ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆழ் கடலும் சோலையாகும்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஆழ் கடலும் சோலையாகும்-கதை திரி
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 1
லெட்சுமி இல்லம் பெயர் பலகையின் அருகே வாசலை மறைக்கும் அளவு பெரிய மாக்கோலம்.
லெட்சுமி அம்மா தான் கோலம் போட்டு வரலட்சுமி அழைக்கும் பாடலை பாடி கொண்டிருந்தார்.
"லட்சுமி ரவே மா இன்டிகியின் வரிகள்

லக்ஷ்மி ராவே மா இண்டிகி
வர லக்ஷ்மி ராவே மா இண்டிகி
க்ஷீராப்தி புத்ரி
வர லக்ஷ்மி ராவே மா இந்தி
க்ஷீரப்தி புத்ரி
வர லக்ஷ்மி ராவே மா இந்தி
லக்ஷ்மி ராவே மா இண்டிகி ராஜிதமுக நெளகுன்னா லக்ஷ்மி
ராவே மா இன்டிகி ராஜிதமுகா நெலகுன்னா
சூக்ஷமுக மோக்ஷமிச்சு சுந்தரி பிருந்தாவன தாரி
சூக்ஷமுக மோக்ஷமிச்சு சுந்தரி பிருந்தாவன தாரி
லக்ஷ்மி ராவே மா இண்டிகி...க்ஷீரப்தி புத்ரி
வர லக்ஷ்மி ராவே மா இன்டிகி
குங்கும பச்சை கஸ்தூரி கோர்கதோனு கோரோஜனமு

குங்கும பச்சை கஸ்தூரி கோரிக்கதோனு கோரோஜனம்" என்று வீட்டிற்கு வந்தவரை அழைத்து செல்லும் பாவனையுடன் அழைத்து சென்று பூஜை அறையில் அலங்கரிக்கபட்ட லட்சுமி சிலையின் முன் விள்க்கேற்றினார்.
முன்னரே அழைக்கப்பட்டிருந்ததால் அக்கம் பக்கம் வீட்டில் இருக்கும் பெண்களும் வரலட்சுமி விரதத்தில் கலந்து கொண்டனர். அனைவரும் ஒன்றாக பாட்டு பாடி விரதம் முடித்து பிரசாதம் வாங்கி கொண்டனர்.
ஏன் மகா உன் பொன்ன கூட்டு வரல?
வர சொன்னேன் மா. காலேஜ் அசைன்மண்ட் எழுதனும்னு சொல்லிட்டா..
லெட்சுமி அம்மா இந்த தெருவில் நீங்க மட்டும் தான் வரலட்சுமி விரதம் எல்லா வருடமும் தவறாம செய்றீங்க என்றனர்.
நாங்க சாமி கும்பிட்டு புண்ணியமும் உங்க கையால செஞ்ச சக்கர பொங்கல் சாப்பிட வந்துடுறோம்.



உங்க கை பக்குவமே தனிதான் மா..



எனக்கு சந்தேகம்மா நானாது பொண்ணு வச்சிருக்கேன் நீங்கள் மூன்றும் பையனா வச்சிட்டு பூஜை பண்றீங்க.
வரலட்சுமி விரதம் பற்றி விவரமா சொல்லுங்களேன் நாங்க தெரிஞ்சுக்க..
இப்பவாது கேட்டியே மகா சொல்றேன் கேட்டுக்கோ.
எந்த வீட்டில் பெண்கள் வரலட்சுமி நோன்பிருந்து முறைப்படி பூஜை செய்கிறார்களே, அந்த வீட்டிற்கு அன்னை மகாலட்சுமி வருவதாகவும்,அருள் ஆசி வழங்குவார் என்பதும் ஐதீகம்.
வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
வரலட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும் என்பது நம்பிக்கை...
ஓ!! இவ்வளவு நல்லது இருக்கா.
எனக்கு தெரிஞ்சுடுச்சி உங்க பையன்களுக்கு திருமணம் யோகம் வர செய்றீங்க... நான் சொல்றது சரிதான..
வந்ததும் கேக்க மறந்துட்டேன் அய்யாவும் பசங்களும் எங்க லெட்சுமி அம்மா.
அய்யா ஆஃபிஸ்ல போன் பண்ணி வர சொன்னாங்கனு இப்ப தான் போய்டுக்கார்.
மூத்தவன் பாபு எப்ப டாக்டர் ஆனானோ வீட்ல இருக்கான் எப்ப ஹாஸ்பிடல இருக்கானு தெரியல...
இரண்டாவது நவீன் போலிஸா தான் ஆவேனு இப்பதான் சப்இன்ஸ்பெக்டர் பரிட்சைல பாஸ் ஆகி இப்ப ட்ரைனிங் இருக்கான். இன்னும் இரண்டு மாசத்துல ட்ரைனிங் முடியவும் வருவான்.
கடைகுட்டி கிருஷ் காலேஜ் முடிச்சி 3வருசம் முடிஞ்சு இன்னும் அரியர் முடிக்காம ஊர சுத்துது...
காலைல நான் எழுப்பிடுவேனு ரூம் லாக் பண்ணிட்டு தூங்குறான்...
என்ன பண்ண பொம்பல பிள்ளை பெத்துக்காம விட்டு இப்ப ஏக்க படுறேன்.
சரி பையன்களுக்கு கல்யாணம் பண்ணலாம்னு பாத்தா
மூத்தவனுக்கு 29 நடக்குது இரண்டாவதுக்கு 27 நடக்குது இரண்டு பேருக்கும் தனியா பார்க்கவா சேர்ந்து செய்யலாமானு யோசிச்சா...
கடைசியா பிறந்தது எனக்கும் 24ஆகுது மூனு பேருக்கும் பாருங்கனு சொல்றான். முத டிகிரிய படிச்சுமுடினு சொன்னா.
நீங்களா பாக்கல நான் என் ஜூனியர்ல பிடிச்ச பொன்னா கூட்டு வந்துடுவேனு மிரட்டிறான்..
ஆனா பாபு இப்ப என்ன அவசரம் இன்னும் 2 வருசம் ஆகட்டும்னு சொல்றான்.
மூனும் மூனு மாரி இருக்கு எப்படி தான் சமாளிக்குறீங்களோ...
கடை குட்டிய சமாளிக்குறதுதான் பெரிய கஷ்டம். ரொம்ப செல்லம் குடுத்துட்டு இப்ப என்ன செய்யனு தெரியாம இருக்கோம்...
பேசிட்டு இருக்கும் போதே இரவு உடை ஆர்ம் கட் மற்றும் சார்ட்ஸுடன் கிருஷ் படியில் இறங்கி வந்து
அம்மா எனக்கு தெரியும் என்ன பத்தி எல்லாருக்கிட்டயும் குறை சொல்றீங்கனு...
எல்லாரும் வந்தா வந்த வேலை பாக்காம என்ன பண்றீங்கனு கேட்ட அடுத்த நொடி வந்த அனைவரும் நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்...
ரொம்ப நன்றி லெட்சுமி அம்மானு கிளம்ப...
மகா ஆன்டி உங்க பொன்னு ஹரினிய காலேஜ்ல ட்ராப் பண்றேன் சொல்லிட்டுந்தேன் வேகமா கிளம்ப சொல்லுங்க...
ஏன்டா இது எப்ப இருந்து ஆரம்பிச்ச?
அம்மா சும்மா சோசியல் சர்வீஸ்மா...
மகாவோ இல்ல தம்பி என் பொன்ன இன்னைக்கு இல்ல சாரி இனி தினமும் நானே ட்ராப் பண்றேன்...
உங்க சோசியல் சர்வீஸ வேற யாருக்காவது பண்ணுங்க...
நம்ம பொன்ன இவன்ட பேச கூடாதுனு சொல்லி வைக்கணும்னு மனசுல நினைத்து கொண்டே வெளியேறினார்....
ஏன்டா இப்படி எப்பவும் நல்ல நாள் அதுவுமா குளிக்காம கூட பூஜை நடக்குற இடத்துல...
அம்மா காபி குடுத்துட்டு திடுங்க...
குளிக்காம இன்னைக்கு பச்ச தண்ணி கூட கிடையாது...
அம்மா அப்பரம் நாளைக்கே என் ஜுனியர் எப்ப கல்யாணம் பண்ணலாம்னு கேக்குறா அவள கட்டிட்டு வந்து அவ கையால காபி வாங்கி குடிக்க வேண்டி வரும்...
வரும்டா வரும் அரியர்ஸ் கூட முடிக்காத உன்ன நம்பி எவ வாறானு நானும் பாக்குறேன்.
எவலயாது கூட்டு வரேனு திரும்ப சொல்லி பாரு கால உடைச்சு வீட்ல போடுறேன்...
அதலாம் உங்க வீட்டுக்காரர் நாராயணனோடு நிப்பாட்டிகனும்.
கிருஷ் எத்தனை தடவை சொல்லிடுக்கேன்...
அப்பாவ பேர் சொல்லி கூப்டதனு...
கூப்டதன பேர் வைக்கிறாங்க...
நான் பேர் சொல்லும் பிள்ளைமா..
உன் அண்ணங்க இரண்டு பேரும் எப்படி இருக்காங்க நீ மட்டும் ஏன்டா...
ஆரம்பிச்சுட்டீங்களா கம்பேர் பண்ண கைல ஐஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கு...
உங்க உத்தம புத்திரன் பாபு என்னைக்காவது சிரிச்சு பேசிடுக்கானா... ஒரு ஆனந்பாபு மாரி எப்பவும் வில்லன் சரத்பாபு மாறி டெரர் லுக்கோட சுத்துறான்... அவன பாத்து பெசன்ட் எப்படி வராங்கனு எனக்கு தெரியல...
அப்பரம் உங்க தவ புதல்வன் நவீன் என்னன்ன சேட்ட பண்ணணுமோ அத்தனையும் பண்ணிட்டு இப்ப எக்ஸாம் பாஸாகி ட்ரைனிங் போகவும் நல்லவனாகிட்டான்...
என்ன பண்ண எல்லாருக்கும் ஒரே மாதிரியா படிப்பு வரும். எல்லாரும் டாக்டர் இன்ஜினியர் ஆன என்ன மாறி படிப்பு வராதவங்க எங்க போக.
நான் படிக்காம போனதுக்கு நீங்கதான் காரணம் உங்க ஆசைக்கு இன்ஜினியரிங் காலேஜ்ல சேத்துட்டீங்க...
வராத படிப்ப வா வா வானு சொன்னா நான் எங்க போக...
பேசிட்டு இருக்கப்ப கார் சத்தம் கேட்க அப்பா வந்துட்டார்...
நாம பேசுனது நமக்குள்ள இருக்கட்டும்...
என்ன கேட்டா அரியர்ஸ்க்கு படிக்குறேனு சொல்லுங்க....
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 2

வீட்டிற்கு வந்ததும் நாராயணன் என்ன லெட்சுமி வழக்கம் போல உன் மகன் வம்பு பண்ணிட்டு நான் வரவும் ஓடிட்டானா?


பூஜைலாம் நல்ல படியா முடிஞ்சதா

ம்ம் ஆமாங்க வழக்கம் போல நீங்க பூஜை அப்ப வீட்ல இருக்கது இல்ல...

உங்க மேல கோவமா இருக்கேன்.

உங்க எல்லாரோட நல்லதுக்கு தான் பூஜை சாமி எல்லாம் ஆனா யாரும் கூட இருக்குறது இல்லை.

அப்படி இல்ல லெட்சுமி அக்கம் பக்கம் இருக்கவங்க வராங்க. இது முழுக்க முழுக்க பெண்களுக்கான பூஜை இடைல நான் இருந்தா பூஜைக்கு வாரவங்களுக்கு சங்கடம் இருக்க கூடாதுனுதான்.

நான் எங்க போய்ட்டு வந்தேனு தெரிஞ்ச சந்தோசபடுவ...
பெரியவன் ஜாதகத்துக்கு பொருத்தமான வரன் பாக்க ஜோசியர பாக்க போனேன்...

என்னையும் கூட்டிட்டு போய்டுகலாம்லங்க...
சரி என்ன சொன்னாங்க சொல்லுங்க.

உன் பையனுக்கு இன்னும் 6மாசத்துல கல்யாணம் பண்ண சொன்னாங்க
இல்லனா... 6வருசம் பிறகுதான் கல்யாண யோகம் வரும்னு சொன்னாங்க...

என்னங்க 6மாசத்துலய அவன் பிடி குடுத்தே பேச‌ மாட்டேங்கிறான் எப்படிங்க 6மாசத்துல முடிக்க.

இன்னைக்கு வேலை விட்டு வரவும் பேசலாம்...

நீங்களே பேசுங்க நான் பேசுனா காதுலயே வாங்க மாட்டேங்கிறான்...
எல்லாத்தையும் கேட்டுட்டு ஒரு பார்வை தான் அதோட நான் சைலண்ட் ஆகிடுவேங்க...

பார்வைலயே மிரட்டிறான்..
எப்படி தான் இப்படி டெரர்ர மாறுனானு தெரியலங்க...

காலேஜ் படிக்குற வர நல்லாதான் இருந்தான்...
இப்படியே சொல்லிட்டு இருந்தா என்ன இன்னைக்கு பேசிட்டு முடிவு பண்ணுவோம்...

S S S மருந்துவமனை
மிகவும் பிரபலமான மருத்துவமனை அதில் ஒரு பிரிவான
இதய நோய் சிகிச்சை பிரிவு

Dr.Babu.,MBBS, MS, FRCS பெயர் பலகை கொண்ட அறையின் முன் காத்திருப்போர் பகுதியில் 20க்கு மேற்பட்டோர் காத்திருந்தனர்.
டாக்டர் எப்ப பாக்க முடியும் சிஸ்டர் என்று அங்கே வேலையில் இருக்க நர்ஸிடம் விசாரிக்க டாக்டர் ஆப்ரேஷன் பண்ணிட்டு இருக்காங்க வர இன்னும் 30நிமிசமாது ஆகும்.


டாக்டர் வரும் போது சத்தமில்லாம இருங்க. டாக்டர்க்கு சத்தமா இருந்தா பிடிக்காது.

அடுத்த 20நிமிடத்தில் அழுத்தமான காலடி சத்தத்துடன் முகத்தில் கோபமா அழுத்தமா தெரியாத ஒரு இறுக்கத்துடன் வேகமாக அறையில் நுழைந்தார்.

நோயாளிகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றனர்.
முகத்தில் சிரிப்பு இல்லை என்றாலும் நோயாளியை முழுமையாக ஆராய்ந்து அவர்கள் உடலை பூரண குணம் ஆக்குவதில் அந்த மருத்துவமனையின் கைராசியான மருத்துவர் என்ற பெயர் டாக்டர் பாபுவிற்கு.

ஆனாலும் யாரிடமும் எளிதில் பழகுவதோ சிரித்து பேசுவதோ கிடையாது.

இதய டாக்டர்க்கு இதயம் இருக்கானு தெரியலையே அன்பான பேச்சு பேசி நான் பார்த்தது இல்லைனு தான் எல்லாரும் டாக்டர் இல்லாத நேரம் பேசிப்பாங்க.

டாக்டர் இருக்கப்ப குண்டூசி விழும் சத்தம் கேட்கும் அளவு அமைதியா இருக்கும்.
டாக்டர் ஏன் இப்படி இருக்கார்னு எனக்கு தெரியும் நான் நியூமராலஜி பிரிவுல வேலை பாத்தப்ப நம்ம பாபு டாக்டர் படிச்ச நேரத்துல தான் டாக்டர் ஷாம் படிச்சிருக்கார். பாபு டாக்டர் பத்தி பேசுரப்ப தற்செயலா சொன்னார்.

டாக்டர் 5து வருசம் படிக்குறப்ப 2து வருசம் படிச்ச ஒரு பொன்ன லவ் பண்ணிடுக்கார்.கிட்டதட்ட ஆறு மாசம் பழகீடுக்காங்க. நல்ல பொன்னுனு நினைச்சி ஏமாந்துட்டார்... ஒரே நேரத்தில 4பேர் கூட பழகீட்டு இருந்துடுக்க பார்ட்டி பப் னு நேரத்துக்கு ஒரு ஆள் கூட பழகிடுக்கா. அது தெரிஞ்சு டாக்டர் கோவமா கேட்டப்ப அந்த பொன்னு சின்ன வயதிலிருந்தே வெளிநாட்டு கலாச்சாரத்துல வளர்ந்த பொன்னு. அந்த பொன்னுக்கு கல்யாண வாழ்க்கைல இன்ட்ரஸ்ட் இல்லை. பிடிக்குற வர ல்வ்விங் டு கெதர் பிடிக்கலையா ஆளை மாத்தீட்டு போற வாழ்க்கைதான் பிடிக்கும் சொல்லிட்டு போய்ட்டா போல. டாக்டர் லவ் பண்ணி ஏமாந்துட்டார். அதுல இருந்து அவர் இப்படி டெரர் ஆகிட்டாராம். யாரும் பேச கூட பயப்படுற அளவு பார்வைலயே தள்ளி வைச்சிடுவார்.
ஓ! அதான் டாக்டர் டெரர்ர இருக்காரா.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 3
நவீன் ஏன்டா போன் எடுக்கமாட்டேங்குற 10தடவை கூப்ட ஒரு தடவ பேசுற...

அம்மா கொஞ்சம் வேலை அதிகம்மா.
டிரெய்னிங் பிரியட்மா அதான் முடியவும் ஊருக்கு வந்துடுவேன்...
உன்ன பாத்து 2மாசம் ஆகுது.
இடைல ஒரு நாள் வந்துட்டு போடா...
சரிமா நேரம் இருந்தா வாறேன்...
வேலை வேலைக்கு சாப்டுரியா என்ன ஏதுனாலும் ஒரு வாரத்துக்கு ஒரு தடவையாவது போன் பண்ணுடா.
உங்க மூனு பேரையும் பெத்துட்டு புலம்புவதை என் வேலை ஆகிடுச்சி... நாங்க என்ன சின்ன பிள்ளைங்களா கவலை பட.
கவலை படாதீங்கம்மா
சின்ன பிள்ளைல கூட கவலை இல்லாம வளத்துட்டேன் இப்பதான் கஷ்டமா இருக்கு.
உன் அண்ணன்ட்ட பேசுனியா. இப்போதைக்கு பேசலாம உங்ககிட்ட பேசவே நேரம் இல்ல. அவன்ட பேசுனாலும் சாப்டியா வேலை ஓகேவா. சரி வைக்குறேனு 3வார்த்தைதான்மா. அண்ணனுக்கு 6மாசத்துல கல்யாணம் பண்ணலாம்னு சொல்லிடுகாங்க பிடி குடுத்தே பேச மாட்டான். என்ன பண்றதுனு தெரியலப்பா. இரண்டு மாசத்துல நான் வந்துடுவேன். வரவும் ஏதாவது செஞ்சி சம்மதிக்க வைச்சிடலாம்மா...
நீங்க கவலை படாதீங்கம்மா...
அது வர லெட் லெட்டா முயற்சி பண்ணி பாருங்கமா. உனக்கும் சேர்த்து பாத்து இரண்டு பேருக்கும் முடிக்கலாமடா.
அப்படிலாம் அவசரப்பட்டு முடிவு பண்ணிடாதிங்க. நாளாம் ஒரு வருசமாது பழகி பார்த்து எல்லாம் சரியா வந்தாதான் கல்யாணம் பண்ணிப்பேன். நீ என்னடா புதுசா சொல்லுற. நாலாம் உங்க அப்ப முகத்தையே இரண்டு நாள் அப்பரம் தான் பார்த்தேன். பாக்கமலே கல்யாணம் பண்ணாலும் அப்பரம் பாத்து பழகி நல்லாதான்ட இருக்கோம். அம்மா உங்கள மாதிரி இப்ப இருக்க பொன்னுங்க இல்லை அதான்ம்மா.. என்னவோ உங்க மூனு பேர் கல்யாணத்த முடிக்குறதுக்குள்ள என்னன்ன பாக்க வேண்டிருக்குமோ. சரிமா நீங்க கவலை இல்லாம இருங்க அடுத்த வாரம் பேசுறேன்.




லெட்சுமி உன் செல்ல மகன கூப்டு பேசலாம் நான் கூப்டா அப்படியே பின்னாடி வழிய ஓடிருவான்.


கிருஷ்...
கிருஷ்... டேய் கிருஷ்
இருக்க்யாடா...


இந்தா வாரேன்மா...
பேர ஏலம் விடாதிங்க...

கூப்டதும் வந்தா ஏன்டா இத்தனை தடவ கூப்டுறேன்..


பக்கத்துல வரவும் தான் அப்பாவ பாத்து நாக்க கடிச்சி அட்சோ எதுல கோர்த்து விட்டுருகாங்கனு தெரியலையே....


அப்படியே சமாளிக்க வேண்டிதான் மனசுகுள்ள நினைச்சிட்டே...
என்னம்மா கூப்டீங்க...
எதும் கெல்ப் பண்ணுமா...
கடைக்கு போகனுமா...
காய் கட் பண்ணனுமா... எதுனாலும் சொல்லுங்கம்மா...
உங்களுக்கு உதவதான் நான் இருக்கேன் சொல்லிட்டே இது வர பாக்காத மாதிரி அப்பாவ பாத்து...
அப்பா நீங்களும் இங்கதான் இருக்கீங்களா உங்களுக்கு எதும் உதவிப்பா...
வெளிய போய்ட்டு களைப்பா இருக்கீங்க தண்ணி வேணுமா ஜுஸ் வேணுமா...
ஆமடா பெரிய உதவி வேணும்...

இங்க இருனு சோபா காட்டவும். அட்சோ மாட்டிக்கிட்டேனே அம்மா காப்பாத்துங்கமானு சொல்லிட்டே அமர்ந்தான்.
சார் என்ன பண்றீங்க...
ஒன்னும் பண்ணலயைப்பா...
சரி மொத்தம் எத்தனை அரியர்ஸ் ?
12ப்பா
இப்ப 3வருசத்துல குறைஞ்சி இன்னும் 4தான் இருக்குப்பா...
ரெம்ப பெருமையா இருக்குடா மகனே..
எல்லாரும் 4வருசத்துல முடிச்சா என் பையனுக்கு மட்டும் 10வருஷம் வேணும் போல...

நான் என்னப்பா பண்ண நானும் 40 பக்கம் எழுதினாலும் 4மார்க்தான் வருது...

நான்தான் இன்ஜினியரிங் வேணாம் சொன்னேன்...
நீங்கதான் ஒருத்தன் டாக்டர் அடுத்தவன் டிகிரி முடிச்சி போலிஸ் எக்ஸாம்க்கு படிக்குறான்...
நீ இன்ஜினியரிங் படினு சேர்த்துவிட்டிங்க. அங்க நடத்துவது எழுதுவது எதுவுமே என் புத்தில ஏறல..

நான் என்ன பண்ணப்ப இதுக்கலாம் காரணம் இங்க ஒன்னு தெரியாத மாதிரி நிக்குறாங்களே அம்மா அவங்கதான் காரணம்...

நான் என்னடா பண்ணேன் படிக்காம கூட்டு சேந்து தியேட்டர் பார்க்குனு ஊர் சுத்திட்டு என்ன சொல்ற...

நீங்க தான் காரணம் முத பையனுக்கு படிக்குற அறிவும், இரண்டாவதுக்கு சுமாரனாலும் படிக்குற அறிவ பெத்துட்டு... என்ன மட்டும் உங்கள மாதிரி படிப்பறிவு இல்லாம பெத்துட்டீங்க. நீங்களே டிகிரி அரியர்ஸ் முடிக்காமதான் கல்யாணம் பண்ணிங்கனு நான் சின்னவன இருக்கப்பவே அம்மம்மா சொன்னாங்க...
நீங்களே 30வருஷமாச்சி அரியர்ஸ் முடிக்கல நான் 3வருசந்தான் முடிக்கல என்ன குறை சொல்றீங்க
பாபு 100 மார்க் எடுத்த நவின் 60மார்க்காது எடுக்கிறான் என்னால 40கூட எடுக்க முடியலை. இப்ப சொல்லுங்க யார் காரணம் நீங்களா நானா... என்ன உங்கள மாதிரி பெத்தது யார் தப்பு...
இப்பதான்ட புரியுது உன்ன பெத்ததே தப்புன்னு...
மூன்றாவது பொம்பல பிள்ளை பிறக்கும்னு நம்பி உன்ன பெத்தது என் தப்புதான்...
அப்பா பாருங்க அம்மாவே ஒத்துகிட்டாங்க என் மேல தப்பு இல்லைனு.
இரண்டு பேரும் உங்க விளையாட்ட நிறுத்துங்க...
நான் சீரியஸ கேக்குறேன்...
என்ன பண்ணலாம்னு இருக்க
அதான்ப்ப உங்கட்ட சொல்லலாம்னு இருந்தேன் ஆனா பயம்.
எனக்கு இன்ஜினியரிங் தான் பிடிக்கல இயற்கை மற்றும் தாவரம் பத்தி இன்ட்ரஸ்ட் அதிகம்.
தோட்டக்கலை டிப்ளமோ முடிச்சுடுக்கேன். இன்ஜினியரிங் பாஸ் ஆகம இத படிச்ச திட்டுவீங்கனு சொல்லல.
இந்த தடவை எப்படியாவது அரியர் முடிச்சிட்டு சொல்லலாம்னு இருந்தேன்.

பேங்க் லோன் அப்ளை பண்ணிடுக்கேன்பா... லோன் கிடைக்கவும் ஆர்கானிக் ஃபார்ம் அப்பறம் நேரடியாக விவசாயிகள் கிட்ட இருந்து இயற்கையான உரம் பயன்படுத்தி விழைந்த காய்கறிகள் பழங்கள் எல்லாம் எல்லாருக்கும் கிடைக்கிற மாதிரி பிஸ்னஸ் பண்ணலாம்னு இருக்கேன்பா.
பாரு லெட்சுமி உன் மகன் எவ்வளவு பொறுப்பா இருக்கான்...
இது தெரியாம நீயும் நானும் இவன் பொறுப்பு இல்லாம இருக்கத கவலை படுறோம்.
லோன் எதுக்குடா நம்மட்ட இல்லாத பணம என்ட்ட சொல்லிடுகலாம்ல...

படிக்க வைக்குறது மட்டும் தான் உங்க கடமை. எல்லாமே உங்கள எதிர்பார்த்த நல்லாருக்குமாப்பா...

அண்ணணுங்க இரண்டு பேரும் அவுங்க திறமைல வந்த மாதிரி நானும் வருவேன்ப்பா அப்படி வந்தாதான் உங்களுக்கு பெருமைப்பா...

ஆனா என்ன கொஞ்சம் மெதுவா வருவேன் ஆனா வந்துடுவேன் பா...

சரிடா போய் வேலையை பாரு அப்புறம் பேசலாம்....


என்ன லெட்சுமி உன் கவலை போய்டுச்சா...
ம்ம்...

ஆனா இன்னும் பெரியவன் கல்யாணத்த பத்தி கவலை இருக்கே...

அதான் அவன் வரவும் பேசி பாக்கலாம் சொல்லிடுக்கேன்ல. இப்ப கொஞ்சம் டீ வேணும் லெட்சுமி இதோ கொண்டுவாரேங்க...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 4
லெட்சுமி பெரியவன் வரான் இப்பவே பேசாத... அவன் சாப்டு முடியவும் பேசலாம்...


சரிங்க...
ஆனா எப்படியாவது சம்மதிக்க வைச்சுடுங்க...


வைச்சுடுங்ளா?நோ.. நோ... வைக்கிறோம்...

தெரியும் என்ன மாட்டிவிடுறதலயே குறியா இருக்கீங்க....
நான் கிருஷயும் துணைக்கு கூப்டுக்குறேன்...
வா பாபு...
இப்பதான் வேலை முடிஞ்சா...
ஃப்ரஸ் ஆகிட்டு வா...
உனக்கு பிடிச்ச இடியாப்பம் செஞ்சுடுக்கேன்...
நான்தான் சொல்லிடுக்கேன்ல நான் சாப்டுரப்ப மெதுவா சாப்டுட்டுக்குறேன்...
எனக்கு எதுக்கு ஸ்பெசல கேக்குரீங்க...
எல்லாரும் சாப்ட்டா தூங்க வேண்டிதான...
11மணி வர எதுக்கு தூங்காம இருக்கீங்க... போய் தூங்குங்க...


ஏங்க எதாவது பேசுங்க...
அது தூக்கம் வரலப்பா...
ஏன் வரல உடம்பு ஏதும் சரியில்லையா... நாளைக்கு ஹாஸ்பிடல் வாங்க செக் பண்ணிடலாம்... போய் படுங்க...
செக்கப்பா அட்சோ நான் நல்லாருக்கேன்பா...
உன்ட பேச முழிச்சிருக்கோம்...
இப்பவே பேசுற அளவு என்ன அவசரம்...
காலைல பேசலாம்ல...
காலைல எப்ப இருக்க எப்ப போகுறேனு தெரியலப்பா...அதான்
சரி சொல்லுங்க.‌..
நீ சாப்டவும் மெதுவா பேசலாம்... 12மணிக்கு மேலவா... நான் சாப்பிட்டு தான் வந்தேன் என்ன சொல்லுங்க...
ஒன்னும் இல்லை பாபு... அது..
ஒன்னும் இல்லையா அப்றம் என்ன பேசனும்... அதுவா அது...
உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கலாமானு அப்பா கேக்க வரார்டா...
பொண்ணா அதான் 2வருசம் ஆகட்டும்னு சொன்னேன்ல...
நீ சொல்லி 2வருசம் ஆக போதுப்பா...
இன்னும் 6மாசத்துல உனக்கு முடிச்சாதன் அடுத்தவனுக்கு பாக்க முடியும். இன்னும் ஆறுமாதத்துல உனக்கும் 30 ஆக போது..‌.
30தான ஆகுது... 40வர கல்யாணம் பண்ணாதவனும் இருக்கான்...
அடுத்தவன் இருக்கானு நாமும் இருக்க கூடாதுலப்பா...


எனக்கு கல்யாணம்னு பேச்சு எடுத்தாலே எரிச்சலா இருக்கு...
உங்களுக்குக்காக யோசிச்சு சொல்றேன்...
கொஞ்சம் டைம் குடுங்க...
அவசரம் இல்லப்பா மெதுவா யோசிச்சு சொல்லு ஆனா ரொம்ப நாள் யோசிக்காதப்பா... சரி முயற்சி பண்றேன்...
வேற எதுவும் பேச இருக்க...
இல்ல இப்ப இது மட்டும் தான்...
இனி பேசனும்னு முழிச்சிருந்தா கோவம் வந்துடும்... எதுனாலும் காலைல பேசுங்க இப்ப போய் தூங்குங்க...
ஒரு வழியா பேசிட்டோம்ங்க. வேகமா சம்மதம் சொன்னா பொண்ணு பாக்க ஆரம்பிச்சுடலாம்...


வேகமாக ரூம்க்கு வந்தவன் மனதில் வலி...
முத பிள்ளையா பிறக்குறவங்களுக்கு இயல்பா இருக்க குணமான எல்லாத்துலயும் பர்ஸ்ட்டாவும் பெஸ்ட்டாவும் இருக்கும் குணம் தான் பாபுவிற்கு...
சிறு வயதில் முதல் விளையாட்டு முதல் படிப்பு வரை தான் தான் முதலில் இருக்க வேண்டும் என்ற ஆசை. கல்லூரியில் 4வருடம் வரை அமைதியாக சந்தோசமாக தான் வாழ்க்கை சென்றது...
காதல் வரும் வரை... லீனா ராணி நேரடியாக இரண்டாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தால்... இந்தியா -அமெரிக்க வாழ் பெற்றோர்க்கு பிறந்த ஒரே மகள்...
ஒவ்வொரு வருடமும் படிப்பில் முதல் வரும் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பாபுவை பார்த்ததும் அவன் மேல் க்ரஸ் அவளாக சென்று பேசினால் கங்கிரட்ஸ். நான் புதுசா ஜாயின் பண்ணிடுக்கேன். உங்கள மாதிரி டாப்பர் ஆகனும்னு ஆசை... கெல்ப் பண்ணுவீங்களா... பாபு கண்டிப்பா னு சொல்லவும்... லெட்ஸ் ப்ரண்ட்ஸ் என்றால்... நட்பாக ஆரம்பித்த உறவு பாபுவிற்கு அவள் பேசுவது பழகுவது பிடிக்கவும் காதலாக மாறியது... கல்லூரியில் சிலருக்கு தெரிந்தும் தெரியாமலும் இருந்தது...


ஆறு மாத பழக்கத்திற்கு பின் அவளிடம் காதலை சொல்ல நினைத்திருந்த நேரம்...
அவனுடைய நண்பர்கள் சிலர் லீனா பப் ல ஒரு பையனோட வந்துடுந்த சொல்லவும்...
இன்னொருத்தன் நானும் ரெம்ப டைம் சனிகிழமை பாத்திருக்கேன் ஒரு நாள் ஃபாரினர் கூட பாத்துடுக்கேன்...
பாபுவிற்கு இத நம்ப கூட தோனல ப்ரண்ட்லியா படிப்பு பத்தி ஜாலிய பேசுவா இந்த மாதிரினு நம்ப முடியல...
நேரடியாக பேச நினைச்சான்...
லீனா எனக்கு இது ஃபைனல் இயர். அடுத்து போஸ்ட் கார்டியாலஜி படிச்சு 2வருசத்துல ஜாப்ல இருப்பேன். நீயும் அதுக்குள்ள ஃபைனல் இயர் முடிச்சுடுவ. நான் உன்ன லவ் பண்றேன். 3வருஷத்துல வீட்ல சொல்லி மேரேஜ் பண்ணிக்கலாம். ஜ லவ் யூ சோ மச் என்றான்.


லீனா வாவ் யு லவ் மீ...


எனக்கும் உன் மேல கிரஸ்.. பட் நீ படிக்குற பையன் லவ்லாம் பண்ண மாட்டேனு நினைச்சி லாஸ்ட் மன்றத் தான் பீட்டர்க்கு ஓகே சொல்லி லிவிங் டூ கெதர்ல இருக்கேன்
நோ பிராப்ளம் அவன ப்ரேக் கப் பண்ணீடுறேன்...
எனக்கு மேரேஜ்ல இன்ட்ரஸ்ட் இல்லை. படிச்சு முடியவும் ஃபாரின்ல செட்டில் ஆகலாம்னு இருக்கேன். பிடிக்குற வர‌ சேந்து இருக்கலாம்னு சொன்னா...
அவள் பேசி முடிக்கும் வரை அவனால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை...
அவள் பேசிய பின்னரும் பேச நா வரவில்லை. அவளிடம் ஐ டோண்ட் லெக் தட் கல்ட்சர்...
நான் கேட்டது தப்புதான்... சாரி என்று சொல்லிவிட்டு வேகமாக சென்று விட்டான்.
தனிமையில் அவனால் ஏற்றுகொள்ள முடியவில்லை...
கோவம் ஆத்திரம் யார் மேல் காட்ட என்று தெரியவில்லை....
அவன் முதல் காதல் அதுவும் தவறான அவன் குணத்திற்கு பொருந்தாத பெண்ணுடன்...
மறக்க நினைத்தாலும் அவன் ஏமாற்றமே ஞாபகம்...
விசயம் தெரிந்தவர்கள் கிண்டலுடன் பேச நட்பு வட்டம் குறைந்தது. அனைவரையும் பார்வையாலே எட்ட நிறுத்தினான். அவன் மென்மையான குணம் கடுமையாக மாறியது...
மற்றவர்கள் முன் தனியாக இருந்தான்.
இப்போதும் கல்யாணம் என்றதும் அவன் ஏமாற்றமே ஞாபகம் வருகிறது. அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான்...
மறுபடியும் மனதில் ஆசை வளர்ந்தால் ஏமாந்து விடுவோம் என்ற பயம்...
திருமணத்திற்கு சம்மதம் சொல்ல பயம்... பார்ப்பவர்க்கு டெடரர் ஆக இருந்தும் மனதில் யாருக்கும் தெரியாத பயம்...
இப்படியே இருந்து விடவும் முடியாது. ஆம் சம்மதம் சொல்ல முடிவெடுத்து விட்டான் சில நிபந்தனைகளோடு...

 
Status
Not open for further replies.
Top