அத்தியாயம் 10
சுற்றிலும் அரவம் கேட்க கண்விழித்தாள் வர்ஷினி ... அவளை சுற்றிலும் அவளின் பெற்றோர்கள் மற்றும் விஷ்ணு,ரவி, ராம் ஆகியோர் நின்றிருந்தனர்.ரவியைக் கண்டு ஒரு நொடி அவள் கண்ணில் பிரகாசம் கூடியதோ!!!!
அவர்களை கண்டு கண்களை எட்டாத புன்னகை சிந்தியவள் எழ முயன்றாள்.. வர்ஷினியின் முயற்சி உணர்ந்த அவளின் தந்தை ராமநாதன் பெட்டை உயர்த்தி சரி செய்தார்...
பொதுவான நலம் விசாரிப்புகளுக்கு கூட ஒரிரு வார்த்தைகளில் பதில் அளித்தவள் மறந்தும் அதிகமாய் ஒரு வார்த்தை பேசிடவில்லை... அவளின் மனநிலை கருத்தில் கொண்டு விபத்து பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம் என எண்ணிய மூவரும் ராமநாதன் உடன் வீட்டிற்கு சென்றனர்..
ராமநாதன் " இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்குப்பா நான் அது முடிந்ததும் வந்துவிடுவேன் நீங்க மதியம் வரை ஓய்வு எடுத்துக்கோங்க " எனக் கூற
ராம் " இல்லை அங்கிள் ..நாங்க குளிச்சிட்டு ஹாஸ்பிடல் போகிறோம் ஆன்ட்டி தனியா இருப்பாங்க . நீங்க நேரா அங்க வந்துருங்க.. அதுக்கு அப்புறம் நாம போலீஸ் ஸ்டேஷன் போகலாம்" என்றான். பக்கத்தில் இருந்த உணவகத்திலேயே காலை உணவை வாங்கியவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
ராமநாதன் அலுவலகம் கிளம்பி விட அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் குளித்து முடித்து மருத்துவமனை கிளம்பி இருந்தனர்.. இவர்களை கண்ட கலைச்செல்வி
" என்னப்பா யாரும் ஓய்வெடுக்கலையா... கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்து வந்திருக்கலாம்ல."
"பரவாயில்லை ஆன்ட்டி வர்ஷீவ நாங்க பார்த்துக்கிறோம் நீங்கள் விஷ்ணு கூட போய் ப்ரஸ் ஆகிட்டு வாங்க" என்றான் ராம்.. இன்னும் தூக்க மருந்தின் வீரியத்தில் வர்ஷினி உறங்கி கொண்டிருக்க கண்விழிக்க நேரம் இருப்பதாலும் அவள் எழவதற்குள் வந்துவிடலாம் என்று விஷ்ணுவுடன் கிளம்பியிருந்தார்.
ரவியும் ராமும் வர்ஷினி யின் படுக்கை அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர். ராம் அவனின் மொபைலில் மூழ்கி இருக்க, ரவி மொபைலில் ஒரு கண்ணும் வர்ஷினியின் மீது மறுகண்ணும் என இருந்தான்..
அவளிடம் அசைவு தெரிய ராமை அழைத்த ரவி " ராம் நீ போய் கேண்டீன்ல டீ குடிச்சுட்டு எனக்கும் டீ வாங்கிட்டு வா" என அவனை வெளியில் அனுப்ப நினைக்க அவனோ ரவியை ஒரு மார்க்கமாய் பார்த்து வைத்தான்... அதையெல்லாம் கண்டு கொள்ளாத ரவியோ அவனை அனுப்புவதில் குறியாய் இருக்க
" இப்போ என்ன நான் வெளிய போகணும்... அதானே ... அவகிட்ட பொறுமையா நடந்ததை கேளு நா ஆன்ட்டி வந்தா கால் பண்றேன் " என வெளியேறினான். ராமிற்கு ரவி வர்ஷினியை பார்க்கும் பார்வையின் மாற்றத்திலேயே யூகித்திருந்தான்.
வெளியேறும் ராமின் முதுகை பார்த்த ரவி மென்னகை புரிந்தான்... இதுவரை அவனிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டாலும் பாசம் அதிகம் தான்.. பொறுப்பற்று விளையாட்டு தனமாய் இருக்கிறான் என எண்ணியிருக்க ராமோ தன் எண்ணத்தை சரியாய் கணித்ததில் ரவிக்கு பெருமிதமே...
கண்விழித்த வர்ஷினி அறையில் ரவி மட்டும் இருப்பதைக் கண்டு மற்றவர்களை தேடி அறை முழுதும் பார்வை ஓட்டினாள். அவளின் தேடலை உணர்ந்தவன் " அங்கிள் ஆபிஸ் போயிருக்காங்க , ஆன்ட்டி பிரஷ் ஆக வீட்டுக்கு விஷ்ணு கூட போயிருக்காங்க, ராம் வெளியே இருக்கான் " என்றான்...
இதைக் கேட்ட வர்ஷினி சரி என்று விட்டு அவனுக்கு மறுபுறம் திரும்பி சன்னல் புறம் வெறிக்க ஆரம்பித்தாள்... அவளுக்கு அழுகை வரும் போல் இருந்தது உதட்டை கடித்து அதை அடக்கியவள் கண்களை மூடிக் கொண்டாள்.
அதுமட்டுமின்றி ஸ்ரீ யின் இழப்பு வேறு அவளை உயிருடன் வதைக்க தான் இன்னும் கவனமாய் வண்டி ஓட்டியிருக்க வேண்டுமோ என்றும் நினைத்து நினைத்து குற்றவுணர்சியில் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தாள்..
அதிலும் அவள் சொல்வதை யாரும் நம்பவில்லை என்பதில் இருந்து இங்கிருப்பவர்கள் தன்னை பரிதாபமாகவும் ஏதோ மனநோயாளி போல பார்ப்பதிலும் மிகுந்த வருத்தத்தில் இப்படியே செத்துவிட மாட்டோமா என்ற விரக்தியில் இருந்தாள் ஆனால் இன்னும் சிறிது நம்பிக்கையாய் அவளின் பெற்றோர்கள் இருக்கின்றனர் அல்லவா!!
தன் எதிர்புறம் முகத்தை திருப்பி அழுகையை அடக்கி கொண்டு இருந்தவளைக் கண்டவன் எழுந்து அவள்புறம் சென்றான்.. தன் முன் நிழல் ஆடுவதை உணர்ந்தும் கண் விழிக்காமல் இருந்தவள் மென்மையாய் "வர்ஷு..." என்ற அவனின் அழைப்பில் அதுவரை உணர்வுகளை அடக்கி வைத்தவள் அதற்கு மேல் முடியாமல் தன் வலது கையால் அவனின் சட்டையை இழுத்து அவன் மேல் சாய்ந்து அழுக ஆரம்பித்து விட்டாள்...
தன் மேல் சாய்ந்து அழுது கொண்டு இருப்பவளை சமாதானம் செய்யாமல் சிறிது நேரம் அழுது மனபாரம் குறையட்டும் என நினைத்தவன் ஆறுதலாய் அவள் தலையை மட்டும் வருடிக் கொடுத்தான்.
இதுவரை எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் எதிர்பாராத நிகழ்வுகளால் ஒன்று சேர்ந்திருந்தனர்.. அவளின் பெற்றோர்கள் இருந்தும் தன்னிடம் அவள் ஆறுதல் தேடுகிறாள் என்பதே அவனின் மனதினுள் இதத்தை ஏற்படுத்தியது..
அவளின் அழுகை குறைய ரவி பேச ஆரம்பிக்கும் முன் வர்ஷினி " என்னால தான் ஸ்ரீ நம்மல விட்டு போயிட்டா நான் கவனமா வண்டியை ஓட்டியிருக்கணும்... என்னால முடியல ரவி செத்து போலாம் போல இருக்கு..." என்று முடிப்பதற்குள் ரவி கையை ஓங்கி விட்டான் அவளை அடிக்க... "அறஞ்சேன்னா பாத்துக்கோ... இன்னொரு தடவை இப்படி பேசின அவ்வளவு தான்..." என்றவன் தலையை அழுத்திக் கோதி தன்னை சமன்படுத்தி கொண்டான்...
என்னல்லாம் பேசுகிறாள் ஒரு இழப்பையே இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாமல் அனைவரும் நடைபிணமாய் வாழ்ந்து கொண்டிருக்கையில் இவளின் வார்த்தையில் மனதளவில் பெரிதும் காயப்பட்டான்... வர்ஷினியோ அவனின் கோபத்தில் மிரண்டு விழிக்க அதில் அவள் மேல் பரிதாபமே அவனுக்கு தோன்றியது...
அவள் அருகே சென்றவன் "இங்க பாரு வர்ஷு இந்த விபத்தில உன்னோட தப்பு எதுவும் இல்லை .. இன்னோரு முறை இப்படிலாம் பேசாத... எங்களால ஸ்ரீ இழப்பையே தாங்க முடியாமல் இருக்கோம்... " என்றான் குரல் கமற..
அவனின் சோகம் அவளை வருத்த " சாரி இனி இப்படி பேசமாட்டேன் ரவி" என்றாள்..
அவள் அருகில் சென்று அமர்ந்தவன் அவளின் கைகளை தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டான்.... "ரவி நான் லூசாகிட்டேனா... நான் சொல்றத யாருமே நம்ப மாட்டீங்குறாங்க..." என கலங்கினாள் வர்ஷினி...
" ஏன் இப்படி எல்லாம் பேசுற வர்ஷு .. நான் உன்ன நம்புறேன்... அன்னைக்கு என்ன நடந்தது...உங்களை இடிச்ச காரை நீ பாத்தியா " ரவி..
"நான் நல்லா பார்த்தேன் ரவி கருப்பு கலர் ஃபெராரி தான் ....இடிச்சதும் ஒரு நிமிடம் கூட நிற்கல வேகமாக போயிருச்சு... இதை போலீஸ் கிட்ட சொன்னா நம்ப மாட்டிங்கறாங்க .. வேகமாக வண்டி ஓட்டி வரும் போது பிரேக் பிடிக்காம தான் விபத்து நடந்ததா சொல்லுறாங்க.. நான் அன்னைக்கு மெதுவாதான் வண்டி ஓட்டினேன் அதுவும் பிரேக் நல்லாதான் இருந்தது .நான் எவ்வளவோ சொல்லியும் நம்பல நான் மயக்கத்துல இருந்ததால எதுவும் சரியா கவனிக்கலனு சொல்றாங்க ரவி..." என கண்கலங்கினாள்.
"நீ சொல்றத நான் நம்புறேன் வர்ஷூ... அந்த காரோட நம்பர் இல்ல வேற ஏதும் அடையாளம் பார்த்தாயா" என கேட்க அவளுக்கு எதுவும் நினைவில் இல்லை என்று அவனைக் கண்டு உதட்டை பிதுக்க ரவியும் அதற்கு மேல் அவளை கஷ்டப் படுத்த விரும்பாது விட்டுவிட்டான்.
சிறிது அமைதிக்குப் பின் " ஊரில் எல்லா எப்படி இருக்காங்க ..." என்றாள்
" ம்ம் இருக்காங்க.. உயிர் இல்லா நடைபிணமா.. எங்களோட செல்லப் பொண்ணு அவ .. அங்க வீட்டுல ஒவ்வொரு இடத்துலயும் அவளோட நியாபகங்கள் மட்டும் தான்..தாத்தா எப்பவும் ஸ்ரீ ய பத்தியே தான் நினைச்சுட்டே இருப்பாரு சின்ன வயசுல எல்லாம் அவளோட கால் தரைல பட விட மாட்டாரு தோள்ளையேதான் சுமப்பாரு அதான் அவ இல்லைங்கறத ஏத்துக்க முடியாம அவ கூடவே ... ஆனால் இப்படி எல்லாம் நடக்கும்னு நாங்க கனவுல கூட நினைக்கல...." என்றான் கண்கலங்க....
" எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு ரவி ரொம்ப குற்றவுணர்ச்சியா!! " என்றாள் வர்ஷினி ..
அவன் "நீ எதுவும் கவலைப்படாத வர்ஷூ... இதுக்கெல்லாம் யார் காரணம்னு மட்டும் தெரியட்டும் அன்னைக்குதான் அவனுக்கு கடைசி நாள் "என்றான் தீர்க்கமாய்.. அதன்பின் ரவியின் போன் அழைக்க பார்த்தால் ராம் தான் கலைச் செல்வி மருத்துவமனை வளாகத்தினுள் வந்து விட்டதாய்..
ரவி அவளிடம் " வர்ஷூ எதைப்பற்றியும் கவலைப்படாத ... உனக்காக எப்பவும் நான் இருப்பேன் ... " என்றவன் அவளை நெருங்கி அவளின் நெற்றியில் தன் முதல் அச்சாரத்தைப் பதித்தான்.. அவளும் கண்மூடி அதை அனுபவித்தவளுக்கு மூடிய இமைவழியே கண்ணீர் வழிந்தது ராம் அதை துடைத்துவிட்டு அங்குள்ள இருக்கையில் சமத்தாய் அமர்ந்து கொண்டான்..
-------------------------------------
தீர்க்கமான பார்வையுடன் தன்னை அளவிடுவது போல் பார்த்துக் கொண்டிருப்பவரைக் கண்டவனுக்கு சற்று வினோதமாக இருந்தது.. அடுத்த வினாடியே தன் தயக்கங்களை தகர்த்து எறிந்த ஆருஷி அவரிடம் " நீங்க யாரு? இது என்ன இடம் ... நான் எப்படி இங்கே வந்தேன் ... என்னை சுத்தி என்ன தான் நடக்குது.." என்றான் அழுத்தமான குரலில்.. இந்த மாதிரி ஒரு வனாந்திர சூழ்நிலை நிச்சயம் எவ்வளவு தைரியமானவருக்கும் பயத்தை உருவாக்கும்.. அப்படி இருக்கையில் தன்னிடம் தைரியமாக பேசுபவனை கண்டு மெச்சுதலான பார்வை பார்த்து வைத்தார் சித்தர்... அவரின் பார்வையை தாங்கி நின்றவனைக் கண்டவர் " ஆருஷி இந்த உலகத்தில் நடக்கின்ற எல்லா செயல்களுக்கும் சாதகம் பாதகம் என்று ரெண்டு விசயம் இருக்கு அது உனக்கு தெரியுமா" என வேதாந்தம் பேச இவனோ இப்படி ஒரு இடத்தில் இருந்து கொண்டு எப்படி என் பெயரை தெரிந்து வைத்திருக்கிறார் .. இன்னும் என்னைப் பற்றி என்னவெல்லாம் தெரியும் என சிந்தித்தவன் பின் அவரின் கேள்வியில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டான்...
"தெரியும்... ஆனால் நான் என்ன செய்தேன்.." என்றான் குற்றவுணர்ச்சியை வெளிக்காட்டாமல்.. ஏனெனில் தற்போது தான் ஒருவனை மேலோகம் அனுப்பி வைத்தான்...
அவரோ அவன்பதிலில் புன்னகை புரிந்தவர் தொடர்ந்து "உன்னால் நேர்ந்த கெட்ட சம்பவம் ஒரு அசுரனுக்கு சாதகமாய் முடிந்திருக்கிறது... அதை சரிசெய்ய வேண்டியதும் உன் பொறுப்பு தான் ஆருஷி.." என்றார் நிதானமாக... அவனோ அவர் கூறுவதில் தலையும் புரியாமல் காலும் புரியாமல் விழித்தான்.
பின் அவனே " அவன் தப்பு பண்ணியவன் அவனை விட்டு வைத்தால் இன்னும் பலருக்கு துன்பம் அதனால் அப்படி செய்தேன்"என்றான் உண்மையை ஒப்புக் கொண்டவனாய்
அவரோ " நான் அதைப் பற்றி கூறவில்லை ஆருஷி அவன் தீயவன் என்று எனக்கும் தெரியும் .. அவனை நீ கொலை செய்வில்லை உனக்கு தீங்கிழைத்தவனை வதம் செய்துள்ளாய்... உனக்கு தெரியாமல் உன் சுயநினைவு இல்லாமல் செய்த பிழையால் இங்கு எத்தகைய தீங்கு நிகழப் போகிறது தெரியுமா அதைப் பற்றி தான் சொல்ல வருகிறேன்" என்றார்..
அப்பொழுது தான் ஆருஷி துணுக்குற்றான். நான் என்ன தவறு செய்தேன் என்னால் யாருக்கு பிரச்சினை என்று யோசித்தான்.. அவனின் நெற்றி சுருக்கம் மூலம் அவனின் குழப்பத்தை ஊகித்தவர் அவனாய் கேள்வி கேட்கும் வரை அமைதியாக இருந்தார்...
அவனோ " சரி நான் செய்த பிழையை நானே சரி செய்கிறேன்... ஆனால் இந்த நிலையில் எப்படி... என்னால் பெரிதாய் என்ன செய்திட முடியும்" என்றான் சந்தேகபாணியில்... அவரும் அவனின் பதிலில் திருப்தியுற்று .
"நீ இப்போ உதவி செய்யப் போறது ஒரு ஆத்மாவிற்கு உன்னால் உயிரிழந்து ஆன்மாவாக மாறியவருக்கு... அந்த ஆன்மா மிகவும் சக்தி வாய்ந்தது அதனை அந்த தீயவன் மட்டும் அடைந்து விட்டால்... இங்கு பல விபரீதங்கள் நிகழும் ... அதனால் நீ அதனை தேடி சென்று ஆதியில்லா வெளிச்சத்திற்கு அனுப்ப வேண்டும் " என்றார் நிதானமாய் அதனை கேட்ட ஆருஷி அதிர்ச்சி அடைந்தான் தன்னால் இதை செய்ய முடியுமா என்று ... இருந்தும் உறுதியை தளர விடாமல்
" வெளிச்சமா!! அப்படி என்றால் என்ன? எனக்கு புரியல " என்றான் தொடர்ந்து...
" ஆருஷி உனக்கு ஆரம்பத்தில் இருந்து சொன்னால் புரியும் என்று நினைக்கிறேன்... நான் கூறுவதை நீ கவனமாய் கேட்க வேண்டும்... அப்போதுதான் ஆபத்தின் போது உன்னால் சமயோசிதமாக செயல்பட முடியும்" என்று ஆரம்பித்தார் சித்தர்..
--------------------------------
பத்து நாட்கள் ஆகி இருந்தது ஸ்ரீயின் உயிர் உடலை விட்டு பிரிந்து.. அவள் ஒரளவு பழகியிருந்தாள் இந்த ஆன்ம நிலைக்கு உடன் ஆதித்யா வேறு அவளை வாட விடாமல் உற்சாகமாய் வைத்துக் கொண்டான்..
அவள் சில சமயங்களில் யோசிப்பது உண்டு இந்த நிலைக்கு ஒரு முடிவு இல்லையா சிறுவயதில் கேள்வி பட்டிருக்கிறாள் சில கதைகளையும் அதில் வரும் பேய்கள் ஆக்ரோஷமாகவும் பிறரை பயமுறுத்துவதாகவும் இருக்கும் என ஆனால் தானும் ஆதித்யாவும் அவ்வாறு இல்லையே என நினைத்துக் கொள்வாள்..
அவளுடைய பெரிய பிரச்சினை உச்சி வெயிலும், இரவு பொழுதுகளும் தான் அதனை கடப்பதற்கு தான் பெரும்பாடு ஆகி விடுகிறது... நெருப்பு போல் தகிக்கும் வெயில் அவளின் ஆன்மாவை நிலை குழைய செய்கிறது ... இரவுகளில் இருட்டு பயம்...அந்த நிசப்தமான சூழ்நிலையில் கேட்கும் வித்தியாசமான சத்தமும் நாய்களின் சத்தமும் தான் அவளின் மிகப் பெரிய பயமே..அந்நேரங்களில் பயந்து சிவநாமத்தை அவளை அறியாமலே உச்சரித்துக் கொண்டு இருப்பாள் அதுவே அவளைக் காக்கும் கவசம் என்று அறியாமல் ... சில நேரங்களில் அனைத்திற்கும் துணையாய் ஆதித்யா இருந்தான்...
இத்தனை நாட்களில் ஆதித்யா செய்யும் குறும்புகளில் பெரிதும் தேறியிருந்தாள். அவனோ பகல் நேரத்தில் விளையாட்டு பூங்கா சென்று அங்குள்ள குழந்தைகளுடன் குழந்தையாய் கலந்து விடுவான்... மற்றவர் கண்களுக்கு நாம் புலப்பட வில்லை என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விசயம் என்பதை அவன் நிருபித்து இருந்தான்..
நேராய் செல்பவன் அங்குள்ள குழந்தைகளின் வழியாக ஊடுருவி சென்று அவர்களுக்கு பழிப்புக் காட்டுவான்.. ஊஞ்சலில் குழந்தைகள் அருகில் அமர்ந்து அவர்களுடனே ஆடுவான்... வழுக்கி விழும் பலகை, சிசாவிலும் அவன் செய்யும் சேட்டைகளை கண்டு ஓரமாய் அமர்ந்து சிரித்துக் கொண்டிருப்பாள் ஸ்ரீ..
வாடாத மலராய் அவளினுள் இருக்கும் கவலை அவளின் குடும்பம் தான் எவ்வாறு தன் இழப்பை ஏற்றுக் கொண்டார்கள் இவ்வளவு நாட்களில் மீண்டு வந்திருப்பார்களா என்று மீண்டும் மீண்டும் நினைப்பவள் இறைவனிடம் வேண்டிக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியும் இல்லை.. அத்துடன் இந்த நிலைக்கு சீக்கிரம் முடிவு வேண்டியும் நிதம் மனதார பிராத்திக்கிறாள்.
அன்றிரவு வழக்கம் போல் அந்த கடற்கரை ஓரமாக ஸ்ரீ யும் ஆதித்யாவும் வந்தனர்... "ஸ்ரீ நாளைக்கு நம்ம மால் போலாமா... எங்க அம்மாவும் அப்பாவும் என்ன ஒரு பெரிய மால்க்கு கூட்டிட்டு போயிருக்காங்க .. அங்க போலாம் பா பிளீஸ் " என்றான் ஆதித்யா.. "சரி ஆதி போலாம்... " என்றாள் ஸ்ரீ அவளுக்கு இன்றிரவு எப்படி கடக்க போகிறோம் என்ற கவலை... ஆதி அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் பயம் என்னவோ விட்ட பாடுதான் இல்லை....அதிக வெளிச்சமும் ஆன்மாக்களுக்கு ஆகாது என்பதால் அவர்களால் விளக்கு எரியும் இடங்களிலும் இருக்க முடியாது...
இவை அனைத்துமே ஸ்ரீ அனுபவத்தால் உணர்ந்ததும் ஆதித்யா கூறியதும். ஆன்மாவாகிய அடுத்தநாள் இரவு இருட்டு பயத்தில் தெரு விளக்கின் வெளிச்சத்தில் நிற்க பத்து நிமிடங்களில் அவள் ஆன்மா மெல்ல மறைய அவளுக்கு கை கால்கள் எல்லாம் எரியத் துவங்கியது... அதன் பின்பே உணரத் துவங்கினாள் அதிக வெளிச்சமும் வெப்பமும் ஆபத்து என்பதை...
" ஸ்ரீ...ஸ்ரீ ... "என ஆதி இருமுறை அழைத்த பின்பே சுயத்திற்கு வர ஆதியோ அலுத்துக் கொண்டான்
" என்ன ஸ்ரீ நீ கனவு காணுகிறாயா எவ்வளவு நேரம் கூப்பிட்டுட்டே இருக்கேன் " எனவும் கனவு என்றவுடம் தான் அவளுக்கு அவளின் கனவு நாயகனின் நினைவு வந்தது .. அதிலேயே மூழ்கி விட்டாள் ஸ்ரீ. சென்னை வந்து ஊரிற்கு கிளம்பும் அந்த வாரம் அவளிற்கு அவனின் தரிசனம் கிடைக்கவே இல்லை அதில் சிறுவருத்தம் இருந்தாலும் அதை மறந்து தான் அன்றாட வேலைகளை செய்வாள்.
ஆனால் இன்றோ அவளுக்கு அவனின் நினைவுகள் அதிகமாய் தோன்ற ஒவ்வொரு கனவாய் அவள் நினைத்துக் கொண்டே வந்தாள். வழக்கம் போல அவர்களின் படகிற்கு வந்தவர்கள் அதன் மீது மல்லாக்க படுத்துக் கொள்ள ஆதியோ தன் பெற்றோருடன் மாலிற்கு சென்ற கதையை விவரித்துக் கொண்டு இருந்தான்.. ஸ்ரீ வெறுமனே ம் கொட்டிவிட்டு கனவில் மூழ்கி விட்டாள். அவனின் நினைவில் மூழ்கியவள் சிவநாமத்தை சொல்ல மறந்திருந்தாள் அதனால் நிகழவிருக்கும் விபரீதத்தை அறியாமல்......
(*சற்று வித்தியாசமான கதைக்களம் மக்களே ... பொதுவாக மக்கள் மனதில் இருக்கும் பேய் ஆன்மா பற்றிய சித்தரிப்புகளை மாற்றிய புது முயற்சி... இன்னும் ஆன்மா பற்றிய பல தகவல்களை என் கண்ணோட்டத்தில் அடுத்தடுத்த எபிசோடுகளில் போடுகிறேன் மக்காஸ்.. இன்று காதலர் தினம் என்பதில் சிறிது காதலையும் கலந்துள்ளேன். என்னுடைய கதைக்கருவிற்கு காதல் காட்சிகள் பெரிதும் பொருந்தாது இருந்தும் கதையை பாதிக்கா வண்ணம் தர முயற்சிக்கிறேன் நட்புக்களே!!*)
வழக்கம் போல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே ?
Thread 'உயிரின் தேடல் நீய(டா)டி - கருத்துதிரி' https://pommutamilnovels.com/index.php?threads/உயிரின்-தேடல்-நீய-டா-டி-கருத்துதிரி.429/
சுற்றிலும் அரவம் கேட்க கண்விழித்தாள் வர்ஷினி ... அவளை சுற்றிலும் அவளின் பெற்றோர்கள் மற்றும் விஷ்ணு,ரவி, ராம் ஆகியோர் நின்றிருந்தனர்.ரவியைக் கண்டு ஒரு நொடி அவள் கண்ணில் பிரகாசம் கூடியதோ!!!!
அவர்களை கண்டு கண்களை எட்டாத புன்னகை சிந்தியவள் எழ முயன்றாள்.. வர்ஷினியின் முயற்சி உணர்ந்த அவளின் தந்தை ராமநாதன் பெட்டை உயர்த்தி சரி செய்தார்...
பொதுவான நலம் விசாரிப்புகளுக்கு கூட ஒரிரு வார்த்தைகளில் பதில் அளித்தவள் மறந்தும் அதிகமாய் ஒரு வார்த்தை பேசிடவில்லை... அவளின் மனநிலை கருத்தில் கொண்டு விபத்து பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம் என எண்ணிய மூவரும் ராமநாதன் உடன் வீட்டிற்கு சென்றனர்..
ராமநாதன் " இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்குப்பா நான் அது முடிந்ததும் வந்துவிடுவேன் நீங்க மதியம் வரை ஓய்வு எடுத்துக்கோங்க " எனக் கூற
ராம் " இல்லை அங்கிள் ..நாங்க குளிச்சிட்டு ஹாஸ்பிடல் போகிறோம் ஆன்ட்டி தனியா இருப்பாங்க . நீங்க நேரா அங்க வந்துருங்க.. அதுக்கு அப்புறம் நாம போலீஸ் ஸ்டேஷன் போகலாம்" என்றான். பக்கத்தில் இருந்த உணவகத்திலேயே காலை உணவை வாங்கியவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
ராமநாதன் அலுவலகம் கிளம்பி விட அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் குளித்து முடித்து மருத்துவமனை கிளம்பி இருந்தனர்.. இவர்களை கண்ட கலைச்செல்வி
" என்னப்பா யாரும் ஓய்வெடுக்கலையா... கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்து வந்திருக்கலாம்ல."
"பரவாயில்லை ஆன்ட்டி வர்ஷீவ நாங்க பார்த்துக்கிறோம் நீங்கள் விஷ்ணு கூட போய் ப்ரஸ் ஆகிட்டு வாங்க" என்றான் ராம்.. இன்னும் தூக்க மருந்தின் வீரியத்தில் வர்ஷினி உறங்கி கொண்டிருக்க கண்விழிக்க நேரம் இருப்பதாலும் அவள் எழவதற்குள் வந்துவிடலாம் என்று விஷ்ணுவுடன் கிளம்பியிருந்தார்.
ரவியும் ராமும் வர்ஷினி யின் படுக்கை அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர். ராம் அவனின் மொபைலில் மூழ்கி இருக்க, ரவி மொபைலில் ஒரு கண்ணும் வர்ஷினியின் மீது மறுகண்ணும் என இருந்தான்..
அவளிடம் அசைவு தெரிய ராமை அழைத்த ரவி " ராம் நீ போய் கேண்டீன்ல டீ குடிச்சுட்டு எனக்கும் டீ வாங்கிட்டு வா" என அவனை வெளியில் அனுப்ப நினைக்க அவனோ ரவியை ஒரு மார்க்கமாய் பார்த்து வைத்தான்... அதையெல்லாம் கண்டு கொள்ளாத ரவியோ அவனை அனுப்புவதில் குறியாய் இருக்க
" இப்போ என்ன நான் வெளிய போகணும்... அதானே ... அவகிட்ட பொறுமையா நடந்ததை கேளு நா ஆன்ட்டி வந்தா கால் பண்றேன் " என வெளியேறினான். ராமிற்கு ரவி வர்ஷினியை பார்க்கும் பார்வையின் மாற்றத்திலேயே யூகித்திருந்தான்.
வெளியேறும் ராமின் முதுகை பார்த்த ரவி மென்னகை புரிந்தான்... இதுவரை அவனிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டாலும் பாசம் அதிகம் தான்.. பொறுப்பற்று விளையாட்டு தனமாய் இருக்கிறான் என எண்ணியிருக்க ராமோ தன் எண்ணத்தை சரியாய் கணித்ததில் ரவிக்கு பெருமிதமே...
கண்விழித்த வர்ஷினி அறையில் ரவி மட்டும் இருப்பதைக் கண்டு மற்றவர்களை தேடி அறை முழுதும் பார்வை ஓட்டினாள். அவளின் தேடலை உணர்ந்தவன் " அங்கிள் ஆபிஸ் போயிருக்காங்க , ஆன்ட்டி பிரஷ் ஆக வீட்டுக்கு விஷ்ணு கூட போயிருக்காங்க, ராம் வெளியே இருக்கான் " என்றான்...
இதைக் கேட்ட வர்ஷினி சரி என்று விட்டு அவனுக்கு மறுபுறம் திரும்பி சன்னல் புறம் வெறிக்க ஆரம்பித்தாள்... அவளுக்கு அழுகை வரும் போல் இருந்தது உதட்டை கடித்து அதை அடக்கியவள் கண்களை மூடிக் கொண்டாள்.
அதுமட்டுமின்றி ஸ்ரீ யின் இழப்பு வேறு அவளை உயிருடன் வதைக்க தான் இன்னும் கவனமாய் வண்டி ஓட்டியிருக்க வேண்டுமோ என்றும் நினைத்து நினைத்து குற்றவுணர்சியில் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தாள்..
அதிலும் அவள் சொல்வதை யாரும் நம்பவில்லை என்பதில் இருந்து இங்கிருப்பவர்கள் தன்னை பரிதாபமாகவும் ஏதோ மனநோயாளி போல பார்ப்பதிலும் மிகுந்த வருத்தத்தில் இப்படியே செத்துவிட மாட்டோமா என்ற விரக்தியில் இருந்தாள் ஆனால் இன்னும் சிறிது நம்பிக்கையாய் அவளின் பெற்றோர்கள் இருக்கின்றனர் அல்லவா!!
தன் எதிர்புறம் முகத்தை திருப்பி அழுகையை அடக்கி கொண்டு இருந்தவளைக் கண்டவன் எழுந்து அவள்புறம் சென்றான்.. தன் முன் நிழல் ஆடுவதை உணர்ந்தும் கண் விழிக்காமல் இருந்தவள் மென்மையாய் "வர்ஷு..." என்ற அவனின் அழைப்பில் அதுவரை உணர்வுகளை அடக்கி வைத்தவள் அதற்கு மேல் முடியாமல் தன் வலது கையால் அவனின் சட்டையை இழுத்து அவன் மேல் சாய்ந்து அழுக ஆரம்பித்து விட்டாள்...
தன் மேல் சாய்ந்து அழுது கொண்டு இருப்பவளை சமாதானம் செய்யாமல் சிறிது நேரம் அழுது மனபாரம் குறையட்டும் என நினைத்தவன் ஆறுதலாய் அவள் தலையை மட்டும் வருடிக் கொடுத்தான்.
இதுவரை எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் எதிர்பாராத நிகழ்வுகளால் ஒன்று சேர்ந்திருந்தனர்.. அவளின் பெற்றோர்கள் இருந்தும் தன்னிடம் அவள் ஆறுதல் தேடுகிறாள் என்பதே அவனின் மனதினுள் இதத்தை ஏற்படுத்தியது..
அவளின் அழுகை குறைய ரவி பேச ஆரம்பிக்கும் முன் வர்ஷினி " என்னால தான் ஸ்ரீ நம்மல விட்டு போயிட்டா நான் கவனமா வண்டியை ஓட்டியிருக்கணும்... என்னால முடியல ரவி செத்து போலாம் போல இருக்கு..." என்று முடிப்பதற்குள் ரவி கையை ஓங்கி விட்டான் அவளை அடிக்க... "அறஞ்சேன்னா பாத்துக்கோ... இன்னொரு தடவை இப்படி பேசின அவ்வளவு தான்..." என்றவன் தலையை அழுத்திக் கோதி தன்னை சமன்படுத்தி கொண்டான்...
என்னல்லாம் பேசுகிறாள் ஒரு இழப்பையே இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாமல் அனைவரும் நடைபிணமாய் வாழ்ந்து கொண்டிருக்கையில் இவளின் வார்த்தையில் மனதளவில் பெரிதும் காயப்பட்டான்... வர்ஷினியோ அவனின் கோபத்தில் மிரண்டு விழிக்க அதில் அவள் மேல் பரிதாபமே அவனுக்கு தோன்றியது...
அவள் அருகே சென்றவன் "இங்க பாரு வர்ஷு இந்த விபத்தில உன்னோட தப்பு எதுவும் இல்லை .. இன்னோரு முறை இப்படிலாம் பேசாத... எங்களால ஸ்ரீ இழப்பையே தாங்க முடியாமல் இருக்கோம்... " என்றான் குரல் கமற..
அவனின் சோகம் அவளை வருத்த " சாரி இனி இப்படி பேசமாட்டேன் ரவி" என்றாள்..
அவள் அருகில் சென்று அமர்ந்தவன் அவளின் கைகளை தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டான்.... "ரவி நான் லூசாகிட்டேனா... நான் சொல்றத யாருமே நம்ப மாட்டீங்குறாங்க..." என கலங்கினாள் வர்ஷினி...
" ஏன் இப்படி எல்லாம் பேசுற வர்ஷு .. நான் உன்ன நம்புறேன்... அன்னைக்கு என்ன நடந்தது...உங்களை இடிச்ச காரை நீ பாத்தியா " ரவி..
"நான் நல்லா பார்த்தேன் ரவி கருப்பு கலர் ஃபெராரி தான் ....இடிச்சதும் ஒரு நிமிடம் கூட நிற்கல வேகமாக போயிருச்சு... இதை போலீஸ் கிட்ட சொன்னா நம்ப மாட்டிங்கறாங்க .. வேகமாக வண்டி ஓட்டி வரும் போது பிரேக் பிடிக்காம தான் விபத்து நடந்ததா சொல்லுறாங்க.. நான் அன்னைக்கு மெதுவாதான் வண்டி ஓட்டினேன் அதுவும் பிரேக் நல்லாதான் இருந்தது .நான் எவ்வளவோ சொல்லியும் நம்பல நான் மயக்கத்துல இருந்ததால எதுவும் சரியா கவனிக்கலனு சொல்றாங்க ரவி..." என கண்கலங்கினாள்.
"நீ சொல்றத நான் நம்புறேன் வர்ஷூ... அந்த காரோட நம்பர் இல்ல வேற ஏதும் அடையாளம் பார்த்தாயா" என கேட்க அவளுக்கு எதுவும் நினைவில் இல்லை என்று அவனைக் கண்டு உதட்டை பிதுக்க ரவியும் அதற்கு மேல் அவளை கஷ்டப் படுத்த விரும்பாது விட்டுவிட்டான்.
சிறிது அமைதிக்குப் பின் " ஊரில் எல்லா எப்படி இருக்காங்க ..." என்றாள்
" ம்ம் இருக்காங்க.. உயிர் இல்லா நடைபிணமா.. எங்களோட செல்லப் பொண்ணு அவ .. அங்க வீட்டுல ஒவ்வொரு இடத்துலயும் அவளோட நியாபகங்கள் மட்டும் தான்..தாத்தா எப்பவும் ஸ்ரீ ய பத்தியே தான் நினைச்சுட்டே இருப்பாரு சின்ன வயசுல எல்லாம் அவளோட கால் தரைல பட விட மாட்டாரு தோள்ளையேதான் சுமப்பாரு அதான் அவ இல்லைங்கறத ஏத்துக்க முடியாம அவ கூடவே ... ஆனால் இப்படி எல்லாம் நடக்கும்னு நாங்க கனவுல கூட நினைக்கல...." என்றான் கண்கலங்க....
" எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு ரவி ரொம்ப குற்றவுணர்ச்சியா!! " என்றாள் வர்ஷினி ..
அவன் "நீ எதுவும் கவலைப்படாத வர்ஷூ... இதுக்கெல்லாம் யார் காரணம்னு மட்டும் தெரியட்டும் அன்னைக்குதான் அவனுக்கு கடைசி நாள் "என்றான் தீர்க்கமாய்.. அதன்பின் ரவியின் போன் அழைக்க பார்த்தால் ராம் தான் கலைச் செல்வி மருத்துவமனை வளாகத்தினுள் வந்து விட்டதாய்..
ரவி அவளிடம் " வர்ஷூ எதைப்பற்றியும் கவலைப்படாத ... உனக்காக எப்பவும் நான் இருப்பேன் ... " என்றவன் அவளை நெருங்கி அவளின் நெற்றியில் தன் முதல் அச்சாரத்தைப் பதித்தான்.. அவளும் கண்மூடி அதை அனுபவித்தவளுக்கு மூடிய இமைவழியே கண்ணீர் வழிந்தது ராம் அதை துடைத்துவிட்டு அங்குள்ள இருக்கையில் சமத்தாய் அமர்ந்து கொண்டான்..
-------------------------------------
தீர்க்கமான பார்வையுடன் தன்னை அளவிடுவது போல் பார்த்துக் கொண்டிருப்பவரைக் கண்டவனுக்கு சற்று வினோதமாக இருந்தது.. அடுத்த வினாடியே தன் தயக்கங்களை தகர்த்து எறிந்த ஆருஷி அவரிடம் " நீங்க யாரு? இது என்ன இடம் ... நான் எப்படி இங்கே வந்தேன் ... என்னை சுத்தி என்ன தான் நடக்குது.." என்றான் அழுத்தமான குரலில்.. இந்த மாதிரி ஒரு வனாந்திர சூழ்நிலை நிச்சயம் எவ்வளவு தைரியமானவருக்கும் பயத்தை உருவாக்கும்.. அப்படி இருக்கையில் தன்னிடம் தைரியமாக பேசுபவனை கண்டு மெச்சுதலான பார்வை பார்த்து வைத்தார் சித்தர்... அவரின் பார்வையை தாங்கி நின்றவனைக் கண்டவர் " ஆருஷி இந்த உலகத்தில் நடக்கின்ற எல்லா செயல்களுக்கும் சாதகம் பாதகம் என்று ரெண்டு விசயம் இருக்கு அது உனக்கு தெரியுமா" என வேதாந்தம் பேச இவனோ இப்படி ஒரு இடத்தில் இருந்து கொண்டு எப்படி என் பெயரை தெரிந்து வைத்திருக்கிறார் .. இன்னும் என்னைப் பற்றி என்னவெல்லாம் தெரியும் என சிந்தித்தவன் பின் அவரின் கேள்வியில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டான்...
"தெரியும்... ஆனால் நான் என்ன செய்தேன்.." என்றான் குற்றவுணர்ச்சியை வெளிக்காட்டாமல்.. ஏனெனில் தற்போது தான் ஒருவனை மேலோகம் அனுப்பி வைத்தான்...
அவரோ அவன்பதிலில் புன்னகை புரிந்தவர் தொடர்ந்து "உன்னால் நேர்ந்த கெட்ட சம்பவம் ஒரு அசுரனுக்கு சாதகமாய் முடிந்திருக்கிறது... அதை சரிசெய்ய வேண்டியதும் உன் பொறுப்பு தான் ஆருஷி.." என்றார் நிதானமாக... அவனோ அவர் கூறுவதில் தலையும் புரியாமல் காலும் புரியாமல் விழித்தான்.
பின் அவனே " அவன் தப்பு பண்ணியவன் அவனை விட்டு வைத்தால் இன்னும் பலருக்கு துன்பம் அதனால் அப்படி செய்தேன்"என்றான் உண்மையை ஒப்புக் கொண்டவனாய்
அவரோ " நான் அதைப் பற்றி கூறவில்லை ஆருஷி அவன் தீயவன் என்று எனக்கும் தெரியும் .. அவனை நீ கொலை செய்வில்லை உனக்கு தீங்கிழைத்தவனை வதம் செய்துள்ளாய்... உனக்கு தெரியாமல் உன் சுயநினைவு இல்லாமல் செய்த பிழையால் இங்கு எத்தகைய தீங்கு நிகழப் போகிறது தெரியுமா அதைப் பற்றி தான் சொல்ல வருகிறேன்" என்றார்..
அப்பொழுது தான் ஆருஷி துணுக்குற்றான். நான் என்ன தவறு செய்தேன் என்னால் யாருக்கு பிரச்சினை என்று யோசித்தான்.. அவனின் நெற்றி சுருக்கம் மூலம் அவனின் குழப்பத்தை ஊகித்தவர் அவனாய் கேள்வி கேட்கும் வரை அமைதியாக இருந்தார்...
அவனோ " சரி நான் செய்த பிழையை நானே சரி செய்கிறேன்... ஆனால் இந்த நிலையில் எப்படி... என்னால் பெரிதாய் என்ன செய்திட முடியும்" என்றான் சந்தேகபாணியில்... அவரும் அவனின் பதிலில் திருப்தியுற்று .
"நீ இப்போ உதவி செய்யப் போறது ஒரு ஆத்மாவிற்கு உன்னால் உயிரிழந்து ஆன்மாவாக மாறியவருக்கு... அந்த ஆன்மா மிகவும் சக்தி வாய்ந்தது அதனை அந்த தீயவன் மட்டும் அடைந்து விட்டால்... இங்கு பல விபரீதங்கள் நிகழும் ... அதனால் நீ அதனை தேடி சென்று ஆதியில்லா வெளிச்சத்திற்கு அனுப்ப வேண்டும் " என்றார் நிதானமாய் அதனை கேட்ட ஆருஷி அதிர்ச்சி அடைந்தான் தன்னால் இதை செய்ய முடியுமா என்று ... இருந்தும் உறுதியை தளர விடாமல்
" வெளிச்சமா!! அப்படி என்றால் என்ன? எனக்கு புரியல " என்றான் தொடர்ந்து...
" ஆருஷி உனக்கு ஆரம்பத்தில் இருந்து சொன்னால் புரியும் என்று நினைக்கிறேன்... நான் கூறுவதை நீ கவனமாய் கேட்க வேண்டும்... அப்போதுதான் ஆபத்தின் போது உன்னால் சமயோசிதமாக செயல்பட முடியும்" என்று ஆரம்பித்தார் சித்தர்..
--------------------------------
பத்து நாட்கள் ஆகி இருந்தது ஸ்ரீயின் உயிர் உடலை விட்டு பிரிந்து.. அவள் ஒரளவு பழகியிருந்தாள் இந்த ஆன்ம நிலைக்கு உடன் ஆதித்யா வேறு அவளை வாட விடாமல் உற்சாகமாய் வைத்துக் கொண்டான்..
அவள் சில சமயங்களில் யோசிப்பது உண்டு இந்த நிலைக்கு ஒரு முடிவு இல்லையா சிறுவயதில் கேள்வி பட்டிருக்கிறாள் சில கதைகளையும் அதில் வரும் பேய்கள் ஆக்ரோஷமாகவும் பிறரை பயமுறுத்துவதாகவும் இருக்கும் என ஆனால் தானும் ஆதித்யாவும் அவ்வாறு இல்லையே என நினைத்துக் கொள்வாள்..
அவளுடைய பெரிய பிரச்சினை உச்சி வெயிலும், இரவு பொழுதுகளும் தான் அதனை கடப்பதற்கு தான் பெரும்பாடு ஆகி விடுகிறது... நெருப்பு போல் தகிக்கும் வெயில் அவளின் ஆன்மாவை நிலை குழைய செய்கிறது ... இரவுகளில் இருட்டு பயம்...அந்த நிசப்தமான சூழ்நிலையில் கேட்கும் வித்தியாசமான சத்தமும் நாய்களின் சத்தமும் தான் அவளின் மிகப் பெரிய பயமே..அந்நேரங்களில் பயந்து சிவநாமத்தை அவளை அறியாமலே உச்சரித்துக் கொண்டு இருப்பாள் அதுவே அவளைக் காக்கும் கவசம் என்று அறியாமல் ... சில நேரங்களில் அனைத்திற்கும் துணையாய் ஆதித்யா இருந்தான்...
இத்தனை நாட்களில் ஆதித்யா செய்யும் குறும்புகளில் பெரிதும் தேறியிருந்தாள். அவனோ பகல் நேரத்தில் விளையாட்டு பூங்கா சென்று அங்குள்ள குழந்தைகளுடன் குழந்தையாய் கலந்து விடுவான்... மற்றவர் கண்களுக்கு நாம் புலப்பட வில்லை என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விசயம் என்பதை அவன் நிருபித்து இருந்தான்..
நேராய் செல்பவன் அங்குள்ள குழந்தைகளின் வழியாக ஊடுருவி சென்று அவர்களுக்கு பழிப்புக் காட்டுவான்.. ஊஞ்சலில் குழந்தைகள் அருகில் அமர்ந்து அவர்களுடனே ஆடுவான்... வழுக்கி விழும் பலகை, சிசாவிலும் அவன் செய்யும் சேட்டைகளை கண்டு ஓரமாய் அமர்ந்து சிரித்துக் கொண்டிருப்பாள் ஸ்ரீ..
வாடாத மலராய் அவளினுள் இருக்கும் கவலை அவளின் குடும்பம் தான் எவ்வாறு தன் இழப்பை ஏற்றுக் கொண்டார்கள் இவ்வளவு நாட்களில் மீண்டு வந்திருப்பார்களா என்று மீண்டும் மீண்டும் நினைப்பவள் இறைவனிடம் வேண்டிக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியும் இல்லை.. அத்துடன் இந்த நிலைக்கு சீக்கிரம் முடிவு வேண்டியும் நிதம் மனதார பிராத்திக்கிறாள்.
அன்றிரவு வழக்கம் போல் அந்த கடற்கரை ஓரமாக ஸ்ரீ யும் ஆதித்யாவும் வந்தனர்... "ஸ்ரீ நாளைக்கு நம்ம மால் போலாமா... எங்க அம்மாவும் அப்பாவும் என்ன ஒரு பெரிய மால்க்கு கூட்டிட்டு போயிருக்காங்க .. அங்க போலாம் பா பிளீஸ் " என்றான் ஆதித்யா.. "சரி ஆதி போலாம்... " என்றாள் ஸ்ரீ அவளுக்கு இன்றிரவு எப்படி கடக்க போகிறோம் என்ற கவலை... ஆதி அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் பயம் என்னவோ விட்ட பாடுதான் இல்லை....அதிக வெளிச்சமும் ஆன்மாக்களுக்கு ஆகாது என்பதால் அவர்களால் விளக்கு எரியும் இடங்களிலும் இருக்க முடியாது...
இவை அனைத்துமே ஸ்ரீ அனுபவத்தால் உணர்ந்ததும் ஆதித்யா கூறியதும். ஆன்மாவாகிய அடுத்தநாள் இரவு இருட்டு பயத்தில் தெரு விளக்கின் வெளிச்சத்தில் நிற்க பத்து நிமிடங்களில் அவள் ஆன்மா மெல்ல மறைய அவளுக்கு கை கால்கள் எல்லாம் எரியத் துவங்கியது... அதன் பின்பே உணரத் துவங்கினாள் அதிக வெளிச்சமும் வெப்பமும் ஆபத்து என்பதை...
" ஸ்ரீ...ஸ்ரீ ... "என ஆதி இருமுறை அழைத்த பின்பே சுயத்திற்கு வர ஆதியோ அலுத்துக் கொண்டான்
" என்ன ஸ்ரீ நீ கனவு காணுகிறாயா எவ்வளவு நேரம் கூப்பிட்டுட்டே இருக்கேன் " எனவும் கனவு என்றவுடம் தான் அவளுக்கு அவளின் கனவு நாயகனின் நினைவு வந்தது .. அதிலேயே மூழ்கி விட்டாள் ஸ்ரீ. சென்னை வந்து ஊரிற்கு கிளம்பும் அந்த வாரம் அவளிற்கு அவனின் தரிசனம் கிடைக்கவே இல்லை அதில் சிறுவருத்தம் இருந்தாலும் அதை மறந்து தான் அன்றாட வேலைகளை செய்வாள்.
ஆனால் இன்றோ அவளுக்கு அவனின் நினைவுகள் அதிகமாய் தோன்ற ஒவ்வொரு கனவாய் அவள் நினைத்துக் கொண்டே வந்தாள். வழக்கம் போல அவர்களின் படகிற்கு வந்தவர்கள் அதன் மீது மல்லாக்க படுத்துக் கொள்ள ஆதியோ தன் பெற்றோருடன் மாலிற்கு சென்ற கதையை விவரித்துக் கொண்டு இருந்தான்.. ஸ்ரீ வெறுமனே ம் கொட்டிவிட்டு கனவில் மூழ்கி விட்டாள். அவனின் நினைவில் மூழ்கியவள் சிவநாமத்தை சொல்ல மறந்திருந்தாள் அதனால் நிகழவிருக்கும் விபரீதத்தை அறியாமல்......
(*சற்று வித்தியாசமான கதைக்களம் மக்களே ... பொதுவாக மக்கள் மனதில் இருக்கும் பேய் ஆன்மா பற்றிய சித்தரிப்புகளை மாற்றிய புது முயற்சி... இன்னும் ஆன்மா பற்றிய பல தகவல்களை என் கண்ணோட்டத்தில் அடுத்தடுத்த எபிசோடுகளில் போடுகிறேன் மக்காஸ்.. இன்று காதலர் தினம் என்பதில் சிறிது காதலையும் கலந்துள்ளேன். என்னுடைய கதைக்கருவிற்கு காதல் காட்சிகள் பெரிதும் பொருந்தாது இருந்தும் கதையை பாதிக்கா வண்ணம் தர முயற்சிக்கிறேன் நட்புக்களே!!*)
வழக்கம் போல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே ?
Thread 'உயிரின் தேடல் நீய(டா)டி - கருத்துதிரி' https://pommutamilnovels.com/index.php?threads/உயிரின்-தேடல்-நீய-டா-டி-கருத்துதிரி.429/