பிழையின்றி நேசிக்கவா
விமர்சனம்
பிழையற்ற மனிதர்கள் யாரும் இல்லை அவர்களின் பிழைகளை மறந்து அப்படியே ஏற்றுக்கொள்வது ஒரு வகை. துணைகளின் பிழைகளை பெரிதாக எடுத்துக்கொண்டு அவர்களை பழிவாங்க துடிப்பது இன்னொரு வகை.
அப்படி ஒரு கதைக்களம் தான் இது.
ஆதிரத்னேஸ்வரன் மகிழ்வதனி இருவரும் தான் நம் கதையோட நாயகன் நாயகி.
ஆதி மகிழை பழிவாங்க அவளை தேடி வந்து கொண்டிருக்க.
மகிழ் ஆதியை தான் இனி பார்க்கவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
ஆதி மகிழ் இரண்டு பேர் வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது?யார் மீது பிழை? அவர்கள் பிழையை எப்படி இருவரும் ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள் என்று கதையை ரொம்ப சுவாரஸ்யமாக கொண்டு போய் இருக்காங்க.
ஆதி இவன நிச்சயமாக சுத்தமா பிடிக்கவே இல்லை. இவனோட செயல்கள் அப்படி இருக்கு. காதலிச்சு மேல கோவம் இருந்தாலும் அந்த காதலை மீறிய பழி உணர்வில் அவன் செய்யும் செயல்கள் கொஞ்சமும் ஏத்துக்க முடியல.
மகிழ் ஓட குடும்ப சூழ்நிலையை வைத்து அவளை மிரட்டி அக்ரீமெண்ட் போட்டு அவளை வார்த்தைகளாலையும் உடலாலையும் அவன் செய்யும் கொடுமைகள் கொஞ்சமும் சரியில்ல. அவன் பேசும் வார்த்தைகளை கேட்கும் போதே மனசு ரொம்ப கனக்கிறது மகிழ நினைத்து.
குடும்பத்தில் செல்லமா வளர்ந்த மகிழ் ஒரு காதலை பண்ணிட்டு அவ அனுபவிக்கிற கொடுமைகளும் கஷ்டங்களும் அதிகம்.
விக்கி இவனோட நட்பு மகிழுக்கு கிடைத்த ஒரு வரம். கதையில ஆதிய விட விக்கி தான் அதிகமா ஸ்கோர் பண்ணதா எனக்கு தெரிஞ்சது.
காவியா இவளோட கலகலப்பான பேச்சும்.மகிழுடன் இவளோட நட்பும் சூப்பர்
யாழினி அர்ஜுன் காதல் ரொம்ப நல்லா இருந்தது. அர்ஜுன் பார்க் கம்மியா இருந்தாலும் மனசுல நின்னுட்டான்.
எழுத்து நடை ரொம்ப நல்லா இருந்தது.
கதை ரொம்ப நல்லா விறுவிறுப்பா போச்சு சூப்பர்
வாழ்த்துக்கள்