அசுரன் 9
துளசிக்கு வந்த போன் காலில் அடித்துப் பிடித்து ஓடியவர்.. வேகமாக இறங்கியது பெருமாளை சேர்த்திருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு தான். அவர் மயங்கி விழுந்ததை ஏதோ பெரிய விஷயமா எண்ணி உள்ளூர் மீடியாவிலிருந்து டிவி வரை போக்கஸ் எடுத்துப் போட்டுக் கொண்டிருக்க.. இவ்வளவு மக்கள் கூட்டத்திலும் பெருமாளின் மனைவி என்ற அடையாளத்துடன் உள்ளே நுழைந்தார்..
உள்ளே நுழைந்தவருக்கு எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்த பெருமாளை பார்த்ததும் மனம் ஒருபுறம் நிம்மதி அடைந்தாலும்.. அவர் செய்த காரியம் இவரை ஆத்திரத்தின் மிகுதியில் நிற்க வைத்தது..
வேகமாக அவர் அருகில் சென்றவர்.. கையில் ஏறிக் கொண்டிருந்த ஷெலானை வேகமாக பிய்த்து எறிந்தார்.. அவர் எறிந்த வேகத்தில் ரத்தம் பீச்சிட.. தடுக்க நினைத்த கட்சி ஆட்களை முறைத்தவர். "வெளியே போங்கடா" என கர்ஜித்தவரின் குரலில் அனைவரும் வெளியே சென்று விட.. பெருமாளை முறைப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை துளசி..
"உனக்கென்ன பைத்தியமாடி??" என சீறியவரை கண்டு முறைத்தவர்.
"ஆமாய்யா.. பைத்தியம் தான்.. ச்சீ நீயெல்லாம் ஒரு மனுஷனா.. பெத்த பொண்ணை கொலை செய்ய ஆள் அனுப்புற நீயெல்லாம் மனுஷன் இல்லை மிருகத்துக்கு சமானம்.. உன்னோட நிழல் கூட அவ மேல படக்கூடாதுன்னு தான்.. அவளை நான் ஹாஸ்டல்ல படிக்க வைக்கிறேன்.. ஆனா நீ அங்கேயும் அவளை தொல்லை பண்ணுற" என்றவரின் வார்த்தையெல்லாம் துச்சமாக எண்ணியவர்.
"என்னடி வார்த்தையெல்லாம் ரொம்ப நீளுது.. உன் அண்ணனை பார்த்துட்டு வந்த தைரியமா???" என எரிந்து விழுந்தவரின் வார்த்தையிலேயே சிறு பயம் தெரிந்தது..
"ஆமாய்யா.. என் அண்ணனை பார்த்துட்டு வந்த தைரியம்.. சும்மா இல்லை.. நான் அவரை தேடி போகலைன்னாலும். அவரே என்னைத் தேடி வர்ற மாதிரி ஒரு க்ளூ கொடுத்துட்டு தான் வந்திருக்கேன். கண்டிப்பா எனக்கு ஏதாவது ஆச்சின்னு வச்சிக்கோயேன்.. மொத டெட்பாடி நீதான்" என ஆத்திரத்தில் கத்தியவர் வேகமாக வெளியேற..
துளசி சொல்லிவிட்டு போன வார்த்தையில் இரவெல்லாம் தூக்கமில்லாமல் கிடந்தார் பெருமாள்.. அவரால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. பல பாவங்கள் சென்று, பணம், பதவி அடைந்தவரால் சிறு தூக்கத்தை வாங்க முடியவில்லை.. ஓவர் பீபி என்பதால் இரண்டு நாட்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டும்.. எந்த வித சிந்தனையும் வேண்டாம்" என டாக்டர் சொல்லிவிட்டு செல்ல. இவருக்கு கண்ணை மூடினால் சூரியா கழுத்தை நெறிப்பது போல் தோன்ற.. இன்னும் அவஸ்தையாகி போனவர்.. வெறித்து அமர்ந்திருந்தார்.. இதுவரை தடுமாறாத தன் மனம் ஏன் இப்பொழுதெல்லாம் தடுமாறுகிறது என நினைத்தவருக்கு கடந்த காலம் அனைத்தும் கண் முன்னால் தோன்றியது..
துளசி சொல்லிய வார்த்தையில் இருந்து மீளமுடியாமல் தவித்தார் மஹி.. அவரால் இந்த நொடி கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.. தன் கையாலேயே இறந்த குழந்தையை தூக்கி ஈமச்சடங்கு செய்து மண்ணில் புதைத்த ஒரு ஜீவன் உயிரோடு இருப்பதாய் சொல்வதை நம்ப முடியாமல், அதே சமயம் துளசியின் வார்த்தையை புறந்தள்ள முடியாமல் தவித்தார்..
இன்றும் சாப்பிடாமல் மணி மண்டபத்தில் அமர்ந்திருந்தவரை ஆழமாக பார்த்தபடி அருகில் அமர்ந்தாள் ப்ரஜா..
தன்னருகில் அமர்ந்த ப்ரஜாவை திரும்பி கூட பார்க்க முடியாமல் தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்தவரின் புருவம் சுருங்கியது.. தன் பெண் உயிருடன் இருக்கிறாள் என்றால் தான் புதைத்த குழந்தை யாருடையது?? அந்த கேள்விக்கான விடை துளசி மட்டுமே அறிவார் என்பதை அறிந்தவருக்கு இந்த நொடி துளசியை பார்க்க வேண்டுமென தோன்றியது..
ஆனால் அது முடியாத காரியம் துளசியை பார்க்க வேண்டுமென்றால் பெருமாளின் வீட்டிற்குள் நுழைய வேண்டும்.. பெருமாளை பார்க்கும் பொழுதெல்லாம் அவரின் ஜாதிவெறியும், சூரியாவின் சிறு வயது வாழ்க்கையும் தான் நினைவில் வந்து மோதிக் கொண்டன..
சிறு வயது சூரியாவை பார்த்ததை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அப்படியொரு நிலைமையில் உயிரை மட்டும் கையில் வைத்து கொண்டு அவன் வந்து சேர்ந்தது தான் மஹேந்திரனிடம்..
தன் மனம் போன போக்கில் யோசித்துக் கொண்டிருந்தவருக்கு மடியில் யாரோ படுப்பதை போல் உணர்ந்ததும் தான் தன்னுணர்வுக்கே வந்தார்..
தலையை மட்டும் தாழ்த்தி கீழே பார்க்க.. ப்ரஜா தான் மடியில் படுத்திருந்தாள்.. அவளின் தலையை மெல்ல கோதிவிட்டவரின் மனதில் இனம் புரியா நிம்மதி தோன்றியது.. வாழ்க்கையில் இனியொரு பிறவியெடுத்தால் இவளே என் மகளாய் வர வேண்டுமென எண்ணும் அளவிற்கு ப்ரஜாவின் மேல் அளவு கடந்த அன்பு தோன்றியது..
"என்னாச்சிப்பா ஏதாவது பிரச்சனையா??" என்றவளை ஆழ்ந்து பார்த்தவர்.. "அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா.. ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்திருக்கேன்ல அதுனால திலகா நியாபகம் வேற ஒன்னுமில்லை" என அவள் நம்பும்படியாக ஒரு பதிலை சொன்னவர் நிமிர்ந்து பார்க்க சூரியாதான் இருவரையும் முறைத்துக் கொண்டு நின்றான்..
"என்னாச்சி டா??" என்றவரை மேலும் முறைத்தவன்..
"ஹேய்ய். எந்திரிடி அவரு எனக்குத்தான் ஆங்கிள்.. அவர்கிட்ட இவ்ளோ உரிமையெல்லாம் யாரும் எடுத்துக்கிட்டா எனக்குப் புடிக்காது" என முகம் சுழித்தபடி சொல்லியவனை ஆழ்ந்து பார்த்தவள்.
"அதெல்லாம் எந்திரிக்க முடியாதுன்னு சொல்லுங்கப்பா.. அப்பாக்கு அப்புறம் தான் ஆங்கிள்னு சொல்லுங்க. என்னால உங்களை யார்க்கிட்டையும் விட்டுக்கொடுக்க முடியாது.. அவனை வேணும்னா வேற ஆங்கிள் வாங்கிக்க சொல்லுங்க" என பதிலுக்கு பதில் பேசியவனை கண்டு மஹேந்திரன் சிரிக்க.. அவரையும் அவளையும் பார்த்து முறைத்தவாறே படுத்திருந்நதவளின் கைகளைப் பிடித்து இழுத்தவன்.. அவளை இடித்துக் கொண்டு படுக்க.. "ஹேய்ய். உன்னையே" என அவள் நெஞ்சில் அடிக்க போனவளின் கரங்கள் அப்படியே அந்தரத்தில் நின்றது.. இருவரும் போட்ட சண்டையில் சட்டை பட்டன் கழன்றிருந்ததால் அவன் நெஞ்சில் வரைந்திருந்த டாட்டூவைப் பார்த்து அசையாமல் நின்றாள்..
. "ப்ச்.. சூரியா.. அவதான் சின்னப் பொண்ணு நீயாவது விட்டுக் கொடுக்கலாம்ல"
"யாரு இவ சின்னப் பொண்ணா??.. பத்து மாசம் முன்னாடி கல்யாணமாகியிருந்தா இந்நேரம் ஒரு குழந்தையே இவ கையில இருந்திருக்கும்" என சிரிப்புடன் சொல்லியவனை மெல்லிய புன்னகையுடன் பார்த்தார்..
அவன் சொல்லிய வார்த்தையில் வெடுக்கென திரும்பியவள் விறுவிறுவென வீட்டை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்..
"பாரு கோவிச்சிட்டு போறா" என்றவரின் பேச்சை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் காலின் மேல் கால் போட்டு சாய்ந்து ஆடியவன் சிறிது நேரத்தில் தன்னையும் மீறி உறங்கியிருந்தான்…
அவன் தலையை கோதிவிட்டவாறே, "இன்னும் நீ அடம் பிடிக்கிற சின்னக்குழந்தையா தான் என் கண்ணுக்குத் தெரியுற??" என்றவரின் கைகள் தலையை கோதிவிட.. நாளைக்கு எப்படியாவது துளசியை பார்க்க வேண்டுமென தீர்மானமாக முடிவெடுத்திருந்தார்..
வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு மனதை பயம் முழுவதுமாக ஆட்கொள்ள.. இதயத் துடிப்போ வேகமாக அடித்துக் கொண்டது.. தான் நினைத்தது போல் இருக்கக்கூடாது எனவேண்டிக் கொண்டவள். தன் போனை எடுத்து முதலில் அழைத்தது ஹர்ஸாவிற்கு தான்..
"ஹலோ" என திடமான குரலில் ஒரு நிமிடம் கண்ணீர் விழிகளை தாண்டி வழிந்தது..
……..
"ப்ரஜூ.. லைன்ல இருக்கீயா??" என்றவனுக்கு அழுகையுடன் "ம்ம்" என்ற பதிலே வந்தது..
"என்னாச்சி ப்ரஜு.. வாய்ஸ் வேற மாதிரி கேட்குது அழுறீயா??" என்றவனிடத்தில் தன் மனபாரம் தீரும் மட்டும் அழ வேண்டுமென தோன்றியது.. அவள் தேடிய ஆறுதல் அவனிடத்தில்.. அவனவனோ மனதளவில் வெகு தொலைவில்..
"நாளைக்கு நான் உன்னை பார்க்கணும் ஹர்ஸா.. ஹாஸ்பிட்டல் வர்றேன்" என அழுகுரலில் சொல்லியவள் போனை வைத்துவிட்டு.. வெறித்த பார்வையில் சுவற்றை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்..
"நீ இன்னும் தூங்கலையா??" என புன்னகை முகத்துடன் உள்ளே வந்தவனை வெறித்துப் பார்த்தவள் எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டாள்..
அவளை உற்றுப் பார்த்தவனுக்கு அவளின் சிவந்த கண்கள் அழுதிருக்கிறாள் என்பதை அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது..
"திடீரென்று அழ வேண்டிய அவசியம் என்ன?? சண்முகத்தை பற்றி நினைத்து வருந்துகிறாளோ??" என நினைத்தவன்..
"ப்ரஜா" என்றவனை ஏறிட்டுப் பார்த்தவள்.. "நான் தூங்கணும்" என்றவள் தலை முழுவதும் பெட்ஷீட்டை இழுத்து மூடியபடி தூங்குவதை போல் நடிக்க ஆரம்பிக்க.. அவளின் செய்கைகைள் அனைத்தையும் சிறு புருவ முடிச்சுடன் பார்த்தவனுக்கு "இன்னும் இரண்டே நாள் அதற்குள் எல்லாம் முடிந்து விடும்.. ப்ரஜாவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிட்டு தன் வாழ்க்கையின் அடுத்த கட்டம் நோக்கி செல்ல வேண்டுமென எண்ணினான்"
விதியின் விளையாட்டை அறியாமல் அவன் ஒரு திட்டம் போட.. விதியோ வேறொரு திட்டம் போட்டது..
காலையில் பத்து மணிக்கே வீட்டை விட்டு வெளியே சென்றவள்.. திருநெல்வேலியில் உள்ள "துளசி ஹாஸ்பிட்டல்" என பெரியதாக போர்ட் வைத்திருந்ததை பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தவளை எதிர்கொண்டான் ஹர்ஸா..
அவனை பார்த்ததும் இதுவரை தன் மனதில் தோன்றிய பதட்டம் நீங்கி மென்மையாக புன்னகைத்தவள்.. "ஹர்ஸா" என குரல் தழுதழுக்க அழைத்தவளின் எதிரே தண்ணீர் பாட்டில் ஒன்றை நீட்டியவன்.. "நீ முதல்ல தண்ணீ குடி.. அப்புறம் பேசலாம்" என்றதும் கைகள் நடுங்க வாங்கியவள் வாயினுள் பாதி, தன் மேல் பாதி என கொட்டிக் கொண்டே தண்ணீர் குடித்தாள்..
ஐந்து நிமிடங்கள் கடந்தும் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.. ப்ரஜாவால் பேசவே முடியவில்லை என்பது தான் உண்மை.. அவள் இருந்த பதட்டமும், பயமும் பேசவிடவில்லை..
"இப்போ சொல்லு.. என்னாச்சி ஏன் இவ்ளோ பதட்டம்??" என்றவனை கலங்கிய விழிகளுடன் ஏறிட்டவள்.. "நான் ப்ரெக்னன்ட் டெஸ்ட் எடுக்கணும்" என்றதும் ஒரு நொடி முகம் மலர.. கைகளை நீட்டி "காங்கிராட்ஸ்" என சொல்ல வந்தவனை பார்த்து முறைத்தவள்..
"ப்ளீஸ்.. நான் ப்ரெக்னன்டா இருக்கக்கூடாதுன்னு வேண்டிக் கிட்டு வந்திருக்கேன்" என்றவளை புரியாமல் பார்த்தவன்..
"வேண்டிக்கிட்டு வந்தீயா?? ஏன்??" என்றவனுக்கு பதில் சொல்ல தோன்றாமல் அமைதியாக இருந்தவளை ஆழ்ந்து பார்த்தவன்..
"நீ பெருமாளை பார்த்து பயப்புடுறீயா?? உன் குழந்தையை ஏதாவது பண்ணிடுவாங்கன்னு அச்சமா இருக்கா??" என்றவனை அழுத்தமாக பார்த்தவள்.
"இல்லை.. அவரை பார்த்து எனக்கு எந்த பயமும் இல்ல"
. "அப்புறம் ஏன் இவ்வளோ நெவர்ஸா இருக்க?? உனக்கு என்னதான் பிரச்சனை??" என்றவனிடம் ஏனோ உண்மையையும் சொல்ல தோன்றவில்லை.. அவள் அமைதி ஏனோ இவனுக்கு கோபத்தை தான் கொடுத்தது..
"இப்படி அமைதியா இருக்கிறதுல ப்ரோஜனமே இல்லை. நான் சூரியாவுக்கு போன் பண்றேன்.. அவன் பார்த்துப்பான்" என போனை எடுத்தவனின் கைகளில் இருந்து போனை பிடுங்கியவன்..
"நீ போன் பண்ணா சூரியா என் குழந்தையை கொன்னுடுவான்" என இதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தையெல்லாம் ஒன்று சேர கத்தியவளின் வார்த்தையில் அதிர்ந்தது ஹர்ஸா மட்டுமல்ல.. வெளியில் நின்று கொண்டிருந்த மஹேந்திரனும் தான்..