எனக்கு நிஜமா ஷன்மதி பார்த்தா பாவமா இருக்கு... அவன் அவளை அப்படி செய்யாது இருந்து இருந்தால் கூட அவள் காதலை பற்றி வெளியில் சொல்ல ஒரு வாய்ப்பாவது இருந்து இருக்கும்! எல்லாம் போச்சு!!
அவனின் கொள்கைகள் எல்லாம் எப்போவும் ஒத்து வரும் சொல்ல முடியாதே! தன் நண்பனிடம் கூட அவன் தவறை ஒத்து கொள்ளாமல் இருப்பது எல்லாம் என்ன கொள்கையோ தெரியலை...
அவனவள் என்று அவன் இன்று நினைக்கிறான் ஓகே ஆனால் அன்று அவளிடம் அத்து மீரும் போது ஒரு பெண்ணை அவள் உணர்வுகளை நினைக்காத நடந்தது , இன்றும் அந்த தப்பை பெரிதாக என்னாது இருப்பது எல்லாம் என்னவோ பண்ணட்டும்!!!
விக்கி பாவம் டா நீ அவன்கிட்ட மாட்டிகிட்டு முழிக்குற! அவனின் புலம்பல் எல்லாம் ஹாஹாஹா பாவம்! உனக்கும் ஒரு பொண்ணு வருவா டா அப்போ நீ தான் அவளுக்கு ஹீரோ!!!
சரத் என் மனசுல இருக்குற எல்லாம் நீ கேட்டுட்ட டா சூப்பர்... கல்யாணம் பண்ண போறியா வெரி குட்! பார்ப்போம் டா உன்னால் இன்னும் என்ன பூகம்பம் எல்லாம் வர போகுதுன்னு... எம்மா லீலா உன் பையன் சரண் பண்ணும் திருகுதாளம் எல்லாம் தெரிஞ்சுக்கோங்க முதலில், அப்பறம் அவளை குறையா நினைக்கலாம் ஹும்கும்..