அசுரன் 4
நடுரோட்டில் மயங்கி கிடந்தவளை தன் வீட்டின் பால்கனியில் நின்று வேடிக்கை பார்ததுக் கொண்டிருந்தான். திடீரென மயங்கி கிடந்தவளின் அருகே வந்து நின்றது வெள்ளை நிற டொயோட்டா.. அதிலிருந்து இறங்கிய இரண்டு பேர் வேக வேகமாக மயங்கி கிடந்தவளை தூக்கி வண்டியில் கிடத்தியவர்கள் மின்னல் வேகத்தில் காரினை செலுத்த சட்டென மறைந்தது வண்டி... அதனை புருவம் சுருக்கி பார்த்தவனின் கால்களின் வேகம் அதிகரிக்க.. இதயத்துடிப்பு அதிகமாக கடகடவென படிக்கட்டில் இறங்கியவன் சில நொடிகளில் வீட்டை விட்டு வெளியேறினான்..
கார் சென்ற திசையில் இவனும் செல்ல.. கார் நம்பரை நோட் பண்ணி வைத்ததால் ஈசியாக காரை கண்டு பிடித்து விட்டான்.. இறுதியாக கார் நின்றது இரயில்வே ஸ்டேஷனில்.
மயங்கி விழுந்தவளை இரண்டு பேர் பிடித்துக் கொள்ள ரயில் இருக்கும் பக்கம் செல்லாமல் அவளை சரக்கு ரெயில் செல்லும் தண்டவாளத்தின் அருகில் கொண்டு சென்றனர்..
அவர்களின் பின்னால் தொடர்ந்து வந்தவனுக்கு அவர்களின் செயல் ஒன்றும் புரியவில்லை.. "என்ன பண்ணுகிறார்கள்??" என யோசனையுடன் அவர்களை தொடர்ந்தான்.. சரக்கு ரெயில் செல்லும் தண்டவாளத்தில் ப்ரஜாவைப் போட்டவர்கள் முன்னேறி செல்ல.. அவர்களின் முன்னால் வந்து நின்றான் சூரியா..
"யாருடா நீங்க?? அவளை ஏன் கடத்துனீங்க??" என சற்று அழுத்தமான குரலில் கேட்டவனை பார்த்து கடத்திய ஐவர் கூட்டமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள.. "டேய்ய்.. இவனையும் போருக்கான" என்ற அலறலில் அதுவரை மயக்கத்தில் இருந்தவள் மெல்ல நினைவுகள். திரும்பி எழுந்து உட்கார.. தண்டவாளத்தில் அமர்ந்தது திகிலாக இருந்தது.. " தான் எப்படி இங்கே??" என சிந்தனையுடன் மெல்ல எழுந்தவளுக்கு சூரியாவின் பின்புற முதுகு தான் தெரிந்தது..
அவனைப் பார்த்த பின்பு தான் அனைத்தும் ஒவ்வொன்றாக நியாபகத்திற்கு வர.. துடித்துப் போனாள்.. தன் கண் முன்னால் பெற்றவர்களை கொன்று, தன்னை அனாதையாக நிற்க வைத்து.. தான் வைத்த நேசத்தை உள்ளுக்குள் கொன்று புதைத்தவனை கண்களில் கண்ணீருடன் ஏறிட.. அவனோ பின்னால் சொருகி வைத்திருந்த துப்பாக்கியை எடுக்க.. பயத்தில் வேர்க்க ஆரம்பித்தது.. "தன்னை சுடுவதற்காகத்தான் வந்திருக்கிறான்" என தப்பாக புரிந்து கொண்டவள்.. அவனிடமிருந்து விலகி ஓட முயல.. தண்டவாளத்தில் போடப்பட்டிருந்த சீனிக்கற்கள் இடறி தொப்பென கீழே விழுந்தாள்.. "அம்மாஆஆஆ" என்ற அலறலுடன்..
அவள் விழுந்த சத்தத்தில் அனைவரின் கவனமும் இவள் புறம் திரும்ப.. கடத்திக் கொண்டு வந்தவர்கள் அவளை கொல்லுவதற்காக சூரியா வை தாண்டி பாய்ந்து கொண்டு செல்ல.. அவர்களின் உருவத்தைப் பார்த்தே பயந்தவள்.. தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள மரண பீதியில் எழுந்தவள் வேகமாக ஓட ஆரம்பிக்க.. கற்களும் தண்டவாளமும் இருக்கும் இடத்தில் மெதுவாக தான் ஓட முடிந்தது.. ஓடியவள் ஒரு ரெயிலின் பின்னால் ஒளிந்து கொண்டாள்..
சரக்கு வண்டியின் பின்னால் அமர்ந்திருந்தவளின் இதயம் ஓடும் ரயிலை விட வேக வேகமாக துடித்தது.. எங்கே தான் மூச்சு வாங்கும் சத்தம் அசுரனின் காதில் விழுந்து விடுவோமோ என அஞ்சியவள்.. தன் வாயை தன் கரம் கொண்டு பொத்தியவாறே மெல்ல எட்டிப் பார்த்து பார்த்தவளுக்கு வலிமையான இரு கால்கள் மட்டுமே தெரிந்தது.. கால்களை பார்த்ததுமே புரிந்தது அது தன்னவன் என்று.. தன்னை கொல்வதற்காக வெறிப்பிடித்த வேங்கையாக சுத்துகிறான் என நினைத்தவளுக்கு கண்களில் ஓரம் ஒரு துளி கண்ணீர் வழிந்தது..
கண்களில் கண்ணீர் மல்க. மெல்ல அங்கிருந்து நகர முயன்றவளுக்கு திடீரென இழுவிசையில் பின்னால் சரிந்தவள்.. தலையை நிமிர்த்து எட்டிப் பார்க்க.. அவளின் சேலை முந்தானையை தன் ஷூ காலால் மிதித்தபடி நின்றிருந்தவனை கண்டு இரத்த நாளங்கள் அனைத்தும் உறைந்து நின்றது.. "ப்ளீஸ் என்னை விட்டுடு. நான் கண்காணாத தூரத்துக்குப் போயிடுவேன்" என்றவளை இளக்காரமாக பார்த்தவனின் கைகளில் இருந்த துப்பாக்கி.. அவளின் நெற்றியில் குறிவைக்கப்பட்டு.. "ஐ லவ் யூ வாணிம்மா. சந்தோஷமா செத்துப் போ" என கர்ஜனையுடன் கூறியவன். நிமிடத்தில் அனைத்து புல்லட்டையும் இறக்கினான்.
அவன் புல்லட்டை இறக்கிய அதிர்வில் தான் இறந்து விட்டதாக நினைத்தவள்.. இரண்டு நிமிடங்கள் கழித்த பின்னர் தான் உணரவே செய்தாள்.. தான் இன்னும் சாகாமல் இருப்பதை.. மெல்ல விழிகளை திறந்தவளின் நேரெதிரில் தெரிந்தது சூரியாவின் முகமே.. அவன் முகத்தைப் பார்த்ததுமே ரத்தநாளங்கள் அனைத்தும் உறைந்து நின்றது..
"என்னாச்சி வாணிம்மா.. இன்னும் சாகலையேன்னு பார்க்குறீயா??.. இப்பவே செத்துட்டா.. இன்னும் எவ்வளவோ இருக்கு.. அதெல்லாம் பார்க்க வேண்டாம்.. போ. நீ எங்கே வேணும்னாலும் போ.. உன் பின்னாடியே நான் வருவேன்" என்றவனின் வார்த்தையில் விலுக்கென நிமிர்ந்தவள்..
"எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை.. நான் எந்ததப்புமே பண்ணலையே.. என் அப்பா அம்மாவை கண்ணு முன்னாடியே கொன்னுட்டீங்களே.. நீங்க எல்லாம் மனுஷனா.. மிருகம்... அரக்கன்.. அசுரன்" என அழுகுரலில் சொல்லியவளை ஏளனமாக பார்த்தவன்..
"ஆமா நான் அரக்கன் தான்.. இன்னும் அரக்கனா தான் இருப்பேன்" என கணீர் குரலில் சொல்லியவனை வெறுப்புடன் பார்த்தவள்..
"அன்பு, பாசம் குடும்பத்தை பத்தியெல்லாம் உங்களுக்கு என்ன தெரியும்.. அப்பா சொன்ன மாதிரி அனாதை தானே நீங்க" என தன்னையும் மீறி வார்த்தைகளை வெளிவிட்டவளின் கன்னத்தை அழுத்தமாக பிடித்தவன்.. "என்னடி சொன்ன?? எனக்கு அன்பு, குடும்பம்னா என்னன்னு தெரியாதா?? என்னை அனாதையா ஆக்குனதே உன் அப்பன் தான்டி.. போ.. போய் அவன்கிட்ட கேளு. ஏன் இப்படி பண்ணீங்கன்னு கேளு??" என சொல்லும் போதே அவன் குரல் கரகரத்தது..
*எங்கப்பாவை தான் கொன்னுட்டீங்களே??" என்றவளின் பதிலில் வாய்விட்டு சிரித்தவனை புரியாமல் பார்த்தாள்..
அவன் சிரிப்பே இவளுக்கு கோபத்தை தூண்டிவிட.. "ஏன் இப்படி சிரிக்கிறீங்க??" என குரலை உயர்த்தி கேட்டவளின் கன்னத்தை அழுத்தமாக பிடிக்க.. கன்னத்து தாடைகள் எல்லாம் வலியெடுக்க ஆரம்பித்தது..
"உனக்கு விஷயமே தெரியாதுல்ல.. உன்னோட அப்பா சண்முகம் இல்லை.. சாதாரண டிரைவரோட பொண்ணு இல்லை நீ" என்றவனை புருவம் சுருக்கி பார்த்தாள்..
"என்ன உளறுறீங்க??"
"நான் உளறலை. உன்னோட அப்பா பேரு சரவண பெருமாள்.. அம்மா பேரு துளசி.. நீ பொறந்தது ரெண்டு வயசு வரைக்கும் வளர்ந்தது எல்லாமே திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி" என்றவனின் வார்த்தையை நம்பாத பாவனை பார்த்தவளை இளக்காரமாக பார்த்தவன்..
"நான் சொல்றதை ஏத்துக்க முடியலையா?? இரு வர்றேன்" என்றவன் அவளை விட்டு எழுந்து இறந்து கிடந்தவர்களின் அருகே சென்றவன்.. குப்புற விழுந்து கிடந்த வெள்ளை வேஷ்டி அணிந்த ஒருவனை தன் காலால் திருப்பி போட்டவன்.. அவன் பாக்கெட்டில் இருந்த போனை எடுக்க.. அதுவோ சாதாரண பட்டன் போனாக இருந்தது..
அதிலிருந்து கடைசியாக வந்த நம்பருக்கு போன் பண்ண.. சில ரிங்குக்கு பிறகு போனை எடுத்து "ஹலோ" என்ற கட்டைக்குரல் கேட்டது.. போனை ஸ்பீக்கரில் போட்டவன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தான்..
எதிரில் ஒருவர் ஹலோ, ஹலோ என கத்துவது தெளிவாக கேட்டது.. "டேய் அவனை முடிச்சீங்களா இல்லையாடா?? ஊதாரி பசங்களா?? ***********" என் வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசினார்..
அவர் பேசிய வார்த்தைக்கு காதை இறுக்கமாக பொத்திக் கொண்டாள் ப்ரஜா..
"முடிச்சிட்டிங்களான்னு கேட்டா செத்துப் போனவங்களா வந்து பதில் சொல்லுவாங்க மாமனாரே??" என்றவனின் எள்ளல் மிகுந்த குரலில் எதிரில் இருந்தவருக்கு சட்டென கோபம் வர, "டேய்யய்யய். இன்னும் உயிரோடு இருக்கோம்னு திமிர்ல ரொம்ப ஆடாதல்ல.. உன் சங்கை அறுத்து கடல்ல தூக்கி வீசுறேம்ல" என்றவரின் பதிலில் கலகலவென சிரித்தவன்..
"உம் பொண்ணை முதல்ல எங்கிட்ட இருந்து காப்பாத்திட்டு.. என் சங்கை அறுப்பியோ?? இல்லை நீயே கழுத்தை அறுத்துட்டு சாவீயோ?? அதெல்லாம் உன் பிரச்சனை" என்றவன் மட்டும் எதிரில் நின்றிருந்தால் குரல்வளையை கடித்தே கொன்றிருப்பார்.. அவ்வளவு வெறியில் இருந்தார் அவர்..
"உம் பொண்ணு எம் பக்கத்துல தான் இருக்கா பேசுறீயா??" என்றவன் போனை ப்ரஜாவிடம் நீட்ட.
"அம்மாடி.. தங்கம்.. அவன் உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டாம்மா?? அந்த *** சாதிப்பய நமக்கு வேண்டாம்" என கம்மிய குரலில் பேசியவருக்கு என்ன பேசுவது என்றே அவளுக்குப் புரியவில்லை.. நடப்பதெல்லாம் கனவாக இருக்கக்கூடாதா என ஒரு மனம் எதிர்பார்க்க.. இன்னொரு மனமோ இதெல்லாம் நிஜத்தில் நடப்பவை என உணர வைத்துக் கொண்டிருந்தது..
இத்தனை வருடம் வளர்த்த தாய் தந்தை பொய் என்றால் தனக்கு அப்பா அம்மா இருந்தும் தான் ஏன் தன் பிறப்பிடத்தை விட்டு வேறொரு இடத்தில் வளர வேண்டும் என்ற கேள்வி மனதை கரையானை அரிக்கத் தொடங்கியது..
அவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவுமில்லை.. பேசவும் முடியவில்லை.. அவளின் மௌனம் புரிந்தாலும் வேண்டுமென்றே "பேசு" என கண்களால் கட்டளையிட.. அவனின் கண்ணசைவுக்கு பெண்ணவளின் இதழ்கள் பிரிந்து "ஹலோ" என்ற வார்த்தையை உதிர்த்தது.
"யம்மாடி.. நீ அப்பாக்கிட்ட வந்திருடா" என்றவருக்கு என்ன பதில் சொல்வதென்று அவனை பார்க்க.. அவனோ போனை சட்டென புடுங்கியவன்.. "போதும்.. போதும்.. உம் பொண்ணை கொஞ்சுனது.. இப்போ நான் சொல்றபடி. செய்.. நான் சென்னை போற ட்ரெயின்ல உம் பொண்ணை ஏத்தி விடுறேன். ஆசைதீர உன் ஊருக்கு கூட்டிப் போய் கொஞ்சு" என இளக்காரமாக சொல்லியவன் போனை கட் பண்ணி.. வரமாட்டேன் என அடம்பிடித்த ப்ரஜாவை இழுக்காத குறையாக இழுத்து ட்ரெயினில் அமர வைத்து விட்டு சென்றான்.. அவன் தன்னைத் தாண்டி செல்வதை வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரஜா..
தான் போகும் வழியறியாமல் தன் பயணத்தை மேற்கொண்டாள்.. விதி வழி பயணம் அவள் செல்ல.. அவளை ரெயிலில் ஏற்றி விட்டவன் அவளின் பின்னால் தார்ச்சாலையின் வழியாக தன் ஆடி காரில் சென்னை நோக்கி பயணித்தான் சூரியா..
நடுரோட்டில் மயங்கி கிடந்தவளை தன் வீட்டின் பால்கனியில் நின்று வேடிக்கை பார்ததுக் கொண்டிருந்தான். திடீரென மயங்கி கிடந்தவளின் அருகே வந்து நின்றது வெள்ளை நிற டொயோட்டா.. அதிலிருந்து இறங்கிய இரண்டு பேர் வேக வேகமாக மயங்கி கிடந்தவளை தூக்கி வண்டியில் கிடத்தியவர்கள் மின்னல் வேகத்தில் காரினை செலுத்த சட்டென மறைந்தது வண்டி... அதனை புருவம் சுருக்கி பார்த்தவனின் கால்களின் வேகம் அதிகரிக்க.. இதயத்துடிப்பு அதிகமாக கடகடவென படிக்கட்டில் இறங்கியவன் சில நொடிகளில் வீட்டை விட்டு வெளியேறினான்..
கார் சென்ற திசையில் இவனும் செல்ல.. கார் நம்பரை நோட் பண்ணி வைத்ததால் ஈசியாக காரை கண்டு பிடித்து விட்டான்.. இறுதியாக கார் நின்றது இரயில்வே ஸ்டேஷனில்.
மயங்கி விழுந்தவளை இரண்டு பேர் பிடித்துக் கொள்ள ரயில் இருக்கும் பக்கம் செல்லாமல் அவளை சரக்கு ரெயில் செல்லும் தண்டவாளத்தின் அருகில் கொண்டு சென்றனர்..
அவர்களின் பின்னால் தொடர்ந்து வந்தவனுக்கு அவர்களின் செயல் ஒன்றும் புரியவில்லை.. "என்ன பண்ணுகிறார்கள்??" என யோசனையுடன் அவர்களை தொடர்ந்தான்.. சரக்கு ரெயில் செல்லும் தண்டவாளத்தில் ப்ரஜாவைப் போட்டவர்கள் முன்னேறி செல்ல.. அவர்களின் முன்னால் வந்து நின்றான் சூரியா..
"யாருடா நீங்க?? அவளை ஏன் கடத்துனீங்க??" என சற்று அழுத்தமான குரலில் கேட்டவனை பார்த்து கடத்திய ஐவர் கூட்டமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள.. "டேய்ய்.. இவனையும் போருக்கான" என்ற அலறலில் அதுவரை மயக்கத்தில் இருந்தவள் மெல்ல நினைவுகள். திரும்பி எழுந்து உட்கார.. தண்டவாளத்தில் அமர்ந்தது திகிலாக இருந்தது.. " தான் எப்படி இங்கே??" என சிந்தனையுடன் மெல்ல எழுந்தவளுக்கு சூரியாவின் பின்புற முதுகு தான் தெரிந்தது..
அவனைப் பார்த்த பின்பு தான் அனைத்தும் ஒவ்வொன்றாக நியாபகத்திற்கு வர.. துடித்துப் போனாள்.. தன் கண் முன்னால் பெற்றவர்களை கொன்று, தன்னை அனாதையாக நிற்க வைத்து.. தான் வைத்த நேசத்தை உள்ளுக்குள் கொன்று புதைத்தவனை கண்களில் கண்ணீருடன் ஏறிட.. அவனோ பின்னால் சொருகி வைத்திருந்த துப்பாக்கியை எடுக்க.. பயத்தில் வேர்க்க ஆரம்பித்தது.. "தன்னை சுடுவதற்காகத்தான் வந்திருக்கிறான்" என தப்பாக புரிந்து கொண்டவள்.. அவனிடமிருந்து விலகி ஓட முயல.. தண்டவாளத்தில் போடப்பட்டிருந்த சீனிக்கற்கள் இடறி தொப்பென கீழே விழுந்தாள்.. "அம்மாஆஆஆ" என்ற அலறலுடன்..
அவள் விழுந்த சத்தத்தில் அனைவரின் கவனமும் இவள் புறம் திரும்ப.. கடத்திக் கொண்டு வந்தவர்கள் அவளை கொல்லுவதற்காக சூரியா வை தாண்டி பாய்ந்து கொண்டு செல்ல.. அவர்களின் உருவத்தைப் பார்த்தே பயந்தவள்.. தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள மரண பீதியில் எழுந்தவள் வேகமாக ஓட ஆரம்பிக்க.. கற்களும் தண்டவாளமும் இருக்கும் இடத்தில் மெதுவாக தான் ஓட முடிந்தது.. ஓடியவள் ஒரு ரெயிலின் பின்னால் ஒளிந்து கொண்டாள்..
சரக்கு வண்டியின் பின்னால் அமர்ந்திருந்தவளின் இதயம் ஓடும் ரயிலை விட வேக வேகமாக துடித்தது.. எங்கே தான் மூச்சு வாங்கும் சத்தம் அசுரனின் காதில் விழுந்து விடுவோமோ என அஞ்சியவள்.. தன் வாயை தன் கரம் கொண்டு பொத்தியவாறே மெல்ல எட்டிப் பார்த்து பார்த்தவளுக்கு வலிமையான இரு கால்கள் மட்டுமே தெரிந்தது.. கால்களை பார்த்ததுமே புரிந்தது அது தன்னவன் என்று.. தன்னை கொல்வதற்காக வெறிப்பிடித்த வேங்கையாக சுத்துகிறான் என நினைத்தவளுக்கு கண்களில் ஓரம் ஒரு துளி கண்ணீர் வழிந்தது..
கண்களில் கண்ணீர் மல்க. மெல்ல அங்கிருந்து நகர முயன்றவளுக்கு திடீரென இழுவிசையில் பின்னால் சரிந்தவள்.. தலையை நிமிர்த்து எட்டிப் பார்க்க.. அவளின் சேலை முந்தானையை தன் ஷூ காலால் மிதித்தபடி நின்றிருந்தவனை கண்டு இரத்த நாளங்கள் அனைத்தும் உறைந்து நின்றது.. "ப்ளீஸ் என்னை விட்டுடு. நான் கண்காணாத தூரத்துக்குப் போயிடுவேன்" என்றவளை இளக்காரமாக பார்த்தவனின் கைகளில் இருந்த துப்பாக்கி.. அவளின் நெற்றியில் குறிவைக்கப்பட்டு.. "ஐ லவ் யூ வாணிம்மா. சந்தோஷமா செத்துப் போ" என கர்ஜனையுடன் கூறியவன். நிமிடத்தில் அனைத்து புல்லட்டையும் இறக்கினான்.
அவன் புல்லட்டை இறக்கிய அதிர்வில் தான் இறந்து விட்டதாக நினைத்தவள்.. இரண்டு நிமிடங்கள் கழித்த பின்னர் தான் உணரவே செய்தாள்.. தான் இன்னும் சாகாமல் இருப்பதை.. மெல்ல விழிகளை திறந்தவளின் நேரெதிரில் தெரிந்தது சூரியாவின் முகமே.. அவன் முகத்தைப் பார்த்ததுமே ரத்தநாளங்கள் அனைத்தும் உறைந்து நின்றது..
"என்னாச்சி வாணிம்மா.. இன்னும் சாகலையேன்னு பார்க்குறீயா??.. இப்பவே செத்துட்டா.. இன்னும் எவ்வளவோ இருக்கு.. அதெல்லாம் பார்க்க வேண்டாம்.. போ. நீ எங்கே வேணும்னாலும் போ.. உன் பின்னாடியே நான் வருவேன்" என்றவனின் வார்த்தையில் விலுக்கென நிமிர்ந்தவள்..
"எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை.. நான் எந்ததப்புமே பண்ணலையே.. என் அப்பா அம்மாவை கண்ணு முன்னாடியே கொன்னுட்டீங்களே.. நீங்க எல்லாம் மனுஷனா.. மிருகம்... அரக்கன்.. அசுரன்" என அழுகுரலில் சொல்லியவளை ஏளனமாக பார்த்தவன்..
"ஆமா நான் அரக்கன் தான்.. இன்னும் அரக்கனா தான் இருப்பேன்" என கணீர் குரலில் சொல்லியவனை வெறுப்புடன் பார்த்தவள்..
"அன்பு, பாசம் குடும்பத்தை பத்தியெல்லாம் உங்களுக்கு என்ன தெரியும்.. அப்பா சொன்ன மாதிரி அனாதை தானே நீங்க" என தன்னையும் மீறி வார்த்தைகளை வெளிவிட்டவளின் கன்னத்தை அழுத்தமாக பிடித்தவன்.. "என்னடி சொன்ன?? எனக்கு அன்பு, குடும்பம்னா என்னன்னு தெரியாதா?? என்னை அனாதையா ஆக்குனதே உன் அப்பன் தான்டி.. போ.. போய் அவன்கிட்ட கேளு. ஏன் இப்படி பண்ணீங்கன்னு கேளு??" என சொல்லும் போதே அவன் குரல் கரகரத்தது..
*எங்கப்பாவை தான் கொன்னுட்டீங்களே??" என்றவளின் பதிலில் வாய்விட்டு சிரித்தவனை புரியாமல் பார்த்தாள்..
அவன் சிரிப்பே இவளுக்கு கோபத்தை தூண்டிவிட.. "ஏன் இப்படி சிரிக்கிறீங்க??" என குரலை உயர்த்தி கேட்டவளின் கன்னத்தை அழுத்தமாக பிடிக்க.. கன்னத்து தாடைகள் எல்லாம் வலியெடுக்க ஆரம்பித்தது..
"உனக்கு விஷயமே தெரியாதுல்ல.. உன்னோட அப்பா சண்முகம் இல்லை.. சாதாரண டிரைவரோட பொண்ணு இல்லை நீ" என்றவனை புருவம் சுருக்கி பார்த்தாள்..
"என்ன உளறுறீங்க??"
"நான் உளறலை. உன்னோட அப்பா பேரு சரவண பெருமாள்.. அம்மா பேரு துளசி.. நீ பொறந்தது ரெண்டு வயசு வரைக்கும் வளர்ந்தது எல்லாமே திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி" என்றவனின் வார்த்தையை நம்பாத பாவனை பார்த்தவளை இளக்காரமாக பார்த்தவன்..
"நான் சொல்றதை ஏத்துக்க முடியலையா?? இரு வர்றேன்" என்றவன் அவளை விட்டு எழுந்து இறந்து கிடந்தவர்களின் அருகே சென்றவன்.. குப்புற விழுந்து கிடந்த வெள்ளை வேஷ்டி அணிந்த ஒருவனை தன் காலால் திருப்பி போட்டவன்.. அவன் பாக்கெட்டில் இருந்த போனை எடுக்க.. அதுவோ சாதாரண பட்டன் போனாக இருந்தது..
அதிலிருந்து கடைசியாக வந்த நம்பருக்கு போன் பண்ண.. சில ரிங்குக்கு பிறகு போனை எடுத்து "ஹலோ" என்ற கட்டைக்குரல் கேட்டது.. போனை ஸ்பீக்கரில் போட்டவன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தான்..
எதிரில் ஒருவர் ஹலோ, ஹலோ என கத்துவது தெளிவாக கேட்டது.. "டேய் அவனை முடிச்சீங்களா இல்லையாடா?? ஊதாரி பசங்களா?? ***********" என் வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசினார்..
அவர் பேசிய வார்த்தைக்கு காதை இறுக்கமாக பொத்திக் கொண்டாள் ப்ரஜா..
"முடிச்சிட்டிங்களான்னு கேட்டா செத்துப் போனவங்களா வந்து பதில் சொல்லுவாங்க மாமனாரே??" என்றவனின் எள்ளல் மிகுந்த குரலில் எதிரில் இருந்தவருக்கு சட்டென கோபம் வர, "டேய்யய்யய். இன்னும் உயிரோடு இருக்கோம்னு திமிர்ல ரொம்ப ஆடாதல்ல.. உன் சங்கை அறுத்து கடல்ல தூக்கி வீசுறேம்ல" என்றவரின் பதிலில் கலகலவென சிரித்தவன்..
"உம் பொண்ணை முதல்ல எங்கிட்ட இருந்து காப்பாத்திட்டு.. என் சங்கை அறுப்பியோ?? இல்லை நீயே கழுத்தை அறுத்துட்டு சாவீயோ?? அதெல்லாம் உன் பிரச்சனை" என்றவன் மட்டும் எதிரில் நின்றிருந்தால் குரல்வளையை கடித்தே கொன்றிருப்பார்.. அவ்வளவு வெறியில் இருந்தார் அவர்..
"உம் பொண்ணு எம் பக்கத்துல தான் இருக்கா பேசுறீயா??" என்றவன் போனை ப்ரஜாவிடம் நீட்ட.
"அம்மாடி.. தங்கம்.. அவன் உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டாம்மா?? அந்த *** சாதிப்பய நமக்கு வேண்டாம்" என கம்மிய குரலில் பேசியவருக்கு என்ன பேசுவது என்றே அவளுக்குப் புரியவில்லை.. நடப்பதெல்லாம் கனவாக இருக்கக்கூடாதா என ஒரு மனம் எதிர்பார்க்க.. இன்னொரு மனமோ இதெல்லாம் நிஜத்தில் நடப்பவை என உணர வைத்துக் கொண்டிருந்தது..
இத்தனை வருடம் வளர்த்த தாய் தந்தை பொய் என்றால் தனக்கு அப்பா அம்மா இருந்தும் தான் ஏன் தன் பிறப்பிடத்தை விட்டு வேறொரு இடத்தில் வளர வேண்டும் என்ற கேள்வி மனதை கரையானை அரிக்கத் தொடங்கியது..
அவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவுமில்லை.. பேசவும் முடியவில்லை.. அவளின் மௌனம் புரிந்தாலும் வேண்டுமென்றே "பேசு" என கண்களால் கட்டளையிட.. அவனின் கண்ணசைவுக்கு பெண்ணவளின் இதழ்கள் பிரிந்து "ஹலோ" என்ற வார்த்தையை உதிர்த்தது.
"யம்மாடி.. நீ அப்பாக்கிட்ட வந்திருடா" என்றவருக்கு என்ன பதில் சொல்வதென்று அவனை பார்க்க.. அவனோ போனை சட்டென புடுங்கியவன்.. "போதும்.. போதும்.. உம் பொண்ணை கொஞ்சுனது.. இப்போ நான் சொல்றபடி. செய்.. நான் சென்னை போற ட்ரெயின்ல உம் பொண்ணை ஏத்தி விடுறேன். ஆசைதீர உன் ஊருக்கு கூட்டிப் போய் கொஞ்சு" என இளக்காரமாக சொல்லியவன் போனை கட் பண்ணி.. வரமாட்டேன் என அடம்பிடித்த ப்ரஜாவை இழுக்காத குறையாக இழுத்து ட்ரெயினில் அமர வைத்து விட்டு சென்றான்.. அவன் தன்னைத் தாண்டி செல்வதை வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரஜா..
தான் போகும் வழியறியாமல் தன் பயணத்தை மேற்கொண்டாள்.. விதி வழி பயணம் அவள் செல்ல.. அவளை ரெயிலில் ஏற்றி விட்டவன் அவளின் பின்னால் தார்ச்சாலையின் வழியாக தன் ஆடி காரில் சென்னை நோக்கி பயணித்தான் சூரியா..