அசுரன் 13
தீடிரென்று தன்னை அணைத்த பெண்மணியை விலக்கிப் பார்த்த மஹேந்திரனுக்கு பேரதிர்ச்சி தான்.. காலங்கள் கடந்தோடினாலும் சிலர் முகம் தன் மனதில் ஆணித்தரமாக பதிந்திருக்கும்.. அதே போன்ற பால் முகம் மாறா முகம் அவளுடையது.. "அச்சுக்குட்டி" என்ற அழைப்பில் கண்களில் கண்ணீருடன் ஏறிட்ட பெண்மணி..
"என்னை நியாபகம் இருக்கா மஹி" என்றவர் மறுபடியும் அணைத்துக் கொள்ள.. திகைத்து நின்றது என்னவோ ப்ரஜா தான்.. "என்னடா நடக்குது இங்கே??" என நினைத்தவள்.. வேகமாக மஹேந்திரவிடம் இருந்து அந்த பெண்மணியை பிரித்தெடுத்தவள்.. "யார் நீங்க?? எதுக்கு அப்பாவை கட்டிப்புடிக்கிறீங்க??" என்றவளை வாஞ்சையுடன் பார்த்தவர்..
"நீ மஹி பொண்ணா.. அழகா இருக்க" என்றவரை எரிச்சல் மீதூற பார்த்தவள்..
"நான் உங்களை கேள்வி கேட்டா?? நீங்க என்னையே கேள்வி கேட்குறீங்களா?? நீங்க யாரு முதல்ல?? உங்க பேரு கூட நான் இதுவரைக்கும் கேட்கலை"..
"அஞ்சனா" என்ற வார்த்தைகள் வந்து விழுந்தது என்னவோ மஹேந்திரனிடம் இருந்து..
அதிர்ச்சியுடன் மஹியை நோக்கி திரும்பியவள்.. "உங்களுக்கு இவுங்களை முன்னாடியே தெரியுமாப்பா??" என்றவளுக்கு 'ம்ம்ம்' எனும் விதமாய் தலையசைத்தவர்..
"ம்ம்ம்.. நல்லா தெரியும்.. என்னோட காலேஜ் மேட்.. அஞ்சனா.. என்னை ஒன் சைடா லவ் பண்ணா??" என்ற வார்த்தையில் தான் அஞ்சனாவிற்கு நிதர்சனம் புரிய.. சட்டென அவரை விட்டு விலகினார்.. "சாரி மஹி.. ரொம்ப நாள் கழிச்சு எனக்குத் தெரிஞ்சவங்களை பார்த்ததும் எமோசனலாகி கட்டிப் பிடிச்சிட்டேன்.. சாரி" என்றவள் மெல்லியதாக விலகி நடக்க முயன்றவளின் கைகளை அழுத்தமாக பிடித்தது ஒரு வலிமையான கரம்..
"என்னாச்சி அச்சுக்குட்டி உனக்கு?? படிப்பு முடிஞ்சதும் கல்யாணம்னு சொல்லிட்டுத் தானே போன.. அப்புறம் ஏன் இப்படி ஒரு நிலைமையில இருக்க" என்றவரை பார்த்தவருக்கு தன் நிலைமையை சொன்னால் பரிதாபமே மிஞ்சும் என்பதை அறிந்தவர்..
"வாழ்க்கை சிலருக்கு நல்ல பாடத்தைக் கொடுக்கும்.. எனக்கும் கொடுத்திருச்சி.. நான் போறேன்" என விலகி நடக்க முயன்றவர்.. தள்ளாடி கீழே விழுவதற்குள் அஞ்சனாவை தாங்கிப் பிடித்திருந்தார் மஹேந்திரன்..
தன்னருகில் நின்றிருந்த ப்ரஜாவை பார்த்தவர். "அப்படியே பார்த்ததுட்டு நிக்கிற.. போய் டாக்டரை கூப்பிடு" என அதட்டியவரின் அதட்டலில் அங்கிருந்த டாக்டர் ஒருவர் வேகமாக வர.. டாக்டரை கூப்பிடலாம் என ஈரடி எடுத்து வைத்தவளின் நடையும் சட்டென்று நின்றது.. அறைக்கு வெளியே தெரிந்த கண்ணாடியூடே பார்த்தவளுக்கு இதயத்தில் யாரோ ஊசியை வைத்து தைத்தாற் போன்ற உணர்வு ஏற்பட. மெல்ல கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.. தலை முழுவதும் கட்டுடன் கண்கள் மூடிய நிலையில் இருந்த சூரியாவை பார்த்ததும் தன்னையும் மீறி அழுகை தான் வந்தது..
உன்னை நான் பிரிய நினைத்ததற்கு கடவுள் எவ்வளவு பெரிய தண்டனையை தனக்கு அளிக்க பார்த்தார்" என நினைத்தவளின் கரங்கள் அவனின் தலைக்கட்டை வருடிவிட.. கண்களோ அவன் உடல் மொத்தத்தையும் ஆராய்ச்சியாய் பார்த்தது.. "வேறெங்கும் அடிபட்டிருக்கிறதா?? என்று"..
"தான் இங்கிருந்து செல்லும்வரை நன்றாக இருந்தவனுக்கு ஒரே நாளில் அப்படி என்ன நேர்ந்திருக்கும்" என யோசித்தவளின் சிந்தனையை கலைக்கும் விதமாய் விழிகள் மெல்ல அசைய.. "சூரியா.. சூரியா" என்றவாறே அவனை அணைத்துக் கொள்ள.. சட்டென அவளை தள்ளி விட்டான் சூரியா..
"சாரி சூரியா. நான் பண்ணதெல்லாம் தப்பு தான். உன்னை விட்டுப் பிரியணும்னு நினைச்சது.. உன்கூட வாழ முடியாதுன்னு லெட்டர் எழுதி வச்சது எல்லாமே தப்பு தான்.. ஐயம் ரியலி சாரி சூரியா" என அழுது கொண்டே பேசியவளை அவன் கேட்ட ஒற்றை வார்த்தை வாயடைக்க வைத்தது..
அவளால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.. சூரியாவா இது?? இப்படி ஒரு வார்த்தை தன்னைப் பார்த்து கேட்டான்??" என மனதளவில் நொருங்கி போனாள்..
"ஹலோ.. எஸ்க்யூஸ்மி யாருங்க நீங்க?? நான் திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்கேன். பதிலே சொல்லாம இருக்கீங்க. ஆங்கிள்.. ஆங்கிள்" என்ற சத்தத்தில் மெல்ல உள்ளே நுழைந்தார் மஹேந்திரன்..
"யாரு ஆங்கிள்.. இந்த பொண்ணு.. லூசு மாதிரி என்னவெல்லாமோ பேசுது.. தப்பு பண்ணிட்டேன்னு சொல்லுறா.. விட்டு ஓடிட்டேன்னு சொல்லுறா.. இவ பேசுறது ஒன்னுமே புரியல ஆங்கிள்" என தலையை பிடித்து அமர. இப்பொழுதே தலையே வெடித்து விடும் நிலையில் இருந்தது என்னவோ ப்ரஜா தான்..
"சூரியா.. நான் பண்ணது தப்புதான். ஆனா இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்காதிங்க.. என்ன தண்டனை கொடுக்கிறதா இருந்தாலும் உங்க கூடவே இருந்துக்கிறேன்" என்றவளின் வார்த்தையில் சுட்டெரிக்கும் சூரியனாய் தகித்து நின்றான்..
"நீ யாருன்னே தெரியாதுன்னு சொல்றேன்.. வெளியே போடி" என்றவனின் சீற்றத்தில் மங்கையவள் உள்ளமோ வெகுவாக வலிக்க.. அடிபட்ட பார்வை ஒன்றை பார்த்தவள் சூரியாவின் உடல்நிலை கருதி மெல்ல அந்த அறையை விட்டு வெளியேற முயல.. மஹேந்திரனும் அவள் பின்னாடியே வெளியேறினார்..
"இடியட்" என வாய்க்குள் முணுமுணுத்தபடி கட்டிலில் சாய்வாக அமர்ந்தான் சூரியா..
வெளியே வந்தவளுக்கு அழுகை பீறிட்டு வந்தது.. அழுகையே தவிர அவளிடம் எதுவுமில்லையே.. பிறந்ததில் இருந்து அவளின் மனவலி தீரும் ஒரே மருந்து கண்ணீர் மட்டுமே..
"ப்ரஜா" என்ற வார்த்தையில் வழிந்து கொண்டிருந்த கண்களை துடைத்தவாறே, "சொல்லுங்கப்பா.. சூரியா கிட்ட என்னை மன்னிச்சிட சொல்லுங்கப்பா" என உடையும் குரலில் கேட்டவளை பாவமாக பார்த்தவர்..
"சூரியாவுக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்திடுச்சி.. அதனால தான் உன்னை அவனுக்கு அடையாளம் தெரியலை" என்றவரின் வார்த்தையில் விக்கித்து நின்றாள் பேதையவள்..
"சூரியாவுக்கு பழைய நினைவுகளெல்லாம் மறந்திடுச்சா?? என்னை யாருன்னே அவருக்குத் தெரியலையா??" உயிரை உருக்கும் குரலில் கேட்டவளை பாவமாக பார்த்தவர் ..
"ஆமா ப்ரஜா.. இப்போ நீ வீட்டுக்குப் போ.. அப்புறம் எல்லாம் பேசிக்கலாம்" என்றவரிடம் "இல்லை" எனும் விதமாய் தலையசைத்தவள்.. "எனக்கு சூரியா கூட இருக்கணும்பா. ப்ளீஸ்பா" என்றவளின் கண்ணீர் மனதை சுட..
"சரி நான் அவன்கிட்ட பேசிட்டு வர்றேன்" என உள்ளே நுழைந்தவர்.. என்ன பேசினார்?? என்று புரியாவிடிலும் சூரியா சம்மதித்து விட்டான் என்பது மட்டும் புரிந்தது..
மஹேந்திரன் சிறிது நேரம் இருந்தவர் பின் வெளியே சென்று விட.. அறைக்குள் தனித்து விடப்பட்டது என்னவோ ப்ரஜாவும், வாணியும் தான்.. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும். இருவரின் விழிகளும் அடிக்கடி மோதி கொண்டது.. சூரியாவின் விழிகளில் அனல் தெரிந்தாலும்.. ப்ரஜாவின் விழிகளில் காதல் தான் தெரிந்தது..
சிறு நேர அமைதிக்குப் பிறகு.. "நீ என்னோட ஒய்ஃப் னு ஆங்கிள் சொன்னாரு.. ஆனா உன் கழுத்துல தாலி இல்லை.. நான் எப்படி உன்னை நம்புறது" என்றவனின் வார்த்தையில் விழி விரித்து பார்த்தவள்.. "என்ன சொல்வாள்?? நீதான் என் மாங்கல்யத்தை பறித்தாய் என்றா?? இல்லை என்னை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தாய் என்றா?? எதை அவளால் சொல்ல முடியும்.. சொல்லும் நிலையில் அவளும் இல்லை. கேட்கும் நிலையில் அவனுமில்லை.. அமைதி மட்டுமே பதிலாக கிடைக்க.. ஒரு கணம் அவளை உற்றுப் பார்த்தவனின் முகம் இறுகி நின்றது..
"சரி தாலியை விடு.. நம்ம ஹஸ்பெண்ட் ஒய்ஃப் தானே.. ஏதாவது ஒரு சம்பவம் சொல்லு.. மனதோடு ஒன்றிப் போற மாதிரி நமக்குள்ள நடந்திருக்கும்ல" என்றவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு, இப்பொழுதும் பதிலறியா கேள்வி தான்.. அவர்கள் வாழ்ந்த பத்து நாட்கள் மட்டுமே அவளறிந்து மனதோடு ஒன்றிய நாட்கள்.. அதில் அவன் காட்டியதோ மோகம் மட்டுமே. அதில் என்ன சொல்வாள்.. என நினைத்தவளுக்கு சட்டென மின்னல் போல் மூளையில் தோன்றி மறைய.. மெதுவாக அவன் கைகளை பிடிக்க.. சட்டென்று உதறிவிட முயன்றவனின் கைகளை இறுக்கமாக பிடித்தவள்..
அவன் கைகளை பிடித்து தன் வயிற்றில் வைத்தவாறே, "நாம் சந்தோஷமா வாழ்ந்த நாட்களுக்கு சாட்சி சூரியா.. நீங்க அப்பாவாக போறீங்க.. நான் கர்ப்பமா இருக்கேன்" என்றவளின் விழிகளை அதிர்வுடன் பார்த்தவனுக்கு அவளின் விழிகள் தெரிந்த காதலும், பரிதவிப்பும் இவனை மௌனமாக்க.. தன்னையும் மீறி வயிற்றில் அழுத்தமாக கரங்களை வைத்தவனின் கைகளில் எதுவோ தட்டுப்பட.. மெல்ல அவளை ஏறிட்டுப் பார்த்தான்..
அவன் பார்வையில் வெட்கம் மேலிட.. "சூரியா" என்றவளின் குரலை ஒரு வித போதை ஏற்ற. மெல்ல அவள் அணிந்திருந்த ஆடையை விலக்கிப் பார்த்தவனுக்கு உச்சகட்ட பேரதிர்ச்சி.. அதில் இருந்தது அவன் அணிவித்த ஹிப் செயின் தான்.. சூரியவாணி என்ற பெயரை பார்த்ததும் புருவம் முடிச்சிட அவனை பார்க்க.. அவளுக்கோ அவன் அணிவித்த நினைவுகள் தான் அவள் மனதில் ஓடியது.. என்றுமே அவள் அதை கழட்ட நினைத்தது இல்லை..
தாலி இல்லையென்றாலும் இந்த செயின் அவளை உயிர்ப்புடன் வைத்தது.. "இந்த செயின் நீங்க போட்டுவிட்டது சூரியா.. நீங்க கேட்ட தாலிக்கு என்கிட்ட பதிலில்லை.. ஆனா இந்த செயின் எப்பவும் என்னை விட்டு போனதில்லை.. இனிமேலும் போகாது.. நீங்க கேட்ட இனிமையான காதலை நாம உணர்ந்த நேரம் போட்டு விட்டது" என்றவாறே அவன் நெற்றியில் இதழ் பதிக்க… ஆடவனின் கண்களோ அவளின் விழிகளை மட்டுமே பார்த்தது.. அதில் தெரிந்த காதலில் பொய்மையில்லை..
கதவு தட்டும் சத்தத்தில் இருவரும் கலைந்தனர். நர்ஸ் சூரியாவிற்கு டிரெஸ்ஸிங் பண்ணியவர் வெளியேற அதுவரை அவன் பார்வை ப்ரஜாவை விட்டு எங்கும் அகலவில்லை. நர்ஸ் உள்ளே வந்ததில் இருந்தது.. அவர் செய்வது ஒவ்வொன்றையும் உற்று நோக்கியவள்.. காயம்பட்ட இடத்தை பார்த்ததும் அழுகை வந்து உதட்டை கடித்து தடுத்து நிறுத்தியவளையும் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்..
நர்ஸ் கொடுத்த மாத்திரைகளை கொடுத்தவள்.. அவனுக்கு சாப்பாட்டை ஒரு பிளேட்டில் வைத்து பரிமாற.. அவனோ அதை வாங்காமல் அவளை தான் பார்த்தான்.. அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல் இவள் குழப்பமாக அவனை பார்க்க.. "நீ என் ஒய்ஃப் தானே.. அப்போ சாப்பாடு ஊட்டிவிட வேண்டியது தானே" என்றவனின் வார்த்தையில் அதிர்ந்து தான் போனாள்..
இதுவரை என்றுமே அவள் ஊட்டிவிட்டதெல்லாம் இல்லை.. அவன் வேலையை அவனே பார்த்துக் கொள்வதால் இது போன்ற வேலைகள் அவள் செய்ததே இல்லை.. அவன் சொல்லை தட்ட முடியாமல் இட்லியை பிய்த்து அவன் இதழில் வைக்கும் பொழுது.. அவள் கரங்களும், ஷேவ் பண்ணாத தாடியும் உரசிக் கொண்டது.. அவன் எச்சில் விரல்களில் பதிய.. புது வித உணர்வு ஆட்கொள்ள.. கண்களோ அவனை விட்டு பிரிய மறுத்தது.. அவனை பார்த்துக் கொண்டே இட்லியை ஊட்டியவள் கழுவுவதற்கு எடுத்து செல்ல முயன்றவளின் கரங்களை பற்றியவள்.. "எனக்குப் பசிக்குது" என்றவனின் வார்த்தையில் சட்டென எழ முயன்றவனின் கரங்களை அழுத்தமாக பற்றியவன்.
"விடுங்க சூரியா நான் இட்லி எடுத்துட்டு வர்றேன்" என்றவளை பார்த்து "இல்லை" எனும் விதமாய் தலையாட்டியவன்.. "எனக்கு இட்லி வேண்டாம்" என்றவனின் பார்வையோ நிலைத்து நின்றது என்னவோ ப்ரஜாவின் இதழ்களில்..
பழங்களை கண்டு மொய்க்கும் ஈயாய்.. அவள் இதழ்களை மொய்க்கும் பார்வை பார்த்தவன்.. அவள் இதழ்களில் அழுத்தமாக தன் இதழ்களை பதிக்க முயன்றவன்.. என்ன நினைத்தானோ?? மெல்ல விலகிட.. அவனின் விலகலில் உயிர்போகும் வலியை அனுபவித்தவள்.. அவன் இதழ்களை தன்னிதழ்களால் பற்றி கொண்டாள் சற்று அழுத்தமாக.. ஆனால் காதலுடன்..
தீடிரென்று தன்னை அணைத்த பெண்மணியை விலக்கிப் பார்த்த மஹேந்திரனுக்கு பேரதிர்ச்சி தான்.. காலங்கள் கடந்தோடினாலும் சிலர் முகம் தன் மனதில் ஆணித்தரமாக பதிந்திருக்கும்.. அதே போன்ற பால் முகம் மாறா முகம் அவளுடையது.. "அச்சுக்குட்டி" என்ற அழைப்பில் கண்களில் கண்ணீருடன் ஏறிட்ட பெண்மணி..
"என்னை நியாபகம் இருக்கா மஹி" என்றவர் மறுபடியும் அணைத்துக் கொள்ள.. திகைத்து நின்றது என்னவோ ப்ரஜா தான்.. "என்னடா நடக்குது இங்கே??" என நினைத்தவள்.. வேகமாக மஹேந்திரவிடம் இருந்து அந்த பெண்மணியை பிரித்தெடுத்தவள்.. "யார் நீங்க?? எதுக்கு அப்பாவை கட்டிப்புடிக்கிறீங்க??" என்றவளை வாஞ்சையுடன் பார்த்தவர்..
"நீ மஹி பொண்ணா.. அழகா இருக்க" என்றவரை எரிச்சல் மீதூற பார்த்தவள்..
"நான் உங்களை கேள்வி கேட்டா?? நீங்க என்னையே கேள்வி கேட்குறீங்களா?? நீங்க யாரு முதல்ல?? உங்க பேரு கூட நான் இதுவரைக்கும் கேட்கலை"..
"அஞ்சனா" என்ற வார்த்தைகள் வந்து விழுந்தது என்னவோ மஹேந்திரனிடம் இருந்து..
அதிர்ச்சியுடன் மஹியை நோக்கி திரும்பியவள்.. "உங்களுக்கு இவுங்களை முன்னாடியே தெரியுமாப்பா??" என்றவளுக்கு 'ம்ம்ம்' எனும் விதமாய் தலையசைத்தவர்..
"ம்ம்ம்.. நல்லா தெரியும்.. என்னோட காலேஜ் மேட்.. அஞ்சனா.. என்னை ஒன் சைடா லவ் பண்ணா??" என்ற வார்த்தையில் தான் அஞ்சனாவிற்கு நிதர்சனம் புரிய.. சட்டென அவரை விட்டு விலகினார்.. "சாரி மஹி.. ரொம்ப நாள் கழிச்சு எனக்குத் தெரிஞ்சவங்களை பார்த்ததும் எமோசனலாகி கட்டிப் பிடிச்சிட்டேன்.. சாரி" என்றவள் மெல்லியதாக விலகி நடக்க முயன்றவளின் கைகளை அழுத்தமாக பிடித்தது ஒரு வலிமையான கரம்..
"என்னாச்சி அச்சுக்குட்டி உனக்கு?? படிப்பு முடிஞ்சதும் கல்யாணம்னு சொல்லிட்டுத் தானே போன.. அப்புறம் ஏன் இப்படி ஒரு நிலைமையில இருக்க" என்றவரை பார்த்தவருக்கு தன் நிலைமையை சொன்னால் பரிதாபமே மிஞ்சும் என்பதை அறிந்தவர்..
"வாழ்க்கை சிலருக்கு நல்ல பாடத்தைக் கொடுக்கும்.. எனக்கும் கொடுத்திருச்சி.. நான் போறேன்" என விலகி நடக்க முயன்றவர்.. தள்ளாடி கீழே விழுவதற்குள் அஞ்சனாவை தாங்கிப் பிடித்திருந்தார் மஹேந்திரன்..
தன்னருகில் நின்றிருந்த ப்ரஜாவை பார்த்தவர். "அப்படியே பார்த்ததுட்டு நிக்கிற.. போய் டாக்டரை கூப்பிடு" என அதட்டியவரின் அதட்டலில் அங்கிருந்த டாக்டர் ஒருவர் வேகமாக வர.. டாக்டரை கூப்பிடலாம் என ஈரடி எடுத்து வைத்தவளின் நடையும் சட்டென்று நின்றது.. அறைக்கு வெளியே தெரிந்த கண்ணாடியூடே பார்த்தவளுக்கு இதயத்தில் யாரோ ஊசியை வைத்து தைத்தாற் போன்ற உணர்வு ஏற்பட. மெல்ல கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.. தலை முழுவதும் கட்டுடன் கண்கள் மூடிய நிலையில் இருந்த சூரியாவை பார்த்ததும் தன்னையும் மீறி அழுகை தான் வந்தது..
உன்னை நான் பிரிய நினைத்ததற்கு கடவுள் எவ்வளவு பெரிய தண்டனையை தனக்கு அளிக்க பார்த்தார்" என நினைத்தவளின் கரங்கள் அவனின் தலைக்கட்டை வருடிவிட.. கண்களோ அவன் உடல் மொத்தத்தையும் ஆராய்ச்சியாய் பார்த்தது.. "வேறெங்கும் அடிபட்டிருக்கிறதா?? என்று"..
"தான் இங்கிருந்து செல்லும்வரை நன்றாக இருந்தவனுக்கு ஒரே நாளில் அப்படி என்ன நேர்ந்திருக்கும்" என யோசித்தவளின் சிந்தனையை கலைக்கும் விதமாய் விழிகள் மெல்ல அசைய.. "சூரியா.. சூரியா" என்றவாறே அவனை அணைத்துக் கொள்ள.. சட்டென அவளை தள்ளி விட்டான் சூரியா..
"சாரி சூரியா. நான் பண்ணதெல்லாம் தப்பு தான். உன்னை விட்டுப் பிரியணும்னு நினைச்சது.. உன்கூட வாழ முடியாதுன்னு லெட்டர் எழுதி வச்சது எல்லாமே தப்பு தான்.. ஐயம் ரியலி சாரி சூரியா" என அழுது கொண்டே பேசியவளை அவன் கேட்ட ஒற்றை வார்த்தை வாயடைக்க வைத்தது..
அவளால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.. சூரியாவா இது?? இப்படி ஒரு வார்த்தை தன்னைப் பார்த்து கேட்டான்??" என மனதளவில் நொருங்கி போனாள்..
"ஹலோ.. எஸ்க்யூஸ்மி யாருங்க நீங்க?? நான் திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்கேன். பதிலே சொல்லாம இருக்கீங்க. ஆங்கிள்.. ஆங்கிள்" என்ற சத்தத்தில் மெல்ல உள்ளே நுழைந்தார் மஹேந்திரன்..
"யாரு ஆங்கிள்.. இந்த பொண்ணு.. லூசு மாதிரி என்னவெல்லாமோ பேசுது.. தப்பு பண்ணிட்டேன்னு சொல்லுறா.. விட்டு ஓடிட்டேன்னு சொல்லுறா.. இவ பேசுறது ஒன்னுமே புரியல ஆங்கிள்" என தலையை பிடித்து அமர. இப்பொழுதே தலையே வெடித்து விடும் நிலையில் இருந்தது என்னவோ ப்ரஜா தான்..
"சூரியா.. நான் பண்ணது தப்புதான். ஆனா இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்காதிங்க.. என்ன தண்டனை கொடுக்கிறதா இருந்தாலும் உங்க கூடவே இருந்துக்கிறேன்" என்றவளின் வார்த்தையில் சுட்டெரிக்கும் சூரியனாய் தகித்து நின்றான்..
"நீ யாருன்னே தெரியாதுன்னு சொல்றேன்.. வெளியே போடி" என்றவனின் சீற்றத்தில் மங்கையவள் உள்ளமோ வெகுவாக வலிக்க.. அடிபட்ட பார்வை ஒன்றை பார்த்தவள் சூரியாவின் உடல்நிலை கருதி மெல்ல அந்த அறையை விட்டு வெளியேற முயல.. மஹேந்திரனும் அவள் பின்னாடியே வெளியேறினார்..
"இடியட்" என வாய்க்குள் முணுமுணுத்தபடி கட்டிலில் சாய்வாக அமர்ந்தான் சூரியா..
வெளியே வந்தவளுக்கு அழுகை பீறிட்டு வந்தது.. அழுகையே தவிர அவளிடம் எதுவுமில்லையே.. பிறந்ததில் இருந்து அவளின் மனவலி தீரும் ஒரே மருந்து கண்ணீர் மட்டுமே..
"ப்ரஜா" என்ற வார்த்தையில் வழிந்து கொண்டிருந்த கண்களை துடைத்தவாறே, "சொல்லுங்கப்பா.. சூரியா கிட்ட என்னை மன்னிச்சிட சொல்லுங்கப்பா" என உடையும் குரலில் கேட்டவளை பாவமாக பார்த்தவர்..
"சூரியாவுக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்திடுச்சி.. அதனால தான் உன்னை அவனுக்கு அடையாளம் தெரியலை" என்றவரின் வார்த்தையில் விக்கித்து நின்றாள் பேதையவள்..
"சூரியாவுக்கு பழைய நினைவுகளெல்லாம் மறந்திடுச்சா?? என்னை யாருன்னே அவருக்குத் தெரியலையா??" உயிரை உருக்கும் குரலில் கேட்டவளை பாவமாக பார்த்தவர் ..
"ஆமா ப்ரஜா.. இப்போ நீ வீட்டுக்குப் போ.. அப்புறம் எல்லாம் பேசிக்கலாம்" என்றவரிடம் "இல்லை" எனும் விதமாய் தலையசைத்தவள்.. "எனக்கு சூரியா கூட இருக்கணும்பா. ப்ளீஸ்பா" என்றவளின் கண்ணீர் மனதை சுட..
"சரி நான் அவன்கிட்ட பேசிட்டு வர்றேன்" என உள்ளே நுழைந்தவர்.. என்ன பேசினார்?? என்று புரியாவிடிலும் சூரியா சம்மதித்து விட்டான் என்பது மட்டும் புரிந்தது..
மஹேந்திரன் சிறிது நேரம் இருந்தவர் பின் வெளியே சென்று விட.. அறைக்குள் தனித்து விடப்பட்டது என்னவோ ப்ரஜாவும், வாணியும் தான்.. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும். இருவரின் விழிகளும் அடிக்கடி மோதி கொண்டது.. சூரியாவின் விழிகளில் அனல் தெரிந்தாலும்.. ப்ரஜாவின் விழிகளில் காதல் தான் தெரிந்தது..
சிறு நேர அமைதிக்குப் பிறகு.. "நீ என்னோட ஒய்ஃப் னு ஆங்கிள் சொன்னாரு.. ஆனா உன் கழுத்துல தாலி இல்லை.. நான் எப்படி உன்னை நம்புறது" என்றவனின் வார்த்தையில் விழி விரித்து பார்த்தவள்.. "என்ன சொல்வாள்?? நீதான் என் மாங்கல்யத்தை பறித்தாய் என்றா?? இல்லை என்னை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தாய் என்றா?? எதை அவளால் சொல்ல முடியும்.. சொல்லும் நிலையில் அவளும் இல்லை. கேட்கும் நிலையில் அவனுமில்லை.. அமைதி மட்டுமே பதிலாக கிடைக்க.. ஒரு கணம் அவளை உற்றுப் பார்த்தவனின் முகம் இறுகி நின்றது..
"சரி தாலியை விடு.. நம்ம ஹஸ்பெண்ட் ஒய்ஃப் தானே.. ஏதாவது ஒரு சம்பவம் சொல்லு.. மனதோடு ஒன்றிப் போற மாதிரி நமக்குள்ள நடந்திருக்கும்ல" என்றவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு, இப்பொழுதும் பதிலறியா கேள்வி தான்.. அவர்கள் வாழ்ந்த பத்து நாட்கள் மட்டுமே அவளறிந்து மனதோடு ஒன்றிய நாட்கள்.. அதில் அவன் காட்டியதோ மோகம் மட்டுமே. அதில் என்ன சொல்வாள்.. என நினைத்தவளுக்கு சட்டென மின்னல் போல் மூளையில் தோன்றி மறைய.. மெதுவாக அவன் கைகளை பிடிக்க.. சட்டென்று உதறிவிட முயன்றவனின் கைகளை இறுக்கமாக பிடித்தவள்..
அவன் கைகளை பிடித்து தன் வயிற்றில் வைத்தவாறே, "நாம் சந்தோஷமா வாழ்ந்த நாட்களுக்கு சாட்சி சூரியா.. நீங்க அப்பாவாக போறீங்க.. நான் கர்ப்பமா இருக்கேன்" என்றவளின் விழிகளை அதிர்வுடன் பார்த்தவனுக்கு அவளின் விழிகள் தெரிந்த காதலும், பரிதவிப்பும் இவனை மௌனமாக்க.. தன்னையும் மீறி வயிற்றில் அழுத்தமாக கரங்களை வைத்தவனின் கைகளில் எதுவோ தட்டுப்பட.. மெல்ல அவளை ஏறிட்டுப் பார்த்தான்..
அவன் பார்வையில் வெட்கம் மேலிட.. "சூரியா" என்றவளின் குரலை ஒரு வித போதை ஏற்ற. மெல்ல அவள் அணிந்திருந்த ஆடையை விலக்கிப் பார்த்தவனுக்கு உச்சகட்ட பேரதிர்ச்சி.. அதில் இருந்தது அவன் அணிவித்த ஹிப் செயின் தான்.. சூரியவாணி என்ற பெயரை பார்த்ததும் புருவம் முடிச்சிட அவனை பார்க்க.. அவளுக்கோ அவன் அணிவித்த நினைவுகள் தான் அவள் மனதில் ஓடியது.. என்றுமே அவள் அதை கழட்ட நினைத்தது இல்லை..
தாலி இல்லையென்றாலும் இந்த செயின் அவளை உயிர்ப்புடன் வைத்தது.. "இந்த செயின் நீங்க போட்டுவிட்டது சூரியா.. நீங்க கேட்ட தாலிக்கு என்கிட்ட பதிலில்லை.. ஆனா இந்த செயின் எப்பவும் என்னை விட்டு போனதில்லை.. இனிமேலும் போகாது.. நீங்க கேட்ட இனிமையான காதலை நாம உணர்ந்த நேரம் போட்டு விட்டது" என்றவாறே அவன் நெற்றியில் இதழ் பதிக்க… ஆடவனின் கண்களோ அவளின் விழிகளை மட்டுமே பார்த்தது.. அதில் தெரிந்த காதலில் பொய்மையில்லை..
கதவு தட்டும் சத்தத்தில் இருவரும் கலைந்தனர். நர்ஸ் சூரியாவிற்கு டிரெஸ்ஸிங் பண்ணியவர் வெளியேற அதுவரை அவன் பார்வை ப்ரஜாவை விட்டு எங்கும் அகலவில்லை. நர்ஸ் உள்ளே வந்ததில் இருந்தது.. அவர் செய்வது ஒவ்வொன்றையும் உற்று நோக்கியவள்.. காயம்பட்ட இடத்தை பார்த்ததும் அழுகை வந்து உதட்டை கடித்து தடுத்து நிறுத்தியவளையும் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்..
நர்ஸ் கொடுத்த மாத்திரைகளை கொடுத்தவள்.. அவனுக்கு சாப்பாட்டை ஒரு பிளேட்டில் வைத்து பரிமாற.. அவனோ அதை வாங்காமல் அவளை தான் பார்த்தான்.. அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல் இவள் குழப்பமாக அவனை பார்க்க.. "நீ என் ஒய்ஃப் தானே.. அப்போ சாப்பாடு ஊட்டிவிட வேண்டியது தானே" என்றவனின் வார்த்தையில் அதிர்ந்து தான் போனாள்..
இதுவரை என்றுமே அவள் ஊட்டிவிட்டதெல்லாம் இல்லை.. அவன் வேலையை அவனே பார்த்துக் கொள்வதால் இது போன்ற வேலைகள் அவள் செய்ததே இல்லை.. அவன் சொல்லை தட்ட முடியாமல் இட்லியை பிய்த்து அவன் இதழில் வைக்கும் பொழுது.. அவள் கரங்களும், ஷேவ் பண்ணாத தாடியும் உரசிக் கொண்டது.. அவன் எச்சில் விரல்களில் பதிய.. புது வித உணர்வு ஆட்கொள்ள.. கண்களோ அவனை விட்டு பிரிய மறுத்தது.. அவனை பார்த்துக் கொண்டே இட்லியை ஊட்டியவள் கழுவுவதற்கு எடுத்து செல்ல முயன்றவளின் கரங்களை பற்றியவள்.. "எனக்குப் பசிக்குது" என்றவனின் வார்த்தையில் சட்டென எழ முயன்றவனின் கரங்களை அழுத்தமாக பற்றியவன்.
"விடுங்க சூரியா நான் இட்லி எடுத்துட்டு வர்றேன்" என்றவளை பார்த்து "இல்லை" எனும் விதமாய் தலையாட்டியவன்.. "எனக்கு இட்லி வேண்டாம்" என்றவனின் பார்வையோ நிலைத்து நின்றது என்னவோ ப்ரஜாவின் இதழ்களில்..
பழங்களை கண்டு மொய்க்கும் ஈயாய்.. அவள் இதழ்களை மொய்க்கும் பார்வை பார்த்தவன்.. அவள் இதழ்களில் அழுத்தமாக தன் இதழ்களை பதிக்க முயன்றவன்.. என்ன நினைத்தானோ?? மெல்ல விலகிட.. அவனின் விலகலில் உயிர்போகும் வலியை அனுபவித்தவள்.. அவன் இதழ்களை தன்னிதழ்களால் பற்றி கொண்டாள் சற்று அழுத்தமாக.. ஆனால் காதலுடன்..