ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மன்றம் வந்த நிலவே மஞ்சம் வர தயக்கம் என்ன-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
மன்றம் வந்த நிலவே மஞ்சம் வர தயக்கம் என்ன-கதை திரி
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் -01


இந்திய பெரும் கடலில் அந்த மிக பெரிய வெள்ளை நிற பேரழகி கம்பீரமாக நிமிர்ந்து நின்றாள் அவள் முகப்பில் சிவப்பும் தங்கநிற எழுத்துக்களால் ஈகிள் என எழுதி இருந்தது. அதிகாரம், சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாக கழுகை கருதுகிறார்கள் அது போல தான் இந்த கடல் அரசனின் மேலே கம்பீரமாக வீற்று நின்று இருக்கும் இந்த கப்பலும். இந்த கப்பல் தனிபட்ட ஒரு நபருக்குரிய ஒன்றாகும் பல கோடி ரூபாய்களை போட்டு உறுதியாகவும் கம்பீரமாகவும் உருவாக்கிய பயணிகள் கப்பல்.


பொதுவாக பயணிகள் கப்பல் என்றாலே சொகுசு கப்பல்கள் எனலாம் க்ரூஸ் எனப்படும் பயணங்களை இந்த உல்லாச கப்பல்கள் தான் அறிமுகம் செய்தது. அது போல தான் இந்த ஈகிள் கப்பலின் பயணமும் ஆறு தளங்களை கொண்ட இந்த கப்பல் மூவாயிரத்து ஐந்நூறு பயணிகளை அழைத்து கொண்டு உல்லாச பயணம் செல்ல தயார் நிலையில் இருந்தது... இந்த கப்பலில் இந்த பயணத்தை மேற் கொள்ள போகும் அனைவருமே விவிஐபிகள், விஜபிகள், மேல் தட்டு வர்க்கம் தான்.

சாதாரண மக்கள் இந்த கப்பலில் பயணம் செய்வதை நினைத்து பார்க்க முடியாது அவர்களுக்கு இங்கே இடமும் இல்லை பதினைந்து உணவங்கள், மதுக்கூடங்கள்,கேசினோ உள்ளிட்ட சூதாட்டங்கள், மால்,பிரமாண்ட ஹோம் தியேட்டர், இசை அரங்கு, குழந்தைகள் விளையாட்டரங்கு, உடற்பயிற்சி கூடம், நீச்சல் தடாகம்,பனிச்சறுக்கு விளையாட்டரங்கம், மருந்துவ அறை ஆயிரத்து ஆயிரத்து ஐந்நூறு பணியாளர்கள் கூடவே கேப்டன், ஆறு சீப் என்ஜீனியர் ,மருத்துவ குழு அதை விட இன்னும் சில என்ஜீனியர்கள் என முழுமையான கப்பலாக அது நின்றது.


ஒரு மாதம் உல்லாச பயணம் செல்ல ஒரு வருடத்திற்கு முன் திட்டமிட்டு பதிவு செய்து தான் கப்பல் பயணத்தை மேற் கொள்ள வந்து இருந்தனர் குடும்பமாக சிலர் புது மண தம்பதிகள் தங்கள் தேனிலவுக்காக இன்னும் சிலர் வியாபார நோக்கம் சிலர் ஒய்வு காலத்தை கழிக்க என வந்து இருந்தனர்.... சென்னை துறைமுகத்தில் இருந்து தான் ஈகிள் புறப்பட தயாராக இருந்தது பலர் அங்கே தங்கள் உறவுகள், நண்பர்களை வழி அனுப்ப வந்து கொண்டு இருக்க சட்டென ஒரு வித பதட்டம் நிலவியது பத்து கருப்பு நிற ஜீப்பில் கருப்பு உடை அணிந்த கார்ட்ஸ் வர நடுவில் சாம்பல் நிற லாம்போர்கினி வந்து கொண்டு இருந்தது அதன் முகப்பில் பிரத்தியேக புலி பாய்வது போல உருவம் தங்கத்தால் இருக்க அனைவருக்குமே புரிந்தது.

வருவது யாரென என ஆனா அவர்கள் அனைவருக்குமே தோன்றியது ஒரு கேள்வி தான் இவருக்கு என பத்து கப்பல்கள் தனியாக இருக்கும் போது இவரின் நெருங்கிய நண்பரின் கப்பலை எதற்காக பயணம் செய்ய தேர்ந்தெடுக்க வேணும் இது தான் அனைவரின் மனதில் எழுந்த கேள்வி ஆனா அதை வாய் விட்டு கேட்கும் தைரியம் தான் யாருக்குமே இல்லை.



துறைமுகத்தில் கார் வந்து நிற்க சட்டென தரையில் சிவப்பு கம்பளம் விரிக்க பட ஒரு கார்ட் ஒரு பக்க கதவை திறந்து விட இறங்கினார் பிசினஸ் உலகில் முடி சூடா மன்னன் துவாரகேஷ்.அவருக்கு அடுத்து இறங்கியது அவரை பெத்த அன்னை மரகதம் அடுத்து அவர் மனைவி அபிராமி அடுத்து இறங்கியவள்... துவாரகேஷின் மூத்த மகள் சந்தனா அவள் பெயருக்கேற்ப சந்தன நிறத்தை மட்டுமல்ல அதிக மென்மையையும் கொண்டவள். அழகிய முகம் பிறை நெற்றி, நீண்ட வளைந்த புருவங்கள், மீன் விழிகள், கூர் மூக்கு அதில் வைர மூக்குத்தி மின்னியது சிவந்த ரோஜா இதழ்கள் சங்கு கழுத்து தந்தம் போல கை, கால்கள், இடை வரை உள்ள நீண்ட கூந்தல் ஐந்தரை அடி உயரம் உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு மொத்தத்தில் பிரம்மன் செதுக்கிய சிற்பம் வயது இருபது.. .

அடுத்து இறங்கியவன் துவாரகேஷ் மகன் நித்திலன் வயது பதினைந்து அந்த வயதுக்குரிய துள்ளல் துடிப்பு எல்லாம் அவனிடம் இருக்கும் துவாரகேஷை தைரியமாக நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்கும் ஒருவன் கூடுதல் தகவல் சந்தனா என்றால் அவனுக்கு உயிர்.


துவாரகேஷ்ரை வரவேற்க அவரின் உற்ற நண்பரும் இந்த கப்பலின் உரிமையாளருமான பாலகுமார் வந்து இருந்தார்... இவரும் பிசினஸ் செய்பவர் தான் கேஷ் என அழைத்து அவருக்கு மாலை போட்டு அணைத்து கொள்ள அவரும் பாலா என அணைத்து கொண்டார் அவர் மனைவி மரகதம், அபிராமி, சந்தனா, நித்திலனுக்கு மாலை போட்டு வரவேற்றார்.

பாலா "ஐ யம் சோ ஹாப்பி டா உனக்கு இருக்கும் கப்பல்களை விட்டு .என் கப்பலின் நீ பயணம் செய்வது எனக்கு பெருமையாக இருக்கு" என்றார்.

துவாரகேஷ் "பாலா முதலில் நான் வர நினைக்கவே இல்லை இவங்களை தான் அனுப்ப நினைத்தேன். பட் அதை தாண்டி சில விஷயங்களை நான் செய்ய வேண்டி இருக்கு... உனக்கு தெரியும் தானே எனக்கு முதலில் பிசினஸ் அதற்கு பிறகு தான் எல்லாம் சரி நீ எங்க கூட வரவில்லையா" என கேட்டார்.

பாலா "வர தான் நினைத்தேன் டா சுஜிக்கு இது டெலிவரி டைம் இந்த வாரம் டேட் கொடுத்து இருக்கிறாங்க அப்பா நீங்களும் என் கூட இருக்க வேணும் என சொல்லி விட்டாள்... ஒற்றை பெண்ணு ஆசையாக கேட்கும் போது மறுக்க முடியவில்லை மாப்பிள்ளை வேற பிசினஸ் விஷயமாக அமெரிக்கா போய் இருக்கிறார் நீ கிளம்பு பாதியில் முடியும் என்றால் உன் கூட ஜாயிண்ட் பண்ணுகிறேன்" என்றார்.

துவாரகேஷ் "ஓகே எல்லாம் பக்காவாக எனக்கு இருக்கு தானே சரி கேப்டன் யாரு டா எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர் தானே" என கேட்டார்.

பாலா "அதை பற்றி நீ கவலைப்பட தேவையில்ல இன்று பயணம் செய்வங்க எல்லாம் பணக்கார வர்க்கம் அதை விட என் நண்பன் பிசினஸ் உலகில் முடி சூடா அரசன் நீ போகும் போது சும்மா ஆளை எடுப்பேனா... இவனை போல சிறந்த கேப்டனை நீ மட்டுமல்ல நானும் காண முடியாது அரசாங்க கப்பலில் வேலை பார்த்து கொண்டு இருந்தான் அங்கே ஏதோ ப்ராபிளம் மேனஜ்மென்ட் கூட பெரிதாக வேற ஒன்றுமில்ல நேர்மை அது இவன் கிட்ட கொட்டி கிடக்கிறது கூடவே திமிர் பட் வேலை என்று வந்து விட்டால் பையன் தீ தான்" என்றார்.

துவாரகேஷ் "வாட் பையனா என்ன வயது" என கேட்டான்.

பாலா "வயது முப்பது டா ஏன் இந்த வயதுக்குள்ளே கேப்டனாகி விட்டான் என ஆச்சரியமாக இருக்கா" என கேட்க.

துவாரகேஷ் "புல் ஷிட் நீ இதை என் கிட்ட முன்னே சொல்லி இருக்க வேண்டியது தானே இவனை நம்மி கப்பலில் எப்படி நிம்மதியாக ஏற முடியும் அதுவும் கடல் பயணம்... கிட்ட தட்ட ஒரு மாத காலம் நின்று சட்டென இறங்கி வர இது பஸ் ஸ்டாப் பா நோ அவனை உடனடியாக மாற்று வேற ஆளை போடு வயது கொஞ்சம் கூடியவரை போடு" என சொன்னார்.

பாலா "டேய் சொன்னா புரிந்து கொள்ளு வயது அனுபவம் எல்லாம் சரி ஆனால் திறமை உன் குடும்பத்தோடு சேர்த்து மூவாயிரத்து ஐநூறு பேர் உயிர் டா... எல்லாம் விவிஐபி, விஜபிங்க ஏன் ரிட்டயர்ட் ஜட்ஜ் , கமிஷனர், கேணல், டாக்டர், லாயர் என குடும்பத்தோடு இந்த வெக்கேஷனை கழிக்க வருகிறாங்க... அதற்கு இவன் தான் சரியான ஆளு இவனை சும்மா எடை போடாதே இப்போ இவனை விடு நீ வந்த வேலையை பாரு சரி அபிராமி, சந்தனா கிட்ட சொல்லி விட்டாயா டா" என கேட்டான்.

துவாரகேஷ் "தேவையில்ல நான் முடிவு எடுத்தால் கட்டுபட வேண்டியது அவங்க கடமை" என்றார்.

பாலா "தப்பாக நினைக்காதே டா சந்தனா நீ பெத்த பெண்ணு அதுவும் அம்மா இல்லாத பெண்ணு பயந்த சுபாவம் கொண்டவள்.... இப்படி நீ அவளை கட்டாயப்படுத்துவது கூடாது டா உன் மாமனாருக்கு தெரிந்தால் ப்ராபிளம் ஆகி விடும்" என்றார்.

துவாரகேஷ் "அவருக்கு தெரிய கூடாது என்று தான் இந்த ஏற்பாடு வயதானால் வீட்டில் இருக்காமல் எப்போ பாரு என் விஷயத்தில் மூக்கை நுழைத்து கொண்டு மகளை கட்டி தந்தால் ஓதுங்கி விட வேணும்... சந்தனா என் பெண்ணு என் முடிவை அவள் ஏற்று கொள்ள தான் வேணும் பாலா நீ என் பெஸ்ட் ப்ரண்ட் அதனால் தான் உன் கிட்ட இந்த விஷயத்தை சொன்னேன் இதை நீ வெளியே சொன்ன நீ நண்பன் துவாரகேஷ்யை பார்க்க மாட்ட எதிரி துவாரகேஷ்யை தான் பார்ப்ப புரிகிறதா" என சொன்னார்...

பாலாவுக்கு அவர் குணம் தெரியும் என்பதால் அமைதியாக இருக்க கப்பல் கிளம்புவதற்கான முதல் சங்கு ஊதினார்கள் துவாரகேஷ் தன் குடும்பத்தோடு கப்பலில் ஏற கூடவே அவரின் பத்து கார்ட்ஸ் அவர் காவலுக்கு போனார்கள் உண்மையில் பாலாவுக்கு இவனை கூட ஏன் நட்பு கொண்டோம் என இருந்தது... இது பாவம் என தெரிந்தும் அமைதியாக இருக்க வேண்டி இருக்கிறது சந்தனா நான் பார்த்து வளர்ந்த பெண்ணு அவள் வாழ்க்கை நல்லா இருக்க வேணும் கடவுளே என வேண்டி கொள்ள அவர் வேண்டுதலை ஏற்று கொண்டது போல ஒரு ராயல் என்ஃபீல்டு பைக் வந்து நின்றது.


அதில் இருந்து இறங்கினான் ஆறடி உயரத்தில் கருமை வண்ண கண்ணன் அவன் கேப்டனுக்குரிய வெள்ளை நிற பேண்ட் ,சேர்ட், கையில் வெள்ளை நிற தொப்பி காலில் கருப்பு நிற பூட்ஸ் ஷூ என நடந்து வந்தவன்... தோளில் அவன் கருப்பு நிற பட்டி, மார்பிலே அவன் செய்த சாதனைகள் அணிவகுந்து மெடல்கள் கலர் கலராக தொங்கி கொண்டு இருக்க அவன் பாலா அருகே வந்தான்.

பாலா "வெல்கம் டூ ஈகிள் ஷிப் கேப்டன் யது நந்தன்" என்றார் . அவன் தான் யது நந்தன் வயது முப்பது அவன் வயதுக்கு அவன் செய்த சாதனைகள் அதிகம் அவன் அரசாங்கம் உட்பட தனியார் கப்பல்களை பல இயக்கி உள்ளான் அவன் சேவை காலத்தில் இப்போ வரைக்கும் எந்த கரும்புள்ளிகளும் இல்லை... ஆறடி உயரம், கட்டுகோப்பான உடல் அமைப்பு அந்த யது குல நந்தன் போல கருமை நிற கண்ணன் கருப்பில் அழகு உண்டு என இவனை பார்த்து அறிந்து கொள்ளலாம். பரந்த நெற்றி நீண்ட அடர்ந்த புருவங்கள், கூர்மையான விழிகள் கூர் மூக்கு சற்று கருப்பு படித்த உதடுகள் நான் புகையை ருசி பார்த்தவன் என சொன்னது மெல்லிய பியட் மொத்தில் பெண்களை திரும்பி பார்க்க வைக்கும் கதாநாயகன் தான்.


நிலவு வரும்…
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 02


யதுநந்தனுக்கு பாலா கை கொடுத்து வரவேற்க அவனும் பாலாவுக்கு கை கொடுத்து.


யது நந்தன் "குட் மார்னிங் மிஸ்டர் பாலகுமார் தேங்கியூ அண்ட் நான் இப்போ உங்க ஷிப் கேப்டன் பதவியை சார்ஜ் எடுத்து கொள்கிறேன் மிஸ்டர் ரவி பிரசாத் உங்க கிட்ட என்னை பற்றி சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்... நான் கன்ராக்ட் சைன் பண்ணும் போது நீங்க வந்து இருந்தீங்க உங்க பி,ஏ உங்க கிட்ட என்னை பற்றி எல்லாம் சொன்னதாக சொன்னார் நானும் உங்க கிட்ட கேட்டேன் நீங்க ஆம் என்ற பிறகு தான் நான் சைன் பண்ணினேன்...

நான் சில விஷயங்களில் நேர்மையை ரொம்ப எதிர்பார்ப்பேன் அது போல மற்றவங்க கிட்டயும் எதிர்பார்ப்பேன் என்னை நம்பி நீங்க கொடுத்தது பொருள் அல்ல உயிர்கள் என் உயிரை கொடுத்தாவது அவங்களை ஜாக்கிரதையாக திரும்ப அழைத்து வருவேன் நான் இப்போ என் டியூட்டியை பார்க்க போகலாமா" என கேட்டான்.

பாலா "யா சூவர் என் கப்பலை என் பயணிகளை சரியான ஒருவரிடம் தான் கொடுத்து இருக்கிறேன் என சந்தோஷமாக இருக்கிறது உங்களை பற்றி எல்லாம் தெரிந்து தான் நான் உங்க கூட அக்ரிமெண்ட் சைன் பண்ணினேன்... கேப்டன் ஒகே பெஸ்ட் ஆப் லக்" என கூறி இருவருமே கை குலுக்கி விடை பெற்றனர்... பாலா மனைவியோடு கிளம்ப யது நந்தன் கப்பலுக்கு வந்தான் கேப்டனுக்கு இருக்கும் ரூம்மில் தன் டிராலி பேக்கை தன் கபோர்ட்டில் வைத்து விட்டு வாஷ் ரூம் போக கிளம்ப கதவு தட்டு சத்தம் கேட்க... யாராக இருக்கும் என நினைத்தவன் கதவை திறக்க வெளியே ஒருவன் நின்று இருந்தான் குட் மார்னிங் கேப்டன் என சொன்னவன் யது நந்தனை காண டேய் யது நீயா என சொன்னவன் அவனை சட்டென தாவி அணைத்து கொள்ள யது நந்தன் டேய் அருண் என அவனை அணைத்து கொண்டான்.

அருண் "ஐ யம் ரியலி சைப்பிரஸ் டா நீ இங்கே இருப்ப என்று. நீ கவர்ன்மென்ட் ஷிப்பில் தானே கிட்ட தட்ட ஆறு வருடம் வேலை பார்த்த பிறகு இங்கே எப்படி" என கேட்டான்.

யது நந்தன் "மாற்றம் என்ற சொல்லை தவிர எல்லாம் மாறும் இதுவும் அது போல தான் நம்ம கதையை பிறகு பேசலாம் ஷிப் கிளம்ப பெல் அடித்து விட்டாங்க போல நீ தானே எனக்கு உதவியாக இருக்கும் கோ கேப்டன் ...பரவாயில்ல நான் கூட நினைத்தேன் யாராக இருக்கும் அவன் கூட மல்லு கட்ட வேணும் என்று ஏன் என்றால் அவங்க ஆட்டம் தான் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கும்...

சரி நீ கிளம்பு நான் முகம் கழுவி விட்டு வருகிறேன் என கூற அருண் கிளம்ப யது நந்தன் முகம் கழுவி விட்டு தன் உடையை பைக்கில் வந்தால் கசங்கி இருக்க அதை நீவி விட்டு தன் கேப்பை மாட்டி கொண்டு போனான்... கப்பல் கிளம்புவதற்கான மூன்றாம் தடவையாக பெல் அடித்தது கொஞ்ச நேரத்தில் கப்பல் கிளம்ப ஆரம்பிக்க அருண் தான் மைக் எடுத்து அழகான ஆங்கிலத்தில்.


அருண் "வெல்கம் டூ ஈகிள் ஷிப் இன்று நம்ம பயணம் இனிதாக ஆரம்பிக்கிறது இன்றில் இருந்து ஒரு மாதம் காலமும் தங்கள் எண்ணம் போல அனைத்து நிறைவே வேணும். இனி நீங்க எங்க சொத்து உங்க உயிருக்கு பாதுகாப்பு நாங்க அண்ட் நாங்க எங்களை அறிமுகப்படுத்தி கொள்கிறோம்... நான் அருண் பிரசாத் கோ கேப்டன் இந்த கப்பலில் கேப்டன் யது நந்தன் நாங்க இருவருமே உங்க இனிமையான இந்த கடல் பயணத்திற்கு பாதுகாப்பாக இருப்போம். நீங்க எதிர்பார்த்த அனைத்து வசதிகளும் இங்கே இருக்கிறது உங்க கடல் பயணம் இனிதாக ஆரம்பிக்க எங்கள் வாழ்த்துக்கள் என அறிவித்தான்...

அருணும், யது நந்தனும் ஒன்றாக தான் மரைன் என்ஜீனியர் படித்தவர்கள் அதன் பிறகு யது நந்தன் மேற்படிப்புக்கா கல்கத்தா போக அருண் சென்னையில் படிப்பை தொடர்ந்தான் பொதுவாக யது நந்தன் எப்போவுமே இறுக்கமாக தான் இருப்பான்... அவன் தாய் அவனின் ஐந்து வயதில் இறக்க அவன் தந்தை தான் அவனை தாயுமானவனாக இருந்தது வளர்த்தது அவர் ஒரு இன்ஸ்பெக்டர்... அவரும் இவன் காலேஜ் சேர கலவரம் ஒன்றை அடக்க போனவர் அதில் மாட்டி இறந்து போக இவன் சும்மாவே இறுக்கமாக இருப்பான் இப்போ கேட்கவா வேணும் ஒரேய துணையாக இருந்த தந்தையும் இழந்தால் முற்றாக இறுகி போனான்.


கவர்மென்ட் ரூல்ஸ் படி வேலையில் இருக்கும் போது அவன் தந்தை திரவியம் இறந்ததால் இவனுக்கு படித்து முடிக்க அந்த வேலை நிச்சயம் என சொல்ல இவன் அதை நிராகரித்து விட்டு தன் லட்சியபடியே இந்த துறையை தேர்தெடுத்து வெற்றியும் கண்டான்... பணத்திற்கு கஷ்டம் இல்லை தந்தை இழப்பீட்டு பணம், பேங்கில் இருக்கும் பணம் அதை கொண்டு சமாளித்தான் ஆனா உறவுகள் ஓதுங்கி விட்டது தங்கள் தலையில் பாரம் விழுந்து விட கூடாது என்று இவனுக்கு பெரிதாக அவர்கள் கூட தொடர்ப்பு இல்லை... சும்மாவே அவன் டெரர் பீஸ் இப்போ கேட்கவா வேணும். சொல்லி கொடுக்க யாருமே இல்லை ஆனாலும் கெட்டு போய் அழியாமல் நிமிர்ந்து நின்று சாதித்து காட்டினான்...

காலேஜில் படிக்கும் போது தான் அருண் அறிமுகம் ஓதுங்கி போனவன் கூட வலிய வந்து பேசி பழக்கம் வைத்து கொண்டான் யது நந்தனுக்கு எதிர் மறையான ஜாலி டைப்... தந்தை வங்கியில் கேஷியர் தாய் இல்லத்தரசி ஒரு அக்கா கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை கணவரோடு சிங்கப்பூரில் இருக்கிறார் இவன் சொந்த ஊர் திருநெல்வேலி.... கப்பல் நகர ஆரம்பிக்க யது நந்தன் எல்லாம் சரி பார்த்து கொண்டு இருக்க அருண் எதுவுமே பேசவில்லை அவனுக்கு தெரியும் கடமையில் இருக்கும் போது யது நந்தன் கூட யாருமே பேச முடியாது வேலை சம்பந்தமானதை மட்டும் தான் பேசுவான் அனைத்தும் சரி பார்த்தவன் அருணிடம் ஒரு பைல் கொடுக்க அதை அவன் வாங்கி கொள்ள.

யதுநந்தன் "அருண் இது ஷிப்பில் டிராவில் செய்றவங்க டிட்டைல் அவங்களுக்கு சாப்பாட்டு மெனு லிஸ்டை நம்ம குக் கிட்ட கொடு அது போல அவங்க ஹெல்த் கண்டிஷன் டிட்டைல் எல்லாம் நம்ம டாக்டரிடம் கொடு... அவங்க எல்லாம் சரியாக வேலை பார்க்கிறாங்களா என நீ மேற்பார்வை செய் இதில் உன் விளையாட்டை காட்ட வேணாம் புரிகிறதா... எனக்கு கடமை என்று வந்து விட்டால் நண்பன் என்று கூட பார்க்க மாட்டேன் நீ என்ன கிட்ட எப்படி இங்கே வந்த என கேட்க தவிர்த்து கொண்டு இருப்பது புரிகிறது... பட் அதற்கு இப்போ டைம் இல்லை பிறகு பார்க்கலாம் ஷிப் கொஞ்சம் மூவ் ஆகும் போது பேசலாம் என்றான்... அவன் சரி என தலையசைத்து விட்டு யது சொன்ன வேலைகளை பார்க்க போக யது சீப் என்ஜூயரை மீட் பண்ண போனான்.


துவாரகேஷ்க்கு மட்டும் பாலா வசதியாக ராயல் சூட் ரூம் நான்கு ஓதுக்கி கொடுத்து இருந்தார். அது போல கார்ட்ஸ்க்கு பத்து ரூம் துவாரகேஷ் தன் அறைக்கு ஓய்வெடுக்க போக மரகதம் தன் கால்களை பற்றி கொண்டு.

மரகதம் "சந்தனா எனக்கு கால் நடந்து நடந்து ரொம்ப வலிக்கிறது வந்து கொஞ்சம் தைலம் தேய்த்து பிடித்து விடு என சொன்னார்.

நித்திலன் "பாட்டி நீ என்ன நம்ம வீட்டில் இருந்து நடந்தா வந்த உனக்கு கால் வலிக்க லக்சரி காரில் சொகுசாக வந்த பிறகு என்ன... அக்கா எதற்காக உனக்கு கால் பிடித்து விட வேணும் அதற்கு தான் உன் கூடவே அலையும் அல்லகையை அழைத்து வந்து இருக்க... மணி அக்கா அவங்களை வைத்து வேலை வாங்கு அக்காவுக்கு கை வலிக்கும்" என்றான்.

மரகதம் "ஏய் என்ன டா ரொம்ப திமிராக பேசுகிற என்ன என் மகன் கிட்ட பேசுவது போல பேசுகிற நான் உன் அப்பனை பெத்தவள் என் கிட்ட உன் வேலையை வைத்து கொள்ளாதே... நான் எதற்காக டா நடந்து வர வேணும் கோடீஸ்வரி நான் என் வீட்டில் இருந்து காரில் என்ன ஏரோபிளனில் கூட வருவேன் ஏன் உன் அக்கா எனக்கு கால் பிடித்தால் என்ன குறைந்து போய் விடுவாளா... மணிக்கு வேற வேலை இருக்கு அவள் வர மாட்டாள். ஏய் சந்தனா என்ன வாய் பார்த்து கொண்டு இருக்க என் ரூம்க்கு வா" என்றார்... சரி பாட்டி என சந்தனா போக போக சட்டென நித்திலன் அவள் கை பற்றியவன்.

நித்திலன் "இதற்கு தான் இந்த கடல் பயணத்திற்கு வயதான நீ எதற்கு என அப்பா கிட்ட சொன்னேன் எங்கே கேட்டால் தானே.... உனக்கு கப்பல் படியேறவே வலிக்கிறது இதில் உல்லாச பயணம் வேற இங்கே பாரு எனக்கு தலை வலிக்கிறது... அக்கா பிடித்து விட்டால் தான் எனக்கு தூக்கம் வரும் நீ உன் அல்லகையை வைத்து செய் அக்கா நீ வா" என சந்தனா கையை பிடித்து கொண்டு இழுத்து கொண்டு போனான்.

அபிராமி "அத்தை அதுங்க சின்ன புள்ளைங்க சந்தனா சின்ன பெண்ணு அவளுக்கு சரியாக கால் பிடிக்க வராது நான் உங்களுக்கு பிடித்து விடவா" என கேட்டாள்.

மரகதம் "ஒன்றும் தேவையில்ல உன் பையன் ரொம்ப தான் துள்ளுகிறான் அடக்கி வை சந்தனா வேற வீட்டுக்கு போன பிறகு என் கிட்ட தானே இவன் வர வேணும்...முதலில் உன்னை சொல்ல வேணும் ஒழுங்காக பசங்களை வளர்க்க துப்பு இல்லை இதில் என் மகனுக்கு பொண்டாட்டி நீ... எல்லாம் அந்த மனுஷனை சொல்ல வேணும் அவர் தான் இவளும் என் பெண்ணு காயத்திரி போல என சொல்லி ஒன்றும் தெரியாத உன்னை எங்க தலையில் கட்டி வைத்து விட்டான்.. எல்லாம் எங்க தலையெழுத்து என சொல்லி விட்டு போக இது பழகிய ஒரு சொல்லாக இருந்தாலும் கூட மனம் வலிக்க துவாரகேஷ் ரூம்க்கு அபிராமி போனார்.


நிலவு வரும்….
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 03


நித்திலன் சந்தனாவை கை பிடித்து அழைத்து கொண்டு தன் ரூம்க்கு வந்தவன் அவளை கோபத்தோடு பார்க்க.

சந்தனா “ என்ன நிது அப்படி பார்க்கிற என் மேலே கோபமாக இருக்கிறாயா? “என கேட்டாள்.

நித்திலன் “கோபமா செம கடுப்பில் இருக்கிறேன் அக்கா உனக்கு எத்தனை தடவை சொல்வது..அந்த கிழவி சொல்வதை கேட்க வேணாம் என்று அது சூன்ய கிழவி அக்கா அப்பா கிட்ட நம்மை பற்றி போட்டு கொடுப்பதே அதன் முக்கிய வேலை…அதற்கு என தனி வேலையாள் இருக்கும் போது நீ எதற்காக அதன் கால் பிடிக்க வேணும் “என கேட்டான்.

சந்தனா “தப்பு கண்ணா அவங்க வயதில் பெரியவங்க அப்படி பேச கூடாதுஅவங்க யாரு நம்ம பாட்டி தானே.... அவங்க கால் பிடிப்பது எனக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை அம்மா கூட அப்படி தானே நமக்கு சொல்லி தந்தாங்க… பெரியவங்களை எதிர்த்து பேச கூடாது என பிறகு நீ இப்போ பாட்டி கிட்ட பேசி வந்தது தப்பு டா “என்றாள்.

நித்திலன் “இப்படியே நீயும் அம்மாவும் இரு அந்த கிழவி உங்க இரண்டு பேரையுமே தன் அடிமையாக வைக்கும் அக்கா நானும் பெரியவங்களுக்கு மரியாதை கொடுப்பவன் தான் ஆனா இதற்கு கொடுக்க மாட்டேன் ஏன் தெரியுமா? ...நம்ம அப்பாவை பாதி தூண்டி விடுவதே இது தான் தாத்தா எத்தனை தடவை நம்ம இரண்டு பேரையுமே ஆசையாக வீட்டுக்கு அழைத்து இருப்பார் இந்த கிழவியால் தான் நம்ம அவர் கிட்ட போகாமல் விட்டது பாவம் தாத்தா பெரியம்மாவும் உயிரோடு இல்லை உன்னையும் பார்க்க முடியாமல் எவ்வளவு கஷ்டமாக இருக்கும்…

எல்லாம் யாரால் இந்த கிழவியால் அது மட்டுமா உனக்கு மேலே படிக்க விருப்பம் தானே ஆனா உன்னை பன்னிரண்டாவது வரைக்கும் தானே இது படிக்க விட்டது இதில் பொம்பள புள்ளைக்கு படிப்பு எதற்கு வீட்டில் தானே இருக்க வேணும் என டயலாக் வேறு…எத்தனை பெண்ணுங்க மேலே படித்து சாதித்து கொண்டு இருக்கிறாங்க..நீ இப்படி ஊமையாக இருந்தால் தான் அப்பாவும், கிழவியும் உன்னை தங்க இஷ்டம் போல ஆட்டி வைக்கிறாங்க... நீ கவலைப்படாத நான் பெரியவன் ஆனதும் முதலில் உன்னை நீ ஆசைபட்ட Botany( தாவரவியல்)படிக்க வைத்து அதில் உன்னை Botanist (தாவரவியலாளர்) ஆக்குகிறேன் “என சொன்னான். சந்தனா கண்கள் கலங்க தம்பியை அணைத்து கொண்டாள்.


அவள் எப்போவுமே ரொம்ப அமைதியான பயந்த சுபாவம் கொண்ட பெண்ணு தான் அவள் தாய் காயத்திரி அப்படியல்ல ரொம்ப தைரியமாக பல தொழில்களை எடுத்து நடத்தியவர் காயத்திரி ஒற்றை வாரிசு... பரம்பரையாக பணக்கார குடும்பம் எப்போவுமே எதிலும் பெர்பெக்டட்டாக இருக்கும் காயத்திரி சறுக்கியது துவாரகேஷ்யிடம் தான் காலேஜ் படிக்கும் போது காதல் துவாரகேஷ் நடுத்தர குடும்பத்து பையன்... தந்தை சிறு வயதில் இறக்க இவரையும் இவர் தங்கையையும் மரகதம் தான் கஷ்டபட்டு வளர்த்தார் தந்தை வாத்தியார் அந்த சிறு வயதில் அவர் ஆசைபட்டது சிலது கிடைக்காதது தான் நான் நன்றாக படித்து அதன் மூலமாக அதை எல்லாம் அடைய வேணும் என்ற எண்ணம் தான் அவனுக்கு முதலில் இருந்தது.


எப்போவுமே நன்றாக படித்து காலேஜ் பர்ஸ்ட் ரேங் வாங்கும் துவாரகேஷ் மேலே காயத்திரிக்கு முதலில் ஏற்பட்டது மதிப்பு பிறகு அதுவே அன்பாக மாறி காதலாக வந்து நின்றது... முதலில் தயங்கிய துவாரகேஷ் அவள் அன்பை பார்த்து காதல் கொண்டான் இவர்கள் காதலை அறிந்து கொண்ட காயத்திரியின் தந்தை தணிகாசலம் சராசரி தகப்பன் போல காதலை பிரிக்க யோசிக்காது முதலில் பையன் எப்படிப்பட்ட குடும்பம் அவன் எப்படி என தன் ஆளுங்களை விட்டு நன்றாக விசாரித்தவர்...

எல்லாம் திருப்தியாக இருக்க எப்போவுமே மகள் ஆசையை நிறைவேற்றி பழக்கப்பட்டவர் மாப்பிள்ளை கேட்டு அவன் வீட்டுக்கு போனார் மரகதத்திற்கு எப்போவுமே கொஞ்சம் ஆசைகள் அதிகம்... அதை அவர் கணவர் சுந்தரத்தால் நிறைவேற்ற முடியவில்லை காரணம் நடுத்தர வர்க்கம் வீட்டு வாடகை, உணவு உடை பிள்ளைங்க படிப்பு ,மருத்துவ செலவு என இருக்கும் போது எங்கே பட்டு புடவைக்கும் ,வைர நகைக்கும் போவது மரகதம் முதலில் தணிகாசலம் கேட்டு வர தயங்கியவர் பிறகு அவர் செல்வாக்கை பார்த்து சரி என சொன்னார் மரகதம் கேட்ட சீர் வரிசைக்கு மேலே அள்ளி கொடுத்தார்.


ஊரே வியக்கும் அளவுக்கு சீர் செய்தவர் மகள் புகுந்த வீட்டில் ராஜகுமாரியாக வாழ வேணும் என நினைத்தவர் பெரிய பங்களா ஒன்றை வாங்கி கொடுத்தார் கூடவே மரகதம் துவாரகேஷ் தங்கை சுகுணா வந்து இருந்தார்கள்.... காயத்திரி உண்மையில் நல்ல மருமகளாக,நாத்தனாராக நடந்து கொண்டாள் சுகுணாவுக்கு பெரிய இடத்தில் கை நிறைய சீர் கொடுத்து அவளே கட்டி கொடுத்தாள் தணிகாசலம் மகள் பெயரில் உள்ள எந்த சொத்துக்களையும் துவாரகேஷ் பெயரில் மாற்றவில்லை....

அவருக்கு தெரியும் மகள் கையில் சொத்து இருக்கும் வரைக்கும் தான் அவளால் நிம்மதியாக அங்கே இருக்க முடியும் என்று அவருக்கு சமீபகாலமாக துவாரகேஷ், மரகதம் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது தங்கள் லாயரிடம் காயத்திரி பெயரில் எவ்வளவு சொத்து இருக்கு அதை தன் பெயருக்கு மாற்ற முடியுமா என விசாரிப்பதை தெரிந்து கொண்டவர். ...காயத்திரி அழைத்து மெதுவாக விஷயத்தை சொல்ல அவளும் படித்தவள் இல்லையா தான் பார்த்து கொள்வதாக கூறினாள்.


இதற்கிடைய காயத்திரி கர்ப்பமாக தணிகாசலம் மரகதம் தன் மகளை பார்த்து கொள்ள மாட்டார் என நினைத்து தன் பங்களாவுக்கு அழைத்து வர நினைக்க துவாரகேஷ் முடியாது என அங்கே பார்த்து கொள்ள காயத்திரி அம்மா உயிரோடு இல்லை.... வேற பெண்ணுங்க இல்லை இங்கே நான்,அம்மா இருக்கிறோம் என பிடிவாதமாக மறுத்து விட தணிகாசலமும் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தார் இந்த நிலையில் தான் துவாரகேஷ் காயத்திரியிடம் நீ கர்ப்பமாக இருக்கிற உன்னால் தனியாக கம்பெனி எல்லாம் பார்த்து கொள்ள முடியாது என் பெயருக்கு மாற்றி தா என கேட்க...

காயத்திரி தேவையில்ல இது என் குழந்தை எனக்கு சுமையில்லை என்னால் பார்த்து கொள்ள முடியும் நீங்க உங்க கம்பெனியை பார்த்து கொள்ளுங்க என முடிவாக கூற துவாரகேஷ்க்கு அவள் மேலே வன்மம் வளர்ந்தாலும் தணிகாசலம் செல்வாக்கு அதை விட அவள் மேலே உள்ள காதல் அவனை கட்டி போட்டது.


ஆனால் மரகதம் அப்படி இருக்கவில்லை தன் மகன் தான் எல்லாவற்றுக்கும் வாரிசாக இருக்க வேணும் அதை விட மகன் கையில் நிர்வாகம் மொத்தமும் இருந்தால் தான் நினைத்தபடியே செலவு செய்யலாம் என நினைத்து நேரடியாக காயத்தியிடம் மோதாது மகன் மூலமாக காய்களை நகர்த்த தொடங்கினார்...காயத்திரிக்கு தணிகாசலம் பிரமாண்ட வளைகாப்பு செய்து வைத்தார் அப்போது கூட அவளை துவாரகேஷ் தணிகாசலத்திடம் அனுப்பவில்லை ஒரு நல்ல நாளில் சந்தனா பிறந்தாள் கூடவே காயத்திரியின் உடல்நிலையும் கெட ஆரம்பித்தது... அவளை பிரசவ காலத்தில் சரியாக கவனிக்காதால் அனீமியா ஆனது தணிகாசலம் அப்போது தான் தன் இன்னொரு முகத்தை காட்டினார்.


ரொம்ப கடுமையாக துவாரகேஷ்யிடம் பேசி காயத்திரியை குழந்தையோடு அழைத்து வந்து விட்டார் அப்போது அவருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக துவாரகேஷ் எதுவுமே பேசவில்லை... காயத்திரியை தாயாக பார்த்து கொண்டது ஒரேய வயது உடைய அபிராமி அவள் தணிகாசலத்தின் பி,ஏ மகள் காயத்திரி உயிர் சினேகிதி குழந்தையும் அவளோடு நன்றாக ஓட்டி கொண்டாள். ...காயத்திரிக்கு கொஞ்சம் உடம்பு நன்றாக ஒரு நல்ல நாளில் ஊர் அழைத்து குழந்தைக்கு பெயர் வைத்தார் தணிகாசலம் மகளை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார் அபிராமிக்கு தான் சந்தனாவை பிரிந்தது வருத்தம் அவளுக்கு தணிகாசலம் மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருந்த நேரம் அது... காயத்திரி தன் புகுந்த வீட்டுக்கு வந்த பிறகு தான் துவாரகேஷ்யிடம் சில மாற்றத்தை உணர்ந்தாள் எப்போ பாரு நீ பணக்காரி அது தான் நீ இப்படி பேசுகிற நடக்கிற என சொல்லி கொண்டு இருந்தான் கூடவே மரகதம் காயத்திரிக்கு புரிந்தது இது எதற்கு என அவள் தந்தையோடு கலந்து பேசி சிலதை செய்தவள் தன் காதல் உண்மை என நிரூபிக்க தன் கம்பெனி பொறுப்பை அவனிடம் கொடுத்தாள்...

அதற்கு பிறகு தான் அவன் முகத்தில் சந்தோஷம் வந்தது மரகதமும் அவளை தலையில் தூக்கி வைத்து கொண்டாட இத்தனையும் என் காதல் உட்பட நடிப்பா எல்லாம் கேவலம் இந்த பணத்திற்காக என நினைத்தவள் அடிக்கடி நோய் வாய்பட ...தணிகாசலம் மகளை தன் வீட்டுக்கு அழைத்து போகவா என கேட்க தாராளமாக என துவாரகேஷ், மரகதம் அனுமதி கொடுத்தார்கள் இனி அவள் இங்கே எதற்கு அது தான் கம்பெனி கைக்கு வந்து விட்டதே.


சும்மா சொல்ல கூடாது தொழில் விஷயத்தில் துவாரகேஷ் மன்னன் பத்தை நூறாக்கி காட்டினான் அது போல மது, மாது இரண்டுக்கும் அவன் அடிமையல்ல அவனை பொருத்த வரைக்கும் தொழில் தான் தேவை காயத்திரி மட்டும் தான் தன் மனைவி... ஆனா காயத்திரிக்கு தேவையாக இருந்தது அவனிடம் இருந்து அன்பான ஒரு சொல் அது பொய்த்து போக அவள் மனசை அது பாதிக்க உடம்பில் அதன் பிரதிபலிப்பை காட்டியது சந்தனாவை பொருத்த வரைக்கும் இரண்டு அம்மா காயத்திரி, அபிராமி... அவளுக்கு ஐந்து வயது இருக்கும் போது காயத்திரிக்கு எந்த சிகிச்சையும் பலன் அளிக்காது அவள் போய் விட. தணிகாசலம் மட்டுமல்ல துவாரகேஷ்யும் நொறுங்கி போனான்... அவன் காதலித்தது உண்மை தன் மகள் இறக்க தன் பேத்தி இப்படி தாயில்லாத பிள்ளையாக காரணம் மருமகன் என நினைத்த தணிகாசலம் கடுமையாக சில வேலைகளை செய்தார்.


நாட்கள் நகர தன் குழந்தை தன்னிடம் தான் வளர வேணும் அவள் என் காயத்திரி பிம்பம் என துவாரகேஷ் உண்மையாக கேட்க மரகதம் வேற கணக்கை போட்டு சொத்து பறி போக கூடாது என்பதால் அவரும் அதை சொல்ல... தணிகாசலம் சரி அழைத்து போ ஆனால் நீ அபிராமியை இரண்டாந்தரமாக கட்டி கொள்ள வேணும் அவளும் என் பெண்ணு தான் என் சொத்தில் பாதி அவளுக்கு என சொல்ல துவாரகேஷ் மறுக்க மரகதம் தான் அபிராமியை வற்புறுத்தி கட்டி வைத்தார்...

தணிகாசலத்திற்கு தெரியும் துவாரகேஷ் ஆண் குழந்தையை பார்க்க முடியாது அதை விட அவனுக்கு பிசினஸ் தான் முதலில் பிறகு தான் எல்லாம் மரகதம் சொல்லவே தேவையில்ல நிச்சயமாக குழந்தையை பார்த்து கொள்ள வேற பெண்ணை கட்டி வைப்பார் அந்த பெண்ணு சொல்ல தேவையில்ல நிச்சயமாக குழந்தைக்கு சித்தியாக தான் இருப்பாள்... அதை விட அபிராமி தானே அவளை வளர்த்து அதனால் அபிராமி, அவள் தந்தையான மூர்த்தியின் சம்மதம் கேட்டு கட்டி வைத்தார் ஆனால் சொத்து விஷயத்தில் அவர் மட்டுமல்ல காயத்திரியும் வைத்த ட்விஸ்ட் தான் தணிகாசலம் ,துவாரகேஷ்யிடம் இடைவெளியே ஏற்படுத்தியது.


நிலவு வரும்….
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்: 04



காயத்திரி இறந்த பிறகு அவள் மீதி சொத்துக்களை துவாரகேஷ் தன் பிசினஸ்சில் இன்வெஸ்ட்மென்ட் செய்ய நினைத்தவன்.... காயத்திரியின் குடும்ப லாயரை அணுக அவர் தணிகாசலத்தின் நம்பிக்கைக்குரியவர் துவாரகேஷை ஒரு பார்வை பார்த்தவர்.

லாயர் “மிஸ்டர் துவாரகேஷ் நீங்க கேட்பதில் தவறு இல்லை இது உங்க மனைவி சொத்துக்கள் பட் இதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது “என்றார்.

துவாரகேஷ் “சிக்கலா என்ன சிக்கல் லாயர் சார் இதை நான் விற்க கேட்கவில்லை பிசினஸ்சில் இன்வெஸ்ட்மென்ட் செய்ய தான் கேட்கிறேன்…அது மட்டுமல்ல இதில் வேற யாருமே பங்கு கேட்க கூட முடியாது காயத்திரி ஒற்றை வாரிசு பிறகு என்ன” என கேட்டார்.

லாயர் “யஸ் அது உண்மை பட் ட்விஸ்ட் வைத்தது வேறு யாருமல்ல காயத்திரி “என துவாரகேஷ் என்ன என அதிர்ச்சியாக கேட்டார்.

லாயர் “ஆம் நீங்க காயத்திரியின் எந்த சொத்துக்களையும் தொட முடியாது அதை தொட கூடிய உரிமை அவள் பெண்ணு சந்தனாவுக்கு கூட இல்லை அவளை கட்டிக்க போகிறவனுக்கு தான் உண்டு…அதுவும் அந்த உரிமையை அவன் பயன்படுத்த வேணும் என்றால் அதற்கு சந்தனா ஓப்புதல் வேணும் சொத்துக்கான முழு உரிமை சந்தனாவின் வயிற்றில் பிறக்கும் பிள்ளைங்களுக்கு தான் உண்டு “என சொன்னார். துவாரகேஷ் கோபமாக எழ அவன் இருந்த சேர் பின்னால் நகர .

துவாரகேஷ் “வாட் ரப்பிஷ் மிஸ்டர் குணால் அது என் மனைவியின் சொத்து அதை வேற ஒருவன் எப்படி பயன்படுத்த முடியும்…அதுவும் அவளை கட்டி கொண்ட நான் அவள் பெத்த பெண்ணு உயிரோடு இருக்கும் போது இது எப்படி சொல்லுபடியாகும் நான் இதை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போட போகிறேன்” என சொன்னார்.


லாயர் “இருக்கலாம் பட் இது காயத்திரி சுயநினைவோடு இருக்கும் போது எழுதிய உயில் இருக்கிறது அது உங்களுக்கு தெரியுமா? அதுவும் சாட்சி கையெழுத்து போட்டது தணிகாசலம் சாரின் இரண்டு பெஸ்ட் ப்ரண்டஸ் அவங்க யாரு தெரியுமா?...இரண்டு பேருமே அரசாங்கத்தில் வேலை பார்ப்பவங்க ஐட்ஜ் புண்ணிய மூர்த்தி அடுத்து சென்னை சிட்டி கமிஷனர் சுரேந்திரன் சோ இந்த உயில் சட்டபடி செல்லுபடியாகும்…அது மட்டுமல்ல மிஸ்டர் துவாரகேஷ் இது எல்லாம் தணிகாசலம் சாரின் பரம்பரை சொத்துக்கள் காயத்திரின் சுய சம்பாத்தியம் சோ கேஸ் போட்டாலும் நிற்காது உங்களுக்கு தான் பணமும் டைமும் வேஸ்ட் “என சொன்னார்.

துவாரகேஷ் “ஆல் ரைட் நான் பேச வேண்டியவரிடம் பேசி கொள்கிறேன்”என சொன்னவன் நேராக வந்த இடம் தணிகாசலத்தின் பங்களாவுக்கு தான் துவாரகேஷ் வர முன்னே தணிகாசலத்திற்கு தகவல் வந்து விட்டது. ...அதுவும் இன்று அபிராமி அவரை பார்க்க சந்தனா, நித்திலன் இருவரையுமே அழைத்து வந்து இருந்தாள் நித்திலனுக்கு தன் பாட்டி மரகத்தை விட அன்பாக பேசி அவனை அரவணைக்கும் தணிகாசலத்தை தான் பிடித்து இருந்தது... அவர் தன் பேத்தி, பேரன் கூட விளையாடி கொண்டு இருக்க மாமா என சத்தமாக அழைத்து கொண்டு துவாரகேஷ் வர அவர் போட்ட சத்தத்தில் சந்தனா பயந்து அபிராமி பின்னே மறைந்து கொள்ள நித்திலன் தணிகாசலம் மடியில் இருந்து துவாரகேஷ்யை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

தணிகாசலம் “வாங்க மாப்பிள்ளை ரொம்ப நாளாகி விட்டது நீங்க இந்த வீட்டுக்கு வந்து என்ன செய்வது சில நிஜங்களை ஏற்று கொள்ள வேண்டியதாக தான் இருக்கிறது…அம்மாடி அபிராமி வாராத உன் புருஷன் நம்ம வீட்டுக்கு வந்து இருக்கிறார் விருந்துக்கு நம்ம ராணியை ஏற்பாடு செய்ய சொல்லு மா” என்றார்.

துவாரகேஷ் “நான் ஒன்றும் சாப்பாடு இல்லாமல் நாக்கை தொங்க போட்டு கொண்டு விருந்தாட வரவில்ல…உங்க பெண்ணு காயத்திரி எனக்கு பெரிய விருந்தாக போட்டு விட்டு போய் இருக்கிறாள் என்ன இது எல்லாம் என குணால் கொடுத்த ஜெராக்ஸ் எடுத்த உயில் பேப்பரை எல்லாம் அவர் காலடியில் தூக்கி எறிய தணிகாசலம் முகம் மாறியது... அவர் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு அவமானத்தை சந்தித்து இல்லை இதை பார்த்து கொண்டு இருக்க முடியாத.

மூர்த்தி “மாப்பிள்ளை மரியாதையாக நடந்து கொள்ளுங்க ஐயாவை யாரென நினைத்தீங்க காயத்திரி பாப்பாவை கட்டி கொண்டால் என்ன வேணும் என்றாலும் செய்யலாம் என நினைக்க வேணாம்…ஐயா நினைத்தால் ஒரு நிமிஷம் போதும் உங்களை நடு தெருவில் நிறுத்த “என கோபமாக சொன்னார்.

துவாரகேஷ் “ஏய் வாயை மூடு நீ எல்லாம் என் முன்னே நிற்க கூட தகுதி இல்லை பேச வந்து விட்டாய்? என்ன பெண்ணு கொடுத்து விட்டோம் என திமிரா…உன் பெண்ணை கட்டி கொண்டது இதோ என் பெண்ணை பார்த்து கொள்ள தான் சரி நம்பி வந்தவளை ஏமாற்ற கூடாது என்று தான் அவள் கூட வாழ்ந்தேன்.. அதற்கு சாட்சி குழந்தையும் இருக்கிறான் இதுவே இவளை போல ஆளுங்க எல்லாம் இது அதிகம் நீ என்னை கேள்வி கேட்க வந்து விட்ட” என்றான். துவாரகேஷ் என சத்தம் போட்டவாறே நித்திலனை தூக்கி கொண்டு எழுந்தார் தணிகாசலம்.

அவர் “துவாரகேஷ் வார்த்தை எல்லை மீறுகிறது மூர்த்தி எனக்கு பி,ஏ என்ற பெயர் தான் ஆனா என் தம்பி அவன் அபிராமி என் பெண்ணு அவள் எப்படிப்பட்ட பெண்ணு தெரியுமா?உங்க போல ஆளுங்களுக்கு எல்லாம் இப்படிப்பட்ட பெண்ணுங்க கிடைப்பது வரம்...நான் உங்களுக்கு கொடுத்தது இரண்டு பெண்ணுங்களை ஒன்றை தான் உங்க அலட்சியத்தால் இழந்தீங்க இவளையும் இழந்து விடாதீங்க என் ஒற்றை வார்த்தைக்காகவும் என் பேத்திக்காகவும் தான் இவள் உங்களை கட்டிக்க சம்மதம் சொன்னாள்…

நான் இவளுக்கு உங்களை விட உயர்ந்த மாப்பிள்ளையை பார்த்தேன் ஆனா இதோ இருக்கிறானே மூர்த்தி நீங்க வேற கல்யாணம் பண்ணி கொள்வீங்க சந்தனாவை வருபவள் அம்மாவாக பார்த்து கொள்ள மாட்டாள்... என் பெண்ணால் தான் அது முடியும் என என்னை வற்புறுத்தி உங்க கிட்ட என்னை கேட்க வைத்தான் அவனை போய் என் கண் முன்னாடி நீங்க கேவலமாக பேசுகிறீங்க இது தான் உங்களுக்கு கடைசி எச்சரிகை மரியாதையாக பேசுங்க இப்போ எதற்காக இந்த சத்தம்” என கேட்டார்.

துவாரகேஷ் “எதற்காகவா? ஏன் உங்களுக்கு தெரியாதா உங்க ஆசை மகள் உங்களுக்கு தெரியாமல் ஏதுவுமே செய்ய மாட்டாளே…இதோ உங்க பி,ஏ மூர்த்தி அவருக்கும் அவர் பெத்த பெண்ணுக்கும் கூட இந்த விஷயம் தெரிந்து இருக்கும் உங்களிடம் தான் ஒளிவுமறைவு என்பதே இல்லையே…சரி நேரடியாக கேட்கிறேன் காயத்திரி எதற்காக இப்படி ஒரு உயிலை எழுதினாள் சொல்லுங்க அவளை காதலித்து கட்டி கொண்டவன் நான் எங்க காதலுக்கு சாட்சியாக ஒரு பெண்ணு கூட இருக்கிறாள் பிறகு எதற்காக இப்படி ஒரு உயிலை எழுதினாள்…இதற்கு பின்னால் இருப்பது நீங்களா இருப்பீங்களோ? என எனக்கு சந்தேகமாக இருக்கிறது “என்றான்.

தணிகாசலம் “காதலா அது இப்போ வரைக்கும் காயத்திரி மேலே உங்களுக்கு இருக்கா மாப்பிள்ளை உங்க இதயத்தை தொட்டு சொல்லுங்க…என் ஒரேய பெண்ணு தாயில்லாதவள் என ஆசையாக வளர்த்தேன் அவள் நினைத்தாலே போதும் அதை நிறைவேற்றி வைப்பேன் என் பெண்ணும் மற்ற பணக்கார பெண்ணுங்க போல இல்லாமல் நல்ல பெண்ணாக தான் வளர்ந்தாள்...அவளால் எனக்கு எந்த பிரச்சனையும், கவலையும் வந்தது இல்லை என் பெண்ணு என் கிட்ட வாய் திறந்து கேட்டது ஒன்று தான் உங்களை கல்யாணம் பண்ணி கொள்ள வேணும் என்று…

நானும் சராசரி அப்பா போல இல்லாமல் உங்க குடும்பத்தை பற்றி விசாரித்து உங்களை அவளுக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன்…நீங்களும் ரொம்ப நல்லா தான் அவளை பார்த்து கொண்டீங்க இடையில் தான் உங்களுக்கு ஈகோ என்ற பேய் பிடித்து ஆட்டி வைத்தது அதற்கு காரணம் உங்க அம்மா மாப்பிள்ளை நான் பல தொழில் பண்ணுகிறவன் இது கூடவா எனக்கு தெரியாமல் இருக்கும்…

என் பெண்ணு மனதில் நீங்க அவள் காதலித்த துவாரகேஷா என்ற எண்ணத்தை உருவாக்கி இறுதியில் நீங்க அவளை பணத்திற்காக தான் காதலித்தது போல நடித்தீங்க என்பதில் வந்து நின்றது ...அவள் ரொம்ப அழுத்தகாரி அவளுக்கு தோல்வி பிடிக்காது அதுவும் பெத்த அப்பா என் கிட்ட கூட உங்களை பற்றி தப்பாக ஒரு வார்த்தை சொல்லவில்லை காரணம் நீங்க என் முன் தரம் குறைந்து போய் விட கூடாது என்று.


நீங்க படித்தவர் தானே ஒரு தங்கச்சி கூட பிறந்தவர் தானே கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் மனநிலை எதை எதிர்பார்க்கும் என தெரியாதவரா அவள் எதிர்பார்த்தது உங்க அரவணைப்பை… அதை நீங்க அவளுக்கு கொடுக்காமல் அவள் பிசினஸை கொடுக்க சொல்லி கேட்டாள் அவள் என்ன நினைப்பாள் அது தான் என் கிட்ட இப்படி உயில் எழுத போகிறேன் பா என சொல்ல எனக்கு அதிர்ச்சியாக போய் விட்டது…கர்ப்பமாக இருக்கும் போது ஒரு பெண்ணு உயில் வரை யோசிப்பது என்றால் எனக்கு சரியாகபடவில்லை டாக்டரிடம் சொன்ன போது அவன் இது வழமையாக கர்ப்ப காலத்தில் வரும் ஹார்மோன் மாற்றம் குழந்தை பிறந்தால் சரியாகி விடும் அவள் போக்கில் செய்ய விடுங்க என சொன்னார் ஆனா அவள் நினைத்தது சரி என அவள் இறந்த பின்னாடி தான் எனக்கு புரிந்தது.


அதுவும் பாப்பா பெயரில் இருந்தால் நீங்க அவள் அப்பா என்ற முறையில் அவள் கையெழுத்து வாங்கி பயன்படுத்துவீங்க என்று தான் இப்படி எழுதி இருக்கிறாள் அது மட்டுமல்ல ஒரு வேளை நீங்க அபிராமி இல்லாது வேற பெண்ணை கட்டி கொண்டால் தன் பெண்ணுக்கு ஆபத்தாகி விடும் என்று நினைத்து இருக்கலாம்… அதனால் இந்த உயில் தான் சரியானது என எனக்கு தோணுகிறது இன்னும் ஒன்று இது என் பரம்பரை சொத்துக்கள் இதில் நான், என் பெண்ணு, பேத்தி இவங்களை தவிர வேற யாருமே நீங்க உட்பட தலையிட முடியாது...

காயத்திரியின் அம்மா வழி சொத்துக்களை தான் அவள் உங்களுக்கு பிசினஸ் செய்ய கொடுத்தாள் மொத்தில் நீங்க மட்டுமல்ல உங்க குடும்பமும் என் பெண்ணால் தான் இந்த சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறீங்க” என கொடுத்து கட்ட துவாரகேஷ் ஈகோ தூண்டப்பட்டு முகம் மாற.

அவன் “ஓ அப்படியா அப்போ உங்க பெண்ணு போட்ட பிச்சையில் தான் நான் வாழ்கிறேன் என்பது உங்க நினைப்பு…சரி இனி உங்க பெண்ணே இல்லை என்ற போது நம்மிடையே எந்த உறவும் வேணாம் இனி என் பெண்ணு இந்த வீட்டுக்கு வர மாட்டாள் நீங்களும் என் வீட்டுக்கு வர கூடாது.. .உங்க பெண்ணு என் மேலே நம்பிக்கை இல்லாமல் தானே இப்படி ஒரு உயில் எழுதி வைத்து விட்டு போனாள் அதற்கு நீங்களும் துணையாக இருந்து இருக்கிறீங்க மிஸ்டர் தணிகாசலம் அப்படிப்பட்ட உங்க உறவு எனக்கு வேணாம்…

அபிராமி இது உனக்கும் சேர்ந்து தான் சொல்கிறேன் இனி இவர் கூடவோ உன் அப்பா கூடவோ உனக்கு எந்த உறவும் இருக்க கூடாது மீறி இருத்தால் என் இரண்டு பசங்களுக்கும் நான் இன்னொரு அம்மா தேட வேண்டி இருக்கும் எப்படி வசதி என கேட்க அபிராமி கலங்கி போனாள்... அவளுக்கு தேவை துவாரகேஷ் அல்ல இரண்டு குழந்தைகளும் அவள் தணிகாசலத்தை பார்க்க அவர் கண் மூடி திறந்தவர் அவர் பார்த்து கொள்வதாக சொல்ல அபிராமி சரியென தலையசைக்க துவாரகேஷ் அபிராமி பின்னால் இருந்த மகளை தூக்கி கொள்ள... அபிராமி தணிகாசலம் கையில் இருந்த நித்திலனை வாங்கி கொள்ள அவன் தாத்தா தாத்தா என அழ தொடங்க சந்தனாவும் அது போல அழ தொடங்க தணிகாசலம் கண்கள் கலங்க நிற்க துவாரகேஷ் அவர்களை அவரிடம் இருந்து மொத்தமாக பிரித்து அழைத்து கொண்டு போனான்.



நிலவு வரும்…
 
Last edited:
Status
Not open for further replies.
Top