அத்தியாயம் 44
“இப்போவே செக் பண்ணி கன்பார்ம் பண்ணிடலாம் அம்மாச்சி” என சந்தோஷத்தோடு பிரக்னன்சி கிட்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். சிங்கத்துக்கும் தனக்கும் இருந்த ஊடலில் பீரியட்ஸ் ஆகாததையே மறந்து விட்டாள் ரதி. யூரின் டெஸ்ட் பண்ணியதில் இரண்டு சிவப்பு கோடுகளை பார்த்ததும் அவளுக்கு கைகள் நடுங்கியது ஆனந்தத்தில் இப்போதே சிங்கத்திடம் சொல்லிவிட வேண்டுமென்று துடித்தாள்.
பெரியவர்கள் தான் சொல்லும் நல்ல செய்திக்காக வெளியே காத்து கிடப்பார்கள் என வெளியே வந்தவள் "அம்மாச்சி நீங்க கொள்ளு பாட்டி ஆகிட்டீங்க... அத்தை நீங்க பாட்டி ஆகிட்டீங்க" என்றாள் வெட்கப்பட்டு முகத்தை பொத்திக் கொண்டாள்.
“ஆத்தி ஆத்தி இதுக்குதானே நான் தவம் கிடந்தேன்... என் கொள்ளு பேரனையோ பேத்தியையோ பார்க்கத்தானே இந்த கெழட்டு கட்டை இருக்கேன்” என்று பூரிப்புடனும் சந்தோத்துடனும் ரதியை கட்டிக்கொண்டார் நாச்சி.
கோமதியோ சமையல்கட்டுக்கு ஓடிச்சென்று சர்க்கரையை எடுத்துவந்து ரதியின் வாயில் ஊட்டிவிட்டு “சந்தோசமா இருக்குமா” என்று மருமகளின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
“அம்மாச்சி உங்க பேரன்கிட்ட நான் மாசமா இருக்க விசயத்தை நான் தான் முதல் சொல்லுவேன்... நீங்க அவசரப்பட்டு சொல்லிடாதீங்க, அத்தை நீங்களும்தான்” என்று கண்ணை உருட்டி விரல் நீட்டி இருவரையும் செல்லமாக மிரட்டினாள் ரதி.
“நாங்க சொல்லமாட்டோம் தாயி!” என்றனர் இருவரும் கோரசாக.
வாக்கு எண்ணிக்கை நடந்துக் கொண்டிருந்தது. ஆதிபெருமாளோ மீனாட்சியை "கட்சி ஆபிஸ்க்கு நீ வரவேணாம் தங்கச்சி... இந்த முறை நாம ஜெயிக்க மாட்டோம்! நீ அங்க வந்தீனா உன்னை உதாசீனமா பார்ப்பாங்க ஐய்யனாரும் சிங்கமும்... நீ வீட்லயே இரு நான் மாணிக்கத்தை கூட்டிட்டு போறேன். ஐய்யனாரை போட்டுத்தள்ளிட்டு நான் அவன் இடத்துல உட்காரப்போறேன் மீனாட்சி” என பதவி வெறி பிடித்து ஆங்காரம் பிடித்தது போல பேசினார்.
“நானும் வரேன் அண்ணா!! அவனை என் கையால போட்டுத்தள்ளணும்” என்று கண்ணில் கொலை வெறியோடு புறப்பட்டார் மீனாட்சி.
கோதையோ ‘இன்னிக்கு எலக்சன் ரிசல்ட் இந்த கடன்காரி வேற என் புருசன் கூட போறாளே! இவ என்ன பண்ண வேணாலும் தயங்க மாட்டா’ என்று அச்சம் கொண்டவர் ஆதிபெருமாளின் கார் புறப்பட்டதும் பொன்வண்ணனுக்கு போன் போட்டார் அவனோ ஒரு சர்ஜரியில் இருக்க போனை எடுக்கவில்லை. சிங்கத்திற்கு போன் அடித்துவிட்டார். சிங்கமோ ஐய்யனார் பக்கம் கருப்பண்ண சாமி போல பாதுகாப்பாய் கையை கட்டிக்கொண்டு கூட்டத்தில் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். போனை எடுத்தவன் போனை ஆன் செய்து பேசாமல் காதில் வைத்திருந்தான்.
“சிங்கப் பையா உன்கிட்ட அவசரமா பேசணும்... நான் பேசறதை காதுக்கொடுத்து மட்டும் கேளு” என்று அவசரமாகவும் பதட்டத்துடனே பேசவும் “டேய் முருகா எதுக்குடா இவ்ளோ பதட்டப்படுற... பொறுத்து பேசு... நான் காது கொடுத்து கேட்குறேன்” என்றான் நிதானமாகத்தான். கோதை என்ன சொல்ல வருகிறார் என்பது அவனுக்கு தெரிந்த விசயமே.
"ரதி அப்பாவும், மீனாட்சியும் ரொம்ப நேரமா கட்சி விசயம் பேசிக்கிட்டு இருந்தாங்க சிங்கம்... அவங்க யாரையோ போட்டுத்தள்ளணும்னு சொல்றாங்கப்பா எனக்கு படபடனு வருது நீதான் நம்ம குடும்பத்து ஆளுங்களை பார்த்துக்கிடணும்... என் மனசுக்குள்ள ஏதோ அசம்பாவிதம் நடந்திடும்னு தோணுதுப்பா” என்றார் அங்கலாய்ப்புடன் நெஞ்சை பிடித்துக்கொண்டு.
“டேய் முருகா சிங்கம் எல்லாரையும் பார்த்துப்பான் கவலைப்படாம சோபாவுல உட்கார்ந்து டிவியில சீரியல் பார்க்கச் சொல்லுடா” என்று நக்கல் தொனியுடன் சொல்லி விட்டு சட்டை காலரை தூக்கி விட்டு போனை வைத்துவிட்டான்.
முருகனோ வழக்கம்போல அண்ணன் என்னமோ பேசுறாரு எனக்கு புரியலை என்று குழம்பிக்கொண்டு நின்றான்.
அதற்குள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஐய்யனார் வெற்றி பெற்றார் என்று டிவியில் அறிவிப்பு கொடுத்துவிட்டனர்.
தோற்று போன அவமானத்தில் முகம் கன்றி இருந்த ஆதிபெருமாளோ மாணிக்கத்திற்கு போன் போட்டு “எங்கடா இருக்க?” என்று ஆத்திரத்தில் முழக்கமிட்டார்.
“அ.அது மாமா உள்ளூர் ஆளுங்க ஐய்யனாரை போட்டுதள்ள வரமாட்டேனு சொல்லிபுட்டானுங்க... அசலூர்ல இருந்து ஆளுங்களை பிடித்து அழைச்சிட்டு வர தாமதம் ஆகிடுச்சு... இதோ கூட்டத்தோடு கூட்டமா சிங்கம் ஆளுங்களோட கலந்துட்டானுங்க நம்ம ஆளுங்க இன்னும் கொஞ்ச நேரத்துல ஐய்யனாரை போட்டிருவாங்க நீங்கதான் இந்த தொகுதிக்கு கிங்” என்றான் எக்காளச் சிரிப்புடன்.
“வாய்ஜாலம் காட்டாதேடா! என்கிட்ட கத்தையா வாங்கிய பணத்துக்கு ஒழுங்கா வேலையை முடி” என்று பல்லைக்கடித்தார் ஆதிபெருமாள்.
“எல்லாம் கச்சிதமா நடக்கும் நான் வரேன்” என்று மாணிக்கமும் கூட்டத்தில் கலந்தான்.
ஐய்யனார் சிங்கத்துடன் சிரித்து பேசுவதை கண்ட மீனாட்சியோ “அண்ணா ஐய்யனாரையும் அவன் பெத்த சிங்கத்தை பார்க்கும்போது வயிறு எரியுது... அவனை என் கையால கொல்லணும்” என்று அவர் கத்தியை எடுத்துக் கொண்டு காரை விட்டு இறங்கப்போனவரின் கையை பிடித்து தடுத்த ஆதிபெருமாளோ “மீனா உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா... சிங்கம் இருக்கான் அவன் பக்கத்துல கூட உன்னால போகமுடியாது பொறுத்திரு” என்று கொதித்துக்கொண்டிருந்த மீனாட்சியை அடக்கி வைத்தார் ஆதிபெருமாள்.
மாணிக்கம் கூட்டத்தில் மறைந்து மறைந்து சென்றதை பார்த்துவிட்டான் சிங்கம். நொடிக்கொருமுறை கூட்டத்தை சுற்றி தன் கழுகு பார்வையால் நோட்டமிட்டுக்கொண்டுதானே இருக்கிறான். “வாடா மாணிக்கம் உன் கதையை இன்னிக்கே முடிச்சு வச்சிடறேன்” என்று இதழ் வளைத்து சிரித்தான் சிங்கம்.
கோதைக்கோ இதயதுடிப்பு எகிறியது பூஜையறைக்கு ஓடிச்சென்று கையை கூப்பி “கடவுளே என் அண்ணாவுக்கும் சிங்கப்பயலுக்கும் எந்த ஒரு ஆபத்தும் வந்துடக்கூடாது” என்று மனதுருகி கண்ணீருடன் கடவுளை நிந்தனை செய்தார்.
ரதிக்கோ மனதிற்குள் ஏதோ உழன்றுக் கொண்டே இருந்தது... உயிரை காப்பாற்றுகின்ற மருத்துவராச்சே அவள்... சிங்கத்துக்கு போன் போட்டாள். கூட்டத்தில் போன் அடித்த சத்தமும் கேட்கவில்லை சிங்கத்துக்கு... நாம கட்சி ஆபிஸ் போயிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தவள் வெளியே வாசலுக்கு வந்தாள். நாச்சியும் கோமதியும் தோட்டத்திற்குச் சென்றிருந்தனர்.
காரை துடைத்துக்கொண்டிருந்த டிரைவரிடம் “அண்ணா அவசரமா கட்சி ஆபிஸ் போகணும் காரை எடுங்க” என்று காரில் ஏறிவிட்டாள்.
“பாப்பா நம்ம குடும்பத்து பொண்ணுங்க கட்சி ஆபிஸ்க்கு போறது சிங்கம் தம்பிக்கு பிடிக்காது... ஐய்யனார் அய்யாவும் கோபப்படுவாரு வேணாம்” என்று அழைத்து போக மறுத்துவிட்டார் டிரைவர்.
“அண்ணா ப்ளீஸ் காரை எடுங்க நான் மாமாகிட்ட பேசிக்கிறேன்” என்று அவள் கோபமாக கத்திவிட்டாள். வேறுவழியில்லாம் காரை கட்சி ஆபிஸிற்கு விட்டார்.
ரதிக்கோ போகும்வழியெல்லாம் யாருக்கும் எதுவும் ஆகிடக்கூடாது என்ற பதட்டத்துடனே இருந்தாள். ரதி எமோஷ்னல் ஆகாத வயித்துல இருக்கும் கருவுக்கு பாதிப்பு வரும் என்று அவளாக அவளை நிதானப்படுத்திக்கொண்டாள்.
கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள். ஐய்யனாருக்கு மாலை போட்டு மரியாதை செய்து பூக்களை தூவினார்கள். “டேய் சிங்கம் அண்ணாவுக்கும் மாலையை போடுங்க” என்று கோரசாக சிரிப்பொலியுடன் சிங்கத்திற்கும் மாலையை போட்டுவிட்டனர்.
சிங்கம் பக்கம் நின்றிருந்த கண்ணனோ “மாப்பிள்ளை கூட்டத்துல ஏதோ கருப்பு ஆடு கலந்திருக்கு என்னனு பார்த்து அடிச்சு போடு நான் அப்பாவை கட்சி ஆபிஸ்க்குள்ள அழைச்சிட்டு போறேன்” என்று ஐய்யனாரின் கையை பிடித்தார் கண்ணன்.
ரதியோ கூட்டத்துக்குள் முட்டி மோதி ஐய்யனாரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாள்.
மீனாட்சி ரதி கூட்டத்தில் நுழைவதை கண்டு “அண்ணே நம்ம ரதி கூட்டத்துக்குள்ள போறா... இவ ஏன் இந்த நேரம் அங்க..." அவளுக்கு ஏதாச்சும் ஆகிடுமோ என்று பதட்டப்படவில்லை... 'இப்போ போட்டிருக்கும் ப்ளானில் ஐய்யனார் தப்பித்து விட்டால் இவளை வைத்துதானே அடுத்த ப்ளான் போட முடியும்... எல்லாத்தையும் சொதப்பிட்டா இந்த ரதி’ என்று தலையில் கையை வைத்தார்.
ஆதிபெருமாளோ "என்னது ரதி கூட்டத்துக்குள்ள போறாளா?" என்று அங்கலாய்த்தவர் “இருமா இப்பவே மாணிக்கத்துக்கு போன் போட்டு கூட்டத்தை விட்டு வெளியே வரச்சொல்லுறேன்” என்று அவர் மகள் மேல் இருக்கும் பாசத்தில் மாணிக்கத்திற்கு போன் போட்டார் அவரசமாக... அவன் போன் எடுக்கவில்லை.
“இந்த பொண்ணு ஏன் அங்க போகணும்?” என்று சலித்துக்கொண்டவருக்கு மனதே ஏற்கவில்லை காரை விட்டு இறங்கி கூட்டத்திற்குச் சென்றார் ஆதிபெருமாள்.
'இந்த அண்ணா என்னை இறங்க வேணாம்னு சொல்லிவிட்டு இப்போ இவர் போறாரே! ம்ம் எப்படியோ போகட்டும்' என்று சுயநலமாக யோசித்த மீனாட்சியோ காருக்குள்ளேயே உட்கார்ந்து நடப்பதை வேடிக்கை பார்த்தார்.
அந்த நேரம் “ஏய்” என்று ஐய்யானாரை ஒருவன் கத்தியால் வெட்டபோக... சிங்கம் பாய்ந்து அவனின் கையை வெட்டிவிட்டான். அவனை மட்டுமல்ல கூட்டத்தில் நுழைந்த கருப்பு ஆடுகளை அடித்து துவம்சம் செய்து அவர்களை நடக்க கூட முடியாமல் செய்துவிட்டான். ஐய்யனாருக்கும் கண்ணனுக்கும் சிறு சிறு காயங்கள் படத்தான் செய்தது.
ஐய்யனார் பக்கம் ஒருத்தரை கூட விடவில்லை சிங்கம் எகிறி வந்தவர்களை அடித்து சாய்த்தான்... ரதியோ ஐய்யனார் பாதுகாப்பாக நின்றதை பார்த்தவள் நிம்மதியாக மூச்சு விட சிங்கத்தின் முதுகில் கத்தியை குத்த போக ஐய்யனாரோ “சிங்கம் பின்னால பாரு” என்று அவர் சத்தம் போட அவனும் முன்னால் இருந்தவனை அடித்து போட்டு பின்னால் திரும்ப “மாமாவை குத்திடாதே” என்று கத்தி கொண்டு மாணிக்கத்தின் ஆளின் கையில் இருந்த கத்தியை பிடித்துக்கொண்டிருந்தாள். கத்தியின் கூர்மை அவளது பிஞ்சுக் கையிலிருந்து ரத்தம் கொட்ட செய்தது. கையில் மட்டும் இல்லை... அவளது கால்கள் வழியாகவும் இரத்தம் கொட்டியது. அவளுக்கே தனக்குள் எனன் நடக்கிறது என்று தெரியவில்லை... சிங்கத்தை காப்பாற்றுவதில் மட்டுமே அவளது கவனம் இருந்தது.
ரதியின் கையில் இரத்தம் வழிந்ததை கண்டு “ரதிஇஇஇ கத்தியை விடுடி” என்று உச்சஸ்தானியிலிருந்து முழக்கமிட்டவனுக்கு இதயம் வெடித்து சிதறியது போல இருந்தது. அவள் கையில் இரத்தம் வழிவது தன் இதயத்தில் இருந்து இரத்தம் கொட்டுவது போல துடித்தான் சிங்கம். ரதியை பிடித்திருந்தவனை கனல் கக்கும் பார்வை பார்த்ததும் அவனுக்குள் கிலி பரவியது. அவன் சிங்கத்தை விட தடிமனாக இருந்தான். ஆனால் சிங்கத்தின் பார்வை சிவனின் நெற்றிக்கண்ணை போல எரிக்கும் நெருப்பு பார்வையில் அவன் பஸ்பமாய் ஆனதை போல உணர்ந்தான் அந்த அடியாள்.
சிங்க வந்த வேகத்தில் ரதியை ஒருகையால் அணைத்துக் கொண்டு அந்த அடியாளின் குறுக்கில் எட்டி உதைத்தான். ஒரு உதையிலேயே துவண்டு போய் விழுந்துவிட்டான்.
“டேய் இவனை கொன்னு வைகை ஆத்துல போடுங்கடா” என்று தன் ஆட்களிடம் சிங்கம் போல கர்ஜித்தவனின் மார்பில் ரதி மயங்கி விழ “ரதிஇஇ” என்று அவளது கன்னத்தை தட்டினான்.
அவளோ “இப்போ என்னை நம்புவியா மாமா” என்றாள் தழுதழுத்த குரலில் கண்ணீருடன் அவளது உதடுகள் அடுத்த வார்த்தை பேச முடியாது தடுமாறியது. தன்னவனின் அன்பிற்குள் வந்துவிட்டோம் என்றும் பாதுகாப்பான் என் மாமன் என்ற நம்பிக்கையில் கண்ணை மூடினாள் ரதி. இருவரும் சண்டை என்ற பெயரில் காதல் செடியை வளர்த்து வந்திருக்கின்றனர்.
அவளது கால்களுக்கு கீழ் இரத்தம் வழிந்து அவன் கைகளில் பிசுபிசுப்பாய் பட “அம்மாஆஆ என்னோட உசிரு” என்று வாய் விட்டு கதறிவிட்டான். துடித்துவிட்டான். தன் உயிர்கூடு நெஞ்சை விட்டு பிரிந்தது போல உணர்ந்து தவித்தவன் "அப்பா ரதிக்கு என்னமோ ஆச்சு" என்று அழுதுக் கொண்டே காருக்கு தூக்கிக் கொண்டு ஓடினான். ஐய்யனாரும் கண்ணனும் மன கலக்கத்துடன் சிங்கத்துடனே காரில் ஏறினார்கள். மயக்கமுற்று மூச்சு மட்டும் வந்துக் கொண்டிருந்த மனைவியை நெஞ்சில் அணைத்துக்கொண்டு “ரதி கண்ணு முழிச்சு பாருடி” என்று அலறிவிட்டான் சிங்கம்.
ஐய்யனாரோ “கடவுளே என் மருமகளை காப்பாத்து” என்று கண்ணீருடன் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தார்.
கோதையோ கண்ணை மூடி உட்கார்ந்திருந்தவர் கண்ணை திறக்கவும் விளக்கு அணைந்து போனது. “அச்சோ கடவுளே என்ன இது சோதனை யாருக்கு என்ன ஆச்சோ தெரியலையே என் அண்ணாவும் சிங்கமமும் பத்திரமா இருக்கணும்!” என்று மீண்டும் விளக்கை ஏறியவருக்கு மனது இங்கே இருக்கவில்லை. வெளியே வந்தவர் காரை கட்சி ஆபிஸுக்கு விட சொன்னார் டிரைவரிடம்.
கோதை அண்ணனையும் மருமகனையும் காப்பாற்ற சொல்லி கடவுளை வேண்டியவர் தன் மகளையும் காப்பாற்று என்று கடவுளிடம் வேண்டி இருந்தால் ரதிக்கும் இந்த பேராபத்து வந்திருக்காது. விதி யாரை விட்டது.
ஆதிபெருமாளை ரதி பக்கம் கூட விடவில்லை ஐய்யனாரின் ஆட்கள். தான் போட்ட சதி வலையில் மகள் சிக்கிவிட்டாளே என்று மனம் குமறி போய் காரில் ஏறினார்.
மீனாட்சி “அச்சோ என் மருமகளை கொலை பண்ண பார்த்திருக்காங்க அண்ணா பாருங்க... இந்த சிங்கம்தான் ரதியை போன் போட்டு வரச்சொல்லியிருப்பான்... என் மருமகளுக்கு எதுவும் ஆகாது வாங்க அண்ணா போகலாம்” என்று சிங்கம் கார் பின்னே சென்றனர்.
பொன்வண்ணனுக்கு விசயம் தெரிந்து ஹாஸ்பிட்டல் வாசலுக்கு ஓடிவந்தான். சிங்கமோ ஹாஸ்பிட்டல் முன்னே காரை நிறுத்தியதும் ரதியை தூக்கிக்கொண்டு ஓடினான். கையிலும் கால் வழியே இரத்தம் வழிவதை கண்ட பொன்வண்ணனுக்கு உயிரே இல்லை. “என்னாச்சு என் தங்கச்சியை என்ன பண்ணின ரவுடி பயலே?” என்று அவன் கதற
“டேய் என் பொண்டாட்டியை காப்பாத்துடா அவளுக்கு கால்வழியே இரத்தம் வருதுடா” என்று வாயில் உமிழ்நீர் வழிய கதறி அழுதான் சிங்கம்.
அடுத்த நொடி பொன்வண்ணன் இரதியை வாங்கிக்கொண்டு எமர்ஜென்சிக்குள் சென்ற நேரம் கௌதமும் கைனகாலஜிஸ்ட் ராஜி டாக்டரும் வந்துவிட்டனர். பொன்வண்ணனுக்கு கைகள் நடுங்கியது. வெளியே நிற்க முடியாமல் எமர்ஜென்சிக்குள் வந்துவிட்ட சிங்கமோ “என்னடா பண்ணுறீங்க இன்னும் என் பொண்டாட்டி கண்ணு முழிக்கல இன்னும் பேசாம படுத்திருக்கா... மூணு டாக்டர் சுத்தி நிற்குறீங்க எதாவது பண்ணி கண்ணு முழிக்க வைங்கடா” என்று அவர்களிடம் சண்டைக்கே சென்றுவிட்டான்.
பொண்வண்ணனோ “போடா வெளியே உன்னை பார்த்தாலே எனக்கு ஆத்திரம் வருது. பொண்டாட்டியை பார்த்துக்க துப்பில்ல அழுது நாடகம் போடுறான்” என வார்த்தைகளில் வதைத்தான் சிங்கம்.
“நீ என்ன வேணாலும் என்னை திட்டுடா என்பொண்டாட்டி எனக்கு வேணும்” என்று கையை கட்டி எமர்ஜன்சிக்குள் நின்றுவிட்டான்.
கௌதமோ “அண்ணே வெளியே இருங்க” என்று அவனை சமாதானம் செய்து அனுப்ப பார்த்தான். சிங்கத்தை அசைக்க கூட முடியவில்லை கௌதமால்.
ராஜியோ ரதிக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பித்திருந்தாள். “பொன்வண்ணன் அபார்ட் ஆகியிருக்கு” என்றார் பதட்டத்துடன் சிங்கம் நிலைகுலைந்து விட்டான். அப்படியே தரையில் கையில் அடித்துக்கொண்டான். “என்னால என் குழந்தையை காப்பாத்த முடியாம போச்சே” என்று முகத்தை பொத்தி அழுதான்.
ரதியின் கை காயம் கொஞ்சம் ஆழமாகத்தான் இருந்தது. மருந்திட்டு கட்டு போட்டு விட்டு இன்ஜக்சன் போட்டுவிட்டார்கள். ரதி இன்னும் மயக்கத்திலேயே இருந்தாள்.
“டேய் கௌதம் ட்ரீட்மெண்ட் முடிஞ்சிருச்சுல்ல ரதி ஏன் டா கண்ணு முழிக்காம இருக்கா?” என்று இரதியின் பக்கம் போய் நின்றவனோ “இரதிமா கண்ணு முழிச்சு பாருடி நான் உன்னை நம்பிட்டேன்டி” என்று அழுது துடித்தான்.
பொன்வண்ணனோ “சும்மா அழுது நடிக்குறான் ரவுடி” பல்லைகடித்து துப்பியவனோ “கௌதம் இவரை வெளியே போய் இருக்கச் சொல்லு இப்படி கத்தி கத்தி என் தங்கச்சியை இன்னும் ரணம் ஆக்கி விடுவார்" என்று ஆதங்கத்தில் சத்தம் போட்டான்.
“போடா நான் எங்கயும் போகமாட்டேன் என் பொண்டாட்டி எழுந்து என்னைத் தேடுவா” என்று சம்மணம் இட்டு உட்கார்ந்துக் கொண்டான்.
தூரிகாவோ கதவை திறந்து வந்தவள் வயிற்றை பிடித்துக்கொண்டாள். அவளுக்கு ரதி இருந்த நிலைகண்டு கைகால்கள் நடுங்கியது.
பொன்வண்ணன் தூரிகாவை பிடிப்பதற்குள் “பாப்பா நீ எங்க இங்க வந்த வெளியே போய் இரு” என்று வேகமாய் எழுந்த சிங்கமோ தூரிகாவை வெளியே கொண்டு நிற்க வைத்தவன் அங்கே அடித்து பிடித்து கண்ணில் கண்ணீருடன் வந்த கோதையை பார்த்தவன் தலையை அசைத்து இதழ் பிதுக்கி அழுதான். எல்லாம் போச்சு என்ற விதமாக.
கட்சி ஆபிஸிற்குச் சென்ற கோதைக்கு ரதி கையில் அடிப்பட்டு விட்டது என்று தெரிய பறந்து வந்திருந்தார்.
“டேய் சிங்கப்பையா என் மகளை கவனிக்காம இருந்திட்டியே” என்று அவன் சட்டையை பிடித்து அவன் கன்னத்தில் அடித்துவிட்டார்.
சிங்கமோ கோதை அடிக்கும் அடிகளை வாங்கிக்கொண்டு மரம் போல நின்றான். அடுத்த நொடி “என் பொண்டாட்டி பக்கம் இருக்கணும்” என்று மீண்டும் எமர்ஜன்சிக்குள் ஓடிவிட்டான்.
கோமதியும் நாச்சியும் வீரய்யனும் விசயம் தெரிந்து பதைபதைப்புடன் ஓடி வர... அங்கே ஆதிபெருமாளும் மீனாட்சியும் வந்து விட்டனர்.
ஐய்யனாரை குற்றவாளியை போல பார்த்தவர் “என்னை பழிவாங்கினது பத்தாதுனு இப்போ என் மருமகள் உயிரையும் குடிக்க பார்க்குறியா ஐய்யனார்” என்று அவர் முன்னே வந்து எகிறினார் நயவஞ்சகி மீனாட்சி. சிங்கம் அங்கே இல்லையென்று ஆட்டம் போட பார்த்தார்.
சத்தம் கேட்டு வெளியே வந்த பொன்வண்ணனோ “அத்தையம்மா இது ஹாஸ்பிட்டலா? சந்தைகடையா? எல்லாரும் வெளியே போங்க” என்று சத்தம் போட்டான் உச்சஸ்தானியில்.
ஆதிபெருமாளோ “வண்ணா என் பொண்ணை நான் பார்க்கணும்” என்று கண்ணீர் விட்டார்.
“ரதி நல்லாயிருக்கா... இன்னும ஒரு மணிநேரத்தில கண்ணு முழிச்சிடுவா அப்புறம் பார்க்கலாம்” என்று அவளுக்கு அபார்ட் ஆன விசயத்தை மறைத்து இருந்தான் பொன்வண்ணன்.
ரதியின் அடிப்பட்ட கையை பார்த்துக்கொண்டிருந்தவனின் பார்வை அவளது அடிவயிற்றிலும் பதிந்தது. அந்த நேரம் “மாமா” என்று முணகினாள் ரதி.
பொன்வண்ணனோ வெளியே நின்றவர்களை சத்தம் போட்டு விட்டு உள்ளே வந்தவன் ரதியின் முணகலை கேட்டு “கொஞ்சம் இந்த பக்கம் வாங்க” என்று சிங்கத்தின் கையை பிடிக்க... அவனோ “போடா” என்று பொன்வண்ணனின் கையை வேகமாக தட்டி விட்டான்.
“மாமா... பாப்பா” என்று முணகியவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. சிங்கத்துக்கு இதயத்தில் இரத்தம் கொட்டியது.
“இப்போவே செக் பண்ணி கன்பார்ம் பண்ணிடலாம் அம்மாச்சி” என சந்தோஷத்தோடு பிரக்னன்சி கிட்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். சிங்கத்துக்கும் தனக்கும் இருந்த ஊடலில் பீரியட்ஸ் ஆகாததையே மறந்து விட்டாள் ரதி. யூரின் டெஸ்ட் பண்ணியதில் இரண்டு சிவப்பு கோடுகளை பார்த்ததும் அவளுக்கு கைகள் நடுங்கியது ஆனந்தத்தில் இப்போதே சிங்கத்திடம் சொல்லிவிட வேண்டுமென்று துடித்தாள்.
பெரியவர்கள் தான் சொல்லும் நல்ல செய்திக்காக வெளியே காத்து கிடப்பார்கள் என வெளியே வந்தவள் "அம்மாச்சி நீங்க கொள்ளு பாட்டி ஆகிட்டீங்க... அத்தை நீங்க பாட்டி ஆகிட்டீங்க" என்றாள் வெட்கப்பட்டு முகத்தை பொத்திக் கொண்டாள்.
“ஆத்தி ஆத்தி இதுக்குதானே நான் தவம் கிடந்தேன்... என் கொள்ளு பேரனையோ பேத்தியையோ பார்க்கத்தானே இந்த கெழட்டு கட்டை இருக்கேன்” என்று பூரிப்புடனும் சந்தோத்துடனும் ரதியை கட்டிக்கொண்டார் நாச்சி.
கோமதியோ சமையல்கட்டுக்கு ஓடிச்சென்று சர்க்கரையை எடுத்துவந்து ரதியின் வாயில் ஊட்டிவிட்டு “சந்தோசமா இருக்குமா” என்று மருமகளின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
“அம்மாச்சி உங்க பேரன்கிட்ட நான் மாசமா இருக்க விசயத்தை நான் தான் முதல் சொல்லுவேன்... நீங்க அவசரப்பட்டு சொல்லிடாதீங்க, அத்தை நீங்களும்தான்” என்று கண்ணை உருட்டி விரல் நீட்டி இருவரையும் செல்லமாக மிரட்டினாள் ரதி.
“நாங்க சொல்லமாட்டோம் தாயி!” என்றனர் இருவரும் கோரசாக.
வாக்கு எண்ணிக்கை நடந்துக் கொண்டிருந்தது. ஆதிபெருமாளோ மீனாட்சியை "கட்சி ஆபிஸ்க்கு நீ வரவேணாம் தங்கச்சி... இந்த முறை நாம ஜெயிக்க மாட்டோம்! நீ அங்க வந்தீனா உன்னை உதாசீனமா பார்ப்பாங்க ஐய்யனாரும் சிங்கமும்... நீ வீட்லயே இரு நான் மாணிக்கத்தை கூட்டிட்டு போறேன். ஐய்யனாரை போட்டுத்தள்ளிட்டு நான் அவன் இடத்துல உட்காரப்போறேன் மீனாட்சி” என பதவி வெறி பிடித்து ஆங்காரம் பிடித்தது போல பேசினார்.
“நானும் வரேன் அண்ணா!! அவனை என் கையால போட்டுத்தள்ளணும்” என்று கண்ணில் கொலை வெறியோடு புறப்பட்டார் மீனாட்சி.
கோதையோ ‘இன்னிக்கு எலக்சன் ரிசல்ட் இந்த கடன்காரி வேற என் புருசன் கூட போறாளே! இவ என்ன பண்ண வேணாலும் தயங்க மாட்டா’ என்று அச்சம் கொண்டவர் ஆதிபெருமாளின் கார் புறப்பட்டதும் பொன்வண்ணனுக்கு போன் போட்டார் அவனோ ஒரு சர்ஜரியில் இருக்க போனை எடுக்கவில்லை. சிங்கத்திற்கு போன் அடித்துவிட்டார். சிங்கமோ ஐய்யனார் பக்கம் கருப்பண்ண சாமி போல பாதுகாப்பாய் கையை கட்டிக்கொண்டு கூட்டத்தில் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். போனை எடுத்தவன் போனை ஆன் செய்து பேசாமல் காதில் வைத்திருந்தான்.
“சிங்கப் பையா உன்கிட்ட அவசரமா பேசணும்... நான் பேசறதை காதுக்கொடுத்து மட்டும் கேளு” என்று அவசரமாகவும் பதட்டத்துடனே பேசவும் “டேய் முருகா எதுக்குடா இவ்ளோ பதட்டப்படுற... பொறுத்து பேசு... நான் காது கொடுத்து கேட்குறேன்” என்றான் நிதானமாகத்தான். கோதை என்ன சொல்ல வருகிறார் என்பது அவனுக்கு தெரிந்த விசயமே.
"ரதி அப்பாவும், மீனாட்சியும் ரொம்ப நேரமா கட்சி விசயம் பேசிக்கிட்டு இருந்தாங்க சிங்கம்... அவங்க யாரையோ போட்டுத்தள்ளணும்னு சொல்றாங்கப்பா எனக்கு படபடனு வருது நீதான் நம்ம குடும்பத்து ஆளுங்களை பார்த்துக்கிடணும்... என் மனசுக்குள்ள ஏதோ அசம்பாவிதம் நடந்திடும்னு தோணுதுப்பா” என்றார் அங்கலாய்ப்புடன் நெஞ்சை பிடித்துக்கொண்டு.
“டேய் முருகா சிங்கம் எல்லாரையும் பார்த்துப்பான் கவலைப்படாம சோபாவுல உட்கார்ந்து டிவியில சீரியல் பார்க்கச் சொல்லுடா” என்று நக்கல் தொனியுடன் சொல்லி விட்டு சட்டை காலரை தூக்கி விட்டு போனை வைத்துவிட்டான்.
முருகனோ வழக்கம்போல அண்ணன் என்னமோ பேசுறாரு எனக்கு புரியலை என்று குழம்பிக்கொண்டு நின்றான்.
அதற்குள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஐய்யனார் வெற்றி பெற்றார் என்று டிவியில் அறிவிப்பு கொடுத்துவிட்டனர்.
தோற்று போன அவமானத்தில் முகம் கன்றி இருந்த ஆதிபெருமாளோ மாணிக்கத்திற்கு போன் போட்டு “எங்கடா இருக்க?” என்று ஆத்திரத்தில் முழக்கமிட்டார்.
“அ.அது மாமா உள்ளூர் ஆளுங்க ஐய்யனாரை போட்டுதள்ள வரமாட்டேனு சொல்லிபுட்டானுங்க... அசலூர்ல இருந்து ஆளுங்களை பிடித்து அழைச்சிட்டு வர தாமதம் ஆகிடுச்சு... இதோ கூட்டத்தோடு கூட்டமா சிங்கம் ஆளுங்களோட கலந்துட்டானுங்க நம்ம ஆளுங்க இன்னும் கொஞ்ச நேரத்துல ஐய்யனாரை போட்டிருவாங்க நீங்கதான் இந்த தொகுதிக்கு கிங்” என்றான் எக்காளச் சிரிப்புடன்.
“வாய்ஜாலம் காட்டாதேடா! என்கிட்ட கத்தையா வாங்கிய பணத்துக்கு ஒழுங்கா வேலையை முடி” என்று பல்லைக்கடித்தார் ஆதிபெருமாள்.
“எல்லாம் கச்சிதமா நடக்கும் நான் வரேன்” என்று மாணிக்கமும் கூட்டத்தில் கலந்தான்.
ஐய்யனார் சிங்கத்துடன் சிரித்து பேசுவதை கண்ட மீனாட்சியோ “அண்ணா ஐய்யனாரையும் அவன் பெத்த சிங்கத்தை பார்க்கும்போது வயிறு எரியுது... அவனை என் கையால கொல்லணும்” என்று அவர் கத்தியை எடுத்துக் கொண்டு காரை விட்டு இறங்கப்போனவரின் கையை பிடித்து தடுத்த ஆதிபெருமாளோ “மீனா உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா... சிங்கம் இருக்கான் அவன் பக்கத்துல கூட உன்னால போகமுடியாது பொறுத்திரு” என்று கொதித்துக்கொண்டிருந்த மீனாட்சியை அடக்கி வைத்தார் ஆதிபெருமாள்.
மாணிக்கம் கூட்டத்தில் மறைந்து மறைந்து சென்றதை பார்த்துவிட்டான் சிங்கம். நொடிக்கொருமுறை கூட்டத்தை சுற்றி தன் கழுகு பார்வையால் நோட்டமிட்டுக்கொண்டுதானே இருக்கிறான். “வாடா மாணிக்கம் உன் கதையை இன்னிக்கே முடிச்சு வச்சிடறேன்” என்று இதழ் வளைத்து சிரித்தான் சிங்கம்.
கோதைக்கோ இதயதுடிப்பு எகிறியது பூஜையறைக்கு ஓடிச்சென்று கையை கூப்பி “கடவுளே என் அண்ணாவுக்கும் சிங்கப்பயலுக்கும் எந்த ஒரு ஆபத்தும் வந்துடக்கூடாது” என்று மனதுருகி கண்ணீருடன் கடவுளை நிந்தனை செய்தார்.
ரதிக்கோ மனதிற்குள் ஏதோ உழன்றுக் கொண்டே இருந்தது... உயிரை காப்பாற்றுகின்ற மருத்துவராச்சே அவள்... சிங்கத்துக்கு போன் போட்டாள். கூட்டத்தில் போன் அடித்த சத்தமும் கேட்கவில்லை சிங்கத்துக்கு... நாம கட்சி ஆபிஸ் போயிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தவள் வெளியே வாசலுக்கு வந்தாள். நாச்சியும் கோமதியும் தோட்டத்திற்குச் சென்றிருந்தனர்.
காரை துடைத்துக்கொண்டிருந்த டிரைவரிடம் “அண்ணா அவசரமா கட்சி ஆபிஸ் போகணும் காரை எடுங்க” என்று காரில் ஏறிவிட்டாள்.
“பாப்பா நம்ம குடும்பத்து பொண்ணுங்க கட்சி ஆபிஸ்க்கு போறது சிங்கம் தம்பிக்கு பிடிக்காது... ஐய்யனார் அய்யாவும் கோபப்படுவாரு வேணாம்” என்று அழைத்து போக மறுத்துவிட்டார் டிரைவர்.
“அண்ணா ப்ளீஸ் காரை எடுங்க நான் மாமாகிட்ட பேசிக்கிறேன்” என்று அவள் கோபமாக கத்திவிட்டாள். வேறுவழியில்லாம் காரை கட்சி ஆபிஸிற்கு விட்டார்.
ரதிக்கோ போகும்வழியெல்லாம் யாருக்கும் எதுவும் ஆகிடக்கூடாது என்ற பதட்டத்துடனே இருந்தாள். ரதி எமோஷ்னல் ஆகாத வயித்துல இருக்கும் கருவுக்கு பாதிப்பு வரும் என்று அவளாக அவளை நிதானப்படுத்திக்கொண்டாள்.
கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள். ஐய்யனாருக்கு மாலை போட்டு மரியாதை செய்து பூக்களை தூவினார்கள். “டேய் சிங்கம் அண்ணாவுக்கும் மாலையை போடுங்க” என்று கோரசாக சிரிப்பொலியுடன் சிங்கத்திற்கும் மாலையை போட்டுவிட்டனர்.
சிங்கம் பக்கம் நின்றிருந்த கண்ணனோ “மாப்பிள்ளை கூட்டத்துல ஏதோ கருப்பு ஆடு கலந்திருக்கு என்னனு பார்த்து அடிச்சு போடு நான் அப்பாவை கட்சி ஆபிஸ்க்குள்ள அழைச்சிட்டு போறேன்” என்று ஐய்யனாரின் கையை பிடித்தார் கண்ணன்.
ரதியோ கூட்டத்துக்குள் முட்டி மோதி ஐய்யனாரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாள்.
மீனாட்சி ரதி கூட்டத்தில் நுழைவதை கண்டு “அண்ணே நம்ம ரதி கூட்டத்துக்குள்ள போறா... இவ ஏன் இந்த நேரம் அங்க..." அவளுக்கு ஏதாச்சும் ஆகிடுமோ என்று பதட்டப்படவில்லை... 'இப்போ போட்டிருக்கும் ப்ளானில் ஐய்யனார் தப்பித்து விட்டால் இவளை வைத்துதானே அடுத்த ப்ளான் போட முடியும்... எல்லாத்தையும் சொதப்பிட்டா இந்த ரதி’ என்று தலையில் கையை வைத்தார்.
ஆதிபெருமாளோ "என்னது ரதி கூட்டத்துக்குள்ள போறாளா?" என்று அங்கலாய்த்தவர் “இருமா இப்பவே மாணிக்கத்துக்கு போன் போட்டு கூட்டத்தை விட்டு வெளியே வரச்சொல்லுறேன்” என்று அவர் மகள் மேல் இருக்கும் பாசத்தில் மாணிக்கத்திற்கு போன் போட்டார் அவரசமாக... அவன் போன் எடுக்கவில்லை.
“இந்த பொண்ணு ஏன் அங்க போகணும்?” என்று சலித்துக்கொண்டவருக்கு மனதே ஏற்கவில்லை காரை விட்டு இறங்கி கூட்டத்திற்குச் சென்றார் ஆதிபெருமாள்.
'இந்த அண்ணா என்னை இறங்க வேணாம்னு சொல்லிவிட்டு இப்போ இவர் போறாரே! ம்ம் எப்படியோ போகட்டும்' என்று சுயநலமாக யோசித்த மீனாட்சியோ காருக்குள்ளேயே உட்கார்ந்து நடப்பதை வேடிக்கை பார்த்தார்.
அந்த நேரம் “ஏய்” என்று ஐய்யானாரை ஒருவன் கத்தியால் வெட்டபோக... சிங்கம் பாய்ந்து அவனின் கையை வெட்டிவிட்டான். அவனை மட்டுமல்ல கூட்டத்தில் நுழைந்த கருப்பு ஆடுகளை அடித்து துவம்சம் செய்து அவர்களை நடக்க கூட முடியாமல் செய்துவிட்டான். ஐய்யனாருக்கும் கண்ணனுக்கும் சிறு சிறு காயங்கள் படத்தான் செய்தது.
ஐய்யனார் பக்கம் ஒருத்தரை கூட விடவில்லை சிங்கம் எகிறி வந்தவர்களை அடித்து சாய்த்தான்... ரதியோ ஐய்யனார் பாதுகாப்பாக நின்றதை பார்த்தவள் நிம்மதியாக மூச்சு விட சிங்கத்தின் முதுகில் கத்தியை குத்த போக ஐய்யனாரோ “சிங்கம் பின்னால பாரு” என்று அவர் சத்தம் போட அவனும் முன்னால் இருந்தவனை அடித்து போட்டு பின்னால் திரும்ப “மாமாவை குத்திடாதே” என்று கத்தி கொண்டு மாணிக்கத்தின் ஆளின் கையில் இருந்த கத்தியை பிடித்துக்கொண்டிருந்தாள். கத்தியின் கூர்மை அவளது பிஞ்சுக் கையிலிருந்து ரத்தம் கொட்ட செய்தது. கையில் மட்டும் இல்லை... அவளது கால்கள் வழியாகவும் இரத்தம் கொட்டியது. அவளுக்கே தனக்குள் எனன் நடக்கிறது என்று தெரியவில்லை... சிங்கத்தை காப்பாற்றுவதில் மட்டுமே அவளது கவனம் இருந்தது.
ரதியின் கையில் இரத்தம் வழிந்ததை கண்டு “ரதிஇஇஇ கத்தியை விடுடி” என்று உச்சஸ்தானியிலிருந்து முழக்கமிட்டவனுக்கு இதயம் வெடித்து சிதறியது போல இருந்தது. அவள் கையில் இரத்தம் வழிவது தன் இதயத்தில் இருந்து இரத்தம் கொட்டுவது போல துடித்தான் சிங்கம். ரதியை பிடித்திருந்தவனை கனல் கக்கும் பார்வை பார்த்ததும் அவனுக்குள் கிலி பரவியது. அவன் சிங்கத்தை விட தடிமனாக இருந்தான். ஆனால் சிங்கத்தின் பார்வை சிவனின் நெற்றிக்கண்ணை போல எரிக்கும் நெருப்பு பார்வையில் அவன் பஸ்பமாய் ஆனதை போல உணர்ந்தான் அந்த அடியாள்.
சிங்க வந்த வேகத்தில் ரதியை ஒருகையால் அணைத்துக் கொண்டு அந்த அடியாளின் குறுக்கில் எட்டி உதைத்தான். ஒரு உதையிலேயே துவண்டு போய் விழுந்துவிட்டான்.
“டேய் இவனை கொன்னு வைகை ஆத்துல போடுங்கடா” என்று தன் ஆட்களிடம் சிங்கம் போல கர்ஜித்தவனின் மார்பில் ரதி மயங்கி விழ “ரதிஇஇ” என்று அவளது கன்னத்தை தட்டினான்.
அவளோ “இப்போ என்னை நம்புவியா மாமா” என்றாள் தழுதழுத்த குரலில் கண்ணீருடன் அவளது உதடுகள் அடுத்த வார்த்தை பேச முடியாது தடுமாறியது. தன்னவனின் அன்பிற்குள் வந்துவிட்டோம் என்றும் பாதுகாப்பான் என் மாமன் என்ற நம்பிக்கையில் கண்ணை மூடினாள் ரதி. இருவரும் சண்டை என்ற பெயரில் காதல் செடியை வளர்த்து வந்திருக்கின்றனர்.
அவளது கால்களுக்கு கீழ் இரத்தம் வழிந்து அவன் கைகளில் பிசுபிசுப்பாய் பட “அம்மாஆஆ என்னோட உசிரு” என்று வாய் விட்டு கதறிவிட்டான். துடித்துவிட்டான். தன் உயிர்கூடு நெஞ்சை விட்டு பிரிந்தது போல உணர்ந்து தவித்தவன் "அப்பா ரதிக்கு என்னமோ ஆச்சு" என்று அழுதுக் கொண்டே காருக்கு தூக்கிக் கொண்டு ஓடினான். ஐய்யனாரும் கண்ணனும் மன கலக்கத்துடன் சிங்கத்துடனே காரில் ஏறினார்கள். மயக்கமுற்று மூச்சு மட்டும் வந்துக் கொண்டிருந்த மனைவியை நெஞ்சில் அணைத்துக்கொண்டு “ரதி கண்ணு முழிச்சு பாருடி” என்று அலறிவிட்டான் சிங்கம்.
ஐய்யனாரோ “கடவுளே என் மருமகளை காப்பாத்து” என்று கண்ணீருடன் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தார்.
கோதையோ கண்ணை மூடி உட்கார்ந்திருந்தவர் கண்ணை திறக்கவும் விளக்கு அணைந்து போனது. “அச்சோ கடவுளே என்ன இது சோதனை யாருக்கு என்ன ஆச்சோ தெரியலையே என் அண்ணாவும் சிங்கமமும் பத்திரமா இருக்கணும்!” என்று மீண்டும் விளக்கை ஏறியவருக்கு மனது இங்கே இருக்கவில்லை. வெளியே வந்தவர் காரை கட்சி ஆபிஸுக்கு விட சொன்னார் டிரைவரிடம்.
கோதை அண்ணனையும் மருமகனையும் காப்பாற்ற சொல்லி கடவுளை வேண்டியவர் தன் மகளையும் காப்பாற்று என்று கடவுளிடம் வேண்டி இருந்தால் ரதிக்கும் இந்த பேராபத்து வந்திருக்காது. விதி யாரை விட்டது.
ஆதிபெருமாளை ரதி பக்கம் கூட விடவில்லை ஐய்யனாரின் ஆட்கள். தான் போட்ட சதி வலையில் மகள் சிக்கிவிட்டாளே என்று மனம் குமறி போய் காரில் ஏறினார்.
மீனாட்சி “அச்சோ என் மருமகளை கொலை பண்ண பார்த்திருக்காங்க அண்ணா பாருங்க... இந்த சிங்கம்தான் ரதியை போன் போட்டு வரச்சொல்லியிருப்பான்... என் மருமகளுக்கு எதுவும் ஆகாது வாங்க அண்ணா போகலாம்” என்று சிங்கம் கார் பின்னே சென்றனர்.
பொன்வண்ணனுக்கு விசயம் தெரிந்து ஹாஸ்பிட்டல் வாசலுக்கு ஓடிவந்தான். சிங்கமோ ஹாஸ்பிட்டல் முன்னே காரை நிறுத்தியதும் ரதியை தூக்கிக்கொண்டு ஓடினான். கையிலும் கால் வழியே இரத்தம் வழிவதை கண்ட பொன்வண்ணனுக்கு உயிரே இல்லை. “என்னாச்சு என் தங்கச்சியை என்ன பண்ணின ரவுடி பயலே?” என்று அவன் கதற
“டேய் என் பொண்டாட்டியை காப்பாத்துடா அவளுக்கு கால்வழியே இரத்தம் வருதுடா” என்று வாயில் உமிழ்நீர் வழிய கதறி அழுதான் சிங்கம்.
அடுத்த நொடி பொன்வண்ணன் இரதியை வாங்கிக்கொண்டு எமர்ஜென்சிக்குள் சென்ற நேரம் கௌதமும் கைனகாலஜிஸ்ட் ராஜி டாக்டரும் வந்துவிட்டனர். பொன்வண்ணனுக்கு கைகள் நடுங்கியது. வெளியே நிற்க முடியாமல் எமர்ஜென்சிக்குள் வந்துவிட்ட சிங்கமோ “என்னடா பண்ணுறீங்க இன்னும் என் பொண்டாட்டி கண்ணு முழிக்கல இன்னும் பேசாம படுத்திருக்கா... மூணு டாக்டர் சுத்தி நிற்குறீங்க எதாவது பண்ணி கண்ணு முழிக்க வைங்கடா” என்று அவர்களிடம் சண்டைக்கே சென்றுவிட்டான்.
பொண்வண்ணனோ “போடா வெளியே உன்னை பார்த்தாலே எனக்கு ஆத்திரம் வருது. பொண்டாட்டியை பார்த்துக்க துப்பில்ல அழுது நாடகம் போடுறான்” என வார்த்தைகளில் வதைத்தான் சிங்கம்.
“நீ என்ன வேணாலும் என்னை திட்டுடா என்பொண்டாட்டி எனக்கு வேணும்” என்று கையை கட்டி எமர்ஜன்சிக்குள் நின்றுவிட்டான்.
கௌதமோ “அண்ணே வெளியே இருங்க” என்று அவனை சமாதானம் செய்து அனுப்ப பார்த்தான். சிங்கத்தை அசைக்க கூட முடியவில்லை கௌதமால்.
ராஜியோ ரதிக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பித்திருந்தாள். “பொன்வண்ணன் அபார்ட் ஆகியிருக்கு” என்றார் பதட்டத்துடன் சிங்கம் நிலைகுலைந்து விட்டான். அப்படியே தரையில் கையில் அடித்துக்கொண்டான். “என்னால என் குழந்தையை காப்பாத்த முடியாம போச்சே” என்று முகத்தை பொத்தி அழுதான்.
ரதியின் கை காயம் கொஞ்சம் ஆழமாகத்தான் இருந்தது. மருந்திட்டு கட்டு போட்டு விட்டு இன்ஜக்சன் போட்டுவிட்டார்கள். ரதி இன்னும் மயக்கத்திலேயே இருந்தாள்.
“டேய் கௌதம் ட்ரீட்மெண்ட் முடிஞ்சிருச்சுல்ல ரதி ஏன் டா கண்ணு முழிக்காம இருக்கா?” என்று இரதியின் பக்கம் போய் நின்றவனோ “இரதிமா கண்ணு முழிச்சு பாருடி நான் உன்னை நம்பிட்டேன்டி” என்று அழுது துடித்தான்.
பொன்வண்ணனோ “சும்மா அழுது நடிக்குறான் ரவுடி” பல்லைகடித்து துப்பியவனோ “கௌதம் இவரை வெளியே போய் இருக்கச் சொல்லு இப்படி கத்தி கத்தி என் தங்கச்சியை இன்னும் ரணம் ஆக்கி விடுவார்" என்று ஆதங்கத்தில் சத்தம் போட்டான்.
“போடா நான் எங்கயும் போகமாட்டேன் என் பொண்டாட்டி எழுந்து என்னைத் தேடுவா” என்று சம்மணம் இட்டு உட்கார்ந்துக் கொண்டான்.
தூரிகாவோ கதவை திறந்து வந்தவள் வயிற்றை பிடித்துக்கொண்டாள். அவளுக்கு ரதி இருந்த நிலைகண்டு கைகால்கள் நடுங்கியது.
பொன்வண்ணன் தூரிகாவை பிடிப்பதற்குள் “பாப்பா நீ எங்க இங்க வந்த வெளியே போய் இரு” என்று வேகமாய் எழுந்த சிங்கமோ தூரிகாவை வெளியே கொண்டு நிற்க வைத்தவன் அங்கே அடித்து பிடித்து கண்ணில் கண்ணீருடன் வந்த கோதையை பார்த்தவன் தலையை அசைத்து இதழ் பிதுக்கி அழுதான். எல்லாம் போச்சு என்ற விதமாக.
கட்சி ஆபிஸிற்குச் சென்ற கோதைக்கு ரதி கையில் அடிப்பட்டு விட்டது என்று தெரிய பறந்து வந்திருந்தார்.
“டேய் சிங்கப்பையா என் மகளை கவனிக்காம இருந்திட்டியே” என்று அவன் சட்டையை பிடித்து அவன் கன்னத்தில் அடித்துவிட்டார்.
சிங்கமோ கோதை அடிக்கும் அடிகளை வாங்கிக்கொண்டு மரம் போல நின்றான். அடுத்த நொடி “என் பொண்டாட்டி பக்கம் இருக்கணும்” என்று மீண்டும் எமர்ஜன்சிக்குள் ஓடிவிட்டான்.
கோமதியும் நாச்சியும் வீரய்யனும் விசயம் தெரிந்து பதைபதைப்புடன் ஓடி வர... அங்கே ஆதிபெருமாளும் மீனாட்சியும் வந்து விட்டனர்.
ஐய்யனாரை குற்றவாளியை போல பார்த்தவர் “என்னை பழிவாங்கினது பத்தாதுனு இப்போ என் மருமகள் உயிரையும் குடிக்க பார்க்குறியா ஐய்யனார்” என்று அவர் முன்னே வந்து எகிறினார் நயவஞ்சகி மீனாட்சி. சிங்கம் அங்கே இல்லையென்று ஆட்டம் போட பார்த்தார்.
சத்தம் கேட்டு வெளியே வந்த பொன்வண்ணனோ “அத்தையம்மா இது ஹாஸ்பிட்டலா? சந்தைகடையா? எல்லாரும் வெளியே போங்க” என்று சத்தம் போட்டான் உச்சஸ்தானியில்.
ஆதிபெருமாளோ “வண்ணா என் பொண்ணை நான் பார்க்கணும்” என்று கண்ணீர் விட்டார்.
“ரதி நல்லாயிருக்கா... இன்னும ஒரு மணிநேரத்தில கண்ணு முழிச்சிடுவா அப்புறம் பார்க்கலாம்” என்று அவளுக்கு அபார்ட் ஆன விசயத்தை மறைத்து இருந்தான் பொன்வண்ணன்.
ரதியின் அடிப்பட்ட கையை பார்த்துக்கொண்டிருந்தவனின் பார்வை அவளது அடிவயிற்றிலும் பதிந்தது. அந்த நேரம் “மாமா” என்று முணகினாள் ரதி.
பொன்வண்ணனோ வெளியே நின்றவர்களை சத்தம் போட்டு விட்டு உள்ளே வந்தவன் ரதியின் முணகலை கேட்டு “கொஞ்சம் இந்த பக்கம் வாங்க” என்று சிங்கத்தின் கையை பிடிக்க... அவனோ “போடா” என்று பொன்வண்ணனின் கையை வேகமாக தட்டி விட்டான்.
“மாமா... பாப்பா” என்று முணகியவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. சிங்கத்துக்கு இதயத்தில் இரத்தம் கொட்டியது.