ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரின் தேடல் நீய(டா)டி- கதைதிரி

Status
Not open for further replies.

Anucharan

Active member
Wonderland writer
முன் கதை சுருக்கம்:

அன்பான,அழகான கூட்டுக் குடும்பத்தின் வாரிசு தான் ஸ்ரீ நிதி.. அவளுக்கு குடும்பம் தான் எல்லாமே. சுந்தரம் வள்ளி தம்பதியினர்க்கு நான்கு மகன்கள். மூத்தவர் மூர்த்தியின் மகளே ஸ்ரீ நிதி .மிகுந்த சிவ பக்தியும், இரக்க குணமும் உடையவள்... உடன் பிறந்த அண்ணன் விஷ்ணு. சித்தப்பா பசங்கள் ஐந்து பேர். அவர்களுக்கு ஸ்ரீ என்றால் உயிர். இரட்டையர்கள் போல் ஸ்ரீ மற்றும் ராம் எப்போதும் இணைந்தே இருப்பர். வேலைப் பயிற்சிக்காக சென்னை செல்லும் ஸ்ரீ எதிர்பாராமல் ஏற்படும் விபத்தில் மரணத்தை தழுவுகிறாள் உடன் சென்ற அவளின் தோழி வர்ஷினிக்கும் படுகாயம் ஏற்படுகிறது‌. ஸ்ரீ மரணத்தைத் தழுவினாலும் அவளின் ஆன்மா உயிர்ப்புடன் இருக்கிறது. மரணத்திற்கு பிறகான இந்த நிலையை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் தனிமையில் இருக்க அவளுக்கு உற்ற துணையாக ஆதித்யா வருகிறான். ஸ்ரீ மரணத்தை அவளின் குடும்பம் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் நிலையில் ஸ்ரீ மற்றும் வர்ஷினியின் விபத்து வண்டியில் பிரேக் பிடிக்காமல் நிகழ்ந்தது என கேஸ் முடிக்கப்பட்டது.ஆனால் வர்ஷினியோ கார் இடித்ததாலே விபத்து ஏற்பட்டது எனக் கூற குடும்பத்தினர் குழம்பினார். ஸ்ரீ சகோதரர்களான விஷ்ணு, ராம், ரவி மூவரும் சென்று விசாரிக்க சரியான தகவல் அளிக்கப்படாமல் போக சோர்வுடன் திரும்புகின்றனர். இதில் ரவி ஐபிஎஸ் பயிற்சி முடித்திருக்க அதே காவல் நிலையத்திற்கு மேலதிகாரியாக வருகிறான்.
சென்னையில் வளர்ந்து வரும் தொழில் அதிபர்கள் வரிசையில் இருக்கும் நம் நாயகன் ஆருஷி. எதிர்பாராத சில நிகழ்வுகளால் மற்றவர்கள் மரணத்திற்கு காரணமாகிறான்.. அதனை சரிசெய்ய சித்தர் அவனை கட்டுப்படுத்த முதலில் மறுத்தவன் பின் தன்னால் நிகழ்ந்தவற்றை சரி செய்ய ஒத்துக் கொள்கிறான்.
சித்தரோ சிவகணங்கள் சிவனடியார்கள் பற்றியும் ஆன்மாக்கள் பற்றியும் விளக்கியவர் பல வருடங்களாக பழிவெறியுடன் காத்திருக்கும் ஆதிலிங்கம் என்ற அரக்கனைப் பற்றியும் அவனின் தற்போதைய நோக்கத்தையும் விளங்கினார். அதன்படி ஆருஷியால் மரணத்தை தழுவிய ஆன்மாவை வெளிச்சத்தை அடைய செய்வதே அவனின் கடமை.சித்தரிடம் இருந்து சக்தியைப் பெற்றவன் அந்த ஆன்மாவை காண செல்கின்றான். அவன் செல்லும் நேரம் ஆன்மாவை ஆபத்து சூழ்ந்திருக்க அதனை விளக்கி அதன் முகத்தை கண்டவனுக்கு உயிர் போகும் வலி. ஏனெனில் அந்த ஆன்மாவே அவனின் அன்புகுரியவள் என அறிந்தவன் மேலும் தானே அவளின் மரணத்திற்கு காரணமாகிவிட்டோம் என மிகவும் வருந்துகிறான்.
காட்டில் பல வருட தவத்தின் பலனாய் தன் சாபம் போக்கும் ஜீவன் ஆன்மாவாய் மாறியதை அறிந்தவன் அதனைக் கைப்பற்ற அவனால் பிசாசுகளாக மாற்றப்பட்ட ஆன்மாக்களை அனுப்புகிறான் ஆதிலிங்கம்.
இந்த அரக்கனிடம் இருந்து ஸ்ரீ தப்பிப்பாளா ஆருஷி எவ்வாறு ஸ்ரீ யை எதிர்கொள்ளப் போகிறான்.. ஸ்ரீ யின் விபத்திற்கு பின்னால் இருப்பது யாரென ரவி கண்டறிவானா!!! என்பதைப் பற்றி இனிவரும் அத்தியாயங்களில் காண்போம்.
 

Anucharan

Active member
Wonderland writer
16-aoi-shirobako-anime-girl-mc-screenshot.jpg

அத்தியாயம் 15

கத்தி முனையை விட கூர்மையான பார்வையால் தன்னை குத்திக் கிழித்துக் கொண்டிருக்கும் ரவியின் விழிகளில் இன்ஸ்பெக்டர் நல்லதம்பியோ உடல் வியர்க்க எச்சில் கூட்டி விழுங்கி கொண்டு பயத்துடன் நின்று கொண்டு இருந்தார்.
ரவியோ தன் பார்வையை இம்மியளவும் மாற்றாமல் அவரை பார்வையால் துளைத்தெடுக்க மீண்டும் அதே கேள்வியை கேட்டான்.
" சொல்லுங்க நல்லதம்பி ஸ்ரீ வர்ஷினி கேஸ்ல உண்மைலேயே பிரேக் பிடிக்காமால் தான் விபத்து நடந்தததா..."

அவரோ சற்று தைரியத்தைக் கூட்டி "ஆமா சார் ... வண்டியை செக் பண்ணும் போது அதுல பிரேக் வயர் தேய்ந்து அறுந்து இருந்தது.அந்த பொண்ணு சொல்ற மாதிரி எந்த வண்டியும் அந்த வழியாக வரல சார்" என்றார்.

அவரின் பதிலில் பல்லைக் கடித்த ரவி "இதுக்கு முன்னாடி எங்க டியூட்டி பார்த்தீங்க" என்க "மதுரை சார்" "சென்னைக்கு எதுக்காக டிரான்ஸ்பர் வாங்குனீங்க " ரவி..

"என் மனைவி சொந்த ஊர் இதுதான் சார்.முன்னாடி இங்கதான் சார் இருந்தோம் இரண்டு வருஷம் முன்ன மதுரை டிரான்ஸ்பர் ஆகிடுச்சு நான் மட்டும் தான் போனேன் சார். பசங்க படிக்கறதால அவங்க இங்க தான் இருந்தாங்க. நானும் ரொம்ப நாள் டிரான்ஸ்பர் கேட்டேன் சார் தரல இப்போ தான் தந்தாங்க சார் " எனக் கூற அவரை மேலிருந்து கீழாக பார்த்தவன் "அப்போ இதுக்காகத் தான் உங்க நேர்மையை விலை பேசியிருக்கீங்க" என்க அவருக்கோ நெஞ்சில் நீர் வற்றியது.

நேர்மையான மனிதர் தான் நல்லதம்பி கஷ்டப்பட்டு எஸ்ஐ எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி இந்நிலைக்கு வர முழுதாய் ஐந்து நீண்ட நெடிய வருடங்கள் ஆகினர் அதுவும் உடல் தேர்வுகளில் பல முறை அரசியல் தலையீடுகளால் வாய்ப்பிழந்து இறுதி முயற்சியில் இந்த வேலையில் சேர்ந்தார். நேர்மையாக இருக்க நினைத்ததால் எட்டு வருட பணியில் பல முறை மாற்றல் பெற்றார் . இறுதியில் சென்னையில் வேலை பார்த்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குடும்பம் என்றானபின் அவரும் வளைந்து கொடுத்து வேலை செய்ய ஆரம்பித்தார். அப்படியும் அவரால் சில தவறுகளை மன்னிக்க முடியாமல் வழக்கு தொடர அடுத்த நாளே மதுரைக்கு பந்தாடப்பட்டார். அவரின் இரு பையன்களும் படிப்பதால் கல்வி பாதிக்கும் என எண்ணியவர் அவர்களை சென்னையிலேயே விட்டு விட்டு தனியாய் மதுரை சென்று பணியில் சேர்ந்தார்.. கடந்த இரண்டு வருடங்களாக மாற்றலுக்கு எவ்வளவோ போராட பழைய பார்ட்டிகளின் தலையீட்டால் மாற்றல் பெற முடியவில்லை .. கடந்த வாரம் அவன் நண்பன் தந்த தகவலில் அவரும் எதைப்பற்றியும் சிந்திக்காமல் தலையாட்ட அடுத்தநாளே சென்னையில் பணியமர்த்தப் பட்டார். அவர் செய்த செயலுக்கு சன்மானமாக பெட்டி நிறைய பணம் கிடைக்க அதனை மறுத்து இந்த பணியிடமாற்றலே போதும் என்றுவிட்டார்.

ஆனால் பின்புல மற்ற சாதா விபத்து கேஸ் என எண்ணியிருந்தவருக்கு இப்படியொரு சூழ்நிலை வரும் என கனவிலும் எதிர் பார்க்க வில்லை... பழைய நினைவில் இருந்து மீண்டவர் முன் அழுத்தமாக நின்றிருந்த ரவியைக் கண்டு பயந்தாலும் எக்காரணம் கொண்டும் நண்பனைக் காட்டிக் கொடுக்க கூடாது என எண்ணியவர் எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றார்.
அவரின் முக்த்தை உற்று நோக்கியவனுக்கு இவருக்கும் இதில் பங்கு இருக்கிறது என்று உறுதி செய்தவன் மிரட்டி உண்மையை கண்டுப்பிடிப்பதை விட சற்று சமயோசிதமாக செயல்பட எண்ணியவன்.. இவரை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று யோசித்தவன் அவரை அழுத்தமாய் பார்த்துவிட்டு வெளியேறினான்.

வெளிவாசலில் அன்று முதல் முறை காவல் நிலையம் வந்து சென்றபின் சந்தித்த கான்ஸ்டபிள் நிற்க அவரை அழைத்துக் கொண்டு ஜீப்பில் புறப்பட்டிருந்தான். சிறுது தூரம் சென்று நிறுத்தி அவரை தனியே அழைத்து சென்ற ரவி மீண்டும் விபத்து அன்று நடந்தவற்றை விசாரிக்க அவரும் அன்று நடந்தவற்றை கூற கூர்மையாய் கவனித்தவனுக்கு இன்ஸ்பெக்டர் சேகரை சந்தித்தால் அவன் மனதின் பல கேள்விக்கு பதில் கிடைக்கும் என முடிவு செய்தான். அடுத்து ரவி அழைத்தது என்னவோ அவனின் தோழன் ஹரிக்கு தான் .அவனும் காவல் துறையில் தகவல் சம்பந்தப்பட்ட பகுதியில் பணியாற்றுகிறான்.அழைப்பை ஏற்ற ஹரியிடம் இன்ஸ்பெக்டர் சேகர் பற்றி கான்ஸ்டபிள் கூறிய தகவலை கூறியவன் தற்போது அவர் இருக்கும் இடம் பற்றிய தகவலை விசாரிக்க கூறி போனை வைத்தான். பின் ரவிக்கும் மற்ற வேறு வேலைகள் இருப்பதால் தற்போதைய இன்ஸ்பெக்டர் நல்லதம்பி பற்றியும் விசாரித்தவன் அவரை கண்காணிக்க சொல்லிவிட்டு கான்ஸ்டபிளை அனுப்பினான்.
------------------------------------------------------
இரத்தமென சிவப்பேறிய கண்களும், தன் கூர் பற்களை அனாயசமாக வெளியில் தெரிய , கூர் நகங்கள் ஒரு பக்கம் பளபளக்க உடல் முழுதும் ஒருவித கருமை பூசப்பட்டது போல் இருக்கும் உருவங்கள் அந்த இடத்தில் நிரம்பி இருக்க, அந்த உருவங்களோ தரையில் இருந்து இரண்டடி மேலே காற்றில் மிதந்து கொண்டிருந்தன..அவைகளின் கண்களில் உயிர் குடிக்கும் வெறியைத் தாண்டயும் ஒருவித பயம் உருவாக, அதற்கு காரணமானவன் நடுநாயகமாக அந்த கூட்டத்தின் நடுவில் உக்கிரமாக நின்று கொண்டிருந்தான் ஆதிலிங்கம்.

தான் அனுப்பிய பிசாசுகள் இன்னும் திரும்பி வராததில் ஆத்திரம் கொண்ட ஆதிலிங்கம் அந்த காட்டையே ஒரு வழி செய்து கொண்டிருந்தான். அவனால் அனுப்ப பட்ட ஆன்மாக்கள் இந்த பூமியில் இருப்பதற்கான எந்த ஒரு அடையாளமும் இன்றி மாயமானதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை...

ஏனெனில் அவனுடைய சக்தி மூலம் அந்த பிசாசுகள் எங்கு இருப்பினும் அவனால் அதனை உணரமுடியும் ... தன் கட்டளையையும் பிறப்பிக்க முடியும் அப்படியிருக்கையில் இன்று சுத்தமாய் அவைகளை உணரமுடியாது தோற்று நின்றான்.... ஆத்திரத்தில் கண்கள் சிவக்க அவனால் தீய சக்தியாய் மாற்றப் பட்ட அனைத்து பிசாசுகளையும் ஒன்று கூட்டினான்...

"என்ன தான்‌ நடக்கிறது ... ஒரு சாதாரண பெண்ணின் ஆன்மாவை இழுத்து வர‌ இவ்வளவு தாமதமாகுமா ... சென்ற‌ இரண்டு பிசாசுகளும் தற்போது பூமியில் இருப்பதற்கான அறிகுறிகளே என் ஞானத்திற்கு தென்படவில்லை.... " என குழம்பி குறுக்கும் நெடுக்கும் நடந்தான்..

'இது எவ்வாறு சாத்தியம் யார் இதற்கு பின்னால் இருப்பது ' என மனதில் நினைத்தவனுக்கு தன்னை சுற்றி ஏதோ மாயவலை பின்னப் படுவதைப் போல் உணர்ந்தான்.
அதே கோவத்துடன் அங்கிருந்த இரண்டு பிசாசுகளை தன் சக்திகள் மூலம் அருகில் இழுத்தவன் காற்றில் அனல் பறக்க
"என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது அந்த ஆன்மா எனக்கு வேண்டும்... இன்னும் இரண்டு நாட்களே உங்களுக்கு கெடு .... ஆன்மாவோடு வரவில்லையெனில் அடுத்த நிமிடமே உங்களை பொசுக்கி விடுவேன்... விரைந்து செல்லுங்கள் " என கட்டளையிட்டான்.

அவனுக்கு தெரியும் சில ஆன்மாக்கள் வெளிச்சத்தை அடையும் காலம் குறுகியது .. அவ்வாறு அவை வெளிச்சத்தை அடைந்துவிட்டால் அவைகளின் மறுஜென்மம் வரை அவன் காத்திருக்க வேண்டும் சில சமயங்களில் ஆன்மாக்கள் பிறப்பில்லா முக்திப் பாதையையும் அடைய வாய்ப்பு இருப்பதால் அவன் ஸ்ரீ யின் ஆன்மா அந்நிலைக்கு செல்வதற்குள் அடைய நினைக்கிறான்..அதனால் தான் அவனால் பொருமையாக சிந்திக்க அவகாசமோ இல்லை அவனை சுற்றி நடப்பதை உணரும் தெளிவோ இல்லாமல் போனது.. நாளுக்கு நாள் அவனின் ஆத்திரம் அதிகமானதே தவிர சிறிதும் குறையவில்லை... ஆதிலிங்கத்தின் தேடல் ஒன்றே ஒன்றுதான் அது ஸ்ரீ யின் ஆன்மா..
--------------------------------------------------------------
ஆதித்யா வை சமாதானம் செய்தவளால் தன்னுடைய மனதின் விடையில்லா கேள்விகளுக்கு சமாதானம் செய்ய முடியவில்லை.

தான் ஏன் இந்நிலையில் உள்ளோம், இம்மாதிரியான ஆன்மாவிற்கெல்லாம் ஒரு முடிவில்லையா, இறந்தவர்கள் அனைவரும் இப்படி மாறிவிடுவார்களா அப்படியானால் அவர்கள் எல்லாம் எங்கே ஏன் அப்படி மற்ற ஆன்மா எதுவுமே இதுவரை நான் பார்க்க வில்லையே, சில பேய்க் கதைகளில் வருவது உண்மை என்றால் ஏன் நானும் ஆதித்யாவும் அதில் வரும் பேய்களைப் போல் கொடூரமாக இல்லாமல் சாதரணமாக இருக்கிறோம் என பல கேள்விகள் ஸ்ரீ மனதை குடைய குழப்பத்திலேயே இருந்தாள். எனினும் இவை எதையுமே ஆதித்யா விடம் காட்டிக் கொள்ளவில்லை ஏனெனில் இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவு அவனுக்கு வயது இல்லை என்பதால்.

அவனின் மனதை மாற்றி மாலின் குழந்தைகள் பகுதியில் விட்டவள் அவன் மற்ற குழந்தைகள் போல் அதில் விளையாட இவள் சற்று தள்ளி நின்று அதனை ரசித்துக் கொண்டிருந்தாள். ஆதித்யாவோ கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி அங்கிருக்கும் குழந்தைகளுடன் அவர்கள் பின்னால் அமர்ந்து அவர்களுடனே விளையாடிக் கொண்டிருந்தான்.

தீடிரென உலகில் நாம் மட்டும் இன்விசிபில்(கண்ணுக்கு புலப்படாமல் மறைந்து போவது) ஆகி விட்டால் எப்படி இருக்குமோ அப்படி தான் ஸ்ரீ மற்றும் ஆதியின் நாட்கள் கடந்து கொண்டிருந்தது. பணம் பணம் என அதன் பின்னால் நாயாய் அலையும் இந்த மனித வர்க்கங்களுக்கு மரணம் என்ற ஒன்று இருப்பதுவே அவ்வபொழுது மறந்து விடுகின்றனர். எவ்வளவுதான் ஒரு வரை ஒருவர் ஏய்து சம்பாதித்தாலும் இறுதியில் அவை ஏதும் நம்முடன் வருவதில்லை என்ற நிதர்சனத்தை ஏனோ மனிதர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

தாம் செய்யும் தவறுகளுக்கான தண்டனையாக கர்மா நம்மை என்றும் விடாது என்ற உண்மையையும் உணராமல் மேலும் மேலும் தவறிழைத்துக் கொண்டே இருக்கின்றனர்
மனிதனே மனிதனை வேட்டையாடும் காலமும் தான் இது என்பதை நம் நெற்றிப் பொட்டில் அறைந்து புரிய வைக்கிறது இந்த பொல்லாத உலகம். இப்படிப்பட்டவர்கள் நடுவே எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி இருக்கும் இந்த நிலை கூட ஏனோ ஸ்ரீ க்கு ஒரு வகையில் பிடித்து தான் இருந்தது.

யோசனைகளில் இருந்து மீண்டவளுக்கு அருகில் உள்ள பேக்கரியைக் கண்டதும் நாவில் எச்சில் ஊறியது.
அந்த கண்ணாடி பெட்டிக்குள் வைக்க பட்டிருந்த சாக்லேட் ஐஸ்கிரீம் கேக்கை நாவில் எச்சில் ஊற கண்களாலே விழுங்கி கொண்டிருந்தாள் ஸ்ரீ. கைகள் பரபரக்க சுற்றும்முற்றும் பார்த்து மீண்டும் அதையே கண்களில் ஆசை மின்ன பார்த்து கொண்டிருந்தாள்.

அப்போது " உன்னால் அதை பார்க்க மட்டுமே முடியும் சாப்பிடவோ ஏன் தொடக்கூட முடியாது அப்புறம் ஏன் வீணாக ஆசையை வளர்த்துக் கொள்கிறாய்" பின்னால் இருந்து கேட்ட அழுத்தமான குரலில் தூக்கிவாரிப் போட ஒரு முழு நிமிடம் கண்களை மூடி தன்னை சமன்படுத்தி கொண்டு திரும்பி பார்த்தாள் ஸ்ரீ.

அங்கு கைகளை கட்டிக்கொண்டு நின்றவனைக் கண்டு அவள் கண்கள் சாசர் போல் விரிந்தன. இவனுக்கு எப்படி நான் தெரிகிறேன் என குழப்பிக் கொண்டிருக்க அவனோ இதழை கேலிபோல் வளைத்து அவளையே அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருந்தான் ஆருஷி.

கதையின் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே

 

Anucharan

Active member
Wonderland writer
அத்தியாயம் 16

அன்றிரவே ரவி தர்மபுரி கிளம்பியிருந்தான். அவனுடன் ராம் மற்றும் விஷ்ணு வும் உடன்‌ வருவதாய் கூற அவர்களும் பொள்ளாச்சியிலிருந்து கிளம்பியிருந்தனர்.

தன் நண்பனின் மூலம் இன்ஸ்பெக்டரின் தற்போதைய பணியிடத்தை அறிந்த ரவி அன்றே கிளம்பி விட்டான். அடுத்த நாள் காலை மூவரும் ஒரு ஹோட்டலில் காலை உணவை முடித்துவிட்டு அவர் பணியாற்றும் காவல் நிலையத்திற்கு சென்றனர். ரவி நேரே உள்ளே சென்றவன் இன்ஸ்பெக்டரை பார்க்க வேண்டும் என கூற அங்கிருந்த கான்ஸ்டபிளும் அவரின் அறையைக் காட்டிவிட்டு ஒதுங்கி கொண்டார். அனுமதி பெற்று உள்ள வந்த மூவரையும் பார்த்த சேகருக்கு அடையாளம் தெரியாமல் புருவம் சுருக்கி யோசித்தவர் " யார் நீங்க "‌ எனக் கேட்க

ரவி " ஐ அம் ரவிக்குமார் ஐபிஎஸ் அசிஸ்டன்ட் கமிஷ்னர் சென்னை சிட்டி. இப்போ அன்அபிசியலா ஒரு கேஸ் விசயமா உங்ககிட்ட விசாரிக்கலாம்னு வந்துருக்கோம். இது ராம் அண்ட் விஷ்ணு என்னோட பிரதர்ஸ்." என தன் அடையாள அட்டையைக் காண்பிக்க சேகரோ சட்டென இருக்கையை விட்டு எழுந்தவர் அவனுக்கு சல்யூட் அடித்தார்.

அதை ஏற்றவன் அவரை அமர சொல்ல அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில் மூவரும் அமர்ந்து கொண்டனர். " சொல்லுங்க சார் எந்த கேஸ் பத்தி கேட்கணும்" சேகர்.

"நீங்க டிரான்ஸ்பர் ஆகி வர்றதுக்கு முந்தின நாள் உங்க ஏரியால ரெண்டு பொண்ணுங்க வந்த டூவீலர் ஆக்ஸிடென்ட் கேஸ். ஒரு பொண்ணு ஸ்பாட் அவுட் ..." ரவி.

"ஆமா சார் அதுதான் என்னோட லாஸ்ட் கேஸ் . அடுத்த நாளே என்ன டிரான்ஸ்ஃபர் பண்ணீட்டாங்க சார். என்னோட பொண்ணு வயசு தான் சார் அந்த இறந்த பொண்ணுக்கு ..‌அந்த பொண்ணுக்கு கண்ணுல அவ்வளவு உயிரோட்டம் சார் " இன்னும் அவரால் அந்த இமைக்காத விழிகளை மறக்க முடியாமல் தற்போதும் அவர் கண்களில் வலியைக் கண்ட மூவருக்கும் நெஞ்சில் சுருக்கென வலி உருவானது. .

“ அந்த பொண்ணு எங்களோட சிஸ்டர் தான் அவங்க டூவீலர் பிரேக் இல்லாம தான் ஆக்சிடென்ட் ஆனதா கேஸ் கிளோஸ் பண்ணிருக்காங்க அன்னைக்கு ஸ்பாட்ல என்ன நடந்தது சேகர்”

“அன்னைக்கு விபத்து நடந்த அப்போ பக்கத்துல தான் நானும் இன்னொரு கான்ஸ்டாப்பிலும் ரௌண்ட்ஸ்ல இருந்தோம் சார் . தகவல் கிடச்ச கொஞ்ச நேரத்துலேயே நாங்க அங்க போய்ட்டோம். நாங்க போன உடனேயே அம்புலனசும் வந்துருச்சு. ரோடு சைடு இருக்க நடை பாதைல அந்த பொண்ணோட தல மோதினதால ஸ்பாட்லேயே டெத் சார் வண்டி ஓட்டுன இன்னொரு பொண்ணு கால் வண்டில மாட்டி இழுத்துட்டு போனதால கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன்ல இருந்தாங்க அவங்கள ஆம்புலன்ஸ்ல கான்ஸ்டாபில் கூட அனுப்பிட்டு நா அந்த ஏரியால விசாரிக்கும் போது ஒரு பிளாக் கலர் கார் தான் இடுச்சதா சொன்னாங்க சார் ஸ்டேஷன் கால் பண்ணி கேஸ் பைல் பண்ண சொல்லிட்டு கன்ட்ரோல் ரூம்க்கு வண்டி டீடெயில்ஸ் பார்வேர்ட் பண்ணேன் மேற்கொண்டு விசாரிக்கறதுக்குள்ள என்னை டிரான்ஸபர் பண்ணிட்டாங்க அடுத்த ரெண்டு நாளும் அங்க நா டியூட்டி லேயே இல்லை சார்” என்க

“நீங்க மேல எதுவும் விசாரிக்கலயா ஐ மீன் கார் மோதினதுக்கான எவிடென்ஸ் ஏதும் இல்லையா” ரவி.

“அப்டி ஏதும் இல்லை சார் நா அந்த கேஸ் பத்தி விசாரிக்கும் முன்னவே பக்கத்துல இன்னொரு அச்சிடேன்ட்ன்னு எனக்கு கால் வந்தது அங்க நா கெளம்பிட்டேன் சார்” சேகர்..
“அது என்ன கேஸ்”
“அது விபத்து நடந்த பகுதில இருந்து ரெண்டு ஏரியா தள்ளி பாண்டிச்சேரி மெயின் ரோடுல கன்டைனர்ல கார் மோதிருச்சு சார் ட்ரின்க் அண்ட் டிரைவ் கேஸ் சார்”
“என்ன கார்”
“ப்ளாக் கலர் பெர்ராரி கார் சார்” சேகர்
“இந்த கேஸ் பத்தி விசாரிக்கும் பொது உங்களுக்கு மிரட்டலோ இல்லை வேற மாதிரியான திரேட் கால்ஸ் ஏதும் வந்ததா” ரவி
“நோ சார்” சேகர்.
“ஓகே அந்த அச்சிடேன்ட் கேஸ் யாரு விசாரிச்சது” ரவி
“அது பக்கத்துக்கு ஏரியா இன்ஸ்பெக்டர் எனக்கு தெரிஞ்சவரு தான் சார் ஹெல்ப் காக கூப்டாரு... கன்டைனர் டிரைவர் சரண்டர் ஆகிட்டான் சார் கார் ல இருந்தவங்க சீரியஸ் கண்டிஷன் னு சொன்னா சார் அப்புறம் கொஞ்ச நேரத்துலயே எனக்கு டிரான்ஸபெர்ன்னு சொல்லி கால் வந்து நா கெளம்பிடேன் சார்”
“உங்க ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி சேகர்” ரவி என்றவன் அவருக்கு கை குலுக்கி விட்டு வெளியில் மூவரும் வந்தனர்.

“என்ன ரவி இவருகிட்ட இருந்து எந்த தகவலும் சரியா கிடைக்கல” விஷ்ணு.

“இல்லை விஷ்ணு நிறைய க்ளூ நமக்கு கெடச்சுருக்கு அவரு சொல்றத பார்த்தா இடிச்சது கண்டிப்பா கார் தான் ஏன்ன ஸ்பாட் ல இருந்தவங்க உடனே மாத்தி சொல்றதுக்கு வாய்ப்பு இல்லை அதுக்கு அடுத்த நாள் தான் யாரோ மாத்தி சொல்ல வச்சிருக்கணும்” ரவி.

“கரெக்ட் ரவி அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா வர்ஷினி சொல்றத பார்த்தா அவங்கள இடிச்சது பிளாக் கலர் பெர்ராரி அச்சிடேன்ட் ப்ளஸ்ல இருந்து கொஞ்ச தூரத்துல நடந்த விபத்துலயும் பிளாக் கலர் பெர்ராரி ஏன் அந்த கார் தான் இந்த கார் ஆஹ் இருக்க கூடாது அண்ணா” என்று ராம் தன் சந்தேகத்தை கூற மற்ற இருவரும் திகைத்து அவனை பார்த்தனர்...

----------------------------------------------------------------------------------

ஆறடி உயரமும் கட்டுமஸ்தான உடலமைப்பும் கொண்டு வசீகரிக்கும் நீலநிற விழிகளால் தன்னை ஆராய்ச்சி பார்வை பார்த்து நிற்கும் ஆருஷி கண்டவளுக்கு 'யாரிவன் ? எதற்கு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்' என நினைத்தவள் மீண்டும் அவன் விழிகளை நோக்க அதில் என்ன கண்டாளோ சில நிமிடங்கள் அதில் கண்டுண்டவள் போல் அசையாது அதிர்ச்சியில் திறந்த வாய் மூடாது நின்றாள்..

அவனோ அவளின் நிலையில் மனதினுள் குளிர்ந்து முகத்தில் எதுவும் காட்டாது சற்றென்று அவளை பார்த்து கண் சிமிட்டினான். அவனின் செயலில் தன் நிலை அடைந்தவள் 'யப்பா..என்ன கண்ணுடா இது .. அப்படியே அதுக்குள்ள மூழ்கிருவேன் போல' என மனதினுள் பேசியவள் வெளியில் அசடு வழிய சிரித்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

'அய்யோ ஸ்ரீ மிட்டாய் கடைய பார்க்குற மாதிரி இப்பிடியா ஆ னு பார்த்து வைப்ப' என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள் மீண்டும் அடுத்தடுத்த கேக்கை ரசிப்பது போல அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றாள்.

அவளின் செயலையும் முகமாற்றத்தையும் கண்டவனுக்கு இதழ் ஓரம் புன்னகை அரும்பியது.அவள் அந்த இடத்தைவிட்டு நகர்வதை உணர்ந்தவன் காற்றுக்கும் வலிக்கும் என மெல்லிய உயிர் உருக்கும் குரலில் "ஸ்ரீ..." என அழைக்க அவளின் நடை தடைபட்டது.

அவனின் குரலில் ஏதோ செய்ய 'என் பேரு எப்படி தெரியும்' எனும் கேள்வி கணைகளை கண்ணில் கொண்டு ஸ்ரீ அவனை திரும்பி பார்த்தாள்.
அதை புரிந்து கொண்டவன் போல் ஸ்ரீ அருகில் சென்று "ஐ யம் ஆருஷி " என கையை நீட்ட அவளோ அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்து விட்டு 'பேரப் பாரு ஆரு குளம்னு ' என முணுமுணுத்து விட்டு மீண்டும் அவ்விடத்தை விட்டு நகர முயல அவனுக்கோ அவளின் செயலில் சட்டென கோபம் வர இருந்தும் பொறுமையை கையாண்டான்.

அவனுக்கோ இன்னும் நான்கு நாட்களில் அவளை வெளிச்சத்திற்கு அனுப்ப வேண்டும் இல்லையெனில் அந்த அரக்கனிடம் மாட்டிக் கொள்வாள். எனவே எப்படி அவளிடம் நெருங்குவது என அறியாது முழித்து கொண்டிருந்தான். அதுவும் அவளின் மரணத்திற்கு காரணமானவனே அவளைக் காக்க வந்துள்ளதாய் கூறினால் ஸ்ரீ எப்படி ஏற்றுக் கொள்வாள் எப்படி நடந்ததை புரிய வைப்பது சொன்னாலும் அதையெல்லாம் நம்புவாளா என ஏகப்பட்ட குழப்பத்திற்கு மத்தியில் தான் அவன் பேசியது ஆனால் அவளோ பேச விருப்பம் இல்லாது போல் ஒதுங்கி போவது கோபத்தைத் தந்தாலும், காதல் கொண்ட மனமோ அவளின் ஒவ்வொரு அசைவையும் உணர்ச்சியையும் உள்ளக்கிடங்கில் பொக்கிஷம் போல் சேர்த்து வைக்கிறது.

வாழ்நாளிலேயே அவளுடன் களிக்கும் பொழுதுக்காக அவன் எத்தனை இரவுகளில் கனவு கண்டிருக்கிறான் ஆனால் அவையெல்லாம் கனவாய் மாறிப்போக வரம் போல் கிடந்த இந்த நான்கு நாட்களும் அவளுடனான இனிமையான தருணங்களாக மாற்றவே அவனுக்கு மிகுந்த பேராவல். இருந்தும் மனமோ அவளின் பாதுகாப்பையே முதன்மையாய் நிறுத்த அவளுக்கான பாதுகாவலாய் தான் மாறிப் போனான்.

அந்நேரம் என ஒரு பெண் ஸ்ரீ யின் ஆன்மாவை ஊடுருவி சொல்ல அவளோ ஒரு நிமிடம் நிலையில்லாது கீழே அமர்ந்து விட்டாள். அதைக் கண்ட ஆருஷியோ அவளின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு அவளுக்கு உதவ முன்வர அவளோ அதைத் தடுத்து எழுந்தவள்
"ச்ச அடிக்கடி இப்படித் தான் ஆகுது என்னன்னே தெரியல" என முணுத்தவள் அவ்விடம் விட்டு செல்ல முயல
ஆருஷியோ " உன்னோட மனசு வீக்கா ஒரு நிலையில்லாம இருந்தா இப்படி தான் நடக்கும்" என்க அவளின் நடை ஒரு நிமிடம் தடைபட்டது.
ஸ்ரீ " என்ன சொல்றீங்க எனக்கு எதுவும் புரியல " என வினவ ஆருஷி அவள் அருகில் வந்தவன் " இந்த மாதிரி நிலையில மனசு ஒரு நிலையில் இல்லாம குழப்பத்திலையோ இல்லை பயத்துலையோ இருந்தா நம்மால திடப் பொருட்களை தொடவோ அல்லது அதனை ஊடுருவவோ முடியாது" என விளக்க இன்னும் ஸ்ரீ முகத்தில் தெளிவில்லாததை உணர்ந்தவன் மேலும் தொடர்ந்தான்

"என்னுடன் வா" என அருகில் உள்ள சுவர் பக்கம் ஸ்ரீ யை அழைத்து சென்றவன் தன் கைகளை அந்த சுவற்றில் வைத்து அழுத்த அவனின் கைகளோ சுவற்றை ஊடுருவிச் சென்றது.

"ஸ்ரீ இப்போ உன்னோட கையை சுவற்றில் வை " எனக் கூற அவளும் அவன் கூறியதை செய்ய "இப்போ உன்னோட கைக்கு அழுத்தம் குடு " என்க அவளும் அதேபோல் செய்ய என்ன ஆச்சரியம் ஸ்ரீ யினது கைகள் அந்த சுவற்றை ஊடுருவிச் செல்லாமல் காற்றில் கரைந்து மீண்டும் சேர்ந்தது.

இதைக் கண்டவள்"ஏன் இப்படி நடக்குது ஒவ்வொரு முறை மனிதர்கள் என்னை ஊடுருவி போகும் போது இப்படி தான் நா கீழ விழுந்தறேன்" என கேள்வியாய் அவனிடம் சொல்ல

"நம்மோட ஆன்மா காற்றால உருவாகிறது சோ காற்றால் திட பொருட்களை ஊடுறுவ முடியாது ஆனா நம்மால அத ஊடுறுவ முடியும்"என்க ஸ்ரீ யோ அவனின் விளக்கத்தில் இமை மூடாது அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இங்க பாரு மொதல்ல நீ மனச குழப்பிக்காம எதை பத்தியும் யோசிக்காம மனச ஒரு நிலை படுத்து மனசுல எப்பவும் சந்தோஷமான விஷயத்தை தான் நெனச்சுக்கணும் புரியுதா நெகடிவ் ஆ எதையும் நெனைக்க கூடாது ஓகே" என கூற அவளும் சம்மதமாய் தலையாட்டியவள் ஒரு நிமிடம் கண் மூடி ஆழ்ந்த மூச்செடுக்க அவளுக்கோ நள்ளிரவில் நடந்த சம்பவமே நினைவுக்கு வர சட்டென விழி திறந்தவளுக்கு பயம் மட்டுமே எஞ்சி இருந்தது பாவமாய் ஆருஷியை பார்த்தாள்.

அவனுக்கு அவளின் நிலை புரிந்தாலும் வேறு வழி இல்லை அவள் பயத்தை விட்டு தனியாய் போராட வேண்டிய சூழ்நிலை எனவே விடாது அவளிடம் "ஸ்ரீ உன்னோட வாழ்க்கைல நடந்த நல்ல விஷயம் இல்லை ரொம்ப சந்தோசமா இருந்த நாட்களை உன் மனசுல நெனச்சுக்கோ" என ஊக்கப்படுத்த மீண்டும் கண்களை மூடி அவள் வாழ்நாளில் நடந்த அனைத்து சந்தோஷமான தருணங்களையும் மீட்டியவள் இறுதியாய் அவளின் கண்முன் அவளவனுடன் கனவில் பைக்கில் சென்ற நினைவும் கண் முன் வர அதை ஆழ்ந்து அனுபவித்து கண் விழித்தாள். இப்பொது அவள் கண்ணில் பயமோ இல்லை குழப்பமோ இல்லாமல் இருக்க அந்த சுவற்றில் கை வைத்து அழுத்தம் கொடுத்தாள் என்ன ஆச்சர்யம் அவளின் கை அந்த சுவற்றில் அனாயசமாக ஊடுருவி அடுத்த பக்கம் சென்றது அதை உணர்ந்தவள் மிகுந்த மகிழ்ச்சில் ஆருஷியை பார்க்க அவனும் அவளைத் தான் கண்ணில் காதல் மிகப்பார்த்துக் கொண்டிருந்தான்

அவனின் பார்வையின் பொருளை உணராதவள் "ஏன் நாம் ஆன்மாவா இருக்கோம் இந்த நிலைக்கு ஒரு முடிவு இல்லையா" என கேட்க ஆருஷியோ " இருக்கு " என்றவன் சித்தர் கூறியவற்றில் ஆன்மாவை பற்றி மட்டும் ஸ்ரீ க்கு விளக்கினான். மேலும் ஆதிலிங்கம் பற்றியும் அவளின் பிறப்பின் ரகசியம் மற்றும் அவளின் மரணத்திற்கான காரணம் என அனைத்தையும் கூறினால் எங்கே குழம்பிவிடுவாளோ என எண்ணியவன் நேரம் வரும் போது சொல்லிக் கொள்ளலாம் என விட்டுவிட்டான்.

குறைந்தது அவளின் மரணத்திற்கு தான் தான் காரணம் என்பதையாவது அவன் கூறியிருக்கலாம் அதனால் பின்னால் நடக்கவிருக்கும் விபரிதங்களை உணராமல் போனான்.. ஸ்ரீ யுடன் இனிமையான நினைவுகளை சேர்க்க நினைத்தவனுக்கு அவளுக்கு உண்மை தெரிந்தபின் அவளுடைய செயலில் தன் உயிர் போகும் வலியை விட அதிக வலியை அனுபவிக்க போவதை இப்போதே தவிர்த்திருக்கலாம். விதி வலியது...

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே.....


கதை பற்றிய உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே ??


என்றும் அன்புடன் உங்கள்
Anucharan
 

Anucharan

Active member
Wonderland writer
180-1802411_wallpaper-anime-girl-window-reflection-drop-rain-anime.jpg

அத்தியாயம் 17

கேஸ் முடியும் வரை ராம் சென்னையிலேயே இருப்பதாக கூறிவிட வேறுவழியின்றி விஷ்ணு பொள்ளாச்சி சென்றுவிட ராம் ரவி இருவரும் சென்னை கிளம்பினர்.

சென்னையை அடைந்ததும் முதல் வேளையாக ரவி இரண்டாவது விபத்து பற்றிய விவரங்களை விசாரிக்க செல்ல ராம் மீண்டும் ஒருமுறை விபத்து நடந்த இடத்திற்கு சென்றான் . சிறிது நேரம் அங்கேயே உலாவினான்.

சிறுவயதில் இருந்தே தன்னுடன் தன் விரல்களை பிடித்துக் கொண்டு நடந்தவள் இன்று இல்லை என்பதை அவனால் அவ்வளவு சீக்கிரம் ஏற்றக் கொள்ள முடியவில்லை அவன் நிம்மதியாய் தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டது கண் மூடினாலே 'ராம், ராம் ... ' என தன்னை வால் பிடித்துக் கொண்டே சுற்றிய ஸ்ரீ யின் நியாபகமே. கண்கள் மீண்டும் கலங்க துவங்க ஸ்ரீ விழுந்த இடத்தை ஒருமுறை பார்த்தவன் பின் திரும்பி பார்க்காமல் அவ்விடத்தை விட்டு சென்றான்.

சோர்வாய் வீட்டிற்கு வந்தவன் அப்படியே படுத்துக் கொண்டான். ரவி தங்கி இருப்பது கவர்மென்ட் அளித்த இரண்டு பெட்ரூம் வசதி கொண்ட கோட்டரஸ் வீடு. ரவிக்கு அந்த வீட்டின் வசதி எல்வாம் கண்ணில் படவே இல்லை ஸ்ரீ விபத்திற்கு காரணம் யார் என அறிவதே பிராதனமாக இருந்தது. அவனின் பொருட்கள் கூட பிரிக்கப்படாது இன்னும் பேக்கங்கிலேயே இருந்தது. இரவு உணவை கையோடு வாங்கி வந்திருந்தான் ரவி. உணவை முடித்துக் கொண்ட இருவரும் ஓய்வாய் அமர ராம் "எதாவது தகவல் கிடச்சுதா ரவி "
"ம்ம்.. அந்த இரண்டாவது விபத்து ஸ்ரீ க்கு விபத்து நடந்த பகுதியில் இருந்து கொஞ்சம் தூரம்... அப்படியே அந்த கார் தான் இடுச்சதுனாலும் அதுக்கு நம்ம கிட்ட எந்த எவிடன்சும் இல்ல .. ரெண்டு விபத்துக்கும் ஒரு ஒற்றுமை அந்த கார்." ரவி. "அப்போ அந்த கார் யாரோடது" ராம்.
"அந்த கார் கோவைல ஒரு தொழில் அதிபரோட பேர்ல ரிஜிஸ்டர் ஆகிருக்கு அவங்க ரிலேட்டிவ் ஒரு பையன் ஓட்டும் போது இந்த விபத்து நடந்திருக்கு அந்த விபத்தில அவனும் இறந்துட்டான். சோ இதுல யார விசாரிக்க. திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்துட்டோம் . இப்ப நம்ம கிட்ட இருக்க ஒரே க்ளு இன்ஸ்பெக்டர் நல்லதம்பி அவருக்கு முழுசா தெரிஞ்சிருக்க வாய்பில்லை ஆனா இதுல யார் சம்பந்தப்பட்டிருக்காங்கனு தெரியலாம்." என்றான் யோசனையாய்.
ராம் " அப்போ அவரை மிரட்டியாவது உண்மைய வாங்கு. உனக்கு தான் பவர் இருக்குல அத வச்சு எதாச்சும் செய் ரவி" என்க.
"செய்யலாம் ஆனா அபிசயலா அவர எதும் செய்ய முடியாது . மிரட்டுனா கடைசில அது நமக்கே திரும்ப வாய்ப்பு இருக்கு ராம் . இப்பதான் நா ஜாயின் பண்ணிருக்கேன் சோ யாரு எப்படினு தெரியல. எதையும் கொஞ்சம் பிளான் பண்ணி தான் செய்யனும் .அவருக்கு எதிரா நம்ம கிட்ட எந்த எவிடன்சும் இல்ல முதல்ல அத கண்டுபிடிப்போம். என் பிரண்ட் மூலமா நல்லதம்பியோட போன்கால் ட்ராக் பண்ண சொல்லிருக்கேன் " ரவி.
"நல்ல யோசனை . ஆனா நம்ம இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்கனும் தெரியல." ராம்.
"என்னோட கணிப்பு சரியாய் இருந்தா இன்னைக்கு நைட்டே நமக்கு அவர் மூலமா ஏதும் க்ளு கிடைக்கும். " என்றான் யோசனையாக.
அவன் நினைத்தது போலவேதான் நடந்தது நள்ளிரவில் அந்த இன்ஸ்பெக்டர் யாருடமோ பதினைந்து நிமிடங்கள் பேசியதாக அடுத்தநாள் காலை ரவிக்கு தகவல் வந்தது. அந்த நம்பரை ட்ரேஸ் செய்ததில் கண்ணன் என்பவர் பெயரில் வாங்கப்பட்டிருந்தது. அவரின் எண்ணிற்கு அழைத்தான் ரவி.

அதில் கிடைத்த தகவல் படி அந்த காலை வேளையிலேயே ரவி மற்றும் ராம் இருவரும் அந்த ஆறு மாடி கட்டிடத்தின்முன் நின்றிருந்தனர்.உள் நுழைந்தவர்கள் தங்கள் சந்திக்க வந்த நபரைப் பற்றி விசாரித்து அவரின் அறைக்குள் அனுமதியின்றி படாரென கதவை திறந்தவர்களுக்கு அங்கு சுழல் இருக்கையில் அமர்ந்து இருந்தவனைக் கண்டவர்கள் அதிர்ச்சியின் உட்சத்திற்கே செல்ல அவர்களின் இதழ்களோ ஒருசேர " விக்னேஷ்" என முணுமுணுத்தது.

------------------------------------------------------

உண்மையில் ஸ்ரீ க்கு ஆருஷியை பார்த்ததும் ஏதோ பிரித்தறிய இயலா பயம் அதனால் தான் அவன் பேச முயற்சி செய்யும் போது தவிர்த்தாள். ஆனால் அவன் ஆன்மாக்களை பற்றிக் கூறியதை கேட்டவளுக்கு இதில் இவ்வளவு விசயம் உள்ளதா என ஆச்சர்யமாக அவனைப் பார்த்தாள்.
"அப்போ நான் எப்போ வெளிச்சத்திற்கு போவேன்" என்க
"தெரியல. ஆனா நீ சீக்கிரம் போகனும். அதுதான் உனக்கு நல்லது" என்றான் ஆருஷி.
ஸ்ரீ புரியாமல் உதட்டை பிதுக்க அவளின் அழகில் ஒருநிமிடம் வீழ்ந்து தான் போனான் அந்த ஆறடி ஆண் மகன்.. நீண்ட நெடிய பெருமூச்சு விட்டபடி" நைட் உங்களுக்கு நடந்ததை நான் பார்த்தேன் . ஏதோ தப்பா நடக்க போகுதுனு தோனுச்சு அதான் உன்னை வார்ன் பண்ண நினைச்சேன்." என அவன் எதார்த்தமாய் அவளைப் பார்த்ததாக பொய்யுரைக்க.
"அப்போ நீங்க அத பார்த்தீங்களா... அந்த இடமே ரொம்ப குளிர்ச்சியா ஐஸ் கட்டி மாதிரி ஆகிடுச்சு . அப்புறம் எங்கள சுத்தியும் சுழல் காற்று மாதிரி இருட்டா அதுல கண்ணெல்லாம் சிவப்பு கலர்ல பல்லு கூர்மையா அவ்வளவுதான் பார்த்தேன் எனக்கு ரொம்ப பயமாகி கண்ண மூடிட்டேன் அப்புறம் என்ன நடந்ததுனு தெரியல சுவிட்ச் போட்ட மாதிரி எல்லாமே ஒரு செகண்ட் ல ஆஃப் ஆகிடுச்சு" என மடைதிறந்த வெள்ளம் போல் அப்படியே ஒப்பித்தாள் ஸ்ரீ ‌.

எங்கே தன் பயத்தை எல்லாம் ஆதியிடம் காண்பித்தால் அவன் பயந்து விடுவான் என்று தான் தனக்குள்ளேயே அழுத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கும் வேறு வழியில்லை எப்படியாவது இந்த நிலையில் இருந்து மீண்டு விட மாட்டோமா என தவித்தவளுக்கு கடலில் தத்தளிக்கும் போது கிடைக்கும் சிறு துருப்பு போல் இப்போது ஆருஷி துணையாய் இருப்பது மற்றும் அவன் சற்று ஆறுதலாக பேசியது என மனதில் இருந்தவற்றை அப்படியே கொட்டிவிட்டாள் இவ்வளவு நேரம் இருந்த அழுத்தம் குறைந்தது போல் உணர்ந்தாள்‌.
மேலும் பேசுவதற்குள் ஆதித்யா அவர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி வந்தான். "ஸ்ரீ அங்க எவ்வளவு ஜாலியா இருந்தது தெரியுமா நா யாரு கண்ணுக்குமே தெரியலையா அவங்க கூடவே விளையாட ரொம்ப நல்லா இருந்தது" என ஏதேதோ பேசியவன் பேச்சுவாக்கில் திரும்ப அங்கே கைகளைக் கட்டிக் கொண்டு இருவரையும் சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்த ஆருஷியை கண்டவன் பேச்சை நிறுத்தி விட்டு கேள்வியாய் ஸ்ரீ யைப் பார்க்க

"இவரும் நம்மள மாதிரி தான் ஆதி நமக்கு ஹெல்ப் பண்ண வந்துருக்காங்க " என்க ஆதி திரும்பி ஆருஷியை பார்த்தவன் அருகில் வருமாறு சைகை செய்ய , அருகில் வந்த ஆருஷி அவன் உயரத்திற்கு முழங்காலிட்டு அமர ஆதி அவனின் தாடியை பிடித்து இழுத்தான். இதை எதிர்பாரத ஆருஷி திகைத்து பின் வாய் விட்டு சிரித்தான்.

ஆதியின் செயலில் திகைத்து எங்கு கோபப்பட்டு விடுவானோ என பயந்து ஸ்ரீ அவனின் முகத்தைக் கலக்கமாக பார்த்துக் கொண்டிருக்க அவனின் இந்த சிரிப்பு அவளுக்கு நிம்மதியை அளித்ததோடு அவனின் முத்துப் பற்கள் தெரியும் சிரிப்பின் அழகில் மயங்கி இமைக்க மறந்து நின்றுவிட்டாள்..

"ஐயோ ஸ்ரீ உனக்கு என்னமோ ஆகிருச்சு .. நான் ஏன் இவனை இப்படி பார்க்குற... கடவுளே அவன் என்ன பண்ணாலும் என் கண்ணுக்கு அழகாவே தெரியுரானே... இனி அவனைப் பார்க்கவே கூடாது... " என மனதிற்குள் புலம்ப இன்னொரு மனமோ "இந்த சூழ்நிலையில் இருந்து வெளியவர இவனை விட்டாலும் நமக்கும் வேற வழியில்லை... இனித் தடுமாறக் கூடாது ஸ்டெடி ஸ்ரீ ஸ்டெடி " என்க "ஹைய்யோ உயிரோட இருந்தாதான் இந்த மாதிரி பிலிங்க்ஸ்ல வரும்னு நினைச்சா செத்தும் வருதே .. நான் என்ன பண்ணுவேன்" என மனதோடு போராடியவளின் முகமாறுதல்களைக் கண்ட ஆருஷிக்கு குத்தாட்டம் போட வேண்டும் போல இருந்தது வேறுவழியின்றி தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு ஆதியிடம் தன் கவனத்தை திருப்பினான்.

" ஏன் என்னோட தாடி பிடித்து இழுத்தாய்" என்க
" சாரி அங்கிள் எங்க அப்பாவும் இப்படித் தான் தாடி வச்சுருப்பாங்க எங்க அம்மா டிரிம் பண்ண சொல்லுவாங்களா எங்கப்பா கேட்க மாட்டாரு அப்போ எங்க அம்மா அவரு தாடி பிடிச்சு இழுப்பாங்க அதே ஞாபகத்துல இழுத்துட்டேன்.. சாரி " என சோகமாக கூற .. அதைக் கேட்ட இருவருக்கும் அவன்பால் இரக்கமே சுரந்தது சிறுவயதிலேயே மரணத்தை தழுவியது மட்டுமில்லாமல் அதையே அவன் ஒவ்வொரு நொடியும் உணரும்படி ஆகிவிட்டதே... ஏன் இப்படி ஒரு நிலையை கடவுள் படைத்தார் என்றே இருவருக்கும் தோன்றியது.

"நீ உங்க அம்மா அப்பா வை மிஸ் பண்றயா ஆதி" ஆருஷி. "ஆமா அங்கிள். எங்க அம்மாவுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல பாப்பா வரப் போகுது தெரியுமா. அம்மா நீ தான் எப்பவும் பேபிய பாத்துக்கணும் ஆதினு சொல்லுவாங்க " என ஆசையாக கூற ஆருஷி அவனைப் பார்த்து
" அப்போ நீ இங்க இருந்தா பேபிய யார் பாத்துப்பா சொல்லு" என்க.
"ஆனா அங்கிள் நா எப்படி பேபிய பாத்துக்க முடியும்." ஆதித்யா.
"ஏன் முடியாது அவங்களால தான் உன்ன பார்க்க முடியாது ஆனால் உன்னால அவங்கள பார்க்க முடியும்ல அப்போ நீ உன் பாப்பாவ தாரளமா பார்த்துகலாமே " என்றான் ஆருஷி.
"நிஜமாவா அங்கிள் அப்போ நா பேபிய பார்க்கலாமா.‌.ஆனா அங்கிள் எப்படி நா அங்க போறது எனக்கு தான் இங்க இருந்து எங்க வீட்டுக்கு வழி தெரியாதே " என்றான் சோகமாக.
"உன் வீடு எங்க இருக்குனு மட்டும் சொல்லு ஒரு செகண்ட்ல நாம அங்க போகலாம்." ஆருஷி.
இதைக் கேட்டதும் மகிழ்ச்சி நிறைந்த குரலில்"அப்போ பிளீஸ் அங்கிள் என்ன இப்பவே கூட்டிட்டு போறீங்களா " என்றவன் அவர்கள் வசிக்கும் தெருவை கூறியவனால் வீட்டின் எண் கூற முடியவில்லை. இதுவே போதுமென நினைத்தான் ஆருஷி. "சரி இப்ப ரெண்டு பேரும் என் கைய கெட்டியா பிடித்துக் கொள்ளுங்கள்"என்க .

ஆதித்யா ஆருஷியின் இடதுகையைப் பிடித்துக் கொள்ள ஸ்ரீ ஆதியின் மற்றொரு கையைப் பிடித்துக் கொண்டு தயக்கத்துடன் தன்முன் நீண்ட ஆருஷியின் கையைப் பார்த்தாள்.
ஆருஷியும் கண்ணில் ஏக்கத்துடன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது ஸ்ரீயைப் பார்க்க அவளும் அவன் விழிமொழிக்கு கட்டுப்பட்டு ஒரு பெருமூச்சுடன் ஆருஷியின் வலது கையைப் பற்றிய அந்த நொடி !
அவன் ஸ்பரிசத்தில் இவளின் கண்ணில் தோன்றிய காட்சிகளைக் கண்டவள் விதிர்விதித்துப் போனாள்.

இதுவரை அவளுக்கு அவனின் மீதிருந்த மாயவலை அறுபட கண்ணில் தோன்றிய காட்சிகளை ஏற்க இயலாமல் தன் கைகளை அவன் கையில் இருந்து உருவிக் கொள்ள முயல அவனோ சித்தரின் சக்திகள் மூலம் இடம்பெயர முயன்றவனுக்கு அவளின் முயற்சியை உணர முடியாமல் போக இருக்கமாய் பற்றி இருந்த கையுடன் ஆதித்யாவின் வீடு இருக்கும் தெருவினை அடைந்தான்.

ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆதி ஆருஷியின் கைகளை பிடித்துக் கொண்டு குதித்துக் கொண்டிருந்தான். ஆருஷி ஆதியின் சந்தோஷத்தில் திக்குமுக்காடி அதே மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஸ்ரீ பார்த்தவன் திகைத்து நின்று விட்டான். கண்ணில் இதுவரை அவனின் மேல் இருந்த ஆர்வம் வற்றி சிறிது கண்கள் கலங்க அவனையே வெறித்தபடி நின்றிருந்தாள் ஸ்ரீ.

கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே ??


என்றும் அன்புடன்
anucharan
 

Anucharan

Active member
Wonderland writer
340856.jpg

அத்தியாயம் 18

ரவி அவன் நண்பன் கொடுத்த எண்ணிற்கு அழைத்துப் பேச அந்த எண்ணிற்கு சொந்தக் காரனான கண்ணன் அன்று அழைப்பேசியை இல்லத்திலேயே வைத்துவிட்டு வந்திருக்க அழைப்பை ஏற்ற அவர் மனைவியும் போலீஸ் என்றவுடன் பணியிடம் பற்றிக் கூறி அவரின் பணிபற்றிக் கூறி வைத்திருந்தார்.. பிஏவாக வேலை செய்பவருக்கு கேஸை திசைதிருப்பும் அளவுக்கு பவர் இருக்க வாய்ப்பு இல்லை என யூகித்தவர்களுக்கு அவரின் முதலாளியே இதற்கு காரணமாக இருக்கலாம் என சிந்தித்துக் கொண்டுதான் சென்றனர்.. அவரின் பெயர் சொல்லி ரிசப்ஷனில் விசாரிக்க எம்டி அறையில் இருப்பதாக கூற கோபத்தின் உச்சிக்கே சென்றனர்...
ரவிக்கு இரண்டாவது விபத்தில் கோவை தொழிலதிபரின் கார் சம்பந்தப்பட்டதை வைத்து விசாரித்ததில் அது விக்னேஷின் அப்பா என்று அறிந்து கொண்டவன் அதை ராமிடம் கூறாமல் மறைத்திருந்தான்..

முக்கியமான கோப்புகளை சரி பார்த்துக் கொண்டிருந்தவன் அனுமதியின்றி திறந்த கதவின் சத்தத்தில் சிறிது எரிச்சல் மீதூற நிமிர உள்ளே வந்தவர்களை கண்டவனின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன அவன் இதழ்களோ "ராம்" என முணுமுணுக்க அதே சமயம் ரவி மற்றும் ராம் இருவரும் அதிர்ச்சியில்"விக்னேஷ் " என முணுமுணுத்தனர்.

விக்னேஷ் முன்னோரு நாளில் கல்லூரி படித்த காலத்தில் ஸ்ரீயின் மீது ஈர்ப்பு கொண்டு அவளிடம் பேச முயற்சி செய்ய ராம் அதற்கு தடையாய் நின்று ஒதுங்கி செல்ல கூற கோபம் கொண்டு ஸ்ரீ யை தூக்குவேன் என்று தான் கனவிலும் நினையாத ஒன்றை வாய் வழியாய் உளறியதற்காக...
ஒரு மாதம் பெட் ரெஸ்ட் எடுக்க வைத்த நல்லுள்ளங்களை மறக்க அவன் ஒன்றும் அம்னிசியா நோயாளி அல்லவே!!!

இருவரும் சத்தியமாக விக்னேஷை அங்கு எதிர்பார்க்கவில்லை.. அவன் அதிர்ச்சியில் இருந்து வெளிவரும் முன்னே ஆத்திரத்தில் கண்கள் சிவக்க ராம் அவன் மீது பாய்ந்திருந்தான்.

தன் வலதுகையால் அவன் கன்னத்தில் குத்தியவன் அவன் சட்டைக் காலரைப் பற்றி இழுத்து தன் கால்முட்டியால் அவன் வயிற்றில் தாக்கியிருந்தான். விக்னேஷ் என்ன ஏதென்று உணரும் முன்னே ராம் தாக்கியதில் நிலைகுலைந்து வயிற்றில் பட்ட அடியில் இருமல் வர

"ரா..ம்... நில்லு ... என்னா..ச்சு..." என திக்கில் திணறி பேசவர மீண்டும் அவன் முகத்தில் குத்தியிருந்தான் ராம். .
அவன் இதில் சமந்தப்பட்டிருப்பான் என சிறிதும் ரவி எதிர்பார்க்கவில்லை....

அந்த அறையில் கோப்புகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அந்த கம்பெனியின் விசுவாசியான பிஏ திடீரென உள்நுழைந்து தன் முதலாளியை இருவர் மாறி மாறி அடிப்பதைக் கண்டவர் இருவரைத் தடுக்க முயன்றார்.

ஐம்பதை நெருங்கும் அவராலோ இருபதுகளில் இருக்கும் ஆக்ரோஷமான அந்த இரு கட்டிளங்காளைகளை அடக்க முடியுமோ!!!!

உடனடியாக பக்கத்து அறையில் இருக்கும் தன் இன்னொரு முதலாளிக்கு தகவல் அளிக்க விரைந்து வெளியேறினார்.. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த விக்னேஷோ வலியைப் பொறுத்துக் கொண்டு

"நிறுத்து ராம் .... என்ன பிரச்சினை ... ஏன் இப்படி மிருகம் மாதிரி நடந்துகிறீங்க "என்க ..

ராமோ அவன் சட்டைக் காலரை விடாது " உன்னால தான்டா எங்க ஸ்ரீ க்கு இப்படி ஆச்சு.. உன்னைக் கொல்லாம விடமாட்டேன் டா" என்றான் ஆக்ரோஷமாக...

இதுவரை அவர்களின் அடியை வாங்கிக் கொண்டு இருந்தவன் ஸ்ரீ என்ற வார்த்தையைக் கேட்டு ஒருநிமிடம் திகைத்து திருப்பி ராமின் சட்டையைக் கொத்தாக பிடித்தவன் " ஸ்ரீ க்கு என்னாச்சு டா... அவளுக்கு ஒன்னும் இல்லைல... அவ நல்லா இருக்கால்ல சொல்லுடா சொல்லு" என்று ராமை உலுக்கினான்..

ஆத்திரம் குறையாத ராமும் "நடிக்காத டா .... விபத்து மாதிரி செட் பண்ணி எங்க ஸ்ரீ ய கொன்னுட்டு இப்ப நல்லவன் மாதிரி நடிக்கிறயா ... உன்ன சும்மா விட மாட்டேன் டா" என்க ...

அவனுக்கு மற்ற வார்த்தைகள் எதுவும் காதில் விழவில்லை ' என்னது ஸ்ரீ உயிரோட இல்லையா' என்பதை மட்டும் உணர்ந்தவனுக்கு இவ்வளவு நேரம் அவர்கள் அடித்ததால் உண்டான வலியில் கூட கண்கலங்காதவனுக்கு தற்போது
கண்ணீர் துளியானது சூடாய் அவன் கன்னத்தை நனைத்தது.....

மொத்த சக்தியும் வடிந்தது போலான விக்னேஷ் ராமின் மீதான தன் பிடியில் இருந்த சட்டை நழுவ ராம் மீண்டும் அவனை அடிக்க கை ஓங்கிய வேளையில் " ஸ்டாப் இட்" என்ற கர்ஜனையில் மூவரும் ஒருசேர திரும்பி அந்த அறையின் வாயிலைப் பார்த்தனர்.
-----------------------------------------------------------------------------
ஆதித்யா ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் கொண்டே முன்னேற அவனின் பின்னே ஆருஷியும், ஸ்ரீ யும் வெவ்வேறு மனநிலையில் சென்றனர்.

' ஸ்ரீ இவ்வளவே நேரம் நல்லாதான இருந்தா அதுக்குள்ள என்னாச்சு ... ஒருவேளை இங்க வர நான் பயன்படுத்திய சக்திய பார்த்து பயந்து விட்டாளோ.... இல்லையே பார்த்த அப்படித் தெரிலயே... அவ கண்ணுல ஏதோ ஒன்னு குறையுதே..' என ஆருஷி தீவிரமாக அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே வந்தான்...

ஸ்ரீயோ தன் கண்ணால் கண்ட காட்சிகளை ஏற்க முடியாமலும், அதே சமயம் அவன் மீதான பிம்பம் பொய்த்துப் போனதால் உண்டான ஆதங்கமும் சேர்ந்து பல்வேறு குழப்பமான மன நிலையில் இருந்தாள்...

"அங்கிள் இதுதான் என்னோட வீடு " என்ற ஆதித்யா வின் ஆர்ப்பாட்டமான குரலில் இருவரும் சுயநினைவை அடைந்தனர்..
ஆதித்யாவின் வீடு இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் ... வீட்டின் முன் வெள்ளை நிறக் கார் நிற்க அருகில் பூந்தொட்டியும் வெண்ணிற ஊஞ்சலுடன் பார்க்க அழகாய் இருந்தது. மூடியிருந்த கேட்டின் வழியே ஊடுருவி சென்றவர்களை அந்த வீட்டின் நாய் அவர்களைப் பார்த்து சத்தமாய் குரைத்து தன் இருப்பை உணர்த்தியது....

ஆதித்யாவும் அதனைக் கண்டதும் "ஜீரோ.. ஜீரோ ... ". உற்சாகமாய் அதனைத் தொட அதுவும் இத்தனை நாள் தன் தோழன் இல்லாததில் வருத்தத்தில் இருந்து மீண்டு உற்சாகமாய் அவனை சுற்றி சுற்றி வந்தது.. ஜீரோவின் சத்தத்தில் உள்ளிருந்து வந்த நாற்பது வயது மதிக்கத்தக்க தக்க நபர் பலநாள் வெட்டாத தலைமுடி மற்றும் தாடியுடன் சிறிது தொந்தியும் கண்களை சுற்றி கருவளையமும் என வந்தவர்

"ஜீரோ காம் டவுன் ....அங்க என்ன பண்ற " அதுவோ அவரின் பேச்சைக் கேட்காமல் ஆதித்யா வை சுற்றி சுற்றி வர அவரின் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை..

ஆதியோ "இதுதான் எங்க அப்பா... ஆனா ஏன் இவரு இப்படி இருக்காரு" என அவரின் வெளித் தோற்றத்தைப் பார்த்து கவலை கொண்டான்.ஆருஷி மற்றும் ஸ்ரீ இருவரும் அவனின் தோளை ஆதரவாய் பற்றிக் கொண்டனர்.

வெளியில் வந்தவர் ஒருமுறை சுற்றிலும் பார்த்து விட்டு ஜீரோவை அதன் கழுத்துப் பட்டையில் சங்கிலியைக் கட்டி இழுக்க அதுவோ ஆதித்யா வை விட்டு வர மறுக்க அவரோ "ஜீரோ ‌..வா அங்க எதும் இல்லை... வா " என வெற்றிடத்தைப் பார்த்துவிட்டு அதன் தலையையைத் தடவி தூக்கிச் சென்றார்..

அந்த நாய் குட்டியோ ஆதித்யாவைப் பார்த்துக் கொண்டே சென்றது...

இவர்கள் மூவரும் உள்ளே செல்ல பின்னால் வந்த ஆதித்யா வின் தந்தை ஸ்ரீயை ஊடுருவி செல்ல மீண்டும் அவள் கீழே விழுந்து விட்டாள்... அதைப் பார்த்த ஆதி சட்டென சிரித்துவிட இதழில் தோன்றிய புன்னகையை மறைக்க ஆருஷி பெரும்பாடு பட்டான்...

"என்ன ஸ்ரீ நீ எப்பப் பார்த்தாலும் இப்படியே விழுற.... உன்னால பேய்க்கு உண்டான மரியாதை போச்சு " என நக்கல் பண்ண அதற்கு மேல் முடியாமல் ஆருஷி வாய்விட்டு சிரித்துவிட்டான்.

ஸ்ரீ அவன் சிரிப்பில் மீண்டும் தொலையவிருந்த மனதை அடக்கியவள் அவர்களின் சிரிப்பில் காண்டாகி இருவரையும் கொலைவெறியோடு முறைத்தாள்.அவளின் உஷ்மான பார்வையின் வீச்சு தாங்காமல் தன் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆதிக்கு பார்வையால் ஸ்ரீ யைக் காட்டினான்.
உள்ளிருந்து வந்த பேச்சு சத்தத்தில் மூவரும் கலைந்து சத்தம் வந்த அறையை நோக்கி சென்றனர்...
"என்னங்க சத்தம்" என பெண்குரல் கேட்க
அவரோ "ஜீரோ தான்மா எதையோ பார்த்து குரைச்சுது அதான் அதை அதோட இடத்துல கட்டிட்டு வந்தேன்..." என்க..

" என்னங்க சொல்றீங்க ஜீரோ அதோட இடத்த விட்டு வந்துதா.... நம்ம ஆதி போனதுக்கு அப்புறம் அது அதோட இடத்த விட்டு வெளிலையே வரலயே சாப்பாடு கூட ஒரு நேரம் தான சாப்பிட்டுச்சு " என ஆச்சர்யமாக கூறினார் அந்த பெண்மணி...

ஆம் அந்த ஐந்தறிவு ஜீவனும் கடந்த ஒரு மாதமும் தன் நண்பனின் பிரிவில் தவித்து ஒரு நேரம் மட்டுமே உணவு எடுத்துக் கொண்டு அதனின் இடத்தைவிட்டு நகராமலும் சிறிதும் சத்தம் எழுப்பாமல் அதன் இடத்திலேயே படுத்துக் கிடந்தது .. அவன் ஆசையாய் வளர்த்து தனக்கு மிகவும் பிடித்தமான கார்டூனைப் பார்த்து வைத்த பெயர்தான் ஜீரோ....

ஆதியின் தந்தை ஏதோ பேசிவிட்டு வெளியேற இவர்கள் மூவரும் அந்த அறையினுள் நுழைந்தனர்..அங்கு அமர்ந்திருந்த பெண்மணியைக் கண்டதும் அந்த பத்து வயது சிறுவனும் மடி தேடும் கன்று போல் ஓடிச்சென்று அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டான்... அந்த பெண்மணிக்கோ என்னவென்று தெரியாமல் உடல் சிலிர்க்க கண்களை மூடி 'ஆதிக்கண்ணா' என முணுமுணுத்தார்..

தன் கருவில் உருவாகி தன் சதையில் உருவம் தந்து பத்து மாதங்கள் சுமந்து தன் இரத்தத்தை உணவாக்கி ஊணும் உயிருமாய் கலந்த தன் உறவை அவரால் உணராமல் தான் போக முடியுமா ..... கண்களை விழித்தவருக்கு வெறுமையாய் காட்சியளித்த ஆதியின் அறை தன் உயிருக்கு உயிரான தன் மகன் உயிருடன் இல்லை என்ற உண்மை உரைக்க மனம் ஊமையாய் கதறியது...

அவன் இறந்த சில நாட்களிலேயே அவன் வாழ்ந்த அவன் மூச்சுக் காற்று கலந்த அவன் சிறு அறையிலேயே அவர் தங்கிக் கொண்டார்... அந்த சிறு அறை அவனின் கைவண்ணத்தில் சுவர் முழுதும் அவன் வரைந்த கிறுக்கல்களும்... இல்லை இல்லை அதை கிறுக்கல் என்று கூறவே முடியாது அவன் இவற்றை சுவற்றில் வரையும் போதுகூட அவள் திட்டியுள்ளாள் .. தற்போது அவளின் உயிரோட்டமே அந்த அறையும் அவனின் ஓவியங்களும் தான்...

ஆதி "இது தான் எங்க அம்மா" என இருவருக்கும் அறிமுகப் படுத்தினான்... கண்ணில் கருவளையம் சூழ்ந்து உடல் மெலிந்து பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தார்...ஆதியின் தந்தையோ வெளியில் சென்றவர் கையில் உணவுத்தட்டுடன் வந்து
" இங்க பாரு தனுமா... நீ சாப்பிடாம இருந்தா நம்ம பேபியை எப்படி உன்னால பார்த்துக்க முடியும்.... கொஞ்சமா சாப்பிடிடா...."என கெஞ்சும் குரலில் பேசினார்....

"இல்லங்க எனக்கு பசிக்கல .. இன்னைக்கு என்னமோ எனக்கு ஆதி நினைவாவே இருக்குங்க... இத்தனை நாளா இல்லாம இன்னைக்கு அவனோட மூச்சுக் காற்று இந்த ரூம் முழுக்க இருக்க மாதிரி இருக்குங்க... எனக்கு அதுவே மனசெல்லாம் நிறைஞ்ச மாதிரி இருக்குங்க..."என பேசிக் கொண்டிருக்க அவரின் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை சிணுங்க அவரும் தொட்டிலை ஆட்டிக் கொண்டே பேசினார்...

" ஏன்ங்க நமக்கு மட்டும் இப்படில நடக்குது .. நம்ம பையன் ஆதி என்னங்க பண்ணா ... அவனோட முகத்தக்கூட நம்மால பார்க்க முடியாம போயிருச்சுங்கல்ல... " என அழ ஆதியின் தந்தையோ

" எதை நினைச்சும் நீ வருந்தாத ... உனக்கு எதாவதுனா நானும் பாப்பாவும் என்னடி பண்ணுவோம் ... கொஞ்சம் சாப்பிடுடி " என அவரை சமாதானப் படுத்தி உணவை ஊட்ட ...

ஆதியின் அன்னை அழுததில் இருந்து ஆதியும் அழ ஆரம்பிக்க நிலமையைக் கையில் எடுத்த ஆருஷி அவனை திசைதிருப்பும் பொருட்டு அவனுக்கு மறுபுறம் இருந்த குழந்தையின் தொட்டிலைக் காட்டினான். அதில் சற்று தெளிந்த ஆதியும் தன் தங்கையைப் பார்க்கும் ஆவலில் தொட்டிலை நோக்கி நடந்தான். அங்கு ரோஜா பூவைப் போன்று துணிகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த தன் தங்கையைக் கண்டவனுக்கு உலகமே மறந்துதான் போனது...

குழந்தையின் கன்னத்தைத் தொட்டவன் ஸ்ரீயிடம் " ஸ்ரீ,அங்கிள் இங்க பாருங்க பாப்பா எவ்வளவு க்யூட்டா இருக்கு ...அதோட கன்னம் ரொம்ப சாஃப்ட் ஆ இருக்கு..." என உற்சாகமாக காட்டினான்.

ஆதி இறந்த சம்பவம் கேள்விப்பட்ட அவனின் அன்னை மயங்கி விழ ... இரண்டு மணிநேரம் கழித்து விழித்தவருக்கு பிரசவவலியும் வந்துவிட அன்றே அவர்களின் பெண்குழந்தை பிறந்தது. முதல் குழந்தை ஒருபக்கம் உயிரற்ற உடலாய்.. இரண்டாவது குழந்தை கையில் என அவர்களின் நிலை சற்று மோசமாய் தான் இருந்தது...

ஆதி அந்த குழந்தையின் கையைப் பற்றிக் கொண்டே " பாப்பா நீங்க எப்பவும் குட்கேர்ள் ஆ இருக்கணும் சரியா.... அம்மாவ அழாம பாத்துக்கணும் .. அண்ணன் எப்பவும் உங்க கூடவே இருப்பேனாம்.. " என்று பெரிய மனிதன் போல் பேச அந்த கண்விழிக்காத மொட்டுவும் தன் அண்ணன் கூறியது கேட்டதுவோ....
தன் செப்பு இதழ் பிரித்து சிரிக்க அதைக் கண்ட மற்றவர்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியாய் இருந்தது....
அதைப் பார்த்து சிரித்த ஆதி அந்த பூக்குவியலுக்கு முத்தமிட்ட அந்த கணம்....

ஆதியின் பேச்சில் கண்கள் கலங்க ஸ்ரீ யும் ஆருஷியும் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க...

ஆதித்யா வின் பிம்பம் அவனின் பின் தோன்றிய வெள்ளைநிற வெளிச்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது...

ஆருஷிக்கு அங்கு நடப்பதை முன்னாடியே அறிந்திருந்தமையால் அவன் அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்க நடப்பதை புரியாமல் பார்த்த ஸ்ரீயோ அவனுக்கு ஆபத்து என எண்ணி அவனைக் காக்கும் பொருட்டு

" ஆதி.. ஆதி ... இந்த பக்கம் வாடா... " என கத்திக் கொண்டே அவனின் புறம் செல்ல முயல ஆருஷி ஸ்ரீ யின் கையைப் பிடித்துக் கொண்டு"அமைதியா இரு ஸ்ரீ ... அவனைப் போக விடு " எனக் கூறி அவளை சமாதானப் படுத்த முயன்றான்..

தன் தங்கைக்கு முத்தமிட்டபடியே ஆதித்யாவின் ஆன்மா இந்த பூவுலகை விட்டு அந்த வெளிச்சத்தினுள் சிறு புள்ளிபோல் மறைந்தது ..

யார் விழியில்
யார் வரைந்த கனவோ...
பாதியிலே கலைந்தால்
தொடராதோ ......
ஆள் மனதில்
யார் விதைத்த நினைவோ......
காலமதை சிதைத்தும் மறக்காதோ .....

கதையைப் பற்றி நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே.. உங்கள் கருத்துக்களே என்னை இன்னும் எழுத தூண்டும்... நன்றி ???



என்றும்
அன்புடன் உங்கள்
Anucharan
 
Status
Not open for further replies.
Top