ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பன்னீரைத் தூவும் மழை-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
பன்னீரைத் தூவும் மழை-கதை திரி
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 1

உப்புக்கு பெயர் போன நகரம் தூத்துக்குடி...இந்த மாவட்டம் பல நூற்றாண்டுகளாகக் கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக்குளிப்புக்கும் சிறந்து விளங்குவதால் இந்நகரம் முத்து நகரம் என்றும் அழைக்கப்படுகிறது...
பாண்டிய மன்னன்னால் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது...

நமக்காக போராடுன உன்னத தலைவர்கள் பலர் இம்மாவட்டத்தில் பிறந்தவர்கள் தான் ...( வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதி, வ உ சிதம்பரனார் )..

பழமை வாய்ந்த சிறிய துறைமுகமாகிய இத்துறைமுகத்தின் கலங்கரை விளக்கு கடல் வாணிப்பத்திற்கு மிகவும் உதவி உள்ளது...

தற்போது இத்துறைமுகத்தின் வாயிலாக உப்பு, பருத்தி நூல், சென்னா இலைகள், பனைப் பொருட்கள், நார், உலர் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது..

இத்துறைமுகம் நாட்டின் 10வது பெரிய துறைமுகமாகும், வருடத்திற்கு 1 பில்லியன் சரக்குகளை கையாள்கிறது...

அப்படிப்பட்ட மாநகரத்தில் பிறந்து வளர்ந்தவள் தான் நம் நாயகி வசுந்தரா..

பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த ஊரில் தான்..
பண்ணியாற்றுவது ஒரு IT கம்பெனியில்...

அது ஒரு அதிகாலைபொழுது அயர்ந்த நித்திரையில் இருந்தாள் வசு .. சரியாக அலாரம் '5' மணிக்கு டான் என தன் வேலையை செவ்வனே செய்தது...

அதை அமைதி படுத்திட்டு மறுபடியும் படுத்து விட்டாள்..

என்னதான் அதை அடிச்சு அமைதி படுத்தினாலும் அது ஒரு அழகான விஷயத்தை நமக்கு கற்றுதான் தருகிறது.. "நேரம்தவரான்மை"... இன்னிக்கு நிறைய பேர்கிட்ட இல்லாததும்... நிறையபேர் வா ஞ்சிக்கிறதும்...

தனக்கு கொடுத்த டாஸ்க்கை சரியான நேரத்துல அந்த அலாரம் செய்ஞ்சுடும் "நோ மேட்டர் வாட் தி சீட்யேஷன் இஸ்".. இப்படி தான் காலையிலே நம் எல்லாருக்கும் இந்த பாடத்தை கற்று கொடுக்கிறது...

'ஹே வசு, எந்திரு டா' மணி ஆச்சு - சாரா அவளின் அம்மா..

இப்போ எந்திச்சு கிளம்ப ஆரம்பிச்சாதான் ஒன்பது பத்துகுள்ள கிளம்புவ, எந்திரி என்று சொல்ல...

அம்மா ப்ளீஸ் கொஞ்ச நேரம், ரொம்ப டயர்ட் ஆஹ் இருக்கு..

நேரமே எந்திச்சு பழகு வசு, அப்புறம் மாமியா மிதிக்க போறா போகுற எடத்துல..

ம்மா, காலம் காலமா இதே வார்த்தையை அச்சுப்பிசகாமல் எப்படித்தான் எல்லா அம்மாவாலயும் சொல்ல முடியுதோ!! .

ஏபிள(ஏ, புள்ள இது மருவி ஏபிள அல்லது ஏப என்று அந்த ஊரில் கூப்பிடுவர்) எந்திரி கழுதை.. வாய் மட்டும் வக்கணையா பேசு. உங்கப்பா வந்தா தெரியும்....

ஹைஐயோ, ம்மா, அப்பா எந்துச்சுட்டாங்களா??

ஆமாடி, எந்துச்சு தோட்டத்துல தண்ணீர் பாய்ச்ச போயிருக்காங்க...

அவர்கள் வீட்டின் இடம் பத்து சென்ட், அதில் ஐந்து சென்ட்ல வீடும், மீதி இருக்கிற இடத்துல வேப்ப மரம், பப்பாளி மரம், சப்போட்டா மரம், மா மரம், வாழை மரமும்... வீட்டிற்கு இடது பக்கமும், முன்னாடியும் பூ மரங்களும் வைத்து பாதுகாத்து வருகின்றார்கள்..

ஆம் பாதுகாப்பதே தான். மரம், செடி கொடி வளர்ப்பது என்பது சிறு குழந்தையை வளர்ப்பது மாதிரி.
நேரத்துக்கு களையை பிடுங்குவது ஆகட்டும், தண்ணீர் பாய்ச்சுவது ஆகட்டும், உரம் வைப்பது ஆகட்டும் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும்.
சரியாக கவனிக்கவிலை என்றால் அது ஏக்கம் கொண்டு மாய்ந்துவிடக் கூடும்.


வசுந்தரா தகப்பன் வழி தாத்தா ரிடயேர்ட் மிலிட்டரி ஆஃபீஸ்ர், எதிலும் நேர்த்தி.. ஒய்வு பெற்றவுடன் தூத்துக்குடி பக்கத்தில் படுத்தாம்பட்டி (பட்டிதேவன்பட்டி ) என்ற ஒரு சிறு கிராமத்தில் நிலம் வாங்கி விவசாயம் செய்தவர்.. அதில் இவள் அப்பா ஜோஷுவா சிறிது சிறிது உதவி செய்து விருப்பதோடு கற்றுக்கொண்டாவர்..
எப்பாடுப்பட்டாவது வேலைபார்க்கும் ஊரில் ஒரு பத்து சென்ட் ஆவது வாங்கி தோட்டம் வைத்தே ஆக வேண்டும் என்று வைராக்கியங்கொடு வாங்கியது தான் இந்த இடம்...
தன் விருப்பப்படி வீடும் கட்டி, தோட்டமும் வைத்து அதை கவனமாக பாதுகாப்பவர்.
அவர் தனது பிள்ளைகளையும் எப்படியாவது இதில் ஒரு நேரப்போக்குவாதற்காவது பழக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வசுந்தராவையும் அவளது தம்பி அருணையும் இதில் ஈடு படுத்திவிட்டார்...
பிள்ளைகளும் ஆரம்பத்தில் விருப்பம் இல்லையென்றாலும் போகப் போக விருப்பமாகவே கற்றுக் கொண்டார்கள்...
இவள் சோம்பேறி ஆனால் இவளது தம்பி கொஞ்சம் உதவிக்கரம் விருப்பதோடு நீட்டுவான்.. காலையிலும் மாலையிலும் தண்ணீர் ஊற்றுவதற்கு, சில நேரம் உரம் வாங்குவதற்கும்....
அப்பா ஜோஷுவா, அம்மா சாரா இருவரும் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர்களாக இருப்பவர்கள்.. ஒரு தம்பி அருண் எம். காம் முதலாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறான்...

வசு, உன் தம்பியே நேரமே எந்திச்சு அப்பாவுக்கு அனுசரனையா இருக்கான்.. உனக்கு தான் பொறுப்புனு ஒன்னு வரவே இல்லை..

சரிய்ய்ய்ய்ய், ம்மா காலையிலே உங்க சுப்பிரபாதத்தை ஆரம்பிக்காதீங்க....

சாரவும் தன்னுடைய சமையல் வேலையை கவனிக்க செல்ல, மெதுவாக இவள் சோம்பல் முறித்து, தன் காலைகடன்களை முடிக்க சென்றாள்...

வசுந்தரா, வயது 25.. ஒரு பெரிய IT நிறுவனத்தில் சென்னையில் வேலை பார்ப்பவள்.. தற்பொழுது அந்த வேலையில் கொஞ்சம் போர் அடிக்க அதுவும் செல்லும் இடமும் தூரமாக இருக்க, இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டு விட்டாள் ... வேற வேலையும் கிடைத்தாகிவிட்டது.. அது ஒரு நடுத்தரமான தற்போது நிலை பெற்றுக்கொண்டு வரும் நிறுவனம்... இவள் இருக்கும் இடம் பக்கத்துலயே என்பதால் இன்னும் கூடுதல் வசதி... இன்னும் ஒரு வாரத்தில் அந்த புதிய நிறுவனத்தில் சேர வேண்டும்...

அதே சமயத்தில் ஒரு வரன், இரண்டு வீட்லயேயும் பொருந்தி வந்தது.. அதன் பொருட்டு இன்னிக்கு வீட்லயே பூச்சுடும் விழா...

பையனிடம் இன்னும் பேசவில்லை.. பேச கூடாதுனு இல்ல பட் பேச தோணல.. மாப்பிளை முதலில் பேசட்டுமே என்கிற மனப்பான்மை தான்..

இதுவரை காதல் என்கிற உணர்வு யாரிடமும் தோணுவும் இல்லை.. வீடும் ஒரு காரணம், அவளது வீட்டை பொறுத்த வரை லவ் தீண்ட தகாத சொல்.. லவ் பண்ணா சேரனும் இல்லனா பண்ண கூடாது என்கிற எண்ணம் இவளுக்கு.... அதனால ஒதுங்கியே பழகிட்டாள்...

அதுவும் இல்லாமல் எத்தனை பெண் பார்க்கும் படலம் மணமேடை வரை போகுதுங்கிற எண்ணமாகவும் இருக்கலாம்....

பையனின் பெயர் தேவ கிருபை. வயது 31.. பொறியியல் பட்டதாரியும் அதற்கு மேல் நிலை கல்வியும் படித்தவன்.. ஒரு நிறுவனத்தை நிறுவி அதை வெற்றிகரமாக கொண்டு செல்பவனாம்.. எந்த நிறுவனம் என்று கூட இவள் கேட்கவில்லை.. ஆனால் புகைப்படம் காட்டினார்கள், ம்ம் அழகான தோற்றம், புகைப்படத்திலயே கவர்ந்தும் இழுத்தான்.. கற்றையான மீசையும், நேர்த்தியான குறுந்தாடியும் ஒரு கம்பீரமான தோற்றத்தையே கொடுத்தது..

இப்டி எல்லாமே நினைத்து கொண்டு சேலையும் கட்டியாகியிற்று..

ராயல் ப்ளூ கலர்ல ஷிபான் டைப் சேலை, வகுடு எடுக்காமல் சென்டர் கிளிப் போட்டு கீழ கொஞ்சமாக லூஸ் விட்டு பிண்ணி விளிம்புல ஒரு கல் பதித்த கிளிப் போட்டாள்...

கூடு டைப்பில் ஜிம்மிகி கம்மலும் அதற்கு தோதாக கல் வைத்த நெக்லஸ் நகையும் ஒரு பெரிய ஆரமும் அணிந்து கொண்டாள்..

வசு, இந்தா பூ என்ற படியே வந்தார் சாரா..

ம்ம்மா, எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல சரம் சரமா பூ வைக்கதானே போறாங்க, அப்போவே வைக்கிறேன் மா...

"அவங்களாம் வரப்போ கொஞ்சமாச்சும் பூ தலையில இருக்கனும், எதிர்த்து எதிர்த்து பேசாம வை.. நான் போய் குளிச்சுட்டு வரேன்"

"தலை வழிக்கும் மா.."

"பரவால்ல, மாத்திரை தரேன்"

ஓஹோ, இப்போ மட்டும் மாத்திரை போடலாமா??

இன்னிக்கு ஒரு நாள் தானே ஒன்னும் ஆகாது வசு என்றார் சாரா..

ஹம்ம்கூம், உங்களுக்குனா மட்டும் ஒரு நியாயம்........
'கொடுங்க' என்றபடி, இரு பக்கத்துலயும் வழியும் மாதிரி ஹேர் பின் குத்திகொண்டாள்...

அழகா இப்போ தான் பொண்ணு மாதிரி லட்சணமாய் இருக்க வசு...

ம்மா,- என்று சிணுங்கினால்..

சரி சரி.. போய் சாப்பிடு என்ற படி சாரா குளிக்க சென்றார் ...

பெருசா அழகி இல்லை என்றாலும், ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அழகு தான்.. கோலிகுண்டு கணக்கான கண்கள், செர்ரி பழம் போல் இதழ்கள், எழுமிச்சை நிற கலர்.. சொல்லிக்கொள்ளும் அளவு பாந்தமான அழகு...

சாப்டுவிடலாமா என்று யோசிக்கும் வேளையில் அவளது அலைபேசி அழைத்தது...

இந்நேரத்துல யாரு என்றபடியே போன்னை எடுத்து காதில் வைத்தாள்..

"ஹலோ, வசுமா..."

'என்னது வசுமாவா? என்று ஜெர்க் ஆனாலும்'

"ஹலோ சாரி நீங்க? உங்கள எனக்கு தெரியுமா?"

"உன் அத்தைதான்மா.."

அத்தையா, எந்த அத்தை என்று யோசித்தவளிடம்..

"உன்னை கட்டிக்க போறவனோட அம்மா.."

ஆத்தாடி என்று அலறிய மனதை அடக்கி.. "ஓ, மன்னிச்சுடுங்க, உங்க நம்பர் என்கிட்ட இல்லை அதான் தெரில.."

"ஒண்ணும் பிரச்சனை இல்லை, உன்கிட்ட கொஞ்சம் பேசணும், அதான் நேரமே அழைச்சுட்டேன்.. இப்ப உன் பக்கத்துல யாரும் இல்லையே? தனியா தானே இருக்க? "

இந்த பீடிகை எல்லாம் உள்ளதுக்குள் பீதியை கிளப்ப, மேலும் என்ன விஷயமா இருக்கும், தனியா இருக்கியான்னு கேக்கறாங்க!!! யாருக்காச்சும் ஏதாச்சுமா??

இப்படி அந்த 10-15 வினாடியில் ஏகப்பட்ட கேள்விகள் அவளது மனதில்...

அது என்னவோ தெரில, இந்த பெண்கள் மனசு மட்டும் ஓராயிரம் கேள்விகள்/ பதில்கள் ஒரு நிமிடத்தில் நினைத்துவிடும் வல்லமை பெற்றது...

அதில் பாதி கேட்க முடியாதவை இல்லை என்றால் கேட்க கூடாதவை!! இப்படியாக இந்த காலகட்டமும் வரையறுத்து தான் வைத்து இருக்கிறது....

அதனால் தான் பெண்ணின் மனதை ஆழ் கடலுக்கு ஒப்பீடுகிறார்களோ???

யாராலும் அவ்வளவு எளிதாக ஆழ் கடலை அறிந்திட முடியாதல்லவா!!!!
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 2
கோயம்புத்தூர் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றாகும். இது மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு, நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரமானது மக்கள்தொகை அடிப்படையில் சென்னைக்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மற்றும் இந்தியாவின் பதினாறாவது பெரிய மாநகரம் ஆகும்.
இப்பகுதி சங்க காலத்தில் கோசர் குலத்தவர்கள் தங்கி உருவாக்கியதால், “கோசர்புத்தூர்” என்று வழங்கப்பட்டு பின்னர் கோயமுத்தூர் மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது
இன்னொரு கூற்றின் படி , “கோவன்” எனும் தலைவன் இருந்ததாகவும், அதன் பெயரிலே உண்டான ஊரே “கோவன்புத்தூர்” என்று வழங்கப்பட்டு பின்னர் கோயமுத்தூர் மருவி இருக்கலாம்.
இப்பெயர் “கோவையம்மா” எனபதிலிருந்து வந்திருக்கலாம் என்று மற்றொரு கோட்பாடு கூறுகிறது.
கோனான் வழிபட்ட தெய்வமான கோயம்மாவிடமிருந்து உருவான இந்த வார்த்தை கோனியம்மாவாகவும் பின்னர் கோவையம்மாவாகவும் மாறியது என்றும் கூறுகிறது…
அந்த நகரத்தில் பிறந்து வளர்ந்தவன் தான் தேவ கிருபை.. சுருக்கமாக தேவ் எல்லாருக்கும்..
அப்பா கிருபாகரன், அம்மா ஜெயந்தி.. ஒரு தம்பி பிரசாத் குமார்.. திருமணம் ஆகி ஒரு வயதில் ரோஷினி என்ற பெண் குழந்தை.. இவர்களின் திருமணம் காதல் திருமணம்.. தேவ் கிளம்பிட்டியா பா என்று அவனது கதவை தட்டினார் ஜெயந்தி…
இதோ வரேன் ம்மா என்று குரல் கொடுத்தவாரு தலையை வாரிக் கொண்டிருந்தான்..
அவனது கூர்மையான கண்களும், கற்றையான மீசையும், சீராக இருக்கும் குறுந்தாடியும் அவனுக்கு கம்பீரமே சேர்த்தது…. எப்படியும் 6.2 அடி ஆக இருப்பான்..
ஜெயந்தியின் கவலை ஒன்று தான் தன் தலைச்சான் பிள்ளைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று…
இவனுக்கு பெரிதாகா திருமணத்தில் நாட்டம் இல்லை ஒரு சில காரணங்களால்..
இதோடு 5 வரன் பார்த்தாகி விட்டது.. எதுவும் பொருந்தி வர வில்லை….
அதுவும் ஜெயந்திக்கும் தேவ்கும் எப்பொழுதும் இந்த பெண் பார்க்கும் விஷயத்தில் முட்டிக்கும் ….இந்த முறை டைரக்ட் ஆஹ் பூ வைத்து விடலாம் என்று உறுதியோடு இருக்கிறார்..
ஏனென்றால், பூ வைப்பதற்கு முன்பாக அவர்களது வழக்கத்தில் பொண்ணும் பையனும் ஒரு முறை பார்த்து பேச வைப்பார்கள்.. அப்படி நடந்த கடந்த ஐந்து முறையும் தேவ் என்ன பேசுவான் என்று முழுதாக தெரியாது ஆனால் கண்டிப்பாக அடுத்த நிலைக்கு அந்த வரன் செல்லாது..
தேவ் தான் காரணம் என்று ஜெயந்தி கண்டு பிடித்தார்.. எப்படியெனில் ஒரு முறை குறித்து வைத்த பெண்ணின் தந்தை கன்னாபின்னா என கத்த அப்பொழுது கண்டு கொண்டார்..
இந்த வரனை அப்படி லேசாக விட முடியவில்லை.. அவனிடம் இன்னிக்கு தெளிவாக பேச வேண்டும் என்று உறுதியோடு சோபாவில் இருந்து மாடியில் இருக்கும் அவனது வாசலை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார்..
ஒரு வழியாக தேவ் கிளம்பி படியில் இறங்கி கொண்டிருந்தான்..
அவனை பார்க்கும் போது ஜெயந்திக்கு உள்ளம் பூரித்தது என் மகன் என்று..
தட தடக்கும் உள்ளதோடு “தேவ், ஒரு நிமிஷம் “ என்று கூப்பிட்டார்.
“ம்ம்” என அழுத்தமான விழிகளோடு கேட்டான்…
“உன்ட்ட பேசணும் “
அவனது கண்கள் ஒரு முறை சுருங்கி இப்பொழுது கூடுதல் அழுதமாகவே ஏறிட்டன..
“நீ இந்த கல்யாணத்தை நிறுத்தக் கூடாது”
புரியல, என்ன சொல்ல வாரீங்க?
இது வரைக்கும் பார்த்தத நீ தான் நிப்பாட்னனு எனக்கு தெரியும் தேவ்…
“சரி, இருக்கட்டும்… இத நானும் மறுக்கவே இல்லையே… அதே சமயம் நீங்க ஒரு விஷயத்தையும் புரிஞ்சுக்கணும்.. நான் வேணும்னு ஏதும் பண்ணல.. உண்மைய மட்டுமே அவங்க எல்லார்கிட்டயும் சொன்னேன் அண்ட் சொல்லுவேன் மாம்..”
எது தேவ் உண்மை? -ஜெயந்தி
“எல்லாம் தெரிஞ்சும் இது உண்மையானு கேக்குறீங்களே ம்மா? “
“யாரோ ஒருத்தி சொல்றத எல்லாம் உண்மையா இருக்கணும்னு இல்லை தேவ்”
“மாம், ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ! ரியல்லி ஐ டோன்ட் வான்ன கெட் மார்ரி “ நீங்க பொண்ணு பார்த்தே ஆகணும் னு சொன்னதால மட்டுமே வரேன் “
நான் பொண்ணு மட்டுமா பாக்க சொல்றேன், கட்டிக்கவும் தான் சொல்லுறேன்…சரி, அதுலாம் போகட்டும்.. இனிமே நீ கல்யாணத்த நிறுத்த எதுவும் செய்ய கூடாது.. இத நான் உங்கிட்ட கெஞ்சி கேக்கறேன் தேவ்….
ஒகே மாம் உங்களுக்காக , பட் கண்டிப்பா நான் அந்த உண்மைய சொல்லுவேன்…அப்போ தி டெஸிஸின் இஸ் இன் ஹேர் ஹாண்ட்.. இவ்ளோ தான் என்னால முடியும்…
ஓஹ், இந்த கல்யாணத்த நடத்தாம நான் ஒய்யமாட்டேன் என மனதுக்குள் நினைத்த படி – சரி தேவ், உன் சைடு ல இருந்து இவ்ளோ தான் அப்டினா.. நா என்னால எவ்ளோ முடிமோ அவ்ளோ போராடி உன் கல்யாணத்த நடத்துவேன்...
பெஸ்ட் விஷேஸ் மாம்.. என்று தன்னுடைய லக்கேஜை எடுத்துக் கொண்டு போனான் ….
ஒருவழியாக கிளம்பி விட்டார்கள் எல்லாரும் தூத்துக்குடியை நோக்கி..பெரும்பாழும் அவர்களின் பிராயாணம் காரில் தான்… அதுவும் முடிந்த அளவு தேவ் தான் ஒட்டுவான்… கார் ஓட்டுவதில், அலாதி விருப்பமும் கூட..
அவர்கள் வந்து சேரவே சாயங்காலம் 6 மணி ஆகி விட்டது, அந்த ஊர்லயே இருக்கும் ஒரு ஹோட்டலிலே ரூம் எடுத்து விட்டார்கள்…. இவர்களது உறவினர்கள் எல்லாரும் மதுரை என்பதால் காலையில் வருவதாக இருந்தது..
ஜெயந்தியின் முகம் கவலையை பிரதீபலித்தது.. அதை கவனித்த கிருபாகரன்…
“ஜெயா, என்னமா என்ன ஆச்சு? “ என்று வினாவினர்..
“ஒண்ணும் இலைங்க..”
“இல்லை, உன் முகமே சொல்லுதே ஏதோ சரி இல்லனு..தேவ் என்ன சொன்னான் “
அவர் ஆச்சரியத்துடன், இதுதாங்க எனக்கு உங்கள்ட புடிச்ச விஷயம்… நா சொல்லறதுக்கு முன்னாடியே கண்டு புடிச்சுடீங்க…
இப்போதைக்கு உன் கவலை முழுதும் தேவ் னு எனக்கு தெரியாதா ஜெயா…
ஹ்ம்ம்… சரியா தான் சொல்லிருக்கீங்க.. அவன் கல்யாணத்தை வெறுக்குறான், இந்த பொண்ணு கிட்டயும் எல்லாத்தையும் சொல்றேன்னு சொல்றான்……
ஜெயா அவன் நிலைமையில் இருந்தும் யோசி… அவன் என்ன நடந்துச்சோ அத சொல்றேன் னு மட்டும் தான் சொல்லிருக்கான்.. அது நல்லதும் கூட, நாளாபின்ன பிரச்சனை வராது பாரு…
சரிங்க, புரிது பட் இவன் முரட்டுதனமா பேசுவான்.. அதுக்கே பொண்ணுங்க வேணாம் னு போய்டுறாங்க.. அதுனால நா ஒரு முடிவுக்கு வந்துட்டேன்…
“சாட்சிக்காரன் காலில் விழு வதைவிட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.. “னு
நான் பொண்ணு கிட்ட பேசலாம் னு இருக்கேன்…
சரிவரும்னு நினைக்கிறியா ஜெயா..நீ இப்போ பண்ணபோறது தான், அவனும் பன்னிட்டு இருக்கான்…
பட் ரெண்டுதுக்கும் ஓராயிரம் வித்தியாசம் இருக்கு கிருபா..
முடிவு பண்ணிட்ட, உன்ன தடுக்க முடியாதுனு புரிஞ்சிருச்சு… சரி வா வந்து படு, காலையிலே நேரமே எந்திச்சு கிளம்பனும்..
ஹ்ம்ம் என்றபடி ஒரு திட்டத்தை வகுத்துவிட்டு தூங்கச் சென்றார்…
அடுத்த நாள் காலை, பிரேக் பாஸ்ட்டை ஹோட்டலில் முடித்து தேவ் கிளம்ப சென்றான்..
இவன் பிளாக் பாண்ட் வித் ப்ளூ கலர் ஷர்ட்.. டக் இன் பண்ணிக்கொண்டான்… இடது கையில் ஃபாசில் வாட்ச், வலது கையில் ஒரு பிரேஸ்ளேட்…எப்பொழுதும் கழுத்தையொட்டி இருக்குற தங்கசெயின்… தலையில் ஜெல் வைத்து வாரிக்கொண்டான்…ஒரு மீட்டிங் அட்டன் பண்ண வேண்டியது இருந்தது.. அதுனால மடிகணினியை எடுத்துக்கொண்டு கனெக்ட் செய்ய அமர்ந்துவிட்டான்..
அவன் காலில் இருப்பான் என்று ஜெயந்தி அறிந்தபடியால்…. மணப்பெண் வசுவுக்கு அழைத்து பேசி விடலாம் என்று நினைத்து கால் எடுத்து விட்டார்..
வாசும்மா, உன் பக்கத்துல யாரும் இல்லையே நான் பேசலாம் இல்லையா?
அவளும், சொல்லுங்க யாருக்கும் ஏதும் இல்லையே எல்லாரும் நல்லா தானே இருக்காங்க? என்று கேட்டாள்..
எல்லாரும் நல்லா இருக்கங்க வசு.. நீ எனக்கு மிகப்பெரிய உதவி செய்யணும்…
“நானா? நான் என்ன செய்திட முடியும் என்று நினைத்து... “ என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்யறேன்..
“என் பையன் உன்ட பேசுவான், அப்போ இந்த கல்யாணம் வேணான்னு சொல்லுவான், அவனை புடிக்கலனு உன்ன சொல்ல சொல்லுவான்” ஆனா நீ அத மறுக்கணும்.. அவனை புடிச்சிருக்குனு சொல்லணும் எனக்காக..
அது எப்படி? புடிக்காம இருக்கிறவங்கள நாம ஏன் போர்ஸ் பண்ணனும்?
“வசு, அவனுக்கு கல்யாணத்தில விருப்பம் இல்லை ஆனா எனக்கு உன்ன விட இஷ்டம் இல்லை.. “
ஹையோ!! இதுலாம் ஒரு பையன் சொல்ல வேண்டியதே, எனக்கு மாமியார் சொல்றங்க…”மாமியார் ஆஹ் “ அப்போ முடிவே பண்ணிட்டியா வசு என்று அலறிய மனதை அடக்கி..
“ சரி, ஆனா கல்யாணத்துக்கு அடித்தளமே மனப்பொருத்தம் தான், அப்புறம் கொஞ்சம் விருப்பம், ஈர்ப்பு இதுலாம் சரி சமம் ஆஹ் இருக்கனும்.“ இதுலாம் இல்லாம அந்த திருமணம் கடைசிவரை நிலைக்கும் னு நினைக்கிறீங்களா?
நீ கேக்கறது கரெக்ட் தான், ஆனா எனக்கு உன் மேல அவ்ளோ நம்பிக்கை இருக்கு… பழகாத பொண்ணு மேல எப்படி நம்பிக்கை னு கேக்கலாம்… என் நம்பர் உன்கிட்ட இல்லை, பொதுவா தெரியாத நம்பர்ல இருந்த எடுத்தா, யாருனு கேப்பாங்க ஆனா நீ “உங்கள எனக்கு தெரிமா” னு அவ்ளோ அனுசரணையா கேட்டே…யாருனு தெரியாதவங்ககிட்டயே மனசு கஷ்ட படாம பேசணும்னு நினைக்கிற!! அப்போ உன் புருஷன எப்படி நல்லா பார்த்துப்பே… என்னைய நம்பு வசுமா…
இவளுக்கு இத எப்படி எடுத்துட்டு போகவென குழப்பம்..!!
இவள் அமைதியா இருந்ததும்.. ஜெயந்திக்கு பயம் தான்.. இது கடைசி வாய்ப்பாகவே கருதினார்… அதுவும் இல்லாமல் இவர்களின் பொருத்தம் சரியாக இருக்கும் என்று அவரின் மனது அடித்து கூறியது…
சிறிது நேரம் எடுத்து “ நான் என்ன பண்ணனும்னு எதிர் பாக்குறீங்க? “ என்று வினாவினால்…
அவன் என்ன பேசுனாலும் கண்டுக்காத, ஆனா காதுல வாங்கிக.. அப்புறம் சபையிலே வந்து புடிச்சிருக்கு னு சொல்லு அது போதும்!!எனைய நம்பு அவன் ரொம்ப நல்லவன், கொஞ்சம் கோவம் வரும், கொஞ்சம் முரடன் தான், அதுக்காக கட்டுனவள கைவிடறவன் கிடையாது….. முதல்ல உன்ன ஏத்துக்க தயங்குவான்…அப்புறம் கண்டிப்பா உன்ன அவன் கைல வச்சு தாங்குவான்…
சரி, கொஞ்சம் யோசிச்சுக்கட்டுமா??? என்று கேட்டாள்..
கண்டிப்பா யோசி, ஆனா நல்ல முடிவா எடு வசும்மா!!
சரி, நா வைக்கட்டுமா என்று கேட்டு வைத்துவிட்டார் ஜெயந்தி…
இவளின் யோசனை முழுக்க என்ன சொல்லுவது என்றுதான்.. வீட்ல சொன்ன, வேணாம் என்று சொல்லிடுவார்கள்…
ஆனாலும் இவளுக்கு ஜெயந்தியை மிகவும் பிடித்துவிட்டது.. வெளிப்படையா பேசுனதாலயா இல்லை வசுமா னு கூப்பிட்டதாலயோ!!
திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம் அல்ல இரு குடும்பத்தாரின் இணைவு…
அப்டி யோசிச்சு பாக்கும் போது ஜெயந்தியிடம் ஒரு நல்ல கனெக்ட் கிடைக்கும் என்று அவளுக்கு தோன்றியது..அதற்காவே ரிஸ்க் எடுக்கலாமா என்று அவள் மனதில்பட்டது ….
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 3
ஜெயந்தியின் சொந்த ஊர் மதுரை.. அம்மா மரகதம் அப்பா பெஞ்சமின்… இருவரும் பள்ளி ஆசிரியர்கள்…கிருபாகரன் ஜெயந்தியின் அத்தை பையன்.. அதாவது பெஞ்சமின் தங்கை பையன்.. விருப்பி திருமணம் செய்தவர்கள்....
கிருபாகரன் பெற்றோர்கள் அவரின் இருபதாவது வயதில் ஒரு விபத்தில் தவறிவிட்டார்கள்…
அப்பொழுது படிப்பதற்கு ஜெயந்தியின் பெற்றோர்கள் தான் உதவி செய்தார்கள்..
இவரின் நேர்மை, பொறுப்பு எல்லாவற்றையும் பெஞ்சமின் பார்த்து இவருக்கு தன் பெண்ணை கொடுக்க வேண்டும் என்று மிக விருப்பம்..
ஆனால் படிப்பிற்கு உதவி செய்தேன் அதுனால் பதில்க்கு என் பொண்ண கட்டிக்கோன்னு பேரம் மாதிரி ஆகிடுமோ என்று அவருக்கு ஒரு நெருடல்..
ஆனால், கிருபாகரன் அப்படி நினைக்கவில்லை… கட்டுனா ஜெயந்தி தான் என்ற முடிவுடன் பெஞ்சமினிடம் பெண் கேட்டவர்…
உடனே பெஞ்சமின் பச்சை கொடி காட்டி, திருமணத்தை நடத்திவிட்டார்..
திருமணம் முடிந்து சிறிது நாளில் கோவையில் வேலை கிடைக்க, அங்கேயே செட்டில் ஆகி விட்டனர்..
ஜெயந்திக்கு ஒரு தம்பி மட்டும், சாம்.. மதுரையில் ரோடு காண்ட்ராக்டர்… இவரது மனைவி சுகிர்தா அங்குள்ள பள்ளியில் ஆசிரியர்தான்..
இவர்களுக்கு ஒரு பெண் ஒரு பையன்.. பெண் லாவண்யா இப்போதான் காலேஜ் செல்லுகிறாள்.. பையன் ரூபன் டென்த் படிக்கிறான்…
பெஞ்சமின், இரண்டு வருடங்களுக்கு முன்னாடி உடல் உபாதையியின் நிமித்தமாக தவறிவிட்டார்..
சாம் குடும்பம் எல்லாரும் கிளம்பி ஜெயந்தி தங்கிருக்கும் ஹோட்டல்க்கு வந்து வரவேற்பு அறையில் காத்து கொண்டிருந்தனர்…
அப்பொழுது தான் தன் மீட்டிங்யை முடித்துவிட்டு, கிளம்பலாம் என்று தேவ்வும் வந்து கொண்டிருந்தான்…
வந்ததும், “பாட்டிமா, எப்படி இருக்கீங்க?”
மரகத பாட்டி என்றால் தேவ்க்கு இஷ்டம்.. அவரின் ஆழுமை மிகவும் புடித்த விடயம்…
“நா நல்லா இருக்கேன் பேராண்டி, என்ன என் பேத்தி என்ன சொல்றா??”
“யார பாட்டி கேக்குறீங்க?”
“அப்போ நீ கட்டிக்குற பொண்ணு கிட்ட இன்னும் பேச ஆரம்பிக்கலயா ராசா”…. என்று கேட்டவரிடம்…
“முதல்ல கல்யாணம் ஆகட்டும் அப்புறம் பேசலாம் பாட்டி” – தேவ்
“எனக்கு உன்ன புரிஞ்சுக்க முடியுது ராசா, ஒருத்தி பண்ண காரியத்தால இன்னொருத்தியயும் அதே கண்ணோட்டத்துல பாக்காதயா, எல்லா விரலும் ஒன்னு இல்லைதானயா?”
இருக்கலாம் பாட்டி, “ஆனா நா நேசிச்ச பொண்ணு ஏமாத்தி என்ன வேணாம் னு சொல்லி தூக்கி போட்டுட்டு, உசுர உருவி எடுத்த மாதிரி ஒரு வலி குடுத்துட்டு போய்ட்டாளே, அப்போ எந்த விரல் எப்படி இருந்தா எனக்கு என்னனு தான தோணும் பாட்டி”
ராசா, இப்படி லா நீ விசனபடாதயா.. வாழ்க்கைல, எல்லா காயத்துக்கு மருந்து ஒன்னு தான்.. காலம்.. காலம் தான் உன் காயத்தை ஆத்தணும்….
ஹ்ம்ம் என்றதோட நிறுத்திக்கொண்டான்..
அவன் ஓரளவு மனதை திறப்பது அவன் பாட்டியிடம் மட்டுமே.. அது என்னவோ பாட்டியிடம் ஒரு பற்றுதல்.. அவரிடம் சொல்லும் போது பாரம் இறங்கிய உணர்வு.. அவரும் தோண்டி துருவ மாட்டார்… அவன் நினைப்பதையும் துல்லியமாக புரிந்துகொள்பவர்… இவன் ஓரிரு வார்தைகள் சொன்னால் கூட அவருக்கு புரிந்துவிடும்.. அதுனாலயே இவரிடம் கொஞ்சம் ஒற்றுதல்…
அதே சமயம், சாம்மின் வாரிசுகள் ஹோட்டலை சுத்தி பார்த்து விட்டு வர…
ரூபன், தேவ்யை பார்த்தவுடன் “வாழ்த்துக்கள் அத்தான்” என்று கூறியதற்கு தலையசைத்தான் ஒரு சிறு முறுவலுடன்..
உடனே லாவண்யா, தேவ்விடம் .. “அத்தான் நீங்க என்ன ஏமாத்திட்டீங்க!! என்று முகம் சுருக்கினால்…”
இவன் புருவம் இரண்டும் சுருக்கி, என்ன என்ற தொனியில் நோக்கினான்..
அவன் அப்படி பார்த்தவுடன் உள்ளுக்குள் கிலியானாலும், நாங்கல்லாம் 2கே கிட்ஸ் பயத்த வெளில கட்டிடுவோமா என்ன என்று கெத்தாவே “என்னைய கல்யாணம் செஞ்சுக்கலையே, நீங்க என்ன கட்டிப்பிங்கனு ல நினைச்சேன்”…ஏமாத்திட்டீங்க தானே???? என்று கேட்டாள்…
தேவ் பேசுமுன்னே, மரகதம் வந்து “வாய மூடு, கழுதை.. ஆளு வளர்ந்த அளவு அறிவு வளர்ல, எல்லாம் உன் அப்பன சொல்லணும்… அவன் இடங்கொடுத்து தான் நீ என்ன பேசணும், ஏது பேசணும் னு தெரியாம நிக்குற”..
பாட்ட்ட்டீ, என்று பல்லை கடித்துக்கொண்டு கூவினால்…
அதற்குள், சுகிர்தாவும், இவள் கத்துனது மட்டும் கேட்டடு கொன்டே வந்தார்.....
ஹே லாவண்யா, ஏண்டீ பாட்டிகிட்ட கத்துற??
“ஹ்ம்ம், உனக்கு மட்டும் நல்ல மாமியார் அமைஞ்சிருக்காங்கல்ல அதான் எனக்கும் அப்டி வேணும்னு கேக்கறேன்…”
“எனக்கு புரில”
“ம்மா, உனக்கு என்னதான்மா புரிஞ்சுருக்கு”..என்றதற்கு
மரகதம் “சுகி, உன் மருமவன் உன் மவள ஏமாத்திட்டானாம் னு சொல்லிக்கிட்டு இருக்கா “
ஏண்டீ, என்று அவளிடம் கேட்டு விட்டு… “தம்பி, அவ கொஞ்சம் விளையாட்டு பிள்ள, தப்பா நினைச்சுக்காத” என்று சுகிர்தா கூறவும்
இவன் தலையை மட்டும் ஆட்டுனான்…
சாமும் வர “என்ன கோயம்பத்தூர் மாப்பிளைக்கு பொண்ணு கிடைச்சுருச்சு போலே” என்றபடியே அவனுக்கு கை குடுக்க…
இவனும் சிரித்தபடியே கை குடுத்தான்….
“எப்படி இருக்கீங்க மாமா” என்றதற்கு நா நல்லா இருக்கேன் மாப்ள என்றார்…
ம்மா, வாங்க.. வா சாம், சுகிர்தா… ஹே பாசங்களா, எப்படி இருக்கீங்க என்ற படி ஜெயந்தி வந்தார்…
“நாங்க நல்லா இருக்கோம் அத்தை” என்றாள் லாவண்யா…
“ஏன் ஜெயா இவ்ளோ நேரம்” என்ற மரகதத்திற்கு…
ம்மா, எல்லாம் எடுத்து சரி பார்த்து வைக்க கொஞ்சம் நேரம் ஆகிட்டு.. உங்கள ரூம்க்கு தானே வர சொன்னேன்…
இவங்களாம் சுத்தி பாக்க போனாங்க, சரி னு கொஞ்சம் உக்காந்துட்டேன்…
அதுக்குள்ள பேரன் வந்துட்டான்…
கிருபாவும் வர, “மாப்பிளை எப்படி இருக்கீங்க.. இப்படியாக பரஸ்பர விசாரிப்புக்கு பின் எல்லாரும் கிளம்ப ஆயத்தமானார்கள்….”
அருண் ஏற்கனவே, வீட்டின் முகவரியோடு லொகேஷனும் அனுப்பிருந்ததால் சுலபமாக வீட்டை சென்றடைந்தனர்….
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 4

இங்கே வசு சாப்பிட்டுவிட்டு யோசனையோட அமர்ந்துவிட்டாள்…

“ஹே, கல்யாணபொண்னே” எப்படி இருக்க என்றாவாறு வந்தாள் சௌந்தர்யா…

“சவி, வந்துட்டியா, ஏண்டீ இவ்ளோ நேரம்? உன் வீட்டுக்காரர் எங்க?”

சௌந்தர்யா, வசுவிற்கு சித்தியின் மகள்.. சாரதாவின் தங்கை வளர்மதியின் மகள்…
வசு, சௌந்தர்யாவை விட இரு வயது மூத்தவள்… ஆனால் இருவரும் தோழிகளை போல் பழகிகொள்வர்..

“எம்மா, கொஞ்சம் கேப் விடு.. எவ்ளோ கேள்வி…” நாங்க கிளம்பி அம்மாவை கூப்டு வர கொஞ்சம் லேட்டாகிட்டு… அப்புறம் உன் மூஞ்சுல ஒளிவட்டத்தையே காணும்? உன்பாட்டுக்கு தேமேன்னு உக்காந்துருக்க?..

“இல்லைடீ, ஒரு மாதிரி படபடனு இருக்கு”…என்ற வசுவிற்கு

“அப்டி தான் இருக்கும், எல்லா பொண்ணுங்களும் கடந்து வர வேண்டிய நிகழ்வு வசு பேபி…என்ஜாய் தி மொமெண்ட் பேபி….”

“சரி, மாப்பிளை என்ன சொல்லுராரு? ஒரே சாட்டிங், இச்சிங் ஆஹ்… “

“அட ச்சீ……லூசு மாதிரி கேக்காம வேற பேசு சவி”…

“ஹே வசு,உனக்கு ஒரு ஃபிரி அட்வைஸ்… எடுத்தவுடனே எந்த உணர்வையும் காட்டாத… முக்கியமா கோபம்.. நீ அட்ஜஸ்ட் பண்ற மாதிரியே காட்டிக்கோ… இன்னிக்கு பாதி பேர் நம்ம சரி பாதி தானே அதுனால நாம எப்படி இருக்கோமோ அப்படியே காட்டணும்னு எல்லாத்தையும் வெளிப்படையா கொட்டிடுறோம்… அதுனால் நம்ம கேரக்டர் அஸ்ஸசினேட் பண்ணிடறாங்க..
எடுத்தவொடனே அவங்க வீட்ட பத்தியோ இல்லை உன் மாப்பிளை பத்தியோ எந்த குறையும் சொல்லாம அப்செர்வ் மட்டும் பண்ணு… என்ன புரிதா?”

சவி, எனக்கு தல சுத்துது.. நீ சொல்றத கேட்டாலே..

நினைவு வச்சுக்கோ வசு, ரொம்ப குழப்பிக்க வேணாம்..

இப்டி இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரம், வசுவின் அத்தை வைஷாலி இவளை நோக்கி வந்து கொண்டிருந்தார்..

வைஷாலி, ஜோஷுவாவின் தங்கை… தூத்துக்குடியில் தான் இருக்கிறார்கள்… ஒரே ஒரு பையன் செல்வம்.. சென்னையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான்..

“என்ன மருமவளே, நீ என் பையன தான் கட்டிப்பேன்ல நினைச்சேன்..”

“உங்க நினைப்புக்குளாம் நாங்க பொறுப்பாக முடியுமா அத்தைய்ய்ய்ய்”…. என்று சௌந்தர்யா இழுத்து கிண்டலாக கூறினால்…

“இந்தாடியம்மா, இந்த நக்கலுளாம் எண்ட வச்சுக்காத”, என்றதற்கு…

“ஹே சவி, நீ சும்மா இரு” என்று அவளிடம் கூறிவிட்டு…


“அத்தை, இதுல நான் என்ன முடிவு பண்ண இருக்கு.. அப்பா என்ன சொல்றாங்களோ, அதானே அத்தை”

“ஹ்ம்ம், என்னமோ சொல்ற… அந்த காலத்துலளாம் அத்தை பையன தான் கட்டிக்கிட்டாங்க, கட்டிக்கிட்டவங்க தான் நல்ல இல்லையா, இல்லை குழந்தை தான் பிறக்கலயா, அப்படி பிறந்த குழந்தை தான் நல்லா வளர்லயா.. எல்லாம் நேரம் என்னத்த சொல்ல… தங்க சிலை மாதிரி இருக்குற உன்ன வெளில குடுக்க எனக்கு இஷ்டமே இல்லை…” என்று அங்கலாய்தவரிடம்

“அத்தை, உங்களுக்கு வைர சிலையே வரும்… கவலை படாதீங்க…” என்று கிண்டலா கூறியவளை முறைத்து பார்த்தார் வைஷாலி…

வசு, முதல்ல இவ சகவாசத்தை கட் பண்ணு…அப்போ தான் நீயும் ஒழுங்கா முடிவு எடுப்ப…

வைஷாலிக்கு, தன் அண்ணன் பெண் மருமகளாய் வருவதில் விருப்பம்…
அதே விருப்பம் செல்வதுக்கு இல்லை அங்கேயே ஒரு பொண்ணை விரும்புகிறான்… இன்னும் அவன் வீட்லயும் தெரியப்படுத்தவில்லை…

தெரிவிக்கிற நேரம், கண்டிப்பா ஒரு பிரளயம் வெடிக்கும் வைஷாலியிடம் இருந்து…

இந்த விஷயம் ஏற்கனவே சவிக்கும், வசுவிற்கும் தெரியும்…

இந்த தருணத்தில், சாரா வசும்மா, ரெடியா மாப்பிளை வீட்டுல வந்தாச்சு…
அண்ணி, சவிமா வாங்க போய் வரவேற்றுட்டு வருவோம்…என்று அவர்களை கூப்பிட்டார்….

வசு, இரு நான் போய் பார்த்துட்டு வரேன்.. மாப்பிளை தேறுவாரா இல்லை மாட்டாரானு என்றபடி சென்றுவிடவே…

இவளுக்கு அல்லு இல்லை..


மாப்பிளை தேறுவானா!!!!
 
Status
Not open for further replies.
Top