அத்தியாயம் - 10
"உன் அருமை தங்கச்சி இங்க இருக்கணும்னா அவ பெரியப்பன் வந்தா ஏன் இப்படி பண்றீங்கனு கேட்டு சண்டை போடணும்" என்றதில் தான் 'அவ இதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டானு சொன்னா இவன் நம்புவானா.?' என்ற யோசனையில் வடிவேலனின் முகம் சுருங்கியது.
"என்ன முடியாதா.?" என்று மீண்டும் அவனே கேள்வி எழுப்பிட, 'இந்தளவுக்கு இவன் இறங்கி வந்ததே பெரியது முடியாது' என்று கூறி அவனை மீண்டும் மலையேற்ற விரும்பாமல் "சரி சொல்றேன்" என்று விட்டான்.
லீலாவிடம் இதை கூறியபோது அவள் முழித்த முழியில் கண்ணாமுழியே வெளியில் வந்து விடுமளவுக்கு இருந்தது. "அய்யோ என்னால முடியாதுண்ணா" என்று மறுத்திட, "அப்ப உன் பெரியப்பன் கூடவே கிளம்பிரு" என்றதில் அரண்டு விட்டாள்.
"அண்ணா" என்று அழும் தோனியில் அவள் அழைக்க, "அப்ப நான் சொல்றதை கேளு.. முடியாதுனா நான் ஒன்னும் பண்ண முடியாது" என்று இவனும் அவளை அதட்ட, என்ன செய்வது என்று புரியாமல் முழித்தாள்.
பின்பு "எனக்கு பேச வராதுண்ணா" என்றவளை முறைத்து "அப்ப அவன் கூட கிளம்பிரு" என்ற வடிவேலன் அவளை பேச விடாமல் நகர்ந்து விட்டான். இல்லையென்றால் கிளிப்பிள்ளையிடம் பேசுவது போலாகி விடுமே.?
சிறிது நேரம் உம்மென்று அமர்ந்திருந்து பின்பு வடிவேலனை தேடி செல்ல, அவனோ உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருந்தான். இவளை வந்ததை கண்டு கொள்ளாமல் அவனிருக்க, "அண்ணா அண்ணா" என்று அவனின் கையை சுரண்டி அழைத்தாள்.
"என்ன.?" என்று சாதாரணமாக கேட்டவனின் பதிலில் பெண்ணவளின் முகம் சப்பென்று சுருங்கி போய் விட, "என்னைய பார்த்தா பாவமா இல்லையா.? இப்படி மாறி மாறி வெச்சு செய்யறீங்களே.?" என்று கெஞ்சல் நிறைந்த கொஞ்சலுடன் வினவினாள்.
"உன்னால முடியாதுனு சொல்லிட்ட.. நானும் அதோடு விட்டுட்டேன்.. இதுல நான் என்ன உன்னைய பண்ணுனேன்.? போய் எல்லாத்தையும் எடுத்து வெய்யு.. அப்பதான் நாளைக்கு உன் பெரியப்பா வந்ததும் நீ கிளம்ப முடியும்" என்று அவளை பயமுறுத்தினான்.
"உண்மையாவே என்னைய போக சொல்றீங்களா.?"
"நான் போக சொல்லலமா.. நீதான் போறேனு நிற்கற"
"நான் எப்ப அப்படி சொன்னேன்.?"
"அவன் மலை இறங்கறதே பெரிய கஷ்டம்.. உனக்காக நான் அவன்கிட்ட அடி வாங்கி வசைவு வாங்கி இருக்க பர்மிசன் வாங்கிட்டு வந்தா நீ ரொம்ப பிகு பண்ற"
"எனக்கு கோவப்பட தெரியாதுண்ணா.. எனக்கு தெரியாததை பண்ண சொன்னா நான் என்ன பண்ணுவேன்.?"
"இங்க இருக்கணும்னா நாளைக்கு காலைல கோவப்பட்டு தான் ஆகணும்.. அதுக்குள்ள கோவப்படறது எப்படினு கத்துக்கோ" என்றவனுக்கே சிரிப்பு தான் வந்தது. இவளை கோவப்பட வைப்பதற்குள் இவன் தான் ஒரு வழியாகி போவான் என்று அவனே உணர்ந்து இருந்தான்.
கெஞ்சி கொண்டே இருந்தால் பயத்தில் முடியாது என்று தான் கூறுவாள். அதனால் தான் சரி போ என்று கூறுவதை போல் நடித்து கொண்டிருக்கிறான்.
"அண்ணா" என்று சிணுங்கியவளை கண்டு கொள்ளாமல் "முடிவு உன் கைல தான்மா" என்று விட்டு அவன் வேலையை பார்ப்பதை போல் நடிக்க, இவள் தான் விரலில் இருக்கும் நகத்தை கொரிக்க ஆரம்பித்து விட்டாள்.
பழைய ஞாபகங்கள் அனைத்தும் விடாமல் வருணை துரத்தியதில் நிலை குலைந்து போனான். இவன் நினைக்க கூடாது என்று நினைத்தால் தான் மீண்டும் மீண்டும் அந்நினைவே அவனை துரத்தி இம்சை செய்கிறது.
ஆஆ ஆஆஆ என்று கத்தியபடி தலையை பிடித்தவன் அங்கிருந்த அனைத்தையும் தட்டி விட, அவனை பார்த்து சிரித்தது ஒரு புகைப்படம். அதில் இருந்தது இவனின் லீலா. இவனுக்கென்றே பிறந்த லீலா.
முதலில் அவனை ஈர்த்தது அவளின் இனிமையான குரல் தான். பின்பு அவனையே முழுவதுமாக அவளின்புறம் இழுத்து விட்டிருந்தாள் பெண்ணவள்.
அப்போது தான் இவன் சினிமாவில் காலூன்றிய சமயம். அவனின் முதல் படத்தில் பாடகியாக அறிமுகமானவள் தான் அவள். அந்த படத்தில் தான் வருணும் மாயாவும் இணைந்து நடித்தனர். இவர்களுடன் சேர்ந்து லீலாவும் பணியாற்றிட, மூவரும் நண்பர்களான தருணம் அது.
வருண்-மாயாவின் ஜோடி பொருத்தம் நன்றாகவே ரசிகர்களிடம் பிரபலமானது. அதே போல் லீலா பாடிய பாடலும் நன்றாக ரசிகர்களை கவர்ந்து இருந்தது.
வருண் மாயாவின் ஜோடி பொருத்தத்தை பார்த்து 'நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும்' என்று பலவகையான கருத்துக்கள் அவர்களை வந்தடைந்தது.
அப்போது இருவருக்குமே சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகளாக வர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்ததால் இதை பெரியதாக கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் லீலாவை மட்டும் விடாமல் கவனித்து கொண்டே இருந்தான் வருண்.
அவளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தது அவளின் தந்தை தான். மகளின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவள் பயந்து நின்றபோது கூட அவளுக்கு துணையாக நின்று அவளை பல போட்டிகளில் ஜெயிக்க வைத்து இப்போது திரையுலகில் அறிமுகப்படுத்திய பெருமையும் அவரையே சேரும்.
இவளின் பாடலுக்கு அங்கீகாரம் கிடைத்ததில் அவளுக்கு மட்டமற்ற மகிழ்ச்சி. இதை அவள் எதிர்பார்க்கவில்லை என்றே கூறலாம். அடுத்த அடுத்த படங்களிலும் வாய்ப்பு கிடைக்க, இவளும் பிசியாகி விட்டிருந்தாள்.
ஆனால் மாயாவுடனான நட்பை மட்டும் இவள் விடாமல் பிடித்து வைத்திருந்தாள். அவளை காண இவளே செல்வாள். ஏனோ அவளை பிடித்து விட்டது காரணமின்றி.! அவள் சோர்ந்திருக்கும் போதெல்லாம் ஊக்கமளித்து அவளை வெற்றிநடை போட செய்த பெருமை லீலாவையே சாரும்.
மாயா நடித்த அடுத்தடுத்த படங்கள் வெற்றியை தழுவிட, இறுதியாக மீண்டும் வருணுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் அவளுக்கு கிடைத்தது. இதில் பெருமகிழ்ச்சி அவளிடம்.!
இத்தருணத்தில் தான் வருணின் மேல் மாயாவுக்கு காதலும் மலர்ந்தது. 'இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்' என்று வதந்தி பரவிய போதும் வருண் அதை மறுக்காமல் இருந்ததை பார்த்து அவனுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்று உவகை கொண்டாள் இப்பெண்ணவள்.
ஆனால் அவன் மறுக்காமல் இருந்ததற்கு காரணம் அவர்கள் இருவரும் நடிக்கும் படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவே.! இது திரையுலகில் சர்வசாதாரணம் தான். இதை மாயாவும் உணர்ந்து இருந்தாலும் காதல் கொண்ட மனது வேறாக தான் யோசித்தது.
படத்தின் இறுதி காட்சி முடிந்ததும் "வருண் நைட் டின்னருக்கு வெளில போலாமா.?" என்று ஆர்வமாக மாயா வினவியபோது அவன் மறுக்காமல் "நானே கேட்கலாம்னு இருந்தேன்.. நீயே கேட்டுட்ட.. நான் ரெடி.. இடத்தை நீயே முடிவு பண்ணிட்டு அப்பறம் எனக்கு சொல்லு" என்று அவளிடமே முடிவை விட்டதில் இவளுக்கு பேரதிர்ச்சி தான்.
தன் மீது அவனுக்கும் காதல் இருக்கிறது என்று பெண்ணவள் பெருமகிழ்வு கொண்டாள். முதல் தடவை வெளியில் செல்ல போகிறோம் அதுவும் தன் மனம் கவர்ந்தவனுடன் என்று பார்த்து பார்த்து அனைத்தையும் தனக்கு பிடித்த மாதிரி செய்து அவனுக்காக காத்திருந்தாள் மாயா.
வருணும் வந்தான். இவர்கள் இருவரும் மட்டுமே அந்த இரவில்.! இருளுடன் போட்டி போட்டு கொண்டு பெண்ணவளும் தன்னவளை கண்களில் நிறைத்து கொள்ளும் பணியை செவ்வென செய்ய, "ஏய் மாயா நான் கூப்பிடறது கேட்கலயா.?" என்று அவன் உலுக்கியதில் தன்னிலை பெற்றவள் ஙே வென்று விழித்தாள்.
அசட்டு சிரிப்புடன் "வருண் என்ன சொன்ன.?" என்று கேட்க, "நெக்ஸ்ட் என்ன படம்.? மறுபடியும் பிஸியா.?" என்று பொதுவான பேச்சுக்களுடன் அவர்களின் இரவுணவும் முடிந்தது.
"நம்மளைய இணைச்சு வெச்சு வர்ற வதந்திக்கு என்ன பதில் தர்றதுனு தெரியல.. ஆனா அதைய முடிவுக்கு கொண்டு வரணும்ல.?" என்று மாயா தான் அப்பேச்சை முதலில் எடுக்க, வருணும் "ம்ம்ம்ம் கண்டிப்பா.. நானே சொல்லிறேன்" என்றான் சாதாரணமாக.
சட்டென்று தோன்றிய படபடப்புடன் "என்னனு.?" என்று கேட்க, "உனக்கு சாதகமாக தான் என் பதில் வரும்.. வெய்ட் அண்ட் சீ" என்று கண்சிமிட்டி அவளின் கன்னத்தையும் மென்மையாக தட்டி விட்டு கிளம்பினான்.
வருணின் பதிலில் வானத்தில் மிதந்தாள். நான் கேட்டது நிஜமா.? என்று மீண்டும் மீண்டும் அவன் சொன்னதையே திருப்பி திருப்பி நினைத்து வெக்கப்பட்டாள்.
வருணுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்பதே இவளுக்கு சர்க்கரையாக இனித்தது. இந்த இன்ப அதிர்ச்சியை இவள் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.! எப்படி.? எப்படி.? என்று தனக்கு தானே கேட்டு கொண்டு தலையிலும் தட்டி கொண்டு தனியாக சிரித்தாள்.
இனி அவளின் வாழ்வு வருணுடன் தான் என்று நினைக்கையில் புன்னகையும் ஒட்டி கொண்டது. ஆனால் நாளை வருணின் அறிவிக்கையில் இவளின் மகிழ்ச்சி ஆட்டம் காண போகின்றது என்பதை இப்பேதை அறியாமல் அவனுடனான எதிர்க்கால வாழ்வில் லயிக்க தொடங்கி இருந்தாள்.
தொடரும்..
Thread 'மாயலீலா - கருத்து திரி' https://aadvikapommunovels.com/threads/மாயலீலா-கருத்து-திரி.1803/
"உன் அருமை தங்கச்சி இங்க இருக்கணும்னா அவ பெரியப்பன் வந்தா ஏன் இப்படி பண்றீங்கனு கேட்டு சண்டை போடணும்" என்றதில் தான் 'அவ இதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டானு சொன்னா இவன் நம்புவானா.?' என்ற யோசனையில் வடிவேலனின் முகம் சுருங்கியது.
"என்ன முடியாதா.?" என்று மீண்டும் அவனே கேள்வி எழுப்பிட, 'இந்தளவுக்கு இவன் இறங்கி வந்ததே பெரியது முடியாது' என்று கூறி அவனை மீண்டும் மலையேற்ற விரும்பாமல் "சரி சொல்றேன்" என்று விட்டான்.
லீலாவிடம் இதை கூறியபோது அவள் முழித்த முழியில் கண்ணாமுழியே வெளியில் வந்து விடுமளவுக்கு இருந்தது. "அய்யோ என்னால முடியாதுண்ணா" என்று மறுத்திட, "அப்ப உன் பெரியப்பன் கூடவே கிளம்பிரு" என்றதில் அரண்டு விட்டாள்.
"அண்ணா" என்று அழும் தோனியில் அவள் அழைக்க, "அப்ப நான் சொல்றதை கேளு.. முடியாதுனா நான் ஒன்னும் பண்ண முடியாது" என்று இவனும் அவளை அதட்ட, என்ன செய்வது என்று புரியாமல் முழித்தாள்.
பின்பு "எனக்கு பேச வராதுண்ணா" என்றவளை முறைத்து "அப்ப அவன் கூட கிளம்பிரு" என்ற வடிவேலன் அவளை பேச விடாமல் நகர்ந்து விட்டான். இல்லையென்றால் கிளிப்பிள்ளையிடம் பேசுவது போலாகி விடுமே.?
சிறிது நேரம் உம்மென்று அமர்ந்திருந்து பின்பு வடிவேலனை தேடி செல்ல, அவனோ உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருந்தான். இவளை வந்ததை கண்டு கொள்ளாமல் அவனிருக்க, "அண்ணா அண்ணா" என்று அவனின் கையை சுரண்டி அழைத்தாள்.
"என்ன.?" என்று சாதாரணமாக கேட்டவனின் பதிலில் பெண்ணவளின் முகம் சப்பென்று சுருங்கி போய் விட, "என்னைய பார்த்தா பாவமா இல்லையா.? இப்படி மாறி மாறி வெச்சு செய்யறீங்களே.?" என்று கெஞ்சல் நிறைந்த கொஞ்சலுடன் வினவினாள்.
"உன்னால முடியாதுனு சொல்லிட்ட.. நானும் அதோடு விட்டுட்டேன்.. இதுல நான் என்ன உன்னைய பண்ணுனேன்.? போய் எல்லாத்தையும் எடுத்து வெய்யு.. அப்பதான் நாளைக்கு உன் பெரியப்பா வந்ததும் நீ கிளம்ப முடியும்" என்று அவளை பயமுறுத்தினான்.
"உண்மையாவே என்னைய போக சொல்றீங்களா.?"
"நான் போக சொல்லலமா.. நீதான் போறேனு நிற்கற"
"நான் எப்ப அப்படி சொன்னேன்.?"
"அவன் மலை இறங்கறதே பெரிய கஷ்டம்.. உனக்காக நான் அவன்கிட்ட அடி வாங்கி வசைவு வாங்கி இருக்க பர்மிசன் வாங்கிட்டு வந்தா நீ ரொம்ப பிகு பண்ற"
"எனக்கு கோவப்பட தெரியாதுண்ணா.. எனக்கு தெரியாததை பண்ண சொன்னா நான் என்ன பண்ணுவேன்.?"
"இங்க இருக்கணும்னா நாளைக்கு காலைல கோவப்பட்டு தான் ஆகணும்.. அதுக்குள்ள கோவப்படறது எப்படினு கத்துக்கோ" என்றவனுக்கே சிரிப்பு தான் வந்தது. இவளை கோவப்பட வைப்பதற்குள் இவன் தான் ஒரு வழியாகி போவான் என்று அவனே உணர்ந்து இருந்தான்.
கெஞ்சி கொண்டே இருந்தால் பயத்தில் முடியாது என்று தான் கூறுவாள். அதனால் தான் சரி போ என்று கூறுவதை போல் நடித்து கொண்டிருக்கிறான்.
"அண்ணா" என்று சிணுங்கியவளை கண்டு கொள்ளாமல் "முடிவு உன் கைல தான்மா" என்று விட்டு அவன் வேலையை பார்ப்பதை போல் நடிக்க, இவள் தான் விரலில் இருக்கும் நகத்தை கொரிக்க ஆரம்பித்து விட்டாள்.
பழைய ஞாபகங்கள் அனைத்தும் விடாமல் வருணை துரத்தியதில் நிலை குலைந்து போனான். இவன் நினைக்க கூடாது என்று நினைத்தால் தான் மீண்டும் மீண்டும் அந்நினைவே அவனை துரத்தி இம்சை செய்கிறது.
ஆஆ ஆஆஆ என்று கத்தியபடி தலையை பிடித்தவன் அங்கிருந்த அனைத்தையும் தட்டி விட, அவனை பார்த்து சிரித்தது ஒரு புகைப்படம். அதில் இருந்தது இவனின் லீலா. இவனுக்கென்றே பிறந்த லீலா.
முதலில் அவனை ஈர்த்தது அவளின் இனிமையான குரல் தான். பின்பு அவனையே முழுவதுமாக அவளின்புறம் இழுத்து விட்டிருந்தாள் பெண்ணவள்.
அப்போது தான் இவன் சினிமாவில் காலூன்றிய சமயம். அவனின் முதல் படத்தில் பாடகியாக அறிமுகமானவள் தான் அவள். அந்த படத்தில் தான் வருணும் மாயாவும் இணைந்து நடித்தனர். இவர்களுடன் சேர்ந்து லீலாவும் பணியாற்றிட, மூவரும் நண்பர்களான தருணம் அது.
வருண்-மாயாவின் ஜோடி பொருத்தம் நன்றாகவே ரசிகர்களிடம் பிரபலமானது. அதே போல் லீலா பாடிய பாடலும் நன்றாக ரசிகர்களை கவர்ந்து இருந்தது.
வருண் மாயாவின் ஜோடி பொருத்தத்தை பார்த்து 'நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும்' என்று பலவகையான கருத்துக்கள் அவர்களை வந்தடைந்தது.
அப்போது இருவருக்குமே சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகளாக வர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்ததால் இதை பெரியதாக கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் லீலாவை மட்டும் விடாமல் கவனித்து கொண்டே இருந்தான் வருண்.
அவளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தது அவளின் தந்தை தான். மகளின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவள் பயந்து நின்றபோது கூட அவளுக்கு துணையாக நின்று அவளை பல போட்டிகளில் ஜெயிக்க வைத்து இப்போது திரையுலகில் அறிமுகப்படுத்திய பெருமையும் அவரையே சேரும்.
இவளின் பாடலுக்கு அங்கீகாரம் கிடைத்ததில் அவளுக்கு மட்டமற்ற மகிழ்ச்சி. இதை அவள் எதிர்பார்க்கவில்லை என்றே கூறலாம். அடுத்த அடுத்த படங்களிலும் வாய்ப்பு கிடைக்க, இவளும் பிசியாகி விட்டிருந்தாள்.
ஆனால் மாயாவுடனான நட்பை மட்டும் இவள் விடாமல் பிடித்து வைத்திருந்தாள். அவளை காண இவளே செல்வாள். ஏனோ அவளை பிடித்து விட்டது காரணமின்றி.! அவள் சோர்ந்திருக்கும் போதெல்லாம் ஊக்கமளித்து அவளை வெற்றிநடை போட செய்த பெருமை லீலாவையே சாரும்.
மாயா நடித்த அடுத்தடுத்த படங்கள் வெற்றியை தழுவிட, இறுதியாக மீண்டும் வருணுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் அவளுக்கு கிடைத்தது. இதில் பெருமகிழ்ச்சி அவளிடம்.!
இத்தருணத்தில் தான் வருணின் மேல் மாயாவுக்கு காதலும் மலர்ந்தது. 'இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்' என்று வதந்தி பரவிய போதும் வருண் அதை மறுக்காமல் இருந்ததை பார்த்து அவனுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்று உவகை கொண்டாள் இப்பெண்ணவள்.
ஆனால் அவன் மறுக்காமல் இருந்ததற்கு காரணம் அவர்கள் இருவரும் நடிக்கும் படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவே.! இது திரையுலகில் சர்வசாதாரணம் தான். இதை மாயாவும் உணர்ந்து இருந்தாலும் காதல் கொண்ட மனது வேறாக தான் யோசித்தது.
படத்தின் இறுதி காட்சி முடிந்ததும் "வருண் நைட் டின்னருக்கு வெளில போலாமா.?" என்று ஆர்வமாக மாயா வினவியபோது அவன் மறுக்காமல் "நானே கேட்கலாம்னு இருந்தேன்.. நீயே கேட்டுட்ட.. நான் ரெடி.. இடத்தை நீயே முடிவு பண்ணிட்டு அப்பறம் எனக்கு சொல்லு" என்று அவளிடமே முடிவை விட்டதில் இவளுக்கு பேரதிர்ச்சி தான்.
தன் மீது அவனுக்கும் காதல் இருக்கிறது என்று பெண்ணவள் பெருமகிழ்வு கொண்டாள். முதல் தடவை வெளியில் செல்ல போகிறோம் அதுவும் தன் மனம் கவர்ந்தவனுடன் என்று பார்த்து பார்த்து அனைத்தையும் தனக்கு பிடித்த மாதிரி செய்து அவனுக்காக காத்திருந்தாள் மாயா.
வருணும் வந்தான். இவர்கள் இருவரும் மட்டுமே அந்த இரவில்.! இருளுடன் போட்டி போட்டு கொண்டு பெண்ணவளும் தன்னவளை கண்களில் நிறைத்து கொள்ளும் பணியை செவ்வென செய்ய, "ஏய் மாயா நான் கூப்பிடறது கேட்கலயா.?" என்று அவன் உலுக்கியதில் தன்னிலை பெற்றவள் ஙே வென்று விழித்தாள்.
அசட்டு சிரிப்புடன் "வருண் என்ன சொன்ன.?" என்று கேட்க, "நெக்ஸ்ட் என்ன படம்.? மறுபடியும் பிஸியா.?" என்று பொதுவான பேச்சுக்களுடன் அவர்களின் இரவுணவும் முடிந்தது.
"நம்மளைய இணைச்சு வெச்சு வர்ற வதந்திக்கு என்ன பதில் தர்றதுனு தெரியல.. ஆனா அதைய முடிவுக்கு கொண்டு வரணும்ல.?" என்று மாயா தான் அப்பேச்சை முதலில் எடுக்க, வருணும் "ம்ம்ம்ம் கண்டிப்பா.. நானே சொல்லிறேன்" என்றான் சாதாரணமாக.
சட்டென்று தோன்றிய படபடப்புடன் "என்னனு.?" என்று கேட்க, "உனக்கு சாதகமாக தான் என் பதில் வரும்.. வெய்ட் அண்ட் சீ" என்று கண்சிமிட்டி அவளின் கன்னத்தையும் மென்மையாக தட்டி விட்டு கிளம்பினான்.
வருணின் பதிலில் வானத்தில் மிதந்தாள். நான் கேட்டது நிஜமா.? என்று மீண்டும் மீண்டும் அவன் சொன்னதையே திருப்பி திருப்பி நினைத்து வெக்கப்பட்டாள்.
வருணுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்பதே இவளுக்கு சர்க்கரையாக இனித்தது. இந்த இன்ப அதிர்ச்சியை இவள் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.! எப்படி.? எப்படி.? என்று தனக்கு தானே கேட்டு கொண்டு தலையிலும் தட்டி கொண்டு தனியாக சிரித்தாள்.
இனி அவளின் வாழ்வு வருணுடன் தான் என்று நினைக்கையில் புன்னகையும் ஒட்டி கொண்டது. ஆனால் நாளை வருணின் அறிவிக்கையில் இவளின் மகிழ்ச்சி ஆட்டம் காண போகின்றது என்பதை இப்பேதை அறியாமல் அவனுடனான எதிர்க்கால வாழ்வில் லயிக்க தொடங்கி இருந்தாள்.
தொடரும்..
Thread 'மாயலீலா - கருத்து திரி' https://aadvikapommunovels.com/threads/மாயலீலா-கருத்து-திரி.1803/