அத்தியாயம் - 15
வருணிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி வரும் என்பதையே எதிர்பார்க்காத பெண்ணவள் அதிர்ந்து காதுகளை மூடி கொண்டு கத்தினாள். இவனின் அன்னை இப்படி கேட்டபோதே அவளால் தாங்க முடியவில்லை. இதில் இவளின் உயிரானவனும் அக்கேள்வியையே கேட்டால் இவளின் நிலை தான் என்ன.?
"இப்படி எல்லாம் பேசாத வருண்.. என்னால தாங்க முடியல.. என் மேல நம்பிக்கையும் இல்லாம போய்ருச்சா.? இப்படியொரு கேள்வி உன்கிட்ட இருந்து வரும்னு நான் நினைக்கவே இல்லை" என்றாள் தேம்பலுடன்.
ஆனால் அவனோ"உண்மையை பேசறதுல என்ன தப்பு.? நான் இல்லாத சமயம் எவன் எவனோ இங்க வந்துட்டு போறப்ப இது என் குழந்தையானு கேட்டதுல மட்டும் ரொம்ப வலிக்குதோ.?" என்று அவளின் கற்பையே சந்தேகப்பட்டான்.
இப்படி இவன் கேட்க காரணமே லீலாவை பற்றி இவன் அறிந்திட வேலைக்காரர் ஒருவரிடம் அடிக்கடி பேசுவான். இதையறிந்து சுசிலாவும் அவனின் முன்பு அடங்கி தான் இருப்பார். அவர் தான் யாருமில்லாத நேரத்தில் லீலாவின் அறைக்கு ஒருவன் வந்து விட்டு செல்கிறான் என்று கூறியது.
வந்தது ராம்பிரபு என்று அவர் அறியவில்லை. ராம் பிரபு தான் வீட்டில் இருப்பதே இல்லையே.? இப்போதும் யாருமறியாமல் வந்து விட்டு சென்று விட்டானே.? இதில் இவரின் தவறும் இல்லை. அவர் பார்த்ததை தான் வருணிடம் கூறி இருக்கிறார்.
வருணாவது பொறுமையாக லீலாவிடம் விசாரித்திருக்கலாம். ஆனால் அவனோ அன்னை சொல்வது அனைத்தும் உண்மையாக இருக்கிறதே என்ற கோவத்தில் கண்டதையும் பேசி விட்டான்.
இதில் ஆவேசமடைந்தவள் "வந்தது உன் தம்பி தான்.. அவனை பேச..." என்று உண்மையை கூற முயன்றவளின் கன்னம் பழுத்தது.
லீலாவை அருவெறுப்புடன் பார்த்து "ஏய் என் தம்பியை பத்தி பேசுன நான் மனுசனா இருக்க மாட்டேன்.. அவன் மோசமானவன் தான்.. அதற்காக அண்ணனோட மனைவியை தப்பா பார்க்கறவன் இல்லை.. என் குடும்பமே உன்னைய வேணாம் வேணாம்னு சொல்லுச்சு..
அதைய நான் கேட்காம விட்டதுக்கு இப்ப அனுபவிக்கறேன்.. பேசாம மாயாவையே கல்யாணம் பண்ணிருக்கலாம்.. அவ என்னைய லவ் பண்றானு தெரிஞ்சும் உன்னைய கல்யாணம் பண்ணுனது என் தப்புத் தான்.. அதுக்கு தான் இப்ப நான் அனுபவிக்கறேன் போல" என்று வார்த்தைகளை கடுமையாக வெளி விட்டிருந்தான் வருண்.
படத்தில் மட்டும் தான் இவன் நல்லவன் போலும். நிஜ வாழ்க்கையில் அரக்கரை விட மோசமானவனாக இருக்கிறானே.. இவனை நம்பி வந்தது என் தவறு தான்.. அதுவும் இவனின் மேல் வைத்திருக்கும் காதலுக்காக இங்கு இருப்பதும் அதை விட தவறு தான்.
இவன் இல்லையென்றால் என்னால் வாழ முடியாதா என்ன.? என் குழந்தைக்காக இவனின் முன்பே வாழ்ந்து காட்டுவேன்.. அதற்கு முன்பு இங்கிருந்து இவனின் அன்னையின் குணத்தையும் தம்பியின் குணத்தையும் இவனிடம் வெளிக்காட்டி விட்டு தான் செல்வேன் என்ற தீர்மானம் அவளுள்.!
அதன் பின் அவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவனும் கண்டு கொள்ளவில்லை. ஆடவனின் பாராமுகம் இவளை வருத்தியது. தனியாக இருந்த போது எப்படி எல்லாம் தன்னை தாங்கினான் என்று நினைத்ததில் அழுகையும் வலுக்கட்டாயமாக வந்து விட, அதை அவன் அறியாவண்ணம் உள்ளிழுத்து கொண்டாள்.
நாட்களும் நகர்ந்தது. வருணின் மனதினுள் 'நான் இவ்வளவு பேசியும் அவள் இங்கேயே இருக்கிறாளே.? நம்ப முடியவில்லையே.?' என்ற யோசனை தான் விடாமல் ஓடிக் கொண்டிருந்தது. பெண்ணவள் இவனை கண்டு கொள்ளவில்லை. அவளுண்டு அவள் வேலையுண்டு என்றிருந்தாள்.
வருண் வீட்டில் இருப்பதால் சுசிலாவும் அடக்கியே வாசித்தார். ராம்பிரபுவும் வீட்டிற்கு வந்த மாதிரி தெரியவில்லை. லீலாவிற்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. வருணை விட்டு விடும் எண்ணமெல்லாம் அவளிடம் இல்லை. ஏதோ ஒரு தவறான புரிதலில் தான் இவர் இப்படி பேசிக் கொண்டு இருக்கிறார். நடப்பதை புரிந்து கொண்டு விட்டால் தன்னை தங்கத்தட்டில் வைத்தும் தாங்குவார் என்று அலாதி நம்பிக்கை.
படத்தின் வெற்றி விழாவுக்கு வருண் சென்றாக வேண்டிய கட்டாயம். அதை மறைமுகமாக மனைவியிடமும் உரைத்து விட்டு கிளம்பி இருந்தான். இப்படி அவன் சென்றால் வருவதற்கு எப்படியும் இரண்டு நாட்களாகி விடும் என்பது லீலாவும் அறிந்தது. இவர்களுடன் இருப்பதை நினைத்து பயந்து பேசாமல் தன் வீட்டிற்கு சென்று விடலாமா.? என்று நினைத்தாள். அதுவும் நல்லது தான் என்ற முடிவில் கிளம்ப ஆயத்தமானாள்.
சுசிலாவும் சுபவர்ஷினியும் ஏதோ விஷேசம் என்று வருண் செல்வதற்கு முன்பே கிளம்பி இருக்க, இப்போது லீலா மட்டும் தான் வீட்டில்.! மற்றவர்கள் வரும் முன்பே கிளம்பி சென்று விட வேண்டும் என்ற எண்ணம். அந்த அவசரத்தில் அவளின் பிரத்தியேக கார் டிரைவருக்கு அழைத்து சொல்லவும் மறந்திருந்தாள்.
இச்சமயம் சத்தம் வராதவாறு அவளின் பின்னே வந்து நின்ற ராம்பிரபுக்கு அவளின் மீது அவ்வளவு போதை. நினைத்தால் அடைந்து விட வேண்டும் என்று கொள்கை வேறு அவனிடம்.
பின்னால் நிற்பவனை உணாரமல் திரும்பிய லீலா அவனை பார்த்ததும் வெலவெலத்து போய் ஓரடி பின்னே நகர்ந்து நெஞ்சில் கை வைத்துக் கொள்ள, "செல்லம் மாமா வந்துருக்கேன்டி.. இப்படி பயந்தா நின்னா என்ன அர்த்தம்.? வா வா என் பக்கத்துல வா" என்று அவளை தொட போனான்.
சட்டென்று விலகி நின்று "முதல்ல வெளில போ.. இல்லனா எனக்கு கெட்ட கோவம் வரும்.. த்து பொறுக்கி" என்று அவனை சாட, "ஏய் என்னடி ரொம்ப தான் துள்ளற.? என் அண்ணனை கல்யாணம் பண்ணிட்டு எவன் எவன் கூடவோ படுத்து தானே இந்த புள்ளை வந்துருக்கு.? அப்பறம் என்ன பெரிய பத்தினி மாதிரி.?" என்று அவளின் முடியை பிடித்து இழுத்தான்.
உயிர் போகும் வலி. அதை விட அவளின் குழந்தை வேறு வயிற்றில். இந்த மிருகத்திடம் உன் குழந்தையும் சிக்கி விடுமோ.? என்று தான் பயந்தாள். அவளால் முடிந்த வரைக்கும் அவனிடம் இருந்து விடுபட போராடினாள். அவளின் பயமே அவளின் பலத்தை வெளிவர தடுத்தது. அவளால் முடியவில்லை.
'கடவுளே ஏன் இந்த நிலைமை.?' என்று புலம்பி கண்ணீர் வடித்த சமயம் சரியாக ராம் பிரபுவின் தலையை பூச்சாடி ஒன்று பதம் பார்த்தது. அதில் அவன் பயந்து விலகிட, பத்ரகாளியாக நின்றிருந்தாள் மாயா.
அவளை கண்டதும் "அக்கா" என்று ஓடி போய் அணைத்துக் கொண்டு "இங்கிருந்து போய்ரலாம்க்கா.. என்னைய கூட்டிட்டு போங்க.. ப்ளீஸ்.. இங்கிருந்து போய்ரலாம்" என்று அச்சத்தில் நடுங்கியவளை தான் முதலில் பார்க்க வேண்டும் என்பதற்காக "என் கைல ஒரு நாள் வசமா மாட்டுவ.. அப்ப உன்னைய கண்டந்துண்டமா வெட்டி போடறேன் இரு" என்று ராம்பிரபுவை எச்சரித்து விட்டு லீலாவை அழைத்து கொண்டு கிளம்பினாள்.
விடாமல் தேம்பியபடி வந்தவளுக்கு மூச்சு விடவும் சிரமமாக இருக்க, "லீலா ரிலாக்ஸ்டா.. ஒன்னுமில்ல ஒன்னுமில்ல" என்று ஆறுதல்படுத்தி குடிக்க தண்ணீரையும் புகட்டினாள்.
அதில் லீலாவும் சிறிது தெளிந்திட, "என்னடா ஆச்சு.? அங்க என்ன நடக்குது.?" என்று மாயா வினவியதில் ஏன் மறைக்க வேண்டும் என்று தோன்றியதில் அனைத்தையும் கூறி விட்டு "நான் என்னக்கா தப்பு பண்ணுனேன்.?" என்று அழுதாள்.
வருணை நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது. அவனே சென்று காதலை கூறி சம்மதம் வாங்கி விட்டு இப்போது என்னவென்றால் இவள் தான் அவனை வலுக்கட்டாயமாக திருமணம் செய்தது போல் பேசி இருக்கிறான்.
"அவன் மனுசனா.? முதல்ல வருண்கிட்ட தான் பேசணும்" என்று மாயா கோவப்பட்ட சமயம் "இதைய பத்தி நீங்க யாருகிட்டயும் பேச கூடாதுக்கா.. அப்பறம் என் குழந்தை காட்சிப்பொருளாக மாறிரும்.. என்னால அதை ஏத்துக்க முடியாது" என்று குழந்தையின் எதிர்க்கால நலனைப் பற்றி யோசித்து கூறினாள் லீலா.
இந்நிலைமையிலும் குழந்தையை பற்றி யோசிப்பவளை எப்படி தவறாக நினைக்க முடிந்தது அவனால்.? ச்சைக் அவனை போய் காதலித்தோமே.? என்று மாயாவே அருவெறுப்படைந்த தருணம் அது.
இதன் பின்பு லீலா அவளின் பிறந்தகத்திற்கும் செல்லவில்லை. அப்படி அங்கு சென்றால் வதந்திகள் பரவி அது உண்மையாக கூடும் என்று யாருமறியாமல் மாயாவின் இல்லத்திலே தங்கினாள். அவளுக்கு துணையாக மீராவும் இருக்க, காயப்பட்ட இரு பெண்களின் மனதும் இலகுவாக மாறி நிமிடங்கள் அது.
'லீலா வீட்டை விட்டு சென்று விட்டாள். எங்களிடம் எதுவும் கூறவில்லை' என்று கூறி அழுத சுசிலாவின் நீலிக்கண்ணீரை நம்பி வருணும் அவனைப்பற்றி பேசுவதையே தவித்தான். அவளை விவாகரத்து செய்வதாகவும் கூறினான்.
ஆனால் இப்போது இதை வெளியில் அறிவித்தால் அவனின் படம் தான் தோல்வியை தழுவும் என்பதற்காக இவ்விடயம் வெளியில் தெரியாதவாறு மறைத்தான். சுசிலாவுக்கு சொல்லவொண்ணா சந்தோசம். இனி இவன் மாயாவை திருமணம் செய்து கொள்வான் என்று அகமகிழ்ந்து போனார்.
பாவம் அவள் வீட்டில் தான் லீலா இருக்கிறாள் என்பதையே அறியாமல்.!
தொடரும்..
Thread 'மாயலீலா - கருத்து திரி' https://aadvikapommunovels.com/threads/மாயலீலா-கருத்து-திரி.1803/
வருணிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி வரும் என்பதையே எதிர்பார்க்காத பெண்ணவள் அதிர்ந்து காதுகளை மூடி கொண்டு கத்தினாள். இவனின் அன்னை இப்படி கேட்டபோதே அவளால் தாங்க முடியவில்லை. இதில் இவளின் உயிரானவனும் அக்கேள்வியையே கேட்டால் இவளின் நிலை தான் என்ன.?
"இப்படி எல்லாம் பேசாத வருண்.. என்னால தாங்க முடியல.. என் மேல நம்பிக்கையும் இல்லாம போய்ருச்சா.? இப்படியொரு கேள்வி உன்கிட்ட இருந்து வரும்னு நான் நினைக்கவே இல்லை" என்றாள் தேம்பலுடன்.
ஆனால் அவனோ"உண்மையை பேசறதுல என்ன தப்பு.? நான் இல்லாத சமயம் எவன் எவனோ இங்க வந்துட்டு போறப்ப இது என் குழந்தையானு கேட்டதுல மட்டும் ரொம்ப வலிக்குதோ.?" என்று அவளின் கற்பையே சந்தேகப்பட்டான்.
இப்படி இவன் கேட்க காரணமே லீலாவை பற்றி இவன் அறிந்திட வேலைக்காரர் ஒருவரிடம் அடிக்கடி பேசுவான். இதையறிந்து சுசிலாவும் அவனின் முன்பு அடங்கி தான் இருப்பார். அவர் தான் யாருமில்லாத நேரத்தில் லீலாவின் அறைக்கு ஒருவன் வந்து விட்டு செல்கிறான் என்று கூறியது.
வந்தது ராம்பிரபு என்று அவர் அறியவில்லை. ராம் பிரபு தான் வீட்டில் இருப்பதே இல்லையே.? இப்போதும் யாருமறியாமல் வந்து விட்டு சென்று விட்டானே.? இதில் இவரின் தவறும் இல்லை. அவர் பார்த்ததை தான் வருணிடம் கூறி இருக்கிறார்.
வருணாவது பொறுமையாக லீலாவிடம் விசாரித்திருக்கலாம். ஆனால் அவனோ அன்னை சொல்வது அனைத்தும் உண்மையாக இருக்கிறதே என்ற கோவத்தில் கண்டதையும் பேசி விட்டான்.
இதில் ஆவேசமடைந்தவள் "வந்தது உன் தம்பி தான்.. அவனை பேச..." என்று உண்மையை கூற முயன்றவளின் கன்னம் பழுத்தது.
லீலாவை அருவெறுப்புடன் பார்த்து "ஏய் என் தம்பியை பத்தி பேசுன நான் மனுசனா இருக்க மாட்டேன்.. அவன் மோசமானவன் தான்.. அதற்காக அண்ணனோட மனைவியை தப்பா பார்க்கறவன் இல்லை.. என் குடும்பமே உன்னைய வேணாம் வேணாம்னு சொல்லுச்சு..
அதைய நான் கேட்காம விட்டதுக்கு இப்ப அனுபவிக்கறேன்.. பேசாம மாயாவையே கல்யாணம் பண்ணிருக்கலாம்.. அவ என்னைய லவ் பண்றானு தெரிஞ்சும் உன்னைய கல்யாணம் பண்ணுனது என் தப்புத் தான்.. அதுக்கு தான் இப்ப நான் அனுபவிக்கறேன் போல" என்று வார்த்தைகளை கடுமையாக வெளி விட்டிருந்தான் வருண்.
படத்தில் மட்டும் தான் இவன் நல்லவன் போலும். நிஜ வாழ்க்கையில் அரக்கரை விட மோசமானவனாக இருக்கிறானே.. இவனை நம்பி வந்தது என் தவறு தான்.. அதுவும் இவனின் மேல் வைத்திருக்கும் காதலுக்காக இங்கு இருப்பதும் அதை விட தவறு தான்.
இவன் இல்லையென்றால் என்னால் வாழ முடியாதா என்ன.? என் குழந்தைக்காக இவனின் முன்பே வாழ்ந்து காட்டுவேன்.. அதற்கு முன்பு இங்கிருந்து இவனின் அன்னையின் குணத்தையும் தம்பியின் குணத்தையும் இவனிடம் வெளிக்காட்டி விட்டு தான் செல்வேன் என்ற தீர்மானம் அவளுள்.!
அதன் பின் அவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவனும் கண்டு கொள்ளவில்லை. ஆடவனின் பாராமுகம் இவளை வருத்தியது. தனியாக இருந்த போது எப்படி எல்லாம் தன்னை தாங்கினான் என்று நினைத்ததில் அழுகையும் வலுக்கட்டாயமாக வந்து விட, அதை அவன் அறியாவண்ணம் உள்ளிழுத்து கொண்டாள்.
நாட்களும் நகர்ந்தது. வருணின் மனதினுள் 'நான் இவ்வளவு பேசியும் அவள் இங்கேயே இருக்கிறாளே.? நம்ப முடியவில்லையே.?' என்ற யோசனை தான் விடாமல் ஓடிக் கொண்டிருந்தது. பெண்ணவள் இவனை கண்டு கொள்ளவில்லை. அவளுண்டு அவள் வேலையுண்டு என்றிருந்தாள்.
வருண் வீட்டில் இருப்பதால் சுசிலாவும் அடக்கியே வாசித்தார். ராம்பிரபுவும் வீட்டிற்கு வந்த மாதிரி தெரியவில்லை. லீலாவிற்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. வருணை விட்டு விடும் எண்ணமெல்லாம் அவளிடம் இல்லை. ஏதோ ஒரு தவறான புரிதலில் தான் இவர் இப்படி பேசிக் கொண்டு இருக்கிறார். நடப்பதை புரிந்து கொண்டு விட்டால் தன்னை தங்கத்தட்டில் வைத்தும் தாங்குவார் என்று அலாதி நம்பிக்கை.
படத்தின் வெற்றி விழாவுக்கு வருண் சென்றாக வேண்டிய கட்டாயம். அதை மறைமுகமாக மனைவியிடமும் உரைத்து விட்டு கிளம்பி இருந்தான். இப்படி அவன் சென்றால் வருவதற்கு எப்படியும் இரண்டு நாட்களாகி விடும் என்பது லீலாவும் அறிந்தது. இவர்களுடன் இருப்பதை நினைத்து பயந்து பேசாமல் தன் வீட்டிற்கு சென்று விடலாமா.? என்று நினைத்தாள். அதுவும் நல்லது தான் என்ற முடிவில் கிளம்ப ஆயத்தமானாள்.
சுசிலாவும் சுபவர்ஷினியும் ஏதோ விஷேசம் என்று வருண் செல்வதற்கு முன்பே கிளம்பி இருக்க, இப்போது லீலா மட்டும் தான் வீட்டில்.! மற்றவர்கள் வரும் முன்பே கிளம்பி சென்று விட வேண்டும் என்ற எண்ணம். அந்த அவசரத்தில் அவளின் பிரத்தியேக கார் டிரைவருக்கு அழைத்து சொல்லவும் மறந்திருந்தாள்.
இச்சமயம் சத்தம் வராதவாறு அவளின் பின்னே வந்து நின்ற ராம்பிரபுக்கு அவளின் மீது அவ்வளவு போதை. நினைத்தால் அடைந்து விட வேண்டும் என்று கொள்கை வேறு அவனிடம்.
பின்னால் நிற்பவனை உணாரமல் திரும்பிய லீலா அவனை பார்த்ததும் வெலவெலத்து போய் ஓரடி பின்னே நகர்ந்து நெஞ்சில் கை வைத்துக் கொள்ள, "செல்லம் மாமா வந்துருக்கேன்டி.. இப்படி பயந்தா நின்னா என்ன அர்த்தம்.? வா வா என் பக்கத்துல வா" என்று அவளை தொட போனான்.
சட்டென்று விலகி நின்று "முதல்ல வெளில போ.. இல்லனா எனக்கு கெட்ட கோவம் வரும்.. த்து பொறுக்கி" என்று அவனை சாட, "ஏய் என்னடி ரொம்ப தான் துள்ளற.? என் அண்ணனை கல்யாணம் பண்ணிட்டு எவன் எவன் கூடவோ படுத்து தானே இந்த புள்ளை வந்துருக்கு.? அப்பறம் என்ன பெரிய பத்தினி மாதிரி.?" என்று அவளின் முடியை பிடித்து இழுத்தான்.
உயிர் போகும் வலி. அதை விட அவளின் குழந்தை வேறு வயிற்றில். இந்த மிருகத்திடம் உன் குழந்தையும் சிக்கி விடுமோ.? என்று தான் பயந்தாள். அவளால் முடிந்த வரைக்கும் அவனிடம் இருந்து விடுபட போராடினாள். அவளின் பயமே அவளின் பலத்தை வெளிவர தடுத்தது. அவளால் முடியவில்லை.
'கடவுளே ஏன் இந்த நிலைமை.?' என்று புலம்பி கண்ணீர் வடித்த சமயம் சரியாக ராம் பிரபுவின் தலையை பூச்சாடி ஒன்று பதம் பார்த்தது. அதில் அவன் பயந்து விலகிட, பத்ரகாளியாக நின்றிருந்தாள் மாயா.
அவளை கண்டதும் "அக்கா" என்று ஓடி போய் அணைத்துக் கொண்டு "இங்கிருந்து போய்ரலாம்க்கா.. என்னைய கூட்டிட்டு போங்க.. ப்ளீஸ்.. இங்கிருந்து போய்ரலாம்" என்று அச்சத்தில் நடுங்கியவளை தான் முதலில் பார்க்க வேண்டும் என்பதற்காக "என் கைல ஒரு நாள் வசமா மாட்டுவ.. அப்ப உன்னைய கண்டந்துண்டமா வெட்டி போடறேன் இரு" என்று ராம்பிரபுவை எச்சரித்து விட்டு லீலாவை அழைத்து கொண்டு கிளம்பினாள்.
விடாமல் தேம்பியபடி வந்தவளுக்கு மூச்சு விடவும் சிரமமாக இருக்க, "லீலா ரிலாக்ஸ்டா.. ஒன்னுமில்ல ஒன்னுமில்ல" என்று ஆறுதல்படுத்தி குடிக்க தண்ணீரையும் புகட்டினாள்.
அதில் லீலாவும் சிறிது தெளிந்திட, "என்னடா ஆச்சு.? அங்க என்ன நடக்குது.?" என்று மாயா வினவியதில் ஏன் மறைக்க வேண்டும் என்று தோன்றியதில் அனைத்தையும் கூறி விட்டு "நான் என்னக்கா தப்பு பண்ணுனேன்.?" என்று அழுதாள்.
வருணை நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது. அவனே சென்று காதலை கூறி சம்மதம் வாங்கி விட்டு இப்போது என்னவென்றால் இவள் தான் அவனை வலுக்கட்டாயமாக திருமணம் செய்தது போல் பேசி இருக்கிறான்.
"அவன் மனுசனா.? முதல்ல வருண்கிட்ட தான் பேசணும்" என்று மாயா கோவப்பட்ட சமயம் "இதைய பத்தி நீங்க யாருகிட்டயும் பேச கூடாதுக்கா.. அப்பறம் என் குழந்தை காட்சிப்பொருளாக மாறிரும்.. என்னால அதை ஏத்துக்க முடியாது" என்று குழந்தையின் எதிர்க்கால நலனைப் பற்றி யோசித்து கூறினாள் லீலா.
இந்நிலைமையிலும் குழந்தையை பற்றி யோசிப்பவளை எப்படி தவறாக நினைக்க முடிந்தது அவனால்.? ச்சைக் அவனை போய் காதலித்தோமே.? என்று மாயாவே அருவெறுப்படைந்த தருணம் அது.
இதன் பின்பு லீலா அவளின் பிறந்தகத்திற்கும் செல்லவில்லை. அப்படி அங்கு சென்றால் வதந்திகள் பரவி அது உண்மையாக கூடும் என்று யாருமறியாமல் மாயாவின் இல்லத்திலே தங்கினாள். அவளுக்கு துணையாக மீராவும் இருக்க, காயப்பட்ட இரு பெண்களின் மனதும் இலகுவாக மாறி நிமிடங்கள் அது.
'லீலா வீட்டை விட்டு சென்று விட்டாள். எங்களிடம் எதுவும் கூறவில்லை' என்று கூறி அழுத சுசிலாவின் நீலிக்கண்ணீரை நம்பி வருணும் அவனைப்பற்றி பேசுவதையே தவித்தான். அவளை விவாகரத்து செய்வதாகவும் கூறினான்.
ஆனால் இப்போது இதை வெளியில் அறிவித்தால் அவனின் படம் தான் தோல்வியை தழுவும் என்பதற்காக இவ்விடயம் வெளியில் தெரியாதவாறு மறைத்தான். சுசிலாவுக்கு சொல்லவொண்ணா சந்தோசம். இனி இவன் மாயாவை திருமணம் செய்து கொள்வான் என்று அகமகிழ்ந்து போனார்.
பாவம் அவள் வீட்டில் தான் லீலா இருக்கிறாள் என்பதையே அறியாமல்.!
தொடரும்..
Thread 'மாயலீலா - கருத்து திரி' https://aadvikapommunovels.com/threads/மாயலீலா-கருத்து-திரி.1803/