அத்தியாயம் 5
அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு அனைவரும் சென்னை வந்து சேர்ந்தனர் ..
கோபாலின் நண்பர் ராம்நாதன் அவர்களை ஸ்டேஷனிலேயே வந்து அழைத்து சென்றார்.பரஸ்பர நலம் விசாரிப்புகுப்பின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்... ராமநாதன் வரும் வழியிலேயே கார் வாடகை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். கோபாலின் பள்ளி கால நண்பர்... கோவையை பூர்வீகமாகக் கொண்டவர்.. கடந்த பத்து வருடங்களாக வேலை மாற்றல் பெற்று சென்னையில் வசிக்கிறார்.அவருக்கு ஒரே மகள் வர்சினி. அவள் ஸ்ரீ நிதி பணிபுரிய இருக்கும் நிறுவனத்தின் சென்னையில் இருக்கும் தலைமையிடத்தில் பணிபுரிகிறாள்.
ஒருமணி நேர பயணத்திற்கு பிறகு ராமநாதனின் வீட்டை அடைந்தனர். அங்கு அவரின் மனைவி கலையரசியும் மகளும் வாசல் வரை வந்து வரவேற்றனர்... அவரின் வீடு நான்கு அறைகள் கொண்ட ஸ்ரீ வீட்டில் பாதியளவு இருந்தது.. பத்துக்கு பத்து அறை மூன்றும் சிறிய பூஜை அறை சமயலறை மற்றும் சற்று பெரிய வரவேற்பு அறை... சிரம பரிகாரங்கள் நால்வரும் முடித்தபின் காலையுணவை கலையரசி எடுத்துவைக்க அனைவரும் உண்டனர்.
"அண்ணா இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு அப்புறம் ஊருக்கு போலாம் ல ணா... வந்தன்னைக்கே கிளம்பனுமா " என்றார் கலையரசி..
"இல்லை மா அங்க ஊருலையும் கொஞ்ச வேலை இருக்கு நடவு சமயம் வேற இன்னொரு நாள் கண்டிப்பா வரோம் மா.. ஸ்ரீ பத்திரமா இருடா .. " என்று கலையரசியிடம் ஆரம்பித்து ஸ்ரீ யிடம் முடித்தார் மூர்த்தி.
" அண்ணா இதெல்லாம் நீங்க சொல்லனுமா ஸ்ரீ எங்க பொண்ணு மாதிரி நாங்க பார்த்துக்கிறோம்... நீங்க கவலைப்படாமல் போய்ட்டு வாங்க" கலையரசி.. இதைக் கேட்ட மூர்த்தி மற்றும் கோபாலிற்கு மனநிறைவாய் இருந்தது..
"ஆன்ட்டி எனக்கு உங்களை நினைச்சா தான் பாவமா இருக்கு....நான் நல்லா சமைப்பேன்னு இவ சொன்னா தயவு செய்து நம்பி கிட்சன் பக்கம் மட்டும் விட்றாதிங்க...அப்புறம் உங்க கிட்சனுக்கு அது தான் கடைசிநாளா இருக்கும்.. அனுபவத்துல சொல்றேன்.." என வராத கண்ணீரை துடைத்து கொண்டு சிரியாமல் சொல்ல அங்கிருந்த அனைவரும் கொல்லென சிரிக்க ஸ்ரீ யோ ராமை கொலை வெறியோடு முறைத்து பார்த்தாள்..
"அப்படியெல்லாம் இல்லை ஆன்ட்டி ஏதோ ஒரு தடவை அம்மா சாதம் குக்கர் ல வைக்க சொன்னாங்க நான் கரெக்ட் ஆ தான் வைச்சேன்.. பழைய குக்கர் வெடிச்சுருச்சு அதுக்கு நான் என்ன செய்வேன்.. எல்லாம் அந்த குக்கர் மேல் தான் தப்பு... இவன் என்னவே என்னை சொல்றான்.. " என அப்பாவியாக சொல்ல எவ்வளவு முயன்றும் சிரிப்பை அடக்க முடியாமல் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்... பின் ஸ்ரீ அழுகையாய் உதட்டை பிதுக்க கலையரசி அங்கிருந்தவர்களை கண்ணால் சைகை செய்ய
ராமும் வர்சினி மட்டும் சிரிக்க அவரோ "நீ எதும் வருத்தப்படாத டா.. நீ கூட பரவால வர்சூக்கு சுடுதண்ணி கூட வைக்க தெரியாது..."என வர்ஷினியை வார அவள் அன்னையின் மேல் கடுப்பானாள்
"நான் உனக்கு சூப்பரா சமைக்க கத்து தர்றேன்..சரியா!!" என ஸ்ரீ யை கேட்க அவளும் ராமிற்கு பழிப்புக்காட்டி சிரித்தாள்.
பின் மூவரும் அன்றிரவே ஊரிற்கு கிளம்ப "பொறுப்பா நடந்துகணும் டா" என கூறிய மூர்த்தியும் கோபாலும் மனமேயின்றி பிரிந்து சென்றனர்...ஸ்ரீ அவர்கள் கிளம்பும் வரை பொறுத்தவள் அதற்குமேல் முடியாமல் அவளுக்கென ஒதுக்க பட்ட அறையில் முடங்கி விட்டாள் .. முதல் நாள் என்பதால் அவர்களும் ஓய்வெடுக்கட்டும் என விட்டுவிட்டனர்..
எப்போதுமே வர்ஷினியின் பெற்றோருக்கு அவள் ஒரே பெண்ணாய் போனதில் வருத்தமே.. உறவுகள் உடன்பிறப்புகள் இன்றி தனியாய் வாழ்வதின் அருமை தெரிந்தவர்கள்.
கல்லூரி படிக்கும் போதே கலையரசியை காதலித்து படித்து முடிக்கும் முன்பே பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.. எனவே உறவுகளும் சொல்லிக் கொள்வது போல் இல்லை.. கோபாலின் குடும்பத்தை போல் தனித்தனியான வீடுகளில் வசித்தாலும் அவர்களின் ஒற்றுமையில் பெரிய ஆச்சர்யமே.. வர்ஷினியை இது போன்ற குடும்பத்தில் திருமணம் செய்து கொடுப்பதே அவர்களின் எண்ணம்..
முதல் முறை குடும்பத்தை விட்டு பிரிந்தது, புது இடம் என ஸ்ரீ க்கு அந்த இரவு சிவராத்திரி தான்.. அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டி அனைவரும் பரப்பரப்பாக கிளம்பி கொண்டிருந்தனர் ..
அவர்களதும் நடுத்தர வர்க்கத்திற்கு சற்று மேலானவர்கள் சொந்தவீடு , வர்ஷினிக்கு ஸ்கூட்டி, சாதரணமான கார் என இவ்வளவு தான் உடைமையே.. முதலில் ராமநாதன் அலுவலகம் கிளம்பி விட ஸ்ரீ யும் வர்ஷினியும் ஸ்கூட்டியில் ஆபிஸ் சென்றனர்..
அந்த வானுயர முப்பது மாடி கட்டிடத்தின் பிரமாண்டத்தில் திகைத்து நின்று விட்டாள்.. வர்ஷினி அவளை அழைத்து சென்று அவளின் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி பயிற்சி நடக்கும் இடத்திற்கு வாழ்த்துக்கூறி அனுப்பி வைத்தாள்.. வர்ஷினி ஸ்ரீ யை விட ஒரு வயது மூத்தவள்.. அவளும் இன்ஜினியரிங் கம்ப்யூட்டர் பிரிவு படித்து இந்நிறுவனத்தில் ஓராண்டிற்கு முன்பு சேர்ந்தாள்.
இன்றுடன் ஸ்ரீ சென்னை வாசி ஆகி ஒரு மாதம் ஆகிவிட்டது.. சென்னை வாழ்க்கை அவளுக்கு உயிரோட்டம் இல்லாததது போலவே தோன்றியது... அந்த போக்குவரத்தும் ஜன நெருக்கடியும் ஸ்ரீ க்கு மூச்சு முட்ட வைத்தது..
வர்சினியும் ஸ்ரீயும் நன்றாக நெருங்கி விட்டனர்.. முதலில் குடும்பத்தை பிரிந்து மிகவும் வருந்தியவள் அதை வெளியில் காட்டாமல் இருந்தாள் அதை அறிந்து கொண்ட வர்ஷினி அவளை தனியாக விடாமல் எப்பவும் கூடவே இருந்தாள்..
தனியாக வளர்ந்தவளுக்கு ஸ்ரீ தங்கையை தாண்டியும் தோழியைத் தாண்டியும் இருவருள்ளும் நல்ல பாசபிணைப்பு உருவாகி இருந்தது..
போனில் அனைவரிடமும் தவறாமல் பல மணிநேரம் பேசுபவள் இருந்தும் எப்போது நேரில் சென்று அவர்களை பார்க்க என்று ஏக்கமாக இருந்தது அவளுக்கு.. எப்போது ஊருக்கு சொல்வோம் என ஆவலாக இருந்தாள்.
எப்போழுதும் துறுத்துறுவென இருக்கும் ராமும் பெங்களூர் கிளம்பி விட ஸ்ரீயும் இல்லாமல் பெரியவர்கள் தான் மிகவும் வருந்தினர்..
நாட்கள் அதன் போக்கில் நகர ஸ்ரீ வேலையை நன்கு கற்றுக் கொண்டிருந்தாள் அவள் குழுவில் அவளுடன் சேர்த்து இன்னும் நான்கு பேர்.. அனைவரிடமும் இன்முகத்துடனே நடந்து கொண்டாள்.. ஸ்ரீ இங்கு வந்து மூன்று மாதங்கள் முடிய இருநாட்கள் இருந்தது.. அவளுக்கு வேலையும் உறுதியானது. இடையில் அவளின் பெற்றோர்கள் வேலை பளுவினால் வந்து பார்க்க முடியவில்லை அவளும் வேலை காரணமாக ஊரிற்கு செல்ல முடியாமல் போக கலையரசி ராமநாதனும் தான் அவளை தேற்றி மகள் போலவே பார்த்துக் கொண்டனர்..
இன்று....
எவ்வளவு முயன்றும் அவளால் நம்பவே முடியவில்லை ...
பின் தன் கை கால்கள் என வேகமாக தொட்டுத் தொட்டுப் பார்த்தாள் ஏதோ சற்று வித்தியாசமாக உணர்ந்தாலே தவிர மற்றபடி அவளுக்கு வேறு எதுவும் தவறாய் தோன்றவில்லை..
சட்டென நினைவு வந்தவளாய் சுற்றி முற்றி தன் தோழி வர்ஷினியை தேட அங்கு அவள் இல்லை வண்டியின் அருகே அந்த கரிய சாலை வண்ணத்தையும் மீறி செங்குறுதி பளபளத்தது கையில் நடுக்கத்துடன் அதை வருடிப் பார்த்தாள் சுத்தமாக தொடு உணர்வின்றி ஏதோ குளுமையாய் மட்டும் உணர்ந்தாள்..
பின் வேகமாய் எழுந்தவள் அந்த காவல் அதிகாரி கூறிய மருத்துவ மனையை நோக்கி விரைந்தாள்.. வர்ஷினி யுடன் ஊர் சுற்றியதில் அந்த ஏரியா பழக்கமாகி இருந்தது...
'வர்ஷினி வர்ஷினி....' என அவள் மனம் மீண்டும் மீண்டும் முணுமுணுக்க சட்டென அவள் நடந்த இடம் ஆடுவதை உணர்ந்து பயந்து தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள்..
சிறிது நேரம் கழித்து சுற்றுப்புறம் எந்த அசைவும் இல்லாமல் இருக்க மெல்ல கண்கள் திறக்க தன் முன்னால் கிழிந்த நாறாய் கிடந்த வர்ஷினியை கண்டவள் கண்களில் கண்ணீர் தானாய் சுரக்க ஆரம்பித்தது... அவளின் தலையிலும் வலது கையிலும் வலது காலிலும் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது..
அவளை அந்நிலையில் பார்க்க முடியாதவள் வேகமாக அங்கிருந்து வெளியில் வந்து வராண்டாவில் நின்று கொண்டாள்.
அப்போது தன் பதட்டமாய் உள்ளே வந்த ராமநாதன் மற்றும் கலையரசியை கண்டவளுக்கு இன்னும் அழுகையாய் வந்தது .. கலையரசி ஸ்ரீ யினை ஊடுருவி செல்வது போல செல்ல ஸ்ரீ தான் அதில் தடுமாறி அங்கேயே அமர்ந்து விட்டாள். அவளுக்கு இன்னும் இந்த நிலையை தாக்குபிடிக்க முடியவில்லை ... மரணத்திற்கு பிறகான இந்நிலை அவளிற்கு ஏதோ மீளா சுழலில் மாட்டிக் கொண்டது போல் உணர்ந்தாள்..
ஆம் அவள் உடலில் இருந்து உயிர் பிரிந்து முழுதாய் மூன்று மணி நேரம் ஆகி இருந்தது...
இந்நிலையில் இருந்து எவ்வாறு அவள் மீள போகிறாள்.. அல்லது இந்த மீளா சுழலில் சிக்கி மூழ்கிப் போவாளா!! என்பதை இனி வரும் அத்தியாயங்களில் காணலாம்...
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடவும் ??