ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் -‌ கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 14


அன்று விஷால் அலுவலகத்தில் இல்லாததால் வேறு வழியில்லாமல் அருந்ததி அவனை நேருக்கு நேர் சந்தித்து பேசினாள்.
ஆனால் தொழிலைப் பற்றியே இருவரும் பேசினர்.
மறந்தும் கூட தங்களை பற்றி பேசிக் கொள்ளவே இல்லை அவர்கள். அனைத்து தொழில் பேச்சுக்களையும் முடித்து விட்டு வெளியே செல்ல எழுந்தவன் "கல்யாணம்னு கேள்வி பட்டேன்.. வாழ்த்துக்கள் மிஸ்.அருந்ததி" என்று கையை அவளிடம் நீட்டினான்.



அவளும் அவன் அத்துமீறி பேசவில்லை என்பதால் தனது கையை அவன் புறம் நீட்ட அதை பற்றி குலுக்கியவன் முகத்தில் என்ன உணர்வு தான் இருந்தது என்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை ..அவளோ அவனது முகத்தில் தோன்றும் விருப்பமின்மையை பார்க்க காத்துக் கொண்டிருக்க அவனது முகம் உணர்வுகளை தொலைத்து இருந்தது.



"தேங்க்யூ சோ மச் சார் ..."என்று கூறி அவனிடம் இருந்து தனது கையை விலக்கி கொண்டு அவனுக்கு முன்பே அந்த அறையை விட்டு வெளியேறினாள் அவள் ..
அவளுடைய முதுகையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அவன்.
அவனது புன்னகைக்கு பின்னால் இருக்கும் காரணம் அவன் மட்டுமே அறிவான்..



அதன் பிறகு வேலைகள் துரிதமாக நடந்தன. அதாவது அருந்ததியின் திருமண வேலைகள் தான் ..
அவள் இங்கே இருக்க அங்கு அவளது வீட்டில் வேலைகள் மும்முரமாக நடைபெற்றது. முதலில் நிச்சயதார்த்தம் அதன் பிறகு பதினைந்து நாட்களில் திருமணம் என்று முடிவு செய்து விட்டு அருந்ததிக்கு அழைத்து மகிழ்ச்சியாக கூறினார்கள் இந்த விடயத்தை .



அவளும் சரி என்று கூறியவள் அலுவலகத்தில் உள்ளவர்களையும் திருமணத்திற்கு அழைத்தாள் ..
அமுதாவை மட்டும் நிச்சயத்திற்கு அழைத்திருந்தாள். அமுதா சந்தோசமாய் துள்ளிக் குதித்தாள் இச்செய்தியைக் கேட்டு.. தான் முன்னமே வருவதாக கூறினாள் அவள்.. அவளை பார்த்ததும் சிரிப்பு வந்தது அருந்ததிக்கு.
தன்னை சுற்றி நல்லவர்கள் எத்தனை பேர் இருக்க தான் அவனை இன்னும் ஏன் நினைக்க வேண்டும் என இப்போது தான் அவள் உணர்ந்தாள்.


அவள் அவனை நினைக்க வில்லை மறந்து விட்டேன் என்று கூறினாலும் அவளது ஆழ்மனம் மட்டுமே அறிந்த உண்மை என்னவென்றால் இன்னும் அவனையே நினைத்துக் கொண்டே இருப்பது தான் ..
மறந்து விடு என்று கூறியதும் மறந்து விட அவளது காதல் என்ன வெறும் ஈர்ப்பா.. அல்லது அவளது காதல் இன்று நேற்று உருவானதா..



தனது பருவ வயதில் இருந்தே அவனைக் காதலிக்கிறாள் அவள்.. காதல் என்றால் என்ன என்று அவள் உணரும் முன்னமே அவனை நினைக்கத் தொடங்கி விட்டது அவள் மனம் ..ஆனால் இன்று அவள் அவனை மறந்து விட்டதாக சொல்லிக் கொண்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டு சுற்றுகிறாள்.


அன்று அவளது நிச்சயதார்த்தத்திற்காக சென்னை சென்று கொண்டு இருந்தாள் அருந்ததி ..மறு நாள் நிச்சயம் என்ற நிலையில் இன்று தான் அவள் வீட்டிற்கு செல்கிறாள். சில மாதங்களுக்குப் பிறகு இன்று சென்னை செல்லும் போது தான் அவளுக்கு ஆதித்யனின் நினைவே வந்தது.. இப்போது அவன் கையில் சிக்கினால் அவளுடைய நிலைமை என்ன என்று நினைக்கும் போதே அவளுக்கு திக்கென்றானது.. ஆனால் இந்த முறை தந்தையிடம் அனைத்தையும் சொல்ல வேண்டும் என நினைத்தும் கொண்டாள் அவள் ..


வீட்டிற்கு சென்று இறங்கிய அருந்ததிக்கு பலத்த வரவேற்பு..பாச மழையில் குளித்தாள் என்றே கூறலாம்.. சுபா , விஷாலும் அவர்களுடன் அமுதாவும் நாளை காலை வருவதாக கூறிவிட தனியாக வந்து இருந்தாள் அவள் ..அவள் அருகில் வந்த அவளுடைய மூத்த அக்கா பாமினி
"அரு மாப்பிள்ளை போட்டோ பாக்குறியா? சும்மா சொல்லக் கூடாது மாப்பிள்ளை சூப்பர்.." என்று சொல்ல சிரித்து வைத்தாள் அருந்ததி ‌.



அதனை வெட்கம் என நினைத்து அவளது இரண்டாவது அக்கா பானுமதி
"ஏய் மாப்பிள்ளை பற்றி பேசும் போது பொண்ணுக்கு வெட்கத்தைப் பாருங்க.." என்று கிண்டல் செய்தாள் ..எல்லாவற்றிற்கும் ஒரு சிறிய புன்னகை மாத்திரமே அருந்ததியிடம் பதிலாக கிடைத்தது..




வீட்டினர் உடன் பேசினாலும் அவளது கண்கள் எங்காவது தேவ் தென்படுகிறானா என்று தேடியது ..அவனிடம் இப்போதாவது பேசி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றே அவள் அவனை தேடினாள்.. ஆனால் அவனது தாய் மட்டுமே இவளது வீட்டில் நிச்சய வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்க அவரிடம் சென்று சம்ரதாயமாக பேசியவர் தேவ்வை பற்றி இயல்பாக கேற்ப்பது போல் கேட்க....



அவன் தங்கள் கம்பெனியை பார்த்துக் கொள்வதாகவும் இப்போது அதில் ஒரு வேலை விஷயமாக வெளியூர் சென்றிருப்பதாகவும் நாளை காலை வந்து விடுவதாகவும் கூறினார்.. அவளும் நாளை அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டவள் அறைக்குள் சென்று தூங்கிப் போனாள்..அடுத்த நாள் காலை அவளது தாய் வந்து எழுப்பிய பின் தான் கண் விழித்தாள்..நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது அறையில், தனது கட்டிலில் படுத்து தூங்கவும் அவளை அறியாமலே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டாள் அவள்.


நிச்சயம் மாலை நேரம் என்பதால் வேலைகள் மும்முரமாக நடந்த வண்ணம் இருந்தன..காலையில் எழுந்தவள் குளித்து விட்டு கீழே வர தேவ்வும் அவளுடைய குடும்பத்தினருடன் வேலை செய்வதை கண்டவன் முகம் புன்னகையில் பூவாய் மலர்ந்தது.. ஆனால் தேவ்வோ ஒரு நொடி அவளை அழுத்தமாக பார்த்து விட்டு வேலைகளில் கவனமானான்.


அவளோ அவனது புறக்கணிப்பை கண்டு கொள்ளாது அவனிடம் வந்து நின்றாள். அப்போது தான் அவளைப் பார்ப்பது போல் " ஹாய் அரு.." என்றான் அங்கிருந்த தனது கூட்டத்தினரின் முன்னால் எதையும் காட்டிக் கொள்ளாது.. அவளும் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு
" ஹாய் உன் கூட கொஞ்சம் பேசணும்.. உன்னோட பேசி ரொம்ப நாள் ஆச்சுடா.."என்று இயல்பாகவே அவனுடன் பேசினாள்..



" ஐ அம் சாரி அரு..கொஞ்சம் வேலை இருக்கு. அப்புறமா பேசலாம்..." என்று வேலையை காரணம் காட்டி அவளிடம் பேசாமல் அவன் நழுவப் பார்க்க "தேவ் ப்ளீஸ்.." என்று அருந்ததி கூறவே அங்குக் இவற்றையெல்லாம் பார்த்தபடி இருந்த தேவின் அம்மாவிற்கு தேவ் மீது கோபம் வந்து விட்டது.


" தேவ் என்னடா இது அவ தான் உன்கிட்ட பேசனும்னு சொல்றாளே.. கொஞ்சம் போய் அவ கூட பேசினா என்னடா உனக்கு.. பாவம் புள்ள ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கு... போடா போய் பேசு.. வேலை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் ..."
என்று தேவ்வை அதட்ட தாயின் முன் எதுவும் செய்ய முடியாமல்
"சரி வா" என்று தோட்டப் பக்கம் அவளை அழைத்துச் சென்றான்.


அவளும் அவனது அன்னைக்கு நன்றி சொல்லி விட்டு அவன் பின்னே சென்றாள்.தோட்டத்தில் போடப் பட்டு இருந்த ஊஞ்சலில் அமர்ந்து அருந்ததியை பார்க்க அவளும் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
"ம்.. என்ன பேசணும் சொல்லுங்க அருந்ததி.."என்று அவளுக்கு அவன் மரியாதை கொடுத்து பேச அவனது விலகளில் அவள் கண்கள் கலங்கி விட்டது ..அவனுக்கு அதை பார்க்க பாவமாக இருந்தாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு
" சொல்லுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு.." என்றான்.


இதற்கு மேலும் என்னால் முடியாது என்பதைப் போல அவளது கண்களில் இருந்து கண்ணீர் உருண்டு ஓடியது..
" இப்ப எதுக்கு அழறே?" என்றான் தேவ் சற்று கடுப்பாகி..
" ஐ அம் சாரி டா நீ என் மேல கோவமா இருக்கேன்னு எனக்கு தெரியும் ..நான் உன்கிட்ட சொல்லாம போனது தப்பு தான் எனக்கு வேற வழி தெரியல டா.. இங்க இருந்து அந்த கல்யாணத்தை என்னால பார்க்க முடியல.. என்னை என்னடா பண்ண சொல்ற.. அந்த கடிதத்தில் தான் எல்லாத்தையும் எழுதி இருந்தேனே.. அப்ப கூடவா உனக்கு என் மேல இரக்கம் வரலை" என்று கண்ணீருடன் அவள் கேட்க..



" ஆமா கடிதத்தை முழுசா படிச்சேன். ஆனா அதுக்கு முன்னாடியே உங்க விஷயம் எல்லாம் எனக்கு தெரியும்.. என் அண்ணன் கூட நான் பேசுறது இல்லை தெரியுமா உனக்கு.." என்று அவன் அவளிடம் சொல்ல விழி விரித்து அவனை பார்த்தாள் அருந்ததி.. அவளுக்கு இந்த செய்தி புதிதல்லவா..தேவ்விற்கு தனது காதல் முன்பே தெரியும் என்பது அதிர்ச்சியாக இருக்க அவனைப் பார்த்தாள் அவள்.



"என்ன பார்க்குற எனக்கு தெரியாதுனு நினைச்சியா? எனக்கு எல்லாமே தெரியும்.. ஆனா உனக்கு தெரியாத ஒரு விஷயம் இருக்கு..." என்று அவன் நிறுத்தி அவளைப் பார்க்க என்ன என்பது போல் அவனை பார்த்தாள்..
பின் அவன் குரலை செருமிக் கொண்டு
"அவங்க கல்யாணம் அன்னிக்கு நடக்கல ..நின்னு போச்சு.." எனக் கூறவே ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சி என்பது போல் தான் அவனைப் பார்த்து இருந்தாள் அவள்..



" ஏன் ?"என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே அவளிடம் இருந்து வந்தது. "அந்த பேமிலி பணத்தை மட்டும் தான் பாக்குறாங்க ..கல்யாணத்துக்கு முதல் நாள் நைட் அவன் கிட்ட போய் சொத்தை பிரித்து எடுத்துட்டு அவனையும் அந்த ஹாசினியையும் லண்டன் போக சொன்னாங்களாம் அவ பேரன்ட்ஸ்.. அவளும் அதற்கு உடந்தை போல.. லவ் பண்றது தான் பண்ணான் ஒரு நல்ல பொண்ணா அவனுக்கு கிடைக்கல ..



அவனுக்கு அது தேவைதான்.. கெட்டதிலும் ஒரு நல்லது போல கல்யாணத்துக்கு முன்னாடியே இத பத்தி பேசினாங்கலே அதுவே போதும் என்று அம்மா சொல்லி சொல்லி சந்தோஷப்படுவாங்க.." என்று அனைத்தையும் கூறி முடித்தான் அருந்ததி இடம்.


அப்போது தான் சசிதரன் காஞ்சிபுரத்தில் வைத்து அவர்களிடம் நடந்து கொண்ட முறை அவளுக்கு நினைவு வந்தது ..ஆனால் அவள் சொன்ன போது எல்லாம் ஏன் அவன் திருமணம் ஆகவில்லை என்று கூறவில்லை என இப்போது யோசனை செய்தாள் பெண்ணவள்.. ஆனாலும் இப்போது அதை நினைத்து என்ன நடக்கப் போகிறது.. அவளுடைய காதலை போல் அவனுடைய காதலும் தோற்று விட்டது ...பாவம் அவன் என அவளது இளகிய மனம் அவனுக்காக கவலை கொண்டது.



"என்ன யோசிக்கிற அரு.. எனக்கு உன் மேல கோபம் இருக்குத் தான்.. ஆனால் அதைவிட நீ என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலனு கவலையா இருக்கு.." என்று இடைநிறுத்தியவன் மீண்டும் "உனக்கு அவன் வேணாம்.. அவன் ஒரு சுயநலவாதி.. உனக்காக உன் அப்பா பாத்துருக்க மாப்பிள்ளை ரொம்ப நல்லவரு.. அவர் கூட சந்தோஷமா நீ வாழ்ந்தா எனக்கு அதுவே போதும்
." என்று கூறியவன் அவளுடைய தலையை வருடி விட்டு அங்கிருந்து சென்றான்..


எப்போதும் அவளுடன் விளையாடிக் கொண்டே இருப்பவன் இப்படி சொல்லிச் சென்றது உண்மைதான் என தோன்றியது அருந்ததிக்கு.. அவனே அவனுடைய அண்ணனை பற்றி இப்படி பேசுகையில் தான் என்ன செய்ய என யோசனை செய்தபடி அமர்ந்து இருந்தாள் அவள்.


தொடரும்....


 

T22

Well-known member
Wonderland writer
சின்ன டீசர்.



"தேவ் நீ சொன்ன மாதிரியே நான் எல்லாம் பண்ணேன்.. இப்பக்கூட என்கிட்ட பழையபடி பேச மாட்டியா?" என்ற சசிதரனின் கவலை படிந்த குரலில் நன்றாக காதை தீட்டி அவர்கள் பேசுவதைக் கேட்டாள் அவள்.
"ஐ அம் சாரி உன்னைய அண்ணானு கூட கூப்பிட தோணலை எனக்கு.. பழையபடி உன் கிட்ட என்னால் பேச முடியாது .."என்று அவன் கூறும் போது
"தேவ் " என்று அதிர்ச்சி அடைந்தான் சசிதரன்..



அதை கண்டுகொள்ளாதவன்
"நீ பண்ணது சின்ன விஷயம்னு நினைச்சா அது பெரிய தப்பு ...அருவ பற்றி உனக்கு என்ன தெரியும் ..ம் சொல்லு என்ன தெரியும்?
அவ எவ்வளவு கலகலப்பாய் இருப்பான்னு தெரியுமா முன்னெல்லாம்... அவள இப்படி மாத்திட்டியே நீ ..அவகிட்ட நான் ஹாசினியை தான் லவ் பண்றேன் ..எனக்கு உன்னை பிடிக்கலை என்று சொல்லியிருக்கலாம்.. ஆனா நீ என்ன செஞ்ச உன்னோட தெய்வீக காதலுக்காக அவ காதல யூஸ் பண்ணிக்கிட்டே.. ஒரு பொண்ணோட மனச எந்தளவுக்குப் காயப் படுத்த முடியுமோ அந்த அளவு காயப்படுத்திட்டே.." என்று இதுநாள் வரை மனதில் வைத்திருந்த அனைத்தையும் பேசி முடித்தான் தேவ்.


**********

இன்று இவற்றையெல்லாம் நினைக்க அவனது வாழ்க்கை முடிந்து விட்ட உணர்வு தான் அவனுக்கு ..அவளை அவன் இப்போது உயிராக நேசிக்கிறான் ..அவள் தான் அவனுடைய மொத்த வாழ்க்கையும் என்றாகி விட்டது ..இப்போது அவள் வேறு ஒருவனை திருமணம் செய்யப் போகிறாள்..


அன்று அவள் அனுபவித்த அதே வேதனையை தான் இன்று அவன் அனுபவிக்கிறான்.. அனைத்துமே கடவுளின் செயல்.. விதி விட்ட வழி என்று கடந்து போக முடிவு செய்து விட்டான் சசிதரன்.. அவளாவது நன்றாக இருக்க வேண்டும் என்று ஒதுங்கி விட்டான் அவன்.


 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 15


தேவ் அவளிடம் கூறிச் சென்ற விடயத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை அருந்ததி. இப்போதே சசிதரனை பார்க்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு .அவனது காதல் தோல்விக்காக அவள் இப்போது வருந்தினாள். சிறிது நேரம் அப்படியே இருந்தவள் மனம் கேளாமல் சசிதரனின் வீட்டை நோக்கி சென்றால் அவனை சந்திக்கும் பொருட்டு..



அவர்கள் வீட்டில் யாரும் இருக்கவில்லை எனத் திரும்பி வரலாம் என நினைக்க தோட்டத்தில் யாரோ பேசும் குரல் கேட்கவே அங்கே சென்றாள் அருந்ததி.. குரலை வைத்து அதுவும் தேவ்வும் சசிதரனும் தான் என்பதை அறிந்து கொண்டவள் யோசனையாக பூக்களின் மறைவில் நின்று எட்டிப் பார்த்தாள்... ஆனால் அவளது மனமோ தேவ் கூறிய
" நான் அண்ணனுடன் பேசுவதில்லை" என்ற வசனத்தையே நினைத்தபடி இருந்தது.. ஏன் தேவ் அவளிடம் பொய் சொன்னான் என்று அவளது யோசனை செல்லும் போதே மீண்டும் அண்ணன் தம்பி இருவரும் பேச தொடங்கினர்.




"தேவ் நீ சொன்ன மாதிரியே நான் எல்லாம் பண்ணினேன்.. இப்ப கூட என்கிட்ட பழையபடி பேச மாட்டியா?" என்று சசிதரனின் கவலை படிந்த குரலில் நன்றாகத் காதை தீட்டி அவர்கள் பேசுவதைக் கேட்டாள் அவள்..
" ஐ அம் சாரி உன்னை அண்ணானு கூட கூப்பிட எனக்கு தோனல .
பழையபடி உன்கிட்ட என்னால பேச முடியாது.." என்று அவன் கூறும் போதே "தேவ்.." என்று அதிர்ச்சியாக அழைத்தான் சசிதரன்.. அதை கண்டு கொள்ளாதவன்


"நீ பண்ணது சின்ன விஷயம்னு நீ நினைச்சா அது பெரிய தப்பு.. அருவ பத்தி உனக்கு என்ன தெரியும் ..ம் சொல்லு என்ன தெரியும்...அவ எவ்வளவு கலகலப்பா இருப்பா தெரியுமா முன்னாடியெல்லாம்... அவளை இப்படி மாத்திட்டியே.. நீ அவகிட்ட நேரடியா நான் ஹாஸனியை லவ் பண்றேன் எனக்கு உன்னை பிடிக்கலை என்று சொல்லி இருக்கலாம்.. ஆனால் நீ என்ன செஞ்ச உன்னோட தெய்வீக காதலுக்காக அவ காதலை யூஸ் பண்ணிக்கிட்டே... ஒரு பொண்ணோட மனசு எந்த அளவுக்கு காயப்படுத்த முடியுமோ அந்த அளவு காயப் படுத்திட்டே.." என்று இதுநாள் வரை மனதில் வைத்து இருந்த அனைத்தையும் பேசி முடித்தான் தேவ்.



சசிதரனுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.. அவன் சொல்வதும் உண்மை தானே. ஆனால் அதை அவன் காலம் சென்ற பிறகு தான் உணர்ந்தான்.. அதுவும் தேவ் கூறிய பிறகே..
" ஆனா ஒன்று உனக்கு இப்போ நான் நன்றி சொல்லியே ஆகணும்.. அரு இப்போ கல்யாணம் பண்ண ஓகே சொல்லியிருக்கான்னா அதுக்கு முழு காரணமும் நீதான். நான் சொன்ன மாதிரியே நீ அவ மனசை மாத்திட்ட.. அதுக்கு தேங்ஸ்.."என்று கூற இப்போதும் எதுவும் பேசவில்லை சசிதரன்..




ஆனால் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அருந்ததிக்கு தான் அழுகை வந்தது. தனது நண்பன் தனக்காக இவ்வளவு செய்து இருக்கிறான் என்ற நினைப்பிலேயே அழுகை முட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.. உண்மையில் அவன் சிறந்த தோழன் தான்.. ஆனாலும் திருந்தி மன்னிப்பு கேட்பவனை ஏன் மன்னிக்காமல் இருக்கிறான் என்று நினைக்கும் போது தான் கொஞ்சம் உறுத்தியது அவளுக்கு..



"அப்புறம் ....நிச்சயம் வேலை இருக்கு நான் வரேன்.." என்று கூறி விட்டு ஒரு அடி எடுத்து வைத்தவன் திரும்பி சசிதரனை பார்த்து
" நீ உன்னோட வாழ்க்கையில ஒரு பெரிய புதையலே மிஸ் பண்ணிட்ட..அருந்ததி புதையல் மாதிரி ...அதற்காக நான் வருத்தப்படுறேன் உன்னை நினைச்சு..." என்று கூறி விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.




அவன் வருவதைக் கண்ட அருந்ததி மேலும் தன்னை மறைத்துக் கொண்டாள் அவன் கண்ணில் படாதவாறு... அவன் சென்றதை உறுதி செய்து கொண்ட பின் சசிதரனை பார்க்க அவன் கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மற்ற பக்கம் சென்றான்..



அவன் தேவ் முன்பு போல் அவனிடம் பேசாமல் சென்றதை எண்ணித்தான் அழுகிறான் என நினைத்து தேவ்விடம் இதைப் பற்றி பேச வேண்டும் என நினைத்தாள். தனக்காக ஏன் இரு சகோதரர்களும் பிரிய வேண்டும் என்று நினைத்தவள் இருவரையும் சேர்த்து வைக்க எண்ணினாள்.அவளும் கண்ணீர் வழிய கனத்த மனதுடன் சசிதரனுடன் பேசாமலேயே சென்றாள் வீட்டை நோக்கி.




ஏதோ தோன்ற சசிதரன் நுழைவாயில் பக்கம் பார்க்க அருந்ததி சென்று கொண்டிருப்பது தெரிந்தது ..
அவள் எதை எல்லாம் கேட்டாளோ என்று தான் அவன் முதலில் நினைத்தது.. அவனுக்கும் பயம் என்னவென்றால் அவள் அனைத்தையும் கேட்டு விட்டு இப்போது போய் தனக்கு கல்யாணம் வேண்டாம் என்று கூறி விடுவாளோ என்பது தான் ...




அவனுடன் கோபத்தில் தான் அவள் திருமணத்திற்கு சரி என்று சொன்னது. இப்போது அவன் அவளது நல்லதுக்காக அதுவும் தேவ் கூறியதால் தான் இப்படி செய்தான் என்று தெரிந்தால் திருமணம் வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ என பயந்துதான் போனான்.. ஒரு நொடி அவன் மனம் அவள் திருமணம் வேண்டாம் என்று கூறினால் நன்றாக இருக்கும் என்று நினைக்க தான் செய்தது... காதல் கொண்ட மனதின் ஆசை அது.. அவனையும் குறை சொல்லிவிட முடியாது..



என்ன சசிதரனுக்கு அருந்ததி மீது காதலா என்று கேட்டால் ஆமாம் காதல்தான் வந்து விட்டது அவனுக்கு ...அதை நினைக்கையில் இப்போது விரக்தி புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது அவனது இதழ்களில். இப்போதும் அனுக்கு அருந்ததி மீது காதல் வந்த தருணத்தை யோசித்துப் பார்த்தான் அவன்... எப்போதும் மனங்கள் விசித்திரமானவைத் தான் போலும்..



அன்று அருந்ததி திருமணத்திற்கு முதல் நாள் வந்து பேசி சென்ற பிறகும் அவனுக்கு எதுவும் தோன்றவில்லை.. சிறிதளவேனும் குற்ற உணர்ச்சியும் இல்லை அவனுக்கு ..அவன் ஹாசினியை காதலிக்கிறான்.. அவளே தானாக வந்து காதலை சொல்லவும் அவனும் ஏற்றுக் கொண்டான்.. அதன் பிறகு இருவரும் காதல் பறவைகளாக சுற்றித் திரிந்தனர். வெளிநாட்டில் இருந்தாலும் சசிதரன் தனது எல்லை மீறவே இல்லை.. அவனது தாயின் வளர்ப்பு அப்படியானது...



இதனிடையே ஹாசினி நெருக்கமாக வந்து அவனுடன் பழகுகையில் தன்னை அவன் கட்டுப்படுத்திக் கொள்ளவே பெரும்பாடு பட்டு போவான் ..ஆனால் என்றுமே அவன் எல்லை மீறியதில்லை ..இப்படியாக இருக்கும்போது தான் அவன் சென்னை வந்தது ..அந்நேரம் அவனுக்கும் ஹாசினிக்கும் சிறிய மனக்கசப்பு வேறு.. அவன் இங்கு வந்த நாளிலிருந்து அருந்ததி யின் பார்வை அவன் மீது படிவதை அவன் கண்டு கொண்டான் ..
அவளிடம் சொல்லி புரிய வைக்க எண்ணிய நேரத்தில் தான் ஹாசினி இங்கு வரவும் அவளது பொறாமை உணர்வை தூண்டும் பொருட்டு அருந்ததியின் காதலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான் அவன்..




ஆனால் தன்னை மீறிய அன்று அருந்ததியை அவன் முத்தமிட்டு விட்டான். அவள் அருகில் இருக்கும் போது இளமை உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் அன்று அவளை முத்தமிட்டு விட்டான். அதற்குப் பிறகு ஹாசினி ஊட்டி சென்ற போது அவனிடம் மன்னிப்பு வேண்டி நெருக்கமாக..... அந்நேரம் அருந்ததியை மறந்து விட்டு பெற்றோரிடமும் கூறி அவனது பிறந்த நாளன்று ஹாசினுக்கு ப்ரபோஸ் செய்தான்..




எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருப்பதாக அவன் நினைத்து இருக்க திருமணத்திற்கு முந்தைய நாள் வந்து அவளும் அவளது பெற்றோரும் சொத்தைப் பிரிப்பது பற்றி பேசவே அவனுக்குக் கோபம் வந்து விட்டது. பெற்றோருக்கு இருப்பது இரண்டு ஆண் பிள்ளைகள் மட்டுமே.. அவர்களை உடன் இருந்து பார்ப்பது அவர்களது கடமை.. ஆனால் இங்கு என்னவென்றால் சொத்தை பிரித்து எடுத்து விட்டு லண்டனிலேயே செட்ல் ஆக வேண்டும் எனக் கூற அவன் ஹாசினியை பார்த்தான்..



அவள் பெற்றோர் சொல்வது தான் சரி என்றும் அவளுக்கு லண்டன் செல்வது தான் பிடிக்கும் என்றும் கூறவே அப்போதே பெற்றோரிடம் கூறி திருமணத்தை நிறுத்தி விட்டான் சசிதரன்.
அவன் திடீரென திருமணத்தையே வேண்டாம் எனக் கூறுவான் என்பதை எதிர்பார்க்காத ஹாசினி அவனிடம் மன்னிப்பு கேட்டு திருமணத்தை நிறுத்த வேண்டாம் என்றும் கூற அவன் மறுத்து விட்டான் ..




அதன் பிறகு இரண்டு நாட்கள் சென்றதும் தேவ் அவன் முன் வந்து ஒரு கடிதத்தை நீட்ட புரியாமல் பார்த்தாலும் அதை வாங்கிப் படித்துப் பார்த்தான் ‌. அதில் அருந்ததி தனது முழு காதல் கதையையும் எழுதி இருந்ததை படிக்கப்படிக்க அவன் மனம் கனத்துப் போனது..




தான் அவளுக்கு செய்த தீங்கு தான் தனக்கு இன்று இவ்வாறு நடக்க காரணம் என நினைத்துக் கொண்டான் அவன்.. அன்று தேவ் சசிதரனை தன்னால் முடிந்த மட்டும் திட்டி விட்டு சென்றவன் தான் அதிலிருந்து பேசுவதே இல்லை அவனுடன்..




அதன் பிறகு தினமும் அவனுக்கு நினைவு வந்தது என்னவோ அருந்ததி தான்.. அவளைப் பார்க்க வேண்டும் போல் இருக்க தேவ் உடன் சென்று பேசினான்.
அவள் எங்கே இருக்கிறாள் என அவளைப் பற்றி விசாரிக்கத் தேவ் எதுவும் கூறவில்லை..


சிறிது நாட்கள் இவ்வாறே சொல்ல ஒரு நாள் அவன் முன் வந்த தேவ் "அவளை திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைப்பது தான் நீ அவளுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி " என்று கூறவே அவள் இருக்குமிடம் ஆவது தெரியவரும் எனும் ஆர்வத்தில் சரி என்று கூறினான் சசிதரன்..




அதன்படி தான் அவன் காஞ்சிபுரம் சென்றது.. ஆனால் அவள் நன்றாக இருந்தால் போதும் என்ற தேவின் பேச்சில் தான் உணர்ந்தான் தேவ்விற்க்கு அருந்ததியுடன் தான் சேர்வது பிடிக்கவில்லை என்பதை..




ஏனெனில் அவன் செய்த செயல் அப்படிப் பட்டது.. எனவே அவளை திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைத்து விட்டு தான் ஒதுங்கி விட்டான் அவள் வாழ்க்கையை விட்டு ...



அவள் அவனது திருமணத்திற்கு தந்த பரிசை அன்றே அவன் தூக்கி குப்பையில் போட்டு விட்டான் ..காரணம் அது அன்று மகாபலிபுரம் சென்ற போது ஹாசினியுடன் அவன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் அவள் அவனுக்கு கொடுத்த பரிசு..




இன்று இவற்றையெல்லாம் நினைக்கையில் அவனது வாழ்க்கை முடிந்து விட்ட உணர்வு தான் அவனுக்கு.. அவளை அவன் இப்போது உயிராக நேசிக்கிறான்.. அவள் தான் அவனுடைய மொத்த வாழ்க்கையும் என்றாகி விட்டது ..இப்போது அவள் வேறு ஒருவனை திருமணம் செய்யப் போகிறாள் ..


அன்று அவள் அனுபவித்த அதே வலியை வேதனையை தான் இன்று அவன் அனுபவிக்கிறான்.. அனைத்துமே கடவுளின் செயல் ...விதி விட்ட வழி என்று கடந்து போக முடிவு செய்து விட்டான் சசிதரன்..



அவள் நன்றாக இருக்க வேண்டும் என ஒதுங்கி விட்டான் அவன் ..
அப்படியே அமர்ந்திருந்தவன் எழுந்து உள்ளே சென்றான்... இன்று அவளது நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றே ஆக வேண்டிய கட்டாயம் அவனுக்கு ..அவ்வாறு அவன் செல்லவில்லை என்றால் ஏன் என்ற கேள்வி அவனது பெற்றோரிடம் இருந்து வரும் ..எனவே மனதை கல்லாக்கிக் கொண்டு அங்கு செல்ல முடிவு செய்தான் அவன்..மாலை நேரம் போல் அருந்ததியின் வீட்டிற்கு பெற்றோருடன் சென்றான் சசிதரன் தனது காதலியின் நிச்சயதார்த்த விழாவிற்காக உயிர்ப்பே இல்லாமல்..



தொடரும்...



 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 16

இங்கு அருந்ததியும் பெற்றோருக்காக வெளியில் மெல்லிய புன்னகையுடன் தயாராகிக் கொண்டு இருந்தாள் ..
ஆனால் அவளது மனம் பலவற்றையும் யோசனை செய்தபடி இருந்தது. அவளுக்கு இந்த திருமணம் தேவை தானா என்று தோன்றியது இப்போது. ஆனால் பெற்றோரிடம் சம்மதம் கூறி விட்டாளே அந்த ஒரு காரணத்திற்காக அமைதியாக இருந்தாள் அவள் ..




அவளது பக்கத்தில் சுபா மற்றும் அமுதா இருவரும் அமர்ந்து இருந்தனர்.. அன்று காலையே தோழியின் நிச்சயத்திற்கு வந்து இருந்தனர் இருவரும் .. அமுதா சிரித்து பேசியபடி இருக்க சுபா மட்டும் அருந்ததியை தான் யோசனையாக பார்த்தபடி இருந்தாள்.. அவளது பார்வையை அருந்ததி கண்டாலும் காணாதது போல் இருந்து விட்டாள்.




அருந்ததியின் அன்னை இவர்கள் இருக்கும் அறைக்குள் வந்து
" சுபா அமுதா ரெண்டு பேரும் அருந்ததியை அழைச்சிட்டு வாங்க.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மத்த சொந்தக்காரங்க எல்லாருமே வந்துட்டாங்க.." என்று கூறி விட்டு செல்ல இப்போது என்ன செய்வது என தெரியாமல் நடப்பவை அதன் பாட்டில் நடக்கட்டும் என்று அவர்களுடன் வெளியே சென்றாள் அருந்ததி.



வெளியே அவர்களுடன் வந்தவள் பார்வை ஒரு திசையில் போக அதிர்ந்து நின்றாள் பெண்ணவள். தனது கண்களால் காண்பது உண்மைதானா என்று மீண்டும் மீண்டும் அதே பக்கம் பார்த்தாள். ஆம் அங்கு மணமகனாக அமர்ந்து இருந்தது வேறு யாருமில்லை ஆதித்யனே தான் ..அவனைக் கண்டதும் பயம் அப்பிக் கொண்டது அவளுக்கு..




" இவன் எப்படி என் வாழ்க்கையில்? நான் அன்றே தந்தை கூறிய போதே மாப்பிள்ளை யார் என்று பார்த்திருக்க வேண்டும்.." என்று இப்போது தான் காலம் கடந்து போன பின்பு யோசித்தாள் அவள். அவளையே பார்த்து இருந்த சுபா அவளின் அதிர்ச்சியை கண்டாலும் ஏன் என்று அவளுக்கு தெரியவில்லை..




ஆனால் அவளைப் பார்த்தபடி இருந்த தேவ் தனது அண்ணன் சசிதரனை கண்டு தான் அவள் இப்படிப் பார்க்கிறாள் என நினைத்துக் கொண்டான்.. அடுத்த சில நிமிடங்களில் நிச்சய பத்திரிகை வாசிக்கப்பட்டு ஆதித்தியன் அருந்ததியின் கையில் மோதிரத்தையும் போட்டு விட்டான்.. அருந்ததி அவனின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை..



" இவன் தான் இனி என் வாழ்க்கையா?" என்று அவளது மனம் உண்மையாக அழுதது ..வெளியே சொல்லவும் முடியாத நிலை அவளுக்கு..




அதைவிட மோசமான நிலையில் இருந்தான் சசிதரன்.. எவனோ ஒருவன் அவளுக்கு மோதிரம் அணிவிப்பதை அவனால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை .. "இந்த வலியையும் வேதனையையும் தானே அன்று நீ ஹாசினுக்கு மோதிரம் அணிவித்த போது அருந்ததி அனுபவித்து இருப்பாள்.." என அவனது மனசாட்சி அவனை கேள்வி கேட்டது..



எனவே அந்த வேதனையையும் அனுபவிக்க தயாராகி விட்டான் அவன்.. போகப் போக பழகி விடும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் ..இன்னும் 15 நாட்களில் திருமணம் என்று பெரியவர்கள் பேசி முடிவெடுத்து இருந்தனர்.. அதன்பிறகு வேலைகள் என்னவோ அதி வேகமாக நடப்பது போல் இருந்தது அருந்ததிக்கு..




நிச்சயம் முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன.. இன்னும் அவளால் அந்த தாக்கத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை. ஆதித்தனை நினைக்கையிலேயே உள்ளம் பதறியது அவளுக்கு.. இப்போது காஞ்சிபுரம் செல்லாமல் வீட்டில் தான் அவள் இருக்கிறாள்..




யாரிடம் ஆதித்யனை பற்றி சொல்லி திருமணத்தை நிறுத்த என்று பலமாக யோசனை செய்தாள் அவள். ஆனால் யாரிடம் கூறுவது என்பது தான் தெரியவில்லை ..
தேவ்விடம் சொல்லலாம் தான் ஆனால் சசிதரனை மனதில் நினைத்து தான் சொல்கிறாள். சசிதரனை மனதில் நினைத்து தான் அவள் சொல்கிறாள் என நம்பவே மாட்டான்.



தந்தையிடம் சொல்லலாம் என்றால் அதிலும் ஒரு சிக்கல் என்னவென்றால் தந்தை விசாரிக்காமல் அனைத்தினையும் பேசி முடிவெடுத்து இருக்க மாட்டார் .. அவன் வெளியில் நல்லவன் வேஷம் போடுபவனாக இருக்கும் போல என அவளது மனம் அவளுக்கு அறிவுறுத்தியது..




இப்படியே யோசனையில் இருந்த அவளின் போன் அடித்து அவளது யோசனையை கலைத்தது.. புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும் தயக்கத்துடனேயே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.. மறுமுனையில் அவனது குரலே தான்.. ஆதித்யன் தான் அழைத்து இருந்தான் ‌. அழைப்பை ஏற்று காதில் வைத்து தயக்கமாக "ஹலோ.." என்றாள் அவளும்..



"ஹலோ அருந்ததி ..என்ன நான் திருந்திட்டேன்னு நினச்சிட்டு இருக்கியா?" என்று மறுமுனையில் இருந்து அவன் குரல் நக்கலாக ஒலித்தது.. அவள்
தான் அப்படி ஒரு கோணத்தில் யோசிக்கவே இல்லையே.. அவனைப் பற்றியா அவளுக்கு தெரியாது ..நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது உண்மை தானே ..




அதேபோல் இவனும் திருந்த போவதே இல்லை..
" நீ அப்படி நினைச்சிருந்தா ஐ அம் சாரி .."என்றான் மீண்டும் அவனே‌. அவன் பேசுவதை பேசட்டும் என்று அமைதியாக கேட்டுக் கொண்டே இருந்தாள் அவள்.. அவனும் அவளது பதிலை எதிர்பார்க்கவில்லை போலும் பேசிக் கொண்டே போனான் ...



"அன்னைக்கு என்னோட ஆளை அடிச்சு போட்டுட்டு போயிட்ட..போல நீ போனா நான் சும்மா விடுவேனா.. அதுதான் எங்க அப்பா கிட்ட போய் நான் உன்னை லவ் பண்றேன் , கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்னு எல்லாம் சொன்னேன்.. உன்னை பற்றி விசாரிச்ச எங்கப்பாக்கு ஒரே குஷி.தான்.. ஏன்னா நீ தான் பணக்கார வீட்டு பொண்ணு ஆச்சே.. நானே எதிர்பார்க்காத அளவு எல்லாம் சீக்கிரமா நடந்திடுச்சு.
எங்கப்பா போய் உங்க அப்பாகிட்ட பொண்ணு கேட்கவும் அவரும் என்னை பத்தி நாலு இடத்துல கேட்டு ஓகே சொல்லிட்டாரு.. ஏன்னா ஐய்யா தப்பு பண்றது எல்லாம் வெளியில் தெரியாது.. இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம கல்யாணம் ...அப்புறம் இருக்குடி உனக்கு...." என்று அவன் பேச பேச அருந்ததியும் செய்வதறியாது அவன் பேசுவதையே கேட்டபடி இருந்தாள்..



ஆனால் இப்போது மனதில் உறுதியாக ஒரு முடிவை எடுத்தாள் அவள்.. எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பதே அது ..அவனை திருமணம் செய்து கொள்ளவே முடியாது என்று மனதில் உறுதியாக நினைத்துக் கொண்டாள் ..
"பாய் பேபி கல்யாணத்துக்கு ரெடி ஆகி இரு.." என்று கூறியவன் அவளது பதிலைக் கூட எதிர்பார்க்காது வைத்து விட்டான்.. அருந்ததியும் அவனுடன் பேச விரும்பவில்லை. அவள் பேசி முடித்தும் யோசனையிலேயே தான் இருந்தாள்.




**********************


இங்கு சசிதரன் தனது அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி இருந்தான்.
ஆதித்தயனை பற்றி தான் யோசித்துக் கொண்டே இருந்தான்.. காரணம் அவனுக்கு ஆதித்யனை பார்த்தால் அவ்வளவு நல்லவன் போல் தோன்றவில்லை. அவன் அருந்ததியைப் பார்க்கும் பார்வையில் இருந்த குரோதத்தையும் ஒருவித ஏக்கத்தையும் கண்டவன் அவனை ஊன்றி கவனிக்க ஆரம்பித்தான் .





அவனிடம் ஒரு சதவீதம் கூட உண்மை இருப்பதாக தோன்றவில்லை.. அன்றே முடிவு செய்தான் அவனைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும் என்று.. அதன்படி அவனது நண்பன் ஒருவனிடம் கூறி விசாரிக்கச் சொல்ல இன்று காலை அவனது நண்பன் அழைத்து அவனை பற்றி முழுவதையும் கூறினான்.



அவன் அவனுடைய தந்தையிடம் நல்லவன் போல் நடிப்பதை பற்றியும் கூறினான். அவனது தந்தை அவனை நல்லவன் என்று நினைத்து கொண்டு இருக்கிறார். மேலும் பெண்கள் சகவாசம் மது அருந்துதல் போன்ற பழக்கங்களும் அவனுக்கு உண்டு என்பதை சசிதரனின் நண்பன் கூற அவனுக்குத் தான் யோசித்தது சரியே என்று தோன்றியது..



தகவல் கூறிய நண்பனிடம் அதற்காக சில ஆதாரங்களையும் கேட்டான் சசி தரன்.. இல்லை என்றால் முதலாவது தேவ்வே அவனை நம்ப மாட்டான்.. அவனும் "ஒரு நாள் டைம தா.." என்று கூறிவிட்டு போனை வைத்தான். அதன் பிறகு தான் சசிதரன் இவ்வாறு அரையில் யோசனை செய்தபடி சுற்றுவது..




ஆதாரம் கிடைத்ததும் முதலில் தேவ் விடம் தான் கூற வேண்டும் என்று நினைத்தவன் அதன் பிறகே தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான். அருந்ததி அவனுடன் சேரவில்லை என்றாலும் பரவாயில்லை அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தான் அவன்..




அடுத்த நாளே அவனது நண்பன் அழைத்து அவனது வாட்ஸ்அப் எண்ணிற்கு சில புகைப்படங்களை அனுப்புவதாக கூறி வைத்தான் .அவன் அழைப்பை துண்டித்த அடுத்த நொடியே சசிதரனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு சில புகைப்படங்கள் வந்தன.
அனைத்துமே ஆதித்தயனின் லீலைகளை சுமந்தே இருந்தது. சிலவற்றில் மது கோப்பையை கையில் வைத்தபடி ...மற்றவைகளில் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இருந்தன..





அதிலும் சிலதை கண்கொண்டு பார்க்கவே முடியாத அளவு இருந்தது. அவ்வளவு அநாகரீகமாக இருந்தன அவை ..அவனால் கூட அவற்றை பார்க்க முடியவில்லை... இந்த ஆதாரம் போதும் அவன் அருந்ததியின் வாழ்க்கையில் நுழைவதை தடுக்க... அப்போது தான் அவனுடைய முகத்தில் ஒரு அழகிய புன்னகை தோன்றி மறைந்தது..


அன்றே தங்களது அலுவலகத்தில் வைத்து தேவ்வை சந்தித்தான் சசிதரன் ..அவனிடம் பேச வேண்டும் என்று கூறியே அவனது அறைக்கு அழைத்து வந்து இருந்தான். உள்ளே வந்ததும் முகத்தை தூக்கி வைத்தபடி இருக்க அவனைக் கண்டு இப்போது சசிதரனுக்கு சிரிப்புதான் வந்தது..




சிறு வயதில் அவனுடன் சண்டை போட்டு விட்டு இப்படித்தான் இருப்பான் அவன் என்று நினைக்கையில் சத்தமாகவே சிரித்து விட்டான் சசி தரன்.. இப்போது மனம் லேசாக இருப்பதால் சிரிக்க முடிந்தது அவனால் .
"என்ன இங்க வர சொல்லிட்டு நீ தனியா சிரிக்கிற?" என்று கடுப்பாகி விட்டான் தேவ் ..



"டேய் உன் பிரண்டு கூட இவ்வளோ என் மேல கோபப்பட்டு மாட்டாடா.." என்று கூற அவனை முறைத்தான்..



" சரி சரி அத விடு.. உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்.." என்று இவனும் சீரியசாக பேச அவனை என்ன என்பது போல் பார்த்தான்..
சசி தரன் தனக்கு அன்று நிச்சயதார்த்தத்தின் போது தோன்றிய சந்தேகத்தையும் அதன் பிறகு அவனை பற்றி விசாரித்ததையும் முழுமையாக கூறினான்..


"நான் சொல்றதை நீ நம்ப மாட்டேன்னு எனக்கு தெரியும்.. என் மேல கோவத்தில் இருக்கிறதால நம்ப மாட்ட..
ஆனா இவன் ரொம்ப மோசமானவன்.. அருந்ததியை நான் லவ் பண்றேன்.. நீ நம்பிலனாலும் அது தான் உண்மை. அவ என் கூட இல்லனாலும் பரவாயில்லை அவ சந்தோஷமா இருக்கனும்.



அதுவே போதும் எனக்கு..நீ நம்பனும்றதுக்காக தான் நான் சில ஆதாரங்களை கொண்டு வந்து இருக்கேன்.." என்று அவனது நண்பன் அனுப்பிய புகைப்படங்களை காட்டினான் .
."என் மேல சந்தேகமா இருந்தா உனக்கு தெரிஞ்ச யார்கிட்டயாவது சொல்லி நல்லா விசாரிச்சு பாரு‌." என்றான் சசிதரன்..


தொடரும்...


 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 17


தனது போனை தேவ்விடம் நீட்டினான் சசிதரன்.அதனை ஓரிரு நிமிடங்கள் உற்றுப் பார்த்துவிட்டு மீண்டும் அவனைப் பார்க்க
"நீ என்ன நம்பலன்னா வெளியே கொஞ்சம் விசாரிச்சு பாரு.. அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு... அது என்னன்னா அங்கிள் விசாரிக்காம தன்னோட பொண்ண கொடுக்க மாட்டாரு.. ஆதித்யனோட அப்பா ரொம்ப நல்லவர். என்னோட கணிப்பு சரின்னா அவருக்கு இவனோட அடுத்த பக்கம் தெரியாது ..



ஏன்னா அவன் அவர் கிட்ட ரொம்ப ஸ்மார்ட்டா நடிக்கிறான்.. அதனால் தான் நீ விசாரிக்கிறதுனா உன்னோட பிரெண்ட்ஸ் யார்கிட்டயாவது சொல்லி விசாரிச்சு பாரு ..இல்லன்னா அவனை நீயே வாட்ச் பண்ணு.." என்று கூற அவனது கூற்றில் இருந்த உண்மையில் சரியென தலையசைத்தான் தேவ்..




இந்த புகைப்படங்கள் உண்மையாகத்தான் இருக்கும் என அவனது ஆழ் மனது சொன்னது ..அவனது முகத்தை பார்த்த சசி தரன்
"என்ன யோசிக்கிற?" என்றான்.
" ஒரு வேளை அருந்திக்கு இவனைப் பற்றி ஏதோ தெரிஞ்சிருக்கும் போல .. ஏன்னா நிச்சயம் அன்னைக்கு அவ இவனைக் கண்டதும் ரொம்ப ஷாக் ஆகிட்டா..உன்னை பார்த்து தான் அப்படி இருக்கான்னு நான் தான் தப்பா நினைச்சிட்டேன்.." என்று தனது சந்தேகத்தையும் கூறினான் தேவ்..



"அப்படினா அவ கிட்டயே கேட்டு பாரு.." என்று சசிதரன் சொல்ல இல்லை என்று தலையாட்டினான் தேவ்..
" முதல்ல நான் அவனைப் பற்றி விசாரிச்சுட்டு அங்கிள் கிட்ட சொல்லலாம் என்று தான் இருக்கேன் ..அவகிட்ட சொல்றது சரியாகாது .."
என்றான் ..அவனது தோழிக்கான அக்கறையை பார்த்து எப்போதும் போல் இப்போதும் அவனை வியப்பாகப் பார்த்தான் சசிதரன்..


அதனை அவன் சொல்லும் செய்தான்.
" அதி ரொம்ப லக்கி உன்னை மாதிரி பிரெண்ட் கிடைச்சிருக்கு அவளுக்கு.. "என்றான் ..அதை கேட்டு புன்னகைத்தவன்
"அதி‌ ?"என்றான் கேள்வியாக ..
"அது ...அது வந்து .."என்று சசிதரன் தடுமாற
"ரொம்பவே லவ் பண்றியோ?"என்று அவனைப் பார்த்து நக்கலாக கேட்டான் தேவ்.. அவனது நக்கலை புரிந்து கொண்டவன்
" ஐ அம் ரியலி சாரி ..ஆனா எவ்வளோ மன்னிப்பு கேட்டாலும் என்னோட தப்பை மறைக்க முடியாது மறுக்கவும் முடியாது.. ஆனா அம்மா மேல சத்தியமா சொல்றேன் என்னோட உயிரே அவதாண்டா..



அவ வேறு ஒருத்தரை கல்யாணம் பண்ணி போனா கூட நான் அவளை நினைச்சிட்டே வாழ்ந்திடுவேன் ..என்னோட லைப்ல முன்னே ஒரு காதல் இருந்து இருக்கலாம் அதை இப்ப மாற்ற முடியாது.. ஆனா இனிமேல் என்னோட மொத்த காதலுமே அவதான் ..அவ என் மேல வச்ச காதலுக்கு நான் தகுதி இல்லை தான்.. பட்..." என்று அதற்கு மேல் பேச முடியாது வேறு எங்கோ பார்வையைப் பதித்தான் தேவ்வினை பார்க்காமல்..


அவனை பார்க்க முதல் முறை பாவமாக இருந்தது தேவ்விற்க்கு ..அவன் தாயின் மீது சத்தியம் செய்து சொல்கையில் அவன் உண்மை என்று நம்பினான்.. ஏனெனில் சசிதரன் தாயின் மேல் வைத்திருக்கும் பாசத்தை அறிந்தவன் தானே.. எனவே அவன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான்.. நொடி நேரத்தில் தன்னை சமன் படுத்திக் கொண்ட சசிதரன் "அவனைப் பற்றி விசாரிச்சுட்டு ஒரு நல்ல முடிவா எடு" என்றான். சரி என்று தலையை ஆட்டிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான் ..




அங்கிருந்து சென்றதும் தேவ் முதலில் செய்தது தனக்கு தெரிந்த ஒருவரிடம் ஆதித்தயனின் புகைப்படத்தை அனுப்பி இவனைப் பற்றி விசாரிக்கும் படி கூறியது தான் .அடுத்த இரண்டு நாட்களில் அவனுக்கு ஆதித்யனை பற்றிய தகவல்கள் அனைத்தும் வந்தன. சசிதரன் சொல்லி அனைத்துமே உண்மைதான் .எனவே அடுத்த நொடியே தாமதிக்காமல் அவனின் முன் போய் நின்றான்..



அவன் தன் முன்னால் மௌனமாக நிற்பதைக் கண்டு மெல்லிய புன்னகை ஒன்றை சிந்திய சசிதரன்
"என்ன பண்ணலாம் ?"என்றான் கேள்வியாக..



"என்ன பண்றது அங்கிள் கிட்ட சொல்ல வேண்டியது தான் .அதுவும் இன்னைக்கே.." என்று கூறிவிட்டு சென்றான். அதன்படி இருவரும் அன்று மாலை நேரமே அருந்ததியின் தந்தையை சந்தித்து தங்களிடமிருந்த ஆதாரங்களையும் காட்டி அவனைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் சொல்லி விட்டனர். சிறிது நேரம் யோசித்தவரும் தேவ் , சசிதரன் சொல்வதால் உண்மையாக இருக்கும் என்று நம்பினார் ..


ஏனெனில் ஆதாரங்கள் அவ்வாறு இருந்தான.. அவரும் காலம் தாமதிக்காமல் ஆதித்தயனின் தந்தைக்கு அழைத்து தெரிந்த எல்லாவற்றையும் கூறி திருமணத்தையும் நிறுத்தி விட்டார்.. ஆதித்தயனின் தந்தையும் அவனை தான் பார்த்துக் கொள்வதாகவும் இவை யாவும் தெரியாமல் தான் அவனின் பேச்சை கேட்டு நம்பி திருமணம் பேசியதற்கு தன்னை மன்னிக்குமாறும் கூறினார்..




இவையெல்லாம் தேவ் , சசிதரனின் முன்பே தான் நடந்தன
." அங்கிள் எனக்கு உங்க கவலை புரியுது. என்கிட்ட அதற்கு ஒரு தீர்வு இருக்கு.."என்றான்.. என்ன என்பது போல் பார்த்தார் வேதநாயகம்..



" என் அண்ணனை பற்றி உங்களுக்கு எல்லாமே தெரியும் தானே ..அருந்ததியை ஏன் என் அண்ணனுக்கு மனைவியா நீங்க எங்க வீட்டு மருமகளே எங்க வீட்டுக்கு அனுப்பி வைக்க கூடாது .."என்றான் தேவ்.


வேதநாயகம் மட்டுமல்ல சசீதரன் கூட அவனை அதிர்ந்து போய் தான் பார்த்தனர் .."என்ன அங்கிள் அப்படி பாக்கறீங்க ?சின்ன பையன் இவன் இப்படி பேசுறானேன்னு பார்க்கிறீங்களா.. இல்லை எங்க வீட்டுக்கு கொடுக்க பிடிக்கலையா?" என்றான் அவரின் பார்வையை புரிந்து கொண்டவன் போல்.


"அப்படி எல்லாம் இல்லைப்பா .."என்று வேதநாயகம் கூற சசிதரன் அமைதியாகவே தான் இருந்தான்..
இப்படி தேவ் நேரடியாக கேட்டதில் அவனுக்கு சற்று சங்கடமே..
" அது வந்து..அது வந்துப்பா அரு என்ன சொல்வாளோ.. அவ சந்தோசம் தான் எனக்கு முக்கியம் .."என்று சசிதரன் மற்றும் தேவையும் ஒருமுறை பார்த்து விட்டு மீண்டும் அவரே பேசினார்.


" ஐயோ அங்கிள் உங்களுக்கு விஷயமே தெரியாதே" என்ற தேவ் அருந்ததியின் காதல் கதையை மொத்தமாக கூறினான். ஆனால் அவளை வைத்து சசிதரன் காரியம் சாதித்ததை மட்டும் கூறவில்லை.. இப்போது சசிதரனும் அவளை காதலிப்பதையும் கூறினான்.. இவற்றையெல்லாம் கேட்டதும் தான் அவருக்கு எல்லாம் புரிந்தது ..அதாவது அருந்ததி சில நாட்களாக ஏன் அப்படி இருந்தாள் என்பதும் அவருக்கு இப்போது புரிய வந்தது.


ஆனால் இதைச் சொல்லத் தொடங்கும் போது சசிதரன் தான் பயந்து விட்டான். தான் அவளை ஏமாற்றியதைப் பற்றி சொல்லி விடுவானோ என்று ‌‌..அதைக் கேட்டால் அருந்ததியை அவனுக்கு கொடுக்க மாட்டார் அல்லவா.. அந்த பயம் தான் அவனுக்கு..




அனைத்தையும் கேட்டவர்
"என் பொண்ணோட மனசு எனக்கு தெரியாமலே போச்சு.." என்று கவலைப்பட்டார்.
" எனக்கு முழு சம்மதம் தான் ..சசி மாதிரி ஒரு பையன் மாப்பிள்ளை கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும் ..இருப்பபா இத என் பொண்ணு கிட்ட இப்போவே சொல்றேன்.." என்ற படி எழ..




"அங்கிள் பிளீஸ் இத அவ கிட்ட மட்டும் சொல்லாதீங்க ..மத்த எல்லார்கிட்டயும் சொல்லுங்க.. அவளுக்கு இது சப்ரைஸா இருக்கட்டுமே.. இந்த மனநிலையில அவ மாப்பிள்ளை மாறினதெல்லாம் கண்டுக்கவே மாட்டா.." என்றான் தேவ்..



அவரும் அரைமனதாக அவனது இந்த கூற்றை ஏற்றுக் கொண்டார் ..அவரிடமிருந்து இருவரும் விடைபெற்று மகிழ்ச்சியாக மனநிலையோடு வீட்டுக்கு சென்றனர்..


வீட்டிற்கு சென்றது தாய் தந்தையிடமும் விஷயத்தைக் கூற அவனின் தாய்க்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.. அவருக்கு அருந்ததி என்றால் உயிர் அல்லவா.. அவ்வளவு பிடிக்கும் அவளை.. அவளே தங்களின் மருமகள் என்று நினைக்கையிலேயே மகிழ்ச்சி தான் அவருக்கு ..எல்லாவற்றையும் பேசி முடித்ததும் தனியாக தேவ்வை சந்தித்த சசிதரன் அவனை கட்டி அணைத்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்.



" ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. எல்லாம் உன்னால தான்.. அதி எனக்கு கிடைக்கவே மாட்டான்னு நினைச்சேன்.. ஆனா அவ என்னோட வாழ்க்கைல வந்துட்டா.. அது எல்லாம் உன்னால தான் .."
என்று கண்கள் கலங்க பேசினான் சசி தரன்..



அவனைத் தன்னிடம் இருந்து பிரித்து
" அதெல்லாம் சரிதான் அருவை சந்தோஷமா பார்த்துக்க ..அதுக்கு அப்புறம் உன்கிட்ட பழைய மாதிரி நல்லா பேசுவேன்.." என்று இன்னும் அவனை முறைத்த படியே கூற அதனை பார்த்த சசி தரன்
"அப்போ அங்கிள் கிட்ட பேசினது அப்புறம் அம்மா அப்பா கிட்ட பேசினது எல்லாம்..?" என்று கேட்க



"அது எல்லாம் அருக்காக பண்ணது..நீ இல்லேன்னா அவ சந்தோஷமாக இருக்க மாட்டா.. அதனாலதான் இப்படி பண்ணேன்.." என்று கூற இப்போது சசிதரனின் முகத்தில் அழகான புன்னகை ஒன்று தோன்றியது..

***********


"சுபி என்னம்மா இவ்ளோ யோசிக்கிற." என்று அவள் அருகில் வந்து அமர்ந்து விஷால் இதமாக கேட்க்க
"ஏன் உங்களுக்கு தெரியாதா ?"
என்றாள் சுபா கோபமாக..
" நீ எதுக்கு இவ்ளோ கோபப்படுற இப்போ? அருந்ததி கிட்ட பேச வேண்டியது தானே.. அதை விட்டுட்டு நிச்சயம் முடிஞ்சு இத்தனை நாள் ஆனதுக்கு அப்புறமும் பேசாம இருக்க .."என்றான்..




அவனை ஆழமாக பார்த்தவள் "எப்படிங்க என்னால சொல்ல முடியும் ..அந்த ஆதித்தியன் மோசமானவன்னு யாருக்குமே தெரியாது.. எனக்கும் உங்களுக்கும் அருந்ததிக்கும் மட்டும் தானே தெரியும் அவன் மோசமானவன்னு.. நாங்க போய் சொன்னால் யாரு நம்ப போறாங்க..



எங்க கிட்ட தான் எந்த ஆதாரமும் இல்லையே அவனைப் பற்றி.. உண்மையைச் சொல்லணும்னா என்னோட பேரன்ட்ஸ் கிட்ட சொன்னா கூட நம்ப மாட்டாங்க ..அவன் வெளியே நல்லவன் வேஷம் போடுற அயோக்கியன் .."என்று கூறியவளின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் துளி வெளிவந்தது தோழிக்காக.


அன்று நிச்சயத்தின் போது ஆதித்யனை கண்டு அருந்ததி உடன் சேர்ந்து சுபாவும் தான் அதிர்ந்து போனாள்.. ஆனால் யாரும் தன்னை கவனிக்கும் முன்னர் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள் அவள்.. அவனை அங்கு மணமகனாக கஅவள் எதிர் பார்க்கவில்லை.. ஏனெனில் அருந்ததி திருமணத்திற்கு சம்மதம் சொன்னதே பெரிது என்று அவளும் மணமகன் யார் என்று கேட்கவில்லை அல்லவா ..




அது ஒருபுறம் என்றால் அடுத்தது அங்கு சசிதரனை அவள் கண்டது ..அவளுக்கு சசிதரனை காஞ்சிபுரத்தில் வைத்து தான் தெரியும்.. அவன் எப்படி இங்கு என்று யோசனை செய்தபடி இருந்தாள்.. ஆனால் அதற்கு பதில் அடுத்த சில நிமிடங்களிலேயே அவளுக்கு கிடைத்தது.. அருந்ததியின் பார்வை அடிக்கடி அவனை தொட்டு மீள்வதை கண்டாள் அவள். அதையும் அவள் குறித்து வைத்துக் கொண்டாள் மனதில்..



அதன் பிறகு தேவ் சசிதரனை தன்னுடைய அண்ணா என்று விஷாலிடமும் சுபாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தான்.. ஏனெனில் சுபாவிற்கு தேவ்வை முன்பே தெரியும் அல்லவா.. அவனும் அவளுடைய நண்பன் போன்றவன் தான்..
சசிதரனுக்கு சங்கடமாகவும் இவர்கள் இருவருக்கும் அதிர்ச்சியாகவும் இருந்தது அந்த தருணம்..



அதன் பிறகு தனியே தேவ்வை சந்தித்து கேட்க அனைத்தையும் கூறினான் அவன்.. இந்த செய்தியை கேட்ட அவள் அதைப் பற்றி யோசிக்கையில் ஆதித்தயனின் யோசனை பின்னுக்குச் சென்று விட்டது அவளது மனதில்.. அதே போல் அவள் வரும் வரை அருந்ததியிடம் தனியாக பேச சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை அவளுக்கு..


தொடரும்..




 
Status
Not open for further replies.
Top