அத்தியாயம் - 5
வீட்டிற்கு வந்த வருணை உள்ளே விடாமல் தடுத்து "என் பையன் இப்பவே வெளில வந்தாகணும்" என்று அவனின் அன்னையான சுசிலா சினந்திட, முதலிலே குற்றவுணர்வில் மிதந்தவனுக்கு அன்னையின் மிரட்டல் கடுப்பை தான் கிளப்பியது."
"அவன் என்ன உத்தமனா.? தப்பு செஞ்சவன் தானே.? அதுக்கு தண்டனை அனுபவிக்கறதுல என்ன தப்பு.? நான் செய்ய வேண்டியதை மாயா செஞ்சுருக்கா அவ்ளோதான்.. அப்பவே தண்டனை வாங்கி குடுத்துருக்கணும்.. எல்லாம் என் தப்புத்தான்" என்று சீறினான்.
மகனின் வார்த்தையில் அதிர்ச்சியுற்றவர் கோவத்தை தணித்து "வருண் என்னப்பா இது.? அவன் உன் தம்பி.. ஏதோ தெரியாதனமா தப்பு பண்ணிட்டான்.. ஆனா கொலை எல்லாம் பண்ணலயே.? அவளே தான் உயிரை விட்டுருக்கா.. அதுக்கு எப்படி பிரபு பொறுப்பாவான்.? பாவம்பா அவன்.. அங்க என்ன பண்றானோ.?" என்று கண்ணீர் உகுத்தார்.
சுசிலாவின் அழுகையால் வருணிண் கடுகடுப்பும் குறைய, தலையை அழுத்த கோதி கொண்டவன் "புரிஞ்சுக்கங்கமா.. அவன் வெளில வந்தாலும் திருந்த மாட்டான்.. கொஞ்ச நாள் உள்ளேயே இருக்கட்டும்.. அப்பதான் புத்தி வரும்" என்றான் அமைதியாக.
இதில் ஆங்காரமாக மாறிய அவர் "என்ன சொன்ன.? என்ன சொன்ன.? அவன் உள்ளயே இருக்கணுமா.? பெத்த வயிறு எரியுதுடா.. உனக்கு கூட பிறந்தவனை விட அந்த பொட்டாச்சி தான் முக்கியமா போய்ட்டாளா.? அவகிட்ட அப்படி என்னத்த கண்டா.? உலகத்துல இல்லாத அழகியா அவ.?
அவ என்ன சொன்னாலும் தலையாடிட்டு இருக்க.? அவளை மீறி உன்னால என் பையனை வெளில எடுக்க முடியாதா என்ன.? நீ என்ன பண்ணுவீயோனு தெரியாது என் பையன் இப்பவே வெளில வந்தாகணும்.. இல்லனா நான் செத்துருவேன்" என்று சினந்தவர் டேபிளில் மேலிருந்த கத்தியை எடுத்து கையை அறுக்க முயன்றார்.
"இப்ப கூட உனக்கு அவ தான் முக்கியமா போய்ட்டா.. அம்மா செத்தாலும் உனக்கு கவலையில்லையா.? அம்மாக்கு ஏதாவது ஆகிட்டா நானும் அம்மா கூடவே போய்ருவேன்" என்று சுபவர்ஷினியும் அவனை மறைமுகமாக மிரட்டினாள்.
வேறு வழியும் இல்லை ராம்பிரபுவை வெளியில் எடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் பெற்றவளின் சாபத்திற்கு ஆளாக வேண்டும். தங்கையின் மிரட்டலையும் கணக்கில் கொண்டு வெறுப்புடன் அதற்கான வேலையையும் செய்திட, ஜாமீனில் வெளியில் வந்தான் ராம்பிரபு.
இதற்கு காரணம் மாயா தான் என்றும் வேணுமென்றே அவனை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இதை செய்ததாக செய்தியும் உலாவ தொடங்கியது.
'இவ மட்டும் ரொம்ப உத்தமி போல.?'
'பட வாய்ப்புக்காக எத்தனை பேரு கூட படுத்துருப்பா.?'
'பணத்தை வாங்கிட்டு கண்டவனை எல்லாம் தொட விட்டுருப்பா'
'இவளே யோக்கியமில்ல இதுல அடுத்தவனை சொல்ல வந்துட்டா'
'இதுல என்ன விசயம்னா கேரவேன்ல சிசிடிவி கேமரா வெச்சுருக்காங்கனு ஒரு புரளியையும் பரவி விட்டுருந்தா.. இவளே படத்துல அவுத்து போட்டுட்டு ஆடறவ தானே.?'
'எல்லாம் பணம் செய்யற மாயம்.. இப்ப அந்த ராம்பிரபு பணத்தை குடுத்தா அவன் கூடவும் இவ படுக்க தயங்க மாட்டா'
'அண்ணனை கல்யாணம் பண்ணிட்டு தம்பிகூட இருந்தாலும் இருப்பா.. யாரு கண்டா.?' என்று வக்கிர குணமுடையவர்கள் அவளின் குணத்தையே தூற்றி சாடினார்.
ராம்பிரபு வெளியில் வந்து விட்டான். வருணின் தம்பி என்பதால் அவனுக்கு ஓரிரு படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பும் கிடைத்திருக்க, அவனுக்கென்று சில ரசிகர் பட்டாளமும் இருந்தது.
அவன் கைதான செய்தியை அறிந்ததுமே சில இடங்களில் மாயாவின் பேனரை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்க, இப்போது என்னவென்றால் அவதூறு பரப்பியதற்காக மாயாவை கைது செய்ய கோரி போராட்டமும் நடத்தியது.
மோசமான கருத்துக்கள் தான் அவளை வந்தடைந்தது. அனைத்தையும் சாதாரணமாக பார்த்திருந்தவளின் கரங்களோ தன் மகளை தட்டி குடுத்து தூங்க வைப்பதிலே குறியாக இருக்க, அவளை பாவமாக பார்த்தாள் மீரா.
"மேடம் நான் வேணா சாட்சிக்கு வரட்டுமா.?" என்று மனம் தாங்காமல் மீரா கேட்டிட, "அப்படி ஏதாவது பண்ணனும்னு நினைச்சா அப்பிருவேன்.. ஊருல இருக்கற உன் அம்மா, அப்பா நிலைமை என்னவாகும்.? பாவம் அவங்க.. நீ வாயை திறக்கவே கூடாது.. இல்லனா பேசாம நீ உன் ஊருக்கே கிளம்பு" என்று அடக்கினாள்.
அப்போதும் அடங்காமல் "அவனால நானும் பாதிக்கப்பட்டிருக்கேன் மேடம்.. எப்படி அமைதியா இருக்க முடியும்.?" என்று விம்மிட, மகளின் தூக்கம் கலைந்து விட கூடாது என்பதற்காக "அதைய கெட்ட கனவா நினைச்சு மறக்க சொன்னேன்" என்று பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பினாள்.
தேம்பலை பதிலாக குடுத்தவளை "ப்ச் முதல்ல இங்கிருந்து எந்திரிச்சு போ.. இப்படி அழுகறதை பார்த்தா எனக்கு செம கோவம் வருது.. தியா பயந்துருவாளோனு அமைதியா பேசிட்டு இருக்கேன்" என்று சாதாரணமாக கூறுவதை போல் மாயா கூறினாலும் அவளின் குரலில் அத்தனை கோவம்.
மாயாவின் வீட்டை மீடியா ஆட்களும் சூழ்ந்து கொண்டது. அவர்களை உள்ளே வர விடாமல் ஆட்கள் தடுத்து கொண்டிருக்க, அதையும் மீறி "மாயா மேடம் உங்க மேல தப்பு இருக்கறனால தான் வெளில வர மாட்டிங்கறீங்களா.?" என்று கத்தி அவளை வெளியில் வர வைத்திட போராடியது.
அவர்களின் எண்ணம் இவள் அறியாததா.? சினிமா துறையில் இவள் சந்திக்காத நிகழ்வா என்ன.? நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசி கொள்ளுங்கள்.. நான் வெளியில் வர போவதில்லை என்ற தீர்மானத்துடன் மனதை அமைதிப்படுத்துவதற்காக யோகாவில் மூழ்கி விட்டிருந்தாள் வருணின் மாயா.
இன்னும் எழாமல் அப்படியே அமர்ந்திருந்தவளை கடுப்புடன் பார்த்த துருவன் "ஏய் இங்க எதுக்கு நீ வந்துருக்கேனு தெரியுமா.?" என்று அதட்டி அவளை எழ வைத்தான்.
'தெரியும்' என்ற அவளின் பதிலை எதிர்பாராமல் "வா அம்மா எந்திரிச்சுட்டாங்க.. உன்னைய அறிமுகப்படுத்தி வெக்கறேன்.. அவங்கள கவனமா பார்த்துக்கணும் புரியுதா.?" என்று கேட்டிட, வேகமாக தலையை ஆட்டினாள் லீலாவும்.
அவளின் செய்கை சிறுபிள்ளைத்தனத்தை தான் ஞாபகப்படுத்தியது. அரும்பிய புன்னகையை இதழுக்குள்ளே மறைத்து "சமைக்க தெரியுமா.?" என்றும் வினவ, மௌனமாக இருந்தால் சரி வராது என்று "சமைப்பேன்" என்ற கேள்விக்கான பதிலையும் அளித்தாள்.
கட்டலில் படுத்திருந்தவரை கண்டதும்
லீலாவின் மனது வருந்தியது. 'ப்ச் பாவம் இந்த அம்மா' என்று தான் பெண்ணவளின் நினைவில் வருத்தமும் எழுந்தது.
இவ்வளவு நேரம் அவளை அதட்டிய குரல் மறைந்து கனிவாக "அம்மா" என்றழைத்து அவரை கண்விழிக்க செய்திட, 'ஆத்தாடி இவனுக்கு இப்படி அமைதியா பேசவும் தெரியுமா.?' என்று உள்ளுக்குள் வியந்து கொண்டவள் வெளியில் எவ்வித பாவனைகளையும் எதிரொலிக்கவில்லை.
அவரை எழுந்தமரவும் உதவி செய்தான். லீலாவை யாரென்ற பாவனையில் அவரும் பார்க்க, "இவங்க தான்மா உங்களைய பார்த்துக்க வந்துருக்கற பொண்ணு.. என்ன வேணும்னாலும் இவங்ககிட்ட கேளுங்க" என்றவன் திரும்பி "உன் பேரு என்ன.?" என்று கேட்டான்.
அதற்குள் அவனின் அன்னையான தெய்வானையே "நான் பேசிக்கறேன்.. நீ போ துருவன்" என்று விட, "சரிம்மா" என்று தாயின் பேச்சிற்கு மதிப்பளித்து எழுந்து சென்றான்.
"இங்க வந்து உட்காருமா" என்று பெண்ணவளை தன்னருகில் அமர வைத்தவர் அவளை பற்றி விசாரித்தார். கனிவான பேச்சில் லீலாவும் மடை திறந்த வெள்ளமென தாய், தந்தை இல்லாத கதையை மட்டும் கூறினாள். மற்றதை மறந்தும் கூற நினைக்கவில்லை.
அவளை யோசனையுடன் ஏறிட்டு "உன்னால என்னைய பார்த்துக்க முடியுமாம்மா.? ரொம்ப சின்ன பொண்ணா இருக்கீயே.? முடியாதுனா தயங்காம சொல்லிரு நான் துருவன்கிட்ட சொல்லி உன் பெரியப்பாகிட்ட பேச சொல்றேன்" என்று கேட்டவரின் வார்த்தையே இனித்தது.
முடியாது என்று விட்டு அங்கு சென்றால் இவளால் இருக்க முடியுமா.? பேசாமல் இவருடனே இருந்து விட்டால் என்ன என்று தான் தோன்றியது. இவளும் சின்ன சிரிப்புடன் "எனக்கு பழக்கமில்லை தான்மா.. ஆனா பழகிக்குவேன்" என்று உண்மையை உரைத்தாள்.
இதில் அவரின் முகமும் மலர்ந்தது. தலையை தடவி புன்னகைத்திட, அதில் தாயின் வருடலை உணர்ந்தவளுக்கு கலங்கிய கண்களை அவரிடம் காட்டாமல் இருக்க கஷ்டப்பட்டு போனாள்.
"நான் இப்ப என்ன பண்ணனும்.? இந்த நேரத்துல ஏதாவது சாப்பிடுவீங்களா.?" என்று அவளின் வேலைகள் என்னவென்று வினவினாள். இதை இவரிடம் தான் கேட்க முடியுமே துருவனிடமா கேட்க இயலும்.? அப்படி கேட்டாலும் 'நீ எதுக்கு இங்க வந்த.?' என்று கேட்டு முறைப்பானே.? எதற்கு வம்பு இவரிடமே பேச்சு வார்த்தைகளை வைத்து கொள்வோம் என்ற முடிவையும் எடுத்து கொண்டாள்.
தெய்வானையும் புன்னகையுடன் அவள் செய்ய வேண்டியது என்ன என்னவென்று பட்டியலிட தொடங்கினார். "இருங்கமா நான் போய் உங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வர்றேன்" என்று வேகமாக சென்றவள் துருவன் இருப்பதையும் மறந்து வீட்டில் என்ன இருக்கிறது என்று தேட துவங்கினாள்.
அவள் உருட்டிய சத்தத்தில் படித்து கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்தவன் வேகமாக வெளியில் வந்து அவளை தவறாகவும் நினைத்து "ஏய் என்ன பண்ணிட்டு இருக்க.? ஏதாவது திருடிட்டு ஓடலாம்னு நினைக்கறீயா.? ச்சைக் இதுக்கே அலைவீங்களாடி.? உழைச்சு சாப்பிடணும்னு எண்ணமே வராதா.? இப்படி அடுத்தவன் கிட்ட இருந்து திருடிட்டு போய் உங்களால நிம்மதியா சோறு திங்க முடியுமா.?" என்று படபடவென்று பொரிந்தான்.
ஆடவனின் கேள்விக்கணையில் விக்கித்து நின்றவளுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது. எதுவும் பேசாமல் தலையை மட்டும் குனிந்து கண்ணீரை அவனிடம் இருந்து மறைத்தும் நின்றாள்.
தொடரும்..
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்
வீட்டிற்கு வந்த வருணை உள்ளே விடாமல் தடுத்து "என் பையன் இப்பவே வெளில வந்தாகணும்" என்று அவனின் அன்னையான சுசிலா சினந்திட, முதலிலே குற்றவுணர்வில் மிதந்தவனுக்கு அன்னையின் மிரட்டல் கடுப்பை தான் கிளப்பியது."
"அவன் என்ன உத்தமனா.? தப்பு செஞ்சவன் தானே.? அதுக்கு தண்டனை அனுபவிக்கறதுல என்ன தப்பு.? நான் செய்ய வேண்டியதை மாயா செஞ்சுருக்கா அவ்ளோதான்.. அப்பவே தண்டனை வாங்கி குடுத்துருக்கணும்.. எல்லாம் என் தப்புத்தான்" என்று சீறினான்.
மகனின் வார்த்தையில் அதிர்ச்சியுற்றவர் கோவத்தை தணித்து "வருண் என்னப்பா இது.? அவன் உன் தம்பி.. ஏதோ தெரியாதனமா தப்பு பண்ணிட்டான்.. ஆனா கொலை எல்லாம் பண்ணலயே.? அவளே தான் உயிரை விட்டுருக்கா.. அதுக்கு எப்படி பிரபு பொறுப்பாவான்.? பாவம்பா அவன்.. அங்க என்ன பண்றானோ.?" என்று கண்ணீர் உகுத்தார்.
சுசிலாவின் அழுகையால் வருணிண் கடுகடுப்பும் குறைய, தலையை அழுத்த கோதி கொண்டவன் "புரிஞ்சுக்கங்கமா.. அவன் வெளில வந்தாலும் திருந்த மாட்டான்.. கொஞ்ச நாள் உள்ளேயே இருக்கட்டும்.. அப்பதான் புத்தி வரும்" என்றான் அமைதியாக.
இதில் ஆங்காரமாக மாறிய அவர் "என்ன சொன்ன.? என்ன சொன்ன.? அவன் உள்ளயே இருக்கணுமா.? பெத்த வயிறு எரியுதுடா.. உனக்கு கூட பிறந்தவனை விட அந்த பொட்டாச்சி தான் முக்கியமா போய்ட்டாளா.? அவகிட்ட அப்படி என்னத்த கண்டா.? உலகத்துல இல்லாத அழகியா அவ.?
அவ என்ன சொன்னாலும் தலையாடிட்டு இருக்க.? அவளை மீறி உன்னால என் பையனை வெளில எடுக்க முடியாதா என்ன.? நீ என்ன பண்ணுவீயோனு தெரியாது என் பையன் இப்பவே வெளில வந்தாகணும்.. இல்லனா நான் செத்துருவேன்" என்று சினந்தவர் டேபிளில் மேலிருந்த கத்தியை எடுத்து கையை அறுக்க முயன்றார்.
"இப்ப கூட உனக்கு அவ தான் முக்கியமா போய்ட்டா.. அம்மா செத்தாலும் உனக்கு கவலையில்லையா.? அம்மாக்கு ஏதாவது ஆகிட்டா நானும் அம்மா கூடவே போய்ருவேன்" என்று சுபவர்ஷினியும் அவனை மறைமுகமாக மிரட்டினாள்.
வேறு வழியும் இல்லை ராம்பிரபுவை வெளியில் எடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் பெற்றவளின் சாபத்திற்கு ஆளாக வேண்டும். தங்கையின் மிரட்டலையும் கணக்கில் கொண்டு வெறுப்புடன் அதற்கான வேலையையும் செய்திட, ஜாமீனில் வெளியில் வந்தான் ராம்பிரபு.
இதற்கு காரணம் மாயா தான் என்றும் வேணுமென்றே அவனை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இதை செய்ததாக செய்தியும் உலாவ தொடங்கியது.
'இவ மட்டும் ரொம்ப உத்தமி போல.?'
'பட வாய்ப்புக்காக எத்தனை பேரு கூட படுத்துருப்பா.?'
'பணத்தை வாங்கிட்டு கண்டவனை எல்லாம் தொட விட்டுருப்பா'
'இவளே யோக்கியமில்ல இதுல அடுத்தவனை சொல்ல வந்துட்டா'
'இதுல என்ன விசயம்னா கேரவேன்ல சிசிடிவி கேமரா வெச்சுருக்காங்கனு ஒரு புரளியையும் பரவி விட்டுருந்தா.. இவளே படத்துல அவுத்து போட்டுட்டு ஆடறவ தானே.?'
'எல்லாம் பணம் செய்யற மாயம்.. இப்ப அந்த ராம்பிரபு பணத்தை குடுத்தா அவன் கூடவும் இவ படுக்க தயங்க மாட்டா'
'அண்ணனை கல்யாணம் பண்ணிட்டு தம்பிகூட இருந்தாலும் இருப்பா.. யாரு கண்டா.?' என்று வக்கிர குணமுடையவர்கள் அவளின் குணத்தையே தூற்றி சாடினார்.
ராம்பிரபு வெளியில் வந்து விட்டான். வருணின் தம்பி என்பதால் அவனுக்கு ஓரிரு படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பும் கிடைத்திருக்க, அவனுக்கென்று சில ரசிகர் பட்டாளமும் இருந்தது.
அவன் கைதான செய்தியை அறிந்ததுமே சில இடங்களில் மாயாவின் பேனரை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்க, இப்போது என்னவென்றால் அவதூறு பரப்பியதற்காக மாயாவை கைது செய்ய கோரி போராட்டமும் நடத்தியது.
மோசமான கருத்துக்கள் தான் அவளை வந்தடைந்தது. அனைத்தையும் சாதாரணமாக பார்த்திருந்தவளின் கரங்களோ தன் மகளை தட்டி குடுத்து தூங்க வைப்பதிலே குறியாக இருக்க, அவளை பாவமாக பார்த்தாள் மீரா.
"மேடம் நான் வேணா சாட்சிக்கு வரட்டுமா.?" என்று மனம் தாங்காமல் மீரா கேட்டிட, "அப்படி ஏதாவது பண்ணனும்னு நினைச்சா அப்பிருவேன்.. ஊருல இருக்கற உன் அம்மா, அப்பா நிலைமை என்னவாகும்.? பாவம் அவங்க.. நீ வாயை திறக்கவே கூடாது.. இல்லனா பேசாம நீ உன் ஊருக்கே கிளம்பு" என்று அடக்கினாள்.
அப்போதும் அடங்காமல் "அவனால நானும் பாதிக்கப்பட்டிருக்கேன் மேடம்.. எப்படி அமைதியா இருக்க முடியும்.?" என்று விம்மிட, மகளின் தூக்கம் கலைந்து விட கூடாது என்பதற்காக "அதைய கெட்ட கனவா நினைச்சு மறக்க சொன்னேன்" என்று பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பினாள்.
தேம்பலை பதிலாக குடுத்தவளை "ப்ச் முதல்ல இங்கிருந்து எந்திரிச்சு போ.. இப்படி அழுகறதை பார்த்தா எனக்கு செம கோவம் வருது.. தியா பயந்துருவாளோனு அமைதியா பேசிட்டு இருக்கேன்" என்று சாதாரணமாக கூறுவதை போல் மாயா கூறினாலும் அவளின் குரலில் அத்தனை கோவம்.
மாயாவின் வீட்டை மீடியா ஆட்களும் சூழ்ந்து கொண்டது. அவர்களை உள்ளே வர விடாமல் ஆட்கள் தடுத்து கொண்டிருக்க, அதையும் மீறி "மாயா மேடம் உங்க மேல தப்பு இருக்கறனால தான் வெளில வர மாட்டிங்கறீங்களா.?" என்று கத்தி அவளை வெளியில் வர வைத்திட போராடியது.
அவர்களின் எண்ணம் இவள் அறியாததா.? சினிமா துறையில் இவள் சந்திக்காத நிகழ்வா என்ன.? நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசி கொள்ளுங்கள்.. நான் வெளியில் வர போவதில்லை என்ற தீர்மானத்துடன் மனதை அமைதிப்படுத்துவதற்காக யோகாவில் மூழ்கி விட்டிருந்தாள் வருணின் மாயா.
இன்னும் எழாமல் அப்படியே அமர்ந்திருந்தவளை கடுப்புடன் பார்த்த துருவன் "ஏய் இங்க எதுக்கு நீ வந்துருக்கேனு தெரியுமா.?" என்று அதட்டி அவளை எழ வைத்தான்.
'தெரியும்' என்ற அவளின் பதிலை எதிர்பாராமல் "வா அம்மா எந்திரிச்சுட்டாங்க.. உன்னைய அறிமுகப்படுத்தி வெக்கறேன்.. அவங்கள கவனமா பார்த்துக்கணும் புரியுதா.?" என்று கேட்டிட, வேகமாக தலையை ஆட்டினாள் லீலாவும்.
அவளின் செய்கை சிறுபிள்ளைத்தனத்தை தான் ஞாபகப்படுத்தியது. அரும்பிய புன்னகையை இதழுக்குள்ளே மறைத்து "சமைக்க தெரியுமா.?" என்றும் வினவ, மௌனமாக இருந்தால் சரி வராது என்று "சமைப்பேன்" என்ற கேள்விக்கான பதிலையும் அளித்தாள்.
கட்டலில் படுத்திருந்தவரை கண்டதும்
லீலாவின் மனது வருந்தியது. 'ப்ச் பாவம் இந்த அம்மா' என்று தான் பெண்ணவளின் நினைவில் வருத்தமும் எழுந்தது.
இவ்வளவு நேரம் அவளை அதட்டிய குரல் மறைந்து கனிவாக "அம்மா" என்றழைத்து அவரை கண்விழிக்க செய்திட, 'ஆத்தாடி இவனுக்கு இப்படி அமைதியா பேசவும் தெரியுமா.?' என்று உள்ளுக்குள் வியந்து கொண்டவள் வெளியில் எவ்வித பாவனைகளையும் எதிரொலிக்கவில்லை.
அவரை எழுந்தமரவும் உதவி செய்தான். லீலாவை யாரென்ற பாவனையில் அவரும் பார்க்க, "இவங்க தான்மா உங்களைய பார்த்துக்க வந்துருக்கற பொண்ணு.. என்ன வேணும்னாலும் இவங்ககிட்ட கேளுங்க" என்றவன் திரும்பி "உன் பேரு என்ன.?" என்று கேட்டான்.
அதற்குள் அவனின் அன்னையான தெய்வானையே "நான் பேசிக்கறேன்.. நீ போ துருவன்" என்று விட, "சரிம்மா" என்று தாயின் பேச்சிற்கு மதிப்பளித்து எழுந்து சென்றான்.
"இங்க வந்து உட்காருமா" என்று பெண்ணவளை தன்னருகில் அமர வைத்தவர் அவளை பற்றி விசாரித்தார். கனிவான பேச்சில் லீலாவும் மடை திறந்த வெள்ளமென தாய், தந்தை இல்லாத கதையை மட்டும் கூறினாள். மற்றதை மறந்தும் கூற நினைக்கவில்லை.
அவளை யோசனையுடன் ஏறிட்டு "உன்னால என்னைய பார்த்துக்க முடியுமாம்மா.? ரொம்ப சின்ன பொண்ணா இருக்கீயே.? முடியாதுனா தயங்காம சொல்லிரு நான் துருவன்கிட்ட சொல்லி உன் பெரியப்பாகிட்ட பேச சொல்றேன்" என்று கேட்டவரின் வார்த்தையே இனித்தது.
முடியாது என்று விட்டு அங்கு சென்றால் இவளால் இருக்க முடியுமா.? பேசாமல் இவருடனே இருந்து விட்டால் என்ன என்று தான் தோன்றியது. இவளும் சின்ன சிரிப்புடன் "எனக்கு பழக்கமில்லை தான்மா.. ஆனா பழகிக்குவேன்" என்று உண்மையை உரைத்தாள்.
இதில் அவரின் முகமும் மலர்ந்தது. தலையை தடவி புன்னகைத்திட, அதில் தாயின் வருடலை உணர்ந்தவளுக்கு கலங்கிய கண்களை அவரிடம் காட்டாமல் இருக்க கஷ்டப்பட்டு போனாள்.
"நான் இப்ப என்ன பண்ணனும்.? இந்த நேரத்துல ஏதாவது சாப்பிடுவீங்களா.?" என்று அவளின் வேலைகள் என்னவென்று வினவினாள். இதை இவரிடம் தான் கேட்க முடியுமே துருவனிடமா கேட்க இயலும்.? அப்படி கேட்டாலும் 'நீ எதுக்கு இங்க வந்த.?' என்று கேட்டு முறைப்பானே.? எதற்கு வம்பு இவரிடமே பேச்சு வார்த்தைகளை வைத்து கொள்வோம் என்ற முடிவையும் எடுத்து கொண்டாள்.
தெய்வானையும் புன்னகையுடன் அவள் செய்ய வேண்டியது என்ன என்னவென்று பட்டியலிட தொடங்கினார். "இருங்கமா நான் போய் உங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வர்றேன்" என்று வேகமாக சென்றவள் துருவன் இருப்பதையும் மறந்து வீட்டில் என்ன இருக்கிறது என்று தேட துவங்கினாள்.
அவள் உருட்டிய சத்தத்தில் படித்து கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்தவன் வேகமாக வெளியில் வந்து அவளை தவறாகவும் நினைத்து "ஏய் என்ன பண்ணிட்டு இருக்க.? ஏதாவது திருடிட்டு ஓடலாம்னு நினைக்கறீயா.? ச்சைக் இதுக்கே அலைவீங்களாடி.? உழைச்சு சாப்பிடணும்னு எண்ணமே வராதா.? இப்படி அடுத்தவன் கிட்ட இருந்து திருடிட்டு போய் உங்களால நிம்மதியா சோறு திங்க முடியுமா.?" என்று படபடவென்று பொரிந்தான்.
ஆடவனின் கேள்விக்கணையில் விக்கித்து நின்றவளுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது. எதுவும் பேசாமல் தலையை மட்டும் குனிந்து கண்ணீரை அவனிடம் இருந்து மறைத்தும் நின்றாள்.
தொடரும்..
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்
Last edited: