை அழுந்த மூடி சற்று முன் போட்ட திட்டத்தை ஒதுக்கி தள்ளி விட்டு, பாங்க் ஆப் பரோடா போல சுடர் ஆப் புரூடாவாக மாறி பொய்களை அடுக்கி விட தயாரானாள்.
இருவரின் முதல் சந்திப்பு எப்போது என்று ஜெய்யிடம் தான் கேள்வி வந்தது, "இன்னைக்கு மிஸஸ் ஜெய் கிருஷ்ணா தான் உங்க இன்டர்வியூக்கு பதில் சொல்வாங்க" நைசாக நழுவிக் கொண்டவன், ஆர்வமாக அவளை தான் எள்ளலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
"அய்யோ எல்லாத்துக்கும் நானே பதில் சொல்லனுமா?" என்ற தவிப்பு அவளிடம். "அப்கோர்ஸ்... எனக்கு பொய் சொல்ல வராது. நீ தான் பொய்யுள் புலவியே சொல்லு" என்று சுவாரசியம் கூடியது அவனுக்கு.
ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் சொல்ல முடியாமல் ஏதேதோ சொல்லி சிரித்து சமாளித்து கொண்டிருந்தாள்.
கிராமத்தில் நடந்த ஒரு கலவரத்தில் தான் இருவரும் சந்தித்து கொண்டது. மோதல் துவங்கி காதல். அவனில்லாமல் நானில்லை, நானில்லமல் அவனில்லை என்ற அளவுக்கு காதல் முத்தி போய் கட்டில் வரை சென்று விட்டது என்றெல்லாம் இலக்கே இல்லாமல் அளந்து விட்டுக் கொண்டிருந்தாள். கேட்க கேள்வியை மறுபடியும் கேட்டால் நிச்சயம் வேற பதில் தான் வரும்.
இந்த நிலையில் இங்கே மனிஷாவுடன் திருமணம் பற்றிய கேள்வி வர, அதற்கு என்ன பதில் சொல்வாள்? அவனையும் கெட்டவனாக்கி விட கூடாது. சற்று திணறி அவனை பார்க்க, 'நான் ரொம்ப நல்ல புருஷன். பொண்டாட்டி பேசும் போது குறுக்க வாயே திறக்க மாட்டேன்' என்று அமைதியை கடைப்பிடித்து இதழ் கடையில் மறைத்த புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
"அது... அவர் வீட்ல சொன்னதால ஒத்துக்க வேண்டியதா போச்சு." மத்தபடி என் புருஷன் உத்தமன் ரேஞ்சில் அடுத்த அதிகாரம் போய் கொண்டிருந்தது.
'ஸப்பா முடில டா விட்டுருங்க' என்று அவள் சோர்ந்து விழும் வரை நாக்கு தள்ள தள்ள கேள்வி கேட்டு சாகடிக்க, "இன்டெர்வியூ இஸ் ஓவர்" என்று அவளை அங்கிருந்து காப்பாத்தி அழைத்து வந்தது ஜெய் தான்.
இந்த இன்டெர்வியூ முழுவதும், நேரலையாக டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்க, அடைக்கப்பட்ட அறையில் இருந்து அதை பார்த்த கிராம மக்களுக்கு அத்தனை ஆத்திரம் அறிவு சுடர் மீது. எதிரியை கூட மன்னித்து விடலாம். கூடவே இருந்து தங்களுக்கு இப்படி ஒரு இழுக்கை ஏற்படுத்திய துரோகி அவளை என்ன செய்தால் தகும். ஜெய்யை விட அதிக கோபம் அவள் மீது தான் இப்போது. அரக்கன் திட்டமும் பலித்ததே. இனி அவள் தலை கீழாக நின்று தண்ணீ குடித்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். பட்டு புடவை, நகை என்று அவளை தங்கத்தாலும், வைரத்திலும் இழைத்து அல்லவா வைத்திருக்கிறான்.
அவளை தன் தலையில் கட்ட தான் இந்த கூட்டம் கிளம்பி வந்தது என்று கூட அனைத்தையும் மாற்றி விடுவான்.
கேடி அவன்.... கேட்பாரற்று மாட்டிக் கொண்ட பெண் அவள்.