அத்தியாயம் 19
இதழின் ஓரம் இரத்த வழிய முகம் சிவந்து வீங்க துவங்கியிருக்க மேலும் இரு கண்களிலும் கண்ணீர் வழிய நின்றிருந்த தன் தோழனும் சகோதரனுமான விக்னேஷின் நிலைகண்டு கண்கள் சிவக்க கத்தியிருந்தான் அபிநந்தன்.. ஆருஷியின் ஆருயிர் தமையன்..
அங்கு கண்களில் கனல் பறக்க நின்றிருந்த ராம் மற்றும் ரவியைக் கண்டவனுக்கு வியப்பில் ஒருநொடி இருபுருவமும் உயர்ந்தது.. பின் தான் அதிர்ச்சியில் இருந்த விக்னேஷைக் கண்டவனுக்கு அவனுக்கு உண்மை தெரிந்துவிட்டதை உணர்ந்தான்...
முதலில் அவனின் காயங்களுக்கு மருந்திட நினைத்தவன் தன் ஆஸ்தான பிஏ விடம்
"கண்ணன் ப்ர்ஸ்ட் ஏய்டு பாக்ஸ் எடுத்துட்டு வாங்க... அப்படியே நம்ம டாக்டர்க்கு கால் பண்ணி வர சொல்லுங்க க்வீக் .. " என அடுக்கடுக்காய் கட்டளைகளைப் பிறப்பித்தவன் மற்ற இருவரையும் முறைத்துக் கொண்டே விக்னேஷை கைத்தாங்கலாக அழைத்து வந்து அங்கிருந்த ஷோபாவில் அமர வைத்தான்...
அபிநந்தனின் முகபாவங்களை கூர்ந்து கவனித்த ரவிக்கு தங்களைக் கண்டதும் ஒரு நொடி வியப்பில் உயர்ந்த புருவங்களைக் கண்டான்... அந்த நொடி இதற்கு காரணம் அவன் தான் என்பதை சரியாக கணித்தவன் சற்று நேரம் நடப்பதை பொறுமையாய் கவனித்தான்...
ஆனால் அதீத கோபத்தில் இருந்த ராமோ தங்கள் பிடியில் இருந்து விக்னேஷை அவன் அழைத்து செல்வதை கண்டவன் இருவரையும் தாக்க வெறியுடன் முன்னேற ரவி அவனின் கையைப் பிடித்து இழுத்தான்... " விடு ரவி அவன் தான் ஸ்ரீ யை நம்ம கிட்ட இருந்து பிரிச்சான் இன்னைக்கு அவனைக் கொல்லாம விடமாட்டேன்..." என அக்ரோஷத்தில் கத்த..
" வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் திஸ் " என அவ்வறை அதிர அபி கர்ஜிக்க மீண்டும் வாய் திறந்து பேசபோன ராமை தன் கண்களாலே அமைதிப் படுத்தினான் ரவி... தன்னைச் சுற்றி நடப்பதை உணராமல் திக் பிரம்மை பிடித்தவன் போல் இருந்த விக்னேஷ் கூட அபியின் கர்ஜனையில் தான் சுய நினைவை அடைந்தான்...
கைத்தாங்கலாக அழைத்து வந்த விக்னேஷை ஷோபாவில் அமர வைத்தவன் கண்ணில் கனலுடன் நின்ற ராமின் முன்வந்த அபி தன் முழு உயரத்துடன் நிமிர்ந்து நின்று கைகளைக் மார்புக்கு குறுக்காக கட்டியவன் தன் கண்களில் கூர்மையுடன்
" என்ன சொன்ன ஸ்ரீ ய கொன்னவனை நீ உன் கையால கொல்லனும்...... ரைட்.... அப்போ முதல்ல நீ மேலே போய்.."என அவன் தன் கையால் மேலே சைகை காட்டி "அப்புறம் அவனுங்களை கொன்னுக்கோ ... " என ஏளனமாய் உரைக்க ராம் ஒரு நொடி புரியாமல் விழித்தான்..
ரவிக்கு புரிந்தாலும் இந்த உண்மை எங்கு எப்படி மறைந்தது என்பதை தெளிவுபடுத்தியாக வேண்டுமல்லவா!! அதனால் கேள்வியாய் அபிநந்தனைப் பார்க்க... அதே சமயம் அவனும் ரவியைத் தான் பார்த்தான்...
ரவியை விட வயதில் சிறியவனாக இருந்தாலும் அவன் அண்ணன் ஆருஷி போல அபிநந்தனும் புத்திக் கூர்மையில் சிறந்துதான் இருந்தான்.
அதற்குள் அந்த அறைக்குள் அனுமதி பெற்று வந்த அபியின் பிஏ மற்றும் டாக்டர் விக்னேஷை பரிசோதித்து காயங்களுக்கு மருந்திட்டவர் ஓய்வெடுக்க சொல்லி வெளியேறினார்... அனைவரும் அபியை கேள்வியாய் பார்க்க அவனோ கண்ணனை நால்வருக்கும் காபி வாங்க வருமாறு அனுப்ப ராம் கோபத்துடன் மறுக்க ரவி அவனை சமாதானம் செய்து அவரை அனுப்பினான்...
அபி நடந்தவற்றை கூறக்கூற மூவரும் திகைத்து விழித்தனர்.... இதில் யாரைக் குற்றம் சொல்லி யாரைத் தண்டிப்பது என்றே ராமிற்க்கும் ரவிக்கும் தெரியவில்லை ..... இதில் தன்னளவு அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்ந்தவர்கள் அமைதியாய் விடைபெற எழுந்தனர்..
"ஒரு நிமிஷம் ராம்" என்ற விக்னேஷ் அவனின் அருகில் வந்து "அன்னைக்கு வன்மம் வச்சு நா அப்படி பேசலடா... எனக்கு எப்பவுமே உங்க ரெண்டு பேரையும் ரொம்ப புடிக்கும்.... என்னதான் எனக்கு ஆருஷி அண்ணாவும் அபியும் இருந்தாலும் அவங்க சென்னை வந்ததுக்கு அப்புறம் தனியாத்தான் வளர்ந்தேன் எப்பவுமே உனக்கும் ஸ்ரீக்குமான பாண்டிங் என்ன பிரமிக்க வச்சுது உங்களோட இருக்கணும்னு ரொம்ப ஆசை.... அதான் நா அப்படியெல்லாம் நடந்துக்கிட்டேனு நினைக்குறேன்... " என வருந்தி பேச ராம் அவனை இறுக அணைத்து கொண்டான்.
"ஸ்ரீ நம்ம கூட இல்லைனு என்னால ஏத்துக்கவே முடியலடா " என விக்னேஷ் கண்ணீர் சிந்தினான். மற்ற இருவரும் பார்வையாளராகவே இருக்க .. ரவி விக்னேஷின் தோளைத் தொட்டு ஆசுவாசப்படுத்தி சிறு தலையசைப்புடன் அவர்களிடம் இருந்து விடைபெற்றனர்.....
------------------------------------------
நள்ளிரவில் நடந்த சம்பவத்தினால் சற்று குழப்பமும் பயமுமாய் இருந்தவளுக்கு ஆதித்யா வெண்ணிற ஒளியூனுள் மறைவதைக் கண்டதும் அவனுக்கு தவறாய்தான் ஏதோ நடக்கிறது என நினைத்துக் கொண்டாள்...
"ரிஷி விடு .. ஆதிக்கு என்னமோ நடக்குது.... அவன காப்பாத்து ...." என அவனிடம் இருக்கும் தன் கையை விடுவிக்க போராட...
தன் மனங்கவர்ந்தவளின் ரிஷி என்ற அழைப்பில் ஒரு நொடி மனம் குளிர்ந்தவன் அவள் தன்னிடம் இருந்து விலக போராடுவதை உணர்ந்து அவளுக்கு நடப்பதை விளக்கும் பொருட்டு
" ஸ்ரீ நான் சொல்றதை கேளு... அவன் போகட்டும் விடு... இது தான் அவனுக்கு நல்லது" என்க...
அவன் கூறுவதை சிறிதும் புரிந்து கொள்ளாதவள் " இல்லை எனக்கு பயமா இருக்கு காலைல நடந்த மாதிரி அவனுக்கு ஏதோ ஆபத்து நா அவன் காப்பாத்தனும் என்னை விடுங்க ....." என போராட... தன் மேல் நம்பிக்கையின்றி தான் சொல்வதை நம்பாமல் செயல்படுவதைக் கண்டவனுக்கு பொறுமை எங்கோ பறந்து போனது.... அந்த அறையின் வெண்ணிற ஒளி முற்றிலும் மறைந்து ஆதியும் அதனுள் மறைந்து போக....
ஸ்ரீக்கு தாம் அருகில் இருந்தும் அவனைக் காக்க முடியாத ஆதங்கம் மொத்தமாய் ஆருஷி மேல் திரும்ப
" உன்னால தான் ஆதித்யா என்ன விட்டு போனான்.. என்னோட இந்த நிலைமைக்கும் நீதான் காரணம்... யூ ஆர் அ ச்சீட்டர்(நீ ஒரு ஏமாற்றுக்காரன்).. எங்கள நம்ப வெச்சு ஏமாத்திட்ட... உன்ன நம்பி வந்ததுக்கு ஆதித்யா வை என்னமோ செஞ்சிட்ட... " என வார்த்தைகளால் அவனின் காதல் கொண்ட உள்ளத்தை வதைக்க அவன் மனம் ஊமையாய் கதறியது...
அவள் கூறியதை நன்றாய் கவனிக்காதவன் தன்னை ஏமாற்றுக்காரன் என்று கூறியதில் ஆத்திரம் மிக "ஸ்டாபிட் ஸ்ரீ .... உன்கூட இருந்தா அவனும் ஆபத்துல மாட்டிப்பான்...உன்னால அவன் ஆன்மாவும் சிக்கல் மாட்டிக்கும்... அவன் வெளிச்சத்திற்கு போகுறதுதான் நல்லது " என ஆத்திரத்தில் வார்த்தையை விட ....
எதிரில் இருந்த ஸ்ரீக்கு கண்கள் கலங்கியது.. இதுவரை அவளிடம் இவ்வளவு கடுமையை யாரும் காட்டியதில்லை....எனவே ஆருஷியின் அதட்டலால் தானாய் அவளின் வாய் மூடிக்கொண்டது. இருந்தும் அவன் சொல்லும் உண்மையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது தவித்தாள்...
ஸ்ரீ யின் கலங்கிய விழிகளை கண்ட பின்பே தான் கடுமையாக பேசியதை உணர்ந்தவன் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.... பொறுமையாக கூறி புரிய வைக்க வேண்டிய விசயத்தை இப்படி ஆத்திரத்தில் போட்டு உடைத்ததை எண்ணி தன்னையே கடிந்து கொண்டான்... என்னதான் உடனிருந்து அவளுடன் பழகவில்லை என்றாலும் அவனுக்கு தெரியும் ஸ்ரீ யின் குணங்கள்.... சமாதானம் செய்ய அவன் அவளருகே செல்ல ஸ்ரீயோ அவனைத் தாண்டி அங்கிருந்த சுவரின் வழியே ஊடுருவி சென்றாள்...
"ஸாரி ஸ்ரீ .. ஏதோ கோபத்துல பேசிட்டேன்... நில்லு ஸ்ரீ " அவன் கூறிய சமாதானங்கள் எதுவும் அவள் செவியை சென்றடையவில்லை.. ஆருஷியும் அவள் பின்னேயே சுவற்றை தாண்டி சென்றுஅவளைத் தடுக்க முயற்ச்சிக்க அவளோ வேகமாய் அவ்விடத்தை விட்டு நகர ஆருஷி அவள் பின்னாலேயே சென்றான்....
அவ்வழியே சென்ற சில வண்டிகளையும் மனிதர்களையும் ஊடுருவி செல்ல ஒரு சில நொடிகளில் ஸ்ரீ ஆருஷியின் கண்முன்னேயே மறைந்து போனாள்... தன் கண்முன் கண்ட காட்சியில் அவள் மறைந்து போவதைக் கண்டவன் 'ஸ்ரீ.... ஸ்ரீ .... ' என அழைத்தவை காற்றிலேயே கரைந்து போனது..
சூரியன் வேறு மறையத் துவங்கி இருக்க இருளில் அவளைக் கவர்ந்து செல்லக் காத்திருக்கும் அவளுக்கான ஆபத்து நெருங்குவதை உணர்ந்தான்... எங்கு சென்றாள் என குழம்பி ஒருநிமிடம் உலகமே அவனுக்கு தட்டாமாலை சுற்றுவது போல் உணர்ந்தான்.... ஒருவேளை கடற்கரை சென்றிருப்பாளோ என நினைத்தவன் வாய்ப்பிருக்கிறது என அங்கு செல்ல சித்தரின் சக்திகளைப் பயன்படுத்தினான்.....
ஆன்மாக்களுக்கு வெளிச்சத்திற்கான பாதை திறந்து விட்டால் அவர்களுக்கான சக்திகளும் முடிந்துவிடும் அதனால் தான் ஆருஷிக்கு தனியாக எந்த சக்திகளும் கிடையாது சித்தர் அளித்த சக்தியும் அவர் கொடுத்த ருத்ராட்சமுமே அவனை இந்த பூமியில் இருக்க வைத்துள்ளது அதுவும் நான்கு நாட்களுக்கு மட்டுமே... எனில் ஆருஷியும் ஒரு ஆன்மாவா ???? ஆம் அவனும் ஆன்மா தான் அவனுக்கான வெளிச்சப் பாதையும் முன்னாடியே திறக்கப் பட்டுவிட்டது....
இருள் கவிழ துவங்கியிருந்த அந்த ஆள்நடமாட்டம் குறைந்த முன்பு ஸ்ரீயும் ஆதியும் இருந்த கடற்கரைப் பகுதியில் அலையில் தன் ஜீவனை கலக்கவிட்டு ஸ்ரீ கண்களில் கண்ணீர் வழிய கடலை வெறித்தபடி நின்றிருந்தாள்.... இன்னும் இந்த வாழ்க்கை தனக்காக என்ன வைத்திருக்கிறது என தெரியாமல் தனக்கிருந்த ஒரே ஆறுதலையும் இழந்து , தான் கண்மூடி தனமாய் நம்பிய ஆடவனும் பொய்த்து போனது என ஆதீத மன அழுத்தத்தில் நிற்காமல் வழியும் கண்ணீரையும் துடைக்க மனமின்றி அவளை சுற்றி நடக்கும் மாற்றங்களை கவனியாது நின்றிருந்தாள்...
மெல்ல மெல்ல இருள் கவ்வ துவங்கியிருந்த வேளையில் கடற்கரையில் அவளிருந்த பகுதி மட்டும் சற்று கூடுதலாக இருள் பரவத் துவங்கியிருந்தது குளிர்ந்த காற்று அவளின் ஆன்மாவை வருடியதில் சுயம் உணர்ந்தவள் மாறும் வானிலையில் மனம் திடுக்கிட பயத்துடனே சுற்றிலும் தன் பார்வையை ஓட்டினாள்....
இதேபோல் தான் நள்ளிரவிலும் நடந்தது என உணர அவள் மனமும் ஆன்மாவும் நடுங்க ஆரம்பித்தது... அலைகளுடன் உறவாடிக் கொண்டிருந்த தன் கால்களை மெல்ல பிரித்து தரையை அடைய அவளின்
பின்னே 'கர்ர்..... கர்ர்ர்ர்....' என்ற உறுமலில் உயிர் உறைய நடுக்கத்துடன் பின்னால் திரும்பிப் பார்த்தாள்.....
உயிர் உள்ள எவரேனும் அவ்விடத்தில் இருப்பின் இரத்தம் உறைந்து இதயம் நிச்சயம் தன் செயல்பாட்டை நிறுத்தியிருக்கும்... அவளின் கண்முன்னே அவளை வெறித்தபடி இருந்த மஞ்சள் நிறக் கண்களும் முன்நீண்ட மூக்கில் இரத்தம் பரவியிருக்க அதன் கீழ் சிங்கத்தின் பற்களை போல இருபக்கமும் நீண்ட இரத்தகறையுடன் கூடிய பற்களும் மேலும் சில இரத்தத்துளிகள் வாயிலிருந்தும் வழிய நான்கு கால்களில் நகங்கள் நீண்டு அதன் உடலில் அங்கு அங்கு காயங்களுடனும் இருந்த அந்த ஜந்து நாயா இல்லை ஓணாயா அல்லது இது வேறு ஏதோ வகை அரக்கனா எனும் சந்தேகத்தை தோன்றிவிக்கும் போல் இருந்தது...
ஸ்ரீ அதைப்பார்த்து பயந்து முதலில் அலற வாயெடுத்தவள் என்ன நினைத்தாளோ பின் தன் கைகளைக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டாள் மெல்ல பின்னோக்கி கால்களை வைக்க அந்த ஜந்துவின் உறுமல் அதிகமானது...
எப்படி இதனிடம் இருந்து தப்பிப்பது என தெரியாமல் விழித்தவளுக்கு திடீரென அந்த யோசனை எழுந்தது... முதலில் விபத்து நடந்த அன்று திடீரென மறைந்து வர்ஷினியிடம் சென்றது... அதாவது ஸ்ரீ அவளுக்கே தெரியாமல் தன் ஆன்ம சக்திகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாள்...தற்போது கூட கடற்கரை என நினைத்ததும் ஆதித்யா வீட்டிலிருந்து மறைந்து வந்தது என வரிசையாய் நினைத்தவளுக்கு மீண்டும் அதே போல் மறைந்து இங்கிருந்து தப்பிக்கலாம் என நினைத்து முயற்சித்தாள்...
அந்தோ பரிதாபம் முன்னவே தீய ஆன்மாக்கள் அவளை சூழ்ந்து கொண்டதால் அவளால் அவ்விடத்தை விட்டு இம்மியளவும் நகர முடியவில்லை... எலும்பை உருக்குவது போன்று குளிரும் கெட்ட அழுகிய வாடையும் அவ்விடத்தை ஆக்கிரமித்தது....
அந்த ஜந்துவோ அவளை நோக்கி முன்னேற இவளுக்கு கண்ணீர் மட்டுமே வந்தது .. மெதுவாய் இவளும் பின் நகர சட்டென அவ்விடம் முழுதும் கருமை பரவி அவளால் எதையும் பார்க்க முடியாமல் போனது....
சிறிது நேரத்திலேயே அம்மிருகம் வேகமாய் அவளின் மீது பாய அவளோ அது தன்னை நோக்கி வருவதை அதன் சத்தத்தை வைத்து உணர்நதவள் இனி தன்னால் இவைகளிடம் இருந்த தப்பிக்க இயலாது என உணர்ந்தவள் பயத்தில் தன் இரு கைகளை மடக்கி தன் முகத்திற்கு நேராய் வைத்தவள் 'ஆ..ஆ... ' என அலறியிருந்தாள்....
ஸ்ரீ யைத் தேடி கடற்கரை வந்தவனுக்கு அந்த நீண்ட இடத்தில் கரைப்பகுதி சந்தடி குறைந்து காட்சியளித்தது.. மனிதர்கள் புழங்கும் பகுதியில் அவள் இருக்க மாட்டாள் ஏனெனில் அவர்கள் அவளை ஊடுருவி செல்லும் போது தடுமாறுவதால் அவ்விடங்களில் அவள் அதிக நேரம் இருக்க மாட்டாள்.... இன்னும் சிறிது நேரத்தில் நன்றாக இருட்டி அவளுக்கான ஆபத்தும் நெருங்கிவிடும் அதனால் ஸ்ரீ எங்கேனும் தென்படுகிறாளா என வேகமாக அவ்விடத்தை ஆராயந்தான்..
அந்த கடற்கரையின் கிழக்கு பகுதியில் ஆட்கள் அவ்வளவாக புலங்காத அவ்விடம் மட்டும் சற்று அதிக இருளாக இருக்க பதற்றத்துடன் அவ்விடம் சென்றான்.
அந்த மையிருளிலும் பாவையின் ஜீவன் ஒருவித பிரகாசத்துடன் அவனுக்கு மட்டும் மின்ன அதே நேரம் இருளில் எதையோப் பார்த்து கைகளால் தன்னை மறைத்து கத்தும் போது தான் அவனும் அங்கு நடக்கும் விபரீதத்தை உணர்ந்தான் விரைந்து செயல் பட்டவன் புயலை ஒத்த வேகத்தில் அந்த இருளைக் கிழித்துக் கொண்டு உள் நுழைந்தவன் அவளைத் தன் கைகளினால் தோளோடு அணைத்தவாறு பிடித்துக் கொண்டு அவ்விடத்தில் இருந்து மறைந்தான்....
யாரோ தன்னை அணைத்ததில் முதலில் பயந்தவள் பின் அந்த ஸ்பரிசத்தை யாரென உணர்ந்தவள் அவன் இழுத்த இழுப்புக்கு சென்றாள்... ஏதோ ஒரு வெளிச்சமான இடத்திற்கு வந்த ஆருஷி தன் கையணைவில் இருந்தவளை குனிந்து பார்க்க அதே நேரம் காரிகையவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்....
" ஆர் யூ ஓகே .. ஸ்ரீ" என்ற கேள்வியில் சுயம் தெளிந்தவள் அவனை விட்டு அவசரமாய் விலகி நின்றாள்...
"ஹே... ரிலாக்ஸ்.. " என ஆருஷி அவளை ஆசுவாசப்படுத்தினான்..
தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ஸ்ரீயும் ஆருஷியை நோக்கி " நீங்க யாரு ??? என்னோட இந்த நிலைமைக்கு நீங்க தானே காரணம் .. அப்புறம் ஏன் என்ன காப்பத்துற மாதிரி நடிக்கிறீங்க ..என்ன சுத்தி என்ன நடக்குதுனு சொல்றீங்களா ... " என்று கேள்விக் கணைகளை சற்று கோபமாக கேட்டாள்... ஆருஷிக்கோ அவளின் கேள்வியில் 'என்ன அவளோட இறப்புக்கு நான் தான் காரணம்னு எப்படி தெரிஞ்சது 'என குழப்பமான மனநிலையில் சற்று திகிலுடன் ஸ்ரீ யைப் பார்த்தான்...
கதையைப் பற்றி நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே.. உங்கள் கருத்துக்களே என்னை இன்னும் எழுத தூண்டும்... ??
என்றும் அன்புடன்
உங்கள்
AnuCharan
இதழின் ஓரம் இரத்த வழிய முகம் சிவந்து வீங்க துவங்கியிருக்க மேலும் இரு கண்களிலும் கண்ணீர் வழிய நின்றிருந்த தன் தோழனும் சகோதரனுமான விக்னேஷின் நிலைகண்டு கண்கள் சிவக்க கத்தியிருந்தான் அபிநந்தன்.. ஆருஷியின் ஆருயிர் தமையன்..
அங்கு கண்களில் கனல் பறக்க நின்றிருந்த ராம் மற்றும் ரவியைக் கண்டவனுக்கு வியப்பில் ஒருநொடி இருபுருவமும் உயர்ந்தது.. பின் தான் அதிர்ச்சியில் இருந்த விக்னேஷைக் கண்டவனுக்கு அவனுக்கு உண்மை தெரிந்துவிட்டதை உணர்ந்தான்...
முதலில் அவனின் காயங்களுக்கு மருந்திட நினைத்தவன் தன் ஆஸ்தான பிஏ விடம்
"கண்ணன் ப்ர்ஸ்ட் ஏய்டு பாக்ஸ் எடுத்துட்டு வாங்க... அப்படியே நம்ம டாக்டர்க்கு கால் பண்ணி வர சொல்லுங்க க்வீக் .. " என அடுக்கடுக்காய் கட்டளைகளைப் பிறப்பித்தவன் மற்ற இருவரையும் முறைத்துக் கொண்டே விக்னேஷை கைத்தாங்கலாக அழைத்து வந்து அங்கிருந்த ஷோபாவில் அமர வைத்தான்...
அபிநந்தனின் முகபாவங்களை கூர்ந்து கவனித்த ரவிக்கு தங்களைக் கண்டதும் ஒரு நொடி வியப்பில் உயர்ந்த புருவங்களைக் கண்டான்... அந்த நொடி இதற்கு காரணம் அவன் தான் என்பதை சரியாக கணித்தவன் சற்று நேரம் நடப்பதை பொறுமையாய் கவனித்தான்...
ஆனால் அதீத கோபத்தில் இருந்த ராமோ தங்கள் பிடியில் இருந்து விக்னேஷை அவன் அழைத்து செல்வதை கண்டவன் இருவரையும் தாக்க வெறியுடன் முன்னேற ரவி அவனின் கையைப் பிடித்து இழுத்தான்... " விடு ரவி அவன் தான் ஸ்ரீ யை நம்ம கிட்ட இருந்து பிரிச்சான் இன்னைக்கு அவனைக் கொல்லாம விடமாட்டேன்..." என அக்ரோஷத்தில் கத்த..
" வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் திஸ் " என அவ்வறை அதிர அபி கர்ஜிக்க மீண்டும் வாய் திறந்து பேசபோன ராமை தன் கண்களாலே அமைதிப் படுத்தினான் ரவி... தன்னைச் சுற்றி நடப்பதை உணராமல் திக் பிரம்மை பிடித்தவன் போல் இருந்த விக்னேஷ் கூட அபியின் கர்ஜனையில் தான் சுய நினைவை அடைந்தான்...
கைத்தாங்கலாக அழைத்து வந்த விக்னேஷை ஷோபாவில் அமர வைத்தவன் கண்ணில் கனலுடன் நின்ற ராமின் முன்வந்த அபி தன் முழு உயரத்துடன் நிமிர்ந்து நின்று கைகளைக் மார்புக்கு குறுக்காக கட்டியவன் தன் கண்களில் கூர்மையுடன்
" என்ன சொன்ன ஸ்ரீ ய கொன்னவனை நீ உன் கையால கொல்லனும்...... ரைட்.... அப்போ முதல்ல நீ மேலே போய்.."என அவன் தன் கையால் மேலே சைகை காட்டி "அப்புறம் அவனுங்களை கொன்னுக்கோ ... " என ஏளனமாய் உரைக்க ராம் ஒரு நொடி புரியாமல் விழித்தான்..
ரவிக்கு புரிந்தாலும் இந்த உண்மை எங்கு எப்படி மறைந்தது என்பதை தெளிவுபடுத்தியாக வேண்டுமல்லவா!! அதனால் கேள்வியாய் அபிநந்தனைப் பார்க்க... அதே சமயம் அவனும் ரவியைத் தான் பார்த்தான்...
ரவியை விட வயதில் சிறியவனாக இருந்தாலும் அவன் அண்ணன் ஆருஷி போல அபிநந்தனும் புத்திக் கூர்மையில் சிறந்துதான் இருந்தான்.
அதற்குள் அந்த அறைக்குள் அனுமதி பெற்று வந்த அபியின் பிஏ மற்றும் டாக்டர் விக்னேஷை பரிசோதித்து காயங்களுக்கு மருந்திட்டவர் ஓய்வெடுக்க சொல்லி வெளியேறினார்... அனைவரும் அபியை கேள்வியாய் பார்க்க அவனோ கண்ணனை நால்வருக்கும் காபி வாங்க வருமாறு அனுப்ப ராம் கோபத்துடன் மறுக்க ரவி அவனை சமாதானம் செய்து அவரை அனுப்பினான்...
அபி நடந்தவற்றை கூறக்கூற மூவரும் திகைத்து விழித்தனர்.... இதில் யாரைக் குற்றம் சொல்லி யாரைத் தண்டிப்பது என்றே ராமிற்க்கும் ரவிக்கும் தெரியவில்லை ..... இதில் தன்னளவு அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்ந்தவர்கள் அமைதியாய் விடைபெற எழுந்தனர்..
"ஒரு நிமிஷம் ராம்" என்ற விக்னேஷ் அவனின் அருகில் வந்து "அன்னைக்கு வன்மம் வச்சு நா அப்படி பேசலடா... எனக்கு எப்பவுமே உங்க ரெண்டு பேரையும் ரொம்ப புடிக்கும்.... என்னதான் எனக்கு ஆருஷி அண்ணாவும் அபியும் இருந்தாலும் அவங்க சென்னை வந்ததுக்கு அப்புறம் தனியாத்தான் வளர்ந்தேன் எப்பவுமே உனக்கும் ஸ்ரீக்குமான பாண்டிங் என்ன பிரமிக்க வச்சுது உங்களோட இருக்கணும்னு ரொம்ப ஆசை.... அதான் நா அப்படியெல்லாம் நடந்துக்கிட்டேனு நினைக்குறேன்... " என வருந்தி பேச ராம் அவனை இறுக அணைத்து கொண்டான்.
"ஸ்ரீ நம்ம கூட இல்லைனு என்னால ஏத்துக்கவே முடியலடா " என விக்னேஷ் கண்ணீர் சிந்தினான். மற்ற இருவரும் பார்வையாளராகவே இருக்க .. ரவி விக்னேஷின் தோளைத் தொட்டு ஆசுவாசப்படுத்தி சிறு தலையசைப்புடன் அவர்களிடம் இருந்து விடைபெற்றனர்.....
------------------------------------------
நள்ளிரவில் நடந்த சம்பவத்தினால் சற்று குழப்பமும் பயமுமாய் இருந்தவளுக்கு ஆதித்யா வெண்ணிற ஒளியூனுள் மறைவதைக் கண்டதும் அவனுக்கு தவறாய்தான் ஏதோ நடக்கிறது என நினைத்துக் கொண்டாள்...
"ரிஷி விடு .. ஆதிக்கு என்னமோ நடக்குது.... அவன காப்பாத்து ...." என அவனிடம் இருக்கும் தன் கையை விடுவிக்க போராட...
தன் மனங்கவர்ந்தவளின் ரிஷி என்ற அழைப்பில் ஒரு நொடி மனம் குளிர்ந்தவன் அவள் தன்னிடம் இருந்து விலக போராடுவதை உணர்ந்து அவளுக்கு நடப்பதை விளக்கும் பொருட்டு
" ஸ்ரீ நான் சொல்றதை கேளு... அவன் போகட்டும் விடு... இது தான் அவனுக்கு நல்லது" என்க...
அவன் கூறுவதை சிறிதும் புரிந்து கொள்ளாதவள் " இல்லை எனக்கு பயமா இருக்கு காலைல நடந்த மாதிரி அவனுக்கு ஏதோ ஆபத்து நா அவன் காப்பாத்தனும் என்னை விடுங்க ....." என போராட... தன் மேல் நம்பிக்கையின்றி தான் சொல்வதை நம்பாமல் செயல்படுவதைக் கண்டவனுக்கு பொறுமை எங்கோ பறந்து போனது.... அந்த அறையின் வெண்ணிற ஒளி முற்றிலும் மறைந்து ஆதியும் அதனுள் மறைந்து போக....
ஸ்ரீக்கு தாம் அருகில் இருந்தும் அவனைக் காக்க முடியாத ஆதங்கம் மொத்தமாய் ஆருஷி மேல் திரும்ப
" உன்னால தான் ஆதித்யா என்ன விட்டு போனான்.. என்னோட இந்த நிலைமைக்கும் நீதான் காரணம்... யூ ஆர் அ ச்சீட்டர்(நீ ஒரு ஏமாற்றுக்காரன்).. எங்கள நம்ப வெச்சு ஏமாத்திட்ட... உன்ன நம்பி வந்ததுக்கு ஆதித்யா வை என்னமோ செஞ்சிட்ட... " என வார்த்தைகளால் அவனின் காதல் கொண்ட உள்ளத்தை வதைக்க அவன் மனம் ஊமையாய் கதறியது...
அவள் கூறியதை நன்றாய் கவனிக்காதவன் தன்னை ஏமாற்றுக்காரன் என்று கூறியதில் ஆத்திரம் மிக "ஸ்டாபிட் ஸ்ரீ .... உன்கூட இருந்தா அவனும் ஆபத்துல மாட்டிப்பான்...உன்னால அவன் ஆன்மாவும் சிக்கல் மாட்டிக்கும்... அவன் வெளிச்சத்திற்கு போகுறதுதான் நல்லது " என ஆத்திரத்தில் வார்த்தையை விட ....
எதிரில் இருந்த ஸ்ரீக்கு கண்கள் கலங்கியது.. இதுவரை அவளிடம் இவ்வளவு கடுமையை யாரும் காட்டியதில்லை....எனவே ஆருஷியின் அதட்டலால் தானாய் அவளின் வாய் மூடிக்கொண்டது. இருந்தும் அவன் சொல்லும் உண்மையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது தவித்தாள்...
ஸ்ரீ யின் கலங்கிய விழிகளை கண்ட பின்பே தான் கடுமையாக பேசியதை உணர்ந்தவன் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.... பொறுமையாக கூறி புரிய வைக்க வேண்டிய விசயத்தை இப்படி ஆத்திரத்தில் போட்டு உடைத்ததை எண்ணி தன்னையே கடிந்து கொண்டான்... என்னதான் உடனிருந்து அவளுடன் பழகவில்லை என்றாலும் அவனுக்கு தெரியும் ஸ்ரீ யின் குணங்கள்.... சமாதானம் செய்ய அவன் அவளருகே செல்ல ஸ்ரீயோ அவனைத் தாண்டி அங்கிருந்த சுவரின் வழியே ஊடுருவி சென்றாள்...
"ஸாரி ஸ்ரீ .. ஏதோ கோபத்துல பேசிட்டேன்... நில்லு ஸ்ரீ " அவன் கூறிய சமாதானங்கள் எதுவும் அவள் செவியை சென்றடையவில்லை.. ஆருஷியும் அவள் பின்னேயே சுவற்றை தாண்டி சென்றுஅவளைத் தடுக்க முயற்ச்சிக்க அவளோ வேகமாய் அவ்விடத்தை விட்டு நகர ஆருஷி அவள் பின்னாலேயே சென்றான்....
அவ்வழியே சென்ற சில வண்டிகளையும் மனிதர்களையும் ஊடுருவி செல்ல ஒரு சில நொடிகளில் ஸ்ரீ ஆருஷியின் கண்முன்னேயே மறைந்து போனாள்... தன் கண்முன் கண்ட காட்சியில் அவள் மறைந்து போவதைக் கண்டவன் 'ஸ்ரீ.... ஸ்ரீ .... ' என அழைத்தவை காற்றிலேயே கரைந்து போனது..
சூரியன் வேறு மறையத் துவங்கி இருக்க இருளில் அவளைக் கவர்ந்து செல்லக் காத்திருக்கும் அவளுக்கான ஆபத்து நெருங்குவதை உணர்ந்தான்... எங்கு சென்றாள் என குழம்பி ஒருநிமிடம் உலகமே அவனுக்கு தட்டாமாலை சுற்றுவது போல் உணர்ந்தான்.... ஒருவேளை கடற்கரை சென்றிருப்பாளோ என நினைத்தவன் வாய்ப்பிருக்கிறது என அங்கு செல்ல சித்தரின் சக்திகளைப் பயன்படுத்தினான்.....
ஆன்மாக்களுக்கு வெளிச்சத்திற்கான பாதை திறந்து விட்டால் அவர்களுக்கான சக்திகளும் முடிந்துவிடும் அதனால் தான் ஆருஷிக்கு தனியாக எந்த சக்திகளும் கிடையாது சித்தர் அளித்த சக்தியும் அவர் கொடுத்த ருத்ராட்சமுமே அவனை இந்த பூமியில் இருக்க வைத்துள்ளது அதுவும் நான்கு நாட்களுக்கு மட்டுமே... எனில் ஆருஷியும் ஒரு ஆன்மாவா ???? ஆம் அவனும் ஆன்மா தான் அவனுக்கான வெளிச்சப் பாதையும் முன்னாடியே திறக்கப் பட்டுவிட்டது....
இருள் கவிழ துவங்கியிருந்த அந்த ஆள்நடமாட்டம் குறைந்த முன்பு ஸ்ரீயும் ஆதியும் இருந்த கடற்கரைப் பகுதியில் அலையில் தன் ஜீவனை கலக்கவிட்டு ஸ்ரீ கண்களில் கண்ணீர் வழிய கடலை வெறித்தபடி நின்றிருந்தாள்.... இன்னும் இந்த வாழ்க்கை தனக்காக என்ன வைத்திருக்கிறது என தெரியாமல் தனக்கிருந்த ஒரே ஆறுதலையும் இழந்து , தான் கண்மூடி தனமாய் நம்பிய ஆடவனும் பொய்த்து போனது என ஆதீத மன அழுத்தத்தில் நிற்காமல் வழியும் கண்ணீரையும் துடைக்க மனமின்றி அவளை சுற்றி நடக்கும் மாற்றங்களை கவனியாது நின்றிருந்தாள்...
மெல்ல மெல்ல இருள் கவ்வ துவங்கியிருந்த வேளையில் கடற்கரையில் அவளிருந்த பகுதி மட்டும் சற்று கூடுதலாக இருள் பரவத் துவங்கியிருந்தது குளிர்ந்த காற்று அவளின் ஆன்மாவை வருடியதில் சுயம் உணர்ந்தவள் மாறும் வானிலையில் மனம் திடுக்கிட பயத்துடனே சுற்றிலும் தன் பார்வையை ஓட்டினாள்....
இதேபோல் தான் நள்ளிரவிலும் நடந்தது என உணர அவள் மனமும் ஆன்மாவும் நடுங்க ஆரம்பித்தது... அலைகளுடன் உறவாடிக் கொண்டிருந்த தன் கால்களை மெல்ல பிரித்து தரையை அடைய அவளின்
பின்னே 'கர்ர்..... கர்ர்ர்ர்....' என்ற உறுமலில் உயிர் உறைய நடுக்கத்துடன் பின்னால் திரும்பிப் பார்த்தாள்.....
உயிர் உள்ள எவரேனும் அவ்விடத்தில் இருப்பின் இரத்தம் உறைந்து இதயம் நிச்சயம் தன் செயல்பாட்டை நிறுத்தியிருக்கும்... அவளின் கண்முன்னே அவளை வெறித்தபடி இருந்த மஞ்சள் நிறக் கண்களும் முன்நீண்ட மூக்கில் இரத்தம் பரவியிருக்க அதன் கீழ் சிங்கத்தின் பற்களை போல இருபக்கமும் நீண்ட இரத்தகறையுடன் கூடிய பற்களும் மேலும் சில இரத்தத்துளிகள் வாயிலிருந்தும் வழிய நான்கு கால்களில் நகங்கள் நீண்டு அதன் உடலில் அங்கு அங்கு காயங்களுடனும் இருந்த அந்த ஜந்து நாயா இல்லை ஓணாயா அல்லது இது வேறு ஏதோ வகை அரக்கனா எனும் சந்தேகத்தை தோன்றிவிக்கும் போல் இருந்தது...
ஸ்ரீ அதைப்பார்த்து பயந்து முதலில் அலற வாயெடுத்தவள் என்ன நினைத்தாளோ பின் தன் கைகளைக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டாள் மெல்ல பின்னோக்கி கால்களை வைக்க அந்த ஜந்துவின் உறுமல் அதிகமானது...
எப்படி இதனிடம் இருந்து தப்பிப்பது என தெரியாமல் விழித்தவளுக்கு திடீரென அந்த யோசனை எழுந்தது... முதலில் விபத்து நடந்த அன்று திடீரென மறைந்து வர்ஷினியிடம் சென்றது... அதாவது ஸ்ரீ அவளுக்கே தெரியாமல் தன் ஆன்ம சக்திகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாள்...தற்போது கூட கடற்கரை என நினைத்ததும் ஆதித்யா வீட்டிலிருந்து மறைந்து வந்தது என வரிசையாய் நினைத்தவளுக்கு மீண்டும் அதே போல் மறைந்து இங்கிருந்து தப்பிக்கலாம் என நினைத்து முயற்சித்தாள்...
அந்தோ பரிதாபம் முன்னவே தீய ஆன்மாக்கள் அவளை சூழ்ந்து கொண்டதால் அவளால் அவ்விடத்தை விட்டு இம்மியளவும் நகர முடியவில்லை... எலும்பை உருக்குவது போன்று குளிரும் கெட்ட அழுகிய வாடையும் அவ்விடத்தை ஆக்கிரமித்தது....
அந்த ஜந்துவோ அவளை நோக்கி முன்னேற இவளுக்கு கண்ணீர் மட்டுமே வந்தது .. மெதுவாய் இவளும் பின் நகர சட்டென அவ்விடம் முழுதும் கருமை பரவி அவளால் எதையும் பார்க்க முடியாமல் போனது....
சிறிது நேரத்திலேயே அம்மிருகம் வேகமாய் அவளின் மீது பாய அவளோ அது தன்னை நோக்கி வருவதை அதன் சத்தத்தை வைத்து உணர்நதவள் இனி தன்னால் இவைகளிடம் இருந்த தப்பிக்க இயலாது என உணர்ந்தவள் பயத்தில் தன் இரு கைகளை மடக்கி தன் முகத்திற்கு நேராய் வைத்தவள் 'ஆ..ஆ... ' என அலறியிருந்தாள்....
ஸ்ரீ யைத் தேடி கடற்கரை வந்தவனுக்கு அந்த நீண்ட இடத்தில் கரைப்பகுதி சந்தடி குறைந்து காட்சியளித்தது.. மனிதர்கள் புழங்கும் பகுதியில் அவள் இருக்க மாட்டாள் ஏனெனில் அவர்கள் அவளை ஊடுருவி செல்லும் போது தடுமாறுவதால் அவ்விடங்களில் அவள் அதிக நேரம் இருக்க மாட்டாள்.... இன்னும் சிறிது நேரத்தில் நன்றாக இருட்டி அவளுக்கான ஆபத்தும் நெருங்கிவிடும் அதனால் ஸ்ரீ எங்கேனும் தென்படுகிறாளா என வேகமாக அவ்விடத்தை ஆராயந்தான்..
அந்த கடற்கரையின் கிழக்கு பகுதியில் ஆட்கள் அவ்வளவாக புலங்காத அவ்விடம் மட்டும் சற்று அதிக இருளாக இருக்க பதற்றத்துடன் அவ்விடம் சென்றான்.
அந்த மையிருளிலும் பாவையின் ஜீவன் ஒருவித பிரகாசத்துடன் அவனுக்கு மட்டும் மின்ன அதே நேரம் இருளில் எதையோப் பார்த்து கைகளால் தன்னை மறைத்து கத்தும் போது தான் அவனும் அங்கு நடக்கும் விபரீதத்தை உணர்ந்தான் விரைந்து செயல் பட்டவன் புயலை ஒத்த வேகத்தில் அந்த இருளைக் கிழித்துக் கொண்டு உள் நுழைந்தவன் அவளைத் தன் கைகளினால் தோளோடு அணைத்தவாறு பிடித்துக் கொண்டு அவ்விடத்தில் இருந்து மறைந்தான்....
யாரோ தன்னை அணைத்ததில் முதலில் பயந்தவள் பின் அந்த ஸ்பரிசத்தை யாரென உணர்ந்தவள் அவன் இழுத்த இழுப்புக்கு சென்றாள்... ஏதோ ஒரு வெளிச்சமான இடத்திற்கு வந்த ஆருஷி தன் கையணைவில் இருந்தவளை குனிந்து பார்க்க அதே நேரம் காரிகையவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்....
" ஆர் யூ ஓகே .. ஸ்ரீ" என்ற கேள்வியில் சுயம் தெளிந்தவள் அவனை விட்டு அவசரமாய் விலகி நின்றாள்...
"ஹே... ரிலாக்ஸ்.. " என ஆருஷி அவளை ஆசுவாசப்படுத்தினான்..
தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ஸ்ரீயும் ஆருஷியை நோக்கி " நீங்க யாரு ??? என்னோட இந்த நிலைமைக்கு நீங்க தானே காரணம் .. அப்புறம் ஏன் என்ன காப்பத்துற மாதிரி நடிக்கிறீங்க ..என்ன சுத்தி என்ன நடக்குதுனு சொல்றீங்களா ... " என்று கேள்விக் கணைகளை சற்று கோபமாக கேட்டாள்... ஆருஷிக்கோ அவளின் கேள்வியில் 'என்ன அவளோட இறப்புக்கு நான் தான் காரணம்னு எப்படி தெரிஞ்சது 'என குழப்பமான மனநிலையில் சற்று திகிலுடன் ஸ்ரீ யைப் பார்த்தான்...
கதையைப் பற்றி நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே.. உங்கள் கருத்துக்களே என்னை இன்னும் எழுத தூண்டும்... ??
என்றும் அன்புடன்
உங்கள்
AnuCharan