அத்தியாயம் 18
ரவி அவன் நண்பன் கொடுத்த எண்ணிற்கு அழைத்துப் பேச அந்த எண்ணிற்கு சொந்தக் காரனான கண்ணன் அன்று அழைப்பேசியை இல்லத்திலேயே வைத்துவிட்டு வந்திருக்க அழைப்பை ஏற்ற அவர் மனைவியும் போலீஸ் என்றவுடன் பணியிடம் பற்றிக் கூறி அவரின் பணிபற்றிக் கூறி வைத்திருந்தார்.. பிஏவாக வேலை செய்பவருக்கு கேஸை திசைதிருப்பும் அளவுக்கு பவர் இருக்க வாய்ப்பு இல்லை என யூகித்தவர்களுக்கு அவரின் முதலாளியே இதற்கு காரணமாக இருக்கலாம் என சிந்தித்துக் கொண்டுதான் சென்றனர்.. அவரின் பெயர் சொல்லி ரிசப்ஷனில் விசாரிக்க எம்டி அறையில் இருப்பதாக கூற கோபத்தின் உச்சிக்கே சென்றனர்...
ரவிக்கு இரண்டாவது விபத்தில் கோவை தொழிலதிபரின் கார் சம்பந்தப்பட்டதை வைத்து விசாரித்ததில் அது விக்னேஷின் அப்பா என்று அறிந்து கொண்டவன் அதை ராமிடம் கூறாமல் மறைத்திருந்தான்..
முக்கியமான கோப்புகளை சரி பார்த்துக் கொண்டிருந்தவன் அனுமதியின்றி திறந்த கதவின் சத்தத்தில் சிறிது எரிச்சல் மீதூற நிமிர உள்ளே வந்தவர்களை கண்டவனின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன அவன் இதழ்களோ "ராம்" என முணுமுணுக்க அதே சமயம் ரவி மற்றும் ராம் இருவரும் அதிர்ச்சியில்"விக்னேஷ் " என முணுமுணுத்தனர்.
விக்னேஷ் முன்னோரு நாளில் கல்லூரி படித்த காலத்தில் ஸ்ரீயின் மீது ஈர்ப்பு கொண்டு அவளிடம் பேச முயற்சி செய்ய ராம் அதற்கு தடையாய் நின்று ஒதுங்கி செல்ல கூற கோபம் கொண்டு ஸ்ரீ யை தூக்குவேன் என்று தான் கனவிலும் நினையாத ஒன்றை வாய் வழியாய் உளறியதற்காக...
ஒரு மாதம் பெட் ரெஸ்ட் எடுக்க வைத்த நல்லுள்ளங்களை மறக்க அவன் ஒன்றும் அம்னிசியா நோயாளி அல்லவே!!!
இருவரும் சத்தியமாக விக்னேஷை அங்கு எதிர்பார்க்கவில்லை.. அவன் அதிர்ச்சியில் இருந்து வெளிவரும் முன்னே ஆத்திரத்தில் கண்கள் சிவக்க ராம் அவன் மீது பாய்ந்திருந்தான்.
தன் வலதுகையால் அவன் கன்னத்தில் குத்தியவன் அவன் சட்டைக் காலரைப் பற்றி இழுத்து தன் கால்முட்டியால் அவன் வயிற்றில் தாக்கியிருந்தான். விக்னேஷ் என்ன ஏதென்று உணரும் முன்னே ராம் தாக்கியதில் நிலைகுலைந்து வயிற்றில் பட்ட அடியில் இருமல் வர
"ரா..ம்... நில்லு ... என்னா..ச்சு..." என திக்கில் திணறி பேசவர மீண்டும் அவன் முகத்தில் குத்தியிருந்தான் ராம். .
அவன் இதில் சமந்தப்பட்டிருப்பான் என சிறிதும் ரவி எதிர்பார்க்கவில்லை....
அந்த அறையில் கோப்புகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அந்த கம்பெனியின் விசுவாசியான பிஏ திடீரென உள்நுழைந்து தன் முதலாளியை இருவர் மாறி மாறி அடிப்பதைக் கண்டவர் இருவரைத் தடுக்க முயன்றார்.
ஐம்பதை நெருங்கும் அவராலோ இருபதுகளில் இருக்கும் ஆக்ரோஷமான அந்த இரு கட்டிளங்காளைகளை அடக்க முடியுமோ!!!!
உடனடியாக பக்கத்து அறையில் இருக்கும் தன் இன்னொரு முதலாளிக்கு தகவல் அளிக்க விரைந்து வெளியேறினார்.. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த விக்னேஷோ வலியைப் பொறுத்துக் கொண்டு
"நிறுத்து ராம் .... என்ன பிரச்சினை ... ஏன் இப்படி மிருகம் மாதிரி நடந்துகிறீங்க "என்க ..
ராமோ அவன் சட்டைக் காலரை விடாது " உன்னால தான்டா எங்க ஸ்ரீ க்கு இப்படி ஆச்சு.. உன்னைக் கொல்லாம விடமாட்டேன் டா" என்றான் ஆக்ரோஷமாக...
இதுவரை அவர்களின் அடியை வாங்கிக் கொண்டு இருந்தவன் ஸ்ரீ என்ற வார்த்தையைக் கேட்டு ஒருநிமிடம் திகைத்து திருப்பி ராமின் சட்டையைக் கொத்தாக பிடித்தவன் " ஸ்ரீ க்கு என்னாச்சு டா... அவளுக்கு ஒன்னும் இல்லைல... அவ நல்லா இருக்கால்ல சொல்லுடா சொல்லு" என்று ராமை உலுக்கினான்..
ஆத்திரம் குறையாத ராமும் "நடிக்காத டா .... விபத்து மாதிரி செட் பண்ணி எங்க ஸ்ரீ ய கொன்னுட்டு இப்ப நல்லவன் மாதிரி நடிக்கிறயா ... உன்ன சும்மா விட மாட்டேன் டா" என்க ...
அவனுக்கு மற்ற வார்த்தைகள் எதுவும் காதில் விழவில்லை ' என்னது ஸ்ரீ உயிரோட இல்லையா' என்பதை மட்டும் உணர்ந்தவனுக்கு இவ்வளவு நேரம் அவர்கள் அடித்ததால் உண்டான வலியில் கூட கண்கலங்காதவனுக்கு தற்போது
கண்ணீர் துளியானது சூடாய் அவன் கன்னத்தை நனைத்தது.....
மொத்த சக்தியும் வடிந்தது போலான விக்னேஷ் ராமின் மீதான தன் பிடியில் இருந்த சட்டை நழுவ ராம் மீண்டும் அவனை அடிக்க கை ஓங்கிய வேளையில் " ஸ்டாப் இட்" என்ற கர்ஜனையில் மூவரும் ஒருசேர திரும்பி அந்த அறையின் வாயிலைப் பார்த்தனர்.
-----------------------------------------------------------------------------
ஆதித்யா ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் கொண்டே முன்னேற அவனின் பின்னே ஆருஷியும், ஸ்ரீ யும் வெவ்வேறு மனநிலையில் சென்றனர்.
' ஸ்ரீ இவ்வளவே நேரம் நல்லாதான இருந்தா அதுக்குள்ள என்னாச்சு ... ஒருவேளை இங்க வர நான் பயன்படுத்திய சக்திய பார்த்து பயந்து விட்டாளோ.... இல்லையே பார்த்த அப்படித் தெரிலயே... அவ கண்ணுல ஏதோ ஒன்னு குறையுதே..' என ஆருஷி தீவிரமாக அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே வந்தான்...
ஸ்ரீயோ தன் கண்ணால் கண்ட காட்சிகளை ஏற்க முடியாமலும், அதே சமயம் அவன் மீதான பிம்பம் பொய்த்துப் போனதால் உண்டான ஆதங்கமும் சேர்ந்து பல்வேறு குழப்பமான மன நிலையில் இருந்தாள்...
"அங்கிள் இதுதான் என்னோட வீடு " என்ற ஆதித்யா வின் ஆர்ப்பாட்டமான குரலில் இருவரும் சுயநினைவை அடைந்தனர்..
ஆதித்யாவின் வீடு இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் ... வீட்டின் முன் வெள்ளை நிறக் கார் நிற்க அருகில் பூந்தொட்டியும் வெண்ணிற ஊஞ்சலுடன் பார்க்க அழகாய் இருந்தது. மூடியிருந்த கேட்டின் வழியே ஊடுருவி சென்றவர்களை அந்த வீட்டின் நாய் அவர்களைப் பார்த்து சத்தமாய் குரைத்து தன் இருப்பை உணர்த்தியது....
ஆதித்யாவும் அதனைக் கண்டதும் "ஜீரோ.. ஜீரோ ... ". உற்சாகமாய் அதனைத் தொட அதுவும் இத்தனை நாள் தன் தோழன் இல்லாததில் வருத்தத்தில் இருந்து மீண்டு உற்சாகமாய் அவனை சுற்றி சுற்றி வந்தது.. ஜீரோவின் சத்தத்தில் உள்ளிருந்து வந்த நாற்பது வயது மதிக்கத்தக்க தக்க நபர் பலநாள் வெட்டாத தலைமுடி மற்றும் தாடியுடன் சிறிது தொந்தியும் கண்களை சுற்றி கருவளையமும் என வந்தவர்
"ஜீரோ காம் டவுன் ....அங்க என்ன பண்ற " அதுவோ அவரின் பேச்சைக் கேட்காமல் ஆதித்யா வை சுற்றி சுற்றி வர அவரின் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை..
ஆதியோ "இதுதான் எங்க அப்பா... ஆனா ஏன் இவரு இப்படி இருக்காரு" என அவரின் வெளித் தோற்றத்தைப் பார்த்து கவலை கொண்டான்.ஆருஷி மற்றும் ஸ்ரீ இருவரும் அவனின் தோளை ஆதரவாய் பற்றிக் கொண்டனர்.
வெளியில் வந்தவர் ஒருமுறை சுற்றிலும் பார்த்து விட்டு ஜீரோவை அதன் கழுத்துப் பட்டையில் சங்கிலியைக் கட்டி இழுக்க அதுவோ ஆதித்யா வை விட்டு வர மறுக்க அவரோ "ஜீரோ ..வா அங்க எதும் இல்லை... வா " என வெற்றிடத்தைப் பார்த்துவிட்டு அதன் தலையையைத் தடவி தூக்கிச் சென்றார்..
அந்த நாய் குட்டியோ ஆதித்யாவைப் பார்த்துக் கொண்டே சென்றது...
இவர்கள் மூவரும் உள்ளே செல்ல பின்னால் வந்த ஆதித்யா வின் தந்தை ஸ்ரீயை ஊடுருவி செல்ல மீண்டும் அவள் கீழே விழுந்து விட்டாள்... அதைப் பார்த்த ஆதி சட்டென சிரித்துவிட இதழில் தோன்றிய புன்னகையை மறைக்க ஆருஷி பெரும்பாடு பட்டான்...
"என்ன ஸ்ரீ நீ எப்பப் பார்த்தாலும் இப்படியே விழுற.... உன்னால பேய்க்கு உண்டான மரியாதை போச்சு " என நக்கல் பண்ண அதற்கு மேல் முடியாமல் ஆருஷி வாய்விட்டு சிரித்துவிட்டான்.
ஸ்ரீ அவன் சிரிப்பில் மீண்டும் தொலையவிருந்த மனதை அடக்கியவள் அவர்களின் சிரிப்பில் காண்டாகி இருவரையும் கொலைவெறியோடு முறைத்தாள்.அவளின் உஷ்மான பார்வையின் வீச்சு தாங்காமல் தன் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆதிக்கு பார்வையால் ஸ்ரீ யைக் காட்டினான்.
உள்ளிருந்து வந்த பேச்சு சத்தத்தில் மூவரும் கலைந்து சத்தம் வந்த அறையை நோக்கி சென்றனர்...
"என்னங்க சத்தம்" என பெண்குரல் கேட்க
அவரோ "ஜீரோ தான்மா எதையோ பார்த்து குரைச்சுது அதான் அதை அதோட இடத்துல கட்டிட்டு வந்தேன்..." என்க..
" என்னங்க சொல்றீங்க ஜீரோ அதோட இடத்த விட்டு வந்துதா.... நம்ம ஆதி போனதுக்கு அப்புறம் அது அதோட இடத்த விட்டு வெளிலையே வரலயே சாப்பாடு கூட ஒரு நேரம் தான சாப்பிட்டுச்சு " என ஆச்சர்யமாக கூறினார் அந்த பெண்மணி...
ஆம் அந்த ஐந்தறிவு ஜீவனும் கடந்த ஒரு மாதமும் தன் நண்பனின் பிரிவில் தவித்து ஒரு நேரம் மட்டுமே உணவு எடுத்துக் கொண்டு அதனின் இடத்தைவிட்டு நகராமலும் சிறிதும் சத்தம் எழுப்பாமல் அதன் இடத்திலேயே படுத்துக் கிடந்தது .. அவன் ஆசையாய் வளர்த்து தனக்கு மிகவும் பிடித்தமான கார்டூனைப் பார்த்து வைத்த பெயர்தான் ஜீரோ....
ஆதியின் தந்தை ஏதோ பேசிவிட்டு வெளியேற இவர்கள் மூவரும் அந்த அறையினுள் நுழைந்தனர்..அங்கு அமர்ந்திருந்த பெண்மணியைக் கண்டதும் அந்த பத்து வயது சிறுவனும் மடி தேடும் கன்று போல் ஓடிச்சென்று அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டான்... அந்த பெண்மணிக்கோ என்னவென்று தெரியாமல் உடல் சிலிர்க்க கண்களை மூடி 'ஆதிக்கண்ணா' என முணுமுணுத்தார்..
தன் கருவில் உருவாகி தன் சதையில் உருவம் தந்து பத்து மாதங்கள் சுமந்து தன் இரத்தத்தை உணவாக்கி ஊணும் உயிருமாய் கலந்த தன் உறவை அவரால் உணராமல் தான் போக முடியுமா ..... கண்களை விழித்தவருக்கு வெறுமையாய் காட்சியளித்த ஆதியின் அறை தன் உயிருக்கு உயிரான தன் மகன் உயிருடன் இல்லை என்ற உண்மை உரைக்க மனம் ஊமையாய் கதறியது...
அவன் இறந்த சில நாட்களிலேயே அவன் வாழ்ந்த அவன் மூச்சுக் காற்று கலந்த அவன் சிறு அறையிலேயே அவர் தங்கிக் கொண்டார்... அந்த சிறு அறை அவனின் கைவண்ணத்தில் சுவர் முழுதும் அவன் வரைந்த கிறுக்கல்களும்... இல்லை இல்லை அதை கிறுக்கல் என்று கூறவே முடியாது அவன் இவற்றை சுவற்றில் வரையும் போதுகூட அவள் திட்டியுள்ளாள் .. தற்போது அவளின் உயிரோட்டமே அந்த அறையும் அவனின் ஓவியங்களும் தான்...
ஆதி "இது தான் எங்க அம்மா" என இருவருக்கும் அறிமுகப் படுத்தினான்... கண்ணில் கருவளையம் சூழ்ந்து உடல் மெலிந்து பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தார்...ஆதியின் தந்தையோ வெளியில் சென்றவர் கையில் உணவுத்தட்டுடன் வந்து
" இங்க பாரு தனுமா... நீ சாப்பிடாம இருந்தா நம்ம பேபியை எப்படி உன்னால பார்த்துக்க முடியும்.... கொஞ்சமா சாப்பிடிடா...."என கெஞ்சும் குரலில் பேசினார்....
"இல்லங்க எனக்கு பசிக்கல .. இன்னைக்கு என்னமோ எனக்கு ஆதி நினைவாவே இருக்குங்க... இத்தனை நாளா இல்லாம இன்னைக்கு அவனோட மூச்சுக் காற்று இந்த ரூம் முழுக்க இருக்க மாதிரி இருக்குங்க... எனக்கு அதுவே மனசெல்லாம் நிறைஞ்ச மாதிரி இருக்குங்க..."என பேசிக் கொண்டிருக்க அவரின் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை சிணுங்க அவரும் தொட்டிலை ஆட்டிக் கொண்டே பேசினார்...
" ஏன்ங்க நமக்கு மட்டும் இப்படில நடக்குது .. நம்ம பையன் ஆதி என்னங்க பண்ணா ... அவனோட முகத்தக்கூட நம்மால பார்க்க முடியாம போயிருச்சுங்கல்ல... " என அழ ஆதியின் தந்தையோ
" எதை நினைச்சும் நீ வருந்தாத ... உனக்கு எதாவதுனா நானும் பாப்பாவும் என்னடி பண்ணுவோம் ... கொஞ்சம் சாப்பிடுடி " என அவரை சமாதானப் படுத்தி உணவை ஊட்ட ...
ஆதியின் அன்னை அழுததில் இருந்து ஆதியும் அழ ஆரம்பிக்க நிலமையைக் கையில் எடுத்த ஆருஷி அவனை திசைதிருப்பும் பொருட்டு அவனுக்கு மறுபுறம் இருந்த குழந்தையின் தொட்டிலைக் காட்டினான். அதில் சற்று தெளிந்த ஆதியும் தன் தங்கையைப் பார்க்கும் ஆவலில் தொட்டிலை நோக்கி நடந்தான். அங்கு ரோஜா பூவைப் போன்று துணிகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த தன் தங்கையைக் கண்டவனுக்கு உலகமே மறந்துதான் போனது...
குழந்தையின் கன்னத்தைத் தொட்டவன் ஸ்ரீயிடம் " ஸ்ரீ,அங்கிள் இங்க பாருங்க பாப்பா எவ்வளவு க்யூட்டா இருக்கு ...அதோட கன்னம் ரொம்ப சாஃப்ட் ஆ இருக்கு..." என உற்சாகமாக காட்டினான்.
ஆதி இறந்த சம்பவம் கேள்விப்பட்ட அவனின் அன்னை மயங்கி விழ ... இரண்டு மணிநேரம் கழித்து விழித்தவருக்கு பிரசவவலியும் வந்துவிட அன்றே அவர்களின் பெண்குழந்தை பிறந்தது. முதல் குழந்தை ஒருபக்கம் உயிரற்ற உடலாய்.. இரண்டாவது குழந்தை கையில் என அவர்களின் நிலை சற்று மோசமாய் தான் இருந்தது...
ஆதி அந்த குழந்தையின் கையைப் பற்றிக் கொண்டே " பாப்பா நீங்க எப்பவும் குட்கேர்ள் ஆ இருக்கணும் சரியா.... அம்மாவ அழாம பாத்துக்கணும் .. அண்ணன் எப்பவும் உங்க கூடவே இருப்பேனாம்.. " என்று பெரிய மனிதன் போல் பேச அந்த கண்விழிக்காத மொட்டுவும் தன் அண்ணன் கூறியது கேட்டதுவோ....
தன் செப்பு இதழ் பிரித்து சிரிக்க அதைக் கண்ட மற்றவர்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியாய் இருந்தது....
அதைப் பார்த்து சிரித்த ஆதி அந்த பூக்குவியலுக்கு முத்தமிட்ட அந்த கணம்....
ஆதியின் பேச்சில் கண்கள் கலங்க ஸ்ரீ யும் ஆருஷியும் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க...
ஆதித்யா வின் பிம்பம் அவனின் பின் தோன்றிய வெள்ளைநிற வெளிச்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது...
ஆருஷிக்கு அங்கு நடப்பதை முன்னாடியே அறிந்திருந்தமையால் அவன் அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்க நடப்பதை புரியாமல் பார்த்த ஸ்ரீயோ அவனுக்கு ஆபத்து என எண்ணி அவனைக் காக்கும் பொருட்டு
" ஆதி.. ஆதி ... இந்த பக்கம் வாடா... " என கத்திக் கொண்டே அவனின் புறம் செல்ல முயல ஆருஷி ஸ்ரீ யின் கையைப் பிடித்துக் கொண்டு"அமைதியா இரு ஸ்ரீ ... அவனைப் போக விடு " எனக் கூறி அவளை சமாதானப் படுத்த முயன்றான்..
தன் தங்கைக்கு முத்தமிட்டபடியே ஆதித்யாவின் ஆன்மா இந்த பூவுலகை விட்டு அந்த வெளிச்சத்தினுள் சிறு புள்ளிபோல் மறைந்தது ..
யார் விழியில்
யார் வரைந்த கனவோ...
பாதியிலே கலைந்தால்
தொடராதோ ......
ஆள் மனதில்
யார் விதைத்த நினைவோ......
காலமதை சிதைத்தும் மறக்காதோ .....
கதையைப் பற்றி நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே.. உங்கள் கருத்துக்களே என்னை இன்னும் எழுத தூண்டும்... நன்றி ???
உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடவும்.
pommutamilnovels.com
என்றும்
அன்புடன் உங்கள்
Anucharan